எழுதி முடித்த நூல்கள்

1. இளைஞர்க்கான பத்துப்பாட்டு – தொகுதி -1 இத் தொகுதியில் பத்துப்பாட்டின் ஆற்றுப்படை நூல்களான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை ஆகிய ஐந்து நூல்களுக்கான விளக்கங்கள் எளிய நடையில் அமைந்துள்ளன. தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் படிக்கலாம். குறிப்பாக மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது இந் நூல். ஒவ்வொரு நூலைப் பற்றிய உரைநடைச் சுருக்கமும், பாடலில் அமைந்துள்ள சில காட்சிகளின் சிறப்பும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே படங்கள் மூலமும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. 2. இளைஞர்க்கான பத்துப்பாட்டு – தொகுதி -2 இத் தொகுதியில், பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்களைத் தவிர்த்த ஏனைய முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய ஐந்து நூல்களுக்கான விளக்கங்கள் எளிய நடையில் அமைந்துள்ளன. பாடல்களின் உரைநடைச் சுருக்கமும், சில குறிப்பிட்ட காட்சிகளின் சிறப்புத்தன்மைகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவும்…

Read More

எழுதிக்கொண்டிருக்கும் நூல்கள்

1. மல்லல் மூதூர் மதுரை இந்நூல் மதுரையைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் கொண்டுள்ளதாக எழுதப்படு வருகிறது. வரலாற்று ஆவணங்களில் மதுரை, கல்வெட்டுகளில் மதுரை, புராண இதிகாசங்களில் மதுரை, இலக்கியங்களில் மதுரை ஆகிய பலதலைப்புகளில் மதுரையின் வரலாறு ஆயப்படுகிறது. மதுரை நகரின் பண்டைய தோற்றமும், அதன் வளர்ச்சியும் விரிவாக ஆயப்படுகின்றன. காலந்தோறும் மதுரை மக்களின் வாழ்க்கை முறையும் ஆயப்படுகிறது. முற்கால மதுரை, இடைக்கால மதுரை, தற்கால மதுரை என்ற மூன்று பெரும் பிரிவுகளில் ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன. முற்கால மதுரை ஏறக்குறைய முடியுந்தறுவாயில் உள்ளது. 2. சங்கச் சொல்வளம் இத் தலைப்பில் மின்தமிழ் கூகுள் குழுமத்தில் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமையும். நகர்வுகள், அசைவுகள், அஞ்சுதல், உண்ணுதல், உணவுவகைகள் என்ற தலைப்பில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மேலும் பல தலைப்புகளில் கட்டுரைகள் உருவாகி வருகின்றன. நூலின் பல…

Read More