ஐங்குறுநூறு 151-200

  
# 16 வெள்ள குருகு பத்து# 16 வெள்ள குருகு பத்து
# 151# 151
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனவெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
காணிய சென்ற மட நடை நாரைஅதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
மிதிப்ப நக்க கண் போல் நெய்தல்மிதித்துவிட, சிரிக்கின்ற கண்போல் மலர்ந்த நெய்தல்
கள் கமழ்ந்து ஆனா துறைவற்குதேன் மணத்தை ஒழியாமல் பரப்பும் துறையைச் சேர்ந்தவனுக்காக
நெக்க நெஞ்சம் நேர்கல்லேனேஉடைந்துபோன என் நெஞ்சத்துடன் அவனை ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
# 152# 152
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனவெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
காணிய சென்ற மட நடை நாரைஅதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
கையறுபு இரற்றும் கானல் அம் புலம்பு அம்செயலற்றுப்போய் ஓங்கிக் குரலெழுப்பும் கடற்கரைச் சோலையுடைய அழகிய நிலப்பகுதியின்
துறைவன் வரையும் என்பதுறையைச் சேர்ந்தவன் தன் காதற்பரத்தையை மணந்துகொள்வான் என்பார்கள்;
அறவன் போலும் அருளும்-மார் அதுவேஅறநெஞ்சினன்தான் போலும்! அவனது அருட்பண்பும் அதுவேயாகும்.
  
# 153# 153
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனவெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
காணிய சென்ற மட நடை நாரைஅதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
உளர ஒழிந்த தூவி குலவு மணல்தன் சிறகைக் கோதியதால் உதிர்ந்த இறகுகள் திரண்டுயர்ந்த மணல்
போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மைகுவியலில் எடுத்துக்கொள்ளப்படும் துறையைச் சேர்ந்தவனின் உறவினை
நன் நெடும் கூந்தல் நாடுமோ மற்றேநல்ல நெடிய கூந்தலையுடையவள் நாடுவாளோ?
# 154# 154
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனவெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
காணிய சென்ற மட நடை நாரைஅதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
கானல் சேக்கும் துறைவனோடுகடற்கரைச் சோலையில் தங்கியிருக்கும் துறையைச் சேர்ந்தவனோடு
யான் எவன் செய்கோ பொய்க்கும் இ ஊரேநான் எதனைச் செய்வேன்? பொய்கூறுகிறது இந்த ஊர்!
  
# 155# 155
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனவெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக,
காணிய சென்ற மட நடை நாரைஅதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
பதைப்ப ததைந்த நெய்தல் கழியசிறகடித்து அங்குமிங்கும் பறந்துதிரிவதால் சிதைந்துபோன நெய்தல் மலர், கழியின்
ஓதமொடு பெயரும் துறைவற்குநீர்ப்பெருக்கு வழியும்போது அதனோடு செல்லும் துறையைச் சேர்ந்தவனுக்கு
பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானேநான் பஞ்சாய்க் கோரைப் பாவையாகிய பிள்ளையை ஏற்கனவே பெற்றுவிட்டேன்.
# 156# 156
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனவெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
காணிய சென்ற மட நடை நாரைஅதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
பதைப்ப ஒழிந்த செம் மறு தூவிசிறகடித்து அங்குமிங்கும் பறந்துதிரிவதால் உதிர்துவிட்ட சிவந்த மறுவையுடைய இறகுகள்
தெண் கழி பரக்கும் துறைவன்தெளிந்த கழியின் நீரில் பரவலாய்க் கிடக்கும் துறையைச் சேர்ந்தவன்
எனக்கோ காதலன் அனைக்கோ வேறேஎன்னைப்பொருத்தமட்டிலும் அன்புடையவன்தான்! ஆனால் என் அன்னை போன்ற தலைவிக்கு அப்படி இல்லையே!
  
# 157# 157
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனவெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
காணிய சென்ற மட நடை நாரைஅதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
காலை இருந்து மாலை சேக்கும்ககலையிலிருந்து மாலைவரை அங்கு தங்கியிருக்கும்
தெண் கடல் சேர்ப்பனொடு வாரான்தெளிந்த நீரையுடைய கடலைச் சேர்ந்த தலைவனாகிய தன் தந்தையோடு வராமல்,
தான் வந்தனன் எம் காதலோனேதானே தனியாக வந்தான் என் அன்புக்குரிய புதல்வன்.
# 158# 158
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனவெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
காணிய சென்ற மட நடை நாரைஅதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
கானல் அம் பெரும் துறை துணையொடு கொட்கும்கடற்கரைச் சோலையுள்ள அழகிய பெரிய துறையில் தன் துணையோடு சுற்றித்திரியும்
தண்ணம் துறைவன் கண்டிகும்குளிர்ந்த அழகிய துறைவனே! சென்று காண்பாயாக!
அம் மா மேனி எம் தோழியது துயரேஅழகிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய எமது தோழியாகிய உன் பரத்தையின் துயரத்தை –
  
# 159# 159
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனவெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
காணிய சென்ற மட நடை நாரைஅதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
பசி தின அல்கும் பனி நீர் சேர்ப்பபசி தன்னை வாட்டவும் அங்கேயே தங்கியிருக்கும் குளிர்ந்த கடல்நீர்ப்பரப்பின் தலைவனே!
நின் ஒன்று இரக்குவன் அல்லேன்உன்னிடம் ஒன்றனைக் கேட்கிறேன், ஆனால் இரந்து கேட்கவில்லை!
தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனேதந்துவிட்டுச் செல், நீ எடுத்துக்கொண்ட இவளின் பெண்மைநலத்தை.
# 160# 160
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனவெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
காணிய சென்ற மட நடை நாரைஅதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவவருந்தியதற்கு மேலும் மிகுந்த துயரநோய் கொள்ளும் துறையைச் சேர்ந்தவனே!
பண்டையின் மிக பெரிது இனைஇஉன் பரத்தை முன்னைக் காட்டிலும் மிகவும் பெரிதாக வருந்துவதால்
முயங்கு-மதி பெரும மயங்கினள் பெரிதேசென்று அவளைத் தழுவிக்கொள்க பெருமானே! மனம் குன்றிப்போனாள் பெரிதும்.
  
# 17 சிறுவெண் காக்கை பத்து# 17 சிறுவெண் காக்கை பத்து
# 161# 161
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கைபெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
கரும் கோட்டு புன்னை தங்கும் துறைவற்குகரிய கிளைகளையுடைய புன்னையில் தங்கியிருக்கும் துறையைச் சேர்ந்தவனுக்காகப்
பயந்த நுதல் அழிய சாஅய்பசந்துபோன நெற்றி தன் அழகழிந்து வாட,
நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதேஅவனை விரும்பிய நெஞ்சமும் காமநோய்வாய்ப்பட்டதே!
# 162# 162
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கைபெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டுநீந்துமளவுக்கு நீரைக் கொண்ட கரிய கழியில் தன் இரையைத் தேடி உண்டு
பூ கமழ் பொதும்பர் சேக்கும்பூ மணக்கும் பொழிலில் தங்கியிருக்கும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவேதுறையைச் சேர்ந்தவனின் சொல்லோ பொய்த்துப் போயினவே!
  
# 163# 163
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கைபெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
இரும் கழி துவலை ஒலியின் துஞ்சும்கரிய கழியில் அலைகள் நீர்திவலைகளைத் தெறிக்கும் ஒலியைக் கேட்டுத் தூங்கும்
துறைவன் துறந்து என துறந்து என்துறையைச் சேர்ந்த தலைவன் பிரிந்து சென்றானாக, கழன்று விழுந்தன என்
இறை ஏர் முன்கை நீங்கிய வளையேஇறங்கிவரும் அழகிய முன்கையிலிருந்து நீங்கிய வளையல்கள்.
# 164# 164
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கைபெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
இரும் கழி மருங்கின் அயிரை ஆரும்கரிய கழியின் ஓரத்தில் அயிரை மீனை நிறைய உண்ணும்
தண்ணம் துறைவன் தகுதிகுளிர்ச்சியான அழகிய துறையைச் சேர்ந்தவனின் தகுதியானது
நம்மோடு அமையாது அலர் பயந்தன்றேநம்மை வருத்துவதோடு மட்டும் நில்லாமல், ஊரே பேசும் பழிச் சொல்லையும் உண்டாகிவிட்டது.
  
# 165# 165
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கைபெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
அறு கழி சிறு மீன் ஆர மாந்தும்வற்றிக்கொண்டுவரும் கழியில் சிறிய மீன்களை வயிறார விரைந்துண்ணும்
துறைவன் சொல்லிய சொல் என்துறையைச் சேர்ந்தவன் சொன்ன சொல் என்
இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவேஇறங்கி வரும் தோள்களின் அழகிய ஒளிவிடும் வளையல்களைக் கழற்றிக்கொண்டுபோய்விட்டது.
# 166# 166
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கைபெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம்வரிகளையுடைய வெண்மையான சோழிகளைக் கண்டு வலையோ என்று எண்ணி வெருளும்
மெல்லம்புலம்பன் தேறிமென்மையான நெய்தல்நிலத் தலைவனின் சொற்களை நம்பி
நல்ல ஆயின நல்லோள் கண்ணேதம் நலம் இழந்தனவாயின இந்த நல்லவளின் கண்கள்.
  
# 167# 167
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கைபெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
இரும் கழி இன கெடிறு ஆரும் துறைவன்கரிய கழியில் கூட்டமான கெடிற்றுமீன்களை நிறைய உண்ணும் துறையைச் சேர்ந்தவன்
நல்குவன் போல கூறிமுன்னர் விரும்பி அன்புசெய்பவன் போல இனிய மொழிகளைக் கூறி,
நல்கான் ஆயினும் தொல் கேளன்னேஇப்போது அன்புசெய்யானாயினும் நெடுங்காலம் நம்மீது நட்புக்கொண்டவனல்லவோ?
# 168# 168
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கைபெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
துறை படி அம்பி அகம்_அணை ஈனும்துறையில் கிடக்கும் தோணியின் உள்கட்டைக்குள் கூடுகட்டி முட்டையிடும்
தண்ணம் துறைவன் நல்கின்குளிர்ச்சியான அழகிய துறையைச் சேர்ந்தவன் விரும்பி அன்புசெய்தால்
ஒண் நுதல் அரிவை பால் ஆரும்மேஒளிரும் நெற்றியை உடைய இந்தப் பெண் பால் மிக அருந்தும்.
  
# 169# 169
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கைபெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
பொன் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ்பொன்னைப் போன்ற பூங்கொத்துக்களையுடைய ஞாழல் மரத்தை வெறுத்தால், அரும்புகள் மலர்ந்த
புன்னை அம் பூ சினை சேக்கும் துறைவன்புன்னையின் அழகிய பூக்களைக் கொண்ட கிளையில் வந்து தங்கும் துறையைச் சேர்ந்தவனின்
நெஞ்சத்து உண்மை அறிந்தும்நெஞ்சத்தில் இருக்கும் உண்மையான எண்ணத்தை அறிந்திருந்தும்
என் செய பசக்கும் தோழி என் கண்ணேஎன்னத்திற்காகப் பசந்திருக்கின்றன தோழியே! என் கண்கள்?
# 170# 170
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கைபெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
இரும் கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்கரிய கழியில் பூத்திருக்கும் நெய்தல் மலரைச் சிதைக்கும் துறையைச் சேர்ந்த தலைவன்
நல்லன் என்றி ஆயின்நல்லவன் என்று சொல்கிறாய், எனினும்
பல் இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோபல இதழ்களைக் கொண்ட மலர் போன்ற என் மையுண்ட கண்கள் பசப்பது எதனாலோ?
  
# 18 தொண்டி பத்து# 18 தொண்டி பத்து
# 171# 171
திரை இமிழ் இன் இசை அளைஇ அயலதுகடலலைகள் முழங்கும் இனிய இசையோடு கலந்து, அடுத்திருக்கும்
முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும்முழவுகளும் முழங்கும் இனிய இசை தெருக்கள்தோறும் ஒலிக்கும்
தொண்டி அன்ன பணை தோள்தொண்டியைப் போன்ற பருத்த தோள்களைக் கொண்ட
ஒண் தொடி அரிவை என் நெஞ்சு கொண்டோளேஒளிரும் தோள்வளை அணிந்த பெண்தான் என் நெஞ்சினைக் கவர்ந்தவள்.
# 172# 172
ஒண் தொடி அரிவை கொண்டனள் நெஞ்சேஒளிரும் தோள்வளை அணிந்த பெண் கவர்ந்தனள் என் நெஞ்சத்தை!
வண்டு இமிர் பனி துறை தொண்டி ஆங்கண்வண்டுகள் ஒலிக்கும் குளிர்ச்சியான துறையைக் கொண்ட தொண்டியில் இருக்கும்
உரவு கடல் ஒலி திரை போலஎப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் கடல் ஒலிக்கின்ற அலைகளைப் போல
இரவினானும் துயில் அறியேனேஇரவுநேரத்திலும் தூக்கத்தை அறியேன்.
  
# 173# 173
இரவினானும் இன் துயில் அறியாதுஇரவிலேயும் இனிய தூக்கத்தை அறியாமல்
அரவு உறு துயரம் எய்துப தொண்டிபாம்பு தீண்டினாற் போன்ற துயரத்தை அடைவார்கள், தொண்டியின்
தண் நறு நெய்தல் நாறும்குளிர்ந்த நறிய நெய்தல் மலரின் மணம் கமழும்
பின் இரும் கூந்தல் அணங்கு உற்றோரேபின்னப்பட்ட கரிய கூந்தலையுடையவளின் வருத்துகின்ற பார்வையால் தீண்டப்பட்டவர்கள்.
# 174# 174
அணங்கு உடை பனி துறை தொண்டி அன்னவருத்தும் தெய்வங்களை உடைய குளிர்ந்த துறையைக் கொண்ட தொண்டியைப் போன்ற
மணம் கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்கு இழைமணம் கமழும் பொழிலையே சந்திக்கும் இடமாகக் குறிப்பிட்டாள், நுண்ணிய அணிகலன்களைக் கொண்டவள்;
பொங்கு அரி பரந்த உண்கண்மிகுந்த செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களையும்,
அம் கலிழ் மேனி அசைஇய எமக்கேஅழகு ஒளிரும் மேனியையும் நினைந்து வருந்திய எமக்கு –
  
# 175# 175
எமக்கு நயந்து அருளினை ஆயின் பணை தோள்எனக்குக் கனிவோடு அருள்செய்வதென்றால், மூங்கில் போன்ற தோளையும்
நன் நுதல் அரிவையொடு மென்மெல இயலிநல்ல நெற்றியையும் கொண்ட உன் தோழியோடும் மெல்ல மெல்ல நடந்து
வந்திசின் வாழியோ மடந்தைவரவேண்டும், வாழ்க மடப்பமுள்ள நங்கையே!
தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டேதொண்டியைப் போன்ற உன் பண்புகள் பலவற்றையும் கூடக்கூட்டிக்கொண்டு –
# 176# 176
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டிஎனக்குரிய பண்புகளையும், என் உறக்கத்தையும் கவர்ந்துகொண்டாள், தொண்டியின்
தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடிகுளிர்ந்த மணங்கமழும் புதிய மலர் போன்று மணக்கும் ஒளிரும் தொடி அணிந்தவள்;
ஐது அமைந்து அகன்ற அல்குல்மென்மையானதாக அமைந்த அகன்ற அல்குலையும்,
கொய் தளிர் மேனி கூறு-மதி தவறேகொய்யப்பட்ட தளிர்போன்ற மேனியையும் உடையவளே! கூறுவாயாக! நான் செய்த தவறினை!
  
# 177# 177
தவறு இலர் ஆயினும் பனிப்ப மன்றதவறு செய்யாதவராயினும் நடுங்குவர், உறுதியாய்;
இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடும் கோட்டுஉருண்டு எழும் அலைகள் மோதி மகிழும் மணல்திட்டுகளை உடைய நெடிய கரையில்
முண்டக நறு மலர் கமழும்கழிமுள்ளிச் செடிகளின் பூக்கள் மணங்கமழும்
தொண்டி அன்னோள் தோள் உற்றோரேதொண்டியைப் போன்றவளின் தோள்களைத் தழுவியவர்.
# 178# 178
தோளும் கூந்தலும் பல பாராட்டிதோளையும், கூந்தலையும் பலபடப் பாராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்இவளுடன் வாழ்வது வாய்க்குமோ, செங்கோலையுடைய
குட்டுவன் தொண்டி அன்னகுட்டுவனின் தொண்டியைப் போன்ற
என் கண்டு நயந்து நீ நல்கா_காலேஎன்னைக் கண்டு விருப்பத்துடன் நீ அன்புசெய்யாதபோது.
  
# 179# 179
நல்கு-மதி வாழியோ நளி நீர் சேர்ப்பஇவள் மீது அன்புசெலுத்துவாயாக, வாழ்க நீ, பரந்த கடல் நீர்ப்பரப்புக்குரியவனே!
அலவன் தாக்க துறை இறா பிறழும்நண்டு தாக்கியதால் துறையிலுள்ள இறாமீன் புரளும்
இன் ஒலி தொண்டி அற்றேஇனிய ஒலியைக் கொண்ட தொண்டியைப் போன்றது,
நின் அலது இல்லா இவள் சிறு நுதலேநீ இல்லாமல் தனக்கென்று ஒரு வாழ்க்கை இல்லாத இவளின் சிறிய நெற்றி.
# 180# 180
சிறு நனி வரைந்தனை கொண்மோ பெரு_நீர்மிகக் குறுகிய காலத்தில் மணந்து உரியதாக்கிக்கொள்! கடலில்
வலைவர் தந்த கொழு மீன் வல்சிவலைவீசும் மீனவர் கொண்டுவந்த மிகுதியான மீனைத் தனக்கு உணவாகக் கொள்ள
பறை தபு முது குருகு இருக்கும்பறத்தல் இயலாத முதிய நாரை பார்த்துக்கொண்டிருக்கும்
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனேதுறையைப் பொருந்திய தொண்டியைப் போன்ற இவளது நல்ல அழகை!
  
# 19 நெய்தல் பத்து# 19 நெய்தல் பத்து
# 181# 181
நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள்நெய்தல் மலர் போன்ற மையுண்ட கண்களையும், அழகாக இறங்கும் பருத்த தோள்களையும் உடையவரான
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்மணல்வீடு கட்டி விளையாடிய, பொய்யுரையை அறியாத மகளிர்
குப்பை வெண் மணல் குரவை நிறூஉம்குவிந்திருக்கும் வெண்மையான மணலில் குரவைக் கூத்துக்காக நின்றுகொண்டிருக்கும்
துறை கெழு கொண்கன் நல்கின்துறையைப் பொருந்திய தலைவன் நம்மீது அன்புசெய்தால்
உறைவு இனிது அம்ம இ அழுங்கல் ஊரேவாழ்வதற்கு இனியதாயிருக்கும் இந்த ஆரவாரமுள்ள ஊர்.
# 182# 182
நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇநெய்தலின் நறுமணமுள்ள மலரைச் செருந்திப்பூவோடு கலந்து
கை புனை நறும் தார் கமழும் மார்பன்கையால் புனையப்பட்ட மணமுள்ள மாலை கமழும் மார்பினையுடையவன்
அரும் திறல் கடவுள் அல்லன்அரிய செயல்களைச் செய்யும் ஆற்றல் உள்ள கடவுள் அல்லன்;
பெரும் துறை கண்டு இவள் அணங்கியோனேபெரிய துறையில் இவளைக் கண்டு வருத்தும் தெய்வத்தைப் போல் இவளை வருத்தமுறச் செய்தவன்.
  
# 183# 183
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன்திரண்ட நீரைக் கொண்ட அருவியையுடைய கானத்தைச் சேர்ந்த நாடனும்,
குறும் பொறை நாடன் நல் வயல் ஊரன்சிறிய குன்றுகளையுடைய நாடனும், நல்ல வயல்களைக் கொண்ட ஊரினையுடையவனும்,
தண் கடல் சேர்ப்பன் பிரிந்து என பண்டையின்குளிர்ந்த கடற்பரப்பின் உரிமையாளனுமாகிய தலைவன் பிரிந்து சென்றானாக, முன்னைக்காட்டிலும்,
கடும் பகல் வருதி கையறு மாலைஇப்போது கடும் பகலிலேயே வரத்தொடங்கிவிட்டாய், பிரிந்தோரைச் செயலற்றுப்போகச் செய்யும் மாலையே!
கொடும் கழி நெய்தலும் கூம்பவளைவான கழியில் உள்ள நெய்தல் மலர்களும் இதழ்குவிந்துபோக,
காலை வரினும் களைஞரோ இலரேநீ காலையிலேயே வந்தாலும் என் துயரத்தைக் களைபவர் யாருமில்லை.
# 184# 184
நெய்தல் இரும் கழி நெய்தல் நீக்கிநெய்தல் நிலத்திலுள்ள கரிய கழியில் உள்ள நெய்தல் பூக்களை விலக்கிவிட்டு
மீன் உண் குருகு_இனம் கானல் அல்கும்மீனை உண்ணும் குருகுக் கூட்டம் கடற்கரைச் சோலையில் தங்கியிருக்கும்
கடல் அணிந்தன்று அவர் ஊரேகடலை அழகுறப்பெற்றது அவரின் ஊர்;
கடலினும் பெரிது எமக்கு அவர் உடை நட்பேஅந்தக் கடலினும் பெரியது எனக்கு அவருடைய நட்பு.
  
# 185# 185
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறைஅசைகின்ற இதழ்களையுடைய நெய்தல் மலர்ந்திருக்கும் கொற்கையின் துறைமுகத்தில் காணப்படும்
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய்ஒளிவிடும் முத்தினைப் போன்ற பற்கள் பொருந்திய சிவந்த வாயினையும்
அரம் போழ் அம் வளை குறு_மகள்அரத்தால் பிளவுபட அறுத்த அழகிய வளையணிந்த இள மகள்
நரம்பு ஆர்த்து அன்ன தீம் கிளவியனேயாழ் நரம்பை இசைத்தது போன்ற இனிய சொல்லினையுடையவள்.
# 186# 186
நாரை நல் இனம் கடுப்ப மகளிர்நாரையின் நல்ல கூட்டத்தைப் போல, மகளிர்
நீர் வார் கூந்தல் உளரும் துறைவதம் நீர் ஒழுகும் கூந்தலை கோதிவிட்டு உலர்த்தும் துறையைச் சேர்ந்தவனே!
பொங்கு கழி நெய்தல் உறைப்ப இ துறைநீர் மிகுந்து வரும் கழியின் நெய்தல் பூக்கள் நீர்த்துளிகளை உதிர்க்க, இந்தத் துறைக்குப்
பல்_கால் வரூஉம் தேர் எனபலமுறை வருகின்றது ஒரு தேர் என்பதற்காக,
செல்லாதீமோ என்றனள் யாயேஅங்குச் செல்லவேண்டாம் என்று கூறினள் தாய்.
  
# 187# 187
நொதுமலாளர் கொள்ளார் இவையே(நாங்கள் உம் தழையுடைகளை அணிந்தால்) அயலார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இவற்றை;
எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும்எம்மோடு வந்து கடலில் நீராடுகின்ற மகளிரும்
நெய்தல் அம் பகை தழை பாவை புனையார்நெய்தல் பூவினின்றும் மாறுபட்ட இந்தத் தழையுடையைத் தம் பாவைக்கும் அணியமாட்டார்;
உடல்_அகம் கொள்வோர் இன்மையின்உடலுக்கு அகமாக இதனை அணிந்துகொள்வோர் யாரும் இங்கே இல்லையாதலால்,
தொடலைக்கு உற்ற சில பூவினரேமாலை தொடுப்போரும் தம் மாலைக்குத் தேவையாக வெகு சில பூக்களையே கொள்வார்கள்.
# 188# 188
இரும் கழி சே_இறா இன புள் ஆரும்கரிய கழியில் சிவந்த இறால் மீன்களைக் கூட்டமான பறவைகள் நிறைய உண்ணும்
கொற்கை கோமான் கொற்கை அம் பெரும் துறைகொற்கைக் கோமானின் கொற்கையிலுள்ள அழகிய பெரிய துறையில்
வைகறை மலரும் நெய்தல் போலவைகறைப் பொழுதில் மலரும் நெய்தல் பூவைப் போல
தகை பெரிது உடைய காதலி கண்ணேபேரழகு உடையது என் காதலியின் கண்கள்
  
# 189# 189
புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல்புன்னை மலர்களின் நுண்ணிய பூந்துகள் உதிர்ந்துகிடக்கும் நெய்தல் பூ
பொன்படு மணியின் பொற்ப தோன்றும்பொன் துகள் படிந்த நீல மணியைப் போலத் தோன்றும்
மெல்லம்புலம்பன் வந்து எனமென்புலத் தலைவன் மணம்பேச வந்ததால்
நல்லன ஆயின தோழி என் கண்ணேநன்றாக ஆகிவிட்டன தோழி என் கண்கள்.
# 190# 190
தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூகுளிர்ந்த நறிய நெய்தலின் முறுக்கு அவிழ்ந்த அழகிய பூவை
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்வெண்ணெல்லை அறுக்கின்ற உழவர்கள் நீக்கிவிட்டு அறுக்கும்
மெல்லம்புலம்பன் மன்ற எம்மென்புலத்துக்குத் தலைவனே எனது
பல் இதழ் உண்கண் பனி செய்தோனேபல இதழ்களைக் கொண்ட மலர் போன்ற மையுண்ட கண்களில் நீர் வரச் செய்தவன்.
  
# 20 வளை பத்து# 20 வளை பத்து
# 191# 191
கடல் கோடு செறிந்த வளை வார் முன்கைகடலின் சங்கினால் செய்யப்பட்ட செறிவான வளைகள் ஒழுங்குபட இருக்கும் முன்கையினையும்
கழி பூ தொடர்ந்த இரும் பல் கூந்தல்கழியிலுள்ள பூக்களால் தொடுக்கப்பட்ட மலர்ச் சரத்தை அணிந்த கரிய பலவான கூந்தலையும் கொண்ட,
கானல் ஞாழல் கவின் பெறும் தழையள்கடற்கரைச் சோலையிலுள்ள ஞாழலின் அழகுபெற்ற தழையாடை அணிந்தவள்,
வரை அர_மகளிரின் அரியள் என்மலையில் வாழும் தெய்வப்பெண்டிரைக் காட்டிலும் காண்பதற்கு அரிதானவள் – அவள் என்
நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளேபொறுமையற்ற நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டு தன்னை ஒளித்துக்கொண்டவள்.
# 192# 192
கோடு புலம் கொட்ப கடல் எழுந்து முழங்கசங்கினங்கள் கடலோரநிலத்தில் சுழன்று திரிய, கடலலைகள் எழுந்து முழங்க,
பாடு இமிழ் பனி துறை ஓடு கலம் உகைக்கும்ஓசை முழங்கும் குளிர்ந்த துறையில் ஓடுகின்ற கலங்களை தரையில் உதைத்துச் செலுத்தும்
துறைவன் பிரிந்து என நெகிழ்ந்தனதுறையைச் சேர்ந்தவன் பிரிந்தான் என்றவுடன் தொளதொளவென்று ஆகி
வீங்கின மாதோ தோழி என் வளையேபெரிதானவை போல் தோன்றுகின்றன தோழி! என் வளைகள்.
  
# 193# 193
வலம்புரி உழுத வார் மணல் அடைகரைவலம்புரிச் சங்குகள் தரையை உழுதவாறு நகரும் நெடிய மணல் பரந்த அலைகளால் இறுக்கப்பட்ட கரையில்
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும்ஒளிரும் கதிர்களையுடைய முத்துக்கள் இருள் நீங்குமாறு பளிச்சிடும்
துறை கெழு கொண்க நீ தந்ததுறையைச் சேர்ந்த தலைவனே! நீ தந்த
அறை புனல் வால் வளை நல்லவோ தாமேமோதியடிக்கும் நீரையுடைய கடலில் பிறந்த வெண்மையான வளையல்கள் நல்லவையோ தாமும்?
# 194# 194
கடல் கோடு அறுத்த அரம் போழ் அம் வளைகடல் சங்கினை அறுத்த, அரத்தால் பிளக்கப்பட்ட அழகிய வளையல்களையும்
ஒண் தொடி மடவரல் கண்டிகும் கொண்கஒளிரும் தோள்வளைகளையும் கொண்ட இளமை பொருந்தியவளைக் காண்பாயாக தலைவனே!
நன் நுதல் இன்று மால் செய்து எனநல்ல நெற்றி இன்று மாறிப்போய்த் தோன்றியதாக,
கொன் ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையேஇதில் ஏதோ ஒன்று உண்டு என ஐயம் கொண்டாள் அன்னை; அது இவளின் நிலையாகும்.
  
# 195# 195
வளை படு முத்தம் பரதவர் பகரும்சங்கு ஈன்ற முத்துக்களைப் பரதவர் விலைக்கு விற்கும்
கடல் கெழு கொண்கன் காதல் மட_மகள்கடலைச் சேர்ந்த தலைவனின் அன்பிற்குரிய இளமையான மகள்
கெடல் அரும் துயரம் நல்கிதீர்ப்பதற்கு முடியாத துயரத்தைக் கொடுத்து
படல் இன் பாயல் வௌவிளேபடுத்துத்தூங்கும் இனிய உறக்கத்தைக் கவர்ந்துகொண்டாள்.
# 196# 196
கோடு ஈர் எல் வளை கொழும் பல் கூந்தல்சங்கை அறுத்துச் செய்த ஒளிவிடும் வளையல்களையும், செழுமையான பலவான கூந்தலையும்,
ஆய் தொடி மடவரல் வேண்டுதி ஆயின்ஆய்ந்தெடுத்த தோள்வளையையும் கொண்ட இளமையான மகள் வேண்டுமாயின்
தெண் கழி சே_இறா படூஉம்தெளிந்த கழிநீரில் சிவந்த இறால் மீன் அகப்படும்
தண் கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோகுளிர்ந்த கடல்பகுதிக்குச் சொந்தக்காரனே! மணம்செய்து அவளை உரிமையாக்கிக்கொள்.
  
# 197# 197
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டிஒளிவிடும் வளைகள் கலகலக்க நண்டுகளை விரட்டி விளையாடி
முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோளேதன் முகத்தைக் கூந்தலுக்குள் மறைத்துக்கொண்டவளாய்த் தலைகுனிந்து நின்றவள்,
புலம்பு கொள் மாலை மறையதனிமைத் துயரத்தைத் தன்னகத்தே கொண்ட இந்த மாலைப் பொழுது மறையும்போது
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கேநலம் பொருந்திய தனது மார்பினை வழங்குவாள் எனக்கு.
# 198# 198
வளை அணி முன்கை வால் எயிற்று அமர் நகைவளையல் அணிந்த முன்கையினையும், வெண்மையான பற்களில் கண்டோர் விரும்பும் சிரிப்பையும் கொண்ட
இளையர் ஆடும் தளை அவிழ் கானல்இளம்பெண்கள் விளையாடும் மலர்கள் கட்டவிழ்ந்த கடற்கரைச் சோலையில்
குறும் துறை வினவி நின்றசிறிய துறை எங்கு உள்ளது என்று கேட்டுக்கொண்டு நிற்கும்
நெடும் தோள் அண்ணல் கண்டிகும் யாமேநெடிய தோள்களைக் கொண்ட பெருமகன் ஒருவனைக் காண்போம் நாம்.
  
# 199# 199
கானல் அம் பெரும் துறை கலி திரை திளைக்கும்கடற்கரைச் சோலையில் உள்ள அழகிய பெரிய துறையில் உள்ள ஆரவாரிக்கும் கடலலைகள் வந்துவந்து தழுவிச் செல்லும்
வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாதுவானத்தளவு உயர்ந்த நெடிய மணல்மேட்டில் ஏறி நின்று ஓய்வின்றிப்
காண்கம் வம்மோ தோழிபார்த்துக்கொண்டிருப்போம், வருவாயாக, தோழியே!
செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடேசெறிந்து கிடக்கும் வளையல்களைக் கழன்றுபோகச் செய்தவனின் அலைகள் மோதும் கடலையுடைய நாட்டினை.
# 200# 200
இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவினஒளிவிட்டுப் பெரிதாக இருக்கும் பளபளத்த வளையல்களை அணிந்தவளே! உன் ஒளி மங்கிய நெற்றி அழகு பெறும்படியாக
பொலம் தேர் கொண்கன் வந்தனன் இனியேபொன்னாலான தேரினையுடைய தலைவன் வந்துவிட்டான் இப்போது;
விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதிகுறுக்காக ஓடும் செவ்வரிகளைக் கொண்ட நீண்ட கண்களைத் திறப்பாயாக!
நலம் கவர் பசலையை நகுகம் நாமே உன் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்ட பசலையைப் பார்த்து நகைப்போம் நாம்.