மூலம் | அடிநேர் உரை |
| |
# 1 கடவுள்
வாழ்த்து | # 1 கடவுள் வாழ்த்து |
கண்ணி கார்
நறும் கொன்றை காமர் | தலைமாலை கார்காலத்தில்
மலரும் மணமுள்ள கொன்றைப்பூ, அழகிய |
வண்ண மார்பின்
தாரும் கொன்றை | நிறத்தையுடைய மார்பின்
மாலையும் அந்தக் கொன்றைப்பூ, |
ஊர்தி வால்
வெள் ஏறே சிறந்த | ஏறிச்செல்லும் வாகனம்
தூய வெண்மையான காளை, சிறந்த |
சீர் கெழு
கொடியும் அ ஏறு என்ப | பெருமை பொருந்திய
கொடியும் அந்த காளையே என்று சொல்வர், |
கறை மிடறு
அணியலும் அணிந்தன்று அ கறை 5 | நஞ்சின் கறுப்பு
தொண்டையை அழகுசெய்யவும் செய்கிறது, அந்தக் கறுப்புமே |
மறை நவில்
அந்தணர் நுவலவும் படுமே | வேதத்தை ஓதும்
அந்தணரால் புகழவும்படும், |
பெண் உரு ஒரு
திறம் ஆகின்று அ உரு | பெண்வடிவம் ஒருபக்கம்
ஆயிற்று, அந்த வடிவமும் |
தன்னுள் அடக்கி
கரக்கினும் கரக்கும் | தன்னுள்ளே ஒடுக்கி
மறைக்கவும்படும், |
பிறை நுதல்
வண்ணம் ஆகின்று அ பிறை | பிறை நெற்றிக்கு
அழகானது, அந்தப் பிறையும் |
பதினெண்_கணனும்
ஏத்தவும் படுமே 10 | பதினெட்டுக்
கணங்களாலும் புகழவும்படும், |
எல்லா
உயிர்க்கும் ஏமம் ஆகிய | எல்லா உயிர்களுக்கும்
பாதுகாவலாகிய |
நீர் அறவு
அறியா கரகத்து | நீர் இல்லாமல்போவதை
அறியாத கமண்டலத்தைக் கொண்ட |
தாழ் சடை
பொலிந்த அரும் தவத்தோற்கே | தாழ்ந்து விழும்
சடையாலும் பொலிந்த, செய்வதற்கு அரிய தவத்தை உடையவனுக்கு |
| |
# 2
முரஞ்சியூர் முடிநாகராயர் | # 2 முரஞ்சியூர்
முடிநாகராயர் |
மண் திணிந்த
நிலனும் | மண் செறிவாய்
அமைந்துள்ள நிலமும், |
நிலம் ஏந்திய
விசும்பும் | அந்த நிலம்
ஏந்திநிற்கும் ஆகாயமும், |
விசும்பு தைவரு
வளியும் | அந்த ஆகாயத்தைத்
தடவிவரும் காற்றும், |
வளி தலைஇய
தீயும் | அந்தக் காற்றினால்
எழுந்த தீயும், |
தீ முரணிய
நீரும் என்று ஆங்கு 5 | அந்தத் தீயுடன்
மாறுபட்ட நீரும் என்று |
ஐம் பெரும்
பூதத்து இயற்கை போல | ஐந்துவகையான பெரிய
பூதத்தினது தன்மை போல |
போற்றார்
பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் | பகைவரைப்
பொறுத்தருளுதலும், சிந்திக்கும் அறிவாற்றலில் விசாலமும் |
வலியும்
தெறலும் அளியும் உடையோய் | வலிமையும், பகைவரை
அழித்தலும், அவர் வணங்கினால் அவருக்கு அருள்செய்தலும் உடையவனே! |
நின் கடல்
பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் | உன் கடலில் தோன்றிய
ஞாயிறு, மீண்டும் உன் |
வெண் தலை புணரி
குட கடல் குளிக்கும் 10 | வெள்ளிய தலை (நுரை)
பொருந்திய அலைகளையுடைய மேற்குக் கடலில் மூழ்கும், |
யாணர் வைப்பின்
நன் நாட்டு பொருந | புதுவருவாயை இடையறாது
கொண்ட ஊர்களையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தனே! |
வான வரம்பனை
நீயோ பெரும | வானத்தை எல்லையாக
உடையவனே! பெருமானே! நீயே |
அலங்கு உளை
புரவி ஐவரோடு சினைஇ | ஆடுகின்ற தலையாட்டம்
அணிந்த குதிரைகளையுடைய பாண்டவர் ஐவருடன் சினந்து |
நிலம்
தலைக்கொண்ட பொலம் பூ தும்பை | அவரின் நிலத்தைத்
தம்மிடம் எடுத்துக்கொண்ட பொன்னாலான தும்பைப் பூவினையுடைய |
ஈர்_ஐம்பதின்மரும்
பொருது களத்து ஒழிய 15 | கௌரவர் நூற்றுவரும்
போரிட்டுப் போர்க்களத்தில் மடியுமட்டும் |
பெரும் சோற்று
மிகு பதம் வரையாது கொடுத்தோய் | பெரும் சோறாகிய மிக்க
உணவை இரு படைக்கும் குறைவின்றிக் கொடுத்தவனே! |
பாஅல்
புளிப்பினும் பகல் இருளினும் | பால்
புளித்துப்போனாலும், சூரியன் இருண்டுபோனாலும், |
நாஅல் வேத நெறி
திரியினும் | நான்கு வேதத்தினது
ஒழுக்கம் மாறுபட்டுப்போனாலும், |
திரியா
சுற்றமொடு முழுது சேண் விளங்கி | மாறுபடாத அமைச்சர்,
படைத்தலைவர் முதலிய சுற்றத்துடன் குறைவின்றி நெடுங்காலம் புகழுடன் விளங்கி |
நடுக்கு இன்றி
நிலியரோ அத்தை அடுக்கத்து 20 | மனக்கலக்கம் இன்றி
நிற்பாயாக, பக்க மலையில் |
சிறு தலை நவ்வி
பெரும் கண் மா பிணை | சிறிய தலையையுடைய
குட்டிகளுடன் பெரிய கண்களைக் கொண்ட பெண்மான்கள் |
அந்தி அந்தணர்
அரும் கடன் இறுக்கும் | மாலையில் அந்தணர் தம்
அரிய கடனாகிய ஆவுதியைப் பண்ணும் |
முத்தீ
விளக்கில் துஞ்சும் | முத்தீயாகிய
விளக்கின்கண்ணே தூங்கும் |
பொன் கோட்டு
இமயமும் பொதியமும் போன்றே | பொற்சிகரங்களைக் கொண்ட
இமயமலையும் பொதிகை மலையும் போன்றே. |
| |
# 3 இரும்பிடர்
தலையார் | # 3 இரும்பிடர்
தலையார் |
உவவு மதி
உருவின் ஓங்கல் வெண்குடை | நிறைமதியின்
வடிவத்தைப் போன்ற உயர்ந்த வெண்கொற்றக்குடை |
நிலவு கடல்
வரைப்பின் மண்_அகம் நிழற்ற | நிலைபெற்ற கடலே
எல்லையாகக் கொண்ட நிலத்தை நிழல்செய்ய, |
ஏம முரசம்
இழுமென முழங்க | பாதுகாக்கும்
வீரமுரசம் இழுமென்று முழங்க, |
நேமி உய்த்த
நேஎ நெஞ்சின் | ஆளுகை என்னும்
ஆஞ்ஞாசக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும், |
தவிரா ஈகை
கவுரியர் மருக 5 | ஒழியாத ஈகைக்
குணத்தையும் உடைய பாண்டியர் மரபினனே! |
செயிர் தீர்
கற்பின் சே_இழை கணவ | குற்றமற்ற
கற்பினையுடைய சிறந்த அணிகலன் அணிந்தவளுக்குக் கணவனே! |
பொன் ஓடை புகர்
அணி நுதல் | பொன்னால் செய்த
முகபடாத்தைப் புள்ளிகளைக் கொண்ட நெற்றியில் கொண்ட, |
துன் அரும்
திறல் கமழ் கடாஅத்து | அணுக முடியாத
வலிமையையும் மணங்கமழும் மதநீரையும் |
எயிறு படை ஆக
எயில் கதவு இடாஅ | கொம்பினையே
படைக்கலமாகக்கொண்டு கோட்டைக் கதவைக் குத்தும், |
கயிறு
பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கில் 10 | கயிற்றால்
பிணிக்கப்பட்ட கவிழ்ந்த மணிகளைப் பக்கத்தில் கொண்ட, |
பெரும் கை யானை
இரும் பிடர் தலை இருந்து | நீண்ட கையையும் உடைய
யானையின் பெரிய கழுத்திடத்தில் இருந்து |
மருந்து இல்
கூற்றத்து அரும் தொழில் சாயா | விலக்கமுடியாத யமனின்
கொலைத்தொழிலுக்குச் சற்றும் இளைக்காத |
கரும் கை ஒள்
வாள் பெரும் பெயர் வழுதி | வலிமையுள்ள கையில்
இருக்கும் ஒளிரும் வாளினையுடைய பெரும் புகழ்வாய்ந்த வழுதியே! |
நிலம்
பெயரினும் நின் சொல் பெயரல் | நிலமே பிறழ்ந்தாலும்
உன் ஆணையாகிய சொல் பிறழாதிருக்கவேண்டும், |
பொலம் கழல்
கால் புலர் சாந்தின் 15 | பொன்னால் செய்த
வீரக்கழல் அணிந்த காலினையும், பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய |
விலங்கு அகன்ற
வியன் மார்ப | குறுக்கே அகன்ற பரந்த
மார்பினையும் உடையவனே! |
ஊர் இல்ல உயவு
அரிய | ஊர்கள் இல்லாதனவும்,
தப்பிவருவதற்கு கடினமானவையும், |
நீர் இல்ல நீள்
இடைய | நீர்நிலை இல்லாதனவும்
ஆகிய நீண்ட வெளியில், |
பார்வல்
இருக்கை கவி கண் நோக்கின் | நெடுந்தூரம்
பார்க்கத்தக்க இடத்தில் இருந்து, கையைக் கண்மீது கவிழ்த்துப் பார்த்து |
செம் தொடை
பிழையா வன்கண் ஆடவர் 20 | குறியில் தப்பாத
கொடுமை நிறைந்த மறவர் |
அம்பு விட
வீழ்ந்தோர் வம்ப பதுக்கை | அம்பினை ஏவ, அதனால்
இறந்தோரின் உடலை மூடிய அண்மைய கற்குவியல்களையுடைய, |
திருந்து சிறை
வளை வாய் பருந்து இருந்து உயவும் | திருத்தமான
சிறகுகளையும், வளைந்த வாயினையும் உடைய பருந்து இருந்து வருந்தும் |
உன்ன மரத்த
துன் அரும் கவலை | உன்ன மரங்களையுடைய
நெருங்க முடியாத பல்வேறாய்ப் பிரியும் வழிகளில் |
நின் நசை
வேட்கையின் இரவலர் வருவர் அது | உன்னை விரும்பிய
வேட்கையால் இரவலர்கள் வருவர், அது |
முன்னம்
முகத்தின் உணர்ந்து அவர் 25 | அவரின் மனக்குறிப்பை
அவர் முகத்தால் அறிந்து அவரின் |
இன்மை
தீர்த்தல் வன்மையானே | வறுமையைத்
தீர்த்துவைப்பதில் நீ வல்லவன் என்பதனால். |
| |
# 4 பரணர் | # 4 பரணர் |
வாள் வலம் தர
மறு பட்டன | வாள், வெற்றியைத்
தருவதால் குருதிக்கறை படிந்தன, |
செம் வானத்து
வனப்பு போன்றன | செக்கர் வானத்தின்
அழகை ஒத்தன; |
தாள் களம் கொள
கழல் பறைந்தன | கால், போர்க்களத்தைத்
தமதாக்கிக்கொள்ள அலைந்ததால் கழல்கள் தேய்ந்துபோயின, |
கொல்ல் ஏற்றின்
மருப்பு போன்றன | கொல்லும் காளையின்
கொம்பினைப் போன்றன; |
தோல் துவைத்து
அம்பின் துளை தோன்றுவ 5 | கேடகங்கள், தைத்த
அம்புகளால் துளையுடன் இருப்பன, |
நிலைக்கு ஒராஅ
இலக்கம் போன்றன | (பயிற்சியில்)குறிதப்பாமல்
அம்புகள் எய்த இலக்குகள் போன்றன; |
மாவே
எறி_பதத்தான் இடம் காட்ட | குதிரைகளோ, எதிரியைத்
தாக்கும் நேரம் பார்ப்பவன், இடமும், வலமுமாகிய இடங்களைக் காட்ட, |
கறுழ் பொருத
செம் வாயான் | கடிவாளம் தேய்த்த
சிவந்த வாயை உடைமையால் |
எருத்து வவ்விய
புலி போன்றன | தன் இரையின் கழுத்தைக்
கவ்விய புலியைப் போன்றன; |
களிறே கதவு
எறியா சிவந்து உராஅய் 10 | களிறுகளோ, கதவை
முறித்துக் கண் சிவந்து மோதி |
நுதி மழுங்கிய
வெண் கோட்டான் | நுனி மழுங்கிய
வெண்மையான கொம்புகளால் |
உயிர் உண்ணும்
கூற்று போன்றன | உயிரை உண்ணும்
கூற்றுவனைப் போன்றன; |
நீயே அலங்கு
உளை பரீஇ இவுளி | நீதான், அசையும்
தலையாட்டமுடைய விரைந்து இயங்கும் குதிரைகளுடன் |
பொலம் தேர்
மிசை பொலிவு தோன்றி | பொன்னாலான தேர் மீது
பொலிவுடன் தோன்றி |
மா கடல்
நிவந்து எழுதரும்
15 | பெரிய கரிய கடல் நடுவே
உயர்ந்து எழுகின்ற |
செம் ஞாயிற்று
கவினை மாதோ | சிவந்த ஞாயிற்றின்
அழகுடன் விளங்குகிறாய்; |
அனையை ஆகன்
மாறே | நீ
அத்தன்மையுடையவனாயிருப்பதால் |
தாய் இல் தூவா
குழவி போல | தாயில்லாத உண்ணாத
குழந்தையைப் போல |
ஓவாது கூஉம்
நின் உடற்றியோர் நாடே | ஓயாமல் அழும் உன்னைப்
பகைத்தவர் நாடுகள். |
| |
# 5 நரிவெரூஉ
தலையார் | # 5 நரிவெரூஉ தலையார் |
எருமை அன்ன
கரும் கல் இடை-தோறு | எருமை போன்ற கரும்
பாறைகள் இருக்கும் இடங்கள்தோறும் |
ஆனில் பரக்கும்
யானைய முன்பின் | பசுக்களைப் போலப்
பரவிக்கிடக்கும் யானைகளை உடையவனே! வலிமையுடன் |
கானக நாடனை
நீயோ பெரும | காட்டகத்து அமைந்த
நாட்டினையுடையவனே! பெருமானே! |
நீ ஓர் ஆகலின்
நின் ஒன்று மொழிவல் | நீ ஒருவனே தனித்துச்
சிறந்து விளங்குவதால் உன்னிடம் ஒன்று கூறுவேன், |
அருளும்
அன்பும் நீக்கி நீங்கா
5 | அருளும் அன்பும்
இல்லாமல் நீங்காத |
நிரயம்
கொள்பவரொடு ஒன்றாது காவல் | நரகத்தைச்
சேர்ந்தவருடன் ஒன்றாமல், உன்னால் காக்கப்படும் நாட்டைக் |
குழவி
கொள்பவரின் ஓம்பு-மதி | குழந்தையைக்
கையாள்பவரைப் போல் பேணிப் பாதுகாத்திடுக, |
அளிதோ தானே அது
பெறல் அரும்-குரைத்தே | அத்தகைய காவல்
அருளுடையது, பெறுவதற்கு மிகவும் அரியது. |
| |
# 6 காரிகிழார் | # 6 காரிகிழார் |
வடாஅது பனி படு
நெடு வரை வடக்கும் | வடக்கிலிருக்கும் பனி
தங்கிய நெடிய இமயமலையின் வடக்கும், |
தெனாஅது உரு
கெழு குமரியின் தெற்கும் | தெற்கிலிருக்கும்
அச்சந்தரும் குமரியாற்றின் தெற்கும், |
குணாஅது கரை
பொரு தொடு கடல் குணக்கும் | கிழக்கிலிருக்கும்
கரையை மோதுகின்ற சகரரால் தோண்டப்பட்ட கடலின் கிழக்கும், |
குடாஅது தொன்று
முதிர் பௌவத்தின் குடக்கும் | மேற்கிலிருக்கும்
பழையதாய் முதிர்ந்த பெருங்கடலின் மேற்கும், |
கீழது மு புணர்
அடுக்கிய முறை முதல் கட்டின் 5 | கீழேயிருக்கும்,
நிலம், வான், சுவர்க்கம் என்ற மூன்றும் சேர்ந்து அடுக்கிய முறையில் முதலாவதான |
நீர் நிலை
நிவப்பின் கீழும் மேலது | நீர்நிலையிலிருந்து
உயர்ந்து தோன்றும் நிலத்திற்குக் கீழேயும், மேலேயிருக்கும் |
ஆனிலை_உலகத்தானும்
ஆனாது | ஆனிலையுலகம் எனப்படும்
கோ லோகத்திலும் அடங்காத |
உருவும்
புகழும் ஆகி விரி சீர் | அச்சமும் புகழும்
உன்னுடையதாகி, பெரிய அளவில் |
தெரி கோல்
ஞமன்ன் போல ஒரு திறம் | சமமாக ஆராயும்
துலாக்கோலின் நடுவூசி போல ஒரு பக்கத்தில் |
பற்றல் இலியரோ
நின் திறம் சிறக்க 10 | சாயாது இருப்பாயாக;
உன் படை, குடி முதலியன சிறந்துவிளங்கட்டும்; |
செய்_வினைக்கு
எதிர்ந்த தெவ்வர் தேஎத்து | போர் செய்ய
எதிர்த்துவந்த பகைவரின் நாடுகளில் |
கடல் படை
குளிப்ப மண்டி அடர் புகர் | உனது கடல் போன்ற படை
உள்ளே புகுந்து முன்செல்ல, அடர்ந்த புள்ளிகளையும் |
சிறு கண் யானை
செவ்விதின் ஏவி | சிறிய கண்களையும் உடைய
யானைப்படையை தடையின்றி நேரே ஏவி, |
பாசவல் படப்பை
ஆர் எயில் பல தந்து | பசுமையான விளைநிலப்
பக்கத்தையுடைய பல அரிய அரண்களைக் கைப்பற்றி |
அ எயில் கொண்ட
செய்வு_உறு நன் கலம் 15 | அந்த அரண்களில்
கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த அணிகலன்களைப் |
பரிசில்_மாக்கட்கு
வரிசையின் நல்கி | பரிசிலர்க்கு முறையாக
வழங்கி, |
பணியியர் அத்தை
நின் குடையே முனிவர் | தாழ்வதாக நின்
வெண்கொற்றக்குடை, முனிவர்களால் துதிக்கப்படும் |
முக்கண்
செல்வர் நகர் வலம் செயற்கே | முக்கண் செல்வரான
சிவபெருமான் கோயிலை வலம்வருவதற்கு; |
இறைஞ்சுக பெரும
நின் சென்னி சிறந்த | வணங்குக, பெருமானே உன்
மணிமுடி, சிறந்த |
நான்மறை
முனிவர் ஏந்து கை எதிரே 20 | வேதங்களை ஓதும்
அந்தணர்கள் உன்னை வாழ்த்த எடுத்த கைகளின் முன்னே; |
வாடுக இறைவ
நின் கண்ணி ஒன்னார் | வாடிப்போகட்டும்
இறைவனே, உன் தலைமாலை, பகைவரின் |
நாடு சுடு கமழ்
புகை எறித்தலானே | நாடுகளை எரிக்கின்ற
மணக்கின்ற புகை தடவிச்செல்வதால்; |
செலியர் அத்தை
நின் வெகுளி வால் இழை | தணியட்டும் உன் கோபம்,
வெண்மையான முத்தாரத்தையுடைய |
மங்கையர்
துனித்த வாள் முகத்து எதிரே | உன் தேவியரின்
சிறுசினம் சேர்ந்த ஒளிமிகு முகத்தின் முன்னே; |
ஆங்க வென்றி
எல்லாம் வென்று அகத்து அடக்கிய 25 | இதுவரை வென்ற
வெற்றியினால் எழும் இறுமாப்பை வென்று, அவற்றை உன் மனத்துள் அடக்கிய, |
தண்டா ஈகை தகை
மாண் குடுமி | குறைவுபடாத
கொடைக்குணம் கொண்டு தகுதி மிகுதியும் பெற்ற குடுமியே! |
தண் கதிர்
மதியம் போலவும் தெறு சுடர் | குளிர்ந்த கதிர்களைக்
கொண்ட திங்கள் போலவும், சுடுகின்ற தீச்சுவாலைகளைக் கொண்ட |
ஒண் கதிர்
ஞாயிறு போலவும் | ஒளி பொருந்திய
கதிர்களைக் கொண்ட ஞாயிறு போலவும் |
மன்னிய பெரும
நீ நில மிசையானே | நிலைபெறுவாயாக,
பெருமானே! நீ இந்த நிலத்தின் மேல். |
| |
# 7 கருங்குழல்
ஆதனார் | # 7 கருங்குழல் ஆதனார் |
களிறு கடைஇய
தாள் | களிற்றினைச் செலுத்திய
கால்களையும், |
கழல் உரீஇய
திருந்து அடி | வீரக்கழல் உராய்கின்ற
திருத்தமான அடியினையும், |
கணை பொருது கவி
வண் கையால் | அம்புடன் போரிட்டும்,
பிறர்க்கு அள்ளித்தருவதற்காகக் கவிந்த கொடை பொருந்திய கையில் |
கண்
ஒளிர்வரூஉம் கவின் சாபத்து | கண்ணைப்பறிக்கும்
அழகுடைய வில்லையும், |
மா மறுத்த மலர்
மார்பின் 5 | திருமகள் பிறரை
மறுத்து உறையும் அகன்ற மார்பினையும், |
தோல் பெயரிய
எறுழ் முன்பின் | யானையையும்
பெயர்க்கும் மிக்க வலிமையினையும் உடையவனே! |
எல்லையும்
இரவும் எண்ணாய் பகைவர் | பகலென்றும் இரவென்றும்
பாராமல், பகைவரின் |
ஊர் சுடு
விளக்கத்து அழு விளி கம்பலை | ஊரைச் சுடுகின்ற
தீயின் வெளிச்சத்தில் அழுகையும், அரற்றுதலும் கொண்ட ஆரவாரத்திற்கிடையே |
கொள்ளை மேவலை
ஆகலின் நல்ல | கொள்ளையிடுதலை
விரும்புகின்றாய்; எனவே, நல்ல பொருள்கள் |
இல்ல ஆகுபவால்
இயல் தேர் வளவ 10 | இல்லையாகிப்போயின,
விரைவாக இயங்குகின்ற தேரையுடைய வளவனே! |
தண் புனல்
பரந்த பூசல் மண் மறுத்து | குளிர்ந்த நீர் பரந்த
ஓசையையுடைய உடைப்புகளை, மண்ணினால் அடைப்பதை விடுத்து |
மீனின்
செறுக்கும் யாணர் | மீனினால் அடைக்கும்
புதுவருவாயினையுடைய |
பயன் திகழ்
வைப்பின் பிறர் அகன் தலை நாடே | பயன் விளங்கும்
ஊர்களையுடைய மாற்றாரின் அகன்ற இடத்தையுடைய நாடுகள் – |
| |
# 8 கபிலர் | # 8 கபிலர் |
வையம் காவலர்
வழிமொழிந்து ஒழுக | உலகத்தைக் காக்கும்
அரசர் உனக்கு வழிபாடு கூறி உன் சொற்படி நடக்க, |
போகம் வேண்டி
பொதுச்சொல் பொறாஅது | இன்பத்தை நுகர
விரும்பி, நிலம் யாவர்க்கும் பொதுவானது என்ற சொல்லைப் பொறுக்கமாட்டாமல் |
இடம் சிறிது
என்னும் ஊக்கம் துரப்ப | தன் நாட்டின் இடம்
சிறியது – அதனை விரிவாக்கவேண்டும் என்னும் ஊக்கம் தன்னை உந்துதலால் |
ஒடுங்கா
உள்ளத்து ஓம்பா ஈகை | சோர்ந்து போகாத
உள்ளத்தையும், சொந்தமாக எதனையும் வைக்க எண்ணாத ஈகைப் பண்பையும், |
கடந்து அடு
தானை சேரலாதனை 5 | பகைவரை வென்று அவரைக்
கொல்லும் படையையும் உடைய சேரலாதனை, |
யாங்கனம்
ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம் | எங்ஙனம் நீ
ஒத்திருக்கிறாய், விரைவாகச் செல்லும் இயல்புடைய கதிரவனே? |
பொழுது என
வரைதி புறக்கொடுத்து இறத்தி | பகற்பொழுதை உனக்கென
வரையறுத்துள்ளாய், நிலவு எழும்போது நீ மறைவதால் நீ புறமிட்டுப்போகிறாய், |
மாறி வருதி மலை
மறைந்து ஒளித்தி | தெற்கென்றும்,
வடக்கென்றும் மாறிமாறி வருகிறாய், மலையில் மறைந்துகொண்டு ஒளிந்துகொள்கிறாய், |
அகல் இரு
விசும்பினானும் | அகன்ற பெரிய
ஆகாயத்திலும் |
பகல்
விளங்குதியால் பல் கதிர் விரித்தே
10 | பகற்பொழுதுமட்டும்
ஒளிவீசுகிறாய் உன் பலவான கதிர்களை விரித்து. |
| |
# 9
நெட்டிமையார் | # 9 நெட்டிமையார் |
ஆவும் ஆன் இயல்
பார்ப்பன மாக்களும் | பசுக்களும், பசுவைப்
போன்ற இயல்புள்ள பார்ப்பன மக்களும், |
பெண்டிரும்
பிணி உடையீரும் பேணி | பெண்களும்,
நோயாளிகளும், வழிபாட்டுடன் |
தென் புலம்
வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும் | தென் திசையில் ஆவியாக
இருக்கும் மூதாதையர்க்குப் பிதிர்க்கடன் செய்யும் |
பொன் போல்
புதல்வர் பெறாஅதீரும் | பொன் போன்ற
புதல்வர்களைப் பெறாதவர்களும், |
எம் அம்பு கடி
விடுதும் நும் அரண் சேர்-மின் என 5 | எம் அம்புகளை
விரைவாகச் செலுத்தப்போகிறோம், உம் அரண்களுக்குள் சேர்ந்துவிடுங்கள் என்று |
அறத்து ஆறு
நுவலும் பூட்கை மறத்தின் | அறநெறியைச் சொல்லும்
கொள்கையைப் பூண்ட மறத்தினையுடைய |
கொல் களிற்று
மீமிசை கொடி விசும்பு நிழற்றும் | கொல்கின்ற யானையின்
மேல் உயர்த்தப்பட்ட கொடிகள் விசும்பினுக்கு நிழலைச்செய்யும் |
எம் கோ வாழிய
குடுமி தம் கோ | எம்முடைய வேந்தனாகிய
குடுமி வாழ்வானாக, தம்முடைய முன்னோனான, |
செம் நீர்
பசும்_பொன் வயிரியர்க்கு ஈத்த | சிவந்த தன்மையுள்ள
பசும்பொன்னை கூத்தர்க்கு வழங்கிய |
முந்நீர்
விழவின் நெடியோன்
10 | முந்நீராகிய கடலின்
தெய்வத்திற்கு எடுத்த விழாவினையுடைய நெடியோன் என்பவனின் |
நன் நீர்
பஃறுளி மணலினும் பலவே | நல்ல நீரைக்கொண்ட
பஃறுளி என்னும் ஆற்றின் மணலைக்காட்டிலும் பல ஆண்டுகள் – |
| |
# 10 ஊன் பொதி
பசும் குடையார் | # 10 ஊன் பொதி பசும்
குடையார் |
வழிபடுவோரை வல்
அறிதீயே | உன்னை வழிபடுவோரை
மிகவும் நன்றாய் அறிந்துவைத்திருக்கிறாய், |
பிறர் பழி
கூறுவோர் மொழி தேறலையே | பிறர் மீது பழி
சுமத்துவோரின் சொற்களை நம்பமாட்டாய், |
நீ மெய் கண்ட
தீமை காணின் | நீ உண்மையாகக்
கண்டறிந்த தீமையை ஒருவரிடம் கண்டால் |
ஒப்ப நாடி அ தக
ஒறுத்தி | அதனை
நீதிநூல்களுக்குத் தக்கவாறு ஆராய்ந்து அத் தீமைக்குத் தகுந்தவாறு தண்டிப்பாய், |
வந்து அடி
பொருந்தி முந்தை நிற்பின் 5 | வந்து உன் பாதத்தை
அண்டி உன் முன்னே நின்றால் |
தண்டமும் தணிதி
நீ பண்டையின் பெரிதே | தண்டனையைக்
குறைப்பாய், முன்னிலும் பெரிதாக அருள்செய்வாய், |
அமிழ்து அட்டு
ஆனா கமழ் குய் அடிசில் | சுவையில் அமிழ்தத்தை
வென்று மணக்கும் தாளிப்பு உள்ள சோற்றை |
வருநர்க்கு
வரையா வசை இல் வாழ்க்கை | வருபவர்க்குக்
குறைவில்லாமல் வழங்குகின்ற பழி தீர்ந்த வாழ்க்கையையுடைய |
மகளிர்
மலைத்தல் அல்லது மள்ளர் | குலப்பெண்களுடன்
காதற்போரிடுவதேயன்றி, பகைவீரரால் |
மலைத்தல் போகிய
சிலை தார் மார்ப 10 | வீரப்போர் புரிதல்
இயலாதாகிய, இந்திரவில் போன்ற மாலையை அணிந்த மார்பினனே! |
செய்து இரங்கா
வினை சேண் விளங்கும் புகழ் | செய்துவிட்டுப்
பின்னர் வருத்தப்படாத செயல்களையும், சேய்மையில் விளங்கும் புகழினையும் உடைய |
நெய்தல் அம்
கானல் நெடியோய் | நெய்தலங்கானல் என்னும்
ஊரையுடைய நெடியவனே! |
எய்த வந்தனம்
யாம் ஏத்துகம் பலவே | உன்னைச் சேரவே நாங்கள்
வந்தோம், உன்னைப் பாடிப் போற்றுவோம் பலமுறை. |
| |
| |
| |
| |
| |
# 11 பேய்மகள்
இளவெயினியார் | # 11 பேய்மகள்
இளவெயினியார் |
அரி மயிர்
திரள் முன்கை | மென்மையான மயிரையுடைய
திரண்ட முன்கையினையும் |
வால் இழை மட
மங்கையர் | தூய அணிகலன்களையும்
உடைய அழகு மங்கையர் |
வரி மணல் புனை
பாவைக்கு | வண்டல் மணலில் செய்த
பாவைக்குச் சூட |
குலவு சினை பூ
கொய்து | வளைந்த கிளைகளில்
பூக்களைக் கொய்து |
தண் பொருநை
புனல் பாயும் 5 | குளிர்ந்த பொருநை
என்னும் அமராவதி ஆற்று நீரில் பாய்ந்து குளிக்கும் |
விண் பொரு
புகழ் விறல் வஞ்சி | வானை முட்டிய
புகழினையும் வெற்றியையும் உடைய வஞ்சி நகரில் |
பாடல் சான்ற
விறல் வேந்தனும்மே | புகழ் வாய்ந்த
வெற்றியையுடைய வேந்தனும் |
வெப்பு உடைய
அரண் கடந்து | பகைமையாகிய
வெம்மையுடைய அரண்களை வென்று |
துப்பு உறுவர்
புறம்பெற்றிசினே | வலிமையுடன்
எதிர்த்தவரைப் புறங்கண்டான்; |
புறம்பெற்ற வய
வேந்தன் 10 | அவ்வாறு புறங்கண்ட
வலிமை மிக்க வேந்தனின் |
மறம் பாடிய
பாடினியும்மே | வீரத்தைப் பாடிய
பாடினியும் |
ஏர் உடைய விழு
கழஞ்சின் | அழகுடன் விளங்கும்
சிறந்த பல கழஞ்சுப் பொன்னால் செய்யப்பட்ட |
சீர் உடைய இழை
பெற்றிசினே | நல்ல அணிகலன்களைப்
பெற்றாள்; |
இழை பெற்ற
பாடினிக்கு | அந்த அணிகலன்களைப்
பெற்ற பாடினியின் |
குரல் புணர்
சீர் கொளை வல் பாண்_மகனும்மே 15 | ஏழிசையில் முதலாவதாகிய
குரலென்னும் தானத்தில் பொருந்தும் பாடலில் வல்ல பாணனும் |
என ஆங்கு | (அசை நிலை) |
ஒள் அழல்
புரிந்த தாமரை | ஒளிவிடும் நெருப்பில்
ஆக்கப்பட்ட பொற்றாமரையாகிய |
வெள்ளி நாரால்
பூ பெற்றிசினே | வெள்ளி நாரால் தொடுத்த
பூவைப் பெற்றான். |
| |
# 12
நெட்டிமையார் | # 12 நெட்டிமையார் |
பாணர் தாமரை
மலையவும் புலவர் | பாணர்கள் பொற்றாமரை
மலரைச் சூடவும், புலவர்கள் |
பூ நுதல்
யானையோடு புனை தேர் பண்ணவும் | நெற்றிப்பட்டத்தின்
அழகு பொலிந்த மத்தகத்தையுடைய யானையுடனே அலங்கரித்த தேரினில் ஏறவும் |
அறனோ மற்று இது
விறல் மாண் குடுமி | இது அறம் ஆகுமா?
ஆற்றலும் மாண்பும் மிக்க குடுமியே! |
இன்னா ஆக பிறர்
மண் கொண்டு | வேற்றரசரின் நிலத்தை
அவர்க்குத் துன்பம்வரும்படி கைப்பற்றி |
இனிய செய்தி
நின் ஆர்வலர் முகத்தே 5 | இன்பமானவற்றைச்
செய்கிறாய் உன் பரிசிலரிடத்தில். |
| |
# 13 உறையூர்
ஏணிச்சேரி முடமோசியார் | # 13 உறையூர்
ஏணிச்சேரி முடமோசியார் |
இவன் யார்
என்குவை ஆயின் இவனே | இவன் யார் என்று நீ
கேட்டால், இவன்தான் |
புலி நிற கவசம்
பூ பொறி சிதைய | புலித்தோலால்
செய்யப்பட்ட கவசம் சிதையும்படி |
எய் கணை
கிழித்த பகட்டு எழில் மார்பின் | எய்யப்பட்ட அம்பு
கிழித்த அகன்று உயர்ந்த மார்பினையுடையவன், |
மறலி அன்ன
களிற்று மிசையோனே | கூற்றம் போன்ற
களிற்றின் மேலிருப்பவன்; |
களிறே முந்நீர்
வழங்கு நாவாய் போலவும் 5 | அந்தக் களிறோ, கடலில்
செல்லும் கப்பலைப் போலவும், |
பன் மீன்
நாப்பண் திங்கள் போலவும் | பல விண்மீன்களின்
நடுவே திகழும் திங்களைப் போலவும், |
சுறவு_இனத்து
அன்ன வாளோர் மொய்ப்ப | சுறாமீன் கூட்டத்தைப்
போன்ற வாள்வீரர் சூழ்ந்து வர |
மரீஇயோர்
அறியாது மைந்து பட்டன்றே | தமக்குப் பழக்கமான
பாகரை அறியாமல், மதம்பிடித்துக்கொண்டது; |
நோய் இலன் ஆகி
பெயர்க தில் அம்ம | கேடு வராமல் இவன்
திரும்பிச் செல்லட்டும் – |
பழன மஞ்ஞை
உகுத்த பீலி 10 | வயலில் மயில்கள்
உதிர்த்த தோகைகளை, |
கழனி உழவர்
சூட்டொடு தொகுக்கும் | கதிரறுக்கும் உழவர்கள்
நெற்கட்டுகளோடு சேர்த்துக் கட்டுகின்ற, |
கொழு மீன்
விளைந்த கள்ளின் | கொழுத்த வயல்
மீன்களையும், நன்கு முதிர்ந்த கள்ளினையும் உடைய, |
விழு நீர் வேலி
நாடு கிழவோனே | மிகுந்த நீராகிய
கடலையே வேலியாகக் கொண்ட, நாட்டிற்கு உரிமையாளன். |
| |
# 14 கபிலர் | # 14 கபிலர் |
கடுங்கண்ண கொல்
களிற்றால் | கடுமை நிறைந்த,
கொல்லும் தொழிலையுடைய யானைகளால் |
காப்பு உடைய
எழு முருக்கி | காவலையுடைய கணையமரத்தை
முறித்து |
பொன் இயல் புனை
தோட்டியால் | இரும்பினாலான அழகிய
அங்குசத்தால் |
முன்பு துரந்து
சமம் தாங்கவும் | முன்னால் அவற்றைச்
செலுத்தி, பின்னர் அவற்றை வேண்டும் அளவில் நிறுத்தவும், |
பார் உடைத்த
குண்டு அகழி 5 | குந்தாலியால் நிலத்தை
அகழ்ந்து குழியாக அமைந்த அகழியின் |
நீர் அழுவ
நிவப்பு குறித்து | நீர்ப்பரப்பின்
ஆழத்தின் உயர்ச்சியைக் குறித்து, அதனிடம் செல்லாமல் |
நிமிர் பரிய மா
தாங்கவும் | நிமிர்ந்த
ஓட்டத்தையுடைய குதிரைகளைத் தாங்கிப் பிடிக்கவும், |
ஆவம் சேர்ந்த
புறத்தை தேர் மிசை | அம்பறாத்தூணி
பொருந்திய முதுகினையுடையவனாய், தேரின் மேல் நின்று |
சாப நோன் ஞாண்
வடு கொள வழங்கவும் | வில்லின் வலிய நாண்
வடு உண்டாக்குமளவிற்கு அம்புகளைச் செலுத்தவும், |
பரிசிலர்க்கு
அரும் கலம் நல்கவும் குரிசில்
10 | பரிசிலர்க்குப்
பெறுவதற்கரிய அணிகலன்களை அளிக்கவும், தலைவனே! |
வலிய ஆகும்
நின் தாள் தோய் தட கை | வலிமையுடையனவாய்
இருக்கின்றன, உனது முழங்காலைத்தொடும் பெரிய கைகள்; |
புலவு நாற்றத்த
பைம் தடி | புலால் நாறும் சிறந்த
ஊன் துண்டத்தை |
பூ நாற்றத்த
புகை கொளீஇ ஊன் துவை | பூ மணம் கமழும்
புகையைக் கொளுத்தி, ஊனையும், துவையலையும், |
கறி_சோறு உண்டு
வருந்து தொழில் அல்லது | கறிச்சோறினையும் உண்டு
வருந்தும் தொழிலையன்றி |
பிறிது தொழில்
அறியா ஆகலின் நன்றும் 15 | வேறு தொழிலை
அறியாதிருப்பதால், மிகவும் |
மெல்லிய பெரும
தாமே நல்லவர்க்கு | மெதுவாக இருக்கின்றன,
பெருமானே! பெண்டிருக்கு |
ஆர் அணங்கு
ஆகிய மார்பின் பொருநர்க்கு | ஆற்றமுடியாத வருத்தம்
தரும் மார்பினையும், உன்னுடன் போரிடவருவோர்க்கு |
இரு நிலத்து
அன்ன நோன்மை | பெரிய நிலம் போன்ற
வலிமையினையும் கொண்டு |
செரு மிகு
சேஎய் நின் பாடுநர் கையே | போரில் சிறந்து
விளங்கும் முருகனைப் போன்றவனே! உன்னைப் பாடுபவரின் கைகள் – |
| |
# 15 கபிலர் | # 15 கபிலர் |
கடும் தேர்
குழித்த ஞெள்ளல் ஆங்கண் | விரைகின்ற தேர்கள்
குழிகளையுண்டாக்கின தெருக்களில் |
வெள் வாய்
கழுதை புல்_இனம் பூட்டி | வெள்ளை வாயினைக் கொண்ட
கழுதைகளான அற்ப விலங்குகளை ஏரில் பூட்டிப் |
பாழ் செய்தனை
அவர் நனம் தலை நல் எயில் | பாழாக்கினாய்,
பகைவரின் அகன்ற இடங்களைக் கொண்ட நல்ல அரண்வெளிகளை; |
புள்_இனம்
இமிழும் புகழ் சால் விளை வயல் | பறவைகள் சத்தமிடும்
புகழமைந்த விளைவயல்களில் |
வெள் உளை
கலி_மான் கவி குளம்பு உகள
5 | வெண்மையான தலையாட்டம்
அணிந்த செருக்குடன் இருக்கும் குதிரைகளின் கவிந்த குளம்புகள் தாவ |
தேர் வழங்கினை
நின் தெவ்வர் தேஎத்து | தேரினை
ஓட்டிச்சென்றாய், உன் பகைவரின் நாட்டினில்; |
துளங்கு இயலான்
பணை எருத்தின் | அசைகின்ற
இயல்பினையும், பெரிய கழுத்தினையும், |
பாவு அடியான்
செறல் நோக்கின் | பரந்த அடியினையும்,
சீறுகின்ற பார்வையையும், |
ஒளிறு
மருப்பின் களிறு அவர | ஒளிவிடும்
கொம்புகளையும் உடைய களிற்றை, அவர்களின் |
காப்பு உடைய
கயம் படியினை 10 | காவல் மிகுந்த
குளங்களில் படியச்செய்தாய்; |
அன்ன சீற்றத்து
அனையை ஆகலின் | அப்பேர்ப்பட்ட
சீற்றத்தையும், அதற்கேற்ற செயல்களையும் உடையவன் என்பதால், |
விளங்கு பொன்
எறிந்த நலம் கிளர் பலகையொடு | பளிச்சிடும் இரும்பால்
செய்யப்பட்ட ஆணிகளும் பட்டமும் அறைந்த அழகுமிக்க நெடும் கேடகத்துடன் |
நிழல் படு நெடு
வேல் ஏந்தி ஒன்னார் | நிழலுண்டாக்கும் நீண்ட
வேலினை ஏந்தி, பகைவர் |
ஒண் படை கடும்
தார் முன்பு தலைக்கொள்-மார் | உனது பளீரென்ற
படைக்கலங்களையுடைய விரைவான தூசிப்படையின் வலிமையை அழிக்க எண்ணி |
நசை தர வந்தோர்
நசை பிறக்கு ஒழிய 15 | ஆசையுடன் வரும்போது,
அவர்களின் ஆசை பின்பக்கம் ஓட, |
வசை பட
வாழ்ந்தோர் பலர்-கொல் புரை இல் | பழியுண்டாக வாழ்ந்தவர்
பலரோ? குற்றமில்லாத |
நன் பனுவல்
நால் வேதத்து | நல்ல அற நூலிலும்,
நால்வகை வேதத்திலும் சொல்லப்பட்ட |
அரும் சீர்த்தி
பெரும் கண்ணுறை | அடைவதற்கு அரிய மிக்க
புகழையுடைய சமீது, பொரி ஆகிய மேலே தூவப்படும் சிறந்த பொருளுடன் |
நெய்ம் மலி
ஆவுதி பொங்க பன் மாண் | நெய் மிக்க ஓமப்புகை
பொங்கி எழ, பலவாறு மாட்சிமைப்பட்ட |
வீயா சிறப்பின்
வேள்வி முற்றி 20 | கெடாத சிறப்பையுடைய
வேள்வியைச் செய்துமுடித்து |
யூபம் நட்ட
வியன் களம் பல-கொல் | வேள்வித்தூண்களை நட்ட
அகன்ற வேள்விச்சாலைகள் பலவோ? |
யா பல-கொல்லோ
பெரும வார்_உற்று | இவற்றில் எது பல?
பெருமானே! வார்களைக் கொண்டு |
விசி பிணி
கொண்ட மண் கனை முழவின் | இழுத்துக்கட்டப்பட்ட,
வாயில் கரிய சாந்து பூசப்பட்ட முழவையுடைய |
பாடினி பாடும்
வஞ்சிக்கு | பாடினி பாடும்
வஞ்சிப்பாடலுக்கு ஏற்ப, வஞ்சிப்போரைப் பற்றி |
நாடல் சான்ற
மைந்தினோய் நினக்கே 25 | நினைக்கும்
வலிமையினையுடையவனே , உனக்கு. |
| |
# 16 பாண்டரம்
கண்ணனார் | # 16 பாண்டரம்
கண்ணனார் |
வினை மாட்சிய
விரை புரவியொடு | தன் போர்த்தொழிலில்
மாண்புடன் விளங்கும் விரைந்து செல்லும் குதிரைகளுடன் |
மழை உருவின
தோல் பரப்பி | மேகங்களைப் போன்று
கேடகங்களைப் பரப்பி, |
முனை முருங்க
தலைச்சென்று அவர் | போர்முனை கலங்குமாறு
முன்னேறிச் சென்று, பகைவரின் |
விளை வயல்
கவர்பு ஊட்டி | நெல்விளையும்
வயல்களைக் கொள்ளையடித்து, |
மனை மரம் விறகு
ஆக 5 | வீட்டுமரங்களை
விறகாக்கி, |
கடி துறை நீர்
களிறு படீஇ | காவல்மிகுந்த
நீர்த்துறைகளில் களிறுகளைப் படுக்கவைத்து, |
எல்லு பட இட்ட
சுடு தீ விளக்கம் | பகல் என்று
சொல்லும்படி மூட்டிய சுடு நெருப்பின் வெளிச்சம் |
செல் சுடர்
ஞாயிற்று செக்கரின் தோன்ற | மறைகின்ற சுடரினைக்
கொண்ட ஞாயிற்றின் செக்கர்வானம் போல் தோன்ற, |
புலம் கெட
இறுக்கும் வரம்பு இல் தானை | எதிரிநாடு அழியுமாறு
தங்கும் எல்லையில்லாத படையினையும், |
துணை வேண்டா
செரு வென்றி 10 | யாரும் துணைக்கு
வரவேண்டாத போர் வெற்றியினையும், |
புலவு வாள்
புலர் சாந்தின் | புலால் நாறும்
வாளினையும், பூசிப் புலர்ந்த சந்தனம் கொண்ட மார்பினையும், |
முருகன்
சீற்றத்து உரு கெழு குருசில் | முருகனது சீற்றம்
போன்ற சீற்றத்தையும் கொண்ட அச்சம் பொருந்திய தலைவனே! |
மயங்கு வள்ளை
மலர் ஆம்பல் | ஒன்றோடொன்று கலந்த
வள்ளைப்பூவையும், மலர்ந்த ஆம்பல் பூவையும் |
பனி பகன்றை கனி
பாகல் | குளிர்ச்சியையுடைய
பகன்றைப்பூவையும், பழத்தையுடைய பாகற்பூவையும் உடைய |
கரும்பு அல்லது
காடு அறியா 15 | கரும்பு தவிர வேறு
காட்டை அறியாத |
பெரும் தண் பணை
பாழ் ஆக | பெரிய மருதநிலங்கள்
பாழ்படும்படி |
ஏம நன் நாடு
ஒள் எரி_ஊட்டினை | காவலையுடைய நல்ல
நாட்டை எரியூட்டினாய், |
நாம நல் அமர்
செய்ய | அஞ்சத்தக்க நல்ல
போரைச் செய்வதற்கு |
ஒராங்கு
மலைந்தன பெரும நின் களிறே | உன் எண்ணத்திற்கேற்ப
ஒன்றுபட்டுப் போரிட்டன பெருமானே, உன் களிறுகள். |
| |
# 17
குறுங்கோழியூர் கிழார் | # 17 குறுங்கோழியூர்
கிழார் |
தென் குமரி
வட_பெருங்கல் | தென்திசையில் குமரி,
வடதிசையில் இமயமலை, |
குண குட கடலா
எல்லை | கிழக்கிலும்
மேற்கிலும் கடல் ஆகியவையே எல்லையாக |
குன்று மலை
காடு நாடு | இடைப்பட்ட இடத்தின்
குன்றுகளும், மலைகளும், காடுகளும், நாடுகளும் என இவற்றை ஆள்வோர் |
ஒன்று பட்டு
வழிமொழிய | ஒன்றுபட்டு வழிபாடு
மொழிய |
கொடிது கடிந்து
கோல் திருத்தி 5 | தீய செயலைப் போக்கி,
செங்கோலைத் திருத்தமாகக் கொண்டு, |
படுவது உண்டு
பகல் ஆற்றி | நேரிதான இறையால்
உண்டு, நடுவுநிலையைச் செய்து, |
இனிது உருண்ட
சுடர் நேமி | இனிமையாக உருண்ட
ஒளியையுடைய ஆட்சிச்சக்கரத்தால் |
முழுது ஆண்டோர்
வழி காவல | நிலம் முழுதையும்
ஆண்டோரின் மரபினைக் காப்பவனே! |
குலை இறைஞ்சிய
கோள் தாழை | குலை தாழ்ந்து
கொள்ளத்தக்கதாய் அமைந்த தென்னையையும், |
அகல் வயல் மலை
வேலி 10 | அகன்ற வயல்வெளியையும்,
மலையாகிய வேலியையும் |
நிலவு மணல்
வியன் கானல் | நிலவொளி போன்ற
மணலையுடைய அகன்ற கடற்கரைச் சோலைகளையும், |
தெண் கழி மிசை
தீ பூவின் | தெளிந்த
உப்பங்கழிகளில் தீப்பிடித்தது போன்ற பூக்களையும் கொண்ட |
தண் தொண்டியோர்
அடு பொருந | குளிர்ந்த தொண்டி
மக்களின் வெற்றி மிக்க வீரனே! |
மா பயம்பின்
பொறை போற்றாது | யானையைப் பிடிக்கும்
குழியின்மேல் பரவின பொய்மூடியின் பாரம்தாங்கும் சக்தியை மதிக்காமல் |
நீடு குழி
அகப்பட்ட
15 | நெடிய குழியினில்
அகப்பட்ட |
பீடு உடைய
எறுழ் முன்பின் | பெருமையும், மிக்க
வலிமையும் உடைய, |
கோடு முற்றிய
கொல் களிறு | முதிர்ச்சியுற்ற
கொம்பினையுடைய, கொல்லும் களிறு |
நிலை கலங்க
குழி கொன்று | குழியின் நிலை சரிய
அதனைத் தூர்த்து, |
கிளை புகல
தலைக்கூடி ஆங்கு | தன் இனம் விரும்ப,
அதனோடு சேர்ந்தாற்போல, |
நீ பட்ட அரு
முன்பின் 20 | பொறுப்பதற்கு அரிய
வலிமையால் பகைவரை மதியாமல், நீ அடைந்த |
பெரும்
தளர்ச்சி பலர் உவப்ப | பெரும் பின்னடைவினை,
பலரும் மகிழும்படியாக |
பிறிது சென்று
மலர் தாயத்து | வேறொரு
சூழ்ச்சியால்போய் பரந்த உரிமையையுடைய இடத்தின் |
பலர் நாப்பண்
மீக்கூறலின் | உன் சுற்றத்தார்
பலரின் நடுவே புகழ்ந்து சொல்லப்படுதலால், |
உண்டாகிய உயர்
மண்ணும் | நீ சிறைப்படும் முன்
உன்னிடம் தோற்றவர்கள் தாம் இழந்த உயர்ந்த தம் நிலத்தையும், |
சென்று பட்ட
விழு கலனும் 25 | உன்னிடம் சென்ற தம்
சிறந்த அணிகலன்களையும், நீ இப்போது வந்துவிட்டதால் |
பெறல் கூடும்
இவன் நெஞ்சு உற பெறின் எனவும் | திரும்பப் பெற
முடியும் உன் நெஞ்சு தமக்கு உரித்தாகப் பெற்றால் என்று நினைத்தும், |
ஏந்து கொடி இறை
புரிசை | உன் வரவை
எதிர்பாராமல், தம் அரசைக் கைப்பற்றிய பகைவர் எடுத்த கொடியையுடைய உயர்ந்த
மதிலையும் |
வீங்கு சிறை
வியல் அருப்பம் | மிக்க காவலையுடைய
அகன்ற தமது அரண்களையும் |
இழந்து
வைகுதும் இனி நாம் இவன் | இனி தாம் உன்னிடம்
திரும்ப இழந்துபோவோம், நீ |
உடன்று
நோக்கினன் பெரிது எனவும் 30 | வெகுண்டு பார்ப்பாய்
மிகுதியாக என்று நினைத்தும், |
வேற்று அரசு
பணி தொடங்கு நின் | பகை வேந்தர் உனக்கு
ஏவல் செய்யத் தொடங்குவதற்குக் காரணமான உன் |
ஆற்றலொடு புகழ்
ஏத்தி | ஆற்றலோடு, உன்
புகழையும் உயர்த்திக் கூறி |
காண்கு
வந்திசின் பெரும ஈண்டிய | உன்னைக் காண்பதற்கு
வந்திருக்கிறேன், பெருமானே! ஒன்றுசேர்ந்த |
மழை என மருளும்
பல் தோல் மலை என | மேகங்கள் என்று எண்ணி
மருளத்தக்க பல கேடகங்களையும், மலை என்று எண்ணி |
தேன்
இறைகொள்ளும் இரும் பல் யானை 35 | வண்டுகள் வந்து
தங்கும் பெரிய பலவான யானைகளையும், |
உடலுநர் உட்க
வீங்கி கடல் என | பகைவர்
பயப்படும்படியாகப் பெருத்து, கடல் என்று நினைத்து |
வான் நீர்க்கு
ஊக்கும் தானை ஆனாது | மேகங்கள் நீரினை
முகக்க இறங்கும் படையினையும், நீங்காத |
கடு ஒடுங்கு
எயிற்ற அரவு தலை பனிப்ப | நஞ்சு சுரக்கும்
பல்லினையுடைய பாம்புகளின் தலை நடுங்க |
இடி என
முழங்கும் முரசின் | இடிக்கும் இடியைப்
போன்று முழங்கும் முரசினையும் |
வரையா ஈகை
குடவர் கோவே 40 | குறைவில்லாமல்
கொடுக்கும் கொடைப்பண்பையும் கொண்ட குடநாட்டவர் வேந்தனே! |
| |
# 18
குடபுலவியனார் | # 18 குடபுலவியனார் |
முழங்கு
முந்நீர் முழுவதும் வளைஇ | முழங்குகின்ற கடலால்
முழுவதும் சூழப்பட்டு |
பரந்துபட்ட
வியன் ஞாலம் | பரந்து கிடக்கின்ற
அகன்ற உலகத்தைத் |
தாளின் தந்து
தம் புகழ் நிறீஇ | தம்முடைய முயற்சியால்
கைப்பற்றித் தம் புகழை நிலைநிறுத்தி |
ஒரு தாம் ஆகிய
உரவோர் உம்பல் | தாம் ஒருவராகவே ஆண்ட
ஆற்றல் மிக்கோரின் வழியில் தோன்றியவனே! |
ஒன்று பத்து
அடுக்கிய கோடி கடை இரீஇய 5 | ஒன்றைப் பத்துமுறை
அடுக்கிய கோடி என்னும் எண்ணைக் கடைசி எண்ணாகச் செய்த |
பெருமைத்து ஆக
நின் ஆயுள் தானே | பெரிய அளவினதாகுக உன்
ஆயுள், |
நீர் தாழ்ந்த
குறும் காஞ்சி | நீர் மேல்
தாழ்ந்திருக்கும் குட்டையான காஞ்சிமரத்தின் |
பூ கதூஉம் இன
வாளை | பூவினைக்
கவ்விப்பிடிக்கும் கூட்டமான வாளைமீன்களையும், |
நுண் ஆரல் பரு
வரால் | சிறிய ஆரல்
மீன்களையும், பருத்த வரால் மீன்களையும், |
குரூஉ கெடிற்ற
குண்டு அகழி 10 | நிறமுள்ள கெடிற்று
மீன்களையும் கொண்ட குழிவான கிடங்கினையும், |
வான் உட்கும்
வடி நீள் மதில் | வானமே அஞ்சும்
திருந்திய நெடிய மதிலையும் உடைய |
மல்லல் மூதூர்
வய வேந்தே | வளம்பொருந்திய பழைய
ஊரினையுடைய வலிமையுள்ள வேந்தனே! |
செல்லும்
உலகத்து செல்வம் வேண்டினும் | இறந்தபின் போகும்
மறுமை உலகத்தில் நுகரும் செல்வத்தை விரும்பினாலும், |
ஞாலம் காவலர்
தோள் வலி முருக்கி | உலகத்தைக் காப்பவரின்
தோள் வலிமையைக் கெடுத்து |
ஒரு நீ ஆகல்
வேண்டினும் சிறந்த 15 | நீ ஒருவனே தலைவனாக
ஆவதை விரும்பினாலும், மிகுந்த |
நல் இசை
நிறுத்தல் வேண்டினும் மற்று அதன் | நல்ல புகழை
நிலைநிறுத்த விரும்பினாலும், அந்த விருப்பங்களுக்குரிய |
தகுதி கேள் இனி
மிகுதியாள | தகுதியைக் கேட்பாயாக
இப்போது, பெரியவனே! |
நீர் இன்று
அமையா யாக்கைக்கு எல்லாம் | நீர் இல்லாமல்
வாழமுடியாத இந்த உடம்புகளுக்கெல்லாம் |
உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே | உணவு கொடுத்தவர்கள்
உயிரையும் கொடுத்தவர் ஆவர், |
உண்டி முதற்றே
உணவின் பிண்டம் 20 | உணவையே முதலாவதாக
உடையது அந்த உணவால் ஆகிய உடம்பு, |
உணவு
எனப்படுவது நிலத்தோடு நீரே | உணவு என்று
சொல்லப்படுவது நிலமும் நீரும் ஆகும், |
நீரும் நிலனும்
புணரியோர் ஈண்டு | அந்த நிலத்தையும்
நீரையும் ஒன்றாகப் பெற்றவர்கள், இந்த உலகத்தில் |
உடம்பும்
உயிரும் படைத்திசினோரே | உடம்பையும் உயிரையும்
படைத்தவர் ஆவர், |
வித்தி வான்
நோக்கும் புன்_புலம் கண் அகன் | விதைத்துவிட்டு மழையை
எதிர்நோக்கியிருக்கும் புன்செய்நிலம் இடம் அகன்ற |
வைப்பு_உற்று
ஆயினும் நண்ணி ஆளும் 25 | நிலத்தையுடையதாயினும்,
அதனை அடைந்து ஆளுகின்ற |
இறைவன் தாட்கு
உதவாதே அதனால் | அரசனின் முயற்சிக்குப்
பயன்படாது, அதனால், |
அடு போர் செழிய
இகழாது வல்லே | கொல்லும் போரையுடைய
செழியனே! இதனைச் சிறிதாக எண்ணாமல், விரைந்து |
நிலன் நெளி
மருங்கில் நீர்நிலை பெருக | நிலம் நெகிழ்வாக
இருக்கும் இடங்களில் நீர்நிலைகள் பெருகும்படி |
தட்டோர் அம்ம
இவண் தட்டோரே | நீரைத் தடுத்து
நிறுத்தியவர், இந்த உலகத்தில் தம் புகழையும் நிலைநிறுத்துவார், |
தள்ளாதோர் இவண்
தள்ளாதோரே 30 | அவ்வாறு
நிலைநிறுத்தாதவர் தம் புகழையும் நிலைநிறுத்தாதவரே ஆவர். |
| |
# 19
குடபுலவியனார் | # 19 குடபுலவியனார் |
இமிழ் கடல்
வளைஇய ஈண்டு அகல் கிடக்கை | ஒலிக்கின்ற கடல்
சூழ்ந்த மண் திணிந்த அகன்ற உலகத்தில், |
தமிழ்
தலைமயங்கிய தலையாலம்கானத்து | தமிழ்ப்படை கைகலந்த
தலையாலங்கானத்தில், |
மன் உயிர்
பன்மையும் கூற்றத்து ஒருமையும் | நிலைபெற்ற உயிர்கள்
பலவாக இருந்தாலும், அவற்றைக் கொள்ளும் கூற்றுவன் ஒருவனே என்பதை |
நின்னொடு
தூக்கிய வென் வேல் செழிய | உன்னோடு சீர்தூக்கி
ஒப்புமை காணும்படியான வெற்றிதரும் வேலையுடைய செழியனே! |
இரும் புலி
வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய 5 | பெரிய புலியைப்
பிடிப்பதற்காக வேட்டுவன் எந்திரம் அறிந்து மாட்டிவைத்த |
பெரும் கல்
அடாரும் போன்ம் என விரும்பி | பெரிய கல்லையுடைய
அடார் என்னும் கற்பொறியைப் போல் இருக்கும் என்று விருப்பத்துடன் |
முயங்கினேன்
அல்லனோ யானே மயங்கி | நான் தழுவினேன்
அல்லவா! அச்சத்தால் கலங்கி |
குன்றத்து
இறுத்த குரீஇ இனம் போல | மலையிலே தங்கின
குருவிக்கூட்டம் போல, |
அம்பு சென்று
இறுத்த அறும் புண் யானை | அம்பு சென்று தைத்த
பொறுப்பதற்கு அரிய புண்ணையுடைய யானையின் |
தூம்பு உடை தட
கை வாயொடு துமிந்து 10 | உள்ளே துளையையுடைய
பெரிய கையை அதன் வாயோடு சேர்த்துத் துண்டித்து, அந்த யானை |
நாஞ்சில் ஒப்ப
நிலம் மிசை புரள | உழுகின்ற கலப்பையைப்
போன்று நிலத்தின் மேல் விழுந்து புரள |
எறிந்து களம்
படுத்த ஏந்து வாள் வலத்தர் | வெட்டிப்
போர்க்களத்தின் மீது வீழ்த்திய ஏந்திய வாளையுடைய வெற்றிவீரர்களாய் |
எந்தையோடு
கிடந்தோர் எம் புன் தலை புதல்வர் | எம் தலைவனுடன்
இருந்தார் எமது புல்லிய தலையையுடைய புதல்வர்கள் |
இன்ன விறலும்
உள-கொல் நமக்கு என | இப்படிப்பட்ட வெற்றி
நமக்கும் உண்டோ என்று |
மூதில்
பெண்டிர் கசிந்து அழ நாணி 15 | முதிய மறக்குடியில்
பிறந்த பெண்கள் இன்புற்று மனம்கசிந்து அழ, அதைக் கண்டு வெட்கப்பட்டு |
கூற்று
கண்ணோடிய வெருவரு பறந்தலை | கூற்றுவன் இரங்கிய
அச்சம்தரும் போர்க்களத்தில் |
எழுவர் நல்
வலம் கடந்தோய் நின் | எழுவரின் மிகுந்த
வலிமையை வென்றவனே! உன் |
கழூஉ விளங்கு
ஆரம் கவைஇய மார்பே | கழுவப்பட்டு ஒளிரும்
முத்தாரம் கிடந்த உன் மார்பை (- நான் தழுவினேன் அல்லவா!) |
| |
# 20
குறுங்கோழியூர்கிழார் | # 20
குறுங்கோழியூர்கிழார் |
இரு முந்நீர்
குட்டமும் | பெரிய கடலின் ஆழமும், |
வியன் ஞாலத்து
அகலமும் | அகன்ற உலகத்தின்
பரப்பும், |
வளி வழங்கு
திசையும் | காற்று இயங்கும்
திசையும், |
வறிது நிலைஇய
காயமும் என்று ஆங்கு | எந்தவிதப்
பற்றுக்கோடுமின்றி நிலைபெற்ற ஆகாயமும் என்று சொல்லப்படுகின்ற |
அவை அளந்து
அறியினும் அளத்தற்கு அரியை 5 | அவை அனைத்தையும்
அளந்து அறிந்தாலும், நீ அளப்பதற்கு அரியவன் – |
அறிவும் ஈரமும்
பெரும் கணோட்டமும் | உன்னுடைய அறிவு,
இரக்கம், மிகுந்த பரிவு ஆகியவற்றில்; |
சோறு படுக்கும்
தீயோடு | சோறு ஆக்கும்
நெருப்பின் வெம்மையுடன், |
செம் ஞாயிற்று
தெறல் அல்லது | சிவந்த ஞாயிற்றின்
வெம்மையையும் அன்றி |
பிறிது தெறல்
அறியார் நின் நிழல் வாழ்வோரே | வேறு பகைமையின்
வெம்மையை அறியார் உன் ஆட்சியில் வாழ்வோர்; |
திரு_வில்
அல்லது கொலை வில் அறியார்
10 | வானவில்லை அன்றி
கொலைசெய்யும் வில்லை அறியார்; |
நாஞ்சில்
அல்லது படையும் அறியார் | ஏர்ப்படையை அன்றி
போர்ப்படையை அறியார்; |
திறன் அறி
வயவரொடு தெவ்வர் தேய அ | போர்செய்யும் திறமையை
அறிந்த வீரருடனே பகைவர் மாய, அந்தப் |
பிறர் மண்
உண்ணும் செம்மல் நின் நாட்டு | பகைவரின்
மண்ணைக்கொண்டு உண்ணும் தலைவனே! உன் நாட்டிலுள்ள |
வயவு_உறு
மகளிர் வேட்டு உணின் அல்லது | சூல்கொண்ட மங்கையர்
வேட்கையினால் உண்டால் அன்றி |
பகைவர் உண்ணா
அரு மண்ணினையே 15 | பகைவர் உண்ணாத அரிய
மண்ணினை உடையவனே! |
அம்பு துஞ்சும்
கடி அரணால் | அம்புகள் வேலையின்றி
இருக்கும் காவல் மிகுந்த அரணையும் |
அறம் துஞ்சும்
செங்கோலையே | அறம் நிலைபெற்ற
செங்கோலையும் உடையவன் நீ; |
புது புள்
வரினும் பழம் புள் போகினும் | புதுப்பறவைகளின் வரவு,
பழைய பறவைகள் நீங்குதல் ஆகிய தீய சகுனங்கள் என்ன நேர்ந்தாலும் |
விதுப்பு உறவு
அறியா ஏம காப்பினை | மனம் சஞ்சலப்படாத
சேமமாகிய பாதுகாவலை உடையவன்; |
அனையை ஆகன்
மாறே 20 | நீ அத்தகையவனாக
இருப்பதினால் |
மன் உயிர்
எல்லாம் நின் அஞ்சும்மே | உலகத்து நிலைபெற்ற
உயிர் எல்லாம் உனக்கு அஞ்சும். |
| |
| |
| |
| |
| |
# 21 ஐயூர்
மூலங்கிழார் | # 21 ஐயூர்
மூலங்கிழார் |
புல வரை இறந்த
புகழ் சால் தோன்றல் | உன்னைப் பாடுகின்ற
புலவர்களின் புலைமையின் எல்லையைக் கடந்த புகழ்மிக்க தலைவனே! |
நில வரை இறந்த
குண்டு கண் அகழி | நிலத்தின் எல்லையைக்
கடந்து ஆழமான இடத்தையுடைய அகழி, |
வான் தோய்வு
அன்ன புரிசை விசும்பின் | வானத்தைத் தொடுவது
போன்ற உயர்ந்த மதில், வானத்தில் |
மீன் பூத்து
அன்ன உருவ ஞாயில் | மீன்கள்
பூத்துக்கிடப்பதைப் போன்ற வடிவையுடைய சூட்டு என்னும் கோட்டையின் ஏவறைகள் |
கதிர்
நுழைகல்லா மரம் பயில் கடி மிளை
5 | ஞாயிற்றின் கதிர்களும்
நுழையமுடியாதபடி நெருங்கி வளர்ந்த மரங்கள் செறிந்த காவற்காடு, |
அரும் குறும்பு
உடுத்த கானப்பேர் எயில் | நெருங்க முடியாத
சிற்றரண்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட கானப்பேர் எயில் என்னும் அரணை (நீ கைப்பற்ற) |
கரும் கை
கொல்லன் செம் தீ மாட்டிய | வலிமையான கைகளையுடைய
கொல்லனால் செந்தீயில் இடப்பட்ட |
இரும்பு உண்
நீரினும் மீட்டற்கு அரிது என | இரும்பு தன்
வெப்பத்தால் உறிஞ்சிக்கொண்ட நீரினை மீட்பதைக்காட்டிலும் மீட்பது அரிது என்று |
வேங்கைமார்பன்
இரங்க வைகலும் | வேங்கைமார்பன்
வருந்தும்படி, ஒவ்வொருநாளும் |
ஆடு கொள
குழைந்த தும்பை புலவர் 10 | போரிடும்போதெல்லாம்
உடைத்துச்சூடியபின் தழைத்த தும்பையையுடைய, புலவர்கள் |
பாடு துறை
முற்றிய கொற்ற வேந்தே | பாடுகின்ற துறைகள்
எல்லாம் முழுவதும் முடிந்துவிட்ட, வெற்றியினையுடைய வேந்தனே! |
இகழுநர்
இசையொடு மாய | உன்னை மதிக்காத பகைவர்
தம் பெயருடனே மாய்ந்துபோக, |
புகழொடு
விளங்கி பூக்க நின் வேலே | வெற்றிப்புகழுடனே
விளங்கிப் பொலிக உனது வேல். |
| |
# 22
குறுங்கோழியூர் கிழார் | # 22 குறுங்கோழியூர்
கிழார் |
தூங்கு கையான்
ஓங்கு நடைய | தொங்கிக்கொண்டு
அசைகின்ற தும்பிக்கையுடனே, தலை நிமிர்ந்த நடையை உடையன; |
உறழ் மணியான்
உயர் மருப்பின | மாறிமாறி ஒலிக்கும்
மணியுடனே, உயர்ந்த கொம்பினை உடையன; |
பிறை நுதலான்
செறல் நோக்கின | பிறை போன்று இடப்பட்ட
மத்தகத்துடனே, சினம் பொருந்திய பார்வையை உடையன; |
பா அடியால் பணை
எருத்தின | பரந்த அடியுடனே, பெரிய
கழுத்தை உடையன; |
தேன் சிதைந்த
வரை போல 5 | தேனடை கலைந்த மலையைப்
போல |
மிஞிறு
ஆர்க்கும் கமழ் கடாஅத்து | தேனீக்கள்
ஆரவாரிக்கும் மணக்கும் மதநீருடன் |
அயறு சோரும்
இரும் சென்னிய | புண்ணிலிருந்து
வடியும் நீருடன் பெரிய தலையை உடையன; |
மைந்து மலிந்த
மழ களிறு | இப்படிப்பட்ட வலிமை
மிகுந்த இளங்களிறுகள் |
கந்து சேர்பு
நிலைஇ வழங்க | கம்பத்தை ஒட்டி நின்ற
நிலையிலேயே அசைந்துகொண்டிருக்க, |
பாஅல் நின்று
கதிர் சோரும் 10 | பக்கத்தில் நின்று
கதிர்களைப் பரப்பும் |
வான் உறையும்
மதி போலும் | வானத்தில் இருக்கும்
திங்கள் போன்ற |
மாலை வெண்குடை
நீழலான் | முத்துமாலையையுடைய
வெண்கொற்றக்குடையின் நிழலில் |
வாள் மருங்கு
இலோர் காப்பு உறங்க | தம் பக்கத்தில் வாள்
இல்லாதார் அக்குடையே காவலாக உறங்க; |
அலங்கு
செந்நெல் கதிர் வேய்ந்த | அசைந்தாடும்
செந்நெற்கதிரால் வேயப்பட்ட |
ஆய் கரும்பின்
கொடி கூரை 15 | மெல்லிய கரும்புகளே
கழைகளாகக் கட்டப்பட்ட ஒருங்குபட்ட கூரை |
சாறு கொண்ட
களம் போல | விழா எடுத்து முடித்த
இடம் போல |
வேறு_வேறு
பொலிவு தோன்ற | பல்வேறுபட்ட அழகுடன்
விளங்க, |
குற்று ஆனா
உலக்கையால் | குற்றிக்கொண்டே
இருக்கும் உலக்கையொலியுடன் |
கலி சும்மை
வியல் ஆங்கண் | மிக்க ஆரவாரத்தையுடைய
அகன்ற இடத்தில், |
பொலம் தோட்டு
பைம் தும்பை 20 | பொன்னால் செய்யப்பட்ட
இதழ்களையுடைய பசும் தும்பையுடன், |
மிசை அலங்கு
உளைய பனை போழ் செரீஇ | மேலே ஆடுகின்ற
தலையையுடைய பனந்தோட்டைச் செருகி |
சின மாந்தர்
வெறி குரவை | சினம் கொண்ட வீரர்
வெறியாடும் குரவைக் கூத்தின் ஒலி |
ஓத நீரின்
பெயர்பு பொங்க | ஓதத்தையுடைய கடல் ஒலி
போல கிளர்ந்து பொங்க, |
வாய் காவாது
பரந்து பட்ட | இன்ன இடம் என்று
பாராமல், எங்கும் பரந்து கிடக்கும் |
வியன் பாசறை
காப்பாள 25 | அகன்ற பாசறையின்
காவலனே! |
வேந்து தந்த
பணி திறையான் | பகையரசர் பணிந்து தந்த
திறையால் |
சேர்ந்தவர் தம்
கடும்பு ஆர்த்தும் | தம்மைச் சேர்ந்தவருடைய
சுற்றத்தை நிறைக்கும் |
ஓங்கு
கொல்லியோர் அடு பொருந | உயர்ந்த
கொல்லிமலையோரின் கொலைத்தொழில் மிக்க பொருநனே! |
வேழ நோக்கின்
விறல் வெம் சேஎய் | யானையின் பார்வையைப்
போன்ற பார்வையைக் கொண்ட வெற்றியை விரும்பும் சேய் என்பவனே! |
வாழிய பெரும
நின் வரம்பு இல் படைப்பே 30 | வாழ்க நீ பெருமானே!
உன் எல்லையில்லாத செல்வத்தை |
நின் பாடிய
வயங்கு செந்நா | உன்னைப் பாடியதால்
விளங்கிய செம்மையான நா, |
பின் பிறர் இசை
நுவலாமை | பின்னர் பிறர் புகழைச்
சொல்லாதவண்ணம் |
ஓம்பாது ஈயும்
ஆற்றல் எம் கோ | தனக்கென
வைத்துக்கொள்ளாது பிறர்க்குக் கொடுக்கும் ஆற்றல் மிக்க எம் வேந்தனே! |
மாந்தரஞ்சேரல்
இரும்பொறை ஓம்பிய நாடே | மாந்தரஞ்சேரல்
இரும்பொறை பாதுகாத்த நாடு |
புத்தேள்_உலகத்து
அற்று என கேட்டு வந்து 35 | தேவர் உலகத்தைப்
போன்றது என்று பிறர் சொல்லக் கேட்டு வந்து |
இனிது
காண்டிசின் பெரும முனிவு இலை | என் கண்ணுக்கு
இனிதாகக் கண்டேன், பெருமானே! வெறுப்பற்ற முயற்சியுடன் |
வேறு புலத்து
இறுக்கும் தானையோடு | வேற்று நாட்டில்
சென்று தங்கும் படைகளுடன் |
சோறு பட நடத்தி
நீ துஞ்சாய் மாறே | உன் நாட்டில் சோறு
மிகுதியாகச் செயல்படுவாய், ஏனெனில் நீ சோம்பலில்லாதவன். |
| |
# 23
கல்லாடனார் | # 23 கல்லாடனார் |
வெளிறு இல்
நோன் காழ் பணை நிலை முனைஇ | உள்கூடு இல்லாத
வலிமையான வயிரம் பாய்ந்த கம்பத்தில் கட்டிக்கிடப்பதை வெறுத்து |
களிறு படிந்து
உண்டு என கலங்கிய துறையும் | களிறுகள் சென்று
படுத்துக்கொண்டதாலும், நீர் உண்பதாலும் கலங்கிய நீர்த்துறையையும், |
கார் நறும்
கடம்பின் பாசிலை தெரியல் | கார்காலத்து மணமுள்ள
கடம்பின் பச்சை இலையினாலான மாலையினையுடைய |
சூர் நவை
முருகன் சுற்றத்து அன்ன நின் | சூரபன்மனைக் கொன்ற
முருகனின் கூளிச் சுற்றத்தைப் போன்ற உன்னுடைய |
கூர் நல்
அம்பின் கொடு வில் கூளியர்
5 | கூர்மையான நல்ல
அம்பினையும் வளைந்த வில்லையும் உடைய மறவர்கள் |
கொள்வது கொண்டு
கொள்ளா மிச்சில் | தமக்கு வேண்டியதை
எடுத்துக்கொண்டு, வேண்டாமற்போட்டு மீந்துபோனதைப் |
கொள் பதம் ஒழிய
வீசிய புலனும் | பகைவர்
பயன்படுத்தமுடியாதபடி சிதறிப்போட்ட நிலங்களையும், |
வடி நவில்
நவியம் பாய்தலின் ஊர்-தொறும் | நன்றாக
வடிவமைக்கப்பட்ட கோடாலி வெட்டுவதால், ஊர்கள்தோறும் |
கடி_மரம்
துளங்கிய காவும் நெடு நகர் | காவல் மரங்கள்
சாய்க்கப்பட்ட சோலைகளையும், பரந்த நகரங்களில் |
வினை புனை நல்
இல் வெம் எரி நைப்ப 10 | சிறந்த தொழில்திறம்
வாய்ந்த நல்ல இல்லங்களில் விரும்பும் சமையல் தீயைக் கெடுக்க |
கனை எரி உரறிய
மருங்கும் நோக்கி | பெரும் தீ முழங்கிய
பக்கத்தையும் பார்த்துப் |
நண்ணார் நாண
நாள்-தொறும் தலைச்சென்று | பகைவர்
வெட்கப்படும்படியாக நாள்தோறும் அவர் நாட்டுக்குள் முன்னேறிச் சென்று |
இன்னும் இன்ன
பல செய்குவன் யாவரும் | இன்னமும்
இத்தன்மையுள்ள பலவற்றை இவன் செய்வான், எவரும் |
துன்னல் போகிய
துணிவினோன் என | தன்னை நெருங்கமுடியாத
செயல்தெளிவுடையோன் என்று எண்ணும்படியாக, |
ஞாலம் நெளிய
ஈண்டிய வியன் படை 15 | பாரம் தாங்காமல் நிலமே
நெளியும்படியாகக் கூடிய பெரும் படையினையுடைய |
ஆலங்கானத்து
அமர் கடந்து அட்ட | தலையாலங்கானத்தின்
போரை எதிர்நின்று கொன்ற |
கால முன்ப நின்
கண்டனென் வருவல் | காலனைப் போன்ற
வலிமையினை உடையவனே! உன்னைக் காண்பதற்கு வந்தேன், |
அறு மருப்பு
எழில் கலை புலி_பால் பட்டு என | கொம்பு இழந்த அழகிய
ஆண்மான் புலிவசம் அகப்பட்டதாக, |
சிறு மறி தழீஇய
தெறி நடை மட பிணை | சிறிய குட்டியை
அணைத்துக்கொண்ட துள்ளுகின்ற நடையினையுடைய மென்மையான பெண்மான் |
பூளை நீடிய
வெருவரு பறந்தலை 20 | பூளைச்செடி ஓங்கி
வளர்ந்த அஞ்சத்தக்க பாழ்பட்ட நிலத்தில் |
வேளை வெண் பூ
கறிக்கும் | வெண்மையான
வேளைப்பூவைக் கொறிக்கும் |
ஆள் இல் அத்தம்
ஆகிய காடே | ஆள் நடமாட்டம் இல்லாத
அரிய காட்டு வழியில் – (உன்னைக் காண்பதற்கு வந்தேன்,) |
| |
# 24 மாங்குடி
மருதனார் | # 24 மாங்குடி
மருதனார் |
நெல் அரியும்
இரும் தொழுவர் | நெல் அறுக்கும் திறம்
மிக்க உழவர்கள் |
செம் ஞாயிற்று
வெயில் முனையின் | எரிக்கும் சூரியனின்
வெயிலை வெறுத்தால் |
தெண் கடல் திரை
மிசை பாயுந்து | தெளிந்த கடல் அலைகளின்
மேலே பாய்கின்ற – |
திண் திமில்
வன் பரதவர் | உறுதியான படகினை உடைய
வலிமை மிக்க மீனவர்கள் |
வெப்பு உடைய
மட்டு உண்டு 5 | வெம்மையையுடைய கள்ளைக்
குடித்து |
தண் குரவை சீர்
தூங்குந்து | மெல்லிய
குரவைக்கூத்திற்கு ஏற்ற தாளத்துடன் ஆடுகின்ற – |
தூவல் கலித்த
தேம் பாய் புன்னை | கடலிலிருந்து தெறித்து
விழும் நீர்த்திவலைகளால் தழைத்துவளர்ந்த தேன் சொட்டும் புன்னையின் |
மெல் இணர்
கண்ணி மிலைந்த மைந்தர் | மெல்லிய
பூங்கொத்துக்களைத் தலைமாலையாய் சூடிய ஆண்கள் |
எல் வளை மகளிர்
தலைக்கை தரூஉந்து | ஒளிரும் வளையல்களை
அணிந்த பெண்களுக்கு அக் குரவை ஆட்டத்தில் தம் தலைக்கையைத் தருகின்ற – |
வண்டு பட
மலர்ந்த தண் நறும் கானல்
10 | வண்டுகள்
மொய்ப்பதினால் மலர்ந்த குளிர்ந்த மணமுள்ள கடற்கரைச் சோலையில் |
முண்டக கோதை
ஒண் தொடி மகளிர் | கடல்முள்ளிப்பூவால்
செய்த மாலையை அணிந்த ஒளிரும் வளையல்களை அணிந்த பெண்கள் |
இரும் பனையின்
குரும்பை நீரும் | பெரிய பனைமரத்தின்
நுங்கின் நீரும், |
பூ கரும்பின்
தீம் சாறும் | மென்மையான கரும்பின்
இனிய சாறும், |
ஓங்கு மணல்
குலவு தாழை | உயர்ந்த மணல்மேட்டில்
கூட்டமாக இருக்கும் தென்னை மரத்தின் |
தீம் நீரோடு
உடன் விராஅய் 15 | இனிய இளநீருடன்
சேர்த்துக் கலந்து, |
மு நீர் உண்டு
முந்நீர் பாயும் | இந்த மூன்று நீரையும்
குடித்து கடலுக்குள் பாய்ந்து விளையாடும் |
தாங்கா உறையுள்
நல் ஊர் கெழீஇய | கொடுத்துத்
தாங்கவேண்டாத பல மக்களும் வாழும் நல்ல ஊர்கள் நிறைந்த |
ஓம்பா ஈகை மா
வேள் எவ்வி | தனக்கென
வைத்துக்கொள்ளாத ஈகைக்குணமுடைய பெரிய வேள் அரசனாகிய எவ்வியின் |
புனல் அம்
புதவின் மிழலையொடு கழனி | நீர் பாயும்
மதகுகளையுடைய – மிழலைக்கூற்றம் என்னும் ஊருடன், வயல்களில் |
கயல் ஆர் நாரை
போர்வில் சேக்கும் 20 | கயல் மீன்களை மேயும்
நாரைகள் வைக்கோல்போரில் தங்கும், |
பொன் அணி யானை
தொன் முதிர் வேளிர் | பொன்னாலான முகபடாம்
அணிந்த யானைகளையுடைய பழைய முதிர்ந்த வேளிரது |
குப்பை
நெல்லின் முத்தூறு தந்த | திரண்ட நெல்லினையுடைய
முத்தூற்றுக்கூற்றம் என்ற ஊரினையும் கைப்பற்றிய |
கொற்ற நீள்
குடை கொடி தேர் செழிய | வெற்றி பொருந்திய
உயர்ந்த குடையினையும், கொடியால் அழகுபெற்ற தேரினையுமுடைய செழியனே! |
நின்று
நிலைஇயர் நின் நாள்_மீன் நில்லாது | நின்று நிலைப்பதாக உன்
பிறந்த நட்சத்திரம், நில்லாது |
படாஅ செலீஇயர்
நின் பகைவர் மீனே 25 | பட்டுப்போவதாக உன்
பகைவரின் நட்சத்திரங்கள், |
நின்னொடு
தொன்று மூத்த உயிரினும் உயிரொடு | உன்னுடைய பழையதாய்
மூத்த உயிரைவிட, உயிருடன் விளங்கி |
நின்று மூத்த
யாக்கை அன்ன நின் | முதிர்ந்த உடலைப்
போன்ற உன் |
ஆடு குடி மூத்த
விழு திணை சிறந்த | வெற்றியையுடைய
குடியின் பழைமையும் சிறப்பும் உடைய குலத்தில் பிறந்த |
வாளின் வாழ்நர்
தாள் வலம் வாழ்த்த | வாட்போரால் வாழ்பவர்
உன் முயற்சியின் வலிமையை வாழ்த்த, |
இரவன் மாக்கள்
ஈகை நுவல 30 | இரக்கும் பரிசிலர் உன்
கொடைப்பண்பை எடுத்துச்சொல்ல, |
ஒண் தொடி
மகளிர் பொலம் கலத்து ஏந்திய | ஒளிரும் வளையணிந்த
மகளிர் பொன்னாலான கலங்களில் ஏந்திக்கொணர்ந்த |
தண் கமழ் தேறல்
மடுப்ப மகிழ் சிறந்து | குளிர்ந்த மணங்கமழும்
மதுவைக் கொடுக்க அதனை உண்டு, மகிழ்ச்சி மிகுந்து |
ஆங்கு இனிது
ஒழுகு-மதி பெரும ஆங்கு அது | அப்படி இனிதாக
ஒழுகுவாயாக, பெருமானே! அந்த ஒழுக்கத்தில் நடக்க |
வல்லுநர்
வாழ்ந்தோர் என்ப தொல் இசை | வல்லவர்களையே
வாழ்ந்தோர் என்று சொல்வர், பழைய புகழுடன் |
மலர் தலை
உலகத்து தோன்றி 35 | பரந்த இடத்தையுடைய
உலகத்தில் தோன்றி, (அப்புகழ்) |
பலர் செல
செல்லாது நின்று விளிந்தோரே | பரவும்படி ஒழுகாமல்,
நின்று மாய்ந்தோர் பலர் – (அவர் வாழ்ந்தார் எனப்படார்) |
| |
# 25
கல்லாடனார் | # 25 கல்லாடனார் |
மீன் திகழ்
விசும்பில் பாய் இருள் அகல | மீன்கள் விளங்கும்
வானத்தில் பரவியிருக்கும் இருள் அகன்றுபோகும்படி, |
ஈண்டு செலல்
மரபின் தன் இயல் வழாஅது | விரைவுடன் செல்கின்ற
முறைமையினையுடைய தன் இயல்பிலிருந்து வழுவாமல் |
உரவு சினம்
திருகிய உரு கெழு ஞாயிறு | வலிய வெம்மையைக்
கடுமையாகக்கொண்ட அச்சம் பொருந்திய ஞாயிறு |
நிலவு திகழ்
மதியமொடு நிலம் சேர்ந்து ஆஅங்கு | ஒளி விளங்கும்
திங்களோடு, நிலத்தில் விழுந்ததைப் போன்று |
உடல் அரும்
துப்பின் ஒன்றுமொழி வேந்தரை 5 | பகைத்துக்கொள்ளமுடியாத
ஆற்றல்கொண்ட வஞ்சினம் கூறும் (இரண்டு பெரிய)வேந்தர்களை |
அணங்கு அரும்
பறந்தலை உணங்க பண்ணி | வீரர் புண்படுவதற்கு
அஞ்சாத போர்க்களத்தில் மடியச் செய்து, |
பிணி உறு
முரசம் கொண்ட_காலை | அவர்களின் வாரால்
பிணிக்கப்பட்ட முரசங்களைக் கைப்பற்றிய போழுது, |
நிலை திரிபு
எறிய திண் மடை கலங்கி | நின்ற நிலையிலேயே
உன்னைச் சூழ்ந்த வீரரைத் தாக்கியபோது திண்மையான பொருத்துவாய் கழன்று |
சிதைதல்
உய்ந்தன்றோ நின் வேல் செழிய | சிதைவுறாமல் பிழைத்தது
உன் வேல், செழியனே! |
முலை பொலி அகம்
உருப்ப நூறி 10 | முலைகள்
பொலிந்துவிளங்கும் தம் மார்பகம் வருந்துமாறு அடித்துக்கொண்டும் |
மெய்ம்மறந்து
பட்ட வரையா பூசல் | அறிவு மயங்கியும்
அளவற்ற அழுகையால் ஆரவாரித்தும் |
ஒண் நுதல்
மகளிர் கைம்மை கூர | பளிச்சென்ற
நெற்றியையுடைய மகளிர் கைம்மை நோன்பினை மேற்கொள்ள, |
அவிர் அறல்
கடுக்கும் அம் மென் | ஒளிரும் ஆற்றின்
கருமணல் போன்ற நெளிவுகளைக் கொண்ட அழகிய மென்மையான |
குவை இரும்
கூந்தல் கொய்தல் கண்டே | குவிந்த கரிய
கூந்தலைக் கொய்வதைக் கண்டு – (நீ போரை நிறுத்தியதால், சிதைவுறாமல் பிழைத்தது உன்
வேல் |
| |