ஐங்குறுநூறு 1-50

    சொற்பிரிப்பு மூலம்அடிநேர் உரை
# பாரதம் பாடிய பெருந்தேவனார்# பாரதம் பாடிய பெருந்தேவனார்
# 0 கடவுள் வாழ்த்து # 0 கடவுள் வாழ்த்து 
  
நீல மேனி வால் இழை பாகத்துநீல நிற மேனியினளான தூய அணிகலன்கள் பூண்ட மங்கையை தன் இடப்பாகத்தில் வைத்த
ஒருவன் இரு தாள் நிழல் கீழ்ஒப்பற்ற ஒரே இறைவனின் இரண்டு திருவடிகளின் நிழலின் கீழ்
மூவகை உலமும் முகிழ்த்தன முறையேமேல், நடு, கீழ் என்ற மூவகை உலகங்களும் தோன்றின முறைப்படியே.
  
# மருதம்      ஓரம்போகியார்# மருதம்      ஓரம்போகியார்
  
#1 வேட்கை பத்து#1 வேட்கை பத்து
#1#1
வாழி ஆதன் வாழி அவினிவாழ்க ஆதன்! வாழ்க அவினி!
நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்கநெல் பலவாக விளைக; பொன்வளம் பெரிதும் சிறப்பதாக
என வேட்டோளே யாயே யாமேஎன்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
நனைய காஞ்சி சினைய சிறு மீன்அரும்புகள் கொண்ட காஞ்சி மரமும், கருவுற்று முட்டைகளையுடைய சிறிய மீன்களும் வாழும்
யாணர் ஊரன் வாழ்கபுதுவருவாய் மிகுந்த ஊரினைச் சேர்ந்த எம் தலைவன் வாழ்க,
பாணனும் வாழ்க என வேட்டேமேஅவனது பாணனும் வாழ்க என்று வேண்டினோம்.
  
# 2# 2
வாழி ஆதன் வாழி அவினிவாழ்க ஆதன்! வாழ்க அவினி!
விளைக வயலே வருக இரவலர்விளைக வயல்நெல்; வருக இரவலர்
என வேட்டோளே யாயே யாமேஎன்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்பலவான இதழ்களைக் கொண்ட நீலமலரோடு, நெய்தலும் ஒப்பாக விளங்கும்
தண் துறை ஊரன் கேண்மைகுளிர்ந்த நீர்த்துறையை உடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் நட்பு
வழிவழி சிறக்க என வேட்டேமேவழிவழியாகச் சிறந்து விளங்கட்டும் என்று வேண்டினோம்.
  
# 3# 3
வாழி ஆதன் வாழி அவினிவாழ்க ஆதன்! வாழ்க அவினி!
பால் பல ஊறுக பகடு பல சிறக்கபசுக்களிடம் பால் பெருமளவு சுரக்கட்டும்; காளைகள் பலவாகப் பெருகிச் சிறக்கட்டும்
என வேட்டோளே யாயே யாமேஎன்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்விதைவிதைத்த உழவர்கள் அவை விளைந்ததால் மிகுந்த நெல்லோடு திரும்பும்
பூ கஞல் ஊரன்_தன் மனைபூக்கள் நிரம்பிய ஊரினைச் சேர்ந்த தலைவனின் மனையற
வாழ்க்கை பொலிக என வேட்டேமேவாழ்க்கை சிறந்து விளங்கட்டும் என்று வேண்டினோம்.
  
# 4# 4
வாழி ஆதன் வாழி அவினிவாழ்க ஆதன்! வாழ்க அவினி!
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுகபகைவர் தோற்றுப் புல்லரிசியை உண்க; பார்ப்பனர் தம் மறைகளை விடாமல் ஓதுக
என வேட்டோளே யாயே யாமேஎன்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்நன்கு பூத்த கரும்புப் பயிரையும், காய்த்து விளைந்த நெற்பயிரையும் உடைய
கழனி ஊரன் மார்புவயல்வெளிகளைக் கொண்ட ஊரினைச் சேர்ந்த தலைவனின் மார்பானது
பழனம் ஆகற்க என வேட்டேமேஊர்ப்பொதுவான நீர்நிலையாகாமல் எமது தலைவிக்கே உரித்தாட்டும் என்று வேண்டினோம்.
  
# 5# 5
வாழி ஆதன் வாழி அவினிவாழ்க ஆதன்! வாழ்க அவினி!
பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குகபசி என்பது இல்லாமல் ஆவதாக; நோய்கள் நெடுந்தொலைவுக்கு நீங்கிப் போவதாக
என வேட்டோளே யாயே யாமேஎன்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
முதலை போத்து முழு_மீன் ஆரும்ஆண் முதலையானது முற்ற வளர்ந்த மீன்களை நிறைய உண்ணும்
தண் துறை ஊரன் தேர் எம்குளிர்ந்த நீர்த்துறையை உடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் தேர் எமது
முன்கடை நிற்க என வேட்டேமேவீட்டின் முன்வாயிலிலேயே நீங்காது நிற்பதாக என்று வேண்டினோம்.
  
# 6# 6
வாழி ஆதன் வாழி அவினிவாழ்க ஆதன்! வாழ்க அவினி!
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துகவேந்தன் பகை தணிவானாக; அவன் வாழ்நாள் பல ஆண்டுகளுக்கு நீளுக
என வேட்டோளே யாயே யாமேஎன்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைஅகன்று விரிந்த பொய்கையில் மொட்டுகள் விட்டிருக்கும் தாமரையையுடைய
தண் துறை ஊரன் வரைககுளிர்ந்த நீர்த்துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவன் மணம்பேசி வருக,
எந்தையும் கொடுக்க என வேட்டேமேஎம் தந்தையும் இவளை அவனுக்குக் கொடுக்கட்டும் என்று வேண்டினோம்.
  
# 7# 7
வாழி ஆதன் வாழி அவினிவாழ்க ஆதன்! வாழ்க அவினி!
அறம் நனி சிறக்க அல்லது கெடுகஅறவினைகள் மிகுதியாகச் சிறந்து விளங்கட்டும்; அறம் அல்லாதன கெட்டொழியட்டும்
என வேட்டோளே யாயே யாமேஎன்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும்மேலே பஞ்சுபோன்ற நார்முடியைக் கொண்ட பூவினையுடைய மருதமரத்தில் தம் இனத்துடன் பறவைகள் இருக்கும்
தண் துறை ஊரன்_தன் ஊர்குளிர்ந்த நீர்த்துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவன் தனது ஊருக்கு
கொண்டனன் செல்க என வேட்டேமேஇவளை மணமுடித்து அழைத்துச் செல்லட்டும் என்று வேண்டினோம்.
  
# 8# 8
வாழி ஆதன் வாழி அவினிவாழ்க ஆதன்! வாழ்க அவினி!
அரசு முறை செய்க களவு இல் ஆகுகஅரசன் செங்கோல்முறையில் அரசாளுக, களவும் இல்லாதன ஆகுக
என வேட்டோளே யாயே யாமேஎன்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும்அசைந்தாடும் கிளைகளையுடை மாமரத்தில் அழகான மயில்கள் இருக்கும்
பூ கஞல் ஊரன் சூள் இவண்பூக்கள் நிரம்பிய ஊரினைச் சேர்ந்த தலைவனின் சூளுரைகள் இப்போது
வாய்ப்பது ஆக என வேட்டோமேநிறைவாக வாய்த்து நிற்கட்டும் என்று வேண்டினோம்.
  
# 9# 9
வாழி ஆதன் வாழி அவினிவாழ்க ஆதன்! வாழ்க அவினி!
நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுகநன்மையாவன அனைத்தும் பெரிதும் சிறக்கட்டும்; தீங்கு தருவன இல்லாமற் போகட்டும்
என வேட்டோளே யாயே யாமேஎன்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்கயல்மீன்களை நிறைய உண்ட நாரை, நெற்போரில் சென்று தங்கும்
தண் துறை ஊரன் கேண்மைகுளிர்ந்த துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் நட்பு
அம்பல் ஆகற்க என வேட்டேமேபிறர் அறிவதால் பழிச்சொல் எழுப்பாதிருக்கட்டும் என்று வேண்டினோம்.
  
# 10# 10
வாழி ஆதன் வாழி அவினிவாழ்க ஆதன்! வாழ்க அவினி!
மாரி வாய்க்க வளம் நனி சிறக்கமழை காலம் தவறாமல் பெய்யட்டும்; வளம் மிகுந்து சிறக்கட்டும்
என வேட்டோளே யாயே யாமேஎன்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
பூத்த மாஅத்து புலால் அம் சிறு மீன்பூத்த மாமரங்களையும், புலால் நாறும் சிறுமீன்களையும் உடைய
தண் துறை ஊரன் தன்னோடுகுளிர்ந்த துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவன் மணம் முடித்து இவளைத் தன்னோடு
கொண்டனன் செல்க என வேட்டேமேஅழைத்துச் செல்லட்டும் என்று வேண்டினோம்.
  
# 2 வேழப்பத்து# 2 வேழப்பத்து
# 11# 11
மனை நடு வயலை வேழம் சுற்றும்வீட்டில் நடப்பட்ட வயலைக்கொடி வெளியிற் சென்று கொறுக்கச்சியைச் சுற்றிக்கொண்டிருக்கும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணிதுறையைப் பொருந்திய ஊரினைச் சேர்ந்த தலைவன் செய்த கொடுமைக்கு நாணி
நல்லன் என்றும் யாமேநல்லவன் என்று சொல்லுவோம் நாம்,
அல்லன் என்னும் என் தட மென் தோளேஅவன் நல்லவனல்லன் என்று காட்டிவிடுகின்றன என் பெரிய மென்மையான தோள்கள்.
  
# 12# 12
கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும்கரையைச் சேர்ந்து வளர்ந்திருக்கும் கொறுக்கச்சியானது கரும்பினைப் போல் பூக்கின்ற
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும்துறையைப் பொருந்திய ஊரினைச் சேர்ந்த தலைவன் செய்த கொடுமையினைப் பெரிதும்
ஆற்றுக தில்ல யாமேபொறுத்துக்கொண்டிருப்போம் நாம்,
தோற்க தில்ல என் தட மென் தோளேதோற்றுப்போய் மெலிந்துவிட்டன என் பெரிய மென்மையான தோள்கள்.
  
# 13# 13
பரி உடை நன் மான் பொங்கு உளை அன்னவிரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரையின் பொசுபொசுவென்ற தலையாட்டம் போன்ற
அடைகரை வேழம் வெண் பூ பகரும்திண்ணிய கரையில் வளர்ந்திருக்கும் கொறுக்கச்சியின் வெண்மையான பூக்களைக் கொடுக்கும்
தண் துறை ஊரன் பெண்டிர்குளிர்ந்த துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் காதற்பெண்டிர்
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரேஊரே தூங்கும் நள்ளிரவிலும் தூக்கத்தை அறியாதிருப்பர்.
  
# 14# 14
கொடி பூ வேழம் தீண்டி அயலநீண்ட பூவினையுடைய கொறுக்கச்சி தீண்டுவதால், அருகிலிருக்கும்
வடு கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும்வடுப்பிடித்த மா மரத்தின் வளமையான தளிர்கள் மடங்கி அசையும்
அணி துறை வீரன் மார்பேஅழகிய துறையையுடைய வீரனான தலைவனின் மார்பு
பனி துயில் செய்யும் இன் சாயற்றேகுளிர்ந்த துயிலையும் செய்கின்ற இனிய தன்மையுடையது.
  
# 15# 15
மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழைமணலைக் கொண்டுசேர்க்கும் மிகுந்த வெள்ளத்தில், தாம் விரும்பிய ஒளிவிடும் தழையுடை அணிந்து
புனல் ஆடு மகளிர்க்கு புணர் துணை உதவும்நீராடுகின்ற மகளிருக்கு சேர்ந்து நிற்கும் துணையாக அமைந்து உதவுகின்ற
வேழ மூதூர் ஊரன்கொறுக்கச்சி நிறைந்த பழமையான ஊரினைச் சேர்ந்த தலைவன்
ஊரன் ஆயினும் ஊரன் அல்லன்னேஇந்த ஊரைச் சேர்ந்தவன்தான் என்றாலும் நம் நெஞ்சைச் சேர்ந்தவன் ஆகான்.
  
# 16# 16
ஓங்கு பூ வேழத்து தூம்பு உடை திரள் கால்ஓங்கி உயர்ந்து நிற்கும் பூவையுடைய கொறுக்கச்சியின் உள்துளையையுடைய திரண்ட தண்டினில்
சிறு தொழு_மகளிர் அஞ்சனம் பெய்யும்சிறுமியரான ஏவல் மகளிர் கண்மையையை இட்டுவைத்திருக்கும்
பூ கஞல் ஊரனை உள்ளிமலர்கள் நிறைந்த ஊரினைச் சேர்ந்த தலைவனை நினைத்து
பூ போல் உண்கண் பொன் போர்த்தனவேபூப் போன்ற மையுண்ட கண்கள் பொன்னைப் போர்த்தது போன்று மஞ்சள்பூத்துவிட்டன.
  
# 17# 17
புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூபுதரின் மேல் அசைந்து ஆடும் கொறுக்கச்சியின் வெண்மையான பூ
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்விசும்பில் பறந்து செல்லும் கொக்கினைப் போலத் தோன்றும் ஊரினைச் சேர்ந்த தலைவன்
புதுவோர் மேவலன் ஆகலின்புதிய பெண்களை நாடிச்செல்கின்றவனாய்விட்டதால்
வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சேவற்றிப்போய்விட்டது என் இளமை பொருந்திய நெஞ்சம்.
  
# 18# 18
இரும் சாய் அன்ன செருந்தியொடு வேழம்கருந்தட்டான்கோரையைப் போன்ற பஞ்சாய்க்கோரையோடு கொறுக்கச்சியும்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்கரும்பைப் போல காற்றினால் அலைக்கழிக்கப்படும் வயல்வெளிகளையுடைய ஊரைச் சேர்ந்த தலைவன்
பொருந்து மலர் அன்ன என் கண் அழஅளவொத்த மலர்களைப் போன்ற என்னுடைய கண்கள் அழும்படியாக
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றேபிரிந்து சென்றுவிட்டான் அல்லவா, உன்னைப் பிரியமாட்டேன் என்று கூறிவிட்டு.
  
# 19# 19
எக்கர் மாஅத்து புது பூ பெரும் சினைமணல் மேட்டிலுள்ள மா மரத்தின் புதிதாகப் பூ விட்டிருக்கும் பெரிய கிளையை,
புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில்புதிதாய் மணமுடித்தாரின் மேனியைப் போன்று மணங் கமழும் குளிர்ந்த பொழிலில்
வேழ வெண் பூ வெள் உளை சீக்கும்கொறுக்கச்சியின் வெள்ளைப் பூவின் தலையிலுள்ள வெண்மையான பஞ்சுமுடி துடைத்துவிடும்
ஊரன் ஆகலின் கலங்கிஊரைச் சேர்ந்த தலைவனாதலால், கலக்கமுற்று
மாரி மலரின் கண் பனி உகுமேமழைக்காலத்து மலர்களைப் போல கண்கள் கண்ணீர்த்துளிகளை உகுக்கும்.
  
# 20# 20
அறு சில் கால அம் சிறை தும்பிஆறு சிறிய கால்களைக் கொண்ட அழகிய சிறகுகளைக் கொண்ட தும்பி
நூற்று இதழ் தாமரை பூ சினை சீக்கும்நூறு இதழ்களையுடைய தாமரைப் பூவில் இட்ட முட்டைகளைத் துடைத்து அகற்றும்
காம்பு கண்டு அன்ன தூம்பு உடை வேழத்துமூங்கிலைப் பார்த்தது போன்ற உள்துளையையுடைய கொறுக்கச்சி நிறைந்த
துறை நணி ஊரனை உள்ளி என்துறையை அடுத்துள்ள ஊரினைச் சேர்ந்த தலைவனை நினைத்து என்னுடைய
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மேமுன்கையில் உள்ள அழகிய ஒளிரும் வளைகள் கழன்று ஓடுகின்றன.
  
# 3 கள்வன் பத்து# 3 கள்வன் பத்து
# 21# 21
முள்ளி நீடிய முது நீர் அடைகரைமுள்ளிச் செடிகள் உயரமாக வளர்ந்துள்ள பழமையான நீரினைக் கொண்ட திண்ணிய கரையில்
புள்ளி களவன் ஆம்பல் அறுக்கும்புள்ளிகளைக் கொண்ட நண்டானது ஆம்பலின் தண்டினை அறுத்துச் செல்லும்
தண் துறை ஊரன் தெளிப்பவும்குளிர்ந்த துறையைக் கொண்ட ஊரைச் சேர்ந்த தலைவன் தெளிவித்தானெனினும்
உண்கண் பசப்பது எவன்-கொல் அன்னாய்மையுண்ட கண்கள் பசந்து வேறுபடுவது எதனால்? அன்னையே!
  
# 22# 22
அள்ளல் ஆடிய புள்ளி களவன்சேற்றில் துளாவித் திரிந்த புள்ளிகளையுடைய நண்டு
முள்ளி வேர் அளை செல்லும் ஊரன்முள்ளிச் செடியின் வேர்ப்பகுதியில் உள்ள வளையில் சென்று தங்கும் ஊரினைச் சேர்ந்த தலைவன்
நல்ல சொல்லி மணந்து இனிமனத்துக்கு உகப்பான சொற்களைச் சொல்லி மணந்துவிட்டு, இப்பொழுது
நீயேன் என்றது எவன்-கொல் அன்னாய்நீங்கமாட்டேன் என்று சொன்னது என்னாவாயிற்று? அன்னையே!
  
# 23# 23
முள்ளி வேர் அளை களவன் ஆட்டிமுள்ளிச் செடியின் வேர்ப்பக்கத்து வளையிலிருக்கும் நண்டினை அலைத்து விளையாடி,
பூ குற்று எய்திய புனல் அணி ஊரன்பூக்களைக் கொய்து முடிக்கும் நீர்நிலைகளால் அழகுபெறும் ஊரினைச் சேர்ந்த தலைவன்
தேற்றம் செய்து நம் புணர்ந்து இனிநல்லவற்றைக் கூரி நம்மைத் தெளிவித்துக் கூடிய பின்னர் இப்போது
தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய்தீண்டி வருத்தும் தெய்வமாக மாறிவிட்டது எதனால்? அன்னையே!
  
# 24# 24
தாய் சா பிறக்கும் புள்ளி களவனொடுதன் தாய் சாகத் தான் பிறக்கும் புள்ளிகளையுடைய நண்டினோடு,
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர்தான் ஈன்ற குட்டியையே தின்னும் முதலையையும் கொண்ட தன் ஊரின் தன்மையைத்
எய்தினன் ஆகின்று-கொல்லோ மகிழ்நன்தானும் கொண்டுள்ளான் போலும் நம் தலைவன்? அவன்,
பொலம் தொடி தெளிர்ப்ப முயங்கியவர்தம் பொன்னாலாகிய வளையல்கள் அசைந்தொலிக்கத் தன்னைத் தழுவியவர்களின்
நலம் கொண்டு துறப்பது எவன்-கொல் அன்னாய்பெண்மை நலத்தைத் துய்த்துவிட்டுப் பின்னர் அவர்களைத் துறப்பது எதனாலோ? அன்னையே!
  
# 25# 25
புயல் புறந்தந்த புனிற்று வளர் பைம் காய்மழையினால் பேணி வளர்க்கப்பட்ட இளமையான வளர்கின்ற பச்சையான காயையுடைய
வயலை செம் கொடி களவன் அறுக்கும்வயலையின் சிவந்த கொடியை நண்டு அறுத்துச் செல்லும்
கழனி ஊரன் மார்பு பலர்க்குவயல்வெளியைக் கொண்ட ஊரினைச் சேர்ந்த தலைவனின் மார்பானது, பல பெண்டிருக்கு
இழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய்அவரின் அணிகலன்களை நெகிழ்ந்துபோகச்செய்வதாகும் அன்னையே!
  
# 26# 26
கரந்தை அம் செறுவில் துணை துறந்து களவன்கரந்தைக் கொடி படர்ந்த அழகிய வயலில், தன் துணையைத் துறந்த நண்டு
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன்வள்ளைக்கொடியில் மெல்லிய தண்டினை அறுத்துச்செல்லும் ஊரினைச் சேர்ந்த தலைவன்
எம்மும் பிறரும் அறியான்எமது இயல்பையும் பிறரது இயல்பையும் அறியமாட்டான்;
இன்னன் ஆவது எவன்-கொல் அன்னாய்அவன் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் என்ன? அன்னையே!
  
# 27# 27
செந்நெல் அம் செறுவில் கதிர் கொண்டு களவன்செந்நெல் விளைந்த அழகிய வயலில் கதிரினை அறுத்துக்கொண்டு, நண்டு
தண் அக மண் அளை செல்லும் ஊரற்குகுளிர்ந்த உட்புறத்தைக் கொண்ட மண்ணினால் ஆன தன் அளையில் புகும் ஊரினைச் சேர்ந்தவனுக்காக
எல் வளை நெகிழ சாஅய்ஒளிரும் வளைகள் கழன்றுபோகும்படி மெலிந்து
அல்லல் உழப்பது எவன்-கொல் அன்னாய்துன்பத்தில் உழலுவது எதற்காகவோ? அன்னையே!
  
# 28# 28
உண்துறை_அணங்கு இவள் உறை நோய் ஆயின்நீருண்ணும் துறையிலுள்ள தெய்வந்தான் இவளிடத்து இருக்கும் நோய்க்குக் காரணம் எனில்
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்குகுளிர்ந்த சேற்றிலுள்ள நண்டு தன் கொடுக்குகளால் கோலமிடும் ஊரினைச் சேர்ந்தவனுக்காக
ஒண் தொடி நெகிழ சாஅய்ஒளிரும் தோள்வளைகள் கழன்றுபோகும்படி மெலிந்து
மென் தோள் பசப்பது எவன்-கொல் அன்னாய்மென்மையான தோள்கள் பசந்துபோவது எதற்காக? அன்னையே!
  
# 29# 29
மாரி கடி கொள காவலர் கடுகமழையும் மிகுதியாகப் பெய்ய, காவலர்கள் தம் தொழிலில் விரைந்து செயல்பட
வித்திய வெண் முளை களவன் அறுக்கும்விதைத்த வெள்ளிய முளையை நண்டு அறுத்துச் செல்லும்
கழனி ஊரன் மார்பு உற மரீஇவயல்வெளியைக் கொண்ட ஊரினைச் சேர்ந்த தலைவனின் மார்பினை மிகவும் பொருந்தித் தழுவியும்
திதலை அல்குல் நின் மகள்தேமல் படர்ந்த அல்குலையுடைய உனது மகள்
பசலை கொள்வது எவன்-கொல் அன்னாய்பசலை கொள்வது எதற்காக? அன்னையே!
  
# 30# 30
வேப்பு நனை அன்ன நெடும் கண் களவன்வேம்பின் அரும்பைப் போன்ற நெடிய கண்களையுடைய நண்டின்
தண் அக மண் அளை நிறைய நெல்லின்குளிர்ந்த உட்புறத்தைக் கொண்ட மண்ணினால் ஆன அளை நிறையும்படியாக நெல்லின்
இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள்பெரிய பூக்கள் உதிரும் ஊரினைச் சேர்ந்த தலைவனுக்காக, இவள்
பெரும் கவின் இழப்பது எவன்-கொல் அன்னாய்தனது பெரிதான அழகை இழப்பது எதற்காக? அன்னையே!
  
# 4 தோழிக்கு உரைத்த பத்து# 4 தோழிக்கு உரைத்த பத்து
# 31# 31
அம்ம வாழி தோழி மகிழ்நன்தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
கடன் அன்று என்னும்-கொல்லோ நம் ஊர்தன் கடமை இல்லை என்று சொல்வானோ? நமது ஊரின்
முடம் முதிர் மருதத்து பெரும் துறைவளைந்து முதிர்ந்த மருதமரங்களுள்ள பெரிய நீர்த்துறையில்
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளேநம்மோடு நீராடிய தோழியரிடம் கூறிய சூளுரைகளைக் காப்பது –
  
# 32# 32
அம்ம வாழி தோழி மகிழ்நன்தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள்ஒரே ஒருநாள் நமது வீட்டுக்கு வந்ததற்காக, ஏழு நாட்கள்
அழுப என்ப அவன் பெண்டிர்அழுதிருந்தனர் என்று சொன்னார்கள், அவனது பரத்தைப் பெண்டிர்,
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தேதீயில் பட்ட மெழுகைப் போல வெகு விரைவாக உள்ளம் உருகிப்போய் –
  
# 33# 33
அம்ம வாழி தோழி மகிழ்நன்தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூ பெரும் துறைமருதமரங்கள் உயர்ந்து ஓங்கி வளர்ந்திருக்கும் மலர்ந்த பூக்களைக் கொண்ட பெரிய துறையில்
பெண்டிரோடு ஆடும் என்ப தன்தன் காதற்பெண்டிரோடு நீராடி இன்புறுவன் என்று சொல்கின்றனர், அவனது
தண் தார் அகலம் தலைத்தலை கொளவேகுளிர்ந்த மாலையணிந்த மார்பினை ஒவ்வொருவராகப் பற்றிக்கொண்டு –
  
# 34# 34
அம்ம வாழி தோழி நம் ஊர்தோழியே கேட்பாயாக! நம் ஊரின்
பொய்கை பூத்த புழை கால் ஆம்பல்பொய்கையில் பூத்த உள்துளையுள்ள தண்டினையுடைய ஆம்பல் மலரின்
தாது ஏர் வண்ணம் கொண்டனதாதுக்கள் போன்ற நிறத்தைக் கொண்டன,
ஏதிலாளற்கு பசந்த என் கண்ணேநமக்கு அயலானாகிவிட்டவனுக்காகப் பசந்துபோன எனது கண்கள்.
  
# 35# 35
அம்ம வாழி தோழி நம் ஊர்தோழியே கேட்பாயாக! நம் ஊரின்
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்பொய்கையில் பூத்த ஆம்பல் மலரின் நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டின்
நிறத்தினும் நிழற்றுதல்-மன்னேநிறத்தைக் காட்டிலும் ஒளியுடையதாக இருந்து,
இனி பசந்தன்று என் மாமை கவினேஇப்போது பசந்துபோயிற்று, என் மாநிற மேனியழகு.
  
# 36# 36
அம்ம வாழி தோழி ஊரன்தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்துநம்மை மறந்து இருப்பவனாயின், நாமும் அவனை மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம்-மன்னேஅவனை நினைக்காமல் இருப்பதற்கு நம்மால் இயலும் உறுதியாக –
கயல் என கருதிய உண்கண்கயல் என்னும்படியான மையுண்ட கண்கள்
பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினேபசலை நோய்க்கு ஆட்பட்டு சோர்வடைந்து போகாதிருந்தால் –
  
# 37# 37
அம்ம வாழி தோழி மகிழ்நன்தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
நயந்தோர் உண்கண் பசந்து பனி மல்கதன்னை விரும்பியவரின் மையுண்ட கண்கள் பசந்து போய் கண்ணீர் மல்கச் செய்வதில்
வல்லன் வல்லன் பொய்த்தல்வல்லவன்; வல்லவன் அவன் பொய்சொல்லுவதிலும்;
தேற்றான் உற்ற சூள் வாய்த்தல்லேதெளிவில்லாதவன், தான் செய்த சூளுரையை வாய்க்கச்செய்வதில் –
  
# 38# 38
அம்ம வாழி தோழி மகிழ்நன்தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்தான் கூறிய வாக்குறுதிகளை நம்பியோரை நன்றாய் அறிந்திருக்கவில்லை, என்றைக்கும்
தண் தளிர் வௌவும் மேனிகுளிர்ந்த மாந்தளிர் போன்ற மேனியையும்
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்தேஒளிவிடும் வளையல்களை அணிந்த முன்கையையும் உடைய நாம் அழும்படி பிரிந்து செல்வதால் –
  
# 39# 39
அம்ம வாழி தோழி ஊரன்தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
வெம் முலை அடைய முயங்கி நம் வயின்நம்முடைய விரும்பத்தக்க முலைகளைத் தன் மார்போடு சேர்த்ணைத்துப் பின், நம்மிடமிருந்து
திருந்து இழை பணை தோள் ஞெகிழதிருத்தமான அணிகலன்கள் கொண்ட பருத்த தோள்கள் மெலியும்படி
பிரிந்தனன் ஆயினும் பிரியலன்-மன்னேபிரிந்து சென்றானெனினும், அவன் பிரிந்தவன் அல்லன் – உறுதியாக
  
# 40# 40
அம்ம வாழி தோழி மகிழ்நன்தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்து தன்ஒளிரும் வளையணிந்த முன்கைகளையுடைய நாம் அழும்படியாகப் பிரிந்து, தன்
பெண்டிர் ஊர் இறைகொண்டனன் என்பகாதற் கிழத்தியரின் ஊரில் நிலையாகத் தங்கிவிட்டான் என்கின்றனர் – இந்தக்
கெண்டை பாய்தர அவிழ்ந்தகெண்டை மீன்கள் தம் மீது பாய்வதால் கட்டவிழ்ந்துபோய்
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனேவண்டுகளைப் பிடித்துக்கொள்ளும் ஆம்பல் மலர்கள் நிறைந்த நாட்டிற்குரியவன் –
  
# 5 புலவி பத்து# 5 புலவி பத்து
# 41# 41
தன் பார்ப்பு தின்னும் அன்பு இல் முதலையொடுதான் ஈன்ற குட்டியையே தின்னும் அன்பற்ற முதலையோடு
வெண் பூ பொய்கைத்து அவன் ஊர் என்ப அதனால்வெண்மையான பூக்களையும் உடைய பொய்கையை உடையது தலைவனின் ஊர் என்பார்கள். அதனால்
தன் சொல் உணர்ந்தோர் மேனிதன்னுடைய சொல்லை நம்பியவரின் மேனியைப்
பொன் போல் செய்யும் ஊர் கிழவோனேபொன் போன்ற பசலை அடையச் செய்விக்கிறான் இந்த ஊருக்குச் சொந்தக்காரன்.
  
# 42# 42
மகிழ் மிக சிறப்ப மயங்கினள்-கொல்லோகள்ளுண்ட களிப்பி மிகவும் பெருகியதால் அறிவு மயங்கி இருக்கிறாளோ,
யாணர் ஊர நின் மாண் இழை அரிவைபுதுவருவாயையுடைய ஊரினனே, மாண்புடைய அணிகலன்களை அணிந்த உன் பரத்தை?
காவிரி மலிர் நிறை அன்ன நின்காவிரி ஆற்றின் பெருக்கெடுக்கும் வெள்ளம் போன்ற உன்னுடைய
மார்பு நனி விலக்கல் தொடங்கியோளேமார்பினை மிகுதியாக விலக்கத் தொடங்கினாளே!
  
# 43# 43
அம்பணத்து அன்ன யாமை ஏறிமரக்காலைப் போன்ற ஆமையின் முதுகில் ஏறி
செம்பின் அன்ன பார்ப்பு பல துஞ்சும்சிறு செம்பைப் போன்ற குஞ்சுகள் பல தூங்கும்
யாணர் ஊர நின்னினும்புதுவருவாயினையுடைய ஊரனே! உன்னைக்காட்டிலும்
பாணன் பொய்யன் பல் சூளினனேஉன்னுடைய பாணன் பொய்சொல்லுபவன்; பலவிதமாக பொய்யான சூளுரைகளைச் சொல்பவன்.
  
# 44# 44
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புஇனிய நீரையுடைய பெரிய பொய்கையிலுள்ள ஆமையின் இளமையான குஞ்சு
தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்குதன் தாயின் முகத்தைப் பார்த்தே வளர்வதைப் போல,
அதுவே ஐய நின் மார்பேஅப்படிப்பட்டது, ஐயனே! தலைவிக்கு உன் மார்பு,
அறிந்தனை ஒழுகு-மதி அறனும்-மார் அதுவேஇதனை உணர்ந்து அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வாய், நல்லொழுக்கமும் அதுவே!
  
# 45# 45
கூதிர் ஆயின் தண் கலிழ் தந்துகுளிர் காலத்தில் குளிர்ந்த கலங்கல் நீரைத் தந்து,
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்வேனில் காலத்தில் நீலமணி போன்ற நிறத்தைக் கொள்ளும்
யாறு அணிந்தன்று நின் ஊரேஆற்றினைக் கொண்டுள்ளது உனது ஊர்;
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணேஆனால் எப்போதும் பசலையைக் கொண்டுள்ளன, தலைவனே! எனது கண்கள்.
  
# 46# 46
நினக்கே அன்று அஃது எமக்கும்-மார் இனிதேஉனக்கு மட்டுமல்ல, அது எனக்குமே இனிதானதுதான்!
நின் மார்பு நயந்த நன் நுதல் அரிவைஉன் மார்பினை விரும்பிய நல்ல நெற்றியையுடைய மங்கை
வேண்டிய குறிப்பினை ஆகிவிரும்பிய குறிப்பின்படியே நீயும் நடந்து
ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லேஇங்கு நீ வந்தருளுதலை விட்டு அங்கேயே தங்கிவிடுவது –
  
# 47# 47
முள் எயிற்று பாண்_மகள் இன் கெடிறு சொரிந்தமுள்ளைப் போன்ற கூர்மையான பற்களைக் கொண்ட பாண்மகள் இனிய கெடிற்று மீனைக் கொண்டுவந்து தந்த
அகன் பெரு வட்டி நிறைய மனையோள்அகன்ற பெரிய வட்டி நிறையும்படியாக, இல்லத்தரசிகள்
அரிகால் பெரும் பயறு நிறைக்கும் ஊரநெல்லறுத்த வயலில் விளைந்த பெரும்பயற்றை நிரப்பித்தருகின்ற ஊரைச் சேர்ந்த தலைவனே!
மாண் இழை ஆயம் அறியும் நின்சிறந்த அணிகலன்கள் அணிந்த என் தோழியர் அறிவர் உன்னுடைய
பாணன் போல பல பொய்த்தல்லேபாணனைப் போல நீயும் பலவாறு பொய்கள் கூறுபவன் என்று.
  
# 48# 48
வலை வல் பாண்_மகன் வால் எயிற்று மட_மகள்வலைவீசி மீன் பிடிப்பதில் வல்ல பாண்மகனின் வெண்மையான பற்களைக் கொண்ட இளைய மகள்
வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள்வரால் மீனைக் கொண்டுவந்து தந்த வட்டியினுள் இல்லத்தரசிகள்
யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊரநெடுநாள் கழிந்த பழைய வெண்ணெல்லை நிறைத்துத்தரும் ஊரைச் சேர்ந்த தலைவனே!
வேண்டேம் பெரும நின் பரத்தைவேண்டவில்லை பெருமானே! உன்னுடைய பரத்தை
ஆண்டு செய் குறியோடு ஈண்டு நீ வரலேஅங்கு உன் மேனியில் செய்த குறிகளுடன் இங்கு நீ வருவதை –
  
# 49# 49
அம் சில் ஓதி அசை நடை பாண்_மகள்அழகிய சிலவான கூந்தலையும், அசைந்தசைந்து நடக்கும் நடையையும் கொண்ட பாண்மகள்
சில் மீன் சொரிந்து பல் நெல் பெறூஉம்சிறிதளவு மீனைக் கொண்டுவந்து தந்து பெருமளவு நெல்லைப் பெற்றுக்கொண்டு போகும்
யாணர் ஊர நின் பாண்_மகன்புதிய வருவாயைக் கொண்ட ஊரனே! உன் பாண்மகன்
யார் நலம் சிதைய பொய்க்குமோ இனியேவேறு யார் நலமெல்லாம் சிதையும்படி பொய்கூறித் திரிவானோ, இனிமேல்?
  
# 50# 50
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்உன்னைத் துணையாகக் கொண்டோரின் செல்வமும் நாங்களும் குன்றிப்போய் இருக்கிறோம்,
வஞ்சி ஓங்கிய யாணர் ஊரவஞ்சி மரங்கள் ஓங்கி வளர்ந்த புதுவருவாய் உள்ள ஊரனே!
தஞ்சம் அருளாய் நீயே நின்உன்னைத் தஞ்சம் என்று கொள்வோருக்கு அருள்செய்யமாட்டாய் நீயே! உன்
நெஞ்சம் பெற்ற இவளும்-மார் அழுமே      நெஞ்சையே வாழுமிடமாய்ப் பெற்ற இவளும் அழுகின்றாள்.