ஈ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈ 1
ஈக்கும் 1
ஈகிலராகில் 1
ஈகிலனாகிலும் 1
ஈசர் 1
ஈசன் 5
ஈசனார் 1
ஈசனுக்கு 1
ஈசனூர் 1
ஈசனே 1
ஈசனை 4
ஈட்டி 1
ஈட்டிய 1
ஈட்டும் 1
ஈடு 1
ஈண்டி 2
ஈண்டு 1
ஈண்டும் 1
ஈது 1
ஈதோ 7
ஈந்த 1
ஈந்தமை 1
ஈந்தவன் 1
ஈந்து 1
ஈம 1
ஈயகில்லார் 1
ஈயேன் 1
ஈர் 17
ஈர்_அறு 1
ஈர்_ஐந்து 1
ஈர்_ஐந்தும் 1
ஈரம் 1
ஈவதுதான் 1
ஈழநாட்டு 1
ஈறு 1
ஈன்ற 1
ஈன்றவனே 1
ஈன்று 2


ஈ (1)

வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் – தேவா-சுந்:30/3
மேல்


ஈக்கும் (1)

எள் விழுந்த இடம் பார்க்குமாகிலும் ஈக்கும் ஈகிலனாகிலும் – தேவா-சுந்:347/1
மேல்


ஈகிலராகில் (1)

பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:142/4
மேல்


ஈகிலனாகிலும் (1)

எள் விழுந்த இடம் பார்க்குமாகிலும் ஈக்கும் ஈகிலனாகிலும்
வள்ளலே எங்கள் மைந்தனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:347/1,2
மேல்


ஈசர் (1)

ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:68/4
மேல்


ஈசன் (5)

பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன் – தேவா-சுந்:384/2
இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட – தேவா-சுந்:411/1
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணைக்கு ஆள் – தேவா-சுந்:656/1
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:749/4
எங்கள் ஈசன் என்பார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:762/4
மேல்


ஈசனார் (1)

தங்கினோமையும் இன்னது என்றிலர் ஈசனார் எழு நெஞ்சமே – தேவா-சுந்:351/2
மேல்


ஈசனுக்கு (1)

ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர் அணி நாவலூர் என்று – தேவா-சுந்:177/2
மேல்


ஈசனூர் (1)

ஈசனூர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:317/4
மேல்


ஈசனே (1)

இந்துசேகரனே இமையோர் சீர் ஈசனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:713/3
மேல்


ஈசனை (4)

ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய – தேவா-சுந்:455/2
எள்கல் இன்றி இமையவர்_கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல் – தேவா-சுந்:633/1
மின் தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை வாசம் மா முடி மேல் – தேவா-சுந்:641/3
இண்டை மா மலர் செஞ்சடையானை ஈசனை திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:718/2
மேல்


ஈட்டி (1)

உழக்கே உண்டு படைத்து ஈட்டி வைத்து இழப்பார்களும் சிலர்கள் – தேவா-சுந்:795/1
மேல்


ஈட்டிய (1)

சந்தித்த திறலால் பணி பூட்டி தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு – தேவா-சுந்:683/2
மேல்


ஈட்டும் (1)

ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் – தேவா-சுந்:923/2
மேல்


ஈடு (1)

ஏன மா எயிறு ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்பு உடையானே – தேவா-சுந்:717/2
மேல்


ஈண்டி (2)

திறை கொணர்ந்து ஈண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி – தேவா-சுந்:73/3
இழிந்து இழிந்து அருவிகள் கடும் புனல் ஈண்டி எண்திசையோர்களும் ஆட வந்து இங்கே – தேவா-சுந்:755/2
மேல்


ஈண்டு (1)

அரித்த நம்பி அடி கைதொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள் – தேவா-சுந்:650/1
மேல்


ஈண்டும் (1)

ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/4
மேல்


ஈது (1)

விழித்து கண்டனன் மெய்ப்பொருள்-தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கை ஈது ஆகில் – தேவா-சுந்:618/3
மேல்


ஈதோ (7)

புரிவு உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:104/4
புண்ணியனார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:105/4
புள்ளுவனார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:106/4
புனல் உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:107/4
பொடி அணிவார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:108/4
பொன் அனையான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:109/4
புக்கு உறைவான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:110/4
மேல்


ஈந்த (1)

அருந்தும் நம்பி அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி பொருளால் வரு நட்டம் – தேவா-சுந்:647/2
மேல்


ஈந்தமை (1)

புக்கு மற்றவர் பொன்_உலகு ஆள புகழினால் அருள் ஈந்தமை அறிந்து – தேவா-சுந்:676/2
மேல்


ஈந்தவன் (1)

இணை கொள் ஏழ் எழுநூறு இரும் பனுவல் ஈந்தவன் திருநாவினுக்குஅரையன் – தேவா-சுந்:666/2
மேல்


ஈந்து (1)

தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மன கருத்தை – தேவா-சுந்:642/2
மேல்


ஈம (1)

பெம்மான் ஈம புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே – தேவா-சுந்:538/2
மேல்


ஈயகில்லார் (1)

வாழ்வதே கருதி தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்
ஆழ் குழிப்பட்ட போது அலக்கண் இல் ஒருவர்க்கு ஆவர் – தேவா-சுந்:79/2,3
மேல்


ஈயேன் (1)

சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன் சிறு சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்
அந்தி வெண் பிறை சூடும் எம்மானே ஆரூர் மேவிய அமரர்கள்_தலைவா – தேவா-சுந்:617/2,3
மேல்


ஈர் (17)

ஆர்த்தவர் ஆடு அரவம் அரை மேல் புலி ஈர் உரிவை – தேவா-சுந்:193/1
கைம்மா ஈர் உரியாய் கனம் மேற்றளி உறையும் – தேவா-சுந்:213/3
எடுத்தவன் ஈர் ஐந்து வாய் அரக்கன் முடி பத்து அலற – தேவா-சுந்:225/2
கரி ஆர் ஈர் உரியாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:285/3
ஆனை ஈர் உரி போர்ப்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:333/4
அத்தி ஈர் உரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:368/4
பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
மத்த யானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர் – தேவா-சுந்:508/2
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை காமனை கமலா விழித்தானை – தேவா-சுந்:626/2
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/4
வெம் கண் ஆனையின் ஈர் உரியானை விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும் – தேவா-சுந்:636/3
மாவின் ஈர் உரி உடை புனைந்தானை மணியை மைந்தனை வானவர்க்கு அமுதை – தேவா-சுந்:658/3
வெய்ய மா கரி ஈர் உரியானே வேங்கை ஆடையினாய் விதி முதலே – தேவா-சுந்:715/1
உழை ஈர் உரியும் உடையான் இடம் ஆம் – தேவா-சுந்:954/2
படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான் – தேவா-சுந்:1001/2
பொங்கிய போர் புரிந்து பிளந்து ஈர் உரி போர்த்தது என்னே – தேவா-சுந்:1011/3
மேல்


ஈர்_அறு (1)

ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
மேல்


ஈர்_ஐந்து (1)

பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
மேல்


ஈர்_ஐந்தும் (1)

நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/4
மேல்


ஈரம் (1)

ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:767/4
மேல்


ஈவதுதான் (1)

கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:470/4
மேல்


ஈழநாட்டு (1)

ஈழநாட்டு மாதோட்டம் தென்நாட்டு இராமேச்சுரம் – தேவா-சுந்:118/1
மேல்


ஈறு (1)

சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி – தேவா-சுந்:652/1
மேல்


ஈன்ற (1)

கனிகள் பல உடை சோலை காய் குலை ஈன்ற கமுகின் – தேவா-சுந்:741/3
மேல்


ஈன்றவனே (1)

ஈன்றவனே வெண் கோயில் இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:911/3
மேல்


ஈன்று (2)

முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால் யாவராகில் என் அன்பு உடையார்கள் – தேவா-சுந்:553/1

மேல்