பரிபாடல் 22-24

  
# 21 செவ்வேள் – பாடியவர் : நல்லச்சுதனார்# 21 செவ்வேள்
பண் அமைத்தவர் : கண்ணாகனார்- பண் : காந்தாரம் 
  
ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னிநீ ஊர்ந்த ஊர்தி, நெருப்பைப்போன்ற நெற்றிப்பட்டம் இடையே கிடந்து ஒளிரும் நெற்றியையுடைய
பொரு சமம் கடந்த புகழ் சால் வேழம்போரிடும் போர்களிலெல்லாம் வெற்றிகண்ட புகழ் நிறைந்த யானை;
தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரைநீ அணிந்துகொண்டது, தைப்பதற்காக அமைந்த தோலினால், உன் திருவடிக்குப் பொருந்திய தாமரை மலர் போன்று செய்யப்பட்டது;
துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்தியசெம்பவளம் போன்ற துவர்நீர்த் துறையில் முழுதும் மறையும்படி அழுத்திப் பதனிடப்பட்டது;
வெரிந தோலொடு முழு மயிர் மிடைந்தஅதன் முதுகுப்பக்கத் தோலோடு முழுதும் மயிர் செறிந்திருக்கும்;
வரி மலி அர உரி வள்பு கண்டு அன்னவரிகள் மிக்க பாம்பின் தோலைக் கீறி எடுத்த வார் போன்ற
புரி மென் பீலி போழ் புனை அடையல்விரும்புதற்குரிய மென்மையான மயிற்பீலிப் பிளவுகளை வைத்து அழகுசெய்யப்பட்டது அந்த அடையலாகிய செருப்பு;
கையதை கொள்ளா தெவ்வர் கொள் மா முதல் தடிந்துஉன் கையில் உள்ளது, உன்னை ஏற்றுக்கொள்ளாத பகைவர் தமக்குத் தலைவனாகக் கொண்ட சூரபன்மாவினை அடியோடு வீழ்த்தி,
புள்ளொடு பெயரிய பொருப்பு புடை திறந்த வேல்கிரவுஞ்சம் என்னும் பறவையின் பெயர்கொண்ட மலையினைப் பிளந்த வேல்;
பூண்டதை சுருள் உடை வள்ளி இடை இடுபு இழைத்தநீ அணிந்துகொண்டது, சுருளும்தன்மையுடைய வள்ளிப்பூவை இடையிடையே இட்டுத் தொடுத்த
உருள் இணர் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார்தேருருள் போன்ற பூங்கொத்துக்களையுடைய கடம்பின் பூவுடன் சேர்ந்து கமழ்கின்ற மாலை;
அமர்ந்ததை புரையோர் நாவில் புகழ் நலம் முற்றிநீ எழுந்தருளியிருப்பது, உயர்ந்தவரின் நாவினால் புகழப்படும் நன்மை நிறைந்து,
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலைநிரைபட ஏழு ஏழாக அடுக்கிய நீண்ட இலைகளையுடைய பாலைமரத்தினைக் கொண்ட
அரை வரை மேகலை அணி நீர் சூழிஇடைநிலமான அம்பாரியையும், அழகிய அருவி நீராகிய முகபடாத்தையும் (கொண்டு யானை போல் இருக்கும்)
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம்தரையிலிருந்து வானுற உயர்ந்த குளிர்ந்த திருப்பரங்குன்றம்;
குன்றத்து அடியுறை இயைக என பரவுதும்உன் திருப்பரங்குன்றத்தின் அடியிலே இருந்துவாழும் பேற்றினைத் தருக என்று வேண்டிநின்றோம்,
வென்றி கொடி அணி வெல்வ நின் தொழுதுவெற்றிக்கொடியால் அழகு பெற்ற செல்வனே! உன்னைத் தொழுது;
சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்பசுட்ட பொன்னால் செய்யப்பட்ட காற்சிலம்பின் முத்துப்பரல்கள் எங்கேயும் செல்லுமாறு மிக்கு ஒலிக்க,
துடியின் அடி பெயர்த்து தோள் அசைத்து தூக்கிஉடுக்கை ஒலிக்கேற்றவாறு தன் கால்களை எடுத்துவைத்து, தன் தோள்களை அசைத்துத் தூக்கி
அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின்சமைக்கப்பட்ட கள்ளை உண்டதனாலான களிப்பு தன்னைத் தடுக்க, ஆடுகின்ற விறலியின் அழகு காரணமாக,
நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடுநுனி ஒளிரும் வேலினைப்போன்ற சிவந்த பார்வையோடே,
துணை அணை கேள்வனை துனிப்பவள் நிலையும்தனக்குத் துணையாக அணைத்துக்கொண்டிருக்கும் தன் கணவனிடம் ஊடல்கொண்டவளின் நிலையும்,
நிழல்_காண்_மண்டிலம் நோக்கிதன் கைக்கண்ணாடியைப் பார்த்து,
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்தீயினை அணிந்துகொண்டது போன்ற ஒளிவிடும் தன் அணிகலன்களைத் திருத்திக்கொள்வாளின் மெய்ப்பாடும்,
பொதிர்த்த முலை இடை பூசி சந்தனம்பருத்தெழுந்த தன் முலையின்மேல் சந்தனத்தைப் பூசி, பின் காய்ந்துபோன அச் சந்தனத்தை
உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும்உதிர்த்துவிட்டு மேலும் நிறைய சந்தனத்தைப் பூசுபவளின் காம விருப்பமும்,
பல் ஊழ் இவை இவை நினைப்பின் வல்லோன்பலமுறை நிகழும் இவற்றையெல்லாம் நினைத்துப்பார்க்கும்போது, வரைவதில் வல்லவன்
ஓவத்து எழுது எழில் போலும் மாஎழுதிய ஓவியத்தின் அழகுக் காட்சியைப் போன்றிருக்கின்றன, சூரபன்மாவை
தடிந்திட்டோய் நின் குன்றின் மிசைஅழித்தவனே! உன் குன்றத்தின் மேல்;
மிசை படு சாந்தாற்றி போல எழிலிமேலே எடுத்துவைக்கப்பட்ட விசிறியைப் போல, மேகங்களின்
இசை படு பக்கம் இரு பாலும் கோலிமுழக்கம் எழுகின்ற திசையில் இரு சிறகுகளையும் விரித்துக்கொண்டு
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆடஒளிவிடும் புள்ளிகளைக் கொண்ட மயில் இடம்பெயர்ந்து ஒன்றாக ஆட,
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்பவிரலால் மூடியும் திறந்தும் குழலின் காற்றுவிடும் துளையினின்றும் எழும் இசையைப் போல
முரல் குரல் தும்பி அவிழ் மலர் ஊதஇசைபாடும் குரலையுடைய தும்பி கட்டவிழ்கின்ற மலரின் மீது பாடிக்கொண்டு பறக்க,
யாணர் வண்டு_இனம் யாழ் இசை பிறக்கபுதுமலரைத் தேரும் வண்டினங்கள் யாழிசையைப் பிறப்பிக்க,
பாணி முழவு இசை அருவி நீர் ததும்பதாளத்துடன் கூடிய முழவின் இசையாக அருவிநீர் முழங்க,
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்ஒன்றாகப் பலவிடங்களிலிருந்தும் பரவிய இசைகள் எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்றுமுழங்குகின்ற முரசினையுடைய முருகனின் குன்றத்தில்;
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து அவண்தாழ்ந்து விழும் நீர் முழங்குகின்ற சுனையின் நடுவே மூழ்கிக் குளித்து அங்கே
மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனைநீர் மேல் எழுந்த மிகச் சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணொருத்தி, கரையில் நிற்கும் தன் கணவனை
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக எனஒரு மூங்கிற்கழியைப் புணையாக நீரில் மூழ்கும் தன் கையில் எட்டுமாறு கொடுக்க என்று வேண்ட,
பூ நீர் பெய் வட்டம் எறிய புணை பெறாதுஅவன் மணமுள்ள சாயநீர் நிரப்பிய வட்டமான பாத்திரத்தை எறிய, அதில் ஆதரவான மிதவையைப் பெறாமல்
அரு நிலை நீரின் அவள் துயர் கண்டுநிலைகொள்ள அரிதான ஆழத்தையுடைய நீரில் அவளின் துயரத்தைக் கண்டு,
கொழுநன் மகிழ் தூங்கி கொய் பூ புனல் வீழ்ந்துஅந்தக் கணவன் உள்ளத்தில் மகிழ்ச்சிநிலை மாறி, கொய்தற்குரிய பூக்களைக் கொண்ட நீருக்குள் பாய்ந்து
தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்றுஅவளைத் தழுவிக்கொள்ளும் தன்மையினையுடையது குளிர்ந்த திருப்பரங்குன்றம்;
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவியவண்டுகள் ஆரவாரிக்கின்ற ஒளிவிடும் பாறை போன்ற மார்பினையுடைய மைந்தர்கள் தம் மார்பில் பூசிய
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும்குளிர்ச்சி பொருந்திய கமழ்கின்ற சந்தனத்தைத் தடவி ஏற்றுவரும் காற்றையும்,
கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்தமீனைப் போன்ற கண்களையுடைய மகளிர் நறுமணங்கமழும் துகள்களைச் சேர்த்த
புயல் புரை கதுப்பு_அகம் உளரிய வளியும்மேகக்கூடத்தைப் போன்ற கூந்தலினூடே புகுந்து அதைக் கோதிவிடும் காற்றையும்,
உருள் இணர் கடம்பின் நெடுவேட்கு எடுத்ததேருருள் போன்ற பூங்கொத்துக்களையுடைய கடம்பமரத்தில் எழுந்தருளியிருக்கும் முருகனுக்கு எடுத்த
முருகு கமழ் புகை நுழைந்த வளியும்வெறியாட்டில் எழுந்த கமழ்கின்ற புகைவழியே புகுந்துவந்த காற்றையும்,
அசும்பும் அருவி அரு விடர் பரந்தஇடைவிடாமல் ஒழுகிக்கொண்டிருக்கும் அருவிநீர் அரிய மலைப் பிளவுகளில் பரந்த
பசும் பூண் சேஎய் நின் குன்றம் நன்கு உடைத்துபைம்பொன்னால் செய்த பூண்களை அணிந்த குமரனே! உன் குன்றம் மிகவும் உடையது;
கண் ஒளிர் திகழ் அடர் இடு சுடர் படர் கொடி மின்னு போல்கண் கவர ஒளிர்ந்து விளங்கும் பொன் தகட்டினை, மேகத்தால் இடப்பட்ட ஒளி பரப்பும் மின்னல் கொடி போல,
ஒண் நகை தகை வகை நெறிபெற இடையிடை இழைத்து யாத்தஒள்ளிய நகையின் கூறுபாடுகள் அனைத்தும் முறையுடன் விளங்க, இடையிடையே சேர்த்துக் கட்டிய
செண்ணிகை கோதை கதுப்போடு இயலதலைக்கோலங்களாகிய மாலை கூந்தலோடு அசைய,
மணி மருள் தேன் மகிழ் தட்ப ஒல்கிமாணிக்கம் போன்ற சிவந்த தேனாற்செய்த மதுவின் மகிழ்ச்சி தடுத்துநிற்க அசைந்து
பிணி நெகிழ பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊரஅழகிய ஆடையின் இறுக்கம் நெகிழ, கண்களில் சிவப்பு ஊர,
பூ கொடி போல நுடங்குவாள் ஆங்கு தன்பூங்கொடியைப் போல வளைந்து ஆடுவாள், அங்கு தன்
சீர் தகு கேள்வன் உருட்டும் துடி சீரான்அழகுக்கேற்ற கணவன் இசைக்கும் உடுக்கையின் தாளத்திற்கேற்ப,
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர்தன் முலையின் மேல் கிடக்கும் முத்தாரங்கள் விலகிச் செல்ல, ஆடுபவளது அழகிய
ஆடை அசைய அணி அசைய தான் அசையும்ஆடை அசையவும், அணிகலன்கள் அசையவும் தான் அசையும்
வாடை உளர் கொம்பர் போன்ம்வாடையால் நீவிவிடப்பட்ட பூங்கொம்பினைப் போன்றிருக்கும் அவளின் ஆட்டம்;
வாளி புரள்பவை போலும் துடி சீர்க்குஅம்புகள் புரள்வது போன்றிருக்கும், உடுக்கையின் தாளத்திற்கு
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண்தோளை முறையாக அசைப்பவளின் கண்கள்;
மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவைபகைவரைப் போரில் அழித்தவனே! வீரவேலினைச் சுழற்றுபவனே!
ஆறு_இரு தோளவை அறு முகம் விரித்தவைபன்னிரண்டு தோள்களையுடையவனே! ஆறு திருமுகங்களையும் மலர்ச்சியாகக் கொண்டவனே!
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு நின் அடியுறைபெரிதும் விரும்பும் சுற்றத்தாரோடு, ஒன்றுசேர்ந்து உன் திருவடி நிழலில் தங்குதல்
இன்று போல் இயைக என பரவுதும்இன்று போல் என்றும் அமைவதாக என்று வேண்டுகிறோம்,
ஒன்றார் தேய்த்த செல்வ நின் தொழுதேஉன்னுடன் ஒன்றிப்போகாதோரை இல்லையாக்கிய செல்வனே! உன்னைத் தொழுது;
  
# 22 வையை – பாடியவர், பண் அமைத்தவர் : பெயர் தெரியவில்லை# 22 வையை
  
ஒளிறு வாள் பொருப்பன் உடல் சமத்து இறுத்தஒளிவீசும் வாளினையுடைய பாண்டியன் சினந்து போரில் இறைப்பொருளாகப் பெற்ற
களிறு நிரைத்தவை போல் கொண்மூ நெரிதரகளிறுகளை நெருக்கமா நிறுத்திவைத்தது போன்று மேகங்கள் நெருங்கியிருக்க,
அரசு பட கடந்த ஆனா சீற்றத்தவன்பகையரசர்களைக் கொன்று அவர்களை வென்ற குறையாத சீற்றத்தையுடைய அந்தப் பாண்டியனின்
முரசு அதிர்பவை போல் முழங்கு இடி பயிற்றிமுரசுகள் அதிர்வது போல முழங்குகின்ற இடிகள் திரும்பத் திரும்ப ஒலிக்க,
ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசைதனக்கு அடங்காதோரின் மீது சினங்கொண்ட மன்னவனின் படையினர் வில்லிலிருந்து விசையுடன்
விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉவிடுகின்ற அம்புகளைப் போன்று மிக்க துளிகளை அந்த மேகம் பொழிய,
கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி அவன்கண்களைக் கூசவைக்கும் வேற்படையைப் போல மிகுதியாக மின்னி, அந்தப் பாண்டியனின்
வண்மை போல் வானம் பொழிந்த நீர் மண் மிசைவள்ளல்தன்மை போல வானம் பொழிந்த மழைநீர் மண்ணின் மேல்
ஆனாது வந்து தொகுபு ஈண்டி மற்று அவன்குறையாமல் வந்து திரண்டு பெருகி, அவன்
தானையின் ஊழி தா ஊக்கத்தின்படையினரின் படைமுறைமையோடு பரவிச்செல்லும் மனவெழுச்சியுடன் 
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுதஅந் நாட்டில் சென்ற நிலம் எங்கும் நெற்போர் நிரம்பிய வயல்களில் புகுந்தது;
 (அடிகள் சிதைவுற்றதால் உரை இல்லை)
———— —————-நீக்கி  பபு——– ————-———— ————– நீக்கி பபு———-  ————–
கான மலைத்தரை கொன்று மணல பினறீகான மலைத்தரை கொன்று மணல பினறீ
வான மலைத்த ———— வ ———– ———–வான மலைத்த  ———–வ ————————-
———–லைத்தவ மண முரசு எறிதர———-லைத்தவ மண முரசு எறிதர
தானை தலைத்தலை வந்து மைந்து உற்றுதானை தலைத்தலை வந்து மைந்து உற்று
பொறிவி யாற்றுறி துவர் புகை சாந்தம்பொறிவி யாற்றுறி ——- சாயப்பொருள்கள், புகைப்பொருள்கள், சாந்து வகைகள்
எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்றவீசிஎறிவனவும், தெளிப்பனவும் ஆகிய நீர்விளையாட்டுக்கு ஏற்ற கருவிகளையும்
நறவு அணி பூ துகில் நன் பல ஏந்திகள்ளும், அணிகலன்களும், பூவேலைப்பாடமைந்த துகில்களும் ஆகிய மிகப்பலவற்றை எடுத்துக்கொண்டு
பிற தொழின பின்_பின் தொடரபிற பணியினரும் பின்னே தொடர்ந்து வர,
செறி வினை பொலிந்த செம் பூ கண்ணியர்செறிவான வேலைப்பாட்டால் பொலிவுற்ற சிவந்த மலர்மாலையத் தலையில் அணிந்த ஆடவரும்,
ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்குளிர்ச்சி பொருந்திய வெட்சி மலரால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிய மகளிரும்,
தார் ஆர் முடியர் தகை கெழு மார்பினர்மாலை நிறைந்த முடியினையுடையவரும், அழகு பொருந்திய மார்பினையுடையவரும்,
மாவும் களிறும் மணி அணி வேசரிகுதிரைகளும், களிறுகளும், மணிகள் அணிந்த கோவேறு கழுதைகளும்
காவு நிறைய கரை நெரிபு ஈண்டிஆற்றங்கரைச் சோலை நிறையவும், கரையையும் நெருக்கமாக வந்து கூடி
வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன்வேலினால் போர் செய்யும் முருகனைப் போல, மணமுள்ள மலர்களை அம்பாகக் கொண்ட மன்மதனைப்
போல் ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடுபோல, முறையே போரிடும் வலிமையினைக்கொண்டு வீரக்கழல் அணிந்த மைந்தரும்,
தார் அணி மைந்தர் தவ பயன் சான்ம் எனமாலையினையும் அழகினையும் கொண்ட மைந்தரும், செய்த தவத்தின் பயன் பெரிதென்று பிறர் கூற,
கார் அணி கூந்தல் கயல் கண் கவிர் இதழ்முகிலின் அழகுடைய கூந்தலினையும், கயல் போன்ற கண்ணினையும், செம்முருக்கம் பூவைப் போன்ற உதடுகளையும்
வார் அணி கொம்மை வகை அமை மேகலைகச்சணிந்த இளம் முலைகளையும், சிறப்பாக அமைந்த மேகலையையும்,
ஏர் அணி இலங்கு எயிற்று இன் நகையவர்அழகிய வரிசையாய் ஒளிரும் பற்களையும், இனிய புன்முறுவலையும் உடைய மகளிரும்,
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை_தன்இயற்கை அழகினையுடைய வையைக்கு அழகாய் அமைந்தாரோ? வையையின்
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் எனநீரால் அழகுற்ற வெள்ளம் இவருக்கு அழகு தந்ததோ? என்று
தேருநர் தேரும்_கால் தேர்தற்கு அரிது காண்தெளிந்தறிய முயல்வோர் எண்ணிப்பார்த்தால் தெளிந்துகொள்வதற்கு அரிதாகும்,
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின்கரையிலும் வையையிலும் சேர்கின்ற கண்ணுக்குப்புலனாகும் அழகு;
மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்குமண்ணுதல் செய்யப்பட்ட திரண்ட முழவின் இனிய கண்ணில் பிறக்கும் முழக்கத்திற்கு
எதிர்வ பொருவி ஏறு மாறு இமிழ்ப்பஎதிர்த்துப் போட்டிபோடுவது போன்று …………….. இடியின் முழக்கம் மாறாக முழங்க
கவர் தொடை நல் யாழ் இமிழ காவில்உள்ளத்தைக் கவரும் பாலைப்பண் கோவையையுடைய நல்ல யாழ் இசையெழுப்ப, அதற்கு மாறாகச் சோலையில்
புகர் வரி வண்டு_இனம் பூ சினை இமிரபுள்ளிகளையும் வரிகளையும் உடைய வண்டுக் கூட்டம் பூத்த மரக்கொம்புகளில் ஒலியெழுப்ப,
ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசைஊதுதற்குரிய ஓசை இலயத்தைக் கொண்ட இனிய குழல் ஒலிக்க, அதற்கு மாறாக, மலர்களின் மேல்
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்பபூந்தாதுக்களை ஊதும் தும்பிகள் நிற்காமல் ஒலிக்க,
———- துடி சீர் நடத்த வளி நடன்———— உடுக்கையின் தாளங்கள் எழும்ப, அதற்கு மாறாக, காற்றாகிய நட்டுவன்
மெல் இணர் பூ கொடி மேவர நுடங்கமென்மையான பூங்கொத்துக்களையுடைய பூங்கொடிகளை விரும்புமாறு அசைந்தாடச் செய்ய,
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும்அங்கே இந்தக் கலைகள் தத்தம் தொழிலில் ஒன்றற்கொன்று மாறாக இயங்குகின்றன,
தீம் புனல் வையை திருமருத முன்துறையால்இனிய நீரையுடைய வையையின் திருமருத முன்துறையில்;
கோடு உளர் குரல் பொலி ஒலி துயல் இரும் கூந்தல்மரக்கொம்பில் அசைகின்ற பூங்கொத்துக்களால் பொலிவடைந்து தழைத்து அசைகின்ற கரிய கூந்தலையுடைய
—————– —————— புரை தீர் நெடு மென்…………………………… குற்றமற்ற நெடிய மெல்லிய
தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின்தோளில் தாழ்ந்து தழைக்கும் மலரையுடைய துவள்கின்ற கொடிபோல
நீள் தாழ்பு தோக்கை நித்தில அரி சிலம்புநீண்டு தாழ்ந்த தொங்கலுடன் முத்துப் பரலைக் கொண்ட சிலம்பு
  
# பரிபாடல் முற்றிற்று# பரிபாடல் முற்றிற்று
  
 
  
  
# பரிபாடல் திரட்டு# பரிபாடல் திரட்டு
  
பரிபாடல் எழுபது (70) பாடல்களைக் கொண்டது பரிபாடல் எழுபது (70) பாடல்களைக் கொண்டது 
என அறியப்படுகிறது.என அறியப்படுகிறது.
இவற்றுள் நமக்குக் கிடைத்தவை இவற்றுள் நமக்குக் கிடைத்தவை 
இருபத்திரண்டு (22) பாடல்களே. இருபத்திரண்டு (22) பாடல்களே. 
  
இவற்றைத் தவிர, சில பாடல்கள் முழுமையாகவும், இவற்றைத் தவிர, சில பாடல்கள் முழுமையாகவும், 
சில பாடல் வரிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன.சில பாடல் வரிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
இவை பாடல் எண்கள் 23 முதல் 35 வரை இவை பாடல் எண்கள் 23 முதல் 35 வரை 
இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
  
1. தொல்காப்பியச் செய்யுளியலில் மேற்கோள்களாக 1. தொல்காப்பியச் செய்யுளியலில் மேற்கோள்களாக 
உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்டவை உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்டவை 
  
  பாடல் (பாடல் வரி)கள் ஐந்து (5).  பாடல் (பாடல் வரி)கள் ஐந்து (5).
  
  தொல். செய்யுளியல்-121 – பேராசிரியர் உரை – பாடல் 23  தொல். செய்யுளியல்-121 – பேராசிரியர் உரை – பாடல் 23
  தொல். செய்யுளியல்-118 – இளம்பூரணர் உரை – பாடல் – 24  தொல். செய்யுளியல்-118 – இளம்பூரணர் உரை – பாடல் – 24
  தொல். செய்யுளியல்-121 – பேரா, நச். உரை – பாடல் — 25  தொல். செய்யுளியல்-121 – பேரா, நச். உரை – பாடல் — 25
  தொல். செய்யுளியல்-120 – பேராசிரியர் உரை – பாடல் 27  தொல். செய்யுளியல்-120 – பேராசிரியர் உரை – பாடல் 27
  தொல். மெய்ப்பாட்டியல்-11 – இளம்பூரணர் உரை – பாடல் 35  தொல். மெய்ப்பாட்டியல்-11 – இளம்பூரணர் உரை – பாடல் 35
  
2. திருக்குறள் – 23 – பரிமேலழகர் உரை – பாடல் 262. திருக்குறள் – 23 – பரிமேலழகர் உரை – பாடல் 26
  
3. நாற்கவிராச நம்பி அகப்பொருள் நூலில் மேற்கோளாக 3. நாற்கவிராச நம்பி அகப்பொருள் நூலில் மேற்கோளாக 
எடுத்தாளப்பட்ட பாடல் ஒன்று (1) – பாடல் 28எடுத்தாளப்பட்ட பாடல் ஒன்று (1) – பாடல் 28
  
4. புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில் உள்ள 4. புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில் உள்ள 
உறுப்புக்கள் ஆறு (6).உறுப்புக்கள் ஆறு (6).
  பாடல்கள் – 29, 30, 31, 32, 33, 34  பாடல்கள் – 29, 30, 31, 32, 33, 34
  
ஆக, இந்த 13 பாடல்களும் பரிபாடல் திரட்டு எனத் ஆக, இந்த 13 பாடல்களும் பரிபாடல் திரட்டு எனத் 
தனியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.தனியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
  
# 23.1 திருமால்# 23.1 திருமால்
வான் ஆர் எழிலி மழை வளம் நந்தவானத்தில் நிறைந்த மேகங்களினால் மழை வளம் பெருக,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்துதேனிறால்கள் நிறைந்த மலையுச்சியையுடைய மலையிலிருந்து இறங்கிவந்து
நான்மாடக்கூடல் எதிர்கொள்ள ஆனாமதுரையின் மக்கள் எதிர்கொள்ள, இன்றியமையாத
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேயஆருயிர் மருந்தாகிய இனிய நீர் பெருக்கெடுத்தோடும் நீர்த்துறையில் பொருந்திய
இருந்தையூர் அமர்ந்த செல்வ நின்இருந்தையூர் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள செல்வனே! உன்
திருந்து அடி தலை உற பரவுதும் தொழுதுதிருத்தமான திருவடிகளை எம் தலை மேல் கொண்டு வாழ்த்துகிறோம் தொழுது;
ஒருசார் அணி மலர் வேங்கை மராஅ மகிழம்இவ்வூரின் ஒரு பக்கத்தே, அழகிய மலர்களையுடைய வேங்கை, வெண்கடம்பு, மகிழம்,
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கிஅரும்புகள் கட்டவிழ்ந்த அசோகம் ஆகியவை உயர்ந்து ஒன்றுகூடி வளர்ந்து
மணி நிறம் கொண்ட மலைபச்சை மணியின் நிறம் கொண்ட மலை;
ஒருசார் தண் நறும் தாமரை பூவின் இடையிடைமற்றொரு பக்கம், குளிர்ந்த நறிய தாமரைப்பூவின் இடையிடையே
வண்ண வரி இதழ் போதின் வாய் வண்டு ஆர்ப்பநிறமும் வரியும் அமைந்த, அன்றலரும் இதழ்களையுடைய மலர்நிலைப் பூக்களின் வாயில், வண்டுகள் மிகுந்தொலிக்க,
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின்வானம், தன்னிடம் நிலைகொண்டு மெல்லென ஒளிதரும் விண்மீன்களைக் கொண்டு விரிந்திருப்பதைப் போன்று,
கண் வீற்றிருக்கும் கயம்விரிந்துகிடக்கும் இடத்தையுடையனவாயிருக்கும் நீர்நிலைகள்;
ஒருசார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு_உற்றுஒன்னொரு பக்கம், கருப்பஞ்சாற்றினைப் பிழிந்தெடுக்கும் ஆரவாரத்தின் ஒலியுடன் மாறுபட்டு,
உழவின் ஓதை பயின்று அறிவு இழந்துஉழவர்கள் உழும்போது எழும் ஆரவாரம் மிகுந்தொலித்து, கள்ளுண்டு அறிவு மயங்கித்
திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டிதிரிந்துகொண்டிருப்போரும், குரவை பாடி நாற்றுநடுவோரும் எழுப்பும் ஒலியும் ஆகிய இவை ஒன்றாகச் சேர்ந்தொலிக்க
திரு நய_தக்க வயல்திருமகளும் விரும்பி வீற்றிருக்கும் வயல்கள்;
ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றிவேறோர் பக்கம், அறநெறியும், வேதங்களும் சேர்ந்த தவ ஒழுக்கத்தில் முதிர்வெய்தி,
விறல் புகழ் நிற்ப விளங்கிய கேள்விமிகச் சிறந்த புகழ் நிலைத்து நிற்க, உயர்வான கேள்வித்
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டிதிறத்தால் சிறிதும் பிறழ்தல் இல்லாத அந்தணர் மிகுந்து வாழ்தலால்
அறத்தின் திரியா பதிஅறவொழுக்கத்தில் பிறழாத நகரம்;
ஆங்கு ஒருசார் உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவைஅந்த நகரத்தில், ஒருபக்கம், உண்ணக்குடியவை, பூசிக்கொள்பவை, அணிந்துகொள்பவை, உடுத்திக்கொள்பவை
மண்ணுவ மணி பொன் மலைய கடல்மஞ்சனமாடுதற்குரியவை, மணி, பொன், மலையில் கிடைப்பவை, கடலில்
பண்ணியம் மாசு அறு பயம் தரு காருககிடைக்கும் பொருள்கள், குற்றமற்ற வகையில் பயன்தரக்கூடிய நெசவுப்பொருள்கள் ஆகியவற்றை வணிகம் செய்யும்
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார்அறவுணர்வுடைய வணிகர்கள் முறையாக அமைந்த தெருக்கள்; ஒருபக்கம்
விளைவதை வினை எவன் மென்_புல வன்_புலவிளையும் பொருளை விளைத்துத் தரும் தொழிலையுடைய, நன்செய், புன்செய் ஆகிய நிலங்களில்
களமர் உழவர் கடி மறுகு பிறசார்தொழில்செய்வோர், வேளாளர் ஆகியோர் வாழும் காவலையுடைய தெருக்கள்; வேறு பக்கங்களில்
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்அவ்வாறே; இவ்வாறு அனைவரும் வாழ்வதால் நல்லனவாக நன்றாகப் பொருந்துகின்ற இன்பம் பலவும்
இயல் கொள நண்ணியவைஇயல்பாகவே பொருந்தியிருப்பன:
வண்டு பொரேரென எழகைவளையல்கள் திடீரென மேலே உயர்வதால்
வண்டு பொரேரென எழும்வண்டுகள் திடுமென மேலே எழும் –
கடி புகு வேரி கதவம் இல் தோட்டிமணம் பொருந்திய தேன் நிரம்பிய மலர்மாலைகளில் மறைவின்றி மொய்த்திருந்த அழகு மிக்க (அந்த வண்டுகள்)
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடரகடிப்பு என்னும் அணியினால் தாழ்ந்து விழுந்த காதில் பொன்னாலாகிய குழையை அணிவதற்காக –
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார்மிளிருகின்ற ஒளிச்சுடர் பாய்தலால் பளிச்சிடும் ஒளியினையுடைய நெற்றியையுடைய பெண்டிரும்,
ஊர் களிற்று அன்ன செம்மலோரும்தாம் ஏறிச் செல்லும் களிற்றினைப் போன்ற தலைமைப் பண்புடைய ஆடவரும்,
வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவத்துஇருள் வாய்ந்த கூந்தலினையும், வரிந்த வில்லினைப் போன்ற புருவங்களையும்
ஒளி இழை ஒதுங்கிய ஒள் நுதலோரும்ஒளியையுடைய தலை அணிகலன்கள் ஒதுங்கிக்கிடக்கும் ஒள்ளிய நெற்றியையுடையவரும்,
புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும்அறிவோடு கூடிய புகழை அணிகலனாகக் கொண்டோரும்,
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும்கற்புடைமையோடு பொருந்திய நாணத்தை அணிகலனாகக் கொண்டோரும்,
விடையோடு இகலிய விறல் நடையோரும்எருதுவின் நடையுடன் மாறுபட்ட வெற்றியையுடைய பீடுநடையினரும்,
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும்ஒழுக்கமும் மடமும் பொருந்திய நாணத்தினை அணிகலனாகக் கொண்டோரும்,
கடல் நிரை திரையின் கரு நரையோரும்கடலில் வரிசையாக வரும் அலைகளைப் போன்று கருமையும் நரையும் கலந்த தலைமயிர் உடையோரும்,
சுடர் மதி கதிர் என தூ நரையோரும்ஒளிரும் நிலவுக் கதிர் என்று சொல்லுமாறு முழுதும் வெளுத்த முடியினை உடையோரும்,
மடையர் குடையர் புகையர் பூ ஏந்திஅவிப்பொருள் கொணர்ந்தவர், குடையை ஏந்தியவர், நறுமணப் புகையை உடையவர் ஆகியோர் பூக்களை ஏந்தி,
இடை ஒழிவு இன்றி அடியுறையார் ஈண்டிஇடையறாமல் திருவடியின் கீழ் வந்து நெருக்கமாய்க் கூடி நிற்க,
விளைந்து ஆர் வினையின் விழு பயன் துய்க்கும்விளைந்து முதிர்ந்த நல்வினையின் சிறந்த பயனைத் துய்ப்பதற்குரிய
துளங்கா விழு சீர் துறக்கம் புரையும்நிலைகெடாத உயர்ந்த சிறப்பினையுடைய மேலுலகத்தைப் போல் விளங்கியது,
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின்கரியநிறப் படப்புள்ளிகள் அழகுடன் விளங்கும் கழுத்தையுடைவனாகிய
வரை கெழு செல்வன் நகர்மலை போன்ற மார்பினையுடைய செல்வனாகிய ஆதிசேடனின் கோயில்;
வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்பவண்டுகளும் தும்பிகளும் வளமையான நரம்புக்கட்டினையுடைய யாழிசை போல் ஒலியெழுப்ப,
விண்ட கட கரி மேகமொடு அதிரபிளிறுகின்ற மதயானை மேகத்தின் முழக்கத்தைப் போல் முழங்க,
தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்பகுறையாமல் வீழ்கின்ற அருவியின் முழக்கத்துடன் பெரிய முழவுகள் முழங்க,
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிசெவ்வரி பாய்ந்த மையுண்ட கண்களையுடைய மகளிரோடு ஆடவர் கூடிநிற்க,
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்றயாவராலும் விரும்பப்படும் பாடலோடு ஆடலும் தோன்ற,
சூடு நறவொடு தாமம் முகிழ் விரியசூடியுள்ள நறவத்தின் மொட்டுடன் பூமாலையின் மொட்டுக்களும் மலர,
சூடா நறவொடு காமம் விரும்பசூடாத நறவமாகிய கள்ளோடு காம இன்பம் விரும்புதற்குரியதாக,
இனைய பிறவும் இவை போல்வனவும்இதனைப் போன்ற பிறவும், இன்னும் இவை போன்றனவும்,
அனையவை எல்லாம் இயையும் புனை இழைஅப்படிப்பட்டவை எல்லாம் தம்முள் பொருந்திநிற்கும், ஒப்பனை செய்யப்பட்ட அணிகலன்களையும்
பூ முடி நாகர் நகர்பூமகளையும் தன் திருமுடியில் கொண்டுள்ள ஆதிசேடனின் கோயிலில்;
மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலிநீலமணி போன்ற அழகுடன், ஐவகையாகப் பிரிக்கப்பட்டு அறல்பட்டுச் செறிந்து தழைத்துப் பொலிவுற்று
அவிர் நிமிர் புகழ் கூந்தல்ஒளிரும் எழுச்சியினைக் கொண்ட புகழ்வாய்ந்த கூந்தலினையும்,
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரிபிணிப்பு நெகிழ்ச்சியாக உள்ளவாறு துளையிடப்பட்ட, தெளிந்த ஒளி விளங்கும் சிலம்பினையும், ஆய்ந்து அரிக்கப்பட்ட
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண் வாள் நுதலோர்மதுவுண்ட மகிழ்ச்சியால் செவ்வரி படர்ந்த மலர்ந்த மகிழ்ச்சியான மையுண்ட கண்களையும், ஒளியுள்ள நெற்றியையும் உடையோர்
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிதுநீலமணி போன்ற நிறமுள்ள மயிலுடன் தொழிலாலும் அழகாலும் மாறுபட்டு மிக்க ஒளியுடன் விளங்குமாறு, வேறு
இகழ் கடும் கடா களிற்று அண்ணலவரோடுஇகழ்ச்சியும், கடுமையும் மிகுந்த மதத்தினையுடைய ஆண்யானை போன்ற தலைமைத் தன்மையுள்ள தத்தம் கணவர்களோடு
அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்கஅழகு மிகும்படி வந்து வணங்கி வேண்ட, இருளாகிய துன்பம் அகல, பிணிகள் நீங்க,
நல்லவை எல்லாம் இயைதரும் தொல் சீர்நல்லன அனைத்தும் தாமே வந்து பொருந்தி நிற்கிறது – தொன்மையான புகழையுடைய
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கைமலையைச் சார்ந்த பாறைகள் சேர்ந்து கிடக்கின்ற
குளவாய் அமர்ந்தான் நகர்குளவாய் என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள ஆதிசேடனின் கோயில்;
திகழ் ஒளி முந்நீர் கடைந்த அ-கால் வெற்புஒளி திகழும் பாற்கடலைக் கடைந்த பொழுது, மந்திரமலையைப்
திகழ்பு எழ வாங்கி தம் சீர் சிரத்து ஏற்றிபொலிவுடன் மேலே எழ எடுத்து, தன் அழகிய முதுகின்மேல் அதனை ஏற்றிவைத்து,
மகர மறி கடல் வைத்து நிறுத்துமகரமீனையுடைய அலைபுரளும் அந்தப் பாற்கடலில் வைத்து நிலைபெறச் செய்து,
புகழ் சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்புகழ்மிக்க சிறப்பினையுடைய தேவரும் அசுரரும் ஆகிய இருதிறத்தோரும்
அமுது கடைய இரு வயின் நாண் ஆகிஅமுது கடைய இரு பக்கமும் நாணாக இருந்து,
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்கஎஞ்சிய பெரிய நாணை திருமாலே பற்றி இழுக்க,
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம்தமது அழியாத ஆற்றலாலே, ஒரு தோழம் என்னும் கால அளவுக்கு
அறாஅது அணிந்தாரும் தாம்அற்றுப்போகாமல் நாணாகி கிடந்து அழகுசெய்தவரும் ஆதிசேடனே!
மிகாஅ மறலிய மே வலி எல்லாம்மேருமலையை மோதித்தாக்க மிக்கு வந்து மோதிய காற்றுத்தேவனின் மேம்பட்ட வலிமை எல்லாம்
புகாஅ எதிர் பூண்டாரும் தாம்அந்த மலையில் புகாதபடி எதிர்ப்பினை மேற்கொண்டாரும் ஆதிசேடனே!
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம்நீலமணி போன்ற பெரிய மலைகள் தோன்றிய இந்த மண்ணுலகத்தையே
அணி போல் பொறுத்தாரும் தாஅம் பணிபு இல் சீர்அணிகலன்களைத் தாங்குவதுபோல் எளிதாகத் தாங்கியிருப்பவரும் ஆதிசேடனே! பிறரைப் பணிதல் இல்லாத புகழையுடைய,
செல் விடை பாகன் திரிபுரம் செற்று_உழிவிரைந்து செல்லும் எருதாகிய ஊர்தியையுடையோன் முப்புரத்தை அழித்தபோது
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகிமலைகளிலேயே உயர்ந்த சிகரத்தையுடைய இமயத்தை வில்லாகக் கொள்ள, அதற்கு நாண் ஆகி
தொல் புகழ் தந்தாரும் தாம்தொன்மையான புகழினைத் தந்தவரும் ஆதிசேடனே!
அணங்கு உடை அரும் தலை ஆயிரம் விரித்தஅச்சமூட்டக்குடிய அரிய தலைகள் ஆயிரத்தை விரித்த
கணம்_கொள் சுற்றத்து அண்ணலை வணங்கிதிரளான சுற்றத்தைக் கொண்ட அந்த அண்ணலை வணங்கி,
நல் அடி ஏத்தி நின் பரவுதும்உனது நல்ல திருவடிகளைப் போற்றி உன்னை வாழ்த்துகிறோம்,
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கேயாம் எல்லாரும் எப்பொழுதும் உன் திருவடியைப் பிரியாமல் இருக்க, எம் சுற்றத்தாரோடு ஒன்று சேர்ந்து.
  
# 24.2 வையை# 24.2 வையை
மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇஇந்தப் பெரிய நிலமே கண்ணுக்குத் தெரியாமல் மறையும்படி, மிகுந்த மழையைப் பொழிந்து
ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான்உலகுக்குப் பாதுகாவலான நீரினை அழகிய மேகங்கள் கீழிறக்கும் பொழுதில்,
நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇநாக மரங்கள் உயர்ந்த நீலமணி போன்ற மலையில் நறிய மலர்கள் பல உதிர்ந்து மணங்கமழ,
காமரு வையை கடுகின்றே கூடல்கண்டார் விரும்பும் வையை விரைந்து வந்தது மதுரையை நோக்கி;
நீர் அணி கொண்டன்று வையை என விரும்பிபுதுநீரால் அழகு பெற்றது வையை என விரும்பி
தார் அணி கொண்ட உவகை தலைக்கூடிதூசிப்படையினரின் விரைவை மேற்கொண்டு உவகையெல்லாம் ஒன்றுசேர,
ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின்ஊர்மக்கள் தத்தம் இயற்கையழகிற்கேற்ப ஒவ்வொருவரும் 
சேர் அணி கொண்டு நிறம் ஒன்று வெவ்வேறுஒப்பனைகளால் அழகு சேர்த்துக்கொண்டு, நல்ல நிறம் பொருந்திய பல்வேறு வகையான
நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடிநீராட்டுக்குரிய அழகுப்பொருள்கள் கொண்ட நிறைந்த நீரங்காடியில்
ஏர் அணி கொண்டார் இயல்தங்கள் இயற்கை அழகை, அங்காடிப்பொருள்களால் அழகு செய்துகொண்டனர்;
கை புனை தாரினர் கண்ணியர்(பெண்கள்)திறம்படக் கையால் புனையப்பட்ட மாலை சூடியவராய், (ஆண்கள்)தலை மாலை சூடியவராய்,
ஐ எனும் ஆவியர் ஆடையர்(பெண்கள்)வியத்தகுவகையில் நறுமணப்புகை ஊட்டிக்கொண்டவராய், (ஆண்கள்)வியத்தகு ஆடை அணிந்தவராய்,
நெய் அணி கூந்தலர் பித்தையர்(பெண்கள்)நெய் பூசப்பெற்ற கூந்தலையுடையவராய், (ஆண்கள்)குடுமியில் நெய் பூசியவராய்,
மெய் அணி யானை மிசையராய் ஒய்யெனஉடலில் ஒப்பனை செய்யப்பட்ட யானையின் மேல் அமர்ந்தவராய் விரைவாக
தங்கா சிறப்பின் தளிர் இயலார் செல்லதாழாத சிறப்பினையுடைய மாந்தளிர் போன்ற பெண்கள் செல்ல,
பொங்கு புரவி புடை_போவோரும் பொங்கு சீர்(ஆண்கள்)செருக்குள்ள குதிரைகளில் அந்த யானைகளின் பக்கத்தே போவோரும், மிக்க அழகுடைய
வையமும் தேரும் அமைப்போரும் எ வாயும்வண்டிகளும் தேர்களும் அமைத்துக்கொண்டு செல்வோரும், எந்தவிடத்தும்
பொய்யாம் போய் என்னா புடை கூட்டி போவநர்காணாமற்போகோம் என்று சொல்லி மற்றவரை அருகருகே அழைத்துக்கொண்டு செல்வர்;
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்குமகளிர் தம் மெய்யாப்பால் தம் மெய்முழுக்க மூடுவார், வண்டிக்குள் இருக்கும் பெண்கள் தம் கணவருடன்
ஊடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார்ஊடல் கொள்வார், கணவர் ஊடலை ஒழிப்பார், அதனை உணர்ந்து ஊடல் தீர்வார்,
ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்குசிலர் ஆடுவார், சிலர் பாடுவார், சிலர் ஆராவரிப்பார், சிலர் வாய்விட்டுச் சிரிப்பார், சிரித்துக்கொண்டே
ஓடுவார் ஓடி தளர்வார் போய் உற்றவரைசிலர் ஓடுவார், ஓடித் தளர்வார், அங்குமிங்கும் போய் தமக்குரியவரைத்
தேடுவார் ஊர்க்கு திரிவார் இலர் ஆகிதேடுவார் – இவர்களுள் ஊருக்குள் திரும்பிச் செல்வார் யாரும் இல்லையாகி,
கற்றாரும் கல்லாதவரும் கயவரும்கற்றாரும், கல்லாதவரும், கயவரும்,
பெற்றாரும் பெற்றான் பிழையாத பெண்டிரும்மக்களைப் பெற்றாரும், தம்மை மணந்த கணவன்மார் சொல்தட்டாத பெண்டிரும்,
பொன் தேரான் தானும் பொலம் புரிசை கூடலும்பொன்னாலான தேரினையுடைய பாண்டியன்தானும், பொன் மதிலைக் கொண்ட மதுரை மக்களும்,
முற்று இன்று வையை துறைமுற்றுகையிட்டனர் வையைத் துறையை;
துறை ஆடும் காதலர் தோள் புணை ஆகவையைத்துறையில் புனலாடும் காதலரின் தோள்களே தெப்பமாக இருக்க,
மறை ஆடுவாரை அறியார் மயங்கிமறைவாக நீராடும் பரத்தையரை அறியாதவராக அந்தக் கணவர் மயங்குமாறு செய்து,
பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன்பிறையின் அழகினைப் போன்ற நெற்றியையுடைய மகளிர் எல்லாரும் தமக்கு முன்னால்
நிகழும் நிகழ்ச்சி எம்_பால் என்று ஆங்கேநிகழ்கின்ற நீர்விளையாடல் நிகழ்ச்சிகள் எவ்விடத்தில் நிகழ்கின்றன என்று 
இகல் பல செல்வம் விளைத்து அவண் கண்டு இப்பால்ஊடலாகிய பல செல்வத்தை உண்டாக்குவது அங்கு காணத்தக்கது – இவ்வாறு
அகல் அல்கும் வையை துறைஅகன்றதானது சுருங்கிக்காணப்பட்டது – இந்த வையையின் நீர்த்துறை;
காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கிஒரு காதற்பரத்தையின் காதலன் தன் மார்பில் கிடந்த மணங்கமழும் மாலையைக் கழற்றி நீரில் விட, அதனை நீர் இழுத்துச் செல்ல,
ஏதிலாள் கூந்தலிடை கண்டு மற்று அதுஅவனது இல்பரத்தை அதனை எடுத்துச் சூடிக்கொள்ள, ஓர் அயலாளின் கூந்தலில் தன் காதலன் மாலையைக் கண்டு, அதனைக்
தா தா என்றாளுக்கு தானே புறன் தந்துகொடு, கொடு என்று கேட்ட காதற்பரத்தைக்கு, “இது தானாகவே எங்கிருந்தோ வந்து
வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அதுஎன் கூந்தலில் சூட்டிக்கொண்டது” என்று சொல்ல, “இது எப்படி நடந்தது? அவ்வாறு விளைந்ததற்கு
நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்விவருந்தமாட்டேன், நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்களையுடையவளே! இத்தகைய தருணத்தில்
போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்ததுநீ இங்கு இருப்பாய் என அறிந்து அந்த மாலையை நீர் கொண்டுவந்து சேர்த்தது
ஓஓ பெரிதும் வியப்புஓஓ இது பெரிதும் வியப்பிற்குரியது” எனக் கூறி,
கய தக்க பூ பெய்த காம கிழமை“தலைவனே! மென்மை தங்கிய இந்தப் பூமாலையை நீ நீரிலே விட்டாய், அது காம நுகர்ச்சிக்குரிய
நய_தகு நல்லாளை கூடுமா கூடும்விரும்பத்தகுந்த அழகியையே சரியாகச் சென்று சேர்ந்தது; 
முயக்குக்கு செவ்வி முலையும் முயக்கத்துதழுவுதற்குச் சரியாக அமைந்த அவள் முலைகளும் அவற்றைத் தழுவிச்செல்லும்
நீரும் அவட்கு துணை கண்ணி நீர் விட்டோய்நீரும் அவளுக்குத் துணையாக அமைந்தன; மாலையை நீரில் நழுவ விட்டவனே!
நீயும் அவட்கு துணைநீயும் அவளுக்குத் துணையாவாய்” என்றாள்.
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்பிறரைப் பணிதல் இல்லாத உயர்ந்த சிறப்பினையுடைய பாண்டியனின் மதுரையில் வாழும்
மணி எழில் மா மேனி முத்த முறுவல்மணி போன்ற அழகினையும், மாநிற மேனியையும், முத்துப்போன்ற பற்களையும்
அணி பவள செம் வாய் அறம் காவல் பெண்டிர்அழகிய பவளம் போன்ற சிவந்த வாயினையும் கொண்டு, கற்புடைமையைக் காத்துக்கொள்ளும் பெண்டிர்
மணி அணிந்த தம் உரிமை_மைந்தரோடு ஆடிமணிகளால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த தம் கணவரோடு நீராட,
தணிவு இன்று வையை புனல்குறையாமற் செல்கிறது வையையின் புதுநீர்;
புனல் ஊடுபோவது ஓர் பூ மாலை கொண்டைபுனலோடு போகின்ற ஒரு பூமாலை கொண்டையில்
எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்டஊழ்வகையால் வந்து அடைந்தது என்று அதனை ஏற்றுக்கொண்டு,
புனல் ஊடு நாடு அறிய பூ மாலை அப்பிநீராடியவரின் ஊரறிய அந்தப் பூமாலையை அணிந்துகொண்டாள் என்ற செய்தி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்நினைத்துப்பார்ப்பவரின் நெஞ்சிற்குத் துன்பம் விளைவிக்கும்; கொதிப்புடன்,
கூடாமுன் ஊடல் கொடிய திறம் கூடினால்தலைவன் தலைவியிடம் வந்து சேர்வதற்கு முன்னரே இந்தக் கொடுந்தன்மை தலைவியை வந்து சேர்ந்தால்,
ஊடாளோ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்துஊடமாட்டாளோ? ஊரிலுள்ள அலர் பேச்சு ஊர்ந்துவந்து அவளைச் சேர,
என ஆங்குஎன்று கூறும்படி புனலாட்டு நிகழ,
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு எனஈக்கள் மொய்க்கும் சமைக்கப்பட்ட கள்ளினைக் கொண்டது இந்த ஆறு என்று
பார்ப்பார் ஒழிந்தார் படிவுபார்ப்பனர் தவிர்த்தார் நீராடுதலை;
மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்றுஆடவரும் பெண்டிரும் பூசியிருந்த நறுமணப் பொருட்களைத் தூவப்பெற்றதாயிற்று என்று
அந்தணர் தோயலர் ஆறுஅந்தணர்கள் நீராடவில்லை ஆற்றில்;
வையை தேம் மேவ வழுவழுப்பு_உற்று எனவையையின் நீர் தேன் கலந்து மழுமழுவென்றானது என்று
ஐயர் வாய்பூசுறார் ஆறுஐயர் வாய்கொப்பளிக்கவில்லை ஆற்றில்;
விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல்விரைவான இரைச்சலுடன் நறுமணமிக்க துறைகளின் கரைகள் அழியும்படியாக இழிந்து ஊர்ந்து ஊர்ந்து செல்லும் புனல்;
கரையொடு கடல் இடை வரையொடு கடல் இடை நிரை_நிரை நீர் தரு நுரைகரையோரத்திலும், கடலில் கலக்குமிடத்திலும் மலையிலிருந்து கடல்வரை வரிசை வரிசையாக நீரானது நுரையை எழுப்பும்;
நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல்மிக்க நுரையுடன் மதகுகள்தோறும் புகுந்து வெளிவரும் நீர் கரை புரண்டு ஓடும்; அலைகள் புரளும் கடலுக்குள்
புகும் அளவு_அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகைசென்று புகும் வரை மிகுந்து மேலும் மேலும் வந்து ஓசையுடன் கரைகளாகிய சிறைக்குள் அடங்காதவாய் வெள்ளம் மிகும்;
வரை பல புரை உயர் கயிறு அணி பயில் தொழில்பல மலைகளைப் போல உயர்ந்த, கழுத்தில் கயிறிட்ட, நன்கு தொழில் பயின்ற,
மணி அணி யானை மிசை மைந்தரும் மடவாரும்மணிகள் கட்டப்பட்ட யானைகளின் மேல் வந்த மைந்தரும் மகளிரும்,
நிரை_நிரை குழீஇயினர் உடன்சென்றுவரிசை வரிசையாக வந்து கூடினர்; யாவரும் ஒன்று சேர்ந்து
குரு மணி யானை இயல் தேர் பொருநன்நிறமிக்க மணிகள் பூட்டிய யானைகளையும், அழகிய தேர்களையும் உடைய பாண்டியனின்
திருமருத முன்துறை முற்றம் குறுகிதிருமருத முன்துறையை அணுக,
தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர்தெரிந்தெடுத்த மருதப்பண்ணினை, கேட்டோரைப் பிணிக்கும் யாழினையுடைய பாணர்கள் பாடினர்,
பாடி_பாடி பாய் புனல்மக்களும் தாமும் பாடிப்பாடி புனலில் பாய்ந்து
ஆடி_ஆடி அருளியவர்ஆடியாடி இன்புற்றனர்; தமக்கு அருளியவரான கணவருடன்
ஊடி_ஊடி உணர்த்த புகன்றுமீண்டும் மீண்டும் ஊடிக்கொண்டிருக்க, கணவர்கள் அவர்களைத் தெளிவித்து விருப்பத்துடன்
கூடி_கூடி மகிழ்பு மகிழ்புகூடிக்கூடி மகிழ்ந்துகொண்டே இருப்பர்;
தேடி_தேடி சிதைபு சிதைபுகாணாமற்போனவர்களை தேடித் தேடி மனம் மிகவும் சிதைந்திருப்பர்;
சூடி_சூடி தொழுது தொழுதுமணமிக்க மலர்களை வெகுவாகச் சூடிக்கொண்டு வையையை மீண்டும் மீண்டும் தொழுவர்;
மழுபொடு நின்ற மலி புனல் வையைசேற்றோடு கலங்கிய மிக்க வெள்ளத்தையுடைய வையை ஆற்றில்
விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடிசிறந்த அழகினையுடைய மகளிரும் மைந்தரும் ஆடுதலால்
இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர்உமிழ்ந்தது போலானது இந்த நீர், குணத்தால் நிறைந்த சான்றோரே!
முழுவதும் மிச்சிலா உண்டுமுழுவதும் எச்சிலாகும்படி பருகி;
சாந்தும் கமழ் தாரும் கோதையும் சுண்ணமும்நீராடியோர் அணிந்திருந்த சந்தனமும், மணங்கமழும் கழுத்து மாலைகளும், தலைமாலைகளும், நறுமணப்பொடிகளும்,
கூந்தலும் பித்தையும் சோர்ந்தன பூவினும் அல்லால்மகளிர் கூந்தலிலிருந்தும், மைந்தரின் குடுமியிலிருந்தும் நழுவி வீழ்ந்தன; அத்தகை பூக்களின் நிறத்தைத் தவிர,
சிறிதானும் நீர் நிறம்சிறிதளவும் நீரின் நிறம்
தான் தோன்றாது இ வையை ஆறுமட்டும் தோன்றாது இந்த வையை ஆற்றில்;
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும்மழைநீரானது வற்றிப்போன குளங்களில் நிறைந்து, மக்கள் வாய்கொப்பளிக்கவும், நீராடவும் ஆகும்,
கழு நீர மஞ்சன குங்கும கலங்கல்கழுவப்படும் தன்மையுள்ள மஞ்சனப் பொருள்களும், குங்குமம், குழம்பு முதலியனவும் கலந்து கலங்கலாகி
வழி நீர் விழு நீர அன்று வையைஆற்றில் வழிகின்ற நீர் தூயநீராக இல்லை வையையில்;
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன்பார்த்தால் அச்சம் வரக்கூடிய கொல்லும் தொழிலையுடைய யானைகளையும், புடைத்தெழுந்த தோள்களையும் உடைய பாண்டியன்
உரு கெழு கூடலவரொடு வையைஅழகு பொருந்திய தன் மதுரை மாந்தருடனே, வையையில்
வரு புனல் ஆடிய தன்மை பொருவும்_கால்வருகின்ற நீரில் புனலாடிய தன்மையை ஒப்பிடுங்கால்
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்குபெரிய கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தில் தேடினால் என்ன பயன்? அதுதான் இந்த ஊருக்கு
ஒரு நிலையும் ஆற்ற இயையா அரு மரபின்ஒரு வகையாலும் முற்றிலும் பொருந்துவதில்லை; அரிய மரபின்
அந்தர வான் யாற்று ஆயிரம் கண்ணினான்அந்தரத்திலே உள்ள ஆகாயகங்கையில் ஆயிரம் கண்ணையுடையவனாகிய
இந்திரன் ஆடும் தகைத்துஇந்திரன் நீராடும் தன்மையையுடையது.