பட்டினப்பாலை

சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரை
வசை இல் புகழ் வயங்கு வெண் மீன்பழிச்சொல் இல்லாத புகழையுடைய, சுடர் வீசும் வெள்ளியாகிய மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்(தான் நிற்பதற்குரிய)வடதிசையினின்றும் மாறி தென்திசையில் சென்றாலும்,
தன் பாடிய தளி உணவின்தன்னை(மேகத்தை)ப் பாடிய, நீர்த்துளியையே உணவாகக்கொண்ட
புள் தேம்ப புயல் மாறிவானம்பாடி வருந்த மழை பெய்யாமற்போக,
வான் பொய்ப்பினும் தான் பொய்யா   5மேகம் பொய்த்தாலும் தான் பொய்யாத (காலந்தோறும் வருகின்ற),                         5
மலை தலைய கடல் காவிரி(குடகு)மலையை உற்பத்தியிடமாகக்கொண்ட கடற்பக்கத்துக் காவிரி(யின்)
புனல் பரந்து பொன் கொழிக்கும்நீர் பரந்து பொன்(போல் விளைச்சல்) செழித்துப்பெறுகும் – (28-பெரிய சோழநாட்டில்),
விளைவு அறா வியன் கழனிவிளைதல் தொழில் அற்றுப்போகாத அகன்ற வயல்களில்,
கார் கரும்பின் கமழ் ஆலைகார்காலத்ததைப்போன்ற(செழுமையான) கரும்பு(ப் பாகு)மணக்கும் கொட்டிலின் (அடுப்பு)
தீ தெறுவின் கவின் வாடி          10நெருப்பின் அனல் சுடுகையினால், அழகு கெட்டு,                                                      10
நீர் செறுவின் நீள் நெய்தல்நீரையுடைய வயலில் உள்ள நீண்ட நெய்தல்
பூ சாம்பும் புலத்து ஆங்கண்மலர் வாடும் வயல்வெளிகளில்,
காய் செந்நெல் கதிர் அருந்துகாய்ந்த செந்நெற்கதிரைத் தின்ற,
மோட்டு எருமை முழு குழவிபருத்த வயிற்றையுடைய எருமை (ஈன்ற)முதிர்ந்த கன்றுகள்,
கூட்டு நிழல் துயில் வதியும்             15நெற்கூட்டினுடைய நிழலில் உறக்கத்தைக் கொள்ளும் – (28-பெரிய சோழநாட்டில்),          15
கோள் தெங்கின் குலை வாழைகொத்துக்கொத்தான காய்களையுடைய தென்னையையும், குலைகளையுடைய வாழையினையும்,
காய் கமுகின் கமழ் மஞ்சள்(நன்கு காய்த்த)காயையுடைய பாக்கு மரத்தையும், மணம் கமழும் மஞ்சளையும்,
இன மாவின் இணர் பெண்ணைகூட்டமான மாமரங்களையும், குலைகளையுடைய பனையினையும்,
முதல் சேம்பின் முளை இஞ்சிகிழங்கையுடைய சேம்பினையும், முளையினையுடைய இஞ்சியினையும் உடைய – (28-பெரிய சோழநாட்டில்),
அகல் நகர் வியல் முற்றத்து               20அகன்ற மனையின் பரந்த முற்றத்தில்,                                                                20
சுடர் நுதல் மட நோக்கின்பளிச்சிடும் நெற்றியையும், கபடமற்ற பார்வையையும்(கொண்ட), 
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்நேர்த்தியான நகைகளை அணிந்த பெண்கள், உலருகின்ற நெல்லைத் தின்னும்
கோழி எறிந்த கொடும் கால் கனம் குழைகோழியை (விரட்ட)எறிந்த வளைவான அடிப்பகுதியையுடைய பொன்னாற்செய்த காதணி,
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்பொன் காப்பு அணிந்த கால்களையுடைய சிறுவர் (குதிரை பூட்டாமற் கையால்)உருட்டும்,
மு கால் சிறு தேர் முன் வழி விலக்கும்    25மூன்று சக்கர நடைவண்டியின் முன்செல்லும் வழியைத் தடுக்கும்                                25
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா(இங்ஙனம் குறுக்கிடும்)பகையைத் தவிர (மனம்)கலங்கும் (வேறு)பகையை அறியாத,
கொழும் பல் குடி செழும் பாக்கத்துநல்ல வசதியான பல குடிகளைக் கொண்ட, செழுமையான பாக்கங்களையும்,
குறும் பல் ஊர் நெடும் சோணாட்டுஅருகருகே அமைந்த பல (சிறிய)ஊர்களையுமுடைய – பெரிய சோழநாட்டில்;
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றிவெள்ளை(வெளேர் என்ற) உப்பின் விலையைச் சொல்லி(விற்று, அதற்கு மாற்றாக வாங்கிய)
நெல்லொடு வந்த வல் வாய் பஃறி     30நெல்லைக் கொண்டுவந்த, கெட்டியான விளிம்புகளையுடைய படகுகளை —                      30
பணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும்கொட்டில் பந்தியில் நிறுத்தப்படும் குதிரைகளை(க் கட்டிவைப்பதை)ப் போன்று — கட்டுத்தறிகளில் கட்டிவைக்கும்
கழி சூழ் படப்பை கலி யாணர்உப்பங்கழி சூழ்ந்த ஊர்ப்புறங்களையும், மனமகிழ்ச்சி தரும் புதுவருவாயையுடைய
பொழில் புறவின் பூ தண்டலைதோப்புக்களை அடுத்து இருக்கும் பூஞ்சோலைகளையும்,
மழை நீங்கிய மா விசும்பின்மழை(பெய்து) விட்டுப்போன அகன்ற ஆகாயத்தில்
மதி சேர்ந்த மக வெண் மீன்                35சந்திரனைச் சேர்ந்த மகம் என்னும் வெள்ளிய மீனின்                                          35
உரு கெழு திறல் உயர் கோட்டத்துவடிவத்தில் அமைந்த வலிமையுள்ள உயர்ந்த கரையையுடைய,
முருகு அமர் பூ முரண் கிடக்கைமணம்பொருந்திய பூக்கள் நிறத்தால் தம்முள் மாறுபட்டுக் கிடப்பதினால்
வரி அணி சுடர் வான் பொய்கைபல நிறங்களைக் கொண்டு ஒளிரும் அழகிய பொய்கைகளையும்,
இரு காமத்து இணை ஏரி(இம்மையிலும் மறுமையிலும் உண்டாகிய) இரண்டுவிதக் காம இன்பம் (கொடுக்கும்) இணைந்த ஏரிகளையும்;
புலி பொறி போர் கதவின்           40புலிச் சின்னத்தையும் (பலகைகள் தம்மில் நன்கு)பொருதும் (இரட்டைக்)கதவுகளையும் (உடைய),              40
திரு துஞ்சும் திண் காப்பின்செல்வம் தங்கும் திண்மையான மதிலையும்(உடைய),
புகழ் நிலைஇய மொழி வளர(இம்மையில்)புகழ் நிலைபெற்ற சொல் எங்கும் பரவிநிற்க,
அறம் நிலைஇய அகன் அட்டில்(மறுமைக்கு)அறம் நிலைபெற்ற, அகன்ற சமையற்கூடத்தில்
சோறு வாக்கிய கொழும் கஞ்சிசோற்றை வடித்து வார்த்த கொழுமையான கஞ்சி
யாறு போல பரந்து ஒழுகி           45ஆற்றுநீர் போல (எங்கும்)பரவி ஓடி,                                                                        45
ஏறு பொர சேறாகி(அதைக் குடிக்க வந்த)காளைகள் தம்மில் பொருவதால் சேறாய் ஆகி,
தேர் ஓட துகள் கெழுமி(அச் சேற்றின் மீது)(பல)தேர்கள் ஓடுவதால் துகள்களாய் (மதில்கள் மீது)தெறித்து,
நீறு ஆடிய களிறு போலபுழுதியில் விளையாண்ட (அதனை மேலே அப்பிக்கொண்ட) ஆண்யானையைப் போல,
வேறுபட்ட வினை ஓவத்துபல்வேறுவிதமாக வரையப்பட்ட சித்திரங்களையுடைய
வெண் கோயில் மாசு ஊட்டும்                50வெண்மையான அரண்மனை(மதில்களை) அழுக்கேறப்பண்ணும்;                                  50
தண் கேணி தகை முற்றத்துகுளிர்ந்த சிறிய குளங்களை உள்ளேயடக்கின முற்றத்தையுடைய,
பகட்டு எருத்தின் பல சாலைபெரிய எருதுகளுக்கான (அவற்றிற்கு வைக்கோல் இடும்)பல சாலைகளையும்,
தவ பள்ளி தாழ் காவின்தவஞ்செய்யும் (சமண,பௌத்த) பள்ளிகள் இருக்கும் தாழ்வான மரங்கள் கொண்ட சோலைகளில்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்மினுமினுக்கும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய)
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்       55(நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய                 55
மா இரும் பெடையோடு இரியல் போகிகரிய பெரிய பேடைகளுடன் விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி,
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்பூதங்கள் (வாசலில்)காத்துநிற்கும் நுழைவதற்கு அரிய காவல் உள்ள (காளி)கோட்டத்தில்,
தூதுணம்புறவொடு துச்சில் சேக்கும்கல்லைத் தின்னும் அழகிய புறாக்களுடன் ஒதுக்குப்புறமாகத் தங்கும்
முது மரத்த முரண் களரிபழைமையான மரத்தின் (கீழான) மற்போர் (செய்யும்) களங்கள் (கொண்ட பட்டினம்) –
வரி மணல் அகன் திட்டை            60அறல் சேர்ந்த மணல் கொண்ட அகன்ற திட்டுகளில்,                                              60
இரும் கிளை இனன் ஒக்கல்பெரும்குடும்பத்தவரும், ஓரே இனத்துச் சுற்றத்தவருமான,
கரும் தொழில் கலி மாக்கள்வலிய தொழில் செய்யும் செருக்குள்ள ஆடவர்
கடல் இறவின் சூடு தின்றும்கடல் இறால்களின் (தசை)சுடப்பட்டதைத் தின்றும்,
வயல் ஆமை புழுக்கு உண்டும்வயல் ஆமையைப் புழுக்கின இறைச்சியைத் தின்றும்,
வறள் அடும்பின் மலர் மலைந்தும்   65மணற்பாங்கான இடத்தின் (அங்கு வளரும்)அடப்பம் பூவைத் தலையிலே கட்டியும்,            65
புனல் ஆம்பல் பூ சூடியும்நீர் (மேல் வளரும்)ஆம்பல் பூவை(ப் பறித்து)ச் சூடியும்,
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும்நீல நிறமுடைய ஆகாயத்தில் வலமாக எழுந்து திரிதலைச்செய்யும்
நாள்மீன் விராய கோள்மீன் போல(அன்றைய)நாளுக்குரிய விண்மீனுடன் கலந்த கோள்களாகிய மீன்கள் போல,
மலர் தலை மன்றத்து பலர் உடன் குழீஇஅகன்ற இடத்தையுடைய அம்பலங்களில் பலரும் சேரத் திரண்டு,
கையினும் கலத்தினும் மெய் உற தீண்டி      70(வெறும்)கைகளாலும் ஆயுதங்களாலும் உடலில் படும்படி பற்றியும் அடித்தும்,                    70
பெரும் சினத்தால் புறக்கொடாஅதுமிகுந்த சினத்தால் புறமுதுகுகொடாமல்,
இரும் செருவின் இகல் மொய்ம்பினோர்நீண்ட போர்(செய்யும்) போட்டிபோடும் வலிமையுடையோர்
கல் எறியும் கவண் வெரீஇகல்லை எறியும் கவணை அஞ்சி
புள் இரியும் புகர் போந்தைபறவைகள் பறந்தோடும் கபிலநிறப் பனைமரங்கள் (கொண்ட பட்டினம்) –
பறழ் பன்றி பல் கோழி                     75குட்டிகளையுடைய பன்றிகளையும், பலவிதமான கோழிகளையும்,                                      75
உறை கிணற்று புற சேரிஉறைக் கிணறுகளையும் உடைய (ஊருக்குப்)புறம்பேயுள்ள சேரிகளில்
மேழக தகரொடு சிவல் விளையாடசெம்மறி ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை விளையாட – (இருக்கும் பட்டினம்),
கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி(தோல்)கேடயங்களை வரிசையாக(க் கூரைபோல் சாய்த்து) அடுக்கி, வேலை ஊன்றி,
நடுகல்லின் அரண் போலநடுகல்லுக்கு வைத்த பாதுகாப்பு போல,
நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய        80நீண்ட தூண்டிலில் இரும்பு முள் சேர்த்துவைக்கப்பட்ட                                               80
குறும் கூரை குடி நாப்பண்குறுகிய கூரைச்சரிவுகளையுடைய குடியிருப்புகளின் நடுவில்,
நிலவு அடைந்த இருள் போலநிலவின் நடுவே சேர்ந்த இருளைப் போல
வலை உணங்கும் மணல் முன்றில்வலைகிடந்து உலரும் மணலையுடைய முற்றத்தைக்கொண்ட இல்லங்களில்,
வீழ் தாழை தாள் தாழ்ந்தவிழுதையுடைய தாழையின் அடியில் இருந்த
வெண்கூதாளத்து தண் பூ கோதையர்    85வெண்டாளியின் குளிர்ந்த பூவால் செய்த மாலையையுடையோர்,                                     85
சினை சுறவின் கோடு நட்டுசினைப்பட்ட சுறா மீனின் கொம்பை நட்டு,
மனை சேர்த்திய வல் அணங்கினான்மனையில் ஏற்றிய துடியான தெய்வம் காரணமாக,
மடல் தாழை மலர் மலைந்தும்மடலையுடைய தாழையின் மலரைச் சூடியும்,
பிணர் பெண்ணை பிழி மாந்தியும்சொரசொரப்பான பனைமரத்துக் கள்ளை உண்டும்,
புன் தலை இரும் பரதவர்           90பரட்டைபாய்ந்த தலையினையுடைய கரிய பரதவர்                                                  90
பைம் தழை மா மகளிரொடுபசிய தழையை(உடுத்திய) மாநிற மகளிரோடு,
பாய் இரும் பனி கடல் வேட்டம் செல்லாதுபரந்த கருமைநிறமுடைய குளிர்ந்த கடலில் மீன்பிடிக்கச் செல்லாது,
உவவு மடிந்து உண்டு ஆடியும்உவாநாள்(பௌர்ணமி/அமாவாசை) ஓய்வுஅனுசரித்து உண்டும் விளையாடியும்;
புலவு மணல் பூ கானல்முடைநாற்றமுள்ள மணலையும் பூக்களையும் உடைய கடற்கரையில்,
மா மலை அணைந்த கொண்மூ போலவும்    95கரிய மலையைச் சேர்ந்த மேகம் போலவும்,                                                     95
தாய் முலை தழுவிய குழவி போலவும்தாயின் முலையைத் தழுவிய பிள்ளையைப் போலவும்,
தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும்தெளிந்த கடலின் அலைகளுடன் காவிரியாறு கலக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல்மிகுந்த அலைஆரவாரம் ஒலிக்கும் புகார்முகத்தில்,
தீது நீங்க கடல் ஆடியும்தீவினை போகக் கடலாடியும்,
மாசு போக புனல் படிந்தும்                100(பின்னர்)உப்புப் போக (நல்ல)நீரிலே குளித்தும்,                                                   100
அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும்நண்டுகளை அலைக்கழித்தும், தொடர்ந்து வரும் அலைகளை மிதித்து விளையாடியும்,
பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும்(ஈர மணலில்)உருவங்களை உருவாக்கியும்; ஐம்பொறிகளால் நுகரும்பொருள்களை நுகர்ந்து மயங்கியும்,
அகலா காதலொடு பகல் விளையாடிநீங்காத விருப்பத்துடன் பகற்பொழுதெல்லாம் விளையாடி,
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும்பெறுவதற்கு அரிய தொன்றுதொட்ட மேன்மையுடைய சுவர்க்கத்தைப் போன்ற,
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை        105பொய்க்காத இயல்புடைய, மலர்கள் மிக்க பெரிய துறைகள் – (உள்ள பட்டினம்)                      105
துணை புணர்ந்த மட மங்கையர்(தம்)கணவரைக் கூடிய மடப்பம் பொருந்திய இளம்பெண்கள்,
பட்டு நீக்கி துகில் உடுத்தும்பட்டுடையை நீக்கிப் (மெல்லிய)பருத்தி ஆடையை உடுத்தவும்,
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்(மிதமான கிளர்ச்சியைத் தரும்)கள்ளைத் தவிர்த்து (வெறியூட்டும்)மது (உண்டு) மகிழ்ந்தும்,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்கணவர் (சூடும்)கண்ணியை மகளிர் (தலையில்)சூடிக்கொள்ளவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும்    110மகளிர் (சூடும்)கோதையைக் கணவர் (தோளைச்சுற்றி)அணிந்துகொள்ளவும்,                   110
நெடும் கால் மாடத்து ஒள் எரி நோக்கிஉயரமான தூண்களையுடைய மாடங்களில் ஒளிரும் தீப்பந்தங்களைப் பார்த்து,
கொடும் திமில் பரதவர் குரூஉ சுடர் எண்ணவும்வளைந்த கட்டுமரங்களிலிருக்கும் மீனவர், செந்நிறச் சுவாலைகளை எண்ணவும்,
பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்பாடல்(இசையை) ரசித்துக்கேட்டும், நாடகங்களைக் கண்டுபோற்றியும்,
வெண் நிலவின் பயன் துய்த்தும்வெள்ளிய நிலவொளியின் பயனை நுகர்ந்தும்,
கண் அடைஇய கடை கங்குலான்         115(பின்பு)கண்துயின்ற கடையாமத்து இரவில்,                                                           115
மாஅ காவிரி மணம் கூட்டும்அகண்ட காவிரி (பலவித மலர்களின்)மணங்களைக் கொண்டுவந்து திரட்டும்
தூஉ எக்கர் துயில் மடிந்துதூய மணல்திட்டுகளில் துயில்கொண்டு கிடந்து – (இருக்கும் பட்டினம்),
வால் இணர் மடல் தாழைவெண்மையான பூங்கொத்துக்களையும் மடல்களையுமுடைய தாழையையுடைய
வேலாழி வியன் தெருவில்கடற்கரையின் (அருகே இருக்கும்)அகன்ற தெருவிடத்து,
நல் இறைவன் பொருள் காக்கும்              120நல்ல அரசனின் பொருளை (மற்றவர் கொள்ளாமல்)காக்கும்                                 120
தொல் இசை தொழில் மாக்கள்தொன்மையான புகழையுடைய (சுங்கம் வசூலிக்கும்)தொழிலாளர்,
காய் சினத்த கதிர் செல்வன்சுடும் சினமுடைய கதிர்களையுடைய ஞாயிற்றின்
தேர் பூண்ட மாஅ போலதேர் பூண்ட குதிரைகளைப் போல,
வைகல்தொறும் அசைவு இன்றிநாள்தோறும் சோர்வின்றிச்
உல்கு செய குறைபடாது             125சுங்கம் கொள்வதில் தளர்வடையாராக –                                                                125
வான் முகந்த நீர் மலை பொழியவும்மேகம் (தான்) முகந்த நீரை மலையில் சொரியவும்,     
மலை பொழிந்த நீர் கடல் பரப்பவும்மலையில் சொரிந்த நீர் (மீண்டும்)கடலில் பரவவும்,
மாரி பெய்யும் பருவம் போலமழை பெய்யும் ஒழுங்கான (சுழல்)நிகழ்வு போல –
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்கடலிலிருந்து நிலத்திற்கு(பண்டசாலைக்கு) ஏற்றுவதற்காகவும்,
நிலத்தினின்று நீர் பரப்பவும்            130நிலத்திலிருந்து(அப்பண்டசாலையிலிருந்து) கடலில் (உள்ள மரக்கலங்களில்)பரப்பிவைக்கவும்,      130
அளந்து அறியா பல பண்டம்(மனத்தால்)அளந்து அறிய முடியாத பலவகைப் பொருட்களும்
வரம்பு அறியாமை வந்து ஈண்டிஎல்லை அறியாதபடி வந்து திரண்டு,
அரும் கடி பெரும் காப்பின்அரிய காவலையுடைய பெரும் பாதுகாப்புடைய சுங்கச்சாவடியில்,
வலி உடை வல் அணங்கின் நோன்வலிமையுடைய பெரும் அச்சம்தரும் (அச்சடையாளமாகிய)மூர்க்கமான 
புலி பொறித்து புறம் போக்கி              135(பாயும்)புலி(ச்சின்னம்) இட்டு, (பண்டசாலைக்கு)ப் வெளியில் அனுப்பி,                               135
மதி நிறைந்த மலி பண்டம்மதிப்பு மிக்க ஏராளமான பண்டங்கள் 
பொதி மூடை போர் ஏறிபொதிந்த பொதிகளை அடுக்கிவைத்த குவியலின்மீது ஏறி,
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன்மழை விளையாடும் சிகரத்தையுடைய உயர்ந்த மூங்கில்கள் வளர்ந்த சரிவுகள் உள்ள
வரை ஆடு வருடை தோற்றம் போலமலையில் துள்ளி விளையாடும் வருடைமானின் காட்சி போல,
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை       140கூரிய நகங்களையுடைய நாயின் வளைந்த பாதங்களையுடைய ஆணானது                   140
ஏழக தகரோடு உகளும் முன்றில்ஆட்டுக் கிடாயுடன் குதிக்கும் (பண்டசாலையின்)முற்றத்தையும் – (கொண்ட பட்டினம்),            
குறும் தொடை நெடும் படிக்கால்(ஒன்றற்கொன்று)நெருக்கமாய் அமைந்த படிகளையுடைய நீண்ட ஏணிச்சட்டங்கள்(சார்த்தின)
கொடும் திண்ணை பல் தகைப்பின்சுற்றுத் திண்ணையினையும், பல உள்கட்டுக்களையும்,
புழை வாயில் போகு இடைகழிசிறுவாசலையும், பெரியவாசலையும், நீண்ட நடை(ரேழி)களையும் உடைய
மழை தோயும் உயர் மாடத்து         145மேகங்களை எட்டித்தொடும்(அளவுக்கு) உயரமான மாடத்தில் –                                     145
சே அடி செறி குறங்கின்சிவந்த பாதங்களும், செறிந்த தொடைகளும்,   
பாசிழை பகட்டு அல்குல்புத்தம் புதிய நகைகளும், பெரிய அல்குலும்,
தூசு உடை துகிர் மேனிதூய்மையான பஞ்சினால் நெய்த ஆடையும், பவளம் போலும் நிறமும்,
மயில் இயல் மான் நோக்கின்மயில்(போன்ற) மென்னயமும், மான்(போன்ற) பார்வையும்,
கிளி மழலை மென் சாயலோர்          150கிளி(போன்ற) மழலைமொழியும், மென்மையான சாயலும் உடைய மகளிர் –                       150
வளி நுழையும் வாய் பொருந்திதென்காற்று வரும் சாளரங்களைச் சேர்த்து,          
ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும்உயர்ந்த மலைப்பக்கத்தே நுண்ணிய மகரந்தம் துளிக்கும்
காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்னசெங்காந்தளின் அழகிய மடல்கள் (இணைந்து) கவிந்திருக்கும் குலையைப் போன்ற —
செறி தொடி முன்கை கூப்பி செவ்வேள்செறிந்த வளையல்களுடைய — முன்கை குவித்து வணங்கிநிற்க, முருகனின்
வெறி ஆடு மகளிரொடு செறிய தாஅய்   155வெறியாட்டு ஆடும் மகளிரோடு (அவர் ஆட்டத்திற்கு இணையாகப்)பொருந்தப் பரந்து,         155
குழல் அகவ யாழ் முரலவங்கியம்(புல்லாங்குழல்) இசையுண்டாக்க, யாழ் ஒலிக்க,                                      
முழவு அதிர முரசு இயம்பமுழவு அதிர்ந்துமுழங்க, முரசு ஒலிப்ப,
விழவு அறா வியல் ஆவணத்துவிழாக்கோலம் நீங்காத அகன்ற அங்காடித் தெருவினில் –
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்தியகுற்றம் அற்ற சிறப்பினைடைய தெய்வங்களைக் கொண்ட
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்      160மலர் அணிந்த (கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும்                  160
வரு புனல் தந்த வெண் மணல் கான்யாற்று(பெருகி)வரும் நீர் கொண்டுவந்த வெண்மையான மணலையுடைய காட்டாற்று(க்கரையில் நின்ற)
உரு கெழு கரும்பின் ஒண் பூ போலஅழகு பொருந்திய கரும்பின் பிரகாசமுள்ள பூவைப் போன்ற,
கூழ் உடை கொழு மஞ்சிகை(தானிய மாவுக்)கூழையுடைய நிறைந்த பாத்திரத்தையும்,
தாழ் உடை தண் பணியத்துவழிபாட்டுடன் (பரப்பிய)குளிர்ந்த பண்ணியங்களையும்(வைத்து)
வால் அரிசி பலி சிதறி                    165வெண்மையான அரிசியையும் பலியாகத் தூவி,                                                    165
பாகு உகுத்த பசு மெழுக்கின்பாக்கு(வெற்றிலை) சொரிந்த, புது மெழுக்கினையுடைய,
காழ் ஊன்றிய கவி கிடுகின்கால்கள் நட்டு (அதன் மேல்)வைத்த கவிந்த மேற்கூரையின்
மேல் ஊன்றிய துகில் கொடியும்மேலே நட்டுவைத்த (வீர வணக்க)துகில் கொடிகளும்,
பல் கேள்வி துறைபோகியபல நூல்களை(முற்றக் கற்று அவற்றில்) நிறைவுபெற்ற
தொல் ஆணை நல் ஆசிரியர்           170பெரிய ஆளுமை(பெற்ற) நல்ல ஆசிரியர்கள்                                                             170
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும்வாது (செய்யக்)கருதிக் கட்டின அச்சம் மிகுந்த கொடிகளும்,
வெளில் இளக்கும் களிறு போலகட்டுக்கம்பத்தை (அசைத்து அசைத்து)நெகிழ்க்கும் ஆண்யானை போன்று,
தீம் புகார் திரை முன்துறை(கண்ணுக்கு)இனிதான புகாரிடத்து அலைகளையுடைய துறையின் முன்னே,
தூங்கு நாவாய் துவன்று இருக்கைஅசைகின்ற (நெருக்கமாய் நின்று காத்திருக்கும்)மரக்கலங்களின் நெருக்கமான இருப்பினில்,
மிசை கூம்பின் நசை கொடியும்              175(அவற்றின்)மேல் (நட்ட)பாய்மரத்தின் (மேலெடுத்த)விருப்பம் தரும் கொடிகளும்,                 175
மீன் தடிந்து விடக்கு அறுத்துமீனை வெட்டி, (அதனுள் இருக்கும்)வேண்டாத பகுதிகளை நீக்கி,
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்(அதன்)தசையினைப் பொரிக்கும் ஓசையெழும்பும் முற்றத்தினையும்,
மணல் குவைஇ மலர் சிதறிமணலைக் குவித்து, மலர்களைச் சிதறி,
பலர் புகு மனை பலி புதவின்(கள்ளுண்போர்)பலரும் செல்லும் மனைகளில் (தெய்வத்திற்குக் கொடுக்கும்)பலிகளுக்கான வாசலில்
நறவு நொடை கொடியொடு              180கள் விற்பனைக்காகக் கட்டிய கொடியுடன்,                                                            180
பிறபிறவும் நனி விரைஇஏனையவற்றிற்குக் கட்டின கொடிகளும் மிகவும் கலந்துகிடப்பதால்,
பல் வேறு உருவின் பதாகை நீழல்பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய பெருங்கொடிகளின் நிழலில் –
செல் கதிர் நுழையா செழு நகர் வரைப்பின்செல்கின்ற (ஞாயிற்றின்)கிரணங்கள் நுழையமுடியாத வளமையான ஊர் எல்லையில்,
செல்லா நல் இசை அமரர் காப்பின்குன்றாத நல்ல புகழையுடைய தேவர்களின் காவலால்,
நீரின் வந்த நிமிர் பரி புரவியும்                185கடலில் (மரக்கலங்களில்)வந்த நிமிர்ந்த நடையினையுடைய குதிரைகளும்,                  185
காலின் வந்த கரும் கறி மூடையும்(நிலத்தில்)வண்டிகளில் வந்த கரிய மிளகுப் பொதிகளும்,
வடமலை பிறந்த மணியும் பொன்னும்இமயமலையில் பிறந்த மாணிக்கமும், பொன்னும்,
குட மலை பிறந்த ஆரமும் அகிலும்பொதிகை மலையில் பிறந்த சந்தனமும், அகிலும்,
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும்தென்திசைக் கடலில் (பிறந்த)முத்தும், கீழ்த்திசைக் கடலில் (பிறந்த)பவளமும்,
கங்கை வாரியும் காவிரி பயனும்            190கங்கையாற்றின் விளைச்சலும், காவிரியாற்றின் செல்வங்களும்,                                 190
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்ஈழத்தின் உணவுப்பொருளும், கடாரத்தின் ஈட்டமும்,
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டிஅரிதானவும், பெரிதானவும், (நிலத்தின் முதுகு)நெளியும்படி திரண்டு,
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின்செல்வங்கள் (ஒன்றோடொன்று)கலந்துகிடக்கும் அகன்ற இடங்களுடைய தெருக்களும் – (கொண்ட பட்டினம்), 
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்(மீன் பிடிப்போர்)கடல்நீர் நடுவிடத்தும், (ஏனையோர்)கரையினிடத்தும்
ஏமாப்ப இனிது துஞ்சி                     195மகிழ்ச்சியுடன் இனிதாகத் தூங்கி,                                                                 195
கிளை கலித்து பகை பேணாது(தம்)சுற்றம் தழைக்க (தம் உயிர்க்கு வரும்)பகையைப் பற்றிக்கவலைப்படாமல்,
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்வலைஞர் முற்றத்தில் மீன் பிறழ்ந்து திரியும்படியாகவும்,
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்விலைஞர் குடிலில் விலங்குகள் கிடக்கும்படியாகவும்,
கொலை கடிந்தும் களவு நீக்கியும்கொலைத் தொழிலை விலக்கியும், களவுத் தொழிலைப் போக்கியும்,
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்        200தேவர்களைப் போற்றியும், வேள்வியைச் செய்வித்தும்                                          200
நல் ஆனொடு பகடு ஓம்பியும்நல்ல பசுக்களோடு எருதுகளைப் பாதுகாத்தும்,                                                        
நான்மறையோர் புகழ் பரப்பியும்அந்தணர்க்குள்ள புகழை அவர்க்கு நிலைநிறுத்தியும்,
பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும்(பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும்,
புண்ணியம் முட்டா தண் நிழல் வாழ்க்கைஅறத்தொழில்கள் முட்டுப்படாத குளிர்ந்த அருளுடனே வாழும் இல்வாழ்க்கையையுடைய,
கொடு மேழி நசை உழவர்             205வளைந்த மேழி(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும் –                                     205
நெடு நுகத்து பகல் போலநீண்ட நுகத்தடியில் (தைத்த) பகலாணி போல,
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்நடுவுநிலையென்னும் குணம் நிலைபெற்ற நல்ல நெஞ்சினையுடையோர்,
வடு அஞ்சி வாய் மொழிந்து(தம் குடிக்கு)பழிச்சொல் அஞ்சி மெய்யே சொல்லி,
தமவும் பிறவும் ஒப்ப நாடிதம்முடையவற்றையும் பிறருடையவற்றையும் ஒன்றாக எண்ணி,
கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது 210(தாம்)கொள்வனவற்றை மிகையாகக் கொள்ளாது, கொடுப்பனவற்றைக் குறையாகக் கொடாமல்,        210
பல் பண்டம் பகர்ந்து வீசும்பல சரக்குகளையும் விலைசொல்லிக் கொடுக்கும்,
தொல் கொண்டி துவன்று இருக்கைபழந்தொழிலால் வரும் உணவினைக் கொள்ளும், நெருங்கின குடியிருப்புகள் – (கொண்ட பட்டினம்),
பல் ஆயமொடு பதி பழகிபல திரளோடே இவ்வூரிடத்தே பழகி,
வேறுவேறு உயர்ந்த முது வாய் ஒக்கல்பல பல சாதிகளாயுயர்ந்த அறிவு வாய்ந்த சுற்றத்தினர்
சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு    215திருவிழா நிகழும் பழைமையான ஊருக்குச் சென்று குடியேறினாற்போன்று,                  215
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துமொழிகள் பல பெருகிய குற்றமற்ற (பிற)தேசங்களிலே
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்(தத்தம்)நிலத்தைக் கைவிட்டுப்போந்த மக்கள் கூடி மகிழ்ந்து இருக்கும்,
முட்டா சிறப்பின் பட்டினம் பெறினும்குறைவுபடாத சிறப்புகள் கொண்ட – பட்டினம் (எனக்கு உரித்தாகப்)பெறுவதாயினும் –
வார் இரும் கூந்தல் வயங்கிழை ஒழியநீண்ட கரிய கூந்தலையுடைய ஒளிரும் அணிகளையுடையாள் (இங்கு என்னைப்)பிரிந்திருப்ப,
வாரேன் வாழிய நெஞ்சே கூர் உகிர்  220(யான் நின்னோடு கூட)வாரேன்; (நீ)வாழ்க, நெஞ்சே – கூரிய நகங்களையுடைய,                      220
கொடுவரி குருளை கூட்டுள் வளர்ந்து ஆங்குவளைந்த வரிகளையுடைய(புலியின்) குட்டி கூட்டுக்குள் (அடையுண்டு)வளர்ந்தாற் போன்று,
பிறர் பிணியகத்து இருந்து பீடு காழ் முற்றிபகைவர் சிறையறையிலிருந்து, (தன்)தன்மான உணர்வு வைரம்பாய்ந்து;
அரும் கரை கவிய குத்தி குழி கொன்று(தன்னை விழப்பண்ணின குழியின்)அரிய கரைகளை இடியும்படி (கொம்பினால்)குத்திக் குழியைத் தூர்த்த,
பெரும் கை யானை பிடி புக்கு ஆங்குபெரிய துதிக்கையையுடைய யானை (தன்)பிடியிடத்தில் சென்றதைப் போன்று,
நுண்ணிதின் உணர நாடி நண்ணார்     225(சிறையிலிருந்து தப்புதற்குரிய வழியை)நுட்பமாக எண்ணி ஆராய்ந்து, (அப்)பகைவருடைய    225
செறிவு உடை திண் காப்பு ஏறி வாள் கழித்துசெறிவுள்ள திண்ணிய காவல்மதிலை ஏறி(க்கடந்து), வாட்படையை ஓட்டி,
உரு கெழு தாயம் ஊழின் எய்திஅச்சம் பொருந்தின தன் அரசவுரிமையை முறையாலே பெற்று –
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்(தான் இறையாகப்)பெற்ற அரசுரிமையால் மகிழ்வுறுதல் செய்யானாய், பகைவரின்
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்காவலையுடைய அரண்களைப் பிடித்த (கோட்டைக்)கதவை முறிக்கும் கொம்பினையும்,
முடி உடை கரும் தலை புரட்டும் முன் தாள்  230கிரீடங்களையுடைய கரிய தலைகளை உருட்டும் முன்காலின்                                        230
உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானைநகமுடைய அடிகளையும் கொண்ட உயர்ந்த அழகினையுடைய யானை,
வடி மணி புரவியொடு வயவர் வீழவடித்த மணிகட்டின குதிரைகளோடு, வீரர் விழும்படி,
பெரு நல் வானத்து பருந்து உலாய் நடப்பபெரிய நல்ல வானத்தில் பருந்து உலாவித் திரியும்படியாக,
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டுபுதர்கள் படர்ந்த பாறைக்குன்றுகள் போல, போரை விரும்பி,
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி    235(சிறுபூளை,பெரும்பூளையாகிய)பலவாகிய பூளைகளோடே, உழிஞையைச் சூடி,                    235
பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம்பேயின் கண்ணை ஒத்த, முழங்குகின்ற காவலையுடைய முரசம்
மா கண் அகல் அறை அதிர்வன முழங்கபெருமைகொள்ளும் இடத்தையுடைய பாசறையில் நடுங்குவனவாய் முழங்க,
முனை கெட சென்று முன் சமம் முருக்கிபகைப்புலம் கெடும்படி சென்று, முன்னால் நிற்கும் தூசிப்படையை அழித்து,
தலை தவ சென்று தண் பணை எடுப்பி(அப்பகைவர்)அரண்களில் மிடுக்குடன் நடந்து, மருதநிலத்துக் குடிகளை ஓட்டி –
வெண் பூ கரும்பொடு செந்நெல் நீடி 240வெண்மையான பூக்களையுடைய கரும்புகளுடன் செந்நெல்லும் உயரமாய் வளர்ந்து,             240
மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கிபெரிய இதழ்களையுடைய குவளையோடு நெய்தலும் கலந்து,
கராஅம் கலித்த கண் அகன் பொய்கைமுதலைகள் (செருக்கித்)திரிந்த இடமகன்ற பொய்கைகளில்,
கொழும் கால் புதவமொடு செருந்தி நீடிதடித்த தண்டுகளையுடைய அறுகுடன் கோரைகளும் வளர்ந்து,
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்றுவயலும், குளங்களும், தம்மில் ஒன்றாகி, நீரற்று,
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும்   245நெளிவுள்ள கொம்புகளையுடைய கலைமான்களோடு பெண்மான்கள் துள்ளிவிளையாடவும்;    245
கொண்டி மகளிர் உண்துறை மூழ்கிசிறைப்பிடித்துவந்த மகளிர் நீருண்ணும் துறையில் சென்று முழுகி,
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்(அவர்கள்)அந்திக்காலத்தே கொளுத்தின அணையாத விளக்கினையுடைய,
மலர் அணி மெழுக்கம் ஏறி பலர் தொழபூக்களைச் சூட்டின, சாணம் மெழுகிய, இடத்தில் ஏறிப் பலர் தொழுவதற்கு,
வம்பலர் சேக்கும் கந்து உடை பொதியில்புதியவர்கள் தங்கும், தெய்வம் உறையும் கம்பம் உள்ள அம்பலத்தில்,
பரு நிலை நெடும் தூண் ஒல்க தீண்டி        250பருத்த நிலையையுடைய நெடிய தூண் சாயும்படி தம்முடம்பை உரசி                         250
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும்பெரிய நல்ல யானைகளுடன் பிடிகள் கூடித் தங்கும்படியாகவும்;
அரு விலை நறும் பூ தூஉய் தெருவில்அரிய விலை(க்கு வாங்கிய) நறுமணமுள்ள பூக்களைச் சிதறி, தெருவினில்
முது வாய் கோடியர் முழவொடு புணர்ந்தஅறிவு வாய்க்கப்பெற்ற கூத்தருடைய மத்தளத்தின் தாளத்தோடு கூடின
திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும்முறுக்கப்பட்ட புரி(போன்ற) நரம்பின் இனிய கட்டினையுடைய யாழைக் கேட்கும்
பெரு விழா கழிந்த பேஎ முதிர் மன்றத்து    255பெரிய திருநாள் முடிந்துபோன, அச்சம் மிகுந்த, மன்றத்தில்,                                         255
சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பிசிறிய பூக்களையுடைய நெருஞ்சியோடு அறுகம்புல் அடர்ந்து பரவப்பெற்று,
அழல் வாய் ஓரி அஞ்சுவர கதிர்ப்பவும்கொடிய வாயையுடைய நரிகள் (பிறர்க்கு)அச்சம் தோன்ற ஊளையிடவும்;
அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்அழுகின்ற குரலையுடைய கூகைகளுடன் ஆண்டலைப்பறவைகள் கூப்பிடவும்;
கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇதிரட்சிகொண்ட ஆண்பேய்களுடன் மயிரைத் தாழ்த்து மெல்லநடந்து,
பிணம் தின் யாக்கை பேய்மகள் துவன்றவும்   260பிணந்தின்னும் வடிவையுடைய பேய்மகள் நெருங்கிச்செல்லவும்;                                  260
கொடும் கால் மாடத்து நெடும் கடை துவன்றிஉருண்ட(வளைவான) தூண்களையுடைய மாடத்தின் உயரமான தலைவாசலில் ஒன்றுகூடி,
விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில்(இடையறாது)விருந்தினர் உண்டு(ம்) குறையாத நிறைந்த சோற்றையுடைய அடுக்களை(உள்ள),
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து(சாந்து பூசி)அழகுமிக்க சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் உயர்ந்த திண்ணைகளிலேயிருந்து,
பைம் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர்பச்சைக் கிளிகள் மழலையில் பேசும் பால் நிறைந்த வளமான ஊர்,
தொடுதோல் அடியர் துடி பட குழீஇ   265செருப்பு (அணிந்த) காலினையுடையராய் உடுக்கை ஒலிக்கத் திரண்டு,                             265
கொடு வில் எயினர் கொள்ளை உண்டகொடிய வில்லையுடைய வேடர் கொள்ளையாக(க் கொண்டு) உண்ட
உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்துநெல் இல்லாமற்போன வெறுமையான நெற்கூட்டின் உட்புறத்தில் தங்கி,
வளை வாய் கூகை நன் பகல் குழறவும்வளைந்த அலகையுடைய கூகை உச்சிக்காலத்து(ம்) கூவவும்;
அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழியஅரிய காவலையுடைய மதிலையுடைய பகைவரின் படைவீடுகள் அழகு அழியவும்,
பெரும் பாழ் செய்தும் அமையான் மருங்கு அற 270பெரும் அழிவைச் செய்தும் மனநிறைவடையானாய் – ‘(பகைவர்)நாடு இல்லையாகும்படி, 270
மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனேமலைகளையெல்லாம் மட்டப்படுத்துவான், கடல்களையெல்லாம் தூர்ப்பான்,
வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் எனவானத்தை(யும்) (கீழ்)வீழ்த்துவான், காற்று (அடிக்கும் போக்கை)மாற்றுவான்’ என்று கூறும்படி,
தான் முன்னிய துறைபோகலின்தான் கருதிய (போர்த்துறைகள்)எல்லாம் பொருதுமுடிக்கக்கூடியவன் என்பதினால் –
பல் ஒளியர் பணிபு ஒடுங்கபலராகிய ஒளிநாட்டார் தாழ்ந்து (தம்)வீரம் குறைய,
தொல் அருவாளர் தொழில் கேட்ப              275தொன்மையான அருவாளநாட்டவர் ஏவல் கேட்க,                                                    275
வடவர் வாட குடவர் கூம்பவடநாட்டவர் களையிழக்க, குடநாட்டவர் (மனவெழுச்சி)குன்றிப்போக,
தென்னவன் திறல் கெட சீறி மன்னர்பாண்டியன் வலியழிய, சினங்கொண்டு, அரசருடைய
மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள்பெரும் அரண்களைக் கைப்பற்றும் செருக்குடைய வலிய முயற்சியினையும்,
மா தானை மற மொய்ம்பின்பெருமைமிக்க நாற்படையினையும், வீரமான வலிமையையும்,(கொண்டு)
செம் கண்ணால் செயிர்த்து நோக்கி  280(தன்)சிவந்த கண்ணால் வெகுண்டு பார்த்து,                                                          280
புன் பொதுவர் வழி பொன்றவளங்குன்றிய முல்லைநில மன்னர் கிளை(முழுதும்)கெட்டுப்போக,
இருங்கோவேள் மருங்கு சாயஇருங்கோவேளின் குலம் (முழுதும்)அழிய –
காடு கொன்று நாடு ஆக்கிகாடுகளை அழித்து, (அவற்றை மக்கள் வாழும்)நாடாகச் செய்து,
குளம் தொட்டு வளம் பெருக்கிகுளங்களைத் தோண்டி, செல்வத்தை மிகுத்து,
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி      285பருத்த நிலைகளைக்கொண்ட மாடங்களையுடைய உறையூர் (என்னும் தன்னூரை)விரிவாக்கி,        285
கோயிலொடு குடி நிறீஇகோயில்களுடன் (பழைய)குடிமக்களையும் நிலைநிறுத்தி,
வாயிலொடு புழை அமைத்துபெரிய வாயில்களுடன் சிறு வாசல்களையும் உண்டாக்கி,
ஞாயில்தொறும் புதை நிறீஇகோட்டை முகப்புத்தோறும் (மறைந்தெறியும்)அம்புக்கட்டுக்களைக் கட்டிவைத்து,
பொருவேம் என பெயர் கொடுத்துபோரிடுவோம் எனச் சூள் உரைத்து,
ஒருவேம் என புறக்கொடாது          290(பின்னர் போரைக்)கைவிடுவோம் என்று கருதிப் புறமுதுகிட்டு ஓடாமல்,                          290
திரு நிலைஇய பெரு மன் எயில்செல்வம் நிலைபெற்ற பெரிய ஆக்கத்தையுடைய (உறந்தையின்)மதிலில்,
மின் ஒளி எறிப்ப தம் ஒளி மழுங்கிபிரகாசமான விளக்குகள் ஒளிவீசுவதால் – தம்முடைய வீரம் குறைந்து,
விசி பிணி முழவின் வேந்தர் சூடியஇறுக்கிய வார்க்கட்டினைக் கொண்ட முரசுகளையுடைய வேந்தர் (தம் முடிமேல்)சூடின
பசு மணி பொருத பரேர் எறுழ் கழல் கால்புதிய மணிகள் மோதுகின்ற பெரிய அழகிய வலியினையுடைய கழலை அணிந்த காலையும்,
பொன் தொடி புதல்வர் ஓடி ஆடவும்   295பொன்னால் செய்த வளையினையுடைய பிள்ளைகள் ஓடிவந்து ஏறி விளையாடுதலாலும்,     295
முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும்உடல் முழுதும் அணிகலன்கள் அணிந்த மகளிரின் (தாமரை)மொட்டு(ப் போன்ற)முலைகள் அழுந்துவதாலும்,
செம் சாந்து சிதைந்த மார்பின் ஒண் பூண்சிவப்புச் சந்தனம் அழிந்துபோன மார்பினையும், ஒளிரும் பேரணிகலன்களையும்,
அரிமா அன்ன அணங்கு உடை துப்பின்ஆண் சிங்கத்தைப் போன்ற வருத்துதலையுடைய வலியினையும் உடைய
திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கியதிருமாவளவவன் பகைவரைக் கொல்லுதற்கு உயர்த்தி ஓங்கிய
வேலினும் வெய்ய கானம் அவன்               300வேலினும் கொடியவாயிருந்தன, (தலைவியைப் பிரிந்து செல்லும் வழியிலுள்ள)காடு, அவன்    300
கோலினும் தண்ணிய தட மென் தோளேசெங்கோலினும் குளிர்ந்தன (தலைவியின்)பெரிய மெல்லிய தோள்கள்.