அகநானூறு-2

பாடல் 2. குறிஞ்சித் திணை பாடியவர் – கபிலர் துறை – பகல்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாவியது மரபு மூலம்- “குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய ” கோழிலை வாழைக் கோண்முதிர் பெருங்குலை யூழுறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் சுளையொ டூழ்படு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேற 5 லறியா துண்ட கடுவ னயலது கறிவளர் சாந்த மேறல் செல்லாது நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்குங் குறியா வின்ப மெளிதி னின்மலைப் பல்வேறு விலங்கு மெய்து நாட 10 குறித்த வின்ப நினக்கெவ னரிய வெறுத்த வேஎர் வேய்புரை பணைத்தோ ணிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட் டிவளு மினைய ளாயின் றந்தை யருங்கடிக் காவலர் சோர்பத னொற்றிக் 15 கங்குல் வருதலு முரியை பைம்புதல் வேங்கையு மொள்ளிணர் விரிந்தன நெடுவெண்…

Read More

அகநானூறு – 1

1. பாலைத் திணை பாடியவர் – மாமூலனார் துறை – பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது #0 மரபு மூலம்- “ ‘பிரியலம்’ என்ற சொல் தாம் மறந்தனர்கொல்லோ” வண்டுபடத் ததைந்த கண்ணி யொண்கழ லுருவக் குதிரை மழவ ரோட்டிய முருக னற்போர் நெடுவே ளாவி யறுகோட்டி யானைப் பொதினி யாங்கட் 5 சிறுகா ரோடற் பயினொடு சேர்த்திய கற்போற் பிரியல மென்ற சொல்தா மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த வேய்மருட் பணைத்தோ ணெகிழச் சேய்நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக 10 வழற்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலி னிழற்றேய்ந் துலறிய மரத்த வறைகாய் பறுநீர்ப் பைஞ்சுனை யாமறப் புலர்தலி னுகுநெற் பொரியும் வெம்மைய யாவரும் வழங்குந ரின்மையின் வௌவுநர் மடியச் 15 சுரம்புல் லென்ற வாற்ற வலங்குசினை நாரின் முருங்கை நவிரல் வான்பூச் சூரலங்…

Read More

அகநானூறு-கடவுள் வாழ்த்து

0. கடவுள் வாழ்த்து பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார். #0 மரபு மூலம் கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் மார்பி னஃதே மையில் நுண்ஞாண் நுதல திமையா நாட்டம் இகலட்டுக் 5 கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டத் தோலா தோற்கே வூர்ந்த தேறே சேர்ந்தோ ளுமையே செவ்வா னன்ன மேனி யவ்வா னிலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற் 10 றெரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தைஇய 15 யாழ்கெழு மணிமிடற் றந்தணன் தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே. #0 சொற்பிரிப்பு மூலம் கார் விரி கொன்றை பொன் நேர் புது மலர் தாரன் மாலையன் மலைந்த…

Read More

20. பாடல் 374 – எந்தையும் யாயும் உணரக் காட்டி

தூக்கணங்குருவிக் கூடு நந்தவனத்தில் பூப்பறித்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தனர் பொன்னியும் முல்லையும். தெருவில் நடந்துவரும்போது முன்பெல்லாம் அதிகமாகப் பேசாமல் வருவார்கள். இன்று அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிறையவே பூத்திருந்தது. முல்லை மிகவும் கலகலப்புடன் இருந்தாள். பொன்னியுடன் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டுவந்தாள். தெருவோரத்துக் கண்ணாத்தாள் அவர்களை நிறுத்தினாள். “என்னடீ கொமரிகளா! பொங்கிப் பூரிச்சுப்போயி இருக்கீக. எனக்கும் காத்துவாக்கில சங்கதி வந்துச்சுல்ல. என்ன முல்லை? ஒன்ன பொண்ணுபாக்க வந்திருந்தாங்களாமே? நிச்சயம் பண்ணியாச்சா?” என்றாள் கண்ணாத்தா. கண்ணாத்தாளும் அவளைச் சேர்ந்தவர்களும் வீட்டு வாசலில் அமர்ந்துகொண்டு முல்லையும் பொன்னியும் போக வர இருக்கும்போது சாடை பேசுவார்கள். “எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ? பாக்குறதுக்கு அப்பிராணியாத் தெரிஞ்சாலும் பெரிய சோலி’ல்ல நடக்குது நந்தவனத்துல!” இது தங்களைப் பற்றிய பேச்சுத்தான் என்றாலும் முல்லையும் பொன்னியும் பேசாமல் வேகமாக அவர்களைக் கடந்து செல்வார்கள். இத்தனைக்கும் நந்தவனத்துப்பக்கம் யாரும் போகாத…

Read More

19. பாடல் 305 – கண்தர வந்த காம ஒள்ளெரி

குப்பைக் கோழி வயல்காட்டுப்பக்கம் புல்லறுக்கச் செல்லும் வேலை பொன்னிக்கு அன்று இல்லை. இருக்கிற தீவனம் போதுமென்று அப்பா சொல்லிவிட்டார். பகல்முழுக்க வீட்டுவேலைகளில் மும்முரமாக இருந்த பொன்னிக்கு மாலையில் முல்லையின் நினைவு வந்தது. வாசலில் நின்றவண்ணம் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தாள். பக்கத்துவீட்டில் கங்கு எடுத்துவந்த ஆத்தாக்காரி அடுப்புப்பத்தவைத்துவிட்டாள் – இரவுச் சாப்பாட்டுக்காக. “ஆத்தா ஒரு எட்டு முல்லையப் போயி பாத்துட்டுவந்துர்ரேன்” என்று உள்பக்கமாக ஓங்கிக் குரல்கொடுத்துவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் இரண்டு தெரு தள்ளி இருக்கும் முல்லையின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். முல்லையின் வீட்டுத் திண்ணையில் கால்நீட்டி அமர்ந்திருந்தாள் முல்லையின் தாய். சாதாரணமாக “வாம்மா பொன்னி, பாத்து ரொம்ப நாளாச்சு, நல்லாருக்கயா?” என்று புன்னகையுடன் நலம் விசாரித்துக் காலை மடக்கி வழிவிடுவாள் முல்லையின் தாய். அன்றென்னவோ, ஒன்றும் பேசாதது-மட்டுமல்ல, காலையும் மடக்காமல் பொன்னியை முறைத்துப்பார்த்தாள். வேறு வழியில்லாமல் பொன்னிதான் அரைச்…

Read More

18. பாடல் 246 – பெருங்கடற்கரையது

அலையாத் தாயர் காலையில் வெளியில் போய்விட்டு வந்தபின் முல்லையின் தாய் ‘கடுகடு’-வென்று இருந்தாள். முத்தம்மாவிடம் தேவையில்லாமல் கோபித்துக்கொண்டாள். முகத்தைச் ‘சிடுசிடு’-வென வைத்துக்கொண்டு அங்குமிங்கும் கோபங்கொண்ட பெண்யானையாய் குமுறிக்கொண்டிருந்தாள். அனைத்தையும் அமைதியாக முல்லை கவனித்துக்கொண்டிருந்தாள். எல்லாம் தன்மேல் கொண்ட கோபம்தான் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் என்ன காரணம் என்றுமட்டும் தெரியவில்லை. “அவ வரட்டும் பேசிக்கிறேன்” அம்மா கறுவிக்கொண்டே முல்லையை முறைத்துப் பார்த்தாள். வேறு யார் வருவார்கள்? பொன்னிதான். என்னமோ நடந்திருக்கிறது. பொன்னி வராமல்மட்டும் இருந்துவிடவேண்டும். வந்தால் அம்மா வறுத்தெடுத்துவிடுவாள். “என்னவாக இருக்கும்?” என்ற யோசனையில் இருந்த முல்லைக்கு ஒன்று தோன்றியது. அம்மாவிடம் மெல்லப் பேச்சுக்கொடுத்துப் பார்க்கலாம். அப்பொழுது தெரிந்துவிடும் யார் மீது, என்ன கோபம் என்று. “அம்மா, அப்பா எங்கே’ம்மா?” “எனக்கென்ன தெரியும்? அந்த மனுசன் ஏங்கிட்ட எல்லாத்தயும் சொல்லிக்கிட்டுத்தான் போறாருக்கும். பேசாம சோலியப் பாத்துக்கிட்டுக் கெட”…

Read More

17. பாடல் 196 – வேம்பின் பைங்காய்

தேம்பூங்கட்டி பொன்னியும் முல்லையும் நந்தவனத்தில் பூப்பறிக்க வருகிறமாதிரி வந்து அவனுக்காகக் காத்திருந்தனர். முல்லை சற்றுப் படபடப்பாக இருப்பினும் பொன்னி சிந்தனைவயப்பட்டவளாய் இருந்தாள். திடீரென அவள் முகத்தில் ஒரு குறும்புத்தனமான புன்னகை தோன்றியது. “என்னடீ, மனசுக்குள்ள சிரிப்பு?” என்று வினவினாள் முல்லை. “இல்ல எனக்கு ஒரு யோசனை” “என்ன” தாங்கள் நின்றிருந்த வேப்பமரத்தின் தாழ்ந்த கிளையொன்றைத் தாவிப் பிடித்தாள் பொன்னி. அதில் கொத்தாகக் காய்த்திருந்த காய்களில் நன்கு பச்சைப்பசேல் என்றிருக்கும் நான்கைந்து முற்றிய காய்களைப் பறித்தாள். “என்னடீ பண்ற?” என்று வியப்புடன் வினவினாள் முல்லை. “இதென்ன? வேப்பங்காய். இத அண்ணங்கிட்டக் கொடுத்து வெல்லக்கட்டி’ன்னு சொல்லு” “ஏன்டி, வெல்லக்கட்டி பச்சையாவா இருக்கும்?” “கேட்டா, வெல்லத்தை எளக்கி நிறம் சேத்துருக்கோம்’னு சொல்லு” “இதென்னடி விளையாட்டு? ‘சட்’-னு இதக் கடிச்சுட்டார்’னா?” “ஏன்டீ, அவர நான் அண்ணன் மாதிரிதான நெனச்சிருக்கேன். என் அண்ணனுக்கு இப்படிச்…

Read More

16. பாடல் 176 – ஒருநாள் வாரலன்

ஏறுடை மழை ஊர்த் திருவிழாவின்போது, சாவடி முன்னர் இருந்த அகன்ற பரப்பின் நடுவில் முளைப்பாரிகளை வைத்து அதைச் சுற்றிப் பெண்கள் ‘தானானே’ பாடிய வண்ணம் கும்மியடித்துச் சுற்றிவந்துகொண்டிருந்தனர். முல்லை மெய்ம்மறந்து அதனைப் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தாள். அருகில் நின்றிருந்த பொன்னி, திடீரென்று முல்லையின் இடுப்பை இலேசாகக் கிள்ளினாள். “என்னடீ” என்ற வண்ணம் நெளிந்துகொண்டே முல்லை அவளைக் கடிந்துகொண்டாள். “சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்’டீ” “இப்ப அதுக்கென்ன அவசரம். இது முடியட்டுமே” “இல்ல, ஒடனே பொறப்படு. இங்க இருக்குறது நல்லாயில்ல” “எதுடீ நல்லாயில்ல? எவ்வளவு அருமையாப் பாடுறாங்க” “ஆமா வாயில ஈ நொழயறது தெரியாமப் பாத்துக்கிட்டு இரு. சுத்துவட்டுல என்ன நடக்குது’ன்னு தெரியாம” “ஏன்டீ மொளப்பாரியப் பாப்பயா, சுத்துவட்டப் பாத்துக்கிட்டு இருப்பயா?” “எல்லாத்தையுந்தான்டீ பாக்கணும்” “இப்ப வேற என்னத்தப் பாக்கச் சொல்ற?” “எதுத்தாப்புல ஒருத்தன் நம்மளயே பாத்துக்கிட்டு இருக்கான். அவன் நம்ம…

Read More

15. பாடல் 167 – முளி தயிர் பிசைந்த

தீம்புளிப் பாகர் மூன்று மாதங்களாகிவிட்டன முல்லை தான் தேர்ந்தெடுத்த நாயகனுடன் வீட்டைவிட்டுச் சென்று. ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்ந்திருந்த முல்லையின் தாயும், வளர்ப்புத்தாய் முத்தம்மாவும் சற்றே இயல்புநிலைக்குத் திரும்பிய வேளை. எனினும் முல்லையின் அப்பாவின் மனநிலை என்ன என்பது இருவருக்கும் தெரியவில்லை. ஏதாவது முல்லையைப் பற்றிப் பேச்செடுத்தால் அவர் எந்த மாதிரி எடுத்துக்கொள்வார் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியாத நிலையில் வீட்டில் முல்லையைப் பற்றிய பேச்சே இல்லை. ஒருநாள், முல்லையின் அப்பா வீட்டில் இல்லாத நேரம். முல்லையின் தாய் பேச்சியம்மாள் மெதுவாக முத்தம்மாவிடம் முல்லையைப் பற்றிய பேச்செடுத்தாள். “எப்படி இருக்குறாளோ?” என்று தனக்குள் பேசுவதுபோல் ஆரம்பித்தாள். அதற்குத்தான் காத்திருந்தவள்போல் முத்தம்மா உடனே பதில் கேள்வி எழுப்பினாள். “யாரச் சொல்றீக? நம்ம முல்லயயா?” “வேற யாரப் பத்தி எனக்குக் கவல? அவ நெனப்புத்தான் நெஞ்சுக்குள்ளயே இருக்கு” “ஐயா என்ன சொல்லுவாகளோ’ன்னுதான்…

Read More

14. பாடல் 156 – பார்ப்பன மகனே

எழுதாக் கற்பு அந்தக் கிராமத்து ஓரத்துக் கோயிலின் திண்ணையில் வழக்கமாக வந்து உட்காரும் இளவட்டங்கள் எல்லாரும் வந்துசேர்ந்தனர் – அவனைத் தவிர. அவன்தான் அக்கூட்டத்துக்கு இயங்குசக்தி போன்றவன். சற்றுத் தாமதமாக சோர்ந்த முகத்துடன் அவன் வந்து சேர்ந்தான். அவனுடைய சோகத்துக்குக் காரணம் அவர்களுக்குத் தெரியும். சிறிது நாட்களாகவே அவன் சோர்வுடன்தான் காணப்பட்டான். தோண்டித் துருவிக் கேட்டதில் அவனது துயரம் அவர்களையும் தொற்றிக்கொண்டது. ஆம், சில நாட்களாகவே அவனது ‘அவள்’ அவளது ஊர் நந்தவனத்துப்பக்கம் வருவதில்லை. எனவே அவர்களின் சந்திப்பு முற்றிலும் நின்றுபோனது. அவள் இருக்கும் அடுத்த ஊருக்குச் சென்று அவள் வீட்டுப்பக்கம் நடந்துபார்த்தான். முற்றிலும் புதியவனான அவனை எல்லாரும் வெறித்துப் பார்த்தார்கள். ஒருசிலர் சாடைமாடையாக அவனைப் பழித்துப் பேசினார்கள். அவளைப் பற்றிய எந்த செய்தியும் கிடைக்கவில்லை. ஒருவேளை அவர்கள் பழகுவது அவளின் வீட்டாருக்குத் தெரிந்து அவளை வீட்டுக்குள்…

Read More