திருமந்திரம் – எட்டாம், ஒன்பதாம் தந்திரங்கள்

8.எட்டாம் தந்திரம் (2122 – 2648)

#2122
காய பை ஒன்று சரக்கு பல உள
மாய பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு
காய பைக்கு உள் நின்ற கள்வன் புறப்பட்டால்
மாய பை மண்ணா மயங்கியவாறே

மேல்

#2123
அத்தன் அமைத்த உடல் இரு கூறினில்
சுத்தம் அது ஆகிய சூக்குமம் சொல்லும்-கால்
சத்த பரிச ரூப ரச கந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியட்டகாயமே

மேல்

#2124
எட்டினில் ஐந்து ஆகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்
ஒட்டிய பாசம் உணர்வு அது ஆகவே
கட்டி அவிழ்த்திடும் கண்_நுதல் காணுமே

மேல்

#2125
இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவம் அலால் உடல் ஒன்று எனலாமே

மேல்

#2126
ஆரே அறிவார் அடியின் பெருமையை
யாரே அறிவார் அங்கு அவர் நின்றது
யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை
யாரே அறிவார் அடி காவல் ஆனதே

மேல்

#2127
எண் சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்
கண் கால் உடலில் கரக்கின்ற கைகளில்
புண் கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற
நண்பால் உடம்பு தன்னால் உடம்பு ஆமே

மேல்

#2128
உடம்புக்கும் நாலுக்கும் உயிராய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியா பிரமம்
கடம்-தொறு நின்ற கணக்கு அது காட்டி
அடங்கியே அற்றது ஆர் அறிவாரே

மேல்

#2129
ஆறு அந்தம் ஆகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்
கூறும் கலைகள் பதினெட்டும் கூடியே
ஊறும் உடம்பை உயிர் உடம்பு எண்ணுமே

மேல்

#2130
மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே

மேல்

#2131
காயும் கடும் பரி கால் வைத்து வாங்கல் போல்
சேய இடம் அண்மை செல்லவும் வல்லது
காய துகிர் போர்வை ஒன்று விட்டு ஆங்கு ஒன்று இட்டு
ஏயும் அவர் என்ன ஏய்ந்திடும் காயமே

மேல்

#2132
நாகம் உடலுரி போலும் நல் அண்டசம்
ஆக நனாவில் கனா மறந்து அல்லது
போகலும் ஆகும் அரன் அருளாலே சென்று
ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே

மேல்

#2133
உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
கண்டு விடும் சூக்கம் காரணமா செல
பண்டு தொடர பரகாய யோகி போல்
பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே

மேல்

#2134
தான் அவன் ஆகிய தற்பரம் தாங்கினோன்
ஆன அவை மாற்றி பரமத்து அடைந்திடும்
ஏனை உயிர் வினைக்கு எய்தும் இடம் சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே

மேல்

#2135
ஞானிக்கு காயம் சிவமே தனுவாகும்
ஞானிக்கு காயம் உடம்பே அதுவாகும்
மேல் நிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்
மோனிக்கு காயம் முப்பாழ் கெட்ட முத்தியே

மேல்

#2136
விஞ்ஞானத்தோர்க்கு ஆணவமே மிகு தனு
எஞ்ஞானத்தோர்க்கு தனு மாயை தான் என்ப
அஞ்ஞானத்தோர்க்கு கன்மம் தனு ஆகும்
மெய்ஞ்ஞானத்தோர்க்கு சிவ தனு மேவுமே

மேல்

#2137
மலம் என்று உடம்பை மதியாத ஊமர்
தலம் என்று வேறு தரித்தமை கண்டீர்
நலம் என்று இதனையே நாடி இருக்கில்
பலம் உள்ள காயத்தில் பற்றும் இ அண்டத்தே

மேல்

#2138
நல்ல வசனத்து வாக்கும் அனாதிகள்
மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே
அல்ல செவி சத்தம் ஆதி மனத்தையும்
மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே

மேல்

#2139
பண் ஆகும் காமம் பயிலும் வசனமும்
விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே

மேல்

#2140
அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவி கண்
கழிகின்ற கால் அ விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே

மேல்

#2141
இலை ஆம் இடையில் எழுகின்ற காம
முலை வாய நெஞ்சத்து மூழ்கும் உளத்து
தலையாய மின் உடல் தாங்கி திரியும்
சிலையாய சித்தம் சிவ முன் இடைக்கே

மேல்

#2142
ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கைகண்ட பல் நான்கில் கண்டம் கனா என்பர்
பொய் கண்டிலாத புருடன் இதயம் சுழுனை
மெய் கண்டவன் உந்தி ஆகும் துரியமே

மேல்

#2143
முப்பதோடு ஆறின் முதல் நனா ஐந்து ஆக
செப்பதில் நான்காய் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி
அ பதி ஆகும் நியதி முதலாக
செப்பும் சிவம் ஈறாய் தேர்ந்து கொள்ளீரே

மேல்

#2144
இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை
மந்திரமாய் நின்ற மாருதம் ஈரைந்தும்
அந்த கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும்
பந்த அ சக்கர பால் அது ஆகுமே

மேல்

#2145
பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கருப்பை உடையது
வானகம் தூமம் மறைந்து நின்றாரே

மேல்

#2146
பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்துளும்
ஏதம் படம் செய்து இருந்த புறநிலை
ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு
ஆதி அவத்தை கருவி தொண்ணூற்றாறே

மேல்

#2147
இட வகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை
படு பர சேனையும் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர்
அடைய நெடும் கடை ஐந்தொடு நான்கே

மேல்

#2148
உடம்பும் உடம்பும் உடம்பை தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம் புகு நாய் போல் மயங்குகின்றாரே

மேல்

#2149
இருக்கின்றவாறு ஒன்று அறிகிலர் ஏழைகள்
முருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகம் தேர்ந்து
உருக்கொண்டு தொக்க உடல் ஒழியாதே

மேல்

#2150
ஒளித்திட்டு இருக்கும் ஒரு பதினாலை
அளித்தனன் என் உள்ளே ஆரியன் வந்து
அளிக்கும் கலைகளின் நாலறுபத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே

மேல்

#2151
மண்ணினில் ஒன்று மலர் நீரும் மருங்காகும்
பொன்னினில் அங்கி புகழ் வளி ஆகாயம்
மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய்
உன்னின் முடிந்த ஒரு பூத சயமே

மேல்

#2152
முன்னிக்கு ஒரு மகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள் இல்லை
கன்னியை கன்னியே காதலித்தாளே

மேல்

#2153
கண்ட கனவு ஐந்தும் கலந்தன தான் ஐந்தும் சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்த பின்
பண்டையது ஆகி பரந்த வியாக்கிரத்து
அண்டமும் தானாய் அமர்ந்து நின்றானே

மேல்

#2154
நின்றவன் நிற்க பதினாலில் பத்து நீத்து
ஒன்றிய அந்த கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவு அதே

மேல்

#2155
தானம் இழந்து தனி புக்கு இதயத்து
மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி
ஆன விரிவு அறியா அ வியத்தத்தின்
மேனி அழிந்து சுழுத்தியது ஆமே

மேல்

#2156
சுழுனையை சேர்ந்து உள மூன்று உடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்-தன் காட்சி
ஒழுக கமலத்தின் உள்ளே இருந்து
விழும பொருளுடன் மேவி நின்றானே

மேல்

#2157
தானத்து எழுந்து தருக்கும் துரியத்தின்
வானத்து எழுந்து போய் வையம் பிறகிட்டு
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தை விட்டு ஊமன் நின்றானே

மேல்

#2158
ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓமயம் உற்றது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம் அறியோமே

மேல்

#2159
துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலும் நஞ்சு உண்டு செத்தன
பரிய புரவியும் பாறி பறந்தது
துரியம் இறந்த இடம் சொல்ல ஒண்ணாதே

மேல்

#2160
மாறா மலம் ஐந்தால் மன்னும் அவத்தையின்
வேறாய மாயா தநுகரணாதிக்கு இங்கு
ஈறு ஆகாதே எ உயிரும் பிறந்து இறுந்து
ஆறாத வல் வினையால் அடி உண்ணுமே

மேல்

#2161
உண்ணும் தன் ஊடாடாது ஊட்டிடும் மாயையும்
அண்ணல் அருள்பெற்ற முத்தி அது ஆவது
நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து
எண்ணுறு ஞானத்தின் நேர் முத்தி எய்துமே

மேல்

#2162
அதி மூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அரும் கன்மம் உன்னி
திதம் ஆன கேவலம் இ திறம் சென்று
பரம் ஆகா வைய அவத்தைப்படுவானே

மேல்

#2163
ஆசான் முன்னே துயில் மாணவர்-தமை
தேசாய தண்டால் எழுப்பும் செயல் போல்
நேசாய ஈசனும் நீடு ஆணவத்தரை
ஏசாத மாயாள்-தன்னாலே எழுப்புமே

மேல்

#2164
மஞ்சொடு மந்தாகினி குடமாம் என
விஞ்சு அறிவில்லோன் விளம்பு மிகு மதி
எஞ்சலில் ஒன்று எனுமாறு என இ உடல்
அஞ்சு உணும் மன்னன் அன்றே போம் அளவே

மேல்

#2165
படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடியுடை மாநகர் தான் வரும்-போது
அடியுடை ஐவரும் அங்கு உறைவோரும்
துடி இல்லம் பற்றி துயின்றனர் தாமே

மேல்

#2166
நேரா மலத்தை நீடு அடைந்து அவத்தையின்
நேரானவாறு உன்னி நீடு நனவினில்
நேரா மலம் ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே

மேல்

#2167
சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனம் தன்னிடை மா மாயை
சாக்கிரம் தன்னில் சுழுத்தி தற்காமியம்
சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே

மேல்

#2168
மாயை எழுப்பும் கலாதியை மற்று அதின்
நேய இராகாதி ஏய்ந்த துரியத்து
தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி
ஆயினன் அந்த சகலத்து உளானே

மேல்

#2169
மேவிய அந்தகன் விழி கண் குருடனாம்
ஆவயின் முன் அடி காணும் அது கண்டு
மேவும் தடி கொண்டு சொல்லும் விழி பெற
மூவயின் ஆன்மா முயலும் கருமமே

மேல்

#2170
மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்
ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறு போல்
அத்தனும் ஐம்பொறி ஆடகத்து உள் நின்று
சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணுமாறே

மேல்

#2171
வைச்சன வச்சு வகை இருபத்தஞ்சு
முச்சும் ஊடன் அணைவான் ஒருவன் உளன்
பிச்சன் பெரியன் பிறப்பு_இலி என்று என்று
நச்சி அவன் அருள் நான் உய்ந்தவாறே

மேல்

#2172
நாலாறு உடன் புருடன் நல் தத்துவமுடன்
வேறான ஐயைந்து மெய் புருடன் பரம்
கூறா வியோமம் பரம் என கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே

மேல்

#2173
ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
கோலம் கொண்டு ஆங்கே குணத்தின் உடன் புக்கு
மூலம் கொண்டு ஆங்கே முறுக்கி முக்கோணிலும்
காலம் கொண்டான் அடி காணலுமாமே

மேல்

#2174
நாடிகள் பத்தும் நலம் திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும்
கூடிய காமம் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே

மேல்

#2175
ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளையோனே

மேல்

#2176
பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலை துரியமும்
தத்துவ நாலேழ் என உன்னத்தக்கதே

மேல்

#2177
விளங்கிடும் முந்நூற்றுமுப்பதோடு ஒருபான்
தளம் கொள் இரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அ வழி தத்துவம் நின்றே

மேல்

#2178
நால் ஒரு கோடியே நாற்பத்தெண்ணாயிரம்
மேலும் ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
பால் அவை தொண்ணூறோடு ஆறுள் படும் அவை
கோலிய ஐயைந்துள் ஆகும் குறிக்கிலே

மேல்

#2179
ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொது என்பர்
ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறு ஐயைந்தும் மாயாவாதிக்கே

மேல்

#2180
தத்துவமானது தன்வழி நின்றிடில்
வித்தகன் ஆகி விளங்கி இருக்கலாம்
பொய்த்தவமாம் அவை போயிடும் அ வழி
தத்துவமாவது அகார எழுத்தே

மேல்

#2181
அறிவு ஒன்று இலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீ என்று அருள்செய்தார் நந்தி
அறிகின்ற நான் என்று அறிந்துகொண்டேனே

மேல்

#2182
சாக்கிர சாக்கிரம் ஆதி-தனில் ஐந்தும்
ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறும்
நீக்கி நெறிநின்று ஒன்று ஆகியே நிற்குமே

மேல்

#2183
ஆணவம் ஆதி மலம் ஐந்து அலரோனுக்கு
ஆணவம் ஆதி நான்காம் மாற்கு அரனுக்கு
ஆணவம் ஆதி மூன்று ஈசர்க்கு இரண்டு என்ப
ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே

மேல்

#2184
தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ் கோடி
மெய்த்தகு அன்னம் ஐம்பான் ஒன்று மேதினி
ஒத்து இருநூற்றிருபான் நான்கு எண்பான் ஒன்று
வைத்த பதம் கலை ஓர் ஐந்தும் வந்தவே

மேல்

#2185
நாடிய மண்டலம் மூன்று நலம் தெரிந்து
ஓடும் அவரோடு உள் இருபத்தைஞ்சும்
கூடுவர் கூடி குறிவழியே சென்று
தேடிய பின்னர் திகைத்து இருந்தார்களே

மேல்

#2186
சாக்கிர சாக்கிரம் ஆதி தலை ஆக்கி
ஆக்கிய தூலம் அளவு ஆக்கி அதீதத்து
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது
தேக்கும் சிவம் ஆதல் ஐந்தும் சிவாயமே

மேல்

#2187
நனவாதி தூலமே சூக்க பகுதி
அனதான ஐயைந்தும் விந்துவின் சத்தி
தனதாம் விந்து தான்-நின்று போந்து
கனவா நனவில் கலந்தது இவ்வாறே

மேல்

#2188
நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவோட நல் செய்தி ஆனதே

மேல்

#2189
செறியும் கிரியை சிவதத்துவமாம்
பிறிவில் சுக யோகம் பேரருள் கல்வி
குறிதல் திருமேனி குணம் பல ஆகும்
அறிவில் சராசரம் அண்டத்து அளவே

மேல்

#2190
ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்
ஏதம் இல் ஈசன் நல் வித்தியா தத்துவம்
போதம் கலை காலம் நியதி மா மாயை
நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே

மேல்

#2191
தேசு திகழ் சிவம் சத்தி சதாசிவம்
ஈசன் நல் வித்தை இராகம் கலைகாலம்
மாசு அகல் வித்தை நியதி மகா மாயை
ஆசு இல் புருடாதி ஆன்மா ஈராறே

மேல்

#2192
ஆணவ மாயையும் கன்மமுமாம் மலம்
காணும் முளைக்கு தவிடு உமி ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே

மேல்

#2193
பசுக்கள் பல வண்ணம் பால் ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல் போடில்
பசுக்கள் தலைவனை பற்றி விடாவே

மேல்

#2194
உடல் இந்தியம் மனம் ஒண் புத்தி சித்தம்
அடல் ஒன்று அகந்தை அறியாமை மன்னி
கெடும் அ உயிர் மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான் ஏழ் நரகத்து உளாயே

மேல்

#2195
தன் தெரியாத அதீதம் தற்கு ஆணவம்
சொல் தெரிகின்ற துரியம் சொல் காமியம்
பெற்ற சுழுத்தி பின் பேசுறும் காதலால்
மற்று அது உண்டி கன நனவு ஆதலே

மேல்

#2196
நனவில் கனவு இல்லை ஐந்து நனவில்
கனவு இலா சூக்குமம் காணும் சுழுத்தி
தனல் உண் பகுதியே தற்கூட்டு மாயை
நனவில் துரியது அதீதம் தலைவந்தே

மேல்

#2197
ஆறாறில் ஐயைந்து அகல நனா நனா
ஆறாம் அவை விட ஆகும் நனா கனா
வேறு ஆன ஐந்தும் விடவே நனாவினில்
ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே

மேல்

#2198
மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறை விட்டு அதுவும் தான் அன்றாகி
சேய கேவல விந்துடன் செல்ல சென்ற-கால்
ஆய தனுவின் பயன் இல்லை ஆமே

மேல்

#2199
அதீத துரியத்து அறிவனாம் ஆன்மா
அதீத துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவு ஆகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே

மேல்

#2200
ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனா என்பர்
பொய் கண்ட மூவர் புருடர் சுழுனையின்
மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே

மேல்

#2201
புரியட்டகமே பொருந்தல் நனவு
புரியட்டகம் தன்னின் மூன்று கனவு
புரியட்டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட்டகத்து ஒன்று புக்கல் துரியமே

மேல்

#2202
நனவின் நனவு புலன் இல் வழக்கம்
நனவில் கனவு நினைத்தல் மறத்தல்
நனவில் சுழுத்தி உள் நாடல் இலாமை
நனவில் துரியம் அதீதத்து நந்தியே

மேல்

#2203
கனவின் நனவு போல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டு மறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாமை காணல்
அணு ஆதி செய்தலில் ஆன துரியமே

மேல்

#2204
சுழுத்தி நனவு ஒன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்தி கனவு அதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவு அறிவாலே அழிகை
சுழுத்தி துரியமாம் சொல் அறும் பாழே

மேல்

#2205
துரிய நனவாம் இதம் உணர் போதம்
துரிய கனவாம் அகம் உணர் போதம்
துரிய சுழுத்தி வியோமம் துரியம்
துரியம் பரம் என தோன்றிடும் தானே

மேல்

#2206
அறிவு அறிகின்ற அறிவு நனவாம்
அறிவு அறியாமை அடைய கனவாம்
அறிவு அறி அ அறியாமை சுழுத்தி
அறிவு அறிவாகும் ஆன துரியமே

மேல்

#2207
தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான் விட்டு
ஞானம் தனது உரு ஆகி நயந்த பின்
தான் எங்குமாய் நெறிநின்றது தான் விட்டு
மேல் நந்த சூக்கம் அவை வன்னம் மேலிட்டே

மேல்

#2208
ஐயைந்தும் ஆறும் ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்
மெய்யும் பின் சூக்கமும் மெய் பகுதி மாயை
ஐயமும் தான் அவன் அ துரியத்தனே

மேல்

#2209
ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும்
ஈது என்று அறிந்த பின் ஏதும் அறிந்திலேன்
ஈது என்று அறியும் அறிவை அறிந்த பின்
ஈது என்று அறியும் இயல்பு உடையோனே

மேல்

#2210
உயிர்க்கு உயிராகி உருவாய் அருவாய்
அயல் புணர்வு ஆகி அறிவாய் செறிவாய்
நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி
இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே

மேல்

#2211
சத்தி இராகத்தில் தான் நல் உயிர் ஆகி
ஒத்துறு பாச மலம் ஐந்தோடு ஆறாறு
தத்துவ பேதம் சமைத்து கருவியும்
வைத்தனன் ஈசன் மலம் அறுமாறே

மேல்

#2212
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன் உண்மை
சாக்கிரா தீதம் துரியத்தில் தானுற
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடா
சாக்கிரா தீதம் பரன் உண்மை தங்குமே

மேல்

#2213
மல கலப்பாலே மறைந்தது சத்தி
மல கலப்பாலே மறைந்தது ஞானம்
மல கலப்பாலே மறைந்தனன் தாணு
மல கலப்பு அற்றால் மதியொளி ஆமே

மேல்

#2214
திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்கு பால் இரண்டு ஆமே

மேல்

#2215
கதறு பதினெட்டு கண்களும் போக
சிதறி எழுந்திடும் சிந்தையை நீரும்
விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்
அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே

மேல்

#2216
நனவகத்தே ஒரு நாலைந்தும் வீட
கனவகத்தே உள் கரணங்களோடு
முனவகத்தே நின்று உதறி உள் புக்கு
நினைவகத்து இன்றி சுழுத்தி நின்றானே

மேல்

#2217
நின்றவன் ஆசான் நிகழ் துரியத்தனாய்
ஒன்றி உலகின் நியமாதிகளுற்று
சென்று துரியாதீதத்தே சில காலம்
நின்று பரனாய் நின்மலன் ஆமே

மேல்

#2218
ஆன அ ஈசன் அதீதத்தில் வித்தையா
தான் உலகு உண்டு சதாசிவ மா சத்தி
மேனிகள் ஐந்தும் போய் விட்டு சிவம் ஆகி
மோனம் அடைந்து ஒளி மூலத்தன் ஆமே

மேல்

#2219
மண்டலம் மூன்றினுள் மாய நல் நாடனை
கண்டு கொண்டு உள்ளே கருதி கழிகின்ற
விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆக
தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே

மேல்

#2220
போது அறியாது புலம்பின புள் இனம்
மாது அறியா வகை நின்று மயங்கின
வேது அறியாவணம் நின்றான் எம் இறை
சூது அறிவார் உச்சி சூடிநின்றாரே

மேல்

#2221
கருத்து அறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே
பொருத்து அறிந்தேன் புவனாபதி நாடி
திருத்து அறிந்தேன் மிகு தேவர் பிரானை
வருத்து அறிந்தேன் மனம் மன்னி நின்றானே

மேல்

#2222
ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்ன
தான விளக்கொளியாம் மூல சாதனத்து
ஆன விதி மூலத்தானத்தில் அ விளக்கு
ஏனை மதி மண்டலம் கொண்டு எரியுமே

மேல்

#2223
உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய
விண் நாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்து ஐவர் கூடிய சந்தியில்
கண்ணாடி காணும் கருத்தது என்றானே

மேல்

#2224
அறியாதவற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன் அறிவு ஆகான்
அறியாது அவத்தை அறிவானை கூட்டி
அறியாது அறிவானை யார் அறிவாரே

மேல்

#2225
துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம் அ நனவு ஆதி
பெரியன கால பரம்பின் துரியம்
அரிய அதீதம் அதீதத்தம் ஆமே

மேல்

#2226
மாயையில் சேதனன் மன்னும் பகுதியோன்
மாயையின் மற்று அது நீவு தன் மாயையாம்
கேவலம் ஆகும் சகல மா யோனியுள்
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே

மேல்

#2227
தன்னை அறி சுத்தன் தற்கேவலன் தானும்
பின்னம் உற நின்ற பேத சகலனும்
மன்னிய சத்து அசத்து சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழிற்கு அளவு ஆகவே

மேல்

#2228
தானே தனக்கு பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்கு தலைவனும் ஆமே

மேல்

#2229
ஆம் உயிர் கேவலம் மா மாயையின் நடந்து
ஆம் உயிர் மாயை எறிப்ப அறிவுற்று
காமியம் மாயேயமும் கலவா நிற்ப
தாமுறு பாசம் சகலத்தது ஆமே

மேல்

#2230
சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம் மூ வகையும் புணர்ந்தோர்
நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள்
நிகழ் நரர் கீடம் அந்தமும் ஆமே

மேல்

#2231
தாவிய மாயையில் தங்கும் பிரளயம்
மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட்டு உருத்திரர் ஆமே

மேல்

#2232
ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர்
ஆகின்ற வித்தேசராம் அனந்தாதியர்
ஆகின்ற எண்மர் எழு கோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே

மேல்

#2233
ஆம் அவரில் சிவனார் அருள் பெற்றுளோர்
போம் மலம் தன்னால் புகழ் விந்து நாதம் விட்டு
ஓம் மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலம்
தோம் அறு சுத்தா அவத்தை தொழிலே

மேல்

#2234
ஓரினும் மூ வகை நால் வகையும் உள
தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை
சாரியல் ஆயவை தாமே தணப்பவை
வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே

மேல்

#2235
பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டு அகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி
மெய்யாம் சராசரமாய் வெளி தன்னுள் புக்கு
எய்தாமல் எய்தும் சுத்தாவத்தை என்பதே

மேல்

#2236
அனாதி பசு வியாத்தி ஆகும் இவனை
அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலம் அச்ச கலத்து இட்டு
அனாதி பிறப்பு அற சுத்தத்துள் ஆகுமே

மேல்

#2237
அந்தரம் சுத்தாவத்தை கேவலத்து ஆறு
தந்தோர் தம் சுத்த கேவலத்து அற்ற தற்பரத்
தின்-பால் துரியத்து இடையே அறிவுற
தன்-பால் தனை அறி தத்துவம் தானே

மேல்

#2238
ஐயைந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய் கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்
துய்ய அ வித்தை முதல் மூன்றும் தொல் சத்தி
ஐய சிவம் சித்தியாம் தோற்றம் அவ்வாறே

மேல்

#2239
ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும்
மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபாகத்தே காண
எய்யும்படி அடங்கும் நாலேழ் எய்தியே

மேல்

#2240
ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயை பிரளயாகலர் ஆகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலர் முப்பாசமும் புக்கோரே

மேல்

#2241
ஆணவம் ஆகும் விஞ்ஞானகலருக்கு
பேணிய மாயை பிரளயாகலருக்கே
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
காணும் சகலர்க்கு காட்டு மலங்களே

மேல்

#2242
கேவலம்-தன்னில் கிளர்ந்த விஞ்ஞாகலர்
கேவலம்-தன்னில் கிளர் விந்து சத்தியால்
ஆவயின் கேவலத்து அ சகலத்தையும்
மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே

மேல்

#2243
மாயையின் மன்னும் பிரளயாகலர் வந்து
மாயையும் தோன்றா வகை நிற்க ஆணவ
மாய சகலத்து காமிய மா மாயை
ஏய மன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே

மேல்

#2244
மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர்
அம் மெய் சகலத்தர் தேவர் சுரர் நரர்
மெய்ம்மையில் வேதா விரி மிகு கீடாந்தத்து
அ முறை யோனி புக்கு ஆர்க்கும் சகலரே

மேல்

#2245
சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மல
சத்து அசத்து ஓட தனித்தனி பாசமும்
மத்த இருள் சிவனான கதிராலே
தொத்து அற விட்டிட சுத்தர் ஆவார்களே

மேல்

#2246
தற்கேவலம் முத்தி தானே தனிமையாம்
பிற்பால் சகலம் கலாதி பிறிவது ஆம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே

மேல்

#2247
அறிவு இன்றி முத்தன் அராகாதி சேரான்
குறி ஒன்று இலா நித்தன் கூடான் கலாதி
செறியும் செயல் இலான் தினம் கற்ற வல்லோன்
கிறியன் மலவியாபி கேவலம் தானே

மேல்

#2248
விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்தத ஞான பரையும் தனு சத்தி
விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர்
வந்த சகல சுத்தான்மாக்கள் வையத்தே

மேல்

#2249
கேவலம் ஆதியில் பேதம் கிளக்குறில்
கேவலம் மூன்றும் கிளரும் சகலத்துள்
ஆவயின் மூன்று மதி சுத்த மூடவே
ஓவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர்கட்கே

மேல்

#2250
கேவலத்தில் கேவலம் அதீதாதீதம்
கேவலத்தில் சகலங்கள் வயின் தவம்
கேவலத்தில் சுத்தம் கேடு இல் விஞ்ஞாகலவர்க்கு
ஆவயின் ஆதன் அருண் மூர்த்தி தானே

மேல்

#2251
சகலத்தில் கேவலம் சாக்கிராதீதம்
சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
சகலத்தின் சுத்தமே தற்பராவத்தை
சகலத்தில் இ மூன்று தன்மையும் ஆமே

மேல்

#2252
சுத்தத்தில் சுத்தமே தொல் சிவம் ஆகுதல்
சுத்தத்தில் கேவலம் தொல் உபசாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இ மூன்றும் சொல்லலும் ஆமே

மேல்

#2253
சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடும்
சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிராதீதம் தனில் சுக ஆனந்தமே
ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே

மேல்

#2254
சாக்கிராதீதத்தில் தான் அறும் ஆணவம்
சாக்கிராதீதம் பராவத்தை தங்காது
ஆக்கு பரோபாதியாம் உபசாந்தத்தை
நோக்கு மலம் குணம் நோக்குதல் ஆகுமே

மேல்

#2255
பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தான் உணும்
அத்தன் அருள் என்று அருளால் அறிந்த பின்
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே

மேல்

#2256
எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
எய்தும் அரன் அருளே விளையாட்டோடு
எய்திடு உயிர் சுத்தத்து இடுநெறி என்னவே
எய்தும் உயிர் இறை-பால் அறிவு ஆமே

மேல்

#2257
ஐம்மலத்தாரும் மதித்த சகலத்தர்
ஐம்மலத்தாரும் அருவினை பாசத்தார்
ஐம்மலத்தார் சுவர்க்க நெறி ஆள்பவர்
ஐம்மலத்தார் அரனார்க்கு அறிவோரே

மேல்

#2258
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதில் உண்ணும் ஆசையும்
உரிய சுழுமுனை முதல் எட்டும் சூக்கத்து
அரிய கனா தூலாம் அ நனவு ஆமே

மேல்

#2259
ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும்
பூணும் துரியம் சுழுத்தி பொய் காமியம்
பேணும் கனவும் மா மாயை திரோதாயி
காணும் நனவில் மல கலப்பு ஆகுமே

மேல்

#2260
அரன் முதலாக அறிவோன் அதீதத்தன்
அரன் முதலாம் மாயை தங்கி சுழுனை
கருமம் உணர்ந்து மா மாயை கைக்கொண்டோர்
அருளும் அறைவர் சகலத்து உற்றாரே

மேல்

#2261
உருவுற்று போகமே போக்கியம் துற்று
மருவுற்று பூதம் அனாதியான் மன்னி
வரும் அ செயல் பற்றி சத்தாதி வைகி
கருவுற்றிடும் சீவன் காணும் சகலத்தே

மேல்

#2262
இருவினை ஒத்திட இன்னருள் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னி
குருவினை கொண்டு அருள் சத்தி முன் கூட்டி
பெருமலம் நீங்கி பிறவாமை சுத்தமே

மேல்

#2263
ஆறாறும் ஆறதின் ஐயைந்து அவத்தையோடு
ஈறாம் அதீத துரியத்து இவன் எய்த
பேறு ஆன ஐவரும் போம் பிரகாசத்து
நீறு ஆர் பரஞ்சிவம் ஆதேயம் ஆகுமே

மேல்

#2264
தன்னை அறியாது உடலை முன் தான் என்றான்
தன்னை முன் கண்டான் துரியம்-தனை கண்டான்
உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே

மேல்

#2265
சாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய அந்த வயிந்தவ மால் நந்த
நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம்
வாக்கும் மனமும் மருவல் செய்யாவே

மேல்

#2266
அப்பும் அனலும் அகலத்துளே வரும்
அப்பும் அனலும் அகலத்துளே வாரா
அப்பும் அனலும் அகலத்துளே ஏது எனில்
அப்பும் அனலும் கலந்தது அவ்வாறே

மேல்

#2267
அறுநான்கு அசுத்தம் அதி சுத்தா சுத்தம்
உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம்
பெறுமாறு இவை மூன்றும் கண்டத்தால் பேதித்து
உறும் மாயை மா மாயை ஆன்மாவினோடே

மேல்

#2268
மாயை கைத்தாயாக மா மாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏயும் உயிர் கேவல சகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே

மேல்

#2269
அஞ்சும் கடந்த அனாதி பரம் தெய்வ
நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி
விஞ்சும் உடல் உயிர் வேறுபடுத்திட
வஞ்சத்து இருந்த வகை அறிந்தேனே

மேல்

#2270
சத்தி பராபரம் சாந்தி-தனில் ஆன
சத்தி பரானந்தம் தன்னில் சுடர் விந்து
சத்திய மாயை தனு சத்தி ஐந்துடன்
சத்தி பெறும் உயிர் தான் அங்கத்து ஆறுமே

மேல்

#2271
ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே

மேல்

#2272
அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்கு
பஞ்சணி காலத்து பள்ளி துயில் நின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு
நஞ்சுற நாதி நயம் செய்யுமாறே

மேல்

#2273
உரிய நனா துரியத்தில் இவன் ஆம்
அரிய துரிய நனா ஆதி மூன்றில்
பரிய பர துரியத்தில் பரனாம்
திரிய வரும் துரியத்தில் சிவமே

மேல்

#2274
பரமாம் அதீதமே பற்று அற பற்ற
பரமாம் அதீதம் பயிலப்பயில
பரமாம் அதீதம் பயிலா தபோதனர்
பரம் ஆகார் பாசமும் பற்று ஒன்று அறாதே

மேல்

#2275
ஆயும் பொய் மாயை அகம்புறமாய் நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கு அறின்
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே

மேல்

#2276
துரிய பரியில் இருந்த அ சீவனை
பெரிய வியாக்கிரத்து உள்ளே புகவிட்டு
நரிகளை ஓட துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்று ஓலமிட்டு அன்றே

மேல்

#2277
நின்ற இ சாக்கிர நீள் துரியத்தினின்
மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன் வடிவு ஆமே

மேல்

#2278
விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை ஈடான மாயை
பொருந்தும் துரியம் புரியில் தான் ஆகும்
தெரிந்த துரியத்தே தீது அகலாதே

மேல்

#2279
உன்னை அறியாது உடலை முன் நான் என்றாய்
உன்னை அறிந்து துரியத்து உற நின்றாய்
தன்னை அறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே

மேல்

#2280
கரு வரம்பு ஆகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பு இறப்பு உற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே

மேல்

#2281
அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணு அசைவின்-கண் ஆன கனவும்
அணு அசைவில் பராதீதம் சுழுத்தி
பணியில் பரதுரியம் பரம் ஆமே

மேல்

#2282
பர துரியத்து நனவும் பரந்து
விரி சகம் உண்ட கனவு மெய் சாந்தி
உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவ
தெரியும் சிவ துரியத்தனும் ஆமே

மேல்

#2283
பரமாம் நனவின் பின் பாற்சகம் உண்ட
திரமார் கனவும் சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே
தரனாம் சிவ துரியத்தனும் ஆமே

மேல்

#2284
சீவன் துரியம் முதலாக சீரான
ஆவ சிவன் துரியாந்தம் அவத்தை பத்து
ஓவும் பரா நந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுத்து நின்றானே

மேல்

#2285
பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்
பரம்பரன் மேலாம் பர நனவு ஆக
விரிந்த கனா இடர் வீட்டும் சுழுனை
உரம்தகு மா நந்தியாம் உண்மை தானே

மேல்

#2286
சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கு ஓங்கி
பாலாய் பிரமன் அரி அமராபதி
தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே

மேல்

#2287
கலப்பு அறியார் கடல் சூழ் உலகு ஏழும்
உலப்பு அறியார் உடலோடு உயிர்-தன்னை
அலப்பு அறிந்து இங்கு அரசாளகிலாதார்
குறிப்பது கோலம் அடலது ஆமே

மேல்

#2288
பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
தன்னை அறியில் தயாபரன் எம் இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியலுற்று இன்புற்றவாறே

மேல்

#2289
பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன் அணி பூடணம்
தன்னை மறைத்தது தன் கரணங்களாம்
தன்னின் மறைந்தது தன் கரணங்களே

மேல்

#2290
மரத்தை மறைத்தது மா மத யானை
மரத்தில் மறைந்தது மா மத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே

மேல்

#2291
ஆறாறு அகன்று நம விட்டு அறிவாகி
வேறான தானே அகரமாய் மிக்கு ஓங்கி
ஈறார் பரையின் இருள் அற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே

மேல்

#2292
துரியத்தில் ஓர் ஐந்தும் சொல் அகராதி
விரிய பரையின் மிகுநாதம் அந்தம்
புரிய பரையின் பராவத்தா போதம்
திரிய பரமம் துரியம் தெரியவே

மேல்

#2293
ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்று
பந்திடும் சுத்த அவத்தை பதைப்பினில்
நந்தி பராவத்தை நாட சுடர் முனம்
அந்தி இருள் போலும் ஐம்மலம் ஆறுமே

மேல்

#2294
ஐயைந்தும் எட்டு பகுதியும் மாயையும்
பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்று ஆகி
உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே

மேல்

#2295
நின்றான் அருளும் பரமும் முன் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனை விடுத்து ஆங்கில் செல்லாமையும்
நன்றான ஞானத்தின் நாத பிரானே

மேல்

#2296
சாத்திகம் எய்து நனவு என சாற்றும்-கால்
வாய்த்த இராசதம் மன்னும் கனவு என்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடு நிர்க்குணம் மாசு இல் துரியமே

மேல்

#2297
பெறு பகிரண்டம் பேதித்த அண்டம்
எறி கடல் ஏழின் மணல் அளவு ஆக
பொறி ஒளி பொன் அணி என்ன விளங்கி
செறியும் அண்டாசன தேவர் பிரானே

மேல்

#2298
ஆனந்த தத்துவம் அண்டாசனத்தின் மேல்
மேனி ஐந்து ஆக வியாத்தம் முப்பத்தாறாய்
தான் அந்தம் இல்லாத தத்துவம் ஆனவை
ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே

மேல்

#2299
அஞ்சில் அமுதும் ஓர் ஏழின்-கண் ஆனந்தம்
முஞ்சில் ஓங்காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சமே நின்று வைத்திடில் காயமாம்
கிஞ்சுக செ வாய் கிளிமொழி கேளே

மேல்

#2300
புருடனுடனே பொருந்திய சித்தம்
அருவமொடு ஆறும் அதீத துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்கு உள எட்டும்
அரிய பதினொன்றுமாம் அ அவத்தையே

மேல்

#2301
காட்டும் பதினொன்றும் கைகலந்தால் உடல்
நாட்டி அழுத்திடின் நந்தி அல்லால் இல்லை
ஆட்டம் செய்யாத அது விதியே நினை
ஈட்டும் அது திடம் எண்ணலும் ஆமே

மேல்

#2302
கேவலம் தன்னின் கலவ சகலத்தின்
மேவும் செலவு விட வரு நீக்கத்து
பாவும் தனை காண்டல் மூன்றும் படர் அற்ற
தீது அறு சாக்கிராதீதத்தில் சுத்தமே

மேல்

#2303
வெல்லும் அளவில் விடு-மின் வெகுளியை
செல்லும் அளவும் செலுத்து-மின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி ஆமே

மேல்

#2304
ஊமை கிணற்றகத்து உள்ளே உறைவது ஓர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே

மேல்

#2305
கால் அங்கி நீர் பூ கலந்த ஆகாயம்
மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேல் அஞ்சும் ஓடி விரவ வல்லார்கட்கு
காலனும் இல்லை கருத்து இல்லை தானே

மேல்

#2306
ஆன்மாவே மைந்தன் ஆயினான் என்பது
தான் மா மறை அறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன் என்றல்
ஆன்மாவும் இல்லையா ஐயைந்தும் இல்லையே

மேல்

#2307
உதயம் அழுங்கல் ஒடுங்கல் இ மூன்றின்
கதி சாக்கிரம் கனவு ஆதி சுழுத்தி
பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து
அதிசுபன் ஆவன் நந்தான் நந்தியாமே

மேல்

#2308
எல்லாம் தன்னுள் புக யாவுளும் தான் ஆகி
நல்லாம் துரியம் புரிந்த-கால் நல் உயிர்
பொல்லாத ஆறா உள் போகாது போதமாய்
செல்லா சிவகதி சென்று எய்தும் அன்றே

மேல்

#2309
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனல் என வாதனை நின்றால் போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்து
தோய்ந்த கரும துரிசு அகலாதே

மேல்

#2310
ஆன மறையாதியாம் உரு நந்தி வந்து
ஏனை அருள்செய் தெரி நனாவத்தையில்
ஆன வகையை விடும் அடைத்தாய் விட
ஆன மலாதீதம் அ பரம் தானே

மேல்

#2311
சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள் நீங்கா ஆங்கணில் தானாக
சித்த சுகத்தை தீண்டா சமாதி செய்
அத்தனோடு ஒன்றற்கு அருள் முதல் ஆமே

மேல்

#2312
வேறு செய்தான் இருபாதியின் மெய்த்தொகை
வேறு செய்தான் என்னை எங்கணும் விட்டு உய்த்தான்
வேறு செய்யா அருள் கேவலத்தே விட்டு
வேறு செய்யா அத்தன் மேவி நின்றானே

மேல்

#2313
கறங்கு ஓலை கொள்ளிவட்டம் கடலில் திரை
நிறம் சேர் ததிமத்தின் மலத்தே நின்று அங்கு
அறம் காண் சுவர்க்க நரகம் புவி சேர்ந்து
இறங்கா உயிர் அருளால் இவை நீங்குமே

மேல்

#2314
தானே சிவம் ஆன தன்மை தலைப்பட
ஆன மலமும் அ பாச பேதமும்
மான குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன் மதி போல் படராவே

மேல்

#2315
நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திரு தக்க மாலும் திசைமுகன்-தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து உளாரே

மேல்

#2316
ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவு என்னும்
ஞான திரியை கொளுவி அதன் உள்புக்கு
கூனை இருள் அற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழி எளிது ஆமே

மேல்

#2317
ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித்து எழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதாகமங்களும்
நாடியின் உள் ஆக நான் கண்டவாறே

மேல்

#2318
முன்னை அறிவினில் செய்த முது தவம்
பின்னை அறிவினை பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம் அஃது அன்றி
பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே

மேல்

#2319
செயலற்று இருக்க சிவானந்தம் ஆகும்
செயலற்று இருப்பார் சிவயோகம் தேடார்
செயலற்று இருப்பார் செகத்தொடும் கூடார்
செயலற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே

மேல்

#2320
தான் அவன் ஆகும் சமாதி கைகூடினால்
ஆன மலம் அறும் அ பசு தன்மை போம்
ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டு ஒழித்து ஒன்றுவோர்கட்கே

மேல்

#2321
தொலையா அரன் அடி தோன்றும் அம் சத்தி
தொலையா இருள் ஒளி தோற்ற அணுவும்
தொலையா தொழில் ஞானம் தொன்மையில் நண்ணி
தொலையாத பெத்த முத்திக்கு இடை தோயுமே

மேல்

#2322
தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ் சத்தி
மான்றும் தெருண்டு உயிர் பெறும் மற்று அவை
தான் தரு ஞானம் தன் சத்திக்கு சாதனாம்
ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே

மேல்

#2323
அறிகின்று இலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீ என்று அருள்செய்தான் நந்தி
அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே

மேல்

#2324
தான் அவன் ஆகிய ஞான தலைவனை
வானவர் ஆதியை மா மணி சோதியை
ஈனம் இல் ஞானத்தின் அருள் சத்தியை
ஊனமிலாள்-தன்னை ஊனிடை கண்டதே

மேல்

#2325
ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளியது எனல் ஆகும் ஆன்மாவை அன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிய அருளே சிவானந்தம் ஆமே

மேல்

#2326
ஆனந்தம் ஆகும் அரன் அருள் சத்தியில்
தான் அந்தமாம் உயிர் தானே சமாதி செய்
ஊன் அந்தமாய் உணர்வாய் உள் உணர்வுறில்
கோன் அந்தம் வாய்க்கும் மகாவாக்கியம் ஆமே

மேல்

#2327
அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவில் செறிவோர்க்கும்
அறிவு உற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே
அறிவிக்க தம் அறிவார் அறிவோரே

மேல்

#2328
சத்தும் அசத்தும் சதசத்தும் தான் கூடி
சித்தும் அசித்தும் சிவசித்தாய் நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்கா துரியத்து
சுத்தராம் மூன்றுடன் சொல்லற்றவர்களே

மேல்

#2329
தானே அறியான் அறிவிலோன் தான் அல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்து என்று
ஆனால் இரண்டும் அரன் அருளாய் நிற்க
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே

மேல்

#2330
தத்துவ ஞானம் தலைப்பட்டவர்கட்கே
தத்துவ ஞானம் தலைப்படலாய் நிற்கும்
தத்துவ ஞானத்து தான் அவன் ஆகவே
தத்துவ ஞானம் தந்தான் தொடங்குமே

மேல்

#2331
தன்னை அறிந்து சிவனுடன் தான் ஆக
மன்னும் மலம் குணம் மாளும் பிறப்பு அறும்
பின்னது சன்முத்தி சன்மார்க்க பேரொளி
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே

மேல்

#2332
ஞானம்-தன் மேனி கிரியை நடு அங்கம்
தானுறும் இச்சை உயிர் ஆக தற்பரன்
மேனி கொண்டு ஐங்கருமத்து வித்து ஆதலான்
மோனிகள் ஞானத்து முத்திரை பெற்றார்களே

மேல்

#2333
உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை மானம்
உயிர்க்கு கிரியை உயிர் மாயை சூக்கம்
உயிர்க்கு இவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
உயிர் செயல் அன்றி அ உள்ளத்து உளானே

மேல்

#2334
தொழில் இச்சை ஞானங்கள் தொல் சிவ சீவர்
கழிவு அற்ற மா மாயை மாயையின் ஆகும்
பழி அற்ற காரண காரியம் பாழ்விட்டு
அழிவு அற்ற சாந்தாதீதன் சிவன் ஆமே

மேல்

#2335
இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி
இல்லதும் உள்ளதுமாய் அன்றாம் அண்ணலை
சொல்லது சொல்லிடில் தூராதிதூரம் என்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே

மேல்

#2336
உயிரிச்சை ஊட்டி உழி தரும் சத்தி
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிரிச்சை ஊட்டி உடன் உறலாலே
உயிரிச்சை வாட்டி உயர் பதம் சேருமே

மேல்

#2337
சேரும் சிவம் ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர் ஒன்று இலார் ஐம்மல இருள் உற்றவர்
பாரின் கண் விண்ணர் அகம்புகும் பான்மையர்
ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே

மேல்

#2338
எய்தினர் செய்யும் இரு மாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இரு ஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இரு ஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறை அருள் தானே

மேல்

#2339
திருந்தனர் விட்டார் திருவில் நரகம்
திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தனர் விட்டார் செறி மல கூட்டம்
திருந்தனர் விட்டார் சிவமாய் அவமே

மேல்

#2340
அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன் அருள் ஆமே

மேல்

#2341
அருளான சத்தி அனல் வெம்மை போல
பொருள் அவனாகத்தான் போதம் புணரும்
இருள் ஒளியாய் மீண்டும் மும்மலம் ஆகும்
திருவருளால் நந்தி செம்பொருள் ஆமே

மேல்

#2342
ஆதித்தன் தோன்ற வரும் பதுமாதிகள்
பேதித்த அ வினையால் செயல் சேதிப்ப
ஆதித்தன்-தன் கதிரால் அவை சேட்டிப்ப
பேதித்து பேதியாவாறு அருட்பேதமே

மேல்

#2343
பேதம் அபேதம் பிறழ் பேதா பேதமும்
போதம் புணர் போதம் போதமும் நாதமும்
நாதமுடன் நாத நாதாதி நாதமும்
ஆதன் அருளின் அருள் இச்சை ஆமே

மேல்

#2344
மேவிய பொய்க்கரி ஆட்டும் வினை என
பாவிய பூதம் கொண்டாட்டி படைப்பாதி
பூ இயல் கூட்டத்தால் போதம் புரிந்து அருள்
ஆவியை நாட்டும் அரன் அருள் ஆமே

மேல்

#2345
ஆறாது அகன்று தனையறிந்தான் அவன்
ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அருள்
தேறா தெளிவுற்று தீண்ட சிவம் ஆமே

மேல்

#2346
தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை
மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று
தூண்டி சிவஞான மா வினை தான் ஏறி
தாண்டி சிவனுடன் சாரலும் ஆமே

மேல்

#2347
சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்தி அருள் தன்மையாரே

மேல்

#2348
தான் என்று அவன் என்று இரண்டு என்பர் தத்துவம்
தான் என்று அவன் என்று இரண்டு அற்ற தன்மையை
தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர்
தான் இன்றி தான் ஆக தத்துவ சுத்தமே

மேல்

#2349
தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறிய தலைப்படும்
தன்னினில் தன்னை சார்கிலனாகில்
தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே

மேல்

#2350
அறியகிலேன் என்று அரற்றாதே நீயும்
நெறிவழியே சென்று நேர்பட்ட பின்னை
இரு சுடர் ஆகி இயற்ற வல்லானும்
ஒரு சுடரா வந்து என் உள்ளத்துள் ஆமே

மேல்

#2351
மண் ஒன்றுதான் பல நல் கலம் ஆயிடும்
உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே
கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா
அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே

மேல்

#2352
ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று
கூம்புகின்றார் குணத்தினொடும் கூறுவர்
தேம்புகின்றார் சிவம் சிந்தை செய்யாதவர்
கூம்பகில்லார் வந்து கொள்ளலும் ஆமே

மேல்

#2353
குறி அறியார்கள் குறிகாணமாட்டார்
குறி அறியார்கள் தம் கூடல் பெரிது
குறி அறியா வகை கூடு-மின் கூடி
அறிவு அறியா இருந்து அன்னமும் ஆமே

மேல்

#2354
ஊனோ உயிரோ உறுகின்றது ஏது இன்பம்
வானோர் தலைவி மயக்கத்துற நிற்க
தானோ பெரிது அறிவோம் என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பு அறியாரே

மேல்

#2355
தன்னை அறிய தனக்கு ஒரு கேடு இல்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னையே அர்ச்சிக்க தான் இருந்தானே

மேல்

#2356
அங்கே அடல் பெரும் தேவர் எல்லாம் தொழ
சிங்காசனத்தே சிவன் இருந்தான் என்று
சங்கு ஆர் வளையும் சிலம்பும் சரேலென
பொங்கார் குழலியும் போற்றி என்றாளே

மேல்

#2357
அறிவு வடிவு என்று அறியாத என்னை
அறிவு வடிவு என்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே
அறிவு வடிவு என்று அறிந்திருந்தேனே

மேல்

#2358
அறிவுக்கு அழிவு இல்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
அறைகின்றன மறையீறுகள் தாமே

மேல்

#2359
ஆயும் மலரின் அணி மலர் மேல் அது
ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய்
மேய அறிவாய் விளைந்தது தானே

மேல்

#2360
மன்னி நின்றாரிடை வந்த அருள் மாயத்து
முன்னி நின்றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின் வந்தான் ஓர் புகழ் திருமேனியை
பின்னி நின்றேன் நீ பெரியை என்றானே

மேல்

#2361
அறிவு அறிவு ஆக அறிந்து அன்பு செய்-மின்
அறிவு அறிவு ஆக அறியும் இ வண்ணம்
அறிவு அறிவு ஆக அணிமாதி சித்தி
அறிவு அறிவு ஆக அறிந்தனன் நந்தியே

மேல்

#2362
அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்
அறிவு அறியாமை யாரும் அறியார்
அறிவு அறியாமை கடந்து அறிவானால்
அறிவு அறியாமை அழகியவாறே

மேல்

#2363
அறிவு அறியாமையை நீவி அவனே
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன-போது
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்
செறிவு ஆகி நின்றவன் சீவனும் ஆமே

மேல்

#2364
அறிவுடையார் நெஞ்சு அகல் இடம் ஆவது
அறிவுடையார் நெஞ்சு அருந்தவம் ஆவது
அறிவுடையார் நெஞ்சொடு ஆதி பிரானும்
அறிவுடையார் நெஞ்சத்து அங்கு நின்றானே

மேல்

#2365
மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்
காய நல் நாட்டு கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீம் கரும்பு
ஆய அமுதாகி நின்று அண்ணிக்கின்றானே

மேல்

#2366
என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்த பின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது
என்னையிட்டு என்னை உசாவுகின்றானே

மேல்

#2367
மாய விளக்கு அது நின்று மறைந்திடும்
தூய விளக்கு அது நின்று சுடர் விடும்
காய விளக்கு அது நின்று கனன்றிடும்
சேய விளக்கினை தேடுகின்றேனே

மேல்

#2368
தேடுகின்றேன் திசை எட்டோடு இரண்டையும்
நாடுகின்றேன் நலமே உடையான் அடி
பாடுகின்றேன் பரமே துணையாம் என
கூடுகின்றேன் குறையா மனத்தாலே

மேல்

#2369
முன்னை முதல் விளையாட்டத்து முன்வந்து ஓர்
பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டு
தன்னை தெரிந்து தன் பண்டை தலைவன் தாள்
மன்னி சிவமாக வாரா பிறப்பே

மேல்

#2370
வேதத்தின் அந்தமும் மிக்க சித்தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நல் போத அந்தமும்
ஓத தகும் எட்டு யோகாந்த அந்தமும்
ஆதி கலாந்தமும் ஆறு அந்தம் ஆமே

மேல்

#2371
அந்தம் ஓர் ஆறும் அறிவார் அதி சுத்தர்
அந்தம் ஓர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம் ஓர் ஆறும் அறியார் அவர்-தமக்கு
அந்தமோடு ஆதி அறிய ஒண்ணாதே

மேல்

#2372
தான் ஆன வேதாந்தம் தான் என்னும் சித்தாந்தம்
ஆனா துரியத்து அணுவன்-தனை கண்டு
தேனார் பராபரம் சேர் சிவயோகமாய்
ஆனா மலம் அற்று அரும் சித்தியாலே

மேல்

#2373
நித்தம் பரனோடு உயிருற்று நீள் மனம்
சத்தம் முதல் ஐந்தும் தத்துவத்தால் நீங்கி
சுத்தம் அசுத்தம் தொடரா வகை நினைந்து
அத்தன் பரன்-பால் அடைதல் சித்தாந்தமே

மேல்

#2374
மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவும் செய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடா ஆறாறு
ஓவும் பொழுது அணு ஒன்று உளதாமே

மேல்

#2375
உள்ள உயிர் ஆறாறு அது ஆகும் உபாதியை
தெள்ளி அகன்று நாதாந்தத்தை செற்றுமேல்
உள்ள இருள் நீங்க ஓர் உணர்வு ஆகுமேல்
எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே

மேல்

#2376
தேடும் இயம நியமாதி சென்று அகன்று
ஊடும் சமாதியில் உற்று படர் சிவன்
பாடுற சீவன் பரமாக பற்று அற
கூடும் உபசாந்தம் யோகாந்த கொள்கையே

மேல்

#2377
கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு
உள்ளனவாம் விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனை தெளிதலும் ஆமே

மேல்

#2378
தெளியும் இவை அன்றி தேர் ஐங்கலை வேறு
ஒளியுள் அமைத்து உள்ளது ஓர வல்லார்கட்கு
அளியவன் ஆகிய மந்திரம் தந்திரம்
தெளிவு உபதேச ஞானத்தொடு ஐந்தாமே

மேல்

#2379
ஆகும் அனாதி கலை ஆகம வேதம்
ஆகும் அ தந்திரம் அ நூல் வழிநிற்றல்
ஆகும் அனாதி உடல் அல்லா மந்திரம்
ஆகும் சிவபோதகம் உபதேசமே

மேல்

#2380
தேசார் சிவம் ஆகும் தன் ஞானத்தின் கலை
ஆசார நேயம் அறையும் கலாந்தத்து
பேசா உரை உணர்வு அற்ற பெருந்தகை
வாசா மகோசர மா நந்தி தானே

மேல்

#2381
தான் அவன் ஆகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்த நாதாந்த யோகாந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்தம் ஆனது
ஞானம் என ஞேய ஞாதுரு ஆகுமே

மேல்

#2382
ஆறு அந்தமும் சென்று அடங்கும் அ நேயத்தே
ஆறு அந்த ஞேயம் அடங்கிடு ஞாதுரு
கூறிய ஞான குறியுடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த உண்மையே

மேல்

#2383
உண்மை கலை ஆறு ஓர் ஐந்தான் அடங்கிடும்
உண்மை கலாந்தம் இரண்டு ஐந்தோடு ஏழ் அந்தம்
உண்மை கலை ஒன்றில் ஈறு ஆய நாதாந்தத்து
உண்மை கலை சொல்ல ஓர் அந்தம் ஆமே

மேல்

#2384
ஆவுடையாளை அரன் வந்து கொண்ட பின்
தேவுடையான் எங்கள் சீர் நந்தி தாள் தந்து
வீவு அற வேதாந்த சித்தாந்த மேன்மையை
கூவி அருளிய கோனை கருதுமே

மேல்

#2385
கருதும் அவர்-தம் கருத்தினுக்கு ஒப்ப
அரன் உரைசெய்து அருள் ஆகமம்-தன்னில்
வரு சமய புற மாயை மா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே

மேல்

#2386
வேதாந்தம் சித்தாந்தம் வேறு இலா முத்திரை
போதாந்தம் ஞானம் யோகாந்தம் பொது ஞேய
நாதாந்தம் ஆனந்தம் சீரோதயம் ஆகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே

மேல்

#2387
வேதாந்தம் தன்னில் உபாதி மேல் ஏழ் விட
நாதாந்த பாசம் விடு நல்ல தொம்பதம்
மீதாந்த காரணோபாதி ஏழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே

மேல்

#2388
அண்டங்கள் ஏழும் கடந்து அகன்று அப்பாலும்
உண்டு என்ற பேரொளிக்கு உள்ளாம் உள ஒளி
பண்டுறு நின்ற பராசத்தி என்னவே
கொண்டவன் அன்றி நின்றான் தங்கள் கோவே

மேல்

#2389
கோ உணர்த்தும் சத்தியாலே குறிவைத்து
தே உணர்த்தும் கருமம் செய்தி செய்யவே
பா அனைத்தும் படைத்து அர்ச்சனை பாரிப்ப
ஓ அனைத்து உண்டு ஒழியாத ஒருவனே

மேல்

#2390
ஒருவனை உன்னார் உயிர்-தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனுமே உள் உணர்த்தி நின்று ஊட்டி
அருவனும் ஆகிய ஆதரத்தானே

மேல்

#2391
அரன் அன்பர் தானம் அது ஆகி சிவத்து
வரும் அவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரனுறு தோயா சிவாநந்தி ஆமே

மேல்

#2392
வேதாந்த தொம்பதம் மேவும் பசு என்ப
நாதாந்த பாசம் விட நின்ற நன் பதி
போதாந்த தற்பதம் போய் இரண்டு ஐக்கியம்
சாதாரணம் சிவசாயுச்சியம் ஆமே

மேல்

#2393
சிவம் ஆதல் வேதாந்த சித்தாந்தம் ஆகும்
அவம் அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்
சிவம் ஆம் சதாசிவன் செய்து ஒன்றான் ஆனால்
நவம் ஆன வேதாந்த ஞான சித்தாந்தமே

மேல்

#2394
சித்தாந்த தேசீவன் முத்தி சித்தித்தலால்
சித்தாந்தத்தே நிற்போர் முத்தி சித்தித்தவர்
சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே

மேல்

#2395
சிவனை பரமனுள் சீவனுள் காட்டும்
அவம் அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனான்
நவம் உற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
தவம் மிக்கு உணர்ந்தவர் தத்துவத்தாரே

மேல்

#2396
தத்துவம் ஆகும் சகள அகளங்கள்
தத்துவம் ஆம் விந்து நாதம் சதாசிவம்
தத்துவம் ஆகும் சீவன்-தன் தற்பரம்
தத்துவம் ஆம் சிவசாயுச்சியமே

மேல்

#2397
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன
நாதன் உரை அவை நாடில் இரண்டு அந்தம்
பேதம் அது என்பர் பெரியோர்க்கு அபேதமே

மேல்

#2398
பரானந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரானந்தம் மேல் மூன்றும் பாழுறு ஆனந்தம்
விரா முத்திரானந்தம் மெய் நடன ஆனந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி ஆமே

மேல்

#2399
ஆகும் கலாந்தம் இரண்டு அந்த நாதாந்தம்
ஆகும் பொழுதில் கலை ஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனே பஞ்சாந்தகன் ஆம் என்ன
ஆகும் மறை ஆகமம் மொழிந்தான் அன்றே

மேல்

#2400
அன்று ஆகும் என்னாது ஐவகை அந்தம்-தன்னை
ஒன்று ஆன வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்று ஆடி பாதம் மருவலும் ஆமே

மேல்

#2401
அனாதி சீவன் ஐம்மலம் அற்ற பாலாய்
அனாதி அடக்கி தனை கண்டு அரனாய்
தனாதி மலம் கெட தத்துவாதீதம்
வினாவு நீர் பால் ஆதல் வேதாந்த உண்மையே

மேல்

#2402
உயிரை பரனை உயர் சிவன்-தன்னை
அயர்வு அற்று அறி தொந்த தசி அதனால்
செயலற்று அறிவாகியும் சென்று அடங்கி
அயர்வு அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே

மேல்

#2403
மன்னிய சோகமாம் மாமறையாளர்-தம்
சென்னியது ஆன சிவயோகமாம் ஈது என்ன
அன்னது சித்தாந்த மா மறையாய் பொருள்
துன்னிய ஆகம நூல் என தோன்றுமே

மேல்

#2404
முதல் ஆகும் வேத முழுது ஆகமம் அ
பதியான ஈசன் பகர்ந்த இரண்டு
முதிது ஆன வேத முறை முறையால் அலமந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே

மேல்

#2405
அறிவு அறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினை கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பு அறும் தானே

மேல்

#2406
பசு பல கோடி பிரமன் முதலாய்
பசுக்களை கட்டிய பாசம் மூன்று உண்டு
பசு தன்மை நீக்கி அ பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனை பற்றி விடாவே

மேல்

#2407
கிடக்கின்றவாறே கிளர் பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாள்-தோறும் நோக்கி
தொடக்கு ஒன்றும் இன்றி தொழு-மின் தொழுதால்
குட குன்றில் இட்ட விளக்கு அதுவாமே

மேல்

#2408
பாசம் செய்தானை படர் சடை நந்தியை
நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தலும்
கூசம் செய்து உன்னி குறிக்கொள்வது எ வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்றவாறே

மேல்

#2409
விட்ட விடம் ஏறாவாறு போல் வேறாகி
விட்ட பசு பாச மெய் கண்டோன் மேவுறான்
கட்டிய கேவலம் காணும் சகலத்தை
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே

மேல்

#2410
நாடும் பதியுடன் நல் பசு பாசமும்
நீடுமா நித்தன் நிலை அறிவார் இல்லை
நீடிய நித்தம் பசு பாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே

மேல்

#2411
ஆய பதிதான் அருள் சிவலிங்கமாம்
ஆய பசுவும் அடலேறு என நிற்கும்
ஆய பலிபீடம் ஆகும் நல் பாசம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே

மேல்

#2412
பதி பசு பாசம் பயில்வியா நித்தம்
பதி பசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கி
பதி பசு பாசத்தை பற்று அற நீக்கும்
பதி பசு பாசம் பயில நிலாவே

மேல்

#2413
பதியும் பசுவொடு பாசமும் மேலை
கதியும் பசு பாச நீக்கமும் காட்டி
மதி தந்த ஆனந்த மா நந்தி காணும்
துதி தந்து வைத்தனன் சுத்த சைவத்திலே

மேல்

#2414
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதி படைப்பான் அங்கு அவற்றையே

மேல்

#2415
படைப்பு ஆதி ஆவது பரம்சிவம் சத்தி
இடைப்பால் உயிர்கட்கு அடைத்து இவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தை தற்பரம் செய்ய
படைப்பாதி தூய மலம் அ பரத்திலே

மேல்

#2416
ஆகிய சூக்கத்தை அ விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேல் ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன்
ஆகிய தூய ஈசானனும் ஆமே

மேல்

#2417
மேவும் பரசிவம் மேல் சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறு ஈசன்
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி
ஆகும்படி படைப்போன் அரன் ஆமே

மேல்

#2418
படைப்பும் அளிப்பும் பயில் இளைப்பாற்றும்
துடைப்பு மறைப்பு முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்து எனல் ஆமே

மேல்

#2419
ஆறாறு குண்டலி-தன்னின் அகத்து இட்டு
வேறு ஆகும் மாயையின் முப்பான் மிகுத்திட்டு அங்கு
ஈறு ஆம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறு ஆம் பதி பசு பாசம் வீடு ஆகுமே

மேல்

#2420
வீட்கும் பதி பசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்கு அவற்றால் உணர்ந்து
ஆட்கும் நரக சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான் தங்கு நல் பாசம் நண்ணுமே

மேல்

#2421
நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடி சேர் உபாயம் அது ஆகுமே

மேல்

#2422
ஆகும் உபாயமே அன்றி அழுக்கு அற்று
மோகம் அற சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கு ஏற்றி ஏற்றல் போல்
ஆகுவது எல்லாம் அருள் பாசம் ஆகுமே

மேல்

#2423
பாசம் பயில் உயிர் தானே பர முதல்
பாசம் பயில் உயிர் தானே பசு என்ப
பாசம் பயில பதி பரம் ஆதலால்
பாசம் பயில பதி பசு ஆகுமே

மேல்

#2424
அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தரம் ஆகும் அருள் மேனி
அத்தத்தினாலே அணைய பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே

மேல்

#2425
காலும் தலையும் அறியார் கலதிகள்
கால் அந்த சத்தி அருள் என்பர் காரணம்
பால் ஒன்று ஞானமே பண்பார் தலை உயிர்
கால் அந்த ஞானத்தை காட்ட வீடு ஆகுமே

மேல்

#2426
தலை அடி ஆவது அறியார் காயத்தில்
தலை அடி உச்சியில் உள்ளது மூலம்
தலை அடி ஆன அறிவை அறிந்தோர்
தலை அடி ஆகவே தான் இருந்தாரே

மேல்

#2427
நின்றான் நிலம் முழுது அண்டமும் மேலுற
வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திட
பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி
தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே

மேல்

#2428
சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடி கீழ் அது
எந்தையும் என்னை அறியகிலான் ஆகில்
எந்தையை யானும் அறியகிலேனே

மேல்

#2429
பன்னாத பார் ஒளிக்கு அப்புறத்து அப்பால்
என் நாயகனார் இசைந்து அங்கு இருந்திடு இடம்
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்
சொன்னான் கழலிணை சூடி நின்றேனே

மேல்

#2430
பதியது தோற்றும் பதமது வைம்-மின்
மதியது செய்து மலர் பதம் ஓதும்
நதி பொதியும் சடை நாரி ஓர் பாகன்
கதி செயும் காலங்கள் கண்டு கொளீரே

மேல்

#2431
தரித்து நின்றான் அடி தன்னிட நெஞ்சில்
தரித்து நின்றான் அமராபதி நாதன்
கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை
பரித்து நின்றான் அ பரிபாகத்தானே

மேல்

#2432
ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள
தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள்
நன்றாக காய்ச்சி பதம் செய வல்லார்கட்கு
இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆமே

மேல்

#2433
கால் கொண்டு என் சென்னியில் கட்டறக்கட்டற
மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அற
பால் கொண்ட என்னை பரன் கொள்ள நாடினான்
மேல் கொண்டு என் செம்மை விளம்ப ஒண்ணாதே

மேல்

#2434
பெற்ற புதல்வர் போல் பேணிய நாற்றமும்
குற்றமும் கண்டு குணம் குறை செய்ய ஓர்
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்கு
செற்றம் இலா செய்கைக்கு எய்தின செய்யுமே

மேல்

#2435
மூன்று உள குற்றம் முழுது நலிவன
மான்று இருள் தூங்கி மயங்கி கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுள் பட்டு முடிகின்றவாறே

மேல்

#2436
காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து
ஏமம் பிடித்து இருந்தேனுக்கு எறி மணி
ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவது ஓர்
தாமம் அதனை தலைப்பட்டவாறே

மேல்

#2437
தோன்றியது தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இ மூன்றோடு எய்தினோன்
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பு அற
ஏன்றனன் மாள சிவமாய் இருக்குமே

மேல்

#2438
போதம்-தனை உன்னி பூதாதி பேதமும்
ஓதும் கருவி தொண்ணூறு உடன் ஓர் ஆறு
பேதமும் நாதாந்த பெற்றியில் கைவிட்டு
வேதம் சொல் தொம்பதம் ஆகும் தன் மெய்ம்மையே

மேல்

#2439
தற்பதம் என்றும் தொம்பதம் தான் என்றும்
நிற்ப தசியத்துள் நேரிழையாள் பதம்
சொல் பதத்தாலும் தொடர ஒண்ணா சிவன்
கற்பனை இன்றி கலந்து நின்றானே

மேல்

#2440
அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்து
கணு ஒன்று இலாத சிவமும் கலந்தால்
இணை அறு பால் தேன் அமுது என இன்ப
துணை அதுவாய் உரை அற்றிட தோன்றுமே

மேல்

#2441
தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன் சிவனாய் நிற்கும்
அம்பத மேலை சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டு அருள் சீர் நந்தி தானே

மேல்

#2442
ஐம்பது அறியாதவரும் அவர் சிலர்
உம்பனை நாடி உரை முப்பதத்து இடை
செம்பரம் ஆகிய வாசி செலுத்திட
தம் பர யோகமாய் தானவன் ஆகுமே

மேல்

#2443
நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்
இந்தியம் சத்து ஆதி விட வியன் ஆகும்
நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும்
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே

மேல்

#2444
பர துரியத்து நனவு படி உண்ட
விரிவில் கனவும் இதன் உபசாந்தத்து
உரிய சுழுனையும் ஓவும் சிவன்-பால்
அரிய துரியம் அசி பதம் ஆமே

மேல்

#2445
தோன்றி என் உள்ளே சுழன்று எழுகின்றது ஓர்
மூன்று படி மண்டலத்து முதல்வனை
ஏன்று எய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி
நான்று நலம் செய் நலம் தருமாறே

மேல்

#2446
மன்று நிறைந்தது மா பரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்று நினைந்து எழு தாய் என வந்த பின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே

மேல்

#2447
ஆறாறு தத்துவத்து அப்புறத்து அ பரம்
கூறா உபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேத பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே

மேல்

#2448
பற்று அற பற்றில் பரம்பதி ஆவது
பற்று அற பற்றில் பரன் அறிவே பரம்
பற்று அற பற்றினில் பற்ற வல்லார்க்கே
பற்று அற பற்றில் பரம்பரம் ஆமே

மேல்

#2449
பரம்பரம் ஆன பதி பாசம் பற்றா
பரம்பரம் ஆகும் பரம்சிவம் மேவ
பரம்பரம் ஆன பரசிவானந்தம்
பரம்பரம் ஆக படைப்பது அறிவே

மேல்

#2450
நனவில் கலாதியாம் நால் ஒன்று அகன்று
தனியுற்ற கேவலம் தன்னில் தான் ஆகி
நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயம்
தனை உற்றிட தானே தற்பரம் ஆமே

மேல்

#2451
தன் கண்ட தூயமும் தன்னில் விலாசமும்
பின் காணும் தூடணம் தானும் பிறழ்வுற்று
தற்பரன் கால பரமும் கலந்து அற்ற
நற்பராதீதமும் நாடு அகராதியே

மேல்

#2452
அதீதத்துள் ஆகி அகன்றவன் நந்தி
அதீதத்துள் ஆகி அறிவிலோன் ஆன்மா
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம்
பதியில் பதியும் பரவுயிர் தானே

மேல்

#2453
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பதி
சோதி பரஞ்சுடர் தோன்ற தோன்றாமையின்
நீதி அதாய் நிற்கும் நீடிய அ பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத்தோரே

மேல்

#2454
துரியம் கடந்து துரியா தீதத்தே
அரிய வியோகம் கொண்டு அம்பலத்து ஆடும்
பெரிய பிரானை பிரணவ கூபத்தே
துரிய வல்லார்க்கு துரிசு இல்லை தானே

மேல்

#2455
செம்மை முன் நிற்ப சுவேதம் திரிவ போல்
அ மெய்ப்பரத்தோடு அணுவன் உள் ஆயிட
பொய்ம்மை சகம் உண்ட போத வெறும் பாழில்
செம்மை சிவமேரு சேர் கொடி ஆகுமே

மேல்

#2456
வைச்ச கலாதி வரு தத்துவம் கெட
வெச்ச இரு மாயை வேறாக வேர் அறுத்து
உச்ச பரசிவமாம் உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்து என்னை ஆண்டனன் நந்தியே

மேல்

#2457
என்னை அறிய இசைவித்த என் நந்தி
என்னை அறிந்து அறியாத இடத்து உய்த்து
பின்னை ஒளியில் சொரூபம் புறப்பட்டு
தன்னை அளித்தான் தற்பரம் ஆகவே

மேல்

#2458
பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு
நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள்
அரந்த அரன்நெறி ஆயது ஆகி
தரந்த விசும்பு ஒன்று தாங்கி நின்றானே

மேல்

#2459
சத்தின் நிலையினில் தான் ஆன சத்தியும்
தற்பரையாய் நிற்கும் தான் ஆம் பரற்கு உடல்
உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதமாய்
நித்த நடத்தும் நடிக்கும் மா நேயத்தே

மேல்

#2460
மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நாசிகள்
பாலிய விந்து பரையுள் பரையாக
கோலிய நான்கு அவை ஞானம் கொணர் விந்து
சீலம் இலா அணு செய்தி அது ஆமே

மேல்

#2461
வேறாம் அதன் தன்மை போலும் இ காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்து ஆகும் தத்துவம்
பேறாம் பர ஒளி தூண்டும் பிரகாசமாய்
ஊறா உயிர்த்து உண்டு உறங்கிடும் மாயையே

மேல்

#2462
தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி
சிற்பரம் தானே செகம் உண்ணும் போதமும்
தொல் பதம் தீர் பாழில் சுந்தர சோதி புக்கு
அப்புறம் அற்றது இங்கு ஒப்பு இல்லை தானே

மேல்

#2463
பண்டை மறைகள் பரவான் உடல் என்னும்
துண்ட மதியோன் துரியாதீதம் தன்னை
கண்டு பரனும் அ காரணோபாதிக்கே
மிண்டின் அவன் சுத்தன் ஆகான் வினவிலே

மேல்

#2464
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற
தளி ஆகிய தற்பரம் காண் அவன் தான்
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற
வெளி ஆய சத்தி அவன் வடிவாமே

மேல்

#2465
மேருவினோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்கு
சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும்
பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே

மேல்

#2466
நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதாதி மூன்றினில் பர துரியம் தான்
நனவாதி மூன்றினில் சிவ துரியம் ஆம்
இனதாகும் தொந்த தசி பதத்து ஈடே

மேல்

#2467
தானா நனவில் துரியம் தன் தொம்பதம்
தான் ஆம் துரிய நனவாதி தான் மூன்றில்
ஆனா பரபதம் மற்றது அருநனா
வானான மேல் மூன்றும் துரியம் அணுகுமே

மேல்

#2468
அணுவின் துரியத்து நான்கும் அது ஆகி
பணியும் பரதுரியம் பயில் நான்கும்
தணிவில் பரம் ஆகி சார் மு துரிய
கணுவில் இ நான்கும் கலந்த ஈரைந்தே

மேல்

#2469
ஈரைந்து அவத்தை இசை மு துரியத்துள்
நேர் அந்தம் ஆக நெறிவழியே சென்று
பார் அந்தமான பராபரத்து அயிக்கியத்து
ஓர் அந்தமாம் இரு பாதியை சேர்த்திடே

மேல்

#2470
தொட்டே இரு-மின் துரிய நிலத்தினை
எட்டாது எனின் நின்று எட்டும் இறைவனை
பட்டாங்கு அறிந்திடில் பல் நா உதடுகள்
தட்டாது ஒழிவது ஓர் தத்துவம் தானே

மேல்

#2471
அறிவாய் அசத்து என்னும் ஆறாறு அகன்று
செறிவான மாயை சிதைத்து அருளாலே
பிரியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலை அறிந்தாரே

மேல்

#2472
நனவின் நனவாதி நாலாம் துரியம்
தனது உயிர் தொம்பதம் ஆமாறு போல
வினை அறு சீவன் நனவாதி ஆகத்து
அனைய பர துரியம் தற்பதமே

மேல்

#2473
தொம்பதம் தற்பதம் சொல் மு துரியம் போல்
நம்பிய மூன்று ஆம் துரியத்து நல் தாமம்
அம்புவி உன்னா அதி சூக்கம் அப்பாலை
செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே

மேல்

#2474
சீவன் தன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓ உபசாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்தி முப்பாலதாய்
ஓவுறு தாரத்தில் உள்ளும் நாதாந்தமே

மேல்

#2475
ஆவது அறியார் உயிர் பிறப்பால் உறும்
ஆவது அறியும் உயிர் அருள் பால் உறும்
ஆவது ஒன்று இல்லை அகம் புறத்து என்று அகன்று
ஓவு சிவனுடன் ஒன்று தன் முத்தியே

மேல்

#2476
சிவம் ஆகி மும்மல முக்குணம் செற்று
தவம் ஆன மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்
துவமாகிய நெறி சோகம் என்போர்க்கு
சிவம் ஆம் அமலன் சிறந்தனன் தானே

மேல்

#2477
சித்தியும் முத்தியும் திண் சிவம் ஆகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலை சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும் பெருமானே

மேல்

#2478
ஏறியவாறே மலம் ஐந்து இடை அடைத்து
ஆறிய ஞான சிவோகம் அடைந்திட்டு
வேறும் என முச்சொரூபத்து வீடுற்று அங்கு
ஈறு அதில் பண்டை பரன் உண்மை செய்யுமே

மேல்

#2479
மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பத்தாறும் உதிப்பு உள
மூன்றினின் உள்ளே முளைத்து எழும் சோதியை
காண்டலும் காய கணக்கு அற்றவாறே

மேல்

#2480
உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன
நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆர் அறிவாரே

மேல்

#2481
பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருவுரு ஆகி
குருவாய் வரும் சத்தி கோன் உயிர் பன்மை
உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே

மேல்

#2482
மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து
மணி எனலாய் நின்றவாறு அது போல
தணி முச்சொருபாதி சத்தியாதி சார
பணிவித்த பேர் நந்தி பாதம் பற்றாயே

மேல்

#2483
கல் ஒளி மா நிறம் சோபை கதிர் தட்ட
நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம்
சொல் அறு முப்பாழில் சொல் அறு பேருரைத்து
அல் அறு முத்திராந்தத்து அனுபூதியே

மேல்

#2484
உடந்த செந்தாமரை உள்ளுறு சோதி
நடந்த செந்தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்து அ
இடம் தரு வாசலை மேல் திறவீரே

மேல்

#2485
இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடனுறும் அ உரு வேறு என காணும்
திடம் அது போல சிவபர சீவர்
உடன் உறை பேதமும் ஒன்று எனலாமே

மேல்

#2486
ஒளியை ஒளிசெய்து ஓம் என்று எழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேல் எழவைத்து
தெளிய தெளியும் சிவபதம் தானே

மேல்

#2487
முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அ
கைக்காரணம் என்ன தந்தனன் காண் நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக
ஒக்கும் அது உன்மனி ஓது உள் சமாதியே

மேல்

#2488
தற்பதம் தொம்பதம் தான் ஆம் அசிபதம்
தொற்பதம் மூன்றும் துரியத்து தோற்றவே
நிற்பது உயிர் பரன் நிகழ் சிவமும் மூன்றின்
சொல் பதம் ஆகும் தொந்த தசியே

மேல்

#2489
தொந்த தசி மூன்றில் தொல் காமியம் ஆதி
தொந்த தசி மூன்றில் தொல் தாமதம் ஆதி
வந்த மலம் குணம் மாள சிவம் தோன்றின்
இந்துவின் முன் இருள் ஏகுதல் ஒக்குமே

மேல்

#2490
தொந்த தசியை அ வாசியில் தோற்றியே
அந்த முறை ஈரைந்தாக மதித்திட்டு
அந்தம் இலாத அவத்தை அ வாக்கியத்து
உந்து முறையில் சிவன் முன் வைத்து ஓதிடே

மேல்

#2491
வைத்து சிவத்தை மதி சொருபானந்தத்து
உய்த்து பிரணவமாம் உபதேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்து நின்றானே

மேல்

#2492
தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும் அ வாக்கியம்
உம்பர் உரை தொந்த தசிவாசி ஆமே

மேல்

#2493
ஆகிய அச்சோயம் தேவதத்தன்-இடத்து
ஆகியவை விட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொந்த தசி என்ப மெய்யறிவு
ஆகிய சீவன் பரசிவன் ஆமே

மேல்

#2494
தாமதம் காமியம் ஆகி தகுகுணம்
மா மலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆம் அறும் மவ்வும் அ வாய் உடல் மூன்றில்
தாமாம் துரியமும் தொந்த தசியதே

மேல்

#2495
காரியம் ஏழ் கண்டு அறு மாய பாழ்விட
காரணம் ஏழ் கண்டு அறும் போத பாழ்விட
காரிய காரண வாதனை கண்டு அறும்
சீரூப சாந்த முப்பாழ் விட தீருமே

மேல்

#2496
மாய பாழ் சீவன் வியோம பாழ் மன் பரன்
சேய முப்பாழ் என சிவசத்தியில் சீவன்
ஆய வியாப்தம் எனும் முப்பாழாம் அந்த
தூய சொரூபத்தில் சொல் முடிவாகுமே

மேல்

#2497
எதிர் அற நாளும் எருது வந்து ஏறும்
பதி எனும் நந்தி பதம் அது கூட
கதி என பாழை கடந்த அந்த கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே

மேல்

#2498
துரியம் அடங்கிய சொல் அறும் பாழை
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும்
அரு நிலம் என்பதை யார் அறிவாரே

மேல்

#2499
ஆறாறு நீங்க நம ஆதி அகன்றிட்டு
வேறாகிய பரை யா என்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அது அன்றோ
தேறா சிவாயநம என தேறிலே

மேல்

#2500
உள்ளம் உரு என்றும் உருவம் உளம் என்றும்
உள்ள பரிசு அறிந்து ஓரும் அவர்கட்கு
பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ் இல்லை
உள்ளமும் இல்லை உரு இல்லை தானே

மேல்

#2501
செற்றிடும் சீவ உபாதி திறன் ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகர் உரை
உற்றிடும் காரிய காரண தோடு அற
அற்றிட அ சிவம் ஆகும் அணுவனே

மேல்

#2502
ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நனவு மிகுத்த கனா நனா
ஆறாறு அகன்ற சுழுத்தி அதில் எய்தா
பேறா நிலத்து உயிர் தொம்பதம் பேசிலே

மேல்

#2503
அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் சிவமாய் வரும் முப்பதத்து
சிகாரம் சிவமே வகாரம் பரமே
யகாரம் உயிர் என்று அறையலும் ஆமே

மேல்

#2504
உயிர்க்கு உயிர் ஆகி ஒழிவு அற்று அழிவு அற்று
அயிர்ப்பு அறு காரணோபாதி விதிரேகத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமிதத்தால் அன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல் செய்யாவே

மேல்

#2505
காரியம் ஏழில் கலக்கும் கடும் பசு
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொல் பதம்
பார் அறும் பாழில் பராபரத்தானே

மேல்

#2506
முத்திக்கு வித்து முதல்வன்-தன் ஞானமே
பத்திக்கு வித்து பணிந்துற்று பற்றலே
சித்திக்கு வித்து சிவபரம் தான் ஆதல்
சத்திக்கு வித்து தனது உபசாந்தமே

மேல்

#2507
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனை பற்று அற
பாரணவும் உபசாந்த பரிசு இதே

மேல்

#2508
அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிராதீதத்து உறு புரி
மன்னு பரங்காட்சியாவது உடனுற்று
தன்னின் வியாத்தி தனின் உபசாந்தமே

மேல்

#2509
ஆறாறு அமைந்த ஆணவத்தை உள் நீங்குதற்கு
பேறான தன்னை அறிந்து அதன் பின் தீர் சுத்தி
கூறாத சாக்கிராதீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறழ் உபசாந்தமே

மேல்

#2510
வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப்போய்
ஏய்ந்த சிவம் ஆதலின் சிவானந்தத்து
தோய்ந்து அறல் மோன சுகானுபவத்தோடே
ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈரைந்துமே

மேல்

#2511
பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்
திரையின்-நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று
உரை உணர்ந்தார் ஆரமும் தொக்க உணர்ந்துளோன்
கரை கண்டான் உரை அற்ற கணக்கிலே

மேல்

#2512
பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறை மணி வாள் கொண்டவர்-தமை போல
கறை மணிகண்டனை காண்குற மாட்டார்
நிறை அறிவோம் என்பர் நெஞ்சிலர் தாமே

மேல்

#2513
கரும் தாள் கருடன் விசும்பூடு இறப்ப
கரும் தாள் கயத்தில் கரும் பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீ ஒழி நெஞ்சே
அருந்தா அலை கடல் ஆறு சென்றாலே

மேல்

#2514
கருதலர் மாள கருவாயில் நின்ற
பொருதலை செய்வது புல்லறிவாண்மை
மருவலர் செய்கின்ற மா தவம் ஒத்தால்
தருவலர் கேட்ட தனி உம்பர் ஆமே

மேல்

#2515
பிணங்கவும் வேண்டாம் பெருநிலம் முற்றும்
இணங்கி எம் ஈசனை ஈசன் என்று உன்னில்
கணம் பதினெட்டும் கழல் அடி காண
வணங்கு எழு நாடி அங்கு அன்புறல் ஆமே

மேல்

#2516
என்னிலும் என் உயிராய இறைவனை
பொன்னிலும் மா மணியாய புனிதனை
மின்னிய எ உயிராய விகிர்தனை
உன்னிலும் உன்னும் உறுவகையாலே

மேல்

#2517
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பவர்கள் ஆகிலும்
வென்று ஐம்புலனும் விரைந்து பிணக்கு அறுத்து
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே

மேல்

#2518
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண் அறிவாய் நின்ற எந்தை பிரான்-தன்னை
பண் அறிவாளனை பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே

மேல்

#2519
விண்ணவராலும் அறிவறியான்-தன்னை
கண்ணுற உள்ளே கருதிடில் காலையில்
எண்ணுற ஆக முப்போதும் இயற்றி நீ
பண்ணிடில் தன்மை பராபரன் ஆமே

மேல்

#2520
ஒன்றா உலகுடன் ஏழும் பரந்தவன்
பின் தான் அருள்செய்த பேரருளாளவன்
கன்றா மனத்தார்-தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத-போது புனை புகழானே

மேல்

#2521
போற்றி என்றேன் எந்தை பொன்னான சேவடி
ஏற்றி ஏது என்றும் எறி மணி தான் அக
காற்றின் விளக்கு அது காய மயக்குறும்
ஆற்றலும் கேட்டதும் அன்று கண்டேனே

மேல்

#2522
நேடிக்கொண்டு என்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊடு புக்கு ஆரும் உணர்ந்து அறிவார் இல்லை
கூடு புக்கு ஏறலுற்றேன் அவன் கோலம் கண்
மூடி கண்டேன் உலகு ஏழும் கண்டேனே

மேல்

#2523
ஆன புகழும் அமைந்தது ஓர் ஞானமும்
தேனும் இருக்கும் சிறுவரை ஒன்று கண்டு
ஊனம் ஒன்று இன்றி உணர்வு செய்வார்கட்கு
வானகம் செய்யும் மறவனும் ஆமே

மேல்

#2524
மா மதியாம் மதியாய் நின்ற மாதவர்
தூய் மதி ஆகும் சுடர் பரமானந்தம்
தாம் மதி ஆக சகம் உண சாந்தி புக்கு
ஆம் மலம் அற்றார் அமைவு பெற்றாரே

மேல்

#2525
பதமுத்தி மூன்றும் பழுது என்று கைவிட்டு
இதமுற்ற பாச இருளை துரந்து
மதம் அற்று எனது யான் மாற்றிவிட்டு ஆங்கே
திதம் உற்றவர்கள் சிவசித்தர் தாமே

மேல்

#2526
சித்தர் சிவத்தை கண்டவர் சீருடன்
சுத்தாசுத்தத்துடன் தோய்ந்து தோயாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்து
சத்தர் சதாசிவ தன்மையர் தாமே

மேல்

#2527
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு
மதிக்கும் குபேரன் வட திசை ஈசன்
நிதி தெண் திசையும் நிறைந்து நின்றாரே

மேல்

#2528
ஒருங்கிய பூவும் ஓர் எட்டு இதழ் ஆகும்
மருங்கிய மாயாபுரி அதன் உள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையின் ஊடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்து எழும் உய்ந்தே

மேல்

#2529
மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும்
விட்டு அலர்கின்றனன் சோதி விரிசுடர்
எட்டு அலர் உள்ளே இரண்டு அலர் உள்ளுறில்
பட்டு அலர்கின்றது ஓர் பண்டு அம் கனாவே

மேல்

#2530
ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவி முலை கொம்பு அனையாளொடும்
வேறே இருக்கும் விழுப்பொருள் தானே

மேல்

#2531
திகை எட்டும் தேர் எட்டும் தேவதை எட்டும்
வகை எட்டுமாய் நின்ற ஆதி பிரானை
வகை எட்டு நான்கும் மற்று ஆங்கே நிறைந்து
முகை எட்டும் உள் நின்று உதிக்கின்றவாறே

மேல்

#2532
ஏழும் சகளம் இயம்பும் கடந்து எட்டில்
வாழும் பரம் என்றது கடந்து ஒன்பதில்
ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்
தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே

மேல்

#2533
பல் ஊழி பண்பன் பகலோன் இறையவன்
நல் ஊழி ஐந்தின் உள்ளே நின்ற ஊழிகள்
செல் ஊழி அண்டத்து சென்ற அ ஊழியுள்
அ ஊழி உச்சியுள் ஒன்றில் பகவனே

மேல்

#2534
புரியம் உலகினில் பூண்ட எட்டானை
திரியும் களிற்றொடு தேவர் குழாமும்
எரியும் மழையும் இயங்கும் வெளியும்
பரியும் ஆகாசத்தில் பற்றது தானே

மேல்

#2535
ஊறும் அருவி உயர் வரை உச்சி மேல்
ஆறு இன்றி பாயும் அருங்குளம் ஒன்று உண்டு
சேறு இன்றி பூத்த செழும் கொடி தாமரை
பூ இன்றி சூடான் புரிசடையோனே

மேல்

#2536
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம் பல பேசினும்
வென்றும் இருந்தும் விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திரு உடையோரே

மேல்

#2537
தொல் பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன்
நல் பத விராட்டன் பொன் கர்ப்பன் அ யாகிர்தன்
பிற்பதம் சொலிதையன் பிரசாபத்தியன்
பொன் புவி சாந்தன் பொருதபிமானியே

மேல்

#2538
நவமாம் அவத்தை நனவு ஆதி பற்றில்
பவமாம் மலம் குணம் பற்று அற்று பற்றா
தவமான சத்திய ஞான பொதுவில்
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே

மேல்

#2539
சிவமான சிந்தையில் சீவன் சிதைய
பவமான மும்மலம் பாறி பறிய
நவமான அந்தத்தின் நல் சிவபோதம்
தவமாம் அவை ஆகி தான் அல்ல ஆகுமே

மேல்

#2540
முன் சொன்ன ஒன்பானின் முன்னுறு தத்துவம்
தன் சொல்லில் எண்ணத்தகா ஒன்பான் வேறு உள
பின் சொல்ல ஆகும் இ ஈரொன்பான் பேர்த்திட்டு
தன் செய்த ஆண்டவன் தான் சிறந்தானே

மேல்

#2541
உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி
அகந்து எம் பிரான் என்பான் அல்லும் பகலும்
இகந்தன வல்வினையோடு அறுத்தானே

மேல்

#2542
நலம் பல காலம் தொகுத்தன நீளம்
குலம் பல வண்ணம் குறிப்பொடும் கூடும்
பலம் பல பன்னிரு கால நினையும்
நிலம் பலவாறு இன நீர்மையன் தானே

மேல்

#2543
ஆதி பராபரம் ஆகும் பராபரை
சோதி பரம் உயிர் சொல்லும் நல் தத்துவம்
ஓதும் கலை மாயை ஓர் இரண்டு ஓர் முத்தி
நீதியாம் பேதம் ஒன்பானுடன் ஆதியே

மேல்

#2544
தேறாத சிந்தை தெளிய தெளிவித்து
வேறா நரக சுவர்க்கமும் மேதினி
ஆறா பிறப்பும் உயிர்க்கு அருளால் வைத்தான்
வேறா தெளியார் வினை உயிர் பெற்றதே

மேல்

#2545
ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பால் பயிலும் நவ தத்துவம் ஆதி
ஒன்பானில் நிற்பது ஓர் மு துரியத்துற
செம்பால் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே

மேல்

#2546
நாசி நுனியினில் நான்கு மூவிரல் இடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி இருக்கும் பெரு மறை அ மறை
கூசி இருக்கும் குணம் அது ஆமே

மேல்

#2547
கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து
உரிமையும் கன்மமும் முன்னும் பிறவிக்கு
அருவினை ஆவது கண்டு அகன்ற பின்
புரிவன கன்ம கயத்துள் புகுமே

மேல்

#2548
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அ பொருள்
மாயை மறைய மறைய வல்லார்கட்கு
காயமும் இல்லை கருத்து இல்லை தானே

மேல்

#2549
மோழை அடைந்து முழை திறந்து உள் புக்கு
கோழை அடைகின்றது அண்ணல் குறிப்பினில்
ஆழ அடைத்து அங்கு அனலில் புறம் செய்து
தாழ அடைப்பது தன் வலி ஆமே

மேல்

#2550
காய குழப்பனை காய நல் நாடனை
காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை
தேயத்து உளே எங்கும் தேடி திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்து அறியாரே

மேல்

#2551
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிந்த பின்
ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே

மேல்

#2552
ஆசூசம் இல்லை அருநியமத்தருக்கு
ஆசூசம் இல்லை அரனை அர்ச்சிப்பவர்க்கு
ஆசூசம் இல்லை ஆம் அங்கி வளர்ப்போர்க்கு
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே

மேல்

#2553
வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்கு
சுழிபட்டு நின்றது ஓர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட்டவர்க்கு அன்றி காண ஒண்ணாதே

மேல்

#2554
தூய் மணி தூய் அனல் தூய ஒளிவிடும்
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் இல்லை
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார்கட்கு
தூய் மணி தூய் அனல் தூயவும் ஆமே

மேல்

#2555
தூயது வாளா வைத்தது தூ நெறி
தூயது வாளா நாதன் திருநாமம்
தூயது வாளா அட்டமாசித்தியும்
தூயது வாளா தூய் அடி சொல்லே

மேல்

#2556
பொருளதுவாய் நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவர் அன்றி
சுருளதுவாய் நின்ற துன்ப சுழியின்
மருளதுவா சிந்தை மயங்குகின்றாரே

மேல்

#2557
வினையாம் அசத்து விளைவது உணரார்
வினை ஞானம் தன்னில் வீடலும் தேரார்
வினை விட வீடு என்னும் வேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவு அறியாரே

மேல்

#2558
பரகதி உண்டு என இல்லை என்போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடுவார் கடை-தோறும்
துரகதி உண்ண தொடங்குவர் தாமே

மேல்

#2559
கூடகில்லார் குரு வைத்த குறி கண்டு
நாடகில்லார் நயம் பேசி திரிவர்கள்
பாடகில்லார் அவன் செய்த பரிசு அறிந்து
ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே

மேல்

#2560
புறப்பட்டுப்போகும் புகுதும் என் நெஞ்சில்
திறப்பட்ட சிந்தையை தெய்வம் என்று எண்ணி
அறப்பட்ட மற்ற பதி என்று அழைத்தேன்
இற பற்றினேன் இங்கு இது என் என்கின்றானே

மேல்

#2561
திடரிடை நில்லாத நீர் போல ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டி
கடலிடை நில்லா கலம் சேருமா போல்
அடல் எரி வண்ணனும் அங்கு நின்றானே

மேல்

#2562
தாமரை நூல் போல் தடுப்பார் பரத்தொடும்
போம் வழி வேண்டி புறமே உழிதர்வர்
காண் வழி காட்ட கண் காணா கலதிகள்
தீ நெறி செல்வான் திரிகின்றவாறே

மேல்

#2563
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி அவனை குறித்து உடன்
காடும் மலையும் கழனி கடம்-தோறும்
ஊடும் உருவினை உன்னகிலாரே

மேல்

#2564
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவர் குடக்கும் குணக்கும் குறி வழி
நாவின் இன் மந்திரம் என்று நடு அங்கி
வேவது செய்து விளங்கிடுவீரே

மேல்

#2565
மயக்குற நோக்கினும் மா தவம் செய்யார்
தமக்குற பேசின தாரணை கொள்ளார்
சிணக்குற பேசின தீவினையாளர்
தமக்குற வல்வினை தாங்கி நின்றாரே

மேல்

#2566
விட்ட இலக்கணை தான் போம் வியோமத்து
தொட்டு விடாதது உபசாந்தத்தே தொகும்
விட்டு விடாதது மேவும் சத்தாதியில்
சுட்டும் இலக்கணாதீதம் சொரூபமே

மேல்

#2567
வில்லின் விசை நாணில் கோத்து இலக்கு எய்த பின்
கொல்லும் களிறு ஐந்தும் கோலொடு சாய்ந்தன
இல்லுள் இருந்து எறி கூரும் ஒருவற்கு
கல் கலன் என்ன கதிர் எதிர் ஆமே

மேல்

#2568
சீவ துரியத்து தொம்பதம் சீவனார்
தாவு பர துரியத்தினில் தற்பதம்
மேவு சிவ துரிய தசி மெய்ப்பதம்
ஓவி விடும் தத்துவ மசி உண்மையே

மேல்

#2569
ஆறாறு அகன்ற அணு தொம்பதம் சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்து
பேறாகிய சீவன் நீங்கி பிரசாதத்து
வீறான தொந்த தசி தத்துவ மசியே

மேல்

#2570
ஆகிய அச்சோயம் தேவக தன்னிடத்து
ஆகிய விட்டு விடாத இலக்கணைத்து
ஆருப சாந்தமே தொந்த தசி என்ப
ஆகிய சீவன் பரன் சிவனாமே

மேல்

#2571
துவந்த தசியே தொந்த தசியும்
அவை மன்னா வந்து வய தேகம் ஆன
தவமுறு தத்துவ மசி வேதாந்த
சிவமாம் அதும் சித்தாந்த வேதாந்தமே

மேல்

#2572
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரமென்பர் ஆகார் இது அன்று என்னார்
உரிய பரம்பரமாம் ஒன்று உதிக்கும்
அருநிலம் என்பதை ஆர் அறிவாரே

மேல்

#2573
தொம்பதம் தற்பதம் சொல்லும் அசிபதம்
நம்பிய மு துரியத்து மேல் நாடவே
உம் பதமும் பதம் ஆகும் உயிர் பரன்
செம்பொருள் ஆன சிவம் எனல் ஆமே

மேல்

#2574
வைத்த துரியம் அதில் சொருபானந்தத்து
உய்த்த பிரணவமாம் உபதேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்
வைத்தபடியே அடைந்து நின்றானே

மேல்

#2575
நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்து
பினமாம் மலத்தை பின் வைத்து பின் சுத்த
தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி
மனவாசகம் கெட்ட மன்னனை நாடே

மேல்

#2576
பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின்
பேர் அணியாதது பேச்சு ஒன்று இலாமையில்
ஓர் அணையாதது ஒன்றும் இலாமையில்
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே

மேல்

#2577
நீ அது ஆனாய் என நின்ற பேருரை
ஆயது நான் ஆனேன் என்ன சமைந்து அற
சேய சிவம் ஆக்கும் சீர் நந்தி பேரருள்
ஆயதுவாய் அனந்தானந்தி ஆகுமே

மேல்

#2578
உயிர் பரம் ஆக உயர் பர சீவன்
அரிய சிவமாக அ சிவ வேத
திரியிலும் சீராம் பராபரன் என்ன
உரிய உரை அற்ற ஓம் மயம் ஆமே

மேல்

#2579
வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில்
ஆய் நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும்
தாய் நாடி ஆதிவாக்கு ஆதி சகலாதி
சேய் நாடு ஒளி என சிவகதி ஐந்துமே

மேல்

#2580
அறிவு அறியாமை இருண்டும் அகற்றி
செறிவு அறிவாய் எங்கும் நின்ற சிவனை
பிறிவு அறியாது பிரான் என்று பேணும்
குறி அறியாதவர் கொள் அறியாரே

மேல்

#2581
அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவான் இருந்து அங்கு அறிவிக்கின் அல்லால்
அறிவான் அறிந்த அறிவு அறியோமே

மேல்

#2582
அதீதத்துள் ஆகி அகன்றவன் நந்தி
அதீதத்துள் ஆகி அறிவிலோன் ஆன்மா
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம்
பதியில் பதியும் பரவுயிர் தானே

மேல்

#2583
அடிதொழ முன் நின்று அமரர்கள் அத்தன்
முடி தொழ ஈசனும் முன் நின்று அருளி
படி தொழ நீ பண்டு பாவித்தது எல்லாம்
கடி தொழ காண் என்னும் கண்_நுதலானே

மேல்

#2584
நின்மல மேனி நிமலன் பிறப்பு_இலி
என் உளம் வந்து இவன் என் அடியான் என்று
பொன் வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே

மேல்

#2585
துறந்து புக்கு ஒள் ஒளி சோதியை கண்டு
பறந்தது என் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்து அறியா என்னை வானவர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்கு வைத்தானே

மேல்

#2586
மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் மெய்த்தோற்றத்து
அவ்வாய அந்த கரணம் அகிலமும்
எவ்வாய் உயிரும் இறை ஆட்ட ஆடலால்
கை வாய் இலா நிறை எங்கும் மெய் கண்டதே

மேல்

#2587
அழிகின்ற சாயா புருடனை போல
கழிகின்ற நீரில் குமிழியை காணில்
எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்க
பொழிகின்ற இ உடல் போம் அ பரத்தே

மேல்

#2588
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில்
படரும் சிவசத்தி தாமே பரமாம்
உடலை விட்டு இந்த உயிர் எங்கும் ஆகி
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே

மேல்

#2589
செவி மெய் வாய் கண் மூக்கு சேர் இந்திரியம்
அவி இன்றிய மனமாதிகள் ஐந்தும்
குவி ஒன்று இலாமல் விரிந்து குவிந்து
தவிர் ஒன்று இலாத சராசரம் தானே

மேல்

#2590
பரன் எங்கும் ஆர பரந்துற்று நிற்கும்
திரன் எங்கும் ஆகி செறிவு எங்கும் எய்தும்
உரன் எங்குமாய் உலகு உண்டு உமிழ்க்கும்
வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்துற்றவாறே

மேல்

#2591
அளந்து துரியத்து அறிவினை வாங்கி
உளம் கொள் பரம்சகம் உண்டது ஒழித்து
கிளர்ந்த பரம்சிவம் சேர கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே

மேல்

#2592
இரும்பிடை நீர் என என்னை உள்வாங்கி
பரம்பரம் ஆன பரம் அது விட்டே
உரம் பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
இருந்த என் நந்தி இதயத்து உளானே

மேல்

#2593
கரி உண் விளவின் கனி போல் உயிரும்
உரிய பரமும் முன் ஓதும் சிவமும்
அரிய துரிய மேல் அகிலமும் எல்லாம்
திரிய விழுங்கும் சிவபெருமானே

மேல்

#2594
அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னில் பரமுடன்
நம்தமை உண்டு மெய்ஞ்ஞான நேயாந்தத்தே
நந்தி இருந்தனன் நாம் அறியோமே

மேல்

#2595
அற்றது உரைக்கில் அருள் உபதேசங்கள்
குற்றம் அறுத்த பொன் போலும் கனலிடை
அற்று அற வைத்து இறை மாற்று அற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழும் சுடர் ஆகுமே

மேல்

#2596
எல்லாம் அறியும் அறிவு-தனை விட்டு
எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கு இல்லை
எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில்
எல்லாம் அறிந்த இறை எனலாமே

மேல்

#2597
தலைநின்ற தாழ்வரை மீது தவம்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லா பிறவி கடந்து
கலைநின்ற கள்வனை கண்டுகொண்டேனே

மேல்

#2598
தானே உலகில் தலைவன் என தகும்
தானே உலகுக்கு ஓர் தத்துவமாய் நிற்கும்
வானே மழை பொழி மா மறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம் ஒன்று ஆமே

மேல்

#2599
அருள் பெற்ற காரணம் என்-கொல் அமரில்
இருள் அற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமை
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே

மேல்

#2600
மெய்கலந்தாரொடு மெய்கலந்தான்-தன்னை
பொய்கலந்தார் முன் புகுதா ஒருவனை
உய் கலந்து ஊழி தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே

மேல்

#2601
மெய்கலந்தாரொடு மெய்கலந்தான் மிக
பொய்கலந்தார் உள் புகுதா புனிதனை
கைகலந்து ஆவி எழும் பொழுது அண்ணலை
கைகலந்தார்க்கே கருத்துறல் ஆமே

மேல்

#2602
எய்திய காலத்து இருபொழுதும் சிவன்
மெய் செயின் மேலை விதி அதுவாய் நிற்கும்
பொய்யும் புலனும் புகல் ஒன்று நீத்திடில்
ஐயனும் அ வழி ஆகி நின்றானே

மேல்

#2603
எய்துவது எய்தாது ஒழிவது இது அருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர் நந்தி
பொய்செய் புலனெறி ஒன்பதும் ஆட்கொளின்
மெய் என் புரவியை மேற்கொள்ளல் ஆமே

மேல்

#2604
கைகலந்தானை கருத்தினுள் நந்தியை
மெய்கலந்தான்-தன்னை வேதமுதல்வனை
பொய்கலந்தார் முன் புகுதா புனிதனை
பொய் ஒழிந்தார்க்கே புகலிடம் ஆமே

மேல்

#2605
மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியை
கைத்தாள் கொண்டாரும் திறந்து அறிவார் இல்லை
பொய்த்தாள் இடும்பையை பொய் அற நீ விட்டு அங்கு
அ தாள் திறக்கில் அரும் பேறு அது ஆமே

மேல்

#2606
உய்யும் வகையால் உணர்வினால் ஏத்து-மின்
மெய்யன் அரன்நெறி மேல் உண்டு திண் என
பொய் ஒன்றும் இன்றி புறம் பொலிவார் நடு
ஐயனும் அங்கே அமர்ந்து நின்றானே

மேல்

#2607
வம்பு பழுத்த மலர் பழம் ஒன்று உண்டு
தம்-பால் பறவை புகுந்து உண தானொட்டாது
அம்பு கொண்டு எய்திட்டு அகல துரத்திடில்
செம்பொன் சிவகதி சென்று எய்தலாமே

மேல்

#2608
மயக்கிய ஐம்புல பாசம் அறுத்து
துயக்கு அறுத்தானை தொடர்-மின் தொடர்ந்தால்
தியக்கம் செய்யாதே சிவன் எம் பெருமான்
உயப்போ என மனம் ஒன்றுவித்தானே

மேல்

#2609
மனம் அது தானே நினைய வல்லார்க்கு
இனம் என கூறும் இரும் காயம் ஏவல்
தனிவு இனி நாதன்-பால் தக்கன செய்யில்
புனிதன் செயல் ஆகும்-போது அ புவிக்கே

மேல்

#2610
முன்னை வினைவரின் முன் உண்டே நீங்குவர்
பின்னை வினைக்கணார் பேர்ந்து அற பார்ப்பார்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மை இல் ஐம்புலன் நாடலினாலே

மேல்

#2611
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையை பிடித்து பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவன் அருளாலே

மேல்

#2612
மனம் வாக்கு காயத்தால் வல்வினை மூளும்
மனம் வாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனம் வாக்கு கெட்டவர் வாதனை தன்னால்
தனை மாற்றி ஆற்ற தகு ஞானி தானே

மேல்

#2613
வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி இருந்து பிதற்றி பயன் இல்லை
ஆசையும் அன்பும் அறு-மின் அறுத்த பின்
ஈசன் இருந்த இடம் எளிதாமே

மேல்

#2614
மாடத்து உளான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்து உளான் அலன் கோயில் உள்ளான் அலன்
வேடத்து உளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்து உளே நின்று முத்தி தந்தானே

மேல்

#2615
ஆசை அறு-மின் கள் ஆசை அறு-மின் கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறு-மின்கள்
ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே

மேல்

#2616
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படு வழி செய்கின்ற பற்று அற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மை தொடர்தலும் ஆமே

மேல்

#2617
உவா கடல் ஒக்கின்ற ஊழியும் போன
துவா கடல் உட்பட்டு துஞ்சினர் வானோர்
அவா கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணோர்
தவா கடல் ஈசன் தரித்து நின்றானே

மேல்

#2618
நின்ற வினையும் பிணியும் நெடும் செயல்
துன்தொழில் அற்று சுத்தம் அது ஆகலும்
பின்றை அம் கருமமும் பேர்த்து அருள் நேர்பெற்று
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே

மேல்

#2619
உண்மை உணர்ந்துற ஒண் சித்தி முத்தியாம்
பெண் மயல் கெட்டு அற பேறு அட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
வண்மை அருள்தான் அடைந்து அன்பில் ஆறுமே

மேல்

#2620
அவன் இவன் ஈசன் என்று அன்புற நாடி
சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார்
பவன் இவன் பல் வகையாம் இ பிறவி
புவன் இவன் போவது பொய் கண்ட-போதே

மேல்

#2621
கொதிக்கின்றவாறும் குளிர்கின்றவாறும்
பதிக்கின்றவாறு இந்த பார் அகம் முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டாது உலகம்
நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே

மேல்

#2622
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரில் கலக்கின்ற நந்தியை
சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால்
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே

மேல்

#2623
முத்தி செய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்-தன்னை
சுத்தனை தூய் நெறியாய் நின்ற சோதியை
பத்தர் பரசும் பசுபதி தான் என்றே

மேல்

#2624
அடியார் அடியார் அடியார்க்கு அடிமைக்கு
அடியனாய் நல்கிட்டு அடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவன் அடி கூட
அடியான் இவன் என்று அடிமை கொண்டானே

மேல்

#2625
நீரில் குளிரும் நெருப்பினில் சுட்டிடும்
ஆரி கடன் நந்தி ஆமார் அறிபவர்
பாரில் பயனாரை பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி ஆகி நின்றானே

மேல்

#2626
ஒத்து உலகு ஏழும் அறியா ஒருவன் என்று
அத்தன் இருந்திடம் ஆர் அறிவார் சொல்ல
பத்தர்-தம் பத்தியில் பால் படில் அல்லது
முத்தினை யார் சொல்ல முந்துகின்றாரே

மேல்

#2627
ஆன் கன்று தேடி அழைக்கும் அது போல்
நான் கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை
வான் கன்றுக்கு அப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன் கன்றாய் நாடி வந்து உள் புகுந்தானே

மேல்

#2628
பெத்தத்தும் தன் பணி இல்லை பிறத்தலான்
முத்தத்தும் தன் பணி இல்லை முறைமையால்
அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால்
பத்தி பட்டோர்க்கு பணி ஒன்றும் இல்லையே

மேல்

#2629
பறவையில் கற்பமும் பாம்பு மெய் ஆக
குறவம் சிலம்ப குளிர் வரை ஏறி
நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால்
இறைவன் என்று என் மனம் ஏத்தகிலாவே

மேல்

#2630
உறுதுணை நந்தியை உம்பர் பிரானை
பெறு துணை செய்து பிறப்பு அறுத்து உய்-மின்
செறி துணை செய்து சிவன் அடி சிந்தித்து
உறுதுணையாய் அங்கி ஆகி நின்றானே

மேல்

#2631
வானவர்-தம்மை வலிசெய்து இருக்கின்ற
தானவர் முப்புரம் செற்ற தலைவனை
கானவன் என்றும் கருவரையான் என்றும்
ஊனதன் உள் நினைந்து ஒன்றுபட்டாரே

மேல்

#2632
நிலை பெறு கேடு என்று முன்னே படைத்த
தலைவனை நாடி தயங்கும் என் உள்ளம்
மலையுளும் வான் அகத்து உள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்து மூழ்கி நின்றேனே

மேல்

#2633
முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்று
தத்துவ சுத்தி தலைப்பட்டு தன் பணி
மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய் உண்மை
பத்தியில் உற்றோர் பரானந்த போதரே

மேல்

#2634
வளம் கனி தேடிய வன் தாள் பறவை
உளம் கனி தேடி அழிதரும்-போது
களம் கனி அங்கியில் கைவிளக்கு ஏற்றி
நலம் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே

மேல்

#2635
பெம்மான் பெரு நந்தி பேச்சு அற்ற பேரின்பத்து
அம்மான் அடி தந்து அருட்கடல் ஆடினோம்
எம்மாயமும் விடுத்து எம்மை கரந்திட்டு
சும்மா இருந்து இடம் சோதனை ஆகுமே

மேல்

#2636
அறிவு உடையான் அரு மா மறை உள்ளே
செறிவு உடையான் மிகு தேவர்க்கும் தேவன்
பொறி உடையான் புலன் ஐந்தும் கடந்த
குறி உடையானொடும் கூடுவன் நானே

மேல்

#2637
அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்
அறிவு அறியாமை யாரும் அறியார்
அறிவு அறியாமை கடந்து அறிவானால்
அறிவு அறியாமை அழகியவாறே

மேல்

#2638
குறியா குறியினில் கூடாத கூட்டத்து
அறியா அறிவில் அவிழ்ந்து ஏக சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடு அருள் ஒன்றும்
செறியா செறிவே சிவம் எனலாமே

மேல்

#2639
காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும்
பாலின் உள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போல் உளன் எம் இறை
காவலன் எங்கும் கலந்து நின்றானே

மேல்

#2640
விருப்பொடு கூடி விகிர்தனை நாடி
பொருப்பு அகம் சேர்தரு பொன் கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்பு உரு ஆகி நிகழ்ந்து நின்றாரே

மேல்

#2641
நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்து என் அகம் படி கோயில் கொண்டான் கொள்ள
எந்தை வந்தான் என்று எழுந்தேன் எழுதலும்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே

மேல்

#2642
தன்மை வல்லோனை தத்துவத்துள் நலத்தினை
நன்மை வல்லோனை நடுவு உறை நந்தியை
புன்மை பொய்யாதே புனிதனை நாடு-மின்
பன்மையில் உம்மை பரிசு செய்வானே

மேல்

#2643
தொடர்ந்து நின்றான் என்னை சோதிக்கும்-போது
தொடர்ந்து நின்றான் நல்ல நாதனும் அங்கே
படர்ந்து நின்று ஆதி பராபரன் எந்தை
கடந்து நின்று அ வழி காட்டுகின்றானே

மேல்

#2644
அ வழி காட்டும் அமரர்க்கு அரும்பொருள்
இ வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும்
செ வழி சேர் சிவலோகத்து இருந்திடும்
இ வழி நந்தி இயல்பு அது தானே

மேல்

#2645
எறிவது ஞானத்து உறைவாள் உருவி
அறிவு அதனோடே அ ஆண் தகையானை
செறிவது தேவர்க்கு தேவர் பிரானை
பறிவது பல் கண பற்று விட்டாரே

மேல்

#2646
ஆதி பிரான் தந்த வாள் அங்கை கொண்ட பின்
வேதித்து என்னை விலக்க வல்லார் இல்லை
சோதிப்பன் அங்கே சுவடு படா வண்ணம்
ஆதி கண் தெய்வம் அவன் இவன் ஆமே

மேல்

#2647
அந்த கருவை அருவை வினை செய்தல்
பந்தம் பணி அச்சம் பல் பிறப்பும் வாட்டி
சிந்தை திருத்தலும் சேர்ந்தார் அ சோதனை
சந்திக்க தற்பரம் ஆகும் சதுரர்க்கே

மேல்

#2648
உரை அற்றது ஒன்றை உரைத்தான் எனக்கு
கரையற்று எழுந்த கலை வேட்டு அறுத்து
திரை ஒத்த என் உடல் நீங்காது இருத்தி
புரை அற்ற என்னுள் புகும் தற்பரனே

மேல்

9.ஒன்பதாம் தந்திரம் (2649 – 3047 )


#2649
பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கி
குவியும் குருமடம் கண்டவர் தாம் போய்
தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே

மேல்

#2650
இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும்
அவனை புறம்பு என்று அரற்றுகின்றாரே

மேல்

#2651
நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்ட பின்
கூடும் சிவனது கொய் மலர் சேவடி
தேட அரியன் சிறப்பு_இலி எம் இறை
ஓடும் உலகு உயிராகி நின்றானே

மேல்

#2652
இயம்புவன் ஆசனத்தோடு மலையும்
இயம்புவன் சித்த குகையும் இடமும்
இயம்புவன் ஆதாரத்தோடு வனமும்
இயம்புவன் ஈராறு இருநிலத்தோர்க்கே

மேல்

#2653
முகம் பீடமாம் மடம் உன்னிய தேயம்
அகம் பர வர்க்கமே ஆசு இல் செய் காட்சி
அகம் பரம் ஆதனம் எண்ணெண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே

மேல்

#2654
அகம் முகமாம் பீடம் ஆதாரம் ஆகும்
சக முகமாம் சத்தி ஆதனம் ஆகும்
செக முகம் ஆம் தெய்வமே சிவம் ஆகும்
அக முகம் ஆய்ந்த அறிவு உடையோர்க்கே

மேல்

#2655
மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்
காயம் ஓர் ஐந்தும் கழிய தான் ஆகியே
தூய பரஞ்சுடர் தோன்ற சொரூபத்துள்
ஆய்பவர் ஞானாதி மோனத்தர் ஆமே

மேல்

#2656
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூற குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே

மேல்

#2657
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவு அற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேச ஒண்ணாதே

மேல்

#2658
ஆயன நந்தி அடிக்கு என் தலை பெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்த என் வாய் பெற்றேன்
காயன நந்தியை காண என் கண் பெற்றேன்
சேயன நந்திக்கு என் சிந்தை பெற்றேனே

மேல்

#2659
கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல்
குருவின் உருவம் குறித்த அப்போதே
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே

மேல்

#2660
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு
அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலை காணில் அவன் இவன் ஆகுமே

மேல்

#2661
தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
ஆன்ற அறிவும் அறி நனவாதிகள்
மூன்று அவை நீங்கும் துரியங்கள் மூன்று அற
ஊன்றிய நந்தி உயர் மோனத்தானே

மேல்

#2662
சந்திர பூமிக்குள் தன் புருவத்திடை
கந்த மலரில் இரண்டு இதழ் கன்னியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம் குரு பற்றே

மேல்

#2663
மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ
நிலம் புகுந்தான் நெடு வான் நிலம் தாங்கி
சினம் புகுந்தான் திசை எட்டும் நடுங்க
வனம் புகுந்தான் ஊர் வடக்கு என்பதாமே

மேல்

#2664
தான் ஆன வண்ணமும் கோசமும் சார்தரும்
தான் ஆம் பறவை வனம் என தக்கன
தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில்
தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே

மேல்

#2665
மருவி பிரிவு அறியா எங்கள் மா நந்தி
உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்து உள்ளம் காண வல்லார்க்கு இங்கு
அருவினை கண் சோரும் அழிவார் அகத்தே

மேல்

#2666
தலைப்படலாம் எங்கள் தத்துவன் தன்னை
பல படு பாசம் அறுத்து அறுத்திட்டு
நிலைபெற நாடி நினைப்பு அற உள்கில்
தலைப்படல் ஆகும் தருமமும் தானே

மேல்

#2667
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர்-தம்மை
சுனைக்குள் விளை மலர் சோதியினானை
தினை பிளந்து அன்ன சிறுமையரேனும்
கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே

மேல்

#2668
தலைப்படும் காலத்து தத்துவன்-தன்னை
விலக்குறின் மேலை விதி என்றும் கொள்க
அனைத்து உலகாய் நின்ற ஆதி பிரானை
நினைப்புறுவார் பத்தி நேடிக்கொள்வாரே

மேல்

#2669
நகழ்வு ஒழிந்தார் அவர் நாதனை உள்கி
நிகழ்வு ஒழிந்தார் எம் பிரானொடும் கூடி
திகழ்வு ஒழிந்தார் தங்கள் சிந்தையின் உள்ளே
புகழ் வழி காட்டி புகுந்து நின்றானே

மேல்

#2670
வந்த மரகத மாணிக்க ரேகை போல்
சந்திடும் மா மொழி சற்குரு சன்மார்க்கம்
இந்த ரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தர சோதியுள் சோதியும் ஆமே

மேல்

#2671
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்
கண்ணும் மா யோக கடவுள் இருப்பது
மண்ணு நீர் அனல் காலொடு வானுமாய்
விண்ணும் இன்றி வெளி ஆனோர் மேனியே

மேல்

#2672
பரசு பதி என்று பார் முழுது எல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதி செய்து பின் ஆம் அடியார்க்கு
உரிய பதியும் பார் ஆக்கி நின்றானே

மேல்

#2673
அம்பர நாதன் அகல் இட நீள் பொழில்
தம்பரம் அல்லது தாம் அறியோம் என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெருமான் அருள் பெற்று இருந்தாரே

மேல்

#2674
கோ வணங்கும்படி கோவணம் ஆகி பின்
நா வணங்கும்படி நந்தி அருள்செய்தான்
தே வணங்கோம் இனி சித்தம் தெளிந்தனம்
போய் வணங்கும் பொருளாய் இருந்தோமே

மேல்

#2675
தூல பிரணவம் சொரூப ஆனந்த பேருரை
பாலித்த சூக்கும மேலை சொரூப பெண்
ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம்
மேலை பிரணவம் வேதாந்த வீதியே

மேல்

#2676
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம்
ஓம் எனும் ஓங்காரம் ஒண் முத்தி சித்தியே

மேல்

#2677
ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே

மேல்

#2678
வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்
அருக்கம் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதாரம் எல்லாம் தன் மேனி
சுருக்கம் இல் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே

மேல்

#2679
மலையும் மனோபவம் அருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம் சித்தம் ஆகும்
நலமும் சன்மார்க்கத்து உபதேசம் தானே

மேல்

#2680
சோடச மார்க்கமும் சொல்லும் சன்மார்க்கிகட்கு
ஆடிய ஈறாறின் அந்தமும் ஈரேழில்
கூடிய அந்தமும் கோதண்டமும் கடந்து
ஏறிய ஞான ஞேயாந்தத்து இருக்கவே

மேல்

#2681
ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடன் இருந்தானே

மேல்

#2682
புகல் எளிது ஆகும் புவனங்கள் எட்டும்
அகல் ஒளிதாய் இருள் ஆசு அற வீசும்
பகல் ஒளி செய்ததும் அ தாமரையிலே
இகல் ஒளி செய்து எம்பிரான் இருந்தானே

மேல்

#2683
விளங்கு ஒளி அங்கி விரி கதிர் சோமன்
துளங்கு ஒளி பெற்றன சோதி அருள
வளங்கு ஒளி பெற்றதே பேரொளி வேறு
களங்கு ஒளி செய்து கலந்து நின்றானே

மேல்

#2684
இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும் இல்லி
துளங்கு ஒளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கு ஒளி அங்கியும் அற்றை கண் நெற்றி
விளங்கு ஒளி செய்கின்ற மெய் காயம் ஆமே

மேல்

#2685
மேல் ஒளி கீழ் அதன் மேவிய மாருதம்
பால் ஒளி அங்கி பரந்து ஒளி ஆகாசம்
நீர் ஒளி செய்து நெடு விசும்பு ஒன்றிலும்
மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே

மேல்

#2686
மின்னிய தூ ஒளி மேதக்க செ ஒளி
பன்னிய ஞானம் பரந்த பரத்து ஒளி
துன்னிய ஆறு ஒளி தூய் மொழி நாள்-தொறும்
உன்னியவாறு ஒளி ஒத்தது தானே

மேல்

#2687
விளங்கு ஒளி மின் ஒளி ஆகி கரந்து
துளங்கு ஒளி ஈசனை சொல்லும் எப்போதும்
உளங்கு ஒளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற
வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே

மேல்

#2688
விளங்கு ஒளி அ ஒளி அ இருள் மன்னும்
துளங்கு ஒளியான் தொழுவார்க்கும் ஒளியான்
அளங்கு ஒளி ஆரமுதாக நஞ்சாரும்
களங்கு ஒளி ஈசன் கருத்து அது தானே

மேல்

#2689
இலங்கியது எ ஒளி அ ஒளி ஈசன்
துலங்கு ஒளி போல்வது தூங்கு அருள் சத்தி
விளங்கு ஒளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கு ஒளி உள்ளே ஒருங்குகின்றானே

மேல்

#2690
உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற சீவன்
வளங்கு ஒளியாய் நின்ற மா மணி சோதி
விளங்கு ஒளியாய் மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கு ஒளி ஆயத்து உளாகி நின்றானே

மேல்

#2691
விளங்கு ஒளியாய் நின்ற விகிர்தன் இருந்த
துளங்கு ஒளி பாசத்துள் தூங்கு இருள் சேரா
களங்கு இருள் நட்டமே கண்_நுதல் ஆட
விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே

மேல்

#2692
போது கரும் குழல் போனவர் தூது இடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்து அப்பால் உற்ற தூ ஒளி
நீதியின் நல் இருள் நீக்கியவாறே

மேல்

#2693
உண்டு இல்லை என்னும் உலகத்து இயல்வது
பண்டு இல்லை என்னும் பரம் கதி உண்டு-கொல்
கண்டு இல்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டு இல்லை உள்ளே விளக்கு ஒளி ஆமே

மேல்

#2694
சுடருற ஓங்கிய ஒள் ஒளி ஆங்கே
படருறு காட்சி பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞான துறவியன் ஆமே

மேல்

#2695
ஒளி பவள திருமேனி வெண்ணீற்றன்
அளி பவள செம்பொன் ஆதி பிரானும்
களி பவளத்தினன் கார் இருள் நீங்கி
ஒளி பவளத்து என்னோடு ஈசன் நின்றானே

மேல்

#2696
ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற
தேசம் ஒன்று இன்றி தகைத்து இழைக்கின்றார்
பாசம் ஒன்று ஆக பழவினை பற்று அற
வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே

மேல்

#2697
தானே இருக்கும் அவற்றில் தலைவனும்
தானே இருக்கும் அவன் என நண்ணிடும்
வானாய் இருக்கும் இ மா இரு ஞாலத்து
பானாய் இருக்க பரவலும் ஆமே

மேல்

#2698
ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்த பின்
ஐம்பது எழுத்தே அஞ்செழுத்து ஆமே

மேல்

#2699
அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி
உகார முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி
நகார முதலாகும் நந்தி-தன் நாமமே

மேல்

#2700
அகராதி ஈரெண் கலந்த பரையும்
உகராதி தன் சத்தி உள் ஒளி ஈசன்
சிகராதி தான் சிவவேதமே கோண
நகராதி தான் மூலமந்திரம் நண்ணுமே

மேல்

#2701
வாயொடு கண்டம் இதயம் மருவு உந்தி
ஆய இலிங்கம் அவற்றின் மேலே அவ்வாய்
தூயது ஓர் துண்டம் இருமத்தகம் செல்லல்
ஆயது ஈறாம் ஐந்தோடு ஆம் எழுத்து அஞ்சுமே

மேல்

#2702
கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கி
கரணங்கள் விட்டு உயிர் தான் எழும்-போது
மரணம் கைவைத்து உயிர் மாற்றிடும்-போதும்
அரணம் கைகூட்டுவது அஞ்செழுத்து ஆமே

மேல்

#2703
ஞாயிறு திங்கள் நவின்று எழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத்து அஞ்சையும்
வாயுற ஓதி வழுத்தலும் ஆமே

மேல்

#2704
தெள்ளமுது ஊற சிவாயநம என்று
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர்
துள்ளிய நீர் போல் சுழல்கின்றவாறே

மேல்

#2705
குருவழி ஆய குணங்களின் நின்று
கருவழி ஆய கணக்கை அறுக்க
வரும் வழி மாள மறுக்க வல்லார்கட்கு
அருள்வழி காட்டுவது அஞ்செழுத்து ஆமே

மேல்

#2706
வெறிக்க வினை துயர் வந்திடும்-போது
செறிக்கின்ற நந்தி திருவெழுத்து ஓதும்
குறிப்பது உன்னில் குரை கழல் கூட்டும்
குறிப்பு அறிவான் தவம் கோன் உரு ஆமே

மேல்

#2707
நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று
துஞ்சும் பொழுது உன் துணை தாள் சரண் என்று
மஞ்சு தவழும் வடவரை மீது உறை
அஞ்சில் இறைவன் அருள் பெறலாமே

மேல்

#2708
பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணராது
இரா மாற்றம் செய்வார்-கொல் ஏழை மனிதர்
பரா முற்றும் கீழொடு பல்வகையாலும்
அரா முற்றும் சூழ்ந்த அகல் இடம் தானே

மேல்

#2709
எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகு மனத்தராய்
தெளிய ஓதி சிவாயநம என்னும்
குளிகை இட்டு பொன் ஆக்குவன் கூட்டையே

மேல்

#2710
சிவன் சத்தி சீவன் செறு மல மாயை
அவம் சேர்த்த பாச மலம் ஐந்து அகல
சிவன் சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம் சேர்த்த பாசம் அணுககிலாவே

மேல்

#2711
சிவனருள் ஆய சிவன் திருநாமம்
சிவனருள் ஆன்மா திரோதம் மலமாயை
சிவன் முதலாக சிறந்து நிரோதம்
பவம் அது அகன்று பரசிவன் ஆமே

மேல்

#2712
ஓதிய நம மலம் எல்லாம் ஒழித்திட்டு அ
வாதி-தனை விட்டு இறை அருள் சத்தியால்
தீது இல் சிவஞான யோகமே சித்திக்கும்
ஓதும் சிவாய மலம் அற்ற உண்மையே

மேல்

#2713
நமாதி நனாதி திரோதாயி ஆகி
தம் ஆதியதாய் நிற்க தான் அந்தத்துற்று
சமாதி துரியம் தமது ஆகம் ஆகவே
நமாதி சமாதி சிவம் ஆதல் எண்ணவே

மேல்

#2714
அருள் தரு மாயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை
திரிமலம் நீங்கி சிவாய என்று ஓதும்
அருவினை தீர்ப்பதும் அ எழுத்தாமே

மேல்

#2715
சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்து உள் அடங்க
சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள்
சிவசிவ ஆகும் திருவருளாமே

மேல்

#2716
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்ன சிவகதி தானே

மேல்

#2717
நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி
சிவ என்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற
பவம் அது தீரும் பரிசும் அது அற்றால்
அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ

மேல்

#2718
சிவாயநம என சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமை அது ஆக்கி
சிவாய சிவசிவ என்று என்றே சிந்தை
அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே

மேல்

#2719
செஞ்சுடர் மண்டலத்து ஊடு சென்று அப்புறம்
அஞ்சணவும் முறை ஏறி வழி கொண்டு
துஞ்சும் அவன் சொன்ன காலத்து இறைவனை
நெஞ்சு என நீங்கா நிலைபெறல் ஆகுமே

மேல்

#2720
அங்கமும் ஆகம வேதம் அது ஓதினும்
எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கை கெட்டு அ எழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே

மேல்

#2721
பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே
விழித்து அங்கு உறங்கும் வினை அறிவார் இல்லை
எழுத்து அறிவோம் என்று உரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்து அறியாரே

மேல்

#2722
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள்-தன் விளையாட்டு அதே

மேல்

#2723
சிற்பரம் சோதி சிவானந்த கூத்தனை
சொல் பதம் ஆம் அந்த சுந்தர கூத்தனை
பொன் பதி கூத்தனை பொன் தில்லை கூத்தனை
அற்புத கூத்தனை யார் அறிவாரே

மேல்

#2724
தான் அந்தம் இல்லா சதானந்த சத்தி மேல்
தேன் உந்தும் ஆனந்த மா நடம் கண்டீர்
ஞானம் கடந்து நடம் செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக்கூத்து ஆட ஆடரங்கு ஆனதே

மேல்

#2725
ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்த கூத்து உகந்தானுக்கே

மேல்

#2726
ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி ஆகும் சமய
களியார் பரமும் கருத்துறை அந்த
தெளிவு ஆம் சிவானந்த நட்டத்தின் சித்தியே

மேல்

#2727
ஆன நடம் ஐந்து அகள சகளத்தர்
ஆன நடம் ஆடி ஐங்கருமத்து ஆக
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன் மொழி பாகன் திருநடம் ஆடுமே

மேல்

#2728
பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட ஐங்கருமத்து ஆண்ட தற்பரத்து
ஏகாந்தமாம் பிரமாண்டத்த என்பவே

மேல்

#2729
வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட
கீதங்கள் ஆட கிளர் அண்டம் ஏழ் ஆட
பூதங்கள் ஆட புவனம் முழுது ஆட
நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்த கூத்தே

மேல்

#2730
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில்
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்ட
போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே

மேல்

#2731
தேவர் சுரர் நரர் சித்தர் வித்தியாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்துமூவர்கள்
தாபதர் சத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே

மேல்

#2732
அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால்
உண்டு என்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்
கண்டம் கரியான் கருணை திருவுரு
கொண்டு அங்கு உமை காண கூத்து உகந்தானே

மேல்

#2733
கொடு கொட்டி பாண்டரம் கோடு சங்கார
நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடியுள் நாடும்
திடமுற்று எழும் தேவதாருவாம் தில்லை
வடமுற்ற மா வனம் மன்னவன் தானே

மேல்

#2734
பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்
பரமாண்டத்து ஊடே படர் ஒளி ஈசன்
பரமாண்டத்து ஊடே படர் தரு நாதம்
பரமாண்டத்து ஊடே பரன் நடம் ஆடுமே

மேல்

#2735
அங்குசம் என்ன எழு மார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனும் தாள ஒத்தினில்
சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல்
பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே

மேல்

#2736
ஆனத்தி ஆடி பின் நவ கூத்து ஆடி
கானத்தி ஆடி கருத்தில் தரித்து ஆடி
மூன சுழுனையுள் ஆடி முடிவு இல்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே

மேல்

#2737
சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான் ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தான் எட்டும்
சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே

மேல்

#2738
மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும்
தேகங்கள் ஏழும் சிவ பாற்கரன் ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடி கீழ் அடங்குமே

மேல்

#2739
தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு உச்சியில்
அற்புதம் ஆனது ஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பு இல் பேரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே

மேல்

#2740
அடியார் அரன் அடி ஆனந்தம் கண்டோர்
அடியார் ஆனவர் அத்தர் அருளுற்றோர்
அடியார் பவரே அடியவர் ஆம் ஆல்
அடியார் பொன்னம்பலத்து ஆடல் கண்டாரே

மேல்

#2741
அடங்காத என்னை அடக்கி அடி வைத்து
இடம் காண் பரானந்தத்தே என்னை இட்டு
நடந்தான் செயும் நந்தி நல் ஞான கூத்தன்
படம்தான் செய்து உள்ளுள் படிந்திருந்தானே

மேல்

#2742
உம்பரில் கூத்தனை உத்தம கூத்தனை
செம்பொன் திருமன்றுள் சேவக கூத்தனை
சம்பந்த கூத்தனை தற்பர கூத்தனை
இன்புற நாடி என் அன்பில் வைத்தேனே

மேல்

#2743
மாணிக்க கூத்தனை வண் தில்லை கூத்தனை
பூணுற்ற மன்றுள் புரிசடை கூத்தனை
சேணுற்ற சோதி சிவானந்த கூத்தனை
ஆணிப்பொன் கூத்தனை யார் உரைப்பாரே

மேல்

#2744
விம்மும் வெருவும் விழும் எழும் மெய் சோரும்
தம்மையும் தாம் அறியார்கள் சதுர் கெடும்
செம்மை சிறந்த திரு அம்பல கூத்துள்
அம் மலர் பொன் பாதத்து அன்பு வைப்பார்கட்கே

மேல்

#2745
தேட்டு அறும் சிந்தை திகைப்பு அறும் பிண்டத்துள்
வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன்
ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த
நாட்டம் முறுக்குறும் நாடகம் காணவே

மேல்

#2746
காளியோடு ஆடி கனகாசலத்து ஆடி
கூளியோடு ஆடி குவலயத்தே ஆடி
நீடிய நீர் தீ கால் நீள் வானிடை ஆடி
நாளுற அம்பலத்தே ஆடும் நாதனே

மேல்

#2747
மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை
கூரும் இ வானின் இலங்கை குறியுறும்
சாரும் திலை வன தண் மா மலையத்தூடு
ஏறும் சுழுனை இவை சிவபூமியே

மேல்

#2748
பூதலம் மேரு புறத்து ஆன தெக்கணம்
ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில் திரு அம்பலம்
ஏதம் இல் பூதாண்டத்து எல்லையின் ஈறே

மேல்

#2749
அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன் பதி ஆக
பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆக
தெண்டினில் சத்தி திரு அம்பலம் ஆக
கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே

மேல்

#2750
குரானந்த ரேகையாய் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்து தென் திசை சேர்ந்து
புரானந்த போகனாய் பூவையும் தானும்
நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே

மேல்

#2751
ஆதி பரன் ஆட அம் கை கனல் ஆட
ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆட
பாதி மதி ஆட பார் அண்டம் மீது ஆட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே

மேல்

#2752
கும்பிட அம்பலத்து ஆடிய கோன் நடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொருளாகும் சிவலோகம் சேர்ந்துற்றால்
உம்பர மோன ஞானாந்தத்தில் உண்மையே

மேல்

#2753
மேதினி மூவேழ் மிகும் அண்டம் ஓர் ஏழு
சாதகம் ஆகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமோடு அந்த நடானந்த நாற்பத
பாதியோடு ஆடி பரன் இரு பாதமே

மேல்

#2754
இடை பிங்கலை இம வானோடு இலங்கை
நடு நின்ற மேரு நடுவாம் சுழுனை
கடவும் திலை வனம் கைகண்ட மூலம்
படர் ஒன்றி என்னும் பரமாம் பரமே

மேல்

#2755
ஈறு ஆன கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள்
பேறு ஆன வேதாகமமே பிறத்தலான்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே

மேல்

#2756
நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி
வேதத்தில் ஆடி தழல் அந்தம் மீது ஆடி
போதத்தில் ஆடி புவனம் முழுதும் ஆடும்
தீது அற்ற தேவாதி தேவர் பிரானே

மேல்

#2757
தேவரோடு ஆடி திரு அம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனிசனத்தோடு ஆடி
பாவினுள் ஆடி பராசத்தியில் ஆடி
கோவினுள் ஆடிடும் கூத்தப்பிரானே

மேல்

#2758
ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும்
கூறு சமய குருபரன் நான் என்றும்
தேறினர் தெற்கு திரு அம்பலத்து உள்ளே
வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே

மேல்

#2759
அம்பலம் ஆடரங்கு ஆக அதன் மீதே
எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி
உம்பரமாம் ஐந்து நாதத்து ரேகையுள்
தம் பதமாய் நின்று தான் வந்து அருளுமே

மேல்

#2760
ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பல ஆன நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டு ஆட
தேடி உளே கண்டு தீர்ந்து அற்றவாறே

மேல்

#2761
இருதயம்-தன்னில் எழுந்த பிராணன்
கரசரணாதி கலக்கும் படியே
அரதனம் மன்றினில் மாணிக்க கூத்தன்
குரவனாய் எங்கணும் கூத்து உகந்தானே

மேல்

#2762
குரு உரு அன்றி குனிக்கும் உருவம்
அருவுரு ஆவதும் அந்த அருவே
திரிபுரை ஆகி திகழ் தருவாளும்
உரு அருவு ஆகும் உமை அவள் தானே

மேல்

#2763
திரு வழி ஆவது சிற்றம்பலத்தே
குரு வடிவு உள்ளா குனிக்கும் உருவே
உருவருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு
அருள் வழி ஆவதும் அ வழி தானே

மேல்

#2764
நீரும் சிரசிடை பன்னிரண்டு அங்குலம்
ஓடும் உயிரெழுத்து ஓங்கி உதித்திட
நாடு-மின் நாதாந்த நம் பெருமான் உகந்து
ஆடும் இடம் திரு அம்பலம் தானே

மேல்

#2765
வளி மேக மின் வில்லு வானக ஓசை
தெளிய விசும்பில் திகழ்தருவாறு போல்
களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய்
ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே

மேல்

#2766
தீ முதல் ஐந்தும் திசை எட்டும் கீழ் மேலும்
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்
மாயை மா மாயை கடந்து நின்றார் காண
நாயகன் நின்று நடம் செய்யுமாறே

மேல்

#2767
கூத்தன் கலந்திடும் கோல்வளையாளொடும்
கூத்தன் கலந்திடும் கோது இலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோது இலா ஞானத்து
கூத்தனும் கூத்தியும் கூத்து அதின் மேலே

மேல்

#2768
இடம் கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடம் கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படம் கொடு நின்ற இ பல் உயிர்க்கு எல்லாம்
அடங்கலும் தாமாய் நின்று ஆடுகின்றாரே

மேல்

#2769
சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத்து எழும் திரண்டு
ஒத்த ஆனந்தம் ஒரு நடம் ஆமே

மேல்

#2770
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்று பார்க்க ஒளி விடும் மந்திரம்
பற்றுக்கு பற்றாய் பரமன் இருந்திடம்
சிற்றம்பலம் என்று சேர்ந்துகொண்டேனே

மேல்

#2771
அண்டங்கள் தத்துவம் ஆகி சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசனம் ஆகவே
கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே

மேல்

#2772
மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர்
நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை
சென்றது தான் ஒரு பத்து இருநூறு உள
நின்றது தான் நெடு மண்டலம் ஆமே

மேல்

#2773
அண்டம் எழு கோடி பிண்டம் எழு கோடி
தெண் திரை சூழ்ந்த திசைகள் எழு கோடி
எண் திசை சூழ்ந்த இலிங்கம் எழு கோடி
அண்ட நடம் செயும் ஆலயம் தானே

மேல்

#2774
ஆகாசம் ஆம் உடல் அலங்கார் முயலகன்
ஏகாசம் ஆம் திசை எட்டும் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்று ஒளி தான் ஆக
மாகாய மன்றுள் நடம் செய்கின்றானே

மேல்

#2775
அம்பலம் ஆவது அகில சராசரம்
அம்பலம் ஆவது ஆதி பிரான் அடி
அம்பலம் ஆவது அப்பு தீ மண்டலம்
அம்பலம் ஆவது அஞ்செழுத்து ஆமே

மேல்

#2776
கூடிய திண் முழவம் குழல் ஓம் என்று
ஆடிய மானுடர் ஆதி பிரான் என்ன
நாடி நல் கணம் ஆரம் பல் பூதங்கள்
பாடியவாறு ஒரு பாண்டரங்கம் ஆமே

மேல்

#2777
அண்டத்தில் தேவர்கள் அப்பாலை தேவர்கள்
தெண் திரை சூழ் புவிக்கு உள் உள்ள தேவர்கள்
புண்டரிக பத பொன்னம்பல கூத்து
கண்டு சேவித்து கதி பெறுவார்களே

மேல்

#2778
புளி கண்டவர்க்கு புனல் ஊறுமா போல்
களிக்கும் திருக்கூத்து கண்டவர்க்கு எல்லாம்
அளிக்கும் அருள் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும்
ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே

மேல்

#2779
திண்டாடி வீழ்கை சிவானந்தம் ஆவது
உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்து
கண்டார் வரும் குணம் கேட்டார்க்கும் ஒக்குமே

மேல்

#2780
அங்கி தமருகம் அக்கு மாலை பாசம்
அங்குசம் சூலம் கபாலமுடன் ஞானம்
தங்கு பயம் தரு நீலமும் உடன்
மங்கை ஓர் பாகமாய் நடம் ஆடுமே

மேல்

#2781
ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆக
கூடிய பாதம் சிலம்பு கைகொள் துடி
நீடிய நாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறம் அகத்தானே

மேல்

#2782
ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட
இன்புறும் ஏழினும் ஏழு ஐம்பத்தாறு ஆட
அன்பதும் ஆடினான் ஆனந்த கூத்தே

மேல்

#2783
ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழ் இசை நாடகத்தே இசைந்தானே

மேல்

#2784
மூன்றினில் அஞ்சாகி முந்நூற்றறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதல் பன்னீர் மூலமாய்
மூன்றினில் அக்க முடிவாகி முந்தியே
மூன்றிலும் ஆடினான் மோகாந்த கூத்தே

மேல்

#2785
தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை
மா மணி ஈசன் மலர் அடி தாள் இணை
வாமணி அன்பு உடையார் மனத்துள் எழும்
காமணி ஞாலம் கடந்து நின்றானே

மேல்

#2786
புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை
புரிந்தவன் ஆடில் பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல் கண்டு இன்புற்றவாறே

மேல்

#2787
ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர்
ஆதி நடம் ஆடல் ஆரும் அறிந்த பின்
ஆதி நடம் ஆடல் ஆம் அருள் சத்தியே

மேல்

#2788
ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து
அன்புறு கோணம் அசி பதத்து ஆடிட
துன்புறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே
அன்புறு எந்தை நின்று ஆடலுற்றானே

மேல்

#2789
தத்துவம் ஆட சதாசிவம் தான் ஆட
சித்தமும் ஆட சிவசத்தி தான் ஆட
வைத்த சராசரம் ஆட மறை ஆட
அத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தே

மேல்

#2790
இருவரும் காண எழில் அம்பலத்தே
உருவோடு அருவோடு உருபர ரூபமாய்
திருவருள் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே

மேல்

#2791
சிவம் ஆட சத்தியும் ஆட சகத்தில்
அவம் ஆட ஆடாத அம்பரம் ஆட
நவம் ஆன தத்துவ நாதாந்தம் ஆட
சிவம் ஆடும் வேதாந்த சித்தாந்தத்து உள்ளே

மேல்

#2792
நாதத்தின் அந்தமும் நால் போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய் சிவானந்தமும்
தாது அற்ற நல்ல சதா சிவானந்தத்து
நாத பிரமம் சிவநடம் ஆமே

மேல்

#2793
சிவமாதி ஐவர் திண்டாட்டமும் தீர
தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்து
தவமாம் பரன் எங்கும் தானாக ஆடும்
தவமாம் சிவானந்தத்தோர் ஞான கூத்தே

மேல்

#2794
கூடி நின்றான் ஒரு காலத்து தேவர்கள்
வீட நின்றான் விகிர்தா என்னும் நாமத்தை
தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி
ஆட நின்றான் என்னை ஆட்கொண்டவாறே

மேல்

#2795
நாதத்துவம் கடந்து ஆதி மறை நம்பி
பூதத்துவத்தே பொலிந்து இன்பம் எய்தினர்
நேதத்துவமும் அவற்றொடு நேதியும்
பேதப்படா வண்ணம் பின்னி நின்றானே

மேல்

#2796
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவு இலர்
ஆனந்த மா நடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மா நடம் ஆரும் அறிந்த பின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்தம் ஆமே

மேல்

#2797
திருந்து நல் சீ என்று உதறிய கையும்
அருந்தவர் வா என்று அணைத்த மலர் கையும்
பொருந்தில் அமைப்பில் யவ் என்ற பொன் கையும்
திருந்த தீ ஆகும் திரு நிலை மவ்வே

மேல்

#2798
மருவம் துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமல பதமும்
உருவில் சிவாயநம என ஓதே

மேல்

#2799
அரன் துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி-தன்னில் அறையில் சங்காரம்
அரனுற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரன் அடி என்றும் அனுக்கிரகம் என்னே

மேல்

#2800
தீ திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி
கூத்தனை கண்ட அ கோமள கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடை செல்ல
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே

மேல்

#2801
நந்தியை எந்தையை ஞான தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அது கடந்து
அந்தர வானத்தின் அப்புறத்து அ பர
சுந்தர கூத்தனை என் சொல்லும் ஆறே

மேல்

#2802
சீய குரு நந்தி திரு அம்பலத்திலே
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்பொடும் அ தன்மை
ஆயுறு மேனி அணை புகலாமே

மேல்

#2803
தான் ஆன சத்தியும் தற்பரையாய் நிற்கும்
தானாம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை
ஞானாதி பேதம் நடத்து நடித்து அருள்
ஆனால் அரன் அடி நேயத்ததாமே

மேல்

#2804
உள்ளத்துள் ஓம் என ஈசன் ஒருவனை
உள்ளத்துளே அங்கியாய ஒருவனை
உள்ளத்துளே நீதியாய ஒருவனை
உள்ளத்துளே உடல் ஆகாயம் ஆமே

மேல்

#2805
பெருநிலமாய் அண்டமாய் அண்டத்து அப்பால்
குருநிலமாய் நின்ற கொள்கையான் ஈசன்
பெருநிலமாய் நின்று தாங்கிய தாளோன்
அருநிலையாய் நின்ற ஆதி பிரானே

மேல்

#2806
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியை குலைத்தது தானே

மேல்

#2807
பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர் சோதி
அயனொடு மால் அறியா வகை நின்றிட்டு
உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே

மேல்

#2808
அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினில் பேரொளி மூன்றும்
அறியாது அடங்கிடில் அத்தன் அடிக்குள்
பிறியாது இருக்கில் பெருங்காலம் ஆமே

மேல்

#2809
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டு அங்கு இருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்து நின்று அப்புறம்
ஆகாசமாய் அங்கி வண்ணனும் ஆமே

மேல்

#2810
உயிர்க்கின்றவாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற-போது
குயில் கொண்ட பேதை குலாவி உலாவி
வெயில் கொண்டு என் உள்ளம் வெளியது ஆமே

மேல்

#2811
நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும் பதி நந்தி
நணுகிய மின் ஒளி சோதி வெளியை
பணியின் அமுதம் பருகலும் ஆமே

மேல்

#2812
புறத்துள் ஆகாசம் புவனம் உலகம்
அகத்துள் ஆகாசம் எம் ஆதி அறிவு
சிவத்துள் ஆகாசம் செழும் சுடர் சோதி
சகத்துள் ஆகாசம் தானம் சமாதியே

மேல்

#2813
மன சந்தியில் கண்ட மன் நனவு ஆகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீது ஒழிவு என்ப
இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே

மேல்

#2814
கரி அட்ட கையன் கபாலம் கையேந்தி
எரியும் இளம்பிறை சூடும் எம்மானை
அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்
கரியன்-கொல் சேயன்-கொல் காண்கின்றிலேனே

மேல்

#2815
மிக்கார் அமுது உண்ண நஞ்சு உண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறியே சென்று
புக்கால் அருளும் பொன் உரை ஞானத்தை
நக்கார் கழல் வழி நாடு-மின் நீரே

மேல்

#2816
விளக்கை பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்கு உள்ளே விளக்கினை தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்கு உடையான் கழல் மேவலும் ஆமே

மேல்

#2817
தத்துவம் எங்கு உண்டு தத்துவன் அங்கு உண்டு
தத்துவம் எங்கு இல்லை தத்துவன் அங்கு இல்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்த பின்
தத்துவன் அங்கே தலைப்படும் தானே

மேல்

#2818
விசும்பு ஒன்று தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே
அசும்பின்-நின்று ஊறியது ஆரமுதாகும்
பசும்பொன் திகழும் படர் சடை மீதே
குசும்ப மலர் கந்தம் கூடி நின்றானே

மேல்

#2819
முத்தின் வயிரத்தின் முந்நீர் பவளத்தின்
கொத்தும் பசும்பொன்னின் தூ ஒளி மாணிக்கம்
ஒத்து உயர் அண்டத்து உள் அமர் சோதியை
எத்தன்மை வேறு என்று கூறு செய்வீரே

மேல்

#2820
நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும்
நான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பது
நான் என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான் என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே

மேல்

#2821
ஞானத்தின் நல் நெறி நாதாந்த நல் நெறி
ஞானத்தின் நல் நெறி நான் என்று அறிவோர்தல்
ஞானத்தின் நல் யோக நல் நிலையே நிற்றல்
ஞானத்தின் நல் மோனம் நாதாந்த வேதமே

மேல்

#2822
உய்ய வல்லார்கட்கு உயிர் சிவஞானமே
உய்ய வல்லார்கட்கு உயிர் சிவதெய்வமே
உய்ய வல்லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்ய வல்லார் அறிவு உள்ளறிவு ஆமே

மேல்

#2823
காண வல்லார்க்கு அவன் கண்ணின் மணி ஒக்கும்
காண வல்லார்க்கு கடலின் அமுது ஒக்கும்
பேண வல்லார்க்கு பிழைப்பு இலன் பேர் நந்தி
ஆண வல்லார்க்கே அவன் துணை ஆமே

மேல்

#2824
ஓம் எனும் ஓரெழுத்துள் நின்ற ஓசை போல்
மேல் நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய் நின்ற செஞ்சுடர் எம் பெருமான் அடி
ஆய் நின்ற தேவர் அகம் படி ஆமே

மேல்

#2825
எ பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழ் உள முப்பாழும் முன்னியே
இ பாழும் இன்னவாறு என்பதில் இலா இன்பத்து
தற்பர ஞானானந்தம் தான் அது ஆகுமே

மேல்

#2826
தொம்பதம் தற்பதம் சொன்ன துரியம் போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்
அம்புவி உன்னா அதிசூக்கம் அப்பாலை
செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே

மேல்

#2827
மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மா சோபை
அன்னதோடு ஒப்பமிடல் ஒன்றாம் மாறது
இன்னிய உற்பலம் ஒண் சீர் நிறம்மணம்
பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே

மேல்

#2828
சத்தி சிவன் பரஞானமும் சாற்றும்-கால்
உய்த்த அனந்தம் சிவம் உயர் ஆனந்தம்
வைத்த சொரூபத்த சத்தி வரு குரு
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே

மேல்

#2829
உரு உற்பலம் நிறம் ஒண் மணம் சோபை
தர நிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில்
மருவ சிவம் என்ற மா முப்பதத்தின்
சொருபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே

மேல்

#2830
நினையும் அளவின் நெகிழ வணங்கி
புனையில் அவனை பொதியலும் ஆகும்
எனையும் எம் கோன் நந்தி தன் அருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித்தனனே

மேல்

#2831
பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமுதாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள் புக
சீலம் மயிர்க்கால்-தொறும் தேக்கிடுமே

மேல்

#2832
அமரத்துவம் கடந்து அண்டம் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனி மொழி மாதர்
துவள் அற்ற சோதி தொடர்ந்து நின்றானே

மேல்

#2833
மத்திமம் ஆறாறும் மாற்றி மலம் நீக்கி
சுத்தம் அது ஆகும் துரியத்து துரிசு அற்று
பெத்தம் அற சிவம் ஆகி பிறழுற்று
சத்திய ஞானானந்தம் சார்ந்தனன் ஞானியே

மேல்

#2834
சிவமாய் அவம் ஆன மும்மலம் தீர
பவம் ஆன முப்பாழை பற்று அற பற்ற
தவம் ஆன சத்திய ஞானானந்தத்தே
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே

மேல்

#2835
பரம குரவன் பரம் எங்கும் ஆகி
திரமுற எங்கணும் சேர்ந்து ஒழிவு அற்று
நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத்து அணைந்து நின்றானே

மேல்

#2836
குலைக்கின்ற நீரில் குவலய நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாச
நிலத்திடை வானிடை நீண்டு அகன்றானை
வரைத்து வலம்செயும் ஆறு அறியேனே

மேல்

#2837
அங்கு நின்றான் அயன் மால் முதல் தேவர்கள்
எங்கு நின்றாரும் இறைவன் என்று ஏத்துவர்
தங்கி நின்றான் தனிநாயகன் எம் இறை
பொங்கி நின்றான் புவனாபதி தானே

மேல்

#2838
சமைய சுவடும் தனையறியாமல்
கமை அற்ற காமாதி காரணம் எட்டும்
திமிர செயலும் தெளிவுடன் நின்றோர்
அமரர்க்கு அதிபதி ஆகி நிற்பாரே

மேல்

#2839
மூவகை தெய்வத்து ஒருவன் முதல் உரு
வாய் அது வேறு ஆம் அது போல் அணு பரன்
சேய சிவம் மு துரியத்து சீர் பெற
ஏயும் நெறி என்று இறைநூல் இயம்புமே

மேல்

#2840
உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும்
கரு அன்றியே நின்று தான் கரு ஆகும்
அரு அன்றியே நின்ற மாய பிரானை
குரு அன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே

மேல்

#2841
உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே

மேல்

#2842
பரஞ்சோதி ஆகும் பதியினை பற்றா
பரஞ்சோதி எனுள் படிந்ததன் பின்னை
பரஞ்சோதி உண்ணான் படியப்படிய
பரஞ்சோதி-தன்னை பறைய கண்டேனே

மேல்

#2843
சொரூபம் உருவம் குணம் தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கு மதித்த
சொரூப குரவன் சுகோதயம் தானே

மேல்

#2844
உரை அற்ற ஆனந்த மோன சொரூபத்தன்
கரை அற்ற சத்தியாதி காணில் அகார
மருவுற்று உகாரம் மகாரமது ஆக
உரை அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே

மேல்

#2845
தலைநின்ற தாழ்வரை மீது தவம்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லா பிறவி கடந்து
கலைநின்ற கள்வனை கண்டுகொண்டேனே

மேல்

#2846
ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமாறு அறிந்தேன் புகும் ஆறும் ஈது என்றே
ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை
நாம் ஆம் முதல்வனும் நான் எனல் ஆமே

மேல்

#2847
செற்றில் என் சீவில் என் செஞ்சாந்து அணியில் என்
மத்தகத்தே உளி நாட்டி மறிக்கில் என்
வித்தகன் நந்தி விதிவழி அல்லது
தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே

மேல்

#2848
தான் முன்னம் செய்த விதிவழி தான் அல்லால்
வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை
கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று
நான் முன்னம் செய்ததே நல் நிலம் ஆனதே

மேல்

#2849
ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக்கொண்டு சுமந்து அறிவார் இல்லை
நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியை
பேறு இட்டு என் உள்ளம் பிரியகிலாவே

மேல்

#2850
வான் நின்று இடிக்கில் என் மா கடல் பொங்கில் என்
கான் நின்ற செந்தீ கலந்து உடன் வேகில் என்
தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என்
நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே

மேல்

#2851
ஆனை துரக்கில் என் அம்பு ஊடு அறுக்கில் என்
கானத்து உழுவை கலந்து வளைக்கில் என்
ஏனை பதியினில் எம் பெருமான் வைத்த
ஞானத்து உழவினை நான் உழுவேனே

மேல்

#2852
கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன்
நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை
வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும்
பாடது நந்தி பரிசு அறிவார்க்கே

மேல்

#2853
சிந்தை அது என்ன சிவன் என்ன வேறு இல்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளிய தெளிய வல்லார்கட்கு
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே

மேல்

#2854
வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
நோக்கு-மின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது
போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே

மேல்

#2855
பரனாய் பராபரன் ஆகி அப்பால் சென்று
உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய்
தரனாய் தனாது என ஆறு அறி ஒண்ணா
அரனாய் உலகில் அருள் புரிந்தானே

மேல்

#2856
ஓதும் மயிர்க்கால்-தொறும் அமுது ஊறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்று அகன்று அப்பாலை
வேதம் அது ஓதும் சொரூபி-தன் மேன்மையே

மேல்

#2857
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன்-தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே

மேல்

#2858
துன்னி நின்றான்-தன்னை உன்னி முன்னா இரு
முன்னி அவர் தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றது ஓர் தேற்றத்தன் ஆமே

மேல்

#2859
மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதி தலைவன் இணை_இலி
பொன்னுற்ற மேனி புரிசடை நந்தியும்
என்னுற்று அறிவான் என் விழித்தானே

மேல்

#2860
சத்திய ஞான தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தின் இல்லா சிவானந்த பேரொளி
சுத்த பிரம துரியம் துரியத்துள்
உய்த்த துரியத்து உறு பேரொளியே

மேல்

#2861
பரன் அல்ல நீடும் பராபரன் அல்ல
உரன் அல்ல மீது உணர் ஒண் சுடர் அல்ல
தரன் அல்ல தான் அவையாய் அல்ல ஆகும்
அரன் அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே

மேல்

#2862
முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரம்-தன்னுள் நின்று மா
சத்தியுள் நின்றோர்க்கு தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே

மேல்

#2863
துரிய அதீதம் சொல் அறும் பாழ் ஆம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளாம் மிளிரும் தன்
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே

மேல்

#2864
ஓதிய முத்தி அடைவே உயிர் பரம்
பேதம் இல் அ சிவம் எய்தும் துரியமோடு
ஆதி சொரூபம் சொரூபத்தது ஆகவே
ஏதம் இலா நிருவாணம் பிறந்ததே

மேல்

#2865
பற்று அற்றவர் பற்றி நின்ற பரம்பொருள்
கற்று அற்றவர் கற்று கருதிய கண்_நுதல்
சுற்று அற்றவர் சுற்றி நின்ற என் சோதியை
பெற்று உற்றவர்கள் பிதற்று ஒழிந்தாரே

மேல்

#2866
காயம் பலகை கவறு ஐந்து கண் மூன்றாய்
ஆயம் பொருவது ஓர் ஐம்பத்தோர் அக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாய கவற்றின் மறைப்பு அறியேனே

மேல்

#2867
தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி
மாறி கிடக்கும் வகை அறிவார் இல்லை
மாறி கிடக்கும் வகை அறிவாளர்க்கு
ஊறி கிடந்தது என் உள்ளன்பு தானே

மேல்

#2868
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனை உள
ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அ பனை
ஏறலுற்றேன் கடல் ஏழும் கண்டேனே

மேல்

#2869
வழுதலை வித்திட பாகல் முளைத்தது
புழுதியை தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண்டு ஓடினார் தோட்ட குடிகள்
முழுதும் பழுத்தது வாழை கனியே

மேல்

#2870
ஐ என்னும் வித்தினில் ஆனை விளைப்பது ஓர்
செய் உண்டு செய்யின் தெளிவு அறிவார் இல்லை
மை அணி கண்டனன் மனம் பெறின் அ நிலம்
பொய் ஒன்றும் இன்றி புக எளிது ஆமே

மேல்

#2871
பள்ள செய் ஒன்று உண்டு பாழ் செய் இரண்டு உள
கள்ள செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ள செய் அங்கே உழவு செய்வார்கட்கு
வெள்ள செய் ஆகி விளைந்தது தானே

மேல்

#2872
மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாம் அணி கோலி தறியுற பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவில் செறு உழார்
கால் அணை கோலி களர் உழுவாரே

மேல்

#2873
ஏற்றம் இரண்டு உள ஏழு துரவு உள
மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர்
பாத்தியில் பாயாது பாழ் பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்தது ஓர் கோழிப்புள் ஆமே

மேல்

#2874
பட்டி பசுக்கள் இருபத்துநால் உள
குட்டி பசுக்கள் ஓர் ஏழு உள ஐந்து உள
குட்டி பசுக்கள் குட பால் சொரியினும்
பட்டி பசுவே பனவற்கு வாய்த்ததே

மேல்

#2875
ஈற்று பசுக்கள் இருபத்துநால் உள
ஊற்று பசுக்கள் ஒரு குடம் பால் போதும்
காற்று பசுக்கள் கறந்து உண்ணும் காலத்து
மாற்று பசுக்கள் வரவு அறியோமே

மேல்

#2876
தட்டான் அகத்தில் தலை ஆன மச்சின் மேல்
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் பட வேண்டி வாய்மை மடித்திட்டு
தட்டான் அதனை தகைந்துகொண்டானே

மேல்

#2877
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி
திரிக்கின்ற ஒட்டம் சிக்கென கட்டி
வரிக்கின்ற நல்லான் கறவையை பூட்டில்
விரிக்கின்ற வெள்ளரி வித்து வித்து ஆமே

மேல்

#2878
இடா கொண்டு தூவி எரு இட்டு வித்தி
கிடா கொண்டு பூட்டி கிளறி முளையை
மிடா கொண்டு சோறு அட்டு மெள்ள விழுங்கார்
கிடா கொண்டு செந்நெல் அறுக்கின்றவாறே

மேல்

#2879
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து அது
விளைந்து கிடந்தது மேலைக்கு காதம்
விளைந்து விளைந்து விளைந்து கொள்வார்க்கு
விளைந்து கிடந்தது மேவு முக்காதமே

மேல்

#2880
களர் உழுவார்கள் கருத்தை அறியோம்
களர் உழுவார்கள் கருதலும் இல்லை
களர் உழுவார்கள் களரின் முளைத்த
வளர் இள வஞ்சியின் மாய்தலும் ஆமே

மேல்

#2881
கூப்பிடு கொள்ளா குறுநரி கொட்டகத்து
ஆப்பு இடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாள் பட நின்று நலம் புகுந்து ஆயிழை
ஏற்பட இல்லத்து இனிது இருந்தானே

மேல்

#2882
மலை மேல் மழை பெய்ய மான் கன்று துள்ள
குலை மேல் இருந்த கொழும் கனி வீழ
உலை மேல் இருந்த உறுப்பு என கொல்லன்
முலை மேல் அமிர்தம் பொழிய வைத்தானே

மேல்

#2883
பார்ப்பான் அகத்திலே பால் பசு ஐந்து உண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்து திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசு ஐந்தும் பாலா சொரியுமே

மேல்

#2884
ஆ மாக்கள் ஐந்தும் அரி ஏறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமா குரங்கு கொளில் தம் மனத்து உள்ளன
மூவா கடா விடின் மூட்டுகின்றாரே

மேல்

#2885
எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை
தெருளாத கன்னி தெளிந்து இருந்து ஓத
மலராத பூவின் மணத்தின் மதுவை
பிறவாத வண்டு மணம் உண்டவாறே

மேல்

#2886
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய் வித்தும்
கூகின்ற நாவலின் கூழை தரும் கனி
ஆகின்ற பைங்கூழ் அவை உண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்தி பெற்றாரே

மேல்

#2887
மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு உண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர்
பாம்பு உண்டு பாம்பை துரத்தின் பார் இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்றவாறே

மேல்

#2888
பத்து பரும் புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அ தலை ஐவர் அமர்ந்து நின்றாரே

மேல்

#2889
இரண்டு கடா உண்டு இ ஊரின் உள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்தி பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒரு கடா ஆமே

மேல்

#2890
ஒத்த மன கொல்லை உள்ளே சமன் கட்டி
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்த கயிறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்ப நின்றாரே

மேல்

#2891
கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையை கூகை நணுகல் உறுதலும்
கூகையை கண்டு எலி கூப்பிடும் ஆறே

மேல்

#2892
குலைக்கின்ற நல் நகையாம் கொங்கு உழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்கு புறம் எனில் ஓடும் இருக்கும்
புலைக்கு பிறந்தவை போகின்றவாறே

மேல்

#2893
காடு புக்கு ஆர் இனி காணார் கடு வெளி
கூடு புக்கு ஆனது ஐந்து குதிரையும்
மூடு புக்கு ஆனது ஆறு உள ஒட்டகம்
மூடு புகா விடின் மூவணை ஆமே

மேல்

#2894
கூறையும் சோறும் குழாய் அகத்து எண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையில் உற்ற பறக்கின்ற சீலை போல்
ஆறை குழியில் அழுந்துகின்றாரே

மேல்

#2895
துருத்தியுள் அக்கரை தோன்று மலை மேல்
விருத்தி கண்காணிக்க போவார் முப்போதும்
வருத்தி உள்நின்ற மலையை தவிர்ப்பான்
ஒருத்தி உள்ளாள் அவர் ஊர் அறியோமே

மேல்

#2896
பருந்தும் கிளியும் படு பறை கொட்ட
திருந்திய மாதர் திருமணப்பட்டார்
பெருந்தவ பூதம் பெறலுருவாகும்
இருந்திய பேற்றினில் இன்புறுவாரே

மேல்

#2897
கூடும் பறவை இரை கொத்தி மற்று அதன்
ஊடு புக்கு உண்டி அறுக்குறில் என் ஒக்கும்
சூடு எறி நெய் உண்டு மை கான்றிடுகின்ற
பாடு அறிவார்க்கு பயன் எளிது ஆமே

மேல்

#2898
இலை இல்லை பூ உண்டு இன வண்டு இங்கு இல்லை
தலை இல்லை வேர் உண்டு தாள் இல்லை பூவின்
குலை இல்லை கொய்யும் மலர் உண்டு சூடும்
தலை இல்லை தாழ்ந்த கிளை புலராதே

மேல்

#2899
அக்கரை நின்றது ஓர் ஆல மரம் கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வார்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டு போய்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்றவாறே

மேல்

#2900
கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இரு காதம்
காப்பு இடு கள்ளர் கலந்து நின்றார் உளர்
காப்பு இடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டு
கூப்பிடு மீண்டது ஓர் கூரை கொண்டாரே

மேல்

#2901
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியது ஓர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்து உண்ண மாட்டாதார்
எட்டி பழத்துக்கு இளைக்கின்றவாறே

மேல்

#2902
பெடை வண்டும் ஆண் வண்டும் பீடிகை வண்ண
குடை கொண்ட பாசத்து கோலம் உண்டானும்
கடை வண்டு தான் உண்ணும் கண்கலந்திட்ட
பெடை வண்டு தான் பெற்றது இன்பமும் ஆமே

மேல்

#2903
கொல்லையில் மேயும் பசுக்களை செய்வது என்
எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே

மேல்

#2904
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தின் உள்ளே விளங்க வல்லார்கட்கு
குட்டத்தில் இட்டது ஓர் கொம்மட்டி ஆமே

மேல்

#2905
ஆறு பறவைகள் ஐந்து அகத்து உள்ளன
நூறு பறவை நுனி கொம்பின் மேலன
ஏறும் பெரும் பதி ஏழும் கடந்த பின்
மாறுதல் இன்றி மனை புகல் ஆமே

மேல்

#2906
கொட்டனம் செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டன பூமி மருவி வந்து ஊறிடும்
கட்டனம் செய்து கயிற்றால் தொழுமி உள்
ஒட்டணம் செய்து ஒளி யாவர்க்கும் ஆமே

மேல்

#2907
ஏழு வளைகடல் எட்டு குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
தாழும் இருநிலம் தன்மை அது கண்டு
வாழ நினைக்கில் அது ஆலயம் ஆமே

மேல்

#2908
ஆலிங்கனம் செய்து அகம் சுட சூலத்து
சால் இங்கு அமைத்து தலைமை தவிர்த்தனர்
கோல் இங்கு அமைத்த பின் கூப பறவைகள்
மால் இங்கன் வைத்தது முன்பின் வழியே

மேல்

#2909
கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிது என்பர்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிது என்பர் ஈசன் அருளே

மேல்

#2910
கயல் ஒன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயல் ஒன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறை ஒன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறை ஒன்று கண்ட துருவம் பொன் ஆமே

மேல்

#2911
கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுகின்றால் போல் அல்ல நாதனார்
பாரை கிடக்க படிகின்றவாறே

மேல்

#2912
கொல்லை முக்காதமும் காடு அரை காதமும்
எல்லை மயங்கி கிடந்த இரு நெறி
எல்லை மயங்காது இயங்க வல்லார்கட்கு
ஒல்லை கடந்து சென்று ஊர் புகல் ஆமே

மேல்

#2913
உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து
எழு மழை பெய்யாது இருநில செவ்வி
தழுவி வினை சென்று தான் பயவாது
வழுவாது போவன் வளர்சடையோனே

மேல்

#2914
பதுங்கிலும் பாய் புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண் கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார் களி ஆரமுது ஊற
பொதுங்கிய ஐவரை போய் வளைத்தானே

மேல்

#2915
தோணி ஒன்று ஏறி தொடர்ந்து கடல் புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர் மகன்
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலை தளர்ந்து
ஆலி பழம் போல் அளிக்கின்ற அப்பே

மேல்

#2916
முக்காதம் ஆற்றிலே மூன்று உள வாழைகள்
செக்கு பழுத்த திரிமலம் காய்த்தன
பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்கு மலர் உண்டு நடுவு நின்றாரே

மேல்

#2917
அடியும் முடியும் அமைந்தது ஓர் ஆத்தி
முடியும் நுனியின்-கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐயைந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ்வாறே

மேல்

#2918
பன்றியும் பாம்பும் பசு முசு வானரம்
தென்றி கிடந்த சிறுநரி கூட்டத்து
குன்றாமை கூடி தராசின் நிறுத்த பின்
குன்றி நிறையை குறைகின்றவாறே

மேல்

#2919
மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு உண்டு மொட்டினை
கட்டு விட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
பற்று விட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட்டார்க்கு அன்றி காண ஒண்ணாதே

மேல்

#2920
நீர் இன்றி பாயும் நிலத்தினில் பச்சை ஆம்
யாவரும் என்றும் அறிய வல்லார் இல்லை
கூரு மழை பொழியாது பொழி புனல்
தேரின் இ நீர்மை திடரில் நில்லாதே

மேல்

#2921
கூகை குருந்தம் அது ஏறி குணம் பயில்
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே

மேல்

#2922
வாழையும் சூரையும் வந்து இடம் கொண்டன
வாழைக்கு சூரை வலிது வலிது என்பர்
வாழையும் சூரையும் வன் துண்டம் செய்திட்டு
வாழை இடம் கொண்டு வாழ்கின்றவாறே

மேல்

#2923
நிலத்தை பிளந்து நெடும் கடல் ஓட்டி
புனத்து குறவன் புணர்ந்த கொழு மீன்
விலக்கு-மின் யாவர்க்கும் வேண்டில் குறையாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே

மேல்

#2924
தளிர்க்கும் ஒரு பிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பது ஓர் சங்கு உண்டு வேந்தனை நாடி
களிக்கும் குசவர்க்கும் காவிதியார்க்கும்
அளிக்கும் பதத்து ஒன்று ஆய்ந்து கொள்வார்க்கே

மேல்

#2925
குடைவிட்டு போந்தது கோயில் எருமை
படை கண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையா நெடும் கடை ஐந்தொடு நான்கே

மேல்

#2926
போகின்ற எட்டும் புகுகின்ற பத்து எட்டும்
ஆகி படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே

மேல்

#2927
பாசி படர்ந்து கிடந்த குளத்திடை
கூசி இருக்கும் குருகு இரை தேர்ந்து உண்ணும்
தூசி மறவன் துணை வழி எய்திட
பாசம் கிடந்து பதைக்கின்றவாறே

மேல்

#2928
கும்ப மலை மேல் எழுந்தது ஓர் கொம்பு உண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பது ஓர் காற்று உண்டு
வம்பாய் மலர்ந்தது ஓர் பூ உண்டு அ பூவுக்குள்
வண்டாய் கிடந்து மணம் கொள்வன் ஈசனே

மேல்

#2929
வீணையும் தண்டும் விரவி இசை முரல்
தாணுவும் மேவி தகுதலை பெய்தது
வாணிபம் சிக்கென்று அது அடையா முன்னம்
காணியும் அங்கே கலக்கின்றவாறே

மேல்

#2930
கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது
அங்கு புக்கால் அன்றி ஆய்ந்து அறிவார் இல்லை
திங்கள் புக்கால் இருள் ஆவது அறிந்திலர்
தங்கு புக்கார் சிலர் தாபதர் தாமே

மேல்

#2931
போதும் புலர்ந்தது பொன் நிறம் கொண்டது
தாது அவிழ் புன்னை தயங்கும் இரு கரை
ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது
மாதர் இருந்தோர் மண்டலம் தானே

மேல்

#2932
கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே
காமுற்று அகத்து இடுவர் கடை-தொறும்
ஈவற்ற எல்லை விடாது வழி காட்டி
யாமுற்ற தட்டினால் ஐந்து உண்ணலாமே

மேல்

#2933
தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழுந்த-கால்
நாட்டின் புறத்தில் நரி அழைத்து என் செய்யும்
மூட்டி கொடுத்த முதல்வனை முன்னிட்டு
காட்டிக்கொடுத்தவர் கைவிட்டவாறே

மேல்

#2934
புலர்ந்தது போது என்று புட்கள் சிலம்ப
புலர்ந்தது போது என்று பூங்கொடி புல்லி
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே

மேல்

#2935
தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது
ஆணி மிதித்து நின்று ஐவர் கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை
ஆணி கலங்கில் அது இது ஆமே

மேல்

#2936
நின்றார் இருந்தார் கிடந்தார் என இல்லை
சென்றார்-தம் சித்தம் மோன சமாதியாம்
மன்று ஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்று உண்டு
சென்று ஆங்கு அணைந்தவர் சேர்கின்றவாறே

மேல்

#2937
காட்டும் குறியும் கடந்தவர் காரணம்
ஏற்றின் புறத்தில் எழுதி வைத்து என் பயன்
கூட்டும் குரு நந்தி கூட்டிடின் அல்லது
ஆட்டின் கழுத்தில் அதர் கிடந்து அற்றே

மேல்

#2938
உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே

மேல்

#2939
மறப்பதுவாய் நின்ற மாய நல் நாடன்
பிறப்பினை நீங்கிய பேரருளாளன்
சிறப்பு உடையான் திரு மங்கையும் தானும்
உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே

மேல்

#2940
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி
அரிய துரியம் அதில் மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரை இல் அநுபூதிகத்து உள்ளானே

மேல்

#2941
உருவு_இலி ஊன்_இலி ஊனம் ஒன்று இல்லி
திரு_இலி தீது_இலி தேவர்க்கு தேவன்
பொரு_இலி பூத படை உடையாளி
மரு_இலி வந்து என் மனம் புகுந்தானே

மேல்

#2942
கண்டு அறிவார் இல்லை காயத்தின் நந்தியை
எண்திசையோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டம் கடந்த அளவு இலா ஆனந்த
தொண்டர் முகந்த துறை அறியோமே

மேல்

#2943
தற்பரம் அல்ல சதாசிவன் தான் அல்ல
நிட்களம் அல்ல சகள நிலை அல்ல
அற்புதம் ஆகி அநுபோக காமம் போல்
கற்பனை இன்றி கலந்து நின்றானே

மேல்

#2944
முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்கு தாய் தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல் என்றால் சொல்லும் ஆறு எங்ஙனே

மேல்

#2945
அப்பினில் உப்பு என அத்தன் அணைந்திட்டு
செப்பு பராபரம் சேர் பரமும் விட்டு
கப்புறு சொற்பதம் ஆள கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே

மேல்

#2946
கண்டார்க்கு அழகு இது காஞ்சிரத்தின் பழம்
தின்றார்க்கு அறியலாம் அ பழத்தின் சுவை
பெண் தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம் பல தானே

மேல்

#2947
நந்தி இருந்தான் நடுவுள் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியின் உள்ளே உதித்து எழும் சோதியை
புந்தியினாலே புணர்ந்து கொண்டேனே

மேல்

#2948
விதறு படா வண்ணம் வேறு இருந்து ஆய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்து
கதறிய பாழை கடந்து அந்த கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே

மேல்

#2949
வாடா மலர் புனை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாள்-தொறும் இன்புற
சேடார் கமல செழும் சுடருள் சென்று
நாடார் அமுதுற நாடார் அமுதமே

மேல்

#2950
அதுக்கு என்று இருவர் அமர்ந்த சொல் கேட்டும்
பொதுக்கென காமம் புலப்படுமா போல்
சதுக்கென்று வேறே சமைந்தாரை காண
மது கொன்றை தாரான் வளம் தரும் அன்றே

மேல்

#2951
தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்து உடன்
வானும் அழிந்து மனமும் அழிந்து பின்
நானும் அழிந்தமை நான் அறியேனே

மேல்

#2952
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றி
பொருளில் பொருளாய் பொருந்த உள் ஆகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கல் மனம் உற்று நின்றேனே

மேல்

#2953
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றி நின்றே பல ஊழி கண்டேனே

மேல்

#2954
தான் வரைவு அற்ற பின் ஆரை வரைவது
தான் அவன் ஆன பின் ஆரை நினைவது
காமனை வென்ற கண்ணாரை உகப்பது
தூ மொழி வாசகம் சொல்லு-மின் நீரே

மேல்

#2955
உரை அற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரை அற்றது ஒன்றை கரை காணல் ஆகுமோ
திரை அற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்கு
புரை அற்று இருந்தான் புரிசடையோனே

மேல்

#2956
மன மாயை மாயை இ மாயை மயக்க
மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை
பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனை ஆய்ந்து இருப்பது தத்துவம் தானே

மேல்

#2957
மலம் இல்லை மாசு இல்லை மானாபிமானம்
குலம் இல்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலம் இல்லை நந்தி ஞானத்தினாலே
பல மன்னி அன்பில் பதித்து வைப்போர்க்கே

மேல்

#2958
ஒழிந்தேன் பிறவி உறவு என்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்று ஆனேன்
அழிந்து ஆங்கு இனி வரு மார்க்கமும் வேண்டேன்
செழும் சார்பு உடைய சிவனை கண்டேனே

மேல்

#2959
ஆலை கரும்பும் அமுதும் அக்காரமும்
சோலை தண்ணீரும் உடைத்து எங்கள் நாட்டிடை
பீலி கண்ணன் அன்ன வடிவு செய்வாள் ஒரு
கோல பெண்ணாட்கு குறை ஒன்றும் இல்லையே

மேல்

#2960
ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது இனி
சீரார் பிரான் வந்து என் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவது அல்லால் இனி
யார் பாடும் சாரா அறிவு அறிந்தேனே

மேல்

#2961
பிரிந்தேன் பிரமன் பிணித்தது ஓர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில் மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின்றேனே

மேல்

#2962
ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும்
ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது
நன்று கண்டீர் நல் நமச்சிவாய பழம்
தின்று கண்டேற்கு இது தித்தித்தவாறே

மேல்

#2963
சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்
வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவி தியக்கு அறுத்தானே

மேல்

#2964
பண்டு எங்கள் ஈசன் நெடுமால் பிரமனை
கண்டு அங்கு இருக்கும் கருத்து அறிவார் இல்லை
விண்டு அங்கே தோன்றி வெறு மனம் ஆயிடில்
துண்டு அங்கு இருந்தோர் தூறது ஆமே

மேல்

#2965
அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது
அன்னையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை
அன்னையும் அத்தனும் யானும் உடன் இருந்து
அன்னையும் அத்தனை யான் புரந்தேனே

மேல்

#2966
கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்ட தலைவரும் ஆதியும்
எண்திசையோரும் வந்து என் கைத்தலத்துளே
உண்டனர் நான் இனி உய்ந்து ஒழிந்தேனே

மேல்

#2967
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே

மேல்

#2968
நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன்
சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம் வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம் வரும் சிந்தைக்கு தான் எதிர் யாரே

மேல்

#2969
சித்தம் சிவமாய் மலம் மூன்றும் செற்றவர்
சுத்த சிவம் ஆவர் தோயார் மலபந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தான் ஆம் என்று எண்ணியே

மேல்

#2970
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினை பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினை பற்று அறுக்கும் விமலனை தேடி
நினைக்கப்பெறில் அவன் நீளியன் ஆமே

மேல்

#2971
சிவபெருமான் என்று நான் அழைத்து ஏத்த
தவ பெருமான் என்று தான் வந்து நின்றான்
அவ பெருமான் என்னை ஆள் உடை நாதன்
பவ பெருமானை பணிந்து நின்றேனே

மேல்

#2972
பணிந்து நின்றேன் பரமாதி பதியை
துணிந்து நின்றேன் இனி மற்று ஒன்றும் வேண்டேன்
அணிந்து நின்றேன் உடல் ஆதி பிரானை
தணிந்து நின்றேன் சிவன் தன்மை கண்டேனே

மேல்

#2973
என் நெஞ்சம் ஈசன் இணை அடி தாம் சேர்ந்து
முன்னம் செய்து ஏத்த முழுதும் பிறப்பு அறும்
தன் நெஞ்சம் இல்லா தலைவன் தலைவிதி
பின்னம் செய்து என்னை பிணக்கு அறுத்தானே

மேல்

#2974
பிணக்கு அறுத்தான் பிணி மூப்பு அறுத்து எண்ணும்
கணக்கு அறுத்து ஆண்டனன் காண் நந்தி என்னை
பிணக்கு அறுத்து என்னுடன் முன் வந்த துன்பம்
வணக்கல் உற்றேன் சிவம் வந்தது தானே

மேல்

#2975
சிவன் வந்து தேவர் குழாமுடன் கூட
பவம் வந்திட நின்ற பாசம் அறுத்திட்டு
அவன் எந்தை ஆண்டு அருள் ஆதி பெருமான்
அவன் வந்து என் உள்ளே அகப்பட்டவாறே

மேல்

#2976
கரும்பும் தேனும் கலந்த ஓர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுற கண்ட பின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே

மேல்

#2977
உள்ள சரி ஆதி ஒட்டியே மீட்டு என்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம் பாடி
செய்வன எல்லாம் சிவம் ஆக காண்டலால்
கைவளம் இன்றி கரு கடந்தேனே

மேல்

#2978
மீண்டார் கமலத்துள் அங்கி மிக சென்று
தூண்டா விளக்கின் தகளி நெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி
மாண்டான் ஒருவன் கைவந்தது தானே

மேல்

#2979
ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவி முலை கொம்பு அனையாளொடும்
வேறே இருக்கும் விழுப்பொருள் தானே

மேல்

#2980
அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என் பொன் மணியை இறைவனை ஈசனை
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே

மேல்

#2981
மனம் விரிந்து குவிந்தது மா தவம்
மனம் விரிந்து குவிந்தது வாயுவும்
மனம் விரிந்து குவிந்தது மன் உயிர்
மனம் விரிந்து உரை மாண்டது முத்தியே

மேல்

#2982
மாயனை நாடி மன நெடும் தேர் ஏறி
போயின நாடு அறியாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனை
காய மின் நாட்டிடை கண்டு கொண்டேனே

மேல்

#2983
மன்னும் மலை போல் மத வாரணத்தின் மேல்
இன்னிசை பாட இருந்தவர் ஆர் எனில்
முன்னியல் கால முதல்வனார் நாமத்தை
பன்னினர் என்றே பாடு அறிவீரே

மேல்

#2984
முத்தினின் முத்தை முகிழ் இளஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனை காணாது அரற்றுகின்றேன் ஏனையோர்
பித்தன் இவன் என்று பேசுகின்றாரே

மேல்

#2985
புகுந்து நின்றான் எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்து நின்றான் எங்கள் போதறிவாளன்
புகுந்து நின்றான் அடியார்-தங்கள் நெஞ்சம்
புகுந்து நின்றானையே போற்றுகின்றேனே

மேல்

#2986
பூதக்கண்ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேத கண்ணாடியில் வேறே வெளிப்படு
நீதி கண்ணாடி நினைவார் மனத்து உளன்
கீத கண்ணாடியில் கேட்டு நின்றேனே

மேல்

#2987
நாமம் ஓர் ஆயிரம் ஓது-மின் நாதனை
ஏமம் ஓர் ஆயிரத்து உள்ளே இசைவீர்கள்
ஓமம் ஓர் ஆயிரம் ஓத வல்லார் அவர்
காமம் ஓர் ஆயிரம் கண்டு ஒழிந்தாரே

மேல்

#2988
போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை
போற்றுகின்றேன் எம் பிரான் என்று நானே

மேல்

#2989
நானாவிதம் செய்து நாடு-மின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடு சென்று அப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்ட பின்
தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆமே

மேல்

#2990
வந்து நின்றான் அடியார்கட்கு அரும்பொருள்
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனி ஒன்று அல்லது
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே

மேல்

#2991
மண்ணில் கலங்கிய நீர் போல் மனிதர்கள்
எண்ணில் கலங்கி இறைவன் இவன் என்னார்
உண்ணில் குளத்தின் முகந்து ஒருபால் வைத்து
தெண்ணில் படுத்த சிவன் அவன் ஆமே

மேல்

#2992
மெய்த்தவத்தானை விரும்பும் ஒருவர்க்கு
கைத்தலம் சேர்தரு நெல்லி கனி ஒக்கும்
சுத்தனை தூய் நெறியாய் நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே

மேல்

#2993
அமைந்து ஒழிந்தேன் அளவு இல் புகழ் ஞானம்
சமைந்து ஒழிந்தேன் தடுமாற்றம் ஒன்று இல்லை
புகைந்து எழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே

மேல்

#2994
வள்ளல் தலைவனை வான நல் நாடனை
வெள்ள புனல் சடை வேத முதல்வனை
கள்ள பெருமக்கள் காண்பர்-கொலோ என்று
உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து ஆளுமே

மேல்

#2995
ஆளும் மலர் பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடும் வைத்து ஒழிந்தேனே

மேல்

#2996
விரும்பில் அவன் அடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவன் அடி புண்ணிய லோகம்
திருந்தில் அவன் அடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவன் அடி வாழ்த்த வல்லார்க்கே

மேல்

#2997
வானகம் ஊடு அறுத்தான் இ உலகினில்
தானகம் இல்லா தனி ஆகும் போதகன்
கானக வாழை கனி நுகர்ந்து உள்ளுறும்
பானக சோதியை பற்றி நின்றேனே

மேல்

#2998
விதி அது மேலை அமரர் உறையும்
பதி அது பாய் புனல் கங்கையும் உண்டு
துதி அது தொல்வினை பற்று அறுவிக்கும்
பதி அது வவ்விட்டது அந்தமும் ஆமே

மேல்

#2999
மேலது வானவர் கீழது மாதவர்
தான் இடர் மானுடர் கீழது மாதனம்
கானது கூவிள மாலை கமழ் சடை
ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே

மேல்

#3000
சூழும் கரும் கடல் நஞ்சு உண்ட கண்டனை
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு_இலி
யாழும் சுனையும் அடவியும் அங்கு உளன்
வாழும் எழுத்து ஐந்து மன்னனும் ஆமே

மேல்

#3001
உலகம் அது ஒத்து மண் ஒத்து உயர் காற்றை
அலர் கதிர் அங்கி ஒத்து ஆதி பிரானும்
நிலவிய மா முகில் நீர் ஒத்து மீண்ட
செலவு ஒத்து அமர் திகை தேவர் பிரானே

மேல்

#3002
பரிசு அறிந்து அங்கு உளன் அங்கி அருக்கன்
பரிசு அறிந்து அங்கு உளன் மாருதத்து ஈசன்
பரிசு அறிந்து அங்கு உளன் மா மதி ஞான
பரிசு அறிந்து அ நிலம் பாரிக்குமாறே

மேல்

#3003
அந்தம் கடந்தும் அது அதுவாய் நிற்கும்
பந்த உலகினில் கீழோர் பெரும்பொருள்
தந்த உலகு எங்கும் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பு அது ஆமே

மேல்

#3004
முத்தண்ட ஈரண்டமே முடி ஆயினும்
அத்தன் உருவம் உலகு ஏழ் எனப்படும்
அத்தனின் பாதாளம் அளவு உள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்து உணராரே

மேல்

#3005
ஆதி பிரான் நம் பிரான் அ அகல் இட
சோதி பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும்
ஆதி பிரான் அண்டத்து அப்புறம் கீழ் அவன்
ஆதி பிரான் நடு ஆகி நின்றானே

மேல்

#3006
அண்டம் கடந்து உயர்ந்து ஓங்கும் பெருமையன்
பிண்டம் கடந்த பிறவி சிறுமையன்
தொண்டர் நடந்த கனை கழல் காண்-தொறும்
தொண்டர்கள் தூய் நெறி தூங்கி நின்றானே

மேல்

#3007
உலவு செய் நோக்கம் பெரும் கடல் சூழ
நில முழுது எல்லா நிறைந்தனன் ஈசன்
பல முழுது எல்லாம் படைத்தனன் முன்னே
புலம் உழு பொன் நிறம் ஆகி நின்றானே

மேல்

#3008
பராபரன் ஆகி பல் ஊழிகள்-தோறும்
பராபரனாய் இ அகல் இடம் தாங்கி
தரா பரனாய் நின்ற தன்மை உணரார்
நிரா பரன் ஆகி நிறைந்து நின்றானே

மேல்

#3009
போற்றும் பெரும் தெய்வம் தானே பிறர் இல்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்று உடல் தான் என்றது பெரும் தெய்வமாம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே

மேல்

#3010
திகை அனைத்தும் சிவனே அவன் ஆகின்
மிகை அனைத்தும் சொல்ல வேண்டா மனிதரே
புகை அனைத்தும் புறம் அங்கியில் கூடு
முகை அனைத்தும் எங்கள் ஆதி பிரானே

மேல்

#3011
அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்றாகி
இவன்தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனுமாகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே

மேல்

#3012
கலை ஒரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற
தலைவனை நாடு-மின் தத்துவ நாதன்
விலை இல்லை விண்ணவரோடும் உரைப்பன்
நரை இல்லை உள்ளுறும் உள்ளவன் தானே

மேல்

#3013
படிகால் பிரமன் செய் பாசம் அறுத்து
நெடியான் குறுமை செய் நேசம் அறுத்து
செடியார் தவத்தினில் செய் தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்து அன்பு கொண்டானே

மேல்

#3014
ஈசன் என்று எட்டு திசையும் இயங்கின
ஓசையின்-நின்று எழு சத்தம் உலப்பு இலி
தேசம் ஒன்று ஆங்கே செழும் கண்டம் ஒன்பதும்
வாச மலர் போல் மருவி நின்றானே

மேல்

#3015
இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம் இறை
கல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய் மணி
சொல் அரும் சோதி தொடர்ந்து நின்றானே

மேல்

#3016
உள்ளத்து ஒடுங்கும் புறத்துளும் நான் எனும்
கள்ள தலைவன் கமழ் சடை நந்தியும்
வள்ளல் பெருமை வழக்கம் செய்வார்கள்-தம்
அள்ளல் கடலை அறுத்து நின்றானே

மேல்

#3017
மாறு எதிர் வானவர் தானவர் நாள்-தொறும்
கூறுதல் செய்து குரை கழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறத்துளும்
வேறு செய்து ஆங்கே விளக்கு ஒளி ஆமே

மேல்

#3018
விண்ணிலும் வந்த வெளி இலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலன் அல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயன் அல்லன் பான்மையன்
எண்_இல் ஆனந்தமும் எங்கள் பிரானே

மேல்

#3019
உத்தமன் எங்கும் உகக்கும் பெரும் கடல்
நித்தில சோதியன் நீல கருமையன்
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனை
சித்தர் அமரர்கள் தேர்ந்து அறியாரே

மேல்

#3020
நிறம் பல எ வண்ணம் அ வண்ணம் ஈசன்
அறம் பல எ வண்ணம் அ வண்ணம் இன்பம்
மறம் பல எ வண்ணம் அ வண்ணம் பாவம்
புறம் பல காணினும் போற்றகிலாரே

மேல்

#3021
இங்கு நின்றான் அங்கு நின்றனன் எங்கு உளன்
பொங்கி நின்றான் புவனாபதி புண்ணியன்
கங்குல் நின்றான் கதிர் மா மதி ஞாயிறு
எங்கும் நின்றான் மழை போல் இறை தானே

மேல்

#3022
உணர்வதுவாயுமே உத்தமமாயும்
உணர்வது நுண்ணறிவு எம் பெருமானை
புணர்வதுவாயும் புல்லியதாயும்
உணர்வு உடல் அண்டமும் ஆகி நின்றானே

மேல்

#3023
தன் வலியால் உலகு ஏழும் தரித்தவன்
தன் வலியாலே அணுவினும் தான் ஒய்யன்
தன் வலியான் மலை எட்டினும் தான் சாரான்
தன் வலியாலே தடம் கடல் ஆமே

மேல்

#3024
ஏனோர் பெருமையனாகிலும் எம் இறை
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்கு உளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தினின் உள்ளே

மேல்

#3025
பிண்டாலம் வித்தில் எழுந்த பெரு முளை
குண்டாலம் காயத்து குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள்
பிண்டத்து உட்பட்டு பிணங்குகின்றார்களே

மேல்

#3026
ஏயும் சிவபோகம் ஈது அன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியும் தனது எய்தும்
சாயும் தனது வியாபகம் தானே

மேல்

#3027
நான் அறிந்த அ பொருள் நாட இடம் இல்லை
வான் அறிந்து அங்கே வழியுற விம்மிடும்
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்
தான் அறிந்து எங்கும் தலைப்படல் ஆமே

மேல்

#3028
கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடலிடை வாழ்வு கொண்டு உள்ளொளி நாடி
உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனை
கடலின் மலி திரை காணலும் ஆமே

மேல்

#3029
பெரும் சுடர் மூன்றினும் உள்ளொளி ஆகி
தெரிந்து உடலாய் நிற்கும் தேவர் பிரானும்
இரும் சுடர் விட்டிட்டு இகல் இடம் எல்லாம்
பரிந்து உடன் போகின்ற பல் கோரை ஆமே

மேல்

#3030
உறுதியின் உள் வந்த உள் வினை பட்டு
இறுதியின் வீழ்ந்தார் இரணம் அது ஆகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெரும் சுடர் ஆமே

மேல்

#3031
பற்றின் உள்ளே பரம் ஆய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்று ஒளி
நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரும்
மற்றவனாய் நின்ற மாதவன் தானே

மேல்

#3032
தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்
ஏவனும் ஆம் விரி நீர் உலகு ஏழையும்
ஆவனும் ஆம் அமர்ந்து எங்கும் உலகினும்
நாவனும் ஆகி நவிற்றுகின்றானே

மேல்

#3033
நோக்கும் கருடன் நொடி ஏழ் உலகையும்
காக்கும் அவனி தலைவனும் அங்கு உளன்
நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு_இலி
போக்கும் வரவும் புணர வல்லானே

மேல்

#3034
செழும் சடையன் செம்பொனே ஒக்கும் மேனி
ஒழிந்தனவாயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பு இலன் ஈசன்
ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே

மேல்

#3035
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன்-தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே

மேல்

#3036
புலமையின் நாற்றம் இல் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்து நின்றானே

மேல்

#3037
விண்ணவனாய் உலகு ஏழுக்கும் மேல் உளன்
மண்ணவனாய் வலம் சூழ் கடல் ஏழுக்கும்
தண்ணவனாய் அது தன்மையின் நிற்பது ஓர்
கண்ணவன் ஆகி கலந்து நின்றானே

மேல்

#3038
நின்றனன் மாலொடு நான்முகன் தான் ஆகி
நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என
நின்றனன் தானொடு மால் வரை ஏழ் கடல்
நின்றனன் தானே வளம் கனி ஆயே

மேல்

#3039
புவனாபதி மிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர் பெரும் பாகன்
அவனே அரும் பல சீவனும் ஆகும்
அவனே இறை என மாலுற்றவாறே

மேல்

#3040
உள் நின்று ஒளிரும் உலவா பிராணனும்
விண்-நின்று இயங்கும் விரி கதிர் செல்வனும்
மண்-நின்று இயங்கும் வாயுவுமாய் நிற்கும்
கண்-நின்று இலங்கும் கருத்தவன் தானே

மேல்

#3041
எண்ணும் எழுத்தும் இனம் செயல் அ வழி
பண்ணும் திறனும் படைத்த பரமனை
கண்ணில் கவரும் கருத்தில் அது இது
உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே

மேல்

#3042
இருக்கின்ற எண் திசை அண்டம் பாதாளம்
உருக்கொடு தன் நடு ஓங்க இ வண்ணம்
கருக்கொடு எங்கும் கலந்து இருந்தானே
திரு கொன்றை வைத்த செழும் சடையானே

மேல்

#3043
பலவுடன் சென்ற அ பார் முழுது ஈசன்
செலவு அறிவார் இல்லை சேயன் அணியன்
அலைவு இலன் சங்கரன் ஆதி எம் ஆதி
பல இலதாய் நிற்கும் பான்மை வல்லானே

மேல்

#3044
அது அறிவு ஆனவன் ஆதி புராணன்
எது அறியா வகை நின்றவன் ஈசன்
பொது அது ஆன புவனங்கள் எட்டும்
இது அறிவான் நந்தி எங்கள் பிரானே

மேல்

#3045
நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியுமாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம் இறை
ஊரும் சகலன் உலப்பு_இலி தானே

மேல்

#3046
மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்
மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே

மேல்

#3047
வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலம் அறுத்தான் பதம்
வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத்தவன் தாள்
வாழ்கவே வாழ்க மலம் இலான் பாதமே

மேல்