ஏலாதி

பாடல் எண் எல்லைகள்


#0
அறு நால்வர் ஆய் புகழ் சேவடி ஆற்ற
பெறு நால்வர் பேணி வழங்கி பெறும் நான்மறை
புரிந்து வாழுமேல் மண் ஒழிந்து விண்ணோர்க்கு
இறை புரிந்து வாழ்தல் இயல்பு

#1
சென்ற புகழ் செல்வம் மீக்கூற்றம் சேவகம்
நின்ற நிலை கல்வி வள்ளன்மை என்றும்
அளி வந்து ஆர் பூம் கோதாய் ஆறும் மறையின்
வழிவந்தார்கண்ணே வனப்பு

#2
கொலை புரியான் கொல்லான் புலால் மயங்கான் கூர்த்த
அலைபுரியான் வஞ்சியான் யாதும் நிலை திரியான்
மண்ணவர்க்கும் அன்றி மது மலி பூம் கோதாய்
விண்ணவர்க்கும் மேலாய்விடும்

#3
தவம் எளிது தானம் அரிது தக்கார்க்கேல்
அவம் அரிது ஆதல் எளிதால் அவம் இலா
இன்பம் பிறழின் இயைவு எளிது மற்று அதன்
துன்பம் துடைத்தல் அரிது

#4
இடர் தீர்த்தல் எள்ளாமை கீழினம் சேராமை
படர் தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் நடை தீர்த்தல்
கண்டவர் காமுறும் சொல் காணின் கல்வியின்கண்
விண்டவர் நூல் வேண்டாவிடும்

#5
தனக்கு என்றும் ஓர் பாங்கன் பொய்யான் மெய் ஆக்கும்
எனக்கு என்று இயையான் யாது ஒன்றும் புன கொன்றை
போலும் இழையார் சொல் தேறான் களியானேல்
சாலும் பிற நூலின் சார்பு

#6
நிறை உடைமை நீர்மை உடைமை கொடையே
பொறை உடைமை பொய்ம்மை புலால்கண் மறை உடைமை
வேய் அன்ன தோளாய் இவை உடையான் பல் உயிர்க்கும்
தாய் அன்னன் என்ன தகும்

#7
இன் சொல் அளாவல் இடம் இனிது ஊண் யாவர்க்கும்
வன் சொல் களைந்து வகுப்பானேல் மென் சொல்
முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய் நாளும்
விருந்து ஏற்பர் விண்ணோர் விரைந்து

#8
உடன்படான் கொல்லான் உடன்றார் நோய் தீர்ந்து
மடம் படான் மாண்டார் நூல் மாண்ட இடம் பட
நோக்கும் வாய் நோக்கி நுழைவானேல் மற்று அவனை
யாக்குமவர் யாக்கும் அணைந்து

#9
கற்றாரை கற்றது உணரார் என மதியார்
உற்றாரை அன்னணம் ஓராமல் அற்றார்கட்கு
உண்டி உறையுள் உடுக்கை இவை ஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று

#10
செங்கோலான் கீழ் குடிகள் செல்வமும் சீர் இலா
வெம் கோலான் கீழ் குடிகள் வீந்து உகவும் வெம் கோல்
அமைச்சர் தொழிலும் அறியலம் ஒன்று ஆற்ற
எனைத்தும் அறியாமையான்

#11
அவா அறுக்கல் உற்றான் தளரான் அ ஐந்தின்
அவா அறுப்பின் ஆற்ற அமையும் அவா அறான்
ஆகும் அவன்ஆயின் ஐம் களிற்றின் ஆட்டுண்டு
போகும் புழையுள் புலந்து

#12
கொலை களம் வார் குத்து சூது ஆடும் எல்லை
அலை களம் போர் யானை ஆக்கும் நிலைக்களம்
மு சாரிகை ஒதுங்கும் ஓர் இடத்தும் இன்னவை
நச்சாமை நோக்காமை நன்று

#13
விளையாமை உண்ணாமை ஆடாமை ஆற்ற
உளையாமை உட்குடைத்தா வேறல் களையாமை
நூல் பட்டு ஆர் பூங்கோதாய் நோக்கின் இவை ஆறும்
பாற்பட்டார் கொண்டு ஒழுகும் பண்பு

#14
பொய்யான் புலாலொடு கள் போக்கி தீயன
செய்யான் சிறியார் இனம் சேரான் வையான்
கயல் இயல் உண் கண்ணாய் கருதுங்கால் என்றும்
அயல அயலவர் நூல்

#15
கண் போல்வார் காயாமை கற்றார் இனம் சேர்தல்
பண் போல் கிளவியார் பற்றாமை பண் போலும்
சொல்லார்க்கு அரு மறை சோராமை சிறிது எனினும்
இல்லார்க்கு இடர் தீர்த்தல் நன்று

#16
துறந்தார்கண் துன்னி துறவார்க்கு இடுதல்
இறந்தார்க்கு இனிய இசைத்தல் இறந்தார்
மறுதலை சுற்றம் மதித்து ஓம்புவானேல்
இறுதல் இல் வாழ்வே இனிது

#17
குடி ஓம்பல் வன்கண்மை நூல் வன்மை கூடம்
மடி ஓம்பும் ஆற்றல் உடைமை முடி ஓம்பி
நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல்
தேற்றானேல் தேறும் அமைச்சு

#18
போகம் பொருள் கேடு மான் வேட்டம் பொல்லா கள்
சோகம் படும் சூதே சொல்வன்மை சோக
கடும் கதத்து தண்டம் அடங்காமை காப்பின்
அடும் கதம் இல் ஏனை அரசு

#19
கொல்லான் கொலை புரியான் பொய்யான் பிறர் பொருள் மேல்
செல்லான் சிறியார் இனம் சேரான் சொல்லும்
மறையில் செவி இலன் தீ சொற்கண் மூங்கை
இறையில் பெரியாற்கு இவை

#20
மின் நேர் இடையார் சொல் தேறான் விழைவு ஓரான்
கொன்னே வெகுளான் கொலை புரியான் பொன்னே
உறுப்பு அறுத்து அன்ன கொடை உவப்பான் தன்னின்
வெறுப்பு அறுத்தான் விண்ணகத்தும் இல்

#21
இளமை கழியும் பிணி மூப்பு இயையும்
வளமை வலி இவை வாடும் உள நாளால்
பாடே புரியாது பால் போலும் சொல்லினாய்
வீடே புரிதல் விதி

#22
வாள் அஞ்சான் வன்கண்மை அஞ்சான் வனப்பு அஞ்சான்
ஆள் அஞ்சான் ஆய் பொருள்தான் அஞ்சான் நாள் எஞ்சா
காலன் வரவு ஒழிதல் காணின் வீடு எய்திய
பாலின் நூல் எய்தப்படும்

#23
குணம் நோக்கான் கூழ் நோக்கான் கோலமும் நோக்கான்
மணம் நோக்கான் மங்கலமும் நோக்கான் கணம் நோக்கான்
கால் காப்பு வேண்டான் பெரியார் நூல் காலற்கு
வாய் காப்பு கோடல் வனப்பு

#24
பிணி பிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பம்
தணிவு இல் நிரப்பு இவை தாழா அணியின்
அரங்கின் மேல் ஆடுநர் போல் ஆகாமல் நன்று ஆம்
நிரம்புமேல் வீட்டு நெறி

#25
பாடு அகம் சாராமை பாத்திலார்தாம் விழையும்
நாடகம் சாராமை நாடுங்கால் நாடகம்
சேர்ந்தால் பகை பழி தீ சொல்லே சாக்காடே
தீர்ந்தால் போல் தீரா வரும்

#26
மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே வன்கண்மை
ஆண்டு அமைந்த கல்வியே சொல் ஆற்றல் பூண்டு அமைந்த
காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ்

#27
அஃகு நீ செய்யல் என அறிந்து ஆராய்ந்தும்
வெஃகல் வெகுடலே தீ காட்சி வெஃகுமான்
கள்ளத்த அல்ல கருதின் இவை மூன்றும்
உள்ளத்த ஆக உணர்

#28
மை ஏர் தடம் கண் மயில் அன்ன சாயலாய்
மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர் பொய்யே
குறளை கடும் சொல் பயன் இல் சொல் நான்கும்
மறலையின் வாயினவாம் மற்று

#29
நிலை அளவின் நின்ற நெடியவர்தாம் நேரா
கொலை களவு காம தீ வாழ்க்கை அலை அளவி
மை என நீள் கண்ணாய் மறுதலைய இ மூன்றும்
மெய் அளவு ஆக விதி

#30
மாண்டவர் மாண்ட அறிவினால் மக்களை
பூண்டு அவர் போற்றி புரக்குங்கால் பூண்ட
ஒளரதனே கேத்திரசன் கானீனன் கூடன்
கிரிதன் பௌநற்பவன் பேர்

#31
மத்த மயில் அன்ன சாயலாய் மன்னிய சீர்
தத்தன் சகோடன் கிருத்திரமன் புத்திரி
புத்ரன் அபவித்தனொடு பொய் இல் உபகிருதன்
இ திறத்த எஞ்சினார் பேர்

#32
உரையான் குலன் குடிமை ஊனம் பிறரை
உரையான் பொருளொடு வாழ்வு ஆயு உரையானாய்
பூ ஆதி வண்டு தேர்ந்து உண் குழலாய் ஈத்து உண்பான்
தேவாதி தேவனா தேறு

#33
பொய் உரையான் வையான் புறங்கூறான் யாவரையும்
மெய் உரையான் உள்ளனவும் விட்டு உரையான் எய் உரையான்
கூந்தல் மயில் அன்னாய் குழீஇய வான் விண்ணோர்க்கு
வேந்தனாம் இ உலகம் விட்டு

#34
சிதை உரையான் செற்றம் உரையான் சீறு இல்லான்
இயல்பு உரையான் ஈனம் உரையான் நசையவர்க்கு
கூடுவது ஈவானை கொவ்வை போல் செம் வாயாய்
நாடுவர் விண்ணோர் நயந்து

#35
துறந்தார் துறவாதார் துப்பு இலார் தோன்றாது
இறந்தார் ஈடு அற்றார் இனையர் சிறந்தவர்க்கும்
பண் ஆளும் சொல்லாய் பழி இல் ஊண் பாற்படுத்தான்
மண் ஆளும் மன்னாய் மற்று

#36
கால் இல்லார் கண் இல்லார் நா இல்லார் யாரையும்
பால் இல்லார் பற்றிய நூல் இல்லார் சாலவும்
ஆழ படும் ஊண் அமைத்தார் இமையவரால்
வீழப்படுவார் விரைந்து

#37
அழ போகான் அஞ்சான் அலறினால் கேளான்
எழ போகான் ஈடு அற்றார் என்றும் தொழ போகான்
என்னே இ காலன் நீடு ஓரான் தவம் முயலான்
கொன்னே இருத்தல் குறை

#38
எழுத்தினால் நீங்காது எண்ணால் ஒழியாது ஏத்தி
வழுத்தினால் மாறாது மாண்ட ஒழுக்கினால்
நேராமை சால உணர்வார் பெரும் தவம்
போகாமை சால புலை

#39
சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது
மேவல் எளிது அரிது மெய் போற்றல் ஆவதன்கண்
சேறல் எளிது நிலை அரிது தெள்ளியர் ஆய்
வேறல் எளிது அரிது சொல்

#40
உலையாமை உற்றதற்கு ஓடி உயிரை
அலையாமை ஐயப்படாமை நிலையாமை
தீர்க்கும் வாய் தேர்ந்து பசி உண்டி நீக்குவான்
நோக்கும் வாய் விண்ணின் உயர்வு

#41
குறுகான் சிறியாரை கொள்ளான் புலால் பொய்
மறுகான் பிறர் பொருள் வெளவான் இறுகானாய்
ஈடு அற்றவர்க்கு ஈவான்ஆயின் நெறி நூல்கள்
பாடு இறப்ப பன்னும் இடத்து

#42
கொல்லான் உடன்படான் கொல்வார் இனம் சேரான்
புல்லான் பிறர்பால் புலால் மயங்கல் செல்லான்
குடி படுத்து கூழ் ஈந்தான் கொல் யானை ஏறி
அடி படுப்பான் மண் ஆண்டு அரசு

#43
சூது உவவான் பேரான் சுலா உரையான் யார்திறத்தும்
வாது உவவான் மாதரார் சொல் தேறான் காது தாழ்
வான் மகர வார்குழையாய் மா தவர்க்கு ஊண் ஈந்தான்
தான் மகர வாய் மாடத்தான்

#44
பொய்யான் பொய் மேவான் புலால் உண்ணான் யாவரையும்
வையான் வழி சீத்து வால் அடிசில் நையாதே
ஈத்து உண்பான் ஆகும் இரும் கடல் சூழ் மண் அரசாய்
பாத்து உண்பான் ஏத்து உண்பான் பாடு

#45
இழுக்கான் இயல் நெறி இன்னாத வெஃகான்
வழுக்கான் மனை பொருள் வெளவான் ஒழுக்கத்தால்
செல்வான் செயிர் இல் ஊண் ஈவான் அரசு ஆண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து

#46
களியான் கள் உண்ணான் களிப்பாரை காணான்
ஒளியான் விருந்திற்கு உலையான் எளியாரை
எள்ளான் ஈத்து உண்பானேல் ஏதம் இல் மண் ஆண்டு
கொள்வான் குடி வாழ்வான் கூர்ந்து

#47
பெரியார் சொல் பேணி பிறழாது நின்று
பரியா அடியார் பறியான் கரியார் சொல்
தேறான் இயையான் தெளிந்து அடிசில் ஈத்து உண்பான்
மாறான் மண் ஆளுமாம் மற்று

#48
வேற்று அரவம் சேரான் விருந்து ஒளியான் தன் இல்லுள்
சோற்று அரவம் சொல்லி உண்பான்ஆயின் மாற்று அரவம்
கேளான் கிளை ஓம்பின் கேடு இல் அரசனாய்
வாளால் மண் ஆண்டு வரும்

#49
யானை குதிரை பொன் கன்னியே ஆனிரையோடு
ஏனை ஒழிந்த இவை எல்லாம் ஆன் நெய்யால்
எண்ணன் ஆய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் வைசிரவண்ணன்
ஆய் வாழ்வான் வகுத்து

#50
எள்ளே பருத்தியே எண்ணெய் உடுத்தாடை
வள்ளே துணியே இவற்றொடு கொள் என
அன்புற்று அசனம் கொடுத்தான் துணையினோடு
இன்புற்று வாழ்வான் இயைந்து

#51
உண் நீர் வளம் குளம் கூவல் வழி புரை
தண்ணீரே அம்பலம் தான் பாற்படுத்தான் பண் நீர
பாடலொடு ஆடல் பயின்று உயர் செல்வனாய்
கூடலொடு ஊடல் உளான் கூர்ந்து

#52
இல் இழந்தார் கண் இழந்தார் ஈண்டிய செல்வம் இழந்தார்
நெல் இழந்தார் ஆன் நிரைதான் இழந்தார்க்கு எல் உழந்து
பண்ணி ஊண் ஈய்ந்தவர் பல் யானை மன்னராய்
எண்ணி ஊண் ஆர்வார் இயைந்து

#53
கடம் பட்டார் காப்பு இல்லார் கைத்து இல்லார் தம் கால்
முடம் பட்டார் மூத்தார் மூப்பு இல்லார்க்கு உடம்பட்டு
உடையராய் இல்லுள் ஊண் ஈத்து உண்பார் மண் மேல்
படையராய் வாழ்வார் பயின்று

#54
பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள்
கார்ப்பார் தமை யாதும் காப்பு இலார் தூ பால
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் மண் ஆண்டு
பண்டாரம் பற்ற வாழ்வார்

#55
ஈன்றார் ஈன்கால் தளர்வார் சூலார் குழவிகள்
மான்றார் வளியான் மயங்கினார்க்கு ஆனார் என்று
ஊண் ஈய்த்து உறு நோய் களைந்தார் பெரும் செல்வம்
காண் ஈய்த்து வாழ்வார் கலந்து

#56
தளையாளர் தாப்பாளர் தாழ்ந்தவர் பெண்டிர்
உளையாளர் ஊண் ஒன்றும் இல்லார் கிளைஞராய்
மா அலந்த நோக்கினாய் ஊண் ஈய்ந்தார் மா கடல் சூழ்
நாவலம்தீவு ஆள்வாரே நன்கு

#57
கரும் சிரங்கு வெண் தொழு நோய் கல் வளி காயும்
பெரும் சிரங்கு பேர் வயிற்று தீயார்க்கு அரும் சிரமம்
ஆற்றி ஊண் ஈத்து அவை தீர்த்தார் அரசராய்
போற்றி ஊண் உண்பார் புரந்து

#58
காமாடார் காமியார் கல்லார் இனம் சேரார்
ஆம் ஆடார் ஆய்ந்தார் நெறி நின்று தாம் ஆடாது
ஏற்றாரை இன்புற ஈய்ந்தார் முன் இம்மையான்
மாற்றாரை மாற்றி வாழ்வார்

#59
வணங்கி வழி ஒழுகி மாண்டார் சொல் கொண்டு
நுணங்கிய நூல் நோக்கி நுழையா இணங்கிய
பால் நோக்கி வாழ்வான் பழி இல்லா மன்னனாய்
நூல் நோக்கி வாழ்வான் நுனித்து

#60
பெருமை புகழ் அறம் பேணாமை சீற்றம்
அருமை நூல் சால்பு இல்லார் சாரின் இருமைக்கும்
பாவம் பழி பகை சாக்காடே கேடு அச்சம்
சாபம் போல் சாரும் சலித்து

#61
ஆர்வமே செற்றம் கதமே அறையுங்கால்
ஓர்வமே செய்யும் உலோபமே சீர்சாலா
மானமே மாய உயிர்க்கு ஊனம் என்னுமே
ஊனமே தீர்ந்தவர் ஓத்து

#62
கூத்தும் விழவும் மணமும் கொலை களமும்
ஆர்த்த முனையுள்ளும் வேறு இடத்தும் ஓத்தும்
ஒழுக்கம் உடையவர் செல்லாரே செல்லின்
இழுக்கம் இழவும் தரும்

#63
ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்
பேணொடும் எண்ணும் எழுத்து இவை மாணொடு
கேட்டு எழுதி ஓதி வாழ்வார்க்கு ஈய்ந்தார் இம்மையான்
வேட்டு எழுத வாழ்வார் விரிந்து

#64
உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி
உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி உயர்ந்தான்
அரும் தவம் ஆற்ற செயின் வீடு ஆம் என்றார்
பெரும் தவம் செய்தார் பெரிது

#65
காலனார் ஈடு அறுத்தல் காண்குறின் முற்று உணர்ந்த
பாலனார் நூல் அமர்ந்து பாராது வாலிதா
ஊறுபாடு இல்லா உயர் தவம் தான் புரியின்
ஏறுமாம் மேல் உலகம் ஓர்ந்து

#66
பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின் மை தீர்
சுடர் இன்று சொல் இன்று மாறு இன்று சோர்வு இன்று
இடர் இன்று இனி துயிலும் இன்று

#67
கூர் அம்பு வெம் மணல் ஈர் மணி தூங்கலும்
ஈரும் புகை இருளோடு இருள் நூல் ஆராய்ந்து
அழி கதி இ முறையான் ஆன்றார் அறைந்தார்
இழி கதி இ முறையான் ஏழு

#68
சாதல் பொருள் கொடுத்தல் இன் சொல் புணர்வு உவத்தல்
நோதல் பிரிவில் கவறலே ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக
மென் புடையார் வைத்தார் விரித்து

#69
எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல் நிலையே
படுத்தலோடு ஆடல் பகரின் அடுத்து உயிர்
ஆறு தொழில் என்று அறைந்தார் உயர்ந்தவர்
வேறு தொழிலாய் விரித்து

#70
ஐயமே பிச்சை அரும் தவர்க்கு ஊண் ஆடை
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான் வையமும்
வானும் வரிசையால்தான் ஆளும் நாளுமே
ஈனமே இன்றி இனிது

#71
நடப்பார்க்கு ஊண் நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண்
கிடப்பார்க்கு ஊண் கேளிர்க்கு ஊண் கேடு இன்று உடல் சார்ந்த
வானகத்தார்க்கு ஊணே மறுதலையார்க்கு ஊண் அமைத்தான்தான்
அகத்தே வாழ்வான் தக

#72
உணராமையால் குற்றம் ஒத்தான் வினை ஆம்
உணரான் வினை பிறப்பு செய்யும் உணராத
தொண்டு இரும் துன்பம் தொடரும் பிறப்பினான்
மண்டிலமும் ஆகும் மதி

#73
மனை வாழ்க்கை மா தவம் என்று இரண்டும் மாண்ட
வினை வாழ்க்கை ஆக விழைப மனை வாழ்க்கை
பற்றுதல் இன்றி விடுதல் முன் சொல்லும் மேல்
பற்றுதல் பாத்து இல் தவம்

#74
இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் புடை சால்
கழுத்தின் வனப்பும் வனப்பு அல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு

#75
அறுவர் தம் நூலும் அறிந்து உணர்வு பற்றி
மறு வரவு மாறு ஆய நீக்கி மறு வரவின்
மா சாரியனா மறுதலை சொல் மாற்றுதலே
ஆசாரியனது அமைவு

#76
ஒல்லுவ நல்ல உருவ வேல்கண்ணினாய்
வல்லுவ நாடி வகையினால் சொல்லின்
கொடையினால் போகம் சுவர்க்கம் தவத்தால்
அடையா தவத்தினால் வீடு

#77
நால் கதியும் துன்பம் நவை தீர்த்தல் வேண்டுவான்
பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து நூல் கதியின்
எல்லை உயர்ந்தார் தவம் முயலின் மூன்று ஐந்து ஏழ்
வல்லை வீடு ஆகும் வகு

#78
தாய் இழந்த பிள்ளை தலை இழந்த பெண்டாட்டி
வாய் இழந்த வாழ்வினார் வாணிகம் போய் இழந்தார்
கைத்து ஊண் பொருள் இழந்தார் கண்ணிலவர்க்கு ஈய்ந்தார்
வைத்து வழங்கி வாழ்வார்

#79
சாக்காடு கேடு பகை துன்பம் இன்பமே
நாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும் என நா காட்ட
நட்டார்க்கு இயையின் தமக்கு இயைந்த கூறு உடம்பு
அட்டார்வாய் பட்டது பண்பு

#80
புலையாளர் புண்பட்டார் கண் கெட்டார் போக்கு இல்
நிலையாளர் நீர்மை இழந்தார் தலையாளர்க்கு
ஊண் கொடுத்து ஊற்றாய் உதவினார் மன்னராய்
காண் கொடுத்து வாழ்வார் கலந்து

#81 சிறப்பு பாயிரம்
இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால்
சொல் அற நூல் சோர்வு இன்றி தொக்கு உரைத்து நல்ல
அணி மேதைஆய் நல்ல வீட்டு நெறியும்
கணிமேதை செய்தான் கலந்து
*