பி – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிடித்து 1
பிணம் 1
பிணி 4
பிணிக்கு 1
பிணிக்கும் 2
பிணியும் 1
பிணை 1
பிணையோ 1
பிரித்தலும் 1
பிரிதல் 1
பிரிந்தவர் 1
பிரிந்தார் 2
பிரிந்து 1
பிரிப்பர் 1
பிரியலம் 1
பிரிவின்-கண் 1
பிரிவு 7
பிழை 1
பிழைத்த 1
பிழைத்தது 1
பிழைத்து 2
பிழைப்பின் 1
பிழையாது 1
பிற்பகல் 1
பிற 18
பிற-மன் 1
பிறக்கும் 1
பிறங்கா 1
பிறங்கிற்று 1
பிறத்தல் 3
பிறந்த 2
பிறந்தார் 3
பிறந்தார்-கண் 2
பிறந்தார்-ஆயினும் 1
பிறந்து 2
பிறந்தும் 1
பிறப்பில் 1
பிறப்பு 11
பிறப்பும் 2
பிறர் 9
பிறர்-கண் 1
பிறர்க்கு 4
பிறர்க்கும் 1
பிறர்வாய் 1
பிறவாமை 1
பிறவி 1
பிறவும் 1
பிறவோ 1
பிறற்கு 2
பிறன் 13
பிறன்-கண் 1
பிறனை 1
பிறிதின் 1
பிறிது 6
பிறை 1
பின் 29
பின்றை 1
பின்னது 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பிடித்து (1)

தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சால படும் – குறள் 104:7

TOP


பிணம் (1)

பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று – குறள் 92:3

TOP


பிணி (4)

பாத்து ஊண் மரீஇயவனை பசி என்னும்
தீ பிணி தீண்டல் அரிது – குறள் 23:7
பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து – குறள் 74:8
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதி செயல் – குறள் 95:9
அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல்
பிணி அன்றோ பீடு நடை – குறள் 102:4

TOP


பிணிக்கு (1)

பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
தன் நோய்க்கு தானே மருந்து – குறள் 111:2

TOP


பிணிக்கும் (2)

கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
இல்லை நிலக்கு பொறை – குறள் 57:10
கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும்
வேட்ப மொழிவது ஆம் சொல் – குறள் 65:3

TOP


பிணியும் (1)

உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும்
சேராது இயல்வது நாடு – குறள் 74:4

TOP


பிணை (1)

பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து – குறள் 109:9

TOP


பிணையோ (1)

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இ மூன்றும் உடைத்து – குறள் 109:5

TOP


பிரித்தலும் (1)

பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்
பொருத்தலும் வல்லது அமைச்சு – குறள் 64:3

TOP


பிரிதல் (1)

உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் – குறள் 40:4

TOP


பிரிந்தவர் (1)

பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர்
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – குறள் 125:8

TOP


பிரிந்தார் (2)

பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்
பொருத்தலும் வல்லது அமைச்சு – குறள் 64:3
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – குறள் 127:4

TOP


பிரிந்து (1)

உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்து இருந்து எண்ணி கொளல் – குறள் 53:10

TOP


பிரிப்பர் (1)

பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர் – குறள் 19:7

TOP


பிரியலம் (1)

இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
கண் நிறை நீர் கொண்டனள் – குறள் 132:5

TOP


பிரிவின்-கண் (1)

பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல் – குறள் 84:9

TOP


பிரிவு (7)

இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு – குறள் 116:2
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவு ஓர் இடத்து உண்மையான் – குறள் 116:3
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்
நீங்கின் அரிதால் புணர்வு – குறள் 116:5
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்
நல்குவர் என்னும் நசை – குறள் 116:6
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார் பிரிவு – குறள் 116:8
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி
பின் இருந்து வாழ்வார் பலர் – குறள் 116:10
பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு – குறள் 130:5

TOP


பிழை (1)

முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை
பின் ஊறு இரங்கிவிடும் – குறள் 54:5

TOP


பிழைத்த (1)

கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது – குறள் 78:2

TOP


பிழைத்தது (1)

இழைத்தது இகவாமை சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற்பவர் – குறள் 78:9

TOP


பிழைத்து (2)

பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர் – குறள் 42:7
எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
பெரியார் பிழைத்து ஒழுகுவார் – குறள் 90:6

TOP


பிழைப்பின் (1)

குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை – குறள் 102:9

TOP


பிழையாது (1)

சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – குறள் 31:7

TOP


பிற்பகல் (1)

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும் – குறள் 32:9

TOP


பிற (18)

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிற ஆழி நீந்தல் அரிது – குறள் 1:8
மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற – குறள் 4:4
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கள் பேறு அல்ல பிற – குறள் 7:1
பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்று பிற – குறள் 10:5
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
ஒப்புரவின் நல்ல பிற – குறள் 22:3
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று – குறள் 30:7
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற – குறள் 30:10
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும்
இல் அதனின் தீய பிற – குறள் 31:2
நகையும் உவகையும் கொல்லும் சினத்தில் தீய
பகையும் உளவோ பிற – குறள் 31:4
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
பிற வினை எல்லாம் தரும் – குறள் 33:1
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்
நீங்கின் அதனை பிற – குறள் 50:5
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம்
மற்றைய எல்லாம் பிற – குறள் 67:1
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்-கால்
கண் அல்லது இல்லை பிற – குறள் 71:10
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
பெண் ஏவல் செய்வார்-கண் இல் – குறள் 91:9
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
பேணி புணர்பவர் தோள் – குறள் 92:7
குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
எ நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 99:2
கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல்
நல்லவர் நாணு பிற – குறள் 102:1
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என்
பண்பு யார்க்கு உரைக்க பிற – குறள் 119:1

TOP


பிற-மன் (1)

பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
தன் நோய்க்கு தானே மருந்து – குறள் 111:2

TOP


பிறக்கும் (1)

இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் – குறள் 105:4

TOP


பிறங்கா (1)

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
பண்பு உடை மக்கள் பெறின் – குறள் 7:2

TOP


பிறங்கிற்று (1)

இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு – குறள் 3:3

TOP


பிறத்தல் (3)

மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் – குறள் 31:3
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு – குறள் 69:1
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு – குறள் 100:2

TOP


பிறந்த (2)

மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து – குறள் 61:3
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கி கொளல் – குறள் 103:6

TOP


பிறந்தார் (3)

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடி பிறந்தார் – குறள் 96:2
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் – குறள் 96:4
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் – குறள் 96:9

TOP


பிறந்தார்-கண் (2)

இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
செப்பமும் நாணும் ஒருங்கு – குறள் 96:1
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதி-கண் மறு போல் உயர்ந்து – குறள் 96:7

TOP


பிறந்தார்-ஆயினும் (1)

மேல் பிறந்தார்-ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு – குறள் 41:9

TOP


பிறந்து (2)

குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
நாண் உடையான்-கட்டே தெளிவு – குறள் 51:2
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – குறள் 80:4

TOP


பிறந்தும் (1)

மேல் பிறந்தார்-ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு – குறள் 41:9

TOP


பிறப்பில் (1)

இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
கண் நிறை நீர் கொண்டனள் – குறள் 132:5

TOP


பிறப்பு (11)

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும் – குறள் 14:3
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் – குறள் 14:4
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு – குறள் 34:9
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை – குறள் 35:5
பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
நிலையாமை காணப்படும் – குறள் 35:9
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 36:1
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு – குறள் 36:7
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
செம் பொருள் காண்பது அறிவு – குறள் 36:8
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅ பிறப்பு ஈனும் வித்து – குறள் 37:1
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய் தொழில் வேற்றுமையான் – குறள் 98:2
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 101:2

TOP


பிறப்பும் (2)

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
பண்பு உடை மக்கள் பெறின் – குறள் 7:2
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
விழுமம் துடைத்தவர் நட்பு – குறள் 11:7

TOP


பிறர் (9)

திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
அறன் அல்ல செய்யாமை நன்று – குறள் 16:7
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னா சொல் நோற்பாரின் பின் – குறள் 16:10
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு – குறள் 44:6
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள் – குறள் 65:6
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
சொல்லா நலத்தது சால்பு – குறள் 99:4
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய
ஒண் பொருள் கொள்வார் பிறர் – குறள் 101:9
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறை_பதி என்னும் வழக்கு – குறள் 102:5
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின்
அறம் நாண தக்கது உடைத்து – குறள் 102:8
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள் 108:9

TOP


பிறர்-கண் (1)

தீ பால தான் பிறர்-கண் செய்யற்க நோய் பால
தன்னை அடல் வேண்டாதான் – குறள் 21:6

TOP


பிறர்க்கு (4)

சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள் 32:1
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும் – குறள் 32:9
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா
பேதையின் பேதையார் இல் – குறள் 84:4
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – குறள் 108:6

TOP


பிறர்க்கும் (1)

தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று – குறள் 132:9

TOP


பிறர்வாய் (1)

எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்
நுண் பொருள் காண்பது அறிவு – குறள் 43:4

TOP


பிறவாமை (1)

வேண்டும்-கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும் – குறள் 37:2

TOP


பிறவி (1)

பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் – குறள் 1:10

TOP


பிறவும் (1)

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
பிறவும் தம போல் செயின் – குறள் 12:10

TOP


பிறவோ (1)

உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு – குறள் 119:4

TOP


பிறற்கு (2)

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறற்கு – குறள் 8:2
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – குறள் 15:9

TOP


பிறன் (13)

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று – குறள் 5:9
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்-கண் இல் – குறள் 15:1
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை
நின்றாரின் பேதையார் இல் – குறள் 15:2
எனை துணையர்-ஆயினும் என்னாம் தினை துணையும்
தேரான் பிறன் இல் புகல் – குறள் 15:4
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன் – குறள் 15:7
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – குறள் 15:8
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று – குறள் 15:10
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான் – குறள் 17:3
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப்பொருள் – குறள் 18:8
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும் – குறள் 19:6
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – குறள் 21:4
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல் – குறள் 29:2
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப்படும் – குறள் 105:7

TOP


பிறன்-கண் (1)

இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்-கண் செயல் – குறள் 32:6

TOP


பிறனை (1)

தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும் – குறள் 51:8

TOP


பிறிதின் (1)

அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றா-கடை – குறள் 32:5

TOP


பிறிது (6)

தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் – குறள் 26:1
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
புண் அது உணர்வார் பெறின் – குறள் 26:7
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை – குறள் 33:7
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து – குறள் 65:5
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை
இன்மையா வையாது உலகு – குறள் 85:1
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம் – குறள் 85:2

TOP


பிறை (1)

நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி
பின் நீர பேதையார் நட்பு – குறள் 79:2

TOP


பின் (29)

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னா சொல் நோற்பாரின் பின் – குறள் 16:10
கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்கா சொல் – குறள் 19:4
எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை
வீயாது பின் சென்று அடும் – குறள் 21:7
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் – குறள் 23:5
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னை சுடும் – குறள் 30:3
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின்
உய்யா விழுமம் தரும் – குறள் 32:3
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின் சார பொய்யாமை நன்று – குறள் 33:3
வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின்
ஈண்டு இயற்பால பல – குறள் 35:2
கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்கு தக – குறள் 40:1
எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு – குறள் 47:7
தொடங்கற்க எ வினையும் எள்ளற்க முற்றும்
இடம் கண்ட பின் அல்லது – குறள் 50:1
தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
தேறுக தேறும் பொருள் – குறள் 51:9
முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை
பின் ஊறு இரங்கிவிடும் – குறள் 54:5
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும்
பின் பயக்கும் நல்-பாலவை – குறள் 66:9
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின்
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் – குறள் 67:2
போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின்
தேற்றுதல் யார்க்கும் அரிது – குறள் 70:3
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து – குறள் 78:10
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி
பின் நீர பேதையார் நட்பு – குறள் 79:2
நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின்
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு – குறள் 80:1
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
இகழ்வார் பின் சென்று நிலை – குறள் 97:6
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று – குறள் 97:7
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுது உண்டு பின் செல்பவர் – குறள் 104:3
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு – குறள் 104:8
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி
பின் இருந்து வாழ்வார் பலர் – குறள் 116:10
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர்
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – குறள் 125:8
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய்
உற்றார் அறிவது ஒன்று அன்று – குறள் 126:5
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்தரோ
எற்று என்னை உற்ற துயர் – குறள் 126:6
காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின்
நீங்கும் என் மென் தோள் பசப்பு – குறள் 127:5
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – குறள் 130:3

TOP


பின்றை (1)

வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை
அதற்கு உரியன் ஆக செயல் – குறள் 52:8

TOP


பின்னது (1)

சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை – குறள் 104:1

TOP