ஐந்திணை எழுபது

பாடல் எண் எல்லைகள்


#0 கடவுள் வாழ்த்து
எண்ணும் பொருள் இனிதே எல்லாம் முடித்து எமக்கு
நண்ணும் கலை அனைத்தும் நல்குமால் கண்ணுதலின்
முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் ஆலம் சேர்
கண்டத்தான் ஈன்ற களிறு#1
*@1 குறிஞ்சி

#1
அவரை பொருந்திய பைம் குரல் ஏனல்
கவரி மட மா கதூஉம் படர் சாரல்
கானக நாட மறவல் வயங்கிழைக்கு
யான் இடை நின்ற புணை

#2
கொல்லை புனத்த அகில் சுமந்து கல் பாய்ந்து
வானின் அருவி ததும்ப கவினிய
நாடன் நயம் உடையன் என்பதனால் நீப்பினும்
வாடல் மறந்தன தோள்

#3
இலை அடர் தண் குளவி வேய்ந்த பொதும்பில்
குலை உடை காந்தள் இன வண்டு இமிரும்
வரையக நாடனும் வந்தான் மற்று அன்னை
அலையும் அலை போயிற்று இன்று

#4
மன்ற பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு உவந்து மந்தி முலை வருட கன்று அமர்ந்து
ஆமா சுரக்கும் அணி மலை நாடனை
யாமா பிரிவது இலம்

#5
சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி
வலி ஆகி பின்னும் பயக்கும் மெலிவு இல்
கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை
நயம் திகழும் என்னும் என் நெஞ்சு

#6
பொன் இணர் வேங்கை கமழும் நளிர் சோலை
நல் மலை நாட மறவல் வயங்கிழைக்கு
நின் அலது இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்து
இன் உயிர் தாங்கும் மருந்து

#7
காய்ந்தீயல் அன்னை இவளோ தவறு இலள்
ஓங்கிய செம் நீர் இழிதரும் கான் யாற்றுள்
தேம் கலந்து வந்த அருவி குடைந்து ஆட
தாம் சிவப்பு உற்றன கண்

#8
வெறி கமழ் தண் சுனை தெண்ணீர் துளும்ப
கறி வளர் தே மா நறும் கனி வீழும்
வெறி கமழ் தண் சோலை நாட ஒன்று உண்டோ
அறிவின்கண் நின்ற மடம்

#9
மன்ற துறுகல் கரும் கண் முசு உகளும்
குன்றக நாடன் தெளித்த தெளிவினை
நன்று என்று தேறி தெளிந்தேன் தலையளி
ஒன்று மற்று ஒன்றும் அனைத்து

#10
பிரைசம் கொள வீழ்ந்த தீம் தேன் இறாஅல்
மரையான் குழவி குளம்பின் துகைக்கும்
வரையக நாட வரையாய வரின் எம்
நிரைதொடி வாழ்தல் இலள்

#11
கேழல் உழுத கரி புன கொல்லையுள்
வாழை முது காய் கடுவன் புதைத்து அயரும்
தாழ் அருவி நாடன் தெளி கொடுத்தான் என் தோழி
நேர்வளை நெஞ்சு ஊன்று கோல்

#12
பெரும் கை இரும் களிறு ஐவனம் மாந்தி
கரும் கால் மராம் பொழில் பாசடை துஞ்சும்
சுரும்பு இமிர் சோலை மலை நாடன் கேண்மை
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து

#13
வார் குரல் ஏனல் வளை வாய் கிளி கவரும்
நீரால் தெளி திகழ் கான் நாடன் கேண்மையே
ஆர்வத்தின் ஆர முயங்கினேன் வேலனும்
ஈர வலித்தான் மறி

#14
குறை ஒன்று உடையேன்மன் தோழி நிறை இல்லா
மன்னுயிர்க்கு ஏமம் செயல் வேண்டும் இன்னே
அரா வழங்கு நீள் சோலை நாடனை நம் இல்
இரா வாரல் என்பது உரை
*@2 முல்லை

#15
செம் கதிர் செல்வன் சினம் கரந்த போழ்தினால்
பைம் கொடி முல்லை மணம் கமழ வண்டு இமிர
காரோடு அலமரும் கார் வானம் காண்தொறும்
நீரோடு அலமரும் கண்

#16
தட மென் பணை தோளி நீத்தாரோ வாரார்
மட நடை மஞ்ஞை அகவ கடல் முகந்து
மின்னோடு வந்தது எழில் வானம் வந்து என்னை
என் ஆதி என்பாரும் இல்

#17
தண் நறும் கோடல் துடுப்பு எடுப்ப கார் எதிரி
விண் உயர் வானத்து உரும் உரற்ற திண்ணிதின்
புல்லுநர் இல்லார் நடுங்க சிறு மாலை
கொல்லுநர் போல வரும்

#18
கதழ் உறை வானம் சிதற இதழகத்து
தாது இணர் கொன்றை எரி வளர்ப்ப பாஅய்
இடிப்பது போலும் எழில் வானம் நோக்கி
துடிப்பது போலும் உயிர்

#19
ஆலி விருப்புற்று அகவி புறவு எல்லாம்
பீலி பரப்பி மயில் ஆல சூலி
விரிகுவது போலும் இ கார் அதிர ஆவி
உருகுவது போலும் எனக்கு

#20
இனத்த அரும் கலை பொங்க புனத்த
கொடி மயங்கு முல்லை தளிர்ப்ப இடி மயங்கி
யானும் அவரும் வருந்த சிறு மாலை
தானும் புயலும் வரும்

#21
காரிகை வாட துறந்தாரும் வாராமுன்
கார் கொடி முல்லை எயிறு ஈன காரோடு
உடன்பட்டு வந்து அலைக்கும் மாலைக்கோ எம்மின்
மடம் பட்டு வாழ்கிற்பார் இல்

#22
கொன்றை குழல் ஊதி கோவலர் பின் நிரைத்து
கன்று அமர் ஆயம் புகுதர இன்று
வழங்கிய வந்தன்று மாலை யாம் காண
முழங்கி வில் கோலிற்று வான்

#23
தேரை தழங்குரல் தார் மணி வாய் அதிர்ப்ப
ஆர் கலி வானம் பெயல் தொடங்கி கார் கொள
இன்று ஆற்ற வாரா விடுவார்கொல் காதலர்
ஒன்றாலும் நில்லா வளை

#24
கல் ஏர் புறவில் கவினி புதல் மிசை
முல்லை தளவொடு போது அவிழ எல்லி
அலைவு அற்று விட்டன்று வானமும் உண்கண்
முலை வற்று விட்டன்று நீர்

#25

#26

#27
கார்ப்பு உடை பாண்டில் கமழ புறவு எல்லாம்
ஆர்ப்பொடு இன வண்டு இமிர்ந்து ஆட நீர்த்து அன்றி
ஒன்றாது அலைக்கும் சிறு மாலை மால் உழந்து
நின்றாக நின்றது நீர்

#28
குருந்து அலை வான் படலை சூடி சுரும்பு ஆர்ப்ப
ஆயன் புகுதரும் போழ்தினான் ஆயிழாய்
பின்னொடு நின்று படு மழை
என்னொடு பட்ட வகை
*@3 பாலை

#29
எழுத்து உடை கல் நிரைக்க வாயில் விழு தொடை
அம் மாறு அலைக்கும் சுரம் நிரைத்து அம் மா
பெரும் தகு தாளாண்மைக்கு ஏற்க அரும் பொருள்
ஆகும் அவர் காதல் அவா

#30
வில் உழுது உண்பார் கடுகி அதர் அலைக்கும்
கல் சூழ் பதுக்கை ஆர் அத்தத்து இறப்பார்கொல்
மெல் இயல் கண்ணோட்டம் இன்றி பொருட்கு இவர்ந்து
நில்லாத உள்ளத்தவர்

#31
பேழ் வாய் இரும் புலி குஞ்சரம் கோள் பிழைத்து
பாழ் ஊர் பொதியில் புகா பார்க்கும் ஆர் இடை
சூழா பொருள் நசைக்கண் சென்றோர் அருள் நினைந்து
வாழ்தியோ மற்று என் உயிர்

#32
நீர் இல் அரும் சுரத்து ஆமான் இனம் வழங்கும்
ஆர் இடை அத்தம் இறப்பர்கொல் ஆயிழாய்
நாணினை நீக்கி உயிரோடு உடன் சென்று
காண புணர்ப்பதுகொல் நெஞ்சு

#33
பொறி கிளர் சேவல் வரி மரல் குத்த
நெறி தூர் அரும் சுரம் நாம் உன்னி அறிவிட்டு
அலர் மொழி சென்ற கொடி அக நாட்ட
வலன் உயர்ந்து தோன்றும் மலை

#34
பீர் இவர் கூரை மறு மனை சேர்ந்து அல்கி
கூர் உகிர் எண்கின் இரும் கிளை கண்படுக்கும்
நீர் இல் அரும் சுரம் முன்னி அறியார்கொல்
ஈரம் இல் நெஞ்சினவர்

#35
சூரல் புறவின் அணில் பிளிற்றும் சூழ் படப்பை
ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும்
தேரொடு கானம் தெருள் இலார் செல்வார்கொல்
ஊர் இடு கவ்வை ஒழித்து

#36
முள் உடை மூங்கில் பிணங்கிய சூழ் படப்பை
புள்ளி வெருகு தன் குட்டிக்கு இரை பார்க்கும்
கள்ளர் வழங்கும் சுரம் என்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி

#37
பொரி புற ஓமை புகர் படு நீழல்
வரி நுதல் யானை பிடியோடு உறங்கும்
எரி மயங்கு கானம் செலவு உரைப்ப நில்லா
அரி மயங்கு உண்கண்ணுள் நீர்

#38
கோள் வல் வய மா குழுமும்
தாள் வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல்
ஆள்வினையின் ஆற்ற அகன்றவா நன்று உணரா
மீளி கொள் மொய்ம்பினவர்

#39
கொடுவரி பாய துணை இழந்து அஞ்சி
கடு உணங்கு பாறை கடவு தெவுட்டும்
நெடு வரை அத்தம் இறப்பர்கொல் கோள் மா
படு பகை பார்க்கும் சுரம்

#40
மன்ற முது மரத்து ஆந்தை குரல் இயம்ப
குன்றகம் நண்ணி குறும்பு இறந்து சென்றவர்
உள்ளிய தன்மையர்போலும் அடுத்து அடுத்து
ஒள்ளிய தும்மல் வரும்

#41
பூம் கண் இடம் ஆடும் கனவும் திருந்தின
ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப
வீங்கிய மென் தோள் கவினி பிணி தீர
பாங்கத்து பல்லி படும்

#42
ஒல்லோம் என்று ஏங்கி உயங்கி இருப்பவோ
கல் இவர் அத்தம் அரி பெய் சிலம்பு ஒலிப்ப
கொல் களிறு அன்னான் பின் செல்லும்கொல் என் பேதை
மெல் விரல் சேப்ப நடந்து
*@4 மருதம்

#43
ஆற்றல் உடையன் அரும் பொறி நல் ஊரன்
மேற்று சிறு தாய காய்வு அஞ்சி போற்று உருவி
கட்டக முத்தின் புதல்வனை மார்பின் மேல்
பட்டம் சிதைப்ப வரும்

#44
அகன் பணை ஊரனை தாமம் பிணித்தது
இகன்மை கருதி இருப்பல் முகன் அமரா
ஏதில் மகளிரை நோவது எவன்கொலோ
பேதைமை கண்டு ஒழுகுவார்

#45
போத்து இல் கழுத்தின் புதல்வன் உண சான்றான்
மூத்தேம் இனி யாம் வரு முலையார் சேரியுள்
நீத்து நீர் ஊன வாய் பாண நீ போய் மொழி
கூத்தாடி உண்ணினும் உண்

#46
உழலை முருக்கிய செம் நோக்கு எருமை
பழனம் படிந்து செய் மாந்தி நிழல் வதியும்
தண் துறை ஊரன் மலர் அன்ன மார்புற
பெண்டிர்க்கு உரை பாண உய்த்து

#47
தேம் கமழ் பொய்கை அக வயல் ஊரனை
பூம் கண் புதல்வன் மிதித்து உழக்க ஈங்கு
தளர் முலை பாராட்டி என்னுடைய பாவை
வளர் முலைக்கண் ஞெமுக்குவார்

#48
பேதை புகலை புதல்வன் துணை சான்றோன்
ஓதை மலி மகிழ்நற்கு யாஅம் எவன் செய்தும்
பூ ஆர் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள்
ஓவாது செல் பாண நீ

#49
யாணர் நல் ஊரன் திறம் கிளப்பல் என்னுடைய
பாண இருக்க அது களை நாண் உடையான்
தன் உற்ற எல்லாம் இருக்க இரும் பாண
நின் உற்றதுண்டேல் உரை

#50
ஒள் இதழ் தாமரை போது உறழும் ஊரனை
உள்ளம் கொண்டு உள்ளான் என்று யார்க்கு உரைக்கோ ஒள்ளிழாய்
அச்சு பணி மொழி உண்டேனோ மேல் நாள் ஓர்
பொய் சூள் என அறியாதேன்

#51
பேதையர் என்று தமரை செறுபவோ
போது உறழ் தாமரை கண் ஊரனை நேர் நோக்கி
வாய் மூடி இட்டும் இருப்பவோ மாணிழாய்
நோவது என் மார்பு அறியும் இன்று

#52
காதலின் தீர கழிய முயங்கன்மின்
ஓதம் துவன்றும் ஒலி புனல் ஊரனை
பேதை பட்டு ஏங்கன்மின் நீயிரும் எண் இலா
ஆசை ஒழிய உரைத்து

#53
உள் நாட்டம் சான்றவர் தந்த நசை இற்று என்று
எண்ணார்க்கு கண்ணோட்டம் தீர்க்குதும் என்று எண்ணி
வழிபாடு கொள்ளும் வள வயல் ஊரன்
பழிபாடு நின் மேலது

#54
உண் துறை பொய்கை வராஅல் இனம் இரியும்
தண் துறை ஊர தகுவதோ ஒண்டொடியை
பாராய் மனை துறந்து அ சேரி செல்வதனை
ஊராண்மை ஆக்கிக்கொளல்

#55
பொய்கை நல் ஊரன் திறம் கிளத்தல் என்னுடைய
எவ்வம் எனினும் எழுந்தீக வைகல்
மறு இல் பொலம் தொடி வீசும் அலற்றும்
சிறுவன் உடையேன் துணை

#56
வள வயல் ஊரன் மருள் உரைக்கு மாதர்
வளைஇய சக்கரத்து ஆழி கொளை பிழையாது
ஒன்று இடையிட்டு வருமேல் நின் வாழ் நாட்கள்
ஒன்றி அனைத்தும் உளேன்
*@5 நெய்தல்

#57
ஒழுகு திரை கரை வான் குருகின் தூவி
உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனை
பேதையான் என்று உணரும் நெஞ்சம் இனிது உண்மை
ஊதியம் அன்றோ உயிர்க்கு

#58
என்னைகொல் தோழி அவர்கண்ணும் நன்கு இல்லை
அன்னை முகனும் அது ஆகும் பொன் அலர்
புன்னை அம் பூம் கானல் சேர்ப்பனை தக்க தேர்
நின் அல்லது இல் என்று உரை

#59
இடு மணல் எக்கர் அகன் கானல் சேர்ப்பன்
கடு மான் மணி அரவம் என்று கொடுங்குழை
புள் அரவம் கேட்டு பெயர்ந்தாள் சிறு குடியர்
உள் அரவம் நாணுவர் என்று

#60
மணி நிற நெய்தல் இரும் கழி சேர்ப்பன்
அணி நலம் உண்டு அகன்றான் என்கொல் எம் போல்
தணி மணல் எக்கர் மேல் ஓதம் பெயர
துணி முந்நீர் துஞ்சாதது

#61
கண் திரள் முத்தம் பயக்கும் இரு முந்நீர்
பண்டம் கொள் நாவாய் வழங்கும் துறைவனை
முண்டக கானலுள் கண்டேன் என தெளிந்தேன்
நின்ற உணர்வு இலாதேன்

#62
அடும்பு இவர் எக்கர் அலவன் வழங்கும்
கொடும் கழி சேர்ப்பன் அருளான் என தெளிந்து
கள்ள மனத்தான் அயல் நெறி செல்லும்கொல்
நல் வளை சோர நடந்து

#63
கள் நறு நெய்தல் கமழும் கொடும் கழி
தண்ணம் துறைவனோ தன் இலன் ஆயிழாய்
வள்நகைப்பட்டதனை ஆண்மை என கருதி
பண் அமை தேர் மேல் வரும்

#64
தெண் நீர் இரும் கழி வேண்டும் இரை மாந்தி
பெண்ணை மேல் சேக்கும் வணர் வாய் புணர் அன்றில்
தண்ணம் துறைவற்கு உரையாய் மடமொழி
வண்ணம் தா என்று தொடுத்து

#65
எறி சுறா குப்பை இனம் கலக்க தாக்கும்
எறி திரை சேர்ப்பன் கொடுமை அறியாகொல்
கானகம் நண்ணி அருள் அற்றிட கண்டும்
கானலுள் வாழும் குருகு

#66
நுண் ஞாண் வலையின் பரதவர் போத்தந்த
பல் மீன் உணங்கல் கவரும் துறைவனை
கண்ணினால் காண அமையும்கொல் என் தோழி
வண்ணம் தா என்கம் தொடுத்து

#67
இவர் திரை நீக்கியிட்டு எக்கர் மணல் மேல்
கவர் கால் அலவன் தன பெடையோடு
தவழும் இரும் கழி சேர்ப்ப என் தோழி
படர் பசலை பாயின்று தோள்

#68
சிறு மீன் கவுள் கொண்ட செம் தூவி நாராய்
இறு மென் குரல நின் பிள்ளைகட்கே ஆகி
நெறி நீர் இரும் கழி சேர்ப்பன் அகன்ற
நெறி அறிதி மீன் தபு நீ

#69

#70

#71 தனிச்சேர்க்கை
முடம் முதிர் புன்னை படுகோட்டு இருந்த
மடம் உடை நாரைக்கு உரைத்தேன் கடன் அறிந்து
பாய் திரை சேர்ப்பன் பரி தேர் வர கண்டு
நீ தகாது என்று நிறுத்து
*