திருக்குறள் குமரேச வெண்பா — ஜெகவீரபாண்டியனார்

அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால்
0 முன்னுரை
1 – கடவுள் வாழ்த்து
2 – வான் சிறப்பு
3 – நீத்தார் பெருமை
4 – அறன் வலியுறுத்தல்
5 – இல்வாழ்க்கை
6 – வாழ்க்கைத்துணை நலம்
7 – மக்கட்பேறு
8 – அன்புடைமை
9 – விருந்தோம்பல்
10 – இனியவை கூறல்
11 – செய்ந்நன்றியறிதல்
12 – நடுவுநிலைமை
13 – அடக்கமுடைமை
14 – ஒழுக்கமுடைமை
15 – பிறனில் விழையாமை
16 – பொறையுடைமை
17 – அழுக்காறாமை
18 – வெஃகாமை
19 – புறங்கூறாமை
20 – பயனில சொல்லாமை
21 – தீவினை அச்சம்
22 – ஒப்புறவறிதல்
23 – ஈகை
24 – புகழ்
25 – அருளுடைமை
26 – புலால் மறுத்தல்
27 – தவம்
28 – கூடா ஒழுக்கம்
29 – கள்ளாமை
30 – வாய்மை
31 – வெகுளாமை
32 – இன்னா செய்யாமை
33 – கொல்லாமை
34 – நிலையாமை
35 – துறவு
36 – மெய்யுணர்தல்
37 – அவா அறுத்தல்
38 – ஊழ்
39 – இறைமாட்சி
40 – கல்வி
41 – கல்லாமை
42 – கேள்வி
43 – அறிவுடைமை
44 – குற்றங்கடிதல்
45 – பெரியாரைத் துணைக்கோடல்
46 – சிற்றினம் சேராமை
47 – தெரிந்து செயல் வகை
48 – வலியறிதல்
49 – காலமறிதல்
50 – இடனறிதல்
51 – தெரிந்து தெளிதல்
52 – தெரிந்து வினையாடல்
53 – சுற்றம் தழால்
54 – பொச்சாமை
55 – செங்கோன்மை
56 – கொடுங்கோன்மை
57 – வெருவந்த செய்யாமை
58 – கண்ணோட்டம்
59 – ஒற்றாடல்
60 – ஊக்கமுடைமை
61 – மடியின்மை
62 – ஆள்வினையுடைமை
63 – இடுக்கண் அழியாமை
64 – அமைச்சு
65 – சொல்வன்மை
66 – வினைத்தூய்மை
67 – வினைத்திட்பம்
68 – வினை செயல் வகை
69 – தூது
70 – மன்னரைச் சேர்ந்தொழுகல்
71 – குறிப்பறிதல்
72 – அவையறிதல்
73 – அவை அஞ்சாமை
74 – நாடு
75 – அரண்
76 – பொருள் செயல் வகை
77 – படை மாட்சி
78 – படைச் செருக்கு
79 – நட்பு
80 – நட்பாராய்தல்
81 – பழமை
82 – தீ நட்பு
83 – கூடா நட்பு
84 – பேதைமை
85 – புல்லறிவாண்மை
86 – இகல்
87 – பகை மாட்சி
88 – பகைத்திறம் தெரிதல்
89 – உட்பகை
90 – பெரியாரைப் பிழையாமை
91 – பெண்வழிச் சேறல்
92 – வரைவில் மகளிர்
93 – கள்ளுண்ணாமை
94 – சூது
95 – மருந்து
96 – குடிமை
97 – மானம்
98 – பெருமை
99 – சான்றாண்மை
100 – பண்புடைமை
101 – நன்றியில் செல்வம்
102 – நாணுடைமை
103 – குடிசெயல் வகை
104 – உழவு
105 – நல்குரவு
106 – இரவு
107 – இரவச்சம்
108 – கயமை
109 – தகையணங்குறுத்தல்
110 – குறிப்பறிதல்
111 – புணர்ச்சி மகிழ்தல்
112 – நலம் புனைந்துரைத்தல்
113 – காதல் சிறப்புரைத்தல்
114 – நாணுத் துறவுரைத்தல்
115 – அலர் அறிவுறுத்தல்
116 – பிரிவாற்றாமை
117 – படர்மெலிந்திரங்கல்
118 – கண் விதுப்பழிதல்
119 – பசப்புறு பருவரல்
120 – தனிப்படர் மிகுதி
121 – நினைந்தவர் புலம்பல்
122 – கனவுநிலை உரைத்தல்
123 – பொழுது கண்டிரங்கல்
124 – உறுப்புநலன் அழிதல்
125 – நெஞ்சொடு கிளத்தல்
126 – நிறையழிதல்
127 – அவர்வயின் விதும்பல்
128 – குறிப்பறிவுறுத்தல்
129 – புணர்ச்சி விதும்பல்
130 – நெஞ்சொடு புலத்தல்
131 – புலவி
132 – புலவி நுணுக்கம்
133 – ஊடலுவகை

தேவையான நூலின்
மேல் சொடுக்கவும்

1.ஆத்திசூடி
2.கொன்றைவேந்தன்
3.மூதுரை(வாக்குண்டாம்)
4. நல்வழி
5.வெற்றி வேற்கை
6.உலக நீதி
7.நீதிநெறி விளக்கம்
8.அறநெறிச்சாரம்
9.நீதி நூல்
10.நன்னெறி
11.நீதி சூடாமணி
12.சோமேசர் முதுமொழி வெண்பா
13.விவேக சிந்தாமணி
14.ஆத்திசூடி வெண்பா
15.நீதி வெண்பா
16.நன்மதி வெண்பா
17.அருங்கலச்செப்பு
18.முதுமொழிமேல் வைப்பு
19.புதிய ஆத்திசூடி
20.இளையார் ஆத்திசூடி
21.திருக்குறள் குமரேச வெண்பா


@0

#1
** காப்பு
போதம் தரு செய்ய பொய்யாமொழி புணர்த்தி
ஓதுகின்ற இ நூற்கு உறுதுணையா சோதி மிகு
மாது அங்கம் கொண்டே மகிழ் பரமன் தந்த ஒரு
மாதங்கம் கொண்டேன் மனம்

#2
** அவையடக்கம்,
அங்கண நீர் கங்கை அடைந்த உடனே புனித
மங்கல நீர் ஆகி வயங்காதோ இங்கு எனது
புன் பாவும் வள்ளுவர்-தம் பொன் பாவைச் சேர்ந்ததனால்
இன்பு ஆகும் அன்றோ இனி
** நூல் – அறத்துப்பால்

@1 அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

#1
பூவுலகோடு எங்கும் ஏன் பூண்டது உமை_கேள்வன்
கோ முகிழ்த்த தன்மை குமரேசா மேவும்
அர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

#2
கற்றறிந்தும் தாருவனர் கல்வி நலம் எய்தாமல்
குற்றமுற்றார் என்னே குமரேசா வெற்றிபெறக்
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின்

#3
நீடிய வாழ்வு எய்தி நிலம் மிசை ஏன் மார்க்கண்டர்
கூடினர் பேரின்பம் குமரேசா நாடி
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலம் மிசை நீடு வாழ்வார்

#4
எள்ளிச் சமணர் இடும்பை செய்தும் அப்பர் ஏன்
கொள்ளவில்லை துன்பம் குமரேசா உள்ளி ஒன்றை
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

#5
வாள் புலி போல் பாய்ந்து கொன்ற வல்வினை ஏன் சேரவில்லை
கோட்புலியார்-தம்மைக் குமரேசா கேட்பின்
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார்-மாட்டு

#6
நாடி நெறிநின்ற நல்ல சனகாதியர் ஏன்
கூடினர் நீள் வாழ்வைக் குமரேசா ஓடும்
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்

#7
வானவர் ஏன் நஞ்சினால் வந்த துன்பம் ஆற்ற உமை
கோன் அடியைச் சேர்ந்தார் குமரேசா ஏனோர்
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக் கவலை மாற்றல் அரிது

#8
காதல் கடலைக் கடந்தான் சனகன் ஏன்
கோதுற்றார் மற்றோர் குமரேசா தீது_இல்
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிற ஆழி நீந்தல் அரிது

#9
வேதன் உயர் தலையும் வெண் தலையாய் வீழ்ந்து பலிக்
கோதடைந்தது என்னே குமரேசா பூதலத்தில்
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
தாளை வணங்காத் தலை

#10
சேர்ந்த திண்ணர் வெம் பிறவி தீர்ந்தார் பின் சேராதார்
கூர்ந்து ஆழ்ந்தார் என்னே குமரேசா ஆர்ந்த
பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

@2 அதிகாரம் 2 – வான் சிறப்பு

#11
ஏனோ அமிழ்து ஈயான் இந்திரன் முன் வானை இந்தக்
கோன் உலகுக்கு ஈந்தான் குமரேசா ஆனாமல்
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்று உணர்தல்பாற்று

#12
உண்டி தரும் நீரே உணவாகச் சீதை பண்டு
கொண்டிருந்தாள் என்னே குமரேசா உண்டி-தனைத்
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பு ஆயதூஉம் மழை

#13
தேசு மிகு கோசிகனும் செத்த நாய் ஊனை உண்ணக்
கூசாதது என்னே குமரேசா மாசு அகன்ற
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
உள் நின்று உடற்றும் பசி

#14
ஏர் நிலங்கள் வைத்திருந்தும் ஏன் உழவுசெய்யவில்லை
கூர் அருள் சேர் நல்லான் குமரேசா சீர் நிறைந்த
ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளம் குன்றியக்கால்

#15
உற்ற மழை பெய்ய உரோமபதன் கேடு அகன்று
கொற்றமுற்றான் என்னே குமரேசா வற்றிக்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

#16
பண்டு ஓர் பசும்புல்லும் பாராது இடைக்காடர்
கொண்டார் வரகு ஏன் குமரேசா கண்ட
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும்புல் தலை காண்பு அரிது

#17
மண்டு கடல் பெற்றிருந்தும் வான் போய் ஏன் பண்டு மழை
கொண்டுவந்தார் மூவர் குமரேசா கொண்ட
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின்

#18
வென்றி மதுரையில் முன் மெய்ச் சிறப்பும் பூசனையும்
குன்றி நின்றது என்னே குமரேசா என்றும்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

#19
பண்டு பலர் நோன்பு இழந்தார் பாண்டியனும் பாவலரைக்
கொண்டிலன் ஏன் விட்டான் குமரேசா கொண்டதொரு
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின்

#20
வான் நீர் இலாமையினால் மாதவரும் அத்திரிப் பேர்க்
கோனும் ஏன் நொந்தார் குமரேசா ஊனம் இலா
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு

@3 அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

#21
மண்டு புகழ் மாணிக்கவாசகரின் மாண்பினை நூல்
கொண்டு புகல்வானேன் குமரேசா கொண்ட
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

#22
பண்டு கடல் பருகிப் பார் சமன்செய் மாதவன் சீர்
கொண்ட துணை என்னே குமரேசா கண்டு
துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று

#23
பண்டு துறவுகொண்ட பட்டினத்தார் மாண்பு உலகில்
கொண்டது உயர்வு என்னே குமரேசா கண்ட
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

#24
கொண்ட பொறி கொண்டு ஒன்றும் கொள்ளாத நம்மாழ்வார்
கொண்டனர் வீடு என்னே குமரேசா கொண்ட
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து

#25
மா தவத்துக் கோதமன்-தன் வாய்மொழியின் வன்மை எவர்
கோது அகலக் கண்டார் குமரேசா பூதலத்தில்
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி

#26
வீடுமனார் மெய்த் தவத்தை மேவினார் சந்தனு ஏன்
கூடினான் காமம் குமரேசா நாடிச்
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கு அரிய செய்கலாதார்

#27
உற்ற சுகன்-பால் உலகு ஒடுங்கி நிற்க அவன்
கொற்றமுற்றது ஏன் குமரேசா முற்றும்
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்-கட்டே உலகு

#28
காட்டின நக்கீரன் சீர் கம்பன் பெருமை அவர்
கூட்டு மொழி என்னே குமரேசா பாட்டில்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும்

#29
வென்றிக் கபிலர் வெகுளியால் ஏன் சகரர்
குன்றி மடிந்தார் குமரேசா என்றும்
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

#30
பண்டு ஏன் சடபரதர் பல் உயிர்க்கும் செந்தண்மை
கொண்டு நடந்தார் குமரேசா கொண்டாடும்
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ் உயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்

@4 அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

#31
பண்டு பல அல்லலுற்றும் பாண்டவர்கள் ஏன் அறத்தைக்
கொண்டார் துணையாக் குமரேசா மண்டு
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

#32
வீடணனார் ஆக்கம் உற வேல் இலங்கைமன்னவன் ஏன்
கூடினான் கேடு குமரேசா கேடு_இல்
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு

#33
தண்டாமல் செய்தார் ஏன் தண்டியடிகள் அன்று
கொண்ட வினையைக் குமரேசா கண்டு என்றும்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாய் எல்லாம் செயல்

#34
வேடம் இன்றிப் பூசை இன்றி மெய் அறத்தைச் சாக்கியனார்
கூடினார் என்னே குமரேசா ஓடும்
மனத்துக்-கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற

#35
வெற்றி மிகு தக்கன் வேள்வி அறம் செய்தும் ஏன்
குற்றம் மிக உற்றான் குமரேசா உற்ற
அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

#36
அன்று இளையம் என்னாது அறம் ஏன் விரைந்து செய்தான்
குன்றாத் துருவன் குமரேசா என்றுமே
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

#37
உற்ற மணிச் சிவிகை ஊர்ந்தார் ஏன் மூர்த்தியார்
கொற்றவன் ஏன் தாழ்ந்தான் குமரேசா பற்றும்
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தானிடை

#38
நன்றே புரிந்துவந்த நந்தனார் வாழ்நாள் போய்க்
குன்றி நின்றது என்னே குமரேசா என்றேனும்
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
வாழ்நாள் வழி அடைக்கும் கல்

#39
கூடி மனை இன்பமுற்ற கோவலன் ஏன் மாதவியால்
கோடி துன்பம் கொண்டான் குமரேசா தேடும்
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல

#40
நல்வினையே செய்தான் நளன் பாம்பின் செய்கை கண்டும்
கொல்வினை ஏன் விட்டான் குமரேசா சொல்லில்
செயல்-பாலது ஓரும் அறனே ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி

@5 அதிகாரம் 5 – இல்வாழ்க்கை

#41
ஏனோ மற்று எல்லார்க்கும் இன் துணையா நன்று செய்தான்
கோனாம் வல்லாளன் குமரேசா ஞானமுடன்
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல் ஆற்றின் நின்ற துணை

#42
உற்ற துணையாய் உதவினன் ஏன் பாண்டவர்க்குக்
கொற்ற விராடன் குமரேசா முற்றும்
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

#43
தேடு புகழ்க் காளத்தி சென்றடைந்தார் யாவரையும்
கோடாது ஏன் காத்தார் குமரேசா பீடு உடைய
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை

#44
வள்ளல் சடையன் வழி என்றும் குன்றாச் சீர்
கொள்ள நின்றது என்னே குமரேசா தள்ளும்
பழி அஞ்சிப் பாத்தூண் உடைத்து ஆயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்

#45
மண்டு புகழ் மாறனார் மாறாத அன்பு அறன் ஏன்
கொண்டிருந்தார் இல்லில் குமரேசா தண்டாத
அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

#46
தேடித் துறவறத்தில் செல்லார் குசேலர் இல் ஏன்
கூடி இருந்தார் குமரேசா நாடி
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்

#47
முற்றத் துறந்தார்க்கு ஏன் முன் நின்றான் இல் நின்ற
கொற்றச் சனகன் குமரேசா உற்ற
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

#48
கொற்றத் தவம் செய்யும் கோசிகர் ஏன் வேள்வி முற்றக்
கொற்றவன் இல் வந்தார் குமரேசா மற்றவரை
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

#49
இச்சை அற்ற தன் மகனை இல்வாழ்வில் நில் என்று ஏன்
குச்சகனார் சொன்னார் குமரேசா மெச்சும்
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று

#50
மண்டலத்தில் வாழ்ந்திருந்தும் வள்ளுவர் ஏன் தெய்வம் என்று
கொண்டாடப்பட்டார் குமரேசா உண்டாகும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்

@6 அதிகாரம் 6 – வாழ்க்கைத்துணை நலம்

#51
கொண்டான் சிறுவரவும் கொண்டு ஏன் சுசீலை அன்பு
கொண்டு ஆதரித்தாள் குமரேசா கண்ட
மனைத் தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

#52
கொற்றமுற்ற பத்ரகிரி கோன் வாழ்க்கை இல்லாளால்
குற்றமுற்றது என்னே குமரேசா உற்ற
மனை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
எனை மாட்சித்து ஆயினும் இல்

#53
ஒன்றும் இல்லாச் சத்தியவான் உற்றான் ஏன் இல்லாளால்
குன்றாமல் எல்லாம் குமரேசா என்றேனும்
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
இல்லவள் மாணாக்கடை

#54
பண்டு ஏன் நளாயினியைப் பற்று அற்ற மாதவனும்
கொண்டான் துணையாக் குமரேசா கொண்டாடும்
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
திண்மை உண்டாகப் பெறின்

#55
பண்டு மழை பெய்யப் பணித்தாள் அநசூயை
கொண்டு பெய்தது என்னே குமரேசா உண்டான
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை

#56
கொண்டானைப் பேணிக் குல மங்கையர்க்கரசி
கொண்டார் புகழ் ஏன் குமரேசா தண்டாமல்
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகை சான்ற
சொல் காத்துச் சோர்வு இலாள் பெண்

#57
சீதை வனம் புகுந்தும் சீருற்றாள் ஏன் அளகன்
கோதை குலைந்தாள் குமரேசா மாதர்
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை

#58
வானுலகும் போற்றுகின்ற மாண்பை ஏன் கண்ணகி தன்
கோனுடனே பெற்றாள் குமரேசா தான் உவந்து
பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு

#59
நாடும் சுரர் குரு ஏன் நாணினார் நண்ணார் முன்
கோடி செல்வம் வைத்தும் குமரேசா தேடும்
புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
ஏறு போல் பீடு நடை

#60
பண்டு ஏன் அருந்ததியால் பாலரால் சீர் எல்லாம்
கொண்டார் வசிட்டர் குமரேசா உண்டான
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு

@7 அதிகாரம் 7 – மக்கட்பேறு

#61
நாடி மிருகண்டர் நல் சிலதர் மக்களுக்கு ஏன்
கோடி தவம்செய்தார் குமரேசா தேடிப்
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கள் பேறு அல்ல பிற

#62
பண்டு ஏன் சகரர் பகீரதனால் தீது அகன்று
கொண்டார் புகழைக் குமரேசா கண்ட
எழு பிறப்பும் தீயவை தீண்டாப் பழி பிறங்காப்
பண்பு உடை மக்கள் பெறின்

#63
பெற்ற பொருள் விட்டு மக்கள் பெற்றான் தசரதன் பின்
கொற்றமுற்றான் என்னே குமரேசா பற்றுகின்ற
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம்தம் வினையான் வரும்

#64
உண்டு மக்கள் கை அளைந்த ஒண் கூழை ஏன் சுசீலை
கொண்டு இனிதா உண்டாள் குமரேசா கண்ட
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ்

#65
தேடு புகழ்ச் சம்பந்தர் செம்மொழி கேட்டு ஏன் மகிழ்ந்தார்
கூடி இன்பு ஆர் தந்தை குமரேசா ஓடி வந்து
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு

#66
மன்றாடி நின் மழலை வாசகம் ஏன் கேட்டு உவந்தார்
கொன்றை முடி சாய்த்தும் குமரேசா என்றும்
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர்

#67
பாடலியூர்க் கோன் புதல்வர் பல்கலையும் தேற அன்று ஏன்
கோடி வகை செய்தான் குமரேசா பீடு உடைய
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்ப செயல்

#68
மண்டு புகழ்ப் பகவன் மக்கள் அறிவால் உலகோர்
கொண்டனர் ஏன் இன்பம் குமரேசா கண்டு மகிழ்
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது

#69
உற்று அடைந்தார் சீவகன் சீர் ஓத உவந்தாள் என்னே
கொற்ற விசயை குமரேசா முற்றியே
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்

#70
நல்ல இராமன் புரிந்தான் நல் தாதை என் நோற்றான்-
கொல் எனும் சொல் என்னே குமரேசா செல்ல
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல்

@8 அதிகாரம் 8 – அன்புடைமை

#71
கண்டு அழுதார் கண்ணப்பர் காய் கதிரோன் சேயும் ஏன்
கொண்டு அழுதான் முன்னம் குமரேசா உண்டான
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும்

#72
மோனத் ததீசி முதுகெலும்பை வானவர்-தம்
கோனுக்கு ஏன் தந்தான் குமரேசா ஞானமுறும்
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

#73
ஆனிரை-பால் அன்பால் அரும் தவன் ஏன் மூலன் எனும்
கோன் உடம்பைக் கொண்டான் குமரேசா ஆனதினால்
அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு

#74
திண் தோள் குகன் அன்புசெய்தான் இராமன் நண்பு ஏன்
கொண்டான் அவன்-பால் குமரேசா உண்டாகும்
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு

#75
தேடுகின்ற இன்பு உற்றும் சேரமான் ஏன் அன்பால்
கூடு சிறப்பு உற்றான் குமரேசா நாடுகின்ற
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

#76
பண்டு வரதுங்கபாண்டியன் ஏன் அன்புசெய்தான்
கொண்ட மறம் கண்டும் குமரேசா கண்ட
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

#77
அன்று அரன்-பால் அன்பு_இல் அசுரன் ஏன் மோகினி முன்
குன்றி எரிந்தான் குமரேசா குன்றாத
என்பு இலதனை வெயில் போல காயுமே
அன்பு இலதனை அறம்

#78
தண்டகன் ஏன் அன்பு இல்லாத் தன்மையினால் வாழ்வு இழந்து
கொண்ட உயிர் தீர்ந்தான் குமரேசா மண்டுகின்ற
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று

#79
பண்டு துரோணருக்கு ஏன் பாஞ்சாலன் ஈயவில்லை
கொண்ட எல்லாம் வைத்தும் குமரேசா கொண்ட
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு

#80
எய்தும் புறவுக்கா ஏன் சிபி முன் தன் மெய்யைக்
கொய்து கொடுத்தான் குமரேசா மெய்யான
அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு

@9 அதிகாரம் 9 – விருந்தோம்பல்

#81
ஈட்டும் பொருளை எல்லாம் ஏன் விருந்தைப் பேணுதற்கே
கூட்டினர் அப்பூதி குமரேசா நாட்டில்
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
வேளாண்மை செய்தல்-பொருட்டு

#82
தான் உண்ணான் ஔவை உண்ணத் தந்தான் அரும் கனியைக்
கோன் அதிகன் என்னே குமரேசா மான
விருந்து புறத்ததாத் தான் உண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று

#83
ஈட்டிய எல்லாம் தேய்ந்தும் ஏன் நல்லான் பின் உலவாக்
கோட்டை பெற்று வாழ்ந்தான் குமரேசா வீட்டில்
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

#84
என்றும் அசதி இல்லில் ஏனோ திருமகளார்
குன்றாது உறைந்தார் குமரேசா நன்றா
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல்

#85
வித்து இன்றி முத்து ஏன் விளைந்தது வெண்ணெய்ச் சடையன்
கொத்தும் வயலில் குமரேசா சுத்திசெய்து
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்

#86
தேடி விருந்தோம்பும் சிறுத்தொண்டர் வானுலகு ஏன்
கூடி விருந்து ஆனார் குமரேசா நாடி முன்
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு

#87
ஓர் அன்னம் கண்ணற்கு உதவியதால் பாஞ்சாலி
கூர் பயன் ஏன் கொண்டாள் குமரேசா பாரில்
இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

#88
பற்று அற்றான் உள்ளம் பரிந்து இரந்தான் ஏன் பின்பு
குற்றமுற்றான் சேடன் குமரேசா முற்றும்
பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பார் விருந்தோம்பி
வேள்வி தலைப்படாதார்

#89
வாடி வந்த நல்லதங்கை வன் பசியைத் தீர்த்திலள் ஏன்
கோடி உடையாளும் குமரேசா நாடும்
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்-கண் உண்டு

#90
பண்டு தக்கன் மாறுபட்டுப் பாத்தவுடனே உமையார்
கொண்டார் குழைவு ஏன் குமரேசா கண்டெடுத்து
மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

@10 அதிகாரம் 10 – இனியவை கூறல்

#91
மாறு_இல் உயர் சவரி வாய்ச் சொல்லை இன்சொல் என்று
கூறினார் என்னே குமரேசா ஊறுகின்ற
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இல ஆம்
செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்

#92
கண்டு முகம் மலர்ந்து கண்ணன் குசேலரை ஏன்
கொண்டு இனிமைசெய்தான் குமரேசா அண்டி
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

#93
கண்டான் இனிதாகக் கண்ணனை ஏன் இன்சொலுடன்
கொண்டான் விதுரன் குமரேசா கொண்ட
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
இன்சொலினதே அறம்

#94
ஏதச் சிறை இருந்தும் இன்சொல் புகழேந்தி
கோது அற்று ஏன் துய்த்தார் குமரேசா தீதுற்ற
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
இன்புறூஉம் இன்சொலவர்க்கு

#95
பண்டு ஏன் இன்சொல்லும் பணிவும் அணியாகக்
கொண்டான் அனுமான் குமரேசா கொண்ட
பணிவு உடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்றுப் பிற

#96
நன்றான நீதிகளை நாடி ஏன் சூதமுனி
குன்றாமல் சொன்னார் குமரேசா குன்றியே
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

#97
தேடிய சீர்ச் சேக்கிழார் செப்பிய ஓர் சொல்லால் ஏன்
கோடி நலம் கொண்டார் குமரேசா நாடும்
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

#98
தீது அகல் இன்சொல்லால் திரிசடை ஏன் இன்பம் எல்லாம்
கோது அகலக் கொண்டாள் குமரேசா ஓதும்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

#99
மாறு_இல் விதுரன் இன்சொல் மாண்பு கண்டும் மன்னவன் ஏன்
கூறினான் வன்சொல் குமரேசா கூறுகின்ற
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன்சொல் வழங்குவது

#100
என்னே சிசுபாலன் இன்னாத கூறி உடன்
கொன்னே மடிந்தான் குமரேசா அன்னோ
இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய் கவர்ந்து அற்று

@11 அதிகாரம் 11 – செய்ந்நன்றியறிதல்

#101
மற்று ஒன்றும் ஆற்றாமல் மன்னனுக்கு ஏன் கன்னன் உயிர்
கொற்றமுறத் தந்தான் குமரேசா உற்று ஒன்று
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

#102
திண் தோள் அயாதி செய்த சிற்றுதவி ஏன் பெரிதாக்
கொண்டாள் தெய்வானை குமரேசா திண்டாடும்
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

#103
திண் தோள் அனுமான் செய் சீர் உதவி ஏன் பெரிதாக்
கொண்டாள் முன் சீதை குமரேசா உண்டாம்
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது

#104
எய்த சிறு நன்றிக்கும் ஏகலைவன் ஏன் விரலைக்
கொய்து கொடுத்தான் குமரேசா செய்ய
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்

#105
வாழும் திரு எய்த வாழ்த்தினள் ஏன் ஔவை பழங்
கூழ் உதவினார்க்கும் குமரேசா வீழும்
உதவி வரைத்து அன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

#106
நன்றாம் இராமன் உயர் நல் கேண்மை வானரர்கோன்
குன்றாது ஏன் கொண்டான் குமரேசா என்றும்
மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு

#107
மாறு_இல் சடையப்பன் வண் புகழைக் காவியத்தும்
கூறினன் ஏன் கம்பன் குமரேசா தேறி
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
விழுமம் துடைத்தவர் நட்பு

#108
வாதவூர் அண்ணல் வழுதி செய்த நன்றை உன்னிக்
கோது ஏன் மறந்தார் குமரேசா ஏதேனும்
நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று

#109
எள்ளி விராடன் எறிந்தும் தருமன் ஏன்
கொள்ளவில்லை கோபம் குமரேசா துள்ளி வந்து
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்று நன்று உள்ளக் கெடும்

#110
நன்றி ஒன்றுக்காகத் தன் நல் உயிரைச் சல்லியன் ஏன்
குன்றாமல் தந்தான் குமரேசா என்றுமே
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

@12 அதிகாரம் 12 – நடுவுநிலைமை

#111
பண்டு ஓர் பசுவுக்கும் பாலனுக்கும் ஏன் தகுதி
கொண்டு உரைத்தான் சோழன் குமரேசா கொண்ட
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப் பெறின்

#112
வாணன் உயர் செல்வம் வழிவழியா வந்தது என்றும்
கோணாமல் என்னே குமரேசா பூணாகச்
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து

#113
பெற்ற தாய் ஆக்கம் உறப் பேதித்தும் கன்னன் ஏன்
குற்றம் என்று நீத்தான் குமரேசா முற்றாக
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல்

#114
மைந்தர்-தமைக் கொண்டு ஏன் மாநிலத்தோர் காந்தாரி
குந்தி மன் சீர் கண்டார் குமரேசா சிந்தை-தனில்
தக்கார் தகவு இலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும்

#115
கோடான் சகாதேவன் கூறினான் தன் பகைக்கும்
கூடிய நாள் என்னே குமரேசா நீடி வரு
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி

#116
கோடினான் நெஞ்சம் குரு விச்சுவவுருவன்
கூடினான் கேடு ஏன் குமரேசா வாடிக்
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவு ஒரீஇ அல்ல செயின்

#117
நாடு இழந்தும் இல்லை விற்றும் நல்ல அரிச்சந்திரன் சீர்
கோடாதது என்னே குமரேசா கோடும்
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்-கண் தங்கியான் தாழ்வு

#118
கூடாமல் வீமனொடும் கோன் தருமன் நீதி அன்று ஏன்
கோடாமல் சொன்னான் குமரேசா நாடிச்
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி

#119
மாறு_இல் விகர்னன் சொல் மன்னன் அவையில் செப்பம் என்று ஏன்
கூறினார் ஏனோர் குமரேசா கூறுகின்ற
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள் கோட்டம் இன்மை பெறின்

#120
வாணிகம் செய் ஏலேலர் மற்றவையும் பேணி அறம்
கோணாது ஏன் செய்தார் குமரேசா காணியா
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம போல் செயின்

@13 அதிகாரம் 13 – அடக்கமுடைமை

#121
அன்று ஒருவன் வாய் அடங்கி அவ்வுலகு உற்றான் இருவர்
குன்றினார் என்னே குமரேசா என்றும்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும்

#122
அன்று ஏன் அனுமான் அடக்கத்தை ஆருயிர் போல்
குன்றாமல் காத்தான் குமரேசா நன்றாகக்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு

#123
பண்டு சடபரதர் பாரில் அடங்கி நின்றும்
கொண்டார் உயர்வு ஏன் குமரேசா கொண்ட
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்

#124
இல்வாழ்க்கை உற்றிருந்தும் ஏன் உயர்வு பெற்றுநின்றான்
கொல் வேல் சனகன் குமரேசா நல்ல
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

#125
வண்டு ஆர் தார்க் கண்ணன் வளவன் பணிவினால்
கொண்டார் புகழ் ஏன் குமரேசா உண்டான
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

#126
புற்று ஓங்க ஏனோ பொறி அடங்கி வால்மீகர்
குற்றம் அற நின்றார் குமரேசா உற்ற
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து

#127
நாவினை ஏன் காவாமல் நல் கவுந்தியால் இருவர்
கூவி நரி ஆனார் குமரேசா பூவுலகில்
யா காவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு

#128
நன்று உடைய மாடலனும் நன்மை எல்லாம் ஏன் இழந்து
குன்றினன் ஓர் சொல்லால் குமரேசா என்றேனும்
ஒன்றானும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின்
நன்று ஆகாது ஆகிவிடும்

#129
ஆற்றாத சீற்றத்தோடு அன்று அகன்றான் ஏன் அரசன்
கூற்றால் விதுரன் குமரேசா மாற்றாத
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

#130
உண்டாம் அறங்கள் எல்லாம் உற்று அடைய மெய்ப் புகழ் ஏன்
கொண்டான் தருமன் குமரேசா மண்டு
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து

@14 அதிகாரம் 14 – ஒழுக்கமுடைமை

#131
ஏனோ தசரதனார் இன் உயிரை நீத்தும் தன்
கோன் ஒழுக்கம் காத்தார் குமரேசா மான
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்

#132
பண்டு கசன் பார்த்தன் பரிந்தும் ஒழுக்கத்தைக்
கொண்டு இனிது ஏன் காத்தார் குமரேசா கண்டு
பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பித்
தேரினும் அஃதே துணை

#133
அன்று ஓர் இழுக்கால் அகலிகையும் கல் ஆகிக்
குன்றினாள் என்னே குமரேசா என்றும்
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய்விடும்

#134
பண்டு சுகுமாரன் பார்ப்பானாய் வந்தும் ஏன்
கொண்டான் இழிவைக் குமரேசா கண்ட
மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

#135
உற்ற திருவால் உயர்ந்தும் சுயோதனன் ஏன்
குற்றம் உறத் தாழ்ந்தான் குமரேசா பற்றும்
அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்கம் இலான்-கண் உயர்வு

#136
வீடுமனார் கொண்ட விரத ஒழுக்கத்தைக்
கோடாது ஏன் காத்தார் குமரேசா தேடும்
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து

#137
வீடாத மேன்மையுற்ற வெண்மதியும் வெம் பழியைக்
கூடினான் பின்பு ஏன் குமரேசா கூடும்
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி

#138
என்றும் சகுனி இடும்பையுற்றான் நல் ஒழுக்கம்
குன்றியதால் என்னே குமரேசா குன்றாத
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும்

#139
சொல்லவில்லை என்னே ஓர் தீச் சொல்லை ஏசு தன்னைக்
கொல்லவந்தோர்-பாலும் குமரேசா நல்ல
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்

#140
கற்றறிந்தும் நல் சமணர் கல்லார் போல் ஏன் மடமைக்
குற்றமுற்றார் முன்னம் குமரேசா உற்ற
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலாதார்

@15 அதிகாரம் 15 – பிறனில் விழையாமை

#141
எள்ளி முனி தாய் மொழிந்தும் ஏன் மெய்மன் வீடுமன் முன்
கொள்ளவில்லை பெண்ணைக் குமரேசா கொள்ளும்
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்-கண் இல்

#142
தீது செய்தோர்-தம்முள்ளே தென் இலங்கைமன்னவன் ஏன்
கோது மிக உற்றான் குமரேசா ஓதும்
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை
நின்றாரின் பேதையார் இல்

#143
தேறும் குரு மனை-பால் தீமை செய்தான் சித்தன் ஏன்
கூறுபட மாய்ந்தான் குமரேசா மாறி
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார்

#144
என்னே அகலிகையால் இந்திரனும் தன் பெருமை
கொன்னே இழந்தான் குமரேசா அன்னோ
எனைத்துணையராயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறன் இல் புகல்

#145
கண்டான் துரோபதையைக் காதலித்தான் கீசகன் பின்
கொண்டான் பழி ஏன் குமரேசா அண்டல்
எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

#146
அன்று சகன் இல் இறப்பால் அப்பனையும் ஏன் பகைத்துக்
கொன்று பழி கொண்டான் குமரேசா என்றும்
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவாவாம் இல் இறப்பான்-கண்

#147
வெற்றி இலக்குவனும் வேந்தன் உருக்குமனும்
குற்றம் என்று ஏன் நீத்தார் குமரேசா உற்ற
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன்

#148
பண்டு அரக்கி வந்து பரிந்தும் இராமன் ஏன்
கொண்டு அகற்றி விட்டான் குமரேசா கண்ட
பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு

#149
நாடினள் தோள் தோயாத நல் தாயுமானவர் ஏன்
கோடி நலம் கொண்டார் குமரேசா தேடும்
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர்

#150
நன்று செய்தான் தீமை நயவான் ஓர் பெண் நயந்து ஏன்
குன்றினான் வாலி குமரேசா என்றும்
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று

@16 அதிகாரம் 16 – பொறையுடைமை

#151
கண்டு இகழ்ந்து துன்பு செய்த கள்ளரையும் ஏன் பொறுத்தார்
கொண்ட சயதேவர் குமரேசா கிண்டி
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

#152
வள்ளுவர் தம் ஆடை வலித்தான் பிழை பொறுத்தும்
கொள்விலை ஏன் சொன்னார் குமரேசா உள்ளம்
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று

#153
தூதுசென்ற கண்ணன் துரியோதனன் செய்த
கோது ஏன் பொறுத்தான் குமரேசா யாதொன்றும்
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

#154
கொண்ட பொறையுடைமை கோடாமல் ஏன் என்றும்
கொண்டான் தருமன் குமரேசா கண்ட
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப்படும்

#155
கொன்ற மழுவோனைக் கொல்லாமல் ஏன் பொறுத்தான்
குன்றா இராமன் குமரேசா கன்றி
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து

#156
வெற்றி அருணகிரி வில்லி செவி கொய்யாது ஏன்
குற்றம் பொறுத்தார் குமரேசா பற்றி
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்

#157
திண் தோள் பரிட்சித்து தீங்கு செய்தும் ஏன் இரக்கம்
கொண்டான் சமீகன் குமரேசா மண்டித்
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
அறன் அல்ல செய்யாமை நன்று

#158
காலால் மிதித்தாற்கும் கச்சியப்பர் ஏன் கொடுத்தார்
கோலச் சிவிகை குமரேசா ஏலும்
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம்
தகுதியான் வென்றுவிடல்

#159
மாறி வைதும் அல்லமனும் மாது கவுரியும் ஏன்
கூறு பொறுத்தார் குமரேசா தேறித்
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னாச் சொல் நோற்கிற்பவர்

#160
மண்டு புகழ் மாந்தாதா மாதவரின் மேன்மை மிகக்
கொண்டு நின்றான் என்னே குமரேசா உண்டி-தனை
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னா சொல் நோற்பாரின் பின்

@17 அதிகாரம் 17 – அழுக்காறாமை

#161
திண் தோள் உயர் வீமன் தீய அழுக்காறு நெஞ்சம்
கொண்டிலன் ஏன் என்றும் குமரேசா கண்ட
ஒழுக்கு ஆறாக் கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

#162
பெற்றாள் அநசூயை பேறா அழுக்காறாம்
குற்றமின்மை என்னே குமரேசா முற்றும்
விழுப் பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

#163
பெற்றான் நளன் ஆக்கம் என்று கலி பேணாது ஏன்
குற்றமுற்றான் வீணே குமரேசா உற்ற
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான்

#164
சேரன் அமைச்சர் அல்ல செய்யாமல் ஏன் அன்பு
கூர நின்றார் பின்பு குமரேசா யாரும்
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து

#165
கேடு பிறர் செய்யாது ஏன் கேடுற்றாள் காந்தாரி
கோடிய தன் நெஞ்சால் குமரேசா கோடும்
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது

#166
சீறித் தடுத்த சிசுபாலன் சுற்றம் ஏன்
கூறுபட்டுத் தாழ்ந்த குமரேசா தேறிக்
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றி கெடும்

#167
உற்ற திரு எல்லாம் ஒருங்கு இழந்து முஞ்சன் ஏன்
குற்றம் மிக உற்றான் குமரேசா மற்றவர் மேல்
அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்
தவ்வையைக் காட்டிவிடும்

#168
அன்று கஞ்சன் கொண்ட அழுக்காற்றால் தன் திரு ஏன்
குன்றி அழிந்தான் குமரேசா கன்றும்
அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்றுத்
தீ உழி உய்த்துவிடும்

#169
அன்று சித்திராங்கதன் ஏன் அவ்வியம் செய்தும் வாழ்ந்தான்
குன்றினன் ஏன் மன்னன் குமரேசா என்றேனும்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்

#170
அன்று அவிந்தார் நூற்றுவரும் ஐவர் ஏன் ஆக்கமுற்றுக்
குன்றாமல் வாழ்ந்தார் குமரேசா என்றும்
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்

@18 அதிகாரம் 18 – வெஃகாமை

#171
கொற்றமுறாக் கட்டியன் ஏன் கோன் பொருளை வெஃகியதால்
குற்றமுற்று மாய்ந்தான் குமரேசா முற்றும்
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

#172
பண்டு பெருஞ்சாத்தன் பழிசெய்ய நாணி ஒன்றும்
கொண்டிலன் ஏன் மீண்டான் குமரேசா மண்டிப்
படு பயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவு அன்மை நாணுபவர்

#173
கொள் என்று முன்னோன் கொடுத்தும் ஏன் சத்துருக்கன்
கொள்ளவில்லை நாட்டைக் குமரேசா எள்ளுகின்ற
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்டுபவர்

#174
வள்ளுவனார் தள்ளா வறுமையுற்றும் வெஃகி ஒன்றும்
கொள்ளவில்லை என்னே குமரேசா மெள்ள
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
புன்மை_இல் காட்சியவர்

#175
மேலாம் அறிவுற்றும் வெஃகிக் கணன் இழிந்து
கோல் இழந்தான் என்னே குமரேசா சாலவே
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும்
வெஃகி வெறிய செயின்

#176
வென்றி மிகு காத்தவீரியன் ஓர் ஆவை வெஃகிக்
குன்றினான் என்னே குமரேசா நன்றாம்
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

#177
தள்ளாத் தனபதி பொன் தாயத்தார் வௌவியும் ஏன்
கொள்ளவில்லை இன்பம் குமரேசா எள்ளளவும்
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
மாண்டற்கு அரிதாம் பயன்

#178
வள்ளல் உயர் ஆய் செல்வம் மாறாமல் ஏன் வளர்ந்து
கொள்ள நின்றது இன்பம் குமரேசா உள்ளது என்றும்
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப்பொருள்

#179
கொள்ள விரும்பாக் குசேலரிடம் செல்வம் அன்பு
கொள்ள வந்தது என்னே குமரேசா உள்ள
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன் அறிந்து ஆங்கே திரு

#180
கண்டாள் பழி வெஃகிக் கைகேசி காகுத்தன்
கொண்டான் விறல் ஏன் குமரேசா மண்டி
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு

@19 அதிகாரம் 19 – புறங்கூறாமை

#181
மாறு செய்தும் கும்பகன்னன் மாண்புற்றான் யார் புறமும்
கூறான் என்று என்னே குமரேசா தேறி
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

#182
கண்டு நகைத்த கனகவன்மன் பின் கேடு
கொண்டான் பழித்து ஏன் குமரேசா கொண்ட
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன் அழீஇப் பொய்த்து நகை

#183
சீறி எதிர் வைது செத்தான் பவுண்டரகன் முன்
கூறான் புறம் ஏன் குமரேசா வேறாப்
புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும்

#184
மாறா அமுது உண்ணும் வஞ்சர் எதிர் வெய்ய சொன்னார்
கூறார் புறம் ஏன் குமரேசா சீறி வந்து
கண் நின்று கண் அறச் சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்காச் சொல்

#185
கண்டார் அறம் புகன்றும் கண்ணில்லான் தீயன் என்று ஏன்
கொண்டார் முன் ஐவர் குமரேசா கண்ட
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையால் காணப்படும்

#186
மீறிப் பழி உரைத்த வேந்தன் கடோற்கசனால்
கூறப்பட்டான் ஏன் குமரேசா மாறிப்
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும்

#187
கானில் இராமன் பிரியக் கைகை-தனை ஏன் பிரித்தாள்
கூனி புறங்கூறிக் குமரேசா தானே
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச் சொல்லி
நட்பாடல் தேற்றாதவர்

#188
வெற்றி மிகு கண்ணனுக்கும் வெய்ய துரியோதனன் ஏன்
குற்றம் மிகச் சொன்னான் குமரேசா சுற்றம் எனத்
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னை-கொல் ஏதிலார்-மாட்டு

#189
கூறும் சமிதன் கொடும் சகுனி ஏன் உலகம்
கூறி அழ நின்றார் குமரேசா ஆறி
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறம் நோக்கி
புன்சொல் உரைப்பான் பொறை

#190
கண்டவுடன் தன் குற்றம் காது அறுக்கும் தீதை வில்லி
கொண்டிலன் ஏன் விட்டான் குமரேசா உண்டான
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு

@20 அதிகாரம் 20 – பயனில சொல்லாமை

#191
எல்லாரும் எள்ளி இகழ்ந்தார் இளங்குமணன்
கொல் என்ற போது ஏன் குமரேசா வல்லான் போல்
பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப்படும்

#192
பற்றித் துகிலுரியும் என்றான் பலர் முன்னே
குற்றமுற்றான் பின்பு ஏன் குமரேசா உற்ற
பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல
நட்டார்-கண் செய்தலின் தீது

#193
சார்ந்து நின்ற மாயாசனகனை ஏன் தீயன் என்று
கூர்ந்து உணர்ந்தார் சொல்லால் குமரேசா ஆர்ந்த
நயனிலன் என்பது சொல்லும் பயன் இல
பாரித்து உரைக்கும் உரை

#194
மாசில்லான் வாயில் ஒரு வன் பொய்யைச் செய்வன் என்று ஏன்
கோசிகன் சீர் நீத்தான் குமரேசா ஆசு_இல்
நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா
பண்பு_இல் சொல் பல்லார் அகத்து

#195
உற்ற சீர் எல்லாம் ஒரு சொல்லால் ஏன் இழந்தான்
கொற்ற நகுடன் குமரேசா பெற்ற பெரும்
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல
நீர்மையுடையார் சொலின்

#196
சீதை இராவணனைச் சீறிப் பதர் என்று ஏன்
கோதுபடச் சொன்னாள் குமரேசா ஏதும்
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல்

#197
மண்டு புகழ் மூவேந்தர் வன்சொல் ஒன்றைச் சொல்லி அன்று ஏன்
கொண்ட சீர் தீர்ந்தார் குமரேசா கொண்ட
நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று

#198
மாறர் ஒரு சொல்லே மதுரகவி முன் சொன்னார்
கூறார் வேறு என்னே குமரேசா தேறி
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும் பயன் இல்லாத சொல்

#199
அன்று ஏன் இரணியன் சேய் அல்லலுற்றும் சொல்லவில்லை
குன்றிய சொல் ஒன்றும் குமரேசா என்றும்
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர்

#200
சீதை தன்மை சொல்லித் தான் செய்ததை ஏன் சொல்லவில்லை
கோது_இல் அனுமான் குமரேசா ஏதேனும்
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலாச் சொல்

@21 அதிகாரம் 21 – தீவினை அச்சம்

#201
அன்று அசுரர் தின்றார் அமரர் ஏன் அஞ்சினார்
கொன்ற மீன் தீண்டக் குமரேசா நன்று அகன்ற
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு

#202
அஞ்சாத பாண்டியனும் அஞ்சினன் ஏன் தீயது என்று
கொஞ்சம் தெரிந்து குமரேசா நஞ்சு எனவே
தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப்படும்

#203
செற்ற பகைவனுக்கும் தீது செய்யாது ஏன் விடுத்தார்
கொற்றம் மிகு மெய்யார் குமரேசா பெற்ற
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

#204
வெற்றி விசயனுக்கு ஏன் வெம் மூகன் கேடு எண்ணிக்
குற்றமுற்று மாய்ந்தான் குமரேசா எற்றும்
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு

#205
உற்ற வறுமை ஒழிக்க ஒரு தீது செய்து ஏன்
குற்றமுற்றான் கூலன் குமரேசா முற்றும்
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து

# 206
கூடிய மான் கொன்ற கொடும் தீதால் பாண்டு மன்னன்
கூடி ஏன் மாண்டான் குமரேசா நீடி நின்று
தீப்பால தான் பிறர்-கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல் வேண்டாதான்

#207
கொன்றான் முன் சங்கமனைக் கோவலனாய் வந்த பின்பும்
குன்றி ஏன் மாய்ந்தான் குமரேசா என்றும்
எனைப் பகை உற்றாரும் உய்வர் வினைப் பகை
வீயாது பின் சென்று அடும்

#208
பண்டு உயர்ந்த காளமுனி பாண்டவர்-பால் செய் தீதால்
கொண்டான் ஏன் கேடு குமரேசா மண்டுகின்ற
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று

#209
மான் ஆகித் தீவினை செய் மாரீசன் ஏன் மடிந்தான்
கோனால் வருந்திக் குமரேசா ஆனாமல்
தன்னைத் தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும்
துன்னற்க தீவினைப் பால்

#210
பண்டு துயரம் பல செய்தும் பொன்னவன்_சேய்
கொண்டிலன் கேடு என்னே குமரேசா கண்ட
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
தீவினை செய்யான் எனின்

@22 அதிகாரம் 22 – ஒப்புறவறிதல்

#211
வேறொன்றும் வேண்டாமல் மெய் உதவிசெய்து நள்ளி
கூறாது ஏன் சென்றான் குமரேசா வேறாகக்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி-மாட்டு
என் ஆற்றும்-கொல்லோ உலகு

#212
ஈட்டிவைத்த செல்வம் எல்லாம் ஏற்பார்க்கும் தக்கார்க்கும்
கூட்டினன் ஏன் பாரி குமரேசா நாட்டமுடன்
தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல்-பொருட்டு

#213
தெள்ளு புகழ் ஆபுத்திரன் ஒப்புரவு ஒன்றே
கொள்ள மகிழ்ந்தான் ஏன் குமரேசா எள்ளாத
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
ஒப்புரவின் நல்ல பிற

#214
என்னே நல் வேங்கடத்தான் இன்பமுற முன்னவன் ஏன்
கொன்னே இழிந்தான் குமரேசா உன்னியே
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்

#215
வள்ளல் இராமன் திருவால் வையம் எல்லாம் பேருவகை
கொள்ள நின்றது என்னே குமரேசா எள்ளல் இலா
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
பேரறிவாளன் திரு

#216
கோட்டி முதலியார் கொண்ட செல்வம் எல்லார்க்கும்
கூட்டியது ஏன் இன்பம் குமரேசா நாட்டில்
பயன் மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால் செல்வம்
நயன் உடையான்-கண் படின்

#217
கற்றார் புகழ் சீதக்காதி செல்வத்தால் பலர் ஏன்
குற்றம் அற்று வாழ்ந்தார் குமரேசா முற்றும்
மருந்து ஆகித் தப்பா மரத்து அற்றால் செல்வம்
பெருந்தகையான்-கண் படின்

#218
பண்டு செல்வம் தேய்ந்தும் பரிந்து அளிப்பேன் என்று இரகு
கொண்டு எழுந்தார் என்னே குமரேசா கொண்ட
இடன்_இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன் அறி காட்சியவர்

#219
குன்றாத இளையான்குடி மாறர் செய் நீர்மை
குன்ற நொந்தார் என்னே குமரேசா என்றும்
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர
செய்யாது அமைகலா ஆறு

#220
வெள்ளி கெடுவாய் என உரைத்தும் மாவலி ஏன்
கொள் என்று தந்தான் குமரேசா தள்ளாத
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
விற்றுக் கோள் தக்கது உடைத்து

@23 அதிகாரம் 23 – ஈகை

#221
வள்ளல் உயர் பேகன் வறியார்க்கே ஈந்து மயில்
கொள்ளவும் ஏன் தந்தான் குமரேசா தள்ளும்
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து

#222
வள்ளலாம் கன்னன் அன்று வந்த கண்ணன்-பால் ஒன்றும்
கொள்ளாது ஏன் ஈந்தான் குமரேசா உள்ளபடி
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
இல் எனினும் ஈதலே நன்று

#223
தெள்ளு குமணன் ஒன்றும் செப்பாமல் ஏன் தலையைக்
கொள் என முன் தந்தான் குமரேசா எள்ளும்
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான்-கண்ணே உள

#224
ஏனோ நளன் துன்பம் எய்தினான் வானவர்-தம்
கோன் இரந்த போது குமரேசா தானாக
.இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு

#225
அம்பரீடன் வலிமைக்கு ஆற்றாமல் கோபமுனி
கும்பிட்டு ஏன் வீழ்ந்தார் குமரேசா அம்புவியில்
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப் பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

#226
பெற்றன கொண்டு ஏனோ பெருஞ்சித்திரர் பசிநோய்
குற்றம் அறத் தீர்த்தார் குமரேசா முற்றுமே
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி

#227
பண்டு வனம் புகுந்தும் பாண்டவர்கள் வெம் பசிநோய்
கொண்டிலர் ஈது என்னே குமரேசா கொண்டதை முன்
பாத்தூண் மரீஇயவனைப் பசி என்னும்
தீப் பிணி தீண்டல் அரிது

#228
ஈரமுடன் ஈயாமல் ஏன் இழந்து துன்பமுற்றான்
கோரைநகர் ஆழ்வான் குமரேசா பார் உலகில்
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர்

#229
என்றும் பலர் சூழ்ந்திருந்து உண்ண ஏன் உண்டான்
குன்றையூர் எல்லன் குமரேசா கன்றி
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்

#230
ஈதல் இயையாமைக்கு ஏன் இன் உயிரும் நீக்க நின்றார்
கோது அறு காளத்தி குமரேசா பூதலத்தில்
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையாக்கடை

@24 அதிகாரம் 24 – புகழ்

#231
திண் தோள் இயற்பகை தன் தேவியையும் ஈந்து ஏனோ
கொண்டார் புகழைக் குமரேசா தண்டாமல்
ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

#232
பாரி கன்னன் ஆதியரைப் பல்லோரும் பேரன்பு
கூர உரைப்பானேன் குமரேசா பாரில்
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
ஈவார் மேல் நிற்கும் புகழ்

#233
என்றும் சிபி சந்தன் எவ்வி நள்ளி ஓரி புகழ்
குன்றாதது என்னே குமரேசா என்றுமே
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல்

#234
வானுலகும் போற்றியது ஏன் வண் புறவை வானவர்-தம்
கோனையும் போற்றாமல் குமரேசா மான
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

#235
தண் தார் அரவான் ததீசி போல் மெய்ப் புகழைக்
கொண்டிலர் ஏன் மற்றோர் குமரேசா கொண்டாடும்
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது

#236
பூரு ஏன் தோன்றிப் புகழ் கொண்டான் ஏன் இருவர்
கூர் இகழ்வால் நொந்தார் குமரேசா பார் உலகில்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

#237
ஓது புகழ் கொள்ளா உலகன் இளவெளிமான்
கோது உழந்து ஏன் நொந்தார் குமரேசா ஏதும்
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்

#238
பள்ளிகொண்டான் சோமன் பதி அதியன் நல் இசையைக்
கொள்ளைகொண்டார் என்னே குமரேசா எள்ளும்
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
எச்சம் பெறாஅவிடின்

#239
பண்டை வளம் குன்றியது இப் பார் ஏன் நரகனை முன்
கொண்டிருந்த போது குமரேசா கொண்ட
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம்

#240
மண்டு புகழ் நன்னன்_சேய் வாழ்ந்து உயர்ந்தான் நன்னன் இகழ்
கொண்டு இழிந்தான் என்னே குமரேசா மண்டும்
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர்

@25 அதிகாரம் 25 – அருளுடைமை

#241
கொண்ட உடம்பும் கொடுத்தும் ஏன் சீமூதன்
கொண்டான் அருளைக் குமரேசா கண்ட
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்
பூரியார்-கண்ணும் உள

#242
ஏனோ அருளையே இன் துணையாக் கொண்டு நின்றார்
கோன் ஆன புத்தர் குமரேசா தானாக
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை

#243
உள்ளம் உருகி உயர் அருளை வள்ளலார்
கொள்ள நின்றார் என்னே குமரேசா உள்ளும்
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல்

#244
மாசில் சுதத்தர் வசவர் உயிர் ஓம்பிக்
கூசாது ஏன் நின்றார் குமரேசா நேசமுடன்
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை

#245
தேர்ந்த அபயன் திருக்குறிப்பார் அல்லல் இன்றிக்
கூர்ந்து உயர்ந்தார் என்னே குமரேசா நேர்ந்து வரும்
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி

#246
அன்று ஏன் பவணன் அருள் நீங்கின் அல்லல் எனக்
குன்றாமல் சொன்னான் குமரேசா என்றும்
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
அல்லவை செய்து ஒழுகுவார்

#247
ஆர்ந்த பொருளை அருளோடு சாதுவன் ஏன்
கூர்ந்து முன் கொண்டான் குமரேசா சார்ந்த
அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இவ் உலகம் இல்லாகி ஆங்கு

#248
அன்று ஏன் யசோமதி ஆர்ந்த அருள் அற்றது எனக்
குன்றி உளைந்தான் குமரேசா நின்ற
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது

#249
மாறி அருள் இன்றி மாரிதத்தன் செய்த அறம்
கூறினர் தீது என்றேன் குமரேசா ஆறித்
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

#250
நேர்ந்த வலியின் நிலை தெரிந்த பின் கனகன்
கூர்ந்து அமைந்தான் என்னே குமரேசா ஆர்ந்த
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து

@26 அதிகாரம் 26 – புலால் மறுத்தல்

#251
அன்று ஏன் அருள் இன்றி ஆதன் என்பான் அன்றில் ஒன்றைக்
கொன்று சிதைத்தான் குமரேசா நன்றாகத்
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

#252
அன்று ஏன் உதிரன் அருள் இன்றி அந்தணனைக்
கொன்று ஊனைத் தின்றான் குமரேசா என்றும்
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு

#253
வில்வலன் வாதாவி வெய்யராய் ஊன் தின்று
கொல்வினை ஏன் செய்தார் குமரேசா கொல்லும்
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம்

#254
உற்ற அரிவிசயர் ஊன் தின்றல் பாவம் என்று ஏன்
கொற்றவை முன் சொன்னார் குமரேசா பற்றும்
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ் ஊன் தினல்

#255
பல்லோரை வேத்திரத்தில் பாவி பகன் தின்று ஏனோ
கொல்லும் நரகு ஆழ்ந்தான் குமரேசா தொல் உலகில்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு

#256
வில்லாமல் சூரனுக்கு ஏன் மீன் சுமந்து கொண்டு தந்தார்
கொல்லாத தேவர் குமரேசா எல்லாம்
தினல்-பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலைப்-பொருட்டால் ஊன் தருவார் இல்

#257
ஊன் உண்ணேன் என்று ஏன் உறுதியாக் கானன் முன்
கோன் எதிரே சொன்னான் குமரேசா தானாக
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
புண் அது உணர்வார்ப் பெறின்

#258
ஊன் என்று உணர்ந்தவுடன் வசிட்டர் தேவர் ஏன்
கோனை வெறுத்தார் குமரேசா ஈனச்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

#259
வெற்றி மிகு பிம்பசரன் வேள்வியினை ஏன் தடுத்துக்
குற்றம் என்றார் புத்தர் குமரேசா உற்ற
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று

#260
மண்டு புகழ் நந்தனார் வான்மீகர் ஏன் உயிர்கள்
கொண்டு தொழ நின்றார் குமரேசா கண்டது ஒன்றும்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

@27 அதிகாரம் 27 – தவம்

#261
கண்ட துயர் பொறுத்துக் கண்ணுவரும் காசிபரும்
கொண்டார் தவம் ஏன் குமரேசா உண்டாகி
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு

#262
சம்பரன் சம்பாதி கும்பகன்னன் தவம் புரிந்தும்
கும்பினார் என்னே குமரேசா நம்பும்
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது

#263
ஏனோ தவம் புரியாது இல் இருந்தார் சேந்தனார்
கோனான சோமர் குமரேசா தானே
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம்

#264
ஏசியும் ஏத்தியும் ஏனோ விருச்சிகரும்
கோசிகரும் நோற்றார் குமரேசா கூசாமல்
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்

#265
பண்டு ஏன் உபமன்யு பார்த்தன் தவம் புரிந்து
கொண்டார் உயர்வைக் குமரேசா தண்டாமல்
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம்
ஈண்டு முயலப்படும்

#266
நாடிச் சவுனகரும் நைமிசரும் ஏன் உவந்து
கோடி தவம் செய்தார் குமரேசா கூடித்
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு

#267
வாலகில்லர் சீதை உயர் வாகீசர் வாசகர் ஏன்
கோலம் உற்றார் துன்பால் குமரேசா சாலச்
சுடச் சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு

#268
மண்டு தவ நந்தியை ஏன் மன் உயிர் எல்லாம் உவந்து
கொண்டு தொழுகின்ற குமரேசா கண்டு நின்ற
தன் உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும்

#269
போற்றும் சுவேதர் புசுண்டர் உயர் மார்க்கண்டர்
கூற்றையும் ஏன் வென்றார் குமரேசா சீற்றம் மிகு
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு

#270
பண்டு பலர் இலராய்ப் பாடு அழிந்தார் பாணபரர்
கொண்டார் திரு ஏன் குமரேசா மண்டி
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர்

@28 அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம்

#271
பண்டு முத்தநாதன் படிற்று ஒழுக்கை எல்லாரும்
கொண்டு இகழ்ந்தார் என்னே குமரேசா மண்டுகின்ற
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

#272
குன்றா உயர் தோற்றம் கொண்டும் அதிசூரன்
குன்றினான் என்னே குமரேசா என்றேனும்
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
தான் அறி குற்றப்படின்

#273
மாதவன் போல் இந்திரன் ஏன் வல் உருவம் தாங்கி வந்து
கோது புரிந்தான் குமரேசா ஏதும்
வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று

#274
பண்டு தவவேடமுற்றுப் பார்த்தன் சுபத்திரையைக்
கொண்டு அகன்றான் என்னே குமரேசா கண்ட
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்து அற்று

#275
பற்றற்றார் போன்று படிவமுற்ற வில்வலன் ஏன்
குற்றமுற்று மாய்ந்தான் குமரேசா முற்றவே
பற்றற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று
ஏதம் பலவும் தரும்

#276
மாதவன் போல் வந்த மதன் மாண் பொருளை வஞ்சித்துக்
கோது ஏன் புரிந்தான் குமரேசா யாதொன்றும்
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்

#277
சீதை-பால் மாதவன் போல் சென்றான் இராவணன் உள்
கோது கொண்டும் என்னே குமரேசா ஓதும்
புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி
மூக்கின் கரியார் உடைத்து

#278
பண்டு வலன் ஆசான் பணம் பறிக்கப் பொய்வேடம்
கொண்டு வந்தான் என்னே குமரேசா மண்டு
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர்

#279
கண்ட மான் நல்லது என்ற காகுத்தன் பின் செயலால்
கொண்டனன் தீது என்று ஏன் குமரேசா மிண்டும்
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்

#280
பண்டு தவவேடம் ஒன்றும் பற்றார் சகநேசர்
கொண்டார் உயர்வு ஏன் குமரேசா முண்டம்
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின்

@29 அதிகாரம் 29 – கள்ளாமை

#281
கற்ற கலையின் களவானும் கன்னன் இகழ்
குற்றமுற்றான் என்னே குமரேசா எற்றானும்
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு

#282
பண்டு மலர் கள்ளத்தால் பற்றிப் பராந்தகன் ஏன்
கொண்டான் அழிவைக் குமரேசா கண்டு நின்ற
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்

#283
அன்று களவால் அடைந்த எலாம் ஏன் இழந்து
குன்றினார் சாரர் குமரேசா என்றும்
களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து
ஆவது போலக் கெடும்

#284
மாசில் மணிக் களவால் மந்திரி தன் இன் பதம் போய்க்
கூசினான் என்னே குமரேசா நீசக்
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
வீயா விழுமம் தரும்

#285
கண்டார் பொன் மூவர் கருணை இன்றி ஏன் இருவர்
கொண்டு ஓடி மாய்ந்தார் குமரேசா மண்டும்
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்-கண் இல்

#286
சாது வசவரிடம் சார்ந்தும் களவுசெய்து
கோது அடைந்தார் என்னே குமரேசா ஏதும்
அளவின்-கண் நின்று ஒழுகல் ஆற்றார் களவின்-கண்
கன்றிய காதலவர்

#287
அன்று ஏன் களவை அடியவர் செய்யார் என்றார்
குன்றாத சேரர் குமரேசா என்றும்
களவு என்னும் கார் அறிவாண்மை அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்-கண் இல்

#288
சார்ந்த கனகன் தனு சயிந்தன் புன் கரவால்
கூர்ந்து இழிந்தார் என்னே குமரேசா ஆர்ந்த
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு

#289
ஒன்றி இராகும் உயர் பூதியும் களவால்
குன்றி ஏன் வீய்ந்தார் குமரேசா என்றும்
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல
மற்றைய தேற்றாதவர்

#290
பண்டு ஏன் வசுக்கள் பசுக் களவால் தம் உடம்பும்
கொண்டனவும் தீர்ந்தார் குமரேசா அண்டி நின்று
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு

@30 அதிகாரம் 30 – வாய்மை

#291
உள்ளதே சொன்னான் உயர் தருமன் பொய்யன் என்று
கொள்ள நின்றான் என்னே குமரேசா உள்ளபடி
வாய்மை எனப்படுவது யாது எனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

#292
மாதர் கலைக்கோட்டு மா முனி-பால் பொய் உரைத்தும்
கோது அடையார் என்னே குமரேசா தீது உடைய
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

#293
வேதாவும் தாழையும் முன் வெய்யது ஒரு பொய் புகன்று ஏன்
கோது அடைந்து நொந்தார் குமரேசா ஏதேனும்
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்

#294
வள்ளல் அரிச்சந்திரன் ஏன் வைத்தார் உள்ளம் எலாம்
கொள்ள நின்றான் இன்றும் குமரேசா எள்ளளவும்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்

#295
பண்டு மனம் பொருந்தப் பாஞ்சாலி மெய் புகன்று
கொண்டாள் சீர் என்னே குமரேசா உண்டாம்
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை

#296
போத உதத்தியன் ஏன் பொய்யாமை பூண்டதனால்
கோது_இல் அறம் கொண்டான் குமரேசா தீது அகன்ற
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்

#297
ஓர் அறமும் செய்யான் உயர்ந்தான் பொய்யாமையால்
கோரன் என்பான் என்னே குமரேசா சீர் உடைய
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று

#298
பண்டு செழியன் பரதன் பிருது மெய்யால்
கொண்டனர் ஏன் தூய்மை குமரேசா கண்ட
புறம் தூய்மை நீரான் அமையும் அகம் தூய்மை
வாய்மையான் காணப்படும்

#299
தண் தார்த் தசரதன் சத்தியன் சன்னு மெய்யால்
கொண்டார் ஒளி ஏன் குமரேசா உண்டான
எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

#300
மாறு_இல் சகாதேவன் வாய்மையினை அன்னை என்று
கூறினான் என்னே குமரேசா தேறி நின்று
யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற

@31 அதிகாரம் 31 – வெகுளாமை

#301
தெள்ளு புகழ் அல்லமனார் செல் இடத்தும் வெம் சினத்தைக்
கொள்ளாதது என்னே குமரேசா தள்ளாமல்
செல் இடத்துக் காப்பான் சினம் காப்பான் அல் இடத்துக்
காக்கின் என் காவாக்கால் என்

#302
செல்லாச் சினத்து இழிந்தார் செல் இடத்தும் கோசிகர் ஏன்
கொல்லுதலே செய்தார் குமரேசா பல் விதத்தும்
செல்லா இடத்துச் சினம் தீது செல் இடத்தும்
இல் அதனின் தீய பிற

#303
தள்ளா வெகுளியைச் சாந்தலிங்கம் யார்-மாட்டும்
கொள்ளாதது என்னே குமரேசா தள்ளி
மறத்தல் வெகுளியை யார்-மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்

#304
தீது பகை ஏதும் இலாச் சித்தராமன் சினத்தால்
கோது அடைந்தான் என்னே குமரேசா போதும்
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற

#305
திண் தோள் இரணியன் தன் சேய் மேல் சினந்ததனால்
கொண்டான் அழிவு ஏன் குமரேசா கொண்டாடும்
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்

#306
வெற்றித் திரிசங்கு ஏன் வெம் சினத்தால் தன் குருவைக்
குற்றமுறத் தீர்ந்தான் குமரேசா உற்ற
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்

#307
கொண்டார் சினம் பொருளாக் கொங்கணர் பின் வாசுகியால்
கொண்டார் ஏன் கேடு குமரேசா மண்டு
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று

#308
எள்ளித் துயர் செய்தும் ஏனோ சிவஞானர்
கொள்ளவில்லை கோபம் குமரேசா தள்ளி
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

#309
பண்டு வெகுளாப் பரத்துவர் ஏன் உள்ளியதைக்
கொண்டார் உடனே குமரேசா தண்டாமல்
உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்

#310
திண் தோள் சகரர் சினந்து இறந்தார் அஞ்சுமான்
கொண்டான் உயர்வு ஏன் குமரேசா மண்டி
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

@32 அதிகாரம் 32 – இன்னா செய்யாமை

#311
உற்ற முன்னோன் இன்னா உறுவன் என ஏன் இளங்கோ
குற்றம் அற நீத்தார் குமரேசா முற்றும்
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்

#312
செற்றம்கொண்டு இன்னா முன் செய்தார்க்கும் செய்திலர் ஏன்
கொற்றம் குடியார் குமரேசா முற்றும்
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்

#313
திண் தோள் நிமி வசிட்டர் சீறி இன்னா செய்து துன்பம்
கொண்டார் பின் என்னே குமரேசா பண்டு ஒன்றும்
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின்
உய்யா விழுமம் தரும்

#314
பண்டு சுயோதனனைப் பாண்டவர் ஏன் கட்டு அவிழ்த்துக்
கொண்டுவந்து விட்டார் குமரேசா மண்டி வந்து
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்

#315
பூதி பவணன் புறத்து உயிர் நோய் போற்றி ஏன்
கோது இன்றிக் காத்தார் குமரேசா ஓதும்
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றாக்கடை

#316
பற்றிய கை அன்னம் படு துயர் கண்டு ஏன் உடனே
கொற்ற நளன் விட்டான் குமரேசா எற்றேனும்
இன்னா எனத் தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்-கண் செயல்

#317
சார்ந்து குசேலர் உயர் சாங்கியர் ஏன் யார்க்கும் அருள்
கூர்ந்து நடந்தார் குமரேசா ஓர்ந்தே
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை

#318
இன்னா இயற்றி இழிந்து ஏனோ தேனுகன் பின்
கொன்னே அழிந்தான் குமரேசா முன்னாகத்
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல்

#319
கூடல் சேர் கோவலனைக் கொன்றோன் இராகுலன் பின்
கூடினார் கேடு ஏன் குமரேசா கோடிப்
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்

#320
வண்டுகட்கு நோய்செய்த மாண்டவியர் பின் கொடு நோய்
கொண்டு நொந்தார் என்னே குமரேசா மண்டி வரும்
நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம்
நோய் இன்மை வேண்டுபவர்

@33 அதிகாரம் 33 – கொல்லாமை

#321
கொன்று இழிந்த வேடன் ஏன் கொல்லாமையால் உயர்ந்து
குன்றா இன்புற்றான் குமரேசா என்றும்
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
பிற வினை எல்லாம் தரும்

#322
தண் தார் இயக்கோடன் சத்தன் பகுத்து உண்டு
கொண்டார் மகிழ்வு ஏன் குமரேசா கொண்ட
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

#323
கண்ட பசு ஒன்றைக் காப்பாற்ற ஆமகனும்
கொண்டான் பொய் என்னே குமரேசா கண்டு அறியின்
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின் சார பொய்யாமை நன்று

#324
நாடி மருளசங்கர் நல்லது என்று கொல்லாமை
கூடி நின்றார் என்னே குமரேசா தேடி என்றும்
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி

#325
நில்லா நிலை அஞ்சி நீத்த புத்தர் வர்த்தமர் என்
கொல்லாமை சூழ்ந்தார் குமரேசா புல்லா
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை

#326
கொல்லாத சாதுவனைக் கூர் சாரன் நாகனை ஏன்
கொல்லவில்லை கூற்றம் குமரேசா நல்லது என்று
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று

#327
நீதி மன்னன் சேய் உயிரை நீக்க அஞ்சி ஏன் அமைச்சன்
கோது_இல் உயிர் நீத்தான் குமரேசா மோதி வந்து
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை

#328
கொன்று செயும் வேள்வி கொடிது என்று ஏன் கும்பமுனி
குன்ற உரைத்தார் குமரேசா என்றுமே
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
கொன்று ஆகும் ஆக்கம் கடை

#329
பண்டு பராசர் தம் பாலரையும் ஈனர் என்று ஏன்
கொண்டார் கொலையால் குமரேசா கொண்ட
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
புன்மை தெரிவார் அகத்து

#330
பண்டு கவந்தன் பழி உடம்பும் தீ வாழ்வும்
கொண்டு உழந்தான் என்னே குமரேசா கொண்ட
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லா தீ வாழ்க்கையவர்

@34 அதிகாரம் 34 – நிலையாமை

#331
கொண்ட உடல் நிற்கும் என்று கோரக்கர் சீர் இழந்து
கொண்டார் இழிவு ஏன் குமரேசா கண்டு அறிந்தும்
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை

#332
சூரன் இராவணன் சொன்னன் உயர் செல்வம் எல்லாம்
கூர் அழிந்து ஏன் போன குமரேசா ஊரில் ஒரு
கூத்தாட்டு அவை குழாத்து அற்றே பெரும் செல்வம்
போக்கும் அது விளிந்து அற்று

#333
தண் தார்க் கலயனார் தாலி விற்றும் ஆங்கு அறமே
கொண்டு செய்தார் என்னே குமரேசா மண்டியே
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல்

#334
மாசில் உரோமமுனி வாழ்நாள் நனி பெற்றும்
கூசினர் ஏன் வாழக் குமரேசா நேசமுறும்
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாள் அது உணர்வார்ப் பெறின்

#335
மண்டு புகழ்க் கட்டுவாங்கன் விரைந்து ஏனோ
கொண்டு செய்தான் நன்மை குமரேசா கொண்டாடும்
நாச் செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை
மேற்சென்று செய்யப்படும்

#336
பண்டு மணமகனாய்ப் பத்தினையைக் கைப்பிடித்தான்
கொண்ட அன்று ஏன் மாண்டான் குமரேசா கண்ட
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இ உலகு

#337
கோடி கருதிக் குதித்தான் சயத்திரதன்
கூடினான் சாவு ஏன் குமரேசா நீடி
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல

#338
கூடி வந்த தன் மனைவி கொண்ட உயிர் காணாது ஏன்
கூடு மட்டும் கண்டான் குமரேசா நாடும்
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்து அற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு

#339
அன்று இறந்த சத்தியவான் அவ் விருத்தை ஏன் பிறந்து
குன்றாது எழுந்தார் குமரேசா நன்றா
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

#340
திண் தோள் சசித்துவசன் செய்ய உயிர் பல் உடம்பு
கொண்டு அலைந்தது என்னே குமரேசா கண்டிருக்கும்
புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு

@35 அதிகாரம் 35 – துறவு

#341
பெற்ற செல்வம் எல்லாம் பிருகரதன் ஏன் துறந்து
குற்றம் அற்று நின்றான் குமரேசா உற்று அறிந்தே
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

#342
பண்டு ஏனோ சங்கரர் பாலசித்தர் மெய்த் துறவைக்
கொண்டார் விரைந்து குமரேசா மண்டு நலம்
வேண்டின் உண்டாகத் துறக்க துறந்த பின்
ஈண்டு இயற்பால பல

#343
வெற்றி மிகு சீவகன் ஏன் மேவிய எல்லாம் ஒருங்கே
குற்றம் என விட்டான் குமரேசா முற்றும்
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு

#344
ஓர் நாய் உடைமைக்கும் ஓங்கு புகழ்ப் பத்ரகிரி
கூர் நோய் ஏன் கொண்டார் குமரேசா தேரின்
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து

#345
பூவணையும் பொன் கலனும் போக்கி உயர் பட்டணத்தார்
கோவணம் ஏன் கொண்டார் குமரேசா பூவுலகில்
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை

#346
ஏனோ அயன் உலகும் எண்ணார் சரபங்கர்
கோன் உலகே புக்கார் குமரேசா ஞானமுற
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

#347
கண்டும் சவுபரியும் காதலுறு பற்றினால்
கொண்டார் துயர் ஏன் குமரேசா மண்டி நின்று
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅதவர்க்கு

#348
சிற்றம்பலர் முத்தி சேர்ந்தார் சிவசருமர்
குற்றமுற்றார் என்னே குமரேசா முற்றத்
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர்

#349
பற்று_இல் பயாபதி பாவை மணிமேகலை ஏன்
குற்றம்_இல் வீடு உற்றார் குமரேசா உற்று நின்ற
பற்றற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
நிலையாமை காணப்படும்

#350
பற்றற்ற காரைக்கால் பத்தினி ஏன் பற்றி நின்றார்
குற்றமற்றான் பற்றைக் குமரேசா முற்றாகப்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப் பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

@36 அதிகாரம் 36 – மெய்யுணர்தல்

#351
தண் தார்ச் சுலபனும் தக்கனும் புன்பிறப்பு ஏன்
கொண்டார் மருளால் குமரேசா கண்ட
பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்
மருளான் ஆம் மாணாப் பிறப்பு

#352
கண்ட மயல் நீங்கக் கலிங்கபதி பேரின்பம்
கொண்டான் முன் என்னே குமரேசா தண்டா
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசறு காட்சியவர்க்கு

#353
தேர்ந்த பரத்துவர் தேசு ஆர் கருவூரர்
கூர்ந்து ஏன் வான் கொண்டார் குமரேசா நேர்ந்திருந்த
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து

#354
சென்று உணர்ந்தும் மெய்கண்டதேவர் எதிர் நந்தியார்
குன்றி நின்றார் என்னே குமரேசா நன்றாக
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே
மெய் உணர்வு இல்லாதவர்க்கு

#355
பண்டு கண்ணன் மெய் வடிவே பார்த்துச் சகாதேவர்
கொண்டு உணர்ந்தார் என்னே குமரேசா கண்டவற்றுள்
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப் பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு

#356
கண்டார் கபிலர் மெய் கற்ற மணிவாசகர் பின்
கொண்டார் வீடு என்னே குமரேசா மண்டு அருளால்
கற்று ஈண்டு மெய்ப் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி

#357
திண் தோள் சிகித்துவசன் சிங்கவன்மன் உள் உணர்ந்து ஏன்
கொண்ட பிறப்பு அற்றார் குமரேசா தண்டாமல்
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு

#358
தேட அரிய செம்பொருளைத் தேர்ந்து ஏன் அறவணர்
கோடி நலம் கொண்டார் குமரேசா பீடு_இல்
பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு

#359
சண்டேசர் தாள் எறிந்தும் சார்தரு நோய் சாராமல்
கொண்டார் சீர் என்னே குமரேசா உண்டான
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து
சார்தரா சார்தரும் நோய்

#360
உற்ற நோய் ஒன்றும் உறாது ஏன் சுதீக்கண்ணர்
குற்றம்_இல் இன்பு உற்றார் குமரேசா பற்றி நின்ற
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய்

@37 அதிகாரம் 37 – அவா அறுத்தல்

#361
கண்ட மான் கண் சிறிது காதலுற ஏன் பரதர்
கொண்டார் பிறப்பைக் குமரேசா தண்டா
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து

#362
வேறொன்றும் வேண்டாமல் வேண்டிப் பிருங்கி ஏன்
கூறு இன்பம் கொண்டார் குமரேசா தேறியே
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும்

#363
மேல் அரசும் கன்னிகையும் வேண்டாது ஏன் வேதசரர்
கோலமுறச் சென்றார் குமரேசா சீலமுடன்
வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை
யாண்டும் அஃது ஒப்பது இல்

#364
என்றும் அவா இன்றி ஏனோ நமசிவாயர்
குன்று என மெய் கொண்டார் குமரேசா நன்றான
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
வாஅய்மை வேண்ட வரும்

#365
ஆசை அற்ற நாரதர் பின் அற்று உயர்ந்தார் மற்றவர் ஏன்
கூசி மிக நொந்தார் குமரேசா ஆசு அறவே
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்

#366
கூடும் அவாவுக்கு அஞ்சிக் கோசிகரும் மாகதரும்
கோடி ஏன் சென்றார் குமரேசா நாடியே
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா

#367
சாரும் அவா அறுத்த தத்தாத்திரையர் இன்பம்
கூர நின்றார் என்னே குமரேசா நேரும்
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும்

#368
அன்று மழிசை அவா இலராய் இன்புற்றார்
குன்றினர் ஏன் நால்வர் குமரேசா என்றும்
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

#369
என்றும் அறா இன்பத்தை ஏனோ பிருகுமுனி
குன்றாமல் கொண்டார் குமரேசா நன்றாக
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்

#370
அன்று ஏன் அரியசுவர் ஆசை அற்ற அப்பொழுதே
குன்றா இன்புற்றார் குமரேசா என்றுமே
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே
பேரா இயற்கை தரும்

@38 அதிகாரம் 38 – ஊழ்

#371
அன்று அறுவர் தீ-நின்று அகன்றார் மடி கொண்டு
குன்றினர் ஏன் மற்றோர் குமரேசா என்றுமே
ஆகு_ஊழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகு_ஊழால் தோன்றும் மடி

#372
பண்டு நளன் பேதையாய்ப் பார் இழந்தான் புட்கரன் ஏன்
கொண்டுவந்தான் செல்வம் குமரேசா மண்டி வந்து
பேதைப் படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
ஆகல்_ஊழ் உற்றக்கடை

#373
திண் தோள் இராமனும் ஏன் தேராமல் மான் பின் போய்க்
கொண்டான் துயரம் குமரேசா தண்டாமல்
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும்

#374
தெள்ளியனாய் நின்றும் துரோணன் துருபனிடம்
கொள்ள வந்தான் என்னே குமரேசா கொள்ளும்
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
தெள்ளியர் ஆதலும் வேறு

#375
சாதுவன் முன் நன்று ஆய்ந்தும் தாழ்ந்தான் பின் தீது அடைந்தும்
கோது அகன்றான் என்னே குமரேசா ஆதலினால்
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
நல்ல ஆம் செல்வம் செயற்கு

#376
கட்டிவைத்தும் தத்தன் முன் கைவிட்டான் ஏலேலன்
கொட்டியும் ஏன் பெற்றான் குமரேசா முட்டப்
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம

#377
ஊடி அமுது அசுரர் உண்ணாது ஒழிந்தார் ஏன்
கோடி தொகுத்தும் குமரேசா நாடி
வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

#378
தள்ளா வறுமையுற்றும் சத்திமுத்தர் நல் துறவு
கொள்ளாதது என்னே குமரேசா உள்ளித்
துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்

#379
அன்று துயர் எய்துங்கால் அல்லல் இன்றிச் சச்சந்தன்
குன்றாது ஏன் நின்றான் குமரேசா என்றுமே
நன்று ஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்று ஆம்கால்
அல்லற்படுவது எவன்

#380
சிந்துபதி முன் சூழ்ந்தும் தேர்ந்து பரிட்சித்து நின்றும்
குந்தி ஏன் மாய்ந்தார் குமரேசா முந்துகின்ற
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும்
** பொருட்பால்

@39 அதிகாரம் 39 – இறைமாட்சி

#381
வெற்றி முசுகுந்தன் வேந்தருள்ளே வேந்தன் என்று ஏன்
கொற்றமுற்று நின்றான் குமரேசா உற்ற
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

#382
அன்று புரஞ்சயன்-பால் அஞ்சாமை ஈகை ஒன்றும்
குன்றாதது என்னே குமரேசா என்றுமே
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு

#383
திண் தோள் புரூரவன் ஏன் தேவரினும் முன் துணிவு
கொண்டு வென்று மீண்டான் குமரேசா மண்டியே
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவற்கு

#384
வீரம் மிகு உக்கிரப்பேர் வேந்தன் குலம் மானம்
கூர நின்றான் என்னே குமரேசா நேரும்
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
மானம் உடையது அரசு

#385
அன்று ஏன் பெரு வளத்தை ஆக்கிப் பிருது நலம்
குன்றாமல் காத்தான் குமரேசா நன்றா
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

#386
மண்டு புகழ் அத்திமன்னன் மாநிலத்தை ஏன் உலகோர்
கொண்டு புகழ்ந்தார் குமரேசா கண்டு மகிழ்
காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

#387
தண்டாத இன்சொலோடு தண்ணளி சேர் போசன் ஏன்
கொண்டான் உலகைக் குமரேசா கண்டு அனைய
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்குத் தன் சொலால்
தான் கண்டனைத்து இவ் உலகு

#388
திண் தோள் மனுவினை ஏன் தெய்வம் என்று எல்லாரும்
கொண்டாடி நின்றார் குமரேசா கொண்ட
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்

#389
மண்டு புகழ் விக்கிரமார்க்கன் அமைச்சு உரை ஏன்
கொண்டு பொறுத்தான் குமரேசா கொண்ட
செவி கைப்பச் சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கைக் கீழ்த் தங்கும் உலகு

#390
திண் தோள் பரதனை ஏன் தேர் வேந்தர் தம்முள்ளே
கொண்டார் ஒளியாக் குமரேசா கொண்ட
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி

@40 அதிகாரம் 40 – கல்வி

#391
கற்ற பெருவழுதி கற்றபடியே நின்று
கொற்றமுற்றார் என்னே குமரேசா முற்றவே
கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக

#392
காணும் இரு கண் இழந்தும் கற்ற கவி வீரர் சீர்
கோணாதது என்னே குமரேசா பேணுகின்ற
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ் இரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு

#393
காலும் இரு கண்ணும் அற்றார் கற்று உயர்ந்தார் கண் இருந்தும்
கோல் இழந்தான் என்னே குமரேசா மேலான
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண் உடையர் கல்லாதவர்

#394
மேவினார் பின்பு மிக உள்ள ஏன் பிரிந்தார்
கோவூர்கிழார் முன் குமரேசா யாவும்
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

#395
தேடு புகழ்ச் சாந்தி கண்ணன் தேர் உதங்கன் கற்றதனால்
கூடினர் சீர் என்னே குமரேசா நாடி
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர்

#396
சீர் ஆரும் கீரரும் ஏன் தென்முனி-பால் கற்ற பின்பே
கூர் அறிவு மிக்கார் குமரேசா நேராகத்
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்று அனைத்து ஊறும் அறிவு

#397
சென்ற இடம் எல்லாம் சிறந்து ஏன் குமரகுரு
குன்றாச் சீர் பெற்றார் குமரேசா நின்ற இடம்
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு

#398
பல் திரளும் முன் கவிகள் பாடினார் சம்பந்தர்
குற்றம் அற என்னே குமரேசா உற்ற
ஒருமைக்-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து

#399
கண்டார் எல்லாம் மகிழக் கண்டுகண்டு கல்வி இன்பம்
கொண்டார் ஏன் ஔவை குமரேசா தண்டாமல்
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்

#400
கண்ட செல்வம் பேணாமல் காடவர்கோன் கல்வியை ஏன்
கொண்டு மகிழ்ந்தார் குமரேசா தண்டாத
கேடு இல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை

@41 அதிகாரம் 41 – கல்லாமை

#401
வாட்டம் இலாப் புத்தர் மணிவாசகரோடு
கோட்டிகொண்டு ஏன் தாழ்ந்தார் குமரேசா நாட்டில்
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
நூல் இன்றிக் கோட்டிகொளல்

#402
காளிதாசன் பாட்டைக் கல்லாதாள் சொல்லி ஏன்
கோள் இழிவுகொண்டாள் குமரேசா தாளுடனே
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று

#403
கற்றும் மதுரகவி கல்லார் போல் சொல்லாடிக்
குற்றமுற்றார் என்னே குமரேசா முற்றவே
கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாது இருக்கப் பெறின்

#404
ஒள்ளியனாய் வந்து நின்றும் ஓதல் இலா நந்தனை ஏன்
கொள்ளவில்லை ஔவை குமரேசா உள்ளுணர்ந்து
கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
கொள்ளார் அறிவுடையார்

#405
கன்றி நின்ற சம்பந்தன் காளமேகம் காணக்
குன்றினான் என்னே குமரேசா நன்றாகக்
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வுபடும்

#406
உண்டு என்னும் மாத்திரமே ஓங்கினார் கீசகர் முன்
கொண்டிலர் சீர் என்னே குமரேசா மண்டி
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர் அனையர் கல்லாதவர்

#407
தெள்ளிய நூல் கல்லாரைத் தேர் புலம் சேர் சண்பகம் ஏன்
கொள்ளாது இகழ்ந்தாள் குமரேசா கொள்ளுகின்ற
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று

#408
கற்ற கணிகண்ணன் முன் காவலன் இன்னலுடன்
குற்றமுற்றான் என்னே குமரேசா உற்று அறிந்த
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்-கண் பட்ட திரு

#409
ஏத்து புகழ் மன்னரினும் ஏற்றமுற்றார் கற்ற ஒட்டக்
கூத்தர் என்னே குமரேசா ஏத்துகின்ற
மேல் பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு

#410
நூல் கற்ற ஐவர் போல் நூற்றுவர் சீர் கொண்டிலர் ஏன்
கோல் பெற்றிருந்தும் குமரேசா சால்பு_இல்
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரோடு ஏனையவர்

@42 அதிகாரம் 42 – கேள்வி

#411
கொண்ட செல்வம் எல்லாம் கொடுத்துச் செவிச் செல்வம்
கொண்டான் ஏன் போசன் குமரேசா கண்ட பெரும்
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச் செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

#412
பண்டு செவிக்கு உணவே பார்த்தனர் ஏன் நைமிசத்தார்
கொண்ட பசி நீத்தும் குமரேசா கண்ட
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்

#413
திண் தோள் சனமேயன் தேர்ந்து உயர்ந்தான் கேள்வி ஒன்று
கொண்டதனால் என்னே குமரேசா கொண்ட
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து

#414
தேர்ந்தாள் முன் கோதமியும் சித்திரகேதும் கேட்டுக்
கூர்ந்த துன்பு ஏன் தீர்ந்தான் குமரேசா சார்ந்து நின்று
கற்றிலனாயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை

#415
உள்ளம் தளர் ஐவர் உற்ற வியாதன் வாய்ச் சொல்
கொள்ள உயர்ந்தார் ஏன் குமரேசா மெள்ள
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்

#416
பூத்த புகழேந்தி போதம் கேட்டு ஏன் ஒட்டக்
கூத்தரையும் வென்றார் குமரேசா காத்தே
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்

#417
வென்றிக் களம் வீழ்ந்தும் வீடுமர் ஏன் சொல்லவில்லை
குன்றும் மொழி ஒன்றும் குமரேசா என்றும்
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர்

#418
உள்ள செவி இருந்தும் ஓட்டை என ஏனன் ஏன்
கொள்ள இழிந்தான் குமரேசா உள்ள எலாம்
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப்படாத செவி

#419
கஞ்சன் சிசுபாலன் கண்ணில்லான்_சேய் வணக்கம்
கொஞ்சமும் கொள்ளார் ஏன் குமரேசா நெஞ்சில்
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது

#420
ஒன்றாகக் காந்தாரர் உற்று அவிந்தும் ஏன் உலகோர்
குன்றவில்லை நெஞ்சம் குமரேசா என்றும்
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்

@43 அதிகாரம் 43 – அறிவுடைமை

#421
உற்ற அறிவால் உயர் நம்பி அற்றம் இன்றிக்
கொற்றமுற்று ஏன் நின்றான் குமரேசா பெற்ற
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண்

#422
உள்ளம் திரியாது ஒடுக்கிப் பதஞ்சலி நேர்
கொள்ள உய்த்தார் என்னே குமரேசா துள்ளியே
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்-பால் உய்ப்பது அறிவு

#423
உற்றவர் வாய்ச் சொல் எல்லாம் ஓர்ந்து ஏன் உருத்திரர் மெய்
குற்றம் அறக் கண்டார் குமரேசா எற்றேனும்
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப் பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு

#424
கண்டார் படிக்காசர் காசர் உயர் நுண் பொருளும்
கொண்டு எளிது ஏன் சொன்னார் குமரேசா கண்டதனை
எண் பொருள ஆகச் செலச் சொல்லி தான் பிறர்-வாய்
நுண் பொருள் காண்பது அறிவு

#425
மண்டு புகழ்ச் சீனக்கன் மாறாது ஏன் ஓர் நிலையாய்க்
கொண்டிருந்தான் நட்பைக் குமரேசா கண்ட
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு

#426
பண்டு உலகுக்கு ஒப்ப ஏன் பத்தினியைக் காகுத்தன்
கொண்டு விட்டான் கானில் குமரேசா மிண்டியே
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு

#427
ஆவதனை முன் மால் அறிந்து செய்தார் ஏன் இலங்கைக்
கோ அதனைத் தேரான் குமரேசா மேவும்
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறிகல்லாதவர்

#428
சூதாட அஞ்சாமல் சொன்னான் தருமர் அஞ்சிக்
கோது என்றார் என்னே குமரேசா யாதேனும்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

#429
எள்ளாமல் காந்தன் எதிர் அறிந்து காத்தான் பின்
கொள்ளவில்லை நோய் ஏன் குமரேசா உள்ளி
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்

#430
சொல்லிய சீர் எல்லாம் துருவன் உற்றான் உத்தமன் ஏன்
கொல்ல இழிந்தான் குமரேசா நல்ல
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என் உடையரேனும் இலர்

@44 அதிகாரம் 44 – குற்றங்கடிதல்

#431
வென்றி நெடுஞ்செழியன் வெம் பிழைகள் இன்றி ஏன்
குன்றம் என நின்றான் குமரேசா என்றும்
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

#432
ஏனோ இளவெளிமான் ஈதல் இன்றி ஏதமுற்றான்
கோனாய் இருந்தும் குமரேசா ஈன
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு

#433
பண்டு சிறு குற்றம் உறப் பார்த்தாள் மருதி துயர்
கொண்டு நொந்தாள் என்னே குமரேசா கண்ட
தினைத் துணையாம் குற்றம் வரினும் பனைத் துணையாக்
கொள்வர் பழி நாணுவார்

#434
அன்று ஏன் வருணன் அயன் முன் செய் குற்றத்தால்
குன்றி இழிந்தான் குமரேசா என்றுமே
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை

#435
கண்டு திரிபுரர் முன் காவாமையால் அழிவு
கொண்டு நொந்தார் என்னே குமரேசா மண்டி
வரும் முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போலக் கெடும்

#436
கற்ற வழுதி கதவு தொட்ட கையை ஏன்
குற்றம் என நீத்தான் குமரேசா உற்று அறிந்து
தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு

#437
கூடி நின்ற மூவன் குலச் செல்வம் பின் குலைந்து
கோடி நைந்தது என்னே குமரேசா நாடிச்
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்

#438
உற்ற சுவேதன் உலோபம் ஒன்றால் ஏன் இழிந்து
குற்றமுற்று நொந்தான் குமரேசா முற்றிய
பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப்படுவது ஒன்று அன்று

#439
வென்றிச் சடாசுரன் முன் வெம்பிப் பழி நயந்தான்
குன்றினான் பின்பு ஏன் குமரேசா கன்றி
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

#440
அன்று ஏனோ காதல் அயல் அறியாது உய்த்து வன்னி
குன்றாமல் துய்த்தான் குமரேசா என்றுமே
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்

@45 அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்

#441
மண்டு புகழ் அத்திபதி மாண் பிரமதன்மரை ஏன்
கொண்டு உவந்தான் கேண்மை குமரேசா கண்ட
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல்

#442
கண்டான் உயர் சோமகாந்தன் பிருகுவை ஏன்
கொண்டான் பின் பேணிக் குமரேசா தண்டாமல்
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

#443
திண் தோள் உயர் தக்கன் தேர்ந்து ஏனோ முற்கலரைக்
கொண்டான் தமராக் குமரேசா கண்ட
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

#444
நாடி விசயனும் நந்தனும் நல்லாரைக்
கூடி ஏன் நின்றார் குமரேசா தேடியே
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை

#445
வெள்ளி வெறுத்தும் விடப்பன்மன் ஏன் சூழ்ந்து
கொள்ளல் உற்றான் கேண்மை குமரேசா உள்ள எல்லாம்
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்துகொளல்

#446
செற்றார் திரண்டிருந்தும் செய்யவில்லை பாண்டியன்-பால்
குற்றம் ஒன்றும் என்னே குமரேசா முற்று அறிந்த
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்

#447
அன்று இடித்தார்-தம்மை உவந்து ஆதரித்த கிள்ளி நலம்
குன்றாதது என்னே குமரேசா நன்றா
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர்

#448
கோது_இல் அறிவோரைக் கொள்ளாக் கயமுகன் ஏன்
கோதுகொண்டு மாண்டான் குமரேசா ஏதும்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

#449
சார்பு இல்லாச் சுந்தன் உயர் தன் நிலையை ஏன் இழந்து
கூர் துயரம் கொண்டான் குமரேசா நேரும்
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை

#450
கற்றறிந்த நல் குருவைக் கைவிட்டான் இந்திரன் ஏன்
குற்றமுற்றான் என்னே குமரேசா சுற்றி நின்று
பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கைவிடல்

@46 அதிகாரம் – 46 சிற்றினம் சேராமை

#451
வீடணன் ஏன் அஞ்சி விலகினான் சிற்றினத்தைக்
கூடினன் ஏன் முன்னோன் குமரேசா மூடமுறு
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்துவிடும்

#452
கோடாத கைகேசி கோடினளே கூனியுடன்
கூடியதால் என்னே குமரேசா கூடும்
நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு

#453
உற்ற இனத்தால் உயர் தருமசாமி தன்
குற்றம் மிக உற்றான் குமரேசா பெற்ற
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல்

#454
தோடகரும் பாணினியும் சூழ்ந்த இனத்தால் அறிவு
கூடினார் என்னே குமரேசா நாடும்
மனத்து உளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு

#455
சார்ந்த இனத்தால் சசிவன்னன் தூய்மையுற்றுக்
கூர்ந்தான் புகழ் ஏன் குமரேசா ஆர்ந்த
மனம் தூய்மை செய் வினை தூய்மை இரண்டும்
இனம் தூய்மை தூவா வரும்

#456
வெற்றி வசுதேவர் மேலான நல் மகவும்
கொற்றமும் ஏன் பெற்றார் குமரேசா உற்ற
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
இல்லை நன்று ஆகா வினை

#457
திண் தோள் அனுமான் செயகீர்த்திகேது இனத்தால்
கொண்டார் புகழ் ஏன் குமரேசா கண்ட
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லாப் புகழும் தரும்

#458
தேசு ஆர் உடையவரும் தேடி இன நலத்தைக்
கூசாது ஏன் கொண்டார் குமரேசா மாசில்
மன நலம் நன்கு உடையராயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து

#459
உள்ள நலம் உற்றிருந்தும் உத்தவர் ஏன் நல் இனத்தான்
கொள்ள நின்றார் இன்பம் குமரேசா துள்ளும்
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து

#460
பண்டு அல்லற்பட்ட கூன்பாண்டியன் பின் நல் இனத்தால்
கொண்டான் ஏன் இன்பம் குமரேசா உண்டாகும்
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல்

@47 அதிகாரம் 47 – தெரிந்து செயல் வகை

#461
உற்ற வரவுடனே ஊதியமும் சூழ்ந்து பிட்டங்
கொற்றன் ஏன் செய்தான் குமரேசா முற்றா
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

#462
சார்ந்து எண்ணிச் செய்த தசரதனும் ஆசுவனும்
கூர்ந்தார் சீர் என்னே குமரேசா ஓர்ந்து
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
அரும் பொருள் யாதொன்றும் இல்

#463
அன்று தமன் ஊக்காது அடங்கி நின்றான் ஏன் ஊக்கிக்
குன்றினான் மந்தன் குமரேசா ஒன்றிவரும்
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
ஊக்கார் அறிவுடையார்

#464
பண்டு தெளியாமல் பாண்டியன் ஏன் வேடனிடம்
கொண்டிலன் ஓர் தண்டம் குமரேசா கண்டு
தெளிவு இலதனை தொடங்கார் இளிவு என்னும்
ஏதப்பாடு அஞ்சுபவர்

#465
வாலி திறம் எண்ணாமல் வந்து ஏனோ துந்துபி தன்
கோலம் இழந்தான் குமரேசா சால
வகை அறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பது ஓர் ஆறு

#466
நின்று செய்து கெட்டான் நிருகன் சமதங்கி
குன்றினர் செய்யாது ஏன் குமரேசா துன்றியே
செய் தக்க அல்ல செயக் கெடும் செய் தக்க
செய்யாமையானும் கெடும்

#467
நின்றான் சிரகாரி நேர்ந்து துந்து மாது எண்ணார்
குன்றினார் என்னே குமரேசா என்றுமே
எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு

#468
பண்டு பலர் நின்று பார்த்தும் மதன் முயன்று
கொண்டான் அழிவு ஏன் குமரேசா கண்டு நேர்
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப்படும்

#469
நன்றே தனதன் நயந்து செய்தான் ஏன் நவையாய்க்
குன்றி உளைந்தான் குமரேசா என்றுமே
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக்கடை

#470
எள்ளலுறாமல் இயற்று என்று சாத்தகி ஏன்
கொள்ள மொழிந்தான் குமரேசா உள்ளவர்கள்
எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு

@48 அதிகாரம் 48 – வலியறிதல்

#471
அன்று இலங்கைக்கோன் வலியை ஆய்ந்து அனுமன் இன்று போர்
குன்றும் என்று ஏன் நின்றான் குமரேசா என்றும்
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கிச் செயல்

#472
சென்றான் இராமனுடன் சீர் அறிந்தான் பானுமகன்
குன்றாது ஏன் வென்றான் குமரேசா நன்றாக
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

#473
திண் தோள் சலந்தரனும் தென் இலங்கைமன்னவனும்
கொண்டு இடை ஏன் வீழ்ந்தார் குமரேசா கொண்ட
உடைத் தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்-கண் முரிந்தார் பலர்

#474
வென்றி வலன் தனை வியந்து எழுந்தான் ஏன் உடனே
குன்றி அழிந்தான் குமரேசா என்றும்
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்

#475
பூசுரர் பெய் கை நீர் போர் வலம் சேர் மந்தேகர்
கூசி நின்றார் என்னே குமரேசா தூசு அனைய
பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அப் பண்டம்
சால மிகுத்துப் பெயின்

#476
நன்று அறிந்த சம்பாதி நக்கீரர் ஊக்கி அன்று
குன்றினார் என்னே குமரேசா சென்று
நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும்

#477
ஏனோ அளவு அறிந்து ஈந்தான் இளஞ்சென்னி
கோனாய் இருந்தும் குமரேசா தானாக
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி

#478
கொண்ட வருவாய் குறுகியும் பூங்குன்றனார்
கொண்டிருந்தார் இன்பு ஏன் குமரேசா மண்டி மேல்
ஆகு_ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை
போகு_ஆறு அகலாக்கடை

#479
குன்றாத் தனபாலன் கோவலன் வாழ்வும் பின்
குன்றி நின்றது என்னே குமரேசா நின்ற
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
இல்லாகித் தோன்றாக் கெடும்

#480
வென்றி விரோசனனும் மெய்மன்னும் ஒப்புரவால்
குன்றினர் வாழ்வு என்னே குமரேசா நின்று
உள வரை தூக்காத ஒப்புரவாண்மை
வள வரை வல்லைக் கெடும்

@49 அதிகாரம் 49 – காலமறிதல்

#481
திண் தோள் செழியனும் ஏன் பொழுது அறிந்து
கொண்டு சென்றான் போர் மேல் குமரேசா கண்ட
பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

#482
பண்டு பருவத்தைப் பார்த்துக் களப்பலி முன்
கொண்டான் ஏன் கண்ணன் குமரேசா கொண்ட
பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு

#483
சென்று அரிய தெவ் எயிலைச் செம்பியன் வென்று முன்
குன்றாது ஏன் நின்றான் குமரேசா என்றும்
அரு வினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

#484
மானம் மிகு சாலிவாகனன் ஏன் காலம் எண்ணிக்
கோனவனாய் நின்றான் குமரேசா தானம் உயர்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்

#485
காலம் கருதி ஏன் காத்திருந்தான் சீவகன் தன்
கோலம் கரந்து குமரேசா ஏலுகின்ற
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருதுபவர்

#486
திண் தோள் நெடுமான் திறன் மிகுந்தும் ஏன் ஒடுக்கம்
கொண்டிருந்தான் முன் நாள் குமரேசா மண்டி நின்ற
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து

#487
பண்டு மனைவி துயர் பார்த்திருந்தும் பாண்டவர் ஏன்
கொண்டிலர் கோபம் குமரேசா கண்டவுடன்
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள் வேர்ப்பர் ஒள்ளியவர்

#488
வென்றி உயர் இந்திரனும் வெய்ய கவசரை முன்
குன்றி நின்று ஏன் வென்றான் குமரேசா கன்றும்
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை

#489
குன்றினான் சேடன் எனக் கூர்ந்து அறிந்த வாயு அன்று ஏன்
குன்றாமல் வென்றான் குமரேசா என்றுமே
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அ நிலையே
செய்தற்கு அரிய செயல்

#490
கீசகன் கிட்டியதும் கெட்டியாய் வீமனுடன்
கூசாது ஏன் கொன்றான் குமரேசா பேசாமல்
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து

@50 அதிகாரம் 50 – இடனறிதல்

#491
அன்று தொடங்காது அடங்கி நின்றான் காரி பின்பு
குன்றாது ஏன் வென்றான் குமரேசா என்றும்
தொடங்கற்க எவ் வினையும் எள்ளற்க முற்றும்
இடம் கண்ட பின் அல்லது

#492
திண் தோள் வலி மிகுந்தும் செய்ய அரண் சேர்ந்து உயர்வு
கொண்டான் மது ஏன் குமரேசா கொண்ட
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்
ஆக்கம் பலவும் தரும்

#493
ஆற்றாச் சிகண்டியும் முன் ஆற்றி வென்றான் வீடுமன் நேர்
கூற்று என நின்று என்னே குமரேசா ஊற்றமுடன்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
போற்றார்-கண் போற்றிச் செயின்

#494
சென்று நின்று சத்துருக்கன் செய்தான் இலவணன் ஏன்
குன்றி அழிந்தான் குமரேசா ஒன்றியே
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

#495
கண்ட முதலை கசேந்திரனை நீள் புனலுள்
கொண்டு வென்றது என்னே குமரேசா மண்டு
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்
நீங்கின் அதனைப் பிற

#496
வானுலகை வென்று வந்தும் மண்ணுலகில் கட்டுண்டான்
கோன் இலங்கைவேந்தன் குமரேசா ஆன
கடல் ஓடா கால் வல் நெடும் தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து

#497
ஓர் துணையும் இல்லாமல் ஒன்னலரை வென்று அசன் ஏன்
கூர் புகழ் கைக் கொண்டான் குமரேசா சீர் அமைந்த
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்

#498
சென்றான் சராசரன் சேனையுடன் பின்பு ஏனோ
குன்றி அழிந்தான் குமரேசா என்றும்
சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான்
ஊக்கம் அழிந்துவிடும்

#499
நின்ற விராடன் நிலத்தில் சுயோதனன் போய்க்
குன்றி ஏன் மீண்டான் குமரேசா ஒன்றும்
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறை நிலத்தோடு ஒட்டல் அரிது

#500
கண்டு உடைந்த உத்தரனும் காவலர் மேல் பாய்ந்து அணிகள்
கொண்டுவந்தான் என்னே குமரேசா மண்டி நின்ற
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு

@51 அதிகாரம் 51 – தெரிந்து தெளிதல்

#501
குன்றா நிமித்திகனைக் கொற்றவன் ஏன் கூர்ந்து அறிந்து
குன்றாமல் தேர்ந்தான் குமரேசா நன்றாம்
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும்

#502
பண்டு கபிலரை நேர் பார்த்தவுடன் பாரி ஏன்
கொண்டு தெளிந்தான் குமரேசா கொண்ட
குடிப் பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப் பரியும்
நாண் உடையான்-கட்டே தெளிவு

#503
கற்று உயர்ந்த வேதாவின்-கண்ணும் ஒரு வெண்மை கண்டு
குற்றம் என்றாய் என்னே குமரேசா முற்றும்
அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு

#504
குற்றம் சேர் கள் உண் குரங்கு அரசை ஏன் கொண்டான்
கொற்ற இராமன் குமரேசா உற்ற
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்

#505
சார்ந்த தருமகுத்தன் சானகன் ஏன் தம் செயலால்
கூர்ந்து அறிய நின்றார் குமரேசா ஆர்ந்த
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

#506
சென்று நின்ற நீலியை முன் தேர்ந்தார் பழி அடைந்து
குன்றி த் பின்பு ஏன் குமரேசா ஒன்றிய கேள்
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர்
பற்று இலர் நாணார் பழி

#507
வென்றி மிகு சகன் ஏன் விந்தமனைத் தேர்ந்ததனால்
குன்றி இழிந்தான் குமரேசா ஒன்றி நின்ற
காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்

#508
கேதமனைத் தேர்ந்ததனால் கேமதரன் பின்பு இழிந்து
கோது அடைந்தான் என்னே குமரேசா ஆதலினால்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

#509
தேர்ந்த பிரமதத்தன் சேர்ந்தவர் பின் செய் வினையைக்
கூர்ந்து உணர்ந்தான் என்னே குமரேசா சார்ந்து என்றும்
தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
தேறுக தேறும் பொருள்

#510
அன்று அசுவத்தாமன் மேல் ஐயுற்ற வேந்தன் ஏன்
குன்றி இழிந்தான் குமரேசா நன்றாகத்
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

@52 அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்

#511
அன்று அரிசிலாரை அமைச்சாக ஏன் அரசன்
குன்றாமல் கொண்டான் குமரேசா நன்றாக
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
தன்மையான் ஆளப்படும்

#512
தெள்ளு புகழ் அக்குரூரன் தேர்ந்து ஏன் பெரு வளங்கள்
கொள்ள வினை செய்தான் குமரேசா உள்ளி நின்று
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை

#513
மோசியரை ஆய் முதலோர் முற்றும் தெளிந்து ஏனோ
கூசாமல் கொண்டார் குமரேசா மாசு அகன்ற
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்
நன்கு உடையான்-கட்டே தெளிவு

#514
கற்று உயர்ந்த சந்திரனைக் கட்டியனைத் தேர்ந்து வைத்தும்
குற்றம் ஏன் செய்தார் குமரேசா முற்றும்
எனை வகையான் தேறியக்-கண்ணும் வினை வகையான்
வேறு ஆகும் மாந்தர் பலர்

#515
பெண்டிரை ஏன் ஏவிப் பெருமுனியை மன்னவன் முன்
கொண்டுவரச் செய்தான் குமரேசா மண்டி
அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று

#516
விண் தலத்து வேந்தால் வினை நாடிக் கண்ணன் ஏன்
குண்டலத்தைக் கொண்டான் குமரேசா மண்டலத்தில்
செய்வானை நாடி வினை நாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்

#517
வெற்றி உயர் அங்கதனை வேந்தனிடம் செல் என்று
கொற்றவன் ஏன் விட்டான் குமரேசா உற்ற
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்-கண் விடல்

#518
அன்று சுபன் ஏகன் அரிமுகர்க்கு ஏன் ஆளுரிமை
குன்றாமல் செய்தார் குமரேசா என்றும்
வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை
அதற்கு உரியன் ஆகச் செயல்

#519
நின்ற திரு நீங்கியதே நீடு குபன் கேண்மை அன்று
குன்றியதால் என்னே குமரேசா என்றும்
வினைக்-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
நினைப்பானை நீங்கும் திரு

#520
வாடாமல் நாடி இக்குவாகு நிற்ப ஞாலம் எல்லாம்
கோடாதது என்னே குமரேசா வீடாமல்
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
கோடாமை கோடாது உலகு

@53 அதிகாரம் 53 – சுற்றம் தழால்

#521
பற்று அற்ற காலத்தும் பாண்டவர் பின் சோமகர் ஏன்
குற்றம் அறப் போனார் குமரேசா முற்றுமே
பற்று அற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார்-கண்ணே உள

#522
திண் தோள் இராசவர்மன் சேர்ந்த சுற்றத்தால் உயர் சீர்
கொண்டான் முன் என்னே குமரேசா கொண்ட
விருப்பு அறாச் சுற்றம் இயையின் அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும்

#523
சுற்றம் கலவாச் சுயோதனனும் சிம்மகனும்
குற்றமுற்றார் என்னே குமரேசா பற்றி
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளாக்
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று

#524
சுற்றம் எல்லாம் வந்து தன்னைச் சூழ ஏன் மாலியவான்
கொற்றவனாய் நின்றான் குமரேசா பற்று உடைய
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான்
பெற்றத்தால் பெற்ற பயன்

#525
திண் தோள் சகரன் ஏன் சேர்ந்து பல கிளைஞர்
கொண்டு அணைய நின்றான் குமரேசா கண்டு
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப்படும்

#526
வள்ளல் வரகுணன் போல் மாநிலத்தில் ஏன் கிளையைக்
கொள்ளவில்லை மற்றோர் குமரேசா உள்ளும்
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்கு உடையார் மாநிலத்து இல்

#527
பூதன் உயர் பந்தன் புண்ணியன் முன் ஈந்து உவந்து ஏன்
கோது அறு சீர் கொண்டார் குமரேசா யாதெனினும்
காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள

#528
பூதவழுதி புகழ் நோக்கி ஏன் பலரும்
கோது அற முன் சூழ்ந்தார் குமரேசா ஏதும்
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர்

#529
திண் தோள் குலேசனை முன் தீர்ந்து அகன்றான் பின்பு அன்பு
கொண்டு வந்தான் என்னே குமரேசா பண்டு
தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்

#530
கண்டிருந்தும் வீடணன் சேர் காரணத்தை ஏன் எண்ணிக்
கொண்டான் இராமன் குமரேசா அண்டி
உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்து இருந்து எண்ணிக் கொளல்

@54 அதிகாரம் 54 – பொச்சாமை

#531
கண்ட களிப்பால் கதிரோனும் இந்திரனும்
கொண்டார் முன் தீது ஏன் குமரேசா மண்டி
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு

#532
வென்றி இளன் நீகன் வேய்ந்த புகழ் பொச்சாப்பால்
குன்றி நின்றது என்னே குமரேசா என்றுமே
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்சம் நிரப்புக் கொன்று ஆங்கு

#533
சூடிய சீர்த் துய்மன் துடியந்தன் பொச்சாப்பால்
கோடினர் சீர் என்னே குமரேசா கூடி நின்று
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு

#534
திண் தோள் விரோசனன் சீர் எல்லாம் ஏன் இழந்தான்
கொண்ட ஒரு சோர்வால் குமரேசா உண்டான
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு

#535
என்னே முன் காவாது இழுக்கிக் கயன் சூடன்
கொன்னே பின் நொந்தார் குமரேசா உன்னியே
முன்னுறக் காவாது இழுக்கியான் தன் பிழை
பின் ஊறு இரங்கிவிடும்

#536
ஏதும் இழுக்காமல் எண்ணி ஏன் கேகயன் முன்
கோது இன்றி நின்றான் குமரேசா தீது_இல்
இழுக்காமை யார்-மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃது ஒப்பது இல்

#537
அன்று அரியது என்னாமல் ஆர்வமுடன் சேகரன் ஏன்
குன்றாமல் செய்தான் குமரேசா ஒன்றும்
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின்

#538
வில் விசயன் போர் வெறுத்து மீளலுற்றான் கண்ணன் ஏன்
கொல் என்று சொன்னான் குமரேசா நல்லோர்
புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

#539
உள்ளி இரணியன் உய்ந்து அகன்றான் பின்பு துன்பம்
கொள்ளவில்லை என்னே குமரேசா துள்ளி
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

#540
உள்ளிய வான் கங்கையையே உள்ளிப் பகீரதன் முன்
கொள்ள நின்றான் என்னே குமரேசா தள்ளாமல்
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான்
உள்ளியது உள்ளப்பெறின்

@55 அதிகாரம் 55 – செங்கோன்மை

#541
காதல் புதல்வர் எனக் கண்ணோடாது ஏன் ககந்தன்
கோது அற முன் கொன்றான் குமரேசா தீது அறவே
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார்-மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை

#542
மண்டு புகழ் அய்யோத்தி மாண் குடிகள் மன்னன் பின்
கொண்டு எழுந்து ஏன் போன குமரேசா தண்டாத
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி

#543
வேதம் உயர் நீதி விரதன் கோல் கொண்ட பின்பு ஏன்
கோது அற முன் நின்ற குமரேசா தீது அறு சீர்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்

#544
சேரல் இரும்பொறையைச் சேர்ந்து அன்று உலகம் அன்பு
கூர நின்றது என்னே குமரேசா சாரும்
குடி தழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடி தழீஇ நிற்கும் உலகு

#545
வானும் நிலனும் வளம் சுரந்த வண் கரிகால்
கோன் இருந்த நாட்டு ஏன் குமரேசா ஆன
இயல்பு உளி கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு

#546
வேல் கொண்ட யாரையும் வென்றான் இடபன் செங்
கோல் கொண்டதால் ஏன் குமரேசா மால்கொண்ட
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல் அதூஉம் கோடாது எனின்

#547
ஆவின் இளங்கன்றும் அமைச்சும் உயிர்த்தெழுந்த
கோமுறையால் என்னே குமரேசா மேவும்
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
முறை காக்கும் முட்டாச் செயின்

#548
திண் தோள் சுதயனன் முன் தேர்ந்து முறைசெய்யாமல்
கொண்டான் கேடு என்னே குமரேசா தண்டாமல்
எண் பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண் பதத்தான் தானே கெடும்

#549
உற்ற குடிகளை ஓம்பி ஏன் வச்சந்தன்
குற்றம் கடிந்தான் குமரேசா முற்றும்
குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்
வடு அன்று வேந்தன் தொழில்

#550
கொற்ற அரக்கரை முன் கொன்று அழித்தும் சீராமன்
குற்றம் அற்றது என்னே குமரேசா முற்றும்
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனொடு நேர்

@56 அதிகாரம் 56 – கொடுங்கோன்மை

#551
கொற்ற மகிடன் கொடியன் என ஏன் உலகோர்
குற்றமுறச் சொன்னார் குமரேசா உற்ற
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து

#552
வென்றி மிகு சம்பரன் வேண்டிய போது ஏன் உலகோர்
குன்றி மிக நொந்தார் குமரேசா கொன்று இயலும்
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு

#553
நேடி முறைசெய்யா நிருகன் உயர் நாடு இழந்து
கூடினன் கேடு என்னே குமரேசா கோடாமல்
நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்-தொறும் நாடு கெடும்

#554
அன்று ஏன் அவிச்சித்து அரசு இழந்து தன் செயலால்
குன்றி இழிந்தான் குமரேசா நின்றிருந்த
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடிச்
சூழாது செய்யும் அரசு

#555
நீலி துயரால் நெடும் செல்வம் தேய்ந்து வசு
கோல் இழந்தான் என்னே குமரேசா ஞாலம் மிசை
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

#556
தென்னவன் முன் செங்கோலால் சீருற்றான் பின் ஏனோ
கொன்னே இழிந்தான் குமரேசா மன்னிய சீர்
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி

#557
அன்று ஏனோ ஏனன் அளியின்மையால் உலகோர்
குன்றி உளைந்தார் குமரேசா என்றும்
துளியின்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு

#558
உள்ளவரே துன்புற்று உளைந்தார் நரகன் கோல்
கொள்ள நின்ற போது ஏன் குமரேசா எள்ளலுறும்
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல் கீழ்ப் படின்

#559
கோடாத பூடணன் முன் கோடியதால் வான் பெயல் பின்
கோடி நின்றது என்னே குமரேசா கூடும்
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
ஒல்லாது வானம் பெயல்

#560
வேதியர் ஏன் நூல் மறந்தார் வேந்து ஒருவன் காவாத
கோதுடைமையான் முன் குமரேசா தீது இலா
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்

@57 அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை

#561
நாடிப் புருகுச்சன் நாகர் மேல் செல்லாது ஏன்
கூடி ஒறுத்தான் குமரேசா நேடியே
தக்க ஆங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து

#562
திண் தோள் வழுதி சினந்து எழுந்தும் ஏன் இரக்கம்
கொண்டே புரிந்தான் குமரேசா மண்டிக்
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டுபவர்

#563
குன்றாமல் நன்னன் கொடுமை செய்தான் ஏன் உடனே
குன்றி அழிந்தான் குமரேசா கன்றி
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

#564
பொன்றாமல் தந்தை நிற்பப் பொல்லாச் சுயோதனன் ஏன்
குன்றி முன்னே மாய்ந்தான் குமரேசா என்றும்
இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச் சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லைக் கெடும்

#565
பெற்ற அமணன் பெரும் செல்வம் பின் இழிந்து
குற்றமுற்றது என்னே குமரேசா உற்ற
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்
பேஎய் கண்டு அன்னது உடைத்து

#566
வென்றிச் சுதாசநன் வெம் செயலால் மன் திருவும்
குன்றி ஏன் வீந்தான் குமரேசா என்றும்
கடும் சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும்

#567
அன்று ஏன் கொடும் தண்டம் ஆற்றி நெடுங்கிள்ளி
குன்றினான் ஆற்றல் குமரேசா என்றும்
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம்

#568
என்னே சததன்வா எண்ணாமல் செய்து பின்
கொன்னே இழிந்தான் குமரேசா துன்னும்
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றிச்
சீறின் சிறுகும் திரு

#569
தீது மிகு தாரகன் முன் தேர்ந்து சிறை செய்யாது ஏன்
கோது மிக மாண்டான் குமரேசா மோதிச்
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்

#570
பாரம் பொறேன் என்று பார் ஏனோ கஞ்சன் உயர்
கோரம் புகன்றாள் குமரேசா ஆரவே
கல்லார்ப் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
இல்லை நிலக்குப் பொறை

@58 அதிகாரம் 58 – கண்ணோட்டம்

#571
திண் தோள் இரும்பொறை ஏன் சீறாமல் கண்ணோட்டம்
கொண்டிருந்தான் பண்டு குமரேசா கண்டு உணரும்
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
உண்மையான் உண்டு இவ் உலகு

#572
வென்றி உதயன் அன்று மேவி நின்றான் கண்ணோட்டம்
குன்றாமல் என்னே குமரேசா என்றுமே
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
உண்மை நிலைக்குப் பொறை

#573
தண்டாமல் தந்தர் தருமர் ஏன் கண்டவுடன்
கொண்டார் கண்ணோட்டம் குமரேசா உண்டான
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
கண்ணோட்டம் இல்லாத-கண்

#574
நன்றான கண் இருந்தும் நாடாமல் சூர் மதனன்
கொன்றார் முன் என்னே குமரேசா என்றும்
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்

#575
கண்டவுடன் பாரி ஏன் கண்ணோடி முல்லைக்குக்
கொண்ட தேர் விட்டான் குமரேசா உண்டான
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
புண் என்று உணரப்படும்

#576
அன்று அறைந்தார் மற்றோர் அரதத்தர் கண்ணோடிக்
குன்றாது ஏன் நின்றார் குமரேசா என்றுமே
மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணோடு
இயைந்து கண்ணோடாதவர்

#577
கண்டான் அமர் முகத்தைக் கண்ணோட்டம் ஏன் மிகவும்
கொண்டான் அசோகன் குமரேசா உண்டாகும்
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண் உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்

#578
சென்று சிதையாமல் சீவகன் ஏன் கண்ணோட்டம்
குன்றாமல் செய்தான் குமரேசா நின்ற
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இவ் உலகு

#579
மண்டி வைத கண்ணரையும் மாவளத்தான் கண்ணோடிக்
கொண்டு ஏன் பொறுத்தான் குமரேசா தண்டி
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை

#580
அன்று பெய்த நஞ்சை அரனாரும் அங்கதனும்
குன்றாது ஏன் உண்டார் குமரேசா நின்று
பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்

@59 அதிகாரம் 59 – ஒற்றாடல்

#581
ஒற்றரை முன் கண்ணா உவந்து ஏன் விசயதரன்
கொற்றமுறக் கொண்டான் குமரேசா உற்று அறியும்
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
தெற்று என்க மன்னவன் கண்

#582
ஏனோ உலகர் இயல்பு எல்லாம் அறிந்து வந்தான்
கோனாம் நன்மாறன் குமரேசா ஆனாமல்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல் அறிதல் வேந்தன் தொழில்

#583
ஒற்றி அறியா உயர் கலிங்கன் பின்பு ஏனோ
கொற்றம் இன்றி நொந்தான் குமரேசா சுற்றி வரும்
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொளக் கிடந்தது இல்

#584
ஓதி உயர் வீமன் உய்த்த ஒற்றன் ஏன் மற்றவரைக்
கோது அற முன் ஆய்ந்தான் குமரேசா நீதி
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று

#585
உற்ற உருவோடு உகாது ஏன் சுக சாரர்
கொற்றமுற்று நின்றார் குமரேசா முற்றும்
கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று

#586
அன்று ஏன் பருணன் அனுமன் மறைந்து ஆய்ந்து
குன்றாமல் சென்றார் குமரேசா நின்று
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என் செயினும் சோர்வு இலது ஒற்று

#587
வண்டு உருவாய் வந்து மறைந்து அறிந்தான் வீடணன் பின்
கொண்டான் தெளிவு ஏன் குமரேசா அண்டி
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று

#588
தாதியை ஏன் ஒற்றாத் தமயந்தி மற்றும் உய்த்தாள்
கோது_இல் நளன்-பால் குமரேசா காதலால்
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்

#589
ஒற்றரை ஒற்றி உதயன் சுயோதனன் ஏன்
குற்றம் அறத் தேர்ந்தார் குமரேசா பற்றிய
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும்

#590
ஒற்றி வந்த ஒற்றருக்கு ஏன் ஓர் சிறப்பும் செய்யவில்லை
கொற்ற நெடும் சேரன் குமரேசா உற்ற
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை

@60 அதிகாரம் 60 – ஊக்கமுடைமை

#591
நன்றாம் பொருளினும் ஏன் நார்முடியன் ஊக்கத்தைக்
குன்றாமல் கொண்டான் குமரேசா என்றும்
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார்
உடையது உடையரோ மற்று

#592
உள்ளம் உடைய உறுதியால் மங்கைமன்னன்
கொள்ள நின்றான் சீர் ஏன் குமரேசா தள்ளரிய
உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை
நில்லாது நீங்கிவிடும்

#593
ஆக்கம் இழந்தும் ஏன் ஆரியன் சோர்வு இன்றிக்
கோக்குலச் சீர் கொண்டான் குமரேசா நோக்கி நின்று
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார்

#594
சென்ற செல்வம் எல்லாம் பின் சேர்ந்த பனந்தன்-பால்
குன்றாமல் என்னே குமரேசா நன்றாகும்
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா
ஊக்கம் உடையான் உழை

#595
திண் தோள் உயர் ஆதன் தெய்வீகன் உள்ளத்தால்
கொண்டார் உயர்வு ஏன் குமரேசா மண்டி நின்ற
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு

#596
தெள்ளு வசுமன் திரிசங்கு உயர்வு உள்ளிக்
கொள்ள நின்றார் என்னே குமரேசா எள்ளாமல்
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

#597
வென்றி உயர் உக்கிரமன் விக்கிரமன் வெவ் இடரில்
குன்றாது ஏன் நின்றார் குமரேசா ஒன்றும்
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
பட்டுப் பாடு ஊன்றும் களிறு

#598
உள்ளம் உயர் நந்திமான் ஓரி போல் ஈதல் இன்பு ஏன்
கொள்ளவில்லை மற்றோர் குமரேசா தள்ளாத
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு

#599
பத்துத்தலையானும் பாய்ந்து ஏன் சடாயு வந்து
கொத்தப் பயந்தான் குமரேசா மெத்தப்
பரியது கூர் கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்

#600
உள்ள உரத்தால் உதயணன் சாணக்கன்
கொள்ள நின்றார் சீர் ஏன் குமரேசா தள்ளா
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார்
மரம் மக்கள் ஆதலே வேறு

@61 அதிகாரம் 61 – மடியின்மை

#601
அன்று மடி ஊர்ந்த ஆத்திரேயன் குடி பின்
குன்றி நின்றது என்னே குமரேசா நன்றாம்
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
மாசு ஊர மாய்ந்து கெடும்

#602
ஏனோ தருமன் சேய் என்றும் மடி இன்றிக்
கோனாய் உயர்ந்தான் குமரேசா ஈன
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டுபவர்

#603
கன்று மடி கொண்ட கவுற்சனன் ஏன் தன் குடி முன்
குன்ற மடிந்தான் குமரேசா என்றும்
மடி மடிக் கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து

#604
அன்று புகழ்ச் சத்தியாதனனும் ஏன் மடிந்து
குன்றி இழிந்தான் குமரேசா நின்ற
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இலவர்க்கு

#605
கேடுற்றான் முன்னம் கிரீவன் மடி மறவி
கூடியதால் என்னே குமரேசா கோடும்
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காமக் கலன்

#606
தண் தார் அசமஞ்சன் சத்திரபந்து ஏன் மடியால்
கொண்டார் மிடியைக் குமரேசா கண்ட
படி உடையார் பற்று அமைந்தக்-கண்ணும் மடி உடையார்
மாண் பயன் எய்தல் அரிது

#607
எள்ளி இடித்துரைத்தார் ஏவலரும் கும்பகன்னன்
கொள்ளும் மடி கண்டு ஏன் குமரேசா உள்ளே
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
மாண்ட உஞற்று இலவர்

#608
வென்றி அதிகனும் வெம் மடி கொண்டு ஒன்னாரால்
குன்றினான் என்னே குமரேசா கன்றும்
மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும்

#609
உற்ற குடியை உயர் தருமகுத்தன் ஏன்
குற்றம் அறக் காத்தான் குமரேசா பற்றிக்
குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
மடி ஆண்மை மாற்றக் கெடும்

#610
வென்றி மிகு கூற்றுவனார் மேதினி எல்லாம் ஒருங்கே
குன்றாது ஏன் கொண்டார் குமரேசா என்றும்
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

@62 அதிகாரம் 62 – ஆள்வினையுடைமை

#611
கண்டு அரிது என்று எண்ணாமல் கடலையும் முன் நின்று நளன்
கொண்டு அடைந்தான் என்னே குமரேசா கண்டே
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

#612
மண்டு புகழ் ஆட்கொண்டான் மாறாமல் ஏன் வினையைக்
கொண்டு புரிந்தான் குமரேசா கொண்ட
வினைக்-கண் வினை கெடல் ஓம்பல் வினைக் குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

#613
பண்டு தாள் ஆற்றி நின்ற பத்திரன் ஏன் வேளாண்மை
கொண்டு சிறந்தான் குமரேசா தண்டாத
தாளாண்மை என்னும் தகைமைக்-கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு

#614
அன்று செவந்தான் நன்று ஆற்றினான் வேளாண்மை
குன்றினன் ஏன் நாகன் குமரேசா நன்றான
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாள் ஆண்மை போலக் கெடும்

#615
ஏனோ தனக்கு இன்பம் எண்ணாமல் பிச்சையப்பன்
கோனாய் முயன்றான் குமரேசா தானார
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண்

#616
தா_இல் உயர் திருவில் தந்தை மிக்கான் ஏன் இன்மை
கோவலன் முன் புக்கான் குமரேசா மேவும்
முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை
இன்மை புகுத்திவிடும்

#617
மண்டு மடிகொண்டு இழிந்தான் மாகந்தன் ஏன் முயன்று
கொண்டு உயர்ந்தான் எவ்வி குமரேசா மிண்டு
மடி உளான் மா முகடி என்ப மடி இலான்
தாள் உளான் தாமரையினாள்

#618
பண்டு திலீபன் பயனின்மை கண்டும் ஏன்
கொண்டு முயன்றான் குமரேசா மண்டும்
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து
ஆள்வினை இன்மை பழி

#619
வென்றிச் சுதரிசனன் மெய் வருந்தி ஏன் முயன்றான்
குன்றி விதி நின்றும் குமரேசா என்றுமே
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலி தரும்

#620
தண்டாத ஊழையும் முன் சாவித்திரி வென்று
கொண்டாள் ஈது என்னே குமரேசா மண்டாடும்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்
தாழாது உஞற்றுபவர்

@63 அதிகாரம் 63 – இடுக்கண் அழியாமை

#621
பண்டு இடுக்கண் பற்றப் பதையாமல் ஏன் தருமன்
கொண்டு நகைத்தான் குமரேசா மண்டி
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்

#622
வெள்ளம் என இடும்பை மேவியும் ஏன் மூலர் அன்று
கொள்ளவில்லை துன்பம் குமரேசா தள்ள அரிய
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்

#623
வள்ளல் நளன் கிள்ளிவளவன் இவர் முன் இடும்பை
கொள்ளவில்லை என்னே குமரேசா துள்ளும்
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅதவர்

#624
உற்ற இடுக்கண் எலாம் ஊறுபட மாவளவன்
கொற்றமுற்றான் என்னே குமரேசா பற்றி
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

#625
கோடி அல்லல் வந்து முனம் கூடியும் ஏன் நற்கிள்ளி
கோடாமல் நின்றான் குமரேசா கோடி
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்

#626
அற்றேம் அரசு என்று ஓர் அல்லல் இன்றி ஏன் போனான்
கொற்ற இராமன் குமரேசா முற்றுமே
அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று
ஓம்புதல் தேற்றாதவர்

#627
தள்ளா இடும்பை வந்து சார்ந்தும் கணம்புல்லர்
கொள்ளார் துன்பு என்னே குமரேசா கொள்ளும்
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

#628
அன்று இடும்பை மிக்கு அடைந்தும் அத்திமன்னன் துன்பமுற்றுக்
குன்றிலன் முன் என்னே குமரேசா என்றுமே
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
துன்பமுறுதல் இலன்

#629
மண்டி வந்து துன்பம் மருவி நின்றும் காளன் அன்று
கொண்டிலன் ஏன் துன்பம் குமரேசா கொண்டாடும்
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்

#630
மண்டிய சீர் உத்திரனார் வாய்மைமன் ஏன் இன்பம் எனக்
கொண்டிருந்தார் துன்பைக் குமரேசா உண்டான
இன்னாமை இன்பம் எனக் கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு

@64 அதிகாரம் 64 – அமைச்சு

#631
காலமொடு கருவி கண்டு குலச்சிறையார்
கோலமுறச் செய்தார் குமரேசா சாலும்
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு

#632ஈஈஈஈ
தேர்ந்து குடி காக்கும் திறலால் சுமந்திரன் சீர்
கூர்ந்து நின்றான் என்னே குமரேசா சார்ந்து நின்ற
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு

#633
திண் தோள் மதிவாணன் தேர்ந்து பிரித்தான் பின்
கொண்டான் சேர்த்து என்னே குமரேசா கண்டு
பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்
பொருத்தலும் வல்லது அமைச்சு

#634
நன்று தெரிந்து நளன்-பால் குணசீலன்
குன்றாது ஏன் சொன்னான் குமரேசா நின்று
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு

#635
பண்டு அறிந்த யூகியினைப் பட்டியை ஏன் நல் துணையாக்
கொண்டிருந்தார் மன்னர் குமரேசா கொண்ட
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை

#636
பொன்றா மதிக் கபிலர் பொன்னோன் முன் மற்றவர் சீர்
குன்றி நின்றது என்னே குமரேசா நன்றா
மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள முன் நிற்பவை

#637
நன்று அறிந்தும் மெய்க்கீர்த்தி நாடி உலகு இயற்கை
குன்றாது ஏன் செய்தான் குமரேசா நின்ற
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்

#638
தேறாமல் சச்சந்தன் சீறி வைதும் தத்தன் ஏன்
கூறினான் நீதி குமரேசா மீறி
அறி கொன்று அறியான் எனினும் உறுதி
உழை இருந்தான் கூறல் கடன்

#639
பண்டு புரோசனனைப் பாண்டவர் ஏன் பாவி என்று
கொண்டு ஒழித்தார் அஞ்சிக் குமரேசா அண்டிப்
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
எழுபது கோடி உறும்

#640
என்னே முரன் இனிதா எண்ணிவைத்தும் பின் முடியான்
கொன்னே விடுத்தான் குமரேசா முன்னே
முறைப்பட சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர்
திறப்பாடு இலாஅதவர்

@65 அதிகாரம் 65 – சொல்வன்மை

#641
பண்டு அனுமான் நாநலத்தைப் பாராட்டிச் சீராமன்
கொண்டாடினான் ஏன் குமரேசா உண்டாகும்
நாநலம் என்னும் நலன் உடைமை அ நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று

#642
என்றும் சோர்வு இன்றி இடவகன் ஏன் சொல்லினை முன்
குன்றாமல் காத்தான் குமரேசா நன்றாகும்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு

#643
வென்றிச் சிவேதன் ஏன் வேட்கையுறச் சொல்லி நலம்
குன்றாமல் ஓர்ந்தான் குமரேசா நின்று முன்னே
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

#644
தேர்ந்து வளவன் திறன் அறிந்து நாகனார்
கூர்ந்து சொன்னார் என்னே குமரேசா சார்ந்த
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின் ஊங்கு இல்

#645
எள்ள இடம் இன்றி ஏனோ தொல்காப்பியனார்
கொள்ள மொழிந்தார் குமரேசா உள்ளி நின்று
சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச் சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து

#646
அன்று எவரும் வேட்கையுற ஆந்தையார் சொல்லி நலம்
குன்றாது ஏன் ஓர்ந்தார் குமரேசா நின்றவர் முன்
வேட்பத் தாம் சொல்லிப் பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்

#647
உற்ற மொழி வல்ல உருமணனை வெல்ல வந்தும்
குற்றமுற்று ஏன் மீண்டார் குமரேசா முற்றச்
சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது

#648
வெள்ளி மொழி கேட்டவுடன் வேல் அசுரர் மேல் விரைந்து
கொள்ள நின்றார் என்னே குமரேசா துள்ளி
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்

#649
மற்றோர் பல சொன்னார் மாசற்ற ஔவை ஒன்று ஏன்
குற்றம் அறச் சொன்னார் குமரேசா பற்றிப்
பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
சில சொல்லல் தேற்றாதவர்

#650
கீரன் முதல் சிலரே கீர்த்தியுற்றார் மற்றவர் சீர்
கூரவில்லை என்னே குமரேசா ஈர
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
உணர விரித்து உரையாதார்

@66 அதிகாரம் 66 – வினைத்தூய்மை

#651
தேர்ந்த சனமித்திரன் ஏன் வினை நலத்தைக்
கூர்ந்து உணர்ந்து கொண்டான் குமரேசா சார்ந்த
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும்

#652
வள்ளல் வயந்தகன் ஏன் வல்வினையை எள்ளளவும்
கொள்ளாமல் நீத்தான் குமரேசா உள் உணர்ந்தே
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை

#653
மாசில் புகழ் உருக்குமாங்கதன் ஏன் வன்பழியைக்
கூசி ஒழித்தான் குமரேசா நீசம் என
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய் வினை
ஆஅதும் என்னுமவர்

#654
வென்றிக் குமரனார் வெம்பி நின்றும் செய்திலர் ஏன்
குன்றுவன ஒன்றும் குமரேசா என்றும்
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கு அற்ற காட்சியவர்

#655
தேன் ஆர் கனி உகுத்தான் தேர் விசயன் பின் இரங்கிக்
கூனாது ஏன் நின்றான் குமரேசா தானே பின்
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்று அன்ன செய்யாமை நன்று

#656
வாடி அன்னை நோவு கண்டும் மாண்பு உடைய சித்திரனார்
கோடவில்லை என்னே குமரேசா நாடி நின்றே
ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை

#657
மிண்டு மிடியுற்றிருந்தும் மெய்த்தலையார் மேன்மை மிகத்
கொண்டிருந்தார் என்னே குமரேசா மண்டு
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை

#658
தண்டாமல் பொற்கண்ணன் தக்கன் முடித்தாலும்
கொண்டார் துயர் ஏன் குமரேசா கண்டு
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்
முடிந்தாலும் பீழை தரும்

#659
வானும் அழ மண்ணும் அழ வந்த எல்லாம் ஏன் இலங்கைக்கோன்
அழப் பின் போன குமரேசா ஏனோர்
அழக் கொண்ட எல்லாம் அழப் போம் இழப்பினும்
பின் பயக்கும் நற்பாலவை

#660
தீது செய்து கண்டகன் முன் சேர்த்து வந்தான் பின்பு இழந்து
கோதுகொண்டான் என்னே குமரேசா ஏதும்
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று

@67 அதிகாரம் 67 – வினைத்திட்பம்

#661
தண்டாத திண்மை ஒன்றே தாங்கிக் கருடன் போய்க்
கொண்டான் அமிர்து ஏன் குமரேசா கண்ட
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்
மற்றைய எல்லாம் பிற

#662
உற்ற வினை ஊறுபட்டும் ஒல்காது ஏன் மாறன் அன்று
கொற்றமுற்று நின்றான் குமரேசா எற்றேனும்
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இவ் இரண்டின்
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள்

#663
வென்றி இராவணி செய் வேள்வியிடைத் தோன்றியதால்
குன்றி நின்றது என்னே குமரேசா என்றும்
கடைக் கொட்கச் செய் தக்கது ஆண்மை இடைக் கொட்கின்
எற்றா விழுமம் தரும்

#664
அன்று சுசன்மாவும் அக்கனும் முன் நன்று சொன்னார்
குன்றினர் பின் என்னே குமரேசா நின்றுகொண்டு
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
சொல்லிய வண்ணம் செயல்

#665
மண்டு புகழ் நாகன் உயர் மாண் வினையை ஏன் உள்ளம்
கொண்டு வந்தார் மற்றோர் குமரேசா தண்டாமல்
வீறு எய்தி மாண்டார் வினைத் திட்பம் வேந்தன்-கண்
ஊறு எய்தி உள்ளப்படும்

#666
வென்றி மிகு சிங்கமுகன் வேண்டிநின்ற எல்லாம் பின்
குன்றாது ஏன் கொண்டான் குமரேசா நன்றாக
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

#667
எள்ள நின்ற வாமனரும் இவ் உலகை ஓர் அடியுள்
கொள்ள நின்றார் என்னே குமரேசா கொள்ளும்
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

#668
நன்று என்று கண்டவுடன் நாடி அருச்சுனன் ஏன்
குன்றாமல் செய்தான் குமரேசா நின்று
கலங்காது கண்ட வினைக்-கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்

#669
கன்றிய துன்பு உற்றும் கலியனார் ஏன் துணிந்து
குன்றாது செய்தார் குமரேசா மன்றவே
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை

#670
எள்ளா நலங்கள் உற்றும் ஏனோ மகோதரனைக்
கொள்ளவில்லை மேலாக் குமரேசா உள்ளா
எனைத் திட்பம் எய்தியக்-கண்ணும் வினைத் திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு

@68 அதிகாரம் 68 – வினை செயல் வகை

#671
சார்ந்து தெளிந்த பின்பு தாழான் வருடகன் முன்
கூர்ந்து எழுந்தான் என்னே குமரேசா நேர்ந்து நின்ற
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அத் துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

#672
வென்றி மிகு தித்தன் நின்றான் வீமன் விரைந்து ஏனோ
குன்றாமல் செய்தான் குமரேசா நன்றாகத்
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

#673
உற்ற வினை ஒல்லும் என ஓர்ந்தவுடன் ஏன் மிஞிலி
கொற்றமுறச் செய்தான் குமரேசா முற்றவே
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்
செல்லும் வாய் நோக்கிச் செயல்

#674
அன்று ஏன் வினை ஒழிவை அஞ்சி வளவன் பின்
குன்றாமல் செய்தான் குமரேசா நின்ற
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையுங்கால்
தீ எச்சம் போலத் தெறும்

#675
ஆர்ந்த கருவி இடம் ஆய்ந்து மலையமான்
கூர்ந்து செய்தான் என்னே குமரேசா சார்ந்த
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணிச் செயல்

#676
முற்றிய பின் எய்து பயன் முன்னி ஏன் காளிங்கன்
கொற்றமுறச் செய்தான் குமரேசா உற்ற
முடிவும் இடையூறும் முற்றிய ஆங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

#677
பண்டு சுமாலி பணி அசுரர்கோனை உளம்
கொண்டு செய்தான் என்னே குமரேசா தண்டாமல்
செய் வினை செய்வான் செயல் முறை அவ் வினை
உள் அறிவான் உள்ளம் கொளல்

#678
தெள்ளு புகழ் வில்லவன் முன் செய் வினையால் வென்றி ஒன்றும்
கொள்ள நின்றான் என்னே குமரேசா உள்ளும்
வினையான் வினை ஆக்கிக் கோடல் நனை கவுள்
யானையால் யானை யாத்து அற்று

#679
திண் திறல் மெய்க் குண்டலன் முன் சேராரை ஏன் விரைந்து
கொண்டான் துணையாக் குமரேசா கொண்டாடி
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்

#680
பண்டு திறல் சூரன் உறப் பார்த்து அஞ்சி ஏன் பணிந்து
கொண்டான் நிருதி குமரேசா கொண்ட
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சிக் குறை பெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்த

@69 அதிகாரம் 69 – தூது

#681
மாறு_இல் உலூகனே மாண்பு அமைந்த தூதன் எனக்
கூறி உய்த்தார் என்னே குமரேசா ஊறுகின்ற
அன்புடைமை ஆன்ற குடிப் பிறத்தல் வேந்து அவாம்
பண்புடைமை தூது உரைப்பான் பண்பு

#682
தண்டாத அன்பு அமைந்த சாதகனைத் தூதன் எனக்
கொண்டாடினார் ஏன் குமரேசா உண்டான
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று

#683
கற்று வல்ல சஞ்சயன் ஏன் காவலர்-பால் தூதுசென்றான்
கொற்றம் மிகு வேல் கைக் குமரேசா உற்று உணர்ந்த
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு

#684
காதலர் பல்லோர் இருப்பக் கண்ணன் ஏன் தூதுசென்றான்
கோதை புனை வை வேல் குமரேசா நீதி
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
செறிவு உடையான் செல்க வினைக்கு

#685
மாறு_இல் புகழேந்தி மாண் பாணர் தூதுசென்று ஏன்
கூறினர் நன்று எய்தக் குமரேசா தேறித்
தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச் சொல்லி
நன்றி பயப்பது ஆம் தூது

#686
அன்று கடோற்கசன் ஏன் அஞ்சாமல் தூதுசென்று
குன்றாது உரைத்தான் குமரேசா நன்றாகக்
கற்றுக் கண் அஞ்சான் செலச் சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவது ஆம் தூது

#687
ஓர்ந்து உரைக்க வல்ல உயர் அனுமான் தூதருள்ளே
கூர்ந்து நின்றான் என்னே குமரேசா நேர்ந்த
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை

#688
தூதுசென்ற ஔவை துணிந்து ஏனோ தொண்டைமன் முன்
கோது ஒழியச் சொன்னாள் குமரேசா தீது அகன்ற
தூய்மை துணைமை துணிவுடைமை இ மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு

#689
சோரான் துணிந்து நின்றான் தூதான அங்கதன் ஏன்
கூர் ஆரும் வேல் கைக் குமரேசா நேரே
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன்

#690
ஊறு உயிர்க்கும் நேரும் என ஓர்ந்தும் விறல் வாகு
கூறினர் சீர் என்னே குமரேசா மாறி
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பது ஆம் தூது

@70 அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்தொழுகல்

#691
சார்ந்த எயிற்றியனார் தார் வேந்தன் சீர் அறிந்து ஏன்
கூர்ந்து ஒழுகி நின்றார் குமரேசா ஓர்ந்தே
அகலாது அணுகாது தீக் காய்வார் போல்க
இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்

#692
உள்ளி விழையா உயர் இசைச்சன் பின்பு அரசால்
கொள்ள நின்றான் சீர் ஏன் குமரேசா தெள்ளிய சீர்
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும்

#693
தேற்றினும் ஏன் வாலி பின்பு தேராமல் தம்பி-தனைக்
கூற்று எனவே தீர்த்தான் குமரேசா ஆற்றலொடு
போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின்
தேற்றுதல் யார்க்கும் அரிது

#694
தேர்ந்த விதி முன்னே சேர்ந்து நகைசெய்த கங்கை
கூர்ந்து இழிந்தாள் என்னே குமரேசா சார்ந்த
செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து

#695
உற்று ஒன்றும் கேளாது ஒடுங்கி மதிதயன் ஏன்
கொற்றவன்-பால் நின்றான் குமரேசா ஒற்றியே
எப்பொருளும் ஓரார் தொடரார் மற்று அப் பொருளை
விட்டக்கால் கேட்க மறை

#696
காலம் கருதி ஏன் கண்ணனார் மன்னரிடம்
கோலமுறச் சொன்னார் குமரேசா ஏலும்
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பு இல
வேண்டுப வேட்பச் சொலல்

#697
என்றும் இதமே இசைத்து ஏனோ சாத்தனார்
குன்றும் மொழி நீத்தார் குமரேசா நன்றாக
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்

#698
ஏனோ இளையன் என எண்ணார் பிடர்த்தலையார்
கோனா உவந்தார் குமரேசா ஆனா
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப்படும்

#699
வள்ளல் வழுதி கொள மாண்புற்றும் ஏன் மருதர்
கொள்ளாத நீத்தார் குமரேசா உள்ளிக்
கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கு அற்ற காட்சியவர்

#700
அன்று உறவு என்று உன்னி அம்பிகாபதி ஒன்று ஆற்றினன் பின்
குன்றினான் என்னே குமரேசா என்றும்
பழையம் எனக் கருதிப் பண்பு அல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்

@71 அதிகாரம் 71 – குறிப்பறிதல்

#701
கூறாத முன்னே குறித்து உணர்ந்த மாருதி சீர்
கூற நின்றான் என்னே குமரேசா வேறாகக்
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறா நீர் வையக்கு அணி

#702
உள்ளியதைத் தேர்ந்து உரைத்த ஒண் தருமர் வள்ளுவர் ஏன்
கொள்ள நின்றார் தேவாக் குமரேசா எள்ளளவும்
ஐயப்படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்

#703
ஓர்ந்து குறிப்பறிந்த ஒண் கூடலாரை ஏன்
கூர்ந்து கொண்டான் மன்னன் குமரேசா தேர்ந்து
குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்

#704
கூறாமல் கண்ணன் குறித்தது கொண்டே வீமன்
கூறு செய்தான் என்னே குமரேசா தேறிக்
குறித்தது கூறாமைக் கொள்வாரொடு ஏனை
உறுப்பு ஓர் அனையரால் வேறு

#705
உற்ற விசயர் உணர்ந்தார் சுயோதனன் ஏன்
குற்றமுற்றான் கண்டும் குமரேசா பெற்ற
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்

#706
வாசுகியார் கொங்கணரின் வன்மம் அவர்-தன் முகத்தால்
கூசாது ஏன் கண்டார் குமரேசா ஆசு_இல்
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

#707
பண்டு உளத்தின் பான்மை பதுமுகன் முன் மன் முகத்தால்
கொண்டு உணர்ந்தான் என்னே குமரேசா கண்ட
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும்

#708
ஒன்றி நின்றார் ஒன்றும் உரையா முன் ஏன் வழுதி
குன்றாது அளித்தான் குமரேசா சென்று
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்

#709
மாறிப் பகைத்ததனை மாடலன் ஏன் குட்டுவன்-கண்
கூற உணர்ந்தான் குமரேசா சீறும்
பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்

#710
போதம் மிகு பொய்கையார் போர் வளவன் கண் அறிந்து ஏன்
கோது அறு சீர் கொண்டார் குமரேசா ஓதி மிகு
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால்
கண் அல்லது இல்லை பிற

@72 அதிகாரம் 72 – அவையறிதல்

#711
ஓர்ந்து வசிட்டர் உறுதியுற ஆராய்ந்து
கூர்ந்து சொன்னார் முன் ஏன் குமரேசா சார்ந்த
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர்

#712
ஏனோ சுமந்திரன் நன்கு எண்ணி இடைதெரிந்து
கோன் அவை முன் சொன்னான் குமரேசா ஆன
இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மையவர்

#713
அன்று விகர்னன் அவை அறியாமல் சொல்லிக்
குன்றினான் என்னே குமரேசா நன்றா
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல்

#714
ஓதி உயர் வீடுமர் ஏன் ஒன்றும் உரையாது இருந்தார்
கோதுடையார் முன்னே குமரேசா போத
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
வான் சுதை வண்ணம் கொளல்

#715
நாடி உணர்ந்தும் நகுலன் முன் சொல்லாது ஏன்
கூடி இருந்தான் குமரேசா தேடி உறும்
நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு

#716
தெள்ளிய சீர்க் காயன் சிறிது இழுக்கி ஏன் பெரிதும்
கொள்ள நின்றான் அல்லல் குமரேசா உள்ளி நின்ற
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு

#717
தேறிய சங்கத்தார் திருமுன் திருத்தக்கர்
கூறி உயர்ந்தார் ஏன் குமரேசா வீறுடனே
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
சொல் தெரிதல் வல்லார் அகத்து

#718
தேர்ந்து உயர்ந்த சீயன் திருமுன் பவணந்தி
கூர்ந்து சொன்னார் என்னே குமரேசா ஓர்ந்தே
உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்து அற்று

#719
அன்று விபீடணன் ஏன் அல் அவையுள் சொல்லி உளம்
குன்றினான் பின்பு குமரேசா என்றுமே
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்
நன்கு செலச் சொல்லுவார்

#720
ஓர்ந்து ததீசி உரைத்த எலாம் தக்கன் முன்
கூர்ந்து இழிந்த என்னே குமரேசா சார்ந்து இழிந்த
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
அல்லார் முன் கோட்டி கொளல்

@73 அதிகாரம் 73 – அவை அஞ்சாமை

#721
அன்று முதுகண்ணர் அனுமார் அவை அறிந்து ஏன்
குன்றாமல் சொன்னார் குமரேசா நின்ற
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர்

#722
தண் தார் உயர் காளிதாசர் ஏன் கற்றவருள்
கொண்டாட நின்றார் குமரேசா மண்டி நின்று
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
கற்ற செலச் சொல்லுவார்

#723
அன்று பொரப் பல்லோர் அடர்ந்து எழுந்தார் பட்டர் முன்
குன்றினர் ஏன் சொல்லக் குமரேசா என்றும்
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சாதவர்

#724
திண் தோள் இருதுபன்னன் தேர் நளன்-பால் ஏன் கலையைக்
கொண்டான் கொடுத்துக் குமரேசா அண்டி நின்று
கற்றார் முன் கற்ற செலச் சொல்லித் தாம் கற்ற
மிக்காருள் மிக்க கொளல்

#725
வென்றிப் புகழேந்தி வேத்தவையில் மாற்றம் ஏன்
குன்றாது தந்தான் குமரேசா நன்றாக
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
மாற்றம் கொடுத்தல்-பொருட்டு

#726
கற்றும் அவை அஞ்சினார் காளமேகம் எழுந்து ஏன்
கொற்றமுற்று நின்றான் குமரேசா வெற்றியுறு
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
நுண் அவை அஞ்சுபவர்க்கு

#727
பண்டு பல கற்றும் பலிதன் பயந்து இழிவு
கொண்டு ஒழிந்தான் என்னே குமரேசா மண்டு
பகையகத்துப் பேடி கை ஒள் வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல்

#728
மாசில் சதானந்தர் மன் அவையில் நன்கு சொன்னார்
கூசினது ஏன் மற்றோர் குமரேசா ஆசையொடு
பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்
நன்கு செலச் சொல்லாதார்

#729
திண் தோள் குசலவர் ஏன் சென்று அவை அஞ்சாமையினால்
கொண்டார் உயர்வைக் குமரேசா கண்டு ஒன்றும்
கல்லாதவரின் கடை என்ப கற்றறிந்தும்
நல்லார் அவை அஞ்சுவார்

#730
அன்று ஏமநாதன் அவை அஞ்சி ஏன் இழிந்து
குன்றி ஒழிந்தான் குமரேசா நன்றா
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சிக்
கற்ற செலச் சொல்லாதார்

@74 அதிகாரம் 74 – நாடு

#731
ஆர்ந்த பொருள் விளைவால் ஆன்றோரால் கோசலம் சீர்
கூர்ந்து நின்றது என்னே குமரேசா சார்ந்து என்றும்
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலாச்
செல்வரும் சேர்வது நாடு

#732
நாடி எவரும் நயப்ப மகதம் சீர்
கூடி நின்றது என்னே குமரேசா தேடும்
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

#733
அண்டினார்க்கு எல்லாம் அரணாய் விதேகம் சீர்
கொண்டிருந்தது என்னே குமரேசா கொண்ட
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறை ஒருங்கு நேர்வது நாடு

#734
பண்டு பகை பசி நோய் பாண்டி நல் நாட்டு இன்றி இன்பம்
கொண்டிருந்தது என்னே குமரேசா மண்டி
உறு பசியும் ஓவாப் பிணியும் செறு பகையும்
சேராது இயல்வது நாடு

#735
தீது பகை ஏதும் இன்றிச் சேரன் உயர் நாடு என்றும்
கோது அகன்றது என்னே குமரேசா வாது மிகு
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
கொல் குறும்பும் இல்லது நாடு

#736
மாறா வளம் சேர் வளவன் அமர் நாடு உயர்வு
கூற நின்றது என்னே குமரேசா வேறொன்றும்
கேடு அறியாக் கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடு என்ப நாட்டின் தலை

#737
நீர் அரணும் நீள் மலையும் நேர்ந்த நிடதம் சீர்
கூர நின்றது என்னே குமரேசா சாரும்
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு

#738
மண்டு பொருள் இன்ப வளம் வாய்ந்த ஏமாங்கதம் ஏர்
கொண்டு உயர்ந்தது என்னே குமரேசா மிண்டு
பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
அணி என்ப நாட்டிற்கு இவ் ஐந்து

#739
நாடி வருந்தாமல் நல் அவந்தி நாட்டினர் சீர்
கூடி நின்றார் என்னே குமரேசா தேடி அமர்
நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல
நாட வளம் தரும் நாடு

#740
சால வளம் கொண்டிருந்தும் தண்டகம் ஓர் வேந்தன் இன்றிக்
கோலம் அற்றது என்னே குமரேசா மேல் அறைந்த
ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே
வேந்து அமைவு இல்லாத நாடு

@75 அதிகாரம் 75 – அரண்

#741
வீரம் மிகு சூரனும் ஏன் வீர மகேந்திரத்தைக்
கூர் அரணாக் கொண்டான் குமரேசா நேராக
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சித் தன்
போற்றுபவர்க்கும் பொருள்

#742
காடும் மலையும் கடலும் இலங்கையிடம்
கூடி நின்ற என்னே குமரேசா நாடும்
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையது அரண்

#743
அண்டு அரிய திண்மை அகலம் அயோத்தி அரண்
கொண்டிருந்தது என்னே குமரேசா தண்டா
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
அமைவு அரண் என்று உரைக்கும் நூல்

#744
உற்ற அரண் கண்டு உறு பகைவர் அஞ்ச வரன்
கொற்றமுற்றான் என்னே குமரேசா பெற்ற
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை
ஊக்கம் அழிப்பது அரண்

#745
கண்டான் துவாரகையைக் கண்ணன் பகைக்கு அரணாக்
கொண்டான் பின் என்னே குமரேசா மிண்டிக்
கொளற்கு அரிதாய்க் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண்

#746
உற்ற பொருள் நல் ஆள் உடைமையால் உஞ்சை அரண்
கொற்றமுற்றது என்னே குமரேசா முற்றவே
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
நல் ஆள் உடையது அரண்

#747
என்றும் பகைக்கு அரிதா ஏர் ஆர் இராசகிரி
குன்றாதது என்னே குமரேசா நன்றாக
முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்

#748
முற்ற வந்த வேந்தர் முறிந்தார் பறம்பு அரணால்
கொற்றமுற்றான் கோன் ஏன் குமரேசா சுற்றுமே
முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றி
பற்றியார் வெல்வது அரண்

#749
மாடம் மலி மாபுரம் முன் மாற்றலர்கள் மாய அரண்
கூடி நின்றது என்னே குமரேசா கோடும்
முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து
வீறு எய்தி மாண்டது அரண்

#750
கேடு_இல் கிரவுஞ்சம் கெட்டது நல் மாட்சியிலார்
கூடி நின்றதால் ஏன் குமரேசா நாடும்
எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
இல்லார்-கண் இல்லது அரண்

@76 அதிகாரம் 76 – பொருள் செயல் வகை

#751
ஓது பொருள் ஒன்றே உயர்ந்தது என மாயை ஏன்
கோது அற முன் கொண்டாள் குமரேசா ஏதும்
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள்

#752
ஏனோ துரோணரையும் எள்ளினான் பாஞ்சாலன்
கோன் என்ன நின்றான் குமரேசா ஆன பொருள்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

#753
சென்ற இடம் எல்லாம் சிறந்து ஏனோ செல்வ ஆய்
குன்றாது வென்றான் குமரேசா நின்ற
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று

#754
தீதிலனாய் ஈட்டி முன் செல்வம் மிகு சாயலன் ஏன்
கோது_இல் இன்பம் கொண்டான் குமரேசா ஓதில்
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள்

#755
உள்ளன்போடு அன்றி உறு பொருளை வான் பதி ஏன்
கொள்ளான் வெறுத்தான் குமரேசா கொள்ளும்
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம்
புல்லார் புரள விடல்

#756
திண் தோள் தருசகன் ஏன் தெவ்வர் உறு பொருளைக்
கொண்டான் உரித்தாக் குமரேசா கண்ட
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
தெறு பொருளும் வேந்தன் பொருள்

#757
உற்ற அருள் கோவலன் கை உள்ள பொருளான் முன்னம்
கொற்றமுற்றது என்னே குமரேசா பெற்ற
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்
செல்வச் செவிலியால் உண்டு

#758
சோர்ந்து வருந்தாமல் தொண்டைமான் ஏன் வினையைக்
கூர்ந்து இனிது செய்தான் குமரேசா சார்ந்து நின்ற
குன்று ஏறி யானைப் போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாகச் செய்வான் வினை

#759
தேடிப் பொருள் சென்று சேர்த்தான் பகை வென்று
கூடினன் ஏன் தத்தன் குமரேசா ஓடியே
செய்க பொருளைச் செறுநர் செருக்கு அறுக்கும்
எஃகு அதனின் கூரியது இல்

#760
அன்று பொருள் ஆற்றி நின்ற அந்திமான் இன்ப நலம்
குன்றாது ஏன் கொண்டான் குமரேசா என்றுமே
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு

@77 அதிகாரம் 77 – படை மாட்சி

#761
வென்றி மிகு சோதனன் ஏன் வெல் படையைப் பேணி என்றும்
குன்றாது நின்றான் குமரேசா நன்றா
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை

#762
மூல பலம் அஞ்சாது ஏன் முன் வந்து நின்றது கோன்
கோலம் உலைந்தும் குமரேசா சால
உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவிடத்து
தொல் படைக்கு அல்லால் அரிது

#763
அன்று கடல் போல் அசுரர் ஆர்த்து வந்தார் ஏன் எளிதாக்
கொன்று வந்து நின்றாய் குமரேசா மன்ற
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலிப் பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

#764
வென்றி அனரண்யன் மெய்ப் படை போர் வன்கண்மை
குன்றவில்லை என்னே குமரேசா என்றும்
அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த
வன்கணதுவே படை

#765
திண் தோள் முசுகுந்தன் திண் படை முன் சண்டனொடும்
கொண்டு எதிர்த்தது என்னே குமரேசா தண்டுடனே
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
ஆற்றலதுவே படை

#766
தேர்ந்த திவிட்டன்-தன் சேனை உயர் மான நலம்
கூர்ந்து நின்றது என்னே குமரேசா சார்ந்த
மறம் மானம் மாண்ட வழிச் செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு

#767
தேர்ந்து திறன் அறிந்து சென்றது ஐவர் சேனை நிலை
கூர்ந்து முன் என்னே குமரேசா நேர்ந்து நின்ற
தார் தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர் தாங்கும் தன்மை அறிந்து

#768
பண்டு கரன் தானை பாடு பெற்று நின்றது அணி
கொண்டதனால் என்னே குமரேசா மண்டி
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
படைத் தகையான் பாடு பெறும்

#769
வீர உதயணன்-தன் மெய்ப் படை போய் எங்கும் சீர்
கூர வென்றது என்னே குமரேசா நேரும்
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல் ஆயின் வெல்லும் படை

#770
பண்டு திரிசிரா பட்டவுடன் தானை எலாம்
கொண்டது ஒழிவு என்னே குமரேசா மண்டி
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்

@78 அதிகாரம் 78 – படைச் செருக்கு

#771
ஓடி ஒழி-மின் என ஒன்னலர் முன் ஏன் விபுலன்
கூடி மொழிந்தான் குமரேசா பீடு உடைய
என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ
முன் நின்று கல் நின்றவர்

#772
புல்லியரை எள்ளிவிட்டு ஏன் போர் மகதன் மேல்போந்தான்
கொல் வேல் நபுலன் குமரேசா கல் அடர்ந்த
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது

#773
திண் தோள் இராவணன் போர் தேய்ந்தது கண்டு ஏன் இரக்கம்
கொண்டான் இராமன் குமரேசா கொண்டு நின்ற
பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு

#774
பண்டு ஏன் இராவணி மெய் பட்ட கணை தொட்டு எடுத்துக்
கொண்டு ஓடி வந்தான் குமரேசா கொண்டுவந்த
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும்

#775
வேல் வீச வாள் அரக்கன் மேல் ஓடி ஏன் இளையோன்
கோலமுற ஏற்றான் குமரேசா மேலே
விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு

#776
போர் எதிர்ந்த நாளே புனிதம் எனக் கிள்ளி ஏன்
கூர் அமைந்து நின்றான் குமரேசா நேரா
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து

#777
திண் தோள் அபிமன் உயர் தீரன் என ஏன் கழல் முன்
கொண்டு ஏத்த நின்றான் குமரேசா மண்டிச்
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
கழல் யாப்புக் காரிகை நீர்த்து

#778
அன்று பஞ்சசேனை அதிபர் இறை தடுத்தும்
குன்றவில்லை என்னே குமரேசா கன்றி
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர்

#779
வென்றி அதிகாயன் வீரமொழி பிழைத்தும்
குன்றிலன் சீர் என்னே குமரேசா கன்றி
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற்பவர்

#780
வண்டு ஆர் வலம்புரித் தார் மன்னன் அழக் கன்னன் போர்
கொண்டு இறந்தான் என்னே குமரேசா கண்டு
புரந்தார் கண் நீர் மல்கச் சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து

@79 அதிகாரம் 79 – நட்பு

#781
தேர்ந்து கதிரோன்சேய் சீராமன் நட்பினை ஏன்
கூர்ந்து உணர்ந்து செய்தான் குமரேசா ஓர்ந்து
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்
வினைக்கு அரிய யா உள காப்பு

#782
கோடாமல் தத்தன் இயக்கோடன் இவர் கேண்மை என்றும்
கூடி நின்றது என்னே குமரேசா கூடி
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதிப்
பின் நீர பேதையார் நட்பு

#783
தெள்ளு கலைக் கண்ணனார் தேர் வளவன் நண்பு என்றும்
கொள்ள நின்றது இன்பு ஏன் குமரேசா உள்ளி
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
பண்புடையாளர் தொடர்பு

#784
அன்று ஏன் இடித்துரைத்தார் ஆலத்தூரார் அன்பு
குன்றாமல் சென்று குமரேசா நின்று
நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண்
மேற்சென்று இடித்தல்-பொருட்டு

#785
பண்டு பழகாத பார் வளவன் ஆந்தையர்-பால்
கொண்டிருந்தான் நட்பு ஏன் குமரேசா மண்டு
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்

#786
மூதுரை கொள் பொய்யாமொழியார் ஏன் நெஞ்சு உவந்து
கோது அறு நட்புற்றார் குமரேசா மோதி
முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு

#787
அன்று வளவன் உற்ற அல்லலில் ஏன் பொத்தியார்
குன்றி உழந்தார் குமரேசா என்றும்
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

#788
தேர்ந்த சுதஞ்சணன் ஏன் சீவகன் துன்பு ஓர்ந்து உடனே
கூர்ந்து களைந்தான் குமரேசா சேர்ந்த
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

#789
மாறு இன்றி ஊன்றி மதிசேனன் நண்பன் நலம்
கூறி நின்றான் என்னே குமரேசா தேறி நின்ற
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை

#790
வேறாக ஒன்றும் விளம்பாது ஏன் ஆத்திரையன்
கூறு ஆனான் நட்பின் குமரேசா மீறி
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு

@80 அதிகாரம் 80 – நட்பாராய்தல்

#791
திண் தோள் பரித்தாமன் தேறாமல் நட்டதனால்
கொண்டான் கேடு என்னே குமரேசா கண்டு நின்று
நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின்
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு

#792
அன்று பகதத்தன் ஆயாமல் கேண்மைகொண்டு
குன்றினான் என்னே குமரேசா நன்றாக
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் தரும்

#793
சேர்ந்து நின்று கந்துகனைத் தேர்ந்து தனமித்திரன் முன்
கூர்ந்து கொண்டான் நட்பு ஏன் குமரேசா சார்ந்த
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அரிந்து யாக்க நட்பு

#794
திண் தோள் தடமித்தன் தேர்ந்து கொடுத்து உறவு
கொண்டான் ஏன் கோனைக் குமரேசா கொண்ட
குடிப் பிறந்து தன்-கண் பழி நாணுவானைக்
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு

#795
ஓர்ந்து இடிக்க வல்ல உயர் மருசி நட்பினை ஏன்
கூர்ந்து கொண்டான் மன்னன் குமரேசா சார்ந்தே
அழச் சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்

#796
அன்று அமைந்த கேட்டில் அயாதி ஏன் உண்மை கண்டு
குன்றாது நின்றான் குமரேசா குன்ற வந்த
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

#797
ஓர்ந்து விதுரன் ஏன் உற்றவர்-பால் நட்பு ஒழித்துக்
கூர்ந்து எழுந்துசென்றான் குமரேசா தேர்ந்து அமைந்த
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்

#798
கள்ளம் புரிந்த கழல் சிங்கன் நட்பினை ஏன்
கொள்ளவில்லை மன்னன் குமரேசா எள்ளளவும்
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு

#799
கண்டு உலைந்தது என்று விட்ட கட்டியனைத் தத்தன் எண்ணிக்
கொண்டு உலைந்தான் என்னே குமரேசா அண்டிக்
கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்

#800
கேடு_இல் இராமன் உயர் கேண்மை கொண்டு ஏன் வீடணன் முன்
கூடினரை நீத்தான் குமரேசா நாடி
மருவுக மாசற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பு இலார் நட்பு

@81 அதிகாரம் 81 – பழமை

#801
பண்டு விசயன் படிறு அறிந்தும் ஏன் பழைமை
கொண்டு அமைந்தான் கண்ணன் குமரேசா கொண்ட
பழமை எனப்படுவது யாது எனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு

#802
கண்டு வெறாது அன்று கலைச் சிருங்கர் நன்று என உள்
கொண்டு உவந்தார் என்னே குமரேசா பண்டு அமைந்த
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன்

#803
கன்னன் மனைவி துகில் கை பிடித்தும் மன்னன் ஏன்
கொன்னே பொறுத்தான் குமரேசா முன்னே
பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக்கடை

#804
மீறி அன்று நண்பர் மிகை செய்தும் ஏன் கவிக்கோன்
கூறி உவந்தான் குமரேசா தேறி
விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின்

#805
சேர்ந்தாள் பெரும் துன்பம் செய்தும் சிவகலை ஏன்
கூர்ந்து பொறுத்தாள் குமரேசா சார்ந்து நின்ற
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க
நோதக்க நட்டார் செயின்

#806
பண்டு தொலைவுற்றும் பாண்டவர்-பால் மச்சன் அன்பு
கொண்டு நின்றான் என்னே குமரேசா கொண்டாடும்
எல்லைக்-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்-கண் நின்றார் தொடர்பு

#807
கான் ஆளப் போ என்ற கைகைக்கு ஏன் அன்புசெய்தான்
கோனாம் இராமன் குமரேசா மேனி
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்
வழிவந்த கேண்மையவர்

#808
பண்டு அமணன் செய்த பழி நாளை ஏன் குமணன்
கொண்டான் இனிதாக் குமரேசா மண்டி நின்ற
கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள் இழுக்கம் நட்டார் செயின்

#809
ஓர்ந்து பழம் கேண்மை உவந்து விடா வேகனை ஏன்
கூர்ந்து கொண்டார் மற்றோர் குமரேசா நேர்ந்து
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு

#810
மன்ற நோய் செய்தும் மணிமேகலை பழைமை
குன்றாதது என்னே குமரேசா என்றும்
விழையார் விழையப்படுப பழையார்-கண்
பண்பின் தலைப்பிரியாதார்

@82 அதிகாரம் 82 – தீ நட்பு

#811
வென்றிச் சதவிந்து ஏன் மெய்மை இலாச் சாலுவன் கேள்
குன்ற விடுத்தான் குமரேசா நின்று
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது

#812
உற்ற பயன் கொண்டு ஒழிந்த சதகனைக் கோன்
குற்றம் என்று ஏன் நீத்தான் குமரேசா பற்ற
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்

#813
பண்டு உறுவது ஒன்றையே பார்த்து இழிந்தான் காசிபன் முன்
கொண்ட நட்பில் என்னே குமரேசா ஒண்டி
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்

#814
பண்டு அமரில் நீத்த பலராமரை நினைந்து
கொண்டு உளைந்தான் கோன் ஏன் குமரேசா கொண்ட
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை

#815
ஓர்ந்துவைத்தும் உற்று உதவா உத்தரனைப் பின் மிலைச்சன்
கூர்ந்து ஒழித்தான் என்னே குமரேசா தேர்ந்து நன்கு
செய்து ஏமம் சாராச் சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று

#816
பேதை அசமுகி-தன் பேருறவால் சூரன் ஏன்
கோது மிக உற்றான் குமரேசா தீது மிகு
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்

#817
நாடி நின்றும் சாம்பன் நகை வகையார் நட்பினால்
கோடி நொந்தான் என்னே குமரேசா பீடு_இல்
நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான்
பத்து அடுத்த கோடி உறும்

#818
வேறாய் உடற்றி நின்ற விச்சனிடம் பின் கபிலர்
கூறாது ஏன் விட்டார் குமரேசா ஆறாக
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல்

#819
வள்ளல் விசாலன் ஏன் வஞ்சனைசெய் சாலுவனைக்
கொள்ள அஞ்சி நின்றான் குமரேசா தள்ளும்
கனவினும் இன்னாது-மன்னோ வினை வேறு
சொல் வேறு பட்டார் தொடர்பு

#820
நேசித்துப் பின் பழித்த நீமகனை ஆமகன் ஏன்
கூசி அகன்றான் குமரேசா மூசி
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு

@83 அதிகாரம் 83 – கூடா நட்பு

#821
வல்லதரர் நட்பாகி வந்தார் இடம் கண்டு
கொல்ல நின்றார் என்னே குமரேசா நல்லதொரு
சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு

#822
மாறாத தேவகியும் மாறினள் ஏன் விப்பிரனைக்
கூறாக விட்டுக் குமரேசா தேறும்
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும்

#823
தேர்ந்து பல கற்றிருந்தும் செற்றம் அறாது ஏன் எயினன்
கூர்ந்து கொல்ல நின்றான் குமரேசா ஓர்ந்து
பல நல்ல கற்றக் கடைத்தும் மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது

#824
அன்று நெஞ்சில் வஞ்சமுடன் ஆதரித்த பூதனையைக்
கொன்றது என்னே அஞ்சிக் குமரேசா நன்றா
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா
வஞ்சரை அஞ்சப்படும்

#825
சேர்ந்து அனலன் சொல்லியும் பின் தேர்ந்து கொளாது ஏன் வசு முன்
கூர்ந்து அகல நின்றான் குமரேசா நேர்ந்து
மனத்தின் அமையாதவரை எனைத்தொன்றும்
சொல்லினான் தேறற்பாற்று அன்று

#826
சார்ந்து நன்று கண்ணில்லான் சார்வாகன் சொல்லிடினும்
கூர்ந்து கண்டார் தீது ஏன் குமரேசா நேர்ந்து நின்று
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும்

#827
வள்ளல் சடிமன் மருவலன் வாய்ச் சொல்லை நம்பிக்
கொள்ளவில்லை என்னே குமரேசா எள்ளளவும்
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
தீங்கு குறித்தமையான்

#828
சார்ந்து தொழுதிடினும் தத்தன் ஏன் முத்தனை முன்
கூர்ந்து அயிர்த்து நின்றான் குமரேசா சேர்ந்தே
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து

#829
உள் இகழ்ந்த வாகனிடம் ஓகைசெய்து கோமுகன் ஏன்
கொள்ள நின்றான் வேறு குமரேசா கள்ளம்
மிகச் செய்து தம் எள்ளுவாரை நகச்செய்து
நட்பினுள் சா புல்லற்பாற்று

#830
வென்றி நரவாணன் மேவலனை மேவி நண்பு ஏன்
குன்ற விடுத்தான் குமரேசா நின்ற
பகை நட்பு ஆம் காலம் வருங்கால் முகம் நட்டு
அகம் நட்பு ஒரீஇவிடல்

@84 அதிகாரம் 84 – பேதைமை

#831
கண்டு பலன் காணாமல் காகன் ஏன் தீமை உளம்
கொண்டு நலன் விட்டான் குமரேசா உண்டான
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு
ஊதியம் போகவிடல்

#832
சீதையிடம் காதல் அன்று செய்து சயந்தன் ஏன்
கோது அடைந்து நின்றான் குமரேசா ஏதமுறும்
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கை அல்லதன்-கண் செயல்

#833
நாணாமல் கற்புடையாள் நல் துகிலைத் துச்சதனன்
கோணாது ஏன் ஈர்த்தான் குமரேசா பூணாக
நாணாமை நாடாமை நார் இன்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்

#834
அன்று ஆய்ந்து அறிந்தும் ஏன் ஆர்ந்த முழுமூடன் எனக்
குன்றினான் கேமன் குமரேசா நன்றாக
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப்
பேதையின் பேதையார் இல்

#835
என்றும் நரகு அழுந்த எண்ணாமல் காஞ்சனன் முன்
கொன்று நின்றான் என்னே குமரேசா நின்ற
ஒருமைச் செயல் ஆற்றும் பேதை எழுமையும்
தான் புக்கு அழுந்தும் அளறு

#836
மண்டி வினைமேல் சென்ற மாதங்கன் பின் பழி மீக்
கொண்டு இழிந்தான் என்னே குமரேசா கொண்ட வினை
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியாப்
பேதை வினை மேற்கொளின்

#837
தண்டாத் திரு அமைந்தும் தண்டன் தமர் பசிநோய்
கொண்டு நின்றார் என்னே குமரேசா அண்டாத
ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்றக்கடை

#838
நேர்ந்த திருவை நினைந்து வந்து துற்கன் மீக்
கூர்ந்து இழிந்தான் என்னே குமரேசா சார்ந்து நின்ற
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்
கை ஒன்று உடைமை பெறின்

#839
பேணி நின்ற துச்சீலன் பேதன் இவர் பின் பிரிவில்
கோணவில்லை என்னே குமரேசா மாணப்
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல்

#840
அன்று தருமன் அவையைச் சிசுபாலன்
குன்றவைத்தான் என்னே குமரேசா நன்றாக்
கழாஅக் கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

@85 அதிகாரம் 85 – புல்லறிவாண்மை

#841
செல்வம் உற்றும் நல்லறிவு சேராமல் சண்டன் அன்று
கொல்ல நின்றான் என்னே குமரேசா நல்ல
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை
இன்மையா வையாது உலகு

#842
அன்று வந்து தந்தான் அறப்பகைஞன் நல்லறிவு
குன்றி நின்றும் என்னே குமரேசா நன்றாம்
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம்

#843
ஆர்ந்த சுகலர் அறிவிழந்து தாமாகக்
கூர்ந்து அழிந்தார் என்னே குமரேசா நேர்ந்த
அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது

#844
ஒள்ளியனாத் தன்னை உயர்த்தியும் ஏன் துச்சேதன்
கொள்ள இழிந்தான் குமரேசா எள்ளலுறும்
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
உடையம் யாம் என்னும் செருக்கு

#845
அன்று தான் கல்லா அரும் கவி மேற்கொண்டு தன்மி
குன்றினான் என்னே குமரேசா நன்று தாம்
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும்

#846
நின்று உயர்ந்தும் சும்ப நிசும்பர் ஏன் புல்லர் எனக்
குன்றி இழிந்தார் குமரேசா நன்றாக
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி

#847
கேசி ஏன் தேறாமல் கேடு செய்து தானாகக்
கூசி மடிந்தான் குமரேசா ஆசு_இல்
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
பெரும் மிறை தானே தமக்கு

#848
தேர்ந்து உணரா அந்தகன் ஏன் தீர்ந்து ஒழியும் அவ்வளவும்
கூர்ந்து நின்றான் நோயாக் குமரேசா சார்ந்தவர் தாம்
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ் உயிர்
போஒம் அளவும் ஓர் நோய்

#849
காட்டியும் ஏன் தக்கன் அன்று காணாமல் கண்டதிலே
கோட்டிகொண்டு நின்றான் குமரேசா நாட்டமுடன்
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டானாம் தான் கண்ட ஆறு

#850
உள்ள நலம் இல்லை என்றான் ஓராக் குசலன் பின்
கொள்ள நின்றான் தீது ஏன் குமரேசா உள்ளி
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும்

@86 அதிகாரம் 86 – இகல்

#851
துன்றி நின்ற சுந்தோபசுந்தர் இகலால் பிரிந்து
குன்றினார் என்னே குமரேசா கன்றும்
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்பு இன்மை பாரிக்கும் நோய்

#852
காதும் இகல்கொண்டும் கலிக்காமர் யாதொன்றும்
கோது செய்யார் என்னே குமரேசா தீதாம்
பகல் கருதிப் பற்றாச் செயினும் இகல் கருதி
இன்னா செய்யாமை தலை

#853
தண்டா இகல் நீங்கச் சாம்பவந்தர் பின்பு ஒளி மீக்
கொண்டார் ஈது என்னே குமரேசா கொண்ட
இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல் இலாத்
தா இல் விளக்கம் தரும்

#854
பண்டு இகலை நீக்கிய பின் பப்புருவாகன் இன்பம்
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா உண்டாகும்
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்

#855
என்றும் இகலை எதிர் ஏலாத பத்திரன் ஏன்
குன்றாமல் நின்றான் குமரேசா நின்ற
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மையவர்

#856
அன்று இகலே நன்று என்று அகங்கரித்த நாந்தகன் ஏன்
குன்றி உடன் மாய்ந்தான் குமரேசா என்றும்
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து

#857
கன்றி இகல் மேவி உண்மை காணாமல் தந்தன் ஏன்
குன்றி மடிந்தான் குமரேசா என்றும்
மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல் மேவல்
இன்னா அறிவினவர்

#858
அன்று இகலி நின்ற அடவியன் பின் ஆக்கம் அற்றுக்
குன்றினான் என்னே குமரேசா கன்றும்
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு

#859
ஏமாங்கதன் ஏன் இகல் என்றும் காணாமல்
கோமானாய் நின்றான் குமரேசா தோமாம்
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு

#860
வென்றிக் கனகவிசயர் இகல்கொண்டதனால்
குன்றினார் என்னே குமரேசா என்றும்
இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம்
நன்னயம் என்னும் செருக்கு

@87 அதிகாரம் 87 – பகை மாட்சி

#861
அன்று ஏன் வலியார் மேல் அச்சுவன் போய் ஏற்று அழிந்தான்
குன்றாத வை வேல் குமரேசா என்றும்
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை

#862
மண்டு துணை இன்றி வந்த மாயாவி வாலி வரக்
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா பண்டு அமைந்த
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
என் பரியும் ஏதிலான் துப்பு

#863
ஓர்ந்து அமையா விக்கிரமன் உற்றான் பகைக்கு எளிதாய்க்
கூர்ந்து அழிந்தான் என்னே குமரேசா சார்ந்து என்றும்
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு

#864
அன்று வெகுண்டெழுந்த ஆருணிமன் ஏன் எளிதாக்
குன்றி அழிந்தான் குமரேசா என்றுமே
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது

#865
ஏற்றது ஒன்றும் நோக்கா இடும்பன் ஏன் வந்து உடனே
கூற்றின் வாய் நின்றான் குமரேசா போற்றும்
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது

#866
காமமே கன்றி நின்ற காம்பிலிமன்-தன் பகையைக்
கோமகன் ஏன் கொண்டான் குமரேசா ஏம நலம்
காணாச் சினத்தான் கழி பெரும் காமத்தான்
பேணாமை பேணப்படும்

#867
பண்டு எழுந்த துர்த்தன் பகையைத் திவோதானன்
கொண்டு உவந்தான் என்னே குமரேசா அண்டிக்
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து
மாணாத செய்வான் பகை

#868
நீதியின் நில்லா நெடிய விருத்திரன் ஏன்
கோதுகொண்டு மாண்டான் குமரேசா யாதும்
குணனிலனாய்க் குற்றம் பல ஆயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப்பு உடைத்து

#869
நன்று அறியா மாகர் நலி பகையால் ஏன் பரதன்
குன்றா இன்புற்றான் குமரேசா சென்று
செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்

#870
பொல்லாத காளன் மேல் போர் வேட்டு மித்திரன் ஏன்
கொல்ல எழுந்தான் குமரேசா நல்ல நூல்
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி

@88 அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல்

#871
வள்ளல் மதிதயன் முன் வன்பகையை யாரோடும்
கொள்ளாதது என்னே குமரேசா எள்ளும்
பகை என்னும் பண்பு இலதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று

#872
ஒன்னலரைப் வென்ற நந்தன் ஓர் புலவனைப் பகைத்து ஏன்
கொன்னே அழிந்தான் குமரேசா துன்ன அரிய
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை

#873
மண்டு வய வேங்கைமார்பன் பலர் பகையைக்
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா தண்டாமல்
ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள்பவன்

#874
மாறு அகன்ற ஆயுமன்னன் வையம் எலாம் கொண்டு புகழ்
கூற நின்றான் என்னே குமரேசா சீறும்
பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன்
தகைமைக்-கண் தங்கிற்று உலகு

#875
பண்டு மலையனை ஏன் பார்த்துக் பெருங்கிள்ளி
கொண்டான் துணையாக் குமரேசா கொண்டாடும்
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
இன் துணையாக் கொள்க அவற்றின் ஒன்று

#876
திண் தோள் சதசித்து ஏன் தெவ்வரை உள் சேராமல்
கொண்டு அகன்றான் முன்னே குமரேசா கண்டு அறிந்து
தேறினும் தேறாவிடினும் அழிவின்-கண்
தேறான் பகாஅன் விடல்

#877
வள்ளல் உயர் நாஞ்சிலான் மாற்றார் முன் மென்மை என்றும்
கொள்ளாது ஏன் நின்றான் குமரேசா உள்ளது ஒன்றும்
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து

#878
மால் அறிந்து காப்ப மதுகயிடர் மாய்ந்தார் ஏன்
கோலம் அழிந்து குமரேசா சாலும்
வகை அறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்-கண் பட்ட செருக்கு

#879
சீர்த்தி மிகு வீரசேனன் பகைவர் ஏன்
கூர்த்திடும் முன் கொன்றான் குமரேசா ஆர்த்துள்
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து

#880
அன்று செயிர்த்த அழிசியினால் ஏன் பயன்
குன்றி அழிந்தான் குமரேசா நின்றே
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலாதார்

@89 அதிகாரம் 89 – உட்பகை

#881
தன் தமர் என்று எண்ணான் தசமுகன் ஏன் மைத்துனனைக்
கொன்று தொலைத்தான் குமரேசா நன்றாம்
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னா ஆம் இன்னா செயின்

#882
அன்று ஒருவன் பொய்த் தொடர்பை அஞ்சி ஏன் கோவிந்தன்
கொன்று அழித்தான் முன்னே குமரேசா கன்றி நின்ற
வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள் போல் பகைவர் தொடர்பு

#883
கண்டு அஞ்சி உட்பகையைக் காளன் ஏன் தற்காத்துக்
கொண்டு அகன்றான் பண்டு குமரேசா அண்டி நின்ற
உட்பகை அஞ்சித் தற்காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்

#884
ஏதம் மிக எய்தி ஏன் ஏனாதியார் நொந்தார்
கோது ஆர் பகையால் குமரேசா யாதும்
மனம் மாணா உட்பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும்

#885
அன்று உறவோன் உட்பகையால் ஆண்மைப் பழையனும் ஏன்
குன்றி மிக நொந்தான் குமரேசா நின்ற
உறல் முறையான் உட்பகை தோன்றின் இறல் முறையான்
ஏதம் பலவும் தரும்

#886
உற்ற உறவினர்-தம் உட்பகையால் ஏன் எழினி
கொற்றம் அற்று மாண்டான் குமரேசா குற்றம் மிக்க
ஒன்றாமை ஒன்றியார்-கண் படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது

#887
கோடாத சென்னி குடி கூடி நின்றும் உட்பகையால்
கோடி நொந்தது என்னே குமரேசா வீடாத
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி

#888
மண்டு புகழ் யாதவர்கள் மாண் குடி தேய்ந்து உட்பகை மீக்
கொண்டு அழிந்தார் என்னே குமரேசா கொண்ட
அரம் பொருத பொன் போலத் தேயும் உரம் பொருது
உட்பகை உற்ற குடி

#889
உற்ற சிறு கூனி உட்பகையால் கோடி துயர்
கொற்றவன் ஏன் கொண்டான் குமரேசா முற்றாத
எள் பகவு அன்ன சிறுமைத்தேயாயினும்
உட்பகை உள்ளது ஆம் கேடு

#890
ஒன்றி நின்றார்-தம் பகையால் உக்கிரசேனன் வாழ்க்கை
குன்றி நொந்தான் என்னே குமரேசா என்றும்
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன் உறைந்து அற்று

@90 அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை

#891
திண் தோள் பிரகத்தன் தேர்ந்து இகழாது ஏன் போற்றிக்
கொண்டு ஒழுகி நின்றான் குமரேசா தண்டாமல்
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை

#892
கொற்றச் சகுந்தன் ஏன் கோசிகரைப் பேணாத
குற்றத்தால் நொந்தான் குமரேசா உற்ற
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்

#893
தீது ஆர் துமிரன் ஏன் தேறாமல் அங்கதன்-பால்
கோது செய்து மாண்டான் குமரேசா மோதிக்
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்
ஆற்றுபவர்-கண் இழுக்கு

#894
கன்றி முன் சாணூரன் கண்ணனுக்குத் தீங்கு செய்தான்
குன்றி ஏன் மாய்ந்தான் குமரேசா நின்று அழலும்
கூற்றத்தைக் கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்

#895
திண் தோள் அமரர்கோன் சீற மயன் அரணம்
கொண்டும் ஏன் மாண்டான் குமரேசா தண்டாமல்
யாண்டுச் சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
வேந்து செறப்பட்டவர்

#896
வாதாவி அண்ணனுடன் வந்தான் குறுமுனிக்கு ஏன்
கோது செய்து மாண்டான் குமரேசா மோதும்
எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்

#897
தேர்ந்த துருவாசர் சீறினார் வான் வாழ்க்கை
கூர்ந்து அழிந்தது என்னே குமரேசா சார்ந்த
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின்

#898
அன்று மரீசி அகம் திரிந்தார் துங்கன் ஏன்
குன்றி அழிந்தான் குமரேசா என்றுமே
குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்று அன்னார் மாய்வர் நிலத்து

#899
சீலமுற்ற கும்பமுனி சீற நகுடன் ஏன்
கோலம் அற்று வீழ்ந்தான் குமரேசா சாலவே
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

#900
கோசிகர் முன் சீறக் குலைந்து ஏனாம் மாலி முன்னோர்
கூசி அழிந்தார் குமரேசா தேசு_இல்
இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார்
சிறந்து அமைந்த சீரார் செறின்

@91 அதிகாரம் 91 – பெண்வழிச் சேறல்

#901
வென்றி யசோதரன் ஏன் மிக்க மனை விழைவால்
குன்றி அழிந்தான் குமரேசா என்றும்
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
வேண்டாப் பொருளும் அது

#902
நாடாமல் பெண் விழைந்து நாணி ஏன் சந்தனு பின்
கோடி உளம் நொந்தான் குமரேசா தேடி நின்று
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்

#903
ஆசு மிகத் தன் மனை-பால் ஆசைகொண்டான் புண்டரிகன்
கூசி நொந்தான் பின்பு ஏன் குமரேசா நேசமுறும்
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்

#904
அன்று மனையாளை அஞ்சினான் சாமகன் பின்
குன்றினான் என்னே குமரேசா நின்ற
மனையாளை அஞ்சும் மறுமையிலாளன்
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று

#905
அஞ்சி ஏன் ஔவைக்கு அமுது அளிக்கத் தன் மனையைக்
கொஞ்சினான் சாலன் குமரேசா நஞ்சு எனவே
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்

#906
பண்டு உயர் வாழ்வு உற்றிருந்தும் பாசன் மனை அஞ்சிக்
கொண்டு இழிந்தான் என்னே குமரேசா தண் தார்
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
அமை ஆர் தோள் அஞ்சுபவர்

#907
பேடியினும் பேதை எனப் பேசினார் பெண் விழைந்த
கோடகனை என்னே குமரேசா நாடி நின்று
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடைப்
பெண்ணே பெருமை உடைத்து

#908
காதலி-தன் சொல்கேட்டுக் கைதவனும் நீதி இன்றிக்
கோது ஏன் புரிந்தான் குமரேசா ஏதேனும்
நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நல்_நுதலாள்
பெட்டு ஆங்கு ஒழுகுபவர்

#909
துன்றி மனை விழைந்த துத்தமன் ஏன் நன்மை இன்றிக்
குன்றி அழிந்தான் குமரேசா நன்றாம்
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
பெண் ஏவல் செய்வார்-கண் இல்

#910
பேரழகு வாய்ந்திருந்தும் பெண் வழியில் கேசன் ஏன்
கூர் அழியான் நின்றான் குமரேசா சீர் அமைந்த
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல்

@92 அதிகாரம் 92 – வரைவில் மகளிர்

#911
வேசையரின் சொல்கேட்டு வெம்பி ஏன் பாசதரன்
கூசி அழிந்தான் குமரேசா ஆசு அகன்ற
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்

#912
உற்றறிந்து துச்சயன் பின் ஓர்ந்தான் பரத்தை நலம்
குற்றம் என்று ஏன் விட்டான் குமரேசா முற்றும்
பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு_இல் மகளிர்
நயன் தூக்கி நள்ளா விடல்

#913
கோடி அருவருத்தும் கோணாது ஏன் மோகினி முன்
கூடி இருந்தாள் குமரேசா நாடும்
பொருள்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று

#914
காமகலை காதலித்தும் காதலுறாது ஏன் ஒழிந்தான்
கோமான் மணிமான் குமரேசா தோம் ஆம்
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
ஆயும் அறிவினவர்

#915
மாதர் வளைந்தும் மருவாது ஏன் வீரசித்து
கோது என்று நீத்தான் குமரேசா தீதாம்
பொதுநலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர்

#916
தள்ளாத மங்கையர் முன் சார்ந்தும் புரஞ்சயன் ஏன்
கொள்ளாது நீத்தான் குமரேசா உள்ளுணர்ந்து
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கிப்
புன் நலம் பாரிப்பார் தோள்

#917
உள்ளிப் பொதுமகளிர் உற்று நின்றும் மித்திரன் ஏன்
கொள்ளான் வெறுத்தான் குமரேசா கொள்ளும்
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
பேணிப் புணர்பவர் தோள்

#918
முன் ஒருத்தி-தன்னை முயங்கச் சுநந்தன் ஏன்
கொன்னே மடிந்தான் குமரேசா உன்னி மேல்
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
மாயமகளிர் முயக்கு

#919
பண்டு இழிந்த வாணன் பரத்தையர்-பால் ஆழ்ந்து நோய்
கொண்டு அழிந்தான் என்னே குமரேசா கொண்ட
வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலாப்
பூரியர்கள் ஆழும் அளறு

#920
அன்று கணிகையரை ஆதரித்தான் ஏன் அதர்மன்
குன்றினான் செல்வம் குமரேசா என்றும்
இரு மனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப்பட்டார் தொடர்பு

@93 அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை

#921
அன்று கள் ஆர்வமுற்ற அங்கிவருணன் ஒளி
குன்றினான் என்னே குமரேசா நின்று எவரும்
உட்கப்படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
கள் காதல் கொண்டு ஒழுகுவார்

#922
கள் உண்ணேன் என்று ஏன் கதிரோன்சேய் வில்லி உளம்
கொள்ள மொழிந்தான் குமரேசா எள்ளளவும்
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார்

#923
தேசிகர் முன் ஏனோ செவிபுதைத்தார் கள் எனவே
கூசி வெறுத்தார் குமரேசா பாசம் மிகு
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்று
சான்றோர் முகத்துக் களி

#924
நாணாமல் ஏனோ நளகூபன் கள் அருந்திக்
கோணாது அழிந்தான் குமரேசா மாண் அமைந்த
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
பேணா பெரும் குற்றத்தார்க்கு

#925
கள் உண்டல் பாவம் எனக் கண்டவுடன் சண்டகன் ஏன்
கொள்ளான் வெறுத்தான் குமரேசா உள்ளபடி
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய் அறியாமை கொளல்

#926
கள் உண்டு ஏன் வீரை கருத்தழிந்தாள் யானை முன் போய்க்
கொள்ளுண்டு மாய்ந்தாள் குமரேசா தள்ளுண்டு
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்

#927
கள்ளின் களித்த கபனை ஏன் எல்லாரும்
கொள்ளச் சிரித்தார் குமரேசா விள்ளாமல்
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள் ஒற்றிக் கண் சாய்பவர்

#928
அன்று மறைத்தும் ஏன் அங்காரகன் களியால்
குன்றி வெளியானான் குமரேசா என்றும்
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

#929
கள் அருந்தல் தீமை எனக் காட்டியும் ஏன் காதன் உள்
கொள்ளாது நின்றான் குமரேசா அள்ளிக்
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ் நீர்க்
குளித்தானைத் தீத் துரீஇ அற்று

#930
கண்டும் தெளியாமல் கங்கன் ஏன் வெம் களி மீக்
கொண்டு மடிந்தான் குமரேசா ஒண்டியே
கள் உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு

@94 அதிகாரம் 94 – சூது

#931
சூதாடல் தீது என்று ஏன் சொன்னான் சுநீதன் முன்
கோதை நளன்-பால் குமரேசா யாதுமே
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று

#932
ஒன்று எய்தி மூர்க்கரிடம் உற்ற எலாம் தோற்று ஏனோ
குன்றினார் சூதர் குமரேசா நின்று முன்
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு

#933
உற்ற பொருள் எல்லாம் ஒருங்கு இழந்து புட்கரன் ஏன்
குற்றமுற்றான் சூதில் குமரேசா பற்றும்
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்
போஒய்ப் புறமே படும்

#934
பண்டு நளன் சூதால் பார் இழந்து சீர் அழிந்து
கொண்டு நொந்தான் என்னே குமரேசா மண்டு
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல்

#935
ஒன்றும் இலனாய் ஒழிந்து ஏனோ சாதுவன் முன்
குன்றினான் சூதால் குமரேசா என்றும்
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார்

#936
கோடி அல்லல் கொண்டு குணநிதி ஏன் வெம் சூதைக்
கூடி அழிந்தான் குமரேசா நாடி
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
முகடியான் மூடப்பட்டார்

#937
அன்று கழகம் அடைந்தான் தருமன் நிலை
குன்றினான் என்னே குமரேசா நின்று
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்

#938
வென்றி உருக்குமன் ஏன் வெம் சூதால் அல்லல் எய்திக்
குன்றி மடிந்தான் குமரேசா நின்ற
பொருள் கெடுத்துப் பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது

#939
அன்று ஏன் உணவும் அடையாமல் மாகந்தன்
குன்றினான் சூதில் குமரேசா நன்றாம்
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்

#940
பண்டு கலிங்கன் தன் பல் உடைந்தும் வெம் சூதைக்
கொண்டிருந்தான் என்னே குமரேசா மண்டி
இழத்-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழத்-தொறூஉம் காதற்று உயிர்

@95 அதிகாரம் 95 – மருந்து

#941
கொண்ட உணவு குறைந்திட நோய்கொண்டானே
குண்டோதரன் ஏன் குமரேசா உண்டி
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று

#942
ஓர் மருந்தும் கொள்ளார் உயர் மாளிகையார் ஏன்
கூர் விருந்தாய் நின்றார் குமரேசா சாரும்
மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்

#943
அன்று ஏன் அளவாக ஆய்ந்து உண்டு அமித்திரனார்
குன்றாது இருந்தார் குமரேசா நன்றாக
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு

#944
பண்டு உயர்ந்த சக்கரன் ஏன் பட்டினிசெய்து உற்றறிந்து
கொண்டு உண்டு வந்தான் குமரேசா உண்டது முன்
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல
துய்க்க துவரப் பசித்து

#945
ஊறுபாடு ஒன்றும் உறாமல் ஏன் போகர் முன்
கூறுகொண்டு நின்றார் குமரேசா தேறி நின்று
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு

#946
அன்று மிக ஊண் அருந்திநின்ற சோமன் ஏன்
குன்றி நோய்கொண்டான் குமரேசா என்றும்
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
கழி பேரிரையான்-கண் நோய்

#947
திண் தோள் உயர் அங்கி தேரான் பெரிது உண்டு
கொண்டான் நோய் என்னே குமரேசா உண்டான
தீ அளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின்
நோய் அளவு இன்றிப் படும்

#948
தேர்ந்து நோய் நாடித் திலகவதியார் முன்
கூர்ந்து செய்தார் என்னே குமரேசா சார்ந்து நின்ற
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்

#949
அன்று பிணி நிலையை ஆராய்ந்து தேரையர் ஏன்
குன்றாமல் செய்தர் குமரேசா கன்றியே
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்

#950
சார்ந்த மருந்து இருந்தும் சட்டமுனி நோயினை முன்
கூர்ந்து கொண்டார் என்னே குமரேசா நேர்ந்து பிணி
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
அப் பால் நால் கூற்றே மருந்து

@96 அதிகாரம் 96 – குடிமை

#951
நீடிக் கவுமாரன் நின்றான் உலுண்டன் ஏன்
கோடினான் செம்மை குமரேசா கூடி உயர்
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
செப்பமும் நாணும் ஒருங்கு

#952
ஓர் இழுக்கும் சாராது உயர் தருமதத்தன் ஏன்
கூர் ஒழுக்கில் நின்றான் குமரேசா நேரும்
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந்தார்

#953
ஏதும் இகழார் இடங்கழியார் இன்சொலொடு
கோது அற ஏன் தந்தார் குமரேசா போதும்
நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மைக் குடிக்கு

#954
தள்ள அரிய பேரரசைத் தாய் தந்தும் ஏன் பரதன்
கொள்ளாது நீத்தான் குமரேசா வெள்ளம்
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்

#955
நின்ற வளம் குறைந்தும் நீள் வல்லான் கிள்ளி அன்று
குன்றாது ஏன் தந்தார் குமரேசா என்றும்
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று

#956
அன்று கவன்று நின்றும் அல்லது ஒன்றும் செய்திலர் ஏன்
குன்றூர்கிழார் முன் குமரேசா ஒன்றும்
சலம் பற்றிச் சால்பு இல செய்யார் மாசற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார்

#957
பண்டு வளவன் அயன் பற்றிய ஓர் குற்றம் எங்கும்
கொண்டு உயர்ந்தது என்னே குமரேசா கொண்ட
குடிப்பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்-கண் மறுப் போல் உயர்ந்து

#958
வள்ளன்மை இன்றி நின்ற வச்சிரனை ஏன் குலத்துள்
கொள்ளாது இகழ்ந்தார் குமரேசா உள்ளும்
நலத்தின்-கண் நாரின்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும்

#959
ஊறு பல நேர்ந்தும் உரோகிதன் முன் இன்சொல்லே
கூறி நின்றான் என்னே குமரேசா நாறும்
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல்

#960
பண்டு கறுப்பன் பணிவால் உயர் நலம் மீக்
கொண்டு நின்றான் என்னே குமரேசா தண்டா
நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு

@97 அதிகாரம் 97 – மானம்

#961
மண்டு மிடியுற்றிருந்தும் மாசு என்று சாத்தர் தாம்
கொண்டிலர் ஏன் விட்டார் குமரேசா கண்டு என்றும்
இன்றியமையாச் சிறப்பினவாயினும்
குன்ற வருப விடல்

#962
பண்டு உயர்ந்த சங்கன் ஏன் பண்பு அல்ல செய்திலன் சீர்
கொண்டுவந்த போதும் குமரேசா கொண்டாடும்
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர்

#963
தேர்ந்த முது கூத்தர் தேய்ந்தும் உயர்வு மீக்
கூர்ந்து நின்றார் என்னே குமரேசா ஆர்ந்த
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு

#964
திண் தோள் விதூமன் சிறிது நிலை தாழ்ந்ததனால்
கொண்டான் இழிவு ஏன் குமரேசா கொண்ட
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக்கடை

#965
வென்றிப் பிரதத்தன் மேவிய ஓர் புன்செயலால்
குன்றினான் என்னே குமரேசா நின்று உயர்ந்த
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்

#966
பண்டு மதியாரைப் பாராமல் தேரையார்
கொண்டு நின்றார் என்னே குமரேசா கொண்ட
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
இகழ்வார் பின் சென்று நிலை

#967
அன்று பகைவர் அடர்ந்தும் அருக்கன் நிலை
குன்றாது ஏன் நின்றான் குமரேசா என்றுமே
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று

#968
ஊன் ஓம்பல் கைவிட்டு உயிர் துறந்தான் மானம் எண்ணிக்
கோன் பொறையன் என்னே குமரேசா வான
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து

#969
போரில் ஒரு புண் முதுகில் பூண்டது என ஆதன் ஏன்
கூர் உயிரை நீத்தான் குமரேசா பாரில்
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்

#970
பண்டு ஏன் சலபோசன் பாடு அழிந்தது என்று இறந்தான்
கொண்டு தொழ நின்றான் குமரேசா கண்ட
இளி வரின் வாழாத மானம் உடையார்
ஒளி தொழுது ஏத்தும் உலகு

@98 அதிகாரம் 98 – பெருமை

#971
உள்ளத்தே அச்சுவன் முன் ஊக்கி உயர் புகழ் மீக்
கொள்ள நின்றான் என்னே குமரேசா கொள்ளும்
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
அஃது இறந்து வாழ்தும் எனல்

#972
சேர்ந்தார் இழிந்து நின்றார் செய் வினையால் சம்புவன் ஏன்
கூர்ந்து சிறந்தான் குமரேசா சார்ந்த
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய் தொழில் வேற்றுமையான்

#973
சார்ந்து கீழ் நின்றும் சடையன் வழுதியினும்
கூர்ந்து உயர்ந்தான் என்னே குமரேசா சேர்ந்து போய்
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர்

#974
பண்டு தனைக் காத்துப் பண்பு அமைந்த சங்கன் சீர்
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா கொண்ட
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத் தான் கொண்டு ஒழுகின் உண்டு

#975
நன்று அறிந்த தாயனார் நல்கூர்ந்தும் உள்ளியதைக்
குன்றாது ஏன் செய்தார் குமரேசா என்றும்
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்

#976
பீடு உடைய ஔவையையும் பேணான் அசிதன் அன்று
கோடி நின்றான் என்னே குமரேசா கூடும்
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு

#977
மண்டு சீர் கண்டு மழவரங்கன் புன் செருக்குக்
கொண்டு இழிந்தான் என்னே குமரேசா மிண்டி
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
சீரல்லவர்-கண் படின்

#978
பண்டு வெளிமான் பணிந்தான் இளையோன் ஏன்
கொண்டு வியந்தான் குமரேசா கண்டு
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

#979
வள்ளல் உயர் வஞ்சன் வளம் மிகுந்தும் புன் செருக்குக்
கொள்ளவில்லை என்னே குமரேசா உள்ளும்
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்துவிடல்

#980
உற்ற தவளகிரி ஊறு மறைத்தான் மருதன்
குற்றம் ஏன் சொன்னான் குமரேசா முற்றாக
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறிவிடும்

@99 அதிகாரம் 99 – சான்றாண்மை

#981
மண்டு புகழ் அயிந்தன் மாண் குணங்கள் எல்லாம் மேற்
கொண்டிருந்தான் என்னே குமரேசா கொண்ட
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள்பவற்கு

#982
ஆர்ந்த குணத்தின் அமைதியால் அந்துவனார்
கூர்ந்து நின்றார் என்னே குமரேசா சார்ந்த
குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று

#983
பண்டு இரக்கம் வாய்மை பணிவு அன்பு கல்லாடர்
கொண்டு நின்றார் என்னே குமரேசா தண்டாத
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண்

#984
என்றும் கொலை தீமை எண்ணாமல் மானர் ஏன்
குன்றாமல் நின்றார் குமரேசா கன்றி உயிர்
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
சொல்லா நலத்தது சால்பு

#985
பண்டு பரிமான் பணிதல் அணியாகக்
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா மண்டி எங்கும்
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை

#986
மண்டு புகழ்ச் சாபாலி மாண்பில்லார்-மாட்டும் ஏன்
கொண்டிருந்தார் தோல்வி குமரேசா கொண்டு நின்ற
சால்பிற்குக் கட்டளை யாது எனின் தோல்வி
துலை அல்லார்-கண்ணும் கொளல்

#987
மண்டு துயர் செய்தார்க்கு மாறி வயிரப்பன்
கொண்டு செய்தான் இன்பு ஏன் குமரேசா மிண்டியே
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு

#988
அன்று வறுமை அடைந்திருந்தும் பூசலார்
குன்றவில்லை சீர் ஏன் குமரேசா என்றுமே
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும்
திண்மை உண்டாகப் பெறின்

#989
நேர்ந்து புலத்தியனார் நின்ற நிலை பேராது
கூர்ந்து இருந்தார் என்னே குமரேசா ஆர்ந்து போய்
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார்

#990
நன்று அறிந்த அங்கீரர் நன்னீர்மை என்றும் ஏன்
குன்றாது இருந்தார் குமரேசா நின்று உயர்ந்த
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான்
தாங்காது-மன்னோ பொறை

@100 அதிகாரம் 100 – பண்புடைமை

#991
திண் தோள் நரசிங்கர் தேர்ந்து எண்பதம் என்றும்
கொண்டு நின்றார் என்னே குமரேசா கண்டு உவக்கும்
எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார்-மாட்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு

#992
அன்று வழுதி ஏன் அன்புடையனாய் என்றும்
குன்றாமல் நின்றான் குமரேசா நன்றான
அன்புடைமை ஆன்ற குடிப் பிறத்தல் இவ் இரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

#993
உற்ற முல்லான் போல உறுப்பு ஒத்தும் சிங்கன் ஏன்
குற்றமுற்று நின்றான் குமரேசா பெற்ற
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு

#994
மண்டு புகழ்ச் செங்கண்ணான் மாண்பினை ஏன் எல்லாரும்
கொண்டாடி நின்றார் குமரேசா கொண்ட
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும் உலகு

#995
கன்றிப் பகைத்தும் ஏன் காவட்டர் பண்புடைமை
குன்றாது இருந்தார் குமரேசா நின்ற
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்பு உள பாடு அறிவார்-மாட்டு

#996
பண்டு வியாசர் பதம் சேர ஞாலம் சீர்
கொண்டு இருந்தது என்னே குமரேசா கொண்டாடும்
பண்புடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண் புக்கு மாய்வது மன்

#997
தேர்ந்த அறிவு இருந்தும் சீலம் இலாச் சேனர் அன்று
கூர்ந்து இழிந்தார் என்னே குமரேசா தீர்ந்த
அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கள் பண்பு இல்லாதவர்

#998
அன்று ஏன் அரிய வசு அல்லசெய்தான்-பாலும் நலம்
குன்றாமல் செய்தான் குமரேசா என்றுமே
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பு ஆற்றார் ஆதல் கடை

#999
சார்ந்து நகாத சலன் முன் உலகு இருந்தும்
கூர்ந்து இழிந்தான் என்னே குமரேசா நேர்ந்து
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும் பால் பட்டன்று இருள்

#1000
அன்று குலிதன் அடைந்த பெரும் செல்வம்
குன்றி நின்றது என்னே குமரேசா நன்றான
பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்து அற்று

@101 அதிகாரம் 101 – நன்றியில் செல்வம்

#1001
நின்று பெரும் பொருளை நீட்டிவைத்தும் கும்பன் ஏன்
குன்றி அழிந்தான் குமரேசா ஒன்றவே
வைத்தான்வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்

#1002
பண்டு ஒன்றும் ஈயாப் பதுமன் பின் பேய்ப்பிறப்பைக்
கொண்டு இழிந்தான் என்னே குமரேசா கொண்ட
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான் ஆம் மாணாப் பிறப்பு

#1003
மண்டி இவறி நின்ற மங்கனை முன் இவ் உலகம்
கொண்டு நொந்தது என்னே குமரேசா கண்டு என்றும்
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

#1004
வச்சையன் என்று எல்லாரும் வைது இகழச் சங்கன் ஏன்
கொச்சையுற்று நின்றான் குமரேசா நிச்சலும்தான்
எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால்
நச்சப்படாஅதவன்

#1005
சார்ந்து ஒன்றும் ஈயாத சத்திரசித்து ஏன் இழந்தான்
கூர்ந்து இருந்த எல்லாம் குமரேசா ஓர்ந்து
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல்

#1006
அன்று நகிலன் அடைந்த பெரும் செல்வம்
குன்றி நின்றது ஏன் குமரேசா என்றுமே
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான்

#1007
என்றும் ஒன்றும் ஈயாத எச்சதத்தன் செல்வம் எலாம்
குன்றி நின்றது என்னே குமரேசா ஒன்றுமே
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிக நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று

#1008
கண்டிருந்த செல்வம் எலாம் கண்ணுக்கினியான் முன்
கொண்டு இழிந்தது என்னே குமரேசா கொண்டாடி
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்
நச்சு மரம் பழுத்து அற்று

#1009
மண்டி அவந்தன் அன்று வைத்த பொருள் மற்றவர் கைக்
கொண்டு அகன்றார் என்னே குமரேசா கொண்டாடும்
அன்பு ஒரீஇத் தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய
ஒண் பொருள் கொள்வார் பிறர்

#1010
மாரி நின்றது என்ன மறுகினார் ஓரி முன்
கூர் அழிந்த போது ஏன் குமரேசா நார் அமைந்த
சீர் உடைச் செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்த அனையது உடைத்து

@102 அதிகாரம் 102 – நாணுடைமை

#1011
கண்டான் அசோதரன் பின் கண்ணோடி நாண் மீக்
கொண்டான் ஈது என்னே குமரேசா கொண்ட
கருமத்தான் நாணுதல் நாணுத் திரு நுதல்
நல்லவர் நாணுப் பிற

#1012
நாடி மமகாரன் நாணுடைமையால் என்றும்
கூடி நின்றான் சீர் ஏன் குமரேசா கோட நின்ற
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு

#1013
நன்று அறிந்த குட்டுவன் ஏன் நாண் அமைந்து சால்பு நிலை
குன்றாது இருந்தான் குமரேசா என்றுமே
ஊனைக் குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
நன்மை குறித்தது சால்பு

#1014
நாணினை முன் நின்மலன் ஏன் நல் அணியாக் கொண்டு என்றும்
கோணாது இருந்தான் குமரேசா பூணும்
அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல்
பிணி அன்றோ பீடு நடை

#1015
மண்டு புகழ் ஏறைக்கோன் மன் உயிர்க்கு நாணி நலம்
கொண்டிருந்தான் என்னே குமரேசா கண்ட
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் வழக்கு

#1016
மண் திணிந்த ஞாலம் எலாம் வந்தும் உயர் நந்தன்
கொண்டிலன் முன் என்னே குமரேசா தண்டாத
நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியன் ஞாலம்
பேணலர் மேலாயவர்

#1017
வேதவதி நாண் காத்து மெய் உயிரை நீத்தாள் ஏன்
கோதை புனை வை வேல் குமரேசா கோது அகன்ற
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்-பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர்

#1018
கொண்ட மனைவியையும் கோது செய்தான் கேசவன் நாண்
கொண்டிலன் ஈது என்னே குமரேசா கண்டு
பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின்
அறம் நாணத் தக்கது உடைத்து

#1019
அன்று சுமதி அசாமிளன் ஏன் நாண் இழந்து
குன்றினார் நன்மை குமரேசா நின்ற
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாணின்மை நின்றக்கடை

#1020
ஓர்ந்து நாண் இல்லா உதிதன் உயிர் வாழ்ந்தும்
கூர்ந்து இழிந்தான் என்னே குமரேசா நேர்ந்து அமைந்த
நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர் மருட்டி அற்று

@103 அதிகாரம் 103 – குடிசெயல் வகை

#1021
நின்று தனஞ்சயன் ஏன் நீள் வினை முன் செய்வல் என்று
குன்றாது எழுந்தான் குமரேசா என்றும்
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடு உடையது இல்

#1022
தேர்ந்த அருவந்தை செய் வினையால் தன் குடி முன்
கூர்ந்து நின்றது என்னே குமரேசா நேர்ந்து நின்ற
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள் வினையான் நீளும் குடி

#1023
நாடிக் குடிதாங்கி நம்பி ஏன் தெய்வ அருள்
கூடி உயர்ந்தான் குமரேசா நீடிக்
குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடி தற்றுத் தான் முந்துறும்

#1024
சேர்ந்து முயன்ற சிவசன்மா தன் குடியைக்
கூர்ந்து கண்டான் என்னே குமரேசா தேர்ந்து நின்று
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியைத்
தாழாது உஞற்றுபவர்க்கு

#1025
மண்டு புகழ் அண்ணாமலையானைச் சூழ்ந்து உலகம்
கொண்டு நின்றது என்னே குமரேசா கண்டு உணர்ந்து
குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு

#1026
கண்ட குடியைக் கருணாகரன் ஆண்டு
கொண்டு உயர்ந்தான் என்னே குமரேசா கொண்டாடும்
நல் ஆண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கிக் கொளல்

#1027
சார்ந்து பலர் இருந்தும் சாத்தன் ஏன் தன் குடியைக்
கூர்ந்து பொறுத்தான் குமரேசா நேர்ந்த
அமர் அகத்து வன்கண்ணர் போலத் தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை

#1028
சோர்ந்துபடாமல் சுபத்திரன் ஏன் தன் குடியைக்
கூர்ந்து பொறுத்தான் குமரேசா சார்ந்து
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
மானம் கருதக் கெடும்

#1029
கண்ட குடும்பத்தைக் காத்து நின்ற பிங்கலன் முன்
கொண்டு உழந்தான் துன்பு ஏன் குமரேசா மண்டும்
இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு

#1030
அன்று கழுவுள் அரும் குடியும் வீழ்ந்தது அவன்
குன்றி நின்ற போது ஏன் குமரேசா துன்றி
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி

@104 அதிகாரம் 104 – உழவு

#1031
மண்டு புகழ் நெற்குன்றவாணர் வருந்தியும் ஏன்
கொண்டார் உழவைக் குமரேசா மண்டிச்
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

#1032
அன்று உழுத சாத்தன் அருமனார் இவ் உலகம்
குன்றாது ஏன் காத்தார் குமரேசா என்றும்
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

#1033
ஏர் உழுது வாழ்தலே இன்பம் என நாரணன் ஏன்
கூர் உவந்து நின்றான் குமரேசா சீரா
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுது உண்டு பின் செல்பவர்

#1034
ஏர் உடைய பண்ணனிடம் ஏனோ பல மன்னர்
கூர் அடைந்து நின்றார் குமரேசா தேரும்
பல குடை நீழலும் தம் குடைக் கீழ் காண்பர்
அலகு உடை நீழலவர்

#1035
ஈதலே செய்தான் எவர்க்கும் இரந்திலன் ஏன்
கோது_இல் வடுகன் குமரேசா யாதும்
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கை செய்து ஊண் மாலையவர்

#1036
ஆதன் உழவை அகன்ற போது ஏன் துறவோர்
கோது அடைந்து நொந்தார் குமரேசா தீது_இல்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கு நிலை

#1037
பண்டு புழுதி எழப் பன்முறையும் பாணதரன்
கொண்டு உழுதான் என்னே குமரேசா கிண்டித்
தொடிப் புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சாலப் படும்

#1038
நீரோடு காப்பை நிறைத்துப் புலவியர் ஏன்
கூர் விளைவு கொண்டார் குமரேசா சீரான
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு

#1039
ஆர்ந்த புகழ் ஆதன் அடிக்கடி போய்த் தன் நிலத்தைக்
கூர்ந்து ஏனோ பார்த்தான் குமரேசா சோர்ந்து தான்
செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடிவிடும்

#1040
உள்ளம் மடிந்து இல்லை என ஓய்ந்திராது ஏன் காரி
கொள்ள முயன்றான் குமரேசா தள்ளி
இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம் என்னும் நல்லாள் நகும்

@105 அதிகாரம் 105 – நல்குரவு

#1041
பண்டு வறுமை படு துயர் என்று ஓடைகிழார்
கொண்டு உழந்தார் என்னே குமரேசா மண்டி நின்ற
இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின்
இன்மையே இன்னாதது

#1042
அன்று வறுமை அடைய இருமையும் ஏன்
குன்றினான் வேமன் குமரேசா என்றுமே
இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்

#1043
மாரி எனும் பாரி மகளிரும் ஏன் நல்குரவால்
கூர் அழிந்து நின்றார் குமரேசா சீர் அமைந்த
தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை

#1044
வீமன் மடையன் என வெற்றி நளன் சூதன் என்று ஏன்
கோமனை முன் போனார் குமரேசா தோம் அகன்ற
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும்

#1045
நல்லிறையர் நல்குரவால் நைந்து பல துன்பங்கள்
கொல்ல நொந்தார் என்னே குமரேசா பொல்லாத
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரைத்
துன்பங்கள் சென்று படும்

#1046
கோடாது இடைக்காடர் கூறினும் சொல் கோடியதே
கூடலிறை முன் ஏன் குமரேசா நாடியே
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும்

#1047
பிள்ளை சுனச்சேபனையும் பெற்றவளும் விற்றாளே
கொள் என நின்று என்னே குமரேசா உள்ளும்
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப்படும்

#1048
நின்ற நிரப்பை நினைந்து அம்பலர் நாதர்
குன்றினார் என்னே குமரேசா கன்றியே
இன்றும் வருவது-கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு

#1049
கண் துஞ்சல் இன்றிக் கரைந்து ஏனோ சந்திரர் முன்
கொண்டு உழந்தார் துன்பம் குமரேசா மண்டும்
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது

#1050
உண்டு திரிந்த உசனை மிடியன் என்று
கொண்டு இகழ்ந்தார் என்னே குமரேசா கண்டு அமைந்த
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று

@106 அதிகாரம் 106 – இரவு

#1051
ஏனோ துணிந்து அன்று இரந்தார் நன்னாகனார்
கோனாம் இயன் முன் குமரேசா தானே
இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்
அவர் பழி தம் பழி அன்று

#1052
ஊன்பொதியார் போந்து இரந்தும் உற்றார் உயர் இன்பம்
கோன் பதி முன் என்னே குமரேசா வான் பொதிந்த
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்

#1053
மண்டு புகழ் ஆதன் மாண்புற்றான் முந்து இரப்பைக்
கொண்டு நின்றும் என்னே குமரேசா கண்டு
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து

#1054
உள்ளம் மகிழ்ந்தார் உலோச்சனார் கிள்ளியிடம்
கொள்ள வந்த போது ஏன் குமரேசா மெள்ள
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார்-மாட்டு

#1055
அன்று எதிர்போய் நின்று ஏனோ ஐயூரர் தாமான் முன்
குன்றாது இரந்தார் குமரேசா என்றும்
கரப்பிலார் வையகத்து உண்மையான் கண் நின்று
இரப்பவர் மேற்கொள்வது

#1056
கண்டார் வளவனை முன் கண்ணனார் காணார் பின்
கொண்ட நிரப்பு ஏன் குமரேசா ஒண்டிக்
கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் நிரப்பு இடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்

#1057
மண்டு புகழ் நள்ளியை ஏன் வன்பரணர் கண்டவுடன்
கொண்டு உவந்தார் உள்ளம் குமரேசா கிண்டி
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து

#1058
எள்ளாது இரவலரை ஏனோ முன் சந்திமான்
கொள்ளப் புரந்தான் குமரேசா உள்ளி
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்த அற்று

#1059
வாடிமன்னன் மள்ளுவர்கோன் வந்து இரந்து மேவினரால்
கூடினர் சீர் என்னே குமரேசா நாடியே
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள்
மேவார் இலாஅக்கடை

#1060
எள்ளி நின்று மோசியார் ஏனோ வெகுளி ஒன்றும்
கொள்ளாது இருந்தார் குமரேசா நள்ளி
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி

@107 அதிகாரம் 107 – இரவச்சம்

#1061
மாறாது அருள் கண்ணன்-மாட்டும் குசேலர் போய்க்
கூறாது ஏன் மீண்டார் குமரேசா தேறிக்
கரவாது உவந்து ஈயும் கண்_அன்னார்-கண்ணும்
இரவாமை கோடி உறும்

#1062
பண்டு இரந்து வாழ்தல் பழி என்று ஏன் நன்கணியார்
கொண்டு அமைந்து நின்றார் குமரேசா ஒண்டி
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்

#1063
அன்று இரந்தும் இன்மை அறாது ஏன் இராமகவி
குன்றி உளைந்தார் குமரேசா என்றுமே
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்

#1064
எள்ளும் மிடியுற்றும் இரவினை முன் பொன்முடியார்
கொள்ளவில்லை என்னே குமரேசா உள்ள
இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம் இல்லாக்
காலும் இரவு ஒல்லாச் சால்பு

#1065
ஒன்றும் இரவாது உழைத்து ஏனோ சேந்தனார்
குன்றாமல் உண்டார் குமரேசா நன்றான
தெள் நீர் அடு புற்கையாயினும் தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல்

#1066
ஏட்டில் இரப்பும் இளிவு என்று ஏன் வள்ளலார்
கோட்டி ஒழிந்தார் குமரேசா நீட்டி நிற்கும்
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்

#1067
எள்ளிக் காப்பாரிடம் ஏன் புகழ்த்துணையார்
கொள்ளாது நின்றார் குமரேசா தள்ளி
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்-மின் என்று

#1068
சார்ந்து இரந்து நின்ற சரவணனார் பின் கரவில்
கூர்ந்து உடைந்தார் என்னே குமரேசா நேர்ந்த
இரவு என்னும் ஏமாப்பு_இல் தோணி கரவு என்னும்
பார் தாக்கப் பக்கு விடும்

#1069
அன்று இரவை எண்ணி அலமந்து தத்துவனார்
குன்றி நின்றார் என்னே குமரேசா என்றும்
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்

#1070
அன்று இரந்து நின்ற அவிநாசியார் கரப்பில்
குன்றி நொந்தார் என்னே குமரேசா நின்று
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்

@108 அதிகாரம் 108 – கயமை

#1071
உற்ற மக்கள் போல உருவு ஒத்தார் ஏன் சவரர்
குற்றமுற்று நின்றார் குமரேசா பெற்று அமைந்த
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன
ஒப்பார் யாம் கண்டது இல்

#1072
பண்டு கவலை இன்றிப் பண்ணியன் ஏன் வெம் களி மீக்கொண்டு
திரிந்தான் குமரேசா கண்டு நின்று
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
நெஞ்சத்து அவலம் இலர்

#1073
உள்ளியவாறு எல்லாம் ஒழுகினான் பஞ்சுகன் முன்
கொள்ளி என நின்று ஏன் குமரேசா தெள்ளிய சீர்த்
தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
மேவன செய்து ஒழுகலான்

#1074
சேர்ந்த சிறியர் முன் செம்மாந்து சேகன் ஏன்
கூர்ந்து மிகுந்தான் குமரேசா தீர்ந்த
அகப் பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்

#1075
நீறு அணிந்து நல்ல நெறியினன் போல் நீமன் ஏன்
கூறி முன் நின்றான் குமரேசா மாறு அமைந்த
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவா உண்டேல் உண்டாம் சிறிது

#1076
அன்று ஏன் மறையை அயல் அறியத் தூற்றினான்
குன்றும் இயல் புஞ்சன் குமரேசா என்றும்
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான்

#1077
உள் இரங்கி ஒன்றும் உதவா மயிலன் ஏன்
கொள்ளைகொள்ளத் தந்தான் குமரேசா தள்ளி என்றும்
ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு

#1078
சொல்லக் கொடாத துரியோதனன் பின்பு ஏன்
கொல்லக் கொடுத்தான் குமரேசா மெல்லப் போய்ச்
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்லப் பயன்படும் கீழ்

#1079
கண்டு துருமன் முன் கண்ணன் மேல் வெம் பழி மீக்
கொண்டு உரைத்தான் என்னே குமரேசா மண்டி
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடுக் காண வற்றாகும் கீழ்

#1080
அன்று துயரம் அடைய அனுகன் ஏன்
குன்றி விலை நின்றான் குமரேசா என்றுமே
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து

@109 அதிகாரம் 109 – தகையணங்குறுத்தல்

#1081
கண்டு அணங்கோ கார் மயிலோ கன்னியோ என்று மால்
கொண்டு நின்றாய் என்னே குமரேசா கொண்ட
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு

#1082
பண்டு எதிர்ந்த தத்தை-தன் பார்வையினால் ஏன் உதயன்
கொண்டு அழிந்தான் உள்ளம் குமரேசா மண்டி நின்று
நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு
தானைக் கொண்ட அன்னது உடைத்து

#1083
கூற்று என்று ஏன் உள்ளம் குலைந்தான் திவிட்டன் முன்
கோல்_தொடி கண் கண்டு குமரேசா தோற்றாத
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
பெண் தகையான் பேர் அமர் கட்டு

#1084
உள்ளம் உருகி உலைந்தார் இலக்கணை கண்
கொள்ள நின்ற போது ஏன் குமரேசா மெள்ள வந்து
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
பேதைக்கு அமர்த்தன கண்

#1085
கண்டான் சகுந்தலையின் கண் நிலையை எண்ணி மன்னன்
கொண்டு அயர்ந்தான் என்னே குமரேசா தண்டாத
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இ மூன்றும் உடைத்து

#1086
நின்ற பிரீதிமதி நீள் கண்ணைக் கண்டு தத்தன்
குன்றி நின்றான் என்னே குமரேசா துன்றிக்
கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
செய்யல-மன் இவள் கண்

#1087
மங்கை நல்லாள் தோன்ற மனமுடைந்தான் வில் விசயன்
கொங்கை நிலை கண்டு ஏன் குமரேசா பொங்கும்
கடாஅக் களிற்றின் மேல் கண் படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில்

#1088
வென்றி மிகு கோசிகனும் மெல்_நுதலைக் கண்டவுடன்
குன்றி நின்றான் என்னே குமரேசா நன்று இசைந்த
ஒள்_நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு

#1089
காதல் சசிமதிக்குக் காமர் அணி ஏதம் என்று ஏன்
கோது அறு கோன் கொண்டான் குமரேசா தீது_இல்
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து

#1090
திண் தோள் இராமன் உயர் சீதையைக் கண்டான் உடனே
கொண்டான் மகிழ்வு ஏன் குமரேசா மொண்டுகொண்டு
உண்டார்-கண் அல்லது அடு நறாக் காமம் போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று

@110 அதிகாரம் 110 குறிப்பறிதல்

#1091
பண்டு பரவை பனி நோக்கால் சுந்தரர் நோய்
கொண்டு உவந்தார் என்னே குமரேசா கொண்ட
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து

#1092
உற்ற உலூபி உறு நோக்கம் தேர்ந்து ஏனோ
கொற்றவன் பின் போனான் குமரேசா பற்றி நின்று
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது

#1093
நோக்கி நின்று கேமசரி நொய்து இறைஞ்சக் காதல் ஏன்
கோக்குமரன் கொண்டான் குமரேசா மேக்கு உவந்து
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்
யாப்பினுள் அட்டிய நீர்

#1094
பீலிவளை ஏன் வளவன் பின் நோக்கி முன் மெல்லக்
கோலி நகைத்தாள் குமரேசா மால் ஆகி
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்

#1095
நாடி எதிர்நோக்காள் நாணி ஏன் சன்மிட்டை
கோடி நகைத்தாள் குமரேசா கூடிக்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தாள் போல நகும்

#1096
காதம்பரியின் கதழ் உரையைக் காதலன் ஏன்
கோது இலது என்று ஓர்ந்தான் குமரேசா ஏதும்
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்
ஒல்லை உணரப்படும்

#1097
உள் அன்புகொண்டும் உருத்து ஏனோ மஞ்சரி முன்
கொள்ள மொழிந்தாள் குமரேசா எள்ளிச்
செறாஅச் சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு

#1098
பண்டு பதுமினி ஏன் பார்த்தவுடன் பசைந்து
கொண்டு நகைத்தாள் குமரேசா கண்ட
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

#1099
காதலுற்றும் ஏதிலள் போல் கங்கை ஏன் நோக்கி நின்றாள்
கோதை வேல் மன்னைக் குமரேசா பூதலத்தில்
ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல்
காதலார்-கண்ணே உள

#1100
வார்த்தை இன்றி நோக்கு ஒன்றால் வாணன் மதனமஞ்சி
கூர்த்து இசைந்தார் என்னே குமரேசா ஆர்த்தி மிகு
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல

@111 அதிகாரம் 111 – புணர்ச்சி மகிழ்தல்

#1101
பண்டு பதுமாபதி-பால் ஏன் ஐம்புலனும்
கொண்டு உவந்தான் இன்பம் குமரேசா மண்டி நின்று
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள

#1102
மாறு அகன்ற கந்தியே மையல் நோய்க்கு உய்தி எனக்
கூறி நின்றான் என்னே குமரேசா மீறும்
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
தன் நோய்க்குத் தானே மருந்து

#1103
மா தவத்துக் காசிபனும் மாயை தோள் ஏன் துயின்று
கோது_இல் வான் நீத்தான் குமரேசா பூதலத்தில்
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு

#1104
அன்று ஊர்வசி நீங்க அல்லலுற்றான் பின் குறுகக்
குன்றாது ஏன் நின்றான் குமரேசா நின்று அயலே
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
தீ யாண்டுப் பெற்றாள் இவள்

#1105
ஏனோ இலக்கணை தோள் எந்நாளும் நீங்காது
கோன் உவந்து கொண்டான் குமரேசா தானாக
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டு ஆர் கதுப்பினாள் தோள்

#1106
பொன்றா அமிழ்து என்று ஏன் போற்றினான் கோவிந்தை
குன்றாத தோளைக் குமரேசா என்றும்
.உறு-தொறு உயிர் தளிர்ப்பத் தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்

#1107
மென் தோள் சுபத்திரையின் மெய் முயக்கை ஏன் விசயன்
குன்றாது உவந்தான் குமரேசா என்றுமே
தம் இல் இருந்து தமது பாத்து உண்டு அற்றால்
அ மா அரிவை முயக்கு

#1108
பண்டு மிருகாபதி முயக்கை ஏன் இனிதாக்
கொண்டு உவந்தான் மன்னன் குமரேசா மண்டியே
வீழும் இருவர்க்கு இனிதே வளி இடை
போழப் படாஅ முயக்கு

#1109
ஊடி உணர்ந்தான் உவந்து ஏன் விமலை நலம்
கூடி நுகர்ந்தான் குமரேசா நாடியே
ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்
கூடியார் பெற்ற பயன்

#1110
சேர்ந்த எழில் கலிங்கசேனையினை ஏன் செறிந்து
கூர்ந்து மகிழ்ந்தான் குமரேசா ஓர்ந்து உள்
அறி-தோறு அறியாமை கண்டு அற்றால் காமம்
செறி-தோறும் சே_இழை-மாட்டு

@112 அதிகாரம் 112 – நலம் புனைந்துரைத்தல்

#1111
வீமன் திரு மடந்தை மெல் நீரள் என்று ஏனோ
கோமான் புகழ்ந்தான் குமரேசா தாமாக
நல் நீரை வாழி அனிச்சமே நின்னினும்
மெல் நீரள் யாம் வீழ்பவள்

#1112
காசு_இல் இராசனையின் கண் மலரை மண் மலர்கள்
கூசின என்றான் ஏன் குமரேசா வீசும்
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
பலர் காணும் பூ ஒக்கும் என்று

#1113
கோதை வெறி நாறும் என்று கூறினான் தென்னவன் தன்
கோதை நலம் கண்டு ஏன் குமரேசா சூத
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேத்தோள் அவட்கு

#1114
காமர் விரிசிகையின் கண் ஒவ்வா நீலம் என்று ஏன்
கோமான் உரைத்தான் குமரேசா ஆம் அதனைக்
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
மாண்_இழை கண் ஒவ்வேம் என்று

#1115
மாது அநங்கவீணை மலர் சூட ஏன் இடைக்குக்
கோது என்று நைந்தான் குமரேசா தாது ஆர்
அனிச்சப் பூக் கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை

#1116
பானுமதி முகமும் பால் மதியும் வேறு அறியான்
கோன் அயர்ந்து ஏன் நின்றான் குமரேசா வான
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

#1117
மானனிகை முகம் போல் வான மதி இல்லை என்று ஏன்
கோன் இகழ்ந்து நின்றான் குமரேசா மேனி
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல
மறு உண்டோ மாதர் முகத்து

#1118
இந்துமதியின் எழில் முகம் போல் வான் மதி ஏன்
கொந்து ஒளி இல் என்றான் குமரேசா சந்ததமும்
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

#1119
காமரு சீர் வேகை முகம் கண்டு ஏன் கலை மதியைக்
கோமான் முனிந்தான் குமரேசா தாம
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின்
பலர் காணத் தோன்றல் மதி

#1120
மாசிலாக் காஞ்சனையின் மாண் அடிகள் பூ மிசையும்
கூசி நின்ற என்னே குமரேசா ஆசு_இல்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

@113 அதிகாரம் 113 – காதல் சிறப்புரைத்தல்

#1121
ஏனோ விசயை இதழ் நீரை வான் அமிழ்தாக்
கோன் உவந்து உண்டான் குமரேசா ஆன் அமைந்த
பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்

#1122
ஆவி என அன்புற்று அமைந்து ஏன் சசியை முன்
கோ உவந்து கொண்டான் குமரேசா மேவும்
உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு

#1123
காதல் பதுமை-தனைக் கண்மணியாக் கொண்டு நின்றான்
கோதை வேல் மன் ஏன் குமரேசா போதும்
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திரு_நுதற்கு இல்லை இடம்

#1124
உற்ற சித்தி வாழ உவந்தான் பிரிவின்-கண்
கொற்றவன் ஏன் நொந்தான் குமரேசா பெற்று அமைந்து
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து

#1125
மண்டு புகழ் சீராமன் மாறாமல் சீதையை உள்
கொண்டு நின்றான் என்னே குமரேசா கொண்டாடி
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
ஒள் அமர்க் கண்ணாள் குணம்

#1126
காந்தருவதத்தை ஏன் காதலனைக் கண்ணுள்ளே
கூர்ந்து வந்து கொண்டாள் குமரேசா சேர்ந்து என்றும்
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம் காதலவர்

#1127
காதலனைக் காணா முன் கண்ணும் எழுதிலள் என்
கோதை சுவேதை குமரேசா போது அலர்ந்த
கண்ணுள்ளார் காதலவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து

#1128
சீர்த்தி மிகு திலகசேனை ஏன் உண்டல் அஞ்சிக்
கூர்த்து அன்புகொண்டாள் குமரேசா போர்த்து அமைந்த
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து

#1129
கன்னி மனோரமை ஏன் கண் இமையாது அன்று இருந்து
கொன்னே முனிந்தாள் குமரேசா மன்னி
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் ஊர்

#1130
ஏதிலர் என்று எள்ளினரை ஏனோ குணமாலை
கோதிலர் காண் என்றாள் குமரேசா போதா
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
ஏதிலர் என்னும் இவ் ஊர்

@114 அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்

#1131
தேசு ஆர் புரஞ்சனன் ஏன் திண் மடலும் ஏற அன்று
கூசாது நின்றான் குமரேசா ஆசு ஆர்ந்த
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடல் அல்லது இல்லை வலி

#1132
நாண் இன்றி ஏனோ நருமன் மடலேறக்
கோணாது எழுந்தான் குமரேசா ஏணோடு
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து

#1133
அன்று ஆண்மை நாணம் அற நீங்கி ஏன் உதயன்
குன்றாது எழுந்தான் குமரேசா நன்றாக
நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல்

#1134
காதல் உளம் கொண்டவுடன் கண்ணனும் ஏன் நாண் இழந்து
கோதை மேல் சென்றான் குமரேசா மீது எழுந்த
காமக் கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல் ஆண்மை என்னும் புணை

#1135
காமர் உயர் வாமனையைக் கண்டான் கருத்துடைந்து
கோ மடல் ஏன் கொண்டான் குமரேசா தோம்_இல்
தொடலைக் குறும்_தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்

#1136
கண்டான் முன் மாளவியைக் கண் உறக்கம் இன்றி மன்னன்
கொண்டான் துயர் ஏன் குமரேசா மண்டி
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண்

#1137
மண்டு பெரும் காமம் மருவி நொந்தும் பத்திரை ஏன்
கொண்டு அடங்கி நின்றாள் குமரேசா கண்ட
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
பெண்ணின் பெரும் தக்கது இல்

#1138
காதல் விலாசவதி காணாது அடக்கியுமே
கோது அலர்ந்தது என்னே குமரேசா மாதர்
நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்
மறை இறந்து மன்று படும்

#1139
காதல் நிலை உலகம் காணக் கனிந்ததே
கோதை-பால் முன் ஏன் குமரேசா யாதும்
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகில் மறுகும் மருண்டு

#1140
கண்டு இடிம்பி காமுற்றாள் காண நின்றார்-தம்மை எலாம்
கொண்டு இகழ்ந்தாள் என்னே குமரேசா மண்டி நின்று
யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம் பட்ட தாம் படாவாறு

@115 அதிகாரம் 115 – அலர் அறிவுறுத்தல்

#1141
ஊர்ந்த அலரை உறுதி எனச் சந்திரன் ஏன்
கூர்ந்து உவந்து கொண்டான் குமரேசா ஆர்ந்த
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
பலர் அறியார் பாக்கியத்தால்

#1142
திண் தோள் இரவிவன்மன் சேர் அலரை ஏன் விழைந்து
கொண்டாடி நின்றான் குமரேசா கண்ட
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர் எமக்கு ஈந்தது இவ் ஊர்

#1143
ஊர் உரைத்த பேர் அலர்தான் உற்றவுடன் சங்கரன் ஏன்
கூர் உவகை கொண்டான் குமரேசா நேரே
உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்று அன்ன நீர்த்து

#1144
நேர்ந்து நின்ற கவ்வை-தனை நீதிபன் ஏன் நன்று என்று
கூர்ந்து உவந்து கொண்டான் குமரேசா சேர்ந்து எழுந்த
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

#1145
பண்டு வெளிப்பட்ட பழி அலரைச் சுச்சுதன் ஏன்
கொண்டு உவந்து நின்றான் குமரேசா மண்டிக்
களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம்
வெளிப்படும்-தோறும் இனிது

#1146
காதல் உயர் கன்னியர்கள் கண்டார் ஒரு நாளே
கோது அலர் ஏன் கொண்டார் குமரேசா ஆதரவாய்க்
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டு அற்று

#1147
ஊர் அலரைத் தாய் உரையை ஓராது ஏன் மாயை முன்
கூர் துயரம் கொண்டாள் குமரேசா சார்புடைய
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்
நீர் ஆக நீளும் இ நோய்

#1148
கோவியர்கள் கௌவை கண்டும் கூசாது ஏன் காமம் மிக்குக்
கூவி உளைந்தார் குமரேசா மேவி நின்று
நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்றால் கௌவையான்
காமம் நுதுப்பேம் எனல்

#1149
காமர் உயர் வேகவதி கண்ட அலர் நாணாது ஏன்
கோமகன் பின் போனாள் குமரேசா தோமா
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார்
பலர் நாண நீத்தக் கடை

#1150
காமர் உருக்குமணி கவ்வை உவந்து ஏன் நின்றாள்
கோமகனை வேண்டிக் குமரேசா சேமமுடன்
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
கௌவை எடுக்கும் இவ் ஊர்

@116 அதிகாரம் 116 – பிரிவாற்றாமை

#1151
கொண்டான் செலவுரையைக் கூற அயிராணி
கொண்டாள் துயர் ஏன் குமரேசா உண்டான
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல் வரவு வாழ்வார்க்கு உரை

#1152
விண்டுமதி மேவி நின்றும் வெம் பிரிவை அஞ்சி என்றும்
கொண்டு உளைந்தாள் என்னே குமரேசா கண்டு உணரின்
இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு

#1153
தேற்றம் அரிது என்று ஏன் தேறிக் கவுசிகையாம்
கோல்_தொடி பின் சென்றாள் குமரேசா ஆற்ற
அரிது அரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவு ஓர் இடத்து உண்மையான்

#1154
சார்ந்து அகன்ற சுந்தரரைச் சங்கிலியார் தேறியும் சீர்
கூர்ந்திருந்தார் என்னே குமரேசா சேர்ந்தே
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியார்க்கு உண்டோ தவறு

#1155
காமர் சுலோசனை ஏன் காதலன்தான் நீங்க உடன்
கோ மறுக மாய்ந்தாள் குமரேசா ஏமமுற
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்
நீங்கின் அரிதால் புணர்வு

#1156
நாதன் பிரிவு உரைத்தான் நல்கார் என்று ஏன் நளினை
கோது_இல் உயிர் நீத்தாள் குமரேசா ஏதும்
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்
நல்குவர் என்னும் நசை

#1157
மேனி மெலிந்து ஆதிரை ஏன் மெல் வளை கை வீழ நின்றாள்
கோன் இகந்த போது குமரேசா தானே
துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை
இறை இறவாநின்ற வளை

#1158
மண்டு புகழ்க் கண்ணகி ஏன் மாண்டாள் மதுரையினில்
கொண்டான் பிரியக் குமரேசா தண்டாமல்
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு

#1159
ஏனோ வெம் தீயும் இனிது என்றாள் மான வதி
கோன் அகன்ற போது குமரேசா தானே
தொடின் சுடின் அல்லது காம நோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ

#1160
காதல் பதுமை ஏன் காதலன் பின் வாழாமல்
கோது_இல் உயிர் நீத்தாள் குமரேசா ஏதம்
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கிப் பிரிவு ஆற்றிப்
பின் இருந்து வாழ்வார் பலர்

@117 அதிகாரம் 117 – படர்மெலிந்திரங்கல்

#1161
நேர்ந்து நின்ற நோயை நிறை மறைத்தும் பாமதி-பால்
கூர்ந்து எழுந்தது என்னே குமரேசா சேர்ந்து
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர் போல மிகும்

#1162
மண்டும் எழில் கனகமாலை மறையாமல்
கொண்டு உழந்தாள் நோய் ஏன் குமரேசா தண்டிக்
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்

#1163
காமர் உயர் மத்திரை ஏன் காமமுடன் நாணும் அடக்
கோமனையுள் நொந்தாள் குமரேசா ஏமமுறக்
காமமும் நாணும் உயிர் காவாத் தூங்கும் என்
நோனா உடம்பின் அகத்து

#1164
கண்டு நின்ற காமம் கடல் என்று தத்தை உளம்
கொண்டு நொந்தாள் என்னே குமரேசா மண்டி எழு
காமக் கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
ஏமப் புணை-மன்னும் இல்

#1165
காதல் சுநந்தை கடிந்து ஏனோ தோழியரைக்
கோதுடையர் என்றாள் குமரேசா மோதி வரு
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
நட்பினுள் ஆற்றுபவர்

#1166
கூடி நின்று கேமசரி கோது_இல் இன்பம் துய்த்தாள் பின்
கோடி துன்பு ஏன் கொண்டாள் குமரேசா கூடுங்கால்
இன்பம் கடல் மற்றுக் காமம் அஃது அடுங்கால்
துன்பம் அதனின் பெரிது

#1167
நள்ளிரவிலும் துயிலை நண்ணாது சீர்த்தி ஏன்
கொள்ளைநோய் கொண்டாள் குமரேசா தள்ள அரிய
காமக் கடும் புனல் நீந்திக் கரை காணேன்
யாமத்தும் யானே உளேன்

#1168
தேவி திலோத்தமை ஏன் தேம்பித் தனி இரவும்
கூவி இருந்தாள் குமரேசா மேவி நின்ற
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை

#1169
மாறு_இல் உயர் லீலாவதி இரவை ஏன் கொடிதாக்
கூறி உளைந்தாள் குமரேசா சீறும்
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
நெடிய கழியும் இரா

#1170
மன்னன் பிரிய மறுகி யசோதரை ஏன்
கொன்னே அழுதாள் குமரேசா முன் நாடி
உள்ளம் போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ள நீர்
நீந்தல-மன்னோ என் கண்

@118 அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்

#1171
காதலனைக் கண்ட கண்ணைக் காமர் சுதஞ்சனை ஏன்
கோதுடையது என்றாள் குமரேசா ஆதரம் கொள்
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது

#1172
கண்டு அழுத கண்ணைக் கமலை கடுத்து நின்று
கொண்டு இகழ்ந்தாள் என்னே குமரேசா பண்டு
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணராப்
பைதல் உழப்பது எவன்

#1173
மேவிக் கலுழ்ந்த கண்ணை விந்தை இகழ்ந்து ஏனோ
கூவி நகைத்தாள் குமரேசா தாவிக்
கதுமெனத் தாம் நோக்கித் தாமே கலுழும்
இது நகத் தக்கது உடைத்து

#1174
ஆதிமந்தி ஏனோ அழுது அலைந்து நீர் உலந்து
கோது உழந்து நொந்தாள் குமரேசா ஏதும்
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு_இல் நோய் என் கண் நிறுத்து

#1175
நோதலுற்ற தன் கண்ணை நோக்கி இகழ்ந்தாள் ஏன்
கோதை பதுமை குமரேசா ஏதும்
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றாக்
காமநோய் செய்த என் கண்

#1176
பண்டு இனிது என்று ஏனோ பகவதி தன் கண் கலக்கம்
கொண்டு உவந்து நின்றாள் குமரேசா தண்டாமல்
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண்
தாஅம் இதற்பட்டது

#1177
கீர்த்தி மிகு நீலகேசி ஏன் தன் கண்ணைக்
கூர்த்து இகழ்ந்து வைதாள் குமரேசா வேர்த்தே
உழந்துழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து
வேண்டி அவர் கண்ட கண்

#1178
கை அகன்ற காதலனைக் காண விழைந்து ஏன் உளைந்தாள்
கொய் மலர்ப் பூங்கோதை குமரேசா மெய்யாகப்
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்
காணாது அமைவு இல கண்

#1179
உற்ற பின்னும் ஏனோ உறங்காமல் ஊர்மிளை தன்
கொற்றவனை ஓர்ந்தாள் குமரேசா பற்று அமைந்து
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண்

#1180
உள்ள மறை தூதை முன் ஊர் அறிந்தது என்று நாண்
கொள்ள நின்றாள் என்னே குமரேசா கள்ள
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்
அறை பறை கண்ணார் அகத்து

@119 அதிகாரம் 119 – பசப்புறு பருவரல்

#1181
நேர்ந்து விடைகொடுத்த நிப்புதி பின் வெம் பசலை
கூர்ந்து உளைந்தாள் என்னே குமரேசா சார்ந்து
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என்
பண்பு யார்க்கு உரைக்க பிற

#1182
சார்ந்த வெள்ளிவீதியார்-தம் மீது வெம் பசலை
கூர்ந்து இவர்ந்தது என்னே குமரேசா நேர்ந்த
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
மேனி மேல் ஊரும் பசப்பு

#1183
உள்ள நாண் சாயல் ஒருங்கு இழந்து சாந்தை ஏன்
கொள்ளைநோய் கொண்டாள் குமரேசா தள்ள அரிய
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து

#1184
தேசு மிகு கனகசித்திரை ஏன் வெம் பசப்பைக்
கூசி உளைந்தாள் குமரேசா நேசம் மிக
உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு

#1185
மேனி பசந்து மெலிந்தாள் விந்தை தன்
கோன் அகன்ற போது ஏன் குமரேசா ஏனோ
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்
மேனி பசப்பு ஊர்வது

#1186
காமர் உயர் சாருகாசினி ஏன் மெய் பசந்தாள்
கோமகன் நீங்கா முன் குமரேசா தாம
விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு

#1187
மெள்ள அகன்றவுடன் மேனி பசந்தாள் சுதை ஏன்
கொள்ளைநோய் கொண்டாள் குமரேசா உள்ளமுறப்
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக் கொள்வு அற்றே பசப்பு

#1188
மாசில் உயர் விநயமாலை பசந்து பின்
கூசி நொந்தாள் என்னே குமரேசா மூசிப்
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர் என்பார் இல்

#1189
ஓர்ந்த சுநந்தை உடல் பசந்தாள் பின் துணையைக்
கூர்ந்து ஏன் முனிந்தாள் குமரேசா சேர்ந்து
பசக்க-மன் பட்டாங்கு என் மேனி நயப்பித்தார்
நன் நிலையர் ஆவர் எனின்

#1190
கண்ட பசப்பு ஊர்ந்திருந்தும் காந்திமதி பேணி நின்றாள்
கொண்டவனை என்னே குமரேசா உண்ட
பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்

@120 அதிகாரம் 120 – தனிப்படர் மிகுதி

#1191
கொண்டான் விழைந்து வந்து கொண்ட பின்பே நீலபதி
கொண்டாள் இன்பு என்னே குமரேசா தண்டாதே
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழ்_இல் கனி

#1192
சீராமன் வந்து அருளச் சீதை ஏன் முந்து உவந்தாள்
கூர் ஆர் நெடு வேல் குமரேசா நேராக
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி

#1193
வீழ்ந்த மதன் வந்த பின்பே மெல் இரதி வாழ்வு வந்து
கூர்ந்து நின்றாள் என்னே குமரேசா சேர்ந்து தாம்
வீழுநர் வீழப்படுவர்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு

#1194
அன்று துணைவன் அழல இரேணுகை ஏன்
குன்றி உளைந்தாள் குமரேசா என்றுமே
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்
வீழப்படாஅர் எனின்

#1195
காதலன் தன் காதலை முன் காணாமல் கண்ணகியாம்
கோதை நொந்தாள் என்னே குமரேசா ஆதரவாய்
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாம் காதல் கொள்ளாக்கடை

#1196
பண்டு அம்பை காமம் பரித்து உளைந்து துன்பக் மீக்
கொண்டாள் ஈது என்னே குமரேசா கண்ட
ஒருதலையான் இன்னாது காமம் காப் போல
இருதலையானும் இனிது

#1197
காதல் உயர் பதுமை காமனை ஏன் முன் இகழ்ந்து
கோதுபட வைதாள் குமரேசா யாதும்
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
ஒருவர்-கண் நின்று ஒழுகுவான்

#1198
காதலன்-பால் இன்சொல்லைக் காணாச் சுநீதி ஏன்
கோது என்றாள் வாழ்வைக் குமரேசா காதலாய்
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்

#1199
காணாது இலக்கணை ஏன் காதலன் சீர் ஆதரவாய்க்
கோணாது கேட்டாள் குமரேசா நாணா
நசைஇயார் நல்கார் எனினும் அவர்-மாட்டு
இசையும் இனிய செவிக்கு

#1200
நேர்ந்த பிரபை ஏன் நெஞ்சு இகழ்ந்தாள் கொண்கனிடம்
கூர்ந்து உரைக்க அஞ்சிக் குமரேசா ஊர்ந்தே
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை
செறாஅய் வாழிய நெஞ்சு

@121 அதிகாரம் 121 – நினைந்தவர் புலம்பல்

#1201
மாதை நினைந்து மகிழ்ந்தான் பெரிதாகக்
கோதை முன் என்னே குமரேசா காதல் இன்பை
உள்ளினும் தீராப் பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது

#1202
பண்டு ஏமகண்டன் தன் பத்தினியை எண்ணி இன்பம்
கொண்டான் ஈது என்னே குமரேசா கண்ட
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
நினைப்ப வருவது ஒன்று இல்

#1203
நேர்ந்த கணவன் நினைந்திலனோ என்று அமலை
கூர்ந்து உளைந்தாள் என்னே குமரேசா ஓர்ந்து
நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்

#1204
தன் நெஞ்சில் தன் துணையைத் தாரை முன் கொண்டு ஏனோ
கொன்னே உளைந்தாள் குமரேசா மன்னியே
யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்

#1205
கண்டாள் தன் நெஞ்சத்தே காதலனை நக்கண்ணை
கொண்டு ஏன் இகழ்ந்தாள் குமரேசா தண்டாமல்
தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல்

#1206
உற்ற துணையை முன் உள்ளி நின்ற நீலி பின்
குற்றம் என்று ஏன் மாண்டாள் குமரேசா பற்று அமைந்து
மற்று யான் என் உளேன்-மன்னோ அவரோடு யான்
உற்ற நாள் உள்ள உளேன்

#1207
என்றும் மறவாது இராவதி ஏன் உள்ளி உளம்
குன்றி உளைந்தாள் குமரேசா நின்று
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்

#1208
காதலனை முன் நினைந்து காய்ந்திலன் என்று ஏன் உவந்தாள்
கோதை வருச்சி குமரேசா மீதாய்
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ
காதலர் செய்யும் சிறப்பு

#1209
மண்டோதரி ஏன் மறுகி உயிர் அழிந்தாள்
கொண்டானை எண்ணிக் குமரேசா தண்டி
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
அளி இன்மை ஆற்ற நினைந்து

#1210
வான் மதியை நோக்கி வசுமதி ஏன் வாழ்த்தினாள்
கோன் உருவைக் காணக் குமரேசா தானே
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி

@122 அதிகாரம் 122 – கனவுநிலை உரைத்தல்

#1211
நேர்ந்த கனவை நிமலை இனிது என முன்
கூர்ந்து உவந்தாள் என்னே குமரேசா சேர்ந்துதான்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன்-கொல் விருந்து

#1212
காமர் சுதன்மை தன் கண் உறங்க முன் நயந்தாள்
கோமனையில் என்னே குமரேசா யாமம்
கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன்-மன்

#1213
உற்ற கனவில் உவந்தாள் வசுந்தரி தன்
கொற்றவனை என்னே குமரேசா பெற்ற
நனவினான் நல்காதவரைக் கனவினான்
காண்டலின் உண்டு என் உயிர்

#1214
கண்டு நின்ற மாயை கனவின்-கண் காம இன்பம்
கொண்டு உவந்தான் என்னே குமரேசா தண்டாக்
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு

#1215
ஏனோ கனவை இனிது என்று பஞ்சசனி
கோன் உவந்து கொண்டாள் குமரேசா ஆன
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது

#1216
உற்ற கனவை உஷை உவந்தாள் ஏன் நனவைக்
குற்றம் என நொந்தாள் குமரேசா மற்ற
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான்
காதலர் நீங்கலர்-மன்

#1217
கண்ட சிகண்டி தன் காதலனை முன் கனவில்
கொண்டு இகழ்ந்தாள் என்னே குமரேசா அண்டி
நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என் எம்மைப் பீழிப்பது

#1218
காமர் உயர் சத்தியை முன் கண் விழித்தாள் கண்டிலளே
கோமகனை என்னே குமரேசா ஏமமாய்த்
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து

#1219
காதலனைத் தன் கனவில் கண்ட குருதத்தை ஏன்
கோது அயல் மேல் சொன்னாள் குமரேசா ஏதும்
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணாதவர்

#1220
கண்டாள் கனவின்-கண் காதலனை மாதவி ஏன்
கொண்டு அயலை நொந்தாள் குமரேசா கண்ட
நனவினான் நம் நீத்தார் என்பர் கனவினான்
காணார்-கொல் இவ் ஊரவர்

@123 அதிகாரம் 123 – பொழுது கண்டிரங்கல்

#1221
மாலை வர வேண்மாள் மறுகி ஏன் வைது இகழ்ந்தாள்
கோல மயில் ஊரும் குமரேசா மேல் எழுந்த
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ வாழி பொழுது

#1222
மாசில் உயர் கேசினி முன் மாலை-தனைக் கண்டவுடன்
கூசி வைதாள் என்னே குமரேசா ஆசுடைய
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை

#1223
மண்டு புகழ் மானவதி மாலை வரத் துன்பம் மீக்
கொண்டு உழந்தாள் என்னே குமரேசா மிண்டிப்
பனி அரும்பிப் பைதல் கொள் மாலை துனி அரும்பித்
துன்பம் வளர வரும்

#1224
மாசில் கிருதாசி மாலை வர அஞ்சி உளம்
கூசி நொந்தாள் என்னே குமரேசா ஆசையுறு
காதலர் இல் வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்

#1225
மாது சுதேட்டிணை ஏன் மாலை-தனை வெம் பகையாக்
கோது உரைத்து நொந்தாள் குமரேசா ஏதேனும்
காலைக்குச் செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
மாலைக்குச் செய்த பகை

#1226
மாசில் உயர் காஞ்சனை முன் மாலை நோய் செய்தது எனக்
கூசி நின்றாள் என்னே குமரேசா வீசியுறு
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்

#1227
மண்டு புகழ்த் திதி ஏன் மாலை வரக் காமநோய்
கொண்டு மிக நொந்தாள் குமரேசா உண்டான
காலை அரும்பிப் பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இ நோய்

#1228
அன்று உயர்ந்த சீமதி ஏன் அந்தி வர அஞ்சி உளம்
குன்றி உளைந்தாள் குமரேசா நின்ற
அழல் போலும் மாலைக்குத் தூது ஆகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை

#1229
மாலை வரின் இவ் ஊர் மறுகும் என மாளவி ஏன்
கோலம் இழந்தாள் குமரேசா சாலப்
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு
மாலை படர்தரும் போழ்து

#1230
அன்று பவித்திரை ஏன் அந்தியின்-கண் உள்ளி உயிர்
குன்றி இருந்தாள் குமரேசா என்றும்
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயும் என் மாயா உயிர்

@124 அதிகாரம் 124 – உறுப்புநலன் அழிதல்

#1231
காமர் சுதட்சிணை ஏன் கண்ணின் நலம் இழந்தாள்
கோமகனை எண்ணிக் குமரேசா தாமே
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி
நறு மலர் நாணின கண்

#1232
தேசு மிகு மாயாதேவி பசந்து கண்
கூசி நொந்தாள் என்னே குமரேசா பேசி
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனி வாரும் கண்

#1233
சாம்பவதி ஏன் தணந்த நாள் தோள் மெலிந்து
கூம்பி இருந்தாள் குமரேசா தேம்பித்
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள்

#1234
பண்டு சயமதி தன் பைம் தொடி சோர்ந்து ஏன் உளைந்தாள்
கொண்டவனை எண்ணிக் குமரேசா கண்ட
பணை நீங்கிப் பைம் தொடி சோரும் துணை நீங்கி
தொல் கவின் வாடிய தோள்

#1235
காமர் தோள் வாடிக் கலுழ்ந்தாள் சிவமதி ஏன்
கோமகனை நாடிக் குமரேசா தாமாக்
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல் கவின் வாடிய தோள்

#1236
மாணிக்கமாலை ஏன் வாடித் தொடி நெகிழ்ந்து
கோணிக் கலுழ்ந்தாள் குமரேசா பூணும்
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரைக்
கொடியர் என கூறல் நொந்து

#1237
சித்திரவல்லி போய்ச் செப்பு என்ன நெஞ்சினுக்கு ஏன்
கொத்துரை முன் சொன்னாள் குமரேசா உத்தமர் முன்
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
வாடு தோள் பூசல் உரைத்து

#1238
பண்டு துணைவி பசந்ததனைச் சிந்துலன் உள்
கொண்டு உளைந்தான் என்னே குமரேசா மண்டி
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைம் தொடிப் பேதை நுதல்

#1239
மேவிய கோன் சற்றே விலக விதர்ப்பை ஏன்
கூவி அழுதாள் குமரேசா நீவும்
முயக்கிடைத் தண் வளி போழப் பசப்புற்ற
பேதை பெரு மழைக் கண்

#1240
காமர் விருந்தை தன் கண் நுதல்கள் ஏன் பசந்த
கோமகன் முன் நீங்கக் குமரேசா தாமம் மிகு
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒள் நுதல் செய்தது கண்டு

@125 அதிகாரம் 125 – நெஞ்சொடு கிளத்தல்

#1241
மாது இரத்தினாவளி ஏன் மையல்நோய் கூர்ந்து நெஞ்சைக்
கோது உரைத்து நொந்தாள் குமரேசா ஏதும்
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து

#1242
பேதை என்று ஏன் நெஞ்சைப் பிரபாவதி இகழ்ந்தாள்
கோதை புனை வேல் குமரேசா நீதமுறு
காதலவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி என் நெஞ்சு

#1243
நாதனை முன் உள்ளி நின்ற நல் நெஞ்சை விந்துமதி
கோது உரைத்தாள் என்னே குமரேசா நீதான்
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்-கண் இல்

#1244
காதலனைக் காணக் கருதி நெஞ்சை வேண்டி நின்றாள்
கோதை நங்கை என்னே குமரேசா போது அலர்ந்த
கண்ணும் கொளச் சேறி நெஞ்சே இவை என்னைத்
தின்னும் அவர் காணல் உற்று

#1245
காமர் குணவதி ஏன் கைவிடாது ஓம்பி நின்றாள்
கோமகன் முன் செற்றும் குமரேசா ஏமம் அறச்
செற்றார் எனக் கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்
உற்றால் உறாஅதவர்

#1246
காய்ந்த தன் நெஞ்சைக் கலாவதி முன் வஞ்சம் என்று
கூர்ந்து இகழ்ந்தாள் என்னே குமரேசா சார்ந்து
கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்து உணராய்
பொய்க் காய்வு காய்தி என் நெஞ்சு

#1247
ஆசையும் நாணும் அடர அயிந்திரை ஏன்
கூசி மொழிந்தாள் குமரேசா ஆசுடைய
காமம் விடு ஒன்றோ நாண் விடு நல் நெஞ்சே
யானோ பொறேன் இவ் இரண்டு

#1248
பண்டு சுரதி பதி பின்னே சென்றது என்று ஏன்
கொண்டு இகழ்ந்தாள் நெஞ்சைக் குமரேசா மண்டிப்
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கிப் பிரிந்தவர்
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு

#1249
சென்ற தன் நெஞ்சைச் சினந்து சுநந்தனி ஏன்
குன்ற மொழிந்தாள் குமரேசா என்றுமே
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
யார் உழைச் சேறி என் நெஞ்சு

#1250
கொண்டானை நெஞ்சகத்தே கொண்டிருந்தும் ஏன் உளைந்தாள்
குண்டலகேசி குமரேசா கொண்டாடித்
துன்னத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ
இன்னும் இழத்தும் கவின்

@126 அதிகாரம் 126 – நிறையழிதல்

#1251
காமம் மிக நாணம் கழன்று ஏன் மதயந்தி
கோமகனைச் சேர்ந்தாள் குமரேசா ஏமமுறு
காமக் கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணுத் தாழ் வீழ்த்த கதவு

#1252
அன்று அனங்கமோகினி ஏன் யாமத்தும் காமம் மிகக்
குன்றி இருந்தாள் குமரேசா துன்றி நின்ற
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

#1253
ஓர்ந்து விசாலை தன் உள் மறைத்தும் காமம் மீக்
கூர்ந்து நின்றது என்னே குமரேசா நேர்ந்து
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றித்
தும்மல் போல் தோன்றிவிடும்

#1254
மாளவி தன் காமம் மறைத்தும் நிறை கடந்து
கோள் அடர்ந்தது என்னே குமரேசா நீள
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
மறை இறந்து மன்றுபடும்

#1255
ஆவலுடன் சென்று அலமந்தாள் ஆவினி தன்
கோவின் பின் என்னே குமரேசா பூவுலகில்
செற்றார் பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவது ஒன்று அன்று

#1256
சென்று நின்ற காதலன் பின் செல்ல நினைந்து ஏன் உளைந்தாள்
குன்றாச் சுகலை குமரேசா கன்றியே
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ
எற்று என்னை உற்ற துயர்

#1257
உள்ள நாண் நீங்கி உரோகிணி ஏன் காமம் மீக்
கொள்ள இருந்தாள் குமரேசா தள்ளாத
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான்
பேணியார் பெட்ப செயின்

#1258
காசு_இல் இராதை ஏன் கண்ணன் பணிமொழியால்
கூசி உளைந்தாள் குமரேசா நேசம் மிகு
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை

#1259
உள்ளம் புலந்திருந்தும் உற்றவுடன் ஏன் சுருதி
கொள்ள அணைந்தாள் குமரேசா தள்ளிப்
புலப்பல் எனச் சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு

#1260
ஊடி நில்லாது ஏனோ உடனே நருமதை முன்
கூடி மகிழ்ந்தாள் குமரேசா நீடி
நிணம் தீயில் இட்டு அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல்

@127 அதிகாரம் 127 – அவர்வயின் விதும்பல்

#1261
சென்ற நாள் எண்ணியெண்ணித் தேம்பி அலம்புசை ஏன்
குன்றி இருந்தாள் குமரேசா நன்று அமைந்த
வாள் அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாள் ஒற்றித் தேய்த்த விரல்

#1262
பண்டு கோப்பெண்டு பதியை மறவாது உள்
கொண்டிருந்தாள் என்னே குமரேசா கண்டாய்
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து

#1263
நாதன் வரவினையே நச்சி நலம் மிகு பூங்
கோதை நின்றாள் என்னே குமரேசா ஓதும்
உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன்

#1264
காமர் சுநீதை ஏன் காமம் மீக்கூர்ந்து நின்றாள்
கோமகனை நாடிக் குமரேசா ஏமமுறக்
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளிக்
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு

#1265
காதலனைக் கண்ட பின்பே காமர் சீமந்தனி தன்
கோது அகன்றாள் என்னே குமரேசா ஏதம் அறக்
காண்க-மன் கொண்கனைக் கண்ணாரக் கண்ட பின்
நீங்கும் என் மென் தோள் பசப்பு

#1266
பண்டு பதி வரவைப் பார்த்து ஏனோ சத்யரதை
கொண்டு உவந்து நின்றாள் குமரேசா மண்டி
வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
பைதல் நோய் எல்லாம் கெட

#1267
மன்னன் வரும் முன் மருதி பல நினைந்தாள்
கொன்னே ஈது என்னே குமரேசா முன்னம்
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
கண் அன்ன கேளிர் வரின்

#1268
வேந்தன் வினை முடிவை வேண்டி விறல் நீலன்
கூர்ந்து நின்றான் என்னே குமரேசா சேர்ந்த
வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து
மாலை அயர்கம் விருந்து

#1269
ஏனோ நாள் எண்ணி இனைவள் என மனையைக்
கோன் அனு முன் தேர்ந்தான் குமரேசா ஆன
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு

#1270
உள்ளி உடையும் என ஓர்ந்து ஏனோ கிள்ளி முனம்
கொள்ள விரைந்தான் குமரேசா அள்ளிப்
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம்
உள்ளம் உடைந்து உக்கக்கால்

@128 அதிகாரம் 128 – குறிப்பறிவுறுத்தல்

#1271
காமர் கனகம் கரந்தும் அவள் கண்ணால்
கோமகன் ஏன் கண்டான் குமரேசா காமம்
கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண்
உரைக்கல் உறுவது ஒன்று உண்டு

#1272
நின்ற திரிமதியின் நீர்மை பெரிது என்று அரிமன்
குன்றாது ஏன் நின்றான் குமரேசா நன்றாகக்
கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்குப்
பெண் நிறைந்த நீர்மை பெரிது

#1273
ஏனோ கமலவதி இன் அணியில் உண்டு என்று
கோன் ஓகைகொண்டான் குமரேசா ஆன
மணியில் திகழ்தரும் நூல் போல் மடந்தை
அணியில் திகழ்வது ஒன்று உண்டு

#1274
உண்டு நயம் என்ன உவந்தான் சுதமதி உள்
கொண்ட நகை கண்டு ஏன் குமரேசா மிண்டு
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு

#1275
உண்டு மருந்து என்று உவந்தான் முகுந்தை முன்
கொண்ட செயல் கண்டு ஏன் குமரேசா மண்டிச்
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து

#1276
கண்டு கணவன் கலந்திருந்தும் காந்திகை ஏன்
கொண்டு கவன்றாள் குமரேசா மண்டிப்
பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல் அரிது ஆற்றி
அன்பு இன்மை சூழ்வது உடைத்து

#1277
காமர் உயர் காளிந்தி கைவளை போய் நொந்தாள் ஏன்
கோமகன் முன் நீங்கக் குமரேசா ஏமம் மிகு
தண்ணந்துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை

#1278
காதலனார் நீங்கும் முன்னே காஞ்சனி தன் மெய் பசந்து
கோது உழந்தாள் என்னே குமரேசா போத
நெருநற்றுச் சென்றார் எம் காதலர் யாமும்
எழு நாளேம் மேனி பசந்து

#1279
சேவடியும் மென் தோளும் தேவகி முன் நோக்கி நின்றாள்
கோ அகலும் என்று ஏன் குமரேசா மேவும்
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி
அஃது ஆண்டு அவள் செய்தது

#1280
உண்டான பெண்மையுடையள் என இந்திரை ஏன்
கொண்டாட நின்றாள் குமரேசா தண்டாத
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
காமநோய் சொல்லி இரவு

@129 அதிகாரம் 129 – புணர்ச்சி விதும்பல்

#1281
கண்டு மகிழ்ந்து களித் தங்கி காதலி முன்
கொண்டு உவந்தாள் என்னே குமரேசா தண்டாமல்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு

#1282
ஊடாது அயிராவதி உவந்தாள் காதலன் தான்
கூடா முன் என்னே குமரேசா நாடித்
தினைத் துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்
காமம் நிறைய வரின்

#1283
பேணாது போன உனைப் பேணி ஏன் தெய்வானை
கோணாது நின்றார் குமரேசா வீணாகப்
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண்

#1284
ஊடி நின்றும் கௌதமி ஏன் உற்றவுடன் நாயகனைக்
கூடி மகிழ்ந்தாள் குமரேசா கோடியே
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து
கூடல்-கண் சென்றது என் நெஞ்சு

#1285
கான் இகந்த வன் பழியைக் காணாள் தமயந்தி
கோன் அடைந்த போது ஏன் குமரேசா தானா
எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து

#1286
கண்டவுடன் ஓர் தவறும் காணாமல் ஏன் எயிற்றி
கொண்டாள் உவந்து குமரேசா மண்டி எதிர்
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால்
காணேன் தவறு அல்லவை

#1287
பானுமதி புலந்தும் பாணித்து நில்லாது ஏன்
கோன் உவந்து சேர்ந்தாள் குமரேசா தானாக
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
பொய்த்தல் அறிந்து என் புலந்து

#1288
காதலே கொண்டு களித்தாள் குமுதம் கோன்
கோது செய்தும் என்னே குமரேசா மோதி
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள் அற்றே கள்வ நின் மார்பு

#1289
காமத்தின் செவ்வி கழறி மறுகினான்
கோமான் குசன் ஏன் குமரேசா தாம
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார்

#1290
மாரிடை முன் உள்ளம் மறுகித் துணையினும் மால்
கூர நின்றாள் என்னே குமரேசா ஏர் அமைந்த
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான் விதுப்புற்று

@130 அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல்

#1291
சாலி புலந்து ஏனோ தன் நெஞ்சை நோக்கி அன்று
கோலி இகழ்ந்தாள் குமரேசா ஏலும்
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது

#1292
சென்று நின்ற தன் நெஞ்சைச் சீறி ஏன் ஔசீநை
குன்ற மொழிந்தாள் குமரேசா என்றும்
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரைச்
செறாஅர் எனச் சேறி என் நெஞ்சு

#1293
கொண்டான் பின் சென்ற நெஞ்சைக் கோமளம் முன் நொந்து இகழ்ந்து
கொண்டாள் ஈது என்னே குமரேசா திண்டாடிக்
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
பெட்டு ஆங்கு அவர் பின் செலல்

#1294
நின்று புலவாத நெஞ்சை நிலாவதி ஏன்
குன்ற இகழ்ந்தாள் குமரேசா ஒன்றி
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
துனி செய்து துவ்வாய் காண் மற்று

#1295
மாசில்லா மாண்டவி ஏன் மன் பிரிவை அஞ்சி என்றும்
கூசி உளைந்தாள் குமரேசா பேசின்
பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு

#1296
நேர்ந்து தனி இருந்து நெஞ்சு உளைந்தாள் அஞ்சனை முன்
கூர்ந்து நினைந்து ஏன் குமரேசா சார்ந்து
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்தது என் நெஞ்சு

#1297
காதலனையே நினைந்து காந்தினி முன் நாண் இழந்து
கோது உழந்தாள் என்னே குமரேசா தீது இலா
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு

#1298
எள்ளாது இரேவதி ஏன் எண்ணியெண்ணி நாயகனைக்
கொள்ள விரைந்தாள் குமரேசா தள்ளியே
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
உள்ளும் உயிர்க் காதல் நெஞ்சு

#1299
ஓர் துணையும் இல்லை என உள்ளுடைந்து கிள்ளி ஏன்
கூர் துயரம் கொண்டான் குமரேசா நேர் வந்த
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய
நெஞ்சம் துணை அல்வழி

#1300
வஞ்சி அசோதை வறிது இருந்தாள் நந்தன் ஏன்
கொஞ்சி உள் நொந்தான் குமரேசா அஞ்சி அமர்
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய
நெஞ்சம் தமர் அல்வழி

@131 அதிகாரம் 131 – புலவி

#1301
போந்து சயந்தி புலந்து முன் புல்லாமல்
கூர்ந்திருந்தாள் என்னே குமரேசா சார்ந்துதான்
புல்லாது இராஅப் புலத்தை அவர் உறும்
அல்லல் நோய் காண்கம் சிறிது

#1302
பண்டு புலந்து இருந்த பாமை மேல் நீளாமல்
கொண்டு இசைந்தாள் என்னே குமரேசா உண்டான
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது
மிக்கு அற்றால் நீள விடல்

#1303
சேர்ந்து புலந்தார்-பால் செல்லும் எனத் தேசிகை ஏன்
கூர்ந்து புலந்தாள் குமரேசா ஆர்ந்தே
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்

#1304
ஊடினர்-பால் போம் என்று உருத்து மதயந்தி
கோடி நின்றாள் என்னே குமரேசா கூடியே
ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்து அற்று

#1305
பூ அனைய உண்கண் புதவி புலந்ததை ஏன்
கோ உவந்து கொண்டான் குமரேசா மேவும்
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூ அன்ன கண்ணார் அகத்து

#1306
திண் தோள் விசயன் ஏன் சித்ராங்கி செய் துனியைக்
கொண்டான் உவந்து குமரேசா கொண்ட
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று

#1307
ஊடிப் பரவை உறைந்து இருந்தாள் சுந்தரர் ஏன்
கோடி அலைந்தார் குமரேசா நாடிய
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது
நீடுவது அன்று-கொல் என்று

#1308
பண்டு பதுமாபதி புலந்த போது உதயன்
கொண்டு நொந்தான் என்னே குமரேசா தண்டி நின்று
நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
காதலர் இல்லா வழி

#1309
ஏற்ற புலவி இனிது என்று உரோகிதன் ஏன்
கோல்_தொடி முன் கொண்டான் குமரேசா ஊற்று அமைந்த
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர்-கண்ணே இனிது

#1310
ஊடிச் சுதாரை உளைந்தாள் உடையவன் ஏன்
கூட விழைந்தான் குமரேசா கோடியே
ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா

@132 அதிகாரம் 132 – புலவி நுணுக்கம்

#1311
பண்டு பொருந்தேன் பரத்த என ஏன் தருமை
கொண்டு புலந்தாள் குமரேசா கண்டு நின்ற
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு

#1312
காதலனார் தும்மியதைக் காமர் சவுந்தரி ஏன்
கோது என்று கொண்டாள் குமரேசா வாதாடி
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து

#1313
போந்து மெய் நீவிப் புனைந்தான் வசந்தை ஏன்
கூர்ந்து சிவந்தாள் குமரேசா சேர்ந்து நின்று
கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூட்டினீர் என்று

#1314
மேரு ஏன் ஊடி மெலிந்தாள் கொழுநன் அன்பு
கூர மொழிந்தும் குமரேசா நேராக
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

#1315
நின்னை இவண் பிரியேன் என்ன நளாயினி ஏன்
கொன்னே அழுதாள் குமரேசா மன்னிய
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா
கண் நிறை நீர் கொண்டனள்

#1316
மாறி மறந்தது என மாயாவதி புலந்து
கூறினாள் என்னே குமரேசா தேறியே
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
புல்லாள் புலத்தக்கனள்

#1317
காதலன் முன் தும்மக் கலங்கிச் சுபாங்கி ஏன்
கோது என்று அழுதாள் குமரேசா மீதா
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
யார் உள்ளித் தும்மினீர் என்று

#1318
காவலன் முன் தும்மக் கனகவதி கண் சிவந்து ஏன்
கோ என்று அழுதாள் குமரேசா மேவுகின்ற
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று

#1319
மாசில் உயர் சோதிமாலை தனை உணர்த்தக்
கூசி ஏன் காய்ந்தாள் குமரேசா ஆசையொடு
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று

#1320
சார்ந்து மன் நோக்கினான் சாருமதி காய்ந்து முன்
கூர்ந்து இகழ்ந்தாள் என்னே குமரேசா நேர்ந்து
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
யார் உள்ளி நோக்கினீர் என்று

@133 அதிகாரம் 133 – ஊடலுவகை

#1321
ஓர் தவறும் காணாமல் ஊடித் தபதி ஏன்
கூர் துனி முன் கொண்டாள் குமரேசா நேர் ஒன்றும்
இல்லை தவறு அவர்க்காயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு

#1322
ஊடல் இனிது என்று உவந்து புவனை ஏன்
கோடி இருந்தாள் குமரேசா நீடிய
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி
வாடினும் பாடு பெறும்

#1323
கண்ட புலவியினைக் காந்திமதி இன்பம் எனக்
கொண்டாடினாள் ஏன் குமரேசா மண்டிப்
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
நீர் இயைந்து அன்னார் அகத்து

#1324
நேர்ந்த புலவியில் என் நெஞ்சு உடைந்தது என்று சதி
கூர்ந்து சொன்னாள் என்னே குமரேசா சார்ந்து வந்து
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும் என்
உள்ளம் உடைக்கும் படை

#1325
அன்று புலந்து அகன்றும் அங்கன் ஏன் இன்ப நலம்
குன்றாது உவந்தான் குமரேசா ஒன்றும்
தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து

#1326
ஊடுதலால் பேரின்பம் உற்றார் ஏன் நீலகண்டர்
கூடுதலை விட்டும் குமரேசா நாடி
உணலினும் உண்டது அறல் இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

#1327
நேர்ந்த புலவி எதிர்நேராத பத்திராய்
கூர்ந்து வென்றான் என்னே குமரேசா சேர்ந்து எழுந்த
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலின் காணப்படும்

#1328
ஊடல் இனிது என்று வந்து ஏன் வசுமனா
கூடல் விழைந்தான் குமரேசா நாடியே
ஊடிப் பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்பக்
கூடலின் தோன்றிய உப்பு

#1329
பண்டு ஏனோ ஊடுதலைப் பாண்டியன் முன் வேண்டி உளம்
கொண்டாடி நின்றான் குமரேசா தண்டாமல்
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப
நீடுக-மன்னோ இரா

#1330
ஊடி உருக்குமணி உள் இசைந்தாள் கண்ணன் ஏன்
கூடி மகிழ்ந்தான் குமரேசா கோடியே
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
கூடி முயங்கப் பெறின்
**** திருக்குறட் குமரேச வெண்பா முற்றிற்று