நளவெண்பாவில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்

நளவெண்பாவில் உள்ள சொற்கள்/சீர்-தளைகள் எண்ணிக்கை

இத் தொடரடைவு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் வெளியிடப்பட்ட நளவெண்பா நூலில்  கொடுக்கப்பட்டுள்ள பாடல்களை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. பாடல் எண்கள் அந்நூலில் உள்ளவாறே உள்ளன. பார்வை – கழகப்புலவர் செல்லூர்க்கிழார் திரு.செ.ரெ.இராமசாமிப் பிள்ளை எழுதிய உரையுடன் கூடிய நளவெண்பா நூல். புலியூர்க்கேசிகன் வெளியிட்டுள்ள உரையிலுள்ளவாறு பெரும்பாலான பாடல் எண்கள் அமையும்.

பாடல்கள் அடிகள் சொற்கள் பிரி
சொற்கள்
கட்டு
ருபன்கள்
அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 427 1708 9364 64 110 9538 4175
சீர்கள்
நாள் மலர் காசு பிறப்பு
65 (15.2%) 95 (22.2%) 114 (26.7%) 153 (35.8%)
தேமா புளிமா கூவிளம் கருவிளம்
1617 (27.0%) 516 (8.6%) 270 (4.5%) 113 (1.9%)
தேமாங்காய் புளிமாங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
889 (14.9%) 650 (10.9%) 1260 (21.1%) 663 (11.1%)
தளைகள்
இயற்சீர்வெண் வெண்சீர்வெண்
2516 (42.1%) 3462 (57.9%)

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், ஆ_கோள் போன்றன. சொல்லின் பகுதிகள்
அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
ஆய்_இழையார் என்ற சொல்லுக்குரிய பிரிசொற்கள் ஆய், இழையார் ஆகிய இரண்டும். எனவே ஆய்_இழையார் என்ற சொல்லுக்குரிய
நிகழ்விடங்கள் ஆய், ஆய்_இழையார், இழையார் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

ஆய் (4)
அலர்த்தும் கொடி மாடத்து ஆய்_இழையார் ஐம்பால் – நள 21/3
அன்னம்-தனை பிடித்து அங்கு ஆய்_இழையார் கொண்டுபோய் – நள 33/1
அங்கை நெடு வேல் கண் ஆய்_இழையாய் வாவியின்-வாய் – நள 156/1
அவ்வளவில் ஆதி பெரு வழியில் ஆய் வணிகன் – நள 312/1

ஆய்_இழையார் (2)
அலர்த்தும் கொடி மாடத்து ஆய்_இழையார் ஐம்பால் – நள 21/3
அன்னம்-தனை பிடித்து அங்கு ஆய்_இழையார் கொண்டுபோய் – நள 33/1

இழையார் (3)
அலர்த்தும் கொடி மாடத்து ஆய்_இழையார் ஐம்பால் – நள 21/3
தேரின் துகளை திருந்து_இழையார் பூ குழலின் – நள 29/1
அன்னம்-தனை பிடித்து அங்கு ஆய்_இழையார் கொண்டுபோய் – நள 33/1

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின்,
கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும்
ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

கொண்-மின் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், கொண்-மின், -மின் என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும். கொண் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்களில் இது இடம்பெறாது.

கொண்-மின் (1)
கோ காதலியை குறி கொண்-மின் நீக்காத – நள 285/2

-மின் (3)
கோ காதலியை குறி கொண்-மின் நீக்காத – நள 285/2
தார் வேந்தற்கு என் வரவு தான் உரை-மின் என்று உரைத்தான் – நள 358/3
தக்கானை இங்கே தரு-மின் என உரைப்ப – நள 359/3

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால்,
அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

இன்று (14)
இடைநின்ற காலம் போல் இன்று – நள 107/4
இரவு அளித்தான் அல்லனோ இன்று – நள 117/4
யாமம் கரி ஆக இன்று – நள 118/4
இன் துணை மேல் வைத்து உறங்கும் என்னும் சொல் இன்று
தவிர்ந்ததே போல் அரற்றி சாம்புகின்ற-போதே – நள 124/2,3
இவளை பணையம் தா இன்று – நள 229/4
இன்று இருந்து நாளை எழுந்து அருள்க என்று உரைத்தார் – நள 235/3
நின்று உருகு வார் கண்ணி நீர் நோக்கி இன்று இங்கு – நள 236/2
இன்று துயில இறைவனுக்கே என்றனது – நள 276/2
காதல் அன்பு மிக்காளை கார் இருளில் கைவிட்டு இன்று
ஏதிலன் போல் போகின்றேன் யான் – நள 285/3,4
வன் துயரால் போய் ஆவி மாள்கின்றேன் இன்று உன் – நள 301/2
சீற்றம் ஒன்று இன்றி சின எயிற்றால் மாற்றுதற்கு இன்று
என் காரணம் என்றான் ஏற்று அமரில் கூற்று அழைக்கும் – நள 345/2,3
இரவு அகற்றி வந்தாய்-கொல் இன்று – நள 356/4
இறவாத ஏந்து_இழையாள் இன்று பறி பீறி – நள 372/2
இன்று உன்னை காண்பதோர் ஆதரவால் யான் இங்ஙன் – நள 385/1

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

பிடிக்க (2)
மான் பிடிக்க சொன்ன மயிலே போல் தான் பிடிக்க – நள 259/2
மான் பிடிக்க சொன்ன மயிலே போல் தான் பிடிக்க
பொன் புள்ளை பற்றி தா என்றாள் புது மழலை – நள 259/2,3