| |
#51 பாலை
பெருந்தேவனார் | #51 பாலை
பெருந்தேவனார் |
ஆள் வழக்கு
அற்ற சுரத்து இடை கதிர் தெற | ஆட்கள் நடமாட்டம்
இல்லாத காட்டுவழியில், சூரியனின் கதிர்கள் சுடுதலால் |
நீள் எரி பரந்த
நெடும் தாள் யாத்து | மிக்க வெம்மை
பரவிய – நீண்ட அடிமரத்தை உடைய யா
மரத்தில் |
போழ் வளி
முழங்கும் புல்லென் உயர் சினை | புகுந்துகொண்டு
செல்லும் காற்று முழங்கும் பொலிவற்ற உயர்ந்த கிளையில், |
முடை நசை
இருக்கை பெடை முகம் நோக்கி | புலால் விருப்பத்துடன்
இருக்கும் தன் பேடையின் முகத்தைப் பார்த்து வரும் |
ஊன் பதித்து
அன்ன வெருவரு செம் செவி | மாமிசத்துண்டைப்
பதித்து வைத்ததைப் போன்ற அச்சம்தரும் சிவந்த செவியை உடைய |
எருவை சேவல்
கரிபு சிறை தீய | ஆண் பருந்தின்
சிறகுகள் கரிந்து தீய்ந்துபோக, |
வேனில் நீடிய
வேய் உயர் நனம் தலை | வேனில் நீண்டிருக்கும்
– மூங்கில்கள் உயர்ந்த – அகன்ற காட்டுவெளியில் |
நீ உழந்து
எய்தும் செய்_வினை பொருள்_பிணி | நீ துன்புற்றதால்
கிடைக்கும் வேலையினால் அடையும் சம்பாத்தியம் |
பல் இதழ் மழை
கண் மாஅயோள்_வயின் | பூப்போன்ற குளிர்ந்த
கண்களையுடைய மாநிறத்தவளைப் |
பிரியின்
புணர்வது ஆயின் பிரியாது | பிரிவதால் பெறுவது
என்றால், அவளைப் பிரியாமல் |
ஏந்து முலை
முற்றம் வீங்க பல் ஊழ் | அவளின் நிமிர்ந்த
மார்பகங்கள் விம்ம, பலமுறை |
சே_இழை
தெளிர்ப்ப கவைஇ நாளும் | சிவந்த அணிகலன்கள்
ஒலிக்க அவளைத் தழுவி, நாள்தோறும் |
மனை முதல்
வினையொடும் உவப்ப | தலைவியுடன்
இல்வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க |
நினை மாண்
நெஞ்சம் நீங்குதல் மறந்தே | நினைப்பாயாக! சிறந்த
நெஞ்சமே! நீ அவளைவிட்டுப் பிரிதலை மறந்து – |
| |
#52 குறிஞ்சி
நொச்சிநியமம் கிழார் | #52 குறிஞ்சி
நொச்சிநியமம் கிழார் |
வலந்த வள்ளி
மரன் ஓங்கு சாரல் | சுற்றிய வள்ளிக்
கொடியையுடைய, மரங்கள் உயர்ந்த மலைச் சரிவில் |
கிளர்ந்த
வேங்கை சேண் நெடும் பொங்கர் | செழித்தெழுந்த வேங்கை
மரத்தின் மிக உயர்ந்த நெடிய கிளையிலுள்ள |
பொன் நேர் புது
மலர் வேண்டிய குற_மகள் | பொன்னைப் போன்ற புதிய
மலரினைப் பறிக்க விரும்பிய குறமகள், |
இன்னா இசைய
பூசல் பயிற்றலின் | இனிமையற்ற குரலில்
“வேங்கை வேங்கை” என்ற ஆரவாரத்தை அடுத்தடுத்து எழுப்பியதால் |
ஏ கல்
அடுக்கத்து இருள் அளை சிலம்பின் | உயர்ந்த பாறைகளின்
அடுக்குகளில் இருண்ட குகைகள் கொண்ட மலைச் சாரலில் |
ஆ கொள் வய புலி
ஆகும் அஃது என தம் | பசுவைக் கவரும் வலிய
புலியைக் கண்டு எழுப்பிய ஒலி அது என்று எண்ணி, தமது |
மலை கெழு
சீறூர் புலம்ப கல்லென | மலையை அடுத்துள்ள
சிறிய ஊரை விட்டுவிட்டு, பெருத்த ஒலியுடன் |
சிலை உடை
இடத்தர் போதரும் நாடன் | இடது கையில் வில்லை
உடையவராய் ஓடிவரும் நாட்டினைச் சேர்ந்த நம் தலைவனது |
நெஞ்சு அமர்
வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு | அகன்ற மார்பில்
அடங்கியுள்ளது அவனை விரும்பும் நமது நெஞ்சம் என்பதை அன்னைக்குத் |
அறிவிப்பேம்-கொல்
அறியலெம்-கொல் என | தெரிவிப்போமா,
தெரிவிக்காமல் இருப்போமா என்று |
இரு_பால் பட்ட
சூழ்ச்சி ஒரு_பால் | இருவகையால் நாம் எண்ணி
ஆய்ந்தது, இப்போது (தெரிவிக்கலாம் என்ற) ஒரு முடிவுக்கு |
சேர்ந்தன்று
வாழி தோழி யாக்கை | வந்துள்ளது; நீ
வாழ்வாயாக தோழியே! நம் உடம்பினின்றும் |
இன் உயிர்
கழிவது ஆயினும் நின் மகள் | இனிய உயிர்
பிரிவதாயினும் உன் மகளின் |
ஆய் மலர்
உண்கண் பசலை | ஆய்ந்தெடுத்த மலர்
(போன்ற) மைதீட்டிய கண்களில் படர்ந்துள்ள பசலையானது |
காம நோய் என
செப்பாதீமே | கலியாண ஆசையால்
உண்டானது என்று(மட்டும்) உரைத்துவிடாதே! |
| |
#53 பாலை
சீத்தலை சாத்தனார் | #53 பாலை சீத்தலை
சாத்தனார் |
அறியாய் வாழி
தோழி இருள் அற | (நீ) அறியமாட்டாய்
தோழி, வாழ்வாயாக!, இருள் நீங்கும்படியாக |
விசும்பு உடன்
விளங்கும் விரை செலல் திகிரி | வானம் முழுவதிலும்
ஒளிவிட்டு, வேகமாகச் செல்லும் ஞாயிற்றின் |
கடும் கதிர்
எறித்த விடுவாய் நிறைய | கடுமையான கதிர்கள்
எறித்து உண்டாக்கிய வெடிப்புகள் நிறையும்படியாக, |
நெடும் கால்
முருங்கை வெண் பூ தாஅய் | நீண்ட அடிமரத்தைக்
கொண்ட முருங்கையின் வெண்மையான பூக்கள் பரவியிருக்க, |
நீர் அற வறந்த
நிரம்பா நீள் இடை | நீரில்லாமல் வறண்டுபோன
முடிவில்லாமற்செல்லும் நீண்ட இடைவெளியில், |
வள் எயிற்று
செந்நாய் வருந்து பசி பிணவொடு | கூரிய பற்களையுடைய
செந்நாய் பசியால் வருந்தும் தன் பெண்நாயுடன் – |
கள்ளி அம்
காட்ட கடத்து இடை உழிஞ்சில் | கள்ளிகள் நிறைந்த
கட்டாந்தரை நிலத்தில் வாகைமரத்தின் (அடிமரத்தை) |
உள் ஊன் வாடிய
சுரி மூக்கு நொள்ளை | உள்ளிருக்கும் ஊன்
வாடிப்போன சுருண்ட மூக்குள்ள சிறிய நத்தைகள் |
பொரி அரை
புதைத்த புலம்பு கொள் இயவின் | பொரித்துப்போனது போலக்
கூட்டமாய் மொய்த்திருக்கும் ஆளரவமற்ற வழியில் |
விழு தொடை
மறவர் வில் இட வீழ்ந்தோர் | இழுத்துக்கட்டிய
வில்லையுடைய மறவர்கள் அம்பு எய்ய, இறந்து வீழ்ந்தோரின் |
எழுத்து உடை
நடுகல் இன் நிழல் வதியும் | பெயரெழுதிய
நடுகல்லின் – இனிய நிழலில்
தங்கியிருக்கும் |
அரும் சுர கவலை
நீந்தி என்றும் | அரிய பாலைநிலத்தின்
கிளைத்துச் செல்லும் வழிகளைக் கடந்துசென்று, என்றும் |
இல்லோர்க்கு
இல் என்று இயைவது கரத்தல் | இல்லாதவர்களுக்கு
இல்லையென்று கூறி அவரைப் போலிருந்து மறைத்தலைச் |
வல்லா நெஞ்சம்
வலிப்ப நம்மினும் | செய்ய மாட்டாத நெஞ்சம்
வற்புறுத்தலால், நம்மைக்காட்டிலும் |
பொருளே காதலர்
காதல் | பொருளே காதலரின்
விருப்பம்; |
அருளே காதலர்
என்றி நீயே | (அதைவிடுத்து, அவரின்)
காதல் அருள்மீதுதான் என்கிறாய் நீ. |
| |
#54 முல்லை
மாற்றூர் கிழார் மகனார் கொற்றம் கொற்றனார் | #54 முல்லை மாற்றூர்
கிழார் மகனார் கொற்றம் கொற்றனார் |
விருந்தின்
மன்னர் அரும் கலம் தெறுப்ப | புதிதாய் முளைத்த
அரசர்கள் அரிய அணிகலன்களைத் திறையாகக் கொட்ட |
வேந்தனும் வெம்
பகை தணிந்தனன் தீம் பெயல் | (நம்)வேந்தனும் கொடிய
பகைமை தீர்ந்தனன்; இனிமையான மழையைப் பெய்யும் |
காரும் ஆர்கலி
தலையின்று தேரும் | மேகமும் பேரொலி
எழுப்புகிறது; தேரை |
ஓவத்து அன்ன
கோப செம் நிலம் | ஓவியம் போன்ற,
இந்திரகோபம் போன்று சிவந்த, செம்மண் நிலத்தில் |
வள் வாய் ஆழி
உள் உறுபு உருள | உறுதியான சக்கரங்கள்
பதிந்து உருண்டுவர, |
கடவுக
காண்குவம் பாக மதவு நடை | விரைந்து செலுத்துக!
காண்போம் பாகனே! செருக்கான நடையுடன் |
தாம்பு அசை
குழவி வீங்கு சுரை மடிய | கயிற்றால் கட்டப்பட்ட
இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்துக் குறைக்க |
கனையல் அம்
குரல கால் பரி பயிற்றி | கனைக்கின்ற குரலுடனே
காலால் தாவித் தாவிப் பாய்ந்து |
படு மணி மிடற்ற
பய நிரை ஆயம் | ஒலிக்கும் மணிகள்
கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம் |
கொடு மடி
உடையர் கோல் கை கோவலர் | வளைந்த
(வேட்டி)மடிப்பினையுடைய, கோலைக் கையிலே கொண்ட இடையர், |
கொன்றை அம்
குழலர் பின்றை தூங்க | கொன்றக்கனியால்
குழலிசைப்பவராய்ப் பின்னால் மெதுவே நடந்துவர, |
மனை_மனை படரும்
நனை நகு மாலை | வீடுகள்தோறும்
செல்லும், மொட்டுகள் மலரும், மாலை நேரத்தில்; |
தனக்கு என வாழா
பிறர்க்கு உரியாளன் | தனக்கென வாழாமல்
பிறர்க்கு எல்லாம் உரியவனான |
பண்ணன்
சிறுகுடி படப்பை நுண் இலை | பண்ணனின் சிறுகுடித்
தோட்டத்திலுள்ள, நுண்ணிய இலைகளையும் |
புன் காழ்
நெல்லி பைம் காய் தின்றவர் | புல்லிய விதைகளையும்
கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர் |
நீர் குடி
சுவையின் தீவிய மிழற்றி | நீர் குடிக்கும்போது
பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி, |
முகிழ் நிலா
திகழ்தரும் மூவா திங்கள் | வளரும் நிலவினால்
விளங்கும் பிறைமதியே! |
பொன் உடை தாலி
என் மகன் ஒற்றி | (கழுத்தில்)பொன்சங்கிலி
அணிந்த என் மகன் இருப்பிடம் தெரிந்து |
வருகுவை ஆயின்
தருகுவென் பால் என | வந்தால் (உனக்குப்)
பால் தருவேன் என்று |
விலங்கு அமர்
கண்ணள் விரல் விளி பயிற்றி | ஓரக்கண்ணால்
பார்த்தவளாய் விரலால் (நிலவை) மீண்டும் மீண்டும் அழைத்து, |
திதலை அல்குல்
எம் காதலி | தேமல் படர்ந்த
அல்குலையுடைய என் காதலி, |
புதல்வன்
பொய்க்கும் பூ_கொடி நிலையே | புதல்வனிடம் பொய்யாகக்
கூறும் பூங்குடியின் நிலையை(காண்போம் பாகனே) |
| |
#55 பாலை
மாமூலனார் | #55 பாலை மாமூலனார் |
காய்ந்து செலல்
கனலி கல் பக தெறுதலின் | வெம்மையுடன் செல்லும்
ஞாயிறு (சூரியன்) பாறைகள் பிளக்கச் சுடுவதால் |
ஈந்து குருகு
உருகும் என்றூழ் நீள் இடை | பறக்கும் கொக்குகள்
வருந்தும் வெப்பம் மிக்க நீண்ட வெளியில், |
உளி முக வெம்
பரல் அடி வருத்து_உறாலின் | உளிபோன்ற வாயை உடைய
பரல் கற்கள் பாதங்களை வருத்துவதால் |
விளி முறை
அறியா வேய் கரி கானம் | உயிர் எப்போது போகும்
என்று தெரியாத, மூங்கிலும் எரிந்து கரியாக நிற்கும் காட்டில் |
வய களிற்று
அன்ன காளையொடு என் மகள் | வலிமைமிக்க ஆண்யானை
போன்ற தலைவனுடன் என் மகள் |
கழிந்ததற்கு
அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம் | சென்றுவிட்டதற்காக
நான் வருந்தவில்லை. அவளைப் பிரிந்து |
ஊது உலை
குருகின் உள் உயிர்த்து அசைஇ | உலையில் ஊதும்
துருத்தி போல பெருமூச்சு விட்டு |
வேவது போலும்
வெய்ய நெஞ்சமொடு | தீயில் வேவது போன்ற
வெம்மையான நெஞ்சமுடன் |
கண்படை பெறேன்
கனவ ஒண் படை | கண்ணைமூடாமல் கனவு
காண்கிறேன்; ஒளியுடைய படையையுடைய |
கரிகால்வளவனொடு
வெண்ணிப்பறந்தலை | கரிகால்வளவனோடு
வெண்ணிப்பறந்தலையில் |
பொருது புண்
நாணிய சேரலாதன் | போரிட்டு (முதுகில்)
காயமடைந்த சேரலாதன் |
அழி கள
மருங்கின் வாள் வடக்கிருந்து என | போர்க்களத்தருகே
வாளையுயர்த்தி வடக்கிருக்க, |
இன்னா இன் உரை
கேட்ட சான்றோர் | அச் செய்தியைக் கேட்ட
சான்றோர் |
அரும் பெறல்
உலகத்து அவனொடு செலீஇயர் | சுவர்க்கத்துக்கு
அவனோடு செல்வதற்காக |
பெரும்பிறிது
ஆகிய ஆங்கு பிரிந்து இவண் | உயிர் நீத்ததைப் போல,
என் மகளைவிட்டுப் பிரிந்து இங்கே |
காதல் வேண்டி
என் துறந்து | இவ்வுலகத்து ஆசையை
விரும்பி, என்னை விட்டுப் பிரிந்து |
போதல் செல்லா
என் உயிரொடு புலந்தே | போகாத என் உயிரை
வெறுத்து (அழுகின்றேன்.) |
| |
#56 மருதம்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | #56 மருதம் மதுரை
அறுவை வாணிகன் இளவேட்டனார் |
நகை ஆகின்றே
தோழி நெருநல் | சிரிப்பை
உண்டாக்குகின்றது தோழி, நேற்று |
மணி கண்டு அன்ன
துணி கயம் துளங்க | பளிங்கைப் போன்ற
தெளிந்த நீருள்ள குளம் அலையடித்துக் கலங்க |
இரும்பு இயன்று
அன்ன கரும் கோட்டு எருமை | இரும்பினால் செய்தது
போன்ற கரிய கொம்பை உடைய எருமை |
ஆம்பல் மெல்
அடை கிழிய குவளை | ஆம்பலின் மெல்லிய
இலைகள் கிழியுமாறு, குவளையின் |
கூம்பு விடு
பன் மலர் மாந்தி கரைய | அப்போது மலர்ந்த பல
மலர்களை நிறைய உண்டு, கரையிலிருக்கும் |
காஞ்சி நுண்
தாது ஈர்ம் புறத்து உறைப்ப | காஞ்சி மரத்துப்
பூவின் நுண்ணிய தாதுக்கள் ஈரமான முதுகில் உதிர்ந்து விழ, |
மெல்கிடு கவுள
அல்கு நிலை புகுதரும் | மெல்லும்
கதுப்புகளையுடையவாய்த் தன் கொட்டிலுக்குள் நுழையும் |
தண் துறை ஊரன்
திண் தார் அகலம் | குளிர்ந்த
துறையினையுடைய ஊரனின் செறிந்த மாலையணிந்த மார்பினில் |
வதுவை நாள் அணி
புதுவோர் புணரிய | மணக்கோலத்திலிருக்கும்
புதிய பெண்களைச் சேர்க்க |
பரிவொடு வரூஉம்
பாணன் தெருவில் | ஆசையுடன் வந்த பாணன்,
தெருவில் |
புனிற்று ஆ
பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு | அண்மையில் ஈன்ற ஒரு
தாய்ப்பசு தன்மீது பாய்ந்ததால் கலங்கிப்போய், யாழினைக் கீழே போட்டு, |
எம் மனை
புகுதந்தோனே அது கண்டு | எமது வீட்டுக்குள்
புகுந்துவிட்டான், அதனைக் கண்டு |
மெய் மலி உவகை
மறையினென் எதிர் சென்று | மனத்தில் தோன்றிய
மிகுந்த மகிழ்ச்சியை மறைத்து, அவனை எதிர்கொண்டு |
இ மனை அன்று
அஃது உம் மனை என்ற | இந்த வீடு அல்ல ,
அதுவே உமது வீடு என்ற |
என்னும்
தன்னும் நோக்கி | என்னையும் தன்னையும்
நோக்கி |
மம்மர்
நெஞ்சினோன் தொழுது நின்றதுவே | மருண்ட மனத்தினனாய்
(என்னைத்) தொழுதுநின்ற நிலையே! |
| |
#57 பாலை
நக்கீரர் | #57 பாலை நக்கீரர் |
சிறு பைம் தூவி
செம் கால் பேடை | சிறிய மெல்லிய
சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை |
நெடு நீர்
வானத்து வாவு பறை நீந்தி | நீண்ட தன்மையையுடைய
வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து, |
வெயில் அவிர்
உருப்பொடு வந்து கனி பெறாஅது | வெயில் தகதகக்கும்
வெம்மையோடு வந்து, (மரத்தில்) கனி பெறாது |
பெறு நாள்
யாணர் உள்ளி பையாந்து | அம் மரத்தில்
எந்நாளில் புதிய கனிகள் கிடைக்குமோ என நினைந்து வருந்தி, |
புகல் ஏக்கு
அற்ற புல்லென் உலவை | உட்புகுந்து கனிதின்ன
ஏங்கிப்போகும் புல்லிய கிளைகளையுடைய |
குறும் கால்
இற்றி புன் தலை நெடு வீழ் | குட்டையான
அடிமரத்தையுடைய இத்திமரத்தில் புல்லிய உச்சியை உடைய நீண்ட விழுதுகள் |
இரும் பிணர்
துறுகல் தீண்டி வளி பொர | பெரிய சொரசொரப்பான
உருண்டைக் கல்லைத் தொட்டுக்கொண்டு, காற்றடிப்பதால் |
பெரும் கை யானை
நிவப்பின் தூங்கும் | பெரிய துதிக்கையையுடைய
யானை உயர்த்தினாற்போன்று ஆடும், |
குன்ற வைப்பின்
என்றூழ் நீள் இடை | குன்றத்துச்
சிற்றூர்களைக் கொண்ட கோடைகாலத்து நெடிய வெளியில் |
யாமே எமியம் ஆக
தாமே | யான் தனியனாக இருக்க,
தலைவியோ, |
பசு நிலா
விரிந்த பல் கதிர் மதியின் | குளிர்ந்த நிலா
விரிந்த பல கதிர்களையுடைய குறைமதியைப் போல, |
பெரு நல் ஆய்
கவின் ஒரீஇ சிறு பீர் | மிகவும் சிறந்த
ஆராயத்தக்க அழகு நீங்கப்பெற்று, |
வீ ஏர் வண்ணம்
கொண்டன்று-கொல்லோ | சிறிய
பீர்க்கம்பூவினைப் போன்ற நிறம் கொண்டதோ! |
கொய் சுவல்
புரவி கொடி தேர் செழியன் | கொய்த பிடரி மயிர்க்
குதிரைகளையுடைய, கொடி கட்டிய தேரையுடைய பாண்டியன் |
முதுநீர்
முன்துறை முசிறி முற்றி | பழமையான கடலின்
துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து, |
களிறு பட
எருக்கிய கல்லென் ஞாட்பின் | யானைகளைக் கொன்ற பலத்த
ஒலியையுடைய போரில் |
அரும் புண்
உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து | விழுப்புண்பட்டவரைப்
போல மிகவும் மனம் நொந்து வருந்தி |
பானாள்
கங்குலும் பகலும் | நடு இரவிலும்
பகலிலும் |
ஆனாது அழுவோள்
ஆய் சிறு நுதலே | நிற்காமல் அழுவோளின்
அழகிய சிறு நெற்றியே! |
| |
#58 குறிஞ்சி
மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார் | #58 குறிஞ்சி மதுரை
பண்ட வாணிகன் இளந்தேவனார் |
இன் இசை
உருமொடு கனை துளி தலைஇ | இனிய ஓசையுடன் கூடிய
இடியுடன் பெரிய மழை பெய்ய, |
மன் உயிர்
மடிந்த பானாள் கங்குல் | உலகத்து
உயிர்களெல்லாம் துயின்ற பாதியிரவில், |
காடு தேர்
வேட்டத்து விளிவு இடம் பெறாஅது | காட்டில் தேடுகின்ற
வேட்டை முடிவடையாமல் |
வரி அதள்
படுத்த சேக்கை தெரி இழை | புலித்தோல் விரித்த
படுக்கையில், தெரிந்தெடுத்த அணிகலன்களைக் கொண்ட |
தேன் நாறு
கதுப்பின் கொடிச்சியர் தந்தை | தேன் மணக்கும்
கூந்தலையுடைய குறப்பெண்களின் தந்தையர் |
கூதிர் இல்
செறியும் குன்ற நாட | குளிரில் தம்
வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் குன்றுகளின் தலைவனே! |
வனைந்து வரல்
இள முலை ஞெமுங்க பல் ஊழ் | வடிவமைக்கப்பட்டதைப்
போன்ற இளமையான முலைகள் அமுங்க, பலமுறை |
விளங்கு தொடி
முன்கை வளைந்து புறம் சுற்ற | மின்னும் வளையணிந்த
முன்கை வளைந்து முதுகினைச் சுற்றிக்கொள்ள |
நின் மார்பு
அடைதலின் இனிது ஆகின்றே | உனது மார்பை
அணைப்பதிலும் இனியதாயிற்று – |
நும் இல்
புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும் | நீவிர் இல்லாத
தனிமையில் நும்மை நினக்குந்தோறும் வருந்தி மெலியும், |
தண் வரல் அசைஇய
பண்பு இல் வாடை | குளிருடன் அசைந்து
வரும் பண்பு இல்லாத வாடையில், |
பதம்
பெறுகல்லாது இடம் பார்த்து நீடி | நீ வரப்பெறாமல் நும்
வருகையைப் பார்த்துப் பதனழிந்து, |
மனை மரம் ஒசிய
ஒற்றி | வீட்டு மரத்தில்
சாய்ந்து ஒட்டிக்கொண்டு |
பலர் மடி
கங்குல் நெடும் புறநிலையே | பலரும் துயிலும்
இரவில் நீண்ட நேரம் வெளியில் நின்றுகொண்டிருக்கும் என் நிலை |
| |
#59 பாலை மதுரை
மருதன் இளநாகன் | #59 பாலை மதுரை மருதன்
இளநாகன் |
தண் கயத்து
அமன்ற வண்டு படு துணை மலர் | குளிர்ந்த குளத்தில்
நிறைந்த வண்டுகள் மொய்க்கும் இரட்டை மலர்கள் போன்ற |
பெருந்தகை
இழந்த கண்ணினை பெரிதும் | பெரிய அழகினை இழந்த
கண்களையுடையவளாய்ப் பெரிதும் |
வருந்தினை
வாழியர் நீயே வடாஅது | வருந்துகின்றாய்
வாழ்வாயாக நீயே; வடக்குத் திசையில் உள்ள |
வண் புனல்
தொழுநை வார் மணல் அகன் துறை | வளமிக்க நீருள்ள யமுனை
ஆற்றின் நீண்ட மணலையுடைய அகன்ற துறையில் |
அண்டர் மகளிர்
தண் தழை உடீஇயர் | ஆயர் பெண்கள்
குளிர்ந்த தழைகளை உடுத்திக்கொள்ள |
மரம் செல
மிதித்த மாஅல் போல | மரம் வளையும்படி
மிதித்துத் தந்த கண்ணன் போல |
புன் தலை மட
பிடி உணீஇயர் அம் குழை | புல்லிய தலையையுடைய
இளைய பெண்யானை உண்பதற்காக, அழகிய குழைகளை |
நெடு நிலை
யாஅம் ஒற்றி நனை கவுள் | உயர்ந்து நிற்கும் யா
மரத்தினை வளைத்துத் தந்து, (தன்) நனைந்த கன்னத்தில் |
படி ஞிமிறு
கடியும் களிறே தோழி | படியும் வண்டுகளை
ஓட்டும் ஆண்யானை – தோழி |
சூர் மருங்கு
அறுத்த சுடர் இலை நெடு வேல் | சூரபதுமனை அவன்
சுற்றத்தோடு தொலைத்த ஒளிவிடும் இலையுள்ள நீண்ட வேலின் |
சினம் மிகு
முருகன் தண் பரங்குன்றத்து | சினம் மிகு முருகனது
குளிர்ந்த திருப்பரங்குன்றத்து |
அந்துவன் பாடிய
சந்து கெழு நெடு வரை | அந்துவன் பாடிய சந்தன
மரங்கள் மிக்க உயர்ந்த மலையில் உள்ள |
இன் தீம் பைம்
சுனை ஈர் அணி பொலிந்த | இனிய சுவையுள்ள புதிய
சுனையில் வழவழப்பான மேற்பகுதியையுடைய |
தண் நறும்
கழுநீர் செண் இயல் சிறுபுறம் | குளிர்ந்த மணமுள்ள
குவளை போன்ற கொண்டை அசையும் முதுகினை |
தாம்
பாராட்டிய_காலையும் உள்ளார் | தான் பாராட்டிய
காலத்தினையும் நினைத்துப்பாராமல், |
வீங்கு இறை பணை
தோள் நெகிழ சேய் நாட்டு | புடைத்த பக்கங்களைக்
கொண்ட மூங்கில் போன்ற தோள்கள் மெலிய, தொலைநாட்டில் |
அரும் செயல்
பொருள்_பிணி முன்னி நம் | அரிய செயலாகிய
பொருளிட்டலை நினைத்து, நம்மைப் |
பிரிந்து சேண்
உறைநர் சென்ற ஆறே | பிரிந்து தூரத்தே
தங்கியிருப்பவர் சென்ற வழியில். |
| |
#60 நெய்தல்
குடவாயில் கீரத்தனார் | #60 நெய்தல் குடவாயில்
கீரத்தனார் |
பெரும் கடல்
பரப்பில் சே இறா நடுங்க | பெரிய கடற்பரப்பில்
சிவந்த இறால் மீன் நடுக்கமுறும்படி |
கொடும் தொழில்
முகந்த செம் கோல் அம் வலை | கொடிய தொழிலான (மீனை)
முகக்கும் நேரான கோலையுடைய அழகிய வலையைக் கொண்ட |
நெடும் திமில்
தொழிலொடு வைகிய தந்தைக்கு | நீண்ட திமிலிலிருந்து
மீன்பிடிக்கும் தொழிலில் நிலைத்த தந்தைக்கு |
உப்பு நொடை
நெல்லின் மூரல் வெண் சோறு | உப்பைவிற்றுக்கொண்ட
நெல்லினின்றும் ஆக்கிய பதமான வெண்சோற்றில் |
அயிலை துழந்த
அம் புளி சொரிந்து | அயிரை மீனை இட்டு
ஆக்கிய அழகிய புளிக்குழம்பைச் சொரிந்து |
கொழு மீன்
தடியொடு குறு_மகள் கொடுக்கும் | கொழுத்த மீனின்
துண்டத்தோடே சிறுமி கொடுக்கும் இடமாகிய |
திண் தேர்
பொறையன் தொண்டி அன்ன எம் | திண்ணிய தேரையுடைய
பொறையனின் தொண்டிநகரைப் போன்ற எமது |
ஒண் தொடி
ஞெமுக்காதீமோ தெய்ய | ஒளிவிடும் தோள்வளையை
அமுக்கவேண்டாம்; |
ஊதை ஈட்டிய
உயர் மணல் அடைகரை | ஊதற்காற்று குவித்த
உயர்ந்த மணல் மேடாகிய கரையில், |
கோதை ஆயமொடு
வண்டல் தைஇ | மாலையையுடைய
தோழிகளுடனே மணல்வீடு கட்டி |
ஓரை ஆடினும்
உயங்கும் நின் ஒளி என | விளையாடினும் குன்றும்
உன் மேனி அழகு என்று, |
கொன்னும்
சிவப்போள் காணின் வென் வேல் | காரணமின்றியே
கோபிக்கும் அன்னை கண்டால், வெல்லும் வேலையுடைய |
கொற்ற சோழர்
குடந்தை வைத்த | அரசாண்மை உள்ள சோழரின்
குடந்தை நகரில் வைத்த |
நாடு தரு
நிதியினும் செறிய | பகை நாடுகள் தரும்
செல்வத்தின் காவலைக் காட்டிலும், செறிந்த |
அரும் கடி
படுக்குவள் அறன் இல் யாயே | கடுமையான காவலில்
வைத்துவிடுவாள் அறனில்லாத எம்முடைய தாய். |
| |
| |
| |
| |
| |
#61 பாலை
மாமூலனார் | #61 பாலை மாமூலனார் |
நோற்றோர் மன்ற
தாமே கூற்றம் | ‘புண்ணியம்
செய்தவர்கள் அவர்கள், இயமனால் |
கோள் உற
விளியார் பிறர் கொள விளிந்தோர் என | கொள்ளப்பட்டு
இறக்காமல், பிறரால் கொள்ளப்பட்டு இறந்தோர்’ என்று |
தாள்
வலம்படுப்ப சேண் புலம் படர்ந்தோர் | முயற்சி வெற்றிசிறக்க,
தொலைநாட்டுக்குச் சென்றோர் (சென்ற) |
நாள் இழை
நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து | நாள்களைக்
குறித்துவைக்கும் நெடிய சுவரை நோக்கி, வருத்தமெனும் துன்பத்துள் |
ஆழல் வாழி தோழி
தாழாது | ஆழ்ந்துவிடாதே தோழி!
தாழ்க்காமல் |
உரும் என
சிலைக்கும் ஊக்கமொடு பைம் கால் | இடியைப்போன்று
ஒலிக்கும் ஊக்கத்துடன், புதிய காலும் |
வரி மாண் நோன்
ஞாண் வன் சிலை கொளீஇ | வரியும் கொண்டு
மாண்புற்று விளங்கும் வலிய நாண் பூட்டிய வலிய வில்லை ஏற்றி |
அரு நிறத்து
அழுத்திய அம்பினர் பலர் உடன் | அரிய மார்பில்
அழுத்தும் அம்பினையுடையவர்கள் பலருடன், |
அண்ணல் யானை
வெண் கோடு கொண்டு | தலைமை வாய்ந்த
யானைகளின் வெண்மையான கொம்புகளைக் கொண்டு, |
நறவு நொடை
நெல்லின் நாள்_மகிழ் அயரும் | கள்ளை விற்றுக்கொண்ட
நெல்லால் நாளோலக்கச் சிறப்புச் செய்யும் |
கழல் புனை
திருந்து அடி கள்வர் கோமான் | கழலினைப் புனைந்த
திருத்தமான அடிகளைக் கொண்ட கள்வர்களின் தலைவன், |
மழ புலம்
வணக்கிய மா வண் புல்லி | மழவரின் நாட்டை
வணக்கிய மிகுந்த வள்ளண்மைகொண்ட புல்லி என்பானின் |
விழவு உடை விழு
சீர் வேங்கடம் பெறினும் | விழாக்களையுடைய மிக்க
சிறப்பு வாய்ந்த திருவேங்கட மலையைப் பெறினும், |
பழகுவர் ஆதலோ
அரிதே முனாஅது | அந்த இடம் பழகிப்போய்
அங்கேயே தங்கியவராதல் நடவாததாகும் – மிகப் பழமையான, |
முழவு உறழ்
திணி தோள் நெடுவேள் ஆவி | முரசைப்போன்ற திணிந்த
தோள்களையுடைய நெடுவேளாகிய ஆவி என்பானின் |
பொன் உடை நெடு
நகர் பொதினி அன்ன நின் | பொன் மிகுந்த பெரிய
நகரமாகிய பொதினியைப் போன்ற உனது |
ஒண் கேழ் வன
முலை பொலிந்த | ஒளி விளங்கும் அழகிய
முலைகளில் பொலிவுற்று விளங்கும் |
நுண் பூண் ஆகம்
பொருந்துதல் மறந்தே | நுண்ணிய பூணினை அணிந்த
மார்பினில் பொருந்துதலை மறந்து – |
| |
#62 குறிஞ்சி
பரணர் | #62 குறிஞ்சி பரணர் |
அயத்து வளர்
பைஞ்சாய் முருந்தின் அன்ன | பள்ளத்துநீரில் வளரும்
பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த |
நகை பொலிந்து
இலங்கும் எயிறு கெழு துவர் வாய் | ஒளி சிறந்துவிளங்கும்
பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும், |
ஆகத்து
அரும்பிய முலையள் பணை தோள் | மார்பில் அரும்பிய
முலைகளையும், பருத்த தோள்களையும், |
மா தாள் குவளை
மலர் பிணைத்து அன்ன | கரிய தண்டினையுடைய
குவளை மலர்களைச் சேர்த்து வைத்தாற் போன்ற |
மா இதழ் மழை
கண் மாஅயோளொடு | கரிய இமைகளையுடைய
குளிர்ந்த கரிய கண்களையும் உடையவளாகிய அவளுடன், |
பேயும் அறியா
மறை அமை புணர்ச்சி | பேயும் அறியாத
காலத்தில் நடந்த மறைவான சந்திப்பினை |
பூசல் துடியின்
புணர்பு பிரிந்து இசைப்ப | ஒலிக்கும் உடுக்கினைப்
போன்று தனித்தும் சேர்ந்தும் பழித்துக் கூறுவதால் |
கரந்த கரப்பொடு
நாம் செலற்கு அருமையின் | மறைவான ஒழுக்கத்தில்
இனி நாம் செல்வது அரிதாகிவிட்டது; அதனால் |
கடும் புனல்
மலிந்த காவிரி பேரியாற்று | கடுமையான வெள்ளம்
பெருகிய காவிரி ஆற்றில் |
நெடும் சுழி
நீத்தம் மண்ணுநள் போல | நெடிய சுழியுள்ள
நீரில் மூழ்கி எழுபவள் போல, |
நடுங்கு அஞர்
தீர முயங்கி நெருநல் | உள்ளம் நடுங்கும்
துன்பம் போகத் தழுவி, நேற்று |
ஆகம்
அடைதந்தோளே வென் வேல் | என் மார்புள்
புதைந்துகிடந்தாள்; வெல்லும் வேலினையும் |
களிறு கெழு
தானை பொறையன் கொல்லி | யானைகள் மிக்க
படையினையுமுடைய சேரனது கொல்லி மலையின் |
ஒளிறு நீர்
அடுக்கத்து வியல்_அகம் பொற்ப | ஒளிறும் அருவியினை
உடைய மலைச் சரிவின் அகலமான இடம் பொலிவுபெற |
கடவுள் எழுதிய
பாவையின் | தெய்வமாக அமைத்த
கொல்லிப்பாவையினைப் போன்ற |
மடவது மாண்ட
மாஅயோளே | பேதைமையால் சிறந்த
மாநிறத்தவளாகிய தலைவி. |
| |
#63 பாலை
கருவூர் கண்ணம்புல்லனார் | #63 பாலை கருவூர்
கண்ணம்புல்லனார் |
கேளாய் வாழியோ
மகளை நின் தோழி | கேட்பாயாக! வாழ்க!
மகளே! உன்னுடைய தோழி |
திரு நகர்
வரைப்பு_அகம் புலம்ப அவனொடு | அழகிய இல்லத்தின்
இடங்களெல்லாம் வெறிச்சோடிப்போக, தன் தலைவனுடன் |
பெரு மலை
இறந்தது நோவேன் நோவல் | பெரிய மலைகளைத்
தாண்டிச் சென்றதற்காக வருந்தவில்லை – வருந்துகிறேன் |
கடுங்கண் யானை
நெடும் கை சேர்த்தி | கடுமையான யானை தன்
நீண்ட கையைச் சேர்த்து |
முடங்கு தாள்
உதைத்த பொலம் கெழு பூழி | வளைந்த காலால் உதைத்த
பொன்துகள் கிளம்பும் புழுதியை, |
பெரும் புலர்
விடியல் விரிந்து வெயில் எறிப்ப | பெரிதாக விடிகின்ற
விடியலின் ஞாயிற்றின் கதிர்கள் விரிந்து வெயில் எறிக்க, |
கரும் தாள்
மிடற்ற செம் பூழ் சேவல் | கரிய மாலை போட்டது
போன்ற கழுத்தையுடைய காடையின் சேவல் |
சிறு புன்
பெடையொடு குடையும் ஆங்கண் | தன் சிறிய புல்லிய
பெடையுடன் குடையும் அவ்விடங்களையுடைய |
அஞ்சுவர தகுந
கானம் நீந்தி | அஞ்சத் தகுந்த
பாலைநிலத்தைக் கடந்து, |
கன்று காணாது
புன் கண்ண செவி சாய்த்து | தம் கன்றுகளைக்
காணாமல் துயரம் மிகுந்தனவாய்ச் செவிகளைச் சாய்த்து |
மன்று நிறை
பைதல் கூர பல உடன் | மன்றத்தில்
நெருக்கிநிற்பதால் ஆகும் துன்பம் மிகுந்துபோக, பலவும் சேர்ந்த |
கறவை தந்த
கடும் கால் மறவர் | கறவைகளைக் கொண்டுவந்த
மிகுந்த வேகமுள்ள காலையுடைய மறவர்களின் |
கல்லென் சீறூர்
எல்லியின் அசைஇ | ஆரவாரமிக்க சிறிய
ஊரில் இரவில் தங்கி |
முதுவாய்
பெண்டின் செது கால் குரம்பை | முதிய பெண்ணின்
சோர்ந்த கால்களையுடைய குடிசையில் |
மட மயில் அன்ன
என் நடை மெலி பேதை | இளம் மயிலைப் போன்ற
எனது நடை மெலிந்த பேதைமகள் |
தோள் துணை ஆக
துயிற்ற துஞ்சாள் | தன் தலைவன் தனது
தோளையே அணையாக வைத்துத் தூங்கப்பண்ணவும் தூங்காதவளாகி, |
வேட்ட கள்வர்
விசி_உறு கடும் கண் | வேட்டையாடும் கள்வரின்
வாரினை இழுத்துக்கட்டிய கடிய கண்களையுடைய, |
சே கோள்
அறையும் தண்ணுமை | காளைகளைப்
பிடிக்கும்போது அடிக்கும் பறையின் ஒலியினைக் |
கேட்குநள்-கொல்
என கலுழும் என் நெஞ்சே | கேட்டுக்கொண்டிருப்பாள்
என நினைத்து அழும் என் நெஞ்சைக் குறித்து – |
| |
#64 முல்லை
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளை கண்ணத்தனார் | #64 முல்லை ஆர்க்காடு
கிழார் மகனார் வெள்ளை கண்ணத்தனார் |
களையும் இடனால்
பாக உளை அணி | களைகின்ற காலம் இதுவே!
பாகனே! தலையாட்டம் அணிந்த, |
உலகு கடப்பு
அன்ன புள் இயல் கலி_மா | உலகத்தையே கடந்து
செல்வது போன்ற, பறவையின் தன்மை கொண்ட குதிரையின் |
வகை அமை
வனப்பின் வள்பு நீ தெரிய | செம்மையாக அமைந்த
அழகினையுடைய கடிவாளத்தை நீ கையிலெடுக்க, |
தளவு பிணி
அவிழ்ந்த தண் பத பெரு வழி | செம்முல்லை மொட்டுகள்
தம் கட்டுகள் அவிழ்ந்த குளிர்ந்த பதத்திலுள்ள பெருவழியில் |
ஐது இலங்கு
அகல் இலை நெய் கனி நோன் காழ் | அழகாக ஒளிறும் அகன்ற
இலையையும், எண்ணெய் நிறையப் பூசிய வலிய தண்டையும் உடைய |
வெள் வேல்
இளையர் வீங்கு பரி முடுக | வெற்றி வேலை ஏந்திய
இளைஞர்கள் விரைந்த ஓட்டத்தில் மிகுந்த வேகம் கொள்ள, |
செலவு நாம்
அயர்ந்தனம் ஆயின் பெயல | பயணத்தை நாம்
மேற்கொள்வோமாயின், மழைபெய்த |
கடு நீர்
வரித்த செம் நில மருங்கின் | விரைந்து செல்லும்
நீர் வரிவரியாகச் செய்த செம்மண் நிலத்துப் பக்கத்தில் |
விடு நெறி ஈர்
மணல் வாரணம் சிதர | தேர் விடும்
தடத்திலுள்ள ஈர மணலைக் காட்டுக்கோழிகள் காலால் கிளற |
பாம்பு உறை
புற்றத்து ஈர்ம் புறம் குத்தி | பாம்புகள் தங்கும்
புற்றின் ஈரமான வெளிப்பக்கத்தைக் குத்திக் |
மண் உடை கோட்ட
அண்ணல் ஏஎறு | கொம்பினில் மண்ணைக்
கொண்ட தலைமைப் பண்புள்ள காளை |
உடன் நிலை
வேட்கையின் மட நாகு தழீஇ | தன்னோடு உடனிருப்பதை
விரும்பிய இளம் பசுவைத் தழுவிக்கொண்டு |
ஊர்_வயின்
பெயரும் பொழுதில் சேர்பு உடன் | ஊருக்குத்
திரும்பிவரும் பொழுதில், எல்லாம் ஒன்று சேர்ந்து |
கன்று பயிர்
குரல மன்று நிறை புகுதரும் | கன்றுகளை அழைக்கும்
குரலுடையவாய்த் தொழுவத்துக்குள் நிறையப் புகும் |
ஆ பூண் தெண்
மணி ஐது இயம்பு இன் இசை | பசுக்கள் அணிந்துள்ள
தெளிவான மணிகளின் அழகாக எழும்பும் இனிய ஒலியை |
புலம்பு கொள்
மாலை கேள்-தொறும் | தனிமையைக் கொண்டுள்ள
மாலையில் கேட்கும்போதெல்லாம் |
கலங்கினள்
உறைவோள் கையறு நிலையே | கலங்கியவளாய்
இருக்கும் நம் தலைவியின் செயலற்ற நிலையை – |
| |
#65 பாலை
மாமூலனார் | #65 பாலை மாமூலனார் |
உன்னம்
கொள்கையொடு உளம் கரந்து உறையும் | நமது மனவோட்டத்தை
உணர்ந்துகொண்ட அறிவுடன், தன் மனத்தை மறைத்துக்கொண்டிருக்கும் |
அன்னை சொல்லும்
உய்கம் என்னதூஉம் | நம் தாயின்
கடுஞ்சொற்களிலிருந்தும் தப்பித்துக்கொள்வோம்; சிறிதளவும் |
ஈரம் சேரா
இயல்பின் பொய்ம்மொழி | இரக்கமில்லாத
இயல்பினையுடைய பொய்யே பேசும் |
சேரி அம்
பெண்டிர் கௌவையும் ஒழிகம் | சேரிப் பெண்களின்
பழிச்சொற்களையும் நிறுத்திவிடுவோம்; |
நாடு கண்
அகற்றிய உதியஞ்சேரல் | தனது நாட்டின் எல்லையை
விரிவுபடுத்திய உதியஞ்சேரலாதனைப் |
பாடி சென்ற
பரிசிலர் போல | பாடிச் செல்லும்
பரிசிலரைப் போல |
உவ இனி வாழி
தோழி அவரே | இப்பொழுது மகிழ்வாயாக,
வாழ்க தோழியே! நம் தலைவர், |
பொம்மல் ஓதி
நம்மொடு ஒராங்கு | அடர்த்தியான
கூந்தலையுடையவளே! நம் கருத்தோடு ஒன்றிய கருத்துடையவராய் |
செலவு
அயர்ந்தனரால் இன்றே மலை-தொறும் | நம்மை அவருடன்
கூட்டிச்செல்ல விரும்பினார் இப்போது – மலைகள்தோறும் |
மால் கழை
பிசைந்த கால் வாய் கூர் எரி | பெரிய மூங்கில்கழைகள்
உரசிக்கொள்வதால் ஏற்பட்ட, காற்றடிப்பதால் மிகுந்து எரியும் நெருப்பு |
மீன் கொள்
பரதவர் கொடும் திமில் நளி சுடர் | மீன்பிடிக்கும்
பரதவர்களின் வளைந்த படகில் தோன்றும் செறிவான சுடர்கள் |
வான் தோய்
புணரி மிசை கண்டு ஆங்கு | வானளாவிய கடல் அலையின்
மீது காணப்படுவது போல் |
மேவர தோன்றும்
யாஅ உயர் நனம் தலை | காட்சிக்கினியதாய்த்
தோன்றும், யா மரங்கள் உயர்ந்து நிற்கும் அகன்ற இடத்தில் |
உயவல் யானை
வெரிநு சென்று அன்ன | பசியால் மெலிந்து
வருந்திய யானையின் முதுகில் நடந்து போவது போலப் |
கல் ஊர்பு
இழிதரும் புல் சாய் சிறு நெறி | பாறைகளில் ஏறியும்
இறங்கியும் செல்லும், மூங்கில்கள் கரிந்து சாய்ந்துகிடக்கும் சிறிய வழிகளையுடைய, |
காடு
மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் | காடுகளை உயர்த்திக்
கூறுவதற்குக் காரணமான நிமிர்ந்த கொம்புகளையுடைய களிறு |
ஆறு கடி
கொள்ளும் அரும் சுரம் பணை தோள் | வழியினைக்
காவல்கொண்டிருக்கிற கடத்தற்கரிய பாலை வழிகள், மூங்கில் போன்ற தோளினையும் |
நாறு
ஐம்_கூந்தல் கொம்மை வரி முலை | மணங்கமழும்
கூந்தலையும் திரட்சியான தொய்யில் எழுதப்பட்ட முலையினையும் |
நிரை இதழ்
உண்கண் மகளிர்க்கு | வரிசையான
இதழ்களையுடைய நீல மலர் போன்ற மையுண்ட கண்களையும் உடைய பெண்களுக்கு |
அரியவால் என
அழுங்கிய செலவே | கடந்து செல்லக்
கடுமையானதாகும் என்று சொல்லித் தள்ளிப்போட்டுகொண்டிருந்த உடன்போக்கினை. |
| |
#66 மருதம்
செல்லூர் கோசிகன் கண்ணனார் | #66 மருதம் செல்லூர்
கோசிகன் கண்ணனார் |
இம்மை உலகத்து
இசையொடும் விளங்கி | இப்பிறவியில்
உலகத்தில் புகழோடும் விளங்கி |
மறுமை உலகமும்
மறு இன்று எய்துப | மறுபிறப்புக்குக்
காரணமான மேனிலையுலகத்தையும் தடையின்றி எய்துவர், |
செறுநரும்
விழையும் செயிர் தீர் காட்சி | பகைவரும் விரும்பும்
குற்றமற்ற அழகினையுடைய |
சிறுவர் பயந்த
செம்மலோர் என | மக்களைப் பெற்ற
திருவுடையோர் என்று |
பல்லோர் கூறிய
பழமொழி எல்லாம் | பலரும் கூறுகின்ற
பழமொழி முழுவதுமாக |
வாயே ஆகுதல்
வாய்த்தனம் தோழி | உண்மையாகிப்போவதைக்
கண்கூடாகக் காணப்பெற்றேன் தோழியே! |
நிரை தார்
மார்பன் நெருநல் ஒருத்தியொடு | வரிசையாக மாலைகளைப்
போட்டுக்கொண்ட மார்பினையுடைய நம் தலைவன் நேற்று ஒருத்தியை |
வதுவை அயர்தல்
வேண்டி புதுவதின் | மணம் செய்துகொள்ள
விரும்பி புதிதாகச் |
இயன்ற அணியன் இ
தெரு இறப்போன் | செய்துகொண்ட
அலங்காரனாய், இந்தத் தெருவழியே செல்வோன் |
மாண் தொழில் மா
மணி கறங்க கடை கழிந்து | சிறந்த தொழில்நுட்பம்
கோண்ட (குதிரையின்) மணி ஒலிக்க, தலைவாசலைக்கடந்து சென்று |
காண்டல்
விருப்பொடு தளர்பு_தளர்பு ஓடும் | (தன்னைப்)பார்க்கும்
ஆசையுடன் தளர்ந்து தளர்ந்து ஓடிவந்த |
பூ கண்
புதல்வனை நோக்கி நெடும் தேர் | பூப்போலும்
கண்களையுடைய தன் புதல்வனைக் கண்டு, நம் நெடிய தேரினை |
தாங்கு-மதி வலவ
என்று இழிந்தனன் தாங்காது | நிறுத்துவாயாக வலவனே!
என்று சொல்லிவிட்டுத் தேரை விட்டு இறங்கியவன், சற்றும் தாமதியாமல் |
மணி புரை செ
வாய் மார்பு_அகம் சிவண | பவளம் போன்ற புதல்வனது
சிவந்த வாய் தன் மார்பினில் அழுந்த |
புல்லி பெரும
செல் இனி அகத்து என | அவனைத் தன் மார்போடு
அணைத்து, ஐயா! நீ வீட்டுக்குள் போ என்று |
கொடுப்போற்கு
ஒல்லான் கலுழ்தலின் தடுத்த | கையைவிட்டு இறக்கிவிட
முனைபவனுக்கு உடன்படாதவனாய் அழுவதனால் அவனைத் தடுத்த மகனோடு |
மா நிதி
கிழவனும் போன்ம் என மகனொடு | பெருஞ்செல்வக்
குபேரனைப் போன்றவன் என்று கண்டோர் கூறும்படி், தழுவிய மகனோடு |
தானே
புகுதந்தோனே யான் அது | தானே வந்து இல்லத்திற்
புகுந்தான்; நானே இவ்வாறு நடக்கும்படி |
படுத்தனென்
ஆகுதல் நாணி இடித்து இவன் | செய்தேன் என்று
மற்றவர்கள் நினைப்பார்களோ என்று எண்ணி வெட்கப்பட்டு, இடையூறு செய்து இவன் |
கலக்கினன்
போலும் இ கொடியோன் என சென்று | காரியத்தைக்
கெடுத்துவிட்டான் போலும் இந்தத் துடுக்குப்பயல் என்று போய் |
அலைக்கும்
கோலொடு குறுக தலைக்கொண்டு | அடிக்கின்ற கோலுடன்
நான் அவனருகில் செல்ல, மகனைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு, |
இமிழ் கண்
முழவின் இன் சீர் அவர் மனை | ஒலிக்கும்
முகப்பினையுடைய முழவின் இனிய ஓசை, மணம் நடக்கும் அவர் வீட்டிலிருந்து |
பயிர்வன போல
வந்து இசைப்பவும் தவிரான் | அழைப்பது போல வந்து
ஒலிக்கவும், நம் வீட்டிலிருந்தும் செல்லாதவனாய் |
கழங்கு ஆடு
ஆயத்து அன்று நம் அருளிய | முன்பொருநாள் கழங்கு
விளையாடும் தோழியரிடையே வந்து நம்மை அருள்செய்த |
பழம்
கண்ணோட்டமும் நலிய | பழைய அருட்செயல்
நினவுக்கு வந்து தன்னை வருத்த |
அழுங்கினன்
அல்லனோ அயர்ந்த தன் மணனே | நடப்பதற்கிருந்த தன்
மணவிழாவை நிறுத்திவிட்டான். |
| |
#67 பாலை
நோய்பாடியார் | #67 பாலை நோய்பாடியார் |
யான் எவன்
செய்கோ தோழி பொறி வரி | நான் என்ன செய்வேன்?
தோழியே! புள்ளிகளையும் வரிகளையுமுடைய |
வானம் வாழ்த்தி
பாடவும் அருளாது | வானம்பாடிப் பறவை
பாடவும், மனமிரங்காமல் |
உறை துறந்து
எழிலி நீங்கலின் பறைபு உடன் | துளிபெய்தலை நீத்து
மேகம் அகன்று போனதால், தம் இலைகள் காய்ந்து போனதால் |
மரம் புல்லென்ற
முரம்பு உயர் நனம் தலை | மரங்கள் பொலிவிழந்து
நிற்கும், சரளைக்கற்கள் நிறைந்த மேட்டுநிலப்பகுதி உயர்ந்துள்ள அகன்ற இடத்தில் |
அரம் போழ்
நுதிய வாளி அம்பின் | அரத்தால்
கூர்மையாக்கப்பட்ட முனையையுடைய பிறைவாய் அம்பினையும், |
நிரம்பா
நோக்கின் நிரயம் கொள்-மார் | இடுக்கிக்
குறிபார்க்கும் பார்வையினையும் உடையவராய்த் தம் ஆனிரையை மீட்கவேண்டி |
நெல்லி நீள்
இடை எல்லி மண்டி | நெல்லி மரங்களையுடைய
நீண்ட வழியிடத்தில் இரவிலேயே விரைந்து சென்று |
நல் அமர் கடந்த
நாண் உடை மறவர் | வெட்சியாருடன் நடந்த
நல்ல போரினை வென்று இறந்த மானம் மிக்க கரந்தை வீரர்களின் |
பெயரும் பீடும்
எழுதி அதர்-தொறும் | பெயரினையும்,
சிறப்பினையும் பொறித்து, மக்கள் வழங்கும் வழிகள்தோறும் |
பீலி சூட்டிய
பிறங்கு நிலை நடுகல் | மயிலிறகை அணிந்த புகழ்
விளங்கும் நடுகற்கள் |
வேல் ஊன்று
பலகை வேற்று முனை கடுக்கும் | வேற்படையினை நட்டுக்
கிடுகுப்படையும் சார்த்தப்பட்டிருப்பவை பகைவரின் போர்முனையைப் போன்றிருக்கும் |
மொழிபெயர்
தேஎம் தரும்-மார் மன்னர் | வேற்றுமொழி வழங்கும்
நாட்டைக் கொள்ளவதற்காக, மன்னர்களது |
கழி பிணி
கறைத்தோல் நிரை கண்டு அன்ன | கழியால் கட்டப்பட்ட
கரிய கேடகத்தைக்கொண்ட காலாட்படையை அணிவகுத்துப் பார்த்தாற் போன்ற, |
உவல் இடு
பதுக்கை ஆள் உகு பறந்தலை | இறந்தவரின் உடம்பைத்
தழை கொண்டு மூடிய கற்குவியல்களையுடைய பாலைப் பரப்பிலே; |
உரு இல் பேஎய்
ஊரா தேரொடு | உருவம் இல்லாத,
ஊர்ந்து செல்லாத பேய்த்தேர் என்னும் கானல்நீரில் |
நிலம் படு
மின்மினி போல பல உடன் | நிலத்தில் ஊரும்
மின்மினிப்பூச்சியைப் போல, பலவாக |
இலங்கு பரல்
இமைக்கும் என்ப நம் | ஒளிவிடும் பரல்கற்கள்
மினுங்கும் என்று கூறுவர், நமது |
நலம் துறந்து
உறைநர் சென்ற ஆறே | பெண்மைநலத்தைத்
துறந்து பிரிந்துபோயிருப்பவர் போயிருக்கும் வழி. |
| |
#68 குறிஞ்சி
ஊட்டியார் | #68 குறிஞ்சி
ஊட்டியார் |
அன்னாய் வாழி
வேண்டு அன்னை நம் படப்பை | அன்னையே! வாழ்க! நான்
கூறுவதைக் கேட்க வேண்டுகிறேன். நம் தோட்டத்திலுள்ள |
தண் அயத்து
அமன்ற கூதளம் குழைய | குளிர்ந்த பள்ளத்தில்
நெருங்கி வளர்ந்த கூதளம் செடி குழைந்துபோகுமாறு,அதன் மீது விழுந்து |
இன் இசை அருவி
பாடும் என்னதூஉம் | இனிய இசையையுடைய அருவி
ஒலிக்கின்றது, அதனைச் சிறிதேனும் |
கேட்டியோ வாழி
வேண்டு அன்னை நம் படப்பை | கேட்டாயா? இதனையும்
கேட்பாயாக! நம் தோட்டத்திலுள்ள |
ஊட்டி அன்ன ஒண்
தளிர் செயலை | அரக்கினைத்
தேய்த்துவிட்டாற் போன்ற ஒளிவிடும் தளிரினையுடைய அசோகமரத்தின் |
ஓங்கு சினை
தொடுத்த ஊசல் பாம்பு என | ஓங்கி வளர்ந்த
கிளையில் கட்டித்தொங்கவிட்ட ஊஞ்சலைப் பாம்பு என நினைத்து |
முழு_முதல்
துமிய உரும் எறிந்தன்றே | அந்த மரம் முழுதும்
வேரோடு அழிந்துபோகும்படி இடி விழுந்தது அல்லவா, |
பின்னும்
கேட்டியோ எனவும் அஃது அறியாள் | அதனையும் கேட்டாயா?
என்று நான் கேட்டும் அதனை அறியாதவளாய் |
அன்னையும் கனை
துயில் மடிந்தனள் அதன்_தலை | அன்னையும் மிகுந்த
தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள், அதைத்தவிர |
மன் உயிர்
மடிந்தன்றால் பொழுதே காதலர் | உலகத்து
உயிர்களெல்லாம் உறங்கிப்போய்விட்டன அந்த நேரத்தில், நம் காதலர் |
வருவர் ஆயின்
பருவம் இது என | வந்தால் இது தகுந்த
தருணம் என்று |
சுடர்ந்து
இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்_வயின் | ஒளிவீசிப்
பிரகாசிக்கும் பளபளப்பான வளையல்கள் கழன்றுவிழும்படி மெலிந்திருக்கின்ற நம்மை |
படர்ந்த உள்ளம்
பழுது அன்று ஆக | நினைந்திருக்கும் தமது
நெஞ்சம் சிறிதும் குற்றமற்றதாகும்படி |
வந்தனர் வாழி
தோழி அந்தரத்து | வந்துள்ளார் வாழ்க
தோழியே! வானத்திலிருந்து |
இமிழ் பெயல்
தலைஇய இன பல கொண்மூ | முழங்கிக்கொண்டு
பொழியத்தொடங்கிய கூட்டமான பல மேகங்கள் |
தவிர்வு இல்
வெள்ளம் தலைத்தலை சிறப்ப | இடைவிடாமல் பெய்தலால்
உண்டாகிய வெள்ளம் இடங்களெல்லாம் பெருகிவர |
கன்று கால்
ஒய்யும் கடும் சுழி நீத்தம் | யானைக் கன்றின் காலைப்
பிடித்திழுக்கும் கடுமையான சுழலினைக் கொண்ட வெள்ளத்தில் |
புன் தலை மட
பிடி பூசல் பல உடன் | புல்லிய தலையையுடைய
இளம் பெண்யானைகளின் ஆரவார ஒலிகள் பலவும் சேர |
வெண் கோட்டு
யானை விளி பட துழவும் | வெள்ளிய
தந்தங்களையுடைய களிறு பிளிறிக்கொண்டு கன்றினைப் பற்றத் துதிக்கையால் துழாவும், |
அகல் வாய்
பாந்தள் படாஅர் | அங்காந்த வாயையுடைய
பாம்புகள் புதர்களில் படுத்திருக்கும், |
பகலும் அஞ்சும்
பனி கடும் சுரனே | பகலிலும் வருவதற்கு
மனிதர் அஞ்சுகின்ற நடுங்கவைக்கும் கடுமையான வழியைக் கடந்து – |
| |
#69 பாலை
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் | #69 பாலை உமட்டூர்
கிழார் மகனார் பரங்கொற்றனார் |
ஆய் நலம்
தொலைந்த மேனியும் மா மலர் | ஆராய்ந்து
தெரிந்தெடுத்ததைப் போன்ற அழகினைத் தொலைத்த மேனியினையும், பெரிய செந்தாமரையின் |
தகை வனப்பு
இழந்த கண்ணும் வகை இல | சிறந்த அழகினை இழந்த
கண்ணினையும், இத்தகையது என்று கூற உவமை வகை இல்லாத |
வண்ணம் வாடிய
வரியும் நோக்கி | தனித்தன்மையுடைய தமது
சுணங்குகள் நிறம் மழுங்கிப்போனதையும் நோக்கி |
ஆழல் ஆன்றிசின்
நீயே உரிதினின் | துன்பத்தில்
மூழ்கிவிடாதே! நீ அமைதியாயிருப்பாய்; தனக்கு உரிமையான |
ஈதல் இன்பம்
வெஃகி மேவர | கொடையால்வரும்
இன்பத்தையே விரும்பி, அதிலே மனம்
பொருந்தி |
செய்பொருள்
திறவர் ஆகி புல் இலை | பொருளீட்டுவதில்
முயல்வாராகி, சிறிய இலையினையும் |
பராரை நெல்லி
அம் புளி திரள் காய் | பருத்த அடியினையும்
உடைய நெல்லியின் இனிய புளிப்பினையுடைய திரண்ட காய்களை, |
கான மட மரை கண
நிரை கவரும் | காட்டிலுள்ள இளம்
மரைமானின் பெரிய கூட்டம் கவர்ந்து தின்னுதற்குரிய |
வேனில் அத்தம்
என்னாது ஏமுற்று | வெம்மை மிக்க வழி
என்று பாராமல், அந்தத் துன்பத்தையே இன்பமாகக் கொண்டு, |
விண் பொரு
நெடும் குடை இயல் தேர் மோரியர் | வானளாவிய உயர்ந்த
குடையினையும், வேகமாகச் செல்லும் தேரினையும் கொண்ட மோரியர்கள் |
பொன் புனை
திகிரி திரிதர குறைத்த | தமது பொன்னால் செய்த
தேர்ச்சக்கரங்கள் தடையின்றிச் செல்ல வெட்டி வழியுண்டாக்கிய |
அறை இறந்து
அகன்றனர் ஆயினும் எனையதூஉம் | பாறைகளைக் கடந்து
சென்றாராயினும், சிறிதளவும் |
நீடலர் வாழி
தோழி ஆடு இயல் | தமது இருப்பினை
நீட்டிக்கமாட்டார், வாழ்க தோழியே! ஆடுகின்ற இயல்பினையுடைய |
மட மயில்
ஒழித்த பீலி வார்ந்து தம் | இளம் மயில் உதிர்த்த
தோகையை இரண்டாகக் கிழித்துத் தம்முடைய |
சிலை மாண் வல்
வில் சுற்றி பல மாண் | ஓசை மிக்க வலிய
வில்லில் சுற்றி, பலவான, சிறந்த |
அம்பு உடை
கையர் அரண் பல நூறி | அம்புகளைக் கையில்
கொண்டவராய், பகைவரின் அரண்கள் பலவற்றை அழித்து |
நன் கலம்
தரூஉம் வயவர் பெருமகன் | அழகிய அணிகலன்களைக்
கொணர்கின்ற வலிமைமிக்க மறவர்களுடைய தலைவனாகிய |
சுடர் மணி
பெரும் பூண் ஆஅய் கானத்து | சுடரும் மணிகள் பதித்த
பெரும் பூண்களை அணிந்த ஆய் என்பவனின் காட்டின் |
தலை நாள்
அலரின் நாறும் நின் | அன்றலர்ந்த மலர் என
மணக்கும் உன்னுடைய |
அலர் முலை
ஆகத்து இன் துயில் மறந்தே | பரந்த முலையினையுடைய
மார்பினில் துயிலும் இனிய துயிலை மறந்து – |
| |
#70 நெய்தல்
மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் | #70 நெய்தல் மதுரை
தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் |
கொடும் திமில்
பரதவர் வேட்டம் வாய்த்து என | வளைவான படகுகளைக்
கொண்ட மீனவர்கள் தம் மீன்வேட்டை நல்லபடியாக வாய்க்கப்பெற்று, |
இரும் புலா
கமழும் சிறுகுடி பாக்கத்து | பெரிதும் புலால்
நாற்றம் வீசும் சிறிய குடிகளையுடைய கடற்கரையூரில் |
குறும் கண் அம்
வலை பயம் பாராட்டி | குறுகலான கண்களையுடைய
அழகிய வலையின் பயன் கருதி அதற்கு நறும்புகைகாட்டிக் கொண்டாடி |
கொழும் கண்
அயிலை பகுக்கும் துறைவன் | தாம் கொணர்ந்த கொழுவிய
கண்ணையுடைய அயிலை மீன்களை யாவர்க்கும் பகுத்துக் கொடுக்கும் நம் நெய்தல் தலைவன் |
நம்மொடு
புணர்ந்த கேண்மை முன்னே | நம்முடன் கொண்ட காதல்
நட்பு, இதற்கு முன்னர் |
அலர் வாய்
பெண்டிர் அம்பல் தூற்ற | தமக்குள் பேசிக்கொண்ட
பெண்கள் ஊர்முழுதும் பரப்ப |
பலரும் ஆங்கு
அறிந்தனர்-மன்னே இனியே | ஊரில் பலரும்
அறிவதற்கிடமானது. ஆனால் அது கழிந்தது. இப்போது |
வதுவை கூடிய
பின்றை புதுவது | நம் தலைவருடன் மணம்
கூடிய பின்னர், புதிதான |
பொன் வீ
ஞாழலொடு புன்னை வரிக்கும் | பொன்னிறப்
புலிநகக்கொன்றையின் பூக்களோடு, புன்னை மலர்கள் உதிர்ந்து ஓவியமாய்க் கிடக்கும் |
கானல் அம்
பெரும் துறை கவினி மா நீர் | கடற்கரைச் சோலையையுடைய
அழகிய பெரிய துறைகளின் வயல்களில் கரிய நீரில் |
பாசடை கலித்த
கணை கால் நெய்தல் | பச்சை இலைகளையுடைய
தழைத்த திரண்ட தண்டினையுடைய நெய்தல் பூக்களை |
விழவு அணி
மகளிர் தழை அணி கூட்டும் | விழாவிற்குத் தம்மை
அலங்கரிக்கும் பெண்கள் தங்கள் தழையுடைக்கு அழகுசெய்யச் சேர்க்கும் |
வென் வேல்
கவுரியர் தொன் முது கோடி | வெற்றி வேலினையுடைய
பாண்டியரின் மிக்க பழமையுடைய கோடிக்கரையின் அருகில் |
முழங்கு இரும்
பௌவம் இரங்கும் முன்துறை | முழங்குகின்ற பெரிய
கடலின் அருகில் பறவைகள் ஆரவாரிக்கும் துறைமுற்றத்தில் |
வெல் போர்
இராமன் அரு மறைக்கு அவித்த | வெல்லும் போரில் வல்ல
இராமன் அரிய வேதங்களை ஓதுவதற்காக அப் பறவைகளின் ஆரவாரத்தை அடக்கிய |
பல் வீழ் ஆலம்
போல | பல விழுதுகளைக் கொண்ட
ஆலமரம் போல |
ஒலி அவிந்தன்று
இ அழுங்கல் ஊரே | பேச்சு
மூச்சற்றுக்கிடக்கிறது பெரிதாய்ப் பேசிய இந்த ஊர். |
| |
| |
| |
| |
| |
#71 பாலை அந்தி
இளங்கீரனார் | #71 பாலை அந்தி
இளங்கீரனார் |
நிறைந்தோர்
தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் | செல்வம் நிறைந்தோரைத்
தேடிக்காணும் உள்ளத்துடன், தம்மிடம் நட்புக்கொண்டோர் செல்வத்தில் குறைந்துபோனால் |
பயன் இன்மையின்
பற்று விட்டு ஒரூஉம் | அவர்களால் பயன்பெறுவது
இல்லையாதலால், அவர் மேலிருந்த பற்றினை விட்டு அவரை ஒதுக்கிவைக்கும் |
நயன் இல்
மாக்கள் போல வண்டு_இனம் | பண்பற்ற மக்களைப் போல,
வண்டுக்கூட்டம் |
சுனை பூ நீத்து
சினை பூ படர | சுனையிலிருக்கும்
பூக்களை விடுத்து மரக்கிளைகளில் இருக்கும் பூக்களை நாடிச் செல்ல, |
மை இல் மான்
இனம் மருள பையென | களங்கமில்லாத
மான்கூட்டம் மருண்டுநோக்க, (மெதுவாக) |
வெந்து ஆறு
பொன்னின் அந்தி பூப்ப | உலையில் காய்ந்து பின்
(மெதுவாக) ஆறிக்கொண்டிருக்கும் பொன்னைப்போல செக்கர் வானம் பூத்திருக்க, |
ஐ அறிவு
அகற்றும் கையறு படரோடு | வியக்கத் தக்க
நல்லறிவினையும் போக்கிச் செயலற்றுப்போகச்செய்யும் துன்பத்தோடே |
அகல் இரு வானம்
அம் மஞ்சு ஈன | அகன்ற பெரிய வானம்
அழகிய பஞ்சுப்பொதிகளான மேகங்களைப் புதிதாய்க் கொண்டுவர |
பகல்
ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை | பகலுக்கு
வழிவிட்டுநிற்கும் துயரந்தரும் மாலைப்பொழுது – |
காதலர் பிரிந்த
புலம்பின் நோ_தக | காதலரைப் பிரிந்த
தனிமையால் நொந்துபோயிருக்கவும், |
ஆர் அஞர்
உறுநர் அரு நிறம் சுட்டி | மிகுந்த துன்பத்தில்
இருப்பவர் ஒருவரின் காண்பதற்கரிய மார்பினைக் குறிவைத்து |
கூர் எஃகு
எறிஞரின் அலைத்தல் ஆனாது | கூர்மையான வேலை
எறிவாரைப்போல மேலும் துயரத்தைச் செய்கிறது. |
எள் அற இயற்றிய
நிழல்_காண்_மண்டிலத்து | குற்றம் தீரச்
செய்யப்பட்ட உருவம் காட்டும் கண்ணாடியின் |
உள் ஊது
ஆவியின் பைப்பய நுணுகி | உட்புறத்தே ஊதிய ஆவி,
முதலில் பரந்து பின்னர் மெதுவாகச் சுருங்கி மறைவது போல் |
மதுகை மாய்தல்
வேண்டும் பெரிது அழிந்து | என் மனவலிமை சிறுகச்
சிறுகக் குறைந்து மாய்ந்துவிடப்போகிறது. பெரிதும் அழிவுற்று, |
இது-கொல் வாழி
தோழி என் உயிர் | சுழன்றடிக்கும் மிகக்
கடுமையான சூறாவளி மோதித்தாக்க, |
விலங்கு வெம்
கடு வளி எடுப்ப | அலைமோதும்
மரக்கிளையில் அமர்ந்திருக்கும் (எந்நேரமும் பறந்துசெல்லலாம்
என்றிருக்கும்)பறவையைப் போல |
துளங்கு மர
புள்ளின் துறக்கும் பொழுதே | என் உயிர் என்னைவிட்டு
நீங்கும் காலம் இதுதான் போலும், வாழ்க தோழியே |
| |
#72 குறிஞ்சி
எருமை வெளியனார் மகனார் கடலனார் | #72 குறிஞ்சி எருமை
வெளியனார் மகனார் கடலனார் |
இருள்
கிழிப்பது போல் மின்னி வானம் | கவிழ்ந்திருக்கும்
இருளைக் கிழிப்பது போல் மின்னல்வெட்டி, மேகமானது |
துளி
தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள் | துளிகளாய் ஆரம்பித்து
மிகப் பெரிய மழைபெய்யும் நள்ளிரவில் |
மின்மினி
மொய்த்த முரவு வாய் புற்றம் | மின்மினிப்பூச்சிகள்
மொய்த்துக்கொண்டிருக்கும் முனைமுறிந்த வாயையுடைய புற்றினை, |
பொன் எறி
பிதிரின் சுடர வாங்கி | காய்ச்சிய இரும்பை
அடிக்கும்போது சிதறும் தீப்பொறிகளைப் போல, அப் பூச்சிகள் ஒளிவிடத் தோண்டி |
குரும்பி
கெண்டும் பெரும் கை ஏற்றை | புற்றாஞ்சோற்றைக்
கிளறி எடுக்கும் பெரிய கையையுடைய ஆண்கரடி |
இரும்பு செய்
கொல் என தோன்றும் ஆங்கண் | இரும்பு வேலை செய்யும்
கொல்லனைப் போலத் தோன்றும் அந்த இடத்தில் |
ஆறே அரு
மரபினவே யாறே | தலைவன் வரும் வழிகள்
செல்வதற்கு அரிய தன்மையுடையன |
சுட்டுநர்
பனிக்கும் சூர் உடை முதலைய | எண்ணிப்பார்த்தாலே
நடுங்கவைக்கும் அச்சந்தரும் முதலைகளையுடையன, |
கழை மாய்
நீத்தம் கல் பொருது இரங்க | ஓடக்கோலையும்
மூழ்கவைக்கும் பெருவெள்ளம் பாறைகளை மோதிக்கொண்டு ஒலிக்க, |
அஞ்சுவம்
தமியம் என்னாது மஞ்சு சுமந்து | அச்சம்கொள்ளாமல்,
தனித்திருக்கிறோம் என்று எண்ணாமல், மேகமூட்டத்தினைச் சுமந்துகொண்டு |
ஆடு கழை நரலும்
அணங்கு உடை கவாஅன் | அசைகின்ற மூங்கில்கள்
’நரநர’வென்று ஒலிக்கும் தெய்வங்கள் வாழும் உச்சி மலைச்சரிவில் |
ஈர் உயிர்
பிணவின் வயவு பசி களைஇய | கருவுற்றிருக்கும் தன்
பெண்புலியின் வேட்கை மிக்க பசியினைப் போக்க |
இரும் களிறு
அட்ட பெரும் சின உழுவை | கரிய ஆண்பன்றியினைக்
கொன்ற மிக்க சினங்கொண்ட ஆண்புலி |
நாம நல்_அரா
கதிர்பட உமிழ்ந்த | அச்சம் தரும்
நல்லபாம்பு உமிழ்ந்து வைத்து |
மேய் மணி
விளக்கின் புலர ஈர்க்கும் | தான் மேய்வதற்குப்
பயன்படுத்தும் மணியின் வெளிச்சத்தில் குருதி தோய்ந்து காய இழுத்துச்செல்லும் |
வாள் நடந்து
அன்ன வழக்கு அரும் கவலை | கத்தி முனையில்
நடப்பது போன்ற நடமாட்டமில்லாத பலவாறு பிரிந்துசெல்லும் வழிகளில் |
உள்ளுநர்
உட்கும் கல் அடர் சிறு நெறி | கடக்க நினைப்பவர்
அஞ்சும் கற்கள் அடர்ந்த சிறிய பாதையில் |
அருள் புரி
நெஞ்சமொடு எஃகு துணை ஆக | நமக்கு
அருள்புரியவேண்டும் என்ற எண்ணத்துடன், வேலையே துணையாகக் கொண்டு |
வந்தோன்
கொடியனும் அல்லன் தந்த | வந்திருக்கும் நம்
தலைவனும் கொடியவன் அல்லன், அவனை இங்கு வரச்செய்த |
நீ தவறு
உடையையும் அல்லை நின்_வயின் | நீயும் தவறுடையவள்
அல்லள், உனக்கு |
ஆனா அரும் படர்
செய்த | இந்த நீங்காத
தீர்த்தற்கரிய துன்பத்தினைச் செய்த |
யானே தோழி தவறு
உடையேனே | நானே தவறுடையவள்
ஆவேன், தோழியே! |
| |
#73 பாலை எருமை
வெளியனார் | #73 பாலை எருமை
வெளியனார் |
பின்னொடு
முடித்த மண்ணா முச்சி | பின்னலிட்டு
முடிந்துவிட்ட, வேறு ஒப்பனை செய்யப்படாத கொண்டையினில், |
நெய் கனி வீழ்
குழல் அகப்பட தைஇ | நெய் தடவப்பெற்றுக்
கீழே விழும் குழலினையும் சேர்த்துக்கட்டி |
வெருகு இருள்
நோக்கி அன்ன கதிர் விடுபு | காட்டுப்பூனையின்
இருளில் மின்னும் கண்களைப் போன்று ஒளிவிடும் |
ஒரு காழ்
முத்தம் இடை முலை விளங்க | முத்துக்களாலான ஒற்றை
வடம் முலைமேல் கிடந்து திகழ, |
வணங்கு உறு
கற்பொடு மடம் கொள சாஅய் | வணங்குதற்குரிய
கற்புடன், காண்போர் இவள்தான் என்று அறியாமை கொள்ளும்படி பெரிதும் மெலிந்து |
நின் நோய்
தலையையும் அல்லை தெறுவர | நீ எய்துகின்ற
நோயினால் மட்டும் வருந்தியிருப்பவளும் இல்லை; அச்சம் வர |
என்
ஆகுவள்-கொல் அளியள் தான் என | என்ன ஆகுமோ இந்த
இரங்கத்தக்கவளுக்கு என்று |
என் அழிபு
இரங்கும் நின்னொடு யானும் | என்னுடைய
வருத்தத்திற்கும் மனமிரங்கும் உன்னோடு நானும் |
ஆறு அன்று
என்னா வேறு அல் காட்சி | ஒருவர் செய்வது
நல்லதல்ல என்று மற்றவர் சொல்லாத வேற்றுமை அற்ற அறிவினையுடைய |
இருவேம் நம்
படர் தீர வருவது | நம் இருவருடைய
வருத்தமும் நீங்க, நம் தலைவர் வருவதனைக் |
காணிய வம்மோ
காதலம் தோழி | காண்பதற்கு வருவாயாக,
அன்புடைய தோழியே! |
கொடி பிணங்கு
அரில இருள் கொள் நாகம் | கொடிகள்
பின்னிக்கிடக்கும் சிறு காட்டினில் இருக்கும் இருண்ட நிறத்தையுடைய யானை |
மடி பதம்
பார்க்கும் வய_மான் துப்பின் | சோர்ந்திருக்கும்
தகுந்த காலத்தை எதிர்நோக்கியிருக்கும் சிங்கத்தின் வலிமையினையுடைய |
ஏனல் அம்
சிறுதினை சேணோன் கையதை | தினைவகைகளில் ஒன்றாகிய
சிறுதினையைக் காக்கும் பரண்மேலுள்ளவனின் கையிலிருக்கும் |
பிடி கை அமைந்த
கனல் வாய் கொள்ளி | கைப்பிடியைக் கொண்ட
தீயை உமிழும் கொள்ளிக்கட்டையை |
விடு பொறி
சுடரின் மின்னி அவர் | வீசும்போது எழுகின்ற
தீப்பொறியைப் போல மின்னி, நம் தலைவர் |
சென்ற தேஎத்து
நின்றதால் மழையே | சென்றிருக்கும்
நாட்டினில் ஊன்றிப் பெய்கிறது மழை. |
| |
#74 முல்லை
மதுரை கவுணியன் பூதத்தனார் | #74 முல்லை மதுரை
கவுணியன் பூதத்தனார் |
வினை
வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து | தான் மேற்கொண்ட
போர்வினையை நிறைவு செய்த வெற்றியுடன் மகிழ்ச்சி மிகுந்து |
போர் வல்
இளையர் தாள் வலம் வாழ்த்த | போரில் வல்ல வீரர்
தனது முயற்சியின் வலிமையினை வாழ்த்த |
தண் பெயல்
பொழிந்த பைது_உறு காலை | குளிர்ந்த மழை
பொழிந்து நிலம் பச்சைப்பசேலென்ற பொழுதினில் |
குருதி உருவின்
ஒண் செம் மூதாய் | இரத்தச் சிவப்பு
நிறமுடைய மின்னுகின்ற சிவந்த தாம்பலப்பூச்சிகள் |
பெரு வழி
மருங்கில் சிறு பல வரிப்ப | பெரிய வழிகளின்
ஓரர்ங்களில் பல சிறிய வரிகளாக ஊர்ந்துசெல்ல |
பைம் கொடி
முல்லை மென் பத புது வீ | பச்சைக் கொடிகளைக்
கொண்ட முல்லையின் மென்மைப் பதமுள்ள புதிய பூக்கள் |
வெண் களர் அரி
மணல் நன் பல தாஅய் | வெண்மையான களர் ஆகிய
அறல்பட்ட மணலில் பரந்து கிடக்க, |
வண்டு போது
அவிழ்க்கும் தண் கமழ் புறவில் | வண்டுகள் அரும்பினை
ஊதி மலர்த்தும் குளிர்ச்சியான மணம்கமழும் முல்லைநிலத்தில் |
கரும் கோட்டு
இரலை காமர் மட பிணை | கரிய கொம்பினையுடைய
ஆண்மான்களின் அழகிய இளம் பெண்மான்களின் |
மருண்ட மான்
நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து | மருட்சியான
பார்வையினைப் பார்க்கும்போதெல்லாம் உன்னை நினைத்து |
திண் தேர் வலவ
கடவு என கடைஇ | திண்ணிய தேரினை
ஓட்டும் பாகனே! இன்னும் வேகமாகப்போ என்று அவனை முடுக்கிவிட்டு |
இன்றே வருவர்
ஆன்றிகம் பனி என | இன்றைக்கே
வந்துவிடுவார் நம் தலைவர், பொறுத்திருப்போம் நம் துன்பத்தை என்று |
வன்புறை இன்
சொல் நன் பல பயிற்றும் | வற்புறுத்தும் இனிய
மொழிகளால் நல்லனவற்றைப் பலமுறை திரும்பத்திரும்பச் சொல்லும் |
நின் வலித்து
அமைகுவென்-மன்னோ அல்கல் | உன் சொல்லைத் துணிந்து
கேட்டுக்கொள்வேன் – நாள்தோறும் |
புன்கண்
மாலையொடு பொருந்தி கொடும் கோல் | வருத்தத்தைத் தரும்
மாலைப்பொழுதுடன் கூடி, வளைந்த கோலினையுடைய |
கல்லா கோவலர்
ஊதும் | தம் தொழிலேயன்றிப்
பிறதொழிலைக் கல்லாத கோவலர்கள் ஊதுகின்ற |
வல் வாய் சிறு
குழல் வருத்தா_காலே | வலிய வாயினையுடைய
சிறிய குழல் என்னை வருத்தாமலிருந்தால் |
| |
#75 பாலை
மதுரைப்போத்தனார் | #75 பாலை
மதுரைப்போத்தனார் |
அருள் அன்று ஆக
ஆள்வினை ஆடவர் | அருள் செய்வது
என்பதைப் பொருட்டாக எண்ணாமல், பொருளீட்டும் முயற்சியையே ஆண்பிள்ளைகள் |
பொருள் என
வலித்த பொருள் அல் காட்சியின் | பொருட்டாக எண்ணித்
துணிந்த உண்மையற்ற அறிவினையுடைய |
மைந்து மலி
உள்ளமொடு துஞ்சல் செல்லாது | வலிமை மிக்க
உள்ளத்தால், சோம்பியிராமல், |
எரி சினம்
தவழ்ந்த இரும் கடற்று அடை முதல் | தீயினது வெப்பம்
தவழும் பெரிய பாலை நிலத்தில், இலை முதலியன |
கரி குதிர்
மரத்த கான வாழ்க்கை | கரிந்து உதிர்ந்த
மரத்தையுடைய காட்டினில் வாழும் வாழ்க்கையையுடைய |
அடு புலி
முன்பின் தொடு கழல் மறவர் | கொல்லுகின்ற புலியை
ஒத்த வலிமையையுடைய வீரக் கழல் கட்டிய அடியினையுடைய மறவர்கள் |
தொன்று இயல்
சிறுகுடி மன்று நிழல் படுக்கும் | பழையதாய் வருகின்ற
சிறிய ஊரின்கண் அமைந்த மன்றத்து நிழலிலே துயிலும் |
அண்ணல் நெடு
வரை ஆம் அற புலர்ந்த | பெருமையையுடைய நெடிய
மலையிலுள்ள நீர் வற்றிக் காய்ந்துபோன |
கல் நெறி
படர்குவர் ஆயின் நன் நுதல் | பரல்கற்கள் நிறைந்த
வழியில் செல்வாராயின், நல்ல நெற்றியினையும், |
செயிர் தீர்
கொள்கை சில் மொழி துவர் வாய் | குற்றமற்ற
விரதக்கோட்பாடுகளையும், ஒருசில சொற்களையே பேசும் பவளம் போன்ற வாயினயும் |
அவிர் தொடி
முன்கை ஆய் இழை மகளிர் | ஒளிரும் வளை அணிந்த
முன்கையினையும், ஆய்ந்தெடுத்த அணிகலன்களையுமுடைய பெண்களின் |
ஆரம் தாங்கிய
அலர் முலை ஆகத்து | முத்தாரம் தொங்குகின்ற
பரந்த முலையையுடைய மார்பினில் |
ஆரா காதலொடு
தார் இடை குழையாது | தணியாத விருப்பத்துடன்
(அணைப்பதால்) தமது மார்பினில் கொண்ட மாலை குழைந்துபோகாமல், |
சென்று படு
விறல் கவின் உள்ளி என்றும் | மறைந்துபோன பழைய
பேரழகினை நினைத்து, என்றும் |
இரங்குநர்
அல்லது பெயர்தந்து யாவரும் | வருத்தப்படுவார்தான்
இருப்பாரேயன்றி, யாரேனும் |
தருநரும் உளரோ
இ உலகத்தான் என | அவ்வழகினை மீண்டும்
கொண்டுவந்து கொடுப்போர் இருக்கிறார்களோ இவ்வுலகத்தில் என்று |
மாரி ஈங்கை மா
தளிர் அன்ன | மழைக்காலத்து
இண்டைச்செடியின் கரிய தளிரைப் போன்ற |
அம் மா மேனி
ஐது அமை நுசுப்பின் | அழகிய மாமை
நிறத்தையுடைய மேனியினையும், நுண்மையான இடையினையும் |
பல் காசு
நிரைத்த கோடு ஏந்து அல்குல் | பல காசுகளை
வரிசையாகக் கோத்த மேகலையை உடைய பக்கம் உயர்ந்த அல்குலினையும் |
மெல் இயல்
குறு_மகள் புலந்து பல கூறி | மென்மையான
இயல்பினையுமுடைய சிறுபெண்ணே! நீ என்னிடம் பிணக்கம் கொண்டு பலவும் சொல்லி |
ஆனா நோயை ஆக
யானே | குறையாத
துன்பமுடையவளாக இருக்கும்போது, நானோ |
பிரிய
சூழ்தலும் உண்டோ | பிரிந்துசெல்ல
எண்ணவும் செய்வேனோ |
அரிது பெறு
சிறப்பின் நின்_வயினானே | அரிதாகப் பெற்ற
சிறப்பினையுடைய உன்னை விட்டு – |
| |