ஐங்குறுநூறு 351-400

  
# 36 வரவுரைத்த பத்து# 36 வரவுரைத்த பத்து
# 351# 351
அத்த பலவின் வெயில் தின் சிறு காய்காட்டு வழியிலுள்ள பலாமரத்தின், வெயில் தின்றதால் வெம்பிப்போன சிறிய காயை,
அரும் சுரம் செல்வோர் அருந்தினர் கழியும்அரிய அந்தப் பாலைவழியே செல்வோர் பறித்து உண்டவாறே கடந்துசெல்லும்
காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனிகாடு பின்னால் சென்று மறைய வந்துவிட்டார், முடிவுக்கு வரட்டும், இனிமேல் –
பல் இதழ் உண்கண் மடந்தை நின்பல இதழ்களையுடைய மலர் போன்ற மையுண்ட கண்களைக் கொண்ட மடந்தையே! உன்
நல் எழில் அல்குல் வாடிய நிலையேநல்ல அழகுள்ள அல்குல் வாடிப்போன நிலை –
# 352# 352
விழு தொடை மறவர் வில் இட தொலைந்தோர்சிறப்பாக அம்பினைத் தொடுப்பதில் வல்ல மறவர்கள் வில்லால் எய்ய, இறந்துபட்டோரின்
எழுத்து உடை நடுகல் அன்ன விழு பிணர்பெயர் பொறித்த எழுத்துகளைக் கொண்ட நடுகல்லைப் போன்று, சிறப்பும் சொரசொரப்பும் உள்ள
பெரும் கை யானை இரும் சினம் உறைக்கும்பெரிய கையை உடைய யானை, பெரும் சினம் கொண்டதாகத் தங்கியிருக்கும்
வெம் சுரம் அரிய என்னார்கொடிய பாலைவழி கடப்பதற்கு அரிது என்று சொல்லாராய்,
வந்தனர் தோழி நம் காதலோரேவந்துவிட்டார் தோழி! நம் காதலர்.
  
# 353# 353
எரி கொடி கவைஇய செம் வரை போலஎரியும் தீச்சுவாலைகள் இறுக்கி அணைத்திருக்கும் சிவந்த மலையைப் போல
சுடர் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம்சுடர்விடும் பூண்கள் ஒளிரும் ஏந்திய அழகிய மார்பினை
நீ இனிது முயங்க வந்தனர்நீ இனிதாக அணைத்துக்கொள்ள வந்துவிட்டார்,
மா இரும் சோலை மலை இறந்தோரேஇருளடர்ந்த பெரிய சோலைகளைக் கொண்ட மலைகளைக் கடந்து சென்றவர்.
# 354# 354
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றைதனது இனிமையான பெண்நாயைக் கூடிய செந்நாயின் ஆணானது,
மறி உடை மான் பிணை கொள்ளாது கழியும்குட்டியையுடைய பெண்மானை உணவாக்கிக் கொள்ளாமல் விலகிப்போகும்
அரிய சுரன் வந்தனரேஅரிய பாலைவழியில் வந்தனர் –
தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்தேதெரிந்தெடுத்த அணிகலன்களை அணிந்த அரிவையே! உன் பண்புகள் அவரை இழுத்துவர, விரைந்து –
  
# 355# 355
திருந்து இழை அரிவை நின் நலம் உள்ளிதிருத்தமான அணிகலன்களை உடைய அரிவையே! உனது நலத்தை எண்ணி,
அரும் செயல் பொருள்_பிணி பெரும் திரு உறுக எனசெயற்கரிய செயலாகிய பொருளீட்டலை, “பெரும் நலம் பெறுக” என வாழ்த்திவிட்டு
சொல்லாது பெயர்தந்தேனே பல் பொறிசொல்லாமற்கொள்ளாமல் திரும்பிவிட்டேன்; பல புள்ளிகளையும்
சிறு கண் யானை திரிதரும்சிறிய கண்களையும் கொண்ட யானைகள் நடமாடும்
நெறி விலங்கு அதர கானத்தானேவழிகள் குறுக்கும்நெடுக்கும் கிடக்கும் முறைமையினைக் கொண்ட காட்டினில் –
# 356# 356
உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்நினைத்துப்பார்க்கவே இனிக்கின்றது, நிச்சயமாக! செல்வம்படைத்தவர்கள்
யானை பிணித்த பொன் புனை கயிற்றின்தங்கள் யானையைக் கட்டிப்போடும் பொன்னால் செய்யப்பட்ட கயிற்றைப் போல
ஒள் எரி மேய்ந்த சுரத்து இடைஒளிரும் நெருப்பு சுருள்சுருளாக மேய்ந்து தீர்த்த பாலை வழியிடையே
உள்ளம் வாங்க தந்த நின் குணனேஎன் நெஞ்சினை வளைத்துத் தடுத்து உன்பால் கொண்டுவந்த உன் குணநலன்களை –
  
# 357# 357
குரவம் மலர மரவம் பூப்பகுரவம் பூக்கள் மலர்ந்திருக்க, மரவ மலர்கள் பூத்திருக்க,
சுரன் அணி கொண்ட கானம் காணூஉபாலை வழிமுழுதும் அழகுபெற்றுத் திகழும் காட்டினைக் கண்டபோது,
அழுங்குக செய் பொருள் செலவு என விரும்பி நின்விலக்கிவிடுக, பொருளீட்டுவதற்கான பயணத்தை, என்று திரும்பிச் செல்ல விரும்பி, உன்
அம் கலிழ் மாமை கவினஅழகொழுகும் மா நிற மேனி மேலும் பொலிவுபெற
வந்தனர் தோழி நம் காதலோரேவந்துவிட்டார் தோழி! நம் காதலர்!
# 358# 358
கோடு உயர் பன் மலை இறந்தனர் ஆயினும்உச்சிகள் உயர்ந்த பல மலைகளைக் கடந்து சென்றாராயினும்
நீட விடுமோ மற்றே நீடு நினைந்துநெடுநாள் அங்குத் தங்கியிருக்க விடுமோ? அந்த நீண்ட பிரிவை எண்ணி
துடை-தொறும் துடை-தொறும் கலங்கிதுடைக்கத் துடைக்கக் கலங்கிப்போய்
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணேஉடைத்துக்கொண்டு வரும் வெள்ளமாய்ப் போய்விட்ட கண்கள் –
  
# 359# 359
அரும் பொருள் வேட்கையம் ஆகி நின் துறந்துகிட்டுவதற்கரிய பொருள்மீது பற்றுடையவனாகி, உன்னைத் துறந்து
பெரும் கல் அதர் இடை பிரிந்த_காலைபெரிய பாறைகளின் வழியே செல்லும் பாதையினிடையே பிரிந்து சென்றபோது
தவ நனி நெடிய ஆயின இனியேமிக மிக நீண்டுகொண்டே சென்றது; இப்பொழுது
அணி_இழை உள்ளி யாம் வருதலின்அழகிய அணிகலன்களை அணிந்தவளாகிய உன்னை எண்ணி நான் வருவதால்
நணிய ஆயின சுரத்து இடை ஆறேகுறுந்தொலைவுள்ளதாகத் தோன்றுகிறது – அந்தப் பாலைநிலத்திடையே செல்லும் வழி.
# 360# 360
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடைநெருப்பு முற்றிலும் எரித்துவிட்ட வெப்பம் நிலவும் நீண்ட இடைவெளி என்பது
அரிய ஆயினும் எளிய அன்றேகடப்பதற்கு அரியது என்றாலும், மிக எளிதாகப் போய்விட்டதல்லவா! –
அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பிஆசை கொண்ட நெஞ்சம் உன்னை அணைத்துக்கொள்வதை மிகவும் விரும்பி,
கடு மான் திண் தேர் கடைஇவிரைந்து செல்லும் குதிரைகளைக் கொண்ட திண்ணிய தேரை ஓட்டிக்கொண்டு,
நெடு மான் நோக்கி நின் உள்ளி யாம் வரவேநீண்ட மான்கண்ணினையுடையவளே! உன்னை நினைத்துக்கொண்டு நான் வருவது –
  
# 37 முன்னிலை பத்து# 37 முன்னிலை பத்து
# 361# 361
உயர் கரை கான்யாற்று அவிர் மணல் அகன் துறைஉயர்ந்த கரையைக் கொண்ட காட்டாற்றின் மின்னுகின்ற மணலைக் கொண்ட அகன்ற துறையில்
வேனில் பாதிரி விரி மலர் குவைஇவேனில் காலத்துப் பாதிரியின் விரிந்த மலர்களைக் கூட்டிக் குவித்து,
தொடலை தைஇய மடவரல் மகளேமாலையாகத் தைக்கும் கபடமற்ற பெண்ணே!
கண்ணினும் கதவ நின் முலையேஉன் கண்ணைக்காட்டிலும் சினமுடையன உன் முலைகள்.
முலையினும் கதவ நின் தட மென் தோளேஅந்த முலைகளைக் காட்டிலும் சினமுள்ளன உன் பெரிய மென்மையான தோள்கள்.
# 362# 362
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அரும் கவலைபிணங்களின் மீதான கற்குவியல்களைக் கொண்ட ஒதுங்கிச் செல்வதற்கும் அரிய கிளைத்த வழிகளில்,
சிறு கண் யானை உறு பகை நினையாதுசிறிய கண்களைக் கொண்ட யானையினால் ஏற்படும் கெடுதலையும் எண்ணிப்பாராமல்
யாங்கு வந்தனையோ பூ தார் மார்பஎவ்வாறு வந்தாய் பூமாலை அணிந்த மார்பினையுடையவனே! –
அருள் புரி நெஞ்சம் உய்த்தரஎமக்கு அருள்செய்யவேண்டும் என்ற நெஞ்சம் தூண்டிவிட,
இருள் பொர நின்ற இரவினானேஇருள் தடுத்து நிற்கும் இந்த இரவினில் –
  
# 363# 363
சிலை வில் பகழி செம் துவர் ஆடைசிலை மரத்தால் செய்யப்பட்ட வில்லையும், அம்புகளையும், செக்கச்செவேலென்ற ஆடையையும் கொண்ட
கொலை வில் எயினர் தங்கை நின் முலையகொலை செய்யும் வில்லினைக் கொண்ட வாழ்க்கையினரான எயினரின் தங்கையே! உன் முலையிலிருப்பது
சுணங்கு என நினைதி நீயேசுணங்கு என நினைத்துக்கொண்டிருக்கிராய் நீ!
அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சேஎன்னைத் தாக்கி வருத்தும் தெய்வம் என நினைக்கிறது அதனால் தாக்கப்பட்ட என் நெஞ்சம்.
# 364# 364
முளவு_மா வல்சி எயினர் தங்கைமுள்ளம்பன்றியை உணவாகக் கொண்ட எயினரின் தங்கையான
இள மா எயிற்றிக்கு நின் நிலை அறியஇளமையும் மாநிறமும் உடைய பாலைநிலப் பெண்ணுக்கு உன் நிலையைப் புரிந்துகொள்ளும்படி
சொல்லினேன் இரக்கும் அளவைஎடுத்துக் கூறினேன்; அவளது உடன்பாட்டை நான் இரந்து பெறும் வரை
வெல் வேல் விடலை விரையாதீமேவெல்லுகின்ற வேலையுடைய இளங்காளையே! நீ அவசரப்படவேண்டாம்.
  
# 365# 365
கண மா தொலைச்சி தன் ஐயர் தந்தகூட்டமான மான்களைக் கொன்று, தன் அண்ணன்மார் தந்த
நிண ஊன் வல்சி படு புள் ஓப்பும்கொழுப்புள்ள தசையுணவினைக் கவர்ந்து செல்ல வரும் பறவைகளை விரட்டும்
நலம் மாண் எயிற்றி போல பல மிகுநலங்களால் சிறந்த பாலைநிலப் பெண்ணைப் போல பலவான மிகுந்த
நன் நலம் நய வரவு உடையைநல்ல அழகியல்புகளைப் பிறர் விரும்பும்வகையில் பெற்றுவைத்திருக்கிறாய்!
என் நோற்றனையோ மாவின் தளிரேஎன்ன தவம் செய்திருக்கிறாயோ, மாந்தளிரே!
# 366# 366
அன்னாய் வாழி வேண்டு அன்னை தோழிஅன்னையே, வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! என் தோழியின் மேனி
பசந்தனள் பெரிது என சிவந்த கண்ணைபசந்துபோயிற்று பெரிதும் என்று சிவந்துபோன கண்ணையுடையவளாய்,
கொன்னே கடவுதி ஆயின் என்னதூஉம்வீணே அவளைக் கேள்விகேட்டுக்கொண்டிருந்தால், எப்படியேனும்
அறிய ஆகுமோ மற்றேஅறிந்துகொள்ள முடியுமா?
முறி இணர் கோங்கம் பயந்த மாறேகோங்கத்தின் தளிர்க் கொத்தை ஒருவன் கொண்டுவந்து கொடுத்ததினால் இது ஏற்பட்டதென்று –
  
# 367# 367
பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீபொரிந்துபோன அடிப்பகுதியை உடைய கோங்கின் பொன்னைப் போன்ற புதிய பூக்களை,
விரி இணர் வேங்கையொடு வேறு பட மிலைச்சிவிரிந்த பூங்கொத்துகளை உடைய வேங்கையோடு மாறுபட்டுத்தோன்றும்படி அணிந்து,
விரவு மலர் அணிந்த வேனில் கான்யாற்றுபலவாகக் கலந்த மலர்களை அணிந்த இளவேனில்காலத்துக் காட்டாற்றில்,
தேரொடு குறுக வந்தோன்தேரோடு குறுக்காக வந்தவனின்
பேரொடு புணர்ந்தன்று அன்னை இவள் உயிரேபெயரோடு ஒன்றிக் கலந்திருப்பது, அன்னையே! இவளது உயிர்.
# 368# 368
எரி பூ இலவத்து ஊழ் கழி பன் மலர்நெருப்பைப் போன்ற பூக்களைக் கொண்ட இலவமரத்திலிருந்து மலர்ந்து வாடிப்போய் உதிர்ந்த பல மலர்கள்
பொரி பூ புன்கின் புகர் நிழல் வரிக்கும்பொரியைப் போன்ற பூக்களைக் கொண்ட புன்கமரத்தின் புள்ளிபுள்ளியான நிழலில் கோலமிட்டுக்கிடக்கும்
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சிகுளிர்ச்சியான பக்குவம் கொண்ட வேனில் காலத்தின் இன்ப நுகர்ச்சியை
எம்மொடு கொண்மோ பெரும நின்எம்மோடும் கொள்வாயாக, பெருமானே! உன்
அம்_மெல்_ஓதி அழிவு இலள் எனினேஅழகிய மென்மையான கூந்தலையுடையவள் பிரிவுத்துன்பம் இல்லாதவளாக இருந்தால் –
  
# 369# 369
வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில்வளமையான மலர்கள் சிதைவுறும்படி வண்டுகள் மொய்க்கும் நறிய பொழிலில்
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்மூங்கிலின் முளை போன்ற வரிசையான பற்களுடன் முறுவல் செய்யும் ஒருத்தியை நேற்று
குறி நீ செய்தனை என்ப அலரேநீ குறிப்புக்காட்டி அழைத்தாய் என்று ஊரே பேசும் பேச்சு
குரவ நீள் சினை உறையும்குரவ மரத்தின் நீண்ட கிளையில் தங்கியிருக்கும்
பருவ மா குயில் கௌவையில் பெரிதேவேனிற்பருவத்துக் கரிய குயில் கூவும் பேரொலியிலும் பெரிதாக இருக்கின்றது.
# 370# 370
வண் சினை கோங்கின் தண் கமழ் படலைவளமுள்ள கிளைகளையுடைய கோங்க மரத்தின் மலரால் செய்த குளிர்ந்த மணங்கமழும் மாலையை,
இரும் சிறை வண்டின் பெரும் கிளை மொய்ப்பகரிய சிறகினைக் கொண்ட வண்டின் பெருங்கூட்டம் மொய்க்க,
நீ நயந்து உறையப்பட்டோள்உன்னால் விரும்பி அணிவிக்கப்பட்டவள்
யாவளோ எம் மறையாதீமேயாரோ? என்னிடம் மறைக்கவேண்டாம்.
  
# 38 மகட் போக்கிய வழி தாயிரங்கு பத்து# 38 மகட் போக்கிய வழி தாயிரங்கு பத்து
# 371# 371
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்மள்ளர்களின் கொட்டுமுழக்கத்தைக் கேட்டு மயில்கள் களித்து ஆடுகின்ற
உயர் நெடும் குன்றம் படு மழை தலைஇஉயர்ந்து நீண்ட குன்றுகளிலெல்லாம் தொங்கும் மேகங்கள் மழைபெய்து,
சுர நனி இனிய ஆகுக தில்லபாலைவழிகள் இனிமையானவையாக ஆகுக;
அற நெறி இது என தெளிந்த என்அறம்சார்ந்த வழி இதுவே என்று சரியாக உணர்ந்த என்
பிறை நுதல் குறு_மகள் போகிய சுரனேபிறை போன்ற நெற்றியையுடைய சிறுமி போன பாலைவழிகள் –
# 372# 372
என்னும் உள்ளினள்-கொல்லோ தன்னைஎன்னையும் நினைத்துப்பார்த்தாளோ? தன்னைத்
நெஞ்சு உண தேற்றிய வஞ்சின காளையொடுதன் மனம் ஏற்றுக்கொள்ளும்படி தெளிவித்த உறுதிமொழிகளைக் கூறிய இளைஞனோடு
அழுங்கல் மூதூர் அலர் எழஆரவாரப்பேச்சுள்ள இந்த பழமையான ஊரில் பழிச்சொற்கள் உண்டாகுமாறு
செழும் பல் குன்றம் இறந்த என் மகளேசெழித்த பலவான குன்றுகளைக் கடந்து சென்ற என் மகள்தான் –
  
# 373# 373
நினை-தொறும் கலிழும் இடும்பை எய்துகநினைத்துநினைத்துக் கண்ணீர்விடும் துன்பத்தை எய்துவாளாக!
புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலைபுலியின் பிடியிலிருந்து தப்பித்த கிளைப்பட்ட கொம்புகளையுடைய முதிய கலைமான்,
மான் பிணை அணைதர ஆண் குரல் விளிக்கும்தன் பெண்மானைத் தன்னைநோக்கி வரும்படி ஆண்மைக்குரலில் அழைக்கும்
வெம் சுரம் என் மகள் உய்த்தவெம்மையான பாலைவழியில் என் மகளைக் கூட்டிச் சென்ற
அம்பு அமை வல் வில் விடலை தாயேஅம்பினைத் தொடுத்த வலிய வில்லையுடைய இளைஞனின் தாயும்.
# 374# 374
பல் ஊழ் நினைப்பினும் நல்லென்று ஊழபலமுறை நினைத்துப் பார்த்தாலும், நல்லதாகவே வாய்க்கட்டும் –
மீளி முன்பின் காளை காப்பயமனின் வலிமை கொண்ட இளைஞன் காத்துவர,
முடி அகம் புகா கூந்தலள்தலையை முடிந்து உள்ளே கொண்டையாகச் சுருட்டி வைத்துக்கொள்ள முடியாத கூந்தலையுடையவள்
கடுவனும் அறியா காடு இறந்தோளேஆண்குரங்கும் அறியாத காட்டுவழியைக் கடந்துசென்ற அவளுக்கு –
  
# 375# 375
இது என் பாவைக்கு இனிய நன் பாவைஇது என் பாவை போன்றவளுக்குப் பிடித்த பாவை;
இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளிஇது என் பச்சைக்கிளி போன்றவளுக்குப் பிடித்த பச்சைக்கிளி;
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்றுஇது என் பூவை போன்றவளுக்குப் பிடித்த பூவை என்று
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல்சுழல்கின்ற பார்வையினையும், அழகு மிகுந்த ஒளிவிடும் நெற்றியையும் உடையவளை எண்ணி,
காண்-தொறும் காண்-தொறும் கலங்கஇவற்றைக் காணும்போதெல்லாம் மனம் கலங்குமாறு
நீங்கினளோ என் பூ கணோளேஎனைவிட்டுப் பிரிந்து சென்றாளோ என் பூப்போன்ற கண்ணையுடையவள்.
# 376# 376
நாள்-தொறும் கலிழும் என்னினும் இடை நின்றுநாள்தோறும் கலங்கி அழும் என்னைக் காட்டிலும், இடையில் சிக்கிக்கொண்டு
காடு படு தீயின் கனலியர் மாதோகாட்டில் எழுந்த தீயில் வெந்துபோகட்டும் –
நல் வினை நெடு நகர் கல்லென கலங்கநல்ல வேலைப்பாடு அமைந்த நீண்ட வீட்டிலுள்ளோர் கல்லென்று கலங்கி அரற்ற,
பூ புரை உண்கண் மடவரல்பூப் போன்ற மையுண்ட கண்களைக் கொண்ட கள்ளமில்லாதவள்
போக்கிய புணர்த்த அறன் இல் பாலேவீட்டைவிட்டுப் போகுமாறு செய்த அறப்பண்பே இல்லாத விதி –
  
# 377# 377
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானைநீர் வேட்கையால் தூண்டப்பட்ட வருத்தங்கொண்ட யானை,
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்இசைக்கருவிகளோடு சேர்ந்த பெருவங்கியம் ஒலிப்பது போன்று பெருமூச்செறியும் காட்டுவழியில்
சென்றனள் மன்ற என் மகளேசென்றுவிட்டாள் என் மகள்,
பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தேபந்தையும், பாவையையும், கழங்குகளையும் எமக்கு விட்டுவிட்டு –
# 378# 378
செல்லிய முயலி பாஅய சிறகர்பறந்து செல்வதற்கு முயன்று விரித்துப் பரப்பிய சிறகினையுடைய
வாவல் உகக்கும் மாலை யாம் புலம்பவௌவால் வானுக்கு உயர்ந்து செல்லும் மாலை நேரத்தில் நாம் தனித்து வருந்த,
போகிய அவட்கோ நோவேன் தே_மொழிபோய்விட்ட அவளுக்காகவா வருந்துகிறேன்? இனிய பேச்சையுடைய தன் தோழியின்
துணை இலள் கலிழும் நெஞ்சின்துணையை இழந்தவளாய்க் கலங்கிப்போகும் நெஞ்சினோடே
இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுமேஇணை ஒத்த மையுண்ட கண்களைக் கொண்ட இவளுக்காக வருந்துகிறேன்.
  
# 379# 379
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின்தான் விரும்பும் தோழியருடன், நல்ல திருமணத்தைப் பெறும் இன்பத்தைத் துய்ப்பதைக் காட்டிலும்
இனிதாம்-கொல்லோ தனக்கே பனி வரைஇனிதாகப் போய்விட்டதோ அவளுக்கு? குளிர்ச்சியான மலைகளில்
இன களிறு வழங்கும் சோலைகூட்டமான யானைகள் நடமாடித்திரியும் சோலைகளின் வழியாக
வயக்கு_உறு வெள் வேலவன் புணர்ந்து செலவேஒளி மிகுந்த வெள்ளிய வேலினைக் கொண்டவனோடு சேர்ந்து செல்லுதல் –
# 380# 380
அத்த நீள் இடை அவனொடு போகியகடினமான பாதையைக் கொண்ட நீண்ட வெளியில் அவனோடு போய்விட்ட
முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல்முத்தைப் போன்ற அழகிய வெண்மையான பற்களையும், முகிழ்க்கின்ற புன்னகையையும் கொண்ட அந்தப் பேதையின்
தாயர் என்னும் பெயரே வல்லாறுதாய் என்ற பெயரையே அரும்பாடுபட்டுப்
எடுத்தேன் மன்ற யானேபெற்றிருக்கிறேன் நான்;
கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரேஅவளை அவனுக்குக் கொடுத்து அனுப்பிவைத்தவர்கள் அவளின் தோழிமாரே!
  
# 39 உடன்போக்கின் கண் இடை சுரத்து உரைத்த பத்து# 39 உடன்போக்கின் கண் இடை சுரத்து உரைத்த பத்து
# 381# 381
பைம் காய் நெல்லி பல உடன் மிசைந்துபசிய காய்களான நெல்லிக்காய் பலவற்றை வாயில் போட்டு மென்று தின்றுகொண்டு
செம் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர்சிவந்த அடிமரத்தையுடைய மரா மரத்தின் வரிவரியான நிழலின்கீழ் இருப்பவர்கள்
யார்-கொல் அளியர் தாமே வார் சிறையாரோ? இரங்கத்தக்கவர்கள் அவர்கள்; நீண்ட சிறகுகளையும்,
குறும் கால் மகன்றில் அன்னகுட்டையான கால்களையும் கொண்ட மகன்றில் பறவையைப் போல
உடன்புணர் கொள்கை காதலோரேசேர்ந்தே இருக்கும் கொள்கையினையுடைய காதலர்கள்!
# 382# 382
புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள் வெள் வேல்பறவைகளின் ஒலிக்கே பயந்துபோகும் கண்களையுடையவள், ஒளிபொருந்திய வேலுடன்
திருந்து கழல் காளையொடு அரும் சுரம் கழிவோள்திருத்தமான கழல்களை அணிந்த இளைஞனோடு அரிய பாலைவழியே செல்வோள்
எல் இடை அசைந்த கல்லென் சீறூர்பகற்பொழுதில் இங்கு வந்து தங்குவதால் கல்லென்ற பேச்சு எழுகின்ற சிற்றூரிலுள்ள
புனை இழை மகளிர் பயந்தஅலங்காரமான அணிகலன்கள் அணிந்த இளம்பெண்களைப் பெற்றுள்ள
மனை கெழு பெண்டிர்க்கு நோவும்-மார் பெரிதேஇல்லத்தரசியாகிய பெண்டிருக்கு இதனால் உண்டாகும் நோவு பெரிதாகும்.
  
# 383# 383
கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்றதேனை உண்ணும் சுரும்பினங்கள் ஒலிக்கும் நாள் காலையில் பாலைவழியில் செறிவான
நெடும் கால் மராஅத்து குறும் சினை பற்றிநெடிய அடிப்பகுதியைக் கொண்ட குட்டையான கிளையைப் பிடித்து
வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்றவலமாகச் சுழித்துப் பூக்கும் வெண்மையான பூங்கொத்துகளைத் தன் காதலி பறித்துக்கொள்வதற்கு நின்ற
மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றேஇளைஞனின் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது,
பஞ்சாய் பாவைக்கும் தனக்கும்தனது பஞ்சாய்ப் பாவைக்கும், தனக்குமாக,
அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டேஅழகாகத் தாழ்ந்திருக்கும் கூந்தலையுடையவள் அந்தப் பூக்களைப் பறிப்பதைக் கண்டு.
# 384# 384
சேண் புலம் முன்னிய அசை நடை அந்தணிர்தொலைவான இடத்தை நோக்கித் தளர்வான நடைபோட்டுச் செல்லும் அந்தணர்களே!
நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர்உம்மை ஒன்று இரந்து கேட்கிறேன்! எமது ஊரிலுள்ள
யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவினஎன் தாய் ஆசையோடு பேணி வளர்த்த மிகச் சிறந்த பெண்மை நலமெல்லாம் பொலிவுற்று விளங்க,
ஆரிடை இறந்தனள் என்-மின்கடிய பாதையைக் கடந்து செல்கின்றாள் என்று சொல்லுங்கள் –
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கேஒன்றுபோல் இறங்கும் முன்கைகளையுடைய என் தோழிமாரிடம் –
  
# 385# 385
கடுங்கண் காளையொடு நெடும் தேர் ஏறிஎதற்கும் துணிந்த இளைஞனோடு, அவனது நீண்ட தேரில் ஏறி,
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழியவிரட்டிப் பிடிப்பதில் வல்ல வேங்கைகளைக் கொண்ட மலை பின்புறமாகச் சென்று மறைய,
வேறு பல் அரும் சுரம் இறந்தனள் அவள் எனவேறு பல அரிய பாலைவழிகளையும் கடந்துசென்றாள் அவள் என்று
கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள்சொல்லுங்கள் – வாழ்க! வழியே செல்லும் மாந்தர்களே!
நல் தோள் நயந்து பாராட்டிஎன்னுடய அழகிய தோள்களை விரும்பிப் பாராட்டி,
என் கெடுத்து இருந்த அறனில் யாய்க்கேஎன்னை வீட்டில் பூட்டிவைத்திருந்த, தருமத்தை அறியாத என் தாய்க்கு –
# 386# 386
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம்துன்பம் தரும் யானைகளோடு, புலிகளும் நடமாடித்திரியும் கடினமான வழியில்
நயந்த காதலன் புணர்ந்து சென்றனளேதான் விரும்பிய காதலனோடு சேர்ந்து சென்றாள் –
நெடும் சுவர் நல் இல் மருண்டநெடிய சுற்றுச் சுவரைக் கொண்ட நல்ல இல்லத்தில், மனம் மயங்கி
இடும்பை உறுவி நின் கடும் சூல் மகளேதுன்பம் அடைகிறவளே! உன் முதல் சூலில் பெற்ற மகள் –
  
# 387# 387
அறம் புரி அரு மறை நவின்ற நாவில்அறத்தைச் சொல்லும் அரிய மறைகளைப் பலமுறை ஓதிப்பயின்ற நாவினையும்,
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்றுஅந்த வேத முறைகளைக் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களையும் உடைய அந்தணர்களே! உங்களைத் தொழுகிறேன் என்று
ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டேஒளிரும் தோள்வளைகளை அணிந்த உன் மகள் பற்றிக் கேட்கும் பேதையாகிய பெண்ணே!
கண்டனெம் அம்ம சுரத்து இடை அவளைகண்டோம், வரும் வழியிடையே அவளை,
இன் துணை இனிது பாராட்டதனது இனிய துணையானவன் இனிமையுடன் பாராட்ட,
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளேகுன்றுகள் உயர்ந்துநிற்கும், வெயிலில் ஒளிவிடும் மலைகளைக் கடந்து சென்றாள்.
# 388# 388
நெருப்பு அவிர் கனலி உருப்பு சினம் தணியநெருப்பு தழலாய்த் தகிக்கும் சூரியனின் கொடுமையான சினம் தணியும்வரை
கரும் கால் யாத்து வரி நிழல் இரீஇகரிய அடிப்பகுதியையுடைய யா மரத்தின் வரி வரியான நிழலில் தங்கியிருந்துவிட்டு,
சிறு வரை இறப்பின் காண்குவை செறி தொடிசிறிய குன்றின் இறக்கத்தில் நின்று பார்த்தால் காணலாம், செறிவாக வளையல்கள் அணிந்த
பொன் ஏர் மேனி மடந்தையொடுபொன்னைப் போன்ற மேனியையுடைய சிறுபெண்ணுடன்
வென் வேல் விடலை முன்னிய சுரனேவெற்றிகொள்ளும் வேலினையுடைய இளைஞன் சென்ற வழியை –
  
# 389# 389
செய்வினை பொலிந்த செறி கழல் நோன் தாள்வேலைப்பாட்டில் சிறந்த செறிவான கழலையுடைய வலிமைமிக்க காலினைக் கொண்ட
மை அணல் காளையொடு பைய இயலிகரிய தாடியைக் கொண்ட காளையோடு மெதுவாக நடந்துகொண்டு
பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தைகொல்லிப்பாவை போன்ற என் அழகிய வளையல் அணிந்த சிறுபெண்
சென்றனள் என்றிர் ஐயசென்றாள் என்று சொல்கிறீர்கள், ஐயன்மாரே!
ஒன்றினவோ அவள் அம் சிலம்பு அடியேதரையில் பதிந்து சென்றனவோ அவளது அழகிய சிலம்பணிந்த பாதங்கள்?
# 390# 390
நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுதுநல்லவர்களிடமெல்லாம் சென்று, உள்ளங்கையை விரித்தும், தொழுதும்
பல் ஊழ் மறுகி வினவுவோயேபல முறை, மனம் அலைமோத, கேட்பவளே!
திண் தோள் வல் வில் காளையொடுதிண்ணிய தோள்களில் வலிமையான வில்லைக்கொண்ட இளைஞனோடு
கண்டனெம் மன்ற சுரத்து இடை யாமேபார்த்தோம், மெய்யாக, வருகிற வழியிலே, நாங்கள்.
  
# 40 மறுதரவு பத்து# 40 மறுதரவு பத்து
# 391# 391
மறு இல் தூவி சிறு_கரும்_காக்கைகறை படியாத இறகுகளையுடைய சிறிய கரிய காக்கையே!
அன்பு உடை மரபின் நின் கிளையோடு ஆரஒருவருக்கொருவர் அன்புகொள்ளும் மரபையுடைய உனது சுற்றத்தோடு வயிறார உண்ணும்படி
பச்சூன் பெய்த பைம் நிண வல்சிபச்சை ஊன் கலந்த புதிய கொழுப்புள்ள சோற்றினைப்
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோபொன்னால் செய்த கலத்தில் தருவேன், பார்!
வெம் சின விறல் வேல் காளையொடுகடுஞ்சினமுள்ள வெற்றிசூடும் வேலினையுடைய இளைஞனோடு
அம்_சில்_ஓதியை வர கரைந்தீமேஅழகிய சிலவான கூந்தலையுடையவள் வரும்படி கரைந்து அழைப்பாயாக!
# 392# 392
வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெறமூங்கிலின் வனப்பை இழந்த தோள்களையும், வெயில் பொசுக்கியதால்
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கிஅழகிய நலம் தொலைந்த நெற்றியையும் பார்த்து
பரியல் வாழி தோழி பரியின்வருந்தவேண்டாம், வாழ்க, தோழி! அவ்வாறு வருந்தினால்
எல்லை இல் இடும்பை தரூஉம்எல்லையற்ற துன்பத்தைத் தரும்,
நல் வரை நாடனொடு வந்த மாறேநல்ல மலைநாட்டினனோடு நான் வந்த வரவு..
  
# 393# 393
துறந்ததன் கொண்டு துயர் அட சாஅய்வீட்டைவிட்டுச் சென்றதன் முதற்கொண்டு வேதனை மேலிட மெலிந்துபோய்
அறம் புலந்து பழிக்கும் அளை கணாட்டிதருமத்தின் மீது கோபங்கொண்டு அதனைப் பழித்துரைக்கும் குழிவிழுந்த கண்ணையுடையவளே!
எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆகஉன் இன்னலுற்ற நெஞ்சத்திற்கு இன்பம் உண்டாகும்படி
வந்தனளோ நின் மட_மகள்வருகிறாளோ உன் இளைய மகள்? –
வெம் திறல் வெள் வேல் விடலை முந்துறவேகடுமையான திறங்கொண்ட வெள்ளிய வேலினையுடைய இளைஞன் முன் நடக்க –
# 394# 394
மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்தமாண்பு சிறிதும் இல்லாத நெறிமுறையோடு, மனம் கலங்க இன்னல் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று மன்றஅன்பே இல்லாத தருமமும் எனக்கு அருள்செய்வதாயிற்று, உண்மையாய் –
வெம் சுரம் இறந்த அம்_சில்_ஓதிவெப்பமிக்க பாலைவழியில் சென்ற என் அழகிய சிலவான கூந்தலையுடைய,
பெரு மட மான் பிணை அலைத்தபெரிதான பேதைமையால் பெண்மானையே நிலைகெடச்செய்யும்,
சிறு நுதல் குறு_மகள் காட்டிய வம்மேசிறிய நெற்றியையுடைய என் இளையமகளை என் கண்முன் காட்டிற்று, வந்து பாருங்கள்.
  
# 395# 395
முளி வயிர் பிறந்த வளி வளர் கூர் எரிகாய்ந்துபோன மூங்கிலில் உற்பத்தியாகி, காற்றால் வளர்க்கப்பட்ட கூர்மையான கொழுந்துகளையுடைய நெருப்பின்
சுடர் விடு நெடும் கொடி விடர் முகை முழங்கும்ஒளிவிடும் நீண்ட கொடியானது மலைப் பிளவுகளின் பொந்துகளில் முழக்கமிடும்
இன்னா அரும் சுரம் தீர்ந்தனம் மென்மெலகொடுமையான, கடத்தற்கரிய பாலைவழியைக் கடந்துவிட்டோம்; மெல்லமெல்ல
ஏகு-மதி வாழியோ குறு_மகள் போது கலந்துநடந்துவா! வாழ்க! இளம்பெண்ணே! மலரும் பருவத்துப் பூக்களைச் சுமந்துகொண்டு,
கறங்கு இசை அருவி வீழும்முழங்குகின்ற ஓசையையுடைய அருவி விழுகின்ற
பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டேவெயிலில் ஒளிவிடும் செறிவான சோலைகளுள்ள நம் மலைகள் பொருந்திய நாட்டுக்கு –
# 396# 396
புலி பொறி வேங்கை பொன் இணர் கொய்து நின்புலியின் புள்ளிகளைப் போன்ற வேங்கையின் பொன்னிறப் பூங்கொத்துகளைக் கொய்து உன்னுடைய
கதுப்பு அயல் அணியும் அளவை பைபயகூந்தலின் ஓரத்தில் சூட்டிவிடுவதற்குள்ளே, மெல்ல மெல்ல
சுரத்து இடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தைவழி நடந்த வருத்தத்தை ஆற்றிக்கொள் மடந்தையே!
கல் கெழு சிறப்பின் நம் ஊர்மலைகள் பொருந்திய சிறப்பினையுடைய நமது ஊருக்குப்
எல் விருந்து ஆகி புகுகம் நாமேபகல் விருந்தாளியாய் நுழைவோம் நாம்.
  
# 397# 397
கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றைதொங்கிக்கொண்டிருக்கும் மயிர்களைக் கொண்ட பிடரியையுடைய செந்நாயின் ஆணானது,
குருளை பன்றி கொள்ளாது கழியும்குட்டிகளைக் கொண்ட பன்றியினைத் தாக்காமல் ஒதுங்கிச் செல்லும்
சுரம் நனி வாராநின்றனள் என்பதுபாலைவழியின் பெரும்பகுதியைக் கடந்துவந்துவிட்டாள் என்பதனை
முன் உற விரைந்த நீர் உரை-மின்எமக்கு முன்னாக விரைந்து செல்லும் நீங்கள் சொல்லுங்கள் –
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கேஇனிய நகையுடன் முறுவல் பூக்கும் என் விளையாட்டுத் தோழியருக்கு –
# 398# 398
புள்ளும் அறியா பல் பழம் பழுனிபறவைகளும் அறிந்துகொள்ளாதபடி பல பழங்கள் பழுத்து,
மட மான் அறியா தட நீர் நிலைஇஇளமையான மான்கள் அறிந்துகொள்ளாதபடி பெரிதான நீர்நிலைகள் நிலைபெற்று
சுரம் நனி இனிய ஆகுக என்றுபாலைவழிகள் மிகவும் இனியன ஆகுக என்று
நினைத்-தொறும் கலிழும் என்னினும்நினைக்கும்போதெல்லாம் கண்கலங்கி அழுகின்ற என்னைக் காட்டிலும்
மிக பெரிது புலம்பின்று தோழி நம் ஊரேமிகவும் பெரிதாகப் புலம்புகின்றது தோழியே! நமது ஊர்!
  
# 399# 399
நும் மனை சிலம்பு கழீஇ அயரினும்உமது வீட்டில் காலின் சிலம்பைக் கழற்றும் சடங்கினைச் செய்தாலும்,
எம் மனை வதுவை நன் மணம் கழிக எனஎமது வீட்டில் திருமணமாகிய நல்ல மணவிழாவை நடத்துக என்று
சொல்லின் எவனோ மற்றே வெல் வேல்யாராவது சொன்னால் என்ன? வெற்றியுள்ள வேலினையும்
மை அற விளங்கிய கழல் அடிகுற்றமற விளங்கும் கழல் அணிந்த காலினையும் உடைய,
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கேபொய்கூறுவதில் வல்ல அந்த இளைஞனைப் பெற்ற தாயிடம் –
# 400# 400
மள்ளர் அன்ன மரவம் தழீஇமள்ளரைப் போன்ற வலுவுள்ள வெண்கடம்ப மரத்தைத் தழுவிக்கொண்டு
மகளிர் அன்ன ஆடு கொடி நுடங்கும்மகளிர் அசைவது போல ஆடுகின்ற மெல்லிய கொடி வளைந்து அசைகின்ற,
அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில்அருமையான பக்குவத்தில் காய்கனிகளைக் கொண்ட பெரிதான புதுமைநலம் மிக்க இளவேனில் காலத்தில்,
காதல் புணர்ந்தனள் ஆகி ஆய் கழல்காதலால் உடன்சேர்ந்தவளாகி, அழகிய கழலையும்,
வெம் சின விறல் வேல் காளையொடுகடும் சினத்தையும், வெற்றிகொள்ளும் வேலினையும் உடைய இளைஞனோடு
இன்று புகுதரும் என வந்தன்று தூதேஇன்று வீட்டுக்கு வருவாள் என்று வந்தது செய்தி.