சொற்பிரிப்பு மூலம் | அடிநேர் உரை |
| |
# 0 கடவுள் வாழ்த்து | # 0 கடவுள் வாழ்த்து பாரதம் பாடிய பெருந்தேவனார் |
| |
மா
நிலம் சேவடி ஆக தூ நீர் | பெரிய
நிலமே தன் செம்மையான அடியாகவும், தெளிந்த நீர் நிறைந்த |
வளை
நரல் பௌவம் உடுக்கை ஆக | சங்குகள்
முழங்கும் கடலே தனக்கு ஆடையாகவும் |
விசும்பு
மெய் ஆக திசை கை ஆக | வானமே
தனக்கு உடம்பாகவும், திசைகள் கைகள் ஆகவும் |
பசும்
கதிர் மதியமொடு சுடர் கண் ஆக | பசிய
கதிர்களையுடைய திங்களுடன், ஞாயிறு ஆகியவை கண்களாகவும் கொண்டு |
5 இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய | உலகில்
காணப்படும் எல்லாவற்றிலும் பொருந்திநின்றும் தன்னகத்தே அடக்கியும் உள்ள அவன் |
வேத
முதல்வன் என்ப | வேதங்களுக்கு
முதல்வன் என்பர் |
தீது
அற விளங்கிய திகிரியோனே | தீமைகள்
முற்றிலும் நீங்கப்பெற்ற ஆழியையுடைய முறைசெய்து காக்கும் இறையோனை. |
| |
#
1 குறிஞ்சி | #
1 குறிஞ்சி கபிலர் |
| |
நின்ற
சொல்லர் நீடு தோன்று இனியர் | நிற்கின்ற
சொல்லை உடையவர், நெடிது பழகினும் இனியவர், |
என்றும்
என் தோள் பிரிபு அறியலரே | என்றைக்கும்
எனது தோளினைப் பிரிதலை அறியார், |
தாமரை
தண் தாது ஊதி மீமிசை | தாமரைப்பூவின்
குளிர்ந்த தாதினை ஊதிக்கொண்டு, மிக்க உயரத்திலுள்ள |
சாந்தில்
தொடுத்த தீம் தேன் போல | சந்தனமரத்தில்
சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல |
5 புரைய மன்ற புரையோர் கேண்மை | மேன்மையானது
சிறந்தவர்களின் நட்பு; |
நீர்
இன்று அமையா உலகம் போல | நீர்வளம்
இன்றி அமைந்திராத உலகம் போல |
தம்
இன்று அமையா நம் நயந்து அருளி | அவர்
இன்றி அமையாத நம்மை விரும்பி அருள்செய்து |
நறு
நுதல் பசத்தல் அஞ்சி | மணக்கும்
நெற்றி பசலைகொள்ளுமோ என்று அஞ்சி |
சிறுமை
உறுபவோ செய்பு அறியலரே | சிறுமை
பயப்பனவற்றைச் செய்வாரோ? அவ்வாறு செய்தலை அறியமாட்டார். |
| |
#
2 பாலை | #
2 பாலை பெரும்பதுமனார் |
| |
அழுந்துபட
வீழ்ந்த பெரும் தண் குன்றத்து | ஆழப்
பதிந்துகிடக்கும் பெரிய குளிர்ந்த குன்றத்திலுள்ள |
ஒலி
வல் ஈந்தின் உலவை அம் காட்டு | தழைத்து
வளர்ந்த ஈத்த மரங்களையுடைய காற்று வீசும் பாலைநிலத்தில் |
ஆறு
செல் மாக்கள் சென்னி எறிந்த | வழியே
செல்லும் மக்களின் தலையைத் தாக்கியதால் |
செம்
மறு தலைய நெய்த்தோர் வாய | சிவந்து
கறையேறிய தலையையும், குருதியொழுகும் வாயையும் உடைய |
5 வல்லிய பெரும் தலை குருளை மாலை | வலிமையுடைய
பெரிய தலையினைக் கொண்ட புலிக்குட்டிகள், மாலையில் |
மான்
நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே | மானை
எதிர்நோக்கியிருக்கும் இண்டங்கொடிகள் படர்ந்த ஈங்கைப் புதர்களைக் கொண்ட
பாலைக்காட்டினில் |
வை
எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று | கூர்மையான
பற்களைக் கொண்ட மெல்லியலாளான மடந்தையை முன்னே செல்லவிட்டு |
எல்
இடை நீங்கும் இளையோன் உள்ளம் | இரவினிலே
இந்தக் காட்டைக் கடக்க எண்ணும் இளைஞனின் உள்ளம் |
காலொடு
பட்ட மாரி | காற்றோடு
கலந்த பெருமழை பெய்யும்போது |
10 மால் வரை மிளிர்க்கும் உருமினும்
கொடிதே | பெரிய
மலைப்பாறைகளை பெயர்த்துத்தள்ளும் பேரிடியினும் கொடியதாகும் |
| |
#
3 பாலை | #
3 பாலை இளங்கீரனார் |
| |
ஈன்
பருந்து உயவும் வான் பொரு நெடும் சினை | அடைகாக்கும்
பருந்து வருத்தமுடன் இருக்கும் வானத்தை முட்டும் நீண்ட கிளையினையும் |
பொரி
அரை வேம்பின் புள்ளி நீழல் | பொரிந்துபோன
அடிமரத்தையும் உடைய வேம்பின் புள்ளிபுள்ளியான நிழலில் |
கட்டளை
அன்ன வட்டு அரங்கு இழைத்து | கட்டளைக்
கல் போன்ற வட்டரங்கினை கீறிக்கொண்டு |
கல்லா
சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் | கல்லாத
சிறுவர்கள் நெல்லிக்காய்களைக் கொண்டு வட்டு ஆடும் |
5 வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர் | வில்லால்
தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட மக்களுடைய பகை முனையாகிய சிற்றூரில் |
சுரன்
முதல் வந்த உரன் மாய் மாலை | நடுவழியில்
வந்ததும், நம் வலிமையனைத்தையும் கொன்றதுமான மாலைக்காலத்தில் |
உள்ளினென்
அல்லெனோ யானே உள்ளிய | நினைத்துப்பார்த்தேன்
அல்லவா நானே? எண்ணிய |
வினை
முடித்து அன்ன இனியோள் | காரியத்தை
முடித்துவிட்ட இனிமையான உணர்வினைப் போன்ற இனியவள், |
மனை
மாண் சுடரொடு படர் பொழுது எனவே | மனைக்கு
மாட்சிதரும் விளக்கினை ஏற்றிவைத்து நம்மையும் நினைத்துப்பார்க்கும் நேரம் இது
என்று |
| |
#
4 நெய்தல் | #
4 நெய்தல் அம்மூவனார் |
| |
கானல்
அம் சிறுகுடி கடல் மேம் பரதவர் | கடற்கரைச்
சோலையிடத்தே அமைந்த அழகான சிறுகுடியில் வாழும் கடல்மேற்செல்லும் பரதவர்கள் |
நீல்
நிற புன்னை கொழு நிழல் அசைஇ | நீல
நிறப் புன்னையின் கொழுவிய நிழலில் தங்கி, |
தண்
பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி | குளிர்ந்த
பெரிய கடற்பரப்பின் பக்குவமான நிலையைப் பார்த்தபடி |
அம்
கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு | அழகிய
கண்களையுடைய முறுக்கேறிய வலைகளைக் காயவைக்கும் துறையைச் சேர்ந்தவனிடம் சென்று |
5 அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை | ஊராரின்
பழிச்சொற்களை அன்னை அறிந்தால் இங்கு சந்தித்துக்கொள்ளும் நம் வாழ்க்கை |
அரிய
ஆகும் நமக்கு என கூறின் | இனி
அரிதாகிப்போய்விடும் என்று கூறினால் |
கொண்டும்
செல்வர்-கொல் தோழி உமணர் | நம்மை
அழைத்துக்கொண்டு செல்வாரோ? தோழி! உப்பு வணிகர் |
வெண்
கல் உப்பின் கொள்ளை சாற்றி | வெள்ளைக்கல்லான
உப்பின் விலையைக் கூவிக்கூறிச்செல்வதால் |
கண
நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம் | ஆநிரைகளை
விலக்கிப் போகும் நீண்ட வரிசையான வண்டிகள் |
10 மணல் மடுத்து உரறும் ஓசை கழனி | மணலைத்
தேய்த்து எழுப்பும் பேரொலியைக் கேட்டு, வயல்வெளிகளிலுள்ள |
கரும்
கால் வெண்_குருகு வெரூஉம் | கரிய
காலையுடைய வெள்ளை நாரைகள் வெருளும் |
இரும்
கழி சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கே | கரிய
கழிசூழ்ந்த நெய்தல் நிலத்தில் உள்ள தம்முடைய வாழ்தற்கு இனிதாகிய ஊருக்கு – |
| |
#
5 குறிஞ்சி | #
5 குறிஞ்சி பெருங்குன்றூர்க்கிழார் |
| |
நிலம்
நீர் ஆர குன்றம் குழைப்ப | நிலமானது
நீரினை நிரம்பப் பெற, குன்றுகள் வளம்பெற, |
அகல்
வாய் பைம் சுனை பயிர் கால்யாப்ப | அகன்ற
வாயையுடைய பசிய சுனைகள் பயிர்களை விளைவிக்க, |
குறவர்
கொன்ற குறை கொடி நறை பவர் | குறவர்கள்
வெட்டிப்போட்டதால் குறைவுபட்ட மணக்கின்ற கொடிகள் |
நறும்
காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப | நறுமணமிக்க
வயிரம் பாய்ந்த சந்தனமரத்தைச் சுற்றிக்கொண்டு வளர, |
5 பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி | பெருமழையைப்
பொழிந்த தொழிலையுடைய மேகங்கள் |
தெற்கு
ஏர்பு இரங்கும் அற்சிர காலையும் | தெற்குப்பக்கமாய்
எழுந்து முழங்கும் முன்பனிக்காலத்திலும் |
அரிதே
காதலர் பிரிதல் இன்று செல | அரிதானதாகும்
உன் காதலர் உன்னைவிட்டுப் பிரிதல்; இன்றைக்குச் செல்லும் |
இளையர்
தரூஉம் வாடையொடு | அந்த
இளைஞரைத் தடுத்துத் திரும்பும்படி செய்யும் வாடையுடன் |
மயங்கு
இதழ் மழை கண் பயந்த தூதே | வருந்துகின்ற
இமைகளில் மழையாய் நீரைச் சிந்தும் உன் கண்கள் சொல்லிய செய்தியும். |
| |
#
6 குறிஞ்சி | #
6 குறிஞ்சி பரணர் |
| |
நீர்
வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் | நீரில்
வளரும் ஆம்பலின் உள்துளையுள்ள திரண்ட தண்டின் |
நார்
உரித்து அன்ன மதன் இல் மாமை | நாரை
உரித்தது போன்ற அழகு குறைந்த மாமைநிறத்தவளும், |
குவளை
அன்ன ஏந்து எழில் மழை கண் | குவளை
மலரைப் போன்ற ஏந்திய அழகுள்ள குளிர்ந்த கண்களையுடைவளும் |
திதலை
அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு | தேமல்
படிந்த அல்குலை உடையவளும், பெரிய தோளினையுடையவளுமாகிய தலைவியிடத்தே |
5 எய்த சென்று செப்புநர் பெறினே | கிட்டிச்
சென்று உரைப்பவாரைப் பெற்றால், |
இவர்
யார் என்குவள் அல்லள் முனாஅது | “இவர்
யார்” என்று சொல்பவள் அல்லள் அவள், முன்னர் இருக்கும் |
அத்த
குமிழின் கொடு மூக்கு விளை கனி | பாலைவழியில்
இருக்கும் குமிழமரத்தின் வளைந்த மூக்கையுடைய நன்கு விளைந்த பழம் |
எறி
மட மாற்கு வல்சி ஆகும் | துள்ளிக்குதிக்கும்
இளைய மானுக்கு உணவு ஆகும் |
வல்
வில் ஓரி கானம் நாறி | வல்வில்லோரியின்
காட்டைப் போல் மணம் மிக்க |
10 இரும் பல் ஒலிவரும் கூந்தல் | கரிய
பலவாகிய தழைத்துத் தாழ்ந்த கூந்தலாள் |
பெரும்
பேது உறுவள் யாம் வந்தனம் எனவே | பெரிதும்
வருந்துவாள் தலைவன் வந்துவிட்டுச் சென்றிருக்கிறான் என அறிந்து |
| |
#
7 பாலை | #
7 பாலை நல்வெள்ளியார் |
| |
சூர்
உடை நனம் தலை சுனை நீர் மல்க | வருத்தும்
தெய்வத்தையுடைய அகன்ற இடத்திலுள்ள சுனையின் நீர் பொங்கி வழிய |
பெரு
வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப | பெரிதான
மலையின் சரிவுகளில் அருவிகள் ஆர்த்தொலிக்க |
கல்
அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்று | கற்பாறைகளைப்
புரட்டிப்போட்டுக்கொண்டு இறங்கும் கடுமையான வரத்தினைக்கொண்ட காட்டாற்றின் |
கழை
மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப | மூங்கிற்
கழைகளை மூழ்கச்செய்யும் வெள்ளம் காட்டில் மோதி ஆரவாரிக்க, |
5 தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம் | மிக்கு
ஒலிக்கின்ற இடியோடு முழக்கமிட்டு வானம் |
இன்னே
பெய்ய மின்னுமால் தோழி | இதோ
பெய்வதற்கு மின்னுகின்றது தோழி! |
வெண்ணெல்
அருந்திய வரி நுதல் யானை | வெண்ணெல்லை
அருந்திய வரிகளைக் கொண்ட நெற்றியையுடைய யானை |
தண்
நறும் சிலம்பில் துஞ்சும் | குளிர்ந்த
நறுமணமிக்க மலைச்சாரலில் தூங்கும் |
சிறியிலை
சந்தின வாடு பெரும் காட்டே | சிறிய
இலையைக் கொண்ட சந்தனமரங்களைக்கொண்ட வாடிப்போய் நிற்கும் பெரிய காட்டினில் – |
| |
#
8 குறிஞ்சி | #
8 குறிஞ்சி கண்ணகனார் |
| |
அல்கு
படர் உழந்த அரி மதர் மழை கண் | நீங்காத
துயரத்தின்வாய்ப்பட்ட செவ்வரி படர்ந்த குளிர்ச்சியான கண்களையும், |
பல்
பூ பகை தழை நுடங்கும் அல்குல் | பல
பூக்களும் மாறுபட்ட தழைகளும் உடைய தழையாடை அசைந்தாடும் அல்குலையும் |
திரு
மணி புரையும் மேனி மடவோள் | அழகிய
நீலமணி போன்ற மேனியையும் கொண்ட இளையோளாகிய தலைவி |
யார்
மகள்-கொல் இவள் தந்தை வாழியர் | யாருடைய
மகளோ? இவளின் தந்தை வாழ்க! |
5 துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல் | துயருக்குள்
அமிழ்த்துவிட்டாள் என்னை; அகன்ற வயலில் |
அரிவனர்
அரிந்தும் தருவனர் பெற்றும் | கதிரறுப்போரால்
அறுக்கப்பட்டு, அதனைக் கொண்டுவருவோரால் கொணரப்பெற்றும் |
தண்
சேறு தாஅய மதன் உடை நோன் தாள் | குலிர்ந்த
சேறு பரவிய அழகுடைய வலிய தண்டினையுடைய |
கண்
போல் நெய்தல் போர்வில் பூக்கும் | கன்
போன்ற நெய்தல் பூ, நெற்போரில் பூத்திருக்கும் |
திண்
தேர் பொறையன் தொண்டி | திண்ணிய
தேரைக்கொண்ட பொறையனின் தொண்டிப் பட்டினத்துச் |
10 தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே | சிறப்பெல்லாம்
பெறுக இவளை ஈன்ற தாய். |
| |
#
9 பாலை | #
9 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ |
| |
அழிவு
இலர் முயலும் ஆர்வ மாக்கள் | ஊக்கம்
குன்றாதவராய் முயல்கின்ற ஆர்வம் மிக்க மக்கள் |
வழிபடு
தெய்வம் கண் கண்டு ஆஅங்கு | தாம்
வழிபடுகின்ற தெய்வத்தை நேரில் கண்டதைப் போல் |
அலமரல்
வருத்தம் தீர யாழ நின் | மனத்தைச்
சுழற்றும் வருத்தம் தீர, உன்னுடைய |
நல
மென் பணை தோள் எய்தினம் ஆகலின் | நலம்
மிக்க மென்மையான மூங்கில்போன்ற தோள்களைப் பெற்றோமாதலின் |
5 பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி | பொரிப்பொரியான
பூக்களைக்கொண்ட புன்கமரத்தின் நெருப்பின் தன்மைத்தான ஒள்ளிய தளிரை |
சுணங்கு
அணி வன முலை அணங்கு கொள திமிரி | அழகுத்தேமல்
பரந்த அழகிய முலைகளில் பொருந்தத் தேய்த்து |
நிழல்
காண்-தோறும் நெடிய வைகி | நிழல்
கண்டவிடமெல்லாம் நெடுநேரம் தங்கி, |
மணல்
காண்-தோறும் வண்டல் தைஇ | மணல்
கண்டவிடமெல்லாம் சிறுவீடுகட்டி மகிழ்ந்து விளையாடி |
வருந்தாது
ஏகு-மதி வால் எயிற்றோயே | வருத்தமில்லாமல்
செல்வாய், வெண்மையான பற்களையுடையவளே! |
10 மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் | மாமரத்தின்
அரும்புகளைக் கோதிவிட்டு மகிழ்ந்து குயில்கள் கூவித் திரியும் |
நறும்
தண் பொழில கானம் | மணமிக்க
குளிர்ந்த சோலைகளையுடையன இக் காடுகள்; |
குறும்
பல் ஊர யாம் செல்லும் ஆறே | பல
சிற்றூர்களையும் உடையது நாம் செல்லும் இந்த வழி. |
| |
#
10 பாலை | #
10 பாலை குடவாயிற் கீரத்தனார் |
| |
அண்ணாந்து
ஏந்திய வன முலை தளரினும் | நிமிர்ந்து
உயர்ந்த அழகிய முலைகள் தளர்ச்சியுற்றுப்போனாலும் |
பொன்
நேர் மேனி மணியின் தாழ்ந்த | பொன்னைப்
போன்ற மேனியில் நீலமணிபோலும் தாழ்ந்த |
நன்
நெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும் | நல்ல
நெடிய கூந்தல் நரையோடு முடியப்பெற்றாலும் |
நீத்தல்
ஓம்பு-மதி பூ கேழ் ஊர | கைவிடுதலைக்
காப்பாயாக! பூக்கள் ஒளிறும் ஊரையுடையவனே! |
5 இன் கடும் கள்ளின் இழை அணி நெடும் தேர் | இனிய
கடுக்கின்ற கள்ளினையும், அணிகலன்கள் பூட்டப்பெற்ற நெடிய தேரையும் கொண்ட |
கொற்ற
சோழர் கொங்கர் பணீஇயர் | வெற்றியையுடைய
சோழர்கள் கொங்குநாட்டாரைப் பணியச் செய்வதற்காக |
வெண்
கோட்டு யானை போஒர் கிழவோன் | வெண்மையான
கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட போர் என்ற ஊருக்குரியவனான |
பழையன்
வேல் வாய்த்து அன்ன நின் | பழையன்
என்பானை ஏவ, அவனது வேற்படை பொய்க்காமல் வெற்றிபெற்றதுபோல உன்னுடைய |
பிழையா
நன் மொழி தேறிய இவட்கே | பொய்க்காத
நல்ல சொற்களை நம்பிய இவளை – |
| |
#
11 நெய்தல் | #
11 நெய்தல் உலோச்சனார் |
| |
பெய்யாது
வைகிய கோதை போல | தலையில்
சூடாமல் கீழே கிடக்கும் மாலையைப் போல |
மெய்
சாயினை அவர் செய் குறி பிழைப்ப | மேனி
வாடிப்போனாய்! காதலர் குறித்த இடத்தில் வராமற்போனதினால்; |
உள்ளி
நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் | அயலார்
கூறும் அலர் உரைகளை நினைத்து, நிச்சயமாக |
வாரார்
என்னும் புலவி உட்கொளல் | அவர்
வரமாட்டார் என்ற பிணக்கத்தைக் கொள்வதை |
5 ஒழிக மாள நின் நெஞ்சத்தானே | ஒழிப்பாயாக,
உனது நெஞ்சத்தில்; |
புணரி
பொருத பூ மணல் அடைகரை | அலைகள்
மோதிய குறுமணல் அடைந்துகிடக்கும் கரையினில் |
ஆழி
மருங்கின் அலவன் ஓம்பி | சக்கரத்தின்
கீழ் நண்டுகள் சிக்கிக்கொள்வதைத் தவிர்த்து |
வலவன்
வள்பு ஆய்ந்து ஊர | பாகன்
தன் கடிவாளத்தை ஆய்ந்து செலுத்தும் அளவுக்கு |
நிலவு
விரிந்தன்றால் கானலானே | நிலவொளியும்
பரந்துள்ளது இக் கடற்கரைச் சோலையில் |
மேல் | |
#
12 பாலை | #
12 பாலை கயமனார் |
| |
விளம்பழம்
கமழும் கமம் சூல் குழிசி | விளாம்பழம்
கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில் |
பாசம்
தின்ற தேய் கால் மத்தம் | தயிறு
கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின் |
நெய்
தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் | வெண்ணெய்
தோன்றச் சுழலும் சுழற்சியால் தறியின் அடிப்பகுதி முழக்கமிடும் |
வைகு
புலர் விடியல் மெய் கரந்து தன் கால் | இரவில்
தங்கியிருந்த இருள் நீங்கிய விடியற்காலத்தே, தன்னை ஒளித்துக்கொண்டு, தனது காலின் |
5 அரி அமை சிலம்பு கழீஇ பன் மாண் | பரற்கற்கள்
நிறைந்த சிலம்புகளைக் கழற்றி, பலவிதங்களில் சிறந்த |
வரி
புனை பந்தொடு வைஇய செல்வோள் | வரிகளால்
புனையப்பட்ட பந்தோடு வைப்பதற்காகச் செல்கின்றவள், |
இவை
காண்-தோறும் நோவர் மாதோ | “இவற்றைக்
காணும்போதெல்லாம் வருந்துவார் அன்றோ! |
அளியரோ
அளியர் என் ஆயத்தோர் என | பெரிதும்
இரங்கத்தக்கவர் என் தோழியர்” என்று |
நும்மொடு
வரவு தான் அயரவும் | காதலனாகிய
உன்னோடு செல்லுதல் மேற்கொள்ளவும் |
10 தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே | தன்னால்
கட்டுப்படுத்த முடியாதபடி கலங்கி அழுதன அவளது கண்கள். |
| |
#
13 குறிஞ்சி | #
13 குறிஞ்சி கபிலர் |
| |
எழாஅ
ஆகலின் எழில் நலம் தொலைய | எழமாட்டேனென்கிறாய்,
அவ்வாறிருப்பினும் உன் அழகிய நலமெல்லாம் கெடும்படியாக |
அழாஅதீமோ
நொதுமலர் தலையே | அழாமலிருப்பாயாக!
இது அயலார் இருக்குமிடம்; |
ஏனல்
காவலர் மா வீழ்த்து பறித்த | தினைப்
புனக் காவலர் காட்டுப்பன்றியை வீழ்த்திவிட்டுப் பறித்த |
பகழி
அன்ன சே அரி மழை கண் | அம்பினைப்
போன்ற சிவந்த வரிகளையுடைய குளிர்ச்சியான கண்களையும் |
5 நல்ல பெரும் தோளோயே கொல்லன் | நல்ல
பெரிய தோள்கள்களையும் உடையவளே! பொற்கொல்லன் |
எறி
பொன் பிதிரின் சிறு பல தாஅய் | ஊதும்போது
தெறிக்கும் பொன்போன்ற தீப்பொறிபோல சிறியவாகவும் பலவாகவும் பரவிவிழும் |
வேங்கை
வீ உகும் ஓங்கு மலை கட்சி | வேங்கைமரத்தின்
பூக்கள் உதிர்கின்ற உயர்ந்த மலையில் தங்கும் |
மயில்
அறிபு அறியா-மன்னோ | மயில்
பார்த்துக்கொண்டிருப்பதை அறியாத |
பயில்
குரல் கவரும் பைம் புற கிளியே | நெருங்கிய
தினைக்கதிர்களைக் கவரும் பசிய முதுகினைக் கொண்ட கிளிகளை ஓட்ட – |
| |
#
14 பாலை | #
14 பாலை மாமூலனார் |
| |
தொல்
கவின் தொலைய தோள் நலம் சாஅய | எமது
பழைய கவின் தொலைய, எமது தோளின் நலமெல்லாம் அழிந்துபோக |
நல்கார்
நீத்தனர் ஆயினும் நல்குவர் | எமக்கு
அருளாராய் எம்மை விட்டு நீங்கினர்; எனினும் அருள்செய்வார் |
நட்டனர்
வாழி தோழி குட்டுவன் | நம்மீது
நட்புக்கொண்டோர்!, வாழ்க தோழியே! குட்டுவனின் |
அகப்பா
அழிய நூறி செம்பியன் | அகப்பா
என்னும் ஊர் அழிய இடித்தழித்து செம்பியன் |
5 பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது | பகலில்
தீயை மூட்டிய ஆரவாரத்திலும் மிகப் பெரிதாக |
அலர்
எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து | ஊரார்
பழிச்சொல் எழும்படி சென்றுவிட்டாரெனினும், மலர்கள் தலைகவிழ்ந்து |
மா
மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் | பெரிதான
மடல்கள் விரிந்த காந்தள் செடிகளையுடைய அழகிய சாரலில் |
இனம்
சால் வய களிறு பாந்தள் பட்டு என | தம்
இனத்தில் உயர்ந்த வலிமையான ஆண்யானை மலைப்பாம்பின் வாயில் சிக்கியதாக |
துஞ்சா
துயரத்து அஞ்சு பிடி பூசல் | நீங்காத
துயரத்துடன் அச்சங்கொண்ட பெண்யானையின் ஓலம் |
10 நெடு வரை விடர்_அகத்து இயம்பும் | நீண்ட
மலையின் குகைகளிலே எதிரொலிக்கும் |
கடு
மான் புல்லிய காடு இறந்தோரே | கடிதாகச்
செல்லும் குதிரையையுடைய புல்லி என்பானது வேங்கடமலையைக் கடந்து சென்றவர் – |
| |
#
15 நெய்தல் | #
15 நெய்தல் பாண்டியன் அறிவுடை நம்பி |
| |
முழங்கு
திரை கொழீஇய மூரி எக்கர் | முழங்குகின்ற
கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிதான மணல்மேடு |
நுணங்கு
துகில் நுடக்கம் போல கணம்_கொள | காற்றால்
ஆடும் துகிலின் வளைவுகள் போலப் பெருமளவில் உருவாகும்படி |
ஊதை
தூற்றும் உரவு நீர் சேர்ப்ப | ஊதைக்காற்று
தூவிவிடும் ஓயாது இயங்கும் கடற்கரைத் தலைவனே! |
பூவின்
அன்ன நலம் புதிது உண்டு | பூவைப்
போன்ற என் பெண்மைநலத்தைப் புதிதாக நுகர்ந்து |
5 நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே | நீ
என்னுடன் சேர்ந்திருந்ததைப் போல் இப்போது நான் இல்லாததினால், நான் |
நேர்பு
உடை நெஞ்சம் தாங்க தாங்கி | செம்மைப்பண்பினையுடைய
எனது நெஞ்சம் தாங்குமளவுக்குத் தாங்கி, |
மாசு
இல் கற்பின் மடவோள் குழவி | குற்றமற்ற
கற்பினையுடைய இளையவள் ஒருத்தி தன் குழந்தையைப் |
பேஎய்
வாங்க கைவிட்டு ஆங்கு | பேய்
கைப்பற்றப் பறிகொடுத்ததைப் போல |
சேணும்
எம்மொடு வந்த | நெடுங்காலம்
எம்மோடிருந்த |
10 நாணும் விட்டேம் அலர்க இ ஊரே | நாணத்தைக்
கைவிட்டேன், அலர் எழுவதாக இந்த ஊரில் |
| |
#
16 பாலை | #
16 பாலை சிறைக்குடி ஆந்தையார் |
| |
புணரின்
புணராது பொருளே பொருள்_வயின் | தலைவியோடு
சேர்ந்திருந்தால் நம்மைச் சேராது பொருள்; பொருள் தேடப் |
பிரியின்
புணராது புணர்வே ஆயிடை | பிரிந்துசென்றால்
நம்மைச் சேராது தலைவியின் கூட்டம்; இந்த இரண்டில், |
செல்லினும்
செல்லாய் ஆயினும் நல்லதற்கு | பிரிந்து
சென்றாலும் செல்லாவிட்டாலும் எனக்கு நல்லது செய்வதற்கே |
உரியை
வாழி என் நெஞ்சே பொருளே | நீ
உரியையாவாய் வாழ்க என் நெஞ்சமே! பொருளும் |
5 வாடா பூவின் பொய்கை நாப்பண் | வாடாத
பூவையுடைய பொய்கையின் நடுவில் |
ஓடு
மீன் வழியின் கெடுவ யானே | நீரைக்
கிழித்தோடும் மீனின் தடம் மறைந்து அழிவதைப் போலக் கெட்டுப்போகும்; நானும் |
விழு
நீர் வியல்_அகம் தூணி ஆக | விழுமிய
கடல்சூழ்ந்த இந்த அகன்ற உலகத்தையே அளக்கும் கருவியாகக் கொண்டு |
எழு
மாண் அளக்கும் விழு நெதி பெறினும் | அந்த
அளவில் ஏழு அளவு பெறுமான விழுமிய நிதியைப் பெற்றாலும் |
கனம்
குழைக்கு அமர்த்த சே அரி மழை கண் | பொன்குழைகளோடு
மாறுபட்ட சிவந்த வரிகளைக் கொண்ட குளிர்ச்சியான கண்களின் |
10 அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென் | விருப்பமுடனான
இனிதான பார்வையினால் வெல்லப்பட்டேன்; |
எனைய
ஆகுக வாழிய பொருளே | பொருள்
எத்தன்மையதாயினும் ஆகுக; யாரிடமாவது வாழ்ந்துவிட்டுப்போகட்டும் அந்தப் பொருள். |
| |
#
17 குறிஞ்சி | #
17 குறிஞ்சி நொச்சி நியமங்கிழார் |
| |
நாள்_மழை
தலைஇய நன் நெடும் குன்றத்து | விடியற்காலத்தில்
மழை பெய்த நல்ல நெடிய குன்றத்தில் |
மால்
கடல் திரையின் இழிதரும் அருவி | கரிய
கடலின் அலையைப் போல வீழ்கின்ற அருவியையுடைய |
அகல்
இரும் கானத்து அல்கு அணி நோக்கி | அகன்ற
பெரிய கானத்தின் உறைந்திருக்கும் அழகை நோக்கி |
தாங்கவும்
தகைவரை நில்லா நீர் சுழல்பு | அடக்கவும்,
அடக்கும் எல்லைக்குள் நில்லாமல் நீர் பெருகி |
5 ஏந்து எழில் மழை கண் கலுழ்தலின் அன்னை | மிகுந்த
அழகினைக் கொண்ட குளிர்ச்சியான கண்கள் கலங்கி அழுதலால், என் அன்னை |
எவன்
செய்தனையோ நின் இலங்கு எயிறு_உண்கு என | எதனால்
அழுகின்றாய்? உனது ஒளிறும் பற்களுள்ள வாயை முத்தமிடுவேன் என்று |
மெல்லிய
இனிய கூறலின் வல் விரைந்து | மென்மையான
இனிய சொற்களைக் கூறப்போக, மிக வேகமாக, |
உயிரினும்
சிறந்த நாணும் நனி மறந்து | உயிரினும்
சிறந்த நாணத்தை அறவே மறந்து |
உரைத்தல்
உய்ந்தனனே தோழி சாரல் | சொல்லப்போய்
நிறுத்திவிட்டேன் தோழி! மலைச் சாரலில் |
10 காந்தள் ஊதிய மணி நிற தும்பி | காந்தள்
மலரை ஊதிய நீல மணி போன்ற தும்பி |
தீம்
தொடை நரம்பின் இமிரும் | இனிதாகத்
தொடுக்கப்பட்ட நரம்பினைக் கொண்ட யாழைப்போல ஒலிக்கும் |
வான்
தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே | வானத்தைத்
தொடும் மலைநாட்டினனின் மார்பு என்னை வருத்தியது என்று – |
| |
#
18 பாலை | #
18 பாலை பொய்கையார் |
| |
பருவரல்
நெஞ்சமொடு பல் படர் அகல | வருத்தப்படும்
உள்ளத்திலிருக்கும் பலவாகிய கவலை நீங்கும்படி |
வருவர்
வாழி தோழி மூவன் | வந்துவிடுவார்,
வாழ்க தோழியே! மூவன் என்பானின் |
முழு
வலி முள் எயிறு அழுத்திய கதவின் | முழு
வலிமை கொண்ட முள் போன்ற பற்களைப் பிடுங்கி அழுத்திவைத்த கதவினைக் கொண்ட |
கானல்
அம் தொண்டி பொருநன் வென் வேல் | கடற்கரைச்
சோலையைக் கொண்ட தொண்டியின் தலைவனான, வெல்லும் வேற்படையையுடைய |
5 தெறல் அரும் தானை பொறையன் பாசறை | கடத்தற்கரிய
சேனையையுடைய பொறையன் என்பானின் பாசறையில் இருக்கும் |
நெஞ்சு
நடுக்கு_உறூஉம் துஞ்சா மறவர் | நெஞ்சு
நடுக்கங்கொண்டதினால் தூங்காத வீரர்கள் |
திரை
தபு கடலின் இனிது கண்படுப்ப | அலைகள்
ஓய்ந்த கடலைப் போல இனிதாகத் துயிலுமாறு |
கடாஅம்
கழீஇய கதன் அடங்கு யானை | மதம்
குறைந்த சினம் தணிந்த யானையின் |
தடாஅ
நிலை ஒரு கோட்டு அன்ன | பெரிதாய்
நிலைத்துள்ள ஒரு கொம்பினைப் போன்று |
10 ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே | ஒன்றாக
ஒளிறும் அருவியையுடைய குன்றைக் கடந்து என்றோர் – |
| |
#
19 நெய்தல் | #
19 நெய்தல் நக்கண்ணையார் |
| |
இறவு
புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் | இறாலின்
முதுகைப் போன்ற சொரசொரப்பு வாய்ந்த அகன்ற அடியினைக்கொண்ட |
சுறவு
கோட்டு அன்ன முள் இலை தாழை | சுறாமீனின்
கூரிய கொம்பைப் போன்ற முட்களைக் கொண்ட இலையையுடைய தாழையின் |
பெரும்
களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு | பெரிய
களிற்றின் தந்தத்தைப் போன்ற அரும்புகள் முதிர்ந்து |
நன்
மான் உழையின் வேறுபட தோன்றி | நல்ல
உழைமானின் சாய்ந்த கழுத்தைப் போல மாறுபடத் தோன்றி |
5 விழவு_களம் கமழும் உரவு நீர் சேர்ப்ப | விழாக்கொண்டாடும்
களத்தைப் போன்று மணக்கும் வலிமைவாய்ந்த கடலைச் சேர்ந்த தலைவனே! |
இன
மணி நெடும் தேர் பாகன் இயக்க | வரிசையான
மணிகள் கொண்ட நெடிய தேரினை அதன் பாகன் இயக்க |
செலீஇய
சேறி ஆயின் இவளே | சென்று
உனது ஊரை அடைவாய், இருப்பினும், இங்கிருக்கும் தலைவி |
வருவை
ஆகிய சில் நாள் | நீ
மீண்டும் வருவதற்கிடையுள்ள சில நாட்களும் |
வாழாள்
ஆதல் நற்கு அறிந்தனை சென்மே | வாழமாட்டாள்
என்பதனை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக! |
| |
#
20 மருதம் | #
20 மருதம் ஓரம்போகியார் |
| |
ஐய
குறு_மகள் கண்டிகும் வைகி | ஐயனே!
ஓர் இளையவளைக் கண்டேன்; நேற்று இரவில் கிடந்து |
மகிழ்நன்
மார்பில் துஞ்சி அவிழ் இணர் | தலைவனின்
மார்பில் துயின்று, மலர்ந்த கொத்துக்களையுடைய |
தேம்
பாய் மராஅம் கமழும் கூந்தல் | தேன்
ஒழுகும் மராமரத்தின் பூக்கள் மணக்கும் கூந்தலானது |
துளங்கு
இயல் அசைவர கலிங்கம் துயல்வர | வலமிடமாய்
அசைய, கட்டியிருந்த ஆடை முன்னும் பின்னும் ஆட, |
5 செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில் | செறிவான
வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசி, தெருவில் |
பூ
போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி | பூப்போன்ற
மையுண்ட கண்கள் சுழலப் பார்த்துக்கொண்டே |
சென்றனள்
வாழிய மடந்தை நுண் பல் | நடந்து
சென்றாள், வாழ்க அந்தப் பெண்! நுண்மையான பல |
சுணங்கு
அணிவு_உற்ற விளங்கு பூணள் | அழகுத்தேமல்
படர்ந்து ஒளிவிடும் பூண்களை அணிந்த, |
மார்பு
உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை | மார்பு
முயக்குதலால் நெறிப்புண்டு உதிர்ந்த பூந்தளிர்களையுடைய, |
10 பழம் பிணி வைகிய தோள் இணை | காதலன்
பிரிவு என்னும் பழைய துயரம் தங்கிய இரண்டு தோள்களையுடைய, |
குழைந்த
கோதை கொடி முயங்கலளே | குழைந்த
மாலையினையும் உடைய கொடி போன்ற அவள்தான் உன்னைத் தழுவினள் போலும்! |
| |
#
21 முல்லை | #
21 முல்லை மருதனிள நாகனார் |
| |
விரை
பரி வருந்திய வீங்கு செலல் இளையர் | விரைந்த
ஓட்டத்தினால் வருந்திய நெடுந்தொலைவு பயணம்செய்த படைமறவர் |
அரை
செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ | இடுப்பில்
கட்டிய கச்சையை அவிழ்த்துவிட்டுத் தங்கியவாறு |
வேண்டு
அமர் நடையர் மென்மெல வருக | வேண்டிய
விருப்பமுடைய நடையினராய் மெல்லமெல்ல வரட்டும்; |
தீண்டா
வை முள் தீண்டி நாம் செலற்கு | இதுவரை
தீண்டாத கூரிய முள்ளையுள்ள சாட்டைக்கோலால் தீண்டி நாம் செல்வதற்கு |
5 ஏ-மதி வலவ தேரே உது காண் | விரைந்து
செலுத்துவாயாக! வலவனே! தேரினை, இங்கே பார்! |
உருக்கு_உறு
நறு நெய் பால் விதிர்த்து அன்ன | உருக்கிய
நறுமணமுள்ள நெய்யில் பாலைத் தெளித்தாற்போல் |
அரி
குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி | அரித்தெழும்
குரலையுடைய தொண்டையினைக் கொண்ட அழகிய நுண்ணிய பலவான பொறிகளைக் கொண்ட |
காமரு
தகைய கான வாரணம் | காண்போர்
விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல் |
பெயல்
நீர் போகிய வியல் நெடும் புறவில் | மழை
நீர் ஓடிய அகன்ற நெடிய முல்லைக்காட்டில் |
10 புலரா ஈர் மணல் மலிர கெண்டி | புலராத
ஈர மணலை நன்றாகக் கிளறி |
நாள்_இரை
கவர மாட்டி தன் | அன்றைய
நாளுக்குரிய இரையை அலகினால் பற்றிக் கொன்று |
பேடை
நோக்கிய பெரும் தகு நிலையே | தன்
பெடையை நோக்குகின்ற பெருமை வாய்ந்த நிலையினை – |
| |
#
22 குறிஞ்சி | #
22 குறிஞ்சி நல்வேட்டனார் |
| |
கொடிச்சி
காக்கும் அடுக்கல் பைம் தினை | குறமகள்
காக்கும் மலைச் சரிவிலுள்ள பசிய தினையின் |
முந்து
விளை பெரும் குரல் கொண்ட மந்தி | முதலில்
விளைந்த பெரிய கதிரினைக் கவர்ந்துகொண்ட பெண்குரங்கு |
கல்லா
கடுவனொடு நல் வரை ஏறி | அவ்வாறு
பறிப்பதை அறியாத ஆண்குரங்கோடு நல்ல மலையில் ஏறி |
அங்கை
நிறைய ஞெமிடி கொண்டு தன் | உள்ளங்கை
நிறையக் கசக்கித் தன் கையிலே கொண்டு, தன்னுடைய |
5 திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கி | சுருக்கம்விழுந்த
கன்னத்து மயிர்களையுடைய வளைந்த உள்வாய் நிறைய அமுக்கிக்கொண்டு |
வான்
பெயல் நனைந்த புறத்த நோன்பியர் | வானிலிருந்து
விழுகின்ற மழையில் நனைந்த முதுகினையுடையவாய், நோன்பிருப்போர் |
கை
ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் | கையில்
வாங்கிய உணவுடன் குந்தி இருப்பதைப் போல காட்சியளிக்கும் நாட்டையுடையவன் |
வந்தனன்
வாழி தோழி உலகம் | வந்துவிட்டான்,
வாழ்க தோழியே! உலகமானது |
கயம்
கண் அற்ற பைது அறு காலை | குளங்கள்
காய்ந்துபோகுமாறு பசுமை நீங்கிய பொழுது |
10 பீளொடு திரங்கிய நெல்லிற்கு | இளங்கதிர்களோடு
வாடிப்போன நெல்லுக்கு |
நள்ளென்
யாமத்து மழை பொழிந்து ஆங்கே | நள்ளென்ற
நடுஇரவில் மழை பொழிந்தது போல – |
| |
#
23 குறிஞ்சி | #
23 குறிஞ்சி கணக்காயனார் |
| |
தொடி
பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே | வளைகள்,
மேலே செறிக்கபட்டதால், பழிச்சொற்களை மறைக்க, தோள்கள் பழிநீங்கப்பெற்றன; |
வடி
கொள் கூழை ஆயமோடு ஆடலின் | வாரி
முடித்த கூந்தலையுடையவள் தோழியரோடு ஆடியதால் |
இடிப்பு
மெய்யது ஒன்று உடைத்தே கடி கொள | களைப்பும்
மேனியில் தெரிவதற்குக் காரணம் ஒன்று உடைத்தானது; காவல் மிகுந்து |
அன்னை
காக்கும் தொல் நலம் சிதைய | அன்னை
காக்கும் பழைய பெண்மைநலம் சிதையும்படி |
5 காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு
நீர் | காணுந்தொறும்
அழுதலல்லாமலும், நெருங்கிய நீர்மிக்க |
முத்து
படு பரப்பின் கொற்கை முன்துறை | முத்துக்கள்
விளையும் கடற்பரப்பினையுடைய கொற்கை நகரத்துத் துறையின் முன் |
சிறு
பாசடைய செப்பு ஊர் நெய்தல் | சிறிய
பசிய இலைகளைக் கொண்ட செப்பம் அமைந்த நெய்தலின் |
தெண்
நீர் மலரின் தொலைந்த | தெளிந்த
நீரிலுள்ள மலர் போல அழகுகுலைந்தன |
கண்ணே
காமம் கரப்பு அரியவ்வே | கண்களே;
காமத்தை மறைப்பது அரியது. |
| |
#
24 பாலை | #
24 பாலை கணக்காயனார் |
| |
பார்
பக வீழ்ந்த வேர் உடை விழு கோட்டு | நிலம்
பிளவுபட கீழ்ச்சென்ற வேர்களையுடைய பெரிய கிளைகளையும் |
உடும்பு
அடைந்து அன்ன நெடும் பொரி விளவின் | உடும்பு
அடைந்துகிடந்ததைப் போன்ற நெடிய செதில்களையுமுடைய விளாமரத்திலிருந்து |
ஆட்டு
ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு | ஆட்டம்
முடிந்த பந்து போல கிளையில் ஒட்டிய காம்பு அற்றுப்போய் |
கம்பலத்து
அன்ன பைம் பயிர் தாஅம் | கம்பலத்தை
விரித்தாற்போன்ற பசிய பயிர்மீது பரந்துகிடக்கும் |
5 வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை | விளாம்பழங்களையே
உணவாகக் கொண்ட வேற்று நாட்டு அரிய வழியில் |
சேறும்
நாம் என சொல்ல சே_இழை | செல்வேன்
நான் என்று தலைவன் சொல்ல, சிவந்த இழைகளை அணிந்தவளே! |
நன்று
என புரிந்தோய் நன்று செய்தனையே | நல்லது
என்று விரும்பினாய்! நல்லதையே செய்தாய்! |
செயல்படு
மனத்தர் செய்_பொருட்கு | செயல்புரிவதையே
நினைத்தவராய் ஈட்டுதற்குரிய பொருளுக்காகப் |
அகல்வர்
ஆடவர் அது அதன் பண்பே | பிரிந்து
செல்வர் ஆடவர்; அவ்வாறு செல்லவைப்பது அந்தப் பொருளின் பண்பாகும் |
| |
#
25 குறிஞ்சி | #
25 குறிஞ்சி பேரிசாத்தனார் |
| |
அம்
வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன | அழகிய
சங்கின் முதுகில் அரக்கைத் தேய்த்தது போல |
செம்
வரி இதழ சேண் நாறு பிடவின் | சிவந்த
வரிகளைக் கொண்ட இதழ்களையுடைய நெடுந்தொலைவுக்கும் மணக்கும் பிடவமலர்களின் |
நறும்
தாது ஆடிய தும்பி பசும் கேழ் | மணமிக்க
தாதுக்களில் அளைந்து ஆடிய தும்பி, பசிய நிறத்தையுடைய |
பொன்
உரை கல்லின் நன் நிறம் பெறூஉம் | பொன்னை
உரைத்துப்பார்க்கும் கல்லைப் போன்று நல்ல நிறத்தைப் பெறும் |
5 வள மலை நாடன் நெருநல் நம்மொடு | வளமிக்க
மலைநாட்டினன் நேற்று நம்மோடு |
கிளை
மலி சிறுதினை கிளி கடிந்து அசைஇ | கிளைத்தல்
மிகுந்த சிறுதினையில் வந்து விழும் கிளிகளை ஓட்டிக்கொண்டு தங்கியிருந்தவன் |
சொல்_இடம்
பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது | தன்
குறையைக் கூறுவதற்கேற்ற வாய்ப்பினைப் பெறாதவனாகி அகன்று போனான், அப்படிச்
சென்றது |
அல்லல்
அன்று அது காதல் அம் தோழி | நமக்குத்
துன்பம் தருவதன்று, அன்புடைய தோழியே! |
தாது
உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா | தேனை
உண்ணும் வேட்கையினால் மலரின் தன்மையை ஆராயாமல் போய் விழுகின்ற |
10 வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி | வண்டின்
ஒரு தன்மையை ஒத்த அவனது கெடாத காட்சியைக் |
கண்டும்
கழல் தொடி வலித்த என் | கண்டும்
கழன்றுபோன வளையல்களை மீண்டும் செறித்துக்கொண்ட எனது |
பண்பு
இல் செய்தி நினைப்பு ஆகின்றே | பண்பற்ற
செய்கை என்னில் நினைப்பாகவே இருக்கின்றது. |
| |
#
26 பாலை | #
26 பாலை சாத்தந்தையார் |
| |
நோகோ
யானே நெகிழ்ந்தன வளையே | நோகின்றேன்
நான்! நெகிழ்ந்தன வளையைகள்! |
செவ்வி
சேர்ந்த புள்ளி வெள் அரை | செம்மண்
பூச்சுடைய புள்ளிகளைக் கொண்ட வெள்ளிய அடிப்பாகத்தையுடைய |
விண்டு
புரையும் புணர் நிலை நெடும் கூட்டு | மலைக்
குன்றுகளை ஒத்து, அடுத்தடுத்து நிற்கும் நெடிய நெற்கூடுகளில் இருக்கும் |
பிண்ட
நெல்லின் தாய் மனை ஒழிய | நிறைந்த
நெல்லையுடைய தாய்வீட்டை விட்டு, |
5 சுடர் முழுது எறிப்ப திரங்கி செழும்
காய் | ஞாயிறு
முற்றவும் எரிக்க, வாடிப்போன செழுமையான காய்களைக் கொண்ட |
முட
முதிர் பலவின் அத்தம் நும்மொடு | வளைந்து
முதிர்ந்த பலாமரங்கள் நிற்கும் காட்டுவழியில் உம்மோடு |
கெடு
துணை ஆகிய தவறோ வை எயிற்று | கேடுகாலத்துத்
துணையாகி இவள் வந்தது தவறோ? கூர்மையான பற்களையும், |
பொன்
பொதிந்து அன்ன சுணங்கின் | பொன்னைப்
பொதிந்தாற்போன்ற தேமல்புள்ளிகளையும், |
இரும்
சூழ் ஓதி பெரும் தோளாட்கே | கரிய
சூழ்ந்த கூந்தலையும் கொண்ட பெரிய தோள்களையுடைவளுக்காக – |
| |
#
27 நெய்தல் | #
27 நெய்தல் குடவாயிற் கீரத்தனார் |
| |
நீயும்
யானும் நெருநல் பூவின் | நீயும்
நானும் நேற்று பூக்களில் உள்ள |
நுண்
தாது உறைக்கும் வண்டு_இனம் ஓப்பி | நுண்ணிய
தாதுக்களில் திளைக்கும் வண்டுகளை ஓட்டி |
ஒழி
திரை வரித்த வெண் மணல் அடைகரை | மோதி
அழியும் அலைகள் குவித்த வெள்ளிய மணலைக் கொண்டு அடைத்த கரையினில் உள்ள |
கழி
சூழ் கானல் ஆடியது அன்றி | கழியினைச்
சூழ இருக்கும் கடற்கரைச் சோலையில் ஆடியது அன்றி |
5 கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு
எனின் | மறைவாக
நாம் செய்தது ஒன்றும் இல்லை; அப்படி ஒன்று இருந்தாலும் |
பரந்து
பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும் | அது
பரவி, பிறரும் அதை அறியவும் இல்லை; பெரிதாக |
எவன்
குறித்தனள்-கொல் அன்னை கயம்-தோறு | எதனை
எண்ணிக்கொண்டிருக்கிறாள் நம் அன்னை? பொய்கைகள்தோறும் |
இற
ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம் | இறால்
மீனை நிரம்ப உண்ட குருகுகள் ஒலிக்க, சுறாமீன்கள் |
கழி
சேர் மருங்கின் கணை கால் நீடி | கழிகளில்
சேர்ந்திருக்கும் பக்கங்களில் கணைபோன்ற தண்டுகள் நீண்டு |
10 கண் போல் பூத்தமை கண்டு நுண் பல | கண்
போன்று பூத்திருத்தலைக் கண்டு , நுண்ணிய பல |
சிறு
பாசடைய நெய்தல் | சிறிய
பசிய இலைகளையுடைய நெய்தல் பூக்களைப் |
குறுமோ
சென்று என கூறாதோளே | பறிக்கச்
செல்லுங்கள் என்று கூறாதிருக்கிறாளே! |
| |
#
28 பாலை | #
28 பாலை முதுகூற்றனார் |
| |
என்
கை கொண்டு தன் கண் ஒற்றியும் | என்
கையைக் கொண்டு தன் கண்களை ஒற்றிக்கொண்டும், |
தன்
கை கொண்டு என் நன் நுதல் நீவியும் | தன்
கைகளைக் கொண்டு என்னுடைய நல்ல நெற்றியை நீவிவிட்டும் |
அன்னை
போல இனிய கூறியும் | அன்னை
போல இனியசொற்களைக் கூறினாலும், |
கள்வர்
போல கொடியன் மாதோ | கள்வர்
போலக் கொடியவன் அந்தோ! |
5 மணி என இழிதரும் அருவி பொன் என | நீலமணியோ
என வீழும் அருவியையுடைய, பொன்னோ என்னும்படி |
வேங்கை
தாய ஓங்கு மலை அடுக்கத்து | வேங்கை
மலர்கள் உதிர்ந்துகிடக்கும், உயர்ந்த மலைகளின் சரிவில் |
ஆடு
கழை நிவந்த பைம் கண் மூங்கில் | ஆடுகின்ற
கழைகள் உயர்ந்து நிற்கும் பசிய கணுக்களைக் கொண்ட மூங்கில் |
ஓடு
மழை கிழிக்கும் சென்னி | ஓடுகின்ற
மேகங்களைக் கிழிக்கும், தலையில் |
கோடு
உயர் பிறங்கல் மலை கிழவோனே | கொடுமுடிகள்
உயர்ந்த பாறை மலைகளின் உரிமையாளன். |
| |
#
29 பாலை | #
29 பாலை பூதனார் |
| |
நின்ற
வேனில் உலந்த காந்தள் | நின்று
காயும் வேனிற்காலத்தில் உலர்ந்துபோன காந்தள் பூக்களைக்கொண்ட, |
அழல்
அவிர் நீள் இடை நிழல்_இடம் பெறாஅது | நெருப்பாய்
ஒளிரும் நீண்ட வெளியில் நிழலுள்ள ஓர் இடம் இல்லாமல், |
ஈன்று
கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என | குட்டிகளை
ஈன்று காட்டினில் ஊக்கம் குன்றியிருக்கும் தன் பெண்புலி பசியால் வாடியது என |
மான்ற
மாலை வழங்குநர் செகீஇய | இருள்
மயங்கிய மாலைப்பொழுதில் வழிச்செல்வோரைத் தாக்கிக்கொல்ல |
5 புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு
நெறி | ஆண்புலி
வழியை நோக்கிக்கொண்டிருக்கும் புல்லிய வழித்தடமான சிறிய பாதையில் |
யாங்கு
வல்லுநள்-கொல் தானே யான் தன் | நடந்துசெல்ல
எங்கனம் ஆற்றலுள்ளவள் ஆனாளோ அவள்? நான் அவளுடைய |
வனைந்து
ஏந்து இள முலை நோவ-கொல் என | வடிவமைந்து
உயர்ந்திருக்கும் இளமையான முலைகள் நோகுமோ என்று |
நினைந்து
கை நெகிழ்ந்த அனைத்தற்கு தான் தன் | எண்ணி
இறுக்கிப்பிடித்திருந்த கையை நெகிழ்த்த அந்த அளவிற்கு, அவள் தனது |
பேர்
அமர் மழை கண் ஈரிய கலுழ | பெரிய
அமர்த்த குளிர்ச்சியான கண்கள் ஈரமுற்றனவாய்க் கலங்க |
10 வெய்ய உயிர்க்கும் சாயல் | வெம்மையோடு
பெருமூச்செறியும் மென்மையையும் |
மை
ஈர் ஓதி பெரு மட தகையே | கரிய
நெய்ப்பூச்சும் கொண்ட கூந்தலையுடைய பெருமை மிக்க மடப்பம் கொண்ட என் மகள் – |
| |
#
30 மருதம் | #
30 மருதம் கொற்றனார் |
| |
கண்டனென்
மகிழ்ந கண்டு எவன் செய்கோ | கண்டேன்
தலைவனே! கண்டு என்ன செய்ய இயலும்? |
பாணன்
கையது பண்பு உடை சீறியாழ் | பாணன்
கையிலிருக்கும் பண்பமைந்த சீறியாழ் |
யாணர்
வண்டின் இம்மென இமிரும் | புதிதாய்ப்
பூத்த மலரினைக் கண்ட வண்டைப் போல இம்மென ஒலிக்கின்ற |
ஏர்தரு
தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் | நீ
எழுந்தருளும் தெருவில் உன்னை எதிர்பார்த்து நோக்கி, உனது |
5 மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர் | மார்பின்
மாலையைப் பற்றிக்கொண்ட மாட்சிமைகொண்ட இழையணிந்த பெண்டிர் |
கவல்
ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி | கவலையினால்
வருத்தப்பட்டதால் வெப்பமாக விழும் அரித்தோடும் கண்ணீருடன், |
கால்
ஏமுற்ற பைதரு காலை | காற்றால்
அலைக்கழிக்கப்பட்டுத் துன்புற்ற பொழுதில் |
கடல்_மரம்
கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு | கடலில்
மரக்கலம் கவிழ்ந்துவிட, கலங்கி எல்லாரும் கடலுக்குள் வீழ்ந்து |
பலர்
கொள் பலகை போல | பலரும்
பிடித்துக்கொள்ளும் ஒரு பலகை போல, |
10 வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே | அவரவரும்
பற்றி இழுக்க, நீ நின்றுகொண்டு முன்னும் பின்னும் அசையும் துன்பமான நிலையை – |
| |
#
31 நெய்தல் | #
31 நெய்தல் நக்கீரனார் |
| |
மா
இரும் பரப்பு_அகம் துணிய நோக்கி | பெரிய,
கரிய கடற்பரப்பின் நீர் தெளிந்திருந்த நிலையை நோக்கி |
சேய்
இறா எறிந்த சிறு_வெண்_காக்கை | சிவந்த
இறால் மீனைப் பாய்ந்துபற்றித் தின்ற சிறிய கடற்காக்கை, |
பாய்
இரும் பனி கழி துழைஇ பைம் கால் | பரந்த
பெரிய குளிர்ச்சியையுடைய கழியைத் துழாவி மீனைப் பிடித்து, பசிய கால்களையுடைய |
தான்
வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும் | தான்
விரும்பும் பெடையை அழைத்துக் கொடுக்கும் |
5 சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே | சிறிய
பூக்களைக் கொண்ட ஞாழல் மரங்களைக் கொண்ட துறை இனிதாக இருந்தது; |
பெரும்
புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து | பெரிய
தனிமைத்துயருற்ற உள்ளத்தோடு பலவற்றையும் நினைந்து |
யானும்
இனையேன் ஆயின் ஆனாது | நானும்
இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டேன்; கணக்கில்லாமல் |
வேறு
பல் நாட்டில் கால் தர வந்த | வேறு
பல நாடுகளினின்றும் காற்றுத் தர வந்துசேர்ந்த |
பல
உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல் | பல
வகைப்பட்ட பண்டங்கள் வந்து இறங்கும் நிலாவையொத்த மணற்பரப்பிலுள்ள |
10 நெடும் சினை புன்னை கடும் சூல்
வெண்_குருகு | நெடிய
கிளைகளையுடைய புன்னைமரத்தில் முதிர்ந்த சூல்கொண்ட வெள்ளைக் குருகு, |
உலவு
திரை ஓதம் வெரூஉம் | உலவுகின்ற
அலைகளைக்கொண்ட கடற்பெருக்கைக் கண்டு அஞ்சும் |
உரவு
நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கே | ஓயாது
இயங்கும் நீர்ப்பரப்பினையுடைய தலைவனோடு நான் மணவாததற்கு முன்னர் – |
| |
#
32 குறிஞ்சி | #
32 குறிஞ்சி கபிலர் |
| |
மாயோன்
அன்ன மால் வரை கவாஅன் | மாயவனான
கண்ணனைப் போன்ற கரிய பெரிய மலையின் உயரத்துச் சரிவினில் |
வாலியோன்
அன்ன வயங்கு வெள் அருவி | பலராமனைப்
போன்ற ஒளிவிடும் வெள்ளிய அருவியையுடைய |
அம்
மலை கிழவோன் நம் நயந்து என்றும் | அழகிய
மலைக்கு உரியவனான தலைவன் நம்மை விரும்பி எப்போதும் |
வருந்தினன்
என்பது ஓர் வாய்_சொல் தேறாய் | வருந்தினான்
என்ற ஒரு வாய்ச்சொல்லை உணரமாட்டாய்; |
5 நீயும் கண்டு நுமரொடும் எண்ணி | நீயாகவே
நேரில் கண்டும், உன்னைச் சேர்ந்தவரோடு கலந்துகொண்டும் |
அறிவு
அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு | அறியவேண்டியவற்றை
அறிந்து அளவளாவ வேண்டும்; அவனது நிலையை மறுப்பதற்கு |
அரிய
வாழி தோழி பெரியோர் | அரியது
ஆகும், வாழ்க தோழியே! பெரியவர்கள் |
நாடி
நட்பின் அல்லது | முதலில்
ஆராய்ந்து நட்புச் செய்வரே அன்றி, |
நட்டு
நாடார் தம் ஒட்டியோர் திறத்தே | நட்புச்
செய்தபின் அவரைப்பற்றி ஆராயமாட்டார், தம்மைச் சார்ந்தவரிடத்து – |
| |
#
33 பாலை | #
33 பாலை இளவேட்டனார் |
| |
படு_சுடர்
அடைந்த பகு வாய் நெடு வரை | மறைகின்ற
ஞாயிறு சேர்ந்த பிளந்த வாய்ப்பகுதியையுடைய நீண்ட மலைத்தொடரின் |
முரம்பு
சேர் சிறுகுடி பரந்த மாலை | சரளைநிலத்தைச்
சேர்ந்த சிறுகுடியில் பரவிய மாலையில் |
புலம்பு
கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து | தனித்திருப்போர்
சேர்ந்துண்ணும் புல்லிய மன்றத்தில் |
கல்
உடை படுவில் கலுழி தந்து | பாறையை
உடைத்த பள்ளத்தில் இருக்கும் கலங்கல் நீரைத் தந்து |
5 நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில் | நிறைந்த
மழையை அறியாத, குறைந்த உணவையுடைய இரவினில் |
துவர்
செய் ஆடை செம் தொடை மறவர் | பழுப்பேறிய
ஆடையையுடைய, செம்மையாக அம்பினைத் தொடுத்திருக்கும் மறவர்கள் |
அதர்
பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை | வழியைப்
பார்த்து அமர்ந்திருக்கும் அஞ்சத்தக்க பாதையினில் |
இறப்ப
எண்ணுவர் அவர் எனின் மறுத்தல் | செல்ல
எண்ணுகிறார் அவர் என்றால் அதை மறுப்பதற்கு |
வல்லுவம்-கொல்லோ
மெல்லியல் நாம் என | ஆற்றலுள்ளவரோ
மெல்லிலாய்! நாம், என்று |
10 விம்மு_உறு கிளவியள் என் முகம் நோக்கி | என்
முகத்தைப் பார்த்து விம்மிக்கொண்டே சொல்பவளின் |
நல்
அக வன முலை கரை சேர்பு | நல்ல
மார்பிலுள்ள அழகிய முலைகள் என்னும் கரையைச் சேர்ந்து |
மல்கு
புனல் பரந்த மலர் ஏர் கண்ணே | நிரம்பி
வழியும் நீர் பரவியது மலரைப் போன்ற அவளது அழகிய கண்களிலிருந்து – |
| |
#
34 குறிஞ்சி | #
34 குறிஞ்சி பிரமசாரி |
| |
கடவுள்
கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த | கடவுள்
தன்மையுள்ள மலைச் சுனையில், இலைகளை விலக்கிக்கொண்டு மலர்ந்த |
பறியா
குவளை மலரொடு காந்தள் | யாரும்
பறிக்காத குவளை மலருடன், காந்தளின் |
குருதி
ஒண் பூ உரு கெழ கட்டி | குருதி
நிறத்ததாகிய ஒள்ளிய பூவை அச்சம்தோன்றும்படியாகக் கட்டி |
பெரு
வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள் | பெரிய
மலைச் சரிவுகள் பொலிவுபெற, சூரர மகளிர் |
5 அருவி இன் இயத்து ஆடும் நாடன் | அருவியின்
ஓசையே இசையாகக் கொண்டு ஆடுகின்ற நாட்டையுடைய தலைவனின் |
மார்பு
தர வந்த படர் மலி அரு நோய் | முயக்கத்தினால்
ஏற்பட்ட துன்பம் மிகுந்த நீங்குதற்கு அரிய இந்தக் காமநோய் |
நின்
அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து | நீ
வருத்தியதால் ஏற்பட்டது இல்லை என அறிந்தும், தலைநிமிர்ந்து |
கார்
நறும் கடம்பின் கண்ணி சூடி | கார்காலத்து
மலரும் நறிய கடம்பின் இலைகளால் தலைமாலை செய்து சூடிக்கொண்டு |
வேலன்
வேண்ட வெறி மனை வந்தோய் | வேலன்
வெறியாடி வேண்டிக்கொள்ள வெறிக்களத்துக்கு வந்திருக்கிறாய்! |
10 கடவுள் ஆயினும் ஆக | நீ
உண்மையாகவே கடவுளே ஆயினும் ஆகுக, |
மடவை
மன்ற வாழிய முருகே | ஆனால்
நீ அறியாமை உடைத்திருக்கிறாய், வாழ்க முருகனே! |
| |
#
35 நெய்தல் | #
35 நெய்தல் அம்மூவனார் |
| |
பொங்கு
திரை பொருத வார் மணல் அடைகரை | பொங்கிவரும்
அலைகள் மோதுவதினால் ஏற்பட்ட சரிவான மணலைக் கொண்டு அடைத்தகரையில் |
புன்
கால் நாவல் பொதி புற இரும் கனி | புல்லிய
அடிமரத்தையுடைய நாவல் மரத்தின் பொதியைப் போன்ற வெளிப்பகுதியையுடைய பெரிய பழத்தை |
கிளை
செத்து மொய்த்த தும்பி பழம் செத்து | தன்
இனத்தைச் சேர்ந்தது என்று எண்ணி சூழ்ந்த தும்பியைப் பழமென்று நினைத்து |
பல்
கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து | பலகால்களைக்
கொண்ட நண்டு பற்றிக்கொண்ட பிடிக்கு வருந்தி |
5 கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் | மீட்டப்படாத
நரம்பாய் இமிர்ந்து ஒலிக்கும் ஆரவாரத்தால் |
இரை
தேர் நாரை எய்தி விடுக்கும் | இரையைத்
தெரிந்துகொண்ட நாரை அதனைக் கொத்தியபின் விடுவிக்கும் |
துறை
கெழு மாந்தை அன்ன இவள் நலம் | துறையைப்
பொருந்திய மாந்தை நகரத்தைப் போன்ற இவளின் பெண்மைநலம் |
பண்டும்
இற்றே கண்டிசின் தெய்ய | முன்பும்
இப்படியேதான் இருந்தது, நீ காண்பாயாக ! |
உழையின்
போகாது அளிப்பினும் சிறிய | பக்கத்திலிருந்து
நீங்காமல் அருள்செய்தாலும், சிறிதளவு |
10 ஞெகிழ்ந்த கவின் நலம்-கொல்லோ மகிழ்ந்தோர் | கைதளர்ந்ததால்
குறைந்த மேனியழகின் வேறுபாடோ? கள்ளுண்டு மகிழ்ந்தோர்க்கு |
கள்
களி செருக்கத்து அன்ன | கள்ளால்
ஏற்பட்ட களிப்பின் செருக்கு குறைவது போல |
காமம்-கொல்
இவள் கண் பசந்ததுவே | காதல்
களிப்புக் குறைவோ? இவள் கண் பசந்து தோன்றுவதற்குக் காரணம்? |
| |
#
36 குறிஞ்சி | #
36 குறிஞ்சி சீத்தலைச் சாத்தனார் |
| |
குறும்
கை இரும் புலி கோள் வல் ஏற்றை | குட்டையான
கைகளையுடைய பெரிய புலியின் கொல்லுதலில் வல்ல ஆண்புலி |
பூ
நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி | அழகிய
நெற்றியையுடைய பெரிய பெண்யானை புலம்பும்படி தாக்கி |
தாழ்
நீர் நனம் தலை பெரும் களிறு அடூஉம் | ஆழமான
நீரையுடைய அகன்ற இடத்தில் பெரிய களிற்றினைக் கொல்லும் |
கல்_அக
வெற்பன் சொல்லின் தேறி | மலைநாட்டுத்
தலைவனின் சொல்லை நம்பி |
5 யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து | நாம்
எம் பெண்மைநலத்தை இழந்தோம்!; நள்ளிரவிலும், |
அலர்
வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி | புறங்கூறும்
வாயையுடைய மகளிரின் வம்புமொழிகளோடு சேர்ந்து |
புரை
இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து | உயர்வற்ற
தீய சொற்களை கூறுவதற்குரிய பேச்சுக்களை மேற்கொண்டு, |
ஆனா
கௌவைத்து ஆக | பொருந்தாத
பழிச்சொற்களையுடையதாயிற்று என்றால் |
தான்
என் இழந்தது இ அழுங்கல் ஊரே | தான்
எதை இழந்தது இந்த ஆர்ப்பரிக்கும் ஊர்? |
| |
#
37 பாலை | #
37 பாலை பேரிசாத்தனார் |
| |
பிணங்கு
அரில் வாடிய பழ விறல் நனம் தலை | பின்னிக்கிடக்கும்
சிறுதூறுகள் வாடிய அழிந்துபோன பழஞ் சிறப்புக்களைக் கொண்ட அகன்ற இடத்திலுள்ள |
உணங்கு
ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி | காய்ந்துபோன
புல்லைத் தின்னும் ஆநிரைகளினின்றும் தனித்துப்போன ஒரு பசுவின் தெள்ளிய மணி |
பைபய
இசைக்கும் அத்தம் வை எயிற்று | மெல்ல
இசைக்கும் காட்டுவழியில், கூர்மையான பற்களைக்கொண்ட |
இவளொடும்
செலினோ நன்றே குவளை | இவளோடு
சென்றால் நலமாக இருக்கும்; குவளையின் |
5 நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ | நீர்
சூழ்ந்த பெரிய மலர் போன்ற கண்கள் அழும்படியாக |
கலை
ஒழி பிணையின் கலங்கி மாறி | ஆண்மானைப்
பிரிந்த பெண்மானைப் போலக் கலங்கி, மனம் மாறி |
அன்பு
இலிர் அகறிர் ஆயின் என் பரம் | அன்பு
இல்லாதவராய்ப் பிரிந்துசென்றீராயின், என் பாரமாக |
ஆகுவது
அன்று இவள் அவலம் நாகத்து | ஆவது
அன்று இவளது அவலம்; பாம்பின் |
அணங்கு
உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு | வருத்துகின்ற
அரிய தலை மோதுண்டு கெட, வலமாக எழுந்து |
10 ஆர் கலி நல் ஏறு திரிதரும் | நிறைந்த
முழக்கத்தையுடைய பெருத்த இடி இடிக்கும் |
கார்
செய் மாலை வரூஉம் போழ்தே | கார்காலத்து
மாலைக்காலம் வரும் போது – |
| |
#
38 நெய்தல் | #
38 நெய்தல் உலோச்சனார் |
| |
வேட்டம்
பொய்யாது வலை_வளம் சிறப்ப | மீன்வேட்டை
பொய்க்காமல், வலையினால் கிடைக்கும் வளம் சிறந்து விளங்க, |
பாட்டம்
பொய்யாது பரதவர் பகர | தங்களின்
பெரும் பங்கு பொய்க்காமல், பரதவர் விலைகூறி விற்க, |
இரும்
பன தீம் பிழி உண்போர் மகிழும் | கரிய
பனையின் இனிய கள்ளினை உண்போர் மகிழும் |
ஆர்
கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு | பெருத்த
ஆரவாரம் மிக்க புதியவரவுகளைக் கொண்டிருப்பினும், தேரையுடைய |
5 மெல்லம்புலம்பன் பிரியின் புல்லென | நம்
நெய்தல்நிலத் தலைவன் பிரிந்துசென்றால், பொலிவிழந்து |
புலம்பு
ஆகின்றே தோழி கலங்கு நீர் | வெறிச்சோடிப்போய்விடுகிறதே,
தோழி! கலங்கலான நீரைக் கொண்ட |
கழி
சூழ் படப்பை காண்ட_வாயில் | கழிகள்
சூழ்ந்த தோட்டங்களையுடைய காண்டவாயில் என்னும் நம் ஊரில் |
ஒலி
கா ஓலை முள் மிடை வேலி | ஒலிக்கின்ற
காய்ந்த பனையோலையும், முள்ளும் சேர்த்துக்கட்டிய வேலியை ஒட்டி |
பெண்ணை
இவரும் ஆங்கண் | பனைமரங்கள்
வளர்ந்து உயரும் இடத்தில் |
10 வெண் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே | வெள்ளிய
மணற் பரப்புகள் உள்ள எம்முடைய ஆரவாரமிக்க ஊர் – |
| |
#
39 குறிஞ்சி | #
39 குறிஞ்சி மருதனிளநாகனார் |
| |
சொல்லின்
சொல் எதிர் கொள்ளாய் யாழ நின் | நான்
ஒரு சொல் சொன்னால் அதற்கு எதிர்ச்சொல் ஏதும் கூறமாட்டாய்; உனது |
திரு
முகம் இறைஞ்சி நாணுதி கதுமென | அழகிய
முகம் கவிழ்ந்து நாணுகின்றாய்; விரைவாகக் |
காமம்
கைம்மிகின் தாங்குதல் எளிதோ | காமம்
கைமீறிப்போனால் அதனைத் தாங்கிக்கொள்ளுதல் எளிதோ? |
கொடும்
கேழ் இரும் புறம் நடுங்க குத்தி | வளைந்த
நிறக்கோடுகளைக் கொண்ட பெரிய முதுகு நடுங்கக் குத்திப் |
5 புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் | புலியை
விளையாட்டாகக் கொன்ற புலவு நாறும் யானையின் |
தலை
மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின் | நுனிக்
கொம்பினைப் போன்று ஓரங்கள் சிவந்துபோன உன் |
கண்ணே
கதவ அல்ல நண்ணார் | கண்கள்
மட்டுமா சினமிகுந்தன? அல்ல; பகைவர்கள் |
அரண்
தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு | கோட்டையின்
உச்சி மதிலிலே இருக்கவும், அவரை வென்று அவரின் முரசைக் கைப்பற்றி |
ஓம்பு
அரண் கடந்த அடு போர் செழியன் | அவர்
காத்துநின்ற அரணையும் வென்ற அழிக்கின்ற போரினையுடைய செழியனின் |
10 பெரும் பெயர் கூடல் அன்ன நின் | பெரும்
புகழ்பெற்ற கூடல்மாநகரைப் போன்ற உன் |
கரும்பு
உடை தோளும் உடையவால் அணங்கே | தொய்யிலால்
கரும்பு வரைந்த தோள்களும் உடையன என்னை வருத்துதலை. |
| |
#
40 மருதம | #
40 மருதம் கொண்மா நெடுங்கோட்டனார் |
| |
நெடு
நா ஒண் மணி கடி மனை இரட்ட | நீண்ட
நாவினைக்கொண்ட ஒள்ளிய மணி, காவலுள்ள மனையில் ஒலிக்க, |
குரை
இலை போகிய விரவு மணல் பந்தர் | ஒலிக்கும்
தென்னங்கீற்று வேய்ந்து, பரப்பிய மணலைக் கொண்ட பந்தலில், |
பெரும்பாண்
காவல் பூண்டு என ஒருசார் | பெரும்பாணர்கள்
காவலிருக்க, ஒரு பக்கத்தில் |
திருந்து
இழை மகளிர் விரிச்சி நிற்ப | திருந்திய
இழை அணிந்த மகளிர் நற்சொல் கேட்டு நிற்க, |
5 வெறி_உற விரிந்த அறுவை மெல் அணை | நறுமணம்
கமழ விரிக்கப்பட்ட விரிப்பினைக் கொண்ட மென்மையான அணையில் |
புனிறு
நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச | ஈன்றணிமையின்
மணம் மணக்க, செவிலி துயில்விக்க, புதல்வன் தூங்க, |
ஐயவி
அணிந்த நெய்யாட்டு ஈர் அணி | வெண்சிறுகடுகை
அரைத்து அப்பி, எண்ணெய்பூசிக் குளித்த, ஈருடை தரித்த, |
பசு_நெய்
கூர்ந்த மென்மை யாக்கை | பசுநெய்
தடவிய மென்மையான உடம்பினையுடைய, |
சீர்
கெழு மடந்தை ஈர் இமை பொருந்த | சிறப்புப்
பொருந்திய தலைவி இரு இமைகளையும் மூடிப் படுத்திருக்க, |
10 நள்ளென் கங்குல் கள்வன் போல | நள்ளென்ற
இரவில் கள்வன் போல, |
அகன்
துறை ஊரனும் வந்தனன் | அகன்ற
துறையையுடைய தலைவனும் வந்தான், |
சிறந்தோன்
பெயரன் பிறந்த மாறே | சிறந்தோனாகிய
தன் தந்தையின் பெயரைத் தாங்குபவன் பிறந்ததினால். |
| |
#
41 பாலை | #
41 பாலை இளந்தேவனார் |
| |
பைம்
கண் யானை பரூஉ தாள் உதைத்த | சிறிய
கண்ணையுடைய யானையின் பருத்த கால்கள் எற்றியதால் ஏற்பட்ட |
வெண்
புற களரி விடு நீறு ஆடி | வெண்மையான
நிறத்தையுடைய களர் நிலத்தில் எழுந்த நுண்ணிய துகள் படிந்து |
சுரன்
முதல் வருந்திய வருத்தம் பைபய | காட்டுவழியின்
தொடக்கத்தில் வருந்திய வருத்தம் மெல்ல மெல்ல |
பாஅர்
மலி சிறு கூவலின் தணியும் | பாறைகள்
மலிந்த சிறிய கிணற்று நீரில் தணிந்திட, |
5 நெடும் சேண் சென்று வருந்துவர் மாதோ | நெடுந்தொலைவு
சென்று வருந்துவர்; |
எல்லி
வந்த நல் இசை விருந்திற்கு | இரவில்
வந்த நல்ல புகழ்படைத்த விருந்தினர்க்கு |
கிளர்
இழை அரிவை நெய் துழந்து அட்ட | பொலிவுடைய
அணிகலன்களை அணிந்த பெண்ணே! நெய் பெய்து சமைத்த |
விளர்
ஊன் அம் புகை எறிந்த நெற்றி | கொழுத்த
தசையிலிருந்து எழும் மணமுள்ள புகை படிந்த நெற்றியில் |
சிறு
நுண் பல் வியர் பொறித்த | சிறிய
நுண்ணிய பல வியர்வைத் துளிகள் உண்டாகப்பெற, |
10 குறு நடை கூட்டம் வேண்டுவோரே | குறுகுறுவென
நடக்கும் நடையினையுடைய உனது உறவை விரும்பும் உன் காதலர்- |
| |
#
42 முல்லை | #
42 முல்லை கீரத்தனார் |
| |
மறத்தற்கு
அரிதால் பாக பல் நாள் | மறக்க
முடியாதது பாகனே! பல நாள்கள் |
அறத்தொடு
வருந்திய அல்கு தொழில் கொளீஇய | வறட்சியுற்று
வருந்திய உயிர்கள் தத்தமக்குரிய தொழிலை மேற்கொள்ளுமாறு |
பழ
மழை பொழிந்த புது நீர் அவல | தொன்றுதொட்டுப்
பெய்யும் வழக்கத்தையுடைய மழை பொழிந்த புது நீர் உள்ள பள்ளங்களிலிருந்து |
நா
நவில் பல் கிளை கறங்க மாண் வினை | நாவினால்
பன்முறை ஒலியெழுப்பும் பல கூட்டமான தவளைகள் கத்துவதால், சிறப்பாகச் செய்யப்பட்ட |
5 மணி ஒலி கேளாள் வாள்_நுதல் அதனால் | மணிகளின்
ஒலியைக் கேட்கமாட்டாள் ஒளிவிடும் நெற்றியையுடையவள்; அதனால் |
ஏகு-மின்
என்ற இளையர் வல்லே | சீக்கிரம்
போங்கள் என்று ஏவிய இளையர் விரைவில் சென்று |
இல்
புக்கு அறியுநர் ஆக மெல்லென | வீட்டில்
நுழைந்து வரவை அறிவிக்க, அதுவரை நிதானமாக |
மண்ணா
கூந்தல் மாசு அற கழீஇ | நீர்விட்டுக்
கழுவாத கூந்தலை மாசு நீங்கும்படியாகக் கழுவி |
சில்
போது கொண்டு பல் குரல் அழுத்திய | ஒருசில
பூக்களைக் கொண்டு பலவாகிய தன் கூந்தலில் செருகிக்கொண்ட |
10 அ நிலை புகுதலின் மெய் வருத்து_உறாஅ | அவ்வேளையில்
நான் வீட்டுக்குள் சென்று புக, தன் மெய் வருந்தும்படி வந்து |
அவிழ்
பூ முடியினள் கவைஇய | பூக்கள்
விழும்படி அவிழ்ந்த கூந்தலையுடையவளாய் என்னை அணைத்துக்கொள்ள |
மட
மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே | அந்த
இளமை ததும்பும் சிறந்த காதலி மகிழ்ந்து என் வரவைக் கொண்டாடிய நிலை- |
| |
#
43 பாலை | #
43 பாலை எயினந்தையார் |
| |
துகில்
விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் | வெண்மையான
ஆடையை விரித்துவிட்டாற் போன்று வெயில் ஒளிரும் வெப்பம் உள்ள |
என்றூழ்
நீடிய குன்றத்து கவாஅன் | கோடை
நீடிய மலையின் உச்சிச் சரிவில் |
ஓய்
பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி | மிகுந்த
பசியையுடைய செந்நாய் மெலிந்த மரை என்னும் மானைக் கொன்று |
ஆர்ந்தன
ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு | நன்கு
உண்டு எஞ்சிய மிச்சம், நெடுந்தொலைவில் உள்ள வேற்று நாட்டுக்குச் செல்லும் |
5 அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் | அரிய
பாலை வழியில் செல்வோர்க்கு உண்ணும் உணவாக ஆகும் |
வெம்மை
ஆரிடை இறத்தல் நுமக்கே | வெம்மையான
அரிய வழியில் செல்லுதல் உமக்கு |
மெய்ம்
மலி உவகை ஆகின்று இவட்கே | உடல்
பூரிக்கும் உவகை தருவதாகின்றது; இவளுக்கோ, |
அஞ்சல்
என்ற இறை கைவிட்டு என | அஞ்சவேண்டாம்
என்று கூறிய வேந்தன் கைவிட்டானாக, |
பைம்
கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் | சிறிய
கண்ணையுடைய யானைப்படையுடன் பகைமன்னன் மதிற்புறத்தே தங்கியிருக்க, |
10 களையுநர் காணாது கலங்கிய உடை மதில் | தன்
துன்பத்தைக் களைவாரைக் காணாமல் கலங்கிய, உடைந்த மதிலாகிய |
ஓர்
எயின் மன்னன் போல | ஒரே
ஒரு கோட்டையை உடைய குறுநில மன்னன் போல |
அழிவு
வந்தன்றால் ஒழிதல் கேட்டே | மனம்
அழிவுபட்டது நீ பிரிவதைக் கேட்டு. |
| |
#
44 குறிஞ்சி | #
44 குறிஞ்சி பெருங்கௌசிகனார் |
| |
பொரு
இல் ஆயமோடு அருவி ஆடி | ஒப்பற்ற
தோழியருடன் அருவியில் நீராடி, |
நீர்
அலை சிவந்த பேர் அமர் மழை கண் | அருவிநீர்
அலைத்தலால் சிவந்துபோன பெரிய அமர்ந்த குளிர்ந்த கண்களில் |
குறியா
நோக்கமொடு முறுவல் நல்கி | யாரையும்
குறித்து நோக்காத பார்வையுடன் மெல்நகையை நமக்குத் தந்து |
மனை
வயின் பெயர்ந்த_காலை நினைஇயர் | தன்
வீட்டுக்குச் சென்றுவிட்ட பின்னர் நினைக்கின்றாய்! |
5 நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த | உனக்கோ
அவள் அறியத் தகுந்தவள் எனது நெஞ்சே? கொல்லைப்புறத்தில் |
நீடு
இலை விளை தினை கொடும் கால் நிமிர | நீண்ட
இலையையுடைய நன்கு விளைந்த தினையின் வளைந்த தாள் நிமிரும்படி |
கொழும்
குரல் கோடல் கண்ணி செழும் பல | கொழுமையான
கதிர்களைக் கொய்வதைக் கருதி, திரண்ட பல |
பல்
கிளை குறவர் அல்கு அயர் முன்றில் | பெருத்த
கூட்டமான குறவர்கள் இராத்தங்கி இன்பமாய்ப் பொழுதுபோக்கும் முன்றிலிலுள்ள |
குட
காய் ஆசினி படப்பை நீடிய | குடம்போன்ற
காய்களைக் கொண்ட ஆசினிப்பலாத் தோப்பின் நீண்ட |
10 பன் மர உயர் சினை மின்மினி விளக்கத்து | பலவாக
இருக்கும் மரங்களின் உயர்ந்த கிளைகளிலுள்ள மினிமினிகளின் வெளிச்சத்தில் |
செல்
மழை இயக்கம் காணும் | வானில்
செல்கின்ற மேகங்களின் ஓட்டத்தைக் காணும் |
நன்
மலை நாடன் காதல் மகளே | நல்ல
மலையையுடைய நாடனின் காதல் மகளானவள்- |
| |
#
45 நெய்தல் | #
45 நெய்தல் உலோச்சனார் |
| |
இவளே
கானல் நண்ணிய காமர் சிறுகுடி | இவளோ,
கடற்கரைச் சோலையை அடுத்துள்ள அழகிய சிறுகுடியில் இருக்கும், |
நீல்
நிற பெரும் கடல் கலங்க உள் புக்கு | நீல
நிறப் பெருங்கடல் கலங்குமாறு அதன் உள்ளே புகுந்து |
மீன்
எறி பரதவர் மகளே நீயே | மீனைப்
பிடிக்கும் பரதவர் மகள் ஆவாள்! நீயோ, |
நெடும்
கொடி நுடங்கும் நியம மூதூர் | நெடிய
கொடிகள் மடங்கி அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழைய ஊரின் |
5 கடும் தேர் செல்வன் காதல் மகனே | விரைந்து
செல்லும் தேர்களையுடைய செல்வரின் அன்புக்குரிய மகன்! |
நிண
சுறா அறுத்த உணக்கல் வேண்டி | கொழுப்புள்ள
சுறாமீனை அறுத்த துண்டங்களைக் காயவைப்பதற்காக, |
இன
புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ | கூட்டமாக
வரும் பறவைகளை விரட்டும் எமக்கு உயர்ந்த நலன்கள் என்ன வேண்டியுள்ளது? |
புலவு
நாறுதும் செல நின்றீமோ | எம்மிடம்
புலால் நாறுகிறது. தள்ளி நில்லுங்கள், |
பெரு_நீர்
விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை | பெரிய
கடல்நீரையே விளைவயலாகக் கொண்ட எமது சிறுத்த நல்ல வாழ்க்கை |
10 நும்மொடு புரைவதோ அன்றே | உம்மோடு
ஒத்துப்பார்க்கும் அளவுக்குச் சிறப்பானதன்று, |
எம்மனோரில்
செம்மலும் உடைத்தே | எம்
பரதவர் குடியிலும் உம்மைப் போல் உயர்வானவர்கள் உண்டு. |
| |
#
46 பாலை | #
46 பாலை கோட்டம்பலவனார் |
| |
வைகல்-தோறும்
இன்பமும் இளமையும் | ஒவ்வொரு
நாளும் இன்பமும் இளமையும் |
எய்
கணை நிழலின் கழியும் இ உலகத்து | எய்யப்பட்ட
அம்பின் நிழலைப் போலக் கழிகின்ற இந்த உலகத்தில் |
காணீர்
என்றலோ அரிதே அது நனி | அதனை
நீவிர் அறியமாட்டீர் என்று கூறுவது இயலாது. அதனை மிகவும் |
பேணீர்
ஆகுவிர் ஐய என் தோழி | பேணுகின்ற
தன்மையர் ஆவீராக; என் தோழியின் |
5 பூண் அணி ஆகம் புலம்ப பாணர் | பூண்கள்
அணிந்த மார்புகள் அவற்றை இழந்து தனிமையில் வாட, பாணர்கள் |
அயிர்ப்பு
கொண்டு அன்ன கொன்றை அம் தீம் கனி | ஐயமுறும்
வகையில் கொன்றையின் அழகிய இனிய கனிகள் |
பறை
அறை கடிப்பின் அறை அறையா துயல்வர | பறையை
முழக்கும் குறுந்தடியைப் போன்று பாறைகளில் மோதுமாறு அசைய |
வெம்
வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து | கொடிய
காற்று வீசுகின்ற மூங்கில்கள் நிறைந்த வெளியில் |
எவ்வம்
மிகூஉம் அரும் சுரம் இறந்து | துன்பம்
மிகுந்த அரிய வறண்ட பாலை நிலத்தைக் கடந்து |
10 நன் வாய் அல்லா வாழ்க்கை | நன்மை
வாய்த்தல் அல்லாத வாழ்விற்குரிய |
மன்னா
பொருள்_பிணி பிரிதும் யாம் எனவே | நிலையற்ற
பொருளை ஈட்டுதற்காகப் பிரிந்துசெல்வேன் நான் என்று நீர் கூறுவதனால் – |
| |
#
47 குறிஞ்சி | #
47 குறிஞ்சி நல்வெள்ளியார் |
| |
பெரும்
களிறு உழுவை அட்டு என இரும் பிடி | பெரிய
ஆண்யானையைப் புலி கொன்றதாக, அதன் பெரிய பெண்யானை |
உயங்கு
பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது | உடல்
வாட்டமுற்று உள்ளத்தை வருத்தும் துயரத்தோடு இயங்க இயலாமல் |
நெய்தல்
பாசடை புரையும் அம் செவி | நெய்தலின்
பசிய இலை போன்ற அழகிய செவியையுடைய |
பைதல்
அம் குழவி தழீஇ ஒய்யென | இளமையான
தன் அழகிய கன்றினைத் தழுவிக்கொண்டு, சட்டென |
5 அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் | ஆற்றுதற்கரிய
புண்ணைப் பெற்றவர் போல வருந்தி இருக்கும் |
கானக
நாடற்கு இது என யான் அது | கானக
நாடனுக்கு இங்கு இவ்வாறு நிகழ்கிறது என நான் அதனைக் குறித்துக் |
கூறின்
எவனோ தோழி வேறு உணர்ந்து | கூறினால்
என்னாம் தோழி! என் நிலையை வேறுவிதமாக உணர்ந்து |
அணங்கு
அறி கழங்கின் கோட்டம் காட்டி | தெய்வம்
வருத்தியதோ என அறியத்தக்க கழங்குகள் என் மாற்றத்தைக் காட்டியதால் |
வெறி
என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து | அதற்குத்
தீர்வு வெறியாட்டயர்தலே என உணர்ந்த உள்ளத்துடன் ஆட்டை அறுத்து |
10 அன்னை அயரும் முருகு நின் | அன்னையானவள்
எடுப்பித்த முருகவழிபாடு உன் |
பொன்
நேர் பசலைக்கு உதவா மாறே | பொன்னைப்
போன்ற பசலைக்கு பயன்படாத நிலையை- |
| |
#
48 பாலை | #
48 பாலை பாலைபாடிய பெருங்கடுங்கோ |
| |
அன்றை
அனைய ஆகி இன்றும் எம் | அன்றைக்கு
இருந்ததைப் போன்றே இன்றைக்கும் எமது |
கண்
உள போல சுழலும் மாதோ | கண்ணுக்குள்
இருப்பது போலச் சுழல்கிறது! |
புல்
இதழ் கோங்கின் மெல் இதழ் குடை பூ | சிறிய
இதழ்களைக் கொண்ட கோங்கின் மெல்லிய இதழ்கள் குடைபோல் தோன்றும் மலர்கள் |
வைகுறு_மீனின்
நினைய தோன்றி | வைகறைக்
காலத்து வானத்து மீன்கள் என நினைக்குமாறு தோன்றி |
5 புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடை | காட்டினை
அழகுசெய்த பூவின் மணம் கமழும் கற்கள் பரந்த வழியில் |
கிடின்
என இடிக்கும் கோல் தொடி மறவர் | ‘கிடின்’
என்று ஒலிக்கும்படி மோதிக்கொள்ளும் திரண்ட தோள்வளை அணிந்த மறவராகிய, |
வடி
நவில் அம்பின் வினையர் அஞ்சாது | வடிவாகச்
செய்யப்பட்ட அம்பினை இயக்குபவரை அஞ்சாது |
அமர்
இடை உறுதர நீக்கி நீர் | போரிட்டு
உறுதியாக அவரை விரட்டி, நீர் |
எமர்
இடை உறுதர ஒளித்த காடே | என்னுடைய
உறவினர் தேடிவந்தபோது உம்மை ஒளித்துக்கொண்ட காடு- |
| |
#
49 நெய்தல் | #
49 நெய்தல் நெய்தல் தத்தனார் |
| |
படு
திரை கொழீஇய பால் நிற எக்கர் | பெரிய
அலைகள் கொழித்து உருவாக்கிய பாலின் நிறத்ததாகிய மணல்மேடுகளில் விளையாடும் |
தொடியோர்
மடிந்து என துறை புலம்பின்றே | வளைமகளிர்
தம் இல்லத்தில் துயில் கொண்டுவிட்டதால் கடல்துறை தனிமையுடைதாயிற்று; |
முடி
வலை முகந்த முடங்கு இறா பாவை | முடிச்சிட்ட
வலைகள் முகந்த முடங்கிய இறாமீன்கள் காய்வதை |
படு
புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே | அவற்றின்
மேல் விழும் பறவைகளை விரட்டுவதால் பகலும் கழிந்தது; |
5 கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம்
மடிந்து | சுறாமீன்களைப்
பிடித்த மகிழ்ச்சியையுடையவராய், தம் வேட்டையை விடுத்து |
எமரும்
அல்கினர் ஏமார்ந்தனம் என | எமது
இல்லத்தோரும் மனையில் தங்கினர்; யாம் மனம் கலங்கினோம் என |
சென்று
யாம் அறியின் எவனோ தோழி | சென்று
நாம் அவன் கருத்தை அறியின் என்னாம் தோழி? |
மன்ற
புன்னை மா சினை நறு வீ | மன்றத்துப்
புன்னையின் பெரிய கிளையில் உள்ள நறு மலர்கள் |
முன்றில்
தாழையொடு கமழும் | வீட்டு
முற்றத்தில் இருக்கும் தாழையோடு சேர்ந்து மணங்கமழும் |
10 தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல்
ஊர்க்கே | தெளிந்த
கடலையுடைய தலைவன் வாழும் சிறிய நல்ல ஊருக்கு – |
| |
#
50 மருதம் | #
50 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ |
| |
அறியாமையின்
அன்னை அஞ்சி | என்
அறியாமையினாலே, அன்னையே! உன்மேல் அச்சம்கொண்டு, |
குழையன்
கோதையன் குறும் பைம் தொடியன் | நம்
தலைவன் இளந்தளிர்களையும், மாலையையும், குறிய சிறிய வளையல்களையும் கொண்டவனாய் |
விழவு
அயர் துணங்கை தழூஉகம் செல்ல | (சேரி)விழாவில்
கொண்டாடும் துணங்கைக் கூத்தில் (பரத்தையரைத்)தழுவிக்கொள்ளுதலை கையகப்படுத்தச்
சென்றபோது |
நெடு
நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை | நெடிய
நிமிர்ந்த தெருவில் வேறொரு வழியில் வந்து புகுந்து அந்த வளைந்த இடத்தில் |
5 நொதுமலாளன் கதுமென தாக்கலின் | நமக்கு
அயலானாகிய அவன் திடீரென எதிர்ப்பட, |
கேட்போர்
உளர்-கொல் இல்லை-கொல் போற்று என | “உன்னைக்
கேட்பார் உண்டோ இல்லையோ, இதைத்தவிர்” என்று நான் கூற |
யாணது
பசலை என்றனன் அதன் எதிர் | “அழகாக
இருக்கிறது உன் பசலை” என்று கூறினான். அதற்கு மறுமொழியாக, |
நாண்
இலை எலுவ என்று வந்திசினே | “உனக்கு
வெட்கம் இல்லை, ஐயனே” என்று கூறிவந்தேன் – |
செறுநரும்
விழையும் செம்மலோன் என | வேண்டாதவரும்
விரும்பும் வீறு கொண்டவன் என்று |
10 நறு நுதல் அரிவை போற்றேன் | மணமுள்ள
நெற்றியை உடைய தலைவியே! அவனைப் போற்றேன் – |
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே மேல் | எனது
சிற்றறிவு பெரிதாயிருப்பதால் ஆராயாமல் துணிந்து – (அவ்வாறு கூறினேன்) |