புறநானூறு 175 – 200

  
# 175 கள்ளில் ஆத்திரையனார்# 175 கள்ளில் ஆத்திரையனார்
எந்தை வாழி ஆதனுங்க என்என் இறைவனே! ஆதனுங்கனே! நீ வாழ்க! என்
நெஞ்சம் திறப்போர் நின் காண்குவரேநெஞ்சத்தைத் திறப்போர் உன்னைக் காண்பார்கள்,
நின் யான் மறப்பின் மறக்கும் காலைஉன்னை நான் மறந்தால், மறக்கும் வேளையானது
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்என் உயிர் உடம்பிலிருந்து பிரியும் பொழுது
என் யான் மறப்பின் மறக்குவென் வென் வேல்  5       என்னையே நான் மறந்தால், அப்போது உன்னை மறப்பேன், வெற்றிதரும் வேலையும்
விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர்விண் முட்டும் உயர்ந்த வெண்கொற்றக்குடையையும், கொடியுடைய தேரையும் கொண்ட மௌரியரின்
திண் கதிர் திகிரி திரிதர குறைத்தஉறுதியான ஆரங்கள் கொண்ட சக்கரங்கள் எளிதில் உருண்டோட வெட்டப்பட்ட
உலக இடைகழி அறை வாய் நிலைஇயமலைகளுக்கு அப்பாலுள்ள உலகத்திற்கு இடைகழியாகிய அற்றவாயில் என்னுமிடத்தில் நிலைபெற்ற
மலர் வாய் மண்டிலத்து அன்ன நாளும்பரந்த இடத்தையுடைய சூரியமண்டிலம் போல, நாள்தோறும்
பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே             10பலரையும் காப்பாற்றுவதை ஏற்றுக்கொண்டிருக்கிற அறத்துறையாகிய உன்னை – 
  
# 176 புறத்திணை நன்னாகனார்# 176 புறத்திணை நன்னாகனார்
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர்விளையாட்டுத் தோழியரான ஒளிரும் வளையகளை அணிந்த மகளிர்
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின்காட்டுப்பன்றி தோண்டிப்போட்ட கரிய சேற்றைக் கிளறினால்
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைஆமை இட்ட புலால் நாறும் முட்டையை
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்தேன் மணக்கும் ஆம்பலின் கிழங்குடனே பெறும்
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின்              5துடும் என்று ஒலிக்கும் நீரோடும் வாய்க்கால்களைக் கொண்ட
பெரு மாவிலங்கை தலைவன் சீறியாழ்பெரிய மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவன், சிறிய யாழையுடைய
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனைவறியோர் தொடுக்கும் புகழ்மாலை சூடும் நல்லியக்கோடனைத்
உடையை வாழி எம் புணர்ந்த பாலேதுணையாகக் கொண்டிருக்கிறாய், வாழ்க, என்னைப் பிடித்த விதியே!
பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர்பாரியின் பறம்புமலையின் குளிர்ந்த சுனையிலுள்ள தெளிந்த நீர்
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல                10ஊருக்குள்ளேயே கிடைப்பதால் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மெத்தனமாய் இருப்பவர் போல
காணாது கழிந்த வைகல் காணாஅவனைப் பார்க்காமல் கழிந்த நாள்களுக்காகவும், அவனைப் பார்க்காமல் இருக்கும்
வழி நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன்வரப்போகிற நாள்களுக்காகவும் என் நெஞ்சம் வருந்தும், அவனது
கழி மென் சாயல் காண்-தொறும் நினைந்தேமிக்க மென்மையான சாயலைப் பார்க்கும்போதெல்லாம் அவற்றை எண்ணி. 
  
# 177 ஆவூர் மூலங்கிழார்# 177 ஆவூர் மூலங்கிழார்
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர்ஒளிவிடும் வாளையுடைய மன்னர்களின் ஒளி சிந்தும் விளக்குகளையுடைய உயர்ந்த அரண்மனையில்
வெளிறு கண் போக பன் நாள் திரங்கிகண்கள் பூத்துப்போக, பல நாள்கள் வாடிக்கிடந்து
பாடி பெற்ற பொன் அணி யானைபாடிப் பெற்ற பொன் அணிகலன்கள் அணிந்த யானையானது –
தமர் எனின் யாவரும் புகுப அமர் எனின்தமக்கு வேண்டியவர் எனில் எல்லாரும் எளிதில் நுழையலாம், போர் எனில்
திங்களும் நுழையா எந்திர படு புழை                5திங்களும் நுழையமுடியாத அளவுக்குப் பொறிகள் பொருத்தியிருக்கும் ஒடுக்கவாயிலை உடைய
கள் மாறு நீட்ட நணி_நணி இருந்தகள்ளை ஒருவருக்கொருவர் மாறிமாறி நீட்ட, அருகருகே இருந்த
குறும் பல் குறும்பின் ததும்ப வைகிகுறுகிய பல அரண்களுக்குள் அக் கள்ளை நிரம்ப உண்டு தங்கியிருந்து
புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர்புளிப்புச் சுவையை விரும்பிய கள் செருக்கினால் சிவந்த கண்ணையுடைய ஆடவர்
தீம் புளி களாவொடு துடரி முனையின்இனிய புளிப்பையுடைய களாப்பழத்துடனே, துடரிப்பழத்தைத் தின்று, வெறுத்துப்போய்
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி                10மிதமாக அரித்து ஓடும் நீரையுடைய நல்ல காட்டு ஆற்றின் மணற்குன்றின் மேல் ஏறி
கரும் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும்கடிய நாவல் பழத்தைப் பறித்து இருந்து உண்ணும்
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டுபெரும் புகழ் ஆதியின் பின்னிக்கிடக்கும் செடிகொடிகளைக் கொண்ட காட்டை உடைய குடநாட்டில்
எயினர் தந்த எய்ம்_மான் எறி தசைபாலை மறவர் தந்த முள்ளம்பன்றியின் வெட்டப்பட்ட தசையின்
பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலைகுழைவான கொழுப்பு நிறைந்த சூடான வெண் சோற்று உருண்டையை
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய                15வருவார்க்கெல்லாம் அளவின்றி அள்ளிக் கொட்ட
இரும் பனம் குடையின் மிசையும்பெரிய பனையோலையால் செய்த குடையில் வாங்கி உண்ணும்
பெரும் புலர் வைகறை சீர் சாலாதேபெரிதாகப் புலர்ந்த விடியற்காலையின் சிறப்புக்கு ஒப்பிடமுடியாதது. 
  
# 178 ஆவூர் மூலங்கிழார்# 178 ஆவூர் மூலங்கிழார்
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை முனிந்துகட்டிப்போட்டிருக்கும் கம்பத்தை வெறுத்து நெடுமூச்சு விடும் யானையோடு, இலாயத்தை வெறுத்து
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண்காற்றுப்போல் இயங்கும் குதிரை ஆரவாரிக்கும் இடத்தில்
மணல் மலி முற்றம் புக்க சான்றோர்இடுமணல் நிறைத்த முற்றத்தில் புகுந்த சான்றோர் முன்னிலையில்
உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்_உற்றுஉண்ணவில்லையென்றாலும், தன் பெயரில் சபதம் செய்து
உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன்          5உண்ணுங்கள் என்று எங்களை இரந்துவேண்டும் பெரும் புகழையுடைய சாத்தன்
ஈண்டோர் இன் சாயலனே வேண்டார்எம்மைப் போன்றவரிடம் இனிய பண்பினையுடையவன், பகைவர்
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின்எறிகின்ற படைக்கலங்கள் ஒன்றோடொன்று தம்முள் கலந்து வரும் அச்சம் தரும் போரில்
கள் உடை கலத்தர் உள்ளூர் கூறியகள்ளுச்சட்டியைக் கையினில் பிடித்துக்கொண்டு, உள்ளூரில் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்வீரமொழிகளைப் போரின்போது மறந்த சிறியவரான பெரியவர்கள்
அஞ்சி நீங்கும்_காலை                             10பயந்து பின்வாங்கும்போது
ஏமம் ஆக தான் முந்துறுமேஅவர்க்கு அரணாகத் தான் முன்னே நிற்பான்
  
# 179 வடநெடுந்தத்தனார் வடம நெடுந்தத்தனார் வடம நெடுந் தச்சனார்# 179 வடநெடுந்தத்தனார் வடம நெடுந்தத்தனார் வடம நெடுந் தச்சனார்
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து எனஉலகத்தின் மேல் வள்ளல்தன்மையுடையவர்கள் இறந்துபோக
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டைஎதையுமே ஏற்கமுடியாமல் கவிழ்த்துவைத்த என் பிச்சைப் பாத்திரத்தை
மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர்நிமிர்த்துவோர் யார் என்று கேட்டதால், தன்னுடன் பகைமைகொண்டோரின்
விசி பிணி முரசமொடு மண் பல தந்தநன்கு இழுத்துக் கட்டப்பட்ட முரசத்துடன், பல நாடுகளை வெற்றிகொண்ட
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன்             5திருமகள் விரும்பும் நுணுக்கமான வேலைத்திறன் கொண்ட ஆபரணங்களை அணிந்த பாண்டியனின் வீரன்
படை வேண்டு_வழி வாள் உதவியும்மன்னனுக்குப் படை வேண்டிய பொழுது வாட்படைவீரரைக் கொடுத்து உதவியும்,
வினை வேண்டு_வழி அறிவு உதவியும்செயல் வேண்டிய பொழுது ஆலோசனை வழங்கி உதவியும்
வேண்டுப_வேண்டுப வேந்தன் தேஎத்துஇவ்வாறு வேண்டிய பலவற்றையும் அரசனுக்கு உதவி,
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துதான் தாங்கும் நுகம் ஒருபக்கம் சாயாமல் செல்லும் காளை போல ஆண்மை பொருந்திய ஊக்கத்தையும்
தோலா நல் இசை நாலை_கிழவன்                10தோற்றுப்போகாத நல்ல புகழையும் உடைய நாலை கிழவன்
பருந்து பசி தீர்க்கும் நல் போர்பருந்தினது பசியைப்போக்கும் நல்ல போரைச் செய்யும்
திருந்து வேல் நாகன் கூறினர் பலரேதிருத்தமான வேலையுடைய நாகன் என்று பலரும் கூறினர்.
  
# 180 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார்# 180 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார்
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனேதினந்தோறும் கொடுக்கும் செல்வம் உடையவன் அல்லன்,
இல் என மறுக்கும் சிறுமையும் இலனேஇல்லை என வருவோர்க்கு இல்லை என மறுக்கும் இழிவு உடையவனும் அல்லன்,
இறை உறு விழுமம் தாங்கி அமர்_அகத்துஅரசனுக்கு ஏற்பட்ட துயரத்தைத் தாங்கி, போர்க்களத்தில்
இரும்பு சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்துபடைக்கலங்கள் பட்டதால் உண்டான விழுப்புண்ணின் வலியை நீக்கி
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி           5மருந்துக்காக வெட்டப்பட்ட மரத்தைப் போல வாளால் ஏற்பட்ட வடுக்கள் ஒன்றோடொன்று கலந்து
வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்துபழிகூறப்படாத அழகுபெற்ற உடம்பையுடையவன், இரவலர்க்குக் கொடுப்பதை எதிர்பார்த்து இருப்பவன்
ஈர்ந்தையோனே பாண் பசி பகைஞன்ஈர்ந்தூர் என்னும் ஊரினன், பாணரின் பசிக்குப் பகையானவன், அவனிடம்
இன்மை தீர வேண்டின் எம்மொடுஉன் வறுமையை நீக்க விரும்பினால் எம்முடன்
நீயும் வம்மோ முது வாய் இரவலநீயும் வருவாயாக முதுமை வாய்க்கப்பெற்ற இரவலனே!
யாம் தன் இரக்கும்_காலை தான் எம்         10நாம் அவனை இரந்து வேண்டும்பொழுது, அவன் எம்முடைய
உண்ணா மருங்குல் காட்டி தன் ஊர்உண்ணாத வயிற்றைச் சுட்டிக்காட்டி, தன் ஊரிலிருக்கும்
கரும் கை கொல்லனை இரக்கும்வலிமையான கையையுடைய கொல்லனிடம் வேண்டுவான்,
திருந்து இலை நெடு வேல் வடித்திசின் எனவே”சிறந்த இலைவடிவில் அமைந்த நெடிய வேலைக் கூர்மையாக்கித்தா” என்று 
  
  
  
  
  
  
# 181 சோணாட்டு முகையலூர் சிறுகரும் தும்பியார்# 181 சோணாட்டு முகையலூர் சிறுகரும் தும்பியார்
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்ஊர்ப்பொதுவில் நின்ற விளாமரத்தின் பழம் வீட்டில் விழ, அதனைக்
கரும் கண் எயிற்றி காதல் மகனொடுகரிய கண்ணையுடைய மறத்தியின் காதல் மகனுடன்
கான இரும் பிடி கன்று தலைக்கொள்ளும்காட்டிலுள்ள கரிய பெண்யானையின் கன்றும் வந்து எடுக்கும்
பெரும் குறும்பு உடுத்த வன்_புல இருக்கைபெரிய அரண் சூழ்ந்த வலிய நிலத்தில் இருப்பிடத்தைக் கொண்ட
புலாஅல் அம்பின் போர் அரும் கடி மிளை             5புலால் நாறும் அம்பையும் போரிடுவதற்கு அரிய காவல்காட்டினையுமுடைய
வலாஅரோனே வாய் வாள் பண்ணன்வலார் என்னும் ஊரில் உள்ளவன் குறிதப்பாத வாளினை உடைய பண்ணன்;
உண்ணா வறும் கடும்பு உய்தல் வேண்டின்உனது உண்ணாத வறுமையிலுள்ள சுற்றம் உண்டு பிழைக்க விரும்பினால்
இன்னே செல்-மதி நீயே சென்று அவன்இப்போதே நீ செல்வாயாக, சென்று அவன்
பகை புலம் படரா அளவை நின்பகைநாட்டுக்குச் செல்லும் முன்னர் உன்
பசி பகை பரிசில் காட்டினை கொளற்கே                10வறுமையைக் காட்டி, உன் பசிக்குப் பகையாகிய பரிசிலைப் பெற்றுக்கொள்வாயாக.
  
# 182 கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி# 182 கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
உண்டால் அம்ம இ உலகம் இந்திரர்இந்த உலகம் நிலைத்து இருக்கிறது, இந்திரர்க்கு உரிய
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனஅமிழ்தம் தமக்குக் கிட்டியது எனினும், அதனை இனிது என்று கொண்டு
தமியர் உண்டலும் இலரே முனிவு இலர்தனித்து உண்பவரும் இல்லை, யாரோடும் வெறுப்புக் கொண்டிருப்பவர் இல்லை,
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிசோம்பல் உடைவரும் இல்லை, பிறர் அஞ்சுகின்ற துன்பத்திற்குத் தாமும் அஞ்சுவர்,
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்புகழ் கிடைக்கும் என்றால் உயிரையும் கொடுப்பார், பழி வரும் என்றால்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர்அதனால் உலகம் முழுவதையும் பெற்றாலும் ஏற்கமாட்டார், சோர்வடையமாட்டார்,
அன்ன மாட்சி அனையர் ஆகிஅத்தகைய சிறப்புகளை உடையவர்கள் ஆகி
தமக்கு என முயலா நோன் தாள்எதையும் தமக்கு என முயலாத வலிய முயற்சியால்
பிறர்க்கு என முயலுநர் உண்மையானேபிறர்க்காக முயல்பவர்கள் இருப்பதால் – (இந்த உலகம் நிலைத்து இருக்கிறது)
  
# 183 ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன்# 183 ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன்
உற்று_உழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்ஆசிரியர் இடர்ப்பாடு உற்றபோது உதவியும். அவருக்குத் தேவையான பொருள் கொடுத்தும்,
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றேபின் நின்று கற்கும் முறைமையையும் வெறுக்காமல் கற்றல் நல்லது;
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும்பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்கல்வியின் சிறப்பால் தாயும் மனம் வேறுபடும்;
ஒரு குடி பிறந்த பல்லோருள்ளும்                   5ஒரு குடும்பத்தில் பிறந்த பலருக்குள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்மூத்தவன் வருக என்று அழைக்காமல், அவர்களுக்குள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்அறிவுடையோன் கூறும் ஆலோசனை வழியே அரசும் நடக்கும்,
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்வேறுபாடு தெரியப்பட்ட நான்கு பிரிவினுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்கீழ்ப்பிரிவைச் சார்ந்த ஒருவன் கற்றால்
மேல்_பால் ஒருவனும் அவன் கண் படுமே               10மேல் பிரிவைச் சார்ந்த ஒருவனும் அவனிடம் கீழ்ப்படுவான்.
  
# 184 பிசிராந்தையார்# 184 பிசிராந்தையார்
காய் நெல் அறுத்து கவளம் கொளினேநன்கு விளைந்த நெல்லை அறுத்துக் கவளமாக யானைக்குக் கொடுத்தால்
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும்ஒரு மாவிற்கும் குறைந்த நிலத்தில் விளைந்தது, பல நாள்களுக்கு வரும்;
நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினேநூறு செய் நிலம் என்றாலும், யானை தனியே புகுந்து உண்டால்
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்அதன் வாய்க்குள் புகுவதைக் காட்டிலும், காலே மிதித்துப் பெரிதும் அழித்துவிடும்;
அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே   5அறிவுடைய வேந்தன் முறை அறிந்து இறை கொண்டால்
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்கோடிப்பொருளை உற்பத்திசெய்து நாடு மிகவும் வளம்பெறும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்அரசன் அறிவுச்சிறுமையன் ஆகி நாள்தோறும்
வரிசை அறியா கல்லென் சுற்றமொடுதரம் அறியாத ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்மக்களின் அன்பு கெடும்படியாகத் திரட்டும் பெரும் பொருளை விரும்பினால்
யானை புக்க புலம் போல                    10யானை புகுந்த வயல் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமேதானும் பயனடையான், அவன் நாடும் கெட்டுப்போகும்.
  
# 185 தொண்டைமான் இளந்திரையன்# 185 தொண்டைமான் இளந்திரையன்
கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்சக்கரங்களை வண்டியின் நெடுஞ்சட்டத்துடன் முறையாக இணைத்து, நிலத்தில் செலுத்தப்படும்
காவல் சாகாடு உகைப்போன் மாணின்பாதுகாப்பான வண்டி, அதனைச் செலுத்துவோன் வல்லவனாக இருந்தால்
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமேஇடர்ப்பாடு இல்லாமல் தன் வழியில் இனிதாகச் செல்லும்;
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்வண்டியைச் செலுத்துவதில் தெளிவில்லாதவனாக இருந்தால் நாள்தோறும்
பகை கூழ் அள்ளல் பட்டு                   5பகையாகிய செறிந்த சேற்றில் அழுந்தி
மிக பல் தீ நோய் தலைத்தலை தருமேமிகப் பல தீய துன்பத்தை மேன்மேலும் உண்டாக்கும்.
  
# 186 மோசிகீரனார்# 186 மோசிகீரனார்
நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றேநெல்லும் உயிர் அன்று, நீரும் உயிர் அன்று,
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்மன்னனையே உயிராக உடையது இந்தப் பரந்த இடத்தையுடைய உலகம்,
அதனால் யான் உயிர் என்பது அறிகைஅதனால், நாம்தான் நாட்டுமக்களுக்கு உயிரானவன் என்பதனை அறிந்திருத்தல்
வேல் மிகு தானை வேந்தற்கு கடனேவேல்கள் மிகுந்த படையையுடைய வேந்தனுக்குக் கடமையாகும்.
  
# 187 ஔவையார்# 187 ஔவையார்
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோஒன்றில் நாடாக இருக்கிறாய், ஒன்றில் காடாக இருக்கிறாய்,
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோஒன்றில் பள்ளமாக இருக்கிறாய், ஒன்றில் மேடாக இருக்கிறாய்,
எ வழி நல்லவர் ஆடவர்எந்த இடத்தில் நல்லவராக ஆடவர் இருக்கிறார்களோ
அ வழி நல்லை வாழிய நிலனேஅந்த இடத்தில் நீயும் நல்லதாக இருக்கிறாய், வாழ்க நிலமே!
  
# 188 பாண்டியன் அறிவுடை நம்பி# 188 பாண்டியன் அறிவுடை நம்பி
படைப்பு பல படைத்து பலரோடு உண்ணும்பெறக்கூடிய செல்வம் பலவற்றையும் பெற்றுப் பலருடன் உடனிருந்து உண்ணும்
உடை பெரும் செல்வர் ஆயினும் இடை படஉடைமை மிக்க செல்வராக இருந்தாலும், சிறிதளவு கால இடைவெளியுடன்
குறுகுறு நடந்து சிறு கை நீட்டிசிறு சிறு எட்டுகளாக எடுத்துவைத்து, சின்னக் கையை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்            5வட்டில் உணவைத் தரையில் சிந்தியும், கூடவே பிசைந்தும், வாயில் கவ்வியும், கையால் துழாவியும்
நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும்நெய்யையுடைய சோற்றை உடம்பில் படுமாறு சிதறியும்,
மயக்கு_உறு மக்களை இல்லோர்க்குஅறிவை இன்பத்தால் மயக்குகின்ற புதல்வரை இல்லாதவர்க்குத்
பய குறை இல்லை தாம் வாழும் நாளேதம் வாழ்நாளின் பயன் என்பதில் குறைபாடு இல்லை.
  
# 189 மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்# 189 மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றிதெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் மற்ற வேந்தர்க்கும் பொதுவானது என்பதில்லாமல்
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்தனது வெண்கொற்றக்குடையின் கீழ் ஆட்சிசெய்யும் ஒருவர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்நடுச்சாமத்திலும், பகலிலும் உறங்காதவனாக
கடு_மா பார்க்கும் கல்லா ஒருவற்கும்விரைந்தோடும் விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வியில்லாத ஒருவனுக்கும்,
உண்பது நாழி உடுப்பவை இரண்டே             5உண்பது நாழி அளவு, உடுப்பவை அரை ஆடை, மேலாடை என இரண்டே,
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மேமற்றவையும் எல்லாம் ஒன்றுபோலத்தான்,
செல்வத்து பயனே ஈதல்செல்வத்தால் பெறும் பயன் கொடுத்தல்,
துய்ப்பேம் எனினே தப்புந பலவேசெல்வத்தை நாமே அநுபவிப்போம் என்றால் அவர் இழக்கப்போவது மிகுதியாக இருக்கும்.
  
# 190 சோழன் நல்லுருத்திரன்# 190 சோழன் நல்லுருத்திரன்
விளை_பத சீறிடம் நோக்கி வளை கதிர்விளைந்து முற்றிய பதத்தில் உள்ள சிறிய நிலத்திலிருந்து வளைந்த கதிராகிய
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்உணவைக் கொண்டுவந்து தன்னுடைய வளையில் நிறையச் சேமித்துவைக்கும்
எலி முயன்று அனையர் ஆகி உள்ள தம்எலியைப் போன்ற சிறிய முயற்சியராகி, தம்மிடம் உள்ள
வளன் வலி_உறுக்கும் உளம் இலாளரோடுசெல்வத்தை நுகராது இறுகப்பிடிக்கும் ஊக்கமற்றவரோடு
இயைந்த கேண்மை இல் ஆகியரோ                5ஏற்படும் நட்பு எனக்கு இல்லாமல் போகட்டும்;
கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து எனகொடூரமான காட்டுப்பன்றியை அடித்து, அது இடப்பக்கம் விழுந்ததென்றால்
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள்அன்றைக்கு அவ்விடத்தில் அதனை உண்ணாமலிருந்து, பின்னொருநாள்
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்துபெரிய மலையின் குகையினின்றும் கிளம்பி, உணவை விரும்பி எழுந்து
இரும் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்பெரிய களிறாகிய ஒற்றை யானையை நல்ல வலப்பக்கம் விழுமாறு கொல்லும்
புலி பசித்து அன்ன மெலிவு இல் உள்ளத்து           10புலிக்குப் பசித்ததைப் போல தளர்ச்சி இல்லாத உள்ளத்து
உரன் உடையாளர் கேண்மையொடுவலிமையுடையோரின் நட்போடு
இயைந்த வைகல் உள ஆகியரோகூடி வாழும் நாட்கள் நமக்கு உண்டாவதாக.
  
  
  
  
  
  
# 191 பிசிராந்தையர்# 191 பிசிராந்தையர்
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்உமக்கு வயது பல ஆண்டுகள் ஆகியிருக்க நரை இல்லாமல் இருப்பது
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்எப்படி ஆகியது என்று கேட்பீர்கள் என்றால்,
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்மேன்மையான குணங்களையுடைய என் மனைவியோடு மக்கள்மாரும் அறிவு நிரம்பியவர்கள்,
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்நான் எதைச் செய்ய நினைக்கிறேனோ அதனையே செய்கிறார்கள் என் ஏவலாளர், வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்_தலை               5தவறானவற்றைச் செய்யாமல் மக்களைக் காப்பான், அதற்கு மேலும்
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைநல்ல குணங்களால் நிறைந்து, பணியவேண்டியவரிடம் பணிந்து, புலனடக்கமுள்ள கொள்கையையுடைய
சான்றோர் பலர் யான் வாழும் ஊரேசான்றோர் பலர் இருக்கின்றனர் நான் வாழும் ஊரில்.
  
# 192 கணியன் பூங்குன்றன்# 192 கணியன் பூங்குன்றன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்எல்லா ஊரும் நம் ஊரே, எல்லா மக்களும் நம் உறவினரே!
தீதும் நன்றும் பிறர் தர வாராகேடும் ஆக்கமும் பிறர் தருவதால் வருவதில்லை,
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்னவருந்துவதும், அது தீர்தலும் அவற்றைப் போன்றனவே,
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்இறப்பு என்பது புதியது அன்று, வாழ்க்கை
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்   5இனியது என்று மகிழ்ந்ததில்லை, வெறுத்தபோது
இன்னாது என்றலும் இலமே மின்னொடுஇனிமையற்றது என்று சொன்னதும் இல்லை, மின்னலுடனே
வானம் தண் துளி தலைஇ ஆனாதுமழை குளிர்ந்த துளிகளைப் பெய்தலால், பெருக்கெடுத்து
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்றுபாறைகளை மோதிக்கொண்டு ஆரவாரிக்கும் மிகுந்து செல்லும் பெரிய ஆற்றின்
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர்நீரின் வழியே போகும் மிதவையைப் போல, பெறுவதற்கரிய இந்த உயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்         10விதிவழியே போகும் என்பது அறிவுடையோர் கூறிய
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்நூலால் தெளிந்தோம்; எனவே, நன்மையால் மிக்க
பெரியோரை வியத்தலும் இலமேபெரியோரை வியந்து போற்றுதல் செய்யோம்,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமேசிறியோரை இகழ்தல் அதனைக்காட்டிலும் செய்யோம்.
  
# 193 ஓரேருழவர்# 193 ஓரேருழவர்
அதள் எறிந்து அன்ன நெடு வெண் களரின்தோலை உரித்து அதனை மேல்கீழாய்த் திருப்பிப்போட்டதைப் போன்ற பரந்த வெளிறிய உவர்மண் நிலத்தில்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போலஒருவன் விரட்டுகின்ற மானைப் போல
ஓடி உய்தலும் கூடும்-மன்ஓடித் தப்பிவிடுதலும் கூடும்
ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலேசுற்றத்தோடு கூடி வாழும் இல்வாழ்க்கை தப்பவிடாமல் காலைத் தடுக்கும்.
  
# 194# 194 பக்குடுக்கை நன்கணியார்
ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்ஒரு வீட்டில் இழவுக்கொட்டு கொட்ட, ஒரு வீட்டில்
ஈர்ம் தண் முழவின் பாணி ததும்பமிகக் குளிர்ந்த மணமுழவின் ஓசை பெரிதாக ஒலிக்க,
புணர்ந்தோர் பூ அணி அணிய பிரிந்தோர்கணவருடன் சேர்ந்திருப்போர் பூக்களையும், அணிகலன்களையும் அணிந்திருக்க, அவரைப் பிரிந்திருப்போரின்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்பவருத்தம் மிக்க கரிய கண்கள் கண்ணீர் ஒழுகிச் சிந்த,
படைத்தோன் மன்ற அ பண்பிலாளன்             5படைத்திருக்கிறான் அந்தப் பண்பு இல்லாத கடவுள்,
இன்னாது அம்ம இ உலகம்கொடுமையானது இந்த உலகத்தின் இயற்கை,
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரேஎனவே இனியதைக் காண்க, இதன் இயல்பினை உணர்ந்தவர்கள்.
  
# 195 நரிவெரூஉ தலையார்# 195 நரிவெரூஉ தலையார்
பல் சான்றீரே பல் சான்றீரேபலராய்க் கூடியிருக்கும் சான்றோர்களே! பலராய்க் கூடியிருக்கும் சான்றோர்களே! 
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்மீனின் முள் போன்ற முதிர்ந்த நரையையும், சுருக்கம் விழுந்த கன்னங்களையும்
பயன் இல் மூப்பின் பல் சான்றீரேயாருக்கும் பயனில்லாமற் போன மூப்பையும் கொண்ட சான்றோர்களே!
கணிச்சி கூர்ம் படை கடும் திறல் ஒருவன்மழு என்ற கூரிய ஆயுதத்தையும், கடுமையான வலிமையையும் உடைய கூற்றுவன்
பிணிக்கும்_காலை இரங்குவிர் மாதோ         5உம்மைப் பாசக்கயிற்றினால் கட்டிக்கொண்டுபோகும்போது வருந்துவீர்கள்,
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்உங்களால் நல்லதைச் செய்ய முடியாவிட்டாலும்
அல்லது செய்தல் ஓம்பு-மின் அது தான்நல்லவை அல்லாததைச் செய்வதைத் தவிருங்கள், அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்எல்லாரும் விரும்புவது, அன்றியும்
நல் ஆற்று படூஉம் நெறியும் ஆர் அதுவேநல்ல வழியில் செலுத்தும் பண்பும் அதுதான்.
  
# 196 ஆவூர் மூலங்கிழார்# 196 ஆவூர் மூலங்கிழார்
ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்தம்மால் கொடுக்க இயலும் பொருளை இயலும் என்று சொல்லிக் கொடுத்தலும், எவருக்குமே
ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும்தம்மால் கொடுக்க இயலாத பொருளை இல்லை என்று சொல்லி மறுத்தலுமாகிய இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மை_பாலேமுயற்சியின்பாற்பட்ட நட்பின் கூறுகளாகும்,
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவதுதம்மால் இயலாததை இயலும் என்று சொல்வதும், இயலுவதை
இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே                5இல்லை என்று மறுத்தலும் ஆகிய இரண்டும் வேகமாக
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்இரந்துவருவோரை வருத்தப்படுத்துவதுமட்டுமன்றி, கொடுப்போரின்
புகழ் குறைப்படூஉம் வாயில் அத்தைபுகழைக் குறைப்படுத்தும் வழியுமாகும்,
அனைத்து ஆகியர் இனி இதுவே எனைத்தும்இப்போது நிகழ்ந்தது அது போன்றது, எள்ளளவுகூட
சேய்த்து காணாது கண்டனம் அதனால்நெடுநாள் காணாமல் இப்போது பார்க்கிறோம், அதனால்,
நோய் இலர் ஆக நின் புதல்வர் யானும்               10நோயில்லாமல் வாழ்வாராக உன் மக்கள், நானும்
வெயில் என முனியேன் பனி என மடியேன்வெயிலடிக்கிறதே என்று வெளியில் செல்ல வெறுத்ததில்லை, குளிருகிறதே என்று சோம்பியிருந்ததில்லை
கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறைபாறையைக் குடைந்தது போன்ற, காற்றுக்கு மறைவிடமாகிய வறுமையுள்ள என் வீட்டில்
நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல்நாணம் ஒன்றைத்தவிர வேறு ஒன்றை அணியாத கற்பினையும், பளிச்சென்ற நெற்றியையும்,
மெல் இயல் குறு_மகள் உள்ளிமென்மையான இயல்பினையும் உடைய என் மனைவியை நினைத்துச்
செல்வல் அத்தை சிறக்க நின் நாளே          15செல்கிறேன், உன் ஆயுள் பெருகட்டும்.
  
# 197 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்# 197 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
வளி நடந்து அன்ன வா செலல் இவுளியொடுகாற்று இயங்குவதைப் போல தாவிச் செல்லும் குதிரைகளோடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅகொடி அசையும் உச்சியையுடைய தேரினை உடையவர் என்றும்,
கடல் கண்டு அன்ன ஒண் படை தானையொடுகடலைக் கண்டது போன்ற ஒளியுடைய படைக்கருவிகளைக் கொண்ட படைவீரரோடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅமலையை எதிர்த்து மோத வல்ல களிற்றினையுடையவர் என்றும்,
உரும் உரற்று அன்ன உட்குவரு முரசமொடு             5இடி முழங்கினாற் போன்ற அச்சந்தரும் முரசமோடு
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅபோரில் மேம்பட்ட வெற்றியாளர் என்றும்,
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர்நிலம் முழுதும் படையினையுடைய சிறந்த அணிகலன் அணிந்த அரசரின்
வெண்குடை செல்வம் வியத்தலோ இலமேஆட்சியின் கீழுள்ள செல்வத்தை ஒருபொருட்டாக எண்ணியது இல்லை;
எம்மால் வியக்கப்படூஉமோரேஎம்மால் மதிக்கப்படுவோர்
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த             10முள்வேலி அடைத்த தோட்டத்தில் ஆட்டுக்குட்டி மேய்ந்து மிஞ்சிய
குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகுகுறிய, மணமுடைய முஞ்ஞையின் செழுமையான கண்ணில் கிளைத்த சிறிய இலையை
புன்_புல வரகின் சொன்றியொடு பெறூஉம்முல்லை நிலத்தில் விளையும் வரகுச் சோற்றுடன் பெறுகின்ற
சீறூர் மன்னர் ஆயினும் எம்_வயின்சிறிய ஊர்க்குரிய மன்னன் என்றாலும், எம்மிடம்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினோரேமுறைமை அறிந்து நடக்கும் குணத்தையுடையவரே;
மிக பேர் எவ்வம் உறினும் எனைத்தும்               15மிகப் பெரிய துன்பத்தை அடைந்தாலும் கொஞ்சங்கூட
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்நல்ல உள்ளம் இல்லாதவரின் செல்வத்தை விரும்பமாட்டோம்;
நல் அறிவு உடையோர் நல்குரவுநல்ல அறிவாளரின் வறுமையை
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதேநாங்கள் மிகவும் பெரிதாக விரும்பி அதனையே நினைப்போம், பெருமானே 
  
# 198 வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்# 198 வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்
அருவி தாழ்ந்த பெரு வரை போலஅருவி கீழே விழும் பெரிய மலையைப் போன்ற
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டாமுத்தாரத்தோடு பொலிந்த உன் மார்பினில், ஆசை குறையாத
கடவுள் சான்ற கற்பின் சே இழைதெய்வத்தன்மை அமைந்த கற்பினையும், சிவந்த ஆபரணத்தையும் உடைய
மடவோள் பயந்த மணி மருள் அம் வாய்உன்னுடைய மனைவி பெற்றுத் தந்த பவழ மணி போன்ற அழகிய வாயினையும்
கிண்கிணி புதல்வர் பொலிக என்று ஏத்தி             5கிண்கிணியையுமுடைய உன் புதல்வர் பொலிவு பெறுக என்று வாழ்த்தி
திண் தேர் அண்ணல் நின் பாராட்டிதிண்ணிய தேரையுடைய அண்ணலே! உன்னைப் புகழ்ந்து,
காதல் பெறாமையின் கனவினும் அரற்றும் என்உன் மேல் அன்பு பெரிதாகையால் கனவிலும் உன் புகழையே கூறும்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்பஎன் ஆசை மிகுந்த நெஞ்சம் இன்புற்று மகிழ,
ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம்ஆலிலையில் இருந்த திருமால் போன்ற உன்னுடைய செல்வத்தையெல்லாம்
வேல் கெழு குருசில் கண்டேன் ஆதலின்               10வேலையுடைய தலைவனே! நான் கண்டேன், எனவே
விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்தவிடைபெறுகிறேன், வாழ்க உன் தலைமாலை, தொடர்ச்சியான
தண் தமிழ் வரைப்பு_அகம் கொண்டி ஆககுளிர்ந்த தமிழ்நாட்டு எல்லை முழுவதையும் கொள்ளைப்பொருளாகக் கொண்டு
பணிந்து கூட்டுண்ணும் தணிப்பு அரும் கடும் திறல்உன் பகைவர் பணிய, அவர் பொருளையும் சேர்த்து உண்ணும் தணிக்க முடியாத மிக்க வலிமையுடைய
நின் ஓர் அன்ன நின் புதல்வர் என்றும்உன்னைப் போன்ற உன் புதல்வர்கள் எப்போதும்
ஒன்னார் வாட அரும் கலம் தந்து நும்               15பகைவர் வாட, பெறுவதற்கு அரிய அணிகலன்களைத் தந்து உன்னுடைய
பொன் உடை நெடு நகர் நிறைய வைத்த நின்பொன்னை உடைய பெரிய அரண்மனையில் நிரம்ப வைத்த உன்னுடைய
முன்னோர் போல்க இவர் பெரும் கண்ணோட்டம்முன்னோர்களைப் போல் இருப்பதாக அவர்களின் பெரிய கருணை உள்ளம்,
யாண்டும் நாளும் பெருகி ஈண்டு திரைஎல்லா இடங்களிலும், ஒவ்வொரு நாளும் மிகுந்து, செறிந்த அலைகளைக் கொண்ட
பெரும் கடல் நீரினும் அ கடல் மணலினும்பெரிய கடல் நீரைக் காட்டிலும், அந்தக் கடல் கொழிக்கும் மணலைக் காட்டிலும்
நீண்டு உயர் வானத்து உறையினும் நன்றும்           20நீண்டு உயர்ந்த வானத்திலிருந்து விழும் மழைத் துளிகளைக் காட்டிலும் மிகுதியாக
இவர் பெறும் புதல்வர் காண்-தொறும் நீயும்உன் மைந்தர் பெறும் மக்களைக் காணும்போதெல்லாம், நீயும்
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கிவிரும்பிய செல்வத்துடனே புகழும் இனிதே விளங்க
நீடு வாழிய நெடுந்தகை யானும்நெடுங்காலம் வாழ்வாயாக நெடுந்தகையே! நானும்
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும்உறவினரே இல்லாத தொலைதூர நாட்டில் நாள்தோறும்
துளி நசை புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி நின்  25மழைத்துளியை விரும்பும் வானம்பாடியைப் போல உன் கொடை மேல் ஆசையால் வருந்தி, உன்
அடி நிழல் பழகிய அடியுறைஅடி நிழலில் வாழ்ந்து பழகிய அடியேனாகவே வாழ்வேன்,
கடு மான் மாற மறவாதீமேவிரைந்து ஓடும் குதிரையையுடைய மாறனே! நீ செய்த செயலை மறவாதிருப்பாயாக!
  
# 199 பெரும்பதுமனார்# 199 பெரும்பதுமனார்
கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம்தெய்வம் உறையும் ஆலமரத்தின் பெரிய கிளைகளில் பழுத்த மிகுதியான பழத்தை
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்நேற்று உண்டோம் என்று கருதாமல், பின்பும்
செலவு ஆனாவே கலி கொள் புள்_இனம்அங்குச் செல்வதைக் குறைப்பதில்லை, ஆரவாரிக்கும் பறவைக்கூட்டம்,
அனையர் வாழியோ இரவலர் அவரைஅதனைப் போன்றவர் இரப்போர், அவர்களை
புரவு எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர்           5எதிர்கொண்டு காக்கும் மேலான செயலைச் செய்யும் பெருமக்களின்
உடைமை ஆகும் அவர் உடைமைசெல்வம் அந்த இரப்போரின் செல்வம் ஆகும், 
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையேஅந்தப் பெருமக்களின் வறுமை, அந்த இரப்போருடைய வறுமை ஆகும்.
  
# 200 கபிலர்# 200 கபிலர்
பனி வரை நிவந்த பாசிலை பலவின்குளிர்ந்த மலையில் உயர்ந்துநிற்கும் பசும் இலைகளையுடைய பலாமரத்தின்
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்பழத்தைக் கையில் பிடித்துக்கொண்டு உண்ட கரிய விரலையுடைய ஆண்குரங்கு
செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கிசிவந்த முகத்தையுடைய தனது பெண்குரங்குடனே அன்பாகச் சேர்ந்து, மலைமுகடுகளுடன் விளங்கி,
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்துமேகங்களும் உச்சியை அறியாத உயர்ந்த மலைப்பக்கத்தில்
கழை மிசை துஞ்சும் கல்_அக வெற்ப          5மூங்கில் உச்சியில் தூங்கும் மலைநாட்டு வேந்தனே!
நிணம் தின்று செருக்கிய நெருப்பு தலை நெடு வேல்கொழுப்பைச் சுவைத்து மகிழ்ந்த குருதிதோய்ந்ததினால் நெருப்புப்போன்ற தலையுடைய நீண்ட வேலையும்
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானைகளத்தையே தன்வசப்படுத்திக்கொண்டு சீறும் கொடுமை நிறைந்த யானையையும்,
விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவேஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட வளைந்த ஆபரணங்களையும் உடைய விச்சிக்கோவே!
இவரே பூ தலை அறாஅ புனை கொடி முல்லைஇவர்கள், பூக்கள் தன் தலையில் எப்போதும் அலங்கரிக்கும் கொடி முல்லையானது
நா தழும்பு இருப்ப பாடாது ஆயினும்                10தன் நா தழும்பு உண்டாகுமாறு பாடாது என்றாலும்
கறங்கு மணி நெடும் தேர் கொள்க என கொடுத்தஒலிக்கின்ற மணிகளையுடைய நெடிய தேரைக் கொள்க என அந்த முல்லைக்குக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி_மகளிர்பரந்து மேம்பட்டு விளங்கும் சிறப்பினையுடைய பாரியின் மகளிர்,
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயேநானோ, பரிசிலன், அத்துடன் நிலைபெற்ற அந்தணன், நீயோ,
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்போரிடும் முறையில் போரிட்டுப் பகைவரை வணங்கச்செய்யும் வாளால் மேம்பட்டவன்,
நினக்கு யான் கொடுப்ப கொண்-மதி சின போர்  15உனக்கு நான் கொடுப்ப இவர்களை ஏற்றுக்கொள், சினத்தையுடைய போரில்
அடங்கா மன்னரை அடக்கும்அடங்காத மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயேகுறையாத விளைச்சலையுடைய நாட்டிற்கு உரியவனே!