தா – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 3
தாகத்தால் 1
தாங்க 1
தாங்கல் 1
தாங்கி 2
தாங்குநரும் 1
தாங்கும் 3
தாங்குறு 1
தாங்குறும் 1
தாத்திரி 1
தாது 2
தாதை 1
தாதையை 1
தாம் 6
தாம்பால் 1
தாம 2
தாமம் 1
தாமரை 10
தாமரை_மார்பன் 1
தாமரையில் 1
தாய் 9
தாய 1
தாயது 1
தாயர் 2
தாயரும் 1
தார் 12
தாரகை 2
தாரணியில் 1
தாரா 1
தாராயேல் 1
தாரான் 2
தாரை 1
தாவ 1
தாவரு 1
தாவி 1
தாவிடம் 1
தாழ் 4
தாழ்க்கொண்டு 1
தாழ்த்தி 1
தாழ்ந்தனர் 1
தாழ்ந்து 3
தாழ்வு 1
தாழக்கோல் 1
தாழம்பூ 1
தாழும் 1
தாள் 11
தாளில் 3
தாளை 1
தாளோய் 1
தான் 6
தான்_அல் 1
தானங்கள் 1
தானம் 7
தானவர் 1
தானவன் 1
தானியம் 1
தானை 3
தானையும் 1

தா (3)

தா அகி சிரத்தினில் சரண் வைத்து ஆடினோன் – குசேலோ:0 9/1
தா மேவும் வஞ்ச சகடம் உதைத்ததுவும் – குசேலோ:2 198/4
தா அரு மகிழ்ச்சி யாவரும் அடைய தடை அற வளர்தரு நாளில் – குசேலோ:3 677/4
மேல்

தாகத்தால் (1)

தத்து புனல் கிடையாமை தாகத்தால் வாய் புலர்ந்தும் – குசேலோ:1 188/3
மேல்

தாங்க (1)

தழை ஒளி செழும் பாதுகை ஒருத்தி கை தாங்க
வழை மலர் தொடை வண்டு அரற்றிட நற வாக்கும் – குசேலோ:2 376/2,3
மேல்

தாங்கல் (1)

பற்பல அடுக்கு மாடம் பரந்த விண் தாங்கல் நோக்கி – குசேலோ:3 549/1
மேல்

தாங்கி (2)

தளம் கொள் பூம் தொடை விரை கெழு பாகு அடை தாங்கி
விளங்கு மன்னர் முன் யாவர்க்கும் இவ் வகை விரும்பி – குசேலோ:3 639/3,4
திருநகர் அடைந்து தாய் உரை தாங்கி தேவியும் தம்பியும் தொடர – குசேலோ:3 669/3
மேல்

தாங்குநரும் (1)

கவிகை தாங்குநரும் வேண்டும் கையுறை சிறப்ப வேண்டும் – குசேலோ:2 275/3
மேல்

தாங்கும் (3)

தத்து ஒளி மணி சூட்டு உச்சியில் அரவம் தாங்கும் இ நில வலயத்தில் – குசேலோ:1 87/2
தாங்கும் முப்புடைக்காய் உடைதர பகட்டு தகட்டு அகட்டு இள வரால் பாயும் – குசேலோ:1 174/3
மலர் தலை உலகம் தாங்கும் மாலை அம் தடம் தோள் வேந்தே – குசேலோ:2 204/2
மேல்

தாங்குறு (1)

தாங்குறு களைகண் ஆனோர் தம் பழி மறைப்பார் போல – குசேலோ:2 206/4
மேல்

தாங்குறும் (1)

தாங்குறும் உளத்தன் பொறிகள் தீச்செயலில் சார்வுறாது அடக்குறும் மேலோன் – குசேலோ:1 48/4
மேல்

தாத்திரி (1)

தலை கிடந்து இமைக்கும் தாத்திரி அதனில் சாற்ற அரும் தக்க நல் முயற்சி – குசேலோ:1 147/2
மேல்

தாது (2)

தாது இவர் தண் பூம் கற்ப தரு குலம் விதிர்விதிர்ப்ப – குசேலோ:1 10/3
தாது அவிழ் தாமரை_மார்பன் தன் மனை வாயிலை அடைந்தான் – குசேலோ:3 613/4
மேல்

தாதை (1)

சந்தம் ஆர் தாதை சொற்படி வந்த வேதியன் தரு பெயர் பெற்று – குசேலோ:3 679/2
மேல்

தாதையை (1)

பாய ஒள் வாளால் சிறை அறுப்புண்ட படர் புகழ் தாதையை கண்டு – குசேலோ:3 672/2
மேல்

தாம் (6)

எங்கு இருப்பினும் தாம் வேட்ட யாவையும் துய்ப்பர் அன்றே – குசேலோ:1 11/4
தொல்_வினை வழியது ஆகும் தோன்று அனுபவங்கள் தாம் தம் – குசேலோ:1 122/3
ஈங்கு இவர்கள் தாம் கெடுவது அன்றி மற்றோரையும் கெடுக்கும் எண்ணம் பூண்டார் – குசேலோ:2 323/4
வீயினும் தாம் மறப்பர்களோ மேதையோர் மறப்பரேல் – குசேலோ:2 418/3
தாம் அமர வேண்டும் எனும் தக்க கருத்து உளத்து அமர – குசேலோ:2 498/1
மாற்றுதல் இன்றாய் தாம் தாமரை இலை நீர் போல் நிற்பர் – குசேலோ:3 738/2
மேல்

தாம்பால் (1)

கொவ்வை அம் கனி வாய் அன்னை மென் தாம்பால் குழி செறி கறையொடு பிணிப்ப – குசேலோ:3 680/4
மேல்

தாம (2)

கள் நனை துளவ தாம கண்ணனை கண்ணில் கண்டான் – குசேலோ:2 402/4
தந்து நேர் ஒசி மருங்குல் தாம வார் கரும்_குழாலே – குசேலோ:3 573/3
மேல்

தாமம் (1)

தாமம் நறு முளரி துயல்வரு தடம் தோள் எழில் வீராச்சாமி ஈன்ற – குசேலோ:0 22/1
மேல்

தாமரை (10)

மா தவர் பன்னியர் மனம் என் தாமரை
போது அகத்து அனம் என பொலிந்த மாண்பினான் – குசேலோ:0 11/1,2
பாத தாமரை மலர் பணிந்து போற்றுவாம் – குசேலோ:0 11/4
தண் மது பிலிற்றும் தாமரை ஆதி ததைந்த தாழ் கிடங்கும் மற்று அதனை – குசேலோ:1 15/2
செய்ய தாமரை பற்பல வாவியில் செறிந்த – குசேலோ:2 363/1
தாமரை கண்ணா போற்றி தரியலர் ஏறே போற்றி – குசேலோ:2 382/3
வென்றி வாள் அரவமும் தொடர மென் தாமரை
துன்று மா மங்கையும் தொடர வாய்விட்டு எழீஇ – குசேலோ:3 538/3,4
தாமரை பெரு முதலும் சாரற்கு அரிய கதி சார்வீரே – குசேலோ:3 539/4
என்று உரைத்த சுகமுனிவன் இணை அடி தாமரை வணங்கி – குசேலோ:3 583/1
தாது அவிழ் தாமரை_மார்பன் தன் மனை வாயிலை அடைந்தான் – குசேலோ:3 613/4
மாற்றுதல் இன்றாய் தாம் தாமரை இலை நீர் போல் நிற்பர் – குசேலோ:3 738/2
மேல்

தாமரை_மார்பன் (1)

தாது அவிழ் தாமரை_மார்பன் தன் மனை வாயிலை அடைந்தான் – குசேலோ:3 613/4
மேல்

தாமரையில் (1)

தாமரையில் வாழும் ஒரு தையலோ அயிராணி – குசேலோ:3 591/1
மேல்

தாய் (9)

தளர்வறு பருவம் சார்ந்தால் தந்தை தாய் நடுங்க சீறி – குசேலோ:1 119/3
தேங்கிடும் மதி எட்டில் நல் தாய் நுகர் செறி ஊண் – குசேலோ:1 137/2
நெருங்கு பற்றுறு தாய் தந்தையரும் நிரப்புறுநரை வெறுப்பாரேல் – குசேலோ:1 164/3
பொருந்து தாய் வரவு பார்க்கும் புனிற்று இளம் கன்று போலும் – குசேலோ:2 399/1
தாய் எதிர்வுற்ற சேய் என உள்ளம் தழைவுற்றான் – குசேலோ:2 510/1
பெருகிய தவத்து காசிபன் அதிதி பிறங்குறு தந்தை தாய் ஆக – குசேலோ:3 666/1
திருநகர் அடைந்து தாய் உரை தாங்கி தேவியும் தம்பியும் தொடர – குசேலோ:3 669/3
ஆய் தொடி புகழ் தாய் காணிய தன் உள் அடங்கலும் காட்டுபு மறைத்து – குசேலோ:3 678/4
மாண்ட தாய் வரவு கண்ட மழ இளம் கோதனம் போல் – குசேலோ:3 716/2
மேல்

தாய (1)

மறைவறு தாய மாக்கள் வௌவுவர் என்றும் அச்சம் – குசேலோ:1 107/3
மேல்

தாயது (1)

தாயது வருகை கேட்ட தனி இளம் குழவி போன்று – குசேலோ:2 390/1
மேல்

தாயர் (2)

தம் ஐயர் தாயர் என்று ஏதிலர் தழீஇ பிறப்பர் அன்றே – குசேலோ:1 123/4
மென் தளிர் மேனி பூ மேல் விளங்கு இழை தாயர் கைகட்கு – குசேலோ:3 724/3
மேல்

தாயரும் (1)

சாருறு தந்தையாரும் தாயரும் அனந்தம் சன்ம – குசேலோ:1 120/1
மேல்

தார் (12)

தார் ஆரும் புய தேவராச வள்ளல் ஆன்றோர் தழைத்து உவகை பூப்ப அரங்கேற்றினன் உள் மகிழ்ந்தே – குசேலோ:0 20/4
வில் தார் அணி நல் பதம் இரண்டும் வியன் மா நிலம் தீண்டிட நடந்து – குசேலோ:2 203/3
தார் உறும் மார்பத்து ஐயன்-தன்னையும் மறந்திருந்தான் – குசேலோ:2 414/4
தேன் அமரும் தார் மார்பன் செம் கை பிடித்து தடுத்தாள் – குசேலோ:2 498/4
தன் புடை ஆயினும் எண்ணத்தக்கவனோ தார் வேந்தே – குசேலோ:2 501/4
மடல் மேல் எழு தார் வானவர் வண் துந்துபி ஐந்தும் – குசேலோ:2 530/3
தார் பொலி மார்ப கண்ணன்-தன் அருள் வலியால் இன்னும் – குசேலோ:3 567/3
துன்று அலர் தார் துயல்வரு திண் தோள் வேந்தன் சிவனன் எனும் – குசேலோ:3 583/2
தார் உருவ பூண் மார்பா தயங்கு இமயகிரிப்-பால் ஓர் – குசேலோ:3 584/3
சையாதி எனும் நாமம் தரித்த ஒரு தார் வேந்தன் – குசேலோ:3 586/4
பமரம் மிகு தார் பெருமான் பார் ஆள் சையாதி மகள் – குசேலோ:3 604/4
தார் உறவு உற்ற தோளாய் சால நாள் கழிய வாழ்ந்தான் – குசேலோ:3 742/4
மேல்

தாரகை (2)

பாய தாரகை கணத்தொடு பயிலுறு காட்சி – குசேலோ:2 353/2
மின்னு தாரகை குழாத்திடை விளங்கு ஒளி மதி போல் – குசேலோ:2 380/3
மேல்

தாரணியில் (1)

ஒண் தாரணியில் இலை என்னில் உரைப்பது என்னே – குசேலோ:1 22/4
மேல்

தாரா (1)

குரு விட்டு ஒழி தாரா கணமும் குறியாய் முன்னர் தோன்றினவே – குசேலோ:2 464/4
மேல்

தாராயேல் (1)

தப்பற நீ தருவாயேல் பொறுத்திடுவன் தாராயேல்
வெப்புறும் என் சாபத்தால் வீடிடும் நின் குலம் என்றான் – குசேலோ:3 599/2,3
மேல்

தாரான் (2)

மலையிட்ட செல்வத்தார்கள் மகிழ ஓர் மகவும் தாரான்
அலை இட்ட முள் தாள் செய்ய அம்புய துறைவோன் ஓர் ஏழ் – குசேலோ:1 64/1,2
தும்பி கால் உழக்க மட்டு துளித்திடும் துளப தாரான் – குசேலோ:3 734/4
மேல்

தாரை (1)

கான்றவே பெரும் தாரை கண மழை – குசேலோ:2 446/4
மேல்

தாவ (1)

வாமனன் திண் தோள் ககுபம் தாவ உடல் பூரித்தான் வையத்தீரே – குசேலோ:0 22/4
மேல்

தாவரு (1)

தாவரு நகர்கள் எல்லாம் தயங்கு பொன் மனைகள்-தோறும் – குசேலோ:2 292/2
மேல்

தாவி (1)

தாவி வான் அளாம் சாற்றரும் நெல் வயல் வளர்க்கும் – குசேலோ:1 6/4
மேல்

தாவிடம் (1)

திடம்படு பரிகள் தாவிடம் அதற்கும் திரிந்து ஒதுங்கிடும் இடம் சீறி – குசேலோ:2 233/2
மேல்

தாழ் (4)

தாழ் இரும் கூந்தல் பூதனை உயிரை சவட்டினோன் தவா நலம் உண்டோன் – குசேலோ:0 10/3
தண் மது பிலிற்றும் தாமரை ஆதி ததைந்த தாழ் கிடங்கும் மற்று அதனை – குசேலோ:1 15/2
மெல் நடை கரிய வாள் கண் விரை கரும் தாழ் குழாலே – குசேலோ:1 117/4
இவர் குழல் சேர்த்து கட்டிட கதிர் நாண் எடுத்தனர் மயங்குபு அண்மையில் தாழ்
உவர் குடி குயினில் கட்டினர் அதனை உறும் மின்னே என்ன உட்கொண்டான் – குசேலோ:2 250/3,4
மேல்

தாழ்க்கொண்டு (1)

மாற்று விதம் இல் பறவை எலாம் வாய் தாழ்க்கொண்டு மரம்-தோறும் – குசேலோ:2 457/1
மேல்

தாழ்த்தி (1)

தக்க பொன்னுலகத்து உறைகுநர் முகிலை தடை என நவின்று கீழ் தாழ்த்தி
ஒக்கலோடு ஒளிர் கற்பக நிழல் மருந்து உண்டு உயிரை ஓம்புற கடும் கொடுமை – குசேலோ:1 172/2,3
மேல்

தாழ்ந்தனர் (1)

தாழ்ந்தனர் தேர் மேல் வந்த சாந்தனை அந்தகாரம் – குசேலோ:3 569/2
மேல்

தாழ்ந்து (3)

சந்தம் ஆர் நிலத்தின் வீழ்ந்து தாழ்ந்து எழீஇ குடந்தம்பட்டு – குசேலோ:2 381/2
ஆதரம் பெருக நெற்றி அணி நிலம் தோய தாழ்ந்து
மா தவர் ஏறே போற்றி மறை குல சுடரே போற்றி – குசேலோ:2 387/1,2
ஒருங்கு கூறலும் உவந்து தாழ்ந்து எழீஇ – குசேலோ:2 483/2
மேல்

தாழ்வு (1)

ஒப்பு_இல் பல் வளனும் தருதி என்று இரக்கில் உறும்-கொலோ தாழ்வு அதின் உணர்ந்தோய் – குசேலோ:1 156/4
மேல்

தாழக்கோல் (1)

இரு கவாடத்தை நூக்குபு தாழக்கோல் இறுக்கி – குசேலோ:3 641/3
மேல்

தாழம்பூ (1)

வற்றல் மீன் நாற்றம் போக்கும் அலர் மணி குழல் தாழம்பூ
பற்றுபு பரதர் கோட்டில் பரப்பும் மீன் நாற்றம் போக்கும் – குசேலோ:2 213/2,3
மேல்

தாழும் (1)

தாழும் அஞர் போய் ஒழிதல் அன்றி தகும் இம்மையின் கரணம் மூன்றும் – குசேலோ:3 643/3
மேல்

தாள் (11)

கந்தவேள் பின் வந்து உதித்தவன் திருவூர் காவலன் முள் பொதி பசும் தாள்
கந்த நல் கமல மாலை சூழ் தோளான் கலை உணர் சீனிவாச பேர் – குசேலோ:0 25/2,3
சேல் கரு நெடும் கண் திருமகள் வருட சிவந்து காட்டிடு மரை மலர் தாள்
ஏற்கும் என்று உள்ளத்து இருவி எந்நாளும் இயற்ற அரும் பூசனை இயற்றும் – குசேலோ:1 57/3,4
அலை இட்ட முள் தாள் செய்ய அம்புய துறைவோன் ஓர் ஏழ் – குசேலோ:1 64/2
கரங்கள் தாள் அடி மருங்கு முன் இரு மதி காணும் – குசேலோ:1 135/2
செற்ற சகடு உதைத்தான் தாள் குறியாது என்-கொலோ – குசேலோ:2 201/2
கன்று குணில் கொண்டான் தாள் குறியாது என்-கொலோ – குசேலோ:2 201/5
உந்தி மருது இடம்தான் தாள் குறியாது என்-கொலோ – குசேலோ:2 201/8
தாள் துணை பணிந்து கண்ணனுக்கு அளக்கும் தயங்கு செம்பொன் பொதி குவித்த – குசேலோ:2 260/2
ஒண் தாள் துணை கொண்டு உயர்வீர் உலகீரே – குசேலோ:3 541/6
நந்தகோன் தட கை பற்றுபு குறும் தாள் பெயர்த்து மென்மெல நடந்து உலவி – குசேலோ:3 679/1
பூண்டவர்க்கு உரிய தாள் மேல் பொள்ளென வீழ்ந்து எழுந்து – குசேலோ:3 716/4
மேல்

தாளில் (3)

மணி வார் முடி மண் தோய்தர மறை மா முனி தாளில்
பணிவார் சிலர் துதிப்பார் சிலர் படர் அன்பினில் வழிபட்டு – குசேலோ:2 527/1,2
கொன் பரவும் உலகம் எலாம் உள் அடி ஓர் புறத்து உற நீள் குளிர் பூம் தாளில்
அன்புறுக என வரதம் காட்டும் ஒரு திருக்கையும் அப்போது பூத்த – குசேலோ:3 710/2,3
உனது அடியவர் பூம் தாளில் உற பணிந்து உய்தல் நீக்கி – குசேலோ:3 727/4
மேல்

தாளை (1)

நிழல்_இல் கான் நடந்தும் முன்னம் பழக்கினை நின் பொன் தாளை
அழல் செயும் அடியேன் நெஞ்சத்து அமைத்திடும் நிமித்தம்-கொல்லோ – குசேலோ:3 723/2,3
மேல்

தாளோய் (1)

மறலிய மன்னர் சென்னி மணி முடி இடறும் தாளோய் – குசேலோ:1 58/4
மேல்

தான் (6)

நந்தல்_இல் உண்மை ஈது என்று உணர்ந்தும் தான் நயந்து பெற்ற – குசேலோ:1 146/2
தான் உஞற்றுவனேல் கடவுளும் அதனை தந்து அளிக்குறும் அதால் அன்றோ – குசேலோ:1 148/2
அன்று முதல் உபவாசம் தான் இருந்து மா முனிவன் அரிதில் தேடி – குசேலோ:1 168/2
தான்_அல் உடலை யான் என்றும் தன்னோடு உரிமை அல்லாமை – குசேலோ:3 646/1
மா அலர் கதுப்பின் மாயை தான் பிறந்த மனையுற போக்குபு புகுந்து – குசேலோ:3 677/3
உவந்து வாசவன் கொள் பூசையை தான் கொண்டு உறு மழை வரை கொடு தடுத்து – குசேலோ:3 684/2
மேல்

தான்_அல் (1)

தான்_அல் உடலை யான் என்றும் தன்னோடு உரிமை அல்லாமை – குசேலோ:3 646/1
மேல்

தானங்கள் (1)

பொங்கும் மா தானங்கள் புரிந்தும் இட்டிகள் – குசேலோ:2 334/2
மேல்

தானம் (7)

ஆசறு தானம் ஈயும் அரசர் வாழ் மறுகும் ஓர்பால் – குசேலோ:1 26/4
இம்மையில் தருமம் தானம் எழில்பெற இயற்றினோர்கள் – குசேலோ:1 123/1
அடருறு தானம் தவம் முதல் யாவும் ஆற்றும் நின் பணிவிடை அன்றோ – குசேலோ:1 158/2
தானம் மேவுற இருந்து உள் ததைய இவை எண்ணுவான் – குசேலோ:1 190/4
குறைவறு பால் செருத்தல் ஆன் நிலன் முதல் பல் வகை தானம் கொடுத்துளோரும் – குசேலோ:2 313/3
வில் தவழ் சூழி யானை மிக பொழி தானம் பாய்ந்து – குசேலோ:3 562/1
கொல் நுனை மருப்பு யானை குழாம் பொழி தானம் வாவும் – குசேலோ:3 563/1
மேல்

தானவர் (1)

பொருதிடம் தானவர் பொன்ற அமர்த்தான் – குசேலோ:3 537/3
மேல்

தானவன் (1)

கருதிடம் தானவன் காமர் குலத்தான் – குசேலோ:3 537/2
மேல்

தானியம் (1)

அருகிய நீவார புல் தானியம் ஆராய்ந்தாராய்ந்து – குசேலோ:1 67/3
மேல்

தானை (3)

நிறைதரு தானை சொருக்கு முன் தூங்க நீள விட்டவர் குழாம் கூடி – குசேலோ:2 239/2
உன்ன அரும் கடவுள் கண்ணனது அருள் போல் ஓவரும் தானை தன் சூழ – குசேலோ:2 261/2
மா இயல் தானை சராசந்தன் ஓட மண்டு அமர் பதினெழு முறை செய்து – குசேலோ:3 689/3
மேல்

தானையும் (1)

முந்து தானையும் ஒடுக்கி முன்னர் நிற்பாரை நோக்கி – குசேலோ:2 381/3
மேல்