தேவாரம் (அப்பர்) ஐந்தாம் திருமுறை (1071 – 2085)

1. கோயில் – திருக்குறுந்தொகை


#1071
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இ பூ மிசை
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இ பிறவியே

மேல்

#1072
அரும்பு அற்றப்பட ஆய் மலர் கொண்டு நீர்
சுரும்பு அற்றப்பட தூவி தொழு-மினோ
கரும்பு அற்ற சிலை காமனை காய்ந்தவன்
பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே

மேல்

#1073
அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்
எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர்
சிரிச்சுற்று பல பேசப்படாமுனம்
திரு சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்-மினே

மேல்

#1074
அல்லல் என் செயும் அருவினை என் செயும்
தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும்
தில்லை மா நகர் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே

மேல்

#1075
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுது எலாம்
நான் நிலாவி இருப்பன் என் நாதனை
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே

மேல்

#1076
சிட்டர் வானவர் சென்று வரம் கொளும்
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலத்து உறை
சிட்டன் சேவடி கைதொழ செல்லும் அ
சிட்டர்-பால் அணுகான் செறு காலனே

மேல்

#1077
ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர்
திருத்தனார் தில்லை சிற்றம்பலவனார்
விருத்தனார் இளையார் விடம் உண்ட எம்
அருத்தனார் அடியாரை அறிவரே

மேல்

#1078
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா
கண் நிறைந்த கடி பொழில் அம்பலத்
துள் நிறைந்து நின்று ஆடும் ஒருவனே

மேல்

#1079
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்-தம்
வல்லை வட்டம் மதில் மூன்று உடன் மாய்த்தவன்
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை
ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே

மேல்

#1080
நாடி நாரணன் நான்முகன் என்று இவர்
தேடியும் திரிந்தும் காண வல்லாரோ
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே

மேல்

#1081
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன்
சதுரன் சிற்றம்பலவன் திரு மலை
அதிர ஆர்த்து எடுத்தான் முடி பத்து இற
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்-மினே

மேல்

2. கோயில் – திருக்குறுந்தொகை


#1082
பனை கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனம் கோயிலா கொண்டவன்
அனைத்து வேடம் ஆம் அம்பல கூத்தனை
தினைத்தனை பொழுதும் மறந்து உய்வனோ

மேல்

#1083
தீர்த்தனை சிவனை சிவலோகனை
மூர்த்தியை முதல் ஆய ஒருவனை
பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பல
கூத்தனை கொடியேன் மறந்து உய்வனோ

மேல்

#1084
கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி
இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான்
சிட்டர் வாழ் தில்லை அம்பல கூத்தனை
எள்தனை பொழுதும் மறந்து உய்வனோ

மேல்

#1085
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட
நீண் உலகு எலாம் ஆள கொடுத்த என்
ஆணியை செம்பொன் அம்பலத்துள் நின்ற
தாணுவை தமியேன் மறந்து உய்வனோ

மேல்

#1086
பித்தனை பெருங்காடு அரங்கா உடை
முத்தனை முளை வெண் மதிசூடியை
சித்தனை செம்பொன் அம்பலத்துள் நின்ற
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ

மேல்

#1087
நீதியை நிறைவை மறை நான்கு உடன்
ஓதியை ஒருவர்க்கும் அறிவு ஒணா
சோதியை சுடர் செம்பொனின் அம்பலத்து
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ

மேல்

#1088
மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணினன்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்
செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள்
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ

மேல்

#1089
முழுதும் வான்_உலகத்து உள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பல கூத்தனை
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ

மேல்

#1090
கார் உலாம் மலர் கொன்றை அம் தாரனை
வார் உலாம் முலை மங்கை மணாளனை
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ

மேல்

#1091
ஓங்கு மால் வரை ஏந்தலுற்றான் சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
தேங்கு நீர் வயல் சூழ் தில்லை கூத்தனை
பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ

மேல்

3. திருநெல்வாயில் திருவரத்துறை – திருக்குறுந்தொகை


#1092
கடவுளை கடலுள் எழு நஞ்சு உண்ட
உடல் உளானை ஒப்பாரி இலாத எம்
அடல் உளானை அரத்துறை மேவிய
சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே

மேல்

#1093
கரும்பு ஒப்பானை கரும்பினில் கட்டியை
விரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
அரும்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே

மேல்

#1094
ஏறு ஒப்பானை எல்லா உயிர்க்கும் இறை
வேறு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
ஆறு ஒப்பானை அரத்துறை மேவிய
ஊறு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே

மேல்

#1095
பரப்பு ஒப்பானை பகல் இருள் நன் நிலா
இரப்பு ஒப்பானை இள மதி சூடிய
அரப்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரப்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே

மேல்

#1096
நெய் ஒப்பானை நெய்யில் சுடர் போல்வது ஓர்
மெய் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
ஐ ஒப்பானை அரத்துறை மேவிய
கை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே

மேல்

#1097
நிதி ஒப்பானை நிதியின் கிழவனை
விதி ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
அதி ஒப்பானை அரத்துறை மேவிய
கதி ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே

மேல்

#1098
புனல் ஒப்பானை பொருந்தலர்-தம்மையே
மினல் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
அனல் ஒப்பானை அரத்துறை மேவிய
கனல் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே

மேல்

#1099
பொன் ஒப்பானை பொன்னில் சுடர் போல்வது ஓர்
மின் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
அன் ஒப்பானை அரத்துறை மேவிய
தன் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே

மேல்

#1100
காழியானை கன விடை ஊரும் மெய்
வாழியானை வல்லோரும் என்ற இன்னவர்
ஆழியான் பிரமற்கும் அரத்துறை
ஊழியானை கண்டீர் நாம் தொழுவதே

மேல்

#1101
கலை ஒப்பானை கற்றார்க்கு ஓர் அமுதினை
மலை ஒப்பானை மணி முடி ஊன்றிய
அலை ஒப்பானை அரத்துறை மேவிய
நிலை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே

மேல்

4. திருஅண்ணாமலை – திருக்குறுந்தொகை


#1102
வட்டனை மதிசூடியை வானவர்
சிட்டனை திரு அண்ணாமலையனை
இட்டனை இகழ்ந்தார் புரம் மூன்றையும்
அட்டனை அடியேன் மறந்து உய்வனோ

மேல்

#1103
வானனை மதி சூடிய மைந்தனை
தேனனை திரு அண்ணாமலையனை
ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ

மேல்

#1104
மத்தனை மத யானை உரித்த எம்
சிந்தனை திரு அண்ணாமலையனை
முத்தனை முனிந்தார் புரம் மூன்று எய்த
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ

மேல்

#1105
காற்றனை கலக்கும் வினை போய் அற
தேற்றனை திரு அண்ணாமலையனை
கூற்றனை கொடியார் புரம் மூன்று எய்த
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ

மேல்

#1106
மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
தென்னனை திரு அண்ணாமலையனை
என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த
அன்னனை அடியேன் மறந்து உய்வனோ

மேல்

#1107
மன்றனை மதியாதவன் வேள்வி மேல்
சென்றனை திரு அண்ணாமலையனை
வென்றனை வெகுண்டார் புரம் மூன்றையும்
கொன்றனை கொடியேன் மறந்து உய்வனோ

மேல்

#1108
வீரனை விடம் உண்டனை விண்ணவர்
தீரனை திரு அண்ணாமலையனை
ஊரனை உணரார் புரம் மூன்று எய்த
ஆரனை அடியேன் மறந்து உய்வனோ

மேல்

#1109
கருவினை கடல்-வாய் விடம் உண்ட எம்
திருவினை திரு அண்ணாமலையனை
உருவினை உணரார் புரம் மூன்று எய்த
அருவினை அடியேன் மறந்து உய்வனோ

மேல்

#1110
அருத்தனை அரவு ஐந்தலை நாகத்தை
திருத்தனை திரு அண்ணாமலையனை
கருத்தனை கடியார் புரம் மூன்று எய்த
வருத்தனை அடியேன் மறந்து உய்வனோ

மேல்

#1111
அரக்கனை அலற விரல் ஊன்றிய
திருத்தனை திரு அண்ணாமலையனை
இரக்கமாய் என் உடல் உறு நோய்களை
துரக்கனை தொண்டனேன் மறந்து உய்வனோ

மேல்

5. திருஅண்ணாமலை – திருக்குறுந்தொகை


#1112
பட்டி ஏறு உகந்து ஏறி பல இலம்
இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும்
அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழ
கெட்டு போம் வினை கேடு இல்லை காண்-மினே

மேல்

#1113
பெற்றம் ஏறுவர் பெய் பலிக்கு ஏன்று அவர்
சுற்றமா மிகு தொல்புகழாளொடும்
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல் தவத்தொடு ஞானத்து இருப்பரே

மேல்

#1114
பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம்
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர்
அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல்ல ஆயின நம்மை அடையுமே

மேல்

#1115
பாடி சென்று பலிக்கு என்று நின்றவர்
ஓடி போயினர் செய்வது ஒன்று என்-கொலோ
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ
ஓடி போகும் நம் மேலை வினைகளே

மேல்

#1116
தேடி சென்று திருந்து அடி ஏத்து-மின்
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ
ஓடி போம் நமது உள்ள வினைகளே

மேல்

#1117
கட்டி ஒக்கும் கரும்பினிடை துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்டமூர்த்தி அண்ணாமலை மேவிய
நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே

மேல்

#1118
கோணிக்கொண்டையர் வேடம் முன் கொண்டவர்
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்
ஆணிப்பொன்னின் அண்ணாமலை கைதொழ
பேணி நின்ற பெருவினை போகுமே

மேல்

#1119
கண்டம்தான் கறுத்தான் காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகும் நம் மேலை வினைகளே

மேல்

#1120
முந்தி சென்று முப்போதும் வணங்கு-மின்
அந்தி வாய் ஒளியான்-தன் அண்ணாமலை
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்
கந்த மா மலர் சூடும் கருத்தனே

மேல்

#1121
மறையினானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன்
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழ
பறையும் நாம் செய்த பாவங்கள் ஆனவே

மேல்

6. திருஆரூர் – திருக்குறுந்தொகை


#1122
எப்போதும் இறையும் மறவாது நீர்
முப்போதும் பிரமன் தொழ நின்றவன்
செப்பு ஓதும் பொனின் மேனி சிவன் அவன்
அ போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரனே

மேல்

#1123
சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர்
அடைகிலா அரவை அரை ஆர்த்தவர்
படையின் நேர் தடம் கண் உமை பாகமா
அடைவர் போல் இடுகாடர் ஆரூரரே

மேல்

#1124
விண்ட வெண் தலையே கலன் ஆகவே
கொண்டு அகம் பலி தேரும் குழகனார்
துண்ட வெண் பிறை வைத்த இறையவர்
அண்டவாணர்க்கு அருளும் ஆரூரரே

மேல்

#1125
விடையும் ஏறுவர் வெண் தலையில் பலி
கடைகள்-தோறும் திரியும் எம் கண்நுதல்
உடையும் சீரை உறைவது காட்டிடை
அடைவர் போல் அரங்கு ஆக ஆரூரரே

மேல்

#1126
துளை கை வேழத்து உரி உடல் போர்த்தவர்
வளைக்கையாளை ஒர்பாகம் மகிழ்வு எய்தி
திளைக்கும் திங்கள் சடையின் திசை முழுது
அளக்கும் சிந்தையர் போலும் ஆரூரரே

மேல்

#1127
பண்ணின் இன்மொழியாளை ஒர்பாகமா
விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே
சுண்ண நீறு மெய் பூசி சுடலையின்
அண்ணி ஆடுவர் போலும் ஆரூரரே

மேல்

#1128
மட்டு வார்குழலாளொடு மால் விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்
கட்டுவாங்கம் கனல் மழு மான்-தனோடு
அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே

மேல்

#1129
தேய்ந்த திங்கள் கமழ் சடையன் கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரரே

மேல்

#1130
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி அங்கு
இண்டை செம் சடை வைத்த இயல்பினான்
கொண்ட கோவண ஆடையன் கூர் எரி
அண்டவாணர் அடையும் ஆரூரரே

மேல்

#1131
மாலும் நான்முகனும் அறிகிற்கிலார்
காலன் ஆய அவனை கடந்திட்டு
சூலம் மான் மறி ஏந்திய கையினார்
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே

மேல்

7. திருஆரூர் – திருக்குறுந்தொகை


#1132
கொக்கரை குழல் வீணை கொடுகொட்டி
பக்கமே பகுவாயன பூதங்கள்
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்
அக்கினோடு அரவு ஆர்ப்பர் ஆரூரரே

மேல்

#1133
எந்த மா தவம் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடு அவை ஆய பராபரன்
அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி
சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே

மேல்

#1134
வண்டு உலாம் மலர் கொண்டு வளர் சடைக்கு
இண்டை மாலை புனைந்தும் இராப்பகல்
தொண்டர் ஆகி தொடர்ந்து விடாதவர்க்கு
அண்டம் ஆளவும் வைப்பர் ஆரூரரே

மேல்

#1135
துன்பு எலாம் அற நீங்கி சுபத்தராய்
என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று
இன்பராய் நினைந்து என்றும் இடையறா
அன்பர் ஆமவர்க்கு அன்பர் ஆரூரரே

மேல்

#1136
முருட்டு மெத்தையில் முன் கிடத்தா முனம்
அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு நீர்
முரண் தடித்த அ தக்கன்-தன் வேள்வியை
அரட்டு அடக்கி-தன் ஆரூர் அடை-மினே

மேல்

#1137
எம் ஐயார் இலை யானும் உளேன்அலேன்
எம்மை யாரும் இது செய வல்லரே
அம்மை யார் எனக்கு என்றுஎன்று அரற்றினேற்கு
அம்மை ஆர தந்தார் ஆரூர் ஐயரே

மேல்

#1138
தண்ட ஆளியை தக்கன்-தன் வேள்வியை
செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை
கண்டுகண்டு இவள் காதலித்து அன்பு அதுவாய்
கொண்டி ஆயின ஆறு என்தன் கோதையே

மேல்

#1139
இவள் நமை பல பேச தொடங்கினாள்
அவணம் அன்று எனில் ஆரூர் அரன் எனும்
பவனி வீதிவிடங்கனை கண்டு இவள்
தவனி ஆயின ஆறு என்தன் தையலே

மேல்

#1140
நீரை செம் சடை வைத்த நிமலனார்
கார் ஒத்தம் மிடற்றர் கனல் வாய் அரா
ஆரத்தர் உறையும் அணி ஆரூரை
தூரத்தே தொழுவார் வினை தூளியே

மேல்

#1141
உள்ளமே ஒன்று உறுதி உரைப்பன நான்
வெள்ளம் தாங்கும் விரி சடை வேதியன்
அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே

மேல்

#1142
விண்ட மா மலர் மேல் உறைவானொடும்
கொண்டல்_வண்ணனும் கூடி அறிகிலா
அண்டவாணன்-தன் ஆரூர் அடி தொழ
பண்டை வல்வினை நில்லா பறையுமே

மேல்

#1143
மை உலாவிய கண்டத்தன் அண்டத்தன்
கை உலாவிய சூலத்தன் கண்நுதல்
ஐயன் ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம்
உய்யல் ஆம் அல்லல் ஒன்று இலை காண்-மினே

மேல்

8. திருஅன்னியூர் – திருக்குறுந்தொகை


#1144
பாறு அலைத்த படு வெண் தலையினன்
நீறு அலைத்த செம்மேனியன் நேர்_இழை
கூறு அலைத்த மெய் கோள் அரவு ஆட்டிய
ஆறு அலைத்த சடை அன்னியூரனே

மேல்

#1145
பண்டு ஒத்த மொழியாளை ஒர்பாகமாய்
இண்டை செஞ்சடையன் இருள் சேர்ந்தது ஓர்
கண்டத்தன் கரியின் உரி போர்த்தவன்
அண்டத்து அப்புறத்தான் அன்னியூரனே

மேல்

#1146
பரவி நாளும் பணிந்தவர்-தம் வினை
துரவை ஆக துடைப்பவர்-தம் இடம்
குரவம் நாறும் குழல் உமை கூறராய்
அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே

மேல்

#1147
வேத கீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண் பிறை துன்று சடைக்கு அணி
நாதர் நீதியினால் அடியார்-தமக்கு
ஆதி ஆகி நின்றார் அன்னியூரரே

மேல்

#1148
எம்பிரான் இமையோர்கள்-தமக்கு எலாம்
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார்
துன்ப வல்வினை போக தொழுமவர்க்கு
அன்பர் ஆகி நின்றார் அன்னியூரரே

மேல்

#1149
வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர்
கந்த மா மலர் சூடும் கருத்தினர்
சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர்
அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே

மேல்

#1150
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை ஆர் குழலாளை ஒர்பாகமா
ஆனை ஈர் உரியார் அன்னியூரரே

மேல்

#1151
காலை போய் பலி தேர்வர் கண்ணார் நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே
ஆலின் கீழ் அறத்தார் அன்னியூரரே

மேல்

#1152
எரி கொள் மேனியர் என்பு அணிந்து இன்பராய்
திரியும் மூஎயில் தீ எழ செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு
அரியர் ஆகி நின்றார் அன்னியூரரே

மேல்

#1153
வஞ்ச அரக்கன் கரமும் சிரத்தொடும்
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும் இற
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை
அஞ்சல்அஞ்சல் என்றார் அன்னியூரரே

மேல்

9. திருமறைக்காடு – திருக்குறுந்தொகை


#1154
ஓதம் மால் கடல் பரவி உலகு எலாம்
மாதரார் வலம்கொள் மறைக்காடரை
காதல்செய்து கருதப்படுமவர்
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே

மேல்

#1155
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கம்தான் உடை மா மறைக்காடரோ
ஆர்க்கும் காண்பு அரியீர் அடியார்-தம்மை
நோக்கி காண்பது நும் பணி செய்யிலே

மேல்

#1156
புன்னை ஞாழல் புறணி அருகு எலாம்
மன்னினார் வலம்கொள் மறைக்காடரோ
அன்ன மென்நடையாளை ஒர்பாகமா
சின்ன வேடம் உகப்பது செல்வமே

மேல்

#1157
அட்ட மா மலர் சூடி அடும்பொடு
வட்ட புன் சடை மா மறைக்காடரோ
நட்டம் ஆடியும் நான்மறை பாடியும்
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே

மேல்

#1158
நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும்
மெய்யினார் வலம்கொள் மறைக்காடரோ
தையல் பாகம் கொண்டீர் கவர் புன் சடை
பைதல் வெண் பிறை பாம்பு உடன் வைப்பதே

மேல்

#1159
துஞ்சும்போதும் துயில் இன்றி ஏத்துவார்
வஞ்சு இன்றி வலம்கொள் மறைக்காடரோ
பஞ்சின் மெல் அடி பாவை பலி கொணர்ந்து
அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே

மேல்

#1160
திருவினார் செல்வம் மல்கு விழா அணி
மருவினார் வலம்கொள் மறைக்காடரோ
உருவினாள் உமை மங்கை ஒர்பாகமாய்
மருவினாய் கங்கையை சென்னி-தன்னிலே

மேல்

#1161
சங்கு வந்து அலைக்கும் தடம் கானல்-வாய்
வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ
கங்கை செம் சடை வைப்பதும் அன்றியே
அங்கையில் அனல் ஏந்தல் அழகிதே

மேல்

#1162
குறை காட்டான் விட்ட தேர் குத்த மா மலை
இறை காட்டீ எடுத்தான் தலை ஈர்_ஐந்தும்
மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான்
இறை காட்டாய் எம்பிரான் உனை ஏத்தவே

மேல்

10. திருமறைக்காடு – திருக்குறுந்தொகை


#1163
பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ
மண்ணினார் வலம்செய் மறைக்காடரோ
கண்ணினால் உமை காண கதவினை
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே

மேல்

#1164
ஈண்டு செம் சடை ஆகத்துள் ஈசரோ
மூண்ட கார் முகிலின் முறி_கண்டரோ
ஆண்டுகொண்ட நீரே அருள்செய்திடும்
நீண்ட மா கதவின் வலி நீக்குமே

மேல்

#1165
அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ
துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ
பட்டம் கட்டிய சென்னி பரமரோ
சட்ட இ கதவம் திறப்பிம்-மினே

மேல்

#1166
அரிய நான்மறை ஓதிய நாவரோ
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ
விரி கொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே

மேல்

#1167
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ
விலை இல் மா மணி_வண்ண உருவரோ
தொலைவு இலா கதவம் துணை நீக்குமே

மேல்

#1168
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கும் தண் பொழில் சூழ் மறைக்காடரோ
ஆர்க்கும் காண்பு அரியீர் அடிகேள் உமை
நோக்கி காண கதவை திறவுமே

மேல்

#1169
வெந்த வெண் பொடி பூசும் விகிர்தரோ
அந்தமில்லி அணி மறைக்காடரோ
எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட
இந்த மா கதவம் பிணை நீக்குமே

மேல்

#1170
ஆறு சூடும் அணி மறைக்காடரோ
கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ
ஏறு அது ஏறிய எம்பெருமான் இந்த
மாறு இலா கதவம் வலி நீக்குமே

மேல்

#1171
சுண்ண வெண் பொடி பூசும் சுவண்டரோ
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ
அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ
திண்ணமா கதவம் திறப்பிம்-மினே

மேல்

#1172
விண் உளார் விரும்பி எதிர்கொள்ளவே
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ
கண்ணினால் உமை காண கதவினை
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே

மேல்

#1173
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ
சரக்க இ கதவம் திறப்பிம்-மினே

மேல்

11. திருமீயச்சூர் – திருக்குறுந்தொகை


#1174
தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும்
வேற்று கோயில் பல உள மீயச்சூர்
கூற்றம் பாய்ந்த குளிர் புன் சடை அரற்கு
ஏற்றம் கோயில் கண்டீர் இளங்கோயிலே

மேல்

#1175
வந்தனை அடைக்கும் அடித்தொண்டர்கள்
பந்தனை செய்து பாவிக்க நின்றவன்
சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர்
எம்தமை உடையார் இளங்கோயிலே

மேல்

#1176
பஞ்சமந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார்
நெஞ்சம் வாழி நினைந்து இரு மீயச்சூர்
எம்தமை உடையார் இளங்கோயிலே

மேல்

#1177
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறுவேறு விரித்த சடையிடை
ஆறு கொண்டு உகந்தான் திரு மீயச்சூர்
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே

மேல்

#1178
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ண கனல் விரித்து ஆடுவர்
செவ்வ வண்ணம் திகழ் திரு மீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே

மேல்

#1179
பொன் அம் கொன்றையும் பூ அணி மாலையும்
பின்னும் செம் சடை மேல் பிறை சூடிற்று
மின்னும் மேகலையாளொடு மீயச்சூர்
இன்ன நாள் அகலார் இளங்கோயிலே

மேல்

#1180
படை கொள் புதத்தன் பைம் கொன்றைத்தாரினன்
சடை கொள் வெள்ளத்தன் சாந்த வெண்நீற்றினன்
விடை கொள் ஊர்தியினான் திரு மீயச்சூர்
இடைகொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே

மேல்

#1181
ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர்
வேறு கொண்டது ஒர் வேடத்தராகிலும்
கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே

மேல்

#1182
வேதத்தான் என்பர் வேள்வி உளான் என்பர்
பூதத்தான் என்பர் புண்ணியன்-தன்னையே
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர்
ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே

மேல்

#1183
கடு_கண்டன் கயிலாய மலை-தனை
எடுக்கலுற்ற இராவணன் ஈடு அற
விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே

மேல்

12. திருவீழிமிழலை – திருக்குறுந்தொகை


#1184
கரைந்து கைதொழுவாரையும் காதலன்
வரைந்து வைது எழுவாரையும் வாடலன்
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும்
விரைந்து போவது வீழிமிழலைக்கே

மேல்

#1185
ஏற்று வெல் கொடி ஈசன் தன் ஆதிரை
நாற்றம் சூடுவர் நன் நறும் திங்களார்
நீற்று சந்தன வெள்ளை விரவலார்
வேற்று கோலம் கொள் வீழிமிழலையே

மேல்

#1186
புனை பொன் சூலத்தன் போர் விடைஊர்தியான்
வினை வெல் நாகத்தன் வெண் மழுவாளினான்
நினைய நின்றவன் ஈசனையே எனா
வினையிலார் தொழும் வீழிமிழலையே

மேல்

#1187
மாடத்து ஆடும் மனத்துடன் வைத்தவர்
கோடத்தார் குருக்கேத்திரத்தார் பலர்
பாடத்தார் பழிப்பார் பழிப்புஇல்லது ஓர்
வேடத்தார் தொழும் வீழிமிழலையே

மேல்

#1188
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர்
உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே
கெடுப்பது ஆவது கீழ் நின்ற வல்வினை
விடுத்து போவது வீழிமிழலைக்கே

மேல்

#1189
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால்
உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர்
தழலை நீர் மடி கொள்ளன்-மின் சாற்றினோம்
மிழலையான் அடி சார விண் ஆள்வரே

மேல்

#1190
தீரன் தீத்திரளன் சடை தங்கிய
நீரன் ஆடிய நீற்றன் வண்டு ஆர் கொன்றை
தாரன் மாலையன் தண் நறுங்கண்ணியன்
வீரன் வீழிமிழலை விகிர்தனே

மேல்

#1191
எரியினார் இறையார் இடுகாட்டிடை
நரியினார் பரியா மகிழ்கின்றது ஓர்
பெரியனார் தம் பிறப்பொடு சாதலை
விரியினார் தொழும் வீழிமிழலையே

மேல்

#1192
நீண்ட சூழ் சடை மேல் ஒர் நிலா மதி
காண்டு சேவடி மேல் ஒர் கனை கழல்
வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர்
மீண்டும் போவது வீழிமிழலைக்கே

மேல்

#1193
பாலை யாழொடு செவ்வழி பண் கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும் வீழிமிழலையே

மேல்

#1194
மழலை ஏற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்து எடுத்தான் முடி தோள் இற
கழல் கொள் காலில் திரு விரல் ஊன்றலும்
மிழலையான் அடி வாழ்க என விட்டதே

மேல்

13. திருவீழிமிழலை – திருக்குறுந்தொகை


#1195
என் பொனே இமையோர் தொழு பைம் கழல்
நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்
செம்பொனே திரு வீழிமிழலையுள்
அன்பனே அடியேனை குறிக்கொளே

மேல்

#1196
கண்ணினால் களி கூர கையால் தொழுது
எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன்-தனை
விண்உளார் தொழும் வீழிமிழலையுள்
அண்ணலே அடியேனை குறிக்கொளே

மேல்

#1197
ஞாலமே விசும்பே நலம் தீமையே
காலமே கருத்தே கருத்தால் தொழும்
சீலமே திரு வீழிமிழலையுள்
கோலமே அடியேனை குறிக்கொளே

மேல்

#1198
முத்தனே முதல்வா முகிழும் முளை
ஒத்தனே ஒருவா உரு ஆகிய
சித்தனே திரு வீழிமிழலையுள்
அத்தனே அடியேனை குறிக்கோளே

மேல்

#1199
கருவனே கருவாய் தெளிவார்க்கு எலாம்
ஒருவனே உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற
திருவனே திரு வீழிமிழலையுள்
குருவனே அடியேனை குறிக்கொளே

மேல்

#1200
காத்தனே பொழில் ஏழையும் காதலால்
ஆத்தனே அமரர்க்கு அயன்-தன் தலை
சேர்ந்தனே திரு வீழிமிழலையுள்
கூத்தனே அடியேனை குறிக்கொளே

மேல்

#1201
நீதி வானவர் நித்தல் நியமம் செய்து
ஓதி வானவரும் உணராதது ஓர்
வேதியா விகிர்தா திரு வீழியுள்
ஆதியே அடியேனை குறிக்கொளே

மேல்

#1202
பழகி நின் அடி சூடிய பாலனை
கழகின் மேல் வைத்த காலனை சாடிய
அழகனே அணி வீழிமிழலையுள்
குழகனே அடியேனை குறிக்கொளே

மேல்

#1203
அண்ட வானவர் கூடி கடைந்த நஞ்சு
உண்ட வானவனே உணர்வு ஒன்று இலேன்
விண்ட வான் பொழில் வீழிமிழலையுள்
கொண்டனே அடியேனை குறிக்கொளே

மேல்

#1204
ஒருத்தன் ஓங்கலை தாங்கலுற்றான் உரம்
வருத்தினாய் வஞ்சனேன் மனம் மன்னிய
திருத்தனே திரு வீழிமிழலையுள்
அருத்தனே அடியேனை குறிக்கொளே

மேல்

14. திருவிடைமருது – திருக்குறுந்தொகை


#1205
பாசம் ஒன்று இலராய் பல பத்தர்கள்
வாசம் நாள் மலர் கொண்டு அடி வைகலும்
ஈசன் எம்பெருமான் இடைமருதினில்
பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே

மேல்

#1206
மறையின் நாள் மலர் கொண்டு அடி வானவர்
முறையினால் முனிகள் வழிபாடுசெய்
இறைவன் எம்பெருமான் இடைமருதினில்
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே

மேல்

#1207
கொன்றை மாலையும் கூவிளம் மத்தமும்
சென்று சேர திகழ் சடை வைத்தவன்
என்றும் எந்தை பிரான் இடைமருதினை
நன்று கைதொழுவார் வினை நாசமே

மேல்

#1208
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மையே பிறவி துயர் நீத்திடும்
எம்மை ஆளும் இடைமருதன் கழல்
செம்மையே தொழுவார் வினை சிந்துமே

மேல்

#1209
வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும்
கொண்டு அணிந்த சடை முடி கூத்தனார்
எண் திசைக்கும் இடைமருதா என
விண்டுபோய் அறும் மேலை வினைகளே

மேல்

#1210
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார்
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்
ஆறு செம் சடை வைத்த அழகனார்க்கு
ஊறிஊறி உருகும் என் உள்ளமே

மேல்

#1211
விண்உளாரும் விரும்பப்படுபவர்
மண்உளாரும் மதிக்கப்படுவர்
எண்ணினார் பொழில் சூழ் இடைமருதினை
நண்ணினாரை நண்ணா வினை நாசமே

மேல்

#1212
வெந்த வெண் பொடி பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடும் கருத்தனார்
எந்தை என் இடைமருதினில் ஈசனை
சிந்தையால் நினைவார் வினை தேயுமே

மேல்

#1213
வேதம் ஓதும் விரி சடை அண்ணலார்
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார்
ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே

மேல்

#1214
கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனி மலர் குழல் பாவை நல்லாரினும்
தனி முடி கவித்து ஆளும் அரசினும்
இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே

மேல்

#1215
முற்றிலா மதி சூடும் முதல்வனார்
ஒற்றினார் மலையால் அரக்கன் முடி
எற்றின் ஆர் கொடியார் இடைமருதினை
பற்றினாரை பற்றா வினை பாவமே

மேல்

15. திருவிடைமருது – திருக்குறுந்தொகை


#1216
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் வைகும் அயல் எலாம்
இறைவன் எங்கள் பிரான் இடைமருதினில்
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே

மேல்

#1217
மனத்துள் மாயனை மாசறு சோதியை
புனிற்று பிள்ளை வெள்ளை மதிசூடியை
எனக்கு தாயை எம்மான் இடைமருதனை
நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே

மேல்

#1218
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும்
கொண்டு அணிந்த சடை முடி கூத்தனை
எண் திசைக்கும் இடைமருதா என
விண்டுபோய் அறும் மேலை வினைகளே

மேல்

#1219
துணை இலாமையில் தூங்கு இருள் பேய்களோடு
அணையல் ஆவது எமக்கு அரிதே எனா
இணை இலா இடைமாமருதில் எழு
பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே

மேல்

#1220
மண்ணை உண்ட மால் காணான் மலர் அடி
விண்ணை விண்டு அயன் காணான் வியன் முடி
மொண்ணை மா மருதா என்று என் மொய் குழல்
பண்ணை ஆயமும் தானும் பயிலுமே

மேல்

#1221
மங்கை காண கொடார் மண மாலையை
கங்கை காண கொடார் முடி கண்ணியை
நங்கைமீர் இடைமருதர் இ நங்கைக்கே
எங்கு வாங்கி கொடுத்தார் இதழியே

மேல்

16. திருப்பேரெயில் – திருக்குறுந்தொகை


#1222
மறையும் ஓதுவர் மான் மறி கையினர்
கறை கொள் கண்டம் உடைய கபாலியார்
துறையும் போகுவர் தூய வெண்நீற்றினர்
பிறையும் சூடுவர் பேரெயிலாளரே

மேல்

#1223
கணக்குஇலாரையும் கற்று வல்லாரையும்
வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும்
தணக்குவார் தணிப்பார் எப்பொருளையும்
பிணக்குவார் அவர் பேரெயிலாளரே

மேல்

#1224
சொரிவிப்பார் மழை சூழ் கதிர் திங்களை
விரிவிப்பார் வெயில் பட்ட விளக்கு ஒளி
எரிவிப்பார் தணிப்பார் எப்பொருளையும்
பிரிவிப்பார் அவர் பேரெயிலாளரே

மேல்

#1225
செறுவிப்பார் சிலையால் மதில் தீர்த்தங்கள்
உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை
அறுவிப்பார் அது அன்றியும் நல்வினை
பெறுவிப்பார் அவர் பேரெயிலாளரே

மேல்

#1226
மற்றையார் அறியார் மழுவாளினார்
பற்றி ஆட்டி ஓர் ஐந்தலை பாம்பு அரை
சுற்றியார் அவர் தூ நெறியால் மிகு
பெற்றியார் அவர் பேரெயிலாளரே

மேல்

#1227
திருக்கு வார் குழல் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழியால் தனை ஏத்துவார்
சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றற
பெருக்குவார் அவர் பேரெயிலாளரே

மேல்

#1228
முன்னையார் மயில் ஊர்தி முருகவேள்
தன் ஐயார் எனில் தான் ஓர் தலைமகன்
என்னை ஆளும் இறையவன் எம்பிரான்
பின்னையார் அவர் பேரெயிலாளரே

மேல்

#1229
உழைத்தும் துள்ளியும் உள்ளத்துளே உரு
இழைத்தும் எந்தை பிரான் என்று இராப்பகல்
அழைக்கும் அன்பினர் ஆய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயிலாளரே

மேல்

#1230
நீர் உலாம் நிமிர் புன் சடையா எனா
ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய
வார் உலாம் வன மென்முலையாளொடும்
பேர் உளார் அவர் பேரெயிலாளரே

மேல்

#1231
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர்
தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர்
மாணியாய் மண் அளந்தவன் நான்முகன்
பேணியார் அவர் பேரெயிலாளரே

மேல்

#1232
மதத்த வாள் அரக்கன் மணி புட்பகம்
சிதைக்கவே திரு மா மலை கீழ் புக்கு
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி
பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே

மேல்

17. திருவெண்ணி – திருக்குறுந்தொகை


#1233
முத்தினை பவளத்தை முளைத்த எம்
தொத்தனை சுடரை சுடர் போல் ஒளி
பித்தனை கொலும் நஞ்சினை வானவர்
நித்தனை நெருநல் கண்ட வெண்ணியே

மேல்

#1234
வெண்ணி தொல் நகர் மேய வெண் திங்கள் ஆர்
கண்ணி தொத்த சடையர் கபாலியார்
எண்ணி தம்மை நினைந்திருந்தேனுக்கு
அண்ணித்திட்டு அமுது ஊறும் என் நாவுக்கே

மேல்

#1235
காற்றினை கனலை கதிர் மா மணி
நீற்றினை நினைப்பார் வினை நீக்கிடும்
கூற்றினை உதைத்திட்ட குணம் உடை
வீற்றினை நெருநல் கண்ட வெண்ணியே

மேல்

#1236
நல்லனை திகழ் நான்மறைஓதியை
சொல்லனை சுடரை சுடர் போல் ஒளிர்
கல்லனை கடி மா மதில் மூன்று எய்த
வில்லனை நெருநல் கண்ட வெண்ணியே

மேல்

#1237
சுடரை போல் ஒளிர் சுண்ண வெண்நீற்றனை
அடரும் சென்னியில் வைத்த அமுதனை
படரும் செம் சடை பால் மதிசூடியை
இடரை நீக்கியை யான் கண்ட வெண்ணியே

மேல்

#1238
பூதநாதனை பூம் புகலூரனை
தாது என தவழும் மதிசூடியை
நாதனை நல்ல நான்மறைஓதியை
வேதனை நெருநல் கண்ட வெண்ணியே

மேல்

#1239
ஒருத்தியை ஒருபாகத்து அடக்கியும்
பொருத்திய புனிதன் புரி புன் சடை
கருத்தனை கறை_கண்டனை கண்நுதல்
நிருத்தனை நெருநல் கண்ட வெண்ணியே

மேல்

#1240
சடையனை சரி கோவண ஆடை கொண்டு
உடையனை உணர்வார் வினை தீர்த்திடும்
படையனை மழுவாளொடு பாய்தரும்
விடையனை நெருநல் கண்ட வெண்ணியே

மேல்

#1241
பொருப்பனை புனலாளொடு புன் சடை
அருப்பனை இளம் திங்கள்அம்கண்ணியான்
பருப்பதம் பரவி தொழும் தொண்டர்கள்
விருப்பனை நெருநல் கண்ட வெண்ணியே

மேல்

#1242
சூல வஞ்சனை வல்ல எம் சுந்தரன்
கோலமா அருள்செய்தது ஓர் கொள்கையான்
காலன் அஞ்ச உதைத்து இருள் கண்டம் ஆம்
வேலை நஞ்சனை கண்டது வெண்ணியே

மேல்

#1243
இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார்
மலையினால் அரக்கன் திறல் வாட்டினார்
சிலையினால் மதில் எய்தவன் வெண்ணியை
தலையினால் தொழுவார் வினை தாவுமே

மேல்

18. திருக்கடம்பந்துறை – திருக்குறுந்தொகை


#1244
முற்றிலா முலையாள் இவளாகிலும்
அற்றம் தீர்க்கும் அறிவு இலளாகிலும்
கற்றை செஞ்சடையன் கடம்பந்துறை
பெற்றம் ஊர்தி என்றான் எங்கள் பேதையே

மேல்

#1245
தனகு இருந்தது ஒர் தன்மையராகிலும்
முனகு தீர தொழுது எழு-மின்களோ
கனக புன்சடையான் கடம்பந்துறை
நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே

மேல்

#1246
ஆரியம் தமிழோடு இசை ஆனவன்
கூரிய குணத்தார் குறி நின்றவன்
காரிகை உடையான் கடம்பந்துறை
சீர் இயல் பத்தர் சென்று அடை-மின்கள்

மேல்

#1247
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நல் மலரான் பல தேவரும்
கண்ணனும் அறியான் கடம்பந்துறை
நண்ண நம் வினை ஆயின நாசமே

மேல்

#1248
மறை கொண்ட மனத்தானை மனத்துளே
நிறை கொண்ட நெஞ்சின் உள்ளுற வைம்-மினோ
கறை_கண்டன் உறையும் கடம்பந்துறை
சிறைகொண்ட வினை தீர தொழு-மினே

மேல்

#1249
நங்கை பாகம் வைத்த நறும் சோதியை
பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ
கங்கை செஞ்சடையான் கடம்பந்துறை
அங்கம் ஓதி அரன் உறைகின்றதே

மேல்

#1250
அரிய நான்மறை ஆறு அங்கமாய் ஐந்து
புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்
கரிய கண்டத்தினான் கடம்பந்துறை
உரிய ஆறு நினை மட நெஞ்சமே

மேல்

#1251
பூ மென் கோதை உமை ஒருபாகனை
ஓமம் செய்தும் உணர்-மின்கள் உள்ளத்தால்
காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை
நாமம் ஏத்த நம் தீவினை நாசமே

மேல்

#1252
பார் அணங்கி வணங்கி பணி செய
நாரணன் பிரமன் அறியாதது ஓர்
காரணன் கடம்பந்துறை மேவிய
ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே

மேல்

#1253
நூலால் நன்றா நினை-மின்கள் நோய் கெட
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்று உகந்தான் கடம்பந்துறை
மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே

மேல்

19. திருக்கடம்பூர் – திருக்குறுந்தொகை


#1254
தளரும் கோள் அரவத்தொடு தண் மதி
வளரும் கோல வளர் சடையார்க்கு இடம்
கிளரும் பேர் இசை கின்னரம் பாட்டு அறா
களரும் கார் கடம்பூர் கரக்கோயிலே

மேல்

#1255
வெல வலான் புலன் ஐந்தொடு வேதமும்
சொல வலான் சுழலும் தடுமாற்றமும்
அல வலான் மனை ஆர்ந்த மென்தோளியை
கல வலான் கடம்பூர் கரக்கோயிலே

மேல்

#1256
பொய் தொழாது புலி உரியோன் பணி
செய்து எழா எழுவார் பணி செய்து எழா
வைது எழாது எழுவார் அவர் எள்க நீர்
கைதொழா எழு-மின் கரக்கோயிலே

மேல்

#1257
துண்ணெனா மனத்தால் தொழு நெஞ்சமே
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே
எண்இலார் எயில் மூன்றும் எரித்த முக்
கண்ணினான் கடம்பூர் கரக்கோயிலே

மேல்

#1258
சுனையுள் நீல மலர் அன கண்டத்தன்
புனையும் பொன் நிற கொன்றை புரி சடை
கனையும் பைங்கழலான் கரக்கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே

மேல்

#1259
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடையார் எலாம்
வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும்
கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே

மேல்

#1260
பண்ணின் ஆர் மறை பல்பல பூசனை
மண்ணினார் செய்வது அன்றியும் வைகலும்
விண்ணினார்கள் வியக்கப்படுமவன்
கண்ணின் ஆர் கடம்பூர் கரக்கோயிலே

மேல்

#1261
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன்
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை
கங்கையான் உறையும் கரக்கோயிலை
தம் கையால் தொழுவார் வினை சாயுமே

மேல்

#1262
நன் கடம்பனை பெற்றவள் பங்கினன்
தென் கடம்பை திரு கரக்கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே

மேல்

#1263
பணம் கொள் பாற்கடல் பாம்புஅணையானொடும்
மணம் கமழ் மலர் தாமரையான் அவன்
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்
கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே

மேல்

#1264
வரை-கண் நால்_அஞ்சு தோள் உடையான் தலை
அரைக்க ஊன்றி அருள்செய்த ஈசனார்
திரைக்கும் தண் புனல் சூழ் கரக்கோயிலை
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே

மேல்

20. திருக்கடம்பூர் – திருக்குறுந்தொகை


#1265
ஒருவராய் இரு மூவரும் ஆயவன்
குரு அது ஆய குழகன் உறைவிடம்
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ்
கரு அது ஆம் கடம்பூர் கரக்கோயிலே

மேல்

#1266
வன்னி மத்தம் வளர் இளம் திங்கள் ஓர்
கன்னியாளை கதிர் முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர் முலையாளொடும்
மன்னினான் கடம்பூர் கரக்கோயிலே

மேல்

#1267
இல்ல கோலமும் இந்த இளமையும்
அல்லல் கோலம் அறுத்து உய வல்லிரே
ஒல்லை சென்று அடையும் கடம்பூர் நகர்
செல்வ கோயில் திரு கரக்கோயிலே

மேல்

#1268
வேறு சிந்தை இலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும்
ஆறு சேர் கடம்பூர் கரக்கோயிலே

மேல்

#1269
திங்கள் தங்கிய செம் சடை மேலும் ஓர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும்
தெங்கு சேர் கடம்பூர் கரக்கோயிலே

மேல்

#1270
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம்
எல்லை ஆன பிரானர் இருப்பிடம்
கொல்லை முல்லை கொழும் தகை மல்லிகை
நல்ல சேர் கடம்பூர் கரக்கோயிலே

மேல்

#1271
தளரும் வாள் அரவத்தொடு தண் மதி
வளரும் பொன் சடையார்க்கு இடம் ஆவது
கிளரும் பேர் ஒலி கின்னரம் பாட்டு அறா
களரி ஆர் கடம்பூர் கரக்கோயிலே

மேல்

#1272
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம்
பெற்றார் ஆய பிரானார் உறைவிடம்
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார்
கற்றார் சேர் கடம்பூர் கரக்கோயிலே

மேல்

#1273
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம்
உள்ளம் ஆய பிரானார் உறைவிடம்
பிள்ளை வெண் பிறை சூடிய சென்னியான்
கள்வன் சேர் கடம்பூர் கரக்கோயிலே

மேல்

#1274
பரப்பு நீர் இலங்கைக்கு இறைவன் அவன்
உரத்தினால் அடுக்கல் எடுக்கலுற
இரக்கம் இன்றி இறை விரலால் தலை
அரக்கினான் கடம்பூர் கரக்கோயிலே

மேல்

21. திருஇன்னம்பர் – திருக்குறுந்தொகை


#1275
என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு
என் உளே நிற்கும் இன்னம்பர் ஈசனே

மேல்

#1276
மட்டு உண்பார்கள் மடந்தையர் வாள் கணால்
கட்டுண்பார்கள் கருதுவது என்-கொலோ
தட்டி முட்டி தள்ளாடி தழுக்குழி
எட்டுமூர்த்தியர் இன்னம்பர் ஈசனே

மேல்

#1277
கனலும் கண்ணியும் தண் மதியோடு உடன்
புனலும் கொன்றையும் சூடும் புரி சடை
அனலும் சூலமும் மான் மறி கையினர்
எனலும் என் மனத்து இன்னம்பர் ஈசனே

மேல்

#1278
மழை-கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான்
அழைக்கும் தன் அடியார்கள்-தம் அன்பினை
குழைக்கும் தன்னை குறிக்கொள வேண்டியே
இழைக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே

மேல்

#1279
தென்னவன் எனை ஆளும் சிவன் அவன்
மன்னவன் மதி அம் மறை ஓதியான்
முன்னம் அன்னவன் சேரலன் பூழியான்
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே

மேல்

#1280
விளக்கும் வேறுபட பிறர் உள்ளத்தில்
அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை
குளக்கும் என்னை குறிக்கொள வேண்டியே
இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே

மேல்

#1281
சடைக்கணாள் புனலாள் அனல் கையது ஓர்
கடைக்கணால் மங்கை நோக்க இமவான்மகள்
படை கணால் பருகப்படுவான் நமக்கு
இடைக்கணாய் நின்ற இன்னம்பர் ஈசனே

மேல்

#1282
தொழுது தூ மலர் தூவி துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கி புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே

மேல்

#1283
விரியும் தண் இளவேனிலின் வெண் பிறை
புரியும் காமனை வேவ புருவமும்
திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து
எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே

மேல்

#1284
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடி பத்து உடையான்-தனை
கனிய ஊன்றிய காரணம் என்-கொலோ
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே

மேல்

22. திருக்குடமூக்கு – திருக்குறுந்தொகை


#1285
பூ வணத்தவன் புண்ணியன் நண்ணி அங்கு
ஆவணத்து உடையான் அடியார்களை
தீ வண திருநீறு மெய் பூசி ஓர்
கோவணத்து உடையான் குடமூக்கிலே

மேல்

#1286
பூத்து ஆடி கழியாதே நீர் பூமியீர்
தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்-மினோ
வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று
கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே

மேல்

#1287
நங்கையாள் உமையாள் உறை நாதனார்
அம் கையாளொடு அறுபதம் தாழ் சடை
கங்கையாள் அவள் கன்னி எனப்படும்
கொங்கையாள் உறையும் குடமூக்கிலே

மேல்

#1288
ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்
ஏதானும் இனிது ஆகும் இயமுனை
சேதா ஏறு உடையான் அமர்ந்த இடம்
கோதாவிரி உறையும் குடமூக்கிலே

மேல்

#1289
நக்க அரையனை நாள்-தொறும் நன் நெஞ்சே
வக்கரை உறைவானை வணங்கு நீ
அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன்
கொக்கரை உடையான் குடமூக்கிலே

மேல்

#1290
துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள்
பிறவி நீங்க பிதற்று-மின் பித்தராய்
மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம்
குறவனார் உறையும் குடமூக்கிலே

மேல்

#1291
தொண்டர் ஆக தொழுது பணி-மினோ
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர்
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரை
கொண்டவன் உறையும் குடமூக்கிலே

மேல்

#1292
காமியம் செய்து காலம் கழியாதே
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்-மினோ
சாமியோடு சரச்சுவதி அவள்
கோமியும் உறையும் குடமூக்கிலே

மேல்

#1293
சிரமம் செய்து சிவனுக்கு பத்தராய்
பரமனை பல நாளும் பயிற்று-மின்
பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம்
குரவனார் உறையும் குடமூக்கிலே

மேல்

#1294
அன்றுதான் அரக்கன் கயிலாயத்தை
சென்று தான் எடுக்க உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு நல் விரல் ஊன்றி பின்
கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே

மேல்

23. திருநின்றியூர் – திருக்குறுந்தொகை


#1295
கொடும் கண் வெண் தலை கொண்டு குறை விலை
படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர்
நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்
கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே

மேல்

#1296
வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள் வளை
நீதியே கொள-பாலது நின்றியூர்
வேதம் ஓதி விளங்கு வெண் தோட்டராய்
காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே

மேல்

#1297
புற்றின் ஆர் அரவம் புலி தோல் மிசை
சுற்றினார் சுண்ண போர்வை கொண்டார் சுடர்
நெற்றிக்கண் உடையார் அமர் நின்றியூர்
பற்றினாரை பற்றா வினை பாவமே

மேல்

#1298
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் மல்கி அயல் எலாம்
நிறையும் பூம் பொழில் சூழ் திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே

மேல்

#1299
சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள்
இனையன் என்று என்றும் ஏசுவது என்-கொலோ
நினையும் தண் வயல் சூழ்தரு நின்றியூர்
பனையின் ஈர் உரி போர்த்த பரமே

மேல்

#1300
உரைப்ப கேண்-மின் நும் உச்சி உளான்-தனை
நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர்
உரை பொன்கற்றையர் ஆர் இவரோ எனில்
திரைத்து பாடி திரிதரும் செல்வரே

மேல்

#1301
கன்றி ஊர் முகில் போலும் கரும் களிறு
இன்றி ஏறலனால் இது என்-கொலோ
நின்றியூர் பதி ஆக நிலாயவன்
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே

மேல்

#1302
நிலை இலா வெள்ளைமாலையன் நீண்டது ஓர்
கொலை விலால் எயில் எய்த கொடியவன்
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர்
உரையினால் தொழுவார் வினை ஓயுமே

மேல்

#1303
அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும்
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ
இஞ்சி மா மதில் எய்து இமையோர் தொழ
குஞ்சி வான் பிறை சூடிய கூத்தனே

மேல்

#1304
எளியனா மொழியா இலங்கைக்கு இறை
களியினால் கயிலாயம் எடுத்தவன்
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர்
அளியினால் தொழுவார் வினை அல்குமே

மேல்

24. திருவொற்றியூர் – திருக்குறுந்தொகை


#1305
ஒற்றி ஊரும் ஒளி மதி பாம்பினை
ஒற்றி ஊரும் அ பாம்பும் அதனையே
ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன்
ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே

மேல்

#1306
வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான்மகள்
ஈட்டவே இருள் ஆடி இடு பிணக்
காட்டில் ஓரி கடிக்க வெடித்தது ஓர்
ஓட்டை வெண் தலை கை ஒற்றியூரரே

மேல்

#1307
கூற்று தண்டத்தை அஞ்சி குறிக்கொண்-மின்
ஆற்று தண்டத்து அடக்கும் அரன் அடி
நீற்று தண்டத்தராய் நினைவார்க்கு எலாம்
ஊற்றுத்தண்டு ஒப்பர் போல் ஒற்றியூரரே

மேல்

#1308
சுற்றும் பேய் சுழல சுடுகாட்டு எரி
பற்றி ஆடுவர் பாய் புலித்தோலினர்
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய்
ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே

மேல்

#1309
புற்றில் ஆடு அரவு ஆட்டி உமையொடு
பெற்றம் ஏறு உகந்து ஏறும் பெருமையான்
மற்றையாரொடு வானவரும் தொழ
ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே

மேல்

#1310
போது தாழ்ந்து புது மலர் கொண்டு நீர்
மாது தாழ் சடை வைத்த மணாளனார்
ஓது வேதியனார் திரு ஒற்றியூர்
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே

மேல்

#1311
பலவும் அன்னங்கள் பல் மலர் மேல் துஞ்சும்
கலவ மஞ்ஞைகள் கார் என எள்குறும்
உலவு பைம் பொழில் சூழ் திரு ஒற்றியூர்
நிலவினான் அடியே அடை நெஞ்சமே

மேல்

#1312
ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று
ஒன்று போலும் உதைத்து களைந்தது
ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று
ஒன்று போல் உகந்தார் ஒற்றியூரரே

மேல்

#1313
படை கொள் பூதத்தார் வேதத்தர் கீதத்தர்
சடை கொள் வெள்ளத்தர் சாந்த வெண்நீற்றினர்
உடையும் தோல் உகந்தார் உறை ஒற்றியூர்
அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே

மேல்

#1314
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை
வரையினால் வலி செற்றவர் வாழ்விடம்
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர்
உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே

மேல்

25. திருப்பாசூர் – திருக்குறுந்தொகை


#1315
முந்தி மூஎயில் எய்த முதல்வனார்
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார்
அந்திக்கோன்-தனக்கே அருள்செய்தவர்
பந்தி செம் சடை பாசூர் அடிகளே

மேல்

#1316
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார்
கடந்த காலனை கால் கொடு பாய்ந்தவர்
படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகளே

மேல்

#1317
நாறு கொன்றையும் நாகமும் திங்களும்
ஆறும் செம் சடை வைத்த அழகனார்
காறு கண்டத்தர் கையது ஓர் சூலத்தர்
பாறின் ஓட்டினர் பாசூர் அடிகளே

மேல்

#1318
வெற்றியூர் உறை வேதியர் ஆவர் நல்
ஒற்றி ஏறு உகந்து ஏறும் ஒருவனார்
நெற்றிக்கண்ணினர் நீள் அரவம்-தனை
பற்றி ஆட்டுவர் பாசூர் அடிகளே

மேல்

#1319
மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணி-பால்
இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர்
துட்டரேல் அறியேன் இவர் சூழ்ச்சிமை
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே

மேல்

#1320
பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம்
எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர்
சொல்லி போய் புகும் ஊர் அறியேன் சொல்லீர்
பல்கும் நீற்றினர் பாசூர் அடிகளே

மேல்

#1321
கட்டிவிட்ட சடையர் கபாலியர்
எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ்வவர்
இட்டமா அறியேன் இவர் செய்வன
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே

மேல்

#1322
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர்
காதில் வெண் குழை வைத்த கபாலியார்
நீதி ஒன்று அறியார் நிறை கொண்டனர்
பாதி வெண் பிறை பாசூர் அடிகளே

மேல்

#1323
சாம்பல் பூசூவர் தாழ் சடை கட்டுவர்
ஓம்பல் மூது எருது ஏறும் ஒருவனார்
தேம்பல் வெண் மதி சூடுவர் தீயது ஓர்
பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே

மேல்

#1324
மாலினோடு மறையவன்-தானுமாய்
மேலும் கீழும் அளப்பரிது ஆயவர்
ஆலின் நீழல் அறம் பகர்ந்தார் மிக
பால் வெண்நீற்றினர் பாசூர் அடிகளே

மேல்

#1325
திரியும் மூஎயில் செம் கணை ஒன்றினால்
எரிய எய்தனரேனும் இலங்கை_கோன்
நெரிய ஊன்றியிட்டார் விரல் ஒன்றினால்
பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே

மேல்

26. திருவன்னியூர் – திருக்குறுந்தொகை


#1326
காடு கொண்டு அரங்கா கங்குல்-வாய் கணம்
பாட மா நடம் ஆடும் பரமனார்
வாட மான் நிறம் கொள்வர் மணம் கமழ்
மாட மா மதில் சூழ் வன்னியூரரே

மேல்

#1327
செம் கண் நாகம் அரையது தீ திரள்
அங்கை ஏந்தி நின்றார் எரி ஆடுவர்
கங்கை வார் சடை மேல் இடம் கொண்டவர்
மங்கை பாகம் வைத்தார் வன்னியூரரே

மேல்

#1328
ஞானம் காட்டுவர் நன் நெறி காட்டுவர்
தானம் காட்டுவர்-தம் அடைந்தார்க்கு எலாம்
தானம் காட்டி தம் தாள் அடைந்தார்கட்கு
வானம் காட்டுவர் போல் வன்னியூரரே

மேல்

#1329
இம்மை அம்மை என இரண்டும் இவை
மெய்ம்மைதான் அறியாது விளம்புவர்
மெய்ம்மையால் நினைவார்கள்-தம் வல்வினை
வம்-மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே

மேல்

#1330
பிறை கொள் வாள் நுதல் பெய் வளை தோளியர்
நிறையை கொள்பவர் நீறு அணி மேனியர்
கறை கொள் கண்டத்தர் வெண் மழுவாளினர்
மறை கொள் வாய்மொழியார் வன்னியூரரே

மேல்

#1331
திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர்
துளை கை வேழத்தர் தோயலர் சுடர் மதி
முளைக்கும் மூரல் கதிர் கண்டு நாகம் நா
வளைக்கும் வார்சடையார் வன்னியூரரே

மேல்

#1332
குணம் கொள் தோள் எட்டு மூர்த்தி இணை அடி
இணங்குவார்கட்கு இனியனுமாய் நின்றான்
வணங்கி மா மலர் கொண்டவர் வைகலும்
வணங்குவார் மனத்தார் வன்னியூரரே

மேல்

#1333
இயலும் மாலொடு நான்முகன் செய் தவம்
முயலின் காண்பு அரிதாய் நின்ற மூர்த்திதான்
அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை
வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே

மேல்

#1334
நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா
விலங்கல் கோத்து எடுத்தான் அது மிக்கிட
இலங்கை_மன்னன் இருபது தோளினை
மலங்க ஊன்றி வைத்தார் வன்னியூரரே

மேல்

27. திருவையாறு – திருக்குறுந்தொகை


#1335
சிந்தை வாய்தல் உளான் வந்து சீரியன்
பொந்து வார் புலால் வெண் தலை கையினன்
முந்தி வாயது ஓர் மூ இலை வேல் பிடித்து
அந்தி வாயது ஓர் பாம்பர் ஐயாறரே

மேல்

#1336
பாகம் மாலை மகிழ்ந்தனர் பால் மதி
போக ஆனையின் ஈர் உரி போர்த்தவர்
கோகம் மாலை குலாயது ஓர் கொன்றையும்
ஆக ஆன் நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே

மேல்

#1337
நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்-தன்னுளே
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு நான்
துஞ்சும் போழ்து நின் நாம திரு எழுத்து
அஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே

மேல்

#1338
நினைக்கும் நெஞ்சின் உள்ளார் நெடு மா மதில்
அனைத்தும் ஒள் அழல் வாய் எரியூட்டினார்
பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர்
அனைத்து வாய்தலுள் ஆரும் ஐயாறரே

மேல்

#1339
பரியர் நுண்ணியர் பார்த்தற்கு அரியவர்
அரிய பாடலர் ஆடலர் அன்றியும்
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கு எலாம்
அரியர் தொண்டர்க்கு எளியர் ஐயாறரே

மேல்

#1340
புலரும்போதும் இலா பட்ட பொன் சுடர்
மலரும் போதுகளால் பணிய சிலர்
இலரும் போதும் இலாததும் அன்றியும்
அலரும் போதும் அணியும் ஐயாறரே

மேல்

#1341
பங்கு அம் மாலை குழலி ஒர் பால் நிற
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமும் கண்ணியும்
அங்க மாலையும் சூடும் ஐயாறரே

மேல்

#1342
முன்னை ஆறு முயன்று எழுவீர் எலாம்
பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள்
மன் ஐ ஆறு மருவிய மாதவன்
தன் ஐயாறு தொழ தவம் ஆகுமே

மேல்

#1343
ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி
வான் ஐ ஆறு வளாயது காண்-மினோ
நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன்னருள்
தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே

மேல்

#1344
அரக்கின் மேனியன் அம் தளிர்மேனியன்
அரக்கின் சேவடியாள் அஞ்ச அஞ்சல் என்று
அரக்கன் ஈர்_ஐந்து வாயும் அலறவே
அரக்கினான் அடியாலும் ஐயாறனே

மேல்

28. திருவையாறு – திருக்குறுந்தொகை


#1345
சிந்தை வண்ணத்தராய் திறம்பா வணம்
முந்தி வண்ணத்தராய் முழு நீறு அணி
சந்தி வண்ணத்தராய் தழல் போல்வது ஓர்
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே

மேல்

#1346
மூல வண்ணத்தராய் முதல் ஆகிய
கோல வண்ணத்தர் ஆகி கொழும் சுடர்
நீல வண்ணத்தர் ஆகி நெடும் பளிங்கு
ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே

மேல்

#1347
சிந்தை வண்ணமும் தீயது ஓர் வண்ணமும்
அந்தி போது அழகு ஆகிய வண்ணமும்
பந்தி காலனை பாய்ந்தது ஓர் வண்ணமும்
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே

மேல்

#1348
இருளின் வண்ணமும் ஏழ் இசை வண்ணமும்
சுருளின் வண்ணமும் சோதியின் வண்ணமும்
மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமும் ஆவர் ஐயாறரே

மேல்

#1349
இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல்
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும்
மழை கண் மா முகில் ஆகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமும் ஆவர் ஐயாறரே

மேல்

#1350
இண்டை வண்ணமும் ஏழ் இசை வண்ணமும்
தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும்
கண்ட வண்ணங்களாய் கனல் மா மணி
அண்ட வண்ணமும் ஆவர் ஐயாறரே

மேல்

#1351
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும்
கரும்பின் இன்மொழி காரிகை வண்ணமும்
விரும்பினார் வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே

மேல்

#1352
ஊழி வண்ணமும் ஒண் சுடர் வண்ணமும்
வேழ ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும்
வாழி தீ உரு ஆகிய வண்ணமும்
ஆழி வண்ணமும் ஆவர் ஐயாறரே

மேல்

#1353
செய் தவன் திருநீறு அணி வண்ணமும்
எய்த நோக்க அரிது ஆகிய வண்ணமும்
கைது காட்சி அரியது ஓர் வண்ணமும்
ஐது வண்ணமும் ஆவர் ஐயாறரே

மேல்

#1354
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும்
இடர்க்கள் போல் பெரிது ஆகிய வண்ணமும்
கடுத்த கை நரம்பால் இசை வண்ணமும்
அடுத்த வண்ணமும் ஆவர் ஐயாறரே

மேல்

29. திருவாவடுதுறை – திருக்குறுந்தொகை


#1355
நிறைக்க வாலியள் அல்லள் இ நேர்_இழை
மறைக்க வாலியள் அல்லள் இ மாதராள்
பிறைக்கு அவாவி பெரும் புனல் ஆவடு
துறை கவாலியோடு ஆடிய சுண்ணமே

மேல்

#1356
தவள மா மதி சாயல் ஓர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை
அளவு கண்டிலள் ஆவடுதண்துறை
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே

மேல்

#1357
பாதி பெண் ஒருபாகத்தன் பல் மறை
ஓதி என் உளம் கொண்டவன் ஒண் பொருள்
ஆதி ஆவடுதண்துறை மேவிய
சோதியே சுடரே என்று சொல்லுமே

மேல்

#1358
கார் கொள் மா முகில் போல்வது ஓர் கண்டத்தன்
வார் கொள் மென் முலை சேர்ந்து இறுமாந்து இவள்
ஆர் கொள் கொன்றையன் ஆவடுதண்துறை
தார்க்கு நின்று இவள் தாழுமா காண்-மினே

மேல்

#1359
கருகு_கண்டத்தன் காய் கதிர் சோதியன்
பருகு பால் அமுதே எனும் பண்பினன்
அருகு சென்று இவள் ஆவடுதண்துறை
ஒருவன் என்னை உடைய கோ என்னுமே

மேல்

#1360
குழலும் கொன்றையும் கூவிளம் மத்தமும்
தழலும் தையல் ஓர்பாகமா தாங்கினான்
அழகன் ஆவடுதண்துறையா என
கழலும் கை வளை காரிகையாளுக்கே

மேல்

#1361
பஞ்சின் மெல் அடி பாவை ஓர்பங்கனை
தஞ்சம் என்று இறுமாந்து இவள் ஆரையும்
அஞ்சுவாளல்லள் ஆவடுதண்துறை
மஞ்சனோடு இவள் ஆடிய மையலே

மேல்

#1362
பிறையும் சூடி நல் பெண்ணொடு ஆண் ஆகி என்
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்
அறையும் பூம் பொழில் ஆவடுதண்துறை
இறைவன் என்னை உடையவன் என்னுமே

மேல்

#1363
வையம்தான் அளந்தானும் அயனுமாய்
மெய்யை காணலுற்றார்க்கு அழல் ஆயினன்
ஐயன் ஆவடுதண்துறையா என
கையில் வெள் வளையும் கழல்கின்றதே

மேல்

#1364
பக்கம் பூதங்கள் பாட பலி கொள்வான்
மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்
அக்கு அணிந்தவன் ஆவடுதண்துறை
நக்கன் என்னும் இ நாணிலி காண்-மினே

மேல்

30. திருப்பராய்த்துறை – திருக்குறுந்தொகை


#1365
கரப்பர் காலம் அடைந்தவர்-தம் வினை
சுருக்கும் ஆறு வல்லார் கங்கை செம் சடை
பரப்பு நீர் வரு காவிரி தென் கரை
திரு பராய்த்துறை மேவிய செல்வரே

மேல்

#1366
மூடினார் களி யானையின் ஈர் உரி
பாடினார் மறை நான்கினோடு ஆறு அங்கம்
சேடனார் தென் பராய்த்துறை செல்வரை
தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே

மேல்

#1367
பட்ட நெற்றியர் பால் மதிக்கீற்றினர்
நட்டம் ஆடுவர் நள்ளிருள் ஏமமும்
சிட்டனார் தென் பராய்த்துறை செல்வனார்
இட்டமாய் இருப்பாரை அறிவரே

மேல்

#1368
முன்பு எலாம் சில மோழைமை பேசுவர்
என்பு எலாம் பல பூண்டு அங்கு உழிதர்வர்
தென் பராய்த்துறை மேவிய செல்வனார்
அன்பராய் இருப்பாரை அறிவரே

மேல்

#1369
போது தாதொடு கொண்டு புனைந்து உடன்
தாது அவிழ் சடை சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்க என்று ஏத்தி பராய்த்துறை
சோதியானை தொழுது எழுந்து உய்ம்-மினே

மேல்

#1370
நல்ல நான்மறை ஓதிய நம்பனை
பல் இல் வெண் தலையில் பலி கொள்வனை
தில்லையான் தென் பராய்த்துறை செல்வனை
வல்லையாய் வணங்கி தொழு வாய்மையே

மேல்

#1371
நெருப்பினால் குவித்தால் ஒக்கும் நீள் சடை
பருப்பதம் மத யானை உரித்தவன்
திரு பராய்த்துறையார் திரு மார்பின் நூல்
பொருப்பு அராவி இழி புனல் போன்றதே

மேல்

#1372
எட்ட இட்ட இடு மணல் எக்கர் மேல்
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை
சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல்
விட்டு நம் வினை உள்ளன வீடுமே

மேல்

#1373
நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள் சடை
மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும் வாள் மதி
திரு பராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்பராய் இருப்பாரை அறிவரே

மேல்

#1374
தொண்டு பாடியும் தூ மலர் தூவியும்
இண்டை கட்டி இணை அடி ஏத்தியும்
பண்டரங்கர் பராய்த்துறை பாங்கரை
கண்டுகொண்டு அடியேன் உய்ந்து போவனே

மேல்

#1375
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை
பரக்கும் நீர் பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை ஏத்து-மின்
பொருக்க நும் வினை போய் அறும் காண்-மினே

மேல்

31. திருவானைக்கா – திருக்குறுந்தொகை


#1376
கோனை காவி குளிர்ந்த மனத்தராய்
தேனை காவி உண்ணார் சில தெண்ணர்கள்
ஆனைக்காவில் எம்மானை அணைகிலார்
ஊனை காவி உழிதர்வர் ஊமரே

மேல்

#1377
திருகு சிந்தையை தீர்த்து செம்மை செய்து
பருகி ஊறலை பற்றி பதம் அறிந்து
உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே

மேல்

#1378
துன்பம் இன்றி துயர் இன்றி என்றும் நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்து-மின்
என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே

மேல்

#1379
நாவால் நன்று நறு மலர் சேவடி
ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார் வினை
காவாய் என்று தம் கைதொழுவார்க்கு எலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே

மேல்

#1380
வஞ்சம் இன்றி வணங்கு-மின் வைகலும்
வெம் சொல் இன்றி விலகு-மின் வீடு உற
நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம்
அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே

மேல்

#1381
நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே
படைகள் போல் வரும் பஞ்சமாபூதங்கள்
தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே

மேல்

#1382
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும்
கழுகு அரிப்பதன் முன்னம் கழல் அடி
தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று
அழுமவர்கள் அன்பன் ஆனைக்கா அண்ணலே

மேல்

#1383
உருளும்போது அறிவு ஒண்ணா உலகத்தீர்
தெருளும் சிக்கென தீவினை சேராதே
இருள் அறுத்து நின்று ஈசன் என்பார்க்கு எலாம்
அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே

மேல்

#1384
நேசம் ஆகி நினை மட நெஞ்சமே
நாசம் ஆய குல நலம் சுற்றங்கள்
பாசம் அற்று பராபர ஆனந்த
ஆசை உற்றிடும் ஆனைக்கா அண்ணலே

மேல்

#1385
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை
கீதம் கின்னரம் பாட கெழுவினான்
பாதம் வாங்கி பரிந்து அருள்செய்து அங்கு ஓர்
ஆதி ஆயிடும் ஆனைக்கா அண்ணலே

மேல்

32. திருப்பூந்துருத்தி – திருக்குறுந்தொகை


#1386
கொடி கொள் செல்வ விழா குணலை அறா
கடி கொள் பூம் பொழில் கச்சி ஏகம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத்தி நகர்
அடிகள் சேவடி கீழ் நாம் இருப்பதே

மேல்

#1387
ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய்
பார்த்தனோடு படை தொடுமாகிலும்
பூத்த நீள் பொழில் பூந்துருத்தி நகர்
தீர்த்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே

மேல்

#1388
மாதினை மதித்தான் ஒருபாகமா
காதலால் கரந்தான் சடை கங்கையை
பூத_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு
ஆதி சேவடி கீழ் நாம் இருப்பதே

மேல்

#1389
மூவனாய் முதலாய் இ உலகு எலாம்
காவனாய் கடும் காலனை காய்ந்தவன்
பூவின்_நாயகன் பூந்துருத்தி நகர்
தேவன் சேவடி கீழ் நாம் இருப்பதே

மேல்

#1390
செம்பொனே ஒக்கும் மேனியன் தேசத்தில்
உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும்
பொன் பொன்னார் செல்வ பூந்துருத்தி நகர்
நம்பன் சேவடி கீழ் நாம் இருப்பதே

மேல்

#1391
வல்லம் பேசி வலி செய் மூன்று ஊரினை
கொல்லம் பேசி கொடும் சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர்
செல்வன் சேவடி கீழ் நாம் இருப்பதே

மேல்

#1392
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று
பருத்த பாம்பொடு பால் மதி கங்கையும்
பொருத்தனாகிலும் பூந்துருத்தி நகர்
திருத்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே

மேல்

#1393
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான்
பொருத நீர் வரு பூந்துருத்தி நகர்
சதுரன் சேவடி கீழ் நாம் இருப்பதே

மேல்

#1394
செதுகு அறா மனத்தார் புறம்கூறினும்
கொதுகு அறா கண்ணின் நோன்பிகள் கூறினும்
பொதுவின்_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு
அதிபன் சேவடி கீழ் நாம் இருப்பதே

மேல்

#1395
துடித்த தோள் வலி வாள் அரக்கன்-தனை
பிடித்த கை ஞெரிந்துற்றன கண் எலாம்
பொடிக்க ஊன்றிய பூந்துருத்தி நகர்
படி கொள் சேவடி கீழ் நாம் இருப்பதே

மேல்

33. திருச்சோற்றுத்துறை – திருக்குறுந்தொகை


#1396
கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர்
தில்லை சிற்றம்பலத்து உறை செல்வனார்
தொல்லை ஊழியர் சோற்றுத்துறையர்க்கே
வல்லையாய் பணி செய் மட நெஞ்சமே

மேல்

#1397
முத்தி ஆக ஒரு தவம் செய்திலை
அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை
தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே
பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே

மேல்

#1398
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற
தொட்டு நின்றும் அ சோற்றுத்துறையர்க்கே
பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே

மேல்

#1399
ஆதியான் அண்டவாணர்க்கு அருள் நல்கும்
நீதியான் என்றும் நின்மலனே என்றும்
சோதியான் என்றும் சோற்றுத்துறையர்க்கே
வாதியாய் பணி செய் மட நெஞ்சமே

மேல்

#1400
ஆட்டினாய் அடியேன் வினை ஆயின
ஓட்டினாய் ஒரு காதில் இலங்கு வெண்
தோட்டினாய் என்று சோற்றுத்துறையர்க்கே
நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே

மேல்

#1401
பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய்
தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கு
தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே

மேல்

#1402
ஆணி போல நீ ஆற்ற வலியைகாண்
ஏணி போல் இழிந்து ஏறியும் ஏங்கியும்
தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே
பூணியாய் பணி செய் மட நெஞ்சமே

மேல்

#1403
பெற்றம் ஏறில் என் பேய் படை ஆகில் என்
புற்றில் ஆடு அரவே அது பூணில் என்
சுற்றி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே
பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே

மேல்

#1404
அல்லியான் அரவு ஐந்தலை நாகஅணை
பள்ளியான் அறியாத பரிசு எலாம்
சொல்லி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே
புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே

மேல்

#1405
மிண்டரோடு விரவியும் வீறு இலா
குண்டர்-தம்மை கழிந்து உய்ய போந்து நீ
தொண்டு செய்து என்றும் சோற்றுத்துறையர்க்கே
உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே

மேல்

#1406
வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்-தனை
ஆழ்ந்து போய் அலற விரல் ஊன்றினான்
சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே
தாழ்ந்து நீ பணி செய் மட நெஞ்சமே

மேல்

34. திருநெய்த்தானம் – திருக்குறுந்தொகை


#1407
கொல்லியான் குளிர் தூங்கு குற்றாலந்தான்
புல்லியார் புரம் மூன்று எரிசெய்தவன்
நெல்லியான் நிலையான நெய்த்தானனை
சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே

மேல்

#1408
இரவனை இடு வெண் தலை ஏந்தியை
பரவனை படையார் மதில் மூன்றையும்
நிரவனை நிலையான நெய்த்தானனை
குரவனை தொழுவார் கொடிவாணரே

மேல்

#1409
ஆனிடை ஐந்தும் ஆடுவர் ஆரிருள்
கானிடை நடம் ஆடுவர் காண்-மினோ
தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை
வானிடை தொழுவார் வலிவாணரே

மேல்

#1410
விண்டவர் புரம் மூன்றும் வெண் நீறு எழ
கண்டவன் கடிது ஆகிய நஞ்சினை
உண்டவன் ஒளி ஆன நெய்த்தானனை
தொண்டராய் தொழுவார் சுடர்வாணரே

மேல்

#1411
முன்கை நோவ கடைந்தவர் நிற்கவே
சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான்
நங்கையோடு நவின்ற நெய்த்தானனை
தம் கையால் தொழுவார் தலைவாணரே

மேல்

#1412
சுட்ட நீறு மெய் பூசி சுடலையுள்
நட்டம் ஆடுவர் நள்ளிருள் பேயொடே
சிட்டர் வானவர் தேரும் நெய்த்தானனை
இட்டமாய் தொழுவார் இன்பவாணரே

மேல்

#1413
கொள்ளி தீ எரி வீசி கொடியது ஓர்
கள்ளிக்காட்டிடை ஆடுவர் காண்-மினோ
தெள்ளி தேறி தெளிந்து நெய்த்தானனை
உள்ளத்தால் தொழுவார் உம்பர்வாணரே

மேல்

#1414
உச்சி மேல் விளங்கும் இள வெண் பிறை
பற்றி ஆடு அரவோடும் சடை பெய்தான்
நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனை
சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே

மேல்

#1415
மாலொடும் மறை ஓதிய நான்முகன்
காலொடும் முடி காண்பு அரிது ஆயினான்
சேலொடும் செரு செய்யும் நெய்த்தானனை
மாலொடும் தொழுவார் வினை வாடுமே

மேல்

#1416
வலிந்த தோள் வலி வாள் அரக்கன்-தனை
நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார்
புரிந்து கை நரம்போடு இசை பாடலும்
பரிந்தனை பணிவார் வினை பாறுமே

மேல்

35. திருப்பழனம் – திருக்குறுந்தொகை


#1417
அருவனாய் அத்தி ஈர் உரி போர்த்து உமை
உருவனாய் ஒற்றியூர் பதியாகிலும்
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான்
திருவினால் திரு வேண்டும் இ தேவர்க்கே

மேல்

#1418
வையம் வந்து வணங்கி வலம்கொளும்
ஐயனை அறியார் சிலர் ஆதர்கள்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனம்-பால்
பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே

மேல்

#1419
வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை
திண்ணம் ஆக திரு சடை சேர்த்தியே
பண்ணும் ஆகவே பாடும் பழனத்தான்
எண்ணும் நீர் அவன் ஆயிரம் நாமமே

மேல்

#1420
மூர்க்க பாம்பு பிடித்தது மூச்சிட
வாக்கு அ பாம்பினை கண்ட துணி மதி
பாக்க பாம்பினை பற்றும் பழனத்தான்
தார் கொள் மாலை சடை கரந்திட்டதே

மேல்

#1421
நீலம் உண்ட மிடற்றினன் நேர்ந்தது ஓர்
கோலம் உண்ட குணத்தான் நிறைந்தது ஓர்
பாலும் உண்டு பழனம்-பால் என்னிடை
மாலும் உண்டு இறை என்தன் மனத்துளே

மேல்

#1422
மந்தம் ஆக வளர் பிறை சூடி ஓர்
சந்தம் ஆக திரு சடை சாத்துவான்
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான்
எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே

மேல்

#1423
மார்க்கம் ஒன்று அறியார் மதியில்லிகள்
பூ கரத்தின் புரிகிலர் மூடர்கள்
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாள்-கண் நின்று தலை வணங்கார்களே

மேல்

#1424
ஏறினார் இமையோர்கள் பணி கண்டு
தேறுவாரலர் தீவினையாளர்கள்
பாறினார் பணி வேண்டும் பழனத்தான்
கூறினான் உமையாளொடும் கூடவே

மேல்

#1425
சுற்றுவார் தொழுவார் சுடர்_வண்ணன் மேல்
தெற்றினார் திரியும் புரம் மூன்று எய்தான்
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை
எற்றினான் மறக்கேன் எம்பிரானையே

மேல்

#1426
பொங்கு மா கடல் சூழ் இலங்கைக்கு இறை
அங்கம் ஆன இறுத்து அருள்செய்தவன்
பங்கன் என்றும் பழனன் உமையொடும்
தங்கன் தாள் அடியேன் உடை உச்சியே

மேல்

36. திருச்செம்பொன்பள்ளி – திருக்குறுந்தொகை


#1427
கான் அறாத கடி பொழில் வண்டு இனம்
தேன் அறாத திரு செம்பொன்பள்ளியான்
ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி
தான் அறாதது ஓர் கொள்கையன் காண்-மினே

மேல்

#1428
என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு
அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி
செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை
நம் பொன்பள்ளி உள்க வினை நாசமே

மேல்

#1429
வேறு கோலத்தர் ஆண் அலர் பெண் அலர்
கீறு கோவண ஐ துகில் ஆடையர்
தேறல் ஆவது ஒன்று அன்று செம்பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே

மேல்

#1430
அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து
இருவராய் இடுவார் கடை தேடுவார்
தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார்
ஒருவர்தாம் பல பேர் உளர் காண்-மினே

மேல்

#1431
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான்
ஏவலால் எயில் மூன்றும் எரித்தவன்
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்
மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே

மேல்

#1432
சலவராய் ஒரு பாம்பொடு தண் மதி
கலவர் ஆவதன் காரணம் என்-கொலோ
திலக நீள் முடியார் செம்பொன்பள்ளியார்
குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே

மேல்

#1433
கை கொள் சூலத்தர் கட்டுவாங்கத்தினர்
மை கொள் கண்டத்தர் ஆகி இரு சுடர்
செய்ய மேனி வெண்நீற்றர் செம்பொன்பள்ளி
ஐயர் கையது ஓர் ஐந்தலை நாகமே

மேல்

#1434
வெம் கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
பைம் கண் ஆனையின் ஈர் உரி போத்தவர்
செங்கண்மால் விடையார் செம்பொன்பள்ளியார்
அங்கணாய் அடைந்தார் வினை தீர்ப்பரே

மேல்

#1435
நன்றி நாரணன் நான்முகன் என்று இவர்
நின்ற நீள் முடியோடு அடி காண்புற்று
சென்று காண்பு அரியான் செம்பொன்பள்ளியான்
நின்ற சூழலில் நீள் எரி ஆகியே

மேல்

#1436
திரியும் மும்மதில் செம் கணை ஒன்றினால்
எரிய எய்து அனல் ஓட்டி இலங்கை_கோன்
நெரிய ஊன்றியிட்டார் செம்பொன்பள்ளியார்
அரிய வானம் அவர் அருள்செய்வரே

மேல்

37. திருக்கடவூர் வீரட்டம் – திருக்குறுந்தொகை


#1437
மலை கொள் ஆனை மயக்கிய வல்வினை
நிலைக்கொள் ஆனை நினைப்புறு நெஞ்சமே
கொலை கை யானையும் கொன்றிடும் ஆதலால்
கலை கையானை கண்டீர் கடவூரரே

மேல்

#1438
வெள்ளி மால் வரை போல்வது ஓர் ஆனையார்
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார்
கொள்ளம் ஆகிய கோயிலுள் ஆனையார்
கள்ள ஆனை கண்டீர் கடவூரரே

மேல்

#1439
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார்
ஊனை வேவ உருக்கிய ஆனையார்
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே
கான ஆனை கண்டீர் கடவூரரே

மேல்

#1440
ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார்
நீல மேனி நெடும் பளிங்கு ஆனையார்
கோலம் ஆய கொழும் சுடர் ஆனையார்
கான ஆனை கண்டீர் கடவூரரே

மேல்

#1441
அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார்
வெளுத்த நீள் கொடி ஏறு உடை ஆனையார்
எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார்
களித்த ஆனை கண்டீர் கடவூரரே

மேல்

#1442
விடுத்த மால் வரை விண்ணுற ஆனையார்
தொடுத்த மால் வரை தூயது ஓர் ஆனையார்
கடுத்த காலனை காய்ந்தது ஓர் ஆனையார்
கடுத்த ஆனை கண்டீர் கடவூரரே

மேல்

#1443
மண்உளாரை மயக்குறும் ஆனையார்
எண்உளார் பலர் ஏத்திடும் ஆனையார்
விண்உளார் பலரும் அறி ஆனையார்
கண்ணுள் ஆனை கண்டீர் கடவூரரே

மேல்

#1444
சினக்கும் செம்பவள திரள் ஆனையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார்
அனைக்கும் அன்புடையார் மனத்து ஆனையார்
கனைக்கும் ஆனை கண்டீர் கடவூரரே

மேல்

#1445
வேதம் ஆகிய வெம் சுடர் ஆனையார்
நீதியால் நிலன் ஆகிய ஆனையார்
ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார்
காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே

மேல்

#1446
நீண்ட மாலொடு நான்முகன்தானுமாய்
காண்டும் என்று புக்கார்கள் இருவரும்
ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார்
காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே

மேல்

#1447
அடுத்து வந்த இலங்கையர்_மன்னனை
எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார்
கடுத்த காலனை காய்ந்தது ஓர் ஆனையார்
கடுக்கை ஆனை கண்டீர் கடவூரரே

மேல்

38. திருக்கடவூர் மயானம் – திருக்குறுந்தொகை


#1448
குழை கொள் காதினர் கோவண ஆடையர்
உழையர்தாம் கடவூரின் மயானத்தார்
பழைய தம் அடியார் செய்யும் பாவமும்
பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே

மேல்

#1449
உன்னி வானவர் ஓதிய சிந்தையில்
கன்னல் தேன் கடவூரின் மயானத்தார்
தன்னை நோக்கி தொழுது எழுவார்க்கு எலாம்
பின்னை என்னார் பெருமான் அடிகளே

மேல்

#1450
சூலம் ஏந்துவர் தோல்உடைஆடையர்
ஆலம் உண்டு அமுதே மிக தேக்குவர்
காலகாலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமான் அடிகளே

மேல்

#1451
இறைவனார் இமையோர் தொழு பைம் கழல்
மறவனார் கடவூரின் மயானத்தார்
அறவனார் அடியார்அடியார்-தங்கள்
பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே

மேல்

#1452
கத்து காளி கதம் தணிவித்தவர்
மத்தர்தாம் கடவூரின் மயானத்தார்
ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார் ஒரு
பித்தர் காணும் பெருமான் அடிகளே

மேல்

#1453
எரி கொள் மேனி இளம் பிறை வைத்தவர்
கரியர்தாம் கடவூரின் மயானத்தார்
அரியர் அண்டத்துஉளோர் அயன் மாலுக்கும்
பெரியர் காணும் பெருமான் அடிகளே

மேல்

#1454
அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
கணங்கள் கடவூரின் மயானத்தார்
வணங்குவார் இடர் தீர்ப்பர் மயக்குறும்
பிணம் கொள் காடர் பெருமாள் அடிகளே

மேல்

#1455
அரவு கையினர் ஆதிபுராணனார்
மரவு சேர் கடவூரின் மயானத்தார்
பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர்
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே

மேல்

39. திருமயிலாடுதுறை – திருக்குறுந்தொகை


#1456
கொள்ளும் காதன்மை பெய்துறும் கோல் வளை
உள்ளம் உள்கி உரைக்கும் திரு பெயர்
வள்ளல் மா மயிலாடுதுறை உறை
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே

மேல்

#1457
சித்தம் தேறும் செறி வளை சிக்கெனும்
பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி
வைத்த மா மயிலாடுதுறை அரன்
கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே

மேல்

#1458
அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம்
வண்டு சேர் மயிலாடுதுறை அரன்
தொண்டர் பாதங்கள் சூடி துதையிலே

மேல்

#1459
வெம் சின கடும் காலன் விரைகிலான்
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம்
மஞ்சன் மா மயிலாடுதுறை உறை
அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே

மேல்

#1460
குறைவு இலோம் கொடு மானுட வாழ்க்கையால்
கறை நிலாவிய கண்டன் எண் தோளினன்
மறைவலான் மயிலாடுதுறை உறை
இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே

மேல்

#1461
நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்
கலைகள் ஆய வல்லான் கயிலாய நல்
மலையன் மா மயிலாடுதுறையன் நம்
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே

மேல்

#1462
நீற்றினான் நிமிர் புன்சடையான் விடை
ஏற்றினான் நமை ஆள்உடையான் புலன்
மாற்றினான் மயிலாடுதுறை என்று
போற்றுவார்க்கும் உண்டோ புவி வாழ்க்கையே

மேல்

#1463
கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன்
நீல மா மயில் ஆடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே

மேல்

#1464
பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி
மணம் கொள சடை வைத்த மறையவன்
வணங்கும் மா மயிலாடுதுறை அரன்
அணங்கு ஒர்பால் கொண்ட கோலம் அழகிதே

மேல்

#1465
நீள் நிலா அரவ சடை நேசனை
பேணிலாதவர் பேதுறவு ஓட்டினோம்
வாள் நிலா மயிலாடுதுறைதனை
காணில் ஆர்க்கும் கடும் துயர் இல்லையே

மேல்

#1466
பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தினான் அவன் இன்னிசை கேட்டலும்
வரத்தினான் மயிலாடுதுறை தொழும்
கரத்தினார் வினைக்கட்கு அறும் காண்-மினே

மேல்

40. திருக்கழிப்பாலை – திருக்குறுந்தொகை


#1467
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
அண்ணலே அறிவான் இவள் தன்மையே

மேல்

#1468
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து
இருந்தவன் கழிப்பாலையுள் எம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்து இவள்
பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே

மேல்

#1469
மழலைதான் வர சொல் தெரிகின்றிலள்
குழலின் நேர் மொழி கூறிய கேண்-மினோ
அழகனே கழிப்பாலை எம் அண்ணலே
இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே

மேல்

#1470
செய்ய மேனி வெண் நீறு அணிவான்-தனை
மையல் ஆகி மதிக்கிலள் ஆரையும்
கை கொள் வெண்மழுவன் கழிப்பாலை எம்
ஐயனே அறிவான் இவள் தன்மையே

மேல்

#1471
கருத்தனை கழிப்பாலையுள் மேவிய
ஒருத்தனை உமையாள் ஒருபங்கனை
அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று
ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே

மேல்

#1472
கங்கையை சடை வைத்து மலைமகள்
நங்கையை உடனே வைத்த நாதனார்
திங்கள் சூடி திரு கழிப்பாலையான்
இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே

மேல்

#1473
ஐயனே அழகே அனல் ஏந்திய
கையனே கறை சேர்தரு கண்டனே
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
ஐயனே விதியே அருள் என்னுமே

மேல்

#1474
பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை
முத்தனை முடிவு ஒன்று இலா மூர்த்தியை
அத்தனை அணி ஆர் கழிப்பாலை எம்
சித்தனை சென்று சேருமா செப்புமே

மேல்

#1475
பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை
அஞ்சும் நான்கும் ஒன்றும் இறுத்தான் அவன்
என் செயான் கழிப்பாலையுள் எம்பிரான்
துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே

மேல்

41. திருப்பைஞ்ஞீலி – திருக்குறுந்தொகை


#1476
உடையர் கோவணம் ஒன்றும் குறைவு இலர்
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்
சடையின் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே

மேல்

#1477
மத்த மா மலர் சூடிய மைந்தனார்
சித்தராய் திரிவார் வினை தீர்ப்பரால்
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம்
அத்தனை தொழ வல்லவர் நல்லரே

மேல்

#1478
விழுது சூலத்தன் வெண் மழுவாள் படை
கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான்
பழுது ஒன்று இன்றி பைஞ்ஞீலி பரமனை
தொழுது செல்பவர்-தம் வினை தூளியே

மேல்

#1479
ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே
நின்ற சூழல் அறிவு அரியான் இடம்
சென்று பார் இடம் ஏத்து பைஞ்ஞீலியுள்
என்றும் மேவி இருந்த அடிகளே

மேல்

#1480
வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார்
தாழ செம் சடை மேல் பிறை வைத்தவர்
தாழை தண் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்
யாழின் பாட்டை உகந்த அடிகளே

மேல்

#1481
குண்டுபட்டு குறி அறியா சமண்
மிண்டரோடு படுத்து உய்ய போந்து நான்
கண்டம் கார் வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி எம்
அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தனே

மேல்

#1482
வரி பை ஆடு அரவு ஆட்டி மத கரி
உரிப்பை மூடிய உத்தமனார் உறை
திரு பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய்
இருப்பர் வானவரோடு இனிதாகவே

மேல்

#1483
கோடல் கோங்கம் புறவு அணி முல்லை மேல்
பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார்
பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர்
ஆடும் நாகம் அசைத்த அடிகளே

மேல்

#1484
கார் உலாம் மலர் கொன்றை அம் தாரினான்
வார் உலாம் முலை மங்கை ஓர்பங்கினன்
தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம்
ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்-மினே

மேல்

#1485
தருக்கி சென்று தட வரை பற்றலும்
நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளும் எம்மான் இடம்
இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே

மேல்

42. திருவேட்களம் – திருக்குறுந்தொகை


#1486
நன்று நாள்-தொறும் நம் வினை போய் அறும்
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்
சென்று நீர் திரு வேட்களத்துள் உறை
துன்று பொன்சடையானை தொழு-மினே

மேல்

#1487
கருப்பு வெம் சிலை காமனை காய்ந்தவன்
பொருப்பு வெம் சிலையால் புரம் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது
இருப்பனாகில் எனக்கு இடர் இல்லையே

மேல்

#1488
வேட்களத்து உறை வேதியன் எம் இறை
ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர்
பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால்
காப்பர் நம்மை கறை மிடற்று அண்ணலே

மேல்

#1489
அல்லல் இல்லை அருவினைதான் இல்லை
மல்கு வெண் பிறை சூடும் மணாளனார்
செல்வனார் திரு வேட்களம் கைதொழ
வல்லராகில் வழி அது காண்-மினே

மேல்

#1490
துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி
நம்பன் ஆகிய நல் மணி வேங்கடனார்
எம் பொனார் உறை வேட்களம் நல் நகர்
இன்பம் சேவடி ஏத்தி இருப்பதே

மேல்

#1491
கட்டப்பட்டு கவலையில் வீழாதே
பொட்ட வல் உயிர் போவதன் முன்னம் நீர்
சிட்டனார் திரு வேட்களம் கைதொழ
பட்ட வல்வினை ஆயன பாறுமே

மேல்

#1492
வட்ட மென்முலையாள் உமை_பங்கனார்
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார்
சிட்டர் சேர் திரு வேட்களம் கைதொழுது
இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே

மேல்

#1493
நட்டம் ஆடிய நம்பனை நாள்-தொறும்
இட்டத்தால் இனிது ஆக நினை-மினோ
வட்ட வார்முலையாள் உமை_பங்கனார்
சிட்டனார் திரு வேட்களம்-தன்னையே

மேல்

#1494
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண்
சுட்ட கொள்கையாராயினும் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும்
சிட்டர் போல் திரு வேட்கள செல்வரே

மேல்

#1495
சேடனார் உறையும் செழு மா மலை
ஓடி அங்கு எடுத்தான் முடிவத்து இற
வாட ஊன்றி மலர் அடி வாங்கிய
வேடனார் உறை வேட்களம் சேர்-மினே

மேல்

43. திருநல்லம் – திருக்குறுந்தொகை


#1496
கொல்லத்தான் நமனார் தமர் வந்த-கால்
இல்லத்தார் செய்யல் ஆவது என் ஏழைகாள்
நல்லத்தான் நமை ஆள்உடையான் கழல்
சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே

மேல்

#1497
பொக்கம் பேசி பொழுது கழியாதே
துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன்
நக்கன் நேர் நல்லம் நண்ணுதல் நன்மையே

மேல்

#1498
பிணிகொள் வார் குழல் பேதையர் காதலால்
பணிகள் மேவி பயன் இல்லை பாவிகாள்
அணுக வேண்டில் அரன் நெறி ஆவது
நணுகும் நாதன் நகர் திரு நல்லமே

மேல்

#1499
தமக்கு நல்லது தம் உயிர் போயினால்
இமைக்கும்போதும் இராது இ குரம்பைதான்
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி
நமக்கு நல்லது நல்லம் அடைவதே

மேல்

#1500
உரை தளர்ந்து உடலார் நடுங்கா முனம்
நரை விடை உடையான் இடம் நல்லமே
பரவு-மின் பணி-மின் பணிவாரொடே
விரவு-மின் விரைவாரை விடு-மினே

மேல்

#1501
அல்லல் ஆக ஐம்பூதங்கள் ஆட்டினும்
வல்ல ஆறு சிவாயநம என்று
நல்லம் மேவிய நாதன் அடி தொழ
வெல்ல வந்த வினை பகை வீடுமே

மேல்

#1502
மாதராரொடு மக்களும் சுற்றமும்
பேதம் ஆகி பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர் தொழ
போது-மின் எழு-மின் புகல் ஆகுமே

மேல்

#1503
வெம்மை ஆன வினை கடல் நீங்கி நீர்
செம்மை ஆய சிவகதி சேரல் ஆம்
சும்மை ஆர் மலர் தூவி தொழு-மினோ
நம்மை ஆள்உடையான் இடம் நல்லமே

மேல்

#1504
காலம் ஆன கழிவதன் முன்னமே
ஏலும் ஆறு வணங்கி நின்று ஏத்து-மின்
மாலும் மா மலரானொடு மா மறை
நாலும் வல்லவர் கோன் இடம் நல்லமே

மேல்

#1505
மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி
ஒல்லையில் ஒழித்தான் உறையும் பதி
நல்ல நல்லம் எனும் பெயர் நாவினால்
சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே

மேல்

44. திருஆமாத்தூர் – திருக்குறுந்தொகை


#1506
மா மாத்து ஆகிய மால் அயன் மால் கொடு
தாமா தேடியும் காண்கிலர் தாள் முடி
ஆமாத்தூர் அரனே அருளாய் என்றுஎன்று
ஏமாப்பு எய்தி கண்டார் இறையானையே

மேல்

#1507
சந்தியானை சமாதி செய்வார்-தங்கள்
புந்தியானை புத்தேளிர் தொழப்படும்
அந்தியானை ஆமாத்தூர் அழகனை
சிந்தியாதவர் தீவினையாளரே

மேல்

#1508
காமாத்தம் எனும் கார் வலை பட்டு நான்
போம் ஆத்தை அறியாது புலம்புவேன்
ஆமாத்தூர் அரனே என்று அழைத்தலும்
தேமா தீம் கனி போல தித்திக்குமே

மேல்

#1509
பஞ்சபூத வலையில் படுவதற்கு
அஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சினால் நினைந்தேன் நினைவு எய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்-மினே

மேல்

#1510
குரா மன்னும் குழலாள் ஒருகூறனார்
அரா மன்னும் சடையான் திரு ஆமாத்தூர்
இராமனும் வழிபாடுசெய் ஈசனை
நிராமயன்-தனை நாளும் நினை-மினே

மேல்

#1511
பித்தனை பெரும் தேவர் தொழப்படும்
அத்தனை அணி ஆமாத்தூர் மேவிய
முத்தினை அடியேன் உள் முயறலும்
பத்தி வெள்ளம் பரந்தது காண்-மினே

மேல்

#1512
நீற்றின் ஆர் திரு மேனியன் நேர்_இழை
கூற்றினான் குழல் கோல சடையில் ஓர்
ஆற்றினான் அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே

மேல்

#1513
பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு
அண்ணித்து ஆகும் அமுதினை ஆமாத்தூர்
சண்ணிப்பானை தமர்க்கு அணித்து ஆயது ஓர்
கண்ணில் பாவை அன்னான் அவன் காண்-மினே

மேல்

#1514
குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா
மிண்டரோடு எனை வேறுபடுத்து உய
கொண்ட நாதன் குளிர் புனல் வீரட்டத்து
அண்டனார் இடம் ஆமாத்தூர் காண்-மினே

மேல்

#1515
வானம் சாடும் மதி அரவத்தொடு
தான் அஞ்சாது உடன்வைத்த சடையிடை
தேன் அஞ்சு ஆடிய தெங்கு இளநீரொடும்
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே

மேல்

#1516
விடலையாய் விலங்கல் எடுத்தான் முடி
அடர ஓர் விரல் ஊன்றிய ஆமாத்தூர்
இடம் அதா கொண்ட ஈசனுக்கு என் உளம்
இடம் அதாக கொண்டு இன்புற்று இருப்பனே

மேல்

45. திருத்தோணிபுரம் – திருக்குறுந்தொகை


#1517
மாது இயன்று மனைக்கு இரு என்ற-கால்
நீதிதான் சொல நீ எனக்கு ஆர் எனும்
சோதி ஆர்தரு தோணிபுரவர்க்கு
தாதி ஆவன் நான் என்னும் என் தையலே

மேல்

#1518
நக்கம் வந்து பலி இடு என்றார்க்கு இட்டம்
மிக்க தையலை வெள் வளை கொள்வது
தொக்க நீர் வயல் தோணிபுரவர்க்கு
தக்கது அன்று தமது பெருமைக்கே

மேல்

#1519
கெண்டை போல் நயனத்து இமவான்மகள்
வண்டு வார் குழலாள் உடன் ஆகவே
துண்ட வான் பிறை தோணிபுரவரை
கண்டு காமுறுகின்றனள் கன்னியே

மேல்

#1520
பாலையாழ்மொழியாள் அவள் தாழ் சடை
மேலள் ஆவது கண்டனள் விண்ணுற
சோலை ஆர்தரு தோணிபுரவர்க்கு
சால நல்லள் ஆகின்றனள் தையலே

மேல்

#1521
பண்ணின் நேர்மொழியாள் பலி இட்ட இ
பெண்ணை மால்கொடு பெய் வளை கொள்வது
சுண்ணம் ஆடிய தோணிபுரத்து உறை
அண்ணலாருக்கு சால அழகிதே

மேல்

#1522
முல்லை வெண் நகை மொய் குழலாய் உனக்கு
அல்லன் ஆவது அறிந்திலை நீ கனி
தொல்லை ஆர் பொழில் தோணிபுரவர்க்கே
நல்லை ஆயிடுகின்றனை நங்கையே

மேல்

#1523
ஒன்றுதான் அறியார் உலகத்தவர்
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர்
துன்று வார் பொழில் தோணிபுரவர்-தம்
கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே

மேல்

#1524
உறவு பேய் கணம் உண்பது வெண் தலை
உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்_கொடி
துறைகள் ஆர் கடல் தோணிபுரத்து உறை
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே

மேல்

#1525
மாக யானை மருப்பு ஏர் முலையினர்
போக யானும் அவள் புக்கதே புக
தோகை சேர்தரு தோணிபுரவர்க்கே
ஆக யானும் அவர்க்கு இனி ஆள் அதே

மேல்

#1526
இட்டம் ஆயின செய்வாள் என் பெண்_கொடி
கட்டம் பேசிய கார் அரக்கன்-தனை
துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை
அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே

மேல்

46. திருப்புகலூர் – திருக்குறுந்தொகை


#1527
துன்ன கோவண சுண்ண வெண் நீறு அணி
பொன் நக்கு அன்ன சடை புகலூரரோ
மின் நக்கு அன்ன வெண் திங்களை பாம்புடன்
என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே

மேல்

#1528
இரைக்கும் பாம்பும் எறிதரு திங்களும்
நுரைக்கும் கங்கையும் நுண்ணிய செம் சடை
புரைப்பு இலாத பொழில் புகலூரரை
உரைக்குமா சொல்லி ஒள் வளை சோருமே

மேல்

#1529
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர் குழல்
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டனர்
ஓ சொலாய் மகளே முறையோ என்று
பூசல் நாம் இடுதும் புகலூர்க்கே

மேல்

#1530
மின்னின்நேர்இடையாள் உமை_பங்கனை
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை
புன்னை காவல் பொழில் புகலூரனை
என்னுள் ஆக வைத்து இன்புற்று இருப்பனே

மேல்

#1531
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை
எண்ணி நாமங்கள் ஓதி எழுத்து அஞ்சும்
கண்ணினால் கழல் காண்பு இடம் ஏது எனில்
புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே

மேல்

#1532
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு
பண்டு நான்மறை ஓதிய பாடலன்
தொண்டர் ஆகி தொழுது மதிப்பவர்
புண்டரீகத்து உளார் புகலூரரே

மேல்

#1533
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர்
தத்துவம் தலைநின்றவர்க்கு அல்லது
தத்துவன்அலன் தண் புகலூரனே

மேல்

#1534
பெரும் கை ஆகி பிளிறி வருவது ஓர்
கரும் கை யானை களிற்று உரி போர்த்தவர்
வரும் கை யானை மத களிறு அஞ்சினை
பொரும் கை யானை கண்டீர் புகலூரரே

மேல்

#1535
பொன் ஒத்தம் நிறத்தானும் பொரு கடல்
தன் ஒத்தம் நிறத்தானும் அறிகிலா
புன்னை தாது பொழில் புகலூரரை
என் அத்தா என என் இடர் தீருமே

மேல்

#1536
மத்தனாய் மதியாது மலை-தனை
எத்தினான் திரள் தோள் முடி பத்து இற
ஒத்தினான் விரலால் ஒருங்கு ஏத்தலும்
பொத்தினான் புகலூரை தொழு-மினே

மேல்

47. திருவேகம்பம் – திருக்குறுந்தொகை


#1537
பண்டு செய்த பழவினையின் பயன்
கண்டும்கண்டும் களித்தி காண் நெஞ்சமே
வண்டு உலாம் மலர் செம் சடை ஏகம்பன்
தொண்டனாய் திரியாய் துயர் தீரவே

மேல்

#1538
நச்சி நாளும் நயந்து அடியார் தொழ
இச்சையால் உமை நங்கை வழிபட
கொச்சையார் குறுகார் செறி தீம் பொழில்
கச்சி ஏகம்பமே கைதொழு-மினே

மேல்

#1539
ஊன் நிலாவி இயங்கி உலகு எலாம்
தான் உலாவிய தன்மையராகிலும்
வான் உலாவிய பாணி பிறங்க வெம்
கானில் ஆடுவர் கச்சி ஏகம்பரே

மேல்

#1540
இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர்
தமை யாரும் அறிவு ஒண்ணா தகைமையர்
இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன்
நமை ஆளும் அவனை தொழு-மின்களே

மேல்

#1541
மருத்தினோடு நல் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன்
கருந்தடங்கண்ணினாள் உமை கைதொழ
இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே

மேல்

#1542
பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு
அருளும் நன்மை தந்து ஆய அரும் பொருள்
சுருள் கொள் செஞ்சடையான் கச்சி ஏகம்பம்
இருள் கெட சென்று கைதொழுது ஏத்துமே

மேல்

#1543
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து
ஆக்கும் ஐவர்-தம் ஆப்பை அவிழ்த்து அருள்
நோக்குவான் நமை நோய் வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே

மேல்

#1544
பண்ணில் ஓசை பழத்தினில் இன் சுவை
பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன்
வண்ணமில்லி வடிவு வேறு ஆயவன்
கண்ணில் உள் மணி கச்சி ஏகம்பனே

மேல்

#1545
திருவின்_நாயகன் செம் மலர் மேல் அயன்
வெருவ நீண்ட விளங்கு ஒளி சோதியான்
ஒருவனாய் உணர்வாய் உணர்வு அல்லது ஓர்
கருவுள்_நாயகன் கச்சி ஏகம்பனே

மேல்

#1546
இடுகு நுண் இடை ஏந்து இள மென் முலை
வடிவின் மாதர் திறம் மனம் வையன்-மின்
பொடி கொள் மேனியன் பூம் பொழில் கச்சியுள்
அடிகள் எம்மை அரும் துயர் தீர்ப்பரே

மேல்

#1547
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன்
விலங்கலை எடுக்க விரல் ஊன்றலும்
கலங்கி கச்சி ஏகம்பவோ என்றலும்
நலம் கொள் செலவு அளித்தான் எங்கள் நாதனே

மேல்

48. திருவேகம்பம் – திருக்குறுந்தொகை


#1548
பூமேலானும் பூமகள்_கேள்வனும்
நாமே தேவர் எனாமை நடுக்குற
தீ மேவும் உருவா திரு ஏகம்பா
ஆமோ அல்லல்பட அடியோங்களே

மேல்

#1549
அரும் திறல் அமரர் அயன் மாலொடு
திருந்த நின்று வழிபட தேவியோடு
இருந்தவன் எழில் ஆர் கச்சி ஏகம்பம்
பொருந்த சென்று புடைபட்டு எழுதுமே

மேல்

#1550
கறை கொள் கண்டத்து எண் தோள் இறை முக்கணன்
மறை கொள் நாவினன் வானவர்க்கு ஆதியான்
உறையும் பூம் பொழில் சூழ் கச்சி ஏகம்பம்
முறைமையால் சென்று முந்தி தொழுதுமே

மேல்

#1551
பொறி புலன்களை போக்கு அறுத்து உள்ளத்தை
நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்புறும் அமுது ஆயவன் ஏகம்பம்
குறிப்பினால் சென்று கூடி தொழுதுமே

மேல்

#1552
சிந்தையுள் சிவமாய் நின்ற செம்மையோடு
அந்தியாய் அனலாய் புனல் வானமாய்
புந்தியாய் புகுந்து உள்ளம் நிறைந்த எம்
எந்தை ஏகம்பம் ஏத்தி தொழு-மினே

மேல்

#1553
சாக்கியத்தொடு மற்றும் சமண் படும்
பாக்கியம் இலார் பாடு செலாது உற
பூ கொள் சேவடியான் கச்சி ஏகம்பம்
நாக்கொடு ஏத்தி நயந்து தொழுதுமே

மேல்

#1554
மூப்பினோடு முனிவு உறுத்து எம்தமை
ஆர்ப்பதன் முன் அணி அமரர்க்கு இறை
காப்பது ஆய கடி பொழில் ஏகம்பம்
சேர்ப்பு அது ஆக நாம் சென்று அடைந்து உய்துமே

மேல்

#1555
ஆலும் மா மயில் சாயல் நல்லாரொடும்
சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே
நீல மா மிடற்று அண்ணல் ஏகம்பனார்
கோல மா மலர் பாதமே கும்பிடே

மேல்

#1556
பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்யனை சுடர் வெண் மழு ஏந்திய
கையனை கச்சி ஏகம்பம் மேவிய
ஐயனை தொழுவார்க்கு இல்லை அல்லலே

மேல்

#1557
அரக்கன் தன் வலி உன்னி கயிலையை
நெருக்கி சென்று எடுத்தான் முடி தோள் நெரித்து
இரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பம்
தருக்கு அது ஆக நாம் சார்ந்து தொழுதுமே

மேல்

49. திருவெண்காடு – திருக்குறுந்தொகை


#1558
பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு
கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும்
பெண் காட்டி பிறை சென்னி வைத்தான் திரு
வெண்காட்டை அடைந்து உய் மட நெஞ்சமே

மேல்

#1559
கொள்ளி வெம் தழல் வீசி நின்று ஆடுவார்
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார்
வெள்ளியன் கரியன் பசு ஏறிய
தெள்ளியன் திரு வெண்காடு அடை நெஞ்சே

மேல்

#1560
ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே
வான் நோக்கும் வழி ஆவது நின்-மினோ
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே

மேல்

#1561
பரு வெண் கோட்டு பைம் கண் மத வேழத்தின்
உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே
பெரு வெண் காட்டு இறைவன் உறையும் இடம்
திரு வெண்காடு அடைந்து உய் மட நெஞ்சமே

மேல்

#1562
பற்று அவன் கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள்
கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால்
செற்றவன் திரு வெண்காடு அடை நெஞ்சே

மேல்

#1563
கூடினான் உமையாள் ஒருபாகமாய்
வேடனாய் விசயற்கு அருள்செய்தவன்
சேடனார் சிவனார் சிந்தை மேய வெண்
காடனார் அடியே அடை நெஞ்சமே

மேல்

#1564
தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடையான் கயவர் புரம்
எரித்தவன் மறை நான்கினோடு ஆறு அங்கம்
விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே

மேல்

#1565
பட்டம் இண்டை அவை கொடு பத்தர்கள்
சிட்டன் ஆதி என்று சிந்தைசெய்யவே
நட்டமூர்த்தி ஞான சுடராய் நின்ற
அட்டமூர்த்தி-தன் வெண்காடு அடை நெஞ்சே

மேல்

#1566
ஏன வேடத்தினானும் பிரமனும்
தான் அ வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா
ஞான வேடன் விசயற்கு அருள்செய்யும்
கான வேடன்-தன் வெண்காடு அடை நெஞ்சே

மேல்

#1567
பாலை ஆடுவர் பல் மறை ஓதுவர்
சேலை ஆடிய கண் உமை பங்கனார்
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு
மாலை ஆவது மாண்டவர் அங்கமே

மேல்

#1568
இரா வணம் செய மா மதி பற்று அ ஐ
யிராவணம் உடையான்-தனை உள்கு-மின்
இராவணன்-தனை ஊன்றி அருள்செய்த
இரா_வணன் திரு வெண்காடு அடை-மினே

மேல்

50. திருவாய்மூர் – திருக்குறுந்தொகை


#1569
எங்கே என்ன இருந்த இடம் தேடிக்கொண்டு
அங்கே வந்து அடையாளம் அருளினார்
தெங்கே தோன்றும் திரு வாய்மூர் செல்வனார்
அங்கே வா என்று போனார் அது என்-கொலோ

மேல்

#1570
மன்னு மா மறைக்காட்டு மணாளனார்
உன்னிஉன்னி உறங்குகின்றேனுக்கு
தன்னை வாய்மூர் தலைவன் ஆமா சொல்லி
என்னை வா என்று போனார் அது என்-கொலோ

மேல்

#1571
தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆர் என்றேன்
அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார்
உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்
வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே

மேல்

#1572
கழிய கண்டிலேன் கண் எதிரே கண்டேன்
ஒழிய போந்திலேன் ஒக்கவே ஓட்டந்தேன்
வழியில் கண்டிலேன் வாய்மூர் அடிகள்-தம்
சுழியில் பட்டு சுழல்கின்றது என்-கொலோ

மேல்

#1573
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று
உள்கிஉள்கி உகந்து இருந்தேனுக்கு
தெள்ளியார் இவர் போல திரு வாய்மூர்
கள்ளியார் அவர் போல கரந்ததே

மேல்

#1574
யாதே செய்தும் யாம் அலோம் நீ என்னில்
ஆதே ஏயும் அளவு இல் பெருமையான்
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்
போதே என்றும் புகுந்ததும் பொய்-கொலோ

மேல்

#1575
பாடி பெற்ற பரிசில் பழம் காசு
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரை போல்
தேடிக்கொண்டு திரு வாய்மூர்க்கே எனா
ஓடி போந்து இங்கு ஒளித்த ஆறு என்-கொலோ

மேல்

#1576
திறக்க பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்பு பாடி அடைப்பித்தார் உ நின்றார்
மறைக்க வல்லரோ தம்மை திரு வாய்மூர்
பிறை கொள் செஞ்சடையார் இவர் பித்தரே

மேல்

#1577
தனக்கு எறாமை தவிர்க்க என்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன்
எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா
புனற்கே பொன் கோயில் புக்கதும் பொய்-கொலோ

மேல்

#1578
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால்
மீண்டற்கும் மிதித்தார் அரக்கன்-தனை
வேண்டிக்கொண்டேன் திரு வாய்மூர் விளக்கினை
தூண்டிக்கொள்வன் நான் என்றலும் தோன்றுமே

மேல்

51. திருப்பாலைத்துறை – திருக்குறுந்தொகை


#1579
நீல மா மணி_கண்டத்தர் நீள் சடை
கோல மா மதி கங்கையும் கூட்டினார்
சூலம் மான் மழு ஏந்தி சுடர் முடி
பால் நெய் ஆடுவர் பாலைத்துறையரே

மேல்

#1580
கவள மா களிற்றின் உரி போர்த்தவர்
தவள வெண் நகை மங்கை ஒர்பங்கினர்
திவள வானவர் போற்றி திசை தொழும்
பவள மேனியர் பாலைத்துறையரே

மேல்

#1581
மின்னின் நுண் இடை கன்னியர் மிக்கு எங்கும்
பொன்னி நீர் மூழ்கி போற்றி அடி தொழ
மன்னி நான்மறையோடு பல் கீதமும்
பன்னினார் அவர் பாலைத்துறையரே

மேல்

#1582
நீடு காடு இடமாய் நின்ற பேய் கணம்
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே
ஆடினார் அழகு ஆகிய நான்மறை
பாடினார் அவர் பாலைத்துறையரே

மேல்

#1583
சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
பித்தர் நான்மறை வேதியர் பேணிய
அத்தனே நமை ஆள்உடையாய் எனும்
பத்தர்கட்கு அன்பர் பாலைத்துறையரே

மேல்

#1584
விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாய என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர் பாலைத்துறையரே

மேல்

#1585
குரவனார் கொடுகொட்டியும் கொக்கரை
விரவினார் பண் கெழுமிய வீணையும்
மருவு நாள் மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர் பொன்னி பாலைத்துறையரே

மேல்

#1586
தொடரும் தொண்டரை துக்கம் தொடர்ந்து வந்து
அடரும்போது அரனாய் அருள்செய்பவர்
கடலின் நஞ்சு அணி கண்டர் கடி புனல்
படரும் செம் சடை பாலைத்துறையரே

மேல்

#1587
மேகம் தோய் பிறை சூடுவர் மேகலை
நாகம் தோய்ந்த அரையினர் நல் இயல்
போகம் தோய்ந்த புணர் முலை மங்கை ஓர்
பாகம் தோய்ந்தவர் பாலைத்துறையரே

மேல்

#1588
வெம் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர்
அம் கணார் அடியார்க்கு அருள் நல்குவர்
செங்கண்மால் அயன் தேடற்கு அரியவர்
பைம் கண் ஏற்றினர் பாலைத்துறையரே

மேல்

#1589
உரத்தினால் அரக்கன் உயர் மா மலை
நெருக்கினானை நெரித்து அவன் பாடலும்
இரக்கமா அருள்செய்த பாலைத்துறை
கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே

மேல்

52. திருநாகேச்சரம் – திருக்குறுந்தொகை


#1590
நல்லர் நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி
செல்வர் போல் திரு நாகேச்சுரவரே

மேல்

#1591
நாவலம்பெருந்தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவமாயின பற்று அறுவித்திடும்
தேவர் போல் திரு நாகேச்சுரவரே

மேல்

#1592
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர்
ஆதியார் அயனோடு அமரர்க்கு எலாம்
மாது ஒர்கூறர் மழு வலன் ஏந்திய
நாதர் போல் திரு நாகேச்சுரவரே

மேல்

#1593
சந்திரன்னொடு சூரியர்தாம் உடன்
வந்து சீர் வழிபாடுகள் செய்த பின்
ஐந்தலை அரவின் பணி கொண்டு அருள்
மைந்தர் போல் மணி நாகேச்சுரவரே

மேல்

#1594
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழி தக்கனார்
கொண்ட வேள்விக்கு மண்டை அது கெட
தண்டமா விதாதாவின் தலை கொண்ட
செண்டர் போல் திரு நாகேச்சுரவரே

மேல்

#1595
வம்பு பூம் குழல் மாது மறுக ஓர்
கம்ப யானை உரித்த கரத்தினர்
செம்பொன் ஆர் இதழி மலர் செம் சடை
நம்பர் போல் திரு நாகேச்சுரவரே

மேல்

#1596
மானை ஏந்திய கையினர் மை அறு
ஞான சோதியர் ஆதியர் நாமம்தான்
ஆன அஞ்சுஎழுத்து ஓத வந்து அண்ணிக்கும்
தேனர் போல் திரு நாகேச்சுரவரே

மேல்

#1597
கழல் கொள் காலினர் காலனை காய்ந்தவர்
தழல் கொள் மேனியர் சாந்த வெண் நீறு அணி
அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய
குழகர் போல் குளிர் நாகேச்சுரவரே

மேல்

#1598
வட்ட மா மதில் மூன்றுடன் வல் அரண்
சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும்
சிட்டர் போல் திரு நாகேச்சுரவரே

மேல்

#1599
தூர்த்தன் தோள் முடி தாளும் தொலையவே
சேர்த்தினார் திரு பாதத்து ஒரு விரல்
ஆர்த்து வந்து உலகத்தவர் ஆடிடும்
தீர்த்தர் போல் திரு நாகேச்சுரவரே

மேல்

53. திருஅதிகை வீரட்டம் – திருக்குறுந்தொகை


#1600
கோணல் மா மதி சூடி ஓர் கோவண
நாண் இல் வாழ்க்கை நயந்தும் பயன் இலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

மேல்

#1601
பண்ணினை பவள திரள் மா மணி
அண்ணலை அமரர் தொழும் ஆதியை
சுண்ண வெண்பொடியான் திரு வீரட்டம்
நண்ணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

மேல்

#1602
உற்றவர்-தம் உறு நோய் களைபவர்
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர்
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம்
கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

மேல்

#1603
முற்றா வெண் மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ
வில் தான் கொண்டு எயில் எய்தவர் வீரட்டம்
கற்றால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

மேல்

#1604
பல்லாரும் பல தேவர் பணிபவர்
நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன்
வில்லால் மூஎயில் எய்தவன் வீரட்டம்
கல்லேனாகில் என் கண் துயில் கொள்ளுமே

மேல்

#1605
வண்டு ஆர் கொன்றையும் மத்தம் வளர் சடை
கொண்டான் கோல மதியோடு அரவமும்
விண்டார் மும்மதில் எய்தவன் வீரட்டம்
கண்டால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

மேல்

#1606
அரை ஆர் கோவண ஆடையன் ஆறு எலாம்
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடில கரை
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்-பால்
கரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே

மேல்

#1607
நீறு உடை தடம் தோள் உடை நின்மலன்
ஆறு உடை புனல் பாய் கெடில கரை
ஏறு உடை கொடியான் திரு வீரட்டம்
கூறில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

மேல்

#1608
செங்கண்மால் விடை ஏறிய செல்வனார்
பைம் கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர்
அம் கண் ஞாலம் அது ஆகிய வீரட்டம்
கங்குல் ஆக என் கண் துயில் கொள்ளுமே

மேல்

#1609
பூண் நாண் ஆரம் பொருந்த உடையவர்
நாண் ஆக வரை வில்லிடை அம்பினால்
பேணார் மும்மதில் எய்தவன் வீரட்டம்
காணேனாகில் என் கண் துயில் கொள்ளுமே

மேல்

#1610
வரை ஆர்ந்த வயிர திரள் மாணிக்கம்
திரை ஆர்ந்த புனல் பாய் கெடில கரை
விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே

மேல்

#1611
உலந்தார் வெண் தலை உண்கலன் ஆகவே
வலம்தான் மிக்க அ வாள் அரக்கன்-தனை
சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம்
புலம்பேனாகில் என் கண் துயில் கொள்ளுமே

மேல்

54. திருஅதிகைவீரட்டம் – திருக்குறுந்தொகை


#1612
எட்டு நாள் மலர் கொண்டு அவன் சேவடி
மட்டு அலர் இடுவார் வினை மாயுமால்
கட்டி தேன் கலந்து அன்ன கெடில வீ
ரட்டனார் அடி சேருமவருக்கே

மேல்

#1613
நீளமா நினைந்து எண் மலர் இட்டவர்
கோள வல்வினையும் குறிவிப்பரால்
வாளமா இழியும் கெடில கரை
வேளி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே

மேல்

#1614
கள்ளின் நாள் மலர் ஓர் இரு_நான்கு கொண்டு
உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார்
தெள்ளு நீர் வயல் பாய் கெடில கரை
வெள்ளை நீறு அணி மேனி வீரட்டரே

மேல்

#1615
பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து இட்டு
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார்
வீங்கு தண் புனல் பாய் கெடில கரை
வேங்கை தோல் உடை ஆடை வீரட்டரே

மேல்

#1616
தேன போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன்
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர்
மீன தண் புனல் பாய் கெடில கரை
வேனல் ஆனை உரித்த வீரட்டரே

மேல்

#1617
ஏழி தொல் மலர் கொண்டு பணிந்தவர்
ஊழி தொல்வினை ஓட அகற்றுவார்
பாழி தண் புனல் பாய் கெடில கரை
வேழத்தின் உரி போர்த்த வீரட்டரே

மேல்

#1618
உரைசெய் நூல் வழி ஒண் மலர் எட்டு இட
திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்து இழியும் கெடில கரை
விரைகள் சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே

மேல்

#1619
ஓலி வண்டு அறை ஒண் மலர் எட்டினால்
காலை ஏத்த வினையை கழிப்பரால்
ஆலி வந்து இழியும் கெடில கரை
வேலி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே

மேல்

#1620
தாரித்து உள்ளி தட மலர் எட்டினால்
பாரித்து ஏத்த வல்லார் வினை பாற்றுவார்
மூரி தெண் திரை பாய் கெடில கரை
வேரி செம் சடை வேய்ந்த வீரட்டரே

மேல்

#1621
அட்ட புட்பம் அவை கொளும் ஆறு கொண்டு
அட்டமூர்த்தி அநாதிதன்-பால் அணைந்து
அட்டும் ஆறு செய்கிற்ப அதிகை வீ
ரட்டனார் அடி சேருமவர்களே

மேல்

55. திருநாரையூர் – திருக்குறுந்தொகை


#1622
வீறு தான் உடை வெற்பன்மடந்தை ஓர்
கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும்
நாறு பூம் பொழில் நாரையூர் நம்பனுக்கு
ஆறு சூடலும் அம்ம அழகிதே

மேல்

#1623
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும்
வெள்ளி கொண்ட வெண் பூதி மெய் ஆடலும்
நள்ளி தெண் திரை நாரையூரான் நஞ்சை
அள்ளி உண்டலும் அம்ம அழகிதே

மேல்

#1624
வேடு தங்கிய வேடமும் வெண் தலை
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூரான் நடம்
ஆடு பைம் கழல் அம்ம அழகிதே

மேல்

#1625
கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும்
மிக்க வெண் தலை மாலை விரி சடை
நக்கனாகிலும் நாரையூர் நம்பனுக்கு
அக்கின் ஆரமும் அம்ம அழகிதே

மேல்

#1626
வடி கொள் வெண் மழு மான் அமர் கைகளும்
பொடி கொள் செம்பவளம் புரை மேனியும்
நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர்
அடிகள்-தம் வடிவு அம்ம அழகிதே

மேல்

#1627
சூலம் மல்கிய கையும் சுடரொடு
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆல நீழலும் அம்ம அழகிதே

மேல்

#1628
பண்ணின் நான்மறை பாடலொடு ஆடலும்
எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும்
நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர்
அண்ணலார் செய்கை அம்ம அழகிதே

மேல்

#1629
என்பு பூண்டு எருது ஏறி இளம் பிறை
மின் புரிந்த சடை மேல் விளங்கவே
நன் பகல் பலி தேரினும் நாரையூர்
அன்பனுக்கு அது அம்ம அழகிதே

மேல்

#1630
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே
இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான்
நரலும் வாரி நன் நாரையூர் நம்பனுக்கு
அரவும் பூணுதல் அம்ம அழகிதே

மேல்

#1631
கடுக்கை அம் சடையன் கயிலை மலை
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்_அஞ்சும்
நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல்
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே

மேல்

56. திருக்கோளிலி – திருக்குறுந்தொகை


#1632
மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு
தொக்க கையினன் செய்யது ஓர் சோதியன்
கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி
நக்கனை தொழ நம் வினை நாசமே

மேல்

#1633
முத்தினை முதல் ஆகிய மூர்த்தியை
வித்தினை விளைவு ஆய விகிர்தனை
கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி
அத்தனை தொழ நீங்கும் நம் அல்லலே

மேல்

#1634
வெண் திரை பரவை விடம் உண்டது ஓர்
கண்டனை கலந்தார்-தமக்கு அன்பனை
கொண்டல் அம் பொழில் கோளிலி மேவிய
அண்டனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே

மேல்

#1635
பலவும் வல்வினை பாறும் பரிசினால்
உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை
குலவினான் குளிரும் பொழில் கோளிலி
நிலவினான்-தனை நித்தல் நினை-மினே

மேல்

#1636
அல்லல் ஆயின தீரும் அழகிய
முல்லை வெண் முறுவல் உமை அஞ்சவே
கொல்லை யானை உரத்தவன் கோளிலி
செல்வன் சேவடி சென்று தொழு-மினே

மேல்

#1637
ஆவின் பால் கண்டு அளவு இல் அரும் தவ
பாலன் வேண்டலும் செல் என்று பாற்கடல்
கூவினான் குளிரும் பொழில் கோளிலி
மேவினானை தொழ வினை வீடுமே

மேல்

#1638
சீர்த்த நல் மனையாளும் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால்
கூத்தனார் உறையும் திரு கோளிலி
ஏத்தி நீர் தொழு-மின் இடர் தீருமே

மேல்

#1639
மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்
காலம் வந்து கடை முடியா முனம்
கோல வார் பொழில் கோளிலி மேவிய
நீல_கண்டனை நின்று நினை-மினே

மேல்

#1640
கேடு மூடி கிடந்து உண்ணும் நாடு அது
தேடி நீர் திரியாதே சிவகதி
கூடல் ஆம் திரு கோளிலி ஈசனை
பாடு-மின் இரவோடு பகலுமே

மேல்

#1641
மடுத்து மா மலை ஏந்தலுற்றான்-தனை
அடர்த்து பின்னும் இரங்கி அவற்கு அருள்
கொடுத்தவன் உறை கோளிலியே தொழ
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே

மேல்

57. திருக்கோளிலி – திருக்குறுந்தொகை


#1642
முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர் வயல் சூழ் திரு கோளிலி
மன்னனே அடியேனை மறவலே

மேல்

#1643
விண்உளார் தொழுது ஏத்தும் விளக்கினை
மண்உளார் வினை தீர்க்கும் மருந்தினை
பண்உளார் பயிலும் திரு கோளிலி
அண்ணலார் அடியே தொழுது உய்ம்-மினே

மேல்

#1644
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்
ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு எட்டும்
ஏழைமைப்பட்டு இருந்து நீர் நையாதே
கோளிலி அரன் பாதமே கூறுமே

மேல்

#1645
விழவின் ஓசை ஒலி அறா தண் பொழில்
பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி
அழல் கையான் அமரும் திரு கோளிலி
குழகனார் திரு பாதமே கூறுமே

மேல்

#1646
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை
காலன் ஆகிய காலற்கும் காலனை
கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி
சூலபாணி-தன் பாதம் தொழு-மினே

மேல்

#1647
காற்றனை கடல் நஞ்சு அமுது உண்ட வெண்
நீற்றனை நிமிர் புன் சடை அண்ணலை
ஆற்றனை அமரும் திரு கோளிலி
ஏற்றனார் அடியே தொழுது ஏத்துமே

மேல்

#1648
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை
ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை
கோதி வண்டு அறையும் திரு கோளிலி
வேத_நாயகன் பாதம் விரும்புமே

மேல்

#1649
நீதியால் தொழுவார்கள் தலைவனை
வாதை ஆன விடுக்கும் மணியினை
கேதி வண்டு அறையும் திரு கோளிலி
வேத_நாயகன் நித்தல் நினை-மினே

மேல்

#1650
மாலும் நான்முகனாலும் அறிவு ஒணா
பாலின் மென்மொழியாள் ஒருபங்கனை
கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி
நீல_கண்டனை நித்தல் நினை-மினே

மேல்

#1651
அரக்கன் ஆய இலங்கையர்_மன்னனை
நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு
இரக்கம் ஆகியவன் திரு கோளிலி
அருத்தியாய் அடியே தொழுது உய்ம்-மினே

மேல்

58. திருப்பழையாறைவடதளி – திருக்குறுந்தொகை


#1652
தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள்
நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே
அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி
நிலையினான் அடியே நினைந்து உய்ம்-மினே

மேல்

#1653
மூக்கினால் முரன்று ஓதி அ குண்டிகை
தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு
ஆக்கினான் அணி ஆறை வடதளி
நோக்கினார்க்கு இல்லையால் அரு நோய்களே

மேல்

#1654
குண்டரை குணமில்லரை கூறை இல்
மிண்டரை துரந்த விமலன்-தனை
அண்டரை பழையாறை வடதளி
கண்டரை தொழுது உய்ந்தன கைகளே

மேல்

#1655
முடையரை தலை முண்டிக்கும் மொட்டரை
கடையரை கடிந்தார் கனல் வெண் மழு
படையரை பழையாறை வடதளி
உடையரை குளிர்ந்து உள்கும் என் உள்ளமே

மேல்

#1656
ஒள் அரி கணார் முன் அமண் நின்று உணும்
கள்ளரை கடிந்த கருப்பூறலை
அள்ளல் அம் புனல் ஆறை வடதளி
வள்ளலை புகழ துயர் வாடுமே

மேல்

#1657
நீதியை கெட நின்று அமணே உணும்
சாதியை கெடுமா செய்த சங்கரன்
ஆதியை பழையாறை வடதளி
சோதியை தொழுவார் துயர் தீருமே

மேல்

#1658
திரட்டு இரை கவளம் திணிக்கும் சமண்
பிரட்டரை பிரித்த பெருமான்-தனை
அருள் திறத்து அணி ஆறை வடதளி
தெருட்டரை தொழ தீவினை தீருமே

மேல்

#1659
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணரா சமண்
வேதனைப்படுத்தானை வெம் கூற்று உதை
பாதனை பழையாறை வடதளி
நாதனை தொழ நம் வினை நாசமே

மேல்

#1660
வாய் இரும் தமிழே படித்து ஆள் உறா
ஆயிரம் சமணும் அழிவு ஆக்கினான்
பாய் இரும் புனல் ஆறை வடதளி
மேயவன் என வல்வினை வீடுமே

மேல்

#1661
செருத்தனை செயும் சேண் அரக்கன் உடல்
எருத்து இற விரலால் இறை ஊன்றிய
அருத்தனை பழையாறை வடதளி
திருத்தனை தொழுவார் வினை தேயுமே

மேல்

59. திருமாற்பேறு – திருக்குறுந்தொகை


#1662
பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம் புனல்
வரும் ஆற்றின் மலர் கொண்டு வழிபடும்
கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு
திரு மாற்பேறு தொழ வினை தேயுமே

மேல்

#1663
ஆலத்து ஆர் நிழலில் அறம் நால்வர்க்கு
கோலத்தால் உரைசெய்தவன் குற்றம் இல்
மாலுக்கு ஆர் அருள் செய்தவன் மாற்பேறு
ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே

மேல்

#1664
துணி வண்ண சுடர் ஆழி கொள்வான் எண்ணி
அணி வண்ணத்து அலர்கொண்டு அடி அர்ச்சித்த
மணி_வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு
பணி வண்ணத்தவர்க்கு இல்லை ஆம் பாவமே

மேல்

#1665
தீது அவை செய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்ற நல்
மா தவர் பயில் மாற்பேறு கைதொழ
போது-மின் வினை ஆயின போகுமே

மேல்

#1666
வார் கொள் மென் முலை மங்கை ஓர்பங்கினன்
வார் கொள் நல் முரசம் அறைய அறை
வார் கொள் பைம் பொழில் மாற்பேறு கைதொழு
வார்கள் மன்னுவர் பொன்_உலகத்திலே

மேல்

#1667
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை
உண்டு சொல்லுவன் கேண்-மின் ஒளி கிளர்
வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு
கண்டு கைதொழ தீரும் கவலையே

மேல்

#1668
மழுவலான் திரு நாமம் மகிழ்ந்து உரைத்து
அழ வலார்களுக்கு அன்புசெய்து இன்பொடும்
வழு இலா அருள்செய்தவன் மாற்பேறு
தொழ வலார்-தமக்கு இல்லை துயரமே

மேல்

#1669
முன்னவன் உலகுக்கு முழு மணி
பொன் அவன் திகழ் முத்தொடு போகம் ஆம்
மன்னவன் திரு மாற்பேறு கைதொழும்
அன்னவர் எமை ஆள்உடையார்களே

மேல்

#1670
வேடனாய் விசயன்னொடும் எய்து வெம்
காடு நீடு உகந்து ஆடிய கண்நுதல்
மாடம் நீடு உயரும் திரு மாற்பேறு
பாடுவார் பெறுவார் பரலோகமே

மேல்

#1671
கருத்தனாய் கயிலாய மலை-தனை
தருக்கினால் எடுத்தானை தகரவே
வருத்தி ஆர் அருள் செய்தவன் மாற்பேறு
அருத்தியால் தொழுவார்க்கு இல்லை அல்லலே

மேல்

60. திருமாற்பேறு – திருக்குறுந்தொகை


#1672
ஏதும் ஒன்றும் அறிவிலராயினும்
ஓதி அஞ்சுஎழுத்தும் உணர்வார்கட்கு
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே

மேல்

#1673
அச்சம் இல்லை நெஞ்சே அரன் நாமங்கள்
நிச்சலும் நினையாய் வினை போய் அற
கச்ச மா விடம் உண்ட கண்டா என
வைச்ச மா நிதி ஆவர் மாற்பேறரே

மேல்

#1674
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்
பாத்திரம் சிவன் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே

மேல்

#1675
இருந்து சொல்லுவன் கேண்-மின்கள் ஏழைகாள்
அரும் தவம் தரும் அஞ்சுஎழுத்து ஓதினால்
பொருந்து நோய் பிணி போக துரப்பது ஓர்
மருந்தும் ஆகுவர் மன்னும் மாற்பேறரே

மேல்

#1676
சாற்றி சொல்லுவன் கேண்-மின் தரணியீர்
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால்
கூற்றை நீக்கி குறைவு அறுத்து ஆள்வது ஓர்
மாற்று இலா செம்பொன் ஆவர் மாற்பேறரே

மேல்

#1677
ஈட்டும் மா நிதி சால இழக்கினும்
வீட்டும் காலன் விரைய அழைக்கினும்
காட்டில் மா நடம் ஆடுவாய் கா எனில்
வாட்டம் தீர்க்கவும் வல்லார் மாற்பேறரே

மேல்

#1678
ஐயனே அரனே என்று அரற்றினால்
உய்யல் ஆம் உலகத்தவர் பேணுவர்
செய்ய பாதம் இரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே

மேல்

#1679
உந்தி சென்று மலையை எடுத்தவன்
சந்து தோளொடு தாள் இற ஊன்றினான்
மந்தி பாய் பொழில் சூழும் மாற்பேறு என
அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே

மேல்

61. திருஅரிசிற்கரைப்புத்தூர் – திருக்குறுந்தொகை


#1680
முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரை
புத்தூரன் அடி போற்றி என்பார் எலாம்
பொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே

மேல்

#1681
பிறை கணி சடை எம்பெருமான் என்று
கறை கணித்தவர் கண்ட வணக்கத்தாய்
உற கணித்து உருகா மனத்தார்களை
புறக்கணித்திடும் புத்தூர் புனிதனே

மேல்

#1682
அரிசிலின் கரை மேல் அணி ஆர்தரு
புரிசை நம் திரு புத்தூர் புனிதனை
பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம்
துரிசு இல் நல் நெறி தோன்றிடும் காண்-மினே

மேல்

#1683
வேதனை மிகு வீணையில் மேவிய
கீதனை கிளரும் நறும் கொன்றை அம்
போதனை புனல் சூழ்ந்த புத்தூரனை
நாதனை நினைந்து என் மனம் நையுமே

மேல்

#1684
அருப்பு போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல்
விருப்பு சேர் நிலை விட்டு நல் இட்டமாய்
திரு புத்தூரனை சிந்தைசெயச்செய
கருப்பு சாற்றிலும் அண்ணிக்கும் காண்-மினே

மேல்

#1685
பாம்பொடும் மதியும் படர் புன் சடை
பூம் புனலும் பொதிந்த புத்தூர் உளான்
நாம் பணிந்து அடி போற்றிட நாள்-தொறும்
சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே

மேல்

#1686
கனல் அங்கை-தனில் ஏந்தி வெம் காட்டிடை
அனல் அங்கு எய்தி நின்று ஆடுவர் பாடுவர்
பினல் அம் செம் சடை மேல் பிலயம் தரு
புனலும் சூடுவர் போலும் புத்தூரரே

மேல்

#1687
காற்றிலும் கடிது ஆகி நடப்பது ஓர்
ஏற்றினும் இசைந்து ஏறுவர் என்பொடு
நீற்றினை அணிவர் நினைவாய் தமை
போற்றி என்பவர்க்கு அன்பர் புத்தூரரே

மேல்

#1688
முன்னும் முப்புரம் செற்றனராயினும்
அன்னம் ஒப்பர் அலந்து அடைந்தார்க்கு எலாம்
மின்னும் ஒப்பர் விரி சடை மேனி செம்
பொன்னும் ஒப்பர் புத்தூர் எம் புனிதரே

மேல்

#1689
செருத்தனால் தன தேர் செல உய்த்திடும்
கருத்தனாய் கயிலை எடுத்தான் உடல்
பருத்த தோள் கெட பாதத்து ஒரு விரல்
பொருத்தினார் பொழில் ஆர்ந்த புத்தூரரே

மேல்

62. கடுவாய்க்கரைத் திருப்புத்தூர் – திருக்குறுந்தொகை


#1690
ஒருத்தனை மூஉலகொடு தேவர்க்கும்
அருத்தனை அடியேன் மனத்துள் அமர்
கருத்தனை கடுவாய் புனல் ஆடிய
திருத்தனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே

மேல்

#1691
யாவரும் அறிதற்கு அரியான்-தனை
மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை
நாவின் நல் உரை ஆகிய நாதனை
தேவனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே

மேல்

#1692
அன்பனை அடியார் இடர்நீக்கியை
செம்பொனை திகழும் திருக்கச்சி ஏ
கம்பனை கடுவாய்க்கரை தென் புத்தூர்
நம்பனை கண்டு நான் உய்யப்பெற்றெனே

மேல்

#1693
மா தனத்தை மா தேவனை மாறு இலா
கோதனத்தில் ஐந்து ஆடியை வெண் குழை
காதனை கடுவாய்க்கரை தென் புத்தூர்
நாதனை கண்டு நான் உய்யப்பெற்றெனே

மேல்

#1694
குண்டுபட்ட குற்றம் தவிர்த்து என்னை ஆட்
கொண்டு நல் திறம் காட்டிய கூத்தனை
கண்டனை கடுவாய்க்கரை தென் புத்தூர்
அண்டனை கண்டு அருவினை அற்றெனே

மேல்

#1695
பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட
மைந்தனை மணவாளனை மா மலர்
கந்த நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
எந்தை ஈசனை கண்டு இனிது ஆயிற்றே

மேல்

#1696
உம்பரானை உருத்திரமூர்த்தியை
அம்பரானை அமலனை ஆதியை
கம்பு நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
எம்பிரானை கண்டு இன்பம் அது ஆயிற்றே

மேல்

#1697
மாசு ஆர் பாச மயக்கு அறுவித்து எனுள்
நேசம் ஆகிய நித்த மணாளனை
பூசம் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
ஈசனே என இன்பம் அது ஆயிற்றே

மேல்

#1698
இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு
கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே
கடுவாய் தென் கரை புத்தூர் அடிகட்கு ஆட்
படவே பெற்று நான் பாக்கியம் செய்தெனே

மேல்

#1699
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு
இரக்கம் ஆகி அருள்புரி ஈசனை
திரை கொள் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
இருக்கும் நாதனை காணப்பெற்று உய்ந்தெனே

மேல்

63. திருதென்குரங்காடுதுறை – திருக்குறுந்தொகை


#1700
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்
புரம் காவல் அழிய பொடி ஆக்கினான்
தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை
குரங்காடுதுறை கோல கபாலியே

மேல்

#1701
முத்தினை மணியை பவளத்து ஒளிர்
தொத்தினை சுடர் சோதியை சோலை சூழ்
கொத்து அலர் குரங்காடுதுறை உறை
அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே

மேல்

#1702
குளிர் புனல் குரங்காடுதுறையனை
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி
ஒளியனை நினைந்தேனுக்கு என் உள்ளமும்
தெளிவினை தெளிய தெளிந்திட்டதே

மேல்

#1703
மணவன் காண் மலையாள் நெடு மங்கல
கணவன் காண் கலை ஞானிகள் காதல் எண்
குணவன் காண் குரங்காடுதுறைதனில்
அணவன் காண் அன்புசெய்யும் அடியர்க்கே

மேல்

#1704
ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன்
காலத்தான் உயிர் போக்கிய காலினன்
நீலத்து ஆர் மிடற்றான் வெள்ளை நீறு அணி
கோலத்தான் குரங்காடுதுறையனே

மேல்

#1705
ஆட்டினான் முன் அமணரோடு என்தனை
பாட்டினான் தன பொன் அடிக்கு இன்னிசை
வீட்டினான் வினை மெய் அடியாரொடும்
கூட்டினான் குரங்காடுதுறையனே

மேல்

#1706
மாத்தன்தான் மறையார் முறையால் மறை
ஓத்தன் தாருகன்-தன் உயிர் உண்ட பெண்
போத்தன்தான் அவள் பொங்கு சினம் தணி
கூத்தன்தான் குரங்காடுதுறையனே

மேல்

#1707
நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்
ஆடு-மின் அழு-மின் தொழு-மின் அடி
பாடு-மின் பரமன் பயிலும் இடம்
கூடு-மின் குரங்காடுதுறையையே

மேல்

#1708
தென்றல் நல் நெடும் தேர் உடையான் உடல்
போன்ற வெம் கனல் பொங்க விழித்தவன்
அன்று அ அந்தகனை அயில் சூலத்தால்
கொன்றவன் குரங்காடுதுறையனே

மேல்

#1709
நல் தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம்
உற்ற நல் மொழியால் அருள்செய்த நல்
கொற்றவன் குரங்காடுதுறை தொழ
பற்றும் தீவினை ஆயின பாறுமே

மேல்

#1710
கடுத்த தேர் அரக்கன் கயிலை மலை
எடுத்த தோள் தலை இற்று அலற விரல்
அடுத்தலும் அவன் இன்னிசை கேட்டு அருள்
கொடுத்தவன் குரங்காடுதுறையனே

மேல்

64. திருக்கோழம்பம் – திருக்குறுந்தொகை


#1711
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டி போய்
ஆழம் பற்றி வீழ்வார் பல ஆதர்கள்
கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல்
தாழும் பத்தர்கள் சால சதுரரே

மேல்

#1712
கயிலை நல் மலை ஆளும் கபாலியை
மயில் இயல் மலைமாதின் மணாளனை
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என்
உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே

மேல்

#1713
வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம்
தாழும் பான்மையர் ஆகி தம் வாயினால்
தாழம்பூ மணம் நாறிய தாழ் பொழில்
கோழம்பா என கூடிய செல்வமே

மேல்

#1714
பாடல் ஆக்கிடும் பண்ணொடு பெண் இவள்
கூடல் ஆக்கிடும் குன்றின் மணல் கொடு
கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து
ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே

மேல்

#1715
தளிர் கொள் மேனியள்தான் மிக அஞ்ச ஓர்
பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன்
குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான்
நளிர் கொள் நீர் சடை மேலும் நயந்ததே

மேல்

#1716
நாதர் ஆவர் நமக்கும் பிறர்க்கும் தாம்
வேத நாவர் விடை கொடியார் வெற்பில்
கோதை மாதொடும் கோழம்பம் கோயில்கொண்ட
ஆதி பாதம் அடைய வல்லார்களே

மேல்

#1717
முன்னை நான் செய்த பாவம் முதல் அற
பின்னை நான் பெரிதும் அருள் பெற்றது
அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள் அமர்
பின்னல் வார்சடையானை பிதற்றியே

மேல்

#1718
ஏழைமாரிடம் நின்று இரு கை கொடு உண்
கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம்
கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே

மேல்

#1719
அரவு அணை பயில் மால் அயன் வந்து அடி
பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை
குரவனை குரவு ஆர் பொழில் கோழம்பத்து
உரவனை ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே

மேல்

#1720
சமர சூரபன்மாவை தடிந்த வேல்
குமரன் தாதை நன் கோழம்பம் மேவிய
அமரர்_கோவினுக்கு அன்பு உடை தொண்டர்கள்
அமரலோகம் அது ஆள்உடையார்களே

மேல்

#1721
துட்டன் ஆகி மலை எடுத்து அஃதின் கீழ்
பட்டு வீழ்ந்து படர்ந்து உய்யப்போயினான்
கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று
இட்ட கீதம் இசைத்த அரக்கனே

மேல்

65. திருப்பூவனூர் – திருக்குறுந்தொகை


#1722
பூவனூர் புனிதன் திருநாமம்தான்
நாவில் நூறு நூறாயிரம் நண்ணினார்
பாவம் ஆயின பாறி பறையவே
தேவர்_கோவினும் செல்வர்கள் ஆவரே

மேல்

#1723
என்னன் என் மனை எந்தை என் ஆருயிர்
தன்னன் தன் அடியேன் தனம் ஆகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
இன்னன் என்று அறிவு ஒண்ணான் இயற்கையே

மேல்

#1724
குற்றம் கூடி குணம் பல கூடாதீர்
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம்
புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர்
கற்று வாழ்த்தும் கழிவதன் முன்னமே

மேல்

#1725
ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான்
தூ வெண் நீறு துதைந்த செம்மேனியான்
மேவ நூல் விரி வெண்ணியின் தென் கரை
பூவனூர் புகுவார் வினை போகுமே

மேல்

#1726
புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம் புனல்
நல்லம் மூர்த்தி நல்லூர் நனிபள்ளியூர்
தில்லையூர் திரு ஆரூர் சீகாழி நல்
வல்லம் ஊர் என வல்வினை மாயுமே

மேல்

#1727
அனுசயப்பட்டு அது இது என்னாதே
கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி
புனிதனை பூவனூரனை போற்றுவார்
மனிதரில் தலையான மனிதரே

மேல்

#1728
ஆதிநாதன் அமரர்கள் அர்ச்சிதன்
வேதநாவன் வெற்பின் மட பாவை ஓர்
பாதி ஆனான் பரந்த பெரும் படை
பூதநாதன் தென் பூவனூர் நாதனே

மேல்

#1729
பூவனூர் தண் புறம் பயம் பூம் பொழில்
நாவலூர் நள்ளாறொடு நன்னிலம்
கோவலூர் குடவாயில் கொடுமுடி
மூவலூரும் முக்கண்ணன் ஊர் காண்-மினே

மேல்

#1730
ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர்
பாவகாரிகள் சொல்வலைப்பட்டு நான்
தேவதேவன் திரு நெறி ஆகிய
பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே

மேல்

#1731
நாரணன்னொடு நான்முகன் இந்திரன்
வாரணன் குமரன் வணங்கும் கழல்
பூரணன் திரு பூவனூர் மேவிய
காரணன் எனை ஆள் உடை காளையே

மேல்

#1732
மை கடுத்த நிறத்து அரக்கன் வரை
புக்கு எடுத்தலும் பூவனூரன் அடி
மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும்
பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே

மேல்

66. திருவலஞ்சுழி – திருக்குறுந்தொகை


#1733
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன்
பூத_நாயகன் பொன் கயிலைக்கு இறை
மாது ஒர்பாகன் வலஞ்சுழி ஈசனை
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே

மேல்

#1734
கயிலைநாதன் கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன்
மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனை
பயில்கிலார் சிலர் பாவி தொழும்பரே

மேல்

#1735
இளைய காலம் எம்மானை அடைகிலா
துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல்
வளையும் காலம் வலஞ்சுழி ஈசனை
களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே

மேல்

#1736
நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்காய்
குறைவு இலா கொடும் கூற்று உதைத்திட்டவன்
மறை கொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவனை இனி என்று-கொல் காண்பதே

மேல்

#1737
விண்ட புரம் மூன்றும் எரி கொள
திண் திறல் சிலையால் எரிசெய்தவன்
வண்டு பண் முரல் தண் வலஞ்சுழி
அண்டனுக்கு அடிமைத்திறத்து ஆவனே

மேல்

#1738
படம் கொள் பாம்பொடு பால் மதியம் சடை
அடங்க ஆள வல்லான் உம்பர் தம்பிரான்
மடந்தை_பாகன் வலஞ்சுழியான் அடி
அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே

மேல்

#1739
நாக்கொண்டு பரவும் அடியார் வினை
போக்க வல்ல புரி சடை புண்ணியன்
மா கொள் சோலை வலஞ்சுழி ஈசன்-தன்
ஏ கொள புரம் மூன்று எரி ஆனவே

மேல்

#1740
தேடுவார் பிரமன் திருமால் அவர்
ஆடு பாதம் அவரும் அறிகிலார்
மாட வீதி வலஞ்சுழி ஈசனை
தேடுவான் உறுகின்றது என் சிந்தையே

மேல்

#1741
கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்று உடை
நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும்
வண் பொன்னி தென் வலஞ்சுழி மேவிய
பண்பன் இ பொனை செய்த பரிச இதே

மேல்

#1742
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற
நலம் கொள் பாதத்து ஒரு விரல் ஊன்றினான்
மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலம்கொள்வார் அடி என் தலை மேலவே

மேல்

67. திருவாஞ்சியம் – திருக்குறுந்தொகை


#1743
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்
புடை நிலாவிய பூம் பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே

மேல்

#1744
பறப்பையும் பசுவும் படுத்து பல
திறக்கவும் உடையோர் திகழும் பதி
கறை பிறை சடை கண்நுதல் சேர்தரு
சிறப்பு உடை திரு வாஞ்சியம் சேர்-மினே

மேல்

#1745
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி
தெற்று செம் சடை தேவர் பிரான் பதி
சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம்
பற்றி பாடுவார்க்கு பாவம் இல்லையே

மேல்

#1746
அங்கம் ஆறும் அரு மறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர்
செங்கண்மால் இடம் ஆர் திரு வாஞ்சியம்
தங்குவார் நம் அமரர்க்கு அமரரே

மேல்

#1747
நீறு பூசி நிமிர் சடை மேல் பிறை
ஆறு சூடும் அடிகள் உறை பதி
மாறுதான் ஒருங்கும் வயல் வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க்கு செல்வம் ஆகுமே

மேல்

#1748
அற்று பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு
உற்ற நல் துணை ஆவான் உறை பதி
தெற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம்
கற்று சேர்பவர்க்கு கருத்து ஆவதே

மேல்

#1749
அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடியான் திகழும் நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே

மேல்

68. திருநள்ளாறு – திருக்குறுந்தொகை


#1750
உள் ஆறாதது ஓர் புண்டரிக திரள்
தெள் ஆறா சிவசோதி திரளினை
கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை
நள்ளாறு என நம் வினை நாசமே

மேல்

#1751
ஆரண பொருள் ஆம் அருளாளனார்
வாரணத்து உரி போர்த்த மணாளனார்
நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார்
காரண கலை ஞான கடவுளே

மேல்

#1752
மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு எயில்
சோகம் பூண்டு அழல் சோர தொட்டான் அவன்
பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே

மேல்

#1753
மலியும் செம் சடை வாள் அரவம்மொடு
பொலியும் பூம் புனல் வைத்த புனிதனார்
நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர்-தம்
வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே

மேல்

#1754
உறவனாய் நிறைந்து உள்ளம் குளிர்ப்பவன்
இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன்
நறவம் நாறும் பொழில் திரு நள்ளாறன்
மறவனாய் பன்றி பின் சென்ற மாயமே

மேல்

#1755
செக்கர் அங்கு அழி செம் சுடர் சோதியார்
நக்கர் அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார்
வக்கரன் உயிர் வவ்விய மாயற்கு
சக்கரம் அருள்செய்த சதுரரே

மேல்

#1756
வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர்
விஞ்சையின் செல்வ பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார்
நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறரே

மேல்

#1757
அல்லன் என்றும் அலர்க்கு அருள் ஆயின
சொல்லன் என்று சொல்லா மறை சோதியான்
வல்லன் என்றும் வல்லார் வளம் மிக்கவர்
நல்லன் என்றும் நல்லார்க்கு நள்ளாறனே

மேல்

#1758
பாம்புஅணை பள்ளி கொண்ட பரமனும்
பூம் பணை பொலிகின்ற புராணனும்
தாம் பணிந்து அளப்ப ஒண்ணா தனி தழல்
நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே

மேல்

#1759
இலங்கை_மன்னன் இருபது தோள் இற
மலங்க மால் வரை மேல் விரல் வைத்தவர்
நலம் கொள் நீற்றர் நள்ளாறரை நாள்-தொறும்
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே

மேல்

69. திருக்கருவிலிக்கொட்டிட்டை – திருக்குறுந்தொகை


#1760
மட்டு இட்ட குழலார் சுழலில் வலை
பட்டிட்டும் மயங்கி பரியாது நீர்
கட்டிட்ட வினை போக கருவிலி
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே

மேல்

#1761
ஞாலம் மல்கு மனிதர்காள் நாள்-தொறும்
ஏல மா மலரோடு இலை கொண்டு நீர்
காலனார் வருதல் முன் கருவிலி
கோல வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே

மேல்

#1762
பங்கம் ஆயின பேச பறைந்து நீர்
மங்குமா நினையாதே மலர் கொடு
கங்கை சேர் சடையான்-தன் கருவிலி
கொங்கு வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே

மேல்

#1763
வாடி நீர் வருந்தாதே மனிதர்காள்
வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்
காடனார் உறைகின்ற கருவிலி
கோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்-மினே

மேல்

#1764
உய்யும் ஆறு இது கேண்-மின் உலகத்தீர்
பை கொள் பாம்பு அரையான் படை ஆர் மழு
கையினான் உறைகின்ற கருவிலி
கொய் கொள் பூம் பொழில் கொட்டிட்டை சேர்-மினே

மேல்

#1765
ஆற்றவும் அவலத்து அழுந்தாது நீர்
தோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி
காற்றும் ஆகி நின்றான்-தன் கருவிலி
கூற்றம் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்-மினே

மேல்

#1766
நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணி
பொல்லா ஆறு செய புரியாது நீர்
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி
கொல் ஏறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்-மினே

மேல்

#1767
பிணிந்த நோய் பிறவி பிரிவு எய்தும் ஆறு
உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி
குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்-மினே

மேல்

#1768
நம்புவீர் இது கேண்-மின்கள் நாள்-தொறும்
எம்பிரான் என்று இமையவர் ஏத்தும் ஏ
கம்பனார் உறைகின்ற கருவிலி
கொம்பு அனார் பயில் கொட்டிட்டை சேர்-மினே

மேல்

#1769
பார்உளீர் இது கேண்-மின் பரு வரை
பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன்
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி
கூர் கொள் வேலினன் கொட்டிட்டை சேர்-மினே

மேல்

70. திருக்கொண்டீச்சரம் – திருக்குறுந்தொகை


#1770
கண்ட பேச்சினில் காளையர்-தங்கள்-பால்
மண்டி ஏச்சுணும் மாதரை சேராதே
சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அ
கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே

மேல்

#1771
சுற்றமும் துணை நல் மடவாளொடு
பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர்
குற்றம் இல் புகழ் கொண்டீச்சுரவனார்
பற்று அலால் ஒரு பற்று மற்று இல்லையே

மேல்

#1772
மாடுதான் அது இல் எனின் மானுடர்
பாடுதான் செல்வார் இல்லை பல் மாலையால்
கூட நீர் சென்று கொண்டீச்சுரவனை
பாடு-மின் பரலோகத்து இருத்துமே

மேல்

#1773
தந்தை தாயொடு தாரம் எனும் தளை
பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய
கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனை
சிந்தைசெய்ம்-மின்கள் சேவடி சேரவே

மேல்

#1774
கேளு-மின் இளமை அது கேடு வந்து
ஈளையோடு இருமல் அது எய்தல் முன்
கோள் அரா அணி கொண்டீச்சுரவனை
நாளும் ஏத்தி தொழு-மின் நன்கு ஆகுமே

மேல்

#1775
வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்பமும் துயரும் எனும் சூழ் வினை
கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை
எம்பிரான் என வல்லவர்க்கு இல்லையே

மேல்

#1776
அல்லலோடு அரு நோயில் அழுந்தி நீர்
செல்லுமா நினையாதே கனை குரல்
கொல்லை ஏறு உடை கொண்டீச்சுரவனை
வல்ல ஆறு தொழ வினை மாயுமே

மேல்

#1777
நாறு சாந்து அணி நல் முலை மென் மொழி
மாறு இலா மலைமங்கை ஒர்பாகமா
கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து
ஊறுவார்-தமக்கு ஊனம் ஒன்று இல்லையே

மேல்

#1778
அயில் ஆர் அம்பு எரி மேரு வில் ஆகவே
எயிலாரும் பொடியாய் விழ எய்தவன்
குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனை
பயில்வாரும் பெருமை பெறும் பாலரே

மேல்

#1779
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான்-தனை
மலையினால் அடர்த்து விறல் வாட்டினான்
குலையின் ஆர பொழில் கொண்டீச்சுரவனை
தலையினால் வணங்க தவம் ஆகுமே

மேல்

71. திருவிசயமங்கை – திருக்குறுந்தொகை


#1780
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அ
வசை இல் மங்கலவாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான்
விசையமங்கையுள் வேதியன் காண்-மினே

மேல்

#1781
ஆதிநாதன் அடல் விடை மேல் அமர்
பூதநாதன் புலி அதள் ஆடையன்
வேதநாதன் விசயமங்கை உளான்
பாதம் ஓத வல்லார்க்கு இல்லை பாவமே

மேல்

#1782
கொள்ளிட கரை கோவந்தபுத்தூரில்
வெள் விடைக்கு அருள்செய் விசயமங்கை
உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன்
கிள்ளிட தலை அற்றது அயனுக்கே

மேல்

#1783
திசையும் எங்கும் குலுங்க திரிபுரம்
அசைய அங்கு எய்திட்டு ஆர் அழல் ஊட்டினான்
விசையமங்கை விருத்தன் புறத்து அடி
விசையின் மங்கி விழுந்தனன் காலனே

மேல்

#1784
பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள்
கள்ளம் ஆக்கி கலக்கிய காரிருள்
விள்ளல் ஆக்கி விசயமங்கை பிரான்
உள்ளல் நோக்கி என் உள்ளுள் உறையுமே

மேல்

#1785
கொல்லை ஏற்று கொடியொடு பொன் மலை
வில்லை ஏற்று உடையான் விசயமங்கை
செல்வ போற்றி என்பாருக்கு தென் திசை
எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே

மேல்

#1786
கண் பல் உக்க கபாலம் அங்கை கொண்டு
உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி
வெண்பிறைக்கண்ணியான் விசயமங்கை
நண்பனை தொழப்பெற்றது நன்மையே

மேல்

#1787
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து
வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை
ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால்
காண்டலே கருத்து ஆகி இருப்பனே

மேல்

#1788
வந்து கேண்-மின் மயல் தீர் மனிதர்காள்
வெந்தநீற்றன் விசயமங்கை பிரான்
சிந்தையால் நினைவார்களை சிக்கென
பந்து ஆக்கி உயக்கொளும் காண்-மினே

மேல்

#1789
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை
வலம்செய்வார்களும் வாழ்த்து இசைப்பார்களும்
நலம் செய்வார் அவர் நல் நெறி நாடியே

மேல்

72. திருநீலக்குடி – திருக்குறுந்தொகை


#1790
வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர்
செத்தபோது செறியார் பிரிவதே
நித்தம் நீலக்குடி அரனை நினை
சித்தம் ஆகில் சிவகதி சேர்திரே

மேல்

#1791
செய்யமேனியன் தேனொடு பால் தயிர்
நெய் அது ஆடிய நீலக்குடி அரன்
மையலாய் மறவா மனத்தார்க்கு எலாம்
கையில் ஆமலகக்கனி ஒக்குமே

மேல்

#1792
ஆற்ற நீள் சடை ஆய்_இழையாள் ஒரு
கூற்றன் மேனியில் கோலம் அது ஆகிய
நீற்றன் நீலக்குடி உடையான் அடி
போற்றினார் இடர் போக்கும் புனிதனே

மேல்

#1793
நாலு வேதியர்க்கு இன்னருள் நன் நிழல்
ஆலன் ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர்
நீலன் நீலக்குடி உறை நின்மலன்
காலனார் உயிர் போக்கிய காலனே

மேல்

#1794
நேச நீலக்குடி அரனே எனா
நீசராய் நெடு மால் செய்த மாயத்தால்
ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்துபோய்
நாசம் ஆனார் திரிபுரநாதரே

மேல்

#1795
கொன்றைசூடியை குன்றமகளொடும்
நின்ற நீலக்குடி அரனே எனீர்
என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர்
பொன்றும்போது நுமக்கு அறிவு ஒண்ணுமே

மேல்

#1796
கல்லினோடு எனை பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே

மேல்

#1797
அழகியோம் இளையோம் எனும் ஆசையால்
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே
நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன்
கழல் கொள் சேவடி கைதொழுது உய்ம்-மினே

மேல்

#1798
கற்றை செம் சடை காய் கதிர் வெண் திங்கள்
பற்றி பாம்புடன் வைத்த பராபரன்
நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன்
சுற்றி தேவர் தொழும் கழல் சோதியே

மேல்

#1799
தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள்
அரக்கனார் உடல் ஆங்கு ஒர் விரலினால்
நெரித்து நீலக்குடி அரன் பின்னையும்
இரக்கமாய் அருள்செய்தனன் என்பரே

மேல்

73. திருமங்கலக்குடி – திருக்குறுந்தொகை


#1800
தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி
அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன்
கொங்கு அலர் குழல் கொம்பு அனையாளொடு
மங்கலக்குடி மேய மணாளனே

மேல்

#1801
காவிரியின் வட கரை காண்தகு
மா விரியும் பொழில் மங்கலக்குடி
தே அரியும் பிரமனும் தேட ஒணா
தூ எரி சுடர் சோதியுள் சோதியே

மேல்

#1802
மங்கலக்குடி ஈசனை மாகாளி
வெம் கதிர் செல்வன் விண்ணொடு மண்உளோர்
சங்குசக்கரதாரி சதுமுகன்
அங்கு ஆலயமா கொண்டு நின்றதே

மேல்

#1803
மஞ்சன் வார் கடல் சூழ் மங்கலக்குடி
நஞ்சம் ஆரமுது ஆக நயந்து கொண்டு
அஞ்சும் ஆடல் அமர்ந்து அடியேன் உடை
நெஞ்சம் ஆலயமா கொண்டு நின்றதே

மேல்

#1804
செல்வம் மல்கு திரு மங்கலக்குடி
செல்வம் மல்கு சிவநியமத்தராய்
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ
செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே

மேல்

#1805
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய
பின்னு வார் சடை பிஞ்ஞகன்-தன் பெயர்
உன்னுவாரும் உரைக்க வல்லார்களும்
துன்னுவார் நல் நெறி தொடர்வு எய்தவே

மேல்

#1806
மாதரார் மருவும் மங்கலக்குடி
ஆதி_நாயகன் அண்டர்கள்_நாயகன்
வேத_நாயகன் வேதியர்_நாயகன்
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே

மேல்

#1807
வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி
விண்ட தாதையை தாள் அற வீசிய
சண்டநாயகனுக்கு அருள்செய்தவன்
துண்ட மா மதி சூடிய சோதியே

மேல்

#1808
கூசுவார் அலர் குண்டர் குணம் இலர்
நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள்
மாசர்-பால் மங்கலக்குடி மேவிய
ஈசன் வேறுபடுக்க உய்ந்தேன் அன்றே

மேல்

#1809
மங்கலக்குடியான் கயிலை மலை
அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்_கோன்
தன் தரத்தொடு தாள் தலை தோள் தகர்ந்து
அங்கு அலைத்து அழுது உய்ந்தனன் தான் அன்றே

மேல்

74. திருஎறும்பியூர் – திருக்குறுந்தொகை


#1810
விரும்பி ஊறு விடேல் மட நெஞ்சமே
கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கு அவன்
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண் தலை
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே

மேல்

#1811
பிறங்கு செம் சடை பிஞ்ஞகன் பேணு சீர்
கறங்கு பூத கணம் உடை கண்நுதல்
நறும் குழல் மடவாளொடு நாள்-தொறும்
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே

மேல்

#1812
மருந்து வானவர் தானவர்க்கு இன் சுவை
புரிந்த புன் சடை புண்ணியன் கண்நுதல்
பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும்
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே

மேல்

#1813
நிறம் கொள் கண்டத்து நின்மலன் எம் இறை
மறம் கொள் வேல்கண்ணி வாள்_நுதல் பாகமாய்
அறம் புரிந்து அருள்செய்த எம் அங்கணன்
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே

மேல்

#1814
நறும் பொன் நாள் மலர் கொன்றையும் நாகமும்
துறும்பு செம் சடை தூ மதி வைத்து வான்
உறும் பொன் மால் வரை பேதையோடு ஊர்-தொறும்
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே

மேல்

#1815
கறும்பி ஊர்வன ஐந்து உள காயத்தில்
திறம்பி ஊர்வன மற்றும் பல உள
குறும்பி ஊர்வது ஓர் கூட்டகத்து இட்டு எனை
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே

மேல்

#1816
மறந்தும் மற்று இது பேரிடர் நாள்-தொறும்
திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே
புறம் செய் கோல குரம்பையில் இட்டு எனை
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே

மேல்

#1817
இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடு
துன்பமும் உடனே வைத்த சோதியான்
அன்பனே அரனே என்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே

மேல்

#1818
கண் நிறைந்த கன பவள திரள்
விண் நிறைந்த விரி சுடர் சோதியான்
உள் நிறைந்து உருவாய் உயிர் ஆயவன்
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே

மேல்

#1819
நிறம் கொள் மால் வரை ஊன்றி எடுத்தலும்
நறும் குழல் மடவாள் நடுக்கு எய்திட
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான்
எறும்பியூர் மலை எம் இறை காண்-மினே

மேல்

75. திருக்குரக்குக்கா – திருக்குறுந்தொகை


#1820
மர கொக்கு ஆம் என வாய்விட்டு அலறி நீர்
சரக்கு காவி திரிந்து அயராது கால்
பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரை
குரக்குக்கா அடைய கெடும் குற்றமே

மேல்

#1821
கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல்
கொட்டாறே புனல் ஊறு குரக்குக்கா
முட்டு ஆறா அடி ஏத்த முயல்பவர்க்கு
இட்டு ஆறா இடர் ஓட எடுக்குமே

மேல்

#1822
கை அனைத்தும் கலந்து எழு காவிரி
செய் அனைத்திலும் சென்றிடும் செம் புனல்
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே

மேல்

#1823
மிக்கு அனைத்து திசையும் அருவிகள்
புக்கு காவிரி போந்த புனல் கரை
கொக்கு இனம் பயில் சோலை குரக்குக்கா
நக்கனை நவில்வார் வினை நாசமே

மேல்

#1824
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி
இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட
கொட்ட மா முழவு ஓங்கு குரக்குக்கா
இட்டமாய் இருப்பார்க்கு இடர் இல்லையே

மேல்

#1825
மேலை வானவரோடு விரி கடல்
மாலும் நான்முகனாலும் அளப்பு ஒணா
கோல மாளிகை கோயில் குரக்குக்கா
பாலராய் திரிவார்க்கு இல்லை பாவமே

மேல்

#1826
ஆல நீழல் அமர்ந்த அழகனார்
காலனை உதைகொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்கா
பாலருக்கு அருள்செய்வர் பரிவொடே

மேல்

#1827
செக்கர் அங்கு எழு செம் சுடர் சோதியார்
அக்கு அரையர் எம் ஆதிபுராணனார்
கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா
நக்கனை தொழ நம் வினை நாசமே

மேல்

#1828
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழு-மின் நீர்
கரிய கண்டன் கழல் அடி-தன்னையே
குர வனம் செழும் கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும் ஏத்தி தொழு-மினே

மேல்

#1829
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி
உரத்தை ஒல்க அடர்த்தான் உறைவிடம்
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா
வரத்தனை பெற வான்_உலகு ஆள்வரே

மேல்

76. திருக்கானூர் – திருக்குறுந்தொகை


#1830
திருவின் நாதனும் செம் மலர் மேல் உறை
உருவனாய் உலகத்தின் உயிர்க்கு எலாம்
கருவன் ஆகி முளைத்தவன் கானூரில்
பரமன் ஆய பரஞ்சுடர் காண்-மினே

மேல்

#1831
பெண்டிர் மக்கள் பெரும் துணை நல் நிதி
உண்டின்றே என்று உகவன்-மின் ஏழைகாள்
கண்டுகொண்-மின் நீர் கானூர் முளையினை
புண்டரீக பொதும்பில் ஒதுங்கியே

மேல்

#1832
தாயத்தார் தமர் நல் நிதி என்னும் இ
மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்
காயத்தே உளன் கானூர் முளையினை
வாய்அத்தால் வணங்கீர் வினை மாயவே

மேல்

#1833
குறியில் நின்று உண்டு கூறை இலா சமண்
நெறியை விட்டு நிறை கழல் பற்றினேன்
அறியலுற்றிரேல் கானூர் முளை அவன்
செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே

மேல்

#1834
பொத்தல் மண் சுவர் பொல்லா குரம்பையை
மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள்
சித்தர் பத்தர்கள் சேர் திரு கானூரில்
அத்தன் பாதம் அடைதல் கருமமே

மேல்

#1835
கல்வி ஞான கலை பொருள் ஆயவன்
செல்வம் மல்கு திரு கானூர் ஈசனை
எல்லியும் பகலும் இசைவு ஆனவா
சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே

மேல்

#1836
நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும்
காரும் மாருதம் கானூர் முளைத்தவன்
சேர்வும் ஒன்று அறியாது திசைதிசை
ஓர்வும் ஒன்று இலர் ஓடி திரிவரே

மேல்

#1837
ஓமத்தோடு அயன் மால் அறியா வணம்
வீம பேர் ஒளி ஆய விழுப்பொருள்
காமன் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே

மேல்

#1838
வன்னி கொன்றை எருக்கு அணிந்தான் மலை
உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல்
தன்னை வீழ தனி விரல் வைத்தவன்
கன்னி மா மதில் கானூர் கருத்தனே

மேல்

77. திருச்சேறை – திருக்குறுந்தொகை


#1839
பூரியா வரும் புண்ணியம் பொய் கெடும்
கூரிது ஆய அறிவு கைகூடிடும்
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி
நாரி_பாகன்-தன் நாமம் நவிலவே

மேல்

#1840
என்ன மா தவம் செய்தனை நெஞ்சமே
மின்னு வார் சடை வேத விழுப்பொருள்
செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி
மன்னு சோதி நம்பால் வந்து வைகவே

மேல்

#1841
பிறப்பு மூப்பு பெரும் பசி வான் பிணி
இறப்பு நீங்கிடும் இன்பம் வந்து எய்திடும்
சிறப்பர் சேறையுள் செந்நெறியாயன் கழல்
மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே

மேல்

#1842
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்து நீர்
ஓடி எய்த்தும் பயன் இலை ஊமர்காள்
சேடர் வாழ் சேறை செந்நெறி மேவிய
ஆடலான்-தன் அடி அடைந்து உய்ம்-மினே

மேல்

#1843
எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன்
துண்ணென்று ஒன்றில் துரக்கும் வழி கண்டேன்
திண் நன் சேறை திரு செந்நெறி உறை
அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே

மேல்

#1844
தப்பி வானம் தரணி கம்பிக்கில் என்
ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்
செப்பம் ஆம் சேறை செந்நெறி மேவிய
அப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே

மேல்

#1845
வைத்த மாடும் மடந்தை நல்லார்களும்
ஒத்து ஒவ்வாத உற்றார்களும் என் செய்வார்
சித்தர் சேறை திரு செந்நெறி உறை
அத்தர்தாம் உளர் அஞ்சுவது என்னுக்கே

மேல்

#1846
குலன்கள் என் செய்வ குற்றங்கள் என் செய்வ
துலங்கி நீ நின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய
அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே

மேல்

#1847
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும்
விழவிடாவிடில் வேண்டிய எய்த ஒணா
திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய
அழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே

மேல்

#1848
பொருந்து நீள் மலையை பிடித்து ஏந்தினான்
வருந்த ஊன்றி மலர் அடி வாங்கினான்
திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே

மேல்

78. திருக்கோடிகா – திருக்குறுந்தொகை


#1849
சங்கு உலாம் முன்கை தையல் ஓர்பாகத்தன்
வெம் குலாம் மத வேழம் வெகுண்டவன்
கொங்கு உலாம் பொழில் கோடிகாவா என
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே

மேல்

#1850
வாடி வாழ்வது என் ஆவது மாதர்-பால்
ஓடி வாழ்வினை உள்கி நீர் நாள்-தொறும்
கோடிகாவனை கூறிரேல் கூறினேன்
பாடி காவலில் பட்டு கழிதிரே

மேல்

#1851
முல்லை நல் முறுவல் உமை_பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே

மேல்

#1852
நா வளம் பெறும் ஆறு மன் நல்_நுதல்
ஆமளம் சொலி அன்பு செயின்அலால்
கோமளம் சடை கோடிகாவா என
ஏவள் என்று எனை ஏசும் அ ஏழையே

மேல்

#1853
வீறுதான் பெறுவார் சிலராகிலும்
நாறு பூம் கொன்றைதான் மிக நல்கானேல்
கூறுவேன் கோடிகா உளாய் என்று மால்
ஏறுவேன் நும்மால் ஏசப்படுவனோ

மேல்

#1854
நாடி நாரணன் நான்முகன் வானவர்
தேடி ஏசறவும் தெரியாதது ஓர்
கோடிகாவனை கூறாத நாள் எலாம்
பாடி காவலில் பட்டு கழியுமே

மேல்

#1855
வரங்களால் வரையை எடுத்தான்-தனை
அரங்க ஊன்றி அருள்செய்த அப்பன் ஊர்
குரங்கு சேர் பொழில் கோடிகாவா என
இரங்குவேன் மனத்து ஏதங்கள் தீரவே

மேல்

79. திருப்புள்ளிருக்குவேளூர் – திருக்குறுந்தொகை


#1856
வெள் எருக்கு அரவம் விரவும் சடை
புள்ளிருக்குவேளூர் அரன் பொன் கழல்
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர்
நள் இருப்பர் நரக குழியிலே

மேல்

#1857
மாற்றம் ஒன்று அறியீர் மனை வாழ்க்கை போய்
கூற்றம் வந்து உமை கொள்வதன் முன்னமே
போற்ற வல்லிரேல் புள்ளிருக்குவேளூர்
சீற்றம் ஆயின தேய்ந்து அறும் காண்-மினே

மேல்

#1858
அருமறையனை ஆணொடு பெண்ணனை
கரு விடம் மிக உண்ட எம் கண்டனை
புரி வெண்நூலனை புள்ளிருக்குவேளூர்
உருகி நைபவர் உள்ளம் குளிருமே

மேல்

#1859
தன் உருவை ஒருவருக்கு அறிவு ஒணா
மின்உருவனை மேனி வெண்நீற்றனை
பொன்உருவனை புள்ளிருக்குவேளூர்
என்ன வல்லவர்க்கு இல்லை இடர்களே

மேல்

#1860
செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா
அங்கியின் உரு ஆகி அழல்வது ஓர்
பொங்கு அரவனை புள்ளிருக்குவேளூர்
மங்கை_பாகனை வாழ்த்த வரும் இன்பே

மேல்

#1861
குற்றமில்லியை கோல சிலையினால்
செற்றவர் புரம் செம் தழல் ஆக்கியை
புற்று அரவனை புள்ளிருக்குவேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே

மேல்

#1862
கையினோடு கால் கட்டி உமர் எலாம்
ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர்
பொய் இலா அரன் புள்ளிருக்குவேளூர்
மை உலாவிய கண்டனை வாழ்த்துமே

மேல்

#1863
உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று
மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே
புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கி தொழு-மினே

மேல்

#1864
அரக்கனார் தலை பத்தும் அழிதர
நெருக்கி மா மலர் பாதம் நிறுவிய
பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர்
விருப்பினால் தொழுவார் வினை வீடுமே

மேல்

80. திருஅன்பிலாலந்துறை – திருக்குறுந்தொகை


#1865
வானம் சேர் மதி சூடிய மைந்தனை
நீ நெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை
ஆன் அஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறை
கோன் எம் செல்வனை கூறிடகிற்றியே

மேல்

#1866
காரணத்தர் கருத்தர் கபாலியார்
வாரணத்த உரி போர்த்த மணாளனார்
ஆரண பொருள் அன்பில் ஆலந்துறை
நாரணற்கு அரியா ஒரு நம்பியே

மேல்

#1867
அன்பின் ஆன் அஞ்சு அமைந்து உடன் ஆடிய
என்பின் ஆனை உரித்து களைத்தவன்
அன்பிலானை அம்மானை அள் ஊறிய
அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே

மேல்

#1868
சங்கை உள்ளதும் சாவதும் மெய் உமை
பங்கனார் அடி பாவியேன் நான் உய
அங்கணன் எந்தை அன்பில் ஆலந்துறை
செங்கணார் அடி சேரவும் வல்லனே

மேல்

#1869
கொக்குஇறகர் குளிர் மதி சென்னியர்
மிக்க அரக்கர் புரம் எரிசெய்தவர்
அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை
நக்க உருவரும் நம்மை அறிவரே

மேல்

#1870
வெள்ளம் உள்ள விரி சடை நந்தியை
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார்
அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறை
உள்ள ஆறு அறியார் சிலர் ஊமரே

மேல்

#1871
பிறவி மாய பிணக்கில் அழுந்தினும்
உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே
அறவம் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மறவாதே தொழுது ஏத்தி வணங்குமே

மேல்

#1872
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும்
பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா
அணங்கன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
வணங்கும் நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே

மேல்

#1873
பொய் எலாம் உரைக்கும் சமண் சாக்கிய
கையன்மார் உரை கேளாது எழு-மினோ
ஐயன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மெய்யன் சேவடி ஏத்துவார் மெய்யரே

மேல்

#1874
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற்று
மலங்க மா மலை மேல் விரல் வைத்தவன்
அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே

மேல்

81. திருப்பாண்டிக்கொடுமுடி – திருக்குறுந்தொகை


#1875
சிட்டனை சிவனை செழும் சோதியை
அட்டமூர்த்தியை ஆல நிழல் அமர்
பட்டனை திரு பாண்டிக்கொடுமுடி
நட்டனை தொழ நம் வினை நாசமே

மேல்

#1876
பிரமன் மால் அறியாத பெருமையன்
தருமம் ஆகிய தத்துவன் எம்பிரான்
பரமனார் உறை பாண்டிக்கொடுமுடி
கருமம் ஆக தொழு மட நெஞ்சமே

மேல்

#1877
ஊசலாள் அல்லள் ஒண் கழலாள் அல்லள்
தேசம் ஆம் திரு பாண்டிக்கொடுமுடி
ஈசனே எனும் இத்தனை அல்லது
பேசும் ஆறு அறியாள் ஒரு பேதையே

மேல்

#1878
தூண்டிய சுடர் போல் ஒக்கும் சோதியான்
காண்டலும் எளியான் அடியார்கட்கு
பாண்டிக்கொடுமுடி மேய பரமனை
காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான்

மேல்

#1879
நெருக்கி அம் முடி நின்று இசை வானவர்
இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன்
திரு கொடுமுடி என்றலும் தீவினை
கரு கெடும் இது கைகண்ட யோகமே

மேல்

82. திருவான்மியூர் – திருக்குறுந்தொகை


#1880
விண்ட மா மலர் கொண்டு விரைந்து நீர்
அண்ட_நாயகன்-தன் அடி சூழ்-மின்கள்
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும்
வண்டு சேர் பொழில் வான்மியூர் ஈசனே

மேல்

#1881
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு நீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கு அறுத்து
அருளுமா வல்ல ஆதியாய் என்றலும்
மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே

மேல்

#1882
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து
அந்தம் இல் குணத்தானை அடைந்து நின்று
எந்தை ஈசன் என்று ஏத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே

மேல்

#1883
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால்
கள்ளம் உள்ளவழி கசிவான்அலன்
வெள்ளமும் அரவும் விரவும் சடை
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே

மேல்

#1884
படம் கொள் பாம்பரை பால் மதிசூடியை
வடம் கொள் மென் முலை மாது ஒருகூறனை
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை
மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே

மேல்

#1885
நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று
அஞ்சி நாள் மலர் தூவி அழுதிரேல்
வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே

மேல்

#1886
நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலா
குணங்கள்தாம் பரவி குறைந்து உக்கவர்
சுணங்கு பூண் முலை தூமொழியார் அவர்
வணங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே

மேல்

#1887
ஆதியும் அரனாய் அயன் மாலுமாய்
பாதி பெண்உரு ஆய பரமன் என்று
ஓதி உள் குழைந்து ஏத்த வல்லார் அவர்
வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே

மேல்

#1888
ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னம் கழல் அடி
நாட்டி நாள் மலர் தூவி வலம்செயில்
வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே

மேல்

#1889
பாரம் ஆக மலை எடுத்தான்-தனை
சீரம் ஆக திரு விரல் ஊன்றினான்
ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும்
வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே

மேல்

83. திருநாகைக்காரோணம் – திருக்குறுந்தொகை


#1890
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்
பூண தான் அரவு ஆமை பொறுத்தவன்
காண தான் இனியான் கடல் நாகைக்கா
ரோணத்தான் என நம் வினை ஓயுமே

மேல்

#1891
வண்டு அலம்பிய வார் சடை ஈசனை
விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை
கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை
கண்டலும் வினை ஆன கழலுமே

மேல்

#1892
புனையும் மா மலர் கொண்டு புரி சடை
நனையும் மா மலர் சூடிய நம்பனை
கனையும் வார் கடல் நாகைக்காரோணனை
நினையவே வினை ஆயின நீங்குமே

மேல்

#1893
கொல்லை மால் விடை ஏறிய கோவினை
எல்லி மா நடம் ஆடும் இறைவனை
கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை
சொல்லவே வினை ஆனவை சோருமே

மேல்

#1894
மெய்யனை விடைஊர்தியை வெண் மழு
கையனை கடல் நாகைக்காரோணனை
மை அனுக்கிய கண்டனை வானவர்
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே

மேல்

#1895
அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை
கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே

மேல்

#1896
சினம் கொள் மால் கரி சீறிய ஏறினை
இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை
கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை
மனம்கொள்வார் வினை ஆயின மாயுமே

மேல்

#1897
அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து
எந்தை ஈசன் என்று ஏத்தும் இறைவனை
கந்த வார் பொழில் நாகைக்காரோணனை
சிந்தைசெய்ய கெடும் துயர் திண்ணமே

மேல்

#1898
கருவனை கடல் நாகைக்காரோணனை
இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை
ஒருவனை உணரார் புரம் மூன்று எய்த
செருவனை தொழ தீவினை தீருமே

மேல்

#1899
கடல் கழி தழி நாகைக்காரோணன்-தன்
வட வரை எடுத்து ஆர்த்த அரக்கனை
அடர ஊன்றிய பாதம் அணைதர
தொடர அஞ்சும் துயக்கு அறும் காலனே

மேல்

84. திருக்காட்டுப்பள்ளி – திருக்குறுந்தொகை


#1900
மாட்டு பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்
கேட்டு பள்ளி கண்டீர் கெடுவீர் இது
ஓட்டு பள்ளி விட்டு ஓடல் உறா முனம்
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே

மேல்

#1901
மாட்டை தேடி மகிழ்ந்து நீர் நும்முளே
நாட்டு பொய் எலாம் பேசிடும் நாணிலீர்
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே

மேல்

#1902
தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும்
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே
கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி
ஞானநாயகனை சென்று நண்ணுமே

மேல்

#1903
அருத்தமும் மனையாளொடு மக்களும்
பொருத்தம் இல்லை பொல்லாதது போக்கிடும்
கருத்தன் கண்நுதல் அண்ணல் காட்டுப்பள்ளி
திருத்தன் சேவடியை சென்று சேர்-மினே

மேல்

#1904
சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும்
அற்றபோது அணையார் அவர் என்றுஎன்றே
கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளி
பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்-மினே

மேல்

#1905
அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும்
துடும்பல்செய் சடை தூ மணி சோதியான்
கடம்பன்_தாதை கருதும் காட்டுப்பள்ளி
உடம்பினார்க்கு ஓர் உறுதுணை ஆகுமே

மேல்

#1906
மெய்யில் மாசு உடையார் உடல் மூடுவார்
பொய்யை மெய் என்று புக்கு உடன்வீழன்-மின்
கையில் மான் உடையான் காட்டுப்பள்ளி எம்
ஐயன்-தன் அடியே அடைந்து உய்-மினே

மேல்

#1907
வேலை வென்ற கண்ணாரை விரும்பி நீர்
சீலம் கெட்டு திகையன்-மின் பேதைகாள்
காலையே தொழும் காட்டுப்பள்ளி உறை
நீல_கண்டனை நித்தல் நினை-மினே

மேல்

#1908
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள்
ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்
அன்று வானவர்க்காக விடம் உண்ட
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்-மினே

மேல்

#1909
எண் இலா அரக்கன் மலை ஏந்திட
எண்ணி நீள் முடி பத்தும் இறுத்தவன்
கண்உளார் கருதும் காட்டுப்பள்ளியை
நண்ணுவார் அவர்-தம் வினை நாசமே

மேல்

85. திருச்சிராப்பள்ளி – திருக்குறுந்தொகை


#1910
மட்டு வார்குழலாளொடு மால் விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும்
சிட்டர் போலும் சிராப்பள்ளி செல்வரே

மேல்

#1911
அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார்
அரி அயன் தொழுது ஏத்தும் அரும் பொருள்
பெரியவன் சிராப்பள்ளியை பேணுவார்
அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே

மேல்

#1912
அரிச்சு இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு
சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்ல கேள்
திரி சிராப்பள்ளி என்றலும் தீவினை
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே

மேல்

#1913
தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்
பேயனேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாயனார் என நம் வினை நாசமே

மேல்

86. திருவாட்போக்கி – திருக்குறுந்தொகை


#1914
காலபாசம் பிடித்து எழு தூதுவர்
பாலகர் விருத்தர் பழையார் எனார்
ஆல நீழல் அமர்ந்த வாட்போக்கியார்
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே

மேல்

#1915
விடுத்த தூதுவர் வந்து வினை குழி
படுத்தபோது பயன் இலை பாவிகாள்
அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை
எடுத்தும் ஏத்தியும் இன்புறு-மின்களே

மேல்

#1916
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர்
உந்தி ஓடி நரகத்து இடா முனம்
அந்தியின் ஒளி தங்கும் வாட்போக்கியார்
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே

மேல்

#1917
கூற்றம் வந்து குமைத்திடும்போதினால்
தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே
ஆற்றவும் அருள்செய்யும் வாட்போக்கி-பால்
ஏற்று-மின் விளக்கை இருள் நீங்கவே

மேல்

#1918
மாறுகொண்டு வளைத்து எழு தூதுவர்
வேறுவேறு படுப்பதன் முன்னமே
ஆறு செம் சடை வைத்த வாட்போக்கியார்க்கு
ஊறிஊறி உருகும் என் உள்ளமே

மேல்

#1919
கானம் ஓடி கடிது எழு தூதுவர்
தானமோடு தலை பிடியா முனம்
ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார்
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே

மேல்

#1920
பார்த்து பாசம் பிடித்து எழு தூதுவர்
கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே
ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார்
கீர்த்திமைகள் கிளர்ந்து உரை-மின்களே

மேல்

#1921
நாடி வந்து நமன் தமர் நல் இருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை
வாடி ஏத்த நம் வாட்டம் தவிருமே

மேல்

#1922
கட்டு அறுத்து கடிது எழு தூதுவர்
பொட்ட நூக்கி புறப்படா முன்னமே
அட்ட மா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு
இட்டம் ஆகி இணை அடி ஏத்துமே

மேல்

#1923
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர்
பரக்கழித்து அவர் பற்றுதல் முன்னமே
அரக்கனுக்கு அருள்செய்த வாட்போக்கியார்
கரப்பதும் கரப்பார் அவர்-தங்கட்கே

மேல்

87. திருமணஞ்சேரி – திருக்குறுந்தொகை


#1924
பட்டம் நெற்றியர் பாய் புலித்தோலினர்
நட்டம் நின்று நவில்பவர் நாள்-தொறும்
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம்
வட்ட வார்சடையார் வண்ணம் வாழ்த்துமே

மேல்

#1925
துன்னு வார்குழலாள் உமையாளொடும்
பின்னு வார் சடை மேல் பிறை வைத்தவர்
மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை
உன்னுவார் வினை ஆயின ஓயுமே

மேல்

#1926
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார்
தெற்றினார் புரம் தீ எழ செற்றவர்
சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார்
பற்றினார் அவர் பற்று அவர் காண்-மினே

மேல்

#1927
மத்தமும் மதியும் வளர் செம் சடை
முத்தர் முக்குணர் மூசு அரவம் அணி
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம்
வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே

மேல்

#1928
துள்ளு மான் மறி தூ மழுவாளினர்
வெள்ள நீர் கரந்தார் சடை மேல் அவர்
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம்
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே

மேல்

#1929
நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல்
ஊர் பரந்த உரகம் அணிபவர்
சீர் பரந்த திரு மணஞ்சேரியார்
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே

மேல்

#1930
சுண்ணத்தர் சுடு நீறு உகந்து ஆடலார்
விண்ணத்து அம் மதி சூடிய வேதியர்
மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார்
வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே

மேல்

#1931
துன்ன ஆடையர் தூ மழுவாளினர்
பின்னும் செம் சடை மேல் பிறை வைத்தவர்
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம்
மன்னனார் கழலே தொழ வாய்க்குமே

மேல்

#1932
சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
புத்தர் சேர் அமண் கையர் புகழவே
மத்தர்தாம் அறியார் மணஞ்சேரி எம்
அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே

மேல்

#1933
கடுத்த மேனி அரக்கன் கயிலையை
எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற
படுத்தலும் மணஞ்சேரி அருள் என
கொடுத்தனன் கொற்றவாளொடு நாமமே

மேல்

88. திருமருகல் – திருக்குறுந்தொகை


#1934
பெருகல் ஆம் தவம் பேதைமை தீரல் ஆம்
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்
பருகல் ஆம் பரம் ஆயது ஓர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே

மேல்

#1935
பாடம் கொள் பனுவல் திறம் கற்று போய்
நாடு அங்கு உள்ளன தட்டிய நாணிலீர்
மாடம் சூழ் மருகல் பெருமான் திரு
வேடம் கைதொழ வீடு எளிது ஆகுமே

மேல்

#1936
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை
அனைத்தும் நீங்கி நின்று ஆதரவாய் மிக
மனத்தினால் மருகல் பெருமான் திறம்
நினைப்பினார்க்கு இல்லை நீள் நில வாழ்க்கையே

மேல்

#1937
ஓது பைம் கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி
பாதுகாத்து பலபல கற்பித்து
மாதுதான் மருகல் பெருமானுக்கு
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே

மேல்

#1938
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன் இன்று
துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும்
மன்னு தென் மருகல் பெருமான் திறம்
உன்னி ஒண்_கொடி உள்ளம் உருகுமே

மேல்

#1939
சங்கு சோர கலையும் சரியவே
மங்கைதான் மருகல் பெருமான் வரும்
அங்கவீதி அருகு அணையாநிற்கும்
நங்கைமீர் இதற்கு என் செய்கேன் நாளுமே

மேல்

#1940
காட்சி பெற்றிலளாகிலும் காதலே
மீட்சி ஒன்று அறியாது மிகுவதே
மாட்சி ஆர் மருகல் பெருமானுக்கு
தாட்சி சால உண்டாகும் என் தையலே

மேல்

#1941
நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும்
ஓடும் மாலினோடு ஒண் கொடி மாதராள்
மாடம் நீள் மருகல் பெருமான் வரில்
கூடு நீ என்று கூடல் இழைக்குமே

மேல்

#1942
கந்த வார் குழல் கட்டிலள் காரிகை
அந்தி மால் விடையோடும் அன்பாய் மிக
வந்திடாய் மருகல் பெருமான் என்று
சிந்தைசெய்து திகைத்திடும் காண்-மினே

மேல்

#1943
ஆதி மா மலை அன்று எடுத்தான் இற்று
சோதி என்றலும் தொல் அருள் செய்திடும்
ஆதியான் மருகல் பெருமான் திறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே

மேல்

89. தனித் திருக்குறுந்தொகை


#1944
ஒன்று வெண்பிறைக்கண்ணி ஓர் கோவணம்
ஒன்று கீள் உமையோடும் உடுத்தது
ஒன்று வெண் தலை ஏந்தி எம் உள்ளத்தே
ஒன்றி நின்று அங்கு உறையும் ஒருவனே

மேல்

#1945
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன செய் தொழில்
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன கோலங்கள்
இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து
இரண்டுபோதும் என் சிந்தையுள் வைகுமே

மேல்

#1946
மூன்று மூர்த்தியுள் நின்று இயலும் தொழில்
மூன்றம் ஆயின மூ இலை சூலத்தன்
மூன்று கண்ணினன் தீ தொழில் மூன்றினன்
மூன்றுபோதும் என் சிந்தையுள் மூழ்குமே

மேல்

#1947
நாலின் மேல் முகம் செற்றதும் மன் நிழல்
நாலு நன்கு உணர்ந்திட்டதும் இன்பமாம்
நாலு வேதம் சரித்ததும் நல் நெறி
நாலு போல் எம் அகத்து உறை நாதனே

மேல்

#1948
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி அரை மிசை
அஞ்சு போல் அரவு ஆர்த்தது இன் தத்துவம்
அஞ்சும் அஞ்சும் ஓர்ஓர் அஞ்சும் ஆயவன்
அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே

மேல்

#1949
ஆறு கால் வண்டு மூசிய கொன்றையான்
ஆறு சூடிய அண்ட முதல்வனார்
ஆறு கூர்மையர்க்கு அ சமய பொருள்
ஆறு போல் எம் அகத்து உறை ஆதியே

மேல்

#1950
ஏழு மா மலை ஏழ்பொழில் சூழ் கடல்
ஏழு போற்றும் இராவணன் கை நரம்பு
ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன் கழல்
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே

மேல்

#1951
எட்டு மூர்த்தியாய் நின்று இயலும் தொழில்
எட்டு வான் குணத்து ஈசன் எம்மான்-தனை
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே

மேல்

#1952
ஒன்பதுஒன்பது யானை ஒளி களிறு
ஒன்பதுஒன்பது பல் கணம் சூழவே
ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை
ஒன்பது ஒத்து நின் என் உள் ஒடுங்குமே

மேல்

#1953
பத்து நூறவன் வெம் கண் வெள் ஏற்று அண்ணல்
பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால்
பத்தியான் இடம் கொண்டது பள்ளியே

மேல்

90. தனித் திருக்குறுந்தொகை


#1954
மாசு இல் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்
மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணை அடி நீழலே

மேல்

#1955
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நான் அறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நல் நெறி காட்டுமே

மேல்

#1956
ஆள் ஆகார் ஆள் ஆனாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி
வாளா மாய்ந்து மண் ஆகி கழிவரே

மேல்

#1957
நடலை வாழ்வு கொண்டு என் செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொல் பிரமாணமே
கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே

மேல்

#1958
பூ கை கொண்டு அரன் பொன் அடி போற்றிலார்
நாக்கைக்கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரை ஆகி கழிவரே

மேல்

#1959
குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றது ஓர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியிலீர் மனம் என்-கொல் புகாததே

மேல்

#1960
வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மா மலர் தூவி துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே

மேல்

#1961
எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்
தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்துகொண்டு
உழுத சால் வழியே உழுவான்-பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே

மேல்

#1962
நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன் ஆர் சடை புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பவர் அவர்-தம்மை நாணியே

மேல்

#1963
விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மா மணி சோதியான்
உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே

மேல்

91. தனித் திருக்குறுந்தொகை


#1964
ஏஇலானை என் இச்சை அகம்படி
கோயிலானை குணப்பெருங்குன்றினை
வாயிலானை மனோன்மணியை பெற்ற
தாய்இலானை தழுவும் என் ஆவியே

மேல்

#1965
முன்னை ஞான முதல் தனி வித்தினை
பின்னை ஞான பிறங்கு சடையனை
என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவன்
தன்னை ஞான தளை இட்டு வைப்பனே

மேல்

#1966
ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன்
ஞானத்தால் தொழுவார்கள் தொழ கண்டு
ஞானத்தால் உனை நானும் தொழுவனே

மேல்

#1967
புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை
புழுவினும் கடையேன் புனிதன் தமர்
குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே

மேல்

#1968
மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப்பெறுதிரே
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை
கொலை செய் யானைதான் கொன்றிடுகிற்குமே

மேல்

#1969
கற்று கொள்வன வாய் உள நா உள
இட்டு கொள்வன பூ உள நீர் உள
கற்றை செஞ்சடையான் உளன் நாம் உளோம்
எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே

மேல்

#1970
மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன்
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே
புனிதன் பொன் கழல் ஈசன் எனும் கனி
இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே

மேல்

#1971
என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன்
என்னை தன் அடியான் என்று அறிதலும்
தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே

மேல்

#1972
தெள்ள தேறி தெளிந்து தித்திப்பது ஓர்
உள்ள தேறல் அமுத ஒளி வெளி
கள்ளத்தேன் கடியேன் கவலை கடல்
வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே

மேல்

92. காலபாசத் திருக்குறுந்தொகை


#1973
கண்டுகொள்ள அரியானை கனிவித்து
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கை
கொண்ட தொண்டரை துன்னினும் சூழலே

மேல்

#1974
நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பற்கு
கடுக்க கல்லவடம் இடுவார்கட்கு
கொடுக்க கொள்க என உரைப்பார்களை
இடுக்கண் செய்யப்பெறீர் இங்கு நீங்குமே

மேல்

#1975
கார் கொள் கொன்றை கடி மலர்க்கண்ணியான்
சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார்
ஆர்களாகினும் ஆக அவர்களை
நீர்கள் சாரப்பெறீர் இங்கு நீங்குமே

மேல்

#1976
சாற்றினேன் சடை நீள் முடி சங்கரன்
சீற்றம் காமன்-கண் வைத்தவன் சேவடி
ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய்
போற்றி என்று உரைப்பார் புடை போகலே

மேல்

#1977
இறை என் சொல் மறவேல் நமன் தூதுவீர்
பிறையும் பாம்பும் உடை பெருமான் தமர்
நறவம் நாறிய நன் நறும் சாந்திலும்
நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே

மேல்

#1978
வாமதேவன் வள நகர் வைகலும்
காமம் ஒன்று இலராய் கை விளக்கொடு
தாமம் தூபமும் தண் நறும் சாந்தமும்
ஏமமும் புனைவார் எதிர் செல்லலே

மேல்

#1979
படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன்-மின் நமது ஈசன் அடியரை
விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம்
புடை புகாது நீர் போற்றியே போ-மினே

மேல்

#1980
விச்சை ஆவதும் வேட்கைமை ஆவதும்
நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே
அச்சம் எய்தி அருகு அணையாது நீர்
பிச்சை புக்கவன் அன்பரை பேணுமே

மேல்

#1981
இன்னம் கேண்-மின் இளம் பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார்
மன்னும் அஞ்சுஎழுத்து ஆகிய மந்திரம்
தன்னில் ஒன்று வல்லாரையும் சாரலே

மேல்

#1982
மற்றும் கேண்-மின் மன பரிப்பு ஒன்று இன்றி
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
ஒற்றை ஏறு உடையான் அடியே அலால்
பற்றுஒன்றுஇல்லிகள் மேல் படைபோகலே

மேல்

#1983
அரக்கன் ஈர்_ஐம்_தலையும் ஓர் தாளினால்
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும்
சுருக்கெனாது அங்கு பேர்-மின்கள் மற்று நீர்
சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே

மேல்

93. மறக்கிற்பனே என்னும் திருக்குறுந்தொகை


#1984
காசனை கனலை கதிர் மா மணி
தேசனை புகழார் சிலர் தெண்ணர்கள்
மாசினை கழித்து ஆட்கொள வல்ல எம்
ஈசனை இனி நான் மறக்கிற்பனே

மேல்

#1985
புந்திக்கு விளக்கு ஆய புராணனை
சந்தி-கண் நடம் ஆடும் சதுரனை
அந்தி_வண்ணனை ஆர் அழல் மூர்த்தியை
வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே

மேல்

#1986
ஈசன் ஈசன் என்று என்றும் அரற்றுவன்
ஈசன்தான் என் மனத்தில் பிரிவு இலன்
ஈசன்-தன்னையும் என் மனத்து கொண்டு
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே

மேல்

#1987
ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்
ஈசன் சேவடி எற்றப்பெறுதலால்
ஈசன் சேவடி ஏத்தப்பெற்றேன் இனி
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே

மேல்

#1988
தேனை பாலினை திங்களை ஞாயிற்றை
வான வெண் மதி சூடிய மைந்தனை
வேனிலானை மெலிவு செய் தீ அழல்
ஞானமூர்த்தியை நான் மறக்கிற்பனே

மேல்

#1989
கன்னலை கரும்பு ஊறிய தேறலை
மின்னனை மின் அனைய உருவனை
பொன்னனை மணி குன்று பிறங்கிய
என்னனை இனி யான் மறக்கிற்பனே

மேல்

#1990
கரும்பினை கட்டியை கந்த மா மலர்
சுரும்பினை சுடர் சோதியுள் சோதியை
அரும்பினில் பெரும்போது கொண்டு ஆய் மலர்
விரும்பும் ஈசனை நான் மறக்கிற்பனே

மேல்

#1991
துஞ்சும்போதும் சுடர்விடு சோதியை
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை
வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே

மேல்

#1992
புதிய பூவினை புண்ணியநாதனை
நிதியை நீதியை நித்தில குன்றினை
கதியை கண்டம் கறுத்த கடவுளை
மதியை மைந்தனை நான் மறக்கிற்பனே

மேல்

#1993
கருகு கார் முகில் போல்வது ஒர் கண்டனை
உருவம் நோக்கியை ஊழி_முதல்வனை
பருகு பாலனை பால் மதிசூடியை
மருவும் மைந்தனை நான் மறக்கிற்பனே

மேல்

94. தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகை


#1994
அண்டத்தானை அமரர் தொழப்படும்
பண்டத்தானை பவித்திரம் ஆம் திரு
முண்டத்தானை முற்றாத இளம் பிறை
துண்டத்தானை கண்டீர் தொழல்-பாலதே

மேல்

#1995
முத்து ஒப்பானை முளைத்து எழு கற்பக
வித்து ஒப்பானை விளக்கிடை நேர் ஒளி
ஒத்து ஒப்பானை ஒளிர் பவள திரள்
தொத்து ஒப்பானை கண்டீர் தொழல்-பாலதே

மேல்

#1996
பண் ஒத்தானை பவளம் திரண்டது ஓர்
வண்ணத்தானை வகை உணர்வான்-தனை
எண்ணத்தானை இளம் பிறை போல் வெள்ளை
சுண்ணத்தானை கண்டீர் தொழல்-பாலதே

மேல்

#1997
விடலையானை விரை கமழ் தேன் கொன்றை
படலையானை பலி திரிவான் செலும்
நடலையானை நரி பிரியாதது ஓர்
சுடலையானை கண்டீர் தொழல்-பாலதே

மேல்

#1998
பரிதியானை பல்வேறு சமயங்கள்
கருதியானை கண்டார் மனம் மேவிய
பிரிதியானை பிறர் அறியாதது ஓர்
சுருதியானை கண்டீர் தொழல்-பாலதே

மேல்

#1999
ஆதியானை அமரர் தொழப்படும்
நீதியானை நியம நெறிகளை
ஓதியானை உணர்தற்கு அரியது ஓர்
சோதியானை கண்டீர் தொழல்-பாலதே

மேல்

#2000
ஞாலத்தானை நல்லானை வல்லார் தொழும்
கோலத்தானை குணப்பெருங்குன்றினை
மூலத்தானை முதல்வனை மூ இலை
சூலத்தானை கண்டீர் தொழல்-பாலதே

மேல்

#2001
ஆதி-பால் அட்டமூர்த்தியை ஆன் அஞ்சும்
வேதிப்பானை நம் மேல் வினை வெந்து அற
சாதிப்பானை தவத்திடை மாற்றங்கள்
சோதிப்பானை கண்டீர் தொழல்-பாலதே

மேல்

#2002
நீற்றினானை நிகர் இல் வெண் கோவண
கீற்றினானை கிளர் ஒளி செம் சடை
ஆற்றினானை அமரர்-தம் ஆருயிர்
தோற்றினானை கண்டீர் தொழல்-பாலதே

மேல்

#2003
விட்டிட்டானை மெய்ஞ்ஞானத்து மெய்ப்பொருள்
கட்டிட்டானை கனம்_குழை-பால் அன்பு
பட்டிட்டானை பகைத்தவர் முப்புரம்
சுட்டிட்டானை கண்டீர் தொழல்-பாலதே

மேல்

#2004
முற்றினானை இராவணன் நீள் முடி
ஒற்றினானை ஒரு விரலால் உற
பற்றினானை ஓர் வெண் தலை பாம்பு அரை
சுற்றினானை கண்டீர் தொழல்-பாலதே

மேல்

95. இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை


#2005
புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்
நக்கு அணைந்து நறு மலர் கொய்திலர்
சொக்கு அணைந்த சுடர்ஒளி_வண்ணனை
மிக்கு காணலுற்றார் அங்கு இருவரே

மேல்

#2006
அலரும் நீரும் கொண்டு ஆட்டி தெளிந்திலர்
திலகம் மண்டலம் தீட்டி திரிந்திலர்
உலகமூர்த்தி ஒளிநிற_வண்ணனை
செலவு காணலுற்றார் அங்கு இருவரே

மேல்

#2007
ஆப்பி நீரோடு அலகு கை கொண்டிலர்
பூ பெய் கூடை புனைந்து சுமந்திலர்
காப்புக்கொள்ளி கபாலி-தன் வேடத்தை
ஓப்பி காணலுற்றார் அங்கு இருவரே

மேல்

#2008
நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்
பொய்யும் பொக்கமும் போக்கி புகழ்ந்திலர்
ஐயன் வெய்ய அழல்நிற_வண்ணனை
மெய்யை காணலுற்றார் அங்கு இருவரே

மேல்

#2009
எருக்கம் கண்ணி கொண்டு இண்டை புனைந்திலர்
பெருக்க கோவணம் பீறி உடுத்திலர்
தருக்கினால் சென்று தாழ் சடை அண்ணலை
நெருக்கி காணலுற்றார் அங்கு இருவரே

மேல்

#2010
மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர்
நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர்
உரம் பொருந்தி ஒளிநிற_வண்ணனை
நிரம்ப காணலுற்றார் அங்கு இருவரே

மேல்

#2011
கட்டுவாங்கம் கபாலம் கைக்கொண்டிலர்
அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர்
சிட்டன் சேவடி சென்று எய்தி காணிய
பட்ட கட்டம் உற்றார் அங்கு இருவரே

மேல்

#2012
வெந்த நீறு விளங்க அணிந்திலர்
கந்த மா மலர் இண்டை புனைந்திலர்
எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை
அந்தம் காணலுற்றார் அங்கு இருவரே

மேல்

#2013
இள எழுந்த இரும் குவளை மலர்
பிளவு செய்து பிணைத்து அடி இட்டிலர்
களவுசெய் தொழில் காமனை காய்ந்தவன்
அளவு காணலுற்றார் அங்கு இருவரே

மேல்

#2014
கண்டி பூண்டு கபாலம் கை கொண்டிலர்
விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர்
அண்டமூர்த்தி அழல்நிற_வண்ணனை
கெண்டி காணலுற்றார் அங்கு இருவரே

மேல்

#2015
செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடி திரிந்தவர் காண்கிலார்
இங்கு உற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்
பொங்கு செம் சடை புண்ணியமூர்த்தியே

மேல்

96. மனத்தொகைத் திருக்குறுந்தொகை


#2016
பொன் உள்ள திரள் புன் சடையின் புறம்
மின் உள்ள திரள் வெண்பிறையாய் இறை
நின் உள்ளத்து அருள் கொண்டு இருள் நீங்குதல்
என் உள்ளத்து உளது எந்தை பிரானிரே

மேல்

#2017
முக்கணும் உடையாய் முனிகள் பலர்
தொக்கு எணும் கழலாய் ஒரு தோலினோடு
அக்கு அணும் அரையாய் அருளே அலாது
எக்கணும் இலன் எந்தை பிரானிரே

மேல்

#2018
பனியாய் வெண் கதிர் பாய் படர் புன் சடை
முனியாய் நீ உலகம் முழுது ஆளினும்
தனியாய் நீ சரண் நீ சலமே பெரிது
இனியாய் நீ எனக்கு எந்தை பிரானிரே

மேல்

#2019
மறையும் பாடுதிர் மா தவர் மாலினுக்கு
உறையும் ஆயினை கோள் அரவோடு ஒரு
பிறையும் சூடினை என்பது அலால் பிறிது
இறையும் சொல் இலை எந்தை பிரானிரே

மேல்

#2020
பூத்து ஆர் கொன்றையினாய் புலியின் அதள்
ஆர்த்தாய் ஆடு அரவோடு அனல் ஆடிய
கூத்தா நின் குரை ஆர் கழலே அலது
ஏத்தா நா எனக்கு எந்தை பிரானிரே

மேல்

#2021
பைம் மாலும் அரவா பரமா பசு
மைம் மால் கண்ணியோடு ஏறும் மைந்தா எனும்
அம் மால் அல்லது மற்று அடி நாயினேன்
எம்மாலும் இலன் எந்தை பிரானிரே

மேல்

#2022
வெப்பத்தின் மன மாசு விளக்கிய
செப்பத்தால் சிவன் என்பவர் தீவினை
ஒப்ப தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே

மேல்

#2023
திகழும் சூழ் சுடர் வானொடு வைகலும்
நிகழும் ஒண் பொருள் ஆயின நீதி என்
புகழும் ஆறும் அலால் நுன பொன் அடி
இகழும் ஆறு இலன் எந்தை பிரானிரே

மேல்

#2024
கைப்பற்றி திருமால் பிரமன் உனை
எய் பற்றி அறிதற்கு அரியாய் அருள்
அ பற்று அல்லது மற்று அடி நாயினேன்
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே

மேல்

#2025
எந்தை எம்பிரான் என்றவர் மேல் மனம்
எந்தை எம்பிரான் என்று இறைஞ்சி தொழுது
எந்தை எம்பிரான் என்று அடி ஏத்துவார்
எந்தை எம்பிரான் என்று அடி சேர்வரே

மேல்

97. சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை


#2026
சிந்திப்பார் மனத்தான் சிவன் செம் சுடர்
அந்தி வான் நிறத்தான் அணி ஆர் மதி
முந்தி சூடிய முக்கண்ணினான் அடி
வந்திருப்பார் அவர் வான்_உலகு ஆள்வரே

மேல்

#2027
அண்டம் ஆர் இருளூடு கடந்து உம்பர்
உண்டு போலும் ஓர் ஒண் சுடர் அ சுடர்
கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம்
வெண் திங்கள்கண்ணி வேதியன் என்பரே

மேல்

#2028
ஆதி ஆயவன் ஆரும் இலாதவன்
போது சேர் புனை நீள் முடி புண்ணியன்
பாதி பெண் உரு ஆகி பரஞ்சுடர்
சோதியுள் சோதியாய் நின்ற சோதியே

மேல்

#2029
இட்டது இட்டது ஓர் ஏறு உகந்து ஏறி ஊர்
பட்டி துட்டங்கனாய் பலி தேர்வது ஓர்
கட்ட வாழ்க்கையன் ஆகிலும் வானவர்
அட்டமூர்த்தி அருள் என்று அடைவரே

மேல்

#2030
ஈறு இல் கூறையன் ஆகி எரிந்த வெண்
நீறு பூசி நிலா மதி சூடிலும்
வீறு இலாதன செய்யினும் விண்ணவர்
ஊறலாய் அருளாய் என்று உரைப்பரே

மேல்

#2031
உச்சி வெண் மதி சூடிலும் ஊன் அறா
பச்சை வெண் தலை ஏந்தி பல இலம்
பிச்சையே புகுமாகிலும் வானவர்
அச்சம் தீர்த்து அருளாய் என்று அடைவரே

மேல்

#2032
ஊர் இலாய் என்று ஒன்று ஆக உரைப்பது ஓர்
பேர் இலாய் பிறை சூடிய பிஞ்ஞகா
கார் உலாம் கண்டனே உன் கழல் அடி
சேர்விலார்கட்கு தீயவை தீயவே

மேல்

#2033
எந்தையே எம்பிரானே என உள்கி
சிந்திப்பார் அவர் தீவினை திருமால்
வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
அந்தமா அளப்பார் அடைந்தார்களே

மேல்

#2034
ஏன வெண் மருப்போடு என்பு பூண்டு எழில்
ஆனை ஈர் உரி போர்த்து அனல் ஆடிலும்
தான் அ வண்ணத்தனாகிலும் தன்னையே
வானநாடர் வணங்குவர் வைகலே

மேல்

#2035
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணும் ஆம்
மெய்யன் மேதகு வெண் பொடி பூசிய
மை கொள் கண்டத்தன் மான் மறி கையினான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே

மேல்

#2036
ஒருவன் ஆகி நின்றான் இ உலகு எலாம்
இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான்
அரு அரா அரை ஆர்த்தவன் ஆர் கழல்
பரவுவார் அவர் பாவம் பறையுமே

மேல்

#2037
ஓத_வண்ணனும் ஒண் மலர் செல்வனும்
நாதனே அருளாய் என்று நாள்-தொறும்
காதல் செய்து கருதப்படுமவர்
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே

மேல்

#2038
கவ தன்மை அவரவர் ஆக்கையான்
வெவ்வ தன்மையன் என்பது ஒழி-மினோ
மௌவல் நீள் மலர் மேல் உறைவானொடு
பௌவ_வண்ணனுமாய் பணிவார்களே

மேல்

#2039
அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல்
புக்கு பல் பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்-மினோ
தொக்க வானவரால் தொழுவானையே

மேல்

#2040
கங்கை தங்கிய செம் சடை மேல் இளம்
திங்கள் சூடிய தீநிற_வண்ணனார்
இங்கணார் எழில் வானம் வணங்கவே
அங்கணாற்கு அதுவால் அவன் தன்மையே

மேல்

#2041
ஙகர வெல் கொடியானொடு நன் நெஞ்சே
நுகர நீ உனை கொண்டு உய போக்குறில்
மகர வெல் கொடி மைந்தனை காய்ந்தவன்
புகர் இல் சேவடியே புகல் ஆகுமே

மேல்

#2042
சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின்
மரணம் எய்திய பின் நவை நீக்குவான்
அரணம் மூஎயில் எய்தவன் அல்லனே

மேல்

#2043
ஞமன் என்பான் நகர்க்கு நமக்கு எலாம்
சிவன் என்பான் செழு மான் மறி கையினான்
கவனம் செய்யும் கன விடைஊர்தியான்
தமர் என்றாலும் கெடும் தடுமாற்றமே

மேல்

#2044
இடபம் எறியும் இல் பலி ஏற்பவர்
அடவி காதலித்து ஆடுவர் ஐந்தலை
பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனை
கடவிராய் சென்று கைதொழுது உய்ம்-மினே

மேல்

#2045
இணர்ந்து கொன்றை பொன் தாது சொரிந்திடும்
புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன்
அணைந்த அம் சடையான் அவன் பாதமே
உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே

மேல்

#2046
தருமம் தான் தவம் தான் தவத்தால் வரும்
கருமம் தான் கரு மான் மறி கையினான்
அருமந்தன்ன அதிர் கழல் சேர்-மினோ
சிரமம் சேர் அழல் தீவினையாளரே

மேல்

#2047
நமச்சிவாய என்பார் உளரேல் அவர்
தம் அச்சம் நீங்க தவ நெறி சார்தலால்
அமைத்து கொண்டது ஓர் வாழ்க்கையனாகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே

மேல்

#2048
பல்பல் காலம் பயிற்றி பரமனை
சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை
வெற்பில் தோன்றிய வெம் கதிர் கண்ட அ
புல் பனி கெடும் ஆறு அது போலுமே

மேல்

#2049
மணி செய் கண்டத்து மான் மறி கையினான்
கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினால்
பணிகள்தாம் செய வல்லவர் யாவர் தம்
பிணி செய் ஆக்கையை நீக்குவர் பேயரே

மேல்

#2050
இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர்
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
மயக்கம் எய்த வல் மால் எரி ஆயினான்
வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே

மேல்

#2051
அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலை
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு
குரவை கோத்தவனும் குளிர் போதின் மேல்
கரவு இல் நான்முகனும் கரி அல்லரே

மேல்

#2052
அழல் அங்கையினன் அந்தரத்து ஓங்கி நின்று
உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான்
தழலும் தாமரையானொடு தாவினான்
கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே

மேல்

#2053
இளமை கைவிட்டு அகறலும் மூப்பினார்
வளமை போய் பிணியோடு வருதலால்
உளம் எலாம் ஒளியாய் மதி ஆயினான்
கிளமையே கிளை ஆக நினைப்பனே

மேல்

#2054
தன்னில் தன்னை அறியும் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலனாயிடில்
தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே

மேல்

#2055
இலங்கை_மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று
அலங்கலோடு உடனே செல ஊன்றிய
நலம் கொள் சேவடி நாள்-தொறும் நாள்-தொறும்
வலம்கொண்டு ஏத்துவார் வான்_உலகு ஆள்வரே

மேல்

98. உள்ளத் திருக்குறுந்தொகை


#2056
நீறு அலைத்தது ஓர் மேனி நிமிர் சடை
ஆறு அலைக்க நின்று ஆடும் அமுதினை
தேறலை தெளியை தெளி வாய்த்தது ஓர்
ஊறலை கண்டுகொண்டது என் உள்ளமே

மேல்

#2057
பொந்தையை புக்கு நீக்க புகுந்திடும்
தந்தையை தழல் போல்வது ஓர் மேனியை
சிந்தையை தெளிவை தெளி வாய்த்தது ஓர்
எந்தையை கண்டுகொண்டது என் உள்ளமே

மேல்

#2058
வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே
வெள்ளத்தை சடை வைத்த விகிர்தனார்
கள்ளத்தை கழியம் மனம் ஒன்றி நின்று
உள்ளத்தில் ஒளியை கண்டது என் உள்ளமே

மேல்

#2059
அம்மானை அமுதின் அமுதே என்று
தம்மானை தத்துவத்து அடியார் தொழும்
செம்மான நிறம் போல்வது ஓர் சிந்தையுள்
எம்மானை கண்டுகொண்டது என் உள்ளமே

மேல்

#2060
கூறு ஏறும் உமை பாகம் ஓர்பாலராய்
ஆறு ஏறும் சடை மேல் பிறை சூடுவர்
பாறு ஏறும் தலை ஏந்தி பல இலம்
ஏறு ஏறும் எந்தையை கண்டது என் உள்ளமே

மேல்

#2061
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய் சாகின்றார்
தம் நெஞ்சம் தமக்கு தாம் இலாதவர்
வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே
என் நெஞ்சில் ஈசனை கண்டது என் உள்ளமே

மேல்

#2062
வென்றானை புலன் ஐந்தும் என் தீவினை
கொன்றானை குணத்தாலே வணங்கிட
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம்
ஒன்றானை கண்டுகொண்டது என் உள்ளமே

மேல்

#2063
மருவினை மட நெஞ்சம் மனம் புகும்
குருவினை குணத்தாலே வணங்கிடும்
திருவினை சிந்தையுள் சிவனாய் நின்ற
உருவினை கண்டுகொண்டது என் உள்ளமே

மேல்

#2064
தேசனை திருமால் பிரமன் செயும்
பூசனை புணரில் புணர்வு ஆயது ஓர்
நேசனை நெஞ்சினுள் நிறைவாய் நின்ற
ஈசனை கண்டுகொண்டது என் உள்ளமே

மேல்

#2065
வெறுத்தான் ஐம்புலனும் பிரமன் தலை
அறுத்தானை அரக்கன் கயிலாயத்தை
கறுத்தானை காலினில் விரல் ஒன்றினால்
ஒறுத்தானை கண்டுகொண்டது என் உள்ளமே

மேல்

99. பாவநாசத் திருக்குறுந்தொகை


#2066
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல்
மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்கு-மின்
காவலாளன் கலந்து அருள்செய்யுமே

மேல்

#2067
கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்
கொங்கு தண் குமரி துறை ஆடில் என்
ஒங்கு மா கடல் ஓதம் நீராடில் என்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே

மேல்

#2068
பட்டர் ஆகில் என் சாத்திரம் கேட்கில் என்
இட்டும் அட்டியும் ஈ தொழில் பூணின் என்
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என்
இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே

மேல்

#2069
வேதம் ஓதில் என் வேள்விகள் செய்கில் என்
நீதிநூல் பல நித்தல் பயிற்றில் என்
ஓதி அங்கம் ஒர் ஆறும் உணரில் என்
ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே

மேல்

#2070
காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்
வேலை-தோறும் விதிவழி நிற்கில் என்
ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என்
ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே

மேல்

#2071
கானம் நாடு கலந்து திரியில் என்
ஈனம் இன்றி இரும் தவம் செய்யில் என்
ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என்
ஞானம் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே

மேல்

#2072
கூட வேடத்தர் ஆகி குழுவில் என்
வாடி ஊனை வருத்தி திரியில் என்
ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனை
பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே

மேல்

#2073
நன்று நோற்கில் என் பட்டினி ஆகில் என்
குன்றம் ஏறி இரும் தவம் செய்யில் என்
சென்று நீரில் குளித்து திரியில் என்
என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே

மேல்

#2074
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை
ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல்
ஓடும் நீரினை ஓட்டை குடத்து அட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே

மேல்

#2075
மற்று நல் தவம் செய்து வருந்தில் என்
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இற
குற்ற நல் குரை ஆர் கழல் சேவடி
பற்று இலாதவர்க்கு பயன் இல்லையே

மேல்

100. ஆதிபுராணத் திருக்குறுந்தொகை


#2076
வேத_நாயகன் வேதியர்_நாயகன்
மாதின்_நாயகன் மாதவர்_நாயகன்
ஆதி_நாயகன் ஆதிரை_நாயகன்
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே

மேல்

#2077
செத்து செத்து பிறப்பதே தேவு என்று
பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ
அத்தன் என்று அரியோடு பிரமனும்
துத்தியம்செய நின்ற நல் சோதியே

மேல்

#2078
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே

மேல்

#2079
வாதுசெய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீராகிலும் ஏழைகாள்
யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம்
மா தேவன் அலால் தேவர் மற்று இல்லையே

மேல்

#2080
கூவல் ஆமை குரை கடல் ஆமையை
கூவலோடு ஒக்குமோ கடல் என்றல் போல்
பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால்
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே

மேல்

#2081
பேய் வனத்து அமர்வானை பிரார்த்தித்தார்க்கு
ஈவனை இமையோர் முடி தன் அடி
சாய்வனை சலவார்கள் தமக்கு உடல்
சீவனை சிவனை சிந்தியார்களே

மேல்

#2082
எரி பெருக்குவர் அ எரி ஈசனது
உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர்
அரி அயற்கு அரியானை அயர்த்து போய்
நரிவிருத்தம் அது ஆகுவர் நாடரே

மேல்

#2083
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார் கல்மனவரே

மேல்

#2084
தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்
ஆய உள்ளத்து அமுது அருந்தப்பெறார்
பேயர் பேய் முலை உண்டு உயிர் போக்கிய
மாயன் மாயத்து பட்ட மனத்தரே

மேல்

#2085
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து ஆர் அருள்
பெருக்க செய்த பிரான் பெருந்தன்மையை
அருத்தி செய்து அறியப்பெறுகின்றிலர்
கருத்து இலா கயவ கணத்தோர்களே

மேல்