குறுந்தொகை

பாடல்கள்
0 – 50
பாடல்கள்
51 – 100
பாடல்கள்
101 – 150
பாடல்கள்
151 – 200
பாடல்கள்
201 – 250
பாடல்கள்
251 – 300
பாடல்கள்
301 – 350
பாடல்கள்
351 – 401


# 0 கடவுள் வாழ்த்து
தாமரை புரையும் காமர் சேவடி
பவழத்து அன்ன மேனி திகழ் ஒளி
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்
சேவல் அம் கொடியோன் காப்ப……………………….. 5
ஏம வைகல் எய்தின்றால் உலகே
* பாரதம் பாடிய பெருந்தேவனார்

# 1 குறிஞ்சி
செம் களம் பட கொன்று அவுணர் தேய்த்த
செம் கோல் அம்பின் செம் கோட்டு யானை
கழல் தொடி சேஎய் குன்றம்
குருதி பூவின் குலை காந்தட்டே
* திப்புத்தோளார்

# 2 குறிஞ்சி
கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே………………………..5
* இறையனார்

# 3 குறிஞ்சி
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
* தேவகுலத்தார்

# 4 நெய்தல்
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே
* காமஞ்சேர் குளத்தார்

# 5 நெய்தல்
அது-கொல் தோழி காம நோயே
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை
உடை திரை திவலை அரும்பும் தீம் நீர்
மெல்லம்புலம்பன் பிரிந்து என
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே………………………..5
* நரி வெரூஉத்தலையார்

# 6 நெய்தல்
நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று
நனம் தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே
* பதுமனார்

# 7 பாலை
வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்-கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்……………………….. 5
வேய் பயில் அழுவம் முன்னியோரே
* பெரும்பதுமனார்

# 8 மருதம்
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம் இல் பெருமொழி கூறி தம் இல்
கையும் காலும் தூக்க தூக்கும்
ஆடி பாவை போல………………………..………………………..5
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே
* ஆலங்குடி வங்கனார்

# 9 நெய்தல்
யாய் ஆகியளே மாஅயோளே
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யா பூவின் மெய் சாயினளே
பாசடை நிவந்த கணை கால் நெய்தல்
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்………………………..5
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணம் துறைவன் கொடுமை
நம் முன் நாணி கரப்பாடும்மே
* சுயமனார்

# 10 மருதம்
யாய் ஆகியளே விழவு முதலாட்டி
பயறு போல் இணர பைம் தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினை
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள் ஆகலின் நாணிய வருமே………………………..5
* ஓரம்போகியர்

# 11 பாலை
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது
குல்லை கண்ணி வடுகர் முனையது………………………..5
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவர்-உடை நாட்டே
* மாமூலனார்

# 12 பாலை
எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலை_கல் அன்ன பாறை ஏறி
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே
அது மற்று அவலம் கொள்ளாது……………………….. 5
நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊரே
* ஓதலாந்தையார்

# 13 குறிஞ்சி
மாசு அற கழீஇய யானை போல
பெரும் பெயல் உழந்த இரும் பிணர் துறுகல்
பைதல் ஒரு தலை சேக்கும் நாடன்
நோய் தந்தனனே தோழி
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே………………………..5
* கபிலர்

# 14 குறிஞ்சி
அமிழ்து பொதி செம் நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்று சின் மொழி அரிவையை
பெறுக தில் அம்ம யானே பெற்று ஆங்கு
அறிக தில் அம்ம இ ஊரே மறுகில்
நல்லோள் கணவன் இவன் என……………………….. 5
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே
* தொல்கபிலர்

# 15 பாலை
பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய
நால் ஊர் கோசர் நன் மொழி போல
வாய் ஆகின்றே தோழி ஆய் கழல்
சே இலை வெள் வேல் விடலையொடு………………………..5
தொகு வளை முன்கை மடந்தை நட்பே
* ஔவையார்

# 16 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி கள்வர்
பொன் புனை பகழி செப்பம் கொள்-மார்
உகிர் நுதி புரட்டும் ஓசை போல
செம் கால் பல்லி தன் துணை பயிரும்
அம் கால் கள்ளி அம் காடு இறந்தோரே………………………..5
* பாலை பாடிய பெருங்கடுக்கோ

# 17 குறிஞ்சி
மா என மடலும் ஊர்ப பூ என
குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமம் காழ்க்கொளினே
* பேரெயின் முறுவலார்

# 18 குறிஞ்சி
வேரல் வேலி வேர் கோள் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகு-மதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல்
சிறு கோட்டு பெரும் பழம் தூங்கி ஆங்கு இவள்
உயிர் தவ சிறிது காமமோ பெரிதே………………………..5
* கபிலர்

# 19 மருதம்
எவ்வி இழந்த வறுமை யாழ்_பாணர்
பூ இல் வறும் தலை போல புல்லென்று
இனை-மதி வாழியர் நெஞ்சே மனை மரத்து
எல்-உறு மௌவல் நாறும்
பல் இரும் கூந்தல் யாரளோ நமக்கே………………………..5
* பரணர்

# 20 பாலை
அருளும் அன்பும் நீக்கி துணை துறந்து
பொருள்-வயின் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே
* கோப்பெருஞ்சோழன்

# 21 முல்லை
வண்டு பட ததைந்த கொடி இணர் இடை இடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புது பூ கொன்றை
கானம் கார் என கூறினும்
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே………………………..5
* ஓதலாந்தையார்

# 22 பாலை
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய
யாரோ பிரிகிற்பவரே சாரல்
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும்
தேம் ஊர் ஒண்_நுதல் நின்னோடும் செலவே………………………..5
* சேரமான் எந்தை

# 23 குறிஞ்சி
அகவன்_மகளே அகவன்_மகளே
மனவு கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல்
அகவன்_மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன் நெடும் குன்றம் பாடிய பாட்டே………………………..5
* ஔவையார்

# 24 முல்லை
கரும் கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என் ஐ இன்றியும் கழிவது-கொல்லோ
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல
குழைய கொடியோர் நாவே……………………….. 5
காதலர் அகல கல்லென்றவ்வே
* பரணர்

# 25 குறிஞ்சி
யாரும் இல்லை தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினை தாள் அன்ன சிறு பசும் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே………………………..5
* கபிலர்

# 26 குறிஞ்சி
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை
பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன்
தகாஅன் போல தான் தீது மொழியானும்
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே………………………..5
தே கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய்
வரை ஆடு வன் பறழ் தந்தை
கடுவனும் அறியும் அ கொடியோனையே
* கொல்லனழிசி

# 27 பாலை
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமை கவினே………………………..5
* வெள்ளி வீதியார்

# 28 பாலை
முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல் என கூவுவேன்-கொல்
அலமரல் அசை வளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே………………………..5
* ஔவையார்

# 29 குறிஞ்சி
நல் உரை இகந்து புல் உரை தாஅய்
பெயல் நீர்க்கு ஏற்ற பசும் கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவா-உற்றனை நெஞ்சமே நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல் உயர் கோட்டு………………………..5
மகவு உடை மந்தி போல
அகன் உற தழீஇ கேட்குநர் பெறினே
* ஔவையார்

# 30 பாலை
கேட்டிசின் வாழி தோழி அல்கல்
பொய் வலாளன் மெய் உற மரீஇய
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து
அமளி தைவந்தனனே குவளை
வண்டு படு மலரின் சாஅய்……………………….. 5
தமியென் மன்ற அளியென் யானே
* கச்சிப்பேட்டு நன்னாகையார்

# 31 மருதம்
மள்ளர் குழீஇய விழவினானும்
மகளிர் தழீஇய துணங்கையானும்
யாண்டும் காணேன் மாண் தக்கோனை
யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த………………………..5
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே
* ஆதிமந்தி

# 32 குறிஞ்சி
காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ
பொழுது இடை தெரியின் பொய்யே காமம்
மா என மடலொடு மறுகில் தோன்றி
தெற்றென தூற்றலும் பழியே……………………….. 5
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே
* அள்ளூர் நன்முல்லையார்

# 33 மருதம்
அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே
* படுமரத்து மோசிகீரன்

# 34 மருதம்
ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர்
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்
இனியது கேட்டு இன்புறுக இ ஊரே
முனாஅது
யானையங்குருகின் கானல் அம் பெரும் தோடு 5
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை அன்ன எம்
குழை விளங்கு ஆய்_நுதல் கிழவனும் அவனே
* கொல்லி கண்ணன்

# 35 மருதம்
நாண் இல மன்ற எம் கண்ணே நாள் நேர்பு
சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
நுண் உறை அழி துளி தலைஇய
தண் வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே 5
* கழார் கீரன் எயிற்றி

# 36 குறிஞ்சி
துறுகல் அயலது மாணை மா கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்
நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என
நல்_தோள் மணந்த ஞான்றை மற்று அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது……………………….. 5
நோயோ தோழி நின் வயினானே
* பரணர்

# 37 பாலை
நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர்
பிடி பசி களைஇய பெரும் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி அவர் சென்ற ஆறே
* பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 38 குறிஞ்சி
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்று-மன் வாழி தோழி உண்கண்
நீரொடு ஒராங்கு தணப்ப……………………….. 5
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே
* கபிலர்

# 39 பாலை
வெம் திறல் கடும் வளி பொங்கர் போந்து என
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலை உடை அரும் சுரம் என்ப நம்
முலை இடை முனிநர் சென்ற ஆறே
* ஔவையார்

# 40 குறிஞ்சி
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர்
யானும் நீயும் எ வழி அறிதும்
செம் புல பெயல் நீர் போல
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே………………………..5
* செம்புலப்பெயனீரார்

# 41 பாலை
காதலர் உழையர் ஆக பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போல புல்லென்று……………………….. 5
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே
* அணிலாடு முன்றிலார்

# 42 குறிஞ்சி
காமம் ஒழிவது ஆயினும் யாமத்து
கருவி மா மழை வீழ்ந்து என அருவி
விடர்_அகத்து இயம்பும் நாட எம்
தொடர்பும் தேயுமோ நின்-வயினானே
* கபிலர்

# 43 பாலை
செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல்
நல்_அரா கதுவி ஆங்கு என்
அல்லல் நெஞ்சம் அலமலக்கு-உறுமே………………………..5
* ஔவையார்

# 44 பாலை
காலே பரி தப்பினவே கண்ணே
நோக்கி_நோக்கி வாள் இழந்தனவே
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற இ உலகத்து பிறரே
* வெள்ளிவீதியார்

# 45 மருதம்
காலை எழுந்து கடும் தேர் பண்ணி
வால் இழை மகளிர் தழீஇய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என
மறுவரும் சிறுவன் தாயே
தெறுவது அம்ம இ திணை பிறத்தல்லே………………………..5
* ஆலங்குடி வங்கனார்

# 46 மருதம்
ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவின் நுண் தாது குடைவன ஆடி
இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும் 5
புன்கண் மாலையும் புலம்பும்
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே
* மாமிலாடன்

# 47 குறிஞ்சி
கரும் கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலி குருளையின் தோன்றும் காட்டு இடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடு வெண்ணிலவே
* நெடுவெண்ணிலவினார்

# 48 பாலை
தாதின் செய்த தண் பனி பாவை
காலை வருந்தும் கையாறு ஓம்பு என
ஓரை ஆயம் கூற கேட்டும்
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்
நல்_நுதல் பசலை நீங்க அன்ன……………………….. 5
நசை ஆகு பண்பின் ஒரு சொல்
இசையாது-கொல்லோ காதலர் தமக்கே
* பூங்கணுத்திரையார்

# 49 நெய்தல்
அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே………………………..5
* அம்மூவனார்

# 50 மருதம்
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்
துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து
இலங்கு வளை நெகிழ சாஅய்
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே………………………..5
* குன்றியனார்

# 51 நெய்தல்
கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறி
துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனை
யானும் காதலென் யாயும் நனி வெய்யள்
எந்தையும் கொடீஇயர் வேண்டும்……………………….. 5………………………..
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே
* குன்றியனார்

# 52 குறிஞ்சி
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில்
சூர் நசைந்த அனையை யாய் நடுங்கல் கண்டே
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல்
நிரந்து இலங்கு வெண் பல் மடந்தை
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே 5
* பனம்பாரனார்

# 53 மருதம்
எம் அணங்கினவே மகிழ்ந முன்றில்
நனை முதிர் புன்கின் பூ தாழ் வெண் மணல்
வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும்
செந்நெல் வான் பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை………………………..5
நேர் இறை முன்கை பற்றி
சூர்_அர_மகளிரோடு உற்ற சூளே
* கோப்பெருஞ்சோழன்

# 54 குறிஞ்சி
யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇ
கான யானை கை விடு பசும் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே………………………..5
* மீனெறி தூண்டிலார்

# 55 நெய்தல்
மா கழி மணி பூ கூம்ப தூ திரை
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்
சில் நாட்டு அம்ம இ சிறு நல் ஊரே………………………..5
* நெய்த கார்க்கியர்

# 56 பாலை
வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளை உடை கையள் எம்மொடு உணீஇயர்
வருக தில் அம்ம தானே
அளியளோ அளியள் என் நெஞ்சு அமர்ந்தோளே 5
* சிறைக்குடி ஆந்தையார்

# 57 நெய்தல்
பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து……………………….. 5
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே
* சிறைக்குடி ஆந்தையார்

# 58 குறிஞ்சி
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல……………………….. 5
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே
* வெள்ளிவீதியார்

# 59 பாலை
பதலை பாணி பரிசிலர் கோமான்
அதலை குன்றத்து அகல் வாய் குண்டு சுனை
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல்
தவ்வென மறப்பரோ மற்றே முயலவும்
சுரம் பல விலங்கிய அரும் பொருள்………………………..5
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே
* மோசிகீரனார்

# 60 குறிஞ்சி
குறும் தாள் கூதளி ஆடிய நெடு வரை
பெரும் தேன் கண்ட இரும் கால் முடவன்
உட்கை சிறு குடை கோலி கீழ் இருந்து
சுட்டுபு நக்கி ஆங்கு காதலர்
நல்கார் நயவார் ஆயினும்……………………….. 5
பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே
* பரணர்

# 61 மருதம்
தச்சன் செய்த சிறு மா வையம்
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல
உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர்
பொய்கை ஊரன் கேண்மை……………………….. 5
செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே
* தும்பிசேர்கீரன்

# 62 குறிஞ்சி
கோடல் எதிர் முகை பசு வீ முல்லை
நாறு இதழ் குவளையொடு இடை இடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே………………………..5
* சிறைக்குடி ஆந்தையார்

# 63 பாலை
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என
செய்_வினை கைம்மிக எண்ணுதி அ வினைக்கு
அம் மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே
* உகாய்க்குடி கிழார்

# 64 முல்லை
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என
புன் தலை மன்றம் நோக்கி மாலை
மட கண் குழவி அலம்வந்து அன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர் தோழி சேய்நாட்டோரே……………………….. 5
* கருவூர் கதப்பிள்ளை

# 65 முல்லை
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன்
இன்புறு துணையொடு மறுவந்து உகள
தான் வந்தன்றே தளி தரு தண் கார்
வாராது உறையுநர் வரல் நசைஇ
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே………………………..5
* கோவூர் கிழார்

# 66 முல்லை
மடவ மன்ற தடவு நிலை கொன்றை
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதர
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த
வம்ப மாரியை கார் என மதித்தே……………………….. 5
* கோவர்த்தனார்

# 67 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி கிள்ளை
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளி அம் காடு இறந்தோரே………………………..5
* அள்ளூர் நன்முல்லை

# 68 குறிஞ்சி
பூழ் கால் அன்ன செம் கால் உழுந்தின்
ஊழ்ப்படு முது காய் உழை_இனம் கவரும்
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே
* அள்ளூர் நன்முல்லை

# 69 குறிஞ்சி
கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என
கைம்மை உய்யா காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்………………………..………………………..5
வாரல் வாழியோ வருந்துதும் யாமே
* கடுந்தோட் கரவீரன்

# 70 குறிஞ்சி
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறு_மகள்
நறும் தண் நீரள் ஆர் அணங்கினளே
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன்
சில மெல்லியவே கிளவி
அனை மெல்லியல் யான் முயங்கும்-காலே………………………..5
* ஓரம்போகியார்

# 71 பாலை
மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை
பெரும் தோள் நுணுகிய நுசுப்பின்
கல் கெழு கானவர் நல்கு-உறு மகளே
* கருவூர் ஓதஞானி

# 72 குறிஞ்சி
பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே
தே மொழி திரண்ட மென் தோள் மா மலை
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள் பெரு மழை கண்ணே………………………..5
* மள்ளனார்

# 73 குறிஞ்சி
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழி கோசர் போல
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே………………………..5
* பரணர்

# 74 குறிஞ்சி
விட்ட குதிரை விசைப்பின் அன்ன
விசும்பு தோய் பசும் கழை குன்ற நாடன்
யாம் தன் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆன் ஏறு போல
சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே………………………..5
* விட்ட குதிரையார்

# 75 மருதம்
நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண் கோட்டு யானை சோனை படியும்
பொன் மலி பாடலி பெறீஇயர்
யார் வாய் கேட்டனை காதலர் வரவே………………………..5
* படுமரத்து மோசிகீரனார்

# 76 குறிஞ்சி
காந்தள் வேலி ஓங்கு மலை நன் நாட்டு
செல்ப என்பவோ கல் வரை மார்பர்
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெரும் களிற்று செவியின் மான தைஇ
தண் வரல் வாடை தூக்கும்……………………….. 5
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே
* கிள்ளிமங்கலங்கிழார்

# 77 பாலை
அம்ம வாழி தோழி யாவதும்
தவறு எனின் தவறோ இலவே வெம் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு……………………….. 5
எளிய ஆகிய தட மென் தோளே
* மதுரை மருதன் இளநாகனார்

# 78 குறிஞ்சி
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய் கோடியர் முழவின் ததும்பி
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப
நோ_தக்கன்றே காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும்……………………….. 5
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே
* நக்கீரனார்

# 79 பாலை
கான யானை தோல் நயந்து உண்ட
பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினை
அலங்கல் உலவை ஏறி ஒய்யென
புலம்பு தரு குரல புறவு பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்……………………….. 5
சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்கு
செல்லாது ஏகல் வல்லுவோரே
* குடவாயி கீரனக்கன்

# 80 மருதம்
கூந்தல் ஆம்பல் முழு_நெறி அடைச்சி
பெரும் புனல் வந்த இரும் துறை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது
அஞ்சுவது உடையள் ஆயின் வெம் போர்
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி………………………..5
முனை ஆன் பெரு நிரை போல
கிளையொடு காக்க தன் கொழுநன் மார்பே
* ஔவையார்

# 81 குறிஞ்சி
இவளே
நின் சொல் கொண்ட என் சொல் தேறி
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை
புது நலன் இழந்த புலம்பு-மார் உடையள்
உது காண் தெய்ய உள்ளல் வேண்டும்………………………..5
நிலவும் இருளும் போல புலவு திரை
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே
* வடம வண்ணக்கன் பேரிசாத்தன்

# 82 குறிஞ்சி
வார்-உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்பு
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார்
யார் ஆகுவர்-கொல் தோழி சாரல்
பெரும் புன குறவன் சிறுதினை மறுகால்
கொழும் கொடி அவரை பூக்கும்……………………….. 5
அரும் பனி அற்சிரம் வாராதோரே
* கடுவன் மள்ளன்

# 83 குறிஞ்சி
அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
தம் இல் தமது உண்டு அன்ன சினை-தொறும்
தீம் பழம் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே………………………..5
* வெண்பூதன்

# 84 பாலை
பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள்
இனி அறிந்தேன் அது தனி ஆகுதலே
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே………………………..5
* மோசிகீரன்

# 85 மருதம்
யாரினும் இனியன் பேர் அன்பினனே
உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர்
தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும்……………………….. 5
யாணர் ஊரன் பாணன் வாயே
* வடம வண்ணக்கன் தாமோதரன்

# 86 குறிஞ்சி
சிறை பனி உடைந்த சே அரி மழை கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலை கலங்கி
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும்………………………..5
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே
* வெண்கொற்றன்

# 87 குறிஞ்சி
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
பசைஇ பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே………………………..5
* கபிலர்

# 88 குறிஞ்சி
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
சிறு கண் பெரும் களிறு வய புலி தாக்கி
தொன் முரண் சோரும் துன் அரும் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்
வடு நாணலமே தோழி நாமே……………………….. 5
* மதுரை கதக்கண்ணன்

# 89 மருதம்
பா அடி உரல பகு வாய் வள்ளை
ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி
கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய………………………..5
நல் இயல் பாவை அன்ன இ
மெல் இயல் குறு_மகள் பாடினள் குறினே
* பரணர்

# 90 குறிஞ்சி
எற்றோ வாழி தோழி முற்றுபு
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய
மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி
வரை இழி அருவி உண்துறை தரூஉம்………………………..5
குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே
* மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்

# 91 மருதம்
அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம்
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்
பல ஆகுக நின் நெஞ்சில் படரே
ஓவாது ஈயும் மாரி வண் கை……………………….. 5
கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போல
சில ஆகுக நீ துஞ்சும் நாளே
* ஔவையார்

# 92 நெய்தல்
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து
அளிய தாமே கொடும் சிறை பறவை
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை உள்வாய் செரீஇய
இரை கொண்டமையின் விரையுமால் செலவே 5
* தாமோதரன்

# 93 மருதம்
நன் நலம் தொலைய நலம் மிக சாஅய்
இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ
புலவி அஃது எவனோ அன்பு இலம்-கடையே
* அள்ளூர் நன்முல்லையார்

# 94 முல்லை
பெரும் தண் மாரி பேதை பித்திகத்து
அரும்பே முன்னும் மிக சிவந்தனவே
யானே மருள்வென் தோழி பானாள்
இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும்
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே………………………..5
அருவி மா மலை தத்த
கருவி மா மழை சிலைதரும் குரலே
* கதக்கண்ணன்

# 95 குறிஞ்சி
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகை ததும்பும் பன் மலர் சாரல்
சிறுகுடி குறவன் பெரும் தோள் குறு_மகள்
நீர் ஓர் அன்ன சாயல்
தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே………………………..5
* கபிலர்

# 96 குறிஞ்சி
அருவி வேங்கை பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ என்றி யான் அது
நகை என உணரேன் ஆயின்
என் ஆகுவை-கொல் நல்_நுதல் நீயே
* அள்ளூர் நன்முல்லை

# 97 நெய்தல்
யானே ஈண்டையேனே என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தம் ஊரானே
மறை அலர் ஆகி மன்றத்தஃதே
* வெண்பூதி

# 98 முல்லை
இன்னள் ஆயினள் நல்_நுதல் என்று அவர்
துன்ன சென்று செப்புநர் பெறினே
நன்று-மன் வாழி தோழி நம் படப்பை
நீர் வார் பைம் புதல் கலித்த
மாரி பீரத்து அலர் சில கொண்டே……………………….. 5
* கோக்குளமுற்றன்

# 99 முல்லை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளி
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து
மருண்டனென் அல்லெனோ உலகத்து பண்பே
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உண சென்று அற்று ஆங்கு………………………..5
அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே
* ஔவையார்

# 100 குறிஞ்சி
அருவி பரப்பின் ஐவனம் வித்தி
பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து என
கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும்
வல் வில் ஓரி கொல்லி குட வரை………………………..5
பாவையின் மடவந்தனளே
மணத்தற்கு அரிய பணை பெரும் தோளே
* கபிலர்

# 101 குறிஞ்சி
விரி திரை பெரும் கடல் வளைஇய உலகமும்
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கின் சீர் சாலாவே
பூ போல் உண்கண் பொன் போல் மேனி
மாண் வரி அல்குல் குறு_மகள்……………………….. 5
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே
* பரூஉ மோவாய் பதுமன்

# 102 நெய்தல்
உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி
வான் தோய்வு அற்றே காமம்
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே
* ஔவையார்

# 103 நெய்தல்
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்
கவிர் இதழ் அன்ன தூவி செ வாய்
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக
தூஉம் துவலை துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர் நம் காதலர்……………………….. 5
வாழேன் போல்வல் தோழி யானே
* வாயிலான் தேவன்

# 104 பாலை
அம்ம வாழி தோழி காதலர்
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப
தாளி தண் பவர் நாள் ஆ மேயும்
பனி படு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பல ஆகுபவே……………………….. 5
* காவன்முல்லை பூதனார்

# 105 குறிஞ்சி
புனவன் துடவை பொன் போல் சிறுதினை
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள்
வெறி-உறு வனப்பின் வெய்து-உற்று நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை……………………….. 5
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே
* நக்கீரர்

# 106 குறிஞ்சி
புல் வீழ் இற்றி கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்து கிளவி நம்-வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு……………………….. 5
தான் மணந்து அனையம் என விடுகம் தூதே
* கபிலர்

# 107 மருதம்
குவி இணர் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செம் நெற்றி கணம்_கொள் சேவல்
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி
கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர்………………………..5
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே
* மதுரை கண்ணனார்

# 108 முல்லை
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடி
கறவை கன்று-வயின் படர புறவில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூ
செம் வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே………………………..5
* வாயிலான் தேவன்

# 109 நெய்தல்
முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளை
புணரி இகு திரை தரூஉம் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது-மன்னோ நன் நுதல் கவினே
* நம்பி குட்டுவன்

# 110 முல்லை
வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி நீர
நீல பைம் போது உளரி புதல
பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி
நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த………………………..5
வண்ண துய்ம் மலர் உதிர தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்-கொல் என்னாதோரே
* கிள்ளிமங்கலம்கிழார்

# 111 குறிஞ்சி
மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்
அது என உணரும் ஆயின் ஆயிடை
கூடை இரும் பிடி கை கரந்து அன்ன
கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன்………………………..5
வல்லே வருக தோழி நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே
* தீன்மதிநாகன்

# 112 குறிஞ்சி
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள் அற விடினே உள்ளது நாணே
பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நார் உடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே………………………..5
* ஆலத்தூர் கிழார்

# 113 மருதம்
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்கு
சேய்த்தும் அன்றே சிறு கான்யாறே
இரை தேர் வெண்_குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம்
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்………………………..5
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே
* மாதீர்த்தன்

# 114 நெய்தல்
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி
நின் குறி வந்தனென் இயல் தேர் கொண்க
செல்கம் செல வியங்கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே………………………..5
* பொன்னாகன்

# 115 குறிஞ்சி
பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரோ
ஒரு நன்று உடையள் ஆயினும் புரி மாண்டு
புலவி தீர அளி-மதி இலை கவர்பு
ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல்
மென் நடை மரையா துஞ்சும்……………………….. 5
நன் மலை நாட நின் அலது இலளே
* கபிலர்

# 116 குறிஞ்சி
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்
வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறை
நுண் மணல் அறல் வார்ந்து அன்ன
நன் நெறியவ்வே நறும் தண்ணியவே
* இளங்கீரன்

# 117 நெய்தல்
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளை செலீஇயர் அண்டர்
கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன்
வாராது அமையினும் அமைக……………………….. 5
சிறியவும் உள ஈண்டு விலைஞர் கை வளையே
* குன்றியனார்

# 118 நெய்தல்
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார் இல் மாலை
பலர் புகு வாயில் அடைப்ப கடவுநர்
வருவீர் உளீரோ எனவும்
வாரார் தோழி நம் காதலோரே……………………….. 5
* நன்னாகையார்

# 119 குறிஞ்சி
சிறு வெள் அரவின் அம் வரி குருளை
கான யானை அணங்கி ஆஅங்கு
இளையன் முளை வாள் எயிற்றள்
வளை உடை கையள் எம் அணங்கியோளே
* சத்திநாதனார்

# 120 குறிஞ்சி
இல்லோன் இன்பம் காமுற்று ஆஅங்கு
அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி
நல்லள் ஆகுதல் அறிந்து ஆங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே
* பரணர்

# 121 குறிஞ்சி
மெய்யே வாழி தோழி சாரல்
மை பட்டு அன்ன மா முக முசு கலை
ஆற்ற பாயா தப்பல் ஏற்ற
கோட்டொடு போகி ஆங்கு நாடன்
தான் குறி வாயா தப்பற்கு……………………….. 5
தாம் பசந்தன என் தட மென் தோளே
* கபிலர்

# 122 நெய்தல்
பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே
* ஓரம்போகியார்

# 123 நெய்தல்
இருள் திணிந்து அன்ன ஈர்ம் தண் கொழு நிழல்
நிலவு குவித்து அன்ன வெண் மணல் ஒரு சிறை
கரும் கோட்டு புன்னை பூ பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே………………………..5
* ஐயூர் முடவன்

# 124 பாலை
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன் தலை
ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு
இன்னா என்றிர் ஆயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே
* பாலை பாடிய பெருங்கடுக்கோ

# 125 நெய்தல்
இலங்கு வளை நெகிழ சாஅய் யானே
உளெனே வாழி தோழி சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே பழ விறல்
பறை வலம் தப்பிய பைதல் நாரை………………………..5
திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணம் துறைவனொடு கண்மாறின்றே
* அம்மூவன்

# 126 முல்லை
இளமை பாரார் வளம் நசைஇ சென்றோர்
இவணும் வாரார் எவணரோ என
பெயல் புறந்தந்த பூ கொடி முல்லை
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே தோழி நறும் தண் காரே……………………….. 5
* ஒக்கூர் மாசாத்தியார்

# 127 மருதம்
குருகு கொள குளித்த கெண்டை அயலது
உரு கெழு தாமரை வான் முகை வெரூஉம்
கழனி அம் படப்பை காஞ்சி ஊர
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக
உள்ள பாணர் எல்லாம்……………………….. 5
கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே
* ஓரம்போகியார்

# 128 நெய்தல்
குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்கு
சேயள் அரியோள் படர்தி
நோயை நெஞ்சே நோய் பாலோயே………………………..5
* பரணர்

# 129 குறிஞ்சி
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளாய் அத்தை
மா கடல் நடுவண் எண் நாள் பக்கத்து
பசு வெண் திங்கள் தோன்றி ஆங்கு
கதுப்பு அயல் விளங்கும் சிறு நுதல்………………………..5
புது கோள் யானையின் பிணித்து அற்றால் எம்மே
* கோப்பெருஞ்சோழன்

# 130 பாலை
நிலம் தொட்டு புகாஅர் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின்
குடிமுறை_குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே………………………..5
* வெள்ளிவீதியார்

# 131 பாலை
ஆடு அமை புரையும் வனப்பின் பணை தோள்
பேர் அமர் கண்ணி இருந்த ஊரே
நெடும் சேண் ஆரிடையதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்வி பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல………………………..………………………..5
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே
* ஓரேருழவனார்

# 132 குறிஞ்சி
கவவு கடும்-குரையள் காமர் வனப்பினள்
குவவு மென் முலையள் கொடி கூந்தலளே
யாங்கு மறந்து அமைகோ யானே ஞாங்கர்
கடும் சுரை நல் ஆன் நடுங்கு தலை குழவி
தாய் காண் விருப்பின் அன்ன……………………….. 5
சாஅய் நோக்கினள் மாஅயோளே
* சிறைக்குடி ஆந்தையார்

# 133 குறிஞ்சி
புனவன் துடவை பொன் போல் சிறுதினை
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என்
உரம் செத்தும் உளெனே தோழி என்
நலம் புதிது உண்ட புலம்பினானே……………………….. 5
* உறையூர் முதுகண்ணன் சாத்தன்

# 134 குறிஞ்சி
அம்ம வாழி தோழி நம்மொடு
பிரிவு இன்று ஆயின் நன்று-மன் தில்ல
குறும் பொறை தடைஇய நெடும் தாள் வேங்கை
பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி………………………..5
நிலம் கொள் பாம்பின் இழிதரும்
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே
* கோவேங்கை பெருங்கதவன்

# 135 பாலை
வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என
நமக்கு உரைத்தோரும் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே
* பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 136 குறிஞ்சி
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள் மதம் போல
பாணியும் உடைத்து அது காணுநர் பெறினே………………………..5
* மிளைப்பெரும்கந்தன்

# 137 பாலை
மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப
நின் துறந்து அமைகுவென் ஆயின் என் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக யான் செலவு-உறு தகவே
* பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 138 குறிஞ்சி
கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மயில் அடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே………………………..5
* கொல்லன் அழிசி

# 139 மருதம்
மனை உறை கோழி குறும் கால் பேடை
வேலி வெருகு இனம் மாலை உற்று என
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய
பைதல் பிள்ளை கிளை பயிர்ந்து ஆஅங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு……………………….. 5
வாரல் வாழியர் ஐய எம் தெருவே
* ஒக்கூர் மாசாத்தியார்

# 140 பாலை
வேதின வெரிநின் ஓதி முது போத்து
ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர் உரன் அழிந்து
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம்
யாங்கு அறிந்தன்று இ அழுங்கல் ஊரே………………………..5
* அள்ளூர் நன்முல்லை

# 141 குறிஞ்சி
வளை வாய் சிறு கிளி விளை தினை கடீஇயர்
செல்க என்றோளே அன்னை என நீ
சொல்லின் எவனோ தோழி கொல்லை
நெடும் கை வன் மான் கடும் பகை உழந்த
குறும் கை இரும் புலி கொலை வல் ஏற்றை………………………..5
பைம் கண் செந்நாய் படு பதம் பார்க்கும்
ஆர் இருள் நடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனவே
* மதுரை பெருங்கொல்லனார்

# 142 குறிஞ்சி
சுனை பூ குற்று தொடலை தைஇ
புன கிளி கடியும் பூ கண் பேதை
தான் அறிந்தன்றோ இலளே பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து என்
உள்ளம் பின்னும் தன் உழையதுவே………………………..5
* கபிலர்

# 143 குறிஞ்சி
அழியல் ஆய்_இழை அன்பு பெரிது உடையன்
பழியும் அஞ்சும் பய மலை நாடன்
நில்லாமையே நிலையிற்று ஆகலின்
நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின்
கடப்பாட்டாளன் உடை பொருள் போல………………………..5
தங்குதற்கு உரியது அன்று நின்
அம் கலுழ் மேனி பாஅய பசப்பே
* மதுரை கணக்காயன் மகன் நக்கீரன்

# 144 பாலை
கழிய காவி குற்றும் கடல
வெண் தலை புணரி ஆடியும் நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர
இ வழி படுதலும் ஒல்லாள் அ வழி
பரல் பாழ்படுப்ப சென்றனள் மாதோ………………………..5
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே
* மதுரை ஆசிரியன் கோடம்கொற்றன்

# 145 குறிஞ்சி
உறை பதி அன்று இ துறை கெழு சிறுகுடி
கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி
ஆனா துயரமொடு வருந்தி பானாள்
துஞ்சாது உறைநரொடு உசாவா
துயில் கண் மாக்களொடு நெட்டு இரா உடைத்தே 5
* கொல்லன் அழிசி

# 146 குறிஞ்சி
அம்ம வாழி தோழி நம் ஊர்
பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர்-கொல்லோ
தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர்
நன்று நன்று என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே………………………..5
* வெள்ளிவீதியார்

# 147 பாலை
வேனில் பாதிரி கூன் மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை
நுண் பூண் மடந்தையை தந்தோய் போல
இன் துயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணை பிரிந்தோரே………………………..5
* கோப்பெருஞ்சோழன்

# 148 முல்லை
செல்வ சிறாஅர் சீறடி பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி
காசின் அன்ன போது ஈன் கொன்றை
குருந்தொடு அலம்வரும் பெரும் தண் காலையும்
கார் அன்று என்றி ஆயின்……………………….. 5
கனவோ மற்று இது வினவுவல் யானே
* இளங்கீரந்தையார்

# 149 பாலை
அளிதோ தானே நாணே நம்மொடு
நனி நீடு உழந்தன்று-மன்னே இனியே
வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை
தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு
தாங்கும் அளவை தாங்கி……………………….. 5
காமம் நெரிதர கை நில்லாதே
* வெள்ளிவீதியார்

# 150 குறிஞ்சி
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான மீனின் வயின்_வயின் இமைக்கும்
ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின் உள் நோய் மல்கும்
புல்லின் மாய்வது எவன்-கொல் அன்னாய்………………………..5
* மாடலூர் கிழார்

# 151 பாலை
வங்கா கடந்த செம் கால் பேடை
எழால் உற வீழ்ந்து என கணவன் காணாது
குழல் இசை குரல குறும் பல அகவும்
குன்று கெழு சிறு நெறி அரிய என்னாது
மறப்பு அரும் காதலி ஒழிய……………………….. 5
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே
* தூங்கலோரி

# 152 குறிஞ்சி
யாவதும் அறிகிலர் கழறுவோரே
தாய் இல் முட்டை போல உள் கிடந்து
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே
யாமை பார்ப்பின் அன்ன
காமம் காதலர் கையற விடினே……………………….. 5
* கிள்ளிமங்கலம்கிழார்

# 153 குறிஞ்சி
குன்ற கூகை குழறினும் முன்றில்
பலவின் இரும் சினை கலை பாய்ந்து உகளினும்
அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் இனியே
ஆர் இருள் கங்குல் அவர்-வயின்
சாரல் நீள் இடை செலவு ஆனாதே………………………..5
* கபிலர்

# 154 பாலை
யாங்கு அறிந்தனர்-கொல் தோழி பாம்பின்
உரி நிமிர்ந்து அன்ன உருப்பு அவிர் அமையத்து
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி
பொறி மயிர் எருத்தின் குறு நடை பேடை
பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டு………………………..5
தயங்க இருந்து புலம்ப கூஉம்
அரும் சுர வைப்பின் கானம்
பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரே
* மதுரை சீத்தலை சாத்தன்

# 155 முல்லை
முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர்
விதை குறு வட்டி போதொடு பொதுள
பொழுதோ தான் வந்தன்றே மெழுகு ஆன்று
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப சுரன் இழிபு………………………..5
மாலை நனி விருந்து அயர்-மார்
தேர் வரும் என்னும் உரை வாராதே
* உரோடகத்து கந்தரத்தன்

# 156 குறிஞ்சி
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து
படிவ உண்டி பார்ப்பன மகனே
எழுதாக்கற்பின் நின் சொல்லுள்ளும்………………………..5
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ இதுவே
* பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்

# 157 மருதம்
குக்கூ என்றது கோழி அதன்_எதிர்
துட்கென்றன்று என் தூ நெஞ்சம்
தோள் தோய் காதலர் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே
* அள்ளூர் நன்முல்லை

# 158 குறிஞ்சி
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇ
காலொடு வந்த கமம் சூல் மா மழை
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை……………………….. 5
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனே
* ஔவையார்

# 159 குறிஞ்சி
தழை அணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக
அம் மெல் ஆகம் நிறைய வீங்கி
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின
யாங்கு ஆகுவள்-கொல் பூம்_குழை என்னும்………………………..5
அவல நெஞ்சமொடு உசாவா
கவலை மாக்கட்டு இ பேதை ஊரே
* வடம வண்ணக்கன் பேரிசாத்தன்

# 160 குறிஞ்சி
நெருப்பின் அன்ன செம் தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு
தடவின் ஓங்கு சினை கட்சியில் பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்து
பெரும் தண் வாடையும் வாரார்……………………….. 5
இஃதோ தோழி நம் காதலர் வரவே
* மதுரை மருதன் இளநாகன்

# 161 குறிஞ்சி
பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுது கண் பனிப்ப வீசும் அதன்_தலை
புலி பல் தாலி புதல்வன் புல்லி
அன்னா என்னும் அன்னையும் அன்னோ
என் மலைந்தனன்-கொல் தானே தன் மலை………………………..5
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே
* நக்கீரர்

# 162 முல்லை
கார் புறந்தந்த நீர் உடை வியன் புலத்து
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போல காட்டல்……………………….. 5
தகுமோ மற்று இது தமியோர் மாட்டே
* கருவூர் பவுத்திரன்

# 163 நெய்தல்
யார் அணங்கு உற்றனை கடலே பூழியர்
சிறு தலை வெள்ளை தோடு பரந்து அன்ன
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை
வெள் வீ தாழை திரை அலை
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே………………………..5
* அம்மூவன்

# 164 மருதம்
கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு
துணர் தே கொக்கின் தீம் பழம் கதூஉம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர் குணாது
தண் பெரும் பவ்வம் அணங்குக தோழி
மனையோள் மடமையின் புலக்கம்………………………..5
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே
* மாங்குடிமருதன்

# 165 குறிஞ்சி
மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டு ஆங்கு
விழைந்ததன் தலையும் நீ வெய்து-உற்றனை
இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம்
பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள்
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே………………………..5
* பரணர்

# 166 நெய்தல்
தண் கடல் படு திரை பெயர்த்தலின் வெண் பறை
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும்
ஊரோ நன்று-மன் மரந்தை
ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே
* கூடலூர் கிழார்

# 167 முல்லை
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவு-உறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய் புகை கழும
தான் துழந்து அட்ட தீம் புளி பாகர்
இனிது என கணவன் உண்டலின்……………………….. 5
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்_நுதல் முகனே
* கூடலூர் கிழார்

# 168 பாலை
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை
இரும் பனம் பசும் குடை பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டு அன்ன
நறும் தண்ணியளே நன் மா மேனி
புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள் 5
மணத்தலும் தணத்தலும் இலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே
* சிறைக்குடி ஆந்தையார்

# 169 மருதம்
சுரம் செல் யானை கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே
பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும் புலவு ஆகி……………………….. 5
நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே
* வெள்ளிவீதியார்

# 170 குறிஞ்சி
பலரும் கூறுக அஃது அறியாதோரே
அருவி தந்த நாள்_குரல் எருவை
கயம் நாடு யானை கவளம் மாந்தும்
மலை கெழு நாடன் கேண்மை
தலைபோகாமை நற்கு அறிந்தனென் யானே………………………..5
* கருவூர் கிழார்

# 171 மருதம்
காண் இனி வாழி தோழி யாணர்
கடும் புனல் அடைகரை நெடும் கயத்து இட்ட
மீன் வலை மா பட்டு ஆங்கு
இது மற்று எவனோ நொதுமலர் தலையே
* பூங்கணுத்திரையார்

# 172 நெய்தல்
தாஅல் அம் சிறை நொ பறை வாவல்
பழு மரம் படரும் பையுள் மாலை
எமியம் ஆக ஈங்கு துறந்தோர்
தமியர் ஆக இனியர்-கொல்லோ
ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த………………………..5
உலை வாங்கு மிதி தோல் போல
தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே
* கச்சிப்பேட்டு நன்னாகையார்

# 173 குறிஞ்சி
பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த
பல் நூல் மாலை பனை படு கலி_மா
பூண் மணி கறங்க எறி நாண் அட்டு
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப
இன்னள் செய்தது இது என முன் நின்று………………………..5
அவள் பழி நுவலும் இ ஊர்
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே
* மதுரை காஞ்சி புலவன்

# 174 பாலை
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்து
கவை முட கள்ளி காய் விடு கடு நொடி
துதை மென் தூவி துணை புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார் நம் துறந்து
பொருள்-வயின் பிரிவார் ஆயின் இ உலகத்து………………………..5
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆரும் இல்லதுவே
* வெண்பூதி

# 175 நெய்தல்
பருவ தேன் நசைஇ பல் பறை தொழுதி
உரவு திரை பொருத திணி மணல் அடைகரை
நனைந்த புன்னை மா சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மா நீர் சேர்ப்பற்கு
இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று………………………..5
பிறர் பிறர் அறிய கூறல்
அமைந்து ஆங்கு அமைக அம்பல் அஃது எவனே
* உலோச்சன்

# 176 குறிஞ்சி
ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன்
பல் நாள் வந்து பணிமொழி பயிற்றி என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
வரை முதிர் தேனின் போகியோனே
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ………………………..5
வேறு புல நன் நாட்டு பெய்த
ஏறு உடை மழையின் கலிழும் என் நெஞ்சே
* வருமுலையாரித்தி

# 177 நெய்தல்
கடல் பாடு அவிந்து கானல் மயங்கி
துறை நீர் இரும் கழி புல்லென்றன்றே
மன்றல் அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும் இன்று அவர்
வருவர்-கொல் வாழி தோழி நாம் நக………………………..5
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சி
தணப்பு அரும் காமம் தண்டியோரே
* உலோச்சன்

# 178 மருதம்
அயிரை பரந்த அம் தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்பு உடை திரள் கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள்
இடை முலை கிடந்தும் நடுங்கல் ஆனீர்
தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு 5
அரியம் ஆகிய-காலை
பெரிய நோன்றனீர் நோகோ யானே
* நெடும்பல்லியத்தை

# 179 குறிஞ்சி
கல்லென் கானத்து கடமா ஆட்டி
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன
செல்லல் ஐஇய உது எம் ஊரே
ஓங்கு வரை அடுக்கத்து தீம் தேன் கிழித்த
குவை உடை பசும் கழை தின்ற கய வாய்………………………..5
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கில் குவட்டு இடையதுவே
* குட்டுவன் கண்ணன்

# 180 பாலை
பழூஉ பல் அன்ன பரு உகிர் பா அடி
இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து
எய்தினர்-கொல்லோ பொருளே அல்குல்………………………..5
அம் வரி வாட துறந்தோர்
வன்பர் ஆக தாம் சென்ற நாட்டே
* கச்சிப்பேட்டு நன்னாகையார்

# 181 குறிஞ்சி
இது மற்று எவனோ தோழி துனி இடை
இன்னர் என்னும் இன்னா கிளவி
இரு மருப்பு எருமை ஈன்றணி காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன்……………………….. 5
திரு மனை பல் கடம்பூண்ட
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே
* கிள்ளிமங்கலங்கிழார்

# 182 குறிஞ்சி
விழு தலை பெண்ணை விளையல் மா மடல்
மணி அணி பெரும் தார் மரபில் பூட்டி
வெள் என்பு அணிந்து பிறர் எள்ள தோன்றி
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி
தெருவின் இயலவும் தருவது-கொல்லோ………………………..5
கலிழ் கவின் அசை நடை பேதை
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே
* மடல் பாடிய மாதங்கீரன்

# 183 முல்லை
சென்ற நாட்ட கொன்றை அம் பசு வீ
நம் போல் பசக்கும்-காலை தம் போல்
சிறு தலை பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை மானையும் காண்பர்-கொல் நமரே
புல்லென் காயா பூ கெழு பெரும் சினை………………………..5
மென் மயில் எருத்தின் தோன்றும்
புன்_புல வைப்பின் கானத்தானே
* ஔவையார்

# 184 நெய்தல்
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை
குறுகல் ஓம்பு-மின் சிறுகுடி செலவே
இதற்கு இது மாண்டது என்னாது அதற்பட்டு
ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம்
மயில் கண் அன்ன மாண் முடி பாவை………………………..5
நுண் வலை பரதவர் மட_மகள்
கண் வலை படூஉம் கானலானே
* ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன்

# 185 குறிஞ்சி
நுதல் பசப்பு இவர்ந்து திதலை வாடி
நெடு மென் பணை தோள் சாஅய் தொடி நெகிழ்ந்து
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் என
சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரி
பாம்பு பை அவிந்தது போல கூம்பி………………………..5
கொண்டலின் தொலைந்த ஒண் செம்_காந்தள்
கல் மிசை கவியும் நாடற்கு என்
நன் மா மேனி அழி படர் நிலையே
* மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

# 186 முல்லை
ஆர் கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லை புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்கு
துயில் துறந்தனவால் தோழி எம் கண்ணே
* ஒக்கூர் மாசாத்தியார்

# 187 குறிஞ்சி
செ வரை சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி
பெரு வரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன் தோழி
வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே………………………..5
* கபிலர்

# 188 முல்லை
முகை முற்றினவே முல்லை முல்லையொடு
தகை முற்றினவே தண் கார் வியன் புனம்
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்று என் மாண் நலம் குறித்தே
* மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மன்னார்

# 189 பாலை
இன்றே சென்று வருதும் நாளை
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப
கால் இயல் செலவின் மாலை எய்தி………………………..5
சில் நிரை வால் வளை குறு_மகள்
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே
* மதுரை ஈழத்து பூதன் தேவன்

# 190 முல்லை
நெறி இரும் கதுப்பொடு பெரும் தோள் நீவி
செறி வளை நெகிழ செய்_பொருட்கு அகன்றோர்
அறிவர்-கொல் வாழி தோழி பொறி வரி
வெம் சின அரவின் பைம் தலை துமிய
நரை உரும் உரரும் அரை இருள் நடுநாள்………………………..5
நல் ஏறு இயங்கு-தொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணி குரலே
* பூதம்புல்லன்

# 191 முல்லை
உது காண் அதுவே இது என மொழிகோ
நோன் சினை இருந்த இரும் தோட்டு புள்_இனம்
தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ள
தீம் குரல் அகவ கேட்டும் நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின் போதின்……………………….. 5
பொம்மல் ஓதியும் புனையல்
எம்மும் தொடாஅல் என்குவெம்-மன்னே

#192 பாலை
ஈங்கே வருவர் இனையல் அவர் என
அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி
மின்னின் தூவி இரும் குயில் பொன்னின்
உரை திகழ் கட்டளை கடுப்ப மா சினை………………………..5
நறும் தாது கொழுதும் பொழுதும்
வறும் குரல் கூந்தல் தைவருவேனே
* கச்சிப்பேட்டு நன்னாகையார்

# 193 முல்லை
மட்டம் பெய்த மணி கலத்து அன்ன
இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை
தட்டை_பறையின் கறங்கும் நாடன்
தொல்லை திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன்-மன் எம் தோளே……………………….. 5
இன்றும் முல்லை முகை நாறும்மே
* அரிசில் கிழார்

# 194 முல்லை
என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்_எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்கு-உறுமே………………………..5
* கோவர்த்தனார்

# 195 நெய்தல்
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை
யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர்
இன்னாது இரங்கும் என்னார் அன்னோ
தைவரல் அசை வளி மெய் பாய்ந்து ஊர்தர………………………..5
செய்வு-உறு பாவை அன்ன என்
மெய் பிறிது ஆகுதல் அறியாதோரே
* தேரதரன்

# 196 மருதம்
வேம்பின் பைம் காய் என் தோழி தரினே
தேம் பூம் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர்
தைஇ திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்……………………….. 5
ஐய அற்றால் அன்பின் பாலே
* மிளை கந்தன்

# 197 நெய்தல்
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை
ஊதை அம் குளிரொடு பேது உற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம்
காதலர் பிரிந்த என் குறித்து வருமே………………………..5
* கச்சிப்பேட்டு நன்னாகையார்

# 198 குறிஞ்சி
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைம் தாள் செந்தினை
மட பிடி தட கை அன்ன பால் வார்பு
கரி குறட்டு இறைஞ்சிய செறி கோள் பைம் குரல்
படு கிளி கடிகம் சேறும் அடு போர்………………………..5
எஃகு விளங்கு தட கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை
வாரற்க தில்ல வருகுவள் யாயே
* கபிலர்

# 199 குறிஞ்சி
பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று
உண்டு-மன் வாழிய நெஞ்சே திண் தேர்
கைவள் ஓரி கானம் தீண்டி
எறி வளி கமழும் நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள்-வயின்……………………….. 5
இன்றை அன்ன நட்பின் இ நோய்
இறு முறை என ஒன்று இன்றி
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே
* பரணர்

# 200 நெய்தல்
பெய்த குன்றத்து பூ நாறு தண் கலுழ்
மீமிசை தாஅய் வீசும் வளி கலந்து
இழிதரும் புனலும் வாரார் தோழி
மறந்தோர் மன்ற மறவாம் நாமே
கால மாரி மாலை மா மலை……………………….. 5
இன் இசை உருமின முரலும்
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே
* ஔவையார்

# 201 குறிஞ்சி
அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டி
பால் கலப்பு அன்ன தே கொக்கு அருந்துபு
நீல மென் சிறை வள் உகிர் பறவை
நெல்லி அம் புளி மாந்தி அயலது
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்………………………..5
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வரும் என்றோளே

# 202 மருதம்
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
புன்_புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே………………………..5
* அள்ளூர் நன்முல்லை

# 203 மருதம்
மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்
மரம் தலை தோன்றா ஊரரும் அல்லர்
கண்ணின் காண நண்ணு-வழி இருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇனன் ஒழுகும் என் ஐக்கு……………………….. 5
பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலே
* நெடும்பல்லியத்தன்

# 204 குறிஞ்சி
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதை சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்த ஆங்கு
விருந்தே காமம் பெரும் தோளோயே………………………..5
* மிளை பெரும் கந்தன்

# 205 நெய்தல்
மின்னு செய் கருவிய பெயல் மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்கு
பொலம் படை பொலிந்த வெண் தேர் ஏறி
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப
இனி சென்றனனே இடு மணல் சேர்ப்பன்………………………..5
யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என்
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே
* உலோச்சன்

# 206 குறிஞ்சி
அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும் இன்ன
இன்னா அரும் படர் செய்யும் ஆயின்
உடன் உறைவு அரிதே காமம்
குறுகல் ஓம்பு-மின் அறிவுடையீரே……………………….. 5
* ஐயூர் முடவன்

# 207 பாலை
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி………………………..5
நல் அடி பொறிப்ப தாஅய்
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே
* உறையன்

# 208 குறிஞ்சி
ஒன்றேன் அல்லேன் ஒன்றுவென் குன்றத்து
பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்-மார்
நின்று கொய மலரும் நாடனொடு
ஒன்றேன் தோழி ஒன்றினானே……………………….. 5

# கபிலர்
* 209 பாலை
சுரம் தலைப்பட்ட நெல்லி அம் பசும் காய்
மற புலி குருளை கோள் இடம் கரக்கும்
இறப்பு அரும் குன்றம் இறந்த யாமே
குறு நடை புள் உள்ளலமே நெறி முதல்
கடற்றில் கலித்த முட சினை வெட்சி………………………..5
தளை அவிழ் பல் போது கமழும்
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே
* பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 210 முல்லை
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெரும் தோள் நெகிழ்த்த செல்லற்கு………………………..5
விருந்து வர கரைந்த காக்கையது பலியே
* காக்கை பாடினியார் நச்செள்ளையார்

# 211 பாலை
அம்_சில்_ஓதி ஆய் வளை நெகிழ
நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம் வாழி தோழி எஞ்சாது
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெம் சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி………………………..5
ஆராது பெயரும் தும்பி
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே
* காவன் முல்லை பூதனார்

# 212 நெய்தல்
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடும் தேர்
தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப
காண வந்து நாண பெயரும்
அளிதோ தானே காமம்
விளிவது மன்ற நோகோ யானே……………………….. 5
* நெய்தல் கார்க்கியன்

# 213 பாலை
நசை நன்கு உடையர் தோழி ஞெரேரென
கவை தலை முது கலை காலின் ஒற்றி
பசி பிணிக்கு இறைஞ்சிய பரூஉ பெரும் ததரல்
ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி 5
நின்று வெயில் கழிக்கும் என்ப நம்
இன் துயில் முனிநர் சென்ற ஆறே
* கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன்

# 214 குறிஞ்சி
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ்
அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சி
திருந்து இழை அல்குற்கு பெரும் தழை உதவி
செயலை முழு_முதல் ஒழிய அயலது………………………..5
அரலை மாலை சூட்டி
ஏமுற்றன்று இ அழுங்கல் ஊரே
* கூடலுலுர் கிழார்

# 215 பாலை
படரும் பைபய பெயரும் சுடரும்
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர்
வருவர்-கொல் வாழி தோழி நீர் இல்
வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇ 5
கொடு வரி இரும் புலி காக்கும்
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே
* மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

# 216 பாலை
அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை
வாடா வள்ளி அம் காடு இறந்தோரே
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும்
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே
அன்னள் அளியள் என்னாது மா மழை………………………..5
இன்னும் பெய்யும் முழங்கி
மின்னும் தோழி என் இன் உயிர் குறித்தே
* கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன்

# 217 குறிஞ்சி
தினை கிளி கடிதலின் பகலும் ஒல்லும்
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல்
யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து
ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன் மன்ற………………………..5
ஐதே காமம் யானே
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே
* தங்கால் முடக்கொல்லனார்

# 218 பாலை
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்கு
கடனும் பூணாம் கை நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்
உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம் இன்று………………………..5
இமைப்பு வரை அமையா நம்-வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே
* கொற்றன்

# 219 நெய்தல்
பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே
செறிவும் சேண் இகந்தன்றே அறிவே
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே
வல்லா கூறி இருக்கும் அள் இலை………………………..5
தடவு நிலை தாழை சேர்ப்பற்கு
இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே
* வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்

# 220 முல்லை
பழ மழை கலித்த புது புன வரகின்
இரலை மேய்ந்த குறை தலை பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை
வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணி
குறு முகை அவிழ்ந்த நறு மலர் புறவின்………………………..5
வண்டு சூழ் மாலையும் வாரார்
கண்டிசின் தோழி பொருள் பிரிந்தோரே
* ஒக்கூர் மாசாத்தியார்

# 221 முல்லை
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறி உடை கையர் மறி இனத்து ஒழிய
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடு உடை இடை_மகன் சென்னி
சூடிய எல்லாம் சிறு பசு முகையே……………………….. 5
* உறையூர் முதுகொற்றன்

# 222 குறிஞ்சி
தலை புணை கொளினே தலை புணை கொள்ளும்
கடை புணை கொளினே கடை புணை கொள்ளும்
புணை கைவிட்டு புனலோடு ஒழுகின்
ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை………………………..5
செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண்
துளி தலை தலைஇய தளிர் அன்னோளே
* சிறைக்குடி ஆந்தையார்

# 223 குறிஞ்சி
பேர் ஊர் கொண்ட ஆர் கலி விழவில்
செல்வாம் செல்வாம் என்றி அன்று இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல
தழலும் தட்டையும் முறியும் தந்து இவை
ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறி………………………..5
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே
* மதுரை கடையத்தார் மகன் வெண்ணாகன்

# 224 பாலை
கவலை யாத்த அவல நீள் இடை
சென்றோர் கொடுமை எற்றி துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போல……………………….. 5
துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே
* கூவன் மைந்தன்

# 225 குறிஞ்சி
கன்று தன் பய முலை மாந்த முன்றில்
தினை பிடி உண்ணும் பெரும் கல் நாட
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல
நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர்………………………..5
கலி மயில் கலாவத்து அன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே
* கபிலர்

# 226 நெய்தல்
பூவொடு புரையும் கண்ணும் வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்கு-உறூஉம் நுதலும் நன்றும்
நல்ல-மன் வாழி தோழி அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண் பூ………………………..5
குருகு என மலரும் பெரும் துறை
விரிநீர் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே
* மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்

# 227 நெய்தல்
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து இவண்
தேரோன் போகிய கானலானே
* ஓத ஞானி

# 228 நெய்தல்
வீழ் தாழ் தாழை ஊழ்-உறு கொழு முகை
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரை வந்து பெயரும் என்ப நம் துறந்து
நெடும் சேண் நாட்டார் ஆயினும்……………………….. 5
நெஞ்சிற்கு அணியரோ தண் கடல் நாட்டே
* செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்

# 229 பாலை
இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன்
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது
ஏது இல் சிறு செரு உறுப-மன்னோ
நல்லை மன்று அம்ம பாலே மெல் இயல்………………………..5
துணை மலர் பிணையல் அன்ன இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே
* மோதாசனார்

# 230 நெய்தல்
அம்ம வாழி தோழி கொண்கன்
தான் அது துணிகுவன் அல்லன் யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி
நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ
வய சுறா வழங்கு நீர் அத்தம்……………………….. 5
தவ சில் நாளினன் வரவு அறியானே
* அறிவுடை நம்பி

# 231 மருதம்
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதிலாளர் சுடலை போல
காணா கழிப-மன்னே நாண் அட்டு
நல் அறிவு இழந்த காமம்……………………….. 5
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே
* பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 232 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி உள்ளியும்
வாய் புணர்வு இன்மையின் வாரார்-கொல்லோ
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல் துஞ்சும்……………………….. 5
மா இரும் சோலை மலை இறந்தோரே
* ஊண்பித்தை

# 233 முல்லை
கவலை கெண்டிய அகல் வாய் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய் செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்………………………..5
வரை கோள் அறியா சொன்றி
நிரை கோல் குறும்_தொடி தந்தை ஊரே
* பேயன்

# 234 முல்லை
சுடர் செல் வானம் சேப்ப படர் கூர்ந்து
எல் அறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கியோரே
குடுமி கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை……………………….. 5
பகலும் மாலை துணை இலோர்க்கே
* மிளைப்பெரும் கந்தன்

# 235 பாலை
ஓம்பு-மதி வாழியோ வாடை பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி
கல் உயர் நண்ணியதுவே நெல்லி
மரை_இனம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே………………………..5
* மாயேண்டன்

# 236 நெய்தல்
விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ
நேர்ந்தனை ஆயின் தந்தனை சென்மோ
குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்………………………..………………………..5
தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே
* நரிவெரூஉத்தலையார்

# 237 பாலை
அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇய
நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும்
சேய அம்ம இருவாம் இடையே
மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு………………………..5
கோள் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே
* அள்ளூர் நன்முல்லை

# 238 மருதம்
பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணை துயிற்றி
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து
கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே………………………..5
* குன்றியன்

# 239 குறிஞ்சி
தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவே
விடும் நாண் உண்டோ தோழி விடர் முகை
சிலம்பு உடன் கமழும் அலங்கு குலை காந்தள்
நறும் தாது ஊதும் குறும் சிறை தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்………………………..5
முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே
* ஆசிரியன் பெருங்கண்ணன்

# 240 முல்லை
பனி புதல் இவர்ந்த பைம் கொடி அவரை
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர்
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் தலையும் நோய் பொர
கண்டிசின் வாழி தோழி தெண் திரை………………………..5
கடல் ஆழ் கலத்தின் தோன்றி
மாலை மறையும் அவர் மணி நெடும் குன்றே
* கொல்லின் அழிசி

# 241 குறிஞ்சி
யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம்
கெழுதகைமையின் அழுதன தோழி
கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர்
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி
ஏறாது இட்ட ஏம பூசல்……………………….. 5
விண் தோய் விடர்_அகத்து இயம்பும்
குன்ற நாடன் கண்ட எம் கண்ணே
* கபிலர்

# 242 முல்லை
கான கோழி கவர் குரல் சேவல்
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்ப
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே மடந்தை வேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும்………………………..5
சேந்து வரல் அறியாது செம்மல் தேரே
* குழற்றத்தன்

# 243 நெய்தல்
மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூ கொழுதி
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனை
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே………………………..5
* நம்பி குட்டுவன்

# 244 குறிஞ்சி
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து
உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல்
கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும
ஓரி முருங்க பீலி சாய
நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம்………………………..5
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே
* கண்ணனார்

# 245 நெய்தல்
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்
நலம் இழந்ததனினும் நனி இன்னாதே
வாள் போல் வாய கொழு மடல் தாழை
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்
மெல்லம்புலம்பன் கொடுமை……………………….. 5
பல்லோர் அறிய பரந்து வெளிப்படினே
* மாலை மாறன்

# 246 நெய்தல்
பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை
களிற்று செவி அன்ன பாசடை மயக்கி
பனி கழி துழவும் பானாள் தனித்து ஓர்
தேர் வந்து பெயர்ந்தது என்ப அதற்கொண்டு
ஓரும் அலைக்கும் அன்னை பிறரும்………………………..5
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே
அலையா தாயரொடு நற்பாலோரே
* கபிலர்

# 247 குறிஞ்சி
எழில் மிக உடையது ஈங்கு அணிப்படூஉம்
திறவோர் செய்_வினை அறவது ஆகும்
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என
ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை
வீயா மென் சினை வீ உக யானை………………………..5
ஆர் துயில் இயம்பும் நாடன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே
* சேந்தம்பூதன்

# 248 நெய்தல்
அது வரல் அன்மையோ அரிதே அவன் மார்பு
உறுக என்ற நாளே குறுகி
ஈங்கு ஆகின்றே தோழி கானல்
ஆடு அரை புதைய கோடை இட்ட
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை 5
குறிய ஆகும் துறைவனை
பெரிய கூறி யாய் அறிந்தனளே
* உலோச்சன்

# 249 குறிஞ்சி
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டு
குன்றம் நோக்கினென் தோழி
பண்டை அற்றோ கண்டிசின் நுதலே………………………..5
* கபிலர்

# 250 பாலை
பரல் அவல் படு நீர் மாந்தி துணையோடு
இரலை நன் மான் நெறி முதல் உகளும்
மாலை வாரா அளவை கால் இயல்
கடு மா கடவு-மதி பாக நெடு நீர்
பொரு கயல் முரணிய உண்கண்……………………….. 5
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே
* நாமலார் மகன் இளங்கண்ணன்

# 251 முல்லை
மடவ வாழி மஞ்ஞை மா இனம்
கால மாரி பெய்து என அதன்_எதிர்
ஆலலும் ஆலின பிடவும் பூத்தன
கார் அன்று இகுளை தீர்க நின் படரே
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்……………………….. 5
புது நீர் கொளீஇய உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே
* இடைக்காடன்

# 252 குறிஞ்சி
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலை இன்முகம் திரியாது
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி
மடவை மன்ற நீ என கடவுபு……………………….. 5
துனியல் வாழி தோழி சான்றோர்
புகழும் முன்னர் நாணுப
பழி யாங்கு ஒல்பவோ காணும்-காலே
* கிடங்கில் குலபதி நக்கண்ணன்

# 253 பாலை
கேளார் ஆகுவர் தோழி கேட்பின்
விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல்
பூ சேர் அணையின் பெரும் கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெட பின் நீடலர் மாதோ
ஒலி கழை நிவந்த ஓங்கு மலை சாரல்………………………..5
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு செல் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே
* பூங்கண்ணன்

# 254 பாலை
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன வாரா தோழி
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்
பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார்………………………..5
செய்_பொருள் தரல் நசைஇ சென்றோர்
எய்தினரால் என வரூஉம் தூதே
* பார்காப்பான்

# 255 பாலை
பொத்து இல் காழ அத்த யாஅத்து
பொரி அரை முழு_முதல் உருவ குத்தி
மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடை
சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர் தோழி………………………..5
தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும்
காமர் பொருள்_பிணி போகிய
நாம் வெம் காதலர் சென்ற ஆறே
* கடுகு பெரும் தேவன்

# 256 பாலை
மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி
மான் ஏறு உகளும் கானம் பிற்பட
வினை நலம் படீஇ வருதும் அ வரை
தாங்கல் ஒல்லுமோ பூ குழையோய் என………………………..5
சொல்லா முன்னர் நில்லா ஆகி
நீர் விலங்கு அழுதல் ஆனா
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே

# 257 குறிஞ்சி
வேரும் முதலும் கோடும் ஓராங்கு
தொடுத்த போல தூங்குபு தொடரி
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின்
ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம்
அகலினும் அகலாது ஆகி……………………….. 5
இகலும் தோழி நம் காமத்து பகையே
* உறையூர் சிறுகந்தன்

# 258 மருதம்
வாரல் எம் சேரி தாரல் நின் தாரே
அலர் ஆகின்றால் பெரும காவிரி
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை
அரியல் அம் புகவின் அம் தோட்டு வேட்டை………………………..5
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே
* பரணர்

# 259 குறிஞ்சி
மழை சேர்ந்து எழுதரு மாரி குன்றத்து
அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள்
முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல்
பல் இதழ் மழை கண் மாஅயோயே
ஒல்வை ஆயினும் கொல்வை ஆயினும்………………………..5
நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல்
பொய்ம்மொழி கூறல் அஃது எவனோ
நெஞ்சம் நன்றே நின்-வயினானே
* பரணர்

# 260 பாலை
குருகும் இரு விசும்பு இவரும் புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே
சுரி வளை பொலிந்த தோளும் செற்றும்
வருவர்-கொல் வாழி தோழி பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை………………………..5
வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே
* கல்லாடனார்

# 261 குறிஞ்சி
பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய
சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள்
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
நள்ளென் யாமத்து ஐயென கரையும்
அஞ்சுவரு பொழுதினானும் என் கண்………………………..5
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே
* கழார் கீரன் எயிற்றி

# 262 பாலை
ஊஉர் அலர் எழ சேரி கல்லென
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க தன் மனை யானே
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு 5
விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன்
கரும்பு நடு பாத்தி அன்ன
பெரும் களிற்று அடி_வழி நிலைஇய நீரே
* பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 263 குறிஞ்சி
மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ
செல் ஆற்று கவலை பல் இயம் கறங்க
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி
பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல்………………………..5
நோ_தக்கன்றே தோழி மால் வரை
மழை விளையாடும் நாடனை
பிழையேம் ஆகிய நாம் இதன் படவே
* பெருஞ்சாத்தன்

# 264 குறிஞ்சி
கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்த-காலும் பயப்பு ஒல்லாதே……………………….. 5
* கபிலர்

# 265 குறிஞ்சி
காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாது
வண்டு வாய் திறக்கும் பொழுதில் பண்டும்
தாம் அறி செம்மை சான்றோர் கண்ட
கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்………………………..5
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆக
தான் நாணினன் இஃது ஆகா ஆறே
* கருவூர் கதப்பிள்ளை

# 266 பாலை
நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ
மறப்பு அரும் பணை தோள் மரீஇ
துறத்தல் வல்லியோர் புள்_வாய் தூதே………………………..5
* நக்கீரர்

# 267 பாலை
இரும் கண் ஞாலத்து ஈண்டு பய பெரு வளம்
ஒருங்கு உடன் இயைவது ஆயினும் கரும்பின்
கால் எறி கடிகை கண் அயின்று அன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்
கோல் அமை குறும் தொடி குறு_மகள் ஒழிய………………………..5
ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும்
உறல் முறை மரபின் கூற்றத்து
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே
* காலெறி கடிகையார்

# 268 நெய்தல்
சேறிரோ என செப்பலும் ஆற்றாம்
வருவிரோ என வினவலும் வினவாம்
யாங்கு செய்வாம்-கொல் தோழி பாம்பின்
பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து……………………….. 5
நெடு மென் பணை தோள் அடைந்திசினோரே
* கருவூர் சேரமான் சாத்தன்

# 269 நெய்தல்
சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது
உசாவுநர் பெறினே நன்று-மன் தில்ல
வய சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்
நீல் நிற பெரும் கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய………………………..5
உப்பு விளை கழனி சென்றனள் அதனால்
பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு
இனி வரின் எளியள் என்னும் தூதே
* கல்லாடனார்

# 270 முல்லை
தாழ் இருள் துமிய மின்னி தண்ணென
வீழ் உறை இனிய சிதறி ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து_இடித்து
பெய்க இனி வாழியோ பெரு வான் யாமே
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு………………………..5
இவளின் மேவினம் ஆகி குவளை
குறும் தாள் நாள்_மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே
* பாண்டியன் பன்னாடு தந்தான்

# 271 மருதம்
அருவி அன்ன பரு உறை சிதறி
யாறு நிறை பகரும் நாடனை தேறி
உற்றது மன்னும் ஒரு நாள் மற்று அது
தவ பல் நாள் தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே………………………..5
* அழிசி நாச்சாத்தனார்

# 272 குறிஞ்சி
தீண்டலும் இயைவது-கொல்லோ மாண்ட
வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்த
நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர்
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி 5
குருதியொடு பறித்த செம் கோல் வாளி
மாறு கொண்டு அன்ன உண்கண்
நாறு இரும் கூந்தல் கொடிச்சி தோளே
* ஒருசிறைப்பெரியன்

# 273 பாலை
அல்கு-உறு பொழுதில் தாது முகை தயங்க
பெரும் காடு உளரும் அசை வளி போல
தண்ணிய கமழும் ஒண் நுதலோயே
நொந்தன ஆயின் கண்டது மொழிவல்
பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு………………………..5
அறியாது ஏறிய மடவோன் போல
ஏமாந்தன்று இ உலகம்
நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே
* சிறைக்குடி ஆந்தையார்

# 274 பாலை
புறவு புறத்து அன்ன புன் கால் உகாஅத்து
இறவு சினை அன்ன நளி கனி உதிர
விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் 5
இன்னா கானமும் இனிய பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆகம் உள்கினம் செலினே
* உருத்திரன்

# 275 முல்லை
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழி
எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு………………………..5
வல் வில் இளையர் பக்கம் போற்ற
ஈர் மணல் காட்டாறு வரூஉம்
தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே
* ஒக்கூர் மாசாத்தியார்

# 276 குறிஞ்சி
பணை தோள் குறு_மகள் பாவை தைஇயும்
பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் மற்று இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்
முறை உடை அரசன் செங்கோல் அவையத்து 5
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல்
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானே இ அழுங்கல் ஊரே
* கூழி கொற்றன்

# 277 பாலை
ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடை
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர்
சேம_செப்பில் பெறீஇயரோ நீயே……………………….. 5
மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடை
எ-கால் வருவது என்றி
அ-கால் வருவர் எம் காதலோரே
* ஓரில் பிச்சையார்

# 278 பாலை
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டு அன்ன மெல்லென் சீறடி
சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார்
கொடியர் வாழி தோழி கடுவன்
ஊழ்-உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து………………………..5
ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும்
பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே
* பேரிசாத்தன்

# 279 முல்லை
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன்
வரு மிடறு யாத்த பகு வாய் தெண் மணி
புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோ
மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல்………………………..5
துகள் சூழ் யானையின் பொலிய தோன்றும்
இரும் பல் குன்றம் போகி
திருந்து இறை பணை தோள் உள்ளாதோரே
* மதுரை மருதன் இளநாகனார்

# 280 குறிஞ்சி
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என்
நெஞ்சு பிணிக்கொண்ட அம் சில் ஓதி
பெரும் தோள் குறு_மகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணர புணரின்
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே 5
* நக்கீரர்

# 281 பாலை
வெண் மணல் பொதுளிய பைம் கால் கருக்கின்
கொம்மை போந்தை குடுமி வெண் தோட்டு
அத்த வேம்பின் அமலை வான் பூ
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி
குன்று தலைமணந்த கானம்……………………….. 5
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே
* குடவாயில் கீரத்தன்

# 282 பாலை
செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும்
கார் எதிர் தண் புனம் காணின் கை வளை
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த………………………..5
வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர்
ஆர் கழல்பு உகுவ போல
சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே
* நாகம்போத்தன்

# 283 பாலை
உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என
சொல்லிய வன்மை தெளிய காட்டி
சென்றனர் வாழி தோழி என்றும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்………………………..5
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த
படு முடை பருந்து பார்த்து இருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே
* பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 284 குறிஞ்சி
பொருத யானை புகர் முகம் கடுப்ப
மன்ற துறுகல் மீமிசை பல உடன்
ஒண் செம்_காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும்
நம் ஏசுவரோ தம் இலர்-கொல்லோ………………………..5
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் நிலை குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இ சிறுகுடியோரே
* மிளைவேள் தித்தன்

# 285 பாலை
வைகல் வைகல் வைகவும் வாரார்
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே பல் ஊழ்
புன் புற பெடையொடு பயிரி இன் புறவு………………………..5
இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலை
ஊன் நசைஇ பருந்து இருந்து உகக்கும்
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே
* பூத தேவன்

# 286 குறிஞ்சி
உள்ளி காண்பென் போல்வல் முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்
பேர் அமர் மழை கண் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே………………………..5
* எயிற்றியனார்

# 287 முல்லை
அம்ம வாழி தோழி காதலர்
இன்னே கண்டும் துறக்குவர்-கொல்லோ
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லா பசும் புளி வேட்கை
கடும் சூல் மகளிர் போல நீர் கொண்டு………………………..5
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி
செழும் பல் குன்றம் நோக்கி
பெரும் கலி வானம் ஏர்தரும் பொழுதே
* கச்சிப்பேட்டு நன்னாகையார்

# 288 குறிஞ்சி
கறி வளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெரும் கல் நாடன்
இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற
இன்னாமையினும் இனிதோ
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே………………………..5
* கபிலர்

# 289 முல்லை
வளர்பிறை போல வழிவழி பெருகி
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய்
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்
மழையும் தோழி மான்று பட்டன்றே………………………..5
பட்ட மாரி படாஅ-கண்ணும்
அவர் திறத்து இரங்கும் நம்மினும்
நம் திறத்து இரங்கும் இ அழுங்கல் ஊரே
* பெரும் கண்ணனார்

# 290 நெய்தல்
காமம் தாங்கு-மதி என்போர் தாம் அஃது
அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல்
யாம் எம் காதலர் காணேம் ஆயின்
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு_நீர்
கல் பொரு சிறு நுரை போல……………………….. 5
மெல்ல_மெல்ல இல் ஆகுதுமே
* கல்பொருசிறுநுரையார்

# 291 குறிஞ்சி
சுடு புன மருங்கில் கலித்த ஏனல்
படு கிளி கடியும் கொடிச்சி கை குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே
கிளி அவள் விளி என விழல் ஒல்லாவே
அது புலந்து அழுத கண்ணே சாரல்………………………..5
குண்டு நீர் பைம் சுனை பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே
* கபிலர்

# 292 குறிஞ்சி
மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை
புனல் தரு பசும் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல………………………..5
வரையா நிரையத்து செலீஇயரோ அன்னை
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்து என
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே
* பரணர்

# 293 மருதம்
கள்ளின் கேளிர் ஆத்திரை உள்ளூர்
பாளை தந்த பஞ்சி அம் குறும் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி அருமன் மூதூர் அன்ன
அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை………………………..5
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப
வருமே சே_இழை அந்தில்
கொழுநன் காணிய அளியேன் யானே
* கள்ளில் ஆத்திரையன்

# 294 நெய்தல்
கடல் உடன் ஆடியும் கானல் அல்கியும்
தொடலை ஆயமொடு தழூஉ_அணி அயர்ந்தும்
நொதுமலர் போல கதுமென வந்து
முயங்கினன் செலினே அலர்ந்தன்று-மன்னே
துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல்………………………..5
திருந்து இழை துயல்வு கோட்டு அசைத்த பசும் குழை
தழையினும் உழையின் போகான்
தான் தந்தனன் யாய் காத்து ஓம்பல்லே
* அஞ்சில் ஆந்தையார்

# 295 நெய்தல்
உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்
தழை அணி பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே இஃதோ
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை
பெரு நல குறு_மகள் வந்து என……………………….. 5
இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே
* தூங்கலோரி

# 296 நெய்தல்
அம்ம வாழி தோழி புன்னை
அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை
உறு கழி சிறு மீன் முனையின் செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவன் காணின் முன் நின்று………………………..5
கடிய கழறல் ஓம்பு-மதி தொடியோள்
இன்னள் ஆக துறத்தல்
நும்மின் தகுமோ என்றனை துணிந்தே
* பெரும்பாக்கன்

# 297 குறிஞ்சி
அம் விளிம்பு உரீஇய கொடும் சிலை மறவர்
வை வார் வாளி விறல் பகை பேணார்
மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனம் தலை நல்ல கூறி………………………..5
புணர்ந்து உடன் போதல் பொருள் என
உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே
* காவிரிப்பூம் பட்டினத்து காரி கண்ணன்

# 298 குறிஞ்சி
சேரி சேர மெல்ல வந்து_வந்து
அரிது வாய்விட்டு இனிய கூறி
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி
இன் கடும் கள்ளின் அகுதை தந்தை………………………..5
வெண் கடை சிறு கோல் அகவன்_மகளிர்
மட பிடி பரிசில் மான
பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையே
* பரணர்

# 299 நெய்தல்
இது மற்று எவனோ தோழி முதுநீர்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்
இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல்
புணர் குறி வாய்த்த ஞான்றை கொண்கன்
கண்டன-மன் எம் கண்ணே அவன் சொல்………………………..5
கேட்டன-மன் எம் செவியே மற்று அவன்
மணப்பின் மாண் நலம் எய்தி
தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே
* வெண்மணி பூதி

# 300 குறிஞ்சி
குவளை நாறும் குவை இரும் கூந்தல்
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்
குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி மாஅயோயே
நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே………………………..5
யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்
விடல் சூழலன் யான் நின் உடை நட்பே
* சிறைக்குடி ஆந்தையார்

# 301 குறிஞ்சி
முழவு முதல் அரைய தடவு நிலை பெண்ணை
கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பை
கரும் கால் அன்றில் காமர் கடும் சூல்
வயவு பெடை அகவும் பானாள் கங்குல்
மன்றம் போழும் இன் மணி நெடும் தேர்………………………..5
வாராது ஆயினும் வருவது போல
செவி முதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே
* குன்றியன்

# 302 குறிஞ்சி
உரைத்திசின் தோழி அது புரைத்தோ அன்றே
அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்_தலை
பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும்
அன்னோ இன்னும் நன் மலை நாடன்
பிரியா நண்பினர் இருவரும் என்னும்………………………..5
அலர் அதற்கு அஞ்சினன்-கொல்லோ பலர் உடன்
துஞ்சு ஊர் யாமத்தானும் என்
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே
* மாங்குடி கிழார்

# 303 நெய்தல்
கழி தேர்ந்து அசைஇய கரும் கால் வெண்_குருகு
அடைகரை தாழை குழீஇ பெரும் கடல்
உடை திரை ஒலியின் துஞ்சும் துறைவ
தொல் நிலை நெகிழ்ந்த வளையன் ஈங்கு
பசந்தனள்-மன் என் தோழி என்னொடும்………………………..5
இன் இணர் புன்னை அம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே
* அம்மூவன்

# 304 நெய்தல்
கொல் வினை பொலிந்த கூர் வாய் எறி_உளி
முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ்
தாங்கு அரு நீர் சுரத்து எறிந்து வாங்கு விசை
கொடும் திமில் பரதவர் கோட்டு_மீன் எறிய
நெடும் கரை இருந்த குறும் கால் அன்னத்து………………………..5
வெண் தோடு இரியும் வீ ததை கானல்
கைதை அம் தண் புனல் சேர்ப்பனொடு
செய்தனெம் மன்ற ஓர் பகை தரு நட்பே
* கணக்காயன் தத்தன்

# 305 மருதம்
கண் தர வந்த காம ஒள் எரி
என்பு உற நலியினும் அவரொடு பேணி
சென்று நாம் முயங்கற்கு அரும் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்………………………..5
குப்பை கோழி தனி போர் போல
விளிவு ஆங்கு விளியின் அல்லது
களைவோர் இலை யான் உற்ற நோயே
* குப்பை கோழியார்

# 306 நெய்தல்
மெல்லிய இனிய மேவரு தகுந
இவை மொழியாம் என சொல்லினும் அவை நீ
மறத்தியோ வாழி என் நெஞ்சே பல உடன்
காமர் மாஅத்து தாது அமர் பூவின்
வண்டு வீழ்பு அயரும் கானல்……………………….. 5
தெண் கடல் சேர்ப்பனை கண்ட பின்னே
* அம்மூவன்

# 307 பாலை
வளை உடைத்து அனையது ஆகி பலர் தொழ
செம் வாய் வானத்து ஐயென தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர்-கொல்லோ தாமே களிறு தன்
உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது………………………..5
நிலை உயர் யாஅம் தொலைய குத்தி
வெண் நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழ பிரிந்தோரே
* கடம்பனூர் சாண்டிலியன்

# 308 குறிஞ்சி
சோலை வாழை சுரி நுகும்பு இனைய
அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்து
மயங்கு துயர்-உற்ற மையல் வேழம்
உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்………………………..5
மா மலை நாடன் கேண்மை
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே
* பெருந்தோள் குறுஞ்சாத்தன்

# 309 மருதம்
கைவினை மாக்கள் தம் செய்வினை முடி-மார்
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட
நீடிய வரம்பின் வாடிய விடினும்
கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்………………………..5
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்
நின் இன்று அமைதல் வல்லாம் மாறே
* உறையூர் சல்லியன் குமாரன்

# 310 நெய்தல்
புள்ளும் புலம்பின பூவும் கூம்பின
கானலும் புலம்பு நனி உடைத்தே வானமும்
நம்மே போலும் மம்மர்த்து ஆகி
எல்லை கழிய புல்லென்றன்றே
இன்னும் உளெனே தோழி இ நிலை………………………..5
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணம் துறைவற்கு உரைக்குநர் பெறினே
* பெருங்கண்ணன்

# 311 நெய்தல்
அலர் யாங்கு ஒழிவ தோழி பெரும் கடல்
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும்
நில்லாது கழிந்த கல்லென் கடும் தேர்
யான் கண்டன்றோ இலனே பானாள்
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னை………………………..5
தாது சேர் நிகர் மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே
* சேந்தன்கீரன்

# 312 குறிஞ்சி
இரண்டு அறி கள்வி நம் காதலோளே
முரண் கொள் துப்பின் செ வேல் மலையன்
முள்ளூர் கானம் நாற வந்து
நள்ளென் கங்குல் நம் ஓர் அன்னள்
கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்து………………………..5
சாந்து உளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி
அமரா முகத்தள் ஆகி
தமர் ஓர் அன்னள் வைகறையானே
* கபிலர்

# 313 நெய்தல்
பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு
பூ கமழ் பொதும்பர் சேக்கும் துறைவனோடு
யாத்தேம் யாத்தன்று நட்பே
அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்றே 5

# 314 முல்லை
சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல்
தண் குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்
வாரார் வாழி தோழி வரூஉம்
இன் உறல் இள முலை ஞெமுங்க………………………..5
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே
* பேரிசாத்தன்

# 315 குறிஞ்சி
எழுதரு மதியம் கடல் கண்டு ஆங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன்
ஞாயிறு அனையன் தோழி
நெருஞ்சி அனைய என் பெரும் பணை தோளே
* மதுரை வேளாதத்தன்

# 316 நெய்தல்
ஆய் வளை ஞெகிழவும் அயர்வு மெய் நிறுப்பவும்
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்
உளெனோ வாழி தோழி விளியாது
உரவு கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட……………………….. 5
ஆய்ந்த அலவன் துன்புறு துனை பரி
ஓங்கு வரல் விரி திரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே
* தும்பிசேர் கீரன்

# 317 குறிஞ்சி
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து_உயிர்த்து
ஓங்கு மலை பைம் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே கைம்மிக 5
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே
* மதுரை கண்டரதத்தன்

# 318 நெய்தல்
எறி சுறா கலித்த இலங்கு நீர் பரப்பின்
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான் ஆயினும் குறிப்பினும் பிறிது ஒன்று
அறியாற்கு உரைப்பலோ யானே எய்த்த இ………………………..5
பணை எழில் மென் தோள் அணைஇய அ நாள்
பிழையா வஞ்சினம் செய்த
கள்வனும் கடவனும் புணைவனும் தானே
* அம்மூவன்

# 319 முல்லை
மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்
கை உடை நன் மா பிடியொடு பொருந்தி
மை அணி மருங்கின் மலை_அகம் சேரவும்
மாலை வந்தன்று மாரி மா மழை……………………….. 5
பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்
என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே
* தாயம் கண்ணன்

# 320 நெய்தல்
பெரும் கடல் பரதவர் கோள்_மீன் உணங்கலின்
இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு
நிலவு நிற வெண் மணல் புலவ பலவுடன்
எக்கர்-தொறும் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள்
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ்………………………..5
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்
புன்னை அம் சேரி இ ஊர்
கொன் அலர் தூற்றும் தன் கொடுமையானே
* தும்பிசேர் கீரன்

# 321 குறிஞ்சி
மலை செம் சாந்தின் ஆர மார்பினன்
சுனை பூ குவளை சுரும்பு ஆர் கண்ணியன்
நடுநாள் வந்து நம் மனை பெயரும்
மடவரல் அரிவை நின் மார்பு அமர் இன் துணை
மன்ற மரையா இரிய ஏறு அட்டு……………………….. 5
செம் கண் இரும் புலி குழுமும் அதனால்
மறைத்தல் காலையோ அன்றே
திறப்பல் வாழி வேண்டு அன்னை நம் கதவே

# 322 குறிஞ்சி
அமர் கண் ஆமான் அம் செவி குழவி
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு………………………..5
மருவின் இனியவும் உளவோ
செல்வாம் தோழி ஒல்வாங்கு நடந்தே
* ஐயூர் முடவன்

# 323 முல்லை
எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ
பெய்த புலத்து பூத்த முல்லை
பசு முகை தாது நாறும் நறு நுதல்……………………….. 5
அரிவை தோள் அணை துஞ்சி
கழிந்த நாள் இவண் வாழும் நாளே
* பதடி வைகலார்

# 324 நெய்தல்
கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை
இன மீன் இரும் கழி நீந்தி நீ நின்
நயன் உடைமையின் வருதி இவள் தன்
மடன் உடைமையின் உவக்கும் யான் அது………………………..5
கவை_மக நஞ்சு உண்டு ஆங்கு
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே
* கவைமகன்

# 325 நெய்தல்
சேறும் சேறும் என்றலின் பண்டை தம்
மாய செலவா செத்து மருங்கு அற்று
மன்னி கழிக என்றேனே அன்னோ
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ
கரும் கால் வெண்_குருகு மேயும்……………………….. 5
பெரும் குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்தே
* நன்னாகையார்

# 326 நெய்தல்
துணைத்த கோதை பணை பெரும் தோளினர்
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த
சிறு_மனை புணர்ந்த நட்பே தோழி
ஒரு நாள் துறைவன் துறப்பின்
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே………………………..5

# 327 குறிஞ்சி
நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்-வயின்
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த
குன்ற நாடன் தன்னினும் நன்றும்
நின் நிலை கொடிதால் தீம் கலுழ் உந்தி
நம் மனை மட_மகள் இன்ன மென்மை………………………..5
சாயலள் அளியள் என்னாய்
வாழை தந்தனையால் சிலம்பு புல்லெனவே
* அம்மூவனார்

# 328 நெய்தல்
சிறு வீ ஞாழல் வேர் அளை பள்ளி
அலவன் சிறு_மனை சிதைய புணரி
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்
நல்கிய நாள் தவ சிலவே அலரே
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்………………………..5
வேந்தரொடு பொருத ஞான்றை பாணர்
புலி நோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே
* பரணர்

# 329 பாலை
கான இருப்பை வேனில் வெண் பூ
வளி பொரு நெடும் சினை உகுத்தலின் ஆர் கழல்பு
களிறு வழங்கு சிறு நெறி புதைய தாஅம்
பிறங்கு மலை அரும் சுரம் இறந்தவர் படர்ந்து
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி………………………..5
தெண் நீர் நிகர் மலர் புரையும்
நன் மலர் மழை கணிற்கு எளியவால் பனியே
* ஓதலாந்தையார்

# 330 மருதம்
நல_தகை புலைத்தி பசை தோய்த்து எடுத்து
தலை புடை போக்கி தண் கயத்து இட்ட
நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும்
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ
இன் கடும் கள்ளின் மணம் இல கமழும்………………………..5
புன்கண் மாலையும் புலம்பும்
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே
* கழார் கீரன் எயிற்றியன்

# 331 பாலை
நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று
கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானை கானம் நீந்தி
இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி………………………..5
பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நன் மா மேனி பசப்ப
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே
* வாடா பிரமந்தன்

# 332 குறிஞ்சி
வந்த வாடை சில் பெயல் கடை நாள்
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து
கூறின் எவனோ தோழி நாறு உயிர்
மட பிடி தழீஇ தட கை யானை
குன்றக சிறுகுடி இழிதரும்……………………….. 5
மன்றம் நண்ணிய மலை கிழவோற்கே
* மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன்

# 333 குறிஞ்சி
குறும் படை பகழி கொடு வில் கானவன்
புனம் உண்டு கடிந்த பைம் கண் யானை
நறும் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன்
பணி குறை வருத்தம் வீட……………………….. 5
துணியின் எவனோ தோழி நம் மறையே
* உழுந்தினைம் புலவன்

# 334 நெய்தல்
சிறு_வெண்_காக்கை செ வாய் பெரும் தோடு
எறி திரை திவலை ஈர்ம் புறம் நனைப்ப
பனி புலந்து உறையும் பல் பூ கானல்
இரு நீர் சேர்ப்பன் நீப்பின் ஒரு நம்
இன் உயிர் அல்லது பிறிது ஒன்று……………………….. 5
எவனோ தோழி நாம் இழப்பதுவே
* இளம் பூதனார்

# 335 குறிஞ்சி
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்
இரும் கல் வியல் அறை செந்தினை பரப்பி
சுனை பாய் சோர்வு இடை நோக்கி சினை இழிந்து
பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும்
வெற்பு அயல் நண்ணியதுவே வார் கோல்………………………..5
வல் வில் கானவர் தங்கை
பெரும் தோள் கொடிச்சி இருந்த ஊரே
* இருந்தையூர் கொற்றன் புலவன்

# 336 குறிஞ்சி
செறுவர்க்கு உவகை ஆக தெறுவர
ஈங்ஙனம் வருபவோ தேம் பாய் துறைவ
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்ப
கடு மா நெடும் தேர் நேமி போகிய
இரும் கழி நெய்தல் போல……………………….. 5
வருந்தினள் அளியள் நீ பிரிந்திசினோளே
* குன்றியன்

# 337 குறிஞ்சி
முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின
சுணங்கும் சில தோன்றினவே அணங்கு என
யான் தன் அறிவல் தான் அறியலளே………………………..5
யாங்கு ஆகுவள்-கொல் தானே
பெரு முது செல்வர் ஒரு மட_மகளே
* பொது கயத்து கீரந்தையார்

# 338 குறிஞ்சி
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
அரி மட பிணையோடு அல்கு நிழல் அசைஇ
வீ ததை வியல் அரில் துஞ்சி பொழுது செல
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை
பின்பனி கடை நாள் தண் பனி அற்சிரம்………………………..5
வந்தன்று பெரு விறல் தேரே பணை தோள்
விளங்கு நகர் அடங்கிய கற்பின்
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே
* பெருங்குன்றூர் கிழார்

# 339 குறிஞ்சி
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை
உறை அறு மையின் போகி சாரல்
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்
மயங்கு மலர் கோதை நன் மார்பு முயங்கல்
இனிது-மன் வாழி தோழி மா இதழ்………………………..5
குவளை உண்கண் கலுழ
பசலை ஆகா ஊங்கலங்கடையே
* பேயார்

# 340 நெய்தல்
காமம் கடையின் காதலர் படர்ந்து
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி
ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை
அழுவம் நின்ற அலர் வேய் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம்………………………..5
பெயர்தர பெயர்தந்து ஆங்கு
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே
* அம்மூவன்

# 341 நெய்தல்
பல் வீ படரிய பசு நனை குரவம்
பொரி பூ புன்கொடு பொழில் அணி கொளாஅ
சினை இனிது ஆகிய-காலையும் காதலர்
பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்து
கண்ணிய ஆண்மை கடவது அன்று என………………………..5
வலியா நெஞ்சம் வலிப்ப
வாழ்வேன் தோழி என் வன்கணானே
* மிளைகிழான் நல் வேட்டன்

# 342 குறிஞ்சி
கலை கை தொட்ட கமழ் சுளை பெரும் பழம்
காவல் மறந்த கானவன் ஞாங்கர்
கடி உடை மரம்-தொறும் படு வலை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைம் சுனை
குவளை தண் தழை இவள் ஈண்டு வருந்த………………………..5
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயம் தலைப்படா பண்பினை எனினே
* காவிரிப்பூம் பட்டினத்து கந்தரத்தனார்

# 343 பாலை
நினையாய் வாழி தோழி நனை கவுள்
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என
மிகு வலி இரும் புலி பகு வாய் ஏற்றை
வெண் கோடு செம் மறு கொளீஇய விடர் முகை
கோடை ஒற்றிய கரும் கால் வேங்கை………………………..5
வாடு பூ சினையின் கிடக்கும்
உயர் வரை நாடனொடு பெயரும் ஆறே
* ஈழத்து பூதன் தேவன்

# 344 முல்லை
நோற்றோர் மன்ற தோழி தண்ணென
தூற்றும் துவலை பனி கடும் திங்கள்
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
பால் வார்பு குழவி உள்ளி நிரை இறந்து………………………..5
ஊர்-வயின் பெயரும் புன்கண் மாலை
அரும் பெறல் பொருள்_பிணி போகி
பிரிந்து உறை காதலர் வர காண்போரே
* குறுங்குடி மருதன்

# 345 நெய்தல்
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடும் தேர்
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇ
தங்கினிர் ஆயின் தவறோ தகைய
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல
தாழை தைஇய தயங்கு திரை கொடும் கழி………………………..5
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே
* அண்டர் மகன் குறுவழுதி

# 346 குறிஞ்சி
நாகு பிடி நயந்த முளை கோட்டு இளம் களிறு
குன்றம் நண்ணி குறவர் ஆர்ப்ப
மன்றம் போழும் நாடன் தோழி
சுனை பூ குவளை தொடலை தந்தும்
தினை புன மருங்கில் படு கிளி ஓப்பியும்………………………..5
காலை வந்து மாலை பொழுதில்
நல் அகம் நயந்து தான் உயங்கி
சொல்லவும் ஆகாது அஃகியோனே
* வாயில் இளங்கண்ணன்

# 347 பாலை
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல்
குமரி வாகை கோல் உடை நறு வீ
மட மா தோகை குடுமியின் தோன்றும்
கான நீள் இடை தானும் நம்மொடு
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்………………………..5
நன்றே நெஞ்சம் நயந்த நின் துணிவே
* காவிரி பூம் பட்டினத்து சேந்தன் கண்ணன்

# 348 பாலை
தாமே செல்ப ஆயின் கானத்து
புலம் தேர் யானை கோட்டு இடை ஒழிந்த
சிறு வீ முல்லை கொம்பின் தாஅய்
இதழ் அழிந்து ஊறும் கண்பனி மதர் எழில்
பூண் அக வன் முலை நனைத்தலும்………………………..5
காணார்-கொல்லோ மாண்_இழை நமரே
* மாவளத்தன்

# 349 நெய்தல்
அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி
தடம் தாள் நாரை இருக்கும் எக்கர்
தண்ணம் துறைவன் தொடுத்து நம் நலம்
கொள்வாம் என்றி தோழி கொள்வாம்
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய………………………..5
கொடுத்து அவை தா என கூறலின்
இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே
* சாத்தன்

# 350 பாலை
அம்ம வாழி தோழி முன் நின்று
பனி கடும்-குரையம் செல்லாதீம் என
சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோ
ஆற்று அயல் இருந்த இரும் கோட்டு அம் சிறை
நெடும் கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ………………………..5
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்
மலை உடை கானம் நீந்தி
நிலையா பொருள்_பிணி பிரிந்திசினோரே
* ஆலந்தூர் கிழார்

# 351 நெய்தல்
வளையோய் உவந்திசின் விரைவு-உறு கொடும் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமென
உரும் இசை புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே விரி அலர்………………………..5
புன்னை ஓங்கிய புலால் அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ இ அழுங்கல் ஊரே
* அம்மூவன்

# 352 பாலை
நெடு நீர் ஆம்பல் அடை புறத்து அன்ன
கொடு மென் சிறைய கூர் உகிர் பறவை
அகல் இலை பலவின் சாரல் முன்னி
பகல் உறை முது மரம் புலம்ப போகும்
சிறு புன் மாலை உண்மை……………………….. 5
அறிவேன் தோழி அவர் காணா ஊங்கே
* கடியலூர் உருத்திரங்கண்ணனார்

# 353 குறிஞ்சி
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக
கோடு உயர் நெடு வரை கவாஅன் பகலே
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே
நிரை இதழ் பொருந்தா கண்ணோடு இரவில்
பஞ்சி வெண் திரி செம் சுடர் நல் இல்………………………..5
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ
அன்னை முயங்க துயில் இன்னாதே
* உறையூர் முதுகூற்றனார்

# 354 மருதம்
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனை ஆயின் எம் இல் உய்த்து கொடுமோ
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்
கடும் பாம்பு வழங்கும் தெருவில்……………………….. 5
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே
* கயத்தூர் கிழான்

# 355 குறிஞ்சி
பெயல் கால் மறைத்தலின் விசும்பு காணலரே
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலரே
எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப………………………..5
வேங்கை கமழும் எம் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ நோகோ யானே
* கபிலர்

# 356 பாலை
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை
கழலோன் காப்ப கடுகுபு போகி
அறு சுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெம் வெம் கலுழி தவ்வென குடிக்கிய
யாங்கு வல்லுநள்-கொல் தானே ஏந்திய………………………..5
செம் பொன் புனை கலத்து அம் பொரி கலந்த
பாலும் பல என உண்ணாள்
கோல் அமை குறும் தொடி தளிர் அன்னோளே
* கயமனார்

# 357 குறிஞ்சி
முனி படர் உழந்த பாடு இல் உண்கண்
பனி கால் போழ்ந்து பணை எழில் ஞெகிழ் தோள்
மெல்லிய ஆகலின் மேவர திரண்டு
நல்ல என்னும் சொல்லை மன்னிய
ஏனல் அம் சிறுதினை காக்கும் சேணோன்………………………..5
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன் படு சுடர் ஒளி வெரூஉம்
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே
* கபிலர்

# 358 மருதம்
வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கே
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு
சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம் என்ற பருவம் உது காண்
தனியோர் இரங்கும் பனி கூர் மாலை………………………..5
பல் ஆன் கோவலர் கண்ணி
சொல்லுப அன்ன முல்லை வெண் முகையே
* கொற்றன்

# 359 மருதம்
கண்டிசின் பாண பண்பு உடைத்து அம்ம
மாலை விரிந்த பசு வெண் நிலவின்
குறும் கால் கட்டில் நறும் பூ சேக்கை
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ
புதல்வன் தழீஇயினன் விறலவன்……………………….. 5
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே
* பேயன்

# 360 குறிஞ்சி
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து
அறியான் ஆகுதல் அன்னை காணிய
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரல்
பிடி கை அன்ன பெரும் குரல் ஏனல்………………………..5
உண் கிளி கடியும் கொடிச்சி கை குளிரே
சிலம்பின் சிலம்பும் சோலை
இலங்கு மலை நாடன் இரவினானே
* மதுரை ஈழத்து பூதன் தேவன்

# 361 குறிஞ்சி
அம்ம வாழி தோழி அன்னைக்கு
உயர்_நிலை_உலகமும் சிறிதால் அவர் மலை
மாலை பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த முழு_முதல் காந்தள்
மெல் இலை குழைய முயங்கலும்………………………..5
இல் உய்த்து நடுதலும் கடியாதோளே
* கபிலர்

# 362 குறிஞ்சி
முருகு அயர்ந்து வந்த முது வாய் வேல
சினவல் ஓம்பு-மதி வினவுவது உடையேன்
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு
சிறு மறி கொன்று இவள் நறு நுதல் நீவி
வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய………………………..5
விண் தோய் மா மலை சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே
* வேம்பற்றூர் கண்ணன் கூத்தன்

# 363 மருதம்
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு
செம் கோல் பதவின் வார் குரல் கறிக்கும்
மட கண் மரையா நோக்கி வெய்து-உற்று
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்
இன்னா அரும் சுரம் இறத்தல்……………………….. 5
இனிதோ பெரும இன் துணை பிரிந்தே
* செல்லூர் கொற்றன்

# 364 மருதன்
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன்
பொன் கோல் அவிர் தொடி தன் கெழு தகுவி
என் புறங்கூறும் என்ப தெற்றென
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் 5
துணங்கை நாளும் வந்தன அ வரை
கண் பொர மற்று அதன்-கண் அவர்
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே
* ஔவையார்

# 365 குறிஞ்சி
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே
துன் அரும் நெடு வரை ததும்பிய அருவி
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்
மருங்கில் கொண்ட பலவின்……………………….. 5
பெரும் கல் நாட நீ நயந்தோள் கண்ணே
* மதுரை நல்வெள்ளி

# 366 குறிஞ்சி
பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்-வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ
வேறு யான் கூறவும் அமையாள் அதன்_தலை
பைம் கண் மா சுனை பல் பிணி அவிழ்ந்த
வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு………………………..5
அழுத கண்ணள் ஆகி
பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே
* பேரிசாத்தன்

# 367 மருதம்
கொடியோர் நல்கார் ஆயினும் யாழ நின்
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்
உவ காண் தோழி அ வந்திசினே
தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டு
பூசல் ஆயம் புகன்று இழி அருவி……………………….. 5
மண்-உறு மணியின் தோன்றும்
தண் நறும் துறுகல் ஓங்கிய மலையே
* மதுரை மருதன் இளநாகன்

# 368 மருதம்
மெல் இயலோயே மெல் இயலோயே
நல்_நாள் நீத்த பழி தீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்
சொல்லகிற்றாம் மெல் இயலோயே
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே………………………..5
நாள் இடை படாஅ நளி நீர் நீத்தத்து
இடி_கரை பெரு மரம் போல
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே
* நக்கீரர்

# 369 பாலை
அத்த வாகை அமலை வால் நெற்று
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப
கோடை தூக்கும் கானம்
செல்வாம் தோழி நல்கினர் நமரே
* குடவாயில் கீர்த்தனார்

# 370 முல்லை
பொய்கை ஆம்பல் அணி நிற கொழு முகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின்
வில் அக விரலின் பொருந்தி அவன்
நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே………………………..5
* வில்லக விரலினார்

# 371 குறிஞ்சி
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழி அது காமமோ பெரிதே
* உறையூர் முதுகூத்தன்

# 372 குறிஞ்சி
பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பை
கணம்_கொள் சிமைய உணங்கும் கானல்
ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி
கூழை பெய் எக்கர் குழீஇய பதுக்கை………………………..5
புலர் பதம் கொள்ளா அளவை
அலர் எழுந்தன்று இ அழுங்கல் ஊரே
* விற்றூற்று மூதெயினனார்

# 373 குறிஞ்சி
நிலம் புடைபெயரினும் நீர் திரிந்து பிறழினும்
இலங்கு திரை பெரும் கடற்கு எல்லை தோன்றினும்
வெம் வாய் பெண்டிர் கௌவை அஞ்சி
கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர்
கடும் பல் ஊக கறை விரல் ஏற்றை………………………..5
புடை தொடுபு உடையூ பூ நாறு பலவு கனி
காந்தள் அம் சிறுகுடி கமழும்
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே
* மதுரை கொல்லன் புல்லன்

# 374 குறிஞ்சி
எந்தையும் யாயும் உணர காட்டி
ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின்
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே
முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ………………………..5
நீடு இரும் பெண்ணை தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே
* உறையூர் பல்காயனார்

# 375 குறிஞ்சி
அம்ம வாழி தோழி இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே சாரல்
சிறுதினை விளைந்த வியன் கண் இரும் புனத்து
இரவு அரிவாரின் தொண்டக_சிறுபறை
பானாள் யாமத்தும் கறங்கும்……………………….. 5
யாமம் காவலர் அவியா மாறே

# 376 நெய்தல்
மன் உயிர் அறியா துன் அரும் பொதியில்
சூர் உடை அடுக்கத்து ஆரம் கடுப்ப
வேனிலானே தண்ணியள் பனியே
வாங்கு கதிர் தொகுப்ப கூம்பி ஐயென
அலங்கு வெயில் பொதிந்த தாமரை………………………..5
உள் அகத்து அன்ன சிறு வெம்மையளே
* படுமரத்து மோசி கொற்றன்

# 377 குறிஞ்சி
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நன் நட்பே………………………..5
* மோசி கொற்றன்

# 378 பாலை
ஞாயிறு காணாத மாண் நிழல் படீஇய
மலை முதல் சிறு நெறி மணல் மிக தாஅய்
தண் மழை தலைய ஆகுக நம் நீத்து
சுடர் வாய் நெடு வேல் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே……………………….. 5
* கயமனார்

# 379 பாலை
இன்று யாண்டையனோ தோழி குன்றத்து
பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு
கண் அகன் தூ மணி பெறூஉம் நாடன்
அறிவு காழ்க்கொள்ளும் அளவை செறி_தொடி
எம் இல் வருகுவை நீ என……………………….. 5
பொம்மல் ஓதி நீவியோனே

# 380 பாலை
விசும்பு கண் புதைய பாஅய் வேந்தர்
வென்று எறி முரசின் நன் பல முழங்கி
பெயல் ஆனாதே வானம் காதலர்
நனி சேய் நாட்டர் நம் உன்னலரே
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கைய………………………..5
வண்ண துய்ம் மலர் உதிர
முன்னர் தோன்றும் பனி கடு நாளே
* கருவூர் கதப்பிள்ளை

# 381 நெய்தல்
தொல் கவின் தொலைந்து தோள் நலம் சாஅய்
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது
பசலை ஆகி விளிவது-கொல்லோ
வெண்_குருகு நரலும் தண் கமழ் கானல்
பூ மலி பொதும்பர் நாள்_மலர் மயக்கி………………………..5
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே

# 382 முல்லை
தண் துளிக்கு ஏற்ற பைம் கொடி முல்லை
முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசை
பூ அமல் தளவமொடு தேம் கமழ்பு கஞல
வம்பு பெய்யுமால் மழையே வம்பு அன்று
கார் இது பருவம் ஆயின்……………………….. 5
வாராரோ நம் காதலோரே
* குறுங்கீரன்

# 383 பாலை
நீ உடம்படுதலின் யான் தர வந்து
குறி நின்றனனே குன்ற நாடன்
இன்றை அளவை சென்றைக்க என்றி
கையும் காலும் ஓய்வன ஒடுங்க
தீ உறு தளிரின் நடுங்கி……………………….. 5
யாவதும் இலை யான் செயற்கு உரியதுவே
* படுமரத்து மோசி கீரன்

# 384 மருதம்
உழுந்து உடை கழுந்தின் கரும்பு உடை பணை தோள்
நெடும் பல் கூந்தல் குறும் தொடி மகளிர்
நலன் உண்டு துறத்தி ஆயின்
மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூளே
* ஓரம்போகியார்

# 385 குறிஞ்சி
பலவில் சேர்ந்த பழம் ஆர் இன கலை
சிலை வில் கானவன் செம் தொடை வெரீஇ
செரு உறு குதிரையின் பொங்கி சாரல்
இரு வெதிர் நீடு அமை தயங்க பாயும்
பெரு வரை அடுக்கத்து கிழவோன் என்றும்………………………..5
அன்றை அன்ன நட்பினன்
புதுவோர்த்து அம்ம இ அழுங்கல் ஊரே
* கபிலர்

# 386 நெய்தல்
வெண் மணல் விரிந்த வீ ததை கானல்
தண்ணம் துறைவன் தணவா ஊங்கே
வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும்
மாலையோ அறிவேன்-மன்னே மாலை
நிலம் பரந்து அன்ன புன்கணோடு……………………….. 5
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே
* வெள்ளிவீதியார்

# 387 முல்லை
எல்லை கழிய முல்லை மலர
கதிர் சினம் தணிந்த கையறு மாலை
உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின்
எவன்-கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே………………………..5
* கங்குல் வெள்ளத்தார்

# 388 குறிஞ்சி
நீர் கால்யாத்த நிரை இதழ் குவளை
கோடை ஒற்றினும் வாடாது ஆகும்
கவணை அன்ன பூட்டு பொருது அசாஅ
உமண் எருத்து ஒழுகை தோடு நிரைத்து அன்ன
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்………………………..5
யானை கை மடித்து உயவும்
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே
* ஔவையார்

# 389 குறிஞ்சி
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர் பதம் பெறுக தோழி அத்தை
பெரும் கல் நாடன் வரைந்து என அவன் எதிர்
நன்றோ மகனே என்றனென்
நன்றே போலும் என்று உரைத்தோனே………………………..5
* வேட்ட கண்ணன்

# 390 பாலை
எல்லும் எல்லின்று பாடும் கேளாய்
செல்லாதீமோ சிறு பிடி துணையே
வேற்று முனை வெம்மையின் சாத்து வந்து இறுத்து என
வளை அணி நெடு வேல் ஏந்தி
மிளை வந்து பெயரும் தண்ணுமை குரலே………………………..5
* உறையூர் முதுகொற்றன்

# 391 முல்லை
உவரி ஒருத்தல் உழாஅது மடிய
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே
வீழ்ந்த மா மழை தழீஇ பிரிந்தோர்………………………..5
கையற வந்த பையுள் மாலை
பூ சினை இருந்த போழ் கண் மஞ்ஞை
தாம் நீர் நனம் தலை புலம்ப
கூஉம் தோழி பெரும் பேதையவே
* பொன்மணியார்

# 392 குறிஞ்சி
அம்ம வாழியோ மணி சிறை தும்பி
நன் மொழிக்கு அச்சம் இல்லை அவர் நாட்டு
அண்ணல் நெடு வரை சேறி ஆயின்
கடவை மிடைந்த துடவை அம் சிறுதினை
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை………………………..5
தமரின் தீராள் என்மோ அரசர்
நிரை செலல் நுண் தோல் போல
பிரசம் தூங்கு மலை கிழவோற்கே
* தும்பிசேர் கீரனார்

# 393 மருதம்
மயங்கு மலர் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவ சிலவே அலரே
கூகை கோழி வாகை பறந்தலை
பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை……………………….. 5
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே
* பரணர்

# 394 குறிஞ்சி
முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவி
நறவு மலி பாக்கத்து குற_மகள் ஈன்ற
குறி இறை புதல்வரொடு மறுவந்து ஓடி
முன்_நாள் இனியது ஆகி பின் நாள்
அவர் தினை புனம் மேய்ந்து ஆங்கு………………………..5
பகை ஆகின்று அவர் நகை விளையாட்டே
* குறியிறையார்

# 395 பாலை
நெஞ்சே நிறை ஒல்லாதே அவரே
அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார்
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போல
களையார் ஆயினும் கண் இனிது படீஇயர்………………………..5
அஞ்சல் என்மரும் இல்லை அந்தில்
அளிதோ தானே நாணே
ஆங்கு அவர் வதி-வயின் நீங்கப்படினே

# 396 நெய்தல்
பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே
எளிது என உணர்ந்தனள்-கொல்லோ முளி சினை
ஓமை குத்திய உயர் கோட்டு ஒருத்தல்
வேனில் குன்றத்து வெம் அறை கவாஅன்………………………..5
மழை முழங்கு கடும் குரல் ஓர்க்கும்
கழை திரங்கு ஆரிடை அவனொடு செலவே
* கயமனார்

# 397 நெய்தல்
நனை முதிர் ஞாழல் தினை மருள் திரள் வீ
நெய்தல் மா மலர் பெய்த போல
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப
தாய் உடன்று அலைக்கும்-காலையும் வாய்விட்டு
அன்னாய் என்னும் குழவி போல……………………….. 5
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்
நின் வரைப்பினள் என் தோழி
தன் உறு விழுமம் களைஞரோ இலளே
* அம்மூவன்

# 398 பாலை
தேற்றாம் அன்றே தோழி தண்ணென
தூற்றும் திவலை துயர் கூர் காலை
கயல் ஏர் உண்கண் கனம் குழை மகளிர்
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை………………………..5
அரும் பெறல் காதலர் வந்து என விருந்து அயர்பு
மெய்ம் மலி உவகையின் எழுதரு
கண் கலிழ் உகு பனி அரக்குவோரே
* பாலை பாடிய பெருங்கடுக்கோ

# 399 மருதம்
ஊர் உண் கேணி உண்துறை தொக்க
பாசி அற்றே பசலை காதலர்
தொடு-உழி தொடு-உழி நீங்கி
விடு-உழி விடு-உழி பரத்தலானே
* பரணர்

# 400 முல்லை
சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று
களைகலம் காமம் பெரும்_தோட்கு என்று
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி
முரம்பு கண் உடைய ஏகி கரம்பை
புது வழி படுத்த மதி உடை வலவோய்………………………..5
இன்று தந்தனை தேரோ
நோய் உழந்து உறைவியை நல்கலானே
* பேயனார்

# 401 நெய்தல் அம்மூவன்
அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்
நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள்
நக்கு விளையாடலும் கடிந்தன்று……………………….. 5
ஐது ஏகு அம்ம மெய் தோய் நட்பே