நீ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 57
நீக்க 1
நீகானுடன் 1
நீங்கள் 1
நீங்கி 3
நீங்கிய 1
நீங்கினும் 1
நீடு 4
நீடும் 1
நீத்தது 1
நீத்து 2
நீந்தல் 1
நீந்திய 1
நீந்தினனே 1
நீந்துதற்கே 1
நீந்துதுமே 1
நீப்பது 1
நீயாக 1
நீயும் 11
நீர் 45
நீர்_அணங்கோ 1
நீர்மை 3
நீர்மையளேல் 1
நீரில் 1
நீரும் 1
நீருள் 1
நீரை 1
நீல் 1
நீல 7
நீலம் 1
நீலமும் 2
நீழல் 2
நீழலின் 1
நீழலினூடு 1
நீள் 8
நீள்_கண்ணி 1
நீள்_விழியாய் 1

நீ (57)

எண் கொடியேன் எய்த இவ் வண்ணம் நீ இரங்கேல் இரங்கேல் – தஞ்-வா-கோவை:1 3 23/2
நின்றே வருவல் இங்கே விளையாடுக நீ சிறிதே – தஞ்-வா-கோவை:1 3 24/4
உருக கலங்கினை நீ தகுமோ மற்று உனக்கு இதுவே – தஞ்-வா-கோவை:1 8 42/4
வாரால் அணைப்ப வருந்தினை நீ தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 8 44/3
நின் காதலியொடு நீ வரல் வேண்டும் நிலமடந்தை-தன் – தஞ்-வா-கோவை:1 8 61/2
மின் ஊடு நுண் இடையாருடன் நீ சென்று மேவுகவே – தஞ்-வா-கோவை:1 8 62/4
இவளை வர கண்டு நீ அணங்கே பின் எழுந்தருளே – தஞ்-வா-கோவை:1 9 67/4
நீ வேறு உரைக்கின்றது என் குற மாது எங்கள் நேர் இழை ஓர் – தஞ்-வா-கோவை:1 10 82/1
விருப்பு ஆகிய குறை உள்ளது எல்லாம் சொல்லி வேண்டுக நீ
பொருப்பா மொழியப்பெறார் எம்மனோர் இவை போல்வனவே – தஞ்-வா-கோவை:1 10 88/3,4
குறி வளர் காவில் முன் கூடியவாறு இன்னும் கூடுக நீ
கறி வளர் சாரல் வெற்பா பிறரால் என்ன காரியமே – தஞ்-வா-கோவை:1 10 92/3,4
வரையக நாட வரைந்துகொள் நீ தஞ்சைவாணன் முந்நீர் – தஞ்-வா-கோவை:1 10 94/2
கண்டால் அருள் உள்ள நீ எனது ஆருயிர் காத்த பின்னே – தஞ்-வா-கோவை:1 10 95/4
தொடையே எருக்கு என்பு நீ அணிந்தால் என்னை சூல் வளை ஊர் – தஞ்-வா-கோவை:1 10 104/1
மான் வந்த வாள் விழி வஞ்சிக்கு நீ தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 111/2
புன்கண் அடையலை நீ இனி வாடல் புரவலனே – தஞ்-வா-கோவை:1 10 114/4
இவ்வண்ணம் நீ சொல்வது ஏற்பது அன்றால் நின் இடை என தாம் – தஞ்-வா-கோவை:1 10 120/2
புரக்கின்ற கோன் தஞ்சைவாணன் பொதியிலில் பொய்த்து என்னை நீ
கரக்கின்றது என்னை-கொல் என் உயிர் ஆகிய காரிகையே – தஞ்-வா-கோவை:1 10 121/3,4
தண் சாயை நின்று அணங்கும் தையல் நீ நிற்க சாரலிலே – தஞ்-வா-கோவை:1 10 132/4
ஆயம் புகல அடைந்தருள் நீ அடையாத மன்னர்-வாய் – தஞ்-வா-கோவை:1 10 136/2
என்னாது இடைப்பட்ட என் நிலை நீ மறவேல் இறைவா – தஞ்-வா-கோவை:1 10 139/3
கொந்து சுற்றும் குழலாய் செல்லல் நீ அ குளிர் பொழிற்கே – தஞ்-வா-கோவை:1 12 157/4
மன் அயராமல் வகுத்து உரை நீ தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 12 159/2
கலை மான் உறை பதி நீ வருமாறு என்-கொல் கங்குலிலே – தஞ்-வா-கோவை:1 13 164/4
வழி அன்ப நீ எங்ஙனே வந்தவாறு இ மழை இருளே – தஞ்-வா-கோவை:1 13 178/4
வாரற்க நீ தஞ்சைவாணன் வெற்பா வயமா வழங்கும் – தஞ்-வா-கோவை:1 13 182/2
நல்கா இயல்பு அன்னை நாடினும் நாடும் நடந்தருள் நீ
மல்கு ஆவி சூழ் தஞ்சைவாணன் தென்மாறையின் வள்ளையின் மேல் – தஞ்-வா-கோவை:1 13 185/2,3
நெஞ்சம் கலந்த நிலைமை எல்லாம் கண்டும் நீ அமுதில் – தஞ்-வா-கோவை:1 13 187/3
கான் உற்ற கானல் கனை இருள்-வாய் வர கற்பித்த நீ
யான் உற்ற நோய்கள் எல்லாம் படுவாய் இனி என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 14 193/3,4
நீ தகைகொண்டு என் முன் நின்றனையே செம் நிற கனி வாய் – தஞ்-வா-கோவை:1 14 194/2
சொல் என நீ இது சொல்லி என் பேறு உன் துயரம் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 15 218/2
சான்றாண்மை அன்பர்-தமக்கு உரை நீ தஞ்சை காவலனை – தஞ்-வா-கோவை:1 15 223/2
தோன்றா இரும் கங்குல் நீ வருமாறு ஒழி தோன்றல் என்றே – தஞ்-வா-கோவை:1 15 223/4
நெய்யுற்ற வேல் அன்ப நீ தணியாமையின் நெஞ்சினுள்ளே – தஞ்-வா-கோவை:1 16 231/2
வருதி கண்டாய் தஞ்சைவாணன் வெற்பா எங்கள் மாநகர் நீ
சுருதி கண்டாரொடும் தோன்றில் எம் கேளிர் நின் சொல் இகவார் – தஞ்-வா-கோவை:1 16 233/2,3
இரவும் குறி-வயின் நீ வரல் வேண்டும் இவள் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 239/4
நீ வாரல் சாரல் நிலவு அலராம் பகல் நீடு இருள் ஆர் – தஞ்-வா-கோவை:1 16 240/2
கராம் திரி கல்லதர்-வாய் எல்லி நீ வரல் கற்பு அலவே – தஞ்-வா-கோவை:1 16 242/4
வரைகேன் வரும் துணை வல்லியை நீ தஞ்சைவாணன் செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 17 248/2
பொருது அலைக்கும் குழலாள் அழ நீ கண்டு போய பின்னே – தஞ்-வா-கோவை:1 17 257/4
துவளாமல் ஆற்றுவி என்று அன்று நீ சொன்ன சொல் நினைந்தே – தஞ்-வா-கோவை:1 17 259/4
இசையும்படி வல்லையேல் சொல்லி நீ பின் எழுந்தருளே – தஞ்-வா-கோவை:1 18 261/4
தலைவிலையாக திறைகொண்ட வாணன் தமிழ் தஞ்சை நீ
உலைவு இலை ஆகுக பொன் வண்ணன் மாறுக ஒள்_நுதலே – தஞ்-வா-கோவை:2 19 281/3,4
தூரியம் சங்கு அதிர காட்டு நீ அன்று சூட்டு அலரே – தஞ்-வா-கோவை:2 19 285/4
உயிர் ஆகிய தையல் நீ கலுழ்வான் என் உளம் குழைந்தே – தஞ்-வா-கோவை:2 20 288/4
தொழவே தகுந்த தெய்வம் நோக்கி செல்லேன் என்று சொல்லியும் நீ
அழவே துறந்தனரால் நல்லர் நல்லர் அவ் ஆடவரே – தஞ்-வா-கோவை:2 20 292/3,4
ஏதம் பயந்திலர் எங்கட்கு நீ எம் இகந்ததனால் – தஞ்-வா-கோவை:2 20 294/2
வில்லின் கொடிய புருவ மின்னே என் விளம்புதி நீ
சொல்லில் கொடிய நம் அன்னையை போல்பவர் சூழ்ந்திருக்கும் – தஞ்-வா-கோவை:2 21 313/2,3
கொடியே வர கரை நீ கொடியேன் பெற்ற கொம்பினையே – தஞ்-வா-கோவை:2 22 334/4
இரும்பா மனம் கொண்டவாறு என்னை நீ தன்னை ஏத்தி என்றும் – தஞ்-வா-கோவை:2 22 337/1
நினை யான் எதிர்ப்பட்ட நீடு இரும் குன்று இது நீ குடைந்த – தஞ்-வா-கோவை:2 23 350/1
நீ புரந்தே தந்த மாதை அங்கு யாம் வரை நீர்மை பொன் செய் – தஞ்-வா-கோவை:2 24 358/3
பொன்னை புணர்ந்து நும் கேள் முன்னர் நீ பொன் புனைந்ததுவே – தஞ்-வா-கோவை:2 24 359/4
யாங்கனம் ஆற்றி இருந்தனை நீ இப மா சயிலம் – தஞ்-வா-கோவை:3 27 369/2
நம் ஆவி_அன்னவர் நாள்-தொறும் நாள்-தொறும் நல்கவும் நீ
விம்மா வருந்துவது என் பிரிந்தாரின் விளங்கு_இழையே – தஞ்-வா-கோவை:3 28 379/3,4
தன்-பால் புலவி தணிக என்ற நீ தஞ்சைவாணன் வையம் – தஞ்-வா-கோவை:3 28 388/2
நீ ஏதிலை அல்லை நின் மகனே இவன் நீயும் அவன் – தஞ்-வா-கோவை:3 28 400/2
பாவாய் பணியவும் பார்க்கிலை நீ இட பாக மங்கை – தஞ்-வா-கோவை:3 28 401/2

மேல்

நீக்க (1)

இயங்கியவாறு என் மனத்து இருள் நீக்க என்றே துணிந்தோ – தஞ்-வா-கோவை:1 10 133/3

மேல்

நீகானுடன் (1)

நீகானுடன் பள்ளி நீள் வங்கம் ஏறி நிலம் புரக்கும் – தஞ்-வா-கோவை:2 19 284/2

மேல்

நீங்கள் (1)

பொழி நான மன்றல் அம் பூம் குழல் நீங்கள் புணர்ந்து செல்லும் – தஞ்-வா-கோவை:2 21 315/1

மேல்

நீங்கி (3)

பரு மணி நன் கல பாங்கியை நீங்கி அ பாவையை நாம் – தஞ்-வா-கோவை:1 9 69/3
அப்போது அடைந்த அரும் துயர் நீங்கி அரும்பிய பொன் – தஞ்-வா-கோவை:1 10 116/2
சுனை உண்டு அசோக நிழல் சோகம் நீங்கி துயில்வது கண்டு – தஞ்-வா-கோவை:1 10 123/3

மேல்

நீங்கிய (1)

ஆராத இன்ப இடம்-தொறும் நீங்கிய ஆயம் என்-பால் – தஞ்-வா-கோவை:1 11 144/1

மேல்

நீங்கினும் (1)

கடன் ஆகிய நெறி கைவிட நீங்கினும் கந்து அலைக்கும் – தஞ்-வா-கோவை:2 21 314/2

மேல்

நீடு (4)

நீ வாரல் சாரல் நிலவு அலராம் பகல் நீடு இருள் ஆர் – தஞ்-வா-கோவை:1 16 240/2
தான் நாண நீடு மதில் தஞ்சைவாணன் தமிழ் சிலம்பின் – தஞ்-வா-கோவை:2 22 332/3
நினை யான் எதிர்ப்பட்ட நீடு இரும் குன்று இது நீ குடைந்த – தஞ்-வா-கோவை:2 23 350/1
அலர் புரை நீடு ஒளி ஆடியுள் பாவை_அன்னாட்கு உள நீர் – தஞ்-வா-கோவை:3 28 389/3

மேல்

நீடும் (1)

கழி நீடும் ஆடக மேருவின் மீதினும் காவல் கொண்டு – தஞ்-வா-கோவை:1 13 180/2

மேல்

நீத்தது (1)

கூறா வளர்த்ததற்கோ என்னை நீத்தது என் கோல்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 325/4

மேல்

நீத்து (2)

வேள் அனைய ஓர் காளை பின் போயினள் கான் பனி நீத்து
இளவேனில் வல்லி பெற்று ஆங்கு எவ்வம் நீத்து எழில் எய்தி என்றே – தஞ்-வா-கோவை:2 25 360/3,4
இளவேனில் வல்லி பெற்று ஆங்கு எவ்வம் நீத்து எழில் எய்தி என்றே – தஞ்-வா-கோவை:2 25 360/4

மேல்

நீந்தல் (1)

நேயம் புணை துணையாக வெம் கானகம் நீந்தல் எண்ணி – தஞ்-வா-கோவை:2 22 331/1

மேல்

நீந்திய (1)

கல்வி தடம் கடல் நீந்திய காதலர் கற்றவர் முன் – தஞ்-வா-கோவை:3 29 408/3

மேல்

நீந்தினனே (1)

நெய் தோய்ந்து அன தழையே புணையா கொண்டு நீந்தினனே – தஞ்-வா-கோவை:3 27 370/4

மேல்

நீந்துதற்கே (1)

நின் ஆகம் அன்றி உண்டோ புணை ஆவது நீந்துதற்கே – தஞ்-வா-கோவை:1 16 245/4

மேல்

நீந்துதுமே (1)

நெறியார் அருள் பெற நாம் நடுநாளிடை நீந்துதுமே – தஞ்-வா-கோவை:1 15 213/4

மேல்

நீப்பது (1)

நீர் ஆவி நீல நெடும் கண் மின்னே நின்னை நீப்பது அல்லால் – தஞ்-வா-கோவை:3 28 391/3

மேல்

நீயாக (1)

நீயாக அல்லது மாந்தழையாக நினைந்திலளே – தஞ்-வா-கோவை:1 10 129/4

மேல்

நீயும் (11)

நிறை கொண்டவாறு அறியாது இகழாநிற்றி நீயும் நின்றே – தஞ்-வா-கோவை:1 8 45/4
நில்லாது எழுந்தருள் நீயும் இப்போது நெடுந்தகையே – தஞ்-வா-கோவை:1 10 96/4
கிஞ்சுக வாய் வஞ்சி கேட்டருள் நீயும் கிளை தமிழோர் – தஞ்-வா-கோவை:1 11 150/2
வேளினும் ஏர் நல்ல வெற்பனும் நீயும் என் மேனியினும் – தஞ்-வா-கோவை:1 15 216/3
பேறு ஓர் வடிவு கொண்டால் அன்ன நீயும் என் பேதையுமே – தஞ்-வா-கோவை:1 16 236/4
நீர் உறை நீலமும் நீயும் நண்பாக என்று நின் மகட்கு ஒர் – தஞ்-வா-கோவை:2 20 300/2
தொடங்கும் பிறை நுதல் தோகையும் நீயும் முன் தோன்றுகின்ற – தஞ்-வா-கோவை:2 21 321/1
நலம் புனை ஆயமும் நீயும் நற்றாயொடு நானும் நல் பொன் – தஞ்-வா-கோவை:2 22 323/1
புரி யாழ் நிகர் மொழி பூவையும் நீயும் புணர்ந்து பல் கேழ் – தஞ்-வா-கோவை:3 27 368/3
நினக்கே தகும் நின் நெடும் புனல் ஊரனும் நீயும் அவன்-தனக்கே – தஞ்-வா-கோவை:3 28 394/1
நீ ஏதிலை அல்லை நின் மகனே இவன் நீயும் அவன் – தஞ்-வா-கோவை:3 28 400/2

மேல்

நீர் (45)

நீர்_அணங்கோ நெஞ்சமே தனியே இங்கு நின்றவரே – தஞ்-வா-கோவை:1 1 2/4
நிறையாம் வரம்பு இனி நிற்பதன்றால் நிறை நீர் உலகை – தஞ்-வா-கோவை:1 2 14/2
திரள் மா மரகத செய்குன்றுகாள் என்றும் செவ் வன நீர்
முரண் மா தவங்கள் முயன்று செய்தாலும் முளரி_மங்கை – தஞ்-வா-கோவை:1 2 19/1,2
பெரும் பாவம் அல்லது நீர் நின்ற பேறு அல்லி பெற்றிலையே – தஞ்-வா-கோவை:1 7 37/4
கொண்டலை நீர் குடைந்தோ இவள் மேனி குழைந்ததுவே – தஞ்-வா-கோவை:1 9 63/4
பொன் இயல் ஊசலும் பொய்தலும் ஆடி எப்போதும் நல் நீர்
மன்னிய நீலமும் நித்திலமும் குற்று வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 10 84/1,2
புகழ் ஆர் வரை எம் புரவலன் காதல் புதல்வியை நீர்
இகழா எளியள் என்று எண்ணப்பெறீர் எமக்கு என்றும் வண்மை – தஞ்-வா-கோவை:1 10 86/1,2
வரு நீர் வன முலை மங்கை நல்லாய் செம் கை வாணன் வையை – தஞ்-வா-கோவை:1 10 91/1
தரும் நீர் மலி வயல் தஞ்சை_அன்னாள் அன்று தஞ்சம் இலேன் – தஞ்-வா-கோவை:1 10 91/2
அரு நீர் நவையுற கண் மலர் நீர் தெளித்து ஆற்றினளால் – தஞ்-வா-கோவை:1 10 91/3
அரு நீர் நவையுற கண் மலர் நீர் தெளித்து ஆற்றினளால் – தஞ்-வா-கோவை:1 10 91/3
இரு நீர் நிலம் கொள்ளுமோ அறியாள் என்னும் இவ் உரையே – தஞ்-வா-கோவை:1 10 91/4
திரை தென்கடல் முத்தும் தென்மலை சந்தும் செழும் பனி நீர்
அரைத்து என்பு உருக மெய் அப்பினும் வெப்பம் அறாது இனி நின் – தஞ்-வா-கோவை:1 10 93/2,3
எண்ணும் குறை என்னை நீர் மறைத்தால் இங்கு இயல்வது அன்றே – தஞ்-வா-கோவை:1 10 112/4
தினையும் தழையும் பிடியொடு மேய்ந்து தெளிந்த இன் நீர்
சுனை உண்டு அசோக நிழல் சோகம் நீங்கி துயில்வது கண்டு – தஞ்-வா-கோவை:1 10 123/2,3
அம்பு உக வில் வணக்கிய வாணன் தென்மாறை நல் நீர்
தோய் அம் புகர் இணை வேல் விழியாய் நின் துணையுடனே – தஞ்-வா-கோவை:1 10 136/3,4
மாலை அம் போது வருவித்த நீர் தஞ்சைவாணன் தெவ்வர் – தஞ்-வா-கோவை:1 11 143/2
பூ அலர் வாவியின் நீர் அற்ற போது உற்ற புன்மை அல்லால் – தஞ்-வா-கோவை:1 11 146/1
நெஞ்சு உக ஆய் மலர் அன்ன கண் நீர் மல்க நின்ற அம் சொல் – தஞ்-வா-கோவை:1 11 150/1
உடைக்கு அணியாம் தழை கொய்யார் உழவர் உடைத்த தெள் நீர்
மடைக்கு அணி ஆரம் இடும் தஞ்சைவாணன் வரையின் முன் போல் – தஞ்-வா-கோவை:1 11 151/2,3
சுழி நீர் அலை கடல் தொல் உலகு ஏழினும் தோற்றும் வண்மை – தஞ்-வா-கோவை:1 13 180/1
விம் ஊர் துயர் கடல் வெள்ளத்துள்ளே எம்மை வீழ்வித்து நீர்
எம் ஊரகத்து வரல் ஒழிந்தீர் எதிரேற்ற தெவ்வர்-தம் – தஞ்-வா-கோவை:1 14 197/1,2
புயற்கு அண்ணிய தலை பூக மென் பாளை புது மது நீர்
வயல்-கண் நிறை தஞ்சைவாணன் தென்மாறையில் வஞ்சி_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 14 205/1,2
கயல் கண் இணை அஞ்சி நீர் மல்க காவலர் கை பறையின் – தஞ்-வா-கோவை:1 14 205/3
கலங்கும் தெளியும் கனல் எழ மூச்செறியும் கண்ணின் நீர்
மலங்கும் பொலம் தொடி சோர மெய் சோரும் மறம் செய் கொலை – தஞ்-வா-கோவை:1 16 243/1,2
நீர் ஏற்ற செங்கழுநீர் மலர் போன்றது நின் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 247/4
ஆடுகம் வா நம் அகன்றவர் ஊர் அகலா புது நீர்
பாடுகம் வா பொன் பசலை தந்தார் திறம் பாங்கின் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 17 255/1,2
எவ்வாறு இருந்திர் நீர் எல் வளையீர் எதிர்ந்தாரை வென்று – தஞ்-வா-கோவை:1 17 258/2
உயர் ஆமலகத்து அரும் கனி நீர் நசைக்கு உண் சுரம் போய் – தஞ்-வா-கோவை:1 18 280/1
நீர் உறை நீலமும் நீயும் நண்பாக என்று நின் மகட்கு ஒர் – தஞ்-வா-கோவை:2 20 300/2
பொழி தோல் திரள் உந்தி வந்த செம் நீர் உந்தி பொற்பினுக்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 301/2
கண் அலை நீர் இட பாகமும் மேல் வந்த கை களிற்றின் – தஞ்-வா-கோவை:2 20 302/3
புண் அலை நீர் வல பாகமும் தோய பொருத அன்றே – தஞ்-வா-கோவை:2 20 302/4
மை நீர் நெடும் கண் மடந்தையுடன் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:2 21 305/1
வழியா வரும் பெரு நீர் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 22 326/1
வரையும் இ நாள் அளவு எவ்வாறு நீர் எம் மடந்தை முகை – தஞ்-வா-கோவை:3 27 371/1
தாளான் வளம் கெழு தஞ்சை_அன்னீர் சங்கம் தந்த நல் நீர்
தோளா மணி அன்ன தொல் குல ஓடையில் தோன்றிய பூ – தஞ்-வா-கோவை:3 28 382/2,3
பன்னக நாணில் கடைந்து இதழ் வார் திரைப்பட்ட நல் நீர்
இன் அமிழ்து ஆர்ந்து இமையோர் அமையா இன்பம் எய்தினரே – தஞ்-வா-கோவை:3 28 387/3,4
அலர் புரை நீடு ஒளி ஆடியுள் பாவை_அன்னாட்கு உள நீர்
புலர் புனல் ஊர என்னோ திருவுள்ளம் இப்போது உனக்கே – தஞ்-வா-கோவை:3 28 389/3,4
நீர் ஆவி நீல நெடும் கண் மின்னே நின்னை நீப்பது அல்லால் – தஞ்-வா-கோவை:3 28 391/3
வண் போது அளவிய நீர் வையைநாட்டு உறை மன்னவரே – தஞ்-வா-கோவை:3 28 398/4
முன்னம் படிந்து முழுகி நல் நீர் கங்கை முன் உறையும் – தஞ்-வா-கோவை:3 28 399/3
ஓதற்கு அகன்ற உணர்வுடையோர் உடை நீர் உலக – தஞ்-வா-கோவை:3 29 410/2
பண்பான மன்னர் படர்தலுற்றார் பனி நீர் பொழியும் – தஞ்-வா-கோவை:3 32 417/2
முத்து அலர் ஆகம் முயங்கினம் யாம் முழு நீர் விழி போல் – தஞ்-வா-கோவை:3 33 425/2

மேல்

நீர்_அணங்கோ (1)

நீர்_அணங்கோ நெஞ்சமே தனியே இங்கு நின்றவரே – தஞ்-வா-கோவை:1 1 2/4

மேல்

நீர்மை (3)

நிறம் தாங்கு இவர் கணை போல் உண்கண் மா முகில் நீர்மை கொண்டு – தஞ்-வா-கோவை:1 17 249/3
இ நீர்மை அல்லது ஒரு ஆறும் இன்றால் இங்கு எம் ஐயர் என்றால் – தஞ்-வா-கோவை:2 21 305/3
நீ புரந்தே தந்த மாதை அங்கு யாம் வரை நீர்மை பொன் செய் – தஞ்-வா-கோவை:2 24 358/3

மேல்

நீர்மையளேல் (1)

நெறி வளர் வார் குழல் நேர்_இழையாள் அன்ன நீர்மையளேல்
குறி வளர் காவில் முன் கூடியவாறு இன்னும் கூடுக நீ – தஞ்-வா-கோவை:1 10 92/2,3

மேல்

நீரில் (1)

கொன் உயிர் வாடை கொடும் பனி நீரில் குளிர் குழைத்து – தஞ்-வா-கோவை:3 30 412/3

மேல்

நீரும் (1)

எண் போன நெஞ்சமும் நீரும் என் பாதம் இறைஞ்சுதல் நும் – தஞ்-வா-கோவை:3 28 398/1

மேல்

நீருள் (1)

குழல் கண்ட பின் அல்லவோ அறல் நீருள் குளித்ததுவே – தஞ்-வா-கோவை:1 8 60/4

மேல்

நீரை (1)

பாரித்த திண்மை எம் அண்ணல் உள் நீரை பருகி நின்று – தஞ்-வா-கோவை:1 8 51/1

மேல்

நீல் (1)

நீல் நெடும் பெண்ணை சுரும்பையும் சூதும் நெருங்கு கொங்கை – தஞ்-வா-கோவை:1 18 279/3

மேல்

நீல (7)

நெய் ஆர் கரும் குழல் செம் மலர் வாடின நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 1 3/3
இலங்கு ஆர வல் வட கொங்கை வெற்பால் இணை நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 8 54/2
மையுற்ற நீல கண் மா மங்கை கோன் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 16 231/1
முத்து அணி நீல மணி தகட்டுள் எங்கும் மொய்கொளவே – தஞ்-வா-கோவை:1 16 237/1
நிலவு ஏய் தரளம் நிரைத்து அன்ன வாள் நகை நீல நிற – தஞ்-வா-கோவை:1 17 252/1
நீர் ஆவி நீல நெடும் கண் மின்னே நின்னை நீப்பது அல்லால் – தஞ்-வா-கோவை:3 28 391/3
மைத்து அலர் நீல மலர் வயல் சூழ் தஞ்சைவாணன் வண்மை – தஞ்-வா-கோவை:3 33 425/3

மேல்

நீலம் (1)

கொடி ஒன்று நீலம் மலர்ந்தது காட்ட கொடிய வெம் போர் – தஞ்-வா-கோவை:3 28 383/2

மேல்

நீலமும் (2)

மன்னிய நீலமும் நித்திலமும் குற்று வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 10 84/2
நீர் உறை நீலமும் நீயும் நண்பாக என்று நின் மகட்கு ஒர் – தஞ்-வா-கோவை:2 20 300/2

மேல்

நீழல் (2)

பொழில் நீழல் உம்பர் அமுது_அனையாரை புணர்ந்தனமே – தஞ்-வா-கோவை:1 13 180/4
ஒரு வெண்குடை இரு நீழல் முக்கோல் கொண்டு ஒழுக்கத்தினால் – தஞ்-வா-கோவை:2 22 341/1

மேல்

நீழலின் (1)

நுண் தாது அணி பொங்கர் நீழலின் கீழ் நுடங்கு இடையார் – தஞ்-வா-கோவை:1 9 76/3

மேல்

நீழலினூடு (1)

ஓவாது இரவு எறிக்கும் சோலை நீழலினூடு வந்தே – தஞ்-வா-கோவை:1 16 240/4

மேல்

நீள் (8)

வடு வரி நீள்_கண்ணி அஞ்சலம் யாம் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 165/1
வழி நீள் புகழ் கொண்ட வாணன் தென்மாறை வரையின் மலர் – தஞ்-வா-கோவை:1 13 180/3
வாளினும் நீள் விழி வாள்_நுதலாய் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 15 216/1
குராம் தொடை மென் குழல் கொம்பினை வேண்டி கொடி முல்லை நீள்
மராம் தழுவும் தஞ்சைவாணன் வெற்பா வல்சி தேர்ந்து இலஞ்சி – தஞ்-வா-கோவை:1 16 242/2,3
நீகானுடன் பள்ளி நீள் வங்கம் ஏறி நிலம் புரக்கும் – தஞ்-வா-கோவை:2 19 284/2
சேல் அன்ன நீள்_விழியாய் தெரியாது அன்பர் சிந்தனை – தஞ்-வா-கோவை:2 21 309/4
நிரையும் இ ஞாலமும் காத்தருள் தானன் பதாகையின் நீள்
திரையும் குயிலும் விடாது எழும் ஓசை செவிமடுத்தே – தஞ்-வா-கோவை:3 27 371/3,4
நெஞ்சை பொருள்-வயின் வைத்து நம் கேள்வர் நல் நீள் மதியின் – தஞ்-வா-கோவை:3 33 420/3

மேல்

நீள்_கண்ணி (1)

வடு வரி நீள்_கண்ணி அஞ்சலம் யாம் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 165/1

மேல்

நீள்_விழியாய் (1)

சேல் அன்ன நீள்_விழியாய் தெரியாது அன்பர் சிந்தனை – தஞ்-வா-கோவை:2 21 309/4

மேல்