அழகர் கிள்ளைவிடு தூது நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 482 2580 30 12 622 1841

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, அஞ்சுபடையோன் என்ற சொல் திருமாலைக் குறிக்கும். ஆனால் அஞ்சுபடையோன் என்பதில் அஞ்சு, படையோன் என்பன தனித்தனிச் சொற்கள்.
இதனை ஒரு சொல்லாகக் கொண்டால் அஞ்சு, படையோன் ஆகிய சொற்களின் எண்ணிக்கையில் இது சேராது. எனவே இது அஞ்சு_படையோன் என்று கொள்லப்படும். இப்போது இது அஞ்சு_படையோன் என்று ஒரு சொல்லாகவும், அஞ்சு, படையோன் ஆகிய சொற்களின் எண்ணிக்கையிலும் சேர்க்கப்படும்.
இதற்குரிய பிரிசொற்கள் அஞ்சு, படையோன் ஆகிய இரண்டும். எனவே அஞ்சு_படையோன் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் அஞ்சு, படையோன், அஞ்சு_படையோன் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

அஞ்சு (2)
அஞ்சு எழுத்தை மூன்று எழுத்தது ஆக்குவோன் வஞ்சம் அற – அழகர்:4 130/2
அஞ்சு_படையோன் எனினும் அஞ்சாமல் அங்கையில் வாசம்செய்யும் – அழகர்:4 133/1

அஞ்சு_படையோன் (1)
அஞ்சு_படையோன் எனினும் அஞ்சாமல் அங்கையில் வாசம்செய்யும் – அழகர்:4 133/1

படையோன் (1)
அஞ்சு_படையோன் எனினும் அஞ்சாமல் அங்கையில் வாசம்செய்யும் – அழகர்:4 133/1

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

தம்-மின் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், தம்-மின், -மின் என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

-மின் (1)
தாதை ஆர் மாலை-தனை தம்-மின் என்பாய் நீதி – அழகர்:14 237/2

தம்-மின் (1)
தாதை ஆர் மாலை-தனை தம்-மின் என்பாய் நீதி – அழகர்:14 237/2

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

கோடி (7)
கால் பிடிப்பார் கோடி பேர் கண்டாயே மால் பிடித்தோர் – அழகர்:1 48/2
கோடி கதிரோனும் கோடி பனி மதியும் – அழகர்:6 153/1
கோடி கதிரோனும் கோடி பனி மதியும் – அழகர்:6 153/1
காணிக்கை வாங்கி அன்பர் கை கோடி அள்ளி இடும் – அழகர்:6 159/1
ஒரு கோடி கா உண்டு ஒரு கோடி ஆறு உண்டு – அழகர்:11 212/1
ஒரு கோடி கா உண்டு ஒரு கோடி ஆறு உண்டு – அழகர்:11 212/1
ஒரு கோடி பூம் சுனையும் உண்டு திறம் சேர் – அழகர்:11 212/2