புறநானூறு 276-300

                                     
# 276 மதுரை பூதன் இளநாகனார்# 276 மதுரை பூதன் இளநாகனார்
நறு விரை துறந்த நறை வெண் கூந்தல்நல்ல மணமுள்ள பொருள்களைத் துறந்த, நரைத்த வெண்மையான கூந்தலையும்,
இரும் காழ் அன்ன திரங்கு கண் வறு முலைஇரவமரத்தின் விதைபோன்ற சுருங்கிய கண்ணையுடைய வற்றிய முலையையும் உடைய,
செம் முது பெண்டின் காதல் அம் சிறாஅன்செம்மையான பண்புடைய முதியவளுடைய அன்புச் சிறுவன்,
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்தஇளமைப் பான்மையையுடைய இடைக்குலப் பெண் ஒருத்தி தன் வளமையான நகத்தால் தெளித்த
குட பால் சில் உறை போல                   5ஒரு குடப்பாலுக்குச் சிறிதளவு உறை போலப்
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனேபகைவரின் படைக்குத் தானே துன்பம் எல்லாம் தருபவன் ஆனான்.
                                     
# 277 பூங்கணுத்திரையார்# 277 பூங்கணுத்திரையார்
மீன் உண் கொக்கின் தூவி அன்னமீன் உண்ணும் கொக்கின் இறகு போன்ற
வால் நரை கூந்தல் முதியோள் சிறுவன்வெண்மையான, நரைத்த கூந்தலையுடைய முதிய தாய், தன் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகையானையைக் கொன்று தானும் வீழ்ந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி,
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்அவள் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெரிது; அவள் வடித்த மகிழ்ச்சிக் கண்ணீர்த்துளிகள்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து           5வலிய கழையாய் அசைகின்ற மூங்கிலில்
வான் பெய தூங்கிய சிதரினும் பலவேமழை பெய்யும்போது தொங்கிக்கொண்டு சொட்டும் மழைத்துளிகளைவிட அதிகமானவை.
                                     
# 278 காக்கைபாடினியார் நச்செள்ளையார்# 278 காக்கைபாடினியார் நச்செள்ளையார்
நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்நரம்புகள் புடைத்து வற்றி உலர்ந்த மெலிந்த தோள்களையும்,
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்தாமரை இலை போன்ற அடிவயிற்றையும் உடைய முதியவளிடம், அவள் மகன்
படை அழிந்து மாறினன் என்று பலர் கூறபகைவரின் படையைக் கண்டு நிலைகுலைந்து, புறமுதுகு காட்டி இறந்தான் என்று பலரும் கூற,
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்கடும் போரைக் கண்டு அஞ்சி என் மகன் தோற்றோடி இறந்தது உண்மையானால், அவன் பால் உண்ட என்
முலை அறுத்திடுவென் யான் என சினைஇ                5முலைகளை அறுத்திடுவேன் நான் என்று சினந்து,
கொண்ட வாளொடு படு பிணம் பெயராகையிலேந்திய வாளோடு சென்று, போர்க்களத்தில், இறந்து கிடந்த பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துச்
செம் களம் துழவுவோள் சிதைந்து வேறு ஆகியசிவந்த போர்க்களம் முழுவதும் தன் மகனின் உடலைத் தேடியவள். சிதைந்து வேறு வேறாக
படு மகன் கிடக்கை காணூஉவெட்டுப்பட்டு அவன் உடல் கிடப்பதைக் கண்டு,
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளேஅவனைப் பெற்றபோது அடைந்ததைவிட பெருமகிழ்ச்சி அடைந்தாள்.
                                     
# 279 ஒக்கூர் மாசாத்தியார்# 279 ஒக்கூர் மாசாத்தியார்
கெடுக சிந்தை கடிது இவள் துணிவேஇவளது சிந்தை கெடுக; இவளது துணிவு மிகவும் கடுமையானது.
மூதின் மகளிர் ஆதல் தகுமேமுதுமையான மறக்குலப் பெண் என்று சொன்னால் அதற்கு இவள் தகுதியானவள்.
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னைமுந்தாநாள் நடைபெற்ற போரில், இவளுடைய தந்தை,
யானை எறிந்து களத்து ஒழிந்தனனேயானையைக் கொன்று தானும் வீழ்ந்து மாண்டான்;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்            5நேற்று நடைபெற்ற போரில், இவள் கணவன்
பெரு நிரை விலங்கி ஆண்டு பட்டனனேஆநிரைகளைக் கவர்ந்து செல்வோரைக் குறுக்கிட்டுத்தடுத்து அப் போரில் இறந்தான்;
இன்றும் செரு பறை கேட்டு விருப்பு_உற்று மயங்கிஇன்றும் ஒலிக்கிற போர்ப்பறை கேட்டு, மறப் புகழ் மேல் விருப்பம்கொண்டு அறிவு மயங்கி
வேல் கை கொடுத்து வெளிது விரித்து உடீஇவேலினைக் கையில் கொடுத்து, வெண்ணிற ஆடையை எடுத்து விரித்து, இடுப்பில் உடுத்தி,
பாறு மயிர் குடுமி எண்ணெய் நீவிபரட்டை மயிர்க் குடுமியில் எண்ணெய் தடவி,
ஒரு மகன் அல்லது இல்லோள்                 10இந்த ஒரு மகனைத் தவிர வேறு மகன் இல்லாதவள்
செருமுகம் நோக்கி செல்க என விடுமே“போர்க்களத்தை நோக்கிச் செல்க” என்று அனுப்பினாள்.
                                     
# 280 மாறோக்கத்து நப்பசலையார்# 280 மாறோக்கத்து நப்பசலையார்
என் ஐ மார்பில் புண்ணும் வெய்யஎன் கணவனின் மார்பில் புண்ணும் கடுமையானதாக இருக்கிறது;
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்நடுப்பகலில் வந்து வண்டுகளும் மொய்த்து ஒலிக்கின்றன;
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லாஎன்னுடைய பெரிய மாளிகைப் பிரகாரங்களின் விளக்குகள் நின்று எரியாமல் அவிந்துவிடுகின்றன;
துஞ்சா கண்ணே துயிலும் வேட்கும்அவன் அருகிருந்து உறங்காத என் கண்கள் உறக்கத்தை விரும்புகின்றன;
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்               5அச்சத்தைத் தரும் கூகை தன் குரலால் அலறுகிறது;
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்நெல்லும் நீரும் சொரிந்து விரிச்சி கேட்கும்
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பாசெம்மைப்பண்புள்ள முதிய பெண்டிரின் சொற்களிலும் முழுமை இல்லை;
துடிய பாண பாடு வல் விறலிதுடியனே! பாணனே! பாடுவதில் வல்ல விறலியே!
என் ஆகுவிர்-கொல் அளியிர் நுமக்கும்நீங்கள் என்ன ஆவீர்களோ? நீங்கள் இரங்கத்தக்கவர்கள்; உங்களுக்கும்
இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும்                10இவ்விடத்து வாழும் வாழ்க்கையோ அரிது; நானும்
மண்_உறு மழி தலை தெண் நீர் வாரநீராடிய பிறகு மொட்டைத் தலையில் இருந்து தெளிந்த நீர் ஒழுக,
தொன்று தாம் உடுத்த அம் பகை தெரியல்முன்பு இளமைக் காலத்தில் உடுத்திய அழகிய மாறுபட்ட தழைமாலையாக விளங்கிய
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும்சிறிய வெள்ளாம்பலில் உண்டாகும் அல்லியரிசியை உண்ணும்
கழி_கல_மகளிர் போலஅணிகலன்கள் அணியாத கைம்பெண்கள் போலத்
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே              15இனி வாழும் வகையை நினைத்து வருந்தி இங்கு நான் உயிர் வாழ்வது அதனினும் அரிது.
                                     
  
  
  
  
  
# 281 அரிசில் கிழார்# 281 அரிசில் கிழார்
தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇஇனிய கனியைத் தரும் இரவமரத்தின் இலையோடு வேப்பிலையையும் சேர்த்து வீட்டில் செருகி,
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்கவளைந்த தண்டையுடைய யாழோடு பலவகை இசைக்கருவிகளும் ஒலிக்க,
கை பய பெயர்த்து மை இழுது இழுகிகையால் மெல்ல எடுத்து மைபோன்ற சாந்தைத் தலைவனின் புண்களில் மெழுகி,
ஐயவி சிதறி ஆம்பல் ஊதிவெண்சிறுகடுகுகளைத் தூவி, ஆம்பல் தண்டை ஊதி,
இசை மணி எறிந்து காஞ்சி பாடி                     5ஓசையைச் செய்யும் மணியை ஒலித்து, காஞ்சிப் பண்ணைப் பாடி,
நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇநெடிய அரண்மனை பிரகாரங்களில் முழுதும் நல்ல மணமுள்ள புகையை எழுப்பி,
காக்கம் வம்மோ காதல் அம் தோழீகாப்போம்., வாருங்கள்! அன்புடைய தோழிகளே! 
வேந்து உறு விழுமம் தாங்கியவேந்தனுக்கு உண்டாகிய துன்பத்தைத் தான் தாங்கிய,
பூம் பொறி கழல் கால் நெடுந்தகை புண்ணேபூ வேலைப்பாடு அமைந்த கழல் பூண்ட பெருந்தகைக்கு உண்டாகிய புண்களை – (காப்போம்., வாருங்கள்!)
                                     
# 282 பாலை பாடிய பெருங்கடுங்கோஇ# 282 பாலை பாடிய பெருங்கடுங்கோ
எஃகு உளம் கழிய இரு நில மருங்கின்மார்பை வேல் ஊடுருவிச் செல்ல, இப்பெரிய உலகில்
அரும் கடன் இறுத்த பெருஞ்செயாளனைசெய்தற்கரிய கடமைகளைச் செய்த, மிகுந்த செயல் புரியும் சான்றோனாகிய மறவனை
யாண்டு உளனோ என வினவுதி ஆயின்எவ்விடத்து உள்ளான் என்று கேட்கின்றீரெனில்
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம்தன்னை நோக்கி வரும் மாற்றார் படையை எதிர்கொள்ளக் கிளர்ந்தெழும் மாலையணிந்த மார்பைத்
அரும் கடன் இறும்-மார் வயவர் எறிய                5தம் அரிய கடமைகளை நிறைவேற்றும் வகையில் பகைவர்கள் தாக்கியதால்,
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றேஅம்பு, வேல் ஆகியவை தைத்து அவன் உடல் தெரியாமல் போய், உயிரும் நீங்கியது;
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழியபோரிடும் பகைவர் பின்வாங்கித் தம் எதிர்ப்பு குலைந்து வலிமை தொலைதலால்,
அலகை போகி சிதைந்து வேறு ஆகியகாக்கக்கூடிய தன்மை இழந்து, உருத்தெரியாமல் சிதைந்து பலவேறு துண்டுகளாகிய
பலகை அல்லது களத்து ஒழியாதேஅவனுடைய கேடயம் கிடப்பதைத் தவிர, அவன் போர்க்களத்தில் கிடந்து ஒழியாமல்
சேண் விளங்கு நல் இசை நிறீஇ                      10நெடுந்தொலைவுக்கு விளங்கும் நல்ல புகழை நிறுவி,
நா நவில் புலவர் வாய் உளானேநாவால் நல்லுரைகளைக் கூறும் புலவர்களின் வாயிலிருந்து வரும் செய்யுளில் உள்ளான்.
                                     
# 283 அடை நெடும் கல்வியார்# 283 அடை நெடும் கல்வியார்
ஒண் செங்குரலி தண் கயம் கலங்கிஒளிபொருந்திய செங்குரலிக்கொடி நிறைந்த குளிர்ந்த நீர்நிலை கலங்க,
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉவாளைமீனை நீர்நாய் தனக்கு அன்றைய உணவாகப் பெற்று உண்டு,
பெறாஅ உறை அரா வராஅலின் மயங்கிஉணவு இல்லாமல் அங்கே வாழும் பாம்புகளை வரால்மீன் எனக்கருதி மயங்கி
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும்தன்னிடம் பகைகொள்ளும் முதலைகளோடு மாறிமாறிப் பகைகொண்டும் விலகியும் போகும்
அழும்பு இலன் அடங்கான் தகையும் என்றும்           5அழும்பில் என்னும் ஊருக்குத் தலைவன், அடங்காதவனாக எதிர்நின்று போரிடுவான் என்று எண்ணி,
வலம்புரி கோசர் அவை_களத்தானும்வெற்றியை விரும்பும் கோசருடைய அவைக்களத்திலும்
மன்றுள் என்பது கெட —————– தானே பாங்கற்குபோர்க்களத்தின் நடுவிடமும் இல்லையாக ———- தான் தோழன்பொருட்டு
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்கஆரக்கால்கள் சூழச் செருகப்பட்டுத் தோன்றும் குடம் போல, வேல் மார்பில் பாய்ந்து அழுத்தித் தங்க
உயிர் புறப்படாஅ அளவை தெறுவரதோழனின் உயிர் உடலிலிருந்து நீங்குவதற்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் அளவில், கோபங்கொண்டு
தெற்றி பாவை திணி மணல் அயரும்            10திண்ணையில் வைத்து விளையாடும் பாவையைத் திணிந்த மணலில் வைத்து விளையாடும்
மென் தோள் மகளிர் நன்று புரப்பமென்மையான தோள்களையுடைய மகளிர் மிகவும் பேணி வளர்க்கத்
இமிழ்ப்பு_உற நீண்ட பாசிலைதுளிர்விட்டுத் தழைத்த நீண்ட பசிய இலைகளையுடைய
கமழ் பூ தும்பை நுதல் அசைத்தோனேமணக்கும் தும்பைப் பூ மாலையை நெற்றியில் கட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டான்.
                                     
# 284 ஓரம் போகியார்# 284 ஓரம் போகியார்
வருக தில் வல்லே வருக தில் வல் என“விரைந்து வருக, விரைந்து வருக” என்று
வேந்து விடு விழு தூது ஆங்காங்கு இசைப்பவேந்தன் அனுப்பிய சிறந்த தூதுவர் ஆங்காங்கு சென்று தெரிவிக்க,
நூல் அரி மாலை சூடி காலின்நூலால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிக்கொண்டு, காலால் நடந்து
தமியன் வந்த மூதிலாளன்தனியனாய் வந்த மறக்குடி மறவன்,
அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த            5கடுமையான போரில் பகைவரை மேலே செல்லாதவாறு தடுத்து முன்னே சென்று வெட்டி வீழ்த்தின
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆகயானையின் பிணத்தின் தந்தங்களை தன் வாளின் வளைவை நிமிர்த்தும் அமைப்பாகக் கொண்டு
திரிந்த வாய் வாள் திருத்தாவளைந்து கோணிய வாளை நிமிர்த்திக்கொண்டு
தனக்கு இரிந்தானை பெயர் புறம் நகுமேதன்னைக்கண்டு பயந்தோடிய பகைவனை, அவன் திருப்பிக்காட்டிய முதுகைக் கண்டு சிரிப்பான்.
                                     
# 285 அரிசில் கிழார்# 285 அரிசில் கிழார்
பாசறையீரே பாசறையீரேபாசறையில் உள்ளவர்களே! பாசறையில் உள்ளவர்களே!
துடியன் கையது வேலே அடி புணர்துடியனின் கையில் இருக்கிறது வேல்; அடியில் இணைக்கப்பட்ட
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை சீறியாழ்வளைந்த கரிய தண்டோடு, இனிய இசையை எழுப்பும் நரம்புகளுடன் கூடிய சிறிய யாழையுடைய
பாணன் கையது தோலே காண்வரபாணனின் கையில் இருக்கிறது கேடயம்; கண்ணுக்கு இனியதாக
கடும் தெற்று மூடையின் ————————-                 5மிகவும் நெருக்கமாக அடுக்கிய மூட்டைகள் போல ————————————–
வாடிய மாலை மலைந்த சென்னியன்வாடிய மாலையைத் தலையில் அணிந்த தலைவன்,
வேந்து தொழில் அயரும் அரும் தலை சுற்றமொடுவேந்தனுக்கு வேண்டிய செயல்களைச் செய்யும் அரிய அமைச்சர் போன்ற தலைமைவாய்ந்த சுற்றத்தாரோடு
நெடு நகர் வந்து என விடு கணை மொசித்தநெடிய அரண்மனைக்கு வந்தானாக, பகைவர்கள் எய்த அம்புகள் மொய்த்த
மூரி வெண் தோள் ——————————–வலிய வெள்ளிய தோள் ……………………………………
சேறுபடு குருதி செம்மல் உக்கு ஓஒ         10நிலத்தைச் சேறாக்கும் குருதியைத் தலைவன் சொரிந்து, ஐயோ!
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போகபகைவர்கள் சினத்துடன் எறிந்த நெடிய வேல் அவன் மார்பை ஊடுருவிப் புதைந்து நிற்க,
நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனேமாமிசம் படிந்த கழலுடன் நிலத்தில் வீழ்ந்தான்.
அது கண்டு பரந்தோர் எல்லாம் புகழ தலை பணிந்துஅவன் வீழ்ந்ததைக் கண்டு, அங்கிருந்த சான்றோரெல்லாம் புகழ, நாணித் தலைகுனிந்து
இறைஞ்சியோனே குருசில் பிணங்கு கதிர்வணங்கினான், குருசிலாகிய அவன்; கதிர்கள் தம்முள் பின்னிக்கொண்டு
அலமரும் கழனி தண்ணடை ஒழிய                15அசையும் கழனிகளையுடைய மருதநிலத்து ஊர்களைத் தவிர (முன்னே இரவலர்க்குக் கொடுத்துவிட்டதால்)
இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர்வறுமையுற்ற இரவலராகிய சுற்றத்தின் தலைவனுக்கு (எஞ்சிநின்ற) ஒரு
கரம்பை சீறூர் நல்கினன் எனவேசாகுபடி செய்யக்கூடிய கரம்பை மண்ணுள்ள நிலமுள்ள சிறிய ஊரைப் பரிசாகக் கொடுத்தான்.” என்று – 
                                     
# 286 ஔவையார்# 286 ஔவையார்
வெள்ளை வெள்யாட்டு செச்சை போலவெண்மையான நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்கள் போலத்
தன்னோர் அன்ன இளையர் இருப்பதன்னைப் போன்ற இளைஞர்கள் பலர் இருக்கவும்,
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைஅந்தப் பலருக்கும் மேலாக என் மகனுக்கு நீட்டித் தரப்பட்ட மண்டையிலுள்ள கள், என் மகனைக்
கால்_கழி_கட்டிலில் கிடப்பிகால் இல்லாத கட்டிலாகிய பாடையில் கிடத்தி
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே           5தூய வெண்ணிறப் போர்வையால் இன்னும் போர்க்கவில்லையே.
                                     
# 287 சாத்தந்தையார்# 287 சாத்தந்தையார்
துடி எறியும் புலையதுடிப் பறையை அடிக்கும் புலையனே!
எறி கோல் கொள்ளும் இழிசினகுறுந்தடியால் பறையடிக்கும் பறையோனே!
கால மாரியின் அம்பு தைப்பினும்கார்காலத்து மழைபோல் அம்புகள் உடம்பில் தைத்தாலும்,
வயல் கெண்டையின் வேல் பிறழினும்வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போல வேற்படை வந்து பாய்ந்தாலும்,
பொலம் புனை ஓடை அண்ணல் யானை              5பொன்னாலான நெற்றிப்பட்டம் அணிந்த தலைமை பொருந்திய யானைகள்
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும்விளங்குகின்ற, வெண்மையான தந்தங்களின் நுனியை அமிழ்த்துக் குத்தினாலும்,
ஓடல் செல்லா பீடு உடையாளர்அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய வீரர்கள்
நெடு நீர் பொய்கை பிறழிய வாளைஆழமான நீருடைய பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன்
நெல் உடை நெடு நகர் கூட்டு முதல் புரளும்நெல்வளமிக்க நீண்ட வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டின் அடிப்பக்கத்தில் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது படினே              10மருதநிலத்து ஊர்களைப் பெறுவதால் என்ன பயன்? வீரர்கள் போரில் இறந்தால்,
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும்அவர்கள் குற்றமற்ற மகளிரை மணந்து மிகவும் இன்பத்தை
உயர்_நிலை_உலகத்து நுகர்ப அதனால்மேலுலகத்தில் அனுபவிப்பார்கள். அதனால்,
வம்ப வேந்தன் தானைகுறும்பு செய்யும் பகைவேந்தனுடைய படையின்
இம்பர் நின்றும் காண்டிரோ வரவேவரவை இங்கே இருந்து காண்பீராக.
                                     
# 288 கழாத்தலையார்# 288 கழாத்தலையார்
மண் கொள வரிந்த வை நுதி மருப்பின்மண்ணைக் குத்தியதால் வரிவரியாகக் கோடுகள் உள்ள கூரிய கொம்பினையுடைய
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்துதலைமை பொருந்திய நல்ல காளைகள் இரண்டைப் போரிடச் செய்து,
வென்றதன் பச்சை சீவாது போர்த்தவெற்றிபெற்ற காளையின் தோலை உரித்து, மயிர் சீவாத அத்தோலால் போர்த்தப்பட்ட,
திண் பிணி முரசம் இடை புலத்து இரங்கஇறுக்கமாகக் கட்டப்பட்ட முரசு போர்க்களத்தின் நடுவே ஒலிக்க,
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர                5தடுத்தற்கரிய போர் நடந்த அப்போர்க்களத்தில் சினம் தோன்ற,
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்துபகைவர் எறிந்த நெடிய வேல் வந்து பாய்ந்ததால் நாணமடைந்த நெஞ்சத்துடன்
அரு குறை ஆற்றி வீழ்ந்தான் மன்றஅரிய செயலைச் செய்து மடிந்து வீழ்ந்தான்,
குருதியொடு துயல்வரும் மார்பின்குருதியோடு ஏறியிறங்கும் அவனது மார்பைத்
முயக்கு இடை ஈயாது மொய்த்தன பருந்தேதழுவவந்த அவன் மனைவியைத் தழுவவிடாமல் பருந்துகள் அவன் உடலை மொய்த்தன.
                                     
# 289 கழாத்தலையாரி# 289 கழாத்தலையாரி
ஈர செவ்வி உதவின ஆயினும்ஈரமுள்ள பருவம் மாறுவதற்குமுன் உழுவதற்கு உதவிசெய்தன என்றாலும்,
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கிதனக்குள்ள பல எருதுகளிலும் நல்ல எருதுகளைத் தேர்வுசெய்யும்பொருட்டு
வீறு_வீறு ஆயும் உழவன் போலஅவற்றை வெவ்வேறாக ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் உழவனைனைப் போல,
பீடு பெறு தொல் குடி பாடு பல தாங்கியபெருமைபெற்ற பழமையான குடியில் பிறந்த, வழிவழியாக வரும் நற்பண்புகளைக் காத்துவரும்
மூதிலாளருள்ளும் காதலின்                 5முதுகுடி மறவர்களுக்குள் தன்மேல் கொண்டிருக்கும் அன்பால்
தனக்கு முகந்து ஏந்திய பசும்_பொன் மண்டைதனக்காக முகந்து எடுத்துத் தந்த பசும்பொன்னாலான மண்டையிலுள்ள கள்ளை
இவற்கு ஈக என்னும் அதுவும் அன்றிசினே“இவனுக்கு ஈக” என்று அரசன் அன்போடு கொடுத்துச் சிறப்பிப்பதைக் கண்டு வியப்பதை விடு;
கேட்டியோ வாழி பாண பாசறைகேட்பாயாக வாழ்க, பாணனே! பாசறையில்
பூ கோள் இன்று என்று அறையும்இன்று போர்க்குரிய பூக்கள் வழங்கப்படுகின்றன என்று தெரிவிக்கும்
மடி வாய் தண்ணுமை இழிசினன் குரலே         10தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமைப் பறையை இழிசினன் முழக்கும் ஓசையை –
  
# 290 ஔவையார்# 290 ஔவையார்
இவற்கு ஈந்து உண்-மதி கள்ளே சின போர்”அரசே, முதலில் கள்ளை இவனுக்கு அளித்துப் பின்னர் நீ உண்பாயாக; சினத்துடன் செய்யும் போரையும்,
இன களிற்று யானை இயல் தேர் குருசில்கூட்டமான யானைகளையும், நன்கு செய்யப்பட்ட தேர்களையும் உடைய தலைவனே!
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தைஉன் தந்தையின் தந்தைக்கு இவன் தந்தையின் தந்தை
எடுத்து எறி ஞாட்பின் இமையான் தச்சன்போரினில் பகைவர்கள் எறிந்த வேல்களைக் கண்ணிமைக்காமல், தச்சனால்
அடுத்து எறி குறட்டின் நின்று மாய்ந்தனனே         5ஆரக்கால்கள் செருகப்பட்ட வண்டியின் குடத்தைப் போல, தான் ஏற்று நின்று மாய்ந்தான்;
மற புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்வீரத்துடன் போர்செய்து புகழ்பெற்ற வலிமையுடைய இவனும்,
உறைப்பு_உழி ஓலை போலமழை பெய்யும்பொழுது நம்மை அதனின்று காக்கும் பனையோலையால் செய்யப்பட்ட குடை போல
மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேலேஉன்னை நோக்கி வரும் வேல்களைத் தான் ஏற்றுத் தாங்குவான்.”
                                     
  
  
  
  
  
# 291 நெடுங்கழுத்து பரணர்# 291 நெடுங்கழுத்து பரணர்
சிறாஅஅர் துடியர் பாடு வல் மகாஅஅர்சிறுவர்களே! துடி அடிப்பவர்களே! பாடும் வல்லமைபெற்ற மக்களாகிய பாணர்களே!
தூ வெள் அறுவை மாயோன் குறுகிதூய வெள்ளாடை உடுத்திய கரிய நிறமுடைய என் கணவனை நெருங்கியுள்ள
இரும் புள் பூசல் ஓம்பு-மின் யானும்பெரிய பறவைக் கூட்டத்தின் ஆரவாரத்தை நீக்குவீர்களாக; நானும்
விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென்விளரிப் பண்ணைப் பாடிச் சுற்றிவந்து, வெள்ளை நிறமுள்ள நரிகள் நெருங்கவிடாமல் ஓட்டுவேன்;
என் போல் பெரு விதுப்பு உறுக வேந்தே              5என்னைப்போலவே வேந்தனும் பெரிதும் வருந்தி நடுங்கட்டும்;
கொன்னும் சாதல் வெய்யோற்கு தன் தலைஎந்தப் பயனுமின்றி வேந்தனுக்காகச் சாக விரும்பும் என் தலைவனுக்கு, அவ்வேந்தன் தன் மார்பில் இருந்த
மணி மருள் மாலை சூட்டி அவன் தலைபல வடங்களோடு கூடிய பல மணிகள் கலந்த மாலையை அணிவித்து, என் கணவன் அணிந்திருந்த
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனேஒற்றைவட மாலையைத் தான் அணிந்துகொண்டான்.
                                     
# 292 விரிச்சியூர் நன்னாகனார்# 292 விரிச்சியூர் நன்னாகனார்
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்”அரசனுக்குக் கொடுப்பதற்காக முகந்து எடுத்த இனிய குளிர்ந்த (விலையுயர்ந்த) மதுவை,
யாம் தனக்கு உறு முறை வளாவ விலக்கிநாங்கள் அவனுக்குத் தகுதியான முறைப்படி தரம் குறைந்த கள்ளைக் கலந்து கொடுக்க, அதை மறுத்துத்
வாய் வாள் பற்றி நின்றனென் என்றுதன் குறிதவறாத வாளைக் கையில் எடுத்துக்கொண்டு எழுந்து நின்றான்” என்று
சினவல் ஓம்பு-மின் சிறு புல்லாளர்அவன் மீது சினம் கொள்ளாதீர்கள், ஆண்மையில் அவனைவிடக் குறைந்தவர்களே!
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்               5இங்கே எவ்வாறு வீரத்தோடு அவன் வாளைப் பற்றினானோ அதுபோல, போரிட வேண்டுமானால்
என் முறை வருக என்னான் கம்மென”எனக்குரிய முறை வரட்டும்.” என்று சொல்லாமல், விரைந்து
எழு தரு பெரும் படை விலக்கிமுன்னே எழுகின்ற பெரிய படையைத் தடுத்து விலக்கி
ஆண்டும் நிற்கும் ஆண்தகையன்னேஅங்கேயும் முதலில் நிற்கும் ஆண்மை உடையவன் அவன்.
                                     
# 293 நொச்சி நியமங்கிழார்# 293 நொச்சி நியமங்கிழார்
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்குத்துக்கோலுக்கும் அடங்காத யானையின் மேலே இருப்பவன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமைஅரணுக்கு வெளியில் போரிடும் பகைவரை எதிர்த்துப் போரிட வருமாறு அறையும் அழைப்புகான தண்ணுமை,
நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்போருக்கு அஞ்சி நாணி இருக்கும் ஆண்களுக்காக ஒலிக்கும்; ஆதலால்
எம்மினும் பேர் எழில் இழந்து வினை எனஎங்களைக்காட்டிலும் தன்னுடைய மிகுந்த பொலிவு வாடிப்போக, இது போரிடலால் நேர்ந்தது என்று
பிறர் மனை புகுவள்-கொல்லோ                        5பூவை விற்பதற்குப் போருக்குப் போகாதவர்கள் இருக்கும் வீடுகளுக்குப் போவாள் போலும்;
அளியள் தானே பூ_விலை_பெண்டேஇரங்கத் தக்கவள், இந்தப் பூ விற்கும் பெண். (போருக்குச் சென்றவர்களின் வீட்டுப் பெண்கள் பூ அணிவதில்லை)
                                     
# 294 பெருந்தலை சாத்தனார்# 294 பெருந்தலை சாத்தனார்
வெண்குடை மதியம் மேல் நிலா திகழ்தரவெண்மையான குடைபோலத் திகழும் திங்கள் வானத்தின் மேலிருந்து ஒளி வீசிக் கொண்டிருக்க,
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறைவீரர்கள் ஒன்றாகத் தங்கியிருக்கும் கடல் போன்ற பாசறையிலிருந்து சென்று
குமரி_படை தழீஇய கூற்று வினை ஆடவர்புதிதாகச் செய்யப்பட்ட படைக்கருவிகளைக் கைக்கொண்ட கொலைத் தொழிலைச் செய்யும் வீரர்கள்
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்துஎதிர்ப்போர் நம்மவர் என்றும் பிறர் என்றும் வேறுபாடு பாராமல் கைகலந்து போர் செய்யும் போர்க்களத்தில்,
இறையும் பெயரும் தோற்றி நுமருள்          5“உங்கள் அரசனின் பெருமையையும் உங்கள் புகழையும் தோன்றச்செய்து, உங்களுக்குள்
நாள் முறை தபுத்தீர் வம்-மின் ஈங்கு எனயாருக்கெல்லாம் வாழ்நாள் முடியப் போகிறதோ அவர்கள் என்னோடு போரிட வாருங்கள்.” என்று கூறி,
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவரும்போரிட வந்தவர்களையெல்லாம் வென்று, ஒரு பக்கமாக நிற்க, 
அரவு உமிழ் மணியின் குறுகார்பாம்பு உமிழ்ந்த மணியை எடுக்க எவரும் நெருங்காததைப் போல, எவரும் நெருங்கவில்லை.
நிரை தார் மார்பின் நின் கேள்வனை பிறரேவரிசையாக மாலையணிந்த மார்பையுடைய உன் கணவனை.
                                     
# 295 ஔவையார்# 295 ஔவையார்
கடல் கிளர்ந்து அன்ன கட்டூர் நாப்பண்கடல் எழுந்தாற் போல் அமைந்துள்ள பெரிய பாசறையோடு கூடிய போர்க்களத்தின் நடுவில்,
வெந்து வாய் மடித்து வேல் தலைப்பெயரிதீயால் சூடாக்கிக் கூர்மையாகத் தீட்டிய வேலைப் பகைவர் மீது திருப்பி,
தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின்தன் படையை முன்னால் செலுத்தித் தானும் எழுந்து சென்று, அம்பும் வேலும் பாய்ச்சிப் போரிடும் போரில்
வரு படை போழ்ந்து வாய் பட விலங்கிஎதிர்த்து வரும் பகைவர் படையைப் பிளந்து, தான் போர் செய்வதற்கு இடமுண்டாகுமாறு குறுக்கிட்டுத் தடுத்து,
இடை படை அழுவத்து சிதைந்து வேறு ஆகிய     5படைகளின் நடுவில் இருக்கும் போர்க்களத்தில், துண்டுபட்டு வேறு வேறாகக் கிடந்த,
சிறப்பு உடையாளன் மாண்பு கண்டு அருளிசிறப்பிற்குரிய தன் மகனின் மற மாண்பைக் கண்டு, அன்பு மிகுந்து,
வாடு முலை ஊறி சுரந்தனவற்றிய முலைகள் மீண்டும் பாலூறிச் சுரந்தன,
ஓடா பூட்கை விடலை தாய்க்கேபுறமுதுகு காட்டி ஓடாத கொள்கையையுடைய அந்த இளைஞனின் தாய்க்கு – 
                                     
# 296 வெள்ளை மாளர்# 296 வெள்ளை மாளர்
வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்வேப்ப மரத்தின் கிளைகளை ஒடிக்கவும், காஞ்சிப் பண் பாடவும்,
நெய் உடை கையர் ஐயவி புகைப்பவும்நெய்யுடைய கையோடு வெண்சிறுகடுகைப் புகைக்கவும் என்று
எல்லா மனையும் கல்லென்றவ்வேஎல்லா வீடுகளும் ஆரவாரமாக இருக்கின்றன;
வெந்து உடன்று எறிவான்-கொல்லோபகை வேந்தனைச் சினந்து அவனை வீழ்த்தாமல் மீளேன் என்று இவன் போர் புரிகிறான் போலும்;
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே                5அதனால்தான் நெடுந்தகையாகிய இவனின் தேர் காலம் தாழ்த்தி வந்தது.
                                     
# 297# 297
பெரு நீர் மேவல் தண்ணடை எருமைமிகுந்த நீரில் இருக்க விரும்பும் மெதுவான நடையையுடைய எருமையின்
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின்பெரிய கொம்பு போன்ற நெடிய முற்றிய நெற்றுக்களையுடைய
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணைபச்சைப் பயறு நீக்கப்பட்ட தோட்டைத் திரட்சியான படுக்கையாகக் கொண்டு
கன்று உடை மரையா துஞ்சும் சீறூர்கன்றுடன் கூடிய காட்டுப்பசு உறங்கும் சிறிய ஊர்களைக்
கோள் இவண் வேண்டேம் புரவே நார் அரி               5கொடையாகக் கொள்வதை விரும்பமாட்டோம்; நாரால் வடிக்கப்பட்டு
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்திபூக்களையிட்டு முதிரவைத்த சாடியிலுள்ள கள்ளை வாழ்த்தி,
துறை நனி கெழீஇ கம்புள் ஈனும்நீரின் பக்கத்தே பொருந்தி காட்டுக்கோழிகள் முட்டையிடும்
தண்ணடை பெறுதலும் உரித்தே வை நுதிமருதநிலத்தூர்களைப் பெறுவதும் உரியதாகும், கூர்மையான நுனியையுடைய
நெடு வேல் பாய்ந்த மார்பின்நீண்ட வேல் தைத்த மார்புடன்
மடல் வன் போந்தையின் நிற்குமோர்க்கே              10மடல் நிறைந்த வலிய பனைமரம்போல் நிற்கும் வீரர்க்கு.
                                     
# 298# 298
எமக்கே கலங்கல் தருமே தானேமுன்பெல்லாம், எங்களுக்குக் களிப்பை மிகுதியாகத் தரும் தரம் குறைந்த கலங்கிய கள்ளைக் கொடுப்பான்; தான்
தேறல் உண்ணும்-மன்னே நன்றும்களிப்பைக் குறைவாக அளிக்கும் தரம் மிகுந்த தெளிந்த கள்ளை உண்பான்; மிகவும்
இன்னான் மன்ற வேந்தே இனியேஅன்பில்லாதவனாகிவிட்டான் எம் அரசன் இப்பொழுது;
நேரார் ஆர் எயில் முற்றிபகைவருடைய கைப்பற்றுவதற்கு அரிய அரணைச் சூழ்ந்து போரிடும் நேரத்தில்,
வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே             5வாயை மடித்துச் சீழ்க்கையடித்து ஒலியெழுப்பி “நீ முந்து” என்று எங்களை ஏவுவதில்லை. 
                                     
# 299 பொன் முடியார்# 299 பொன் முடியார்
பருத்தி வேலி சீறூர் மன்னன்பருத்தியை வேலியாகக் கொண்ட சிறிய ஊரின் மன்னனுடைய,
உழுத்து அதர் உண்ட ஓய் நடை புரவிஉழுந்தின் சக்கையைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடைய குதிரைகள்
கடல் மண்டு தோணியின் படை முகம் போழகடல்நீரைப் பிளந்துகொண்டு விரையும் தோணியைப் போலப் பகைவரின் படையைப் பிளந்துகொண்டு செல்ல,
நெய்ம்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின்நெய்யூற்றி மிதித்துச் செய்த உணவை உண்ட, ஒழுங்காகக் கத்திரிக்கப்பட்ட பிடரியையுடைய,
தண்ணடை மன்னர் தார் உடை புரவி            5மருதநிலத்தூர்களையுடைய பெருவேந்தனின் மாலைகள் அணிந்த குதிரைகள்
அணங்கு உடை முருகன் கோட்டத்துதெய்வத்தன்மை வாய்ந்த முருகன் கோட்டத்தில்,
கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வேகலன்களைத் தொடாத விலக்குடைய மகளிரைப் போல அஞ்சிப் பின்னிட்டு நின்றன.
                                     
# 300 அரிசில் கிழார்# 300 அரிசில் கிழார்
தோல் தா தோல் தா என்றி தோலொடு“கேடயம் தா; கேடயம் தா” என்று கேட்கிறாயே! கேடயம் மட்டுமல்லாமல்
துறுகல் மறையினும் உய்குவை போலாய்பெரும்பாறையின் பின்னால் மறைந்துகொண்டாலும் நீ தப்ப மாட்டாய்;
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பிநேற்று, பகற்பொழுதில் நீ கொன்றவனின் தம்பி,
அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன்அகலில் இட்ட குன்றிமணி போல் சுழலும் கண்களையுடையவனாய்
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு                 5பெரிய ஊரில், காய்ச்சிய கள்ளைப் பெறுவதற்கு,
ஓர் இல் கோயின் தேருமால் நின்னேவீட்டில் புகுந்து, கள்ளை முகக்கும் கலயத்தைத் தேடுவதுபோல் உன்னைத் தேடுகிறான்.”