| |
# இடைக்காடன் | # இடைக்காடன் |
# 251 முல்லை | # 251 முல்லை |
மடவ வாழி மஞ்ஞை
மா இனம் | அறிவில்லாமற்போய்விட்டன!
வாழ்க! மயிலின் பெரிய கூட்டம் |
கால மாரி
பெய்து என அதன்_எதிர் | கார்ப்பருவத்து மழை
பெய்தது என்று எண்ணி |
ஆலலும் ஆலின
பிடவும் பூத்தன | ஆடவும் செய்கின்றன;
பிச்சியும் பூத்தன; |
கார் அன்று
இகுளை தீர்க நின் படரே | இது கார்ப்பருவம்
அல்ல, தோழி! தீர்க உன் துன்பம்; |
கழிந்த
மாரிக்கு ஒழிந்த பழ நீர் | சென்ற மழைக்காலத்தில்
மிஞ்சிப்போன பழைய நீரை, |
புது நீர்
கொளீஇய உகுத்தரும் | புதிய நீரைக்
கொள்ளும்பொருட்டு, உகுத்துவிட்டுப்போகும் |
நொதுமல்
வானத்து முழங்கு குரல் கேட்டே | நம்மீது பற்று இல்லாத
வானத்தின் முழங்குகின்ற குரலைக் கேட்டு – |
| |
# கிடங்கில்
குலபதி நக்கண்ணன் | # கிடங்கில் குலபதி
நக்கண்ணன் |
# 252 குறிஞ்சி | # 252 குறிஞ்சி |
நெடிய திரண்ட
தோள் வளை ஞெகிழ்த்த | நீண்ட திரண்ட
தோள்களில் உள்ள வளைகளை நெகிழும்படி செய்த |
கொடியன் ஆகிய
குன்று கெழு நாடன் | கொடுமையைச்
செய்தவனாகிய குன்றுகள் சேர்ந்திருக்கும் நாட்டினன், |
வருவதோர் காலை
இன்முகம் திரியாது | வரும்பொழுது இனிய
முகம் வேறுபடாமல் |
கடவுள் கற்பின்
அவன் எதிர் பேணி | தெய்வத்தன்மையுடைய
கற்பினால் அவனுக்கு எதிர்சென்று உபசரித்து |
மடவை மன்ற நீ
என கடவுபு | அறிவில்லாமற்
போய்விட்டாய், நிச்சயமாக, நீ என்று உனக்குள் கேட்டுக்கொண்டு |
துனியல் வாழி
தோழி சான்றோர் | வருந்தவேண்டாம்,
வாழ்க, தோழியே! சான்றோர் |
புகழும்
முன்னர் நாணுப | புகழும் முன்னர்
நாணுவர் |
பழி யாங்கு
ஒல்பவோ காணும்_காலே | பழிச்சொல்லை எப்படி
பொறுத்துக்கொள்வர், யோசித்துப்பார்த்தால் – |
| |
# பூங்கண்ணன் | # பூங்கண்ணன் |
# 253 பாலை | # 253 பாலை |
கேளார் ஆகுவர்
தோழி கேட்பின் | யாரும் சொல்லக்
கேட்டிருக்கமாட்டார்; தோழி! கேட்டிருந்தால் |
விழுமிது
கழிவது ஆயினும் நெகிழ் நூல் | சிறந்த பொருள்
இல்லாமற்போனாலும், நெகிழ்ந்த நூலால் கட்டிய |
பூ சேர்
அணையின் பெரும் கவின் தொலைந்த நின் | மலர் மாலைகள் சேர்ந்த
படுக்கையில், சிறந்த அழகு நீங்கிய உனது |
நாள் துயர் கெட
பின் நீடலர் மாதோ | இந்நாளின் துயர்
தீரும்படி இன்னும் நீட்டித்துக்கொண்டிராமல் திரும்ப வருவார்; |
ஒலி கழை நிவந்த
ஓங்கு மலை சாரல் | ஒலிக்கின்ற
மூங்கில்கள் நிமிர்ந்து நிற்கும் உயர்ந்த மலைப் பக்கத்தில் |
புலி புகா
உறுத்த புலவு நாறு கல் அளை | புலி தன் உணவைச்
செறித்துவைத்த புலால் நாறும் கல் குகையில் |
ஆறு செல்
மாக்கள் சேக்கும் | வழிச் செல்லும்
மனிதர்கள் தங்கும் |
கோடு உயர்
பிறங்கல் மலை இறந்தோரே | சிகரங்கள் உயர்ந்த
பாறைக் குன்றுகளைக் கடந்து சென்றோர் – |
| |
# பார்காப்பான் | # பார்காப்பான் |
# 254 பாலை | # 254 பாலை |
இலை இல் அம்
சினை இன வண்டு ஆர்ப்ப | இலை இல்லாத அழகிய
கிளையில் கூட்டமாய் வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்க, |
முலை ஏர் மென்
முகை அவிழ்ந்த கோங்கின் | முலையின் அழகைப் போன்ற
மெல்லிய மொட்டுகள் மலர்ந்த கோங்கின் |
தலை அலர் வந்தன
வாரா தோழி | முதற் பூக்களும்
வந்தன! வரவில்லையே, தோழி! – |
துயில் இன்
கங்குல் துயில் அவர் மறந்தனர் | துயில்வதற்கு இனிய
இரவில் என்னோடு கொண்ட துயிலை அவர் மறந்துவிட்டவராய், |
பயில் நறும்
கதுப்பின் பாயலும் உள்ளார் | தாம் பழகிய மணமுள்ள
கூந்தலில் படுத்திருந்ததையும் நினைத்துப்பார்க்காதவராய், |
செய்_பொருள்
தரல் நசைஇ சென்றோர் | ஈட்டுவதற்குரிய
பொருளைக் கொண்டுவரும்படி விரும்பிச் சென்றோர் |
எய்தினரால் என
வரூஉம் தூதே | நம் ஊரை வந்தடைந்தார்
என்று வருகின்ற தூது- |
| |
# கடுகு பெரும்
தேவன் | # கடுகு பெரும் தேவன் |
# 255 பாலை | # 255 பாலை |
பொத்து இல் காழ
அத்த யாஅத்து | பொந்துகள் இல்லாத
வயிரம்பாய்ந்த, பாலைவழியில் உள்ள யாமரத்தின் |
பொரி அரை
முழு_முதல் உருவ குத்தி | பொரிந்த அடிமரத்தை
முற்றவும் உருவிச் செல்லக் குத்தி |
மறம் கெழு தட
கையின் வாங்கி உயங்கு நடை | வலிமையுள்ள தன் அகன்ற
கையினால் வளைத்து, வருத்தமிக்க நடையையும், |
சிறு கண் பெரு
நிரை உறு பசி தீர்க்கும் | சிறுத்த கண்களையும்
கொண்ட பெருங் கூட்டத்தின் மிகுந்த பசியைத் தீர்க்கும் |
தட மருப்பு
யானை கண்டனர் தோழி | அகன்ற கொம்புகளைக்
கொண்ட யானையைக் கண்டனர் தோழி! |
தம் கடன்
இறீஇயர் எண்ணி இடம்-தொறும் | தன்னுடைய கடமையை
நிறைவேற்ற எண்ணி இடங்கள்தோறும் |
காமர்
பொருள்_பிணி போகிய | தாம் விரும்பும்
பொருளைத் தேடுவதற்குப் போன |
நாம் வெம்
காதலர் சென்ற ஆறே | நாம் விரும்பும்
தலைவர் சென்ற வழியில் – |
| |
# 256 பாலை | # 256 பாலை |
மணி வார்ந்து
அன்ன மா கொடி அறுகை | நீல மணியின் கதிர்களை
வரிசையாய் வைத்தாற்போன்ற கரிய கொடிகள் படர்ந்த அறுகம்புல் |
பிணங்கு அரில்
மென் கொம்பு பிணையொடு மாந்தி | செறிவாகப்
பின்னிக்கிடந்ததை, மெல்லிய கொம்புகள் உள்ள தன் பெண்மானோடு உண்டு |
மான் ஏறு
உகளும் கானம் பிற்பட | ஆண்மான்
துள்ளிவிளையாடும் காடு பின்னே செல்ல, |
வினை நலம் படீஇ
வருதும் அ வரை | நாம் மேற்கொண்ட
தொழிலின் பயனைப் பெற்றுக்கொண்டு வருவோம்; அந்நாள் வரை |
தாங்கல்
ஒல்லுமோ பூ குழையோய் என | பொறுத்திருக்க
முடியுமா, பொலிவுள்ள குழையை அணிந்தவளே? என்று |
சொல்லா முன்னர்
நில்லா ஆகி | சொல்லி முடிக்கும்
முன்னர், நிற்காமல் |
நீர் விலங்கு
அழுதல் ஆனா | நீரைத் துடைக்கத்
துடைக்க வரும் அழுகையைக் கொண்டு |
தேர்
விலங்கினவால் தெரிவை கண்ணே | தேரைத்
தடுத்துநிறுத்தின என் தலைவியின் கண்கள். |
| |
# உறையூர்
சிறுகந்தன் | # உறையூர் சிறுகந்தன் |
# 257 குறிஞ்சி | # 257 குறிஞ்சி |
வேரும் முதலும்
கோடும் ஓராங்கு | வேரிலும்,
அடிமரத்திலும், கிளையிலும் ஒன்றுபோல் |
தொடுத்த போல
தூங்குபு தொடரி | தொடுத்து வைத்தைதைப்
போன்று தொங்கித் தொடர்ந்து |
கீழ் தாழ்வு
அன்ன வீழ் கோள் பலவின் | கீழே தாழ்ந்தாற்போன்ற
தணிந்த குலைகளைக் கொண்ட பலாமரங்களையுடைய |
ஆர் கலி
வெற்பன் வரு-தொறும் வரூஉம் | நிறைந்த செழிப்பையுடைய
மலைநாட்டன் இங்கே வருந்தோறும் வருகின்றது, |
அகலினும்
அகலாது ஆகி | பின்னர் அவன்
அகன்றாலும் அகலாதது ஆகி |
இகலும் தோழி
நம் காமத்து பகையே | நம்மோடே
போட்டிபோடுகின்றது நம் காமம் என்னும் பகை. |
| |
# பரணர் | # பரணர் |
# 258 மருதம் | # 258 மருதம் |
வாரல் எம் சேரி
தாரல் நின் தாரே | வரவேண்டாம் எமது
சேரிக்கு; தரவேண்டாம் உனது மாலையை; |
அலர் ஆகின்றால்
பெரும காவிரி | பழிச்சொல்லை
ஏற்படுத்துகின்றது; பெருமானே! காவிரியின் |
பலர் ஆடு
பெரும் துறை மருதொடு பிணித்த | பலர் நீராடும் பெரிய
நீர்த்துறையில் மருதமரத்தோடு கட்டிய |
ஏந்து கோட்டு
யானை சேந்தன் தந்தை | ஏந்திய கொம்புகளையுடைய
யானைகளைக் கொண்ட சேந்தனின் தந்தை |
அரியல் அம்
புகவின் அம் தோட்டு வேட்டை | கள்ளாகிய உணவையும்,
அழகிய விலங்குக் கூட்டங்களை வேட்டையாடுதலையும், |
நிரைய ஒள் வாள்
இளையர் பெருமகன் | வரிசைப் பட்ட
ஒளிவிடும் வாளைக் கொண்ட இளைஞர்களையும் கொண்ட பெருமகனான |
அழிசி
ஆர்க்காடு அன்ன இவள் | அழிசி என்பானின்
ஆர்க்காடு போன்ற இவளின் |
பழி தீர் மாண்
நலம் தொலைவன கண்டே | குற்றம் தீர்ந்த
சிறந்த பெண்மைநலம் தொலைவதைக் கண்டபின்னர் – |
| |
# பரணர் | # பரணர் |
# 259 குறிஞ்சி | # 259 குறிஞ்சி |
மழை சேர்ந்து
எழுதரு மாரி குன்றத்து | மேகங்கள் சேர்ந்து
எழுகின்ற மழையையுடைய குன்றினில் |
அருவி ஆர்ந்த
தண் நறும் காந்தள் | அருவியைப் பொருந்திய
குளிர்ந்த மணமுள்ள காந்தள் |
முகை அவிழ்ந்து
ஆனா நாறும் நறு நுதல் | மொட்டு அவிழ்ந்தும்
அமையாத அளவு மணங்கமழும் நறிய நெற்றியையும், |
பல் இதழ் மழை
கண் மாஅயோயே | பல இதழ்களைக்கொண்ட
தாமரை மலர்போன்ற குளிர்ந்த கண்களையும் உடைய மாநிறத்தவளே! |
ஒல்வை ஆயினும்
கொல்வை ஆயினும் | என் செயலைப்
பொறுத்தாலும் சரி, பொறுக்காமல் என்னைக் கொன்றுபோட்டாலும் சரி, |
நீ அளந்து
அறிவை நின் புரைமை வாய் போல் | நீ அளந்து அறிவாய் உன்
உயர்வினை; உண்மையைப் போல் |
பொய்ம்மொழி
கூறல் அஃது எவனோ | பொய்யான சொற்களைக்
கூறுவதால் என்ன பயன்? |
நெஞ்சம் நன்றே
நின்_வயினானே | என் நெஞ்சம் நல்லதையே
எண்ணியது உனக்காக – |
| |
# கல்லாடனார் | # கல்லாடனார் |
# 260 பாலை | # 260 பாலை |
குருகும் இரு
விசும்பு இவரும் புதலும் | நாரைகள் கரிய
வானத்தில் உயர்ந்து செல்லும்; புதர்களிலுள்ள மொட்டுகளும் |
வரி வண்டு ஊத
வாய் நெகிழ்ந்தனவே | வரிகளையுடைய வண்டுகள்
சுற்றிப் பறப்பதால் இதழ்கள் விரிந்திருக்கும்; |
சுரி வளை
பொலிந்த தோளும் செற்றும் | சுழித்த சங்கு
வளையல்கள் பொலிந்த தோள்களும் செறிவுற்றிருக்கின்றன; |
வருவர்-கொல்
வாழி தோழி பொருவார் | வந்துவிடுவார், வாழ்க
தோழியே! போரிடுபவரின் |
மண் எடுத்து
உண்ணும் அண்ணல் யானை | மண்ணைக்கொண்டு
பயன்பெறுபவரும், தலைமைப் பண்புடைய யானையையும் |
வண் தேர்
தொண்டையர் வழை அமல் அடுக்கத்து | நிறைந்த தேர்களையும்
உடையவரும் ஆகிய தொண்டைமான்களின் சுரபுன்னை மரங்கள் அடர்ந்திருக்கும்
மலைப்பக்கத்தில் |
கன்று இல் ஓர்
ஆ விலங்கிய | கன்றினை இல்லாத
ஒற்றைப் பசுவைத் தடுத்து நிறுத்திய |
புன் தாள் ஓமைய
சுரன் இறந்தோரே | புல்லிய அடியைக் கொண்ட
ஓமைமரத்தைக் கொண்ட பாலைநிலத்தைக் கடந்து சென்றவர் – |
| |
# கழார் கீரன்
எயிற்றி | # கழார் கீரன் எயிற்றி |
# 261 குறிஞ்சி | # 261 குறிஞ்சி |
பழ மழை
பொழிந்து என பதன் அழிந்து உருகிய | பழைய மழை பொழிந்ததாக,
பதம் கெட்டு விழுந்த |
சிதட்டு காய்
எண்ணின் சில் பெயல் கடை நாள் | உள்ளீடற்ற காயையுடைய
எள் பயிருக்கான சிறிதளவு மழைபெய்யும் கார்காலத்து இறுதிநாட்களில் |
சேற்று நிலை
முனைஇய செம் கண் காரான் | சேற்றில் நிற்பதை
வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை |
நள்ளென்
யாமத்து ஐயென கரையும் | நள்ளென்கிற நடுச்
சாமத்தில் ‘ஐ’யென்று கத்தும் |
அஞ்சுவரு
பொழுதினானும் என் கண் | அச்சந்தரும்
பொழுதிலும் என்னுடைய கண்கள் |
துஞ்சா வாழி
தோழி காவலர் | துயில்கொள்ளவில்ல,
வாழ்க, தோழியே! இரவுக் காவலர் |
கணக்கு ஆய்
வகையின் வருந்தி என் | நாழிகைக் கணக்கை
ஆராய்வதைப் போல் நேரத்தை எண்ணிக்கொண்டு வருந்தி என் |
நெஞ்சு புண்
உற்ற விழுமத்தானே | நெஞ்சம் புண்பட்ட
காரணத்தினால் – |
| |
# பாலை பாடிய
பெருங்கடுங்கோ | # பாலை பாடிய
பெருங்கடுங்கோ |
# 262 பாலை | # 262 பாலை |
ஊஉர் அலர் எழ
சேரி கல்லென | ஊரில் பழிமொழி உண்டாக,
தெருவே கூடிப்பேச, |
ஆனாது
அலைக்கும் அறன் இல் அன்னை | நிற்காமல்
வருத்துகின்ற அறமற்ற அன்னை |
தானே இருக்க
தன் மனை யானே | தானே இருக்கட்டும்,
தன் வீட்டில்; நானோ |
நெல்லி தின்ற
முள் எயிறு தயங்க | நெல்லிக்காயைத் தின்ற
முள்போன்ற பற்கள் ஒளிர |
உணல்
ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு | நீ குடிப்பதாக
எண்ணிப்பார்த்தேன்; தலைவனோடு தொலைநாட்டு |
விண் தொட
நிவந்த விலங்கு மலை கவாஅன் | விண்ணைத் தொடும்படி
உயர்ந்த குறுக்கிட்டுக்கிடக்கும் மலையின் உச்சிச் சரிவில் |
கரும்பு நடு
பாத்தி அன்ன | கரும்பை நட்டிருக்கும்
பாத்தியைப் போன்ற |
பெரும் களிற்று
அடி_வழி நிலைஇய நீரே | பெரிய களிற்றின் பாதச்
சுவட்டில் தங்கிய நீரினை – |
| |
#
பெருஞ்சாத்தன் | # பெருஞ்சாத்தன் |
# 263 குறிஞ்சி | # 263 குறிஞ்சி |
மறி குரல்
அறுத்து தினை பிரப்பு இரீஇ | ஆட்டின் கழுத்தை
அறுத்தும், தினையின் பலியரிசியைப் படைத்தும், |
செல் ஆற்று
கவலை பல் இயம் கறங்க | மக்கள் செல்லும்
பாதையின் கவர்த்த வழிகளில் பல் வித இசைக்கருவிகள் முழங்க |
தோற்றம் அல்லது
நோய்க்கு மருந்து ஆகா | தாம் வெளிப்படுதல்
அன்றி நமது நோய்க்கு வேறு மருந்தாக ஆகாத |
வேற்று பெரும்
தெய்வம் பல் உடன் வாழ்த்தி | வேறான பெரிய
தெய்வங்கள் பவற்றைச் சேர வாழ்த்தி, |
பேஎய் கொளீஇயள்
இவள் எனப்படுதல் | பேய் பிடித்துவிட்டது
இவளுக்கு என்று ஊரார் சொல்லுவது |
நோ_தக்கன்றே
தோழி மால் வரை | வருந்துவதற்கு
உரியதாகும் தோழி!, பெரிதான மலையில் |
மழை விளையாடும்
நாடனை | மேகங்கள்
விளையாடுகின்ற நாட்டுக்குரியவனிடம் |
பிழையேம் ஆகிய
நாம் இதன் படவே | தவறில்லாதவராகிய நாம்
இந்த வெறியாட்டலுக்கு உட்படுதல் – |
| |
# கபிலர் | # கபிலர் |
# 264 குறிஞ்சி | # 264 குறிஞ்சி |
கலி மழை கெழீஇய
கான்யாற்று இகு கரை | ஆரவாரமிக்க மழை
செறிந்த காட்டாற்றின் தாழ்கின்ற கரையில் |
ஒலி நெடும்
பீலி துயல்வர இயலி | தழைத்த நெடிதான தோகை
அசையுமாறு வேகமாக நடந்து |
ஆடு மயில்
அகவும் நாடன் நம்மொடு | ஆடுகின்ற மயில்கள்
அகவும் நாட்டினன், நம்மோடு |
நயந்தனன் கொண்ட
கேண்மை | விருப்பமுடையவனாய்க்
கொண்ட நட்பு |
பயந்த_காலும்
பயப்பு ஒல்லாதே | நமக்குப் பசலையைத்
தந்தபோதும், நெஞ்சம் அந்தப் பசலையோடு பொருந்தி இராது. |
| |
# கருவூர்
கதப்பிள்ளை | # கருவூர் கதப்பிள்ளை |
# 265 குறிஞ்சி | # 265 குறிஞ்சி |
காந்தள் அம்
கொழு முகை காவல் செல்லாது | காந்தளின் அழகிய
கொழுவிய மொட்டை, தானாக மலரட்டும் என்று காத்திருக்காமல் |
வண்டு வாய்
திறக்கும் பொழுதில் பண்டும் | வண்டு அதன் வாயைத்
திறக்கும் போது, முன்பும் |
தாம் அறி
செம்மை சான்றோர் கண்ட | தாம் அறிந்த
செம்மையுள்ளம் கொண்ட சான்றோரைக் கண்ட |
கடன் அறி
மாக்கள் போல இடன் விட்டு | கடமைகளை அறிந்த மக்கள்
போல, (காந்தள்) இடம் கொடுத்து, |
இதழ் தளை
அவிழ்ந்த ஏகல் வெற்பன் | இதழ்களைக்
கட்டவிழ்க்கும் உயர்ந்த மலைகளையுடைய தலைவன் |
நன்னர்
நெஞ்சத்தன் தோழி நின் நிலை | நல்ல மனம் படைத்தவன்;
தோழி! உனது நிலையை |
யான் தனக்கு
உரைத்தனென் ஆக | நான் அவனுக்குச்
சொன்னேனாக |
தான் நாணினன்
இஃது ஆகா ஆறே | அவன் நாணினான், இந்தக்
களவொழுக்கம் இன்னும் நீட்டித்து நிகழாதபடி. |
| |
# நக்கீரர் | # நக்கீரர் |
# 266 பாலை | # 266 பாலை |
நமக்கு ஒன்று
உரையார் ஆயினும் தமக்கு ஒன்று | நமக்காக ஏதேனும் ஒரு
வார்த்தை சொல்லாவிடினும், தமக்கு ஒன்றான |
இன்னா இரவின்
இன் துணை ஆகிய | இன்னாத இரவில் இனிய
துணையாக இருந்த |
படப்பை
வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ | கொல்லைப்புறத்து
வேங்கை மரத்துக்கு ஒரு சொல் சொல்ல மறந்துவிட்டாரே! |
மறப்பு அரும்
பணை தோள் மரீஇ | மறக்கமுடியாத பருத்த
தோளைத் தழுவி |
துறத்தல்
வல்லியோர் புள்_வாய் தூதே | நம்மைத் துறந்து
செல்லும் ஆற்றலுள்ளோர் பறவைகள் மூலம் விடும் தூதின் வழியாக – |
| |
# காலெறி
கடிகையார் | # காலெறி கடிகையார் |
# 267 பாலை | # 267 பாலை |
இரும் கண்
ஞாலத்து ஈண்டு பய பெரு வளம் | பெரிய இடத்தையுடைய
உலகில் தொகுத்த பயன் மிக்க பெரு வளம் |
ஒருங்கு உடன்
இயைவது ஆயினும் கரும்பின் | அனைத்தும்
ஒன்றுசேர்ந்து வாய்த்தாலும், கரும்பின் |
கால் எறி கடிகை
கண் அயின்று அன்ன | அடிப்பகுதியில்
வெட்டிய துண்டினை உண்டது போன்ற |
வால் எயிறு
ஊறிய வசை இல் தீம் நீர் | வெள்ளிய பற்களில் ஊறிய
குற்றமற்ற இனிய நீரையும் |
கோல் அமை
குறும் தொடி குறு_மகள் ஒழிய | திரட்சி அமைந்த குறிய
வளையலையும் கொண்ட இளையவள் நீங்கியிருப்ப |
ஆள்வினை
மருங்கில் பிரியார் நாளும் | பொருளீட்டும்
முயற்சியின் பொருட்டுப் பிரியார்; ஒவ்வொருநாளும் |
உறல் முறை
மரபின் கூற்றத்து | நிகழ்த்தும்
முறைமைகொண்ட வழக்கத்தையுடைய கூற்றுவனின் |
அறன் இல் கோள்
நன்கு அறிந்திசினோரே | அறமற்ற உயிர்வாங்கும்
தொழிலை நன்கு அறிந்தவர்கள். |
| |
# கருவூர்
சேரமான் சாத்தன் | # கருவூர் சேரமான்
சாத்தன் |
# 268 நெய்தல் | # 268 நெய்தல் |
சேறிரோ என
செப்பலும் ஆற்றாம் | செல்கின்றீரோ என்று
சொல்வதற்கும் வலிமையற்றோம் |
வருவிரோ என
வினவலும் வினவாம் | வருவீரோ என்று
கேள்விகேட்டலையும் செய்யோம் |
யாங்கு
செய்வாம்-கொல் தோழி பாம்பின் | எவ்வாறு செய்வோம்?
தோழி! பாம்பின் |
பை உடை இரும்
தலை துமிக்கும் ஏற்றொடு | படத்தையுடைய பெரிய
தலையைத் துண்டிக்கும் இடியோடு கூடிய |
நடுநாள்
என்னார் வந்து | நள்ளிரவு என்று
எண்ணாமல் வந்து |
நெடு மென் பணை
தோள் அடைந்திசினோரே | என் நீண்ட மென்மையான
பருத்த தோள்களை அடைந்தவரை – |
| |
# கல்லாடனார் | # கல்லாடனார் |
# 269 நெய்தல் | # 269 நெய்தல் |
சேய் ஆறு
சென்று துனை பரி அசாவாது | நெடுந்தூரமாகிய
வழியைக் கடந்து, விரைவான நடையினால் வருந்தாமல் |
உசாவுநர்
பெறினே நன்று-மன் தில்ல | வருவீரா என்று
கேட்பாரைப் பெற்றால் மிகவும் நல்லது; |
வய சுறா எறிந்த
புண் தணிந்து எந்தையும் | வலிமையுடைய சுறா
தாக்கியதால் உண்டான புண் ஆறி, என் தந்தையும் |
நீல் நிற
பெரும் கடல் புக்கனன் யாயும் | நீல நிறத்தையுடைய
பெரிய கடலுள் புகுந்தார்; என் தாயும் |
உப்பை மாறி
வெண்ணெல் தரீஇய | உப்புக்கு மாற்றாக
வெண்ணெல் வாங்கி வருவதற்காக |
உப்பு விளை
கழனி சென்றனள் அதனால் | உப்பு விளையும்
உப்பளத்திற்குச் சென்றாள்; அதனால் |
பனி இரும்
பரப்பின் சேர்ப்பற்கு | குளிர்ந்த பெரிய
கடற்கரைப் பரப்பையுடைய தலைவனுக்கு |
இனி வரின்
எளியள் என்னும் தூதே | இப்பொழுது வந்தால்
என்னை எளிதில் காணலாம் என்னும் தூதினைச் சொல்ல – |
| |
# பாண்டியன்
பன்னாடு தந்தான் | # பாண்டியன் பன்னாடு
தந்தான் |
# 270 முல்லை | # 270 முல்லை |
தாழ் இருள்
துமிய மின்னி தண்ணென | தாழ்ந்திருக்கும்
இருள் துண்டுபடுமாறு மின்னி, குளிர்ச்சியாக |
வீழ் உறை இனிய
சிதறி ஊழின் | விழுகின்ற துளிகளை
இனிதாகச் சிதறி, மாறிமாறிக் |
கடிப்பு இகு
முரசின் முழங்கி இடித்து_இடித்து | குறுந்தடியால்
அடிக்கப்படும் முரசினைப் போல் முழங்கி பலமுறை இடித்து |
பெய்க இனி
வாழியோ பெரு வான் யாமே | பெய்க இனி வாழ்க!
பெரிய மேகமே! நாமோ, |
செய்_வினை
முடித்த செம்மல் உள்ளமொடு | செய்யும் தொழிலை
முடித்த மனநிறைவான உள்ளத்தோடு |
இவளின் மேவினம்
ஆகி குவளை | இத்தலைவியோடு
பொருந்தியவனாகி, குவளையின் |
குறும் தாள்
நாள்_மலர் நாறும் | குட்டையான தண்டின்
உள்ள அன்றைய மலர் மணக்கும் |
நறு மென்
கூந்தல் மெல் அணையேமே | நறிய மென்மையான
கூந்தல் என்னும் மென்மையான படுக்கையில் இருக்கிறோம். |
| |
# அழிசி
நாச்சாத்தனார் | # அழிசி நாச்சாத்தனார் |
# 271 மருதம் | # 271 மருதம் |
அருவி அன்ன பரு
உறை சிதறி | அருவியைப் போன்ற பெரிய
துளிகளைச் சிதறி |
யாறு நிறை
பகரும் நாடனை தேறி | ஆறுகள் நிறைந்த
வெள்ளத்தைத் தரும் நாட்டினனைத் தெளிந்து |
உற்றது மன்னும்
ஒரு நாள் மற்று அது | அவனோடு இருந்த காலம்
ஒரு நாள்மட்டுமே, ஆனால் அது |
தவ பல் நாள்
தோள் மயங்கி | மிகப் பல நாட்கள்
தோளோடு கலந்து |
வௌவும் பண்பின்
நோய் ஆகின்றே | அழகை வாரிச் செல்லும்
நோயாக ஆகின்றது. |
| |
#
ஒருசிறைப்பெரியன் | # ஒருசிறைப்பெரியன் |
# 272 குறிஞ்சி | # 272 குறிஞ்சி |
தீண்டலும்
இயைவது-கொல்லோ மாண்ட | தொடுவதற்கும்
வாய்க்குமோ? சிறந்த |
வில் உடை
வீளையர் கல் இடுபு எடுத்த | வில்லை உடைய சீழ்க்கை
ஒலியை எழுப்புவோர், கற்களை வீசி விலங்குகளை விரட்டிவிடும் |
நனம் தலை
கானத்து இனம் தலைப்பிரிந்த | பரந்த பரப்பையுடைய
காட்டில், தன் இனத்தைவிட்டுப் பிரிந்த |
புன்கண் மட
மான் நேர்பட தன் ஐயர் | துன்பத்தைக் கொண்ட
இளையமான் நேரே இருக்க, தன் தமையன்மார் |
சிலை மாண் கடு
விசை கலை நிறத்து அழுத்தி | முழக்கமிடும், மிகுந்த
வேகத்தையுடைய ஆண்மானின் மேல் அழுந்துமாறு எய்த, |
குருதியொடு
பறித்த செம் கோல் வாளி | குருதியோடு பிடுங்கிய
சிவந்த கோலையுடைய அம்பானது |
மாறு கொண்டு
அன்ன உண்கண் | தன் முந்தைய
நிலையிலிருந்து மாறுபட்டதைப் போல மாறுபட்ட மையுண்ட கண்களையும் |
நாறு இரும்
கூந்தல் கொடிச்சி தோளே | மணக்கின்ற கரிய
கூந்தலையும் கொண்ட தலைவியின் தோள்களை – |
| |
# சிறைக்குடி
ஆந்தையார் | # சிறைக்குடி
ஆந்தையார் |
# 273 பாலை | # 273 பாலை |
அல்கு_உறு
பொழுதில் தாது முகை தயங்க | இரவில், தாதையுடைய
மொட்டு ஒளிர |
பெரும் காடு
உளரும் அசை வளி போல | பெரிய காட்டைத்
தடவிக்கொடுத்து வருகின்ற அசைகின்ற காற்றைப் போல |
தண்ணிய கமழும்
ஒண் நுதலோயே | குளிர்ந்தனவாய்
மணங்கமழும் ஒள்ளிய நெற்றியையுடையவளே! |
நொந்தன ஆயின்
கண்டது மொழிவல் | (தலைவன் பிரிவானோ
என்று)வருந்தினையாயின் நான் அறிந்ததைச் சொல்வேன்; |
பெரும் தேன்
கண்படு வரையில் முது மால்பு | பெரிய தேனிறால்
தங்கியிருக்கும் மலைப்பக்கத்தில், பழைய கண்ணேணியின்மேல் |
அறியாது ஏறிய
மடவோன் போல | அறியாமல் ஏறிய
அறிவிலியைப் போல |
ஏமாந்தன்று இ
உலகம் | ஏமாந்தது இந்த உலகம்; |
நாம் உளேம் ஆக
பிரியலன் தெளிமே | நாம் உயிரோடு
இருக்குமளவும் தலைவன் உன்னைப் பிரியமாட்டான், தெளிவாயாக! |
| |
# உருத்திரன் | # உருத்திரன் |
# 274 பாலை | # 274 பாலை |
புறவு புறத்து
அன்ன புன் கால் உகாஅத்து | புறாவின் முதுகைப்
போன்ற புல்லிய அடியையுடைய உகாய் மரத்தின், |
இறவு சினை அன்ன
நளி கனி உதிர | இறால்மீனின்
முட்டைகளைப் போன்ற செறிந்த பழங்கள் உதிரும்படியாக, |
விடு கணை
வில்லொடு பற்றி கோடு இவர்பு | விடுவதற்கான அம்பினை
வில்லோடும் கையினில் பற்றி, அந்த மரத்தின் கிளைகளில் ஏறி |
வருநர்
பார்க்கும் வன்கண் ஆடவர் | வழியில் வருவோரைப்
பார்க்கும் கொடுமைமிக்க ஆடவர் |
நீர் நசை
வேட்கையின் நார் மென்று தணியும் | நீரை விரும்பும்
வேட்கையினால் மரப்பட்டையை மென்று தாகத்தைத் தணித்துக்கொள்ளும் |
இன்னா கானமும்
இனிய பொன்னொடு | இன்னாமையுள்ள கானமும்
இனிய ஆகிவிடுமே! பொன்னோடு |
மணி மிடை
அல்குல் மடந்தை | மணிகள் இடையிட்ட
அல்குலை உடைய தலைவியின் |
அணி முலை ஆகம்
உள்கினம் செலினே | அழகிய முலையை உடைய
மார்பை நினைத்துக்கொண்டே சென்றால் – |
| |
# ஒக்கூர்
மாசாத்தியார் | # ஒக்கூர்
மாசாத்தியார் |
# 275 முல்லை | # 275 முல்லை |
முல்லை ஊர்ந்த
கல் உயர்பு ஏறி | முலை படர்ந்த கல்லின்
மேலாக ஏறி நின்று |
கண்டனம் வருகம்
சென்மோ தோழி | கண்டு வருவோம்,
செல்வோம் தோழி! |
எல் ஊர்
சேர்தரும் ஏறு உடை இனத்து | மாலையில் ஊர்வந்து
சேரும் காளையையுடைய பசுவினங்களின் |
புல் ஆர் நல்
ஆன் பூண் மணி-கொல்லோ | புல்லை உண்ட நல்ல
பசுக்கள் பூண்டிருக்கும் மணியோசையோ? |
செய்_வினை
முடித்த செம்மல் உள்ளமொடு | செய்யக் கருதிய
கருமத்தை முடித்த மனநிறைவான உள்ளத்தோடு |
வல் வில்
இளையர் பக்கம் போற்ற | வலிய வில்லையுடைய
இளைஞர்கள் தன் இருபக்கமும் பாதுகாக்க, |
ஈர் மணல்
காட்டாறு வரூஉம் | ஈரமான மணலையுடைய
காட்டாற்றுப்பக்கம் வரும் |
தேர் மணி-கொல்
ஆண்டு இயம்பிய உளவே | தேரின் மணியோசையோ?
அங்கு ஒலிப்பனவாக உள்ளவற்றை – |
| |
# கூழி கொற்றன் | # கூழி கொற்றன் |
# 276 குறிஞ்சி | # 276 குறிஞ்சி |
பணை தோள்
குறு_மகள் பாவை தைஇயும் | மூங்கிலைப் போன்ற
தோள்களையுடைய இளையவளுக்காகப் பாவையைப் பண்ணியதையும் |
பஞ்சாய் பள்ளம்
சூழ்ந்தும் மற்று இவள் | அதற்குப் பஞ்சாய்க்
கோரை இருக்கும் பள்ளத்தைச் சுற்றிவந்ததையும், மேலும் இவளின் |
உருத்து எழு வன
முலை ஒளி பெற எழுதிய | சினந்து எழும் அழகிய
முலைகள் ஒளிபெற வரைந்த |
தொய்யில்
காப்போர் அறிதலும் அறியார் | தொய்யிலையும், அவளைக்
காத்துநிற்போர் அறியவும் அறியார், |
முறை உடை அரசன்
செங்கோல் அவையத்து | நீதியையுடைய மன்னனின்
செங்கோன்மையுடைய அரசவைக்குச் சென்று |
யான் தன்
கடவின் யாங்கு ஆவது-கொல் | நான் அத் தலைவியைக்
கேட்குங்கால் என்னவாகும்? |
பெரிதும் பேதை
மன்ற | பெரிதும்
பேதைமையுடையதாய் இருக்கிறது, |
அளிதோ தானே இ
அழுங்கல் ஊரே | இரங்கத்தக்கது,
ஆரவாரத்தையுடைய இந்த ஊர். |
| |
# ஓரில்
பிச்சையார் | # ஓரில் பிச்சையார் |
# 277 பாலை | # 277 பாலை |
ஆசு இல்
தெருவின் நாய் இல் வியன் கடை | குற்றமற்ற தெருவில்
நாய் இல்லாத அகன்ற வாயிலில் |
செந்நெல் அமலை
வெண்மை வெள் இழுது | செந்நெல் சோற்றின்
மிகுதியையையும், மிக வெள்ளையான வெண்ணெய்யையும் |
ஓர் இல் பிச்சை
ஆர மாந்தி | ஒரு வீட்டிலேயே
பிச்சையுணவாகப் பெற்று வயிரார உண்டு, |
அற்சிர வெய்ய
வெப்ப தண்ணீர் | முன்பனிக்காலத்துக்காக
விரும்பத்தக்க வெப்பத்தையுடைய நீரைச் |
சேம_செப்பில்
பெறீஇயரோ நீயே | சேமித்துவைக்கும்
செப்பில் பெறுவீராக! நீவிர்! |
மின் இடை
நடுங்கும் கடை பெயல் வாடை | மின்னிடையாளான தலைவி
நடுங்கக்கூடிய இறுதி மழைக்குப் பின்னர் வரும் வாடை |
எ_கால் வருவது
என்றி | எப்போது வரும் என்று
கூறுவீராக! |
அ-கால் வருவர்
எம் காதலோரே | அப்போது வருவார்
என்னுடைய தலைவர் – |
| |
# பேரிசாத்தன் | # பேரிசாத்தன் |
# 278 பாலை | # 278 பாலை |
உறு வளி உளரிய
அம் தளிர் மாஅத்து | மிகுந்த காற்று தடவிச்
சென்ற அழகிய இளம் இலைகளையுடைய மாமரத்தின் |
முறி கண்டு
அன்ன மெல்லென் சீறடி | துளிரைப் பார்த்தது
போன்ற மெத்தென்ற சிறிய அடியை உடைய |
சிறு பசும்
பாவையும் எம்மும் உள்ளார் | சிறிய பசிய பாவையையும்
எம்மையும் நினையார், |
கொடியர் வாழி
தோழி கடுவன் | கொடியவர் அவர், வாழ்க!
தோழியே! ஆண் குரங்கு |
ஊழ்_உறு தீம்
கனி உதிர்ப்ப கீழ் இருந்து | பழுத்த இனிய பழங்களை
உதிர்க்க, கீழே இருந்து |
ஓர்ப்பன
ஓர்ப்பன உண்ணும் | பிடித்துப் பிடித்து
உண்ணும் |
பார்ப்பு உடை
மந்திய மலை இறந்தோரே | குட்டிகளையுடைய
பெண்குரங்குகள் உள்ள மலையைக் கடந்து சென்றோர் – |
| |
# மதுரை மருதன்
இளநாகனார் | # மதுரை மருதன்
இளநாகனார் |
# 279 முல்லை | # 279 முல்லை |
திரி மருப்பு
எருமை இருள் நிற மை ஆன் | முறுக்கிய கொம்பையும்
இருளின் நிறத்தையும் உடைய எருமை |
வரு மிடறு
யாத்த பகு வாய் தெண் மணி | வளரும் கழுத்தில்
கட்டப்பட்ட பிளந்த வாயையும் தெளிந்த ஓசையும் உடைய மணி |
புலம்பு கொள்
யாமத்து இயங்கு-தொறு இசைக்கும் | தனிமைத்துயர் உள்ள
நடுயாமத்தில் அசையுந்தோறும் ஒலிக்கும் |
இது பொழுது
ஆகவும் வாரார்-கொல்லோ | இது வருவதற்குரிய
நாளாக இருக்கவும் அவர் வரவில்லை! |
மழை கழூஉ மறந்த
மா இரும் துறுகல் | மழை கழுவுதலை மறந்த
கரிய பெரிய குத்துப்பாறை |
துகள் சூழ்
யானையின் பொலிய தோன்றும் | தூசி படிந்த யானைப்
போல பொலிவுற்றுத் தீன்றும் |
இரும் பல்
குன்றம் போகி | பெரிய பல மலைகலைக்
கடந்துபோய் |
திருந்து இறை
பணை தோள் உள்ளாதோரே | திருத்தமாக இறங்கும்
பருத்த தோள்களை நினைத்துப்பார்க்காதவர் – |
| |
# நக்கீரர் | # நக்கீரர் |
# 280 குறிஞ்சி | # 280 குறிஞ்சி |
கேளிர் வாழியோ
கேளிர் நாளும் என் | நண்பர்களே! வாழ்க!
நண்பர்களே! ஒவ்வொரு நாளும் என் |
நெஞ்சு
பிணிக்கொண்ட அம் சில் ஓதி | நெஞ்சத்தைத் தன்பாற்
பிணித்துக்கொண்ட அழகிய சிலவான கூந்தலையும் |
பெரும் தோள்
குறு_மகள் சிறு மெல் ஆகம் | பெரிய தோள்களையும்
உள்ள இளையவளின் சிறிய மெல்லிய மார்பினை |
ஒரு நாள் புணர
புணரின் | ஒருநாள் கூடக்
கூடுமாயின் |
அரை நாள்
வாழ்க்கையும் வேண்டலன் யானே | (அதன் பின்) அரைநாள்
வாழ்க்கையையும் வேண்டேன் நான். |
| |
# குடவாயில்
கீரத்தன் | # குடவாயில் கீரத்தன் |
# 281 பாலை | # 281 பாலை |
வெண் மணல்
பொதுளிய பைம் கால் கருக்கின் | வெள்ளிய மணற்பரப்பில்
தழைத்த பசிய அடியையும், கருக்கினையும் உடைய |
கொம்மை போந்தை
குடுமி வெண் தோட்டு | திரண்ட பனையின்
உச்சியில் உள்ள வெள்ளிய குருத்தோலையோடு சேர்த்து வைத்த |
அத்த வேம்பின்
அமலை வான் பூ | பாலைநிலத்து வேம்பின்
நெருங்கிய வெள்ளிய பூவினை |
சுரி ஆர் உளை
தலை பொலிய சூடி | சுருள் நிறைந்து ஆடும்
மயிருள்ள தலையில் பொலிவுபெறச் சூடி |
குன்று
தலைமணந்த கானம் | மலைகள் பொருந்திய
காட்டினில் |
சென்றனர்-கொல்லோ
சே_இழை நமரே | சென்றுவிட்டாரோ?
சிவந்த அணிகலன்கள் அணிந்தவளே! நம்தலைவர். |
| |
# நாகம்போத்தன் | # நாகம்போத்தன் |
# 282 பாலை | # 282 பாலை |
செவ்வி கொள்
வரகின் செம் சுவல் கலித்த | பருவத்தே வளர்ந்த
வரகின் சிவந்த மேட்டுநிலத்தில் தழைத்த |
கவ்வை நாற்றின்
கார் இருள் ஓர் இலை | ஒலிக்கின்ற நாற்றின்
மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை |
நவ்வி நாள் மறி
கவ்வி கடன் கழிக்கும் | நவ்வி மானின் குட்டி
கவ்வி அன்றைய காலையுணவை முடிக்கும் |
கார் எதிர் தண்
புனம் காணின் கை வளை | கார்ப்பருவத்தை
எதிர்கொண்ட குளிர்ந்த புனத்தைக் காணும்போது, கை வளையல்கள், |
நீர் திகழ்
சிலம்பின் ஓராங்கு விரிந்த | நீர் விளங்கும் மலைச்
சாரலில் மொத்தமாக மலர்ந்த |
வெண்கூதாளத்து
அம் தூம்பு புது மலர் | வெண்கூதாளத்தின் அழகிய
உள் துளையுடைய புதிய மலர்கள் |
ஆர் கழல்பு
உகுவ போல | தம் காம்பிலிருந்து
கழன்று உதிர்தலைப் போன்று |
சோர்குவ அல்ல
என்பர்-கொல் நமரே | கழன்று வீழ்வன அல்ல
என்பாரோ நம் தலைவர்? |
| |
# பாலை பாடிய
பெருங்கடுங்கோ | # பாலை பாடிய
பெருங்கடுங்கோ |
# 283 பாலை | # 283 பாலை |
உள்ளது
சிதைப்போர் உளர் எனப்படாஅர் | இருக்கின்ற பொருளைச்
செலவழிப்போர் செல்வமுடையோர் எனப்படார்; |
இல்லோர்
வாழ்க்கை இரவினும் இளிவு என | பொருள் இல்லாதவர்
வாழ்க்கை இரந்து வாழ்வதனினும் இழிவானதாகும் என்று |
சொல்லிய வன்மை
தெளிய காட்டி | சான்றோர் சொல்லிய
ஆண்மைச் சால்பினை புரியும்படி எடுத்துக் காட்டிச் |
சென்றனர் வாழி
தோழி என்றும் | சென்றுவிட்டார்,
வாழ்க, தோழியே! எக்காலத்திலும் |
கூற்றத்து அன்ன
கொலை வேல் மறவர் | கூற்றுவனைப் போன்ற
கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர் |
ஆற்று இருந்து
அல்கி வழங்குநர் செகுத்த | வழியில் இருந்து தங்கி
வழிச்செல்வோரைக் கொன்றதனால் |
படு முடை
பருந்து பார்த்து இருக்கும் | உண்டான அழுகியபுலாலைப்
பருந்துகள் எதிர்நோக்கி இருக்கும் |
நெடு மூது இடைய
நீர் இல் ஆறே | நீண்ட பழைய
இடங்களிலுள்ள நீர் இல்லாத வழியில் – |
| |
# மிளைவேள்
தித்தன் | # மிளைவேள் தித்தன் |
# 284 குறிஞ்சி | # 284 குறிஞ்சி |
பொருத யானை
புகர் முகம் கடுப்ப | போரிட்ட யானையின்
புள்ளியையுடைய முகத்தைப் போல |
மன்ற துறுகல்
மீமிசை பல உடன் | மன்றத்தில் உள்ள
குத்துக்கல் மீது, பலவாகச் சேர்ந்து |
ஒண்
செம்_காந்தள் அவிழும் நாடன் | ஒள்ளிய செங்காந்தள்
மலரும் நாட்டினன் |
அறவன் ஆயினும்
அல்லன் ஆயினும் | அறவோன் ஆயினும்,
அப்படி அல்லன் ஆயினும் |
நம் ஏசுவரோ தம்
இலர்-கொல்லோ | நம்மைப் பழிப்பாரோ?
தம்மிடத்தில் ஒரு பழிச்சொல்லும் அற்றவரோ? |
வரையின்
தாழ்ந்த வால் வெள் அருவி | மலையிலிருந்து விழும்
தூய வெள்ளிய அருவி |
கொன் நிலை
குரம்பையின் இழிதரும் | அச்சந்தரும்
நிலையிலுள்ள குடிலின் அருகில் இறங்கி ஓடும் |
இன்னாது இருந்த
இ சிறுகுடியோரே | நமக்கு இன்னாததாக
இருக்கும் இந்த சிறுகுடியிலுள்ளோர் – |
| |
# பூத தேவன் | # பூத தேவன் |
# 285 பாலை | # 285 பாலை |
வைகல் வைகல்
வைகவும் வாரார் | ஒவ்வொருநாள்
விடியும்போதும் வாரார்; |
எல்லா எல்லை
எல்லவும் தோன்றார் | எல்லாப் பகலின்
எல்லையாகிய இரவிலும் தோன்றார்; |
யாண்டு
உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர் | எங்கு இருக்கிறாரோ?
தோழி! இங்கு இவர் |
சொல்லிய பருவமோ
இதுவே பல் ஊழ் | சொல்லிச்சென்ற பருவமோ
இதுவே! பலமுறை |
புன் புற
பெடையொடு பயிரி இன் புறவு | புல்லிய முதுகையுடைய
பெடையை அழைத்து, இனிய ஆண்புறா |
இமை கண் ஏது
ஆகின்றோ ஞெமை தலை | இமைப்பொழுதில் எத்தகைய
இன்பத்தை அடைகின்றது! ஞெமை மரத்தின் உச்சியில் |
ஊன் நசைஇ
பருந்து இருந்து உகக்கும் | ஊனை விரும்பி பருந்து
அமர்திருந்து உயரே எழும் |
வான் உயர்
பிறங்கல் மலை இறந்தோரே | வானளவும் உயர்ந்த
ஒளிவிடும் மலையைக் கடந்து சென்றோர் – |
| |
# எயிற்றியனார் | # எயிற்றியனார் |
# 286 குறிஞ்சி | # 286 குறிஞ்சி |
உள்ளி காண்பென்
போல்வல் முள் எயிற்று | நினைத்துப்
பார்க்கத்தான் முடியும் போலிருக்கிறது, முள் போன்ற கூர்மையான பற்களையுடைய |
அமிழ்தம் ஊறும்
செம் வாய் கமழ் அகில் | அமிழ்தம் சுரக்கின்ற
சிவந்த வாயையும், கமழ்கின்ற அகிலும் |
ஆரம் நாறும்
அறல் போல் கூந்தல் | சந்தனமும் மணக்கும்
கருமணல் போன்ற கூந்தலையும், |
பேர் அமர் மழை
கண் கொடிச்சி | பெரிய அமர்த்த
குளிர்ச்சியான கண்களையும் உடைய தலைவியின் |
மூரல்
முறுவலொடு மதைஇய நோக்கே | இளநகையோடு கூடிய
செருக்கிய பார்வையை – |
| |
#
கச்சிப்பேட்டு நன்னாகையார் | # கச்சிப்பேட்டு
நன்னாகையார் |
# 287 முல்லை | # 287 முல்லை |
அம்ம வாழி தோழி
காதலர் | வாழ்க தோழியே! காதலர் |
இன்னே கண்டும்
துறக்குவர்-கொல்லோ | இங்கேயே கண்டபின்னரும்
பிரிந்துசெல்வாரோ? |
முந்நால்
திங்கள் நிறை பொறுத்து அசைஇ | பன்னிரண்டு திங்கள்
நிரம்பிய கருவினைத் தாங்கித் தளர்வெய்தி |
ஒதுங்கல்
செல்லா பசும் புளி வேட்கை | நடக்கவியலாத பச்சைப்
புளியின்மீது கொண்ட வேட்கையையுடைய |
கடும் சூல்
மகளிர் போல நீர் கொண்டு | முதிர்ந்த சூல் கொண்ட
மகளிர் போல, நீரினைச் சுமந்துகொண்டு |
விசும்பு
இவர்கல்லாது தாங்குபு புணரி | வானத்தில் ஏறமாட்டாது
அந்தச் சூலினைத் தாங்கி ஒன்றோடு ஒன்று சேர்ந்து |
செழும் பல்
குன்றம் நோக்கி | செழிப்பான பல மலைகளை
நோக்கி |
பெரும் கலி
வானம் ஏர்தரும் பொழுதே | பெருத்த ஆரவாரமுடைய
மேகங்கள் எழுகின்ற இந்தக் கார்ப்பருவத்தை – |
| |
# கபிலர் | # கபிலர் |
# 288 குறிஞ்சி | # 288 குறிஞ்சி |
கறி வளர்
அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து | மிளகுக் கொடி
வளர்கின்ற மலைச் சரிவில் தளிரைத் தின்கின்ற |
குரங்கு
ஒருங்கு இருக்கும் பெரும் கல் நாடன் | குரங்குகள் பலவும்
ஒன்றுசேர்ந்து இருக்கும் பெரிய மலைநாட்டினன் |
இனியன் ஆகலின்
இனத்தின் இயன்ற | இனியவன் ஆதலின் நமக்கு
வேண்டியவர்களால் செய்யப்படும் |
இன்னாமையினும்
இனிதோ | இன்னாத செயல்களிலும்
இனியதோ, |
இனிது
எனப்படூஉம் புத்தேள் நாடே | இனிது எனப்படும்
தேவருலகம்? |
| |
# பெரும்
கண்ணனார் | # பெரும் கண்ணனார் |
# 289 முல்லை | # 289 முல்லை |
வளர்பிறை போல
வழிவழி பெருகி | வளர்பிறையைப் போல
மென்மேலும் வளர்ந்து |
இறை வளை
நெகிழ்த்த எவ்வ நோயொடு | இறங்குகின்ற தோளின்
வளையல்களை நெகிழச்செய்த துன்பமாகிய காமநோயோடே |
குழை
பிசைந்தனையேம் ஆகி சாஅய் | தளிரைப்
பிசைந்தாற்போன்ற நிலையையுடையவளாகி, மெலிந்து, |
உழையர்
அன்மையின் உழப்பது அன்றியும் | பக்கத்திலிருப்போர்
இல்லாததால் துயருழப்பதல்லாமலும் |
மழையும் தோழி
மான்று பட்டன்றே | தோழி! மழையும்
மிகுந்து பெய்கின்றது; |
பட்ட மாரி
படாஅ_கண்ணும் | இந்த மழை வருவதற்கு
முன்னர் |
அவர் திறத்து
இரங்கும் நம்மினும் | தலைவருக்காக
மனம்வருந்தும் நம்மைவிட, |
நம் திறத்து
இரங்கும் இ அழுங்கல் ஊரே | நமக்காக
மனம்வருந்துகிறது இந்த ஆரவாரமிக்க ஊர். |
| |
#
கல்பொருசிறுநுரையார் | # கல்பொருசிறுநுரையார் |
# 290 நெய்தல் | # 290 நெய்தல் |
காமம்
தாங்கு-மதி என்போர் தாம் அஃது | காம நோயைப்
பொறுத்துக்கொள்க என்போர், தாம் அதனைப் பற்றி |
அறியலர்-கொல்லோ
அனை மதுகையர்-கொல் | அறியமாட்டாரோ? அல்லது,
அதனைத் தாங்கும் சக்தி படைத்தவரோ? |
யாம் எம்
காதலர் காணேம் ஆயின் | நாம் எமது தலைவரைக்
காணமுடியாமல் இருந்தால் |
செறி துனி
பெருகிய நெஞ்சமொடு பெரு_நீர் | செறிந்த துன்பம்
பெருகிய நெஞ்சத்துடன், மிகுந்த நீர் |
கல் பொரு சிறு
நுரை போல | பாறையில் மோதும்போது
எழும் சிறிய நுரை போல |
மெல்ல_மெல்ல
இல் ஆகுதுமே | கொஞ்சம் கொஞ்சமாகத்
தேய்ந்து இல்லாமற்போகின்றோம். |
| |
# கபிலர் | # கபிலர் |
# 291 குறிஞ்சி | # 291 குறிஞ்சி |
சுடு புன
மருங்கில் கலித்த ஏனல் | மரங்களை வெட்டிச்
சுட்டெரித்துச் சீர்ப்படுத்திய புனத்தில் தழைத்த தினையில் |
படு கிளி
கடியும் கொடிச்சி கை குளிரே | வந்து வீழும் கிளிகளை
ஓட்டும் தலைவியின் கையிலுள்ள குளிர் என்னும் கருவி |
இசையின் இசையா
இன் பாணித்தே | இசை பாடும்போது
இசைக்கும் இனிய தாளத்தை உடையது, |
கிளி அவள் விளி
என விழல் ஒல்லாவே | எனவே கிளிகள் தம்மை
அவள் அழைப்பதாக எண்ணி தாம் வந்து விழுவதை நிறுத்தவில்லை; |
அது புலந்து
அழுத கண்ணே சாரல் | அதற்காகக்
கோபித்துக்கொண்டு அழுத தலைவியின் கண்கள், மலைச்சாரலில் |
குண்டு நீர்
பைம் சுனை பூத்த குவளை | ஆழமான நீரையுடைய பசிய
சுனையில் பூத்த குவளையின் |
வண்டு பயில்
பல் இதழ் கலைஇ | வண்டுகள் அடிக்கடி
மொய்க்கும் பல இதழ்கள் கலைந்து |
தண் துளிக்கு
ஏற்ற மலர் போன்றவ்வே | குளிர்ந்த மழைத்துளியை
ஏற்றுக்கொண்ட மலர்களைப் போலிருப்பன. |
| |
# பரணர் | # பரணர் |
# 292 குறிஞ்சி | # 292 குறிஞ்சி |
மண்ணிய சென்ற
ஒண் நுதல் அரிவை | நீராடச் சென்ற ஒளிரும்
நெற்றியையுடைய பெண்ணொருத்தி |
புனல் தரு
பசும் காய் தின்றதன் தப்பற்கு | ஆற்றுநீர்
அடித்துக்கொண்டுவந்த பச்சைக் காயைத் தின்ற குற்றத்தினின்றும் தப்ப, |
ஒன்பதிற்று_ஒன்பது
களிற்றொடு அவள் நிறை | எண்பத்தொரு
ஆண்யானைகளைகளோடு, அவளின் எடைக்குச் சமமான |
பொன் செய் பாவை
கொடுப்பவும் கொள்ளான் | பொன்னால் செய்யப்பட்ட
பாவையையும் கொடுப்பவுமே ஏற்றுக்கொள்ளானாய் |
பெண் கொலை
புரிந்த நன்னன் போல | பெண்கொலை புரிந்த
நன்னன் போல |
வரையா
நிரையத்து செலீஇயரோ அன்னை | எல்லையற்ற நரகத்துள்
செல்லட்டும் அன்னை! |
ஒரு நாள் நகை
முக விருந்தினன் வந்து என | ஒரே ஒருநாள் சிரித்த
முகமுள்ள விருந்தினனாய் வந்ததற்காக |
பகை முக ஊரின்
துஞ்சலோ இலளே | பகைமுகங்காட்டும்
ஊரினரைப் போலத் தூக்கத்தை விட்டாள்- |
| |
# கள்ளில்
ஆத்திரையன் | # கள்ளில் ஆத்திரையன் |
# 293 மருதம் | # 293 மருதம் |
கள்ளின் கேளிர்
ஆத்திரை உள்ளூர் | கள்குடிக்கும்
விருப்பத்தையுடையவரின் பயணம், உள்ளூரில் |
பாளை தந்த
பஞ்சி அம் குறும் காய் | பாளை ஈன்ற நாரினைக்
கொண்ட அழகிய சிறிய காயையுடைய |
ஓங்கு இரும்
பெண்ணை நுங்கொடு பெயரும் | உயர்ந்த கரிய பனையின்
நுங்கினை உண்டு திரும்பும் |
ஆதி அருமன்
மூதூர் அன்ன | ஆதி அருமன் என்பானின்
மூதூர் போல, |
அய வெள்ளாம்பல்
அம் பகை நெறி தழை | நீரில் வளர்ந்த
வெள்ளாம்பலின் அழகுக்குப் பகையாகிய முழு நெறிப்பையுடைய தழையுடை |
தித்தி
குறங்கின் ஊழ் மாறு அலைப்ப | தேமலையுடைய தொடையில்
மாறிமாறி அலைக்க |
வருமே சே_இழை
அந்தில் | வருகிறாள் சிவந்த
இழைகளை அணிந்த பரத்தை, அவ்விடத்தில் |
கொழுநன் காணிய
அளியேன் யானே | தலைவனைக்
காணும்பொருட்டு; இரங்கத்தக்கவள் நான். |
| |
# அஞ்சில்
ஆந்தையார் | # அஞ்சில் ஆந்தையார் |
# 294 நெய்தல் | # 294 நெய்தல் |
கடல் உடன்
ஆடியும் கானல் அல்கியும் | கடலில் சேர்ந்து
விளையாடியும், கடற்கரைச் சோலையில் தங்கியும் |
தொடலை ஆயமொடு
தழூஉ_அணி அயர்ந்தும் | மாலையையுடைய மகளிர்
கூட்டத்தோடு தழுவிக்கொண்ட ஆட்டம் ஆடியும் இருக்கும்போது |
நொதுமலர் போல
கதுமென வந்து | அயலாரைப் போல விரைவாக
வந்து |
முயங்கினன்
செலினே அலர்ந்தன்று-மன்னே | தலைவன் தழுவிச்
சென்றதனால் பழிச்சொல் பரவிற்று; |
துத்தி பாந்தள்
பைத்து அகல் அல்குல் | புள்ளிகளையுடைய
பாம்பின் படத்தைப் போன்ற அகன்ற அல்குலில் |
திருந்து இழை
துயல்வு கோட்டு அசைத்த பசும் குழை | திருத்தமான அணிகலன்கள்
அசையும் பக்கத்தில் கட்டிய பசிய தளிராகிய |
தழையினும்
உழையின் போகான் | தழையுடையைக்
காட்டிலும் அருகிலிருந்து அகலமாட்டான் |
தான் தந்தனன்
யாய் காத்து ஓம்பல்லே | அவனால் உண்டானது இந்த
அன்னையின் இற்செறிப்பு. |
| |
# தூங்கலோரி | # தூங்கலோரி |
# 295 நெய்தல் | # 295 மருதம் |
உடுத்தும்
தொடுத்தும் பூண்டும் செரீஇயும் | உடுத்துக்கொண்டும்,
தொடுத்துக்கொண்டும், அணிந்துகொண்டும் செருகிக்கொண்டும் |
தழை அணி
பொலிந்த ஆயமொடு துவன்றி | தழையாற் செய்த
அலங்காரத்தால் பொலிவுபெற்ற பரத்தையரோடு நெருங்கிச் சேர்ந்து |
விழவொடு வருதி
நீயே இஃதோ | நீர்விழாவுக்குரிய
அடையாளங்களோடு வருகின்றாய்! நீயே, இதனை, |
ஓர் ஆன் வல்சி
சீர் இல் வாழ்க்கை | ஒரு பசுவினால் வரும்
வருமானத்தைக் கொண்டு வாழும் சிறப்பில்லாத வாழ்க்கை |
பெரு நல
குறு_மகள் வந்து என | மிக்க அழகையுடைய
தலைவியான இளையவள் வந்தபின்னர் |
இனி விழவு
ஆயிற்று என்னும் இ ஊரே | இப்பொழுது விழாக்கோலம்
பூண்டது என்று சொல்லும் இவ்வூர். |
| |
#
பெரும்பாக்கன் | # பெரும்பாக்கன் |
# 296 நெய்தல் | # 296 நெய்தல் |
அம்ம வாழி தோழி
புன்னை | தோழி! கேட்பாயாக!
புன்னை மரத்தின் |
அலங்கு சினை
இருந்த அம் சிறை நாரை | ஆடுகின்ற கிளையில்
இருந்த அழகிய சிறகுகளைக் கொண்ட நாரை, |
உறு கழி சிறு
மீன் முனையின் செறுவில் | நிறைந்த கழியில்
இருந்த குறைந்த அளவு மீனை விரும்பாவிட்டால், வயலில் |
கள் நாறு
நெய்தல் கதிரொடு நயக்கும் | கள் மணக்கும் நெய்தல்
மலரையும் நெற்கதிர்களையும் விரும்பும் |
தண்ணம் துறைவன்
காணின் முன் நின்று | குளிர்ந்த துறைக்கு
உரியவனைக் கண்டால், அவன் முன்னே சென்று நின்று |
கடிய கழறல்
ஓம்பு-மதி தொடியோள் | கடுமையான சொற்களைக்
கூறுவதைத் தவிர்ப்பாயாக! வளையணிந்தவள் |
இன்னள் ஆக
துறத்தல் | இவ்வாறு ஆகும்படிக்கு
அவளைப் பிரிந்து செல்லுதல் |
நும்மின் தகுமோ
என்றனை துணிந்தே | உமக்குத்
தகுதியுடையதாகுமோ என்று துணிந்து – |
| |
# காவிரிப்பூம்
பட்டினத்து காரி கண்ணன் | # காவிரிப்பூம்
பட்டினத்து காரி கண்ணன் |
# 297 குறிஞ்சி | # 297 குறிஞ்சி |
அம் விளிம்பு
உரீஇய கொடும் சிலை மறவர் | மேல் விளிம்பை
உருவிக்கொடுக்கும் கொடிய வில்லையுடைய மறவர்கள் |
வை வார் வாளி
விறல் பகை பேணார் | கூர்மையான நீண்ட
அம்பின் வெற்றியையுடைய பகையை மதிக்காது |
மாறு நின்று
எதிர்ந்த ஆறு செல் வம்பலர் | எதிர்த்து நின்று
போரிட்டு இறந்த வழிச்செல்வோர் மீது |
உவல் இடு
பதுக்கை ஊரின் தோன்றும் | தழைகளை இட்டு மூடிய
குவியல்கள் ஊரைப் போலத் தோன்றும் |
கல் உயர் நனம்
தலை நல்ல கூறி | மலைகள் ஓங்கி உயர்ந்த
அகன்ற இடத்தில் நல்ல சொற்களைக் கூறி |
புணர்ந்து உடன்
போதல் பொருள் என | சேர்ந்து போதல்
செய்யத்தக்கது என்று |
உணர்ந்தேன்
மன்ற அவர் உணரா ஊங்கே | நான் உணர்ந்தேன், அவர்
உணர்வதற்கு முன்னர் – |
| |
# பரணர் | # பரணர் |
# 298 குறிஞ்சி | # 298 குறிஞ்சி |
சேரி சேர மெல்ல
வந்து_வந்து | நமது தெருவினை அடைய
மெல்ல வந்து வந்து |
அரிது
வாய்விட்டு இனிய கூறி | அரிதாக வாயைத்திறந்து
இனிய சொற்களைக் கூறி |
வைகல்-தோறும்
நிறம் பெயர்ந்து உறையும் அவன் | ஒவ்வொருநாளும் தன்
மேனியின் நிறம் வேறுபட்டுத் தங்கும் தலைவனின் |
பைதல் நோக்கம்
நினையாய் தோழி | வருத்தம் தேங்கிய
பார்வையினை நினைத்துப்பார் தோழி! |
இன் கடும்
கள்ளின் அகுதை தந்தை | இனிமையும் கடுமையும்
கொண்ட கள்ளையுடைய அகுதை தந்தையின் பின் நின்ற |
வெண் கடை சிறு
கோல் அகவன்_மகளிர் | வெள்ளிய முனையையுடைய
சிறிய கோலையுடைய பாடல் மகளிர் பெற்ற |
மட பிடி
பரிசில் மான | இளம் பெண்யானைகளாகிய
பரிசிலைப் போல |
பிறிது ஒன்று
குறித்தது அவன் நெடும் புறநிலையே | வேறொன்றைக் குறித்தது
அவன் பின்னிட்டு நிற்கின்ற நிலை. |
| |
# வெண்மணி பூதி | # வெண்மணி பூதி |
# 299 நெய்தல் | # 299 நெய்தல் |
இது மற்று எவனோ
தோழி முதுநீர் | இது எப்படி ஆயிற்று
தோழி! முதுமையான நீரையுடைய |
புணரி
திளைக்கும் புள் இமிழ் கானல் | அலைகள் வந்து தவழும்
பறவைகள் ஒலிக்கின்ற கடற்கரைச் சோலையிலுள்ள |
இணர் அவிழ்
புன்னை எக்கர் நீழல் | கொத்துக்கள் மலர்ந்த
புன்னை வளர்ந்த மேட்டிலுள்ள நிழலில் |
புணர் குறி
வாய்த்த ஞான்றை கொண்கன் | சந்திக்கும்
வாய்ப்பைப் பெற்ற பொழுது, தலைவனைப் |
கண்டன-மன் எம்
கண்ணே அவன் சொல் | பார்த்தன என் கண்கள்;
அவன் சொல்லைக் |
கேட்டன-மன் எம்
செவியே மற்று அவன் | கேட்டன என் செவிகள்;
ஆனால் அவன் |
மணப்பின் மாண்
நலம் எய்தி | தழுவினால் சிறந்த
அழகைப் பெற்றுப் |
தணப்பின்
ஞெகிழ்ப எம் தட மென் தோளே | பிரிந்தால் மெலிகின்றன
என் அகன்ற மெத்தென்ற தோள்கள். |
| |
# சிறைக்குடி
ஆந்தையார் | # சிறைக்குடி
ஆந்தையார் |
# 300 குறிஞ்சி | # 300 குறிஞ்சி |
குவளை நாறும்
குவை இரும் கூந்தல் | குவளை மலரின் மணம்
கமழும் கொத்தான இருண்ட கூந்தல்; |
ஆம்பல் நாறும்
தேம் பொதி துவர் வாய் | ஆம்பல் மலரின் மணம்
கமழும் தேனைப் பொதிந்துவைத்த சிவந்த வாய்; |
குண்டு நீர்
தாமரை கொங்கின் அன்ன | ஆழமான நீரில் உள்ள
தாமரைமலரின் பூந்தாது போன்ற |
நுண் பல்
தித்தி மாஅயோயே | நுண்ணிய பல தேமல் –
இவற்றையுடைய மாநிறத்தவளே! |
நீயே அஞ்சல்
என்ற என் சொல் அஞ்சலையே | நீ, அஞ்சாதே என்ற என்
சொல்லைக் கேட்டு அச்சம்கொள்ளாதே! |
யானே குறும்
கால் அன்னம் குவவு மணல் சேக்கும் | நான், குட்டையான
கால்களையுடைய அன்னம் குவிந்துகிடக்கும் மணலில் தங்கும் |
கடல் சூழ்
மண்டிலம் பெறினும் | கடல் சூழ்ந்த
நிலத்தைப் பெற்றாலும் |
விடல் சூழலன்
யான் நின் உடை நட்பே | விட்டுப் பிரிவதை
எண்ணிப்பார்க்கமாட்டேன் – உனது நட்பினை |
| |