அகநானூறு 101-125

#101 பாலை மாமூலனார்#101 பாலை மாமூலனார்
அம்ம வாழி தோழி இம்மைநான் கூறுவதைக் கேள், வாழ்க, தோழியே! இப்பிறப்பில்
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்நன்மை செய்யுமிடத்திற்குத் தீமை வருவதில்லை என்கிற
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல்தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி இன்று பொய்த்துப்போய்விட்டதோ?
தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்தசெம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினைப் போன்று சுற்றிக்கொண்டு சுருண்டுபோயுள்ள
சுவல் மாய் பித்தை செம் கண் மழவர்பிடரியை மறைக்கும் தலைமயிரினையும், சிவந்த கண்களையும் உடைய மழவர்கள்
வாய் பகை கடியும் மண்ணொடு கடும் திறல்வாய்க்குப்பகையாகிய இருமலைத் தவிர்க்க புற்றுமண்ணை வாய்க்குள் அடக்கிக்கொண்டு, கடும் திறன்வாய்ந்த
தீ படு சிறு கோல் வில்லொடு பற்றிதீயை உண்டாக்கும் சிறிய அம்பினை வில்லுடன் கையில் பிடித்துக்கொண்டு
நுரை தெரி மத்தம் கொளீஇ நிரை புறத்துவெண்ணெய் வரக் கடையும் மத்தினைக் கவர்ந்துகொண்டு, ஆனிரைகள் இருக்குமிடத்திற்கு
அடி புதை தொடுதோல் பறைய ஏகிபாதங்களை மறைக்கும் செருப்புகள் ஒலியெழுப்பச் சென்று
கடி புலம் கவர்ந்த கன்று உடை கொள்ளையர்காவலையுடைய இடத்தில் கவர்ந்த கன்றுகளுடன் கூடிய ஆனிரைகளைக் கொள்ளையடித்தவர்களாய்
இனம் தலைபெயர்க்கும் நனம் தலை பெரும் காட்டுஅக் கூட்டத்தைக் கூண்டோடு ஓட்டிக்கொண்டுபோகும் அகன்ற வெளிகளைக் கொண்ட பெரிய காட்டில்,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலஅகன்ற வானம் என்னும் கடலுக்கு ஓடம் போன்ற
பகல் இடை நின்ற பல் கதிர் ஞாயிற்றுநடுப்பகலில் காய்ந்த பலகதிர்களையுடைய ஞாயிற்றின்
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடைவெப்பம் விளங்கிப் பரக்கச் சுழன்றுவரும் மேல் காற்றினால்
புன் கால் முருங்கை ஊழ் கழி பன் மலர்உறுதியற்ற அடிமரத்தினைக் கொண்ட முருங்கையின் முதிர்ந்து கழியும் பல மலர்கள்
தண் கார் ஆலியின் தாவன உதிரும்குளிர்ந்த முகிலினின்றும் உதிருகின்ற ஆலங்கட்டிகளைப் போலப் பரவி உதிருகின்ற
பனி படு பன் மலை இறந்தோர்க்குநடுக்கம்தரும் பல மலைகளைக் கடந்து சென்ற நம் தலைவர்க்கு
முனி_தகு பண்பு யாம் செய்தன்றோ இலமேவெறுக்கத்தக்க செயலை நாம் செய்யவில்லையே – (நாம் நன்றுதானே செய்தோம், அவர் பிரிந்து சென்றாரே!)
  
#102 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தம் கூத்தன்#102 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தம் கூத்தன்
உளை மான் துப்பின் ஓங்கு தினை பெரும் புனத்துபிடரிமயிரினையுடைய சிங்கம்போன்ற வலிமையோடு, உயர்ந்து வளர்ந்த தினைப்பயிரைக்கொண்ட பெரிய புனத்தின்
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்து எனபரண்மேலிருக்கும் குறவன் கள்ளினை உண்டு மகிழ்ந்திருக்க,
உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்புபூசிய மயிர்ச் சந்தனத்தையுடைய பரந்த கரிய தனது கூந்தலை
ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயராமெல்ல இயங்குகின்ற காற்றானது புகுந்து புலர்த்த, கையைத் தூக்கி
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சிதழைத்து நீண்ட அம்மயிரினைக் கோதியவளாய், கொடிச்சியானவள்
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாடபெரிய மலையின் பக்கத்தில் குறிஞ்சிப்பண்ணைப் பாட
குரலும் கொள்ளாது நிலையினும் பெயராதுதினையையும் தின்னாமல், இருந்த இடத்தைவிட்டு நகராமல்
படாஅ பைம் கண் பாடு பெற்று ஒய்யெனதூக்கம் வரப்பெறாத தனது பசிய கண்களும் தூக்கம் வரப்பெற்று, விரைவாக
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்முரட்டுத்தனத்தையே மிகவும் விரும்புகின்ற இளைய களிறு தூங்குகின்ற நாட்டையுடைய நம் தலைவன்
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்பசந்தனம் பூசிய தனது மார்பினில் அழகிய வண்டுகள் ஒலிக்க,
தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன்மார்பிலும் தலையிலும் மாலைகளைச் சூடியவனாய், வலக்கையினில் வேலைப் பிடித்தவனாய்
காவலர் அறிதல் ஓம்பி பையெனகாவலர் கண்டுபிடிப்பதைத் தவிர்த்து, மெதுவாக,
வீழா கதவம் அசையினன் புகுதந்துதாழ்ப்பாள் போடாத கதவினருகே தங்கி, உள்ளே புகுந்து
உயங்கு படர் அகலம் முயங்கி தோள் மணந்துவருந்துகின்ற துன்பம் நீங்க அணைத்து, தோளின் மேல் பொருந்தி
இன் சொல் அளைஇ பெயர்ந்தனன் தோழிஇனிய சொற்களைக் கலந்து பேசிவிட்டுச் சென்றான், தோழியே!
இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன்நாம் ஏனோ காண்கின்றோம், இன்று ஒருநாள் அவன்
நல்காமையின் அம்பல் ஆகிவந்து நமக்கு அருள்செய்யாமற்போய்விட்டதால், ஊராருக்குத்தெரிந்து அவர்கள் பழித்துப்பேசும்படியாக ஆகி
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்அனைவரும் கூடி மகிழ்ச்சிகொள்வதற்குக் காரணமாக, 
இரும் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பேகரியவாய்ச் சூழ்ந்திருக்கும் கூந்தல் புரளும் நமது ஒளிவிடும் நெற்றியில் இந்தப் பசலையை (நாம் ஏனோ காண்கின்றோம்)
  
#103 பாலை காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார்#103 பாலை காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார்
நிழல் அறு நனம் தலை எழால் ஏறு குறித்தநிழலே இல்லாத அகன்ற பாலை நிலைப்பரப்பினில் வல்லூறினால் பாய்வதற்குக் குறிவைக்கப்பட்ட
கதிர்த்த சென்னி நுணங்கு செம் நாவின்ஒளிவிடும் தலையினையும் நுணுகிய சிவந்த நாவினையும்
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறிஅள்ளித்தெளித்தாற் போன்ற அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளையும் உடைய
காமர் சேவல் ஏமம் சேப்பஅழகிய குரும்பூழ்ச் சேவலானது, பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தங்க எண்ணி
முளி அரில் புலம்ப போகி முனாஅதுதான் மறைந்திருந்த உலர்ந்த புதர் தனித்துக்கிடக்கும்படி பறந்து போய், தன் முன்னாலிருக்கும்
முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்துவன்னிலத்தைச் சார்ந்திருந்த மிகவும் பழைமையான பெரிய மன்றத்தில்
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடிஆறலை கள்வர் வழிப்போக்கரை எதிர்பார்த்து தங்கியிருக்கும் பசுக்களையுடைய சிற்றூரில்,
உறையுநர் போகிய ஓங்கு இலை வியன் மனைகுடியிருப்போர் விட்டுப்போன உயர்ந்த நிலையினையுடைய பெரிய பாழ்மனையின்
இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும்கூரை இறப்பின் நிழலில் ஒரு பக்கமாய்த் தங்கி, தனிமையால் பெருமூச்செறிந்திருக்கும்
வெம் முனை அரும் சுரம் நீந்தி தம்_வயின்கொடுமையான பகைப்புலத்தின் கடத்தற்கரிய வழிகளைக் கடந்து, தம்மிடத்தே
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் எனகடமையாக வந்து சேர்ந்த பொருள் ஈட்டும் வினையில் மீண்டும் சென்றார் என்று
நள்ளென் யாமத்து உயவு துணை ஆகநள்ளென்ற நடுயாமத்தில் நமக்கு உற்றதுணையாக இருக்கும் பொருட்டு
நம்மொடு பசலை நோன்று தம்மொடுநம்முடனே இப்பசலை நோயையும் இதுவரை பொறுத்திருந்து, இப்போது அவரோடு
தானே சென்ற நலனும்தானே போய்விட்ட நமது பெண்மை நலத்தை
நல்கார்-கொல்லோ நாம் நயந்திசினோரேஇனி நமக்கு அருள மாட்டாரோ, நாம் விரும்பும் நம் தலைவர்.
  
#104 முல்லை மதுரை மருதன் இளநாகனார்#104 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
வேந்து வினை முடித்த_காலை தேம் பாய்ந்துவேந்தன் தனது போரினை முடித்த பின்னர், திசைகள் எல்லாம் பறந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்கும் குளிர்ந்த மணங்கமழும் முல்லைநிலத்தில்
வென் வேல் இளையர் இன்புற வலவன்வெற்றி பொருந்திய வேலினையுடைய இளைஞர் இன்பம் அடைய, தேர்ப்பாகன்
வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின்கடிவாளத்தை இழுத்துப் பிடித்துச் செலுத்தாமல், தாற்றுக்கோலைக் குதிரைகள் மீது பாய்ச்சினால்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றாகடல்சூழ்ந்த உலகமே அதன் ஓட்டத்திற்கு ஆற்றாத
நன்னால்கு பூண்ட கடும் பரி நெடும் தேர்மிக்க வேகமுடைய நல்ல நான்கு குதிரைகள் பூட்டப்பெற்ற நீண்ட தேரில்
வாங்கு சினை பொலிய ஏறி புதலஅதன் வளைவான கொடிஞ்சி பொலிவுறுமாறு ஏறி, புதர்களில் படர்ந்த
பூ கொடி அவரை பொய் அதள் அன்னபூக்களையுடைய கொடியின் அவரையின் உள்ளீடற்ற பிஞ்சுகளின் பொய்த்தோல் போன்ற
உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறிஉள்ளீடில்லாத‌ வ‌யிற்றையுடைய‌ வெள்ளாட்டின் வெண்ணிற‌மான‌ குட்டிக‌ள்
மாழ்கி அன்ன தாழ் பெரும் செவியம‌ய‌ங்கி விழுந்தாற் போன்று தாழ்ந்து தொங்குகின்ற‌ பெரிய‌ செவியையுடைன‌வாய்
புன் தலை சிறாரோடு உகளி மன்று உழைபரட்டைத்தலையையுடைய சிறுவர்களோடு குதித்துச் சென்று, ம‌ன்ற‌த்தின் ப‌க்க‌த்திலுள்ள‌
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்க‌வ‌டுப‌ட்ட‌ இலைக‌ளையுடைய‌ ஆத்திம‌ர‌த்தின் அழ‌கிய தளிரைக் கடிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய மாலைசிறிய ஊர்கள் பல பின்னே போய் மறைந்திட, மாலைப்பொழுதில்
இனிது செய்தனையால் எந்தை வாழியஇனியது ஒன்றைச் செய்தாய், எம் பெருமானே, நீர் வாழ்க!
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்நீர்வடியும் கண்ணையுடையவளாய், பலவற்றையும் எண்ணி வெறுத்து வீட்டிலிருக்கும்
ஆய் தொடி அரிவை கூந்தல்ஆராய்ந்தெடுத்த வளையலையுடைய தலைவி தன் கூந்தலில்
போது குரல் அணிய வேய்தந்தோயேமலர்ச் சரங்களை அணிந்துகொள்ளும்படி சூட்டிவிட்டாய்.
  
#105 பாலை தாயங்கண்ணனார்#105 பாலை தாயங்கண்ணனார்
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கைஅக‌ன்ற‌ பாறை அருகில் அரும்புக‌ள் முதிர்ந்த‌ வேங்கையின் ம‌ல‌ரோடு
ஒள் இலை தொடலை தைஇ மெல்லெனஒளிவிடும் ப‌ச்சிலையையும் கலந்து தொடுத்த‌ மாலையைச் சூட்டிவிட்டு, மென்மையாக
நல் வரை நாடன் தன் பாராட்டநல்ல மலைநாடனாகிய தன் காதலன் தன்னைப் பாராட்ட (அவனுடன் போவது)
யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்துஎப்படித்தான் அவளால் முடிந்ததோ? தேனை ஊற்றி,
மணி செய் மண்டை தீம் பால் ஏந்திமணிகள் பதித்த பொன்னாலான பாத்திரத்தில் இனிய பாலினை எடுத்துக்கொண்டு
ஈனா தாயர் மடுப்பவும் உண்ணாள்செவிலித்தாய்மார் ஊட்டிவிடவும், அதனை உண்ணாதவளான அவள்,
நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின்நிழலுள்ள குளம் போல உயர்ந்த மாடங்களைக் கொண்ட எம் மாளிகையிலுள்ள
எம் உடை செல்வமும் உள்ளாள் பொய்ம்மருண்டுபெரிய செல்வத்தையும் பொருட்டாக நினைக்கவில்லை; தன் காதலனின் பொய்யான பேச்சில் மயங்கி,
பந்து புடைப்பு அன்ன பாணி பல் அடிபந்தை அடிப்பதைப் போன்ற தாளத்துக்குப் பொருத்தமான பலவகையான அடியிட்டு நடத்தலையும்,
சில் பரி குதிரை பல் வேல் எழினிமெல்லென்ற ஓட்டத்தையும் உடைய குதிரைகளையும், பெரிய வேற்படையினையும் உடைய எழினி என்பவனின்
கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடி-மார்ஒருகாலத்திலும் கெட்டுப்போகாத வலிமையினால் தமக்குப் பணித்த தொழிலைச் செய்து முடிக்கும் பொருட்டு
கனை எரி நடந்த கல் காய் கானத்துமிகுந்த தீப்போன்ற கதிர்கள் பரவிப் பாறைகள் சுடுகின்ற காட்டில்
வினை வல் அம்பின் விழு தொடை மறவர்தமது தொழிலில் வல்ல அம்புகளைக் குறி தப்பாமல் தொடுப்பதில் சிறந்த மறவர்கள்
தேம் பிழி நறும் கள் மகிழின் முனை கடந்துதேனால் ச‌மைத்த‌ ந‌றிய‌ க‌ள்ளைப் ப‌ருகிய‌த‌ன் செருக்கினோடு ப‌கைவ‌ர்க‌ளைப் போர்க்க‌ள‌த்தில் வீழ்த்தி வென்று
வீங்கு மென் சுரைய ஏற்று_இனம் தரூஉம்பருத்த மென்மையான மடியினையுடைய, காளைகளோடு கூடிய ஆனினத்தைக் கைப்பற்றிக் கொண்டுவரும்
முகை தலை திறந்த வேனில்பகைமை நிறைந்த பலவாகிய வழிகளில் – ம‌லைக‌ள் வெடித்துப் பிளவுகளாய்த் திறக்குமளவிற்கான வேனில் ப‌ருவ‌த்தில் –
பகை தலைமணந்த பல் அதர் செலவேபோவது – (எப்படித்தான் அவளால் முடிந்ததோ?)
  
#106 மருதம் ஆலங்குடி வங்கனார்#106 மருதம் ஆலங்குடி வங்கனார்
எரி அகைந்து அன்ன தாமரை பழனத்துதீ கொழுந்து விட்டாற்போல இதழ் திறந்து மலருகின்ற தாமரை மலர்களையுடைய வயல்களில்
பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன்நெல்லைப் பொரிக்கும்போது பொரிகள் தெரிப்பது போலத் துள்ளுகின்ற பலவாகிய சிறிய மீன்களைப்
வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பயபற்றித் தின்பதற்காக, மணமுடைய பசிய இலையின்மேல் மெல்ல மெல்ல
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்பறக்க முடியாத வயதான மீன்கொத்திப்பறவை அசைந்து வந்து இருக்கும்
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனைநீர்த்துறை பொருந்திய மருதநிலத்துத் தலைவனின் மனைவி, தன் கணவனை
நம்மொடு புலக்கும் என்ப நாம் அதுநம்முடன் இணைத்துப்பேசிப் பிணக்கம் கொள்கிறாள் என்கிறார்கள்; நாம் அப்படிச்
செய்யாம் ஆயினும் உய்யாமையின்செய்யவில்லையென்றாலும், அவள் கூறும் பழியிலிருந்து தப்பிக்க முடியாதாகையால்
செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண்செறிவான வளையல்கள் ஒலிக்கும்படி கைகளை வீசிக்கொண்டு கொஞ்ச நேரம் அந்த இடத்தில்
உலமந்து வருகம் சென்மோ தோழிசுற்றித்திரிந்துவிட்டு வருவோம், செல்லலாம் தோழியே!
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன்ஒளிர்கின்ற வாட்படையினையுடைய வெற்றி பொருந்திய பாண்டியன்
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும்குற்றமில்லாத படைப்பயிற்சியுடன் தான் மேற்கொண்டு சென்ற போர்க்களங்களில் வாகைசூடும்போதெல்லாம்
களிறு பெறு வல்சி பாணன் எறியும்களிற்றியானையைப் பரிசிலாகப் பெறுவதனால் உண்டு வாழ்கின்ற அம்மன்னனுடைய பாணன் அடிக்கின்ற
தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறேதண்ணுமையினது கண்ணைப்போல (அவள்) அடித்துக்கொள்ளட்டும் தன் வயிற்றை
  
#107 பாலை காவிரிப்பூம்பட்டினத்துகாரிக்கண்ணனார்#107 பாலை காவிரிப்பூம்பட்டினத்துகாரிக்கண்ணனார்
நீ செலவு அயர கேள்-தொறும் பல நினைந்துநீ இவளை உடன் கொண்டுசெல்லும் விருப்பத்தினை அவள் கேட்கும்போதெல்லாம் பலவற்றையும் நினைந்து;
அன்பின் நெஞ்சத்து அயாஅ பொறை மெலிந்தஅன்புடைய தனது நெஞ்சத்தினுள்ளே அந்நினைவுகளை ஆராய்ந்து பார்த்து, துன்பச்சுமையால் மெலிந்துள்ள
என் அகத்து இடும்பை களை-மார் நின்னொடுஎனது நெஞ்சத்தின் துன்பத்தை நீக்கும்பொருட்டு, (உன்னுடன்),
கரும் கல் வியல் அறை கிடப்பி வயிறு தின்றுகருங்கல்லாலான அகன்ற பாறையில் கிடத்தி, வயிற்றுப்பகுதியைத் தின்றுவிட்டு
இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல்பெரிய புலி விட்டுச்சென்ற ஆண்மானின் காய்ந்துபோன தசையை,
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்வழிப்போக்கரான புதியவர்கள் கண்டு மகிழ்ச்சிகொண்டு, அவ்விடத்தில்
ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்குகாற்றால் ஒலிக்கின்ற முங்கிலில் விளைந்த நெல்லின் அரிசியுடன் சேர்த்து
ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்டபசுமாடுகள் கிடைபோட்டிருக்கும் இடத்தில் கிடைக்கும் தயிரை ஊற்றிச் சமைத்த
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறுவெண்மையான கொழுப்பை உருக்கிக் கூட்டிய‌ மிக‌வும் வெண்மையான‌ சோற்றினைப்
புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும்புள்ளிகளைக்கொண்ட அடிமரத்தையுடைய தேக்கின் அகன்ற இலையிலிட்டு உண்ணும்,
கல்லா நீள்மொழி கத நாய் வடுகர்கல்வியறிவில்லாத நெடுமொழி கூறும் சினம் மிக்க நாயைடைய வடுகமறவரின்
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்துவலிய ஆண்மை விளங்குகின்ற கடத்தற்கரிய போர்க்களங்களையும் கடந்து சென்று, (துன்பம் மிக்கு)
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்துசரிந்து விழும் மண்ணினால் ஏற்படும் தீங்குக்கு அஞ்சும்படியான ஒற்றையடிப் பாதையில்
இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்துஇன்னாததான ஏற்றத்தில் ஏறும்போது வழுக்கி விழுந்து, கால்கள் மடங்கிக்கொண்டு (துன்பம் மிக்கு)
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடுதன்னந்தனியே கிடக்கும் உடல்வலிமை வாய்ந்த பொதி சுமக்கும் காளையினுக்கு
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்அழ‌கிய‌ த‌ளிரையுடைய இலுப்பையின் வெட்டுப்பட்ட வாயையும், வெள்ளிய‌ உள்துளையையும் உடைய பூவை
புல் உளை சிறாஅர் வில்லின் நீக்கிபுன்மையான தலைமயிரையுடைய சிறுவர்கள் தம் வில்லினால் வீழ்த்தி, (அதனைத் தின்னவரும்)
மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர்மரைமானைத் துரத்தி (காளையினுக்கு) உண்ணக்கொடுக்கும் மலையிடத்து அமைந்த சிறிய ஊர்களில்
மாலை இன் துணை ஆகி காலைமாலைக் காலத்தில் உனக்கு இனிய துணையாகத் தங்கி, காலையில்
பசு நனை நறு வீ பரூஉ பரல் உறைப்பபுதிய தேனையுடைய நறிய மலர்கள் பருத்த பரற்கற்களின் மேல் உதிர்ந்துகிடத்தலால்
மண மனை கமழும் கானம்திருமண மனை போல நறுமணங் கமழுகின்ற காட்டுவழியே
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமேஉன் வாழ்க்கைத் துணைவியாகிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழியும் (உன்னுடன்) வருவாள்
  
#108 குறிஞ்சி தங்கால் பொற்கொல்லனார்#108 குறிஞ்சி தங்கால் பொற்கொல்லனார்
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்குதாம் அன்புகொண்டவரின் துன்பத்தை நீக்கி அவரைப் பாதுகாத்தருளுதலும் முழுதும் உணர்ந்த சான்றோர்க்குப்
ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம்பொருந்திய செயலாம், ஆனால் இது எப்படியோ?, முத்துக்கள்
வரை முதல் சிதறிய வை போல் யானைமலையடிவாரத்தில் சிதறிக்கிடப்பது போல், யானையின்
புகர் முகம் பொருத புது நீர் ஆலிபுள்ளியினையுடைய முகத்தில் மோதிய புதிய ஆலங்கட்டி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்பபளிங்கினைச் சொரிவது போல பாறையில் விழுந்து அழகுசெய்ய,
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின்மேகங்கள் சினந்தெழுந்த இடம் அகன்ற வானத்தில்
விடு பொறி ஞெகிழியின் கொடி பட மின்னிதீக்கடைகோலிலிருந்து தெறித்து விழும் பொறிகளைப் போல கொடிவிட்டு மின்னி
படு மழை பொழிந்த பானாள் கங்குல்மிக்க மழையைப் பொழிந்த நடுநாளாகிய இரவில்,
ஆர் உயிர் துப்பின் கோள் மா வழங்கும்அரிய உயிரினங்களையே உணவாகக் கொண்ட கொல்லும் தொழிலையுடைய விலங்குகள் நடமாடும்
இருள் இடை தமியன் வருதல் யாவதும்இருட்டுக்குள்ளே தனியாக வருவதால் சிறிதளவும்
அருளான் வாழி தோழி அல்கல்நமக்கு அருள்செய்கின்றவனாய் இல்லை, வாழ்க தோழியே! – இரவினில்
விரவு பொறி மஞ்ஞை வெரீஇ அரவின்புள்ளிகள் விரவிய மயிலைக் கண்டு வெருண்டு, பாம்புகளின்
அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல்வருத்தத்தைத் தரும் அரிய தலைகள் படமெடுப்பதைப்போன்று
காயா மென் சினை தோய நீடிகாயாம்பூவின் மெல்லிய கிளைகளைத் தீண்டும்படி நீண்டு அரும்பிய
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள்பல தூக்கிய துடுப்புகள் போன்று அசையும் கொத்தாகிய காந்தளின்
அணி மலர் நறும் தாது ஊதும் தும்பிஅழகிய மலர்களிலுள்ள நறிய தாதினை நுகருகின்ற வண்டுகள்
கை ஆடு வட்டின் தோன்றும்கையில்வைத்து ஆடுகின்ற சூதாடும்காயைப்போலத் தோன்றும்
மை ஆடு சென்னிய மலை கிழவோனேமேகம் தவழும் உச்சிகளைக்கொண்ட மலைக்கு உரியவன் – (நமக்கு அருள்செய்கின்றவனாய் இல்லை)
  
#109 பாலை கடுந்தொடைகாவினார்#109 பாலை கடுந்தொடை காவினார்
பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ்பல இதழ்களையுடைய மென்மையான மலர் போன்ற மையுண்ட கண்களையும், நல்ல யாழின்
நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவிநரம்பு ஒலிப்பது போன்ற மிக இனிய சொற்களையும் உடைய
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரேநமக்குத் எல்லா நலனும் தரும் ஒப்பற்ற ஒருத்தி இருக்கும் ஊருக்கு (திரும்பிச் செல்ல வேண்டுமென்றால்),
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிபகைவர் மார்பினை உழுகின்ற கொம்புகளையுடைய களிறுகளின் கூட்டம் கூட
காடு கால்யாத்த நீடு மர சோலைஅடர்ந்த காடாக வளர்ந்த உயரமான மரங்களைக் கொண்ட சோலைகளும் –
விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலைஒன்றையொன்று விரும்பும் அணில்கள் ஓடியாடித்திரியும் மூங்கில்கள் வளர்ந்த அகன்ற இடமும் –
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்தீட்டுவதால் வெள்ளையான நுனிகளைக் கொண்ட அம்புகளின் வேகத்தால் இறந்தோரின்
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைஎண்ணிலடங்காத தழையிட்டு மூடிய பதுக்கைகளையுடைய
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டு எனபாலைவெளியில் இருக்கும் பல்வேறாய்ப் பிரியும் வழிகள் ஆறலைக் கள்வரால் கொள்ளப்பெற்றது என்று
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்வழிச்செல்வோர் இல்லாமற்போன கடினமான பாதையில் அறியாமல் வந்தவர்களின்
கைப்பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டுகையில் பொருள் இல்லையாயினும் அவரின் உடம்பைப் பற்றிக்கொண்டு (மனமிரங்கி)
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குஅவரின் உயிரினைக் கொல்லாதவராய் அவரை விட்டுவிட்ட தவறுக்காக,
பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்பெரிய களிற்றின் கொம்புடன் புலியின் வரியினைக் கொண்ட தோலினைத் தண்டமாக வசூலிக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும்அறப்பண்பு சிறிதுமில்லாத எயினர் வேந்தன் ஆளுகின்ற
வறன்_உறு குன்றம் பல விலங்கினவேவறங்கூர்ந்து பாழ்பட்டுக்கிடக்கும் மலைகள் பற்பலவும் – இடையிட்டுக் கிடக்கின்றனவே
  
#110 நெய்தல் போந்தை பசலையார்#110 நெய்தல் போந்தை பசலையார்
அன்னை அறியினும் அறிக அலர் வாய்அன்னையானவள் தெரிந்துகொண்டாலும் தெரிந்துகொள்ளட்டும், அலர்தூற்றும் வாயினால்
அம் மென் சேரி கேட்பினும் கேட்க’அம்’ என்னும் ஒலியுடன்  இச்சேரியில் வாழ்கின்ற மகளிர் கேட்டாலும் கேட்டுக்கொள்ளட்டும்
பிறிது ஒன்று இன்மை அறிய கூறி(தலைவியின் மெய்வேறுபாட்டிற்கு) வேறொரு காரணம் இல்லையென்பதை நீ தெளிவாய்த் தெரிந்து கொள்ள,
கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கிவளைந்த சுழிகளையுடைய ஆற்றின் சங்கமுகத்திலுள்ள தெய்வத்தை நோக்கிச்
கடும் சூள் தருகுவன் நினக்கே கானல்சத்தியம்செய்து சொல்லுவேன் உனக்கு, கடற்கரைச் சோலையில்
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்எம்மை மாலை போலத் தொடர்ந்து வரும் தோழிமார் கூட்டத்தோடு சென்று கடலில் சேர்ந்து நீராடியும்
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும்மணல்வீடு கட்டிக்கொண்டும், மணற்சோறு சமைத்துக்கொண்டும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிதுவிளையாடி வருந்திய வருத்தம் தீரும்படி சிறிது நேரம் நாங்கள்
இருந்தனம் ஆக எய்த வந்துஇளைப்பாறி இருக்கும்போது, கிட்டே வந்து
தட மென் பணை தோள் மட நல்லீரே”பெரிய, மென்மையான, மூங்கில் போலும் தோள்களையுடைய மடப்பம் பொருந்திய நல்ல பெண்களே!
எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன்பகல்நேர வெளிச்சமும் குறைந்தது, களைப்பாயிருக்கிறேன், 
மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானும் இஇந்த மெல்லிய இலைப்பரப்பில் நீங்கள் ஆக்கிய சிறுசோற்றை விருந்தினனாக உண்டு, நானும் இந்த
கல்லென் சிறுகுடி தங்கின் மற்று எவனோஆரவாரமுடைய சிறுகுடியில் தங்கினால் என்ன?”
என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டுஎன்று (கேலியாகக்) கேட்டான் ஒருவன், அவனைக் கண்டு
இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்திமுகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, ஒருவர் முதுகை ஒருவர் பற்றிக்கொண்டு
இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த“இந்தச் சாப்பாடு உமக்குப் பொருத்தமானது அல்ல, இழிந்த
கொழு மீன் வல்சி என்றனம் இழுமெனகொழுமீனால் ஆக்கிய சோறு” என்று கூறினோம், சட்டென்று
நெடும் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ“நீண்ட கொடிகள் அசையும் தோணிகள் தோன்றுகின்றன,
காணாமோ என காலின் சிதையாபோய்ப் பார்ப்போமா?” என்று அந்த மணல்வீடுகளைக் காலினால் சிதைத்துவிட்டு
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும்நிற்காமல் ஓடிப்போன பலருக்குள்
என்னே குறித்த நோக்கமொடு நன்_நுதால்என்னையே உற்றுப்பார்த்த பார்வையுடன், “நல்ல நெற்றியையுடையவளே!
ஒழிகோ யான் என அழி_தக கூறிநான் போகட்டுமா?” என்று தனது நெஞ்சம் வருத்தப்படச் சொல்லிவிட்டு
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன்நான் ”போங்கள்” என்று சொல்லியும், (போகாமல்) பார்த்துக்கொண்டே, தனது
நெடும் தேர் கொடிஞ்சி பற்றிநீண்ட தேரின் கொடிஞ்சியைப் பிடித்துக்கொண்டு 
நின்றோன் போலும் என்றும் என் மகட்கேநின்றிருந்தவனே என் மகளின் மெய்வேறுபாட்டிற்குக் காரணம் போலும் – (என்று அன்னை அறியினும் அறிக)
  
  
  
  
  
#111 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ#111 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர்தம் முன்னோர் வைத்துப் போன பொருள் உள்ள அளவிலே மகிழ்ந்திருக்கமாட்டாராய், தம் பகைவர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎ சொல் நாணிஇகழும் நெஞ்சத்தோடு கூறுகின்ற அம்பு போன்ற பழிச் சொல்லிற்கு நாணி, (பொருளீட்டச்சென்றவர்)
வருவர் வாழி தோழி அரசவிரைவில் வந்துவிடுவார், வாழ்க தோழியே, பட்டத்து
யானை கொண்ட துகில் கொடி போலயானை தன் கையில் உயர்த்திப் பிடித்த பட்டுக்கொடியினைப் போல
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பிகாய்ந்துபோன ஞெமை மரத்தின் மீது பின்னிய சிலந்திக்கூடு
ஓடை குன்றத்து கோடையொடு துயல்வரஓடைக்குன்றம் என்னும் குன்றிலுள்ள மேல்காற்றினால் அசைய,
மழை என மருண்ட மம்மர் பல உடன்அதைப் பார்த்து மேகம் என்று குழம்பிப்போன மயக்கத்தையுடைய கூட்டமாகச் சேர்ந்த
ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கைஓய்ந்துபோன களிறுகள் தூக்கிய வருத்தத்தையுடைய நீண்ட கைகள்
தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும்புரவலரின் புகழைத் தொகுத்துப்பாடும் கூத்தர்களின் தூம்புகளைப் போல் ஒலியெழுப்பும்
அத்த கேழல் அட்ட நல் கோள்காட்டு வழியிலுள்ள ஆண்பன்றியினைக் கொன்ற நல்ல இரையைக் கொண்ட
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்பஆண் செந்நாய் விரைவாக அதனை இழுக்க,
குருதி ஆரும் எருவை செம் செவிஒழுகிய குருதியைக் குடிக்கும் பருந்தின் சிவந்த செவிகள்
மண்டு அமர் அழுவத்து எல்லி கொண்டமறவர்கள் திரண்டு சென்று போரிடும் போர்க்களத்தில் இரவினில் மறவர்கள் தம் கையில் கொண்ட
புண் தேர் விளக்கின் தோன்றும்விழுப்புண்பட்டு விழுந்த மறவருடைய புண்ணை ஆய்வதற்குரிய விளக்குகளைப் போலக் காணப்படுகின்ற
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரேவானைத் தோயும் குவியலான மலையைக் கடந்து சென்ற நம் தலைவர் – (விரைவில் வந்துவிடுவார்)
  
#112 குறிஞ்சி ஆவூர் கிழார்#112 குறிஞ்சி ஆவூர் கிழார்
கூனல் எண்கின் குறு நடை தொழுதிகூனிய முதுகினையுடைய கரடிகளின் குறுகக்குறுக அடியெடுத்து நடக்கும் கூட்டம் 
சிதலை செய்த செம் நிலை புற்றின்கறையான்கள் கட்டிய செங்குத்தாய் நிற்கும் நிலையினையுடைய புற்றினது
மண் புனை நெடும் கோடு உடைய வாங்கிமண்ணால் புனைந்த நெடிய குவடுகள் உடைந்து போகும்படி அகழ்ந்தெடுத்து
இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல்புற்றாஞ்சோறாகிய இரையை விரும்பித் தின்பதற்குச் செல்லுகின்ற இந்த நள்ளிரவின் இருளினூடே,
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலிஅண்மையில் குட்டியை ஈன்ற, வேட்கையையுடைய பெண்புலி பசித்ததாக தறுகண்மையையுடைய ஆண்புலி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டு குழுமும்ஒளிவீசும் ஏந்திய கொம்புகளையுடைய ஆண்யானையைக் கொன்று முழங்குகின்ற
பனி இரும் சோலை எமியம் என்னாய்குளிர்ந்த அடர்ந்த இருட்டான சோலையில் நாங்கள் தனித்திருக்கிறோம் என்று நினைக்காதவனாய்
தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயேஇங்கு வந்ததினால் எமக்குத் தீங்கினையே செய்திருக்கிறாய்.
நாள் இடைப்படின் என் தோழி வாழாள்அதனால் நீ வராமற்போனால் ஒரு நாள் இடைப்பட்டாலும் என் தலைவி உயிர் வாழாள்
தோள்_இடை முயக்கம் நீயும் வெய்யைஒவ்வொருநாளும் என் தலைவியின் தோள்களை முயங்குதலை நீயும் விரும்புகின்றாய்
கழிய காதலர் ஆயினும் சான்றோர்எவ்வளவுதான் காதலர் என்றாலும் சான்றோராயிருப்பவர்கள்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்பழியுடன் சேர்ந்து வரும் இன்பத்தினை விரும்பமாட்டார்,
வரையின் எவனோ வான் தோய் வெற்பகலியாணம் செய்துகொண்டால் என்ன? வானைத் தோயும் மலைநாட்டவனே!
கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்கூட்டமான கலைமான்கள் அடிக்குரலில் தாழ ஒலிக்கும் மிளகுக் கொடி படர்ந்த இம் மலைச் சாரலில்
மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார்எய்துவதற்கு அரிய களவொழுக்கத்தால் நீங்கள் ஏற்கனவே சேர்ந்திருப்பதை அறியாத எம் சுற்றத்தார்
தொன்று இயல் மரபின் மன்றல் அயரதொன்றுதொட்டு வரும் முறைப்படி பெண்கேட்டுவந்து, மணவிழாவும் நடந்தால்
பெண்கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கிநீ இவளை மனைவியாகக் கொள்ளும் சடங்குகளையும் உங்கள் மணக் கோலங்களையும் கண்ணாரக் கண்டு
நொதுமல் விருந்தினம் போல இவள்யாரோ அயலாராகிய விருந்தினர்போல இருந்து, இவளின்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமேபுதிய நாணமாகிய அடக்கத்தையும் காண்பேன் நான்.
  
#113 பாலை கல்லாடனார்#113 பாலை கல்லாடனார்
நன்று அல் காலையும் நட்பின் கோடார்தம் நண்பர் நன்றாக இல்லாத காலத்திலும் தமது நட்புப்பண்பில் மாறுபடாமல்
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்துன்பமுற்ற அவரிடம் சென்று அவர் வழி நின்று அவர்க்கு உதவும் பிறழாத தமது கோட்பாடு காரணமாக,
புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன்புல்லிய தலையையுடைய இளைய பிடி யானைகளைப் பாணர்க்குத் தரும் தலைவனான,
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றிபிடியுடன் களிற்றையும் வாரி வழங்கும் தனது வள்ளன்மையால் இன்புறும் அஃதை என்பவனைப் பாதுகாத்து,
காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர்அவனைக் காவல் மிகுந்த இடத்தில் நிலைநிறுத்திய பல வேல்படையினையுடைய கோசர் என்பவரின்
இளம் கள் கமழும் நெய்தல் அம் செறுவின்புதிய கள் கமழும் நெய்தலம்செறு என்னும்
வளம் கெழு நன் நாடு அன்ன என் தோள் மணந்துவளம் பொருந்திய நல்ல நாட்டைப் போன்ற என் தோளினைச் சேர்ந்து,
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்றஆரவாரமுடைய பழைய ஊர் அலராகிய பழிச்சொற்களை மிகுதியாகக் கூற,
நல்காது துறந்த காதலர் என்றும்நமக்கு அருள் செய்யாமல் நம்மைப் பிரிந்து சென்ற நம் காதலர், எப்பொழுதும்
கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன்கற்கள் தைத்து மெலிந்துபோகாத (செருப்பணிந்த, அதன்) ஒசை இனிய வலிய அடியினையுடையவனும்
அல்கு வன் சுரை பெய்த வல்சியர்மிக்க வலிய மூங்கிற் குழாயில் வைத்த உணவினையுடையவராய்,
இகந்தனர் ஆயினும் இடம் பார்த்து பகைவர்தன் எல்லையைக் கடந்து இருப்பவராயினும், நல்ல சமயம் பார்த்து, பகைவர்கள்
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்பாதுகாப்புடன் இருக்கும் உணவு மிக்க அரண்களில் சென்று
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்திரண்ட இமிலையுடைய காளைகளுடன் கூடிய பகைநாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து செலுத்திக்கொண்டுவரும்
கனை இரும் சுருணை கனி காழ் நெடு வேல்செறிந்த கரிய பூணையும் நெய் தடவிய தண்டையும் உடைய நீண்ட வேலினையும்
விழவு அயர்ந்து அன்ன கொழும் பல் திற்றிவிழாக் கொண்டாடியது போன்ற கொழுமையான பல உணவையும் உடைய,
எழாஅ பாணன் நன் நாட்டு உம்பர்பகைவர்க்குப் புறங்கொடாத பாணன் என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பாற்பட்ட
நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர்வழியில் செல்லும் புதியவர்களைக் கொன்ற கள்வர்கள்
எறி படை கழீஇய சேய் அரி சின் நீர்தங்களின் ஆயுதங்களைக் கழுவிய சிவந்த நிறமுடைய அரித்தோடும் சிறிதளவு நீரையுடைய
அறு துறை அயிர் மணல் படு_கரை போகிநடமாட்டம் அற்ற துறையாகிய குறுமணல் பொருந்திய கரையினைத் தாண்டிச் சென்று
சேயர் என்றலின் சிறுமை உற்ற என்மிகவும் தொலைவிலுள்ளார் என்று பலரும் கூறுவதால் சிறுமைப்பட்டுப்போன என்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்கசெயலற்ற நெஞ்சத்தின் துயரம் நீங்குமாறு
அழாஅம் உறைதலும் உரியம் பராரைஅழாமல் இருக்கவும் உரியவராவோம், பருத்த அடிமரத்தில் கிளைத்த
அலங்கல் அம் சினை குடம்பை புல்லெனஆடுகின்ற அழகிய கிளையிலுள்ள தன் கூடு பொலிவிழந்துபோக
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்குஇடம் மாறிச் சென்றுவிட எண்ணிய பறவை பறந்து சென்றதைப் போல்
மெய் இவண் ஒழிய போகி அவர்என் உடம்பு இங்கே கிடக்க அதனின்றும் பிரிந்து புறப்பட்டு அவர்
செய்_வினை மருங்கில் செலீஇயர் என் உயிரேவினையாற்றுமிடத்திற்குச் செல்லட்டும் என் உயிர்
  
#114 முல்லை#114 முல்லை
கேளாய் எல்ல தோழி வேலன்’கேட்பாயாக, ஏடி, தோழியே! வேலன்
வெறி அயர் களத்து சிறு பல தாஅயவெறியாடும் களத்தில் சிறிய, பலவாகப் பரப்பப்பட்ட
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்கதம்பமான பூக்கள் போலப் பூக்கள் உதிர்ந்துகிடக்கும் குளிர்ந்த மணங்கமழும் முல்லைநிலத்தில்
உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறுவெப்பம் மிகுந்த கதிர்கள் தம் வெம்மை மழுங்கப்பெற்று மேற்கு மலையினை அடைந்த ஞாயிறு
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும்பாம்பு விழுங்கிய மதியைப் போல மெதுவாக மறைகின்ற
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் எனபொலிவிழந்த இளம் மாலை நேரத்திலும் நம்மை நினைத்துப்பார்க்கமாட்டார் அவர்’ என்று
நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க(எம் காதலி) எம்மீது பிணக்கம் கொண்டு இருக்கும் துன்பம் நீங்கும் வகையில்
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண்குதிரைநூல்களைக் கற்ற பாகனே! முன்னே பார்த்து செலுத்துவாயாக –
நெடும் கொடி நுடங்கும் வான் தோய் புரிசைநெடிய கொடிகள் அசைகின்ற வானத்தைத் தீண்டுமாறு உயர்ந்த மதிலில்
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர்நடுநிசிக் காவலர்கள் ஏற்றிவைத்த ஒளி செறிந்த விளக்குகள்
வான்_அக மீனின் விளங்கி தோன்றும்விண்மீன்கள் போன்று விளக்கமுடன் தோன்றும்
அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர்அணுகுதற்கு அரிய காவலையுடைய அச்சம்தரும் மூதூரிலுள்ள
திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின்செல்வம் நிறைந்த மனையில் நாம் கூறியபடியே அடங்கியிருக்கின்ற குற்றமற்ற கற்பினையும்
அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள்செவ்வரியோடிய மதர்த்த குளிர்ந்த கண்ணையும் மூங்கில்போன்ற தோளையும்
அணங்கு சால் அரிவையை காண்குவம்பிரிவாற்றாமையாகிய துன்பத்தையும் உடைய எம் காதலியைக் காண்போம்
பொலம் படை கலி_மா பூண்ட தேரேபொன் சேணம் அணிந்த செருக்கினையுடைய குதிரைகள் பூட்டப்பட்ட தேரினை (முன்னே பார்த்து செலுத்துவாயாக)
  
#115 பாலை மாமூலனார்#115 பாலை மாமூலனார்
அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்என்றும் ஒழிவில்லாத விழாவினையுடைய, நல்லவர்கள் வாழ அச்சப்படும் பழைமையான ஊரினில்
பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும்ஒருவர் பழியேதும் இல்லாதவரென்றாலும் அவரைப்பற்றிப் பலர் புறம்பேசும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெம் சொல்அம்பலாகிய ஒழுக்கத்தையும் கொண்டவராய், கடுஞ்சொற்களைப் பேசும்
சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுகசேரிப்பெண்கள் நம்மை இகழ்ந்து பேசினாலும் பேசட்டும்,
நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என்நுட்ப‌மான‌ தொழில்திறம் அமைந்த‌ அணிக‌ல‌ன்க‌ளை அணிந்த‌ எருமை என்ப‌வ‌ன‌து குட‌நாட்டினைப் போன்ற
ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும்என‌து அழ‌கிய ந‌லம் ஒழிந்துபோனாலும் போகட்டும், என்றைக்கும்
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள்நோயில்லாமல் இருப்பாராக நம் காதலர்; பாய்ச்சுதலில் தப்பாத வாளினைக் கொண்ட
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்எவ்வி என்பான் தோற்று இறந்த போர்க்களத்தில், பாணர்கள்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சியகையால் தொழும் முறைமையோடு, முன்னர் வாழ்த்திய, இப்போது ஒடித்துப்போட்ட
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர்வளவிய இசையினையுடைய வளைந்த யாழின் கொம்புகளைப் போல, ஒளி பொருந்திய கொத்துக்களையுடைய
சுடர் பூ கொன்றை ஊழ்_உறு விளை நெற்றுவிள‌க்குப் போன்ற‌ ம‌லரையுடைய‌ கொன்றையின்க‌ண் முற்றி விளைந்த நெற்றுக்க‌ள்
அறை மிசை தாஅம் அத்த நீள் இடைபாறைமீது ப‌ர‌வ‌லாக‌ உதிரும் சுர‌த்தின் நீண்ட‌ நெறியிலுள்ள‌
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானைஇள‌ம்பிறை போன்ற‌ வெண்மையான கொம்புக‌ளையும் த‌லைமைப்பண்பையும் உடைய‌ யானைப்ப‌டைக‌ளையும்
சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சிசினம் மிக்க ஆற்ற‌லுடன் தாவிப்பாயும் குதிரைப்ப‌டைக‌ளையும் உடைய‌ அதிக‌மான் நெடுமான் அஞ்சி
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலைஆனிரைகளைக் கைப்பற்றி மறைத்துவைக்கும் அச்சந்தோன்றும் பலவாகப் பிரியும் வழிகளிலே,
நன்னர் ஆய் கவின் தொலைய சேய் நாட்டுநலம் பொருந்திய, கண்டோர் ஆராய்ந்து போற்றத்தகுந்த நமது பேரழகு அழிந்து போகும்படி, தொலைவான நாட்டில்
நம் நீத்து உறையும் பொருள்_பிணிநம்மைப் பிரிந்து வாழும் பொருளீட்டும் பணி
கூடாமையின் நீடியோரேஇன்னும் கைகூடிவராததால் தம் இருப்பை நீட்டிக்கொண்டு செல்பவர் – (நோயில்லாமல் இருப்பாராக)
  
#116 மருதம் பரணர்#116 மருதம் பரணர்
எரி அகைந்து அன்ன தாமரை இடையிடைதீ கொழுந்துவிட்டு எரிவது போன்ற தாமரைப்பூக்களின் இடையிடையே
அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர்செந்நெல்லை அறுத்து அதன் தாளைக் குவித்துவைத்த கதிரறுப்போர்
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்தங்களுக்குக் கள்ளினை ஏற்றிக்கொண்டு அலைந்துதிரிந்துவரும் வண்டி சேற்றில் மாட்டிக்கொண்டால்
ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊரசிறந்த கரும்புத் தட்டைகளை அடுக்கிவைத்து அண்டக்கொடுக்கும் ந‌ன்கு நீர் பாய்கின்ற ஊரின் த‌லைவ‌னே,
பெரிய நாண் இலை மன்ற பொரி எனநிச்சயமாய் நீ பெரிதும் வெட்கமில்லாதவனாயிருக்கிறாய், பொரியினைப் போல்
புன்கு அவிழ் அகன் துறை பொலிய ஒண் நுதல்புங்கம்பூ மலரும் அகன்ற நீர்த்துறை பொலிவுபெற, ஒளிபொருந்திய நெற்றியினையும்
நறு மலர் காண்வரும் குறும் பல் கூந்தல்நறிய மலர்கள் நிறையச் சூடிய காண்பதற்கினிய குட்டையான, பலவான கூந்தலையும்,
மாழை நோக்கின் காழ் இயல் வன முலைமாவடு போன்ற கண்களையும், முத்துச்சரம் அசையும் அழகிய முலைகளையும்,
எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநைநுண்மையுடைய அழகு நலத்தினையும் உடைய ஒரு பரத்தையுடன், நேற்று
வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவேகுளிர்ச்சி தங்கிய நீரில் விளையாடினாய் என்று அறிந்தோர் எம்மிடம் கூறினர், அதுவேதான்
பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்துநாங்கள் பொய்யென்று மறுத்து மூடி மறைக்கவும் எங்களையும் மீறி
அலர் ஆகின்றால் தானே மலர் தார்ஊரெங்கும் பெரும்பேச்சாய்ப்போய்விட்டது; அதுதான், மலர்ந்த பூமாலையினையும்
மை அணி யானை மற போர் செழியன்மை கொண்டு அழகு செய்த யானையையும் உடைய மறம் பொருந்திய போரில் வல்ல பாண்டியனுடைய
பொய்யா விழவின் கூடல் பறந்தலைஎன்றும் நீங்காத திருவிழாக்களையுடைய மதுரை நகரத்தின் பக்கத்திலுள்ள போர்க்களத்திலே
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்தம்முள் ஒன்று சேர்ந்து போரிடுதற்கு எழுந்துவந்த சேரனும் சோழனுமாகிய இரண்டு முடி மன்னர்களும்
கடல் மருள் பெரும் படை கலங்க தாக்கிஅவருடைய கடல்போன்ற பெரிய படைகளும் கலக்க மெய்தும்படி அவரோடு போர்செய்து
இரங்கு இசை முரசம் ஒழிய பரந்து அவர்முழங்கும் ஓசையையுடைய தம் போர்முரசங்களைக் கைவிட்டு நாற்றிசையினும் பரவி அம்மன்னர்
ஓடு புறம் கண்ட ஞான்றைதம் படைகளோடு ஓடும்போது (பாண்டியன்) அவரைப் புறங்கண்ட பொழுது
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதேவெற்றிகொண்ட அகன்ற போர்க்களத்தில் எழுந்த ஆரவாரத்தினும் பெரிதாக – (பெரும்பேச்சாய்ப்போய்விட்டது)
  
#117 பாலை#117 பாலை
மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சியும்தான் வளர்த்த முல்லைக்கொடியோடு தான் விளையாடும் கரிய பூங்கொத்தினையுடைய நொச்சியின் நிழலையும்
அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள்அழகிய வரிகளையுடைய அல்குலையுடைய தன் தோழிமாரையும் நினையாதவளாய்
ஏதிலன் பொய் மொழி நம்பி ஏர் வினையாரோ ஒருவன் கூறிய பொய்யான மொழிகளை நம்பி, அழகிய வேலைப்பாடு மிக்க
வளம் கெழு திரு நகர் புலம்ப போகிவளம் பொருந்திய அழகிய எம் இல்லம் தனித்துக் கிடப்ப அவன் பின்னர்ச் சென்று
வெருவரு கவலை ஆங்கண் அருள்வரஅச்சம் வரக்கூடிய பலவாறு பிரியும் வழியையுடைய அப் பாலைநிலத்தில், இரங்கத்தக்கதாக,
கரும் கால் ஓமை ஏறி வெண் தலைகரிய அடியினையுடைய ஓமை மரத்தின் மேல் ஏறி இருந்து, வெண்மையான தலையையுடைய 
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்பருந்து தனது பெடையினை அழைக்கும் பாழ்பட்டுக் கிடந்த நாடாகிய அவ்விடத்தில்
பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடிபொன் வளையல்கள் ஒலிக்கும்படியாகக் கைகளை வீசி, தன் சிவந்த அடிகளில் அணிந்த
சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கேசிலம்புகள் சிரிப்பன போல கலகலக்க நடந்து சென்ற என்னுடைய மகளுக்கு –
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்துநறுமணத்தைலத்தை விரலில் தோய்த்துக் கோதி வளைந்த கொத்தான கூந்தலை வாரி, கால்காலாக வகுத்து
யான் போது துணைப்ப தகரம் மண்ணாள்நான் மலர்களை அவற்றிடையே சேர்ப்பதற்கு, மயிர்ச் சந்தனத்தைப் பூசிக்கொள்ளவும் மறுக்கின்றவள்
தன் ஓர் அன்ன தகை வெம் காதலன்தன்னையே ஒத்த அழகையும் விருப்பத்தையும் உடைய காதலனாகிய தலைவன்
வெறி கமழ் பல் மலர் புனைய பின்னுவிடநறுமணங்கமழும் பாலைநிலத்துப் பல்வேறு மலர்களையும் சூட்டுவதற்காகத் தன் கூந்தலைப் பின்னிவிட
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன-கொல்அவளுடைய சிறிய பிடரி மறையும்படி அப் பின்னல்கள் அலையலையாய் தாழ்ந்து தொங்கினவோ –
நெடும் கால் மாஅத்து ஊழ்_உறு வெண் பழம்நீண்ட அடியையுடைய மாமரத்தில் முற்றிக் கனிந்த வெள்ளிய பழத்தை
கொடும் தாள் யாமை பார்ப்பொடு கவரும்வளைந்த கால்களையுடைய ஆமையும் அதன் குஞ்சும் கவர்ந்து தின்னுகின்ற
பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்பொய்கைகள் சூழ்ந்துள்ள என்றும் பொய்க்காத புதுவருவாயையுடைய
வாணன் சிறுகுடி வடாஅதுவாணனது சிறுகுடி என்னும் ஊர்க்கு வடக்கே இருக்கும்
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றேஇனிய நீருள்ள காட்டாற்றின் நெளிநெளியாய் இருக்கும் கருமணல் போன்று – அலையலையாய் தொங்கினவோ!
  
#118 குறிஞ்சி கபிலர்#118 குறிஞ்சி கபிலர்
கறங்கு வெள் அருவி பிறங்கு மலை கவாஅன்ஆரவாரிக்கின்ற வெள்ளிய அருவியையுடைய விளக்கமான எமது உச்சிமலைச் சாரலிலே
தேம் கமழ் இணர வேங்கை சூடிதேன் மணங்கமழுகின்ற பூங்கொத்துக்களிலே மலர்ந்துள்ள வேங்கை மலரை அணிந்து கொண்டு
தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇதொண்டகப்பறையின் தாளத்திற்கு ஏற்றாற்போல, மகளிரொடு கலந்து
மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்துதெருவில் குரவைக் கூத்தாடுகின்ற சிறுகுடியாகிய எமது ஊரினில்
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்படவடிவங்கொண்டு வருகின்ற முருகனைப் போன்ற அழகுடையவனாய், வலிய வேட்டைநாய்கள் பின்னே வர
பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொளபகல்நேரத்தில் வந்தால் ஊரார் கூறும் பழிச்சொல்லுக்கு அஞ்சுகிறோம், பகைமை கொள்ளும்படி,
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்கரிய பெண்யானையோடும் கன்றோடும் கூடிய அகன்ற வாயினையுடைய
பெரும் கை யானை கோள் பிழைத்து இரீஇயநீண்ட கையினைக் கொண்ட யானையைக் கொள்ளுதல் பிழைத்து, அவை மறைந்திருக்கும்படி செய்த
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள்கொல்லும் புலி நடமாடும் மிகுந்த இருள் சூழ்ந்த நள்ளிரவில்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்நீ தனியாக வருவதற்கு அதனைக்காட்டிலும் அஞ்சுகிறோம்; 
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள்இவளுக்கு இனி என்ன ஆகுமோ? பலநாள்
புணர் குறி செய்த புலர் குரல் ஏனல்சந்திப்பிடமாகக் கொண்ட முற்றிக்காய்ந்த கதிரையுடைய தினைப்புனத்தில்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்கிளிகளை ஓட்டுவதற்கு அவள் பாடும் பாடலும் இனி இல்லாமற்போயிற்று – (கதிரும் கொய்யப்பட்டது)
அளியள் தான் நின் அளி அலது இலளேமிகவும் இரங்கத்தக்கவள் – உன்னுடைய அருளையன்றி வேறொரு துணையும் இல்லாத இவள்.
  
#119 பாலை குடவாயி கீரத்தனார்#119 பாலை குடவாயில் கீரத்தனார்
நுதலும் தோளும் திதலை அல்குலும்நெற்றியும், தோளும், தேமலையுடைய அல்குலும்
வண்ணமும் வனப்பும் வரியும் வாடநிறமும், அழகும், கண்களின் செவ்வரியும் வாடிப்போகும்படி
வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கிஇவள் வருந்துவாள் என்று திருத்தமாகக் கண்டு வைத்தும்
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிதுஇவளை மணந்துகொள்ளுதலே நன்மையாம் என்று நினையாமல் பிரிந்து சென்றாலும், அவர், (வீணாக)
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டைவழிச்செல்வோர் அறுத்துப்போட்ட பிரண்டை
ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்பஇடியால் தாக்கப்பட்ட பாம்பின் பசிய துண்டு போல
நெறி அயல் திரங்கும் அத்தம் வெறி கொளவழியின் பக்கத்தே (வீணாக) வதங்கிக் கிடக்கின்ற காட்டில், (மணமுண்டாகும்படி,)
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்உப்புவணிகரின் கூட்டம் சமைத்து உண்டு கைவிட்டுப்போன கல்லால் உண்டாக்கிய அடுப்பினில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்வலிய வில்லையுடைய மழவர் (மணமுண்டாகும்படி) ஊனைப் புழுக்கி உண்ணும்
சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்துகாட்டுவழி நடமாட்டம் அற்றதாகையால் பெண்களோடு செல்வதற்கு ஏற்றதல்ல என்னாமல், ஊக்கம் மிகுந்து
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலைநெய்தல் பூப் போன்ற உருவத்தையுடைய அழகாக ஒளிரும் அகன்ற இலையினையும்
தொடை அமை பீலி பொலிந்த கடிகைஅமைவாகத் தொடுக்கப்பட்ட மயில்தோகையால் பொலிவுற்ற காம்பினையும்
மடை அமை திண் சுரை மா காழ் வேலொடுமூட்டுவாய் அமைந்த திண்ணிய சுரையினையும், கருமையான தண்டினையுமுடைய வேலுடன்
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்பபகையைத் தணிவிக்கச் செல்லும் போர்க்களத்திற்குத் தம்முடன் நாமும் துணையாகிச் செல்லத்
துணிகுவர்-கொல்லோ தாமே துணி கொளதுணிந்திடுவாரோ? துண்டமாகப் பிளவுபடும்படி
மற புலி உழந்த வசி படு சென்னிமறத்தையுடைய புலியுடன் போரிட்டு வருந்திய தழும்புள்ள நெற்றியில்
உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டிமிக்க நோயாகிய துன்பத்தோடு நீர் உண்பதற்காக விரைந்து சென்று
படி முழம் ஊன்றிய நெடு நல் யானைமண்ணில் முழங்காலை மடித்து ஊன்றிய நெடிய நல்ல யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனைதன் கையால் தோய்த்தும் நீர் கிடைக்காததால் பெருமூச்சுவிடும் வறண்டுபோன சுனையினையுடைய
மை தோய் சிமைய மலை முதல் ஆறேமேகங்கள் படியும் உச்சியினையுடைய மலையடிவாரத்தில் செல்லும் வழியில் –
  
#120 நெய்தல் நக்கீரனார்#120 நெய்தல் நக்கீரனார்
நெடுவேள் மார்பின் ஆரம் போலமுருகக்கடவுளின் மார்பினில் கிடக்கும் முத்தாரம் போல
செ வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்சிவந்த வானத்தில் பொருந்தி, மீனை உண்ணும்
பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்பபசிய காலையுடைய கொக்குக்கூட்டம் வரிசையாகப் பறந்து உயர
எல்லை பைப்பய கழிப்பி குட_வயின்பகற்பொழுதினை மெல்ல மெல்லக் கழித்து மேற்குத்திசையில்
கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறுமலையை அடைந்தது, பல கதிர்களையுடைய ஞாயிறு,
மதர் எழில் மழை கண் கலுழ இவளேதனது மதர்த்த அழகிய கண்களில் நீர் ஒழுக, (இவள்)
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்மிக்க நாணத்தைக்கொண்ட சிறிய மெல்லிய சாயலினையுடைய (இவள்)
மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாதுதனது மாண்புற்ற அழகு கெட, ஏக்கமுற்று, நிற்காமல்
அழல் தொடங்கினளே பெரும அதனால்அழுகையைத் தொடங்கியிருக்கிறாள், பெருமானே! அதனாலும்,
கழி சுறா எறிந்த புண் தாள் அத்திரிஉப்பங்கழியிலுள்ள சுறாமீன் தாக்கிய புண்பட்ட காலையுடைய நினது ஊர்தியாகிய கோவேறுகழுதையும்
நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇநீண்ட நீரினையுடைய கருமையான கழியில் நடப்பதற்கு வலிமை குன்றியதால், (இங்கு இளைப்பாறி),
வல் வில் இளையரொடு எல்லி செல்லாதுவலிய வில்லினை ஏந்திய உன் ஏவலரொடு இந்த இரவினில் செல்லாமல்
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ(இங்கு இளைப்பாறி) நீ தங்கிச்சென்றால் உனக்குக் கேடு ஒன்றும் இல்லையே!
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பைபனைமரங்கள் ஓங்கிய வெண்மையான மணல் பரந்த தோட்டங்களில்
அன்றில் அகவும் ஆங்கண்அன்றில் பறவை தன் துணையை அழைக்கும் அவ்விடத்தில்
சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டேசிறிய கொத்துக்களான நெய்தல் பூக்களையுடைய எம் பெரிய கழிசூழ்ந்த ஊரில் – 
  
  
  
  
  
#121 பாலை மதுரை மருதன் இளநாகன்#121 பாலை மதுரை மருதன் இளநாகன்
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல்நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல்
வேனில் நீடிய வான் உயர் வழி நாள்வேனில் நீடிய வான் உயர் வழி நாள்
வறுமை கூரிய மண் நீர் சிறு குளவறுமை கூரிய மண் நீர் சிறு குள
தொடு குழி மருங்கில் துவ்வா கலங்கல்தொடு குழி மருங்கில் துவ்வா கலங்கல்
கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணிகன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறுசேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு
செம் கோல் வால் இணர் தயங்க தீண்டிசெம் கோல் வால் இணர் தயங்க தீண்டி
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்துசொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து
அல்கு_உறு வரி நிழல் அசைஇ நம்மொடுஅல்கு_உறு வரி நிழல் அசைஇ நம்மொடு
தான் வரும் என்ப தட மென் தோளிதான் வரும் என்ப தட மென் தோளி
உறுகண் மழவர் உருள் கீண்டிட்டஉறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடைஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
கனை விசை கடு வளி எடுத்தலின் துணை செத்துகனை விசை கடு வளி எடுத்தலின் துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்வெருள் ஏறு பயிரும் ஆங்கண்
கரு முக முசுவின் கானத்தானேகரு முக முசுவின் கானத்தானே
  
#122 குறிஞ்சி பரணர்#122 குறிஞ்சி பரணர்
இரும் பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர்இரும் பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர்
விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும்விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும்
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின்மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின்
வல் உரை கடும் சொல் அன்னை துஞ்சாள்வல் உரை கடும் சொல் அன்னை துஞ்சாள்
பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின்பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின்
துஞ்சா கண்ணர் காவலர் கடுகுவர்துஞ்சா கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்றுஇலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று
வலம் சுரி தோகை ஞாளி மகிழும்வலம் சுரி தோகை ஞாளி மகிழும்
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்
பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின்பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின்
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மேஅகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்
இல் எலி வல்சி வல் வாய் கூகைஇல் எலி வல்சி வல் வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழி_தக குழறும்கழுது வழங்கு யாமத்து அழி_தக குழறும்
வளை கண் சேவல் வாளாது மடியின்வளை கண் சேவல் வாளாது மடியின்
மனை செறி கோழி மாண் குரல் இயம்பும்மனை செறி கோழி மாண் குரல் இயம்பும்
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள்எல்லாம் மடிந்த காலை ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால்நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால்
அரி பெய் புட்டில் ஆர்ப்ப பரி சிறந்துஅரி பெய் புட்டில் ஆர்ப்ப பரி சிறந்து
ஆதி போகிய பாய் பரி நன் மாஆதி போகிய பாய் பரி நன் மா
நொச்சி வேலி தித்தன் உறந்தைநொச்சி வேலி தித்தன் உறந்தை
கல் முதிர் புறங்காட்டு அன்னகல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டு இன்றால் தோழி நம் களவேபல் முட்டு இன்றால் தோழி நம் களவே
  
#123 பாலை காவிரிப்பூம்பட்டினத்து காரி கண்ணனார்#123 பாலை காவிரிப்பூம்பட்டினத்து காரி கண்ணனார்
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடா படிவத்து ஆன்றோர் போலஆடா படிவத்து ஆன்றோர் போல
வரை செறி சிறு நெறி நிரைபு உடன் செல்லும்வரை செறி சிறு நெறி நிரைபு உடன் செல்லும்
கான யானை கவின் அழி குன்றம்கான யானை கவின் அழி குன்றம்
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்தஇறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த
சில்_ஐம்_கூந்தல் நல் அகம் பொருந்திசில்_ஐம்_கூந்தல் நல் அகம் பொருந்தி
ஒழியின் வறுமை அஞ்சுதி அழி_தகவுஒழியின் வறுமை அஞ்சுதி அழி_தகவு
உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு எனஉடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்மழை மருள் பல் தோல் மா வண் சோழர்
கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறைகழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை
இறவொடு வந்து கோதையொடு பெயரும்இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெரும் கடல் ஓதம் போலபெரும் கடல் ஓதம் போல
ஒன்றில் கொள்ளாய் சென்று தரு பொருட்கேஒன்றில் கொள்ளாய் சென்று தரு பொருட்கே
  
#124 முல்லை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்#124 முல்லை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்திநன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி
வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்துவந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து
சென்றீக என்ப ஆயின் வேந்தனும்சென்றீக என்ப ஆயின் வேந்தனும்
நிலம் வகுந்து உறாஅ ஈண்டிய தானையொடுநிலம் வகுந்து உறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது நன்றேஇன்றே புகுதல் வாய்வது நன்றே
மாட மாண் நகர் பாடு அமை சேக்கைமாட மாண் நகர் பாடு அமை சேக்கை
துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உறதுனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற
பாசறை வருத்தம் வீட நீயும்பாசறை வருத்தம் வீட நீயும்
மின்னு நிமிர்ந்து அன்ன பொன் இயல் புனை படைமின்னு நிமிர்ந்து அன்ன பொன் இயல் புனை படை
கொய் சுவல் புரவி கை கவர் வயங்கு பரிகொய் சுவல் புரவி கை கவர் வயங்கு பரி
வண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லைவண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லை
வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரியவீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய
காலை எய்த கடவு-மதி மாலைகாலை எய்த கடவு-மதி மாலை
அந்தி கோவலர் அம் பணை இமிழ் இசைஅந்தி கோவலர் அம் பணை இமிழ் இசை
அரமிய வியல் அகத்து இயம்பும்அரமிய வியல் அகத்து இயம்பும்
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரேநிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே
  
#125 பாலை பரணர்#125 பாலை பரணர்
அரம் போழ் அம் வளை தோள் நிலை நெகிழஅரம் போழ் அம் வளை தோள் நிலை நெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டிநிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கைஇரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால் வீ தாஅய்ஆலி அன்ன வால் வீ தாஅய்
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்பவை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப
தாது உறு குவளை போது பிணி அவிழதாது உறு குவளை போது பிணி அவிழ
படாஅ பைம் கண் பா அடி கய வாய்படாஅ பைம் கண் பா அடி கய வாய்
கடாஅம் மாறிய யானை போலகடாஅம் மாறிய யானை போல
பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூபெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதரமை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர
பனி அடூஉ நின்ற பானாள் கங்குல்பனி அடூஉ நின்ற பானாள் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய் தண்ணெனதனியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரண் இல் காலைமுனிய அலைத்தி முரண் இல் காலை
கைதொழு மரபின் கடவுள் சான்றகைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்_வினை மருங்கின் சென்றோர் வல் வரின்செய்_வினை மருங்கின் சென்றோர் வல் வரின்
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான்விரி உளை பொலிந்த பரி உடை நன் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்தவெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வள கரிகால் முன்னிலை செல்லார்பெரு வள கரிகால் முன்னிலை செல்லார்
சூடா வாகை பறந்தலை ஆடு பெறசூடா வாகை பறந்தலை ஆடு பெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்தஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
பீடு இல் மன்னர் போலபீடு இல் மன்னர் போல
ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கேஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே