இ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 29
இஃதோ 1
இகந்து 2
இகல் 10
இகலான் 1
இகலிற்கு 1
இகலின் 1
இகவா 2
இகவாமை 1
இகழ்ச்சி 1
இகழ்ச்சியின் 1
இகழ்ந்தார்க்கு 1
இகழ்ந்து 1
இகழ்வார் 3
இகழ்வாரை 1
இகழாமை 2
இகழார் 1
இசை 6
இசையும் 1
இட்ட 2
இட்டிது-ஆயினும் 1
இடத்த 1
இடத்தது 1
இடத்தால் 1
இடத்தான் 2
இடத்து 14
இடத்தும் 2
இடம் 6
இடர்ப்பாடு 1
இடல் 1
இடன் 5
இடனொடு 1
இடி 1
இடிக்கும் 1
இடித்தல் 1
இடித்து 1
இடிப்பாரை 1
இடு 1
இடுக்கண் 7
இடுதல் 1
இடும்பை 13
இடும்பைக்கு 3
இடும்பைக்கே 1
இடும்பைகள் 1
இடும்பைத்து 1
இடும்பையுள் 1
இடை 3
இடை-கண் 1
இடையறாது 1
இடையூறும் 1
இணர் 2
இணை 1
இதற்பட்டது 1
இதனால் 1
இதனை 1
இது 2
இந்திரனே 1
இம்மை 1
இம்மையும் 2
இமைப்பின் 3
இமையாரின் 1
இயக்கம் 1
இயல்பது 1
இயல்பாக 1
இயல்பான் 1
இயல்பிற்று 1
இயல்பினான் 1
இயல்பு 8
இயல்வது 1
இயலார் 1
இயலாள் 1
இயலான் 1
இயற்கை 4
இயற்பால 1
இயற்றலும் 1
இயற்றியார்க்கு 1
இயற்றியான் 1
இயன்றது 1
இயன்றன 1
இயைந்த 3
இயைந்த-கால் 1
இயைந்து 2
இயைபு 1
இயையா-கடை 1
இயையின் 1
இரக்க 1
இரக்கப்படுதல் 1
இரங்கிவிடும் 1
இரங்குவ 1
இரண்டால் 1
இரண்டின் 3
இரண்டு 2
இரண்டும் 7
இரத்தக்கார் 1
இரத்தல் 1
இரத்தலின் 1
இரத்தலும் 1
இரந்தவர் 1
இரந்தவை 1
இரந்து 3
இரந்தும் 1
இரப்ப 2
இரப்பவர் 2
இரப்பன் 1
இரப்பார்க்கு 2
இரப்பாரை 2
இரப்பான் 1
இரப்பின் 1
இரப்பினும் 1
இரப்பும் 1
இரவன்-மின் 1
இரவாமை 1
இரவார் 1
இரவின் 1
இரவு 5
இரா 3
இராஅ 1
இரீஇய 1
இரு 7
இருக்க 1
இருட்டு 1
இருதலையானும் 1
இருந்த 1
இருந்தது 1
இருந்தான் 1
இருந்து 7
இருந்தும் 2
இருந்தேமா 1
இருப்ப 2
இருப்பர் 1
இருப்பாரை 1
இருப்பின் 1
இருமை 1
இருவர்க்கு 1
இருள் 7
இருளே 1
இரையான்-கண் 1
இல் 80
இல்லது 5
இல்லதே 1
இல்லர் 1
இல்லவர் 2
இல்லவள் 2
இல்லா 4
இல்லாகி 2
இல்லாகியார் 1
இல்லாகும் 1
இல்லாத 7
இல்லாதவர் 1
இல்லாதவர்க்கு 1
இல்லாதாள் 1
இல்லாதான் 3
இல்லாயின் 1
இல்லார் 6
இல்லார்-கண் 1
இல்லார்க்கு 4
இல்லாரை 2
இல்லாரொடு 1
இல்லாள் 1
இல்லாள்-கண் 2
இல்லாளின் 1
இல்லாளை 1
இல்லான் 1
இல்லை 47
இல்வழி 1
இல்வாழ்க்கை 5
இல்வாழ்வான் 3
இல 16
இலக்கம் 1
இலங்கு 2
இலங்கு_இழாய் 1
இலதனை 4
இலது 1
இலம் 2
இலர் 13
இலர்-ஆயினும் 1
இலரே 2
இலவர்க்கு 2
இலவே 2
இலன் 16
இலனாய் 2
இலா 9
இலாத 3
இலாதவர் 2
இலாதான் 1
இலார் 9
இலார்க்கு 3
இலாள் 1
இலாளன் 1
இலான் 4
இலான்-கண் 1
இலானும் 1
இலாஅ-கடை 1
இலாஅதவர் 1
இலேன் 1
இலோர்க்கு 1
இவக்காண் 1
இவர் 1
இவர்தந்து 1
இவள் 5
இவளை 1
இவறலும் 1
இவறன்மை 1
இவறி 1
இவறியார் 1
இவறியான் 1
இவறும் 1
இவன் 2
இவை 4
இழ-தொறூஉம் 1
இழக்கும் 4
இழத்தும் 1
இழந்தவன் 1
இழந்து 1
இழந்தேம் 1
இழப்பர் 2
இழப்பினும் 2
இழவு 1
இழவு_ஊழ் 1
இழாய் 1
இழிந்த 2
இழிந்த-கடை 1
இழிவு 1
இழுக்கத்தின் 2
இழுக்கம் 3
இழுக்கல் 1
இழுக்கா 3
இழுக்காது 1
இழுக்காமை 1
இழுக்கார் 1
இழுக்கியான் 1
இழுக்கு 6
இழை 5
இழைத்தது 1
இழைத்து 2
இழைந்து 1
இழையார் 1
இளி 3
இளித்தக்க 1
இளிவந்த 1
இளிவந்தது 1
இளிவாம் 1
இளிவு 2
இளைது 1
இளையர் 1
இற்பிறந்தோர்-கண்ணேயும் 1
இறந்த 3
இறந்தார் 3
இறந்தார்க்கும் 1
இறந்தாரை 1
இறந்து 7
இறப்பான் 1
இறப்பான்-கண் 1
இறப்பினை 1
இறப்பே 1
இறல் 2
இறவாநின்ற 1
இறுதி 2
இறும் 1
இறுவரை 1
இறை 6
இறைக்கு 2
இறைஞ்சினாள் 1
இறைப்பவர்க்கு 1
இறைவற்கு 2
இறைவன் 3
இன் 17
இன்பத்துள் 2
இன்பம் 24
இன்பமும் 1
இன்புற்றார் 1
இன்புற 1
இன்புறுவது 1
இன்புறூஉம் 1
இன்மை 32
இன்மையா 1
இன்மையின் 3
இன்மையும் 1
இன்மையுள் 2
இன்மையே 1
இன்றால் 2
இன்றி 15
இன்றியமையா 1
இன்றியமையாத 1
இன்று 13
இன்றும் 1
இன்றே 2
இன்றேல் 6
இன்னம் 1
இன்னா 25
இன்னாத 4
இன்னாதது 3
இன்னாதால் 1
இன்னாது 8
இன்னாதே 1
இன்னாமை 2
இன்னான் 1
இன்னும் 2
இன 5
இனத்தனாய் 1
இனத்தான் 1
இனத்தின் 2
இனத்து 3
இனத்தொடு 1
இனம் 5
இனன் 2
இனனும் 1
இனி 2
இனிது 20
இனிது-கொல் 1
இனிதே 5
இனிய 4
இனியது 1
இனியவே 1
இனியார் 1
இனை 1
இனையர் 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


இ (29)

அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இ உலகம் இல்லாகி ஆங்கு – குறள் 25:7
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இ உலகு – குறள் 34:6
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு – குறள் 39:2
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவற்கு – குறள் 39:3
இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
தான் கண்டனைத்து இ உலகு – குறள் 39:7
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு – குறள் 40:2
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்
நன்கு உடையான்-கட்டே தெளிவு – குறள் 52:3
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
உண்மையான் உண்டு இ உலகு – குறள் 58:1
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இ உலகு – குறள் 58:8
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின்
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் – குறள் 67:2
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
செறிவு உடையான் செல்க வினைக்கு – குறள் 69:4
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு – குறள் 69:8
பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து – குறள் 74:8
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – குறள் 75:3
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடி பிறந்தார் – குறள் 96:2
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு – குறள் 100:2
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இ மூன்றும் உடைத்து – குறள் 109:5
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இ ஊர் – குறள் 113:9
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
ஏதிலர் என்னும் இ ஊர் – குறள் 113:10
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர் எமக்கு ஈந்தது இ ஊர் – குறள் 115:2
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்
நீர் ஆக நீளும் இ நோய் – குறள் 115:7
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
கௌவை எடுக்கும் இ ஊர் – குறள் 115:10
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணு தரும் – குறள் 117:2
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
நெடிய கழியும் இரா – குறள் 117:9
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண்
தாஅம் இதற்பட்டது – குறள் 118:6
நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான்
காணார்-கொல் இ ஊரவர் – குறள் 122:10
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இ நோய் – குறள் 123:7
காமம் விடு ஒன்றோ நாண் விடு நன் நெஞ்சே
யானோ பொறேன் இ இரண்டு – குறள் 125:7
தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று – குறள் 132:9

TOP


இஃதோ (1)

மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர் போல மிகும் – குறள் 117:1

TOP


இகந்து (2)

நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல் – குறள் 12:3
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
ஏதிலர் என்னும் இ ஊர் – குறள் 113:10

TOP


இகல் (10)

பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது – குறள் 49:1
சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது – குறள் 65:7
அகலாது அணுகாது தீ காய்வார் போல்க
இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – குறள் 70:1
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்பு இன்மை பாரிக்கும் நோய் – குறள் 86:1
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி
இன்னா செய்யாமை தலை – குறள் 86:2
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா
தா இல் விளக்கம் தரும் – குறள் 86:3
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள் 86:4
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மையவர் – குறள் 86:5
மிகல் மேவல் மெய் பொருள் காணார் இகல் மேவல்
இன்னா அறிவினவர் – குறள் 86:7
இகல் காணான் ஆக்கம் வரும்-கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு – குறள் 86:9

TOP


இகலான் (1)

இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம்
நன் நயம் என்னும் செருக்கு – குறள் 86:10

TOP


இகலிற்கு (1)

இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு – குறள் 86:8

TOP


இகலின் (1)

இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து – குறள் 86:6

TOP


இகவா (2)

பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவா ஆம் இல் இறப்பான்-கண் – குறள் 15:6
செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர் பெறின் – குறள் 87:9

TOP


இகவாமை (1)

இழைத்தது இகவாமை சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற்பவர் – குறள் 78:9

TOP


இகழ்ச்சி (1)

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்பு உள பாடு அறிவார் மாட்டு – குறள் 100:5

TOP


இகழ்ச்சியின் (1)

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – குறள் 54:9

TOP


இகழ்ந்தார்க்கு (1)

புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் – குறள் 54:8

TOP


இகழ்ந்து (1)

இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து – குறள் 106:7

TOP


இகழ்வார் (3)

புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
ஏறு போல் பீடு நடை – குறள் 6:9
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை – குறள் 16:1
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
இகழ்வார் பின் சென்று நிலை – குறள் 97:6

TOP


இகழ்வாரை (1)

புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் – குறள் 24:7

TOP


இகழாமை (2)

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை – குறள் 90:1
நகை ஈகை இன் சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மை குடிக்கு – குறள் 96:3

TOP


இகழார் (1)

இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
ஒளியொடு ஒழுகப்படும் – குறள் 70:8

TOP


இசை (6)

ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு – குறள் 24:1
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
எச்சம் பெறாஅவிடின் – குறள் 24:8
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம் – குறள் 24:9
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர் – குறள் 24:10
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
கழல் யாப்பு காரிகை நீர்த்து – குறள் 78:7
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்கு பொறை – குறள் 101:3

TOP


இசையும் (1)

நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு
இசையும் இனிய செவிக்கு – குறள் 120:9

TOP


இட்ட (2)

ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு – குறள் 104:8
நிணம் தீயில் இட்ட அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் – குறள் 126:10

TOP


இட்டிது-ஆயினும் (1)

ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை
போகு_ஆறு அகலா-கடை – குறள் 48:8

TOP


இடத்த (1)

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின் – குறள் 30:2

TOP


இடத்தது (1)

சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை
ஊக்கம் அழிப்பது அரண் – குறள் 75:4

TOP


இடத்தால் (1)

சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்-பால் உய்ப்பது அறிவு – குறள் 43:2

TOP


இடத்தான் (2)

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின் – குறள் 49:4
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தான் செயின் – குறள் 50:7

TOP


இடத்து (14)

வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து – குறள் 25:10
செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து
காக்கின் என் காவா-கால் என் – குறள் 31:1
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும்
இல் அதனின் தீய பிற – குறள் 31:2
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து – குறள் 49:10
எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
நல் ஆள் உடையது அரண் – குறள் 75:6
உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவு இடத்து
தொல் படைக்கு அல்லால் அரிது – குறள் 77:2
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து – குறள் 88:9
உள் பகை அஞ்சி தன் காக்க உலைவு இடத்து
மண் பகையின் மாண தெறும் – குறள் 89:3
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து – குறள் 97:8
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – குறள் 113:4
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவு ஓர் இடத்து உண்மையான் – குறள் 116:3
எழுதும்-கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து – குறள் 129:5

TOP


இடத்தும் (2)

செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும்
இல் அதனின் தீய பிற – குறள் 31:2
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடு என்ப நாட்டின் தலை – குறள் 74:6

TOP


இடம் (6)

தொடங்கற்க எ வினையும் எள்ளற்க முற்றும்
இடம் கண்ட பின் அல்லது – குறள் 50:1
சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான்
ஊக்கம் அழிந்து விடும் – குறள் 50:8
சீர் இடம் காணின் எறிதற்கு பட்டடை
நேரா நிறந்தவர் நட்பு – குறள் 83:1
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா
காலும் இரவு ஒல்லா சால்பு – குறள் 107:4
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திரு_நுதற்கு இல்லை இடம் – குறள் 113:3

TOP


இடர்ப்பாடு (1)

மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து – குறள் 63:4

TOP


இடல் (1)

வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி
மிச்சில் மிசைவான் புலம் – குறள் 9:5

TOP


இடன் (5)

இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன் அறி காட்சியவர் – குறள் 22:8
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
போற்றார்-கண் போற்றி செயின் – குறள் 50:3
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து
துன்னியார் துன்னி செயின் – குறள் 50:4
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை – குறள் 69:7
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – குறள் 91:10

TOP


இடனொடு (1)

பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணி செயல் – குறள் 68:5

TOP


இடி (1)

இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
மாண்ட உஞற்று இலர் – குறள் 61:7

TOP


இடிக்கும் (1)

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர் – குறள் 45:7

TOP


இடித்தல் (1)

நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதி-கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு – குறள் 79:4

TOP


இடித்து (1)

அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – குறள் 80:5

TOP


இடிப்பாரை (1)

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் – குறள் 45:8

TOP


இடு (1)

வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு – குறள் 56:2

TOP


இடுக்கண் (7)

இடுக்கண் வரும்-கால் நகுக அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – குறள் 63:1
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து – குறள் 63:4
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும் – குறள் 63:5
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கு அற்ற காட்சியவர் – குறள் 66:4
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு – குறள் 79:8
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி – குறள் 103:10

TOP


இடுதல் (1)

ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு – குறள் 104:8

TOP


இடும்பை (13)

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல – குறள் 1:4
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும் – குறள் 14:8
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும் – குறள் 51:8
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் – குறள் 51:10
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ள கெடும் – குறள் 63:2
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅதவர் – குறள் 63:3
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
துன்பம் உறுதல் இலன் – குறள் 63:8
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் – குறள் 90:2
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும் – குறள் 106:6
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி – குறள் 106:10
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல் – குறள் 107:3

TOP


இடும்பைக்கு (3)

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅதவர் – குறள் 63:3
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
கையாறா கொள்ளாதாம் மேல் – குறள் 63:7

TOP


இடும்பைக்கே (1)

இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை
குற்றம் மறைப்பான் உடம்பு – குறள் 103:9

TOP


இடும்பைகள் (1)

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினை
பற்றி விடாஅதவர்க்கு – குறள் 35:7

TOP


இடும்பைத்து (1)

பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு – குறள் 130:5

TOP


இடும்பையுள் (1)

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரை
துன்பங்கள் சென்று படும் – குறள் 105:5

TOP


இடை (3)

கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
எற்றா விழுமம் தரும் – குறள் 67:3
இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மையவர் – குறள் 72:2
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
வேந்தனும் வேந்து கெடும் – குறள் 90:9

TOP


இடை-கண் (1)

உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடை-கண் முரிந்தார் பலர் – குறள் 48:3

TOP


இடையறாது (1)

இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள் 37:9

TOP


இடையூறும் (1)

முடிவும் இடையூறும் முற்றிய ஆங்கு எய்தும்
படுபயனும் பார்த்து செயல் – குறள் 68:6

TOP


இணர் (2)

இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று – குறள் 31:8
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
உணர விரித்து உரையாதார் – குறள் 65:10

TOP


இணை (1)

கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
என்ன பயனும் இல – குறள் 110:10

TOP


இதற்பட்டது (1)

ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண்
தாஅம் இதற்பட்டது – குறள் 118:6

TOP


இதனால் (1)

இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்-கண் விடல் – குறள் 52:7

TOP


இதனை (1)

இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்-கண் விடல் – குறள் 52:7

TOP


இது (2)

அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான்-இடை – குறள் 4:7
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும்
இது நக தக்கது உடைத்து – குறள் 118:3

TOP


இந்திரனே (1)

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்
இந்திரனே சாலும் கரி – குறள் 3:5

TOP


இம்மை (1)

இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
கண் நிறை நீர் கொண்டனள் – குறள் 132:5

TOP


இம்மையும் (2)

சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் – குறள் 10:8
இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் – குறள் 105:2

TOP


இமைப்பின் (3)

விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு – குறள் 78:5
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம் காதலவர் – குறள் 113:6
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இ ஊர் – குறள் 113:9

TOP


இமையாரின் (1)

இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
அமை ஆர் தோள் அஞ்சுபவர் – குறள் 91:6

TOP


இயக்கம் (1)

நாண் அகத்து இல்லார் இயக்கம் மர_பாவை
நாணால் உயிர் மருட்டி அற்று – குறள் 102:10

TOP


இயல்பது (1)

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு – குறள் 46:2

TOP


இயல்பாக (1)

இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
செப்பமும் நாணும் ஒருங்கு – குறள் 96:1

TOP


இயல்பான் (1)

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு – குறள் 46:2

TOP


இயல்பிற்று (1)

அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல் – குறள் 34:3

TOP


இயல்பினான் (1)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை – குறள் 5:7

TOP


இயல்பு (8)

இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல் ஆற்றின் நின்ற துணை – குறள் 5:1
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு – குறள் 17:1
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 35:4
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு – குறள் 39:2
இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு – குறள் 55:5
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
துன்பம் உறுதல் இலன் – குறள் 63:8
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணு தரும் – குறள் 91:3
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான் – குறள் 101:6

TOP


இயல்வது (1)

உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும்
சேராது இயல்வது நாடு – குறள் 74:4

TOP


இயலார் (1)

பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு – குறள் 132:1

TOP


இயலாள் (1)

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன் – குறள் 15:7

TOP


இயலான் (1)

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன் – குறள் 15:7

TOP


இயற்கை (4)

ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே
பேரா இயற்கை தரும் – குறள் 37:10
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
தெள்ளியர் ஆதலும் வேறு – குறள் 38:4
செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் – குறள் 64:7

TOP


இயற்பால (1)

வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின்
ஈண்டு இயற்பால பல – குறள் 35:2

TOP


இயற்றலும் (1)

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு – குறள் 39:5

TOP


இயற்றியார்க்கு (1)

ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு – குறள் 76:10

TOP


இயற்றியான் (1)

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் – குறள் 107:2

TOP


இயன்றது (1)

அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் – குறள் 4:5

TOP


இயன்றன (1)

உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் – குறள் 111:6

TOP


இயைந்த (3)

அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
என்பொடு இயைந்த தொடர்பு – குறள் 8:3
மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணொடு
இயைந்து கண்ணோடாதவர் – குறள் 58:6

TOP


இயைந்த-கால் (1)

எய்தற்கு அரியது இயைந்த-கால் அ நிலையே
செய்தற்கு அரிய செயல் – குறள் 49:9

TOP


இயைந்து (2)

மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணொடு
இயைந்து கண்ணோடாதவர் – குறள் 58:6
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
நீர் இயைந்து அன்னார் அகத்து – குறள் 133:3

TOP


இயைபு (1)

பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண் – குறள் 58:3

TOP


இயையா-கடை (1)

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையா-கடை – குறள் 23:10

TOP


இயையின் (1)

விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும் – குறள் 53:2

TOP


இரக்க (1)

இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்
அவர் பழி தம் பழி அன்று – குறள் 106:1

TOP


இரக்கப்படுதல் (1)

இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர்
இன் முகம் காணும் அளவு – குறள் 23:4

TOP


இரங்கிவிடும் (1)

முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை
பின் ஊறு இரங்கிவிடும் – குறள் 54:5

TOP


இரங்குவ (1)

எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்று அன்ன செய்யாமை நன்று – குறள் 66:5

TOP


இரண்டால் (1)

தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று – குறள் 88:5

TOP


இரண்டின் (3)

ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின்
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் – குறள் 67:2
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையும்-கால்
தீ எச்சம் போல தெறும் – குறள் 68:4
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள் வினையான் நீளும் குடி – குறள் 103:2

TOP


இரண்டு (2)

கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண் உடையர் கல்லாதவர் – குறள் 40:3
காமம் விடு ஒன்றோ நாண் விடு நன் நெஞ்சே
யானோ பொறேன் இ இரண்டு – குறள் 125:7

TOP


இரண்டும் (7)

தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் – குறள் 2:9
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு – குறள் 40:2
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று – குறள் 41:2
மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இன தூய்மை தூவா வரும் – குறள் 46:5
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
தெற்று என்க மன்னவன் கண் – குறள் 59:1
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு – குறள் 76:10
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு – குறள் 100:2

TOP


இரத்தக்கார் (1)

இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்
அவர் பழி தம் பழி அன்று – குறள் 106:1

TOP


இரத்தல் (1)

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின் – குறள் 106:2

TOP


இரத்தலின் (1)

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் – குறள் 23:9

TOP


இரத்தலும் (1)

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார் மாட்டு – குறள் 106:4

TOP


இரந்தவர் (1)

இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர்
இன் முகம் காணும் அளவு – குறள் 23:4

TOP


இரந்தவை (1)

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின் – குறள் 106:2

TOP


இரந்து (3)

புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து – குறள் 78:10
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள்
மேவார் இலாஅ-கடை – குறள் 106:9
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல் – குறள் 107:3

TOP


இரந்தும் (1)

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் – குறள் 107:2

TOP


இரப்ப (2)

கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன்-மன் – குறள் 122:2
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப
நீடுக-மன்னோ இரா – குறள் 133:9

TOP


இரப்பவர் (2)

கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண் நின்று
இரப்பவர் மேற்கொள்வது – குறள் 106:5
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
சொல்லாட போஒம் உயிர் – குறள் 107:10

TOP


இரப்பன் (1)

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்-மின் என்று – குறள் 107:7

TOP


இரப்பார்க்கு (2)

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
ஈவார் மேல் நிற்கும் புகழ் – குறள் 24:2
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கை செய்து ஊண் மாலையவர் – குறள் 104:5

TOP


இரப்பாரை (2)

இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மர_பாவை சென்று வந்த அற்று – குறள் 106:8
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்-மின் என்று – குறள் 107:7

TOP


இரப்பான் (1)

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி – குறள் 106:10

TOP


இரப்பின் (1)

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்-மின் என்று – குறள் 107:7

TOP


இரப்பினும் (1)

ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் – குறள் 107:6

TOP


இரப்பும் (1)

கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து – குறள் 106:3

TOP


இரவன்-மின் (1)

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்-மின் என்று – குறள் 107:7

TOP


இரவாமை (1)

கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்-கண்ணும்
இரவாமை கோடி உறும் – குறள் 107:1

TOP


இரவார் (1)

இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கை செய்து ஊண் மாலையவர் – குறள் 104:5

TOP


இரவின் (1)

ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் – குறள் 107:6

TOP


இரவு (5)

வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு – குறள் 56:2
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா
காலும் இரவு ஒல்லா சால்பு – குறள் 107:4
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்
பார் தாக்க பக்கு விடும் – குறள் 107:8
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றி கெடும் – குறள் 107:9
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
காம நோய் சொல்லி இரவு – குறள் 128:10

TOP


இரா (3)

மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை – குறள் 117:8
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
நெடிய கழியும் இரா – குறள் 117:9
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப
நீடுக-மன்னோ இரா – குறள் 133:9

TOP


இராஅ (1)

புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்
அல்லல் நோய் காண்கம் சிறிது – குறள் 131:1

TOP


இரீஇய (1)

சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று – குறள் 66:10

TOP


இரு (7)

இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – குறள் 1:5
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
தெள்ளியர் ஆதலும் வேறு – குறள் 38:4
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு – குறள் 74:7
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப்பட்டார் தொடர்பு – குறள் 92:10
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான்
தாங்காது மன்னோ பொறை – குறள் 99:10
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும் பால் பட்டன்று இருள் – குறள் 100:9
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள் 110:1

TOP


இருக்க (1)

கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாது இருக்க பெறின் – குறள் 41:3

TOP


இருட்டு (1)

பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று – குறள் 92:3

TOP


இருதலையானும் (1)

ஒருதலையான் இன்னாது காமம் கா போல
இருதலையானும் இனிது – குறள் 120:6

TOP


இருந்த (1)

புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு – குறள் 34:10

TOP


இருந்தது (1)

தனியே இருந்து நினைத்த-கால் என்னை
தினிய இருந்தது என் நெஞ்சு – குறள் 130:6

TOP


இருந்தான் (1)

அறி கொன்று அறியான் எனினும் உறுதி
உழை இருந்தான் கூறல் கடன் – குறள் 64:8

TOP


இருந்து (7)

இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள் 9:1
உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்து இருந்து எண்ணி கொளல் – குறள் 53:10
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து
மாணாத செய்வான் பகை – குறள் 87:7
தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
அ மா அரிவை முயக்கு – குறள் 111:7
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி
பின் இருந்து வாழ்வார் பலர் – குறள் 116:10
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்-கண் இல் – குறள் 125:3
தனியே இருந்து நினைத்த-கால் என்னை
தினிய இருந்தது என் நெஞ்சு – குறள் 130:6

TOP


இருந்தும் (2)

மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர் – குறள் 98:3

TOP


இருந்தேமா (1)

ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து – குறள் 132:2

TOP


இருப்ப (2)

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்ப செயல் – குறள் 7:7
இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்ப காய் கவர்ந்து அற்று – குறள் 10:10

TOP


இருப்பர் (1)

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருதுபவர் – குறள் 49:5

TOP


இருப்பாரை (1)

இலம் என்று அசைஇ இருப்பாரை காணின்
நிலம் என்னும் நல்லாள் நகும் – குறள் 104:10

TOP


இருப்பின் (1)

செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடிவிடும் – குறள் 104:9

TOP


இருமை (1)

இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு – குறள் 3:3

TOP


இருவர்க்கு (1)

வீழும் இருவர்க்கு இனிதே வளி-இடை
போழ படாஅ முயக்கு – குறள் 111:8

TOP


இருள் (7)

இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – குறள் 1:5
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும் – குறள் 13:1
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல் – குறள் 25:3
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசு அறு காட்சியவர்க்கு – குறள் 36:2
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணி செயல் – குறள் 68:5
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
எண்ணிய தேயத்து சென்று – குறள் 76:3
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும் பால் பட்டன்று இருள் – குறள் 100:9

TOP


இருளே (1)

விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு – குறள் 119:6

TOP


இரையான்-கண் (1)

இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
கழி பேர் இரையான்-கண் நோய் – குறள் 95:6

TOP


இல் (80)

கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
தாளை வணங்கா தலை – குறள் 1:9
பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் – குறள் 5:4
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று – குறள் 5:9
மணை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
எனை மாட்சித்து-ஆயினும் இல் – குறள் 6:2
புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
ஏறு போல் பீடு நடை – குறள் 6:9
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள் 9:1
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல் – குறள் 9:4
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12:5
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்-கண் இல் – குறள் 15:1
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை
நின்றாரின் பேதையார் இல் – குறள் 15:2
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார் – குறள் 15:3
எனை துணையர்-ஆயினும் என்னாம் தினை துணையும்
தேரான் பிறன் இல் புகல் – குறள் 15:4
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி – குறள் 15:5
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவா ஆம் இல் இறப்பான்-கண் – குறள் 15:6
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் – குறள் 17:10
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
புன்மை இல் காட்சியவர் – குறள் 18:4
நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா
பண்பு இல் சொல் பல்லார் அகத்து – குறள் 20:4
பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல் – குறள் 20:6
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன் அறி காட்சியவர் – குறள் 22:8
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
இல் எனினும் ஈதலே நன்று – குறள் 23:2
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல் – குறள் 24:3
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை – குறள் 25:4
தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலை பொருட்டால் ஊன் தருவார் இல் – குறள் 26:6
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – குறள் 28:3
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 28:6
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி
பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் – குறள் 29:5
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்-கண் இல் – குறள் 29:7
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும்
இல் அதனின் தீய பிற – குறள் 31:2
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை
யாண்டும் அஃது ஒப்பது இல் – குறள் 37:3
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும் – குறள் 37:8
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை – குறள் 40:10
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
செற்றார் செயக்கிடந்தது இல் – குறள் 45:6
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல் – குறள் 46:10
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
அரும் பொருள் யாது ஒன்றும் இல் – குறள் 47:2
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி
செல்வார்க்கு செல்லாதது இல் – குறள் 48:2
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்கு உடையார் மா நிலத்து இல் – குறள் 53:6
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃது ஒப்பது இல் – குறள் 54:6
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் – குறள் 54:8
கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் கண் உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் – குறள் 58:7
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொள கிடந்தது இல் – குறள் 59:3
இடுக்கண் வரும்-கால் நகுக அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – குறள் 63:1
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின் ஊங்கு இல் – குறள் 65:4
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல் – குறள் 72:3
செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும்
எஃகு அதனின் கூரியது இல் – குறள் 76:9
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
படை தகையான் பாடு பெறும் – குறள் 77:8
சிறுமையும் செல்லா துனியும் வறுமையும்
இல் ஆயின் வெல்லும் படை – குறள் 77:9
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல் – குறள் 77:10
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா
பேதையின் பேதையார் இல் – குறள் 84:4
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல் – குறள் 84:9
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் – குறள் 85:10
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா
தா இல் விளக்கம் தரும் – குறள் 86:3
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
பெண் ஏவல் செய்வார்-கண் இல் – குறள் 91:9
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – குறள் 91:10
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர்
நயன் தூக்கி நள்ளா விடல் – குறள் 92:2
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல் – குறள் 94:4
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
செப்பமும் நாணும் ஒருங்கு – குறள் 96:1
வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல் – குறள் 101:1
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல் – குறள் 101:5
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடு உடையது இல் – குறள் 103:1
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கி கொளல் – குறள் 103:6
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மர_பாவை சென்று வந்த அற்று – குறள் 106:8
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல் – குறள் 107:3
தெள் நீர் அடு புற்கை-ஆயினும் தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல் – குறள் 107:5
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் – குறள் 107:6
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்
பார் தாக்க பக்கு விடும் – குறள் 107:8
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன
ஒப்பாரி யாம் கண்டது இல் – குறள் 108:1
தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
அ மா அரிவை முயக்கு – குறள் 111:7
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
பெண்ணின் பெரும் தக்கது இல் – குறள் 114:7
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார் பிரிவு – குறள் 116:8
காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
ஏம புணை-மன்னும் இல் – குறள் 117:4
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து – குறள் 118:4
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை
துறந்தார் அவர் என்பார் இல் – குறள் 119:8
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
காமத்து காழ்_இல் கனி – குறள் 120:1
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 120:8
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
நினைப்ப வருவது ஒன்று இல் – குறள் 121:2
காதலர் இல் வழி மாலை கொலை_களத்து
ஏதிலர் போல வரும் – குறள் 123:4
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்-கண் இல் – குறள் 125:3
உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – குறள் 129:1
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – குறள் 130:3

TOP


இல்லது (5)

இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
இல்லவள் மாணா-கடை – குறள் 6:3
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள் கோட்டம் இன்மை பெறின் – குறள் 12:9
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு – குறள் 43:5
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
கொல் குறும்பும் இல்லது நாடு – குறள் 74:5
எனை மாட்சித்து ஆகிய-கண்ணும் வினை மாட்சி
இல்லார்-கண் இல்லது அரண் – குறள் 75:10

TOP


இல்லதே (1)

மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று – குறள் 59:7

TOP


இல்லர் (1)

உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
மரம் மக்கள் ஆதலே வேறு – குறள் 60:10

TOP


இல்லவர் (2)

கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் கண் உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் – குறள் 58:7
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
பேணி புணர்பவர் தோள் – குறள் 92:7

TOP


இல்லவள் (2)

இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
இல்லவள் மாணா-கடை – குறள் 6:3

TOP


இல்லா (4)

அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று – குறள் 8:8
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா
தா இல் விளக்கம் தரும் – குறள் 86:3
இடம் எல்லாம் கொள்ளா தகைத்தே இடம் இல்லா
காலும் இரவு ஒல்லா சால்பு – குறள் 107:4
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
காதலர் இல்லா வழி – குறள் 131:8

TOP


இல்லாகி (2)

அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இ உலகம் இல்லாகி ஆங்கு – குறள் 25:7
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
இல்லாகி தோன்றா கெடும் – குறள் 48:9

TOP


இல்லாகியார் (1)

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார் – குறள் 94:5

TOP


இல்லாகும் (1)

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு – குறள் 10:4

TOP


இல்லாத (7)

அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும் பயன் இல்லாத சொல் – குறள் 20:8
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் – குறள் 42:2
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் – குறள் 45:8
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண் – குறள் 58:3
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண் – குறள் 58:4
ஆங்கு அமைவு எய்திய-கண்ணும் பயம் இன்றே
வேந்து அமைவு இல்லாத நாடு – குறள் 74:10
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு – குறள் 95:5

TOP


இல்லாதவர் (1)

அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கள் பண்பு இல்லாதவர் – குறள் 100:7

TOP


இல்லாதவர்க்கு (1)

ஐ உணர்வு எய்திய-கண்ணும் பயம் இன்றே
மெய் உணர்வு இல்லாதவர்க்கு – குறள் 36:4

TOP


இல்லாதாள் (1)

கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று – குறள் 41:2

TOP


இல்லாதான் (3)

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மன கவலை மாற்றல் அரிது – குறள் 1:7
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று – குறள் 53:3
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாள் ஆண்மை போல கெடும் – குறள் 62:4

TOP


இல்லாயின் (1)

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று – குறள் 131:6

TOP


இல்லார் (6)

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் – குறள் 17:10
துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறல்-பால
ஊட்டா கழியும் எனின் – குறள் 38:8
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர் – குறள் 40:5
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து – குறள் 44:1
நாண் அகத்து இல்லார் இயக்கம் மர_பாவை
நாணால் உயிர் மருட்டி அற்று – குறள் 102:10
துப்புரவு இல்லார் துவர துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று – குறள் 105:10

TOP


இல்லார்-கண் (1)

எனை மாட்சித்து ஆகிய-கண்ணும் வினை மாட்சி
இல்லார்-கண் இல்லது அரண் – குறள் 75:10

TOP


இல்லார்க்கு (4)

அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இ உலகம் இல்லாகி ஆங்கு – குறள் 25:7
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும் – குறள் 37:8
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல் – குறள் 101:5

TOP


இல்லாரை (2)

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு – குறள் 76:2
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும் – குறள் 106:6

TOP


இல்லாரொடு (1)

உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி
கற்ற செல சொல்லாதார் – குறள் 73:10

TOP


இல்லாள் (1)

இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
அமை ஆர் தோள் அஞ்சுபவர் – குறள் 91:6

TOP


இல்லாள்-கண் (2)

மணை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
எனை மாட்சித்து-ஆயினும் இல் – குறள் 6:2
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணு தரும் – குறள் 91:3

TOP


இல்லாளின் (1)

செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடிவிடும் – குறள் 104:9

TOP


இல்லாளை (1)

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல் – குறள் 91:5

TOP


இல்லான் (1)

நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று – குறள் 41:7

TOP


இல்லை (47)

அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – குறள் 4:2
புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
ஏறு போல் பீடு நடை – குறள் 6:9
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கள் பேறு அல்ல பிற – குறள் 7:1
இனை துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின்
துணை துணை வேள்வி பயன் – குறள் 9:7
எ நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – குறள் 11:10
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கி இல்லை உயிர்க்கு – குறள் 13:2
அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்கம் இலான்-கண் உயர்வு – குறள் 14:5
விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் – குறள் 17:2
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் – குறள் 17:10
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையா-கடை – குறள் 23:10
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு – குறள் 24:1
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல் – குறள் 25:3
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி – குறள் 25:5
அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இ உலகம் இல்லாகி ஆங்கு – குறள் 25:7
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு – குறள் 26:2
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும் – குறள் 30:6
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற – குறள் 30:10
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இ உலகு – குறள் 34:6
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை
யாண்டும் அஃது ஒப்பது இல் – குறள் 37:3
எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய் – குறள் 43:9
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை – குறள் 45:9
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
இல்லை நன்று ஆகா வினை – குறள் 46:6
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல் – குறள் 46:10
ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை
போகு_ஆறு அகலா-கடை – குறள் 48:8
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
எ பால் நூலோர்க்கும் துணிவு – குறள் 54:3
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு – குறள் 54:4
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா
கருவியான் போற்றி செயின் – குறள் 54:7
கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
இல்லை நிலக்கு பொறை – குறள் 57:10
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்-கால்
கண் அல்லது இல்லை பிற – குறள் 71:10
பொருள் அல்லவரை பொருளாக செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள் – குறள் 76:1
நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின்
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு – குறள் 80:1
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம் – குறள் 85:2
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு – குறள் 95:5
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
செப்பமும் நாணும் ஒருங்கு – குறள் 96:1
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரை
பேணி கொள்வேம் என்னும் நோக்கு – குறள் 98:6
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
மானம் கருத கெடும் – குறள் 103:8
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கு நிலை – குறள் 104:6
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திரு_நுதற்கு இல்லை இடம் – குறள் 113:3
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடல் அல்லது இல்லை வலி – குறள் 114:1
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை – குறள் 117:8
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான்
காதலர் நீங்கலர்-மன் – குறள் 122:6
இல்லை தவறு அவர்க்கு-ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு – குறள் 133:1

TOP


இல்வழி (1)

நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல் – குறள் 77:10

TOP


இல்வாழ்க்கை (5)

அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது – குறள் 5:5
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
போஒய் பெறுவது எவன் – குறள் 5:6
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை – குறள் 5:7
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து – குறள் 5:8
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று – குறள் 5:9

TOP


இல்வாழ்வான் (3)

இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல் ஆற்றின் நின்ற துணை – குறள் 5:1
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை – குறள் 5:2
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன் – குறள் 15:7

TOP


இல (16)

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல – குறள் 1:4
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல – குறள் 4:9
இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம் பொருள் கண்டார் வாய் சொல் – குறள் 10:1
பல்லார் முனிய பயன் இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப்படும் – குறள் 20:1
பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல
நட்டார்-கண் செய்தலின் தீது – குறள் 20:2
நயன் இலன் என்பது சொல்லும் பயன் இல
பாரித்து உரைக்கும் உரை – குறள் 20:3
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல
நீர்மை உடையார் சொலின் – குறள் 20:5
நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று – குறள் 20:7
குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பு இல
வேண்டுப வேட்ப சொலல் – குறள் 70:6
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல் – குறள் 70:7
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார் – குறள் 96:6
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பு ஆற்றார் ஆதல் கடை – குறள் 100:8
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
என்ன பயனும் இல – குறள் 110:10
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்
காணாது அமைவு இல கண் – குறள் 118:8

TOP


இலக்கம் (1)

இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
கையாறா கொள்ளாதாம் மேல் – குறள் 63:7

TOP


இலங்கு (2)

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரொடு ஏனையவர் – குறள் 41:10
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து – குறள் 127:2

TOP


இலங்கு_இழாய் (1)

இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து – குறள் 127:2

TOP


இலதனை (4)

என்பு இலதனை வெயில் போல காயுமே
அன்பு இலதனை அறம் – குறள் 8:7
தெளிவு இலதனை தொடங்கார் இளிவு என்னும்
ஏதப்பாடு அஞ்சுபவர் – குறள் 47:4
பகை என்னும் பண்பு இலதனை ஒருவன்
நகையேயும் வேண்டல்-பாற்று அன்று – குறள் 88:1

TOP


இலது (1)

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என் செயினும் சோர்வு இலது ஒற்று – குறள் 59:6

TOP


இலம் (2)

இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
புன்மை இல் காட்சியவர் – குறள் 18:4
இலம் என்று அசைஇ இருப்பாரை காணின்
நிலம் என்னும் நல்லாள் நகும் – குறள் 104:10

TOP


இலர் (13)

தக்கார் தகவு இலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும் – குறள் 12:4
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் – குறள் 27:10
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார்
அற்று ஆக அற்றது இலர் – குறள் 37:5
மேல் பிறந்தார்-ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு – குறள் 41:9
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என் உடையரேனும் இலர் – குறள் 43:10
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறை நிலத்தொடு ஒட்டல் அரிது – குறள் 50:9
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர்
பற்று இலர் நாணார் பழி – குறள் 51:6
கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் கண் உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் – குறள் 58:7
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
மாண்ட உஞற்று இலர் – குறள் 61:7
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர் – குறள் 78:8
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் – குறள் 96:4
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
நெஞ்சத்து அவலம் இலர் – குறள் 108:2
காதல் அவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி என் நெஞ்சு – குறள் 125:2

TOP


இலர்-ஆயினும் (1)

தவறு இலர்-ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து – குறள் 133:5

TOP


இலரே (2)

பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்
நன்கு செல சொல்லாதார் – குறள் 73:8
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
அமை ஆர் தோள் அஞ்சுபவர் – குறள் 91:6

TOP


இலவர்க்கு (2)

புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – குறள் 8:9
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இலவர்க்கு – குறள் 61:4

TOP


இலவே (2)

கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
தாளை வணங்கா தலை – குறள் 1:9
முறைப்பட சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர்
திறப்படு இலாஅதவர் – குறள் 64:10

TOP


இலன் (16)

மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற – குறள் 4:4
நயன் இலன் என்பது சொல்லும் பயன் இல
பாரித்து உரைக்கும் உரை – குறள் 20:3
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 21:5
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையான்-கண்ணே உள – குறள் 23:3
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் – குறள் 35:1
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் – குறள் 57:6
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
துன்பம் உறுதல் இலன் – குறள் 63:8
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் – குறள் 63:9
சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது – குறள் 65:7
அன்பு இலன் ஆன்ற துணை இலன் தான் துவ்வான்
என் பரியும் ஏதிலான் துப்பு – குறள் 87:2
அஞ்சும் அறியான் அமைவு இலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு – குறள் 87:3
நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது – குறள் 87:4
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பு இலன் பற்றார்க்கு இனிது – குறள் 87:5
குணம் இலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து – குறள் 87:8

TOP


இலனாய் (2)

குணம் இலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து – குறள் 87:8
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
சுற்றமா சுற்றும் உலகு – குறள் 103:5

TOP


இலா (9)

சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலா சொல் – குறள் 20:10
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம் – குறள் 24:9
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா
ஊக்கம் உடையான் உழை – குறள் 60:4
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு – குறள் 61:10
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா
செல்வரும் சேர்வது நாடு – குறள் 74:1
வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா
பூரியர்கள் ஆழும் அளறு – குறள் 92:9
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து – குறள் 106:3

TOP


இலாத (3)

ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு – குறள் 17:1
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
தீமை இலாத சொலல் – குறள் 30:1
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி – குறள் 103:10

TOP


இலாதவர் (2)

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு – குறள் 60:8
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்பொடு உடன் உறைந்த அற்று – குறள் 89:10

TOP


இலாதான் (1)

ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான் – குறள் 101:6

TOP


இலார் (9)

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறற்கு – குறள் 8:2
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று – குறள் 24:6
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது – குறள் 27:2
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
உண்மை நிலைக்கு பொறை – குறள் 58:2
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார்
உடையது உடையரோ மற்று – குறள் 60:1
மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பு இலார் நட்பு – குறள் 80:10
பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது – குறள் 82:1
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என் – குறள் 82:2
கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண் நின்று
இரப்பவர் மேற்கொள்வது – குறள் 106:5

TOP


இலார்க்கு (3)

அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு – குறள் 8:10
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை – குறள் 45:9

TOP


இலாள் (1)

தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் – குறள் 6:6

TOP


இலாளன் (1)

மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று – குறள் 91:4

TOP


இலான் (4)

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல – குறள் 1:4
மடி உளான் மா முகடி என்ப மடி இலான்
தாள் உளான் தாமரையினாள் – குறள் 62:7
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும் – குறள் 63:5
பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்த அற்று – குறள் 100:10

TOP


இலான்-கண் (1)

அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்கம் இலான்-கண் உயர்வு – குறள் 14:5

TOP


இலானும் (1)

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் – குறள் 45:8

TOP


இலாஅ-கடை (1)

ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள்
மேவார் இலாஅ-கடை – குறள் 106:9

TOP


இலாஅதவர் (1)

முறைப்பட சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர்
திறப்படு இலாஅதவர் – குறள் 64:10

TOP


இலேன் (1)

மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன் – குறள் 123:6

TOP


இலோர்க்கு (1)

புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
ஏறு போல் பீடு நடை – குறள் 6:9

TOP


இவக்காண் (1)

உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்
மேனி பசப்பு ஊர்வது – குறள் 119:5

TOP


இவர் (1)

இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு – குறள் 79:10

TOP


இவர்தந்து (1)

அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
மேனி மேல் ஊரும் பசப்பு – குறள் 119:2

TOP


இவள் (5)

கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
செய்யல-மன் இவள் கண் – குறள் 109:6
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள் 110:1
நீங்கின் தெறூஉம் குறுகும்-கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள் – குறள் 111:4
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
பலர் காணும் பூ ஒக்கும் என்று – குறள் 112:2
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை
துறந்தார் அவர் என்பார் இல் – குறள் 119:8

TOP


இவளை (1)

பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை
துறந்தார் அவர் என்பார் இல் – குறள் 119:8

TOP


இவறலும் (1)

இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு – குறள் 44:2

TOP


இவறன்மை (1)

பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப்படுவது ஒன்று அன்று – குறள் 44:8

TOP


இவறி (1)

ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்கு பொறை – குறள் 101:3

TOP


இவறியார் (1)

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார் – குறள் 94:5

TOP


இவறியான் (1)

செயல்-பால செய்யாது இவறியான் செல்வம்
உயல்-பாலது அன்றி கெடும் – குறள் 44:7

TOP


இவறும் (1)

பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 101:2

TOP


இவன் (2)

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் – குறள் 7:10
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்-கண் விடல் – குறள் 52:7

TOP


இவை (4)

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் – குறள் 36:10
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
தெற்று என்க மன்னவன் கண் – குறள் 59:1
ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்
கூடியார் பெற்ற பயன் – குறள் 111:9
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை
தின்னும் அவர் காணல் உற்று – குறள் 125:4

TOP


இழ-தொறூஉம் (1)

இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழ-தொறூஉம் காது அற்று உயிர் – குறள் 94:10

TOP


இழக்கும் (4)

ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர் – குறள் 23:8
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
ஊக்கார் அறிவுடையார் – குறள் 47:3
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி
சூழாது செய்யும் அரசு – குறள் 56:4
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – குறள் 94:2

TOP


இழத்தும் (1)

துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ
இன்னும் இழத்தும் கவின் – குறள் 125:10

TOP


இழந்தவன் (1)

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு – குறள் 79:8

TOP


இழந்து (1)

கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து – குறள் 115:4

TOP


இழந்தேம் (1)

ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார் – குறள் 60:3

TOP


இழப்பர் (2)

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து
துன்னியார் துன்னி செயின் – குறள் 50:4
உட்க படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
கள் காதல் கொண்டு ஒழுகுவார் – குறள் 93:1

TOP


இழப்பினும் (2)

அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும்
பின் பயக்கும் நல்-பாலவை – குறள் 66:9
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என் – குறள் 82:2

TOP


இழவு (1)

பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
ஆகல்_ஊழ் உற்ற-கடை – குறள் 38:2

TOP


இழவு_ஊழ் (1)

பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
ஆகல்_ஊழ் உற்ற-கடை – குறள் 38:2

TOP


இழாய் (1)

இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து – குறள் 127:2

TOP


இழிந்த (2)

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும் – குறள் 14:3
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்த-கடை – குறள் 97:4

TOP


இழிந்த-கடை (1)

தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்த-கடை – குறள் 97:4

TOP


இழிவு (1)

இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
கழி பேர் இரையான்-கண் நோய் – குறள் 95:6

TOP


இழுக்கத்தின் (2)

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து – குறள் 14:6
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தா பழி – குறள் 14:7

TOP


இழுக்கம் (3)

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும் – குறள் 14:3
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு
நாள் இழுக்கம் நட்டார் செயின் – குறள் 81:8

TOP


இழுக்கல் (1)

இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய் சொல் – குறள் 42:5

TOP


இழுக்கா (3)

அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் – குறள் 4:5
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து – குறள் 5:8
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
மானம் உடையது அரசு – குறள் 39:4

TOP


இழுக்காது (1)

அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
மானம் உடையது அரசு – குறள் 39:4

TOP


இழுக்காமை (1)

இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃது ஒப்பது இல் – குறள் 54:6

TOP


இழுக்கார் (1)

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடி பிறந்தார் – குறள் 96:2

TOP


இழுக்கியான் (1)

முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை
பின் ஊறு இரங்கிவிடும் – குறள் 54:5

TOP


இழுக்கு (6)

யா காவார்-ஆயினும் நா காக்க காவா-கால்
சோகாப்பர் சொல் இழுக்கு பட்டு – குறள் 13:7
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின்
ஏதம் படு பாக்கு அறிந்து – குறள் 17:4
எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு – குறள் 47:7
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு – குறள் 72:6
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்
ஆற்றுபவர்-கண் இழுக்கு – குறள் 90:3
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன் சொல் இழுக்கு தரும் – குறள் 92:1

TOP


இழை (5)

பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
தன் நோய்க்கு தானே மருந்து – குறள் 111:2
அறி-தொறு அறியாமை கண்டு அற்றால் காமம்
செறி-தோறும் சே_இழை மாட்டு – குறள் 111:10
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
மாண்_இழை கண் ஒவ்வேம் என்று – குறள் 112:4
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – குறள் 113:4
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப
நீடுக-மன்னோ இரா – குறள் 133:9

TOP


இழைத்தது (1)

இழைத்தது இகவாமை சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற்பவர் – குறள் 78:9

TOP


இழைத்து (2)

பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர் – குறள் 42:7
உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்து இருந்து எண்ணி கொளல் – குறள் 53:10

TOP


இழைந்து (1)

உழந்துஉழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து
வேண்டி அவர் கண்ட கண் – குறள் 118:7

TOP


இழையார் (1)

வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா
பூரியர்கள் ஆழும் அளறு – குறள் 92:9

TOP


இளி (3)

இளி வரின் வாழாத மானம் உடையார்
ஒளி தொழுது ஏத்தும் உலகு – குறள் 97:10
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
அஃது இறந்து வாழ்தும் எனல் – குறள் 98:1
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் – குறள் 105:4

TOP


இளித்தக்க (1)

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு
கள் அற்றே கள்வ நின் மார்பு – குறள் 129:8

TOP


இளிவந்த (1)

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கு அற்ற காட்சியவர் – குறள் 66:4

TOP


இளிவந்தது (1)

ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் – குறள் 107:6

TOP


இளிவாம் (1)

எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
உள்ளும் உயிர் காதல் நெஞ்சு – குறள் 130:8

TOP


இளிவு (2)

தெளிவு இலதனை தொடங்கார் இளிவு என்னும்
ஏதப்பாடு அஞ்சுபவர் – குறள் 47:4
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும்
திண்மை உண்டாக பெறின் – குறள் 99:8

TOP


இளைது (1)

இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து – குறள் 88:9

TOP


இளையர் (1)

இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
ஒளியொடு ஒழுகப்படும் – குறள் 70:8

TOP


இற்பிறந்தோர்-கண்ணேயும் (1)

இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் – குறள் 105:4

TOP


இறந்த (3)

இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு – குறள் 44:2
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு – குறள் 54:1
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து – குறள் 128:5

TOP


இறந்தார் (3)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னா சொல் நோற்கிற்பவர் – குறள் 16:9
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தை
துறந்தார் துறந்தார் துணை – குறள் 31:10

TOP


இறந்தார்க்கும் (1)

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை – குறள் 5:2

TOP


இறந்தாரை (1)

துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று – குறள் 3:2

TOP


இறந்து (7)

களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து
ஆவது போல கெடும் – குறள் 29:3
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் – குறள் 48:6
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என் செயினும் சோர்வு இலது ஒற்று – குறள் 59:6
இறந்து அமைந்த சார்பு உடையர்-ஆயினும் உய்யார்
சிறந்து அமைந்த சீரார் செறின் – குறள் 90:10
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
அஃது இறந்து வாழ்தும் எனல் – குறள் 98:1
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்
மறை இறந்து மன்று படும் – குறள் 114:8
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
மறை இறந்து மன்றுபடும் – குறள் 126:4

TOP


இறப்பான் (1)

எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி – குறள் 15:5

TOP


இறப்பான்-கண் (1)

பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவா ஆம் இல் இறப்பான்-கண் – குறள் 15:6

TOP


இறப்பினை (1)

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று – குறள் 16:2

TOP


இறப்பே (1)

இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
சீர்_அல்லவர்-கண் படின் – குறள் 98:7

TOP


இறல் (2)

இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு – குறள் 18:10
உறல் முறையான் உள் பகை தோன்றின் இறல் முறையான்
ஏதம் பலவும் தரும் – குறள் 89:5

TOP


இறவாநின்ற (1)

துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை
இறை இறவாநின்ற வளை – குறள் 116:7

TOP


இறுதி (2)

நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் – குறள் 48:6
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பது ஆம் தூது – குறள் 69:10

TOP


இறும் (1)

பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம்
சால மிகுத்து பெயின் – குறள் 48:5

TOP


இறுவரை (1)

செறுநரை காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை – குறள் 49:8

TOP


இறை (6)

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் – குறள் 39:8
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை – குறள் 55:1
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
முறை காக்கும் முட்டா செயின் – குறள் 55:7
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லை கெடும் – குறள் 57:4
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறை ஒருங்கு நேர்வது நாடு – குறள் 74:3
துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை
இறை இறவாநின்ற வளை – குறள் 116:7

TOP


இறைக்கு (2)

இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு – குறள் 44:2
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு – குறள் 44:6

TOP


இறைஞ்சினாள் (1)

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்
யாப்பினுள் அட்டிய நீர் – குறள் 110:3

TOP


இறைப்பவர்க்கு (1)

மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர் போல மிகும் – குறள் 117:1

TOP


இறைவற்கு (2)

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பது ஆம் தூது – குறள் 69:10
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறை ஒருங்கு நேர்வது நாடு – குறள் 74:3

TOP


இறைவன் (3)

இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – குறள் 1:5
பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் – குறள் 1:10
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர் – குறள் 78:8

TOP


இன் (17)

இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம் பொருள் கண்டார் வாய் சொல் – குறள் 10:1
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன் சொலன் ஆக பெறின் – குறள் 10:2
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
இன் சொலினதே அறம் – குறள் 10:3
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு – குறள் 10:4
பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்று பிற – குறள் 10:5
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் – குறள் 10:8
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன் சொல் வழங்குவது – குறள் 10:9
இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர்
இன் முகம் காணும் அளவு – குறள் 23:4
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை – குறள் 33:7
இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
தான் கண்டனைத்து இ உலகு – குறள் 39:7
கொடுத்தலும் இன் சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப்படும் – குறள் 53:5
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று – குறள் 88:5
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன் சொல் இழுக்கு தரும் – குறள் 92:1
நகை ஈகை இன் சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மை குடிக்கு – குறள் 96:3
இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு – குறள் 116:2
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 120:8
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
அளி இன்மை ஆற்ற நினைந்து – குறள் 121:9

TOP


இன்பத்துள் (2)

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் – குறள் 63:9
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள் 86:4

TOP


இன்பம் (24)

அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல – குறள் 4:9
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – குறள் 7:5
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் – குறள் 10:8
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
பொன்றும் துணையும் புகழ் – குறள் 16:6
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்டுபவர் – குறள் 18:3
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர் – குறள் 23:8
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசு அறு காட்சியவர்க்கு – குறள் 36:2
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள் 37:9
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும் – குறள் 51:1
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – குறள் 62:5
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
துன்பம் உறுதல் இலன் – குறள் 63:8
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் – குறள் 63:9
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு – குறள் 63:10
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை – குறள் 67:9
பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து – குறள் 74:8
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள் 86:4
செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர் பெறின் – குறள் 87:9
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
கழி பேர் இரையான்-கண் நோய் – குறள் 95:6
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின் – குறள் 106:2
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடும்-கால்
துன்பம் அதனின் பெரிது – குறள் 117:6
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது
நீடுவது அன்று-கொல் என்று – குறள் 131:7
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
கூடி முயங்க பெறின் – குறள் 133:10

TOP


இன்பமும் (1)

அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள் – குறள் 76:4

TOP


இன்புற்றார் (1)

அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு – குறள் 8:5

TOP


இன்புற (1)

தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார் – குறள் 40:9

TOP


இன்புறுவது (1)

தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார் – குறள் 40:9

TOP


இன்புறூஉம் (1)

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு – குறள் 10:4

TOP


இன்மை (32)

உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா
மடமை மடவார்-கண் உண்டு – குறள் 9:9
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள் கோட்டம் இன்மை பெறின் – குறள் 12:9
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை – குறள் 16:3
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார்
நோய் இன்மை வேண்டுபவர் – குறள் 32:10
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 35:4
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
வாஅய்மை வேண்ட வரும் – குறள் 37:4
ஆகு_ஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள்
போகு_ஊழால் தோன்றும் மடி – குறள் 38:1
அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியும்-கால்
இன்மை அரிதே வெளிறு – குறள் 51:3
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்
நன்கு உடையான்-கட்டே தெளிவு – குறள் 52:3
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
அளி இன்மை வாழும் உயிர்க்கு – குறள் 56:7
முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை
இன்மை புகுத்திவிடும் – குறள் 62:6
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து
ஆள்வினை இன்மை பழி – குறள் 62:8
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து – குறள் 65:5
பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து – குறள் 74:8
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏது இன்மை கோடி உறும் – குறள் 82:6
நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும்
பேணாமை பேதை தொழில் – குறள் 84:3
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை
இன்மையா வையாது உலகு – குறள் 85:1
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்பு இன்மை பாரிக்கும் நோய் – குறள் 86:1
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணு தரும் – குறள் 91:3
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும் – குறள் 96:8
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்துவிடல் – குறள் 98:9
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும்
திண்மை உண்டாக பெறின் – குறள் 99:8
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை – குறள் 102:9
இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் – குறள் 105:2
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் – குறள் 105:4
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல் – குறள் 107:3
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
அளி இன்மை ஆற்ற நினைந்து – குறள் 121:9
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி
அன்பு இன்மை சூழ்வது உடைத்து – குறள் 128:6

TOP


இன்மையா (1)

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை
இன்மையா வையாது உலகு – குறள் 85:1

TOP


இன்மையின் (3)

இன்மையின் இன்னாது உடைமை முறை செய்யா
மன்னவன் கோல் கீழ் படின் – குறள் 56:8
இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின்
இன்மையே இன்னாதது – குறள் 105:1

TOP


இன்மையும் (1)

கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் கண் உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் – குறள் 58:7

TOP


இன்மையுள் (2)

இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை – குறள் 16:3
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை
இன்மையா வையாது உலகு – குறள் 85:1

TOP


இன்மையே (1)

இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின்
இன்மையே இன்னாதது – குறள் 105:1

TOP


இன்றால் (2)

தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று – குறள் 88:5
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
இகழ்வார் பின் சென்று நிலை – குறள் 97:6

TOP


இன்றி (15)

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து – குறள் 12:2
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றி கெடும் – குறள் 17:6
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
குற்றமும் ஆங்கே தரும் – குறள் 18:1
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
நூல் இன்றி கோட்டி கொளல் – குறள் 41:1
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று – குறள் 53:3
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் – குறள் 53:9
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் – குறள் 57:6
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி
தாழாது உஞற்றுபவர் – குறள் 62:10
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள் – குறள் 76:4
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை – குறள் 79:9
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின்
நோய் அளவு இன்றி படும் – குறள் 95:7
இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் – குறள் 105:2
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றி கெடும் – குறள் 107:9
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி
தும்மல் போல் தோன்றிவிடும் – குறள் 126:3

TOP


இன்றியமையா (1)

இன்றியமையா சிறப்பின-ஆயினும்
குன்ற வருப விடல் – குறள் 97:1

TOP


இன்றியமையாத (1)

அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று – குறள் 69:2

TOP


இன்று (13)

விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
உள் நின்று உடற்றும் பசி – குறள் 2:3
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு – குறள் 2:10
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று – குறள் 9:3
கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்கா சொல் – குறள் 19:4
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இ உலகு – குறள் 34:6
அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த
வன்கணதுவே படை – குறள் 77:4
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று – குறள் 91:4
வழங்குவது உள் வீழ்ந்த-கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று – குறள் 96:5
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று – குறள் 109:10
நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல் – குறள் 114:3
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில் – குறள் 126:2
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து – குறள் 127:2

TOP


இன்றும் (1)

இன்றும் வருவது-கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு – குறள் 105:8

TOP


இன்றே (2)

ஐ உணர்வு எய்திய-கண்ணும் பயம் இன்றே
மெய் உணர்வு இல்லாதவர்க்கு – குறள் 36:4
ஆங்கு அமைவு எய்திய-கண்ணும் பயம் இன்றே
வேந்து அமைவு இல்லாத நாடு – குறள் 74:10

TOP


இன்றேல் (6)

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி – குறள் 56:6
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண் – குறள் 58:3
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
புண் என்று உணரப்படும் – குறள் 58:5
பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண் புக்கு மாய்வது மன் – குறள் 100:6
அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல்
பிணி அன்றோ பீடு நடை – குறள் 102:4
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து – குறள் 115:4

TOP


இன்னம் (1)

இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு – குறள் 79:10

TOP


இன்னா (25)

அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் – குறள் 4:5
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்றும் நன்று உள்ள கெடும் – குறள் 11:9
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னா சொல் நோற்கிற்பவர் – குறள் 16:9
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னா சொல் நோற்பாரின் பின் – குறள் 16:10
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல் – குறள் 25:3
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று – குறள் 31:8
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள் 32:1
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள் 32:2
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன் நயம் செய்து விடல் – குறள் 32:4
இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்-கண் செயல் – குறள் 32:6
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல் – குறள் 32:8
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும் – குறள் 32:9
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லை கெடும் – குறள் 57:4
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்
பேஎய் கண்ட அன்னது உடைத்து – குறள் 57:5
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா
வஞ்சரை அஞ்சப்படும் – குறள் 83:4
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி
இன்னா செய்யாமை தலை – குறள் 86:2
மிகல் மேவல் மெய் பொருள் காணார் இகல் மேவல்
இன்னா அறிவினவர் – குறள் 86:7
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னா ஆம் இன்னா செயின் – குறள் 89:1
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல் – குறள் 90:4
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யா-கால்
என்ன பயத்ததோ சால்பு – குறள் 99:7
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு
கள் அற்றே கள்வ நின் மார்பு – குறள் 129:8

TOP


இன்னாத (4)

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்ப காய் கவர்ந்து அற்று – குறள் 10:10
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின்
உய்யா விழுமம் தரும் – குறள் 32:3
இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம்
நன் நயம் என்னும் செருக்கு – குறள் 86:10
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னா ஆம் இன்னா செயின் – குறள் 89:1

TOP


இன்னாதது (3)

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையா-கடை – குறள் 23:10
இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின்
இன்மையே இன்னாதது – குறள் 105:1

TOP


இன்னாதால் (1)

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்று
சான்றோர் முகத்து களி – குறள் 93:3

TOP


இன்னாது (8)

இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர்
இன் முகம் காணும் அளவு – குறள் 23:4
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் – குறள் 23:9
இன்மையின் இன்னாது உடைமை முறை செய்யா
மன்னவன் கோல் கீழ் படின் – குறள் 56:8
கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு
சொல் வேறு பட்டார் தொடர்பு – குறள் 82:9
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்பு உள பாடு அறிவார் மாட்டு – குறள் 100:5
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார் பிரிவு – குறள் 116:8
ஒருதலையான் இன்னாது காமம் கா போல
இருதலையானும் இனிது – குறள் 120:6

TOP


இன்னாதே (1)

நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்-கண் பட்ட திரு – குறள் 41:8

TOP


இன்னாமை (2)

தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல் – குறள் 32:8
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு – குறள் 63:10

TOP


இன்னான் (1)

மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் – குறள் 46:3

TOP


இன்னும் (2)

துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ
இன்னும் இழத்தும் கவின் – குறள் 125:10
உரன் நசைஇ உள்ளம் துணை அக சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன் – குறள் 127:3

TOP


இன (5)

மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இன தூய்மை தூவா வரும் – குறள் 46:5
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் – குறள் 46:7
மன நலம் நன்கு உடையர்-ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து – குறள் 46:8
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து – குறள் 46:9
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
ஒளியொடு ஒழுகப்படும் – குறள் 70:8

TOP


இனத்தனாய் (1)

தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
செற்றார் செயக்கிடந்தது இல் – குறள் 45:6

TOP


இனத்தான் (1)

மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் – குறள் 46:3

TOP


இனத்தின் (2)

நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல் – குறள் 46:10

TOP


இனத்து (3)

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு – குறள் 46:2
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு – குறள் 46:4
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
சீறின் சிறுகும் திரு – குறள் 57:8

TOP


இனத்தொடு (1)

தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
அரும் பொருள் யாது ஒன்றும் இல் – குறள் 47:2

TOP


இனம் (5)

சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
ஏம புணையை சுடும் – குறள் 31:6
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
இல்லை நன்று ஆகா வினை – குறள் 46:6
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் – குறள் 83:2
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும் – குறள் 89:4

TOP


இனன் (2)

குணம் இலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து – குறள் 87:8
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார் பிரிவு – குறள் 116:8

TOP


இனனும் (1)

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அரிந்து யாக்க நட்பு – குறள் 80:3

TOP


இனி (2)

பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
பெண் தகையான் பேர் அமர் கட்டு – குறள் 109:3
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
துனி செய்து துவ்வாய் காண் மற்று – குறள் 130:4

TOP


இனிது (20)

குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் – குறள் 7:6
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – குறள் 7:8
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
இன் சொலினதே அறம் – குறள் 10:3
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன் சொல் வழங்குவது – குறள் 10:9
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம் கூறான் என்றல் இனிது – குறள் 19:1
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையா-கடை – குறள் 23:10
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
சொல்லுதல் வல்லார் பெறின் – குறள் 65:8
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது – குறள் 78:2
பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது – குறள் 82:1
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல் – குறள் 84:9
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து – குறள் 86:6
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பு இலன் பற்றார்க்கு இனிது – குறள் 87:5
களி-தொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம்
வெளிப்படும்-தோறும் இனிது – குறள் 115:5
ஒருதலையான் இன்னாது காமம் கா போல
இருதலையானும் இனிது – குறள் 120:6
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது – குறள் 121:1
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது – குறள் 122:5
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர்-கண்ணே இனிது – குறள் 131:9
உணலினும் உண்டது அறல் இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது – குறள் 133:6

TOP


இனிது-கொல் (1)

தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு – குறள் 111:3

TOP


இனிதே (5)

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ் – குறள் 7:4
வீழும் இருவர்க்கு இனிதே வளி-இடை
போழ படாஅ முயக்கு – குறள் 111:8
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண்
தாஅம் இதற்பட்டது – குறள் 118:6
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
நினைப்ப வருவது ஒன்று இல் – குறள் 121:2
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர்-கண்ணே இனிது – குறள் 131:9

TOP


இனிய (4)

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் – குறள் 10:6
இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்ப காய் கவர்ந்து அற்று – குறள் 10:10
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா
வஞ்சரை அஞ்சப்படும் – குறள் 83:4
நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு
இசையும் இனிய செவிக்கு – குறள் 120:9

TOP


இனியது (1)

தெள் நீர் அடு புற்கை-ஆயினும் தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல் – குறள் 107:5

TOP


இனியவே (1)

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யா-கால்
என்ன பயத்ததோ சால்பு – குறள் 99:7

TOP


இனியார் (1)

இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார் பிரிவு – குறள் 116:8

TOP


இனை (1)

இனை துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின்
துணை துணை வேள்வி பயன் – குறள் 9:7

TOP


இனையர் (1)

இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு – குறள் 79:10

TOP