பு – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்கில் 1
புக்கு 2
புகல் 3
புகழ் 9
புகழ்ந்தவை 1
புகழ்மை 1
புகழும் 2
புகழை 1
புகழொடு 2
புகின் 1
புகுத்திவிடும் 2
புகும் 1
புடைபெயர்ந்தேன் 1
புண் 4
புணர்ச்சி 2
புணர்தல் 1
புணர்தலின் 1
புணர்ந்து 1
புணர்பவர் 1
புணர்வது 1
புணர்வு 2
புணரின் 1
புணை 1
புணை-மன்னும் 1
புணையை 1
புத்தேள் 5
புத்தேளிர் 1
புதல் 1
புதை 1
புயல் 1
புரந்தார் 1
புரள 1
புரிந்த 4
புரிந்தார் 1
புரிந்தார்-கண் 1
புரிந்து 4
புருவம் 1
புரை 2
புல் 2
புல்லல்-பாற்று 1
புல்லறிவு 2
புல்லா 1
புல்லாது 1
புல்லார் 1
புல்லாள் 1
புல்லி 2
புல்லினேன் 1
புல்லுதல் 1
புல்லுவேன்-கொல்லோ 1
புல்லென்னும் 1
புல 2
புலத்தலின் 1
புலத்தை 2
புலந்தாரை 1
புலந்து 3
புலப்பல் 1
புலப்பேன்-கொல் 1
புலம் 4
புலவர் 1
புலவரை 1
புலவி 1
புலவியும் 2
புலவியுள் 1
புலாலை 1
புலாஅல் 1
புலி 1
புலியின் 1
புலை 1
புழுதி 1
புள் 2
புற்கென்ற 1
புற்கை-ஆயினும் 1
புற 1
புறங்காத்து 1
புறங்கொடுக்கும் 1
புறத்த 1
புறத்ததா 1
புறத்து 2
புறப்படுத்தான் 1
புறம் 5
புறமே 1
புறன் 2
புன் 6
புன்கண் 1
புன்கண்ணை 1
புன்மை 2
புன்மையால் 1
புனல் 3
புனலின் 1
புனலும் 2
புனலுள் 1
புனை 2
புனையினும் 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


புக்கில் (1)

புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு – குறள் 34:10

TOP


புக்கு (2)

ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்
தான் புக்கு அழுந்தும் அளறு – குறள் 84:5
பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண் புக்கு மாய்வது மன் – குறள் 100:6

TOP


புகல் (3)

எனை துணையர்-ஆயினும் என்னாம் தினை துணையும்
தேரான் பிறன் இல் புகல் – குறள் 15:4
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல் – குறள் 25:3
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
குழாஅத்து பேதை புகல் – குறள் 84:10

TOP


புகழ் (9)

இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – குறள் 1:5
புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
ஏறு போல் பீடு நடை – குறள் 6:9
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
பொன்றும் துணையும் புகழ் – குறள் 16:6
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
ஈவார் மேல் நிற்கும் புகழ் – குறள் 24:2
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல் – குறள் 24:3
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
போற்றாது புத்தேள் உலகு – குறள் 24:4
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் – குறள் 24:7
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும் – குறள் 30:6
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
இகழ்வார் பின் சென்று நிலை – குறள் 97:6

TOP


புகழ்ந்தவை (1)

புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் – குறள் 54:8

TOP


புகழ்மை (1)

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
எ பால் நூலோர்க்கும் துணிவு – குறள் 54:3

TOP


புகழும் (2)

அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல – குறள் 4:9
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் – குறள் 46:7

TOP


புகழை (1)

பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு – குறள் 54:2

TOP


புகழொடு (2)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று – குறள் 24:6
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை – குறள் 66:2

TOP


புகின் (1)

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்து-காலை புகின் – குறள் 94:7

TOP


புகுத்திவிடும் (2)

மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும் – குறள் 61:8
முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை
இன்மை புகுத்திவிடும் – குறள் 62:6

TOP


புகும் (1)

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – குறள் 35:6

TOP


புடைபெயர்ந்தேன் (1)

புல்லி கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அ அளவில்
அள்ளி கொள்வு அற்றே பசப்பு – குறள் 119:7

TOP


புண் (4)

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு – குறள் 13:9
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
புண் அது உணர்வார் பெறின் – குறள் 26:7
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண் உடையர் கல்லாதவர் – குறள் 40:3
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
புண் என்று உணரப்படும் – குறள் 58:5

TOP


புணர்ச்சி (2)

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பு ஆம் கிழமை தரும் – குறள் 79:5
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
உள் பகை உற்ற குடி – குறள் 89:7

TOP


புணர்தல் (1)

ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்
கூடியார் பெற்ற பயன் – குறள் 111:9

TOP


புணர்தலின் (1)

உணலினும் உண்டது அறல் இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது – குறள் 133:6

TOP


புணர்ந்து (1)

நிணம் தீயில் இட்ட அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் – குறள் 126:10

TOP


புணர்பவர் (1)

நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
பேணி புணர்பவர் தோள் – குறள் 92:7

TOP


புணர்வது (1)

ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது
நீடுவது அன்று-கொல் என்று – குறள் 131:7

TOP


புணர்வு (2)

இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு – குறள் 116:2
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்
நீங்கின் அரிதால் புணர்வு – குறள் 116:5

TOP


புணரின் (1)

இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று – குறள் 31:8

TOP


புணை (1)

காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல் ஆண்மை என்னும் புணை – குறள் 114:4

TOP


புணை-மன்னும் (1)

காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
ஏம புணை-மன்னும் இல் – குறள் 117:4

TOP


புணையை (1)

சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
ஏம புணையை சுடும் – குறள் 31:6

TOP


புத்தேள் (5)

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
ஒப்புரவின் நல்ல பிற – குறள் 22:3
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
போற்றாது புத்தேள் உலகு – குறள் 24:4
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு – குறள் 29:10
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
இகழ்வார் பின் சென்று நிலை – குறள் 97:6
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
நீர் இயைந்து அன்னார் அகத்து – குறள் 133:3

TOP


புத்தேளிர் (1)

பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு – குறள் 6:8

TOP


புதல் (1)

தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்த அற்று – குறள் 28:4

TOP


புதை (1)

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
பட்டு பாடு ஊன்றும் களிறு – குறள் 60:7

TOP


புயல் (1)

ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளம் குன்றிய-கால் – குறள் 2:4

TOP


புரந்தார் (1)

புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து – குறள் 78:10

TOP


புரள (1)

அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்
புல்லார் புரள விடல் – குறள் 76:5

TOP


புரிந்த (4)

புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
ஏறு போல் பீடு நடை – குறள் 6:9
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
தன்மையான் ஆளப்படும் – குறள் 52:1
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
சீர்_அல்லவர்-கண் படின் – குறள் 98:7
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும் உலகு – குறள் 100:4

TOP


புரிந்தார் (1)

இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – குறள் 1:5

TOP


புரிந்தார்-கண் (1)

களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்-கண் இல் – குறள் 29:7

TOP


புரிந்து (4)

விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார் – குறள் 15:3
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை – குறள் 55:1
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
மாண்ட உஞற்று இலர் – குறள் 61:7

TOP


புருவம் (1)

கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
செய்யல-மன் இவள் கண் – குறள் 109:6

TOP


புரை (2)

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின் – குறள் 30:2
வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா
பூரியர்கள் ஆழும் அளறு – குறள் 92:9

TOP


புல் (2)

விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது – குறள் 2:6
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்
நன்கு செல சொல்லுவார் – குறள் 72:9

TOP


புல்லல்-பாற்று (1)

மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து
நட்பினுள் சா புல்லல்-பாற்று – குறள் 83:9

TOP


புல்லறிவு (2)

நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவு ஆண்மை கடை – குறள் 34:1
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி – குறள் 85:6

TOP


புல்லா (1)

அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை
புலந்தாரை புல்லா விடல் – குறள் 131:3

TOP


புல்லாது (1)

புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்
அல்லல் நோய் காண்கம் சிறிது – குறள் 131:1

TOP


புல்லார் (1)

அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்
புல்லார் புரள விடல் – குறள் 76:5

TOP


புல்லாள் (1)

உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
புல்லாள் புல தக்கனள் – குறள் 132:6

TOP


புல்லி (2)

புல்லி கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அ அளவில்
அள்ளி கொள்வு அற்றே பசப்பு – குறள் 119:7
புல்லி விடாஅ புலவியுள் தோன்றும் என்
உள்ளம் உடைக்கும் படை – குறள் 133:4

TOP


புல்லினேன் (1)

புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு – குறள் 126:9

TOP


புல்லுதல் (1)

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான் விதுப்பு உற்று – குறள் 129:10

TOP


புல்லுவேன்-கொல்லோ (1)

புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
கண் அன்ன கேளிர் வரின் – குறள் 127:7

TOP


புல்லென்னும் (1)

இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு – குறள் 79:10

TOP


புல (2)

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை
பூ அன்ன கண்ணார் அகத்து – குறள் 131:5
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
புல்லாள் புல தக்கனள் – குறள் 132:6

TOP


புலத்தலின் (1)

புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
நீர் இயைந்து அன்னார் அகத்து – குறள் 133:3

TOP


புலத்தை (2)

அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு – குறள் 35:3
புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்
அல்லல் நோய் காண்கம் சிறிது – குறள் 131:1

TOP


புலந்தாரை (1)

அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை
புலந்தாரை புல்லா விடல் – குறள் 131:3

TOP


புலந்து (3)

செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடிவிடும் – குறள் 104:9
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – குறள் 125:6
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
பொய்த்தல் அறிந்து என் புலந்து – குறள் 129:7

TOP


புலப்பல் (1)

புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு – குறள் 126:9

TOP


புலப்பேன்-கொல் (1)

புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
கண் அன்ன கேளிர் வரின் – குறள் 127:7

TOP


புலம் (4)

வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி
மிச்சில் மிசைவான் புலம் – குறள் 9:5
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
புன்மை இல் காட்சியவர் – குறள் 18:4
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று – குறள் 41:7
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு – குறள் 72:6

TOP


புலவர் (1)

உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் – குறள் 40:4

TOP


புலவரை (1)

நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
போற்றாது புத்தேள் உலகு – குறள் 24:4

TOP


புலவி (1)

உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது
மிக்கு அற்றால் நீள விடல் – குறள் 131:2

TOP


புலவியும் (2)

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று – குறள் 131:6
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர்-கண்ணே இனிது – குறள் 131:9

TOP


புலவியுள் (1)

புல்லி விடாஅ புலவியுள் தோன்றும் என்
உள்ளம் உடைக்கும் படை – குறள் 133:4

TOP


புலாலை (1)

கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் – குறள் 26:10

TOP


புலாஅல் (1)

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
புண் அது உணர்வார் பெறின் – குறள் 26:7

TOP


புலி (1)

பரியது கூர் கோட்டது-ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின் – குறள் 60:9

TOP


புலியின் (1)

வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – குறள் 28:3

TOP


புலை (1)

கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
புன்மை தெரிவார் அகத்து – குறள் 33:9

TOP


புழுதி (1)

தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சால படும் – குறள் 104:7

TOP


புள் (2)

தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்த அற்று – குறள் 28:4
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே
உடம்பொடு உயிர்-இடை நட்பு – குறள் 34:8

TOP


புற்கென்ற (1)

வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாள் ஒற்றி தேய்த்த விரல் – குறள் 127:1

TOP


புற்கை-ஆயினும் (1)

தெள் நீர் அடு புற்கை-ஆயினும் தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல் – குறள் 107:5

TOP


புற (1)

புற தூய்மை நீரான் அமையும் அக தூய்மை
வாய்மையான் காணப்படும் – குறள் 30:8

TOP


புறங்காத்து (1)

குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
வடு அன்று வேந்தன் தொழில் – குறள் 55:9

TOP


புறங்கொடுக்கும் (1)

நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
பேணா பெரும் குற்றத்தார்க்கு – குறள் 93:4

TOP


புறத்த (1)

அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல – குறள் 4:9

TOP


புறத்ததா (1)

விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டல்-பாற்று அன்று – குறள் 9:2

TOP


புறத்து (2)

அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
போஒய் பெறுவது எவன் – குறள் 5:6
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – குறள் 8:9

TOP


புறப்படுத்தான் (1)

சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை – குறள் 59:10

TOP


புறம் (5)

அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம் கூறான் என்றல் இனிது – குறள் 19:1
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும் – குறள் 19:3
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையால் காணப்படும் – குறள் 19:5
புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி
மூக்கின் கரியார் உடைத்து – குறள் 28:7
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள் வேர்ப்பர் ஒள்ளியவர் – குறள் 49:7

TOP


புறமே (1)

உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்
போஒய் புறமே படும் – குறள் 94:3

TOP


புறன் (2)

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன் அழீஇ பொய்த்து நகை – குறள் 19:2
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
புன் சொல் உரைப்பான் பொறை – குறள் 19:9

TOP


புன் (6)

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும் – குறள் 8:1
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
புன் சொல் உரைப்பான் பொறை – குறள் 19:9
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று – குறள் 82:5
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
ஆயும் அறிவினவர் – குறள் 92:4
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர் – குறள் 92:5
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் – குறள் 92:6

TOP


புன்கண் (1)

இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு – குறள் 116:2

TOP


புன்கண்ணை (1)

புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை – குறள் 123:2

TOP


புன்மை (2)

இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
புன்மை இல் காட்சியவர் – குறள் 18:4
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
புன்மை தெரிவார் அகத்து – குறள் 33:9

TOP


புன்மையால் (1)

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையால் காணப்படும் – குறள் 19:5

TOP


புனல் (3)

காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல் ஆண்மை என்னும் புணை – குறள் 114:4
காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
யாமத்தும் யானே உளேன் – குறள் 117:7
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
பொய்த்தல் அறிந்து என் புலந்து – குறள் 129:7

TOP


புனலின் (1)

நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்
நீங்கின் அதனை பிற – குறள் 50:5

TOP


புனலும் (2)

இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு – குறள் 74:7

TOP


புனலுள் (1)

நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்
நீங்கின் அதனை பிற – குறள் 50:5

TOP


புனை (2)

நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று – குறள் 41:7
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா
பேதை வினை மேற்கொளின் – குறள் 84:6

TOP


புனையினும் (1)

இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு – குறள் 79:10

TOP