எழுதிக்கொண்டிருக்கும் நூல்கள்

1. மல்லல் மூதூர் மதுரை

இந்நூல் மதுரையைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் கொண்டுள்ளதாக எழுதப்படு வருகிறது.
வரலாற்று ஆவணங்களில் மதுரை, கல்வெட்டுகளில் மதுரை, புராண இதிகாசங்களில் மதுரை, இலக்கியங்களில் மதுரை
ஆகிய பலதலைப்புகளில் மதுரையின் வரலாறு ஆயப்படுகிறது. மதுரை நகரின் பண்டைய தோற்றமும், அதன் வளர்ச்சியும்
விரிவாக ஆயப்படுகின்றன. காலந்தோறும் மதுரை மக்களின் வாழ்க்கை முறையும் ஆயப்படுகிறது. முற்கால மதுரை,
இடைக்கால மதுரை, தற்கால மதுரை என்ற மூன்று பெரும் பிரிவுகளில் ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன.
முற்கால மதுரை ஏறக்குறைய முடியுந்தறுவாயில் உள்ளது.

2. சங்கச் சொல்வளம்

இத் தலைப்பில் மின்தமிழ் கூகுள் குழுமத்தில் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல்
அமையும். நகர்வுகள், அசைவுகள், அஞ்சுதல், உண்ணுதல், உணவுவகைகள் என்ற தலைப்பில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
மேலும் பல தலைப்புகளில் கட்டுரைகள் உருவாகி வருகின்றன. நூலின் பல இடங்களில் பொருத்தமான படங்களும் செய்திகளை
நன்கு விளக்கும் வகையில் அமைந்துள்ளன.

3. தொல்காப்பியக் கட்டுரைகள்

தொல்காப்பியத்தைப் பற்றி ஆசிரியர் பல கருத்தரங்குகளில் வாசித்தளித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மேலும் சில
கட்டுரைகள் இணைக்கப்பட்டு வருகின்றன

4. சிறுபாணன் செல்வழி – சிறுபாணாற்றுப்படை படவிளக்கவுரை

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை ஓய்மாநாட்டு நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடும்
வழியாக இயற்றப்பட்டது. இதுவும் ஒரு கட்டுரைத் தொடராக மின் தமிழ் கூகுள் குழுமத்தில் அவ்வப்போது எழுதப்பட்டுவருகிறது.

5. புறம் காட்டும் நெறிகள்

புறநானூற்றில் வாழ்வுக்குத் தேவையான நன்னெறிகள் அடங்கிய பாடல்களை, கற்பனை நிகழ்வுகளோடு விளக்கும் கட்டுரைகளின்
தொகுப்பு இது. ஆசிரியர் தனது முகநூலில் அவ்வப்போது எழுதிவரும் கட்டுரைகள் இதில் அமையும்.