குறுந்தொகை 151-200

  
# தூங்கலோரி# தூங்கலோரி
# 151 பாலை# 151 பாலை
வங்கா கடந்த செம் கால் பேடைஆண் வங்காப்பறவை நீங்கிய சிவந்த காலையுடைய பெடைவங்கா
எழால் உற வீழ்ந்து என கணவன் காணாதுபுல்லூறு என்னும் பறவை தன்மேல் பாய்ந்ததாக, தன் சேவலைக்காணாமல்
குழல் இசை குரல குறும் பல அகவும்குழல் போன்று இசைக்கும் குரலையுடைய அது குறிய பல ஓசைகளை எழுப்பும்
குன்று கெழு சிறு நெறி அரிய என்னாதுமலைகளுள்ள சிறிய வழிகள் கடப்பதற்கு அரியன என்று கருதாமல்,
மறப்பு அரும் காதலி ஒழியமறக்கமுடியாத காதலியை விட்டுப்பிரிந்து
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவேசெல்வேன் என்று சொல்வது இங்கு நம் இளமைக்கு இறுதியாகும்.
  
# கிள்ளிமங்கலம்கிழார்# கிள்ளிமங்கலம்கிழார்
# 152 குறிஞ்சி# 152 குறிஞ்சி
யாவதும் அறிகிலர் கழறுவோரேஒருசிறிதும் அறியமாட்டார் என்னை இடித்துரைப்போர்;
தாய் இல் முட்டை போல உள் கிடந்துதாய் இல்லாத முட்டை போல உள்ளத்துள்ளே கிடந்து
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தேமெலிவதன்றி வேறு என்ன உடையது?
யாமை பார்ப்பின் அன்னஆமையின் குஞ்சைப் போன்ற
காமம் காதலர் கையற விடினேகாமமானது, காதலர் நம்மைச் செயலற்றுப்போகப் பிரிந்து கைவிட்டால்?
  
# கபிலர்# கபிலர்
# 153 குறிஞ்சி# 153 குறிஞ்சி
குன்ற கூகை குழறினும் முன்றில்குன்றிலுள்ள பேராந்தை குழறுவதுபோல் ஒலித்தாலும், முற்றத்திலுள்ள
பலவின் இரும் சினை கலை பாய்ந்து உகளினும்பலாவின் பெரிய கிளையில் ஆண்குரங்கு தாவித் துள்ளினாலும்,
அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் இனியேமுன்பு அஞ்சும், இரங்கற்குரியது என் நெஞ்சு; இனியே
ஆர் இருள் கங்குல் அவர்_வயின்நிறைந்த இருளையுடைய இரவில் அவர்கூடவே
சாரல் நீள் இடை செலவு ஆனாதேமலைச்சாரலிலுள்ள நீண்ட வழியில் செல்லுதலைத் தவிர்ந்திலது. 
  
# மதுரை சீத்தலை சாத்தன்# மதுரை சீத்தலை சாத்தன்
# 154 பாலை# 154 பாலை
யாங்கு அறிந்தனர்-கொல் தோழி பாம்பின்எவ்வாறு தெரிந்துகொண்டனரோ தோழி! பாம்பின்
உரி நிமிர்ந்து அன்ன உருப்பு அவிர் அமையத்துஉரித்த தோல் மேலே எழுந்ததைப் போல வெப்பம் தகதகக்கின்ற நண்பகலில்
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளிஇரையை விரும்பிச் சென்ற தன் சேவலை நினைத்து
பொறி மயிர் எருத்தின் குறு நடை பேடைபுள்ளிகளையுடைய, மயிர் பொருந்திய கழுத்தினைக்கொண்ட குறுநடைப் பேடை
பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டுபொரிந்த அடிமரத்தையுடைய கள்ளியின் வெடித்த காயையுடைய அழகிய கிளையில்
தயங்க இருந்து புலம்ப கூஉம்மனமழிந்து இருந்து தனிமைத் துயரத்தில் கூவும்
அரும் சுர வைப்பின் கானம்அரிய பாலைநிலமாகிய இடத்தையுடைய காட்டிடையே
பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரேபிரிந்து சென்று வாழும் ஆற்றல்பெறுவதற்கு – 
  
# உரோடகத்து கந்தரத்தன்# உரோடகத்து கந்தரத்தன்
# 155 முல்லை# 155 முல்லை
முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர்பழமையான தினைப்புனத்தை உழுத ஆரவாரம் மிக்க உழவரின்
விதை குறு வட்டி போதொடு பொதுளவிதைகளை வைக்கும் சிறிய வட்டிகள், முல்லைமொட்டுக்களால் நிறைய
பொழுதோ தான் வந்தன்றே மெழுகு ஆன்றுகார்ப்பருவம் வந்துவிட்டது; மெழுகால் செய்த உருவத்தில் இட்டு
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணிஊதுகின்ற கொல்லன் உலையில் வைத்து இயற்றிய திறந்த வாயையுடைய தெளிந்த மணிகள்
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப சுரன் இழிபுமரங்கள் நெருங்கி வளர்ந்த காட்டில் மிகுந்து ஒலிக்க, கடினமான வழியைக் கடந்து
மாலை நனி விருந்து அயர்-மார்மாலையில் நல்ல விருந்தை உண்ணுவதற்குத்
தேர் வரும் என்னும் உரை வாராதேதலைவனின் தேர் வரும் என்னும் சொல் வரவில்லையே!
  
# பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்# பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்
# 156 குறிஞ்சி# 156 குறிஞ்சி
பார்ப்பன மகனே பார்ப்பன மகனேபார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம் பூ முருக்கின் நன் நார் களைந்துசிவந்த பூக்களைக்கொண்ட புரச மரத்தின் கொப்பின் பட்டையை உரிந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துதண்டாக்கி அதனுடன் பிடித்த தொங்கவிட்ட கமண்டலத்துடன்
படிவ உண்டி பார்ப்பன மகனேநோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே!
எழுதாக்கற்பின் நின் சொல்லுள்ளும்எழுதாமல் வாய்ப்பாடமாகக் கற்கும் நின் பாடங்களில்
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்பிரிந்தவரைச் சேர்த்துவிக்கும் தன்மையுள்ள
மருந்தும் உண்டோ மயலோ இதுவேமருந்தும் இருக்கிறதோ? இது ஒரு மயக்க நிலையோ?
  
# அள்ளூர் நன்முல்லை# அள்ளூர் நன்முல்லை
# 157 மருதம்# 157 மருதம்
குக்கூ என்றது கோழி அதன்_எதிர்குக்கூ என்று கூவியது கோழிச்சேவல்; அதைக் கேட்டு
துட்கென்றன்று என் தூ நெஞ்சம்துட்கென்றது என் தூய்மையான நெஞ்சம்;
தோள் தோய் காதலர் பிரிக்கும்எனது தோளைத் தழுவிக்கிடக்கும் காதலரைப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவேவாளைப் போன்ற வைகறைப் பொழுது வந்துவிட்டது என்றே!
  
# ஔவையார்# ஔவையார்
# 158 குறிஞ்சி# 158 குறிஞ்சி
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்உயர்ந்த மலையின் பக்கத்திலுள்ள பாம்புகள் இறந்துபடும்படி இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇமிகுந்த வேகத்தையுடைய பேரிடியின் இடிக்கும் முழக்கத்தோடு கலந்து
காலொடு வந்த கமம் சூல் மா மழைகாற்றோடு வந்த நிறைந்த கருக்கொண்ட பெரிய மழையே!
ஆர் அளி இலையோ நீயே பேர் இசைநிறைந்த இரக்கத்தை நீ பெறவில்லையோ? பெரும் புகழ்கொண்ட
இமயமும் துளக்கும் பண்பினைஇமயமலையையும் அசைக்கின்ற தன்மையையுடையாய்!
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனேதுணையின்றி இருக்கின்றனர், இரங்கத்தக்கவர், பெண்டிர், இது எதற்காக?
  
# வடம வண்ணக்கன் பேரிசாத்தன்# வடம வண்ணக்கன் பேரிசாத்தன்
# 159 குறிஞ்சி# 159 குறிஞ்சி
தழை அணி அல்குல் தாங்கல் செல்லாதழை அணிந்த அல்குலையும் தாங்கமாட்டாத
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆகநுணுகிய சிறிய இடைக்குத் துன்பம் உண்டாக,
அம் மெல் ஆகம் நிறைய வீங்கிஅழகிய மென்மையுடைய மார்பகம் நிறையும்படி பருத்து,
கொம்மை வரி முலை செப்புடன் எதிரினபெரிய, தேமல் வரிகளைக் கொண்ட முலைகள் செம்பினை ஒத்தன;
யாங்கு ஆகுவள்-கொல் பூ_குழை என்னும்எந்நிலை எய்துவாளோ, பூ வேலைப்பாடமைந்த காதணிகள் கொண்ட இவள் என்னும்
அவல நெஞ்சமொடு உசாவாகவலையையுடைய நெஞ்சத்தோடு கேட்காத
கவலை மாக்கட்டு இ பேதை ஊரேவேறு கவலையையுடைய மக்களையுடையது இந்தப் பேதைமை மிக்க ஊர்.
  
# மதுரை மருதன் இளநாகன்# மதுரை மருதன் இளநாகன்
# 160 குறிஞ்சி# 160 குறிஞ்சி
நெருப்பின் அன்ன செம் தலை அன்றில்நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய ஆண் அன்றில்
இறவின் அன்ன கொடு வாய் பெடையொடுஇறாமீனைப் போன்ற வளைந்த மூக்கினையுடைய பெண் அன்றிலோடு
தடவின் ஓங்கு சினை கட்சியில் பிரிந்தோர்தடா மடத்தின் உயர்ந்த கிளையிலுள்ள கூட்டிலிருந்து, பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துசெயலற்று வருந்தும்படி ஒலிக்கும் நள்ளிரவில்
பெரும் தண் வாடையும் வாரார்மிக்க குளிர்ச்சியுடைய வாடைக்காற்று வீசும் நேரத்திலும் வாரார்;
இஃதோ தோழி நம் காதலர் வரவேஇதுதானோ தோழி! நம் காதலர் செய்துகொண்ட திருமணம்?
  
# நக்கீரர்# நக்கீரர்
# 161 குறிஞ்சி# 161 குறிஞ்சி
பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாதுபொழுதோ இருண்டுவிட்டது; மழையும் ஓயாமல்
கழுது கண் பனிப்ப வீசும் அதன்_தலைபேய்களும் கண்களை மூடிக்கொள்ள ஓங்கியடிக்கின்றது. அதற்குமேலும்
புலி பல் தாலி புதல்வன் புல்லிபுலிப்பல் தாலியுடைய மகனைத் தழுவிக்கொண்டு
அன்னா என்னும் அன்னையும் அன்னோ‘அடி பெண்ணே’ என்று கூப்பிடுகிறாள் அன்னையும்; 
என் மலைந்தனன்-கொல் தானே தன் மலைஎன்ன செய்தானோ அவன்? தனது மலையின்
ஆரம் நாறும் மார்பினன்சந்தனம் மணக்கும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனேமழையில் நனைந்துநிற்கும் யானையைப் போல வந்து நின்றுகொண்டிருந்தான்.
  
# கருவூர் பவுத்திரன்# கருவூர் பவுத்திரன்
# 162 முல்லை# 162 முல்லை
கார் புறந்தந்த நீர் உடை வியன் புலத்துமேகங்களால் காக்கப்படும் நீர்வளம் உடைய அகன்ற முல்லைநிலத்தில்
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலைபல பசுக்கள் புகுகின்ற பொலிவழிந்த மாலைப் பொழுதில்,
முல்லை வாழியோ முல்லை நீ நின்முல்லை! நீ வாழ்க முல்லையே! நீ உனது
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனைசிறிய வெள்ளை அரும்புகளாலே புன்னகை செய்கின்றாய்;
நகுவை போல காட்டல்சிரிப்பது போன்று காட்டுவது
தகுமோ மற்று இது தமியோர் மாட்டேஉனக்குத் தகுமோ, அதுவும் தனித்திருப்போரைப் பார்த்து –
  
# அம்மூவன்# அம்மூவன்
# 163 நெய்தல்# 163 நெய்தல்
யார் அணங்கு உற்றனை கடலே பூழியர்யாரால் பயந்துபோயிருக்கின்றாய்! கடலே! பூழியரின்
சிறு தலை வெள்ளை தோடு பரந்து அன்னசிறிய தலைகளைக் கொண்ட வெள்ளாட்டுக்கூட்டம் பரவியதைப் போன்று
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறைமீனைத் தின்னும் கொக்குகள் பரவிய அழகிய கடற்கரைத் துறையில்
வெள் வீ தாழை திரை அலைவெள்ளைப் பூவையுடைய தாழையை அலைகள் மோதும்
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலேநள்ளென்ற நடுராத்திரியிலும் கேட்கிறது உன் குரல்.
  
# மாங்குடிமருதன்# மாங்குடிமருதன்
# 164 மருதம்# 164 மருதம்
கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகுகணைபோன்று திரண்ட கொம்பினையுடைய முதிர்ந்த கருக்கொண்ட பெண் வாளைமீன்
துணர் தே கொக்கின் தீம் பழம் கதூஉம்கொத்துக்கொத்தானை தேமாமரத்தின் இனிய பழத்தைக் கௌவும்
தொன்று முதிர் வேளிர் குன்றூர் குணாதுபழமை முதிர்ந்த வேளிர்குலத்தின் குன்றூருக்கும் கிழக்கிலிருக்கும்
தண் பெரும் பவ்வம் அணங்குக தோழிகுளிர்ந்த பெரிய கடல் என்னை வருத்துவதாக! தோழி!
மனையோள் மடமையின் புலக்கம்இல்லாள் அறியாமையில் ஊடல்கொள்ளும்
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினேதன்மையுடைவளாய், தலைவனுக்கு நான் ஆகிவிட்டேன் என்றால்.
  
# பரணர்# பரணர்
# 165 குறிஞ்சி# 165 குறிஞ்சி
மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டு ஆங்குகளிப்பேறிய பின்னரும் கள்ளை உண்டாற்போல
விழைந்ததன் தலையும் நீ வெய்து_உற்றனைவிரும்பிய பின்னரும் மேலும் விரும்புகின்றாய்!
இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம்பெரிய மணற்கரையில் நின்றுபோன உப்பை எடுத்துச் செல்லும் வண்டி
பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள்பெரிய மழை பெய்தலால் அழிந்ததைப் போல், இவளின்
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டேகரிய நிறைந்த கூந்தலின் இயற்கை அழகைக் கண்டு –
  
# கூடலுலுர் கிழார்# கூடலூர் கிழார்
# 166 நெய்தல்# 166 நெய்தல்
தண் கடல் படு திரை பெயர்த்தலின் வெண் பறைகுளிர்ந்த கடலில் உண்டான அலைகள் மோதித்தள்ளியதால், வெள்ளைச் சிறகுகளைக் கொண்ட
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும்நாரைக்கூடம் இடம்பெயர்ந்து வேறிடத்தில் அயிரை மீனை நிறைய உண்ணும்
ஊரோ நன்று-மன் மரந்தைஊராகிய மரந்தை இனியது;
ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றேஒருத்தியாய்த் தனியே இருந்தால் வருத்தத்தைத் தருவதாயிற்று.
  
# கூடலூர் கிழார்# கூடலூர் கிழார்
# 167 முல்லை# 167 முல்லை
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் போன்ற மெல்லிய விரல்களைக்
கழுவு_உறு கலிங்கம் கழாஅது உடீஇகழுவாமலேயே தன் துவைத்த சேலையின் முன்றானையைச் சரிசெய்து,
குவளை உண்கண் குய் புகை கழுமகுவளை போன்ற மையுண்ட கண்களில் தாளிதப்புகை நிறைய,
தான் துழந்து அட்ட தீம் புளி பாகர்தானே முயன்று துழாவிச் சமைத்த சுவையான புளித்த மோர்க்குழம்பினை
இனிது என கணவன் உண்டலின்“இனிது” என்று கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்_நுதல் முகனேமிக நுட்பமாக மகிழ்ந்தது ஒளிமிகுந்த நெற்றியையுடைய அவளது முகம்.
  
# சிறைக்குடி ஆந்தையார்# சிறைக்குடி ஆந்தையார்
# 168 பாலை# 168 பாலை
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகைமழைக்காலத்துப் பிச்சியின் நீர் ஒழுகும் கொழுத்த அரும்புகளைக்
இரும் பனம் பசும் குடை பலவுடன் பொதிந்துகரிய பனையின் ஓலையாற்செய்த பசிய குடைக்குள் பலவாக வைத்து மூடி,
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டு அன்னபெரிய மழைபெய்யும் விடியற்காலத்தில் விரித்துவிட்டதைப் போல்
நறும் தண்ணியளே நன் மா மேனிமணமும் குளிர்ச்சியுமுள்ளவள் நல்ல மாமைநிறமுள்ள மேனியுள்ள தலைவி;
புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள்நீரில் விடும் தெப்பத்தைப்போல் வளைந்து இறங்கிய பருத்த தோள்களை
மணத்தலும் தணத்தலும் இலமேதழுவுதலும், பிரிதலும் இல்லையாயினோம்;
பிரியின் வாழ்தல் அதனினும் இலமேஅவளைப் பிரிந்தாலோ உயிர் வாழ்தல் அதனினும் இல்லயானோம்.
  
# வெள்ளிவீதியார்# வெள்ளிவீதியார்
# 169 மருதம்# 169 மருதம்
சுரம் செல் யானை கல் உறு கோட்டின்பாலைநிலத்தில் செல்லும் யானையின் பாறையைக் குத்திய கொம்பைப்போல்
தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம்விரைவாக முறிந்துபோகட்டும், ஐயனே! நாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறேஉம்மோடு சேர்ந்த சிரித்த தூய வெள்ளிய பற்கள்;
பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போலபாணர் தாம் பிடித்த பச்சைமீனை இட்டுவைத்த ஓட்டைப் போன்று
எமக்கும் பெரும் புலவு ஆகிஎமக்கும் பெரும் வெறுப்பைத் தருவதாகி
நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரேஉம்மையும் நாம் பெறாமலாகி, அழிந்துபோகட்டும் எமது உயிரே!
  
# கருவூர் கிழார்# கருவூர் கிழார்
# 170 குறிஞ்சி# 170 குறிஞ்சி
பலரும் கூறுக அஃது அறியாதோரேபலரும் ஒவ்வொருவிதமாகக் கூறுவர், அதனை நன்கு அறியாதவரே!
அருவி தந்த நாள்_குரல் எருவைஅருவி கொணர்ந்த புதிய கதிரையுடைய கொறுக்கச்சியை
கயம் நாடு யானை கவளம் மாந்தும்குளத்தை நாடிச்சென்ற யானை உணவாக உண்ணும்
மலை கெழு நாடன் கேண்மைமலைகள் சேர்ந்த நாட்டையுடையவனது நட்பு
தலைபோகாமை நற்கு அறிந்தனென் யானேகெட்டுப்போகாமையை நான் நன்கு அறிந்துகொண்டேன் –
  
# பூங்கணுத்திரையார்# பூங்கணுத்திரையார்
# 171 மருதம்# 171 மருதம்
காண் இனி வாழி தோழி யாணர்இதனைக் காண்பாயாக, வாழ்க தோழியே! புதிதாய்
கடும் புனல் அடைகரை நெடும் கயத்து இட்டவிரைந்துவரும் நீரை அடைக்கும் கரையையுடைய நீண்ட குளத்தில் இட்ட
மீன் வலை மா பட்டு ஆங்குமீன் வலையில் வேறு விலங்கு சிக்கியதைப் போல்
இது மற்று எவனோ நொதுமலர் தலையேஇது என்ன கூத்து? அயலாரிடத்தான (மணத்துக்கான இம் ) முயற்சி!
  
# கச்சிப்பேட்டு நன்னாகையார்# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 172 நெய்தல்# 172 நெய்தல்
தாஅல் அம் சிறை நொ பறை வாவல்வலிமையான அழகிய சிறகுகளையும், நொய்தான பறத்தலையும் கொண்ட வௌவால்
பழு மரம் படரும் பையுள் மாலைபழுத்த மரத்தைத் தேடித்திரியும் துன்பந்தரும் மாலையில்
எமியம் ஆக ஈங்கு துறந்தோர்நான் தனித்திருக்க இங்கு நம்மைவிட்டுச் சென்ற தலைவர்
தமியர் ஆக இனியர்-கொல்லோதாம் அங்கு தனியே இருப்பது அவருக்கு இனிமையானதோ?
ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்தஏழு ஊர்களிலுள்ள பொதுவான ஈயம்பூசும் தொழிலுக்கு ஓர் ஊரில் அமைக்கப்பட்ட
உலை வாங்கு மிதி தோல் போலஉலையில் மாட்டிய துருத்தியைப் போல
தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சேஎல்லை அறியாமல் வருந்தும் என் நெஞ்சே!
  
# மதுரை காஞ்சி புலவன்# மதுரை காஞ்சி புலவன்
# 173 குறிஞ்சி# 173 குறிஞ்சி
பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்தபொன்னைப்போன்ற நிறமுடைய ஆவிரையின் புதிய பூக்களைச் செறித்துக் கட்டிய
பல் நூல் மாலை பனை படு கலி_மாபலவாகிய நூல்களையுடைய மாலையை அணிந்த பனைமடலால் இயற்றிய குதிரையில்
பூண் மணி கறங்க எறி நாண் அட்டுபூட்டிய மணி ஆரவாரிக்கும்படி ஏறி, நாணத்தைக் கொன்று
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்பமிக்க நினைவையுடைய உள்ளத்தே உள்ள நோயான காமம் மேலும் மேலும் மிகுதியாக
இன்னள் செய்தது இது என முன் நின்றுஇன்னாளால் வந்தது இந்தக் காமநோய் என முன்னே நின்று
அவள் பழி நுவலும் இ ஊர்அவளைப் பழிதூற்றும் இந்த ஊர்,
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனேஅதனை உணர்ந்தமையால் இதனைவிட்டுப் போகவிருக்கின்றேன்.
  
# வெண்பூதி# வெண்பூதி
# 174 பாலை# 174 பாலை
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துபெய்கின்ற மழை பெய்யாது நீங்கிய வருத்தமுள்ள பாலைநிலத்தில்
கவை முட கள்ளி காய் விடு கடு நொடிகவைத்த முள்ளையுடைய கள்ளியின் காய் வெடிக்கும் கடிய ஒலிக்கு
துதை மென் தூவி துணை புறவு இரிக்கும்நெருக்கமான மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய புறாக்கள் அஞ்சியோடும்
அத்தம் அரிய என்னார் நம் துறந்துகடும் வழிகள் கடத்தற்கு அரியன என்று கருதாமல், நம்மைத் துறந்து
பொருள்_வயின் பிரிவார் ஆயின் இ உலகத்துபொருளைத் தேடிப் பிரிந்து செல்வாராயின், இவ்வுலகத்தில்
பொருளே மன்ற பொருளேபொருள்தான் முக்கியமாகிப்போய்விட்டது,
அருளே மன்ற ஆரும் இல்லதுவேஅருளைத் தேட யாரும் இல்லை.
  
# உலோச்சன்# உலோச்சன்
# 175 நெய்தல்# 175 நெய்தல்
பருவ தேன் நசைஇ பல் பறை தொழுதிஎடுக்கும் பருவத்திலுள்ள தேனை விரும்பி, பலசிறகுகளைக் கொண்ட வண்டுக்கூட்டம்
உரவு திரை பொருத திணி மணல் அடைகரைவலிமைமிக்க அலைகள் மோதி எழுப்பிய திணிந்த மணலைக் கொண்டு அடைத்த கரையில் உள்ள
நனைந்த புன்னை மா சினை தொகூஉம்நனைந்த புன்னையின் பெரிய கிளையில் கூடுகின்ற
மலர்ந்த பூவின் மா நீர் சேர்ப்பற்குமலர்ந்த பூக்களையும் கரிய நீரையுமுடைய கடற்கரைத் தலைவனுக்கு
இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்றுஇரங்கமாட்டேன் தோழி! இங்கு நீ ஏன் இப்படி ஆயினாய் என்று
பிறர் பிறர் அறிய கூறல்மற்றவரெல்லாரும் அறியக் கூறவேண்டாம்;
அமைந்து ஆங்கு அமைக அம்பல் அஃது எவனேஅவர்கள் நினைப்புக்கேற்றவாறு அமையட்டும்; அவர்களின் வம்புமொழி என்னை என்ன செய்யும்?
  
# வருமுலையாரித்தி# வருமுலையாரித்தி
# 176 குறிஞ்சி# 176 குறிஞ்சி
ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன்ஒருநாள் வந்தான் அல்லன், இரண்டு நாள் வந்தானல்லன்;
பல் நாள் வந்து பணிமொழி பயிற்றி என்பல நாள் வந்து பணிவான மொழிகளை மீண்டும் மீண்டும் சொல்லி, என்னுடைய
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றைநல்ல நெஞ்சத்தை இளகச் செய்த பின்னர்,
வரை முதிர் தேனின் போகியோனேமலையின் முதிர்ந்த தேன்கூட்டைப் போல மறைந்து போனான்,
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோஎனக்குப் பற்றுக்கோடாக இருக்கும் என் தந்தையைப் போன்றவன் எங்கு உள்ளானோ?
வேறு புல நன் நாட்டு பெய்தஅயலிடமாகிய ஒரு நல்ல நாட்டில் பெய்த
ஏறு உடை மழையின் கலிழும் என் நெஞ்சேபெருத்த இடியுடன் கூடிய மழையின் நீரைப் போல என் நெஞ்சம் கலங்கி இருக்கிறது.
  
# உலோச்சன்# உலோச்சன்
# 177 நெய்தல்# 177 நெய்தல்
கடல் பாடு அவிந்து கானல் மயங்கிகடல் ஓசை அடங்கி, கடற்கரைச் சோலை இருளால் மயங்க,
துறை நீர் இரும் கழி புல்லென்றன்றேதுறையையும் நீரையும் உடைய கரிய கழி பொலிவிழந்து இருக்கிறது;
மன்றல் அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கைபொதுவிடத்தில் உள்ள அழகிய பனையின் மடலில் இருந்து வாழ்கிற
அன்றிலும் பையென நரலும் இன்று அவர்அன்றில் பறவையும் மெல்லக் கூவும்; இன்று அவர்
வருவர்-கொல் வாழி தோழி நாம் நகவருவாரோ? வாழ்க தோழியே! நாம் மகிழ்ச்சியுற,
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சிஊடல்கொள்ளினும், அதனால் பிரிவு வரும் என்று அஞ்சி
தணப்பு அரும் காமம் தண்டியோரேநீங்குதற்கு அரிய காம இன்பத்தை அமையப்பெற்றோர்
  
# நெடும்பல்லியத்தை# நெடும்பல்லியத்தை
# 178 மருதம்# 178 மருதம்
அயிரை பரந்த அம் தண் பழனத்துஅயிரை மீன்கள் பரந்து திரியும் அழகிய குளிர்ந்த பொய்கையில்
ஏந்து எழில் மலர தூம்பு உடை திரள் கால்எடுப்பான அழகையுடைய பூக்களைக் கொண்ட, உள்துளையுள்ள திரண்ட தண்டுகளையுடைய
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள்ஆம்பல் மலரைக் கொய்பவர்களுக்குத் தாகம் எடுத்ததைப் போன்று
இடை முலை கிடந்தும் நடுங்கல் ஆனீர்முலைகளிடையே படுத்திருந்தும் நடுங்குகின்றீர்;
தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்குதொழுது காணும் பிறையைப் போல உமக்குத் தோன்றி, நாம் உமக்கு
அரியம் ஆகிய_காலைஅரியவளாய் இருந்த பொழுதில்
பெரிய நோன்றனீர் நோகோ யானேபெரிதான வருத்தத்தைப் பொறுத்துக்கொண்டிருந்தீரோ? வருந்துகிறேன் நான்.
  
# குட்டுவன் கண்ணன்# குட்டுவன் கண்ணன்
# 179 குறிஞ்சி# 179 குறிஞ்சி
கல்லென் கானத்து கடமா ஆட்டிகல்லென்ற ஓசையிடும் காட்டினில் கடமாவை விரட்டி
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தனபகற்பொழுதும் இருளாகிவிட்டது; வேட்டைநாய்களும் இளைத்துவிட்டன;
செல்லல் ஐஇய உது எம் ஊரேஉம் ஊருக்குச் செல்லவேண்டாம், தலைவனே! இதோ பக்கத்தில் இருக்கிறது எமது ஊர்;
ஓங்கு வரை அடுக்கத்து தீம் தேன் கிழித்தஉயர்ந்த மலையின் சரிவில் இனிய தேனிறாலைக் கிழித்த
குவை உடை பசும் கழை தின்ற கய வாய்திரளாயிருக்கும் பசிய மூங்கில் குருத்தைத் தின்ற பெரிய வாயையுடைய
பேதை யானை சுவைத்தபேதையான யானை சுவைத்த
கூழை மூங்கில் குவட்டு இடையதுவேகுட்டையாகிப்போன மூங்கிலையுடைய உச்சிக்கு இடையில் இருக்கிறது-
  
# கச்சிப்பேட்டு நன்னாகையார்# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 180 பாலை# 180 பாலை
பழூஉ பல் அன்ன பரு உகிர் பா அடிபேயின் பல்லைப் போன்ற பருத்த நகங்களையும், பரந்த அடியினையும் கொண்ட 
இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்துபெரிய களிற்றுயானைகளின் கூட்டத்துக்குத் தலைவனாகிய களிறு வந்துபுகுந்ததால், அழிந்து
அறை மடி கரும்பின் கண் இடை அன்னபாத்தியில் விழுந்த கரும்பின் நடுவே நிற்கும் ஒற்றைக் கரும்பு போல
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்துதுன்பத்தையுடைய ஒற்றை மூங்கில் உயர்ந்துநிற்கும் பாலைநிலத்தைக் கடந்து
எய்தினர்-கொல்லோ பொருளே அல்குல்ஈட்டிவிட்டாரோ பொருளை? அல்குலில்
அம் வரி வாட துறந்தோர்அழகிய தேமல்வரிகள் கெடும்படி துறந்துசென்றோர்
வன்பர் ஆக தாம் சென்ற நாட்டேகல்நெஞ்சினராக, தாம் சென்ற நாட்டில் – 
  
# கிள்ளிமங்கலங்கிழார்# கிள்ளிமங்கலங்கிழார்
# 181 குறிஞ்சி# 181 குறிஞ்சி
இது மற்று எவனோ தோழி துனி இடைஇது என்ன பயனை உடையது, தோழி? புலவிக்காலத்தில்
இன்னர் என்னும் இன்னா கிளவிதலைவர் இப்படிப்பட்டவர் என்னும் இனிமையற்ற சொற்கள்-
இரு மருப்பு எருமை ஈன்றணி காரான்பெரிய கொம்பினையுடைய எருமையாகிய அண்மையில் ஈன்ற கரிய பெண்ணெருமை
உழவன் யாத்த குழவியின் அகலாதுஉழவனால் கட்டப்பட்டுள்ள தன் கன்றைவிட்டு அகலாமல்
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன்பக்கத்தேயுள்ள பசிய பயிர்களை மேயும் ஊரையுடைய நம் தலைவனின்
திரு மனை பல் கடம்பூண்டசெல்வம் மிக்க வீட்டிலிருந்து பலவித இல்லறக் கடமைகளை மேற்கொண்டுள்ள
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கேமிகவும் முதுமையினையுடைய பெண்டிராகிய நமக்கு –
  
# மடல் பாடிய மாதங்கீரன்# மடல் பாடிய மாதங்கீரன்
# 182 குறிஞ்சி# 182 குறிஞ்சி
விழு தலை பெண்ணை விளையல் மா மடல்செழித்த உச்சியையுடைய பனையின் நன்கு விளைந்த பெரிய மடலால் செய்த குதிரைக்கு
மணி அணி பெரும் தார் மரபில் பூட்டிமணிகள் அணிந்த பெரிய மாலையை மரபுப்படி அணிவித்து,
வெள் என்பு அணிந்து பிறர் எள்ள தோன்றிவெள்ளை எலும்புகளை அணிந்துகொண்டு, பிறர் எள்ளி நகையாடத் தோன்றி
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கிஒரு நாள் மட்டில் நமது பெரிய நாணத்தை விட்டு,
தெருவின் இயலவும் தருவது-கொல்லோதெருவில் செல்லும் செயலைத் தருவதாயிற்றோ?
கலிழ் கவின் அசை நடை பேதைஒழுகும் அழகையும் அசைகின்ற நடையையும் உடைய பேதை
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதேமனம் நெகிழவில்லை; நாம் அவளிடம் விடுவதற்கு அமைந்த தூது – 
  
# ஔவையார்# ஔவையார்
# 183 முல்லை# 183 முல்லை
சென்ற நாட்ட கொன்றை அம் பசு வீதலைவர் பிரிந்து சென்ற நாட்டிலுள்ள கொன்றையின் அழகிய பருவத்துப் பூக்கள்
நம் போல் பசக்கும்_காலை தம் போல்நம்மைப்போல பசலை நிறத்தையுடைய கார்ப்பருவத்தில், தம்மைப் போலச்
சிறு தலை பிணையின் தீர்ந்த நெறி கோட்டுசிறிய தலையையுடைய பெண்மானைப் பிரிந்திருக்கும் நெறிந்த கொம்பினையுடைய
இரலை மானையும் காண்பர்-கொல் நமரேஇரலை மானையும் காண்பாரோ?
புல்லென் காயா பூ கெழு பெரும் சினைபொலிவற்ற காயாவின் மலர்கள் நிறைந்த பெரிய கிளை
மென் மயில் எருத்தின் தோன்றும்மெல்லிய மயிலின் கழுத்தைப் போல் தோன்றும்
புன்_புல வைப்பின் கானத்தானேபுஞ்சை நிலத்தின்கண் இருந்த காட்டில் – 
  
# ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன்# ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன்
# 184 நெய்தல்# 184 நெய்தல்
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லைதாம் அறிந்ததனை மறைத்துப் பொய்கூறுதல் சான்றோர்க்கு இயல்பில்லை;
குறுகல் ஓம்பு-மின் சிறுகுடி செலவேசிறுகுடிக்கான பயணத்தால் அங்குச் செல்வதைத் தவிருங்கள், 
இதற்கு இது மாண்டது என்னாது அதற்பட்டுஇதற்கு இது சிறந்தது என்னாமல், தலைவியின் கண்வலையில் பட்டு
ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம்அங்குத் தங்கிவிட்டது என் சிறப்புப்பெற்ற நெஞ்சம்; (எனவே)
மயில் கண் அன்ன மாண் முடி பாவைமயில்தோகையின் கண்ணைப்போன்ற சிறந்த முடியைக் கொண்ட பாவைபோன்ற
நுண் வலை பரதவர் மட_மகள்நுண்ணிய வலையைக் கொண்ட மீனவரின் இளமையான மகளின்
கண் வலை படூஉம் கானலானேகண்ணாகிய வலையில் மாட்டிக்கொள்ளும் கடற்கரைச் சோலையிடத்து இருக்கும் – 
 (சிறுகுடிக்கான பயணத்தால் அங்குச் செல்வதைத் தவிருங்கள்,)
# மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 
# 185 குறிஞ்சி# 185 குறிஞ்சி # மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நுதல் பசப்பு இவர்ந்து திதலை வாடிநெற்றியில் பசலை படர்ந்து, சுணங்கு நிறம் குன்றி
நெடு மென் பணை தோள் சாஅய் தொடி நெகிழ்ந்துநீண்ட மென்மையான பருத்த தோள்கள் மெலிந்து, வளையல்கள் கழன்று,
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் எனஇப்படி ஆவது உம்மாலே ஆனது என
சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரிசொன்னால் என்ன தோழி? பல கோடுகளையுடைய
பாம்பு பை அவிந்தது போல கூம்பிபாம்பின் படம் குறைந்ததைப் போல் குவிந்து
கொண்டலின் தொலைந்த ஒண் செம்_காந்தள்கீழ்க்காற்றால் விழுந்த ஒளிரும் வெங்காந்தள் மலர்,
கல் மிசை கவியும் நாடற்கு என்பாறையின்மேல் கவிழ்ந்துகிடக்கும் நாட்டினராகிய தலைவனுக்கு என்
நன் மா மேனி அழி படர் நிலையேநல்ல மாமைநிறமுள்ள மேனி துன்பமுறும் நிலையை – 
  
# ஒக்கூர் மாசாத்தியார்# ஒக்கூர் மாசாத்தியார்
# 186 முல்லை# 186 முல்லை
ஆர் கலி ஏற்றொடு கார் தலைமணந்தமிகுந்த ஓசையுடைய இடியுடன் கார்காலம் கூடிவந்த
கொல்லை புனத்த முல்லை மென் கொடிகொல்லைப் புனத்திலுள்ள முல்லையின் மெல்லிய கொடி
எயிறு என முகையும் நாடற்குபற்கள் போன்று அரும்பிநிற்கும் நாட்டையுடைய தலைவனுக்காக
துயில் துறந்தனவால் தோழி எம் கண்ணேதூக்கத்தைத் தொலைத்தன தோழி, என்னுடைய கண்கள்.
  
# கபிலர்# கபிலர்
# 187 குறிஞ்சி# 187 குறிஞ்சி
செ வரை சேக்கை வருடை மான் மறிசெம்மையான மலையில் வாழும் வருடைமானின் குட்டி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்திதன் தாயின் மடியிலிருந்து பொழியும் இனிய பாலை வயிறாரக் குடித்து
பெரு வரை நீழல் உகளும் நாடன்பெரிய மலைப்பக்கத்து நிழலில் துள்ளிவிளையாடும் நாட்டைச் சேர்ந்தவன்
கல்லினும் வலியன் தோழிபாறையைக் காட்டிலும் வலிமைமிக்கவன் தோழி!
வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சேஅவ்வாறு வலியவன் என்றுகொள்ளாது மெலியும் என் நெஞ்சு!
  
# மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மன்னார்# மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மன்னார்
# 188 முல்லை# 188 முல்லை
முகை முற்றினவே முல்லை முல்லையொடுமுதிர்ந்துவிட்டன முல்லையின் அரும்புகள்; முல்லையோடு
தகை முற்றினவே தண் கார் வியன் புனம்முற்றும் அழகுகொண்டன குளிர்ந்த கார்ப்பருவத்தின் அகன்ற தினைப்புனங்கள்;
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்என் நேர்த்தியான அணிகலன்களை நெகிழச் செய்தவர் வரவில்லை;
மாலை வந்தன்று என் மாண் நலம் குறித்தேமாலையும் வந்தது; என் சிறப்புமிக்க பெண்மை நலத்தைக் குறிவைத்து –
  
# மதுரை ஈழத்து பூதன் தேவன்# மதுரை ஈழத்து பூதன் தேவன்
# 189 பாலை# 189 பாலை
இன்றே சென்று வருதும் நாளைஇன்றே சென்று நாளை வரவேண்டும்;
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுககுன்றிலிருந்து விழும் அருவியைப் போல வெள்ளிய தேர் விரைந்து செல்க;
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமிஇளம்பிறையைப் போன்ற ஒளிவிளங்கும் சக்கரங்கள்
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்பவானத்திலிருந்து விழும் நெருப்பைப் போன்று பசிய பயிர்களை அழித்து
கால் இயல் செலவின் மாலை எய்திகாற்று வீசுவதைப் போன்று சென்று மாலையில் அடைந்து
சில் நிரை வால் வளை குறு_மகள்சிலவே உள்ள வரிசையான வெள்ளிய வளைகளை அணிந்த இளையவளின்
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமேபலவகையில் சிறப்புப்பெற்ற மார்பைத் தழுவி மகிழ்வோம்!
  
# பூதம்புல்லன்# பூதம்புல்லன்
# 190 முல்லை# 190 முல்லை
நெறி இரும் கதுப்பொடு பெரும் தோள் நீவிநெறிப்புடைய கரிய கூந்தலோடு, பெரிய தோள்களையும் தடவிக்கொடுத்து,
செறி வளை நெகிழ செய்_பொருட்கு அகன்றோர்செறிந்த வளைகள் நெகிழ, பொருள் செய்வதற்கு அகன்றோர்
அறிவர்-கொல் வாழி தோழி பொறி வரிஅறிவாரா வாழ்க தோழியே! புள்ளிகளையும், கோடுகளையும் கொண்ட
வெம் சின அரவின் பைம் தலை துமியகடுங்கோபமுள்ள பாம்பின் பசிய தலைகள் துண்டுதுண்டாக
நரை உரும் உரரும் அரை இருள் நடுநாள்வெள்ளை இடி முழங்கும் நள்ளிரவின் நடுச்சாமத்தில்
நல் ஏறு இயங்கு-தொறு இயம்பும்நல்ல காளை இயங்குதோறும் ஒலிக்கும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணி குரலேபல பசுக்கள் கொண்ட தொழுவத்திலுள்ள ஒரு மணியின் குரலை-
  
# 191 முல்லை 
உது காண் அதுவே இது என மொழிகோ# 191 முல்லை
நோன் சினை இருந்த இரும் தோட்டு புள்_இனம்இன்னும் சிறிது நாளில் பார்ப்பாய், அவ்வாறு செய்வதை; அவர் செயலை என்னவேன்று சொல்வேன்?
தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ளவலிய கிளையில் இருந்த பெரிய கூட்டமான பறவையினம்
தீம் குரல் அகவ கேட்டும் நீங்கியதாம் சேர்ந்திருப்பதால் பிரிந்தவரைப் பற்றி நினைக்காமல்
ஏதிலாளர் இவண் வரின் போதின்இனிய குரலில் அழைத்து ஒலிக்க, அதனைக் கேட்டும் நீங்கிய
பொம்மல் ஓதியும் புனையல்வேற்றுமனிதர் இங்கே வந்தால், மலர்மொட்டுகளால்
எம்மும் தொடாஅல் என்குவெம்-மன்னேபொங்கிவரும் கூந்தலையும் புனையவேண்டாம்;
 எம்மையும் தொடவேண்டாம் என்று சொல்வோம் – நிச்சயமாக!
# கச்சிப்பேட்டு நன்னாகையார் 
# 192 பாலை# 192 பாலை # கச்சிப்பேட்டு நன்னாகையார்
ஈங்கே வருவர் இனையல் அவர் எனஅவர் இங்கு வருவார், வருந்தவேண்டாம் என்று சொல்வதால்
அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவிஇனிமேல் அழாமலிருப்பேனோ? என் நோயினால் தானும் நொந்து என்னுடன் உறைபவளே!
மின்னின் தூவி இரும் குயில் பொன்னின்மின்னுகின்ற இனிய இறகுகளையுடைய கரிய குயில், பொன்னின்
உரை திகழ் கட்டளை கடுப்ப மா சினைஉரைத்த துகள் திகழ்கின்ற உரைகல்லைப் போன்று, மாமரத்தின் கிளையில்
நறும் தாது கொழுதும் பொழுதும்நறிய பூந்தாதைக் கோதுகின்ற காலத்தும்
வறும் குரல் கூந்தல் தைவருவேனேகொத்தான வெறுங்கூந்தலைத் தடவிக்கொண்டிருக்கின்றேனே!
  
# அரிசில் கிழார்# அரிசில் கிழார்
# 193 முல்லை# 193 முல்லை
மட்டம் பெய்த மணி கலத்து அன்னகள்ளை எடுத்துவைத்த நீல நிறக்குப்பியைப் போல்
இட்டு வாய் சுனைய பகு வாய் தேரைசிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள்
தட்டை_பறையின் கறங்கும் நாடன்தட்டைப் பறையைப் போல ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன்
தொல்லை திங்கள் நெடு வெண்ணிலவின்பல மாதங்களுக்கு முன்னர் ஒரு நீண்ட வெள்ளைநிலாவொளியில்
மணந்தனன்-மன் எம் தோளேதழுவினான் என் தோளை
இன்றும் முல்லை முகை நாறும்மேஇன்றைக்கும் அவன் குடுமியிற்சூடியிருந்த முல்லைமொட்டுகளின் மணம் நிற்கிறது.
  
# கோவர்த்தனார்# கோவர்த்தனார்
# 194 முல்லை# 194 முல்லை
என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர(இந்த நெஞ்சின் நிலையை)என்னவென்று சொல்வது தோழி? மின்னல்வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்_எதிர்முகில்கள் எழுந்து ஒலிக்கும், அதுமட்டுமோ? அதற்கு எதிராக
கான மஞ்ஞை கடிய ஏங்கும்காட்டு மயில்கள் விரைவாக ஏக்கத்துடன் கூவும்
ஏதில கலந்த இரண்டற்கு என்ஒன்றற்கொன்று தொடர்பிலாது கலந்த இந்த இரண்டு ஒலிகளாலும் என்
பேதை நெஞ்சம் பெரு மலக்கு_உறுமேபேதை நெஞ்சம் பெரிய அளவில் கலக்கமடையும்.
  
# தேரதரன்# தேரதரன்
# 195 நெய்தல்# 195 நெய்தல்
சுடர் சினம் தணிந்து குன்றம் சேரஞாயிறு வெப்பம் தணிந்து குன்றினைச் சேர
படர் சுமந்து எழுதரு பையுள் மாலைநினைவுகூரும் துன்பத்தை மேற்கொண்டு தோன்றிய துன்பந்தரும் மாலையில்
யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர்எங்கு இருக்கின்றாரோ? வேண்டிய செயலை முடிக்கச் சென்றவர்,
இன்னாது இரங்கும் என்னார் அன்னோமாலை துன்பத்தைத் தருவது, அதற்கு அவள் வருந்துவாளே என்று நினைக்கமாட்டார், அந்தோ!
தைவரல் அசை வளி மெய் பாய்ந்து ஊர்தரதடவிக்கொடுத்து அசையும் காற்று மேனியிற் பாய்ந்து பரவ
செய்வு_உறு பாவை அன்ன என்அரக்கால் செய்யப்பட்ட பாவை போல, என்
மெய் பிறிது ஆகுதல் அறியாதோரேமேனி மாறுபடுவதை அறியாதவர்.
  
# மிளை கந்தன்# மிளை கந்தன்
# 196 மருதம்# 196 மருதம்
வேம்பின் பைம் காய் என் தோழி தரினேவேப்பமரத்தின் பசிய காயை என் தோழி தரும்போது
தேம் பூம் கட்டி என்றனிர் இனியேஇனிப்பான நல்ல வெல்லக்கட்டி என்று சொன்னீர்; இப்பொழுதோ,
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர்பாரியின் பறம்பு மலையில் குளிர்ந்த சுனையில் உள்ள தெளிந்த நீரை
தைஇ திங்கள் தண்ணிய தரினும்தை மாதத்துக் குளிர்போன்று குளிரவைத்ததாகக் கொடுத்தாலும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்மிகவும் உவர்ப்பாய் இருக்கிறதென்று கூறுகின்றீர்;
ஐய அற்றால் அன்பின் பாலேதலைவனே! அப்படி ஆகிவிட்டது உம் அன்பின் தன்மை.
  
# கச்சிப்பேட்டு நன்னாகையார்# கச்சிப்பேட்டு நன்னாகையார்
# 197 நெய்தல்# 197 நெய்தல்
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தகஎன்ன செய்வோம் தோழி! துன்பம் தங்கியிருக்கும்படி
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழைநீரைக் கொண்ட, மின்னல், இடி ஆகியவை சேர்ந்த கார்காலத்தைக் கொண்ட கிளைத்துவிழும் மழையையுடைய
ஊதை அம் குளிரொடு பேது உற்று மயங்கியவாடைக் காற்றின் குளிரோடு மனம் குழம்பி மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம்குளிர்காலம் என்னும் உருவில் உள்ள கூற்றுவன்
காதலர் பிரிந்த என் குறித்து வருமேகாதலரைப் பிரிந்திருக்கும் என்னை நோக்கி வருகிறது –
  
# கபிலர்# கபிலர்
# 198 குறிஞ்சி# 198 குறிஞ்சி
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்யா மரத்தை வெட்டிய மரங்களைச் சுட்ட வழியில்
கரும்பு மருள் முதல பைம் தாள் செந்தினைகரும்பைப் போன்ற அடியைக் கொண்ட பசிய தாளைக் கொண்ட செந்தினையின்
மட பிடி தட கை அன்ன பால் வார்புஇளமையான பெண்யானையின் அகன்றுருண்ட கையைப்போன்றனவாகி, பால் நிரம்பி
கரி குறட்டு இறைஞ்சிய செறி கோள் பைம் குரல்கரியை எடுக்கும் குறடுபோல வளைந்த, செறிந்த குலைகளையுடைய பசிய கதிரில்
படு கிளி கடிகம் சேறும் அடு போர்வீழ்கின்ற கிளிகளை ஓட்டுவதற்கு அங்குச் செல்வோம்; கொல்லும் போர்க்குரிய
எஃகு விளங்கு தட கை மலையன் கானத்துவேல் திகழும் பெரிய கையையுடைய மலையனின் காட்டிலுள்ள
ஆரம் நாறும் மார்பினைசந்தனம் கமழும் மார்பையுடையவனே!
வாரற்க தில்ல வருகுவள் யாயேவரவேண்டாம், அங்கு வருவாள் எம் அன்னை.
  
# பரணர்# பரணர்
# 199 குறிஞ்சி# 199 குறிஞ்சி
பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்றுதலைவியைப் பெறுவது கூடாததாயினும், நடக்கப்போவது ஒன்று
உண்டு-மன் வாழிய நெஞ்சே திண் தேர்உண்டு – உறுதியாக; வாழ்க நீ நெஞ்சே! திண்ணிய தேரினையும்
கைவள் ஓரி கானம் தீண்டிவள்ளண்மைமையும் மிக்க ஓரியின் காட்டினைத் தொட்டுக்கொண்டு
எறி வளி கமழும் நெறிபடு கூந்தல்வீசுகின்ற காற்றுப் போல மணங்கழும் நெறிப்புள்ள கூந்தலும்,
மை ஈர் ஓதி மாஅயோள்_வயின்கருமையான, நெய்ப்பினைக் கொண்ட கொண்டைமுடியையும் கொண்ட மாநிறமுள்ள தலைவியிடம்
இன்றை அன்ன நட்பின் இ நோய்இன்றிருப்பதைப் போன்ற காதலையுடைய இந்தக் காம நோய்
இறு முறை என ஒன்று இன்றிஅழிந்துபோகும் வழி என்று ஒன்று இல்லாமல்
மறுமை உலகத்து மன்னுதல் பெறினேமறுமை உலகத்திலும் நிலைபெற்றிருக்கும். 
  
# ஔவையார்  # ஔவையார்  
# 200 நெய்தல்# 200 நெய்தல்
பெய்த குன்றத்து பூ நாறு தண் கலுழ்மழைபெய்த குன்றத்தில் மலர் மணக்கின்ற குளிர்ந்த கலங்கல்நீரின்
மீமிசை தாஅய் வீசும் வளி கலந்துமேற்பரப்பில் பரவி வீசும் காற்று அந்த மணத்துடன்
இழிதரும் புனலும் வாரார் தோழிவிழுகின்றது வெள்ளம்; வந்திலர் தோழி!
மறந்தோர் மன்ற மறவாம் நாமேமறந்துவிட்டார் நிச்சயமாக; மறக்கவில்லை நாம்;
கால மாரி மாலை மா மலைகார்ப்பருவத்து மழை மாலையில் பெரிய மலையில்
இன் இசை உருமின முரலும்இனிய ஓசையுடைய இடியுடன் முழங்கும்
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரேமுன்னரேயே வருவேன் என்ற பாதுகாப்பைச் செய்துவிட்டுப் போனவர் –