பரிபாடல் 6-10

# 6 வையை – பாடியவர் : ஆசிரியர் நல்லந்துவனார்# 6 வையை
பண் அமைத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனார் – பண் : பண்ணுப்பாலையாழ் 
  
நிறை கடல் முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம்நீர் நிறைந்த கடலில் நீரை முகந்து வானத்தில் பரவி, நிறைவாக நீர் தளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிட பொழிந்தன்று வானம்பாரத்தை இறக்கிவைத்து இளைப்பாறும்பொருட்டு பொழிந்தன மேகங்கள்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலை தலைஇநிலம் முழுவதும் மறைந்துவிடுவதுபோல் மிகுந்த வெள்ளம் இடங்கள்தோறும் கூடி,
மலைய இனம் கலங்க மலைய மயில் அகவமலையிலுள்ள விலங்கினங்கள் கலங்க, மலையிலுள்ள மயில்கள் கூவ,
மலை மாசு கழிய கதழும் அருவி இழியும்மலையின் மாசுகள் கழிந்துபோகும்படி, விரைவான அருவியாய் இறங்கும்
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரைமிகுந்த நீர் ஓடுவதற்குரிய வழிகள் பற்பல பொருந்திய மலைச் சாரலில்,
மாசு இல் பனுவல் புலவர் புகழ் புலகுற்றமில்லாத நூல்களைக் கற்ற புலவர்கள், புகழுடைய அறிவினைக் கொண்ட
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமைதம் நாவால் பாடிய வையை ஆற்றைப் பற்றிய நல்ல கவிதைகள் பொய்படாமல் நிலைநிற்கச் செய்ய,
மேவி பரந்து விரைந்து வினை நந்தஎங்கும் சென்று பரவி, விரைந்து உழவு முதலிய தொழில்கள் பெருகும்படியாக
தாயிற்றே தண்ணம் புனல்தாவிச் சென்றது குளிர்ந்த அழகிய வெள்ளம்;
புகை பூ அவி ஆராதனை அழல் பல ஏந்திபுகை எழுப்ப அகில், சந்தனம், சூடிக்கொள்ள பூ, வழிபாட்டுக்குரிய பொருள்கள், நெருப்பு ஆகிய பலவற்றை ஏந்திக்கொண்டு
நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும்மகிழ்ச்சி பொருந்திய தம் காதலரை நீர் விளையாட்டுக்குரிய நாளணிகளை அணியச்செய்விக்கும்
வகை சாலும் வையை வரவுவகையில் பொருந்தியிருக்கிறது வையையில் நீர் வரவு;
தொடி தோள் செறிப்ப தோள் வளை இயங்கதோளணிகள் தோளில் செறிந்திருக்க, தோளின் வளையம் முன்கையில் விழுந்து முன்னும் பின்னும் அசைய,
கொடி சேரா திரு கோவை காழ்கொளவரையப்பட்ட தொய்யில் கொடிகள் ஒன்றோடொன்று கலந்து அழிய, அழகிய மேகலையின் சரங்கள் உதிர்ந்து நூல்மட்டும் தெரிய,
தொகு கதிர் முத்து தொடை கலிழ்பு மழுகதிரண்ட ஒளியினையுடைய முத்துமாலைகள் சந்தனப்பூச்சால் கலங்கி ஒளிமங்கித் தெரிய,
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்நகத்திலும், கன்னங்களிலும் பூசப்பட்ட செம்பஞ்சிக்குழம்பும்,
நகில் அணி அளறு நனி வண்டல் மண்டமுலைகளில் அணிந்த குங்குமக் குழம்பும் மிகுதியாய் வண்டல் போன்று படிந்து தோன்ற,
இலையும் மயிரும் ஈர்ம் சாந்து நிழத்ததளிரால் செய்யப்பட்ட படலைமாலையும், கூந்தலும், குளிர்ந்த சந்தனத்தை அழிக்க,
முலையும் மார்பும் முயங்கு அணி மயங்கமகளிர் முலையும், மைந்தர் மார்பும் முயங்குவதால் அவற்றிலுள்ள அணிகலன்கள் ஒன்றோடொன்று பின்னிக்கிடக்க,
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்து எனஅன்பாலே ஒன்றுபட்டவரின் உள்ளங்களின் நிறையாகிய காப்பு உடைந்துவிடுவது போல
வரை சிறை உடைத்ததை வையை வையைமலைபோன்ற இருகரைகளையும் உடைத்தது வையை; வையையின்
திரை சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும்அலைகளான சிறகுகள் உடைத்தன கரையாகிய காவலை; பறையை முழக்குக என்னும்
உரை சிறை பறை எழ ஊர் ஒலித்தன்றுகரைக் காவலர் ஒலியுடன் பறையின் ஒலி எழுந்ததாக ஊரின் ஆரவாரமும் ஒலித்தது;
அன்று போர் அணி அணியின் புகர்_முகம் சிறந்த எனஅந்த நாளில், போருக்காக அணிவகுக்கப்பட்ட அணியில் புள்ளிகளையுடைய முகத்தையுடைய யானைகள் ஊக்கமாகச் செல்வது போல
நீர் அணி அணியின் நிரை நிரை பிடி செலஇந்த நீராட்டுவிழாவின் காரணமாக வகுக்கப்பட்ட அணியில் வரிசை வரிசையாகப் பெண்யானைகள் செல்ல,
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்அழகாக அணிந்த அணியினரான இளையவர்களும், அவருக்கு இனியரான அவரின் காதலியரும்,
ஈரணி அணியின் இகல் மிக நவின்றுநீராடத்தகுந்த ஈரமான அணிகளுடன், விளையாட்டாகச் சண்டையிடுவதை மிகவும் விரும்பி,
தணி புனல் ஆடும் தகை மிகு போர்_கண்குளிர்ந்த புதுப்புனலில் ஆடுகின்ற பொருத்தம் மிகுந்த போரிடும் இடமாக
துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின்அந்தத் தெளிந்த ஆற்று நீர் அமைய, ஏற்ற துறைக்கு முந்திச் செல்ல முற்பட்டு,
அணி அணி ஆகிய தாரர் கருவியர்அணியணியாகிய போரின் முன்னணிப்படையினரைப் போல, தேவையான கருவிகளுடன்,
அடு புனலது செல அவற்றை இழிவர்கரையை இடிக்கும் வெள்ளத்தினூடே செல்ல, தம் அணிகலன்களைக் களைவர்;
கைம்_மான் எருத்தர் கலி மட மாவினர்யானைகளின் கழுத்தில் அமர்ந்திருப்போரும், விரைந்து செல்லும் இளைய குதிரையில் அமர்ந்திருப்போரும்,
நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர்நெய்பூசிச் சிறப்படைந்த துருத்தியை உடையோரும், உள்ளே மணக்கும் நீர் கொண்ட கொம்பினையுடையோரும்,
வெண் கிடை மிதவையர் நன் கிடை தேரினர்வெண்மையான சாரம் அமைத்த தெப்பத்தினையுடையவரும், நல்ல இருக்கைகள் கொண்ட தேரில் வருபவர்களும்,
சாரிகை மறுத்து தண்டா உண்டிகையானை, குதிரை ஆகியவை செல்வதற்கு இடங்கொடாமல், குறைவில்லாத மக்கள் கூட்டம்,
ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇஒரே ஒரு வழியில் நெருக்கியடித்துக்கொண்டு, ஊர்ந்து ஊர்ந்து இடமெல்லாம் திரிய,
சேரி இளையர் செல அரு நிலையர்புறச்சேரியிலிருக்கும் இளையர் வெளியே செல்வதற்கு முடியாத நிலையினராக,
வலியர் அல்லோர் துறை_துறை அயரநீருக்குள் பாயும் வலிமையற்றோர் துறைதுறையாகச் சென்று நீரில் குளிக்க,
மெலியர் அல்லோர் விருந்து புனல் அயரமெலியர் அல்லாத வலியவர் புதுப்புனலுக்குள் பாய்ந்து விளையாட,
சாறும் சேறும் நெய்யும் மலரும்மணப்பொருள்களாகிய சாறும், சந்தனம், குங்குமம் ஆகியவற்றின் குழம்பும், வாசனை நெய்யும், பூக்களும்
நாறுபு நிகழும் யாறு வரலாறுமணக்கும்படியாக நிகழ்கின்றது வையையாறு வருகின்ற முறை;
நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்துபல்வேறு மணம் கமழ ஓடுகின்ற ஆற்றினைக் கண்டு மனமழிந்து
வேறுபடு புனல் என விரை மண்ணு கலிழைவேறுபட்டுப்போன நீர் என்று எண்ணி, அந்த மணப்பொருள்களைக் கழுவிய கலங்கல்நீரைக் கண்டு
புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டுவேதங்களை விரும்பும் அந்தணர் கலங்கினர் மருண்டுபோய்;
மாறு மென் மலரும் தாரும் கோதையும்தம் இயல்பினின்றும் மாறிப்போன மென்மையான மலர்களும், ஆண்களின் மாலைகளும், பெண்களின் மாலைகளும்,
வேரும் தூரும் காயும் கிழங்கும்மரத்து வேர்களும், தூர்களும், காய்களும், கிழங்குகளும்,
பூரிய மாக்கள் உண்பது மண்டிகீழ்மக்கள் உண்டு எஞ்சிய பகுதிகளும்,
நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்துநார்க்கூடையால் அரிக்கப்பட்ட கள்ளின் சிந்திய பாகங்களும் வெள்ளத்தில் சேர்ந்துவர, தன் தூய இயல்பு அழிந்துபோய்
வேறு ஆகின்று இ விரி புனல் வரவு எனவேறாகிவிட்டது இந்த அகன்ற புதுநீரின் வரவு என்று சொல்லும்படி
சேறு ஆடு புனலது செலவுசேறாகக் குழம்பிப் போனது புதுவெள்ளத்தின் போக்கு;
வரை அழி வால் அருவி வா தாலாட்டமலைப்பகுதிகளைக் கடந்துவரும் வெண்மையான அருவி தாலாட்ட,
கரை அழி வால் அருவி கால் பாராட்டகரைகளைக் உடைக்குப்படியாகத் தூய அருவிநீரைக் காற்று எடுத்து மோத,
இரவில் புணர்ந்தோர் இடை முலை அல்கல்இரவில் தலைவியைக் கூடிய தலைவர், தலைவியரின் முலைகளுக்கிடையே துயிலும் இன்பத்திற்கு
புரைவது பூந்தாரான் குன்று என கூடார்க்குஒப்பானது பூமாலையணிந்தவனின் திருப்பரங்குன்று என, அங்குக் கூடாதவர்க்குச்
உரையோடு இழிந்து உராய் ஊர் இடை ஓடிசொல்லுவதோடு, கரையை விட்டிறங்கிப் பரந்து மதுரையின் தெருக்களினூடே ஓடி,
சல படையான் இரவில் தாக்கியது எல்லாம்தண்ணீர்ப் பெருக்கால் இரவில் தாக்கியது எல்லாம்
புலப்பட புன்னம் புலரியின் நிலப்படவெளியே தெரியும்படி, புன்மையான வைகறைப்பொழுதில் தரையில் தான் செய்த அடையாளங்களைக் காட்டி,
தான் மலர்ந்தன்றேதான் பரந்தது
தமிழ் வையை தண்ணம் புனல்தமிழையுடைய வையை ஆற்றில் வந்த குளிர்ந்த அழகிய புதுவெள்ளம்;
விளியா விருந்து விழுவார்க்கு கொய்தோய்“அழைக்கப்படாத விருந்தினனாகிய நீ உன்னை விரும்பும் பிற மகளிர்க்கே கொய்தாய்
தளிர் அறிந்தாய் தாம் இவைஇந்தத் தளிரை;” “அறிந்துகொண்டாய், அப்படியேதாம், இவை”
பணிபு ஒசி பண்ப பண்டு எல்லாம் நனி உருவத்து“பணிமொழியொடு குறுகிநிற்கும் பண்பாளனே! முன்பு நீ கொண்டுவந்ததெல்லாம் சிறந்த உருவத்தைக் கொண்டிருந்தது,
என்னோ துவள் கண்டீஇது ஏனோ துவண்டிருக்கிறது பார்,
எய்தும் களவு இனி நின் மார்பின் தார் வாட“வாய்க்கட்டும் உன் களவுக்காதல் இனி, உன் மார்பின் மாலை வாடும்படி மிக வருந்தி
கொய்ததும் வாயாளோ கொய் தழை கை பற்றிஇத்தளிரைக் கொய்து வந்ததற்கேனும் உனக்கு வாய்க்கமாட்டாளோ? கொய்யப்பட்ட இந்தத் தழையை அன்பளிப்பாகக் கொண்டு
செய்ததும் வாயாளோ செப்புகொடுத்த பின்னும் உனக்கு வாய்க்கமாட்டாளோ? சொல்”
புனை புணை ஏற தாழ்த்ததை தளிர் இவை“அழகாகச் செய்யப்பட்ட தெப்பத்தில் ஏறி வரும்போது தாமதமானதால் தளிரான இவை
நீரின் துவண்ட சேஎய் குன்றம் காமர்வையையின் நீர் காரணமாகத் துவண்டன, முருகனின் திருப்பரங்குன்றத்தின்மேல் ஆணை! அழகிய
பெருக்கு அன்றோ வையை வரவுநீர்ப்பெருக்கு அன்றோ இந்த வையையின் புதுப்புனல் வரவு”
ஆம் ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம்“ஆமாம், அது சரிதான் காதலையுடைய அழகிய காமமும்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ ஒல்லைஒருமிக்க ஒரே தன்மையுடையதாய் இருப்பதுண்டோ? விரைவாகச்
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையைசுருங்கிப்போவதும், பின்பு பெருகுவதும் – இதற்காக நீ சூளுரைக்கவேண்டாம் – வையையின்
பெருக்கு அன்றோ பெற்றாய் பிழைபெருக்கினைப் போலத்தானே அதுவும்! பெற்றாய் தெய்வ குற்றம்!
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்“அருகில் உன் ஊர் இருந்தும், வைகையின் நீர்ப்பெருக்கினால் தெப்பத்தில் வருவதனால் அது உன்னைத் தாமதப்படுகின்றது,
குருகு இரை தேர கிடக்கும் பொழி காரில்குருகினங்கள் இரை தேடுமளவுக்கு வைகையில் நீர் வற்றிக்கிடக்கின்றது, முறையே, பொழிகின்ற கார்காலத்திலும்,
இன் இளவேனில் இது அன்றோ வையை நின்இனிய இளவேனிகாலத்திலும்; இத்தன்மை உடையதன்றோ வையை, உன்னுடைய காமமும்
வையை வயம் ஆக வைவையையின் வழிப்பட்டதே என்று கொள்;
செல் யாற்று தீம் புனலில் செல் மரம் போல“ஓடுகின்ற ஆற்றின் இனிய நீரில் அதன் வழியே செல்லும் மரத்தைப் போல,
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினைகவர்வதில் வல்லவராகிய மகளிர் இயக்கிய வழியே இயங்கி அவருக்குத் தெப்பம் ஆகிய மார்பினைக் கொண்டாய்!
என்னும் பனியாய் இரவு எல்லாம் வைகினைஒருசிறிதும் அஞ்சாமல் இரவெல்லாம் அவரோடு தங்கினாய்!
வையை உடைந்த மடை அடைத்த_கண்ணும்வையையில் உடைந்த மடையை அடைத்தபோதும்,
பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும்மீண்டும் ஒழுகும் கசிவுநீர் போல, இங்கு வந்த பின்னும்
அனற்றினை துன்பு அவிய நீ அடைந்த_கண்ணும்அவரை வெம்மையுறச் செய்தாய்! துன்பம் நீங்கும்படி நீ மீண்டும் அவரிடம் சென்று தங்கியிருந்தபோதும்
பனித்து பனி வாரும் கண்ணவர் நெஞ்சம்நடுங்கி நீர் ஒழுகும் கண்ணையுடையவராய் இருக்கும் அம் மகளிரின் நெஞ்சத்தை
கனற்றுபு காத்தி வரவுவெதும்பச் செய்து இங்கு வருவதைத் தவிர்ப்பாயாக!”
நல்லாள் கரை நிற்ப நான் குளித்த பைம் தடத்து“நல்லவள் ஒருத்தி கரையில் நிற்க, நான் குளித்த பசிய குளத்தில்
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து என் மேல்கரையிலே நில்லாதவளாய், நீரில் பாய்ந்து அலையில் மூழ்கி, அதைவிட்டு நீங்கி எழுந்து, என் மேல்
அல்லா விழுந்தாளை எய்தி எழுந்து ஏற்று யான்துன்பமுற்று விழுந்தவளை அடைந்து எழுந்து கைகளில் தாங்கி நான்
கொள்ளா அளவை எழும் தேற்றாள் கோதையின்எடுத்துக்கொள்ளும் முன்பே எழுந்துவிட்டாள் அந்தக் குற்றமில்லாதவள், மாலை போல
உள் அழுத்தியாள் எவளோ தோய்ந்தது யாது எனஎன் மார்பினுள்ளே அழுந்த முயங்கியவள் எவளோ? இவ்வாறு அவள் என்மீது விழுந்தது எந்த இடத்தில்?” என்று கூற
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர்“தெளிவாகத் தெரிந்துகொள்ளும்வண்ணம் உணர்வாய் நீ, வேறோர்
யாறு உண்டோ இ வையை யாறுஆறும் உண்டோ? நீ ஆடியது இந்த வையையாறுதான்”
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால்“நான் குளம் என்று சொல்லும்போது, அது இந்த வையை ஆறு என்ற கூற்று எதனால்? என் கையால்
தலை தொட்டேன் தண் பரங்குன்றுஉன் தலையைத் தொட்டுக் கூறுகிறேன், குளிர்ந்த திருப்பரங்குன்றத்தின் மீது ஆணை”
சினவல் நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்கு“கோபங்கொள்ள வேண்டாம், உன் மையுண்ட கண்கள் கோபத்தினால் சிவப்பாவதைக் கண்டு அஞ்சுகின்ற உன் தலைவனோடு
துனி நீங்கி ஆடல் தொடங்கு துனி நனிஊடல் நீங்கி, நீரில் விளையாடுதலைத் தொடங்கு, ஊடல் மிகவும்
கன்றிடின் காமம் கெடூஉம் மகள் இவன்கன்றிப்போனால் உங்கள் காம இன்பத்தை அது கெடுத்துவிடும், மகளே! இவன்
அல்லா நெஞ்சம் உற பூட்ட காய்ந்தேதுன்புற்ற நெஞ்சம் இறுகப் பூட்டிக்கொள்ளும்படி அவன் மீது சினந்துவிட்டுப்
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் எனபின்னர் அவனைத் தேடிச் செறிந்த இருளில் செல்லவேண்டாம், அது பிழையாகும் என்று
இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்துவீட்டிலுள்ள முதுபெண்டிர் முயன்று கெஞ்சியும், மீறியும், வருந்தியும்
வல்லவர் ஊடல் உணர்த்தர நல்லாய்வல்லவர் வாயிலாக ஊடலை உணர்த்துதலால், நல்ல விறலியே!
களிப்பர் குளிப்பர் காமம் கொடி விடஇருவரும் கள்ளுண்டு களிப்பர், வையையில் குளிப்பர், காம இன்பம் கொடிவிட்டு வளர
அளிப்ப துனிப்ப ஆங்காங்கு ஆடுபஅவன் அளிசெய்ய, இவள் ஊட, ஆங்காங்கே ஆடி மகிழ்ந்தனர்;
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்இவ்வாறு நீராடுபவரின் நெஞ்சங்களில் மலர்ந்து விளங்கிய காமம்
வாடற்க வையை நினக்குஎன்றும் வாடாமல் இருப்பதாக, வையையாறே, உன்னிடம்.
  
# 7 வையை – பாடியவர் : மையோடக் கோவனார்# 7 வையை
பண் அமைத்தவர் : பித்தாமத்தர்            பண் : பண்ணுப்பாலையாழ் 
  
திரை இரும் பனி பௌவம் செவ்விதா அற முகந்துஅலைகளையுடைய கரிய குளிர்ச்சியான கடலை நன்கு வற்றிப்போகுமளவு முகந்துகொண்டு
உர உரும் உடன்று ஆர்ப்ப ஊர் பொறை கொள்ளாதுவலிய இடி சினந்து ஆரவாரிக்க, தம்மேல் ஏறியுள்ள பாரத்தைப் பொறுக்கமாட்டாமல்,
கரை உடை குளம் என கழன்று வான் வயிறு அழிபுகரையை உடைத்துக்கொண்டு வரும் குளத்து நீர் போல நெகிழ்ந்து மேகங்கள் தம் வயிறு கிழிந்ததனால்,
வரை_வரை தொடுத்த வயங்கு வெள் அருவிமலையின் சிகரங்கள்தோறும் தொடுக்கப்பட்டதுபோல் உருவான ஒளிவிடும் வெண்மையான அருவிநீர்,
இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாதுஇரவையுடைய இருளிலும் பகலிலுமாக, தான் செல்லுவதற்குரிய இடம் அடைதற்கு அரியது என்று எண்ணாமல்,
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளியவெற்றியுண்டாக முழங்கும் முரசினையுடைய பாண்டிய மன்னர் கொள்ளக் கருதிய
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்னநாட்டைச் சேர்வதற்கு நிமிர்ந்து செல்லும் படையின் நீண்ட அணியின் எழுச்சியைப் போல,
பெயலான் பொலிந்து பெரும் புனல் பல நந்தமழையால் பொலிவுற்றுப் பெருக்கெடுத்துவரும் வெள்ளமாய்ப் பல திசைகளிலிருந்தும் வந்து கூடிப்பெருக,
நலன் நந்த நாடு அணி நந்த புலன் நந்தஉயிர்களுக்கு நன்மை பெருக, மக்கள் வாழும் பகுதிகளின் அழகு சிறந்து விளங்க, விளைபுலன்களின் வளம் பெருக,
வந்தன்று வையை புனல்வந்தது வையையின் நீர்ப்பெருக்கு;
நளி இரும் சோலை நரந்தம் தாஅய்அடர்ந்த கரிய சோலைகளிலுள்ள நரந்தம் புற்களின் மேலே பரவி,
ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடுஒளிர்கின்ற கிளைகளையுடைய வேங்கை மரத்தில் மலர்ந்த பூங்கொத்துகளிலிருந்து உதிர்ந்த பூக்களோடு சேர்ந்து,
துளியின் உழந்த தோய்வு அரும் சிமை-தொறும்மழைத்துளிகளால் ஓங்கி அறையப்பெற்ற எட்டுவதற்கு அரிய மலைச் சிகரங்கள்தோறும்
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டுகாற்றால் வளைக்கப்பட்ட கிளைகளையுடைய பெரிய மரங்களை வேரோடு கிழித்துப் பிளந்து உருட்டித் தள்ளி,
உயர்ந்து_உழி உள்ளன பயம்பு இடை பரப்பிஉயரமான இடங்களிலுள்ளனவற்றைப் பள்ளங்களில் பரப்பி,
உழவர் களி தூங்க முழவு பணை முரலஉழவர்கள் மகிழ்ச்சியால் கூத்தாட, முழவுகளும், பெரும் முரசுகளும் முழங்க,
ஆடல் அறியா அரிவை போலவும்ஆடல் கூத்தினை அறியாத கூத்தியைப் போலவும்,
ஊடல் அறியா உவகையள் போலவும்ஊடலின் தன்மை அறியாத உவகையினளைப் போலவும், 
வேண்டு வழி நடந்து தாங்கு தடை பொருதுவிருப்பமான வழிகளிலெல்லாம் நடந்து, குறுக்கிடும் தடைகளை மோதித்தாக்கி,
விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போலவிதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவன் செய்த மேனிப் பூச்சுக்குரிய கலவையைப் போல,
பொது நாற்றம் உள்ளுள் கரந்து புது நாற்றம்பொதுவான மணத்தை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு, புதிய ஒரு மணத்தைச்
செய்கின்றே செம் பூ புனல்செய்து வந்தது சிவந்த அழகிய புதுப்புனல்;
கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்பாய்ந்துவரும் நீரால் குளத்திலுள்ள குளிர்ச்சியான செங்கழுநீரின்
அவிழ்ந்த மலர் மீது உற்று என ஒருசார்மலர்ந்த பூக்களின் மீது வெள்ளம் ஏறி மூழ்கடித்தது என்று ஒரு பக்கமாய்ச் சிலர் கூற,
மாதர் மட நல்லார் மணலின் எழுதியஇள மங்கையர் தாம் மணலின் மீது செய்த
பாவை சிதைத்தது என அழ ஒருசார்மணற்பாவையைச் சிதைத்துப்போனது வெள்ளம் என்று ஒருபக்கமாய் அழுதுநிற்க,
அக வயல் இள நெல் அரி கால் சூடுவயலுக்குள் விளைந்து நின்ற இள நெற்பயிரை அறுத்து ஒருமுறை அடித்து வைத்த நெற்கட்டுகளின் மீது
தொகு புனல் பரந்த என துடி பட ஒருசார்மிகுந்த வெள்ளம் பெருகியது என்று துடியை முழக்கி ஒருபக்கமாய்ச் சிலர் அழைப்ப,
ஓதம் சுற்றியது ஊர் என ஒருசார்பெருவெள்ளம் ஊரையே சுற்றி வளைத்தது என்று ஒருபக்கமாய்ச் சிலர் கூற,
கார் தூம்பு அற்றது வான் என ஒருசார்மேகக் கூட்டங்கள் நீரைச் சொரியும் சிறுதுளைகள் உடைந்துபோயின வானத்தில் என்று ஒருபக்கமாய்ச் சிலர் கூற,
பாடுவார் பாக்கம் கொண்டு எனபாடுகின்ற பாணர்களின் பாக்கத்தை வெள்ளம் கவர்ந்து கொண்டது எனவும்,
ஆடுவார் சேரி அடைந்து எனஆடுகின்ற கூத்தரின் சேரியை வெள்ளம் சுற்றியது எனவும்,
கழனி வந்து கால் கோத்து எனவெள்ளம் வயலுக்குள் வந்து வாய்க்கால்களோடு மூழ்கடித்தது எனவும்,
பழன வாளை பாளை உண்டு எனவெள்ளம் கமுகு மரத்தளவு உயர்ந்து வயலின் வாளை மீன்கள் கமுகின் பாளைகளை உண்டன எனவும்,
வித்து இடு புலம் மேடு ஆயிற்று எனஉழவரின் நாற்றாங்கால்கள் வண்டல் பரந்து மேடாகிப் போயின எனவும் பேச்சுக்கள் எழ,
உணர்த்த உணரா ஒள் இழை மாதரைஊடலைத் தீர்ப்பதற்கு உணர்த்திக்கூறியும் உணராத ஒளிரும் இழையணிந்த பெண்களைச்
புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைந்துசேர்வதற்கான எழும் ஆடவரின் ஆசைப் பெருக்கினைப் போல வெள்ளம் பெருகி விரைய,
சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇகரு முதிர்ந்த வாளை மீனின் வயிற்றைப் போலத் தம் சுற்றத்தாரோடு சூழ்ந்து நின்று,
பழன உழவர் பாய் புனல் பரத்தந்துவயல்களின் உழவர்கள் பாய்கின்ற வெள்ளத்தில் பரவிச் சென்றனர்;
இறுவரை புரையுமாறு இரு கரை ஏமத்துஅதலபாதாளமான மலைச் சரிவைப் போன்று நிற்கும் இரண்டு கரைகளாகிய காவலுக்குள் அடங்கி,
வரை புரை உருவின் நுரை பல சுமந்துபனிமலையின் சிகரங்களைப் போன்ற உருவமுடையதாய் நிறைய நுரைகளைச் சுமந்துகொண்டு,
பூ வேய்ந்து பொழில் பரந்துமுழுதும் பூக்களால் மூடப்பட்டு, சோலைகளில் பரந்து,
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்விரைந்து நீருக்குள் விளையாடும் ஆராய்ந்தணிந்த மாலையினையுடைய பெண்கள்,
அலர் தண் தாரவர் காதில்மலர்ந்த குளிர்ந்த மாலையணிந்த ஆடவர், ஆகியோருக்கு, முறையே, காதுகளில்
தளிர் செரீஇ கண்ணி பறித்துதளிர்களைச் செருகியும், தலையின் மாலையைப் பறித்துக்கொண்டும்,
கை வளை ஆழி தொய்யகம் புனை துகில்பெண்களின் கைவளையல்கள், மோதிரங்கள், தலையணியாகிய தொய்யகங்கள், உடுத்தியிருந்த ஆடை,
மேகலை காஞ்சி வாகுவலயம்மேகலைகள், காஞ்சிகள் ஆகியவற்றையும், ஆண்களின் தோள்வளையங்கள் ஆகிய
எல்லாம் கவரும் இயல்பிற்றாய் தென்னவன்எல்லாவற்றையும் கவர்ந்து செல்லும் தன்மையையுடையதாய், பாண்டிய மன்னன்
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்டபகைவரின் தோற்றுப்போன நிலத்துக்குள் புகுவதைப் போன்று இருந்தது, அந்தப் பகைவரைக் கொன்றழித்த
தானையான் வையை வனப்புபடையை உடையவனின் வையையின் வனப்பு;
புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்அனைவரும் விரும்பத்தக்க குணங்களையுடைய பாண்டியனின் வையை ஆற்றில் ஆடிமகிழ்வோருள்
துரந்து புனல் தூவ தூ மலர் கண்கள்ஒருத்தி, பீச்சுங்குழலுள் நீரைச் செலுத்தி மற்றவர்மேல் பீச்ச, அவர்கள் தமது தூய மலர் போன்ற கண்கள்
அமைந்தன ஆங்கண் அவருள் ஒருத்திஇமைக்காமல் விழித்து நோக்க, அங்கு அவர்களுள் ஒருத்தி
கை புதைஇயவளைகைகளால் கண்களை மூடிக்கொண்டவளை
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்வெற்றியால் இறுமாந்து தன்னுடைய பொன் சரடால், கரும்பு வரையப்பட்ட அணை போன்ற மென்மையான தோள்களைக்
போக்கி சிறைப்பிடித்தாள் ஓர் பொன் அம் கொம்புகட்டிச் சிறைப்பிடித்தாள்; அதைக் கண்ட பொற்கொம்பு போன்ற மற்றொருத்தி
பரிந்து அவளை கை பிணை நீக்குவான் பாய்வாள்இரக்கங்கொண்டு, அவளைக் கைச்சிறைக்குள்ளிருந்து நீக்குவதற்காகப் பாய்ந்தாள்;
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்அவளின் வாளால் இரண்டாக அரியப்பட்ட மாவடுவைப் போன்ற, மை தீட்டப்பெற்ற கண்ணின் ஒளி பாய்ந்து
செம்மை புது புனல் சென்று இருள் ஆயிற்றேசிவந்த புது வெள்ளம் தன் நிறம் அகன்று நீல நிறம் பெற்றது,
வையை பெருக்கு வடிவுஇவ்வாறானது வையையின் நீர்ப்பெருக்கின் பொலிவு;
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீரவிரும்பத்தகுந்த ஈரமான அணிகளைக் கொண்ட உடலின் ஈரம் போகும்படி,
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்வண்டுகள் மொய்க்கும் கடுப்புடைய கள்ளினைத் தன் கையில் ஏந்தினாள், நீல நிற நெய்தல் போன்ற கண்களையுடையவள்;
பேர் மகிழ் செய்யும் பெரு நறா பேணியவேகண்டார்க்குப் பெரு மகிழ்ச்சியைச் செய்யும் பெரிய நறவத்தின் சிவந்த நிறத்தைப் பெற்றன,
கூர் நறா ஆர்ந்தவள் கண்மிகுதியான கள்ளினைக் குடித்தவளின் கண்;
கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினைஅந்தச் சிவந்த கண்களின் இயல்பினைக் கண்டு, தலைவன் பாராட்டி, தலைவியின் அழகிய தன்மையுள்ள பார்வையை
பாண் ஆதரித்து பல பாட அ பாட்டுஇசைப்பாட்டால் பாட விரும்பி, பற்பல பாடல்களைப் பாட, அந்தப் பாடல்களைப்
பேணாது ஒருத்தி பேது உற ஆயிடைபாடுபவனின் கருத்தை அறியாமல் ஒருத்தி தான் மயங்கிப்போக, அப்பொழுது
என்னை வருவது எனக்கு என்று இனையாஎத்தகைய துன்பம் வருமோ எனக்கு என்று வருந்தி
நன் ஞெமர் மார்பன் நடுக்கு_உற நண்ணிநன்கு பரந்த மார்பினையுடைய தலைவன் நடுங்கிப்போய் தலைவியின் அருகில் செல்ல,
சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊரமுன்னரே மீந்துபோய்க்கிடந்த ஊடலால் சிவந்திருந்த கண்களில் மேலும் சிவப்பேற,
வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள்முறையோடு நிகழ்ந்துகொண்டிருந்த நீர்விளையாட்டின் மங்கையர் பலருள்ளே அந்த ஒருத்தியோடு
பகை தொடர்ந்து கோதை பரியூஉ நனி வெகுண்டுபகைமை கொண்டு, தன் மாலையை அறுத்தெறிந்து, மிகுந்த சினங்கொண்டு
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்ஆற்றினில் விளையாடும் தன் தலைவியின் மேனி அழகைக் கண்ட தலைவன்
சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்துசந்தனம் பூசிய தன் மேனியை அழகிய நிலத்தில் கிடத்தி வணங்க, அவனுடைய தலையை மிதித்து
தீர்வு இலது ஆக செரு உற்றாள் செம் புனல்தன் சினம் தீரப்பெறாதவளாக ஊடல் கொண்டாள், சிவந்த நீரில்
ஊர் உடன் ஆடும் கடைஊர் மக்களுடன் புதுநீர் ஆடிய இடத்தில்;
புரி நரம்பு இன் கொளை புகல் பாலை ஏழும்முறுக்குண்ட நரம்பில் இனிய தாளஓசையைத் தருகின்ற, விரும்புதற்குரிய பாலைப் பண் ஏழினையும்
எழூஉ புணர் யாழும் இசையும் கூடஎழுப்பிக் கலந்து சேர்க்கின்ற யாழின் இசையும், இசைப்பாட்டும் தம்முள் பொருந்த,
குழல் அளந்து நிற்ப முழவு எழுந்து ஆர்ப்பகுழலும் அவற்றின் இசையளவை ஒத்து நிற்க, முழவோசை எழுந்து முழங்க,
மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்கஅரசனால் தலைக்கோல் பட்டம் பெற்ற மகளிரும், பாணரும் கூத்தாடுதலைத் தொடங்க,
பொருது இழிவார் புனல் பொற்பு அஃதுகரைகளை இடித்து ஓடுகின்ற புதுப்புனலின் அழகிய ஆரவாரம்
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும்உருமேறாகிய இடியோடு சேர்ந்த முகிலின் முழக்கத்தைப் போன்று ஒலிக்கும்
திருமருத முன்துறை சேர் புனல்-கண் துய்ப்பார்திருமருத முன்துறை என்ற பெயர்கொண்ட துறையைச் சேரும் வையை நீரில் குளித்து இன்புறுவாரின்
தாமம் தலை புனை பேஎம் நீர் வையைகழுத்து மாலைகளத் தன் தலைமேல் சூட்டிக்கொள்ளும் அச்சந்தரும் ஆழமான நீரைக்கொண்ட வையையே!
நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க– உன்னால் கிடைக்கும் இன்பமான பயனைப் பாடி, துன்பம் நீங்கப்பெற்று மகிழ்வோமாக!
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்து எனவேஉன்னைத் தழுவி நீராடும் இன்பம் எம்மிடத்திலிருந்து என்றும் நீங்காமல் இருக்கட்டும், இன்று கூடினாற் போலவே என்று –
  
# 8 செவ்வேள் – பாடியவர் : நல்லந்துவனார்# 8 செவ்வேள்
பண் அமைத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனார்- பண் : பண்ணுப்பாலையாழ் 
  
மண் மிசை அவிழ் துழாய் மலர் தரு செல்வத்துஇந்த மண்ணுலகத்தில் – மலர்ந்த துளசி மாலையினையும், உயிர்களுக்கு அளிக்கும் செல்வத்தினையும்,
புள் மிசை கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்மேலே கருடப்பறவை வரையப்பெற்ற கொடியினையும் உடைய திருமாலும், காளையின் மேல் ஏறிவரும் சிவபெருமானும்,
மலர் மிசை முதல்வனும் மற்று அவன் இடை தோன்றிதாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் பிரமனும், அந்தப் பிரமனிடத்திலிருந்து தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும்உலகின் இருளை அகற்றிய சூரியர் பன்னிருவரும்,
மருந்து_உரை இருவரும் திருந்து_நூல் எண்மரும்தேவ மருத்துவராகிய அசுவனி, தேவர் ஆகிய இருவரும், மக்கள் திருந்துவதற்குக் காரணமான நூல்களை உணர்ந்த எண்பது வசுக்களும்,
ஆதிரை முதல்வனின் கிளந்ததிருவாதிரை மீனுக்குரிய முதல்வனாகிய சிவபெருமானின் பெயரால் சொல்லப்பட்ட
நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும்தலைவர்கள் உருத்திரர் பதினொருவரும், நல்ல திசைகளைக் காப்பவராகிய திசைக்காவலர் எண்மரும்,
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்ஆகிய இவர்கள் யாவரும், பிறரும், தேவர்களும், அசுரர்களும்,
மேவரு முதுமொழி விழு தவ முதல்வரும்உள்ளத்தால் உணர்வதற்கு அரிய வேதங்களைக் கற்றுணர்ந்த உயர்ந்த தவமுனிவர்களும்,
பற்று ஆகின்று நின் காரணமாக– தங்குவதற்குரிய இடமானது, உன்னை வழிபடும் பொருட்டு,
பரங்குன்று இமய குன்றம் நிகர்க்கும்இந்தத் திருப்பரங்குன்றம்; எனவே இது இமயத்தை நிகர்க்கும்;
இமய குன்றினில் சிறந்துஅந்த இமய மலையினும் சிறந்து,
நின் ஈன்ற நிரை இதழ் தாமரைஉன்னை ஈன்ற வரிசையான இதழ்களையுடைய தாமரையின்
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழாமின்னல் போன்று விளங்கும் இதழ்த்தொகுதி என்றும் உதிராத தன்மையுடைய
ஒரு நிலை பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின்வற்றாமல் ஒரே நிலையிலிருக்கும் சரவணப் பொய்கையைப் போன்றது, உன் குன்றினில்
அருவி தாழ் மாலை சுனைஅருவிநீர் தங்கும் வரிசையாக அமைந்த சுனை;
முதல்வ நின் யானை முழக்கம் கேட்டமுதல்வனே! உன் ஊர்தியாகிய யானை பிளிறும் ஒலியின் முழக்கத்தைக் கேட்ட
கதியிற்றே காரின் குரல்தன்மையது முகிலின் இடிக்குரல்;
குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவஅந்தக் காரின் இடிக் குரலைக் கேட்ட கோழி குன்றே அதிரும்படி கூவும்;
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்பஅதைக் கேட்ட மதம் நிறைந்த யானையும் எதிர்க்குரலிட்டு அதிர முழங்கும்;
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு மலை முழைஇந்த ஒலிகளுக்கு எதிரும் குதிருமாய் ஆனது எதிரொலிக்கும் திருப்பரங்குன்றத்து மலைக்குகைகள்;
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன இனம்ஏழு துளை, ஐந்து துளை ஆகியவற்றைக் கொண்ட குழல்கள், யாழ் ஆகியவற்றின் இசைக்கு ஒப்பானதைப் போன்று, தம் இனத்தை
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலரவிரும்புகின்ற தும்பியும், வண்டும், மிஞிறும் ஆரவாரிக்க, சுனைகளில் பூக்கள் மலர்ந்து நிற்க,
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப கொடி மலர்கொன்றை மரங்களில் கொடி போன்று பூங்கொத்துக்ள் மலர்ந்திருக்க, கொடிகளில் மலர்கள்
மன்றல மலர மலர் காந்தள் வாய் நாறநறுமணம் உடையவாய் மலர்ந்திருக்க, மலரான காந்தள் இடமெல்லாம் மணக்க,
நன்று அவிழ் பல் மலர் நாற நறை பனிப்பநன்றாக இதழ் அவிழ்ந்த பலவான மலர்கள் மணம் பரப்பித் தேன்துளிகளைச் சிந்த,
தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம நின்தென்றலானது அசைந்து வரும் சிறந்த தன்மையை உடையது, உன்
குன்றத்தான் கூடல் வரவுதிருப்பரங்குன்றத்துக்கு மதுரையிலிருந்து வருகின்ற வழி.
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல்கிரவுஞ்சம் என்னும் குன்றினை உடைத்த ஒளிரும் வேலினையுடையவனே! கூடல்நகரில்
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழமணவிழா பொருந்திய மணிநிற முரசுகளின் முழக்கம் எழ,
காலொடு மயங்கிய கலிழ் கடல் எனகாற்றினால் மோதி அடிக்கப்பட்டு, கரைக்கு இடம்பெயர்ந்து வரும் கடலின் முழக்கத்தைப் போலவும்,
மால் கடல் குடிக்கும் மழை குரல் எனகரிய கடல்நீரைக் குடிக்கும் மேகத்தின் இடிமுழக்கத்தைப் போலவும்,
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் எனஇந்திரனின் இடியேறு முழக்கும் பெரிய இடிமுழக்கம் போலவும்,
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின்மணவிழா முரசுகள் முழங்க முழங்க, அம் முழக்கத்திற்கு மாறுமாறாக முழங்கும் உன்
குன்றம் குமுறிய உரைதிருப்பரங்குன்றம் முழங்கிய முழக்கம்;
தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்தலைவியரால் தூதாக ஏவிவிடப்பட்ட வண்டுக் கூட்டத்தின் இனிய இசை, அவர்களின்
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்றுகாதல் பெருக்கத்தைப் பழமையான மதுரையின் மதிலோரத்து மக்கள் அறிந்துகொள்ளும் ஆரவாரமாயிற்று;
வடு வகிர் வென்ற கண் மா தளிர் மேனிவகிர்ந்த மாவடுவின் அழகை வெல்லும் கண்களும், மாந்தளிர் போன்ற மேனியும்,
நெடு மென் பணை தோள் குறும் தொடி மகளிர்நீண்ட மெல்லிய மூங்கில் போன்ற தோள்களும், குறிய வளையல்களும் உடைய மகளிரின்
ஆரா காமம் ஆர் பொழில் பாயல்தீராத காம இன்பத்தினை, அழகிய சோலையில், பூப்படுக்கையில்,
வரை_அகத்து இயைக்கும் வரையா நுகர்ச்சிமலைச் சாரலில் தலைவரோடு கூடிப்பெறும் களவுப் புணர்ச்சியினையும்,
முடியா நுகர்ச்சி முற்றா காதல்முடிவுறாத இன்ப நுகர்ச்சியினைக் கொண்ட முதிர்தல் இல்லாத காதல் வசப்பட்ட
அடியோர் மைந்தர் அகலத்து அகலாகணவரின் அடியைச் சேர்ந்து வாழும் மகளிர் தம் கணவரின் மார்பினை விட்டு அகலாத
அலர் ஞெமல் மகன்றில் நன்னர் புணர்ச்சிமலர்களினூடே திரியும் மகன்றில் பறவைகளின் நல்ல புணர்ச்சியைப் போன்ற
புலரா மகிழ் மறப்பு அறியாது நல்கும்உலராத மகிழ்ச்சியினையும் மறவாமல் காதலர்க்கு அளிக்கும்
சிறப்பிற்றே தண் பரங்குன்றுசிறப்பினையுடையது குளிர்ந்த திருப்பரங்குன்றம்;
இனி மன்னும் ஏதிலர் நாறுதி ஆண்டு“இப்பொழுது வேற்று மகளிரின் மணம் உன்மேல் மணக்கின்றதே! அங்கு
பனி மலர் கண்ணாரோடு ஆட நகை மலர்குளிர்ந்த மலர் போன்ற கண்களையுடையவரோடு ஆடிக்களிக்க, சிரிக்கின்ற மலர்களையுடைய
மாலைக்கு மாலை வரூஉம் வரை சூள் நில்மாலைதோறும் நிகழ்கின்றது; நீ உறுதியாகக் கூறிய உன் சூள்மொழிகளை நிறுத்திக்கொள்;
காலை போய் மாலை வரவுநாள்தோறும் காலையில் போய் மாலையில் திரும்பும் உன்னுடைய வருகை -“
இனி மணல் வையை இரும் பொழிலும் குன்றஇனிய மணலைக் கொண்ட வையை ஆற்றங்கரையின் பெரிய சோலைகளும், திருப்பரங்குன்றத்தின்
பனி பொழி சாரலும் பார்ப்பாரும்பனி பொழியும் மலைச் சாரலும், பார்ப்பனரும் சாட்சியாகக் கூறுகின்றேன்,
துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம்பெரிதும் வருந்தாதே! மலர் போன்ற மையுண்ட கண்களையுடையவளே! நீ சொல்வது உண்மை அன்று; இந்த மணம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னதுபழங்களிலும், மலர்களிலும், வீசுகின்ற காற்றினால் அடித்துக்கொண்டுவந்ததாலும் உண்டானது,
துனியல் நனி நீ நின் சூள்வருந்தாதே மிகவும் நீ! உன் மீது ஆணை!”
என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள்“இது என்னுடைய சமயம்! கொஞ்சம் பொறு! ஏடா! நிறுத்திக்கொள் நீ உன்னுடைய சூளுரைகளை!
சான்றாளர் ஈன்ற தகாஅ தகாஅ மகாஅன்சான்றாளர் பெற்றெடுத்தும் அதற்குத் தகுதியில்லாத மகனே!
ஈன்றாட்கு ஒரு பெண் இவள்இவளைப் பெற்றவளுக்கு இவள் ஒரே பெண்”
இருள் மை ஈர் உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு“‘இருண்ட மைதீட்டிய, குளிர்ந்த கண்களையும், மின்னுகின்ற அணிகலன்களையுமுடைய இவள், இவளைப் பெற்ற தாய்க்கு
அரியளோ ஆவது அறிந்திலேன் ஈதாஒரே பெண்ணாகிய அருமையானவள் என்பதனை நான் அறிந்திருக்கவில்லை! இதோ பார்!
வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள்ஓடிவரும் நீரையுடைய வையை ஆற்றின் மணலைத் தொட்டு ஆணையிடுகின்றேன்! மண வாழ்வைத் தரும் முருகவேளின்
தண் பரங்குன்றத்து அடி தொட்டேன் என்பாய்குளிர்ந்த பரங்குன்றத்து அடியைத் தொட்டு ஆணையிடுகின்றேன்!’ என்கிறாய்
கேளிர் மணலின் கெழுவும் இதுவோஎம் உறவினைப் போல் விளங்கும் வையை மணலிடத்தில் உன் அன்புடைமை இதுதானோ?
ஏழ் உலகும் ஆளி திரு_வரை மேல் அன்பு அளிதோஏழு உலகங்களையும் ஆள்பவனின் திருப்பரங்குன்றத்தின் மேல் நீ கொண்டுள்ள அன்பும் இரங்கத்தக்கது!
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின்“எமக்கு அருளுவதாகத் திருவருளையுடைய முருகப்பெருமான் மீது சூள் உரைப்பாயென்றால்,
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்உன்னைக் கொஞ்சமும் இரக்கமற்ற வருத்தும் தெய்வங்களுடன், முருகனின் மெய்யான வேலும் பெரிதும் வருத்தும்,
விறல் வெய்யோன் ஊர் மயில் வேல் நிழல் நோக்கிவெற்றியையே விரும்பும் முருகப்பெருமான் ஏறிச் செல்லும் மயில், அவனது வேலின் ஒளி ஆகிய இவற்றைக் குறித்து,
அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல்அறவோர்களின் அடியைத் தொட்டு மொழிந்தாலும் மொழியலாம், ஆனால் மேற்கூறியவற்றைக் குறித்துச் சூளுரைக்கவேண்டாம்;
குறவன்_மகள் ஆணை கூறு ஏலா கூறேல்மேலும் முருகனின் துணைவியாகிய குறவன்மகளாகிய வள்ளிமீதும் ஆணைகூறத்துணிகின்றவனே! அவ்வாறு கூறவேண்டாம்!
ஐய சூளின் அடி தொடு குன்றொடுஐயனே! அவ்வாறு சூளுரைத்தால் அடியவர் வணங்கும் குன்றோடு,
வையைக்கு தக்க மணல் சீர் சூள் கூறல்வையை ஆற்றுக்குத் தகுந்த புகழையுடைய மணலின் மேலும் சூளினைக் கூறவேண்டாம்!”
யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்பு“யார் பிரிவது? யார் வருவது? யார் கேட்பது? யார் விடைகூறுவது?
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய்‘நீர் சொல்வது இன்சொல் இல்லாத சூள்’ என்கிறாய்! நேரிய இழைகளை அணிந்தவளே!
கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகைகுளத்திடத்து இருக்கும் நெய்தல் பூக்களையும், மலர்ந்து மணங்கமழும் மொட்டுக்களின் மணத்துடனான மலர்ச்சியினால்
நயவரு நறவு இதழ் மதர் உண்கண் வாள் நுதல்கண்டோர் விரும்புவதற்குரிய நறவம் பூவின் இதழையும் போன்ற மதர்த்த மையுண்ட கண்களையும், ஒளிவிடும் நெற்றியையும்,
முகை முல்லை வென்று எழில் முத்து ஏய்க்கும் வெண் பல்மொட்டாகிய முல்லையையும் வென்று, அழகிய முத்துக்களைப் போன்றிருக்கும் வெண்மையான பற்களையும் கொண்ட தலைவி
நகை சான்ற கனவு அன்று நனவு அன்று நவின்றதைகூறியது நகைப்பதற்குரிய கனவு அன்று, உண்மையாக நடந்த நிகழ்ச்சியும் அன்று!
இடு துனி கை ஆறா என் துயர் கூர“என்மேல் பொய்யாகக் கூறப்பட்ட துன்பந்தரும் குற்றத்தின் காரணமாக, எனது ஒழுக்கநெறியைத் தவறாகக் கொண்டு என் துயர் மிகும்படி
சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின்என்னைத் தண்டிப்பான் இறைவன்! அவன் சினத்தை ஆற்றுவிப்பாயாக, அவனது அடியைச் சேர்ந்து! நான் கூறுவதை எல்லாருக்கும் கூறுங்கள்!
மிக ஏற்றுதும் மலர் ஊட்டுதும் அவிமிகவும் தூவுவோம் மலர்களை! படைப்போம் பலிப்பொருள்களை!
கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன்பாடுவோம் தாளத்துடன் கூடிய இசைப்பாடல்களை! எழுப்புவோம் கிணைப்பறையின் முழக்கத்தை! முருகப்பெருமானின்
தாள் தொழு தண் பரங்குன்றுதிருவடிகளைத் தொழுவதற்குரிய இடமான குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில்;”
தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம்“‘ஆய்ந்த அணிகளை அணிந்தவளே! முருகனை வணங்குவதற்கு நீயே செல்க’ என்று சொல்கிறாய், ஏடா! நாம் அறிந்தோம்,
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்ஒருவரிடத்தும் பொய்க்காத உன் மெய்மை அற்ற சூள் உன்னைப் பழிவாங்கும் என்பதனை;
பருவத்து பல் மாண் நீ சேறலின் காண்டைபரத்தையரைத் தேடிச் செல்லும் பருவத்தில் பலமுறை நீ திருப்பரங்குன்றத்துக்குச் செல்வாயாதலின் காண்பாயாக –
எருமை இரு தோட்டி எள்ளீயும் காளைஎருமைவாகனத்தானாகிய கூற்றுவனின் பெரிய ஆணையையும் இகழும் ஆற்றலையுடைய முருகப்பெருமான்
செருவம் செயற்கு என்னை முன்னை தன் சென்னிஉனது பொய்ச்சூளால் உன்னைச் சினந்துகொள்ளாமல் இருப்பதற்கு, எனக்கும் முன்னரே, தன் தலையால் வணங்கி,
அருள் வயினான் தூங்கு மணி கையால் தாக்கிஅப் பெருமானுடைய, தொங்குகின்ற மணியைக் கையால் அடித்து,
நிரை வளை ஆற்று இரும் சூள்வரிசையான வளையல்களை அணிந்தவள், உன் கடும் சூளால் உனக்கு வரும் துன்பத்தை ஆற்றுவதற்கான காட்சியை –
வளி பொரு சேண் சிமை வரை_அகத்தால்காற்றால் மோதப்படும் உயரமான சிகரங்களையுடைய மலையகத்தே
தளி பெருகும் தண் சினையமழைநீரினால் தழைத்த குளிர்ந்த கிளைகளையுடைய
பொழில் கொள குறையா மலரபொழில்கள் பறிக்கப்பறிக்கக் குறையாத மலர்களைக் கொண்டிருக்க,
குளிர் பொய்கை அளறு நிறையகுளிர்ந்த பொய்கைகளில் நீர் நிறைந்திருக்க,
மருதம் நளி மணல் ஞெமர்ந்தமருத நிலங்களினூடே செறிந்த மணல் பரந்திருக்கும்
நனி மலர் பெரு வழிமிகுந்த மலர்களைக் கொண்டிருக்கும் பெருவழியில்
சீறடியவர் சாறு கொள எழுந்துசிற்றடிகளைக் கொண்ட பெண்கள் விழாச்செய்ய எழுந்து
வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்பல்வேறான சந்தன வகைகளும், பெருமையுடைய புகைப் பொருள்களும்,
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்வழியில் வீசுகின்ற காற்றால் அணைந்துபோகாத விளக்குகளும்,
நாறு கமழ் வீயும் கூறும் இசை முழவமும்மணங்கமழும் பூக்களும், இசையை எழுப்பும் முழவுகளும்,
மணியும் கயிறும் மயிலும் குடாரியும்மணிகளும், கயிறுகளும், மயில்களும், கோடரிகளும்,
பிணிமுகம் உளப்பட பிறவும் ஏந்திபிணிமுகம் என்னும் யானைகளும் உட்பட பிற பொருள்களையும் ஏந்திக்கொண்டு,
அரு வரை சேரா தொழுநர்அரிய திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்து முருகப்பெருமானைத் தொழுபவர்;
கனவின் தொட்டது கை பிழை ஆகாதுகனவில் காதலரின் கையைத் தொட்டது பொய்யாகாமல்
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையைநனவினிலும் கிட்டும்படி, ‘உனக்குரிய செறிந்த நீரையுடைய வையை ஆறு
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும்புதிதாய் வரும் புனலை அணிவதாக’ என்று வரம் கேட்போரும்,
கரு வயிறு உறுக என கடம்படுவோரும்கரு வயிற்றினில் உண்டாகட்டும் என்று நேர்த்திக்கடன் செய்வாரும்,
செய்_பொருள் வாய்க்க என செவி சார்த்துவோரும்பொருளீட்டச் சென்ற கணவனுக்கு ஈட்டும் பொருள் வாய்க்க என்று முருகனின் செவியினைச் சேரக் கூறுவோரும்,
ஐ அமர் அடுக என அருச்சிப்போரும்போர்மேற் சென்றுள்ள தலைவர் போரில் பகைவரைக் கொன்று வெற்றி சூடுக என்று அருச்சனை செய்வோரும்,
பாடுவார் பாணி சீரும் ஆடுவார் அரங்க தாளமும்பாடுபவர்களின் பாணியாகிய தாளமும், அரங்கத்தில் ஆடுவாரின் தாளமும்,
மஞ்சு ஆடு மலை முழக்கும்மேகங்கள் தவழும் மலையில் எழும் எதிரொலி முழக்கமும் ஆகிய
துஞ்சா கம்பலைகுன்றாத ஆரவாரத்தில் –
பைம் சுனை பாஅய் எழு பாவையர்பசிய சுனைக்குள் பாய்ந்து மூழ்கி எழும் பாவையரின்
ஆய் இதழ் உண்கண் அலர் முக தாமரைஅழகிய இமைகளை உடைய மையுண்ட கண்களைக் கொண்ட மலர்ந்த முகமாகிய தாமரையும்,
தாள் தாமரை தோள் தமனிய கய மலர்அவரின் பாதங்களாகிய தாமரையும், தோளாகிய பொற்குளத்தில் மலர்ந்த
எம் கை பதுமம் கொங்கை கய முகைதம் கையாகிய தாமரையும், கொங்கைகளாகிய பெரிய தாமரை மொட்டுகளும்,
செ வாய் ஆம்பல் செல் நீர் தாமரைசிவந்த வாயாகிய செவ்வாம்பலும், ஆகிய இயங்கும் தன்மையுள்ள இந்தத் தாமரைகள் எல்லாம்
புனல் தாமரையொடு புலம் வேறுபாடுறாநீரில் பூத்த தாமரையோடு புலப்படுதலில் வேறுபாடு இல்லாத
கூர் ஏயிற்றார் குவி முலை பூணொடுகூர்மையான பற்களைக் கொண்டோரின் குவிந்த முலையில் அணிந்திருந்த பூண்களோடு
மாரன் ஒப்பார் மார்பு அணி கலவிமன்மதனைப் போன்றவராகிய கணவன்மார்களின் மார்பில் அணிந்த அணிகலன்கள் கலந்திருக்க,
அரிவையர் அமிர்த பானம்அரிவையரின் இதழமுதமான பானத்தை
உரிமை_மாக்கள் உவகை அமிர்து உய்ப்பஅவரின் உரிமைமக்களாகிய கணவன்மார் மகிழ்ச்சியோடு அமுதமாகக் கருதி உண்டு களிக்க,
மைந்தர் மார்வம் வழி வந்தஅந்த மைந்தரின் மார்பினைத் தழுவிப்பெற்ற இன்பத்தின் வழியாக வந்த பெருமகிழ்ச்சி
செம் தளிர் மேனியார் செல்லல் தீர்ப்பசிவந்த தளிர் போன்ற மேனியரின் துன்பத்தைத் தீர்க்க,
என ஆங்குஎன்று இவ்வாறாக
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடிஒன்று கலந்திருக்கும் காதலரும், அவர் அல்லாதவரும் கூடி
கடம்பு_அமர்_செல்வன் கடி நகர் பேண– கடம்ப மரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் செல்வனான முருகப்பெருமானின் காவல் அமைந்த கோயிலில் வழிபட
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்தகழுத்தில் கறையையுடைய அண்ணலான சிவபெருமானுக்கு மாசற்றவளான உமை பெற்றுத்தந்த –
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்நெறிப்படச் செல்லும் அருவிநீரும், ஊற்று நீருமாகிய நீர்வளம்
மண் பரிய வானம் வறப்பினும் மன்னுகமாநிலம் வெடிப்புற வானம் வறண்டுபோனாலும், நிலைபெற்று நிற்பதாக
தண் பரங்குன்றம் நினக்குகுளிர்ந்த திருப்பரங்குன்றமே உனக்கு.
  
# 9 செவ்வேள் – பாடியவர் : குன்றம் பூதனார்# 9 செவ்வேள்
பண் அமைத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனார்- பண் : பண்ணுப்பாலையாழ் 
  
இரு நிலம் துளங்காமை வட_வயின் நிவந்து ஓங்கிபெரிய இந்த நிலவுலகம் அசையாமல் இருக்கும்படி, வடக்கில் உயர்ந்து ஓங்கி
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும்ஏறுவதற்கரிய நிலையையுடையதும், உயரிய தெய்வத்தன்மை வாய்ந்த அணங்குகள் சிறப்பாகப் பேணிக் காப்பதும்,
உருமு சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்படஇடியேறுகள் சூழ்ந்திருப்பதுமான மிக உயரமான சிகரத்தில்,  தம் கணவராகிய உயர்ந்த முனிவர்கள் இசைவு தெரிவிக்க,
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரிதீயைப் போன்று மலர்ந்திருக்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் விழச்செய்த பெரு வெள்ளத்தைத்
விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்பதன் விரித்த சடையினில் பாரமாக, மலர்ந்து விழும் புதிய மலரைத் தாங்குவது போன்று,
தணிவு_உற தாங்கிய தனி நிலை சலதாரிவிழுகின்ற வேகம் தணியும்படியாகத் தாங்கிய ஒப்பற்ற நிலையையுடைய சலதாரி என்னும் பெயர்கொண்ட
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீநீல நிறக் கழுத்தினையுடைய சிவபெருமானுக்கு, மதிப்பு வாய்ந்த கார்த்திகை மகளிரிடத்தில் பிறந்தவனே! நீ
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்றுமையாகிய கரிய இழுதினைப் பூசிய, இமைக்கின்ற, மையுண்ட கண்களையுடைய மான்குட்டியாகிய வள்ளியை மணந்தபோது
ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண்ஆயிரம் கண்களை உடலில் கொண்ட இந்திரனின் மகளாகிய தேவயானியின் மலர் போன்ற மையுண்ட கண்கள் 
மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்றுமணி போன்ற கண்ணீர் மழையைச் சொரிந்தனவாக, முதிர்ந்த வேனிற்காலத்திலும் கார்கால மேகங்கள் திரண்டெழுந்து,
தணி மழை தலையின்று தண் பரங்குன்றுமிகுந்த மழையினைப் பெய்யத்தொடங்கிற்று தண்ணிய பரங்குன்றத்தில்;
நான்மறை விரித்து நல் இசை விளக்கும்வேதங்களை விரித்துரைத்து அவற்றின் நல்ல புகழை உலகுக்கு விளக்கும்
வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்ததுமெய்யான மொழியினையுடைய புலவர்களே! கேளுங்கள் சிறந்ததொன்றை;
காதல் காமம் காமத்து சிறந்ததுகாதலோடு கூடிப் பெறுகின்ற காம இன்பமே, காம இன்பங்களுள் சிறந்தது,
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சிஅது விருப்பமுடையவர் இருவர் மனமொத்துப் பெறுகின்ற உடற்சேர்க்கையே!
புலத்தலின் சிறந்தது கற்பே அது தான்ஊடலினால் சிறப்புறுவது கற்புக்காமம்; அதுதான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாதலைவன் இரந்து வேண்டலும், தலைவி மனமிரங்கி தன்னை அவனுக்கு அளித்தலும் ஆகிய இவற்றை உட்பொருளாகக் கொண்டு
பரத்தை உள்ளதுவே பண்புறு கழறல்தலைவனின் பரத்தை உறவினால் உண்டாவதாகும்; தலைவியின் பூப்பினை அறிவிக்கும் பண்புறு கழறல் என்பது
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்பு_உறதோள்நலத்தைப் புதிதாக உண்ட பரத்தையின் இல்லத்தில் தலைவன் இருக்கும்போது, தோழி சிவந்த அணிகலன்களை
நாள் அணிந்து உவக்கும் சுணங்கறையதுவேநாள்காலையில் அணிந்து தலைவனுக்கு அறிவிக்க, தலைவன் வீடுவந்து தலைவியுடன் கூடி உவக்கும் புணர்ச்சிக்கண் உள்ளது;
கேள் அணங்கு உற மனை கிளந்து உள சுணங்கறைதலைவியின் தோழியர் கேட்டு வருத்தமுறும்படி பரத்தை தன் வீட்டில் பழிச்சொல் கூறுவதில் உள்ளது அந்தப் புணர்ச்சிகள்;
சுணங்கறை பயனும் ஊடல் உள்ளதுவேஅந்தப் புணர்ச்சியின் பயனும் ஊடல் செய்வதில் உள்ளது;
அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார்அதனால், தம் துணைவர் தம்மைவிட்டு அகன்றிருத்தலையே அறியாத அழகிய அணிகலன் அணிந்த மகளிர்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இதம் கணவருடன் மனவேறுபாடு கொண்டு அவரை வருத்தும் தவறினைச் செய்யமாட்டார்;
தள்ளா பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்இத்தகைய தள்ளிவிடமுடியாத அகப்பொருளின் இயல்புகளையுடைய தண்ணிய தமிழ்ப் பண்பாட்டை ஆராயாத மகளிர்
கொள்ளார் இ குன்று பயன்கொள்ளமாட்டார்கள் இந்தத் திருப்பரங்குன்றத்தில் எந்தப் பயனையும்;
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்தகொஞ்சம் கொஞ்சமாக உடைந்துவிழும் கரையிலிருந்து சந்தன மரங்களை அசைத்து வெள்ளம் அடித்துக்கொண்டுவந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டையின் அழகிய புகை சூழ்ந்ததும், மாலையினையுடையதுமான மார்பில்
கேழ் ஆரம் பொற்ப வருவானை தொழாஅநிறம் பொருந்திய முத்துமாலை அழகுசெய்ய தன் பக்கத்தே வரும் முருகப்பெருமானைத் தொழுது,
வாழிய மாயா நின் தவறு இலை எம் போலும்தேவசேனை எதிர்கொண்டு, “வாழ்க, வஞ்சனே! உன் தவறு இல்லை, எம்மைப் போன்று
கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார்பிரிவால் நிறம் கெட்டவர் உனது மாட்சிமைப்பட்ட நலத்தை நுகர்வோமோ, உன்னை அடையும் பேறு பெற்றோரின்
மென் தோள் மேல் அல்கி நல்கலும் இன்றுமென்மையான தோளின்மேல் எழுந்தருளி அவர்க்கு அருள்செய்வதுவும் உனக்கு இல்லை,
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிகூர்மையான பற்களையுடைய, உன் மையலில் அகப்பட்ட மகளிரின் தன்மை, இனி
பெய்ய உழக்கும் மழை கா மற்று ஐயமழை பெய்ய வேண்டி வருந்திநிற்கும் சோலையைப் போன்றது, உரைப்பாயாக, ஐயனே!” என்று
கரையா வெம் நோக்கத்தான் கை சுட்டி பெண்டின்வெறித்த பார்வையுடன் கையால் சுட்டிச் சொல்லி, வள்ளி காரணமாக
இகலின் இகந்தாளை அ வேள் தலை கண்ணிஊடிச் செல்லும் தேவசேனையை, அந்த முருகவேள் தன் தலைமாலை
திருந்து அடி தோய திறை கொடுப்பானைஅவளின் திருத்தமான அடிகளில் படும்படியாகப் பணிந்து அவளுக்குத் தன் வணக்கமாகிய திறைப்பொருளைக் கொடுக்க,
வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை“வருந்தவேண்டாம்” என்று என்று ஆறுதல் கூறி அவனுக்குத் தன் மார்பினைத் தேவசேனை கொடுக்க,
குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக“அவளிடம் நெருங்கிச் செல்லாதே” என்று ஒளிரும் அணிகலன்களையுடைய வள்ளி, தன் மாலையையே கோலாகக் கொண்டு
இறுகிறுக யாத்து புடைப்பமுருகனின் கைகளை மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, அடிக்க, 
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏலஒருவரின் மயில் ஒருவரின் மயிலோடு போர்தொடங்க,
இருவர் வான் கிளி ஏற்பில் மழலைஅந்த இருவருடைய உயர்ந்த கிளிகளும் தம் மழலைக் குரலால் ஏசத்தொடங்க,
செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றேதேவசேனையின் செறிவான கொண்டையின்மேல் இருக்கும் வண்டின்மேல் பாய்ந்தது
வெறி கொண்டான் குன்றத்து வண்டுவெறியாட்டினை உவந்து ஏற்கும் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றத்து வள்ளியின் வண்டு;
தார் தார் பிணக்குவார் கண்ணி ஓச்சி தடுமாறுவார்மாலையோடு மாலையை வீசிப் பின்னுவார், தம் தலைமாலையை எடுத்து ஓங்கித் தடுமாறுவார்,
மார்பு அணி கொங்கை வார் மத்திகையா புடைப்பார்மார்பினை அழகுசெய்யும் தம் கொங்கைகளின் கச்சினையே சாட்டையாகக் கொண்டு அடித்துக்கொள்வார்,
கோதை வரி பந்து கொண்டு எறிவார்தமது மாலைகளையும், வரியினையுடைய பந்துகளையும் ஒருவர்மேல் ஒருவர் எறிவார்,
பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊதஅந்தப் பேதையரின் மென்மையான பார்வை சினத்தால் மாறுபட, வாயில் ஊதினாலும்
நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ளவளைந்து மடங்கும் நுண்ணிய இடுப்பினையுடையவர் போரினை மேற்கொள்ள,
கயம் படு கமழ் சென்னி களிற்று இயல் கைம்மாறுவார்துதிக்கையைத்தூக்கிக் குளத்தில் நீராடும், மதநீர் கமழும் தலையுடைய யானைகளைப் போலத் தம் கைகளை வளைத்துப் போரிடுவார்,
வயம் படு பரி புரவி மார்க்கம் வருவார்வெற்றிக்குக் காரணமான ஓட்டத்தையுடைய குதிரைகளின் நடையினைக் கொண்டனர்,
தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார்தேருக்கு அழகுசெய்யும் அழகிய கயிற்றைப் பிடிக்கும் முறையினைத் தெரிந்தாற்போல சடைகளைப் பற்றிக்கொண்டு போரிடுவார்,
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்நன்கு கட்டமைந்த வில்லினை வளைப்பது போல மற்றவர் உடலை இழுத்து மார்புற வளைப்பார்,
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்ஒருவரின் கண்களாகிய அம்புகள் மற்றவரின் கண்களாகிய அம்புகள் மேல் நிலைத்து நிற்குமாறு எதிர்த்து நோக்குவார்,
தோள் வளை ஆழி சுழற்றுவார்தம் தோள்வளைகளைக் கழற்றிச் சக்கரப் படைபோல் சுழற்றுவார்,
மென் சீர் மயில் இயலவர்மென்மைத்தன்மை வாய்ந்த மயிலின் சாயலைக் கொண்ட அந்த இருவரின் தோழிமார்;
வாள் மிகு வய மொய்ம்பின்ஒளி மிக்கதும், வெற்றியாற்றலையுடையதும் ஆன
வரை அகலத்தவனை வானவன் மகள்மலை போன்ற மார்பினையுடைய முருகப்பெருமானை, இந்திரன் மகளான தேவசேனையின்
மாண் எழில் மலர் உண்கண்மாட்சிமை கொண்ட அழகால் மலர் போன்ற மையுண்ட கண்களையும்
மட மொழியவர் உடன் சுற்றிமடப்பமுடைய மொழியினையும் உடைய தோழியர் ஒன்றுசேர்ந்து சூழ்ந்துகொண்டு
கடி சுனையுள் குளித்து ஆடுநரும்வள்ளியின் தோழியருக்கு அஞ்சி, மணங்கமழும் சுனையில் குளித்து ஆடுவோரும்,
அறை அணிந்த அரும் சுனையான்பாறைகள் அழகுசெய்யும் அரிய சுனையில்
நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும்தேனை உண்ணும் வண்டுகளாக யாழினை இசைப்போரும்,
சிகை மயிலாய் தோகை விரித்து ஆடுநரும்தம் கூந்தலையே மயிலின் தோகைபோல் விரித்து ஆடுபவர்களும்,
கோகுலமாய் கூவுநரும்குயில்களாகக் கூவுபவரும்,
ஆகுலம் ஆகுநரும்துன்பங்களை நுகர்வாரும் ஆகி நிற்க,
குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்குறிஞ்சி நிலத்துக் குறவரின் வீரம் பொருந்திய மகளாகிய வள்ளியின் தோழிமார்
வித்தக தும்பை விளைத்தலான் வென் வேலாற்குதிறமையோடு போரிட்டு வெற்றியை விளைத்ததால் வெற்றியையுடைய வேலவனுக்குப்
ஒத்தன்று தண் பரங்குன்றுபெரிதும் பொருந்துவதாயிற்று தண்ணிய பரங்குன்றம்;
கடும் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல்கடிய சூரபதுமன் என்னும் மாமரத்தினை அடியோடு வெட்டி அறுத்த வேற்படையினையுடைய
அடும் போராள நின் குன்றின் மிசைபகைவரை வெல்லும் போரினையுடையவனே! உன்னுடைய திருப்பரங்குன்றத்தில்,
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்கூத்தினைப் பயின்றோரை அவரைப் போன்றோர் போரில் வெல்லவும்,
பாடல் பயின்றோரை பாணர் செறுப்பவும்பாடல் பயின்றவரை அவரைப் போன்ற பாடல் பயின்றவர் போரில் வெல்லவும்,
வல்லாரை வல்லார் செறுப்பவும்வலிமையுடையவர்களை வலிமையுடையவர்கள் போரில் வெல்லவும்,
அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய்அவ்வாறு அல்லாதவர்களை அப்படிப்போன்றோரே வெல்லவும், இவ்வாறு எப்பக்கமும் போர் என்ற ஒரே சொல்லாய்ப் பரந்து,
செம்மை புது புனல்செம்மையான புதிய நீரால் நிறைந்த
தடாகம் ஏற்ற தண் சுனை பாங்கர்தடாகத்தைப் போன்ற குளிர்ந்த சுனையின் பக்கத்தில்
படாகை நின்றன்றுகொடி உயர்ந்து நின்றது;
மேஎ எஃகினவைஅன்பர் விரும்பும் வேற்படையினை உடையாய்!
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவைஉன் பகைவரை வென்று உயர்த்திய கொடி உன் வெற்றிக்குச் சான்று பகரும்,
கற்பு இணை நெறியூடு அற்பு இணை கிழமைகற்பு மணத்தால் இணையும் நெறியுடன், அன்பினாலும் இணையும் உரிமையினையுடைய
நய_தகு மரபின் விய_தகு குமரவிரும்பத்தகுந்த பண்பினையுடைய வியக்கத்தக்க குமரவேளே!
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்து தலை நினை யாம்உன்னை வாழ்த்துகின்றோம்! புகழ்கின்றோம்! தலைகளைத் தாழ்த்தியவராய் உன்னை நாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறைவிரும்புதலினால் சிறப்புற்று விழங்கும் எமது அடியுறை வாழ்வானது
பயத்தலின் சிறக்க நாள்-தொறும் பொலிந்தேநீ எமக்கு அருள்செய்வதனால் சிறந்து விளங்கட்டும் நாள்தோறும் மேலும் மேலும் அழகுபெற்று.
  
# 10 வையை – பாடியவர் : கரும்பிள்ளப் பூதனார்# 10 வையை
பண் அமைத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனார்- பண் : பண்ணுப்பாலையாழ் 
  
மலை வரை மாலை அழி பெயல் காலைமலைப்பகுதிகளில் மாலையில் பெய்த மிக்க மழை, காலையில்
செல வரை காணா கடல் தலை கூடசென்று எல்லை காணமுடியாத கடலோடு கலப்பதற்காக,
நில வரை அல்லல் நிழத்த விரிந்தநிலப்பகுதிகளின் துன்பத்தைத் தீர்ப்பதற்கு, மலர்ந்த
பல உறு போர்வை பரு மணல் மூஉய்பலவான மலர்ப் போர்வையால் பருத்த மணற்பரப்பை மூடி,
வரி அரி ஆணு முகிழ் விரி சினையவரிகளைக் கொண்ட வண்டுகள் மொய்க்கும் மொட்டுக்கள் மலர்ந்த கிளைகளையுடைய
மா தீம் தளிரொடு வாழை இலை மயக்கிமாமரத்தின் காண்பதற்கு இனிமையான தளிரோடு, வாழை இலைகளையும் கலந்து
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறையஆராய்ந்து அளவிடமுடியாத பல்வேறு ஓசைகள் ஒலிக்க, கரைக் காவலர் பறை அறைய,
போந்தது வையை புனல்போகிறது வையையின் வெள்ளம்;
புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டிபுதுப்புனலில் திளைத்து ஆடல்புரிவதற்கு மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக்கொண்டு திரண்டெழ,
தாளித நொய் நூல் சரணத்தர் மேகலைகாலுக்கு இதமான மென்மையான நூலினாலான மிதியடிகளை அணிந்தவராய், மேகலை,
ஏணிப்படுகால் இறுகிறுக தாள் இடீஇஏணிப்படுகால் ஆகிய இடையணிகளை மிகவும் இறுக்கமாகக் கட்டிப் பூட்டிக்கொண்டு,
நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும்இரத்த நிற அரக்குப்போன்ற சாயநீரைக் கொண்ட பீச்சாங்குழல் முதலிய யாவற்றையும் எடுத்துக்கொண்டு
முத்து நீர் சாந்து அடைந்த மூஉய் தத்திதெளிவான நீர் கலந்த சந்தனம் அடைத்த பெட்டியுடன், தாவி
புக அரும் பொங்கு உளை புள் இயல் மாவும்ஏறி அமர்வதற்கு அரிய பொங்கிய பிடரிமயிரையுடைய பறவைபோல் விரைந்துசெல்லும் குதிரைகள்,
மிக வரினும் மீது இனிய வேழ பிணவும்மிக விரைவாக வந்தாலும் மேலே அமர்ந்திருக்க இனிதாக இருக்கும் பெண்யானைகள்,
அகவு அரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மாஅதட்டி ஓட்டத் தேவையற்ற மாட்டுவண்டிகள், கோவேறு கழுதைகள், தெரிந்தெடுத்த குதிரைகள் பூட்டிய
சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணிவண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டு
வகை_வகை ஊழ்_ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறிவகைவகையாகவும், முறைமுறையாகவும் விரைவாக மொய்த்துக்கொண்டு அவற்றின் மீது ஏறி,
முதியர் இளையர் முகை பருவத்தர்முதியவர்களும், இளையவர்களும், விடலைப் பருவத்தாரும்,
வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்து அன்னார்நறுமணம் தங்குகின்ற புதிய மலர் வாய்விரிந்தாற்போன்ற பருவத்தையுடையவரும் ஆகிய
இரு திரு மாந்தரும் இன்னினியோரும்இரு பருவத்து மாந்தரும், அவர்களுக்கு இனியவரும்,
விரவு நரையோரும் வெறு நரையோரும்நரைக்கத்தொடங்கிக் கருப்பும் வெள்ளையுமான தலைமுடியை உடையோரும், முற்றிலும் நரைத்தவர்களும்,
பதிவத_மாதர் பரத்தையர் பாங்கர்பதிவிரதம் இருக்கும் கற்புடைய மகளிரும், பரத்தையரும், அவருக்குத் தோழியரும்,
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாளஅதிரும் குரலையுடைய, இசைவல்லுநர்கள் ஆக்கிய தாள
விதி கூட்டிய இய மென் நடை போலவிதியால் கூட்டப்பட்ட, பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் மென்மையான நடையில் சென்றாற்போல
பதி எதிர் சென்று பரூஉ கரை நண்ணிஊரார் அனைவரும் ஆற்றுக்கு எதிரே சென்று, ஆற்றின் பெரிய கரைகளை அடைந்து,
நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர்புதுவெள்ளத்தின் அழகைக் காண்போரும், வரிசையான நீரணி மாடங்களில் ஊர்ந்துசெல்வோரும்,
பேர் அணி நிற்போர் பெரும் பூசல் தாக்குவோர்பேரணியாக அணிவகுத்து நிற்போரும், பெரிதாகப் பூசலிட்டு ஒருவரையொருவர் நீரால் தாக்கிக்கொள்வோரும்,
மா மலி ஊர்வோர் வய பிடி உந்துவோர்குதிரைகளில் விரைவாக நீருக்குள் செல்வோரும், வலிமையான பெண்யானைகளை நீருக்குள் செலுத்துவோரும்,
வீ மலி கான்யாற்றின் துருத்தி குறுகிபூக்கள் நிறைந்த காட்டாற்றின் நடுவேயுள்ள திட்டுக்களை அடைந்து
தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர் தழுவு எதிராதுதாம் விரும்பும் காதலியரின் மார்பினைத் தழுவுவோரும், அக் காதலரின் தழுவலை ஏற்றுக்கொள்ளாது
யாம குறை ஊடல் இன் நசை தேன் நுகர்வோர்முந்திய இரவின் மீந்துநிற்கும் ஊடலாகிய இனிய விரும்பத்தக்க தேனை உண்டுமகிழ்வோரும்,
காம கணிச்சியால் கையறவு வட்டித்துகாமம் என்னும் கோடரியால் தமது ஊடலால் ஏற்பட்ட செயலற்ற நிலையை உடைத்தெறிந்துவிட்டு
சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர்பாதுகாவலான திரையைச் சூழப்போட்டு தன் கணவருடன் மலர்ப்படுக்கையில் கூடிக்களிப்போருமாய்,
தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்படதாம் விரும்புகின்ற காதல் கணவர்கள் எதிர்ப்பட்டபோது,
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் சேமபூவின் சிறப்பினால் அதன்மீது மொய்க்கவரும் அழகிய வண்டினைப் போல, தமக்குக் காவலாகிய
மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்துதளர்நடைப் பாட்டியரிடமிருந்து தப்பித்து, தடைகளை மீறிக் காதலரை எதிர்கொள்ள,
தாம் வேண்டும் பட்டினம் எய்தி கரை சேரும்தாம் நினைக்கும் பட்டினத்தை நோக்கி வந்து கரை சேர்கின்ற
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல்இன்பமான நாவாயின் வரவை எதிர்கொள்ளும் வணிகர் போல,
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல்யாம் எதிர்கொள்ள விரும்பும் வையையின் புதுப்புனலை எதிர்கொண்டது கூடல்நகரம்;
ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம்அவ்விடத்தில், அழகிய நீரணிமாடத்தின் அருகாமையில் நின்ற இணக்கமான
மட பிடி கண்டு வய கரி மால்_உற்றுஇளைய பெண்யானையைக் கண்டு, இளங்களிறு ஒன்று மையல்கொண்டு,
நடத்த நடவாது நிற்ப மட பிடிபாகர்கள் நடத்தவும் நடவாமல் நிற்க, அந்த இளைய பெண்யானையும்
அன்னம் அனையாரோடு ஆயா நடை கரி மேல்தன் மேல் அமர்ந்திருக்கும் அன்னம் போன்ற மகளிரோடு, ஓய்ந்த நடையைக் கொண்ட ஆண்யானைமேல்
செல் மனம் மால்_உறுப்ப சென்று எழில் மாடத்துசென்ற தன் மனமானது மையலைச் செய்ய நடந்து சென்று, அழகிய அந்த மாடத்தில்
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவு_உற்றுகையால் புனையப்பட்ட பாயும் வேங்கைப் புலியைக் கண்டு, அச்சங்கொண்டு,
மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உறமை போன்ற கரிய அந்த இளம் பெண்யானை, அந்த இளைய பெண்கள் நடுக்கமெய்த
செய் தொழில் கொள்ளாது மதி செத்து சிதைதரபாகரின் அடக்கும் தொழிலுக்கும் அடங்காது, தன் மதி கெட்டுச் சிதைந்து ஓட,
கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவிபிளிறுகின்ற கையுடன், மதக்களிப்பையுடைய அந்த களிறு, வளைவான அங்குசத்திற்கும் அடங்காமல்
நீங்கும் பதத்தால் உருமு பெயர்த்தந்துஅவ்விடத்தைவிட்டு நீங்குகின்ற பொழுதில் அதன் இடிபோன்ற முழக்கத்தை ஒழித்து,
வாங்கி முயங்கி வய பிடி கால்கோத்துஅதனைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வளைத்து, அணைவாக அந்த இளம் பெண்யானையுடன் சேர்த்து,
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்பெண்யானையின் மேலிருந்த பெண்களின் நடுக்கத்தை, தம் தொழிலில் சிறந்த பாகர்கள் களைந்தனர்;
இதையும் கயிறும் பிணையும் இரியஇது, பாயும், கயிறும், மரங்களும் பிடுங்கிக்கொண்டு சிதறிப்போக,
சிதையும் கலத்தை பயினான் திருத்தும்சிதைந்துபோன பாய்மரக்கப்பலை சேர்த்துக்கட்டி சீர்திருத்தும்
திசை அறி நீகானும் போன்ம்திசையறிந்து ஓட்டும் நீகானின் செயலைப் போலிருந்தது;
பரு கோட்டு யாழ் பக்கம் பாடலோடு ஆடல்பெரிய தண்டினையுடைய யாழின் இசையும், பாடலுடன் ஆடலும்
அருப்பம் அழிப்ப அழிந்த மன கோட்டையர்ஊடியிருந்தவரின் மனவுறுதியை அழிக்க, இவ்வாறு மனம் என்னும் கோட்டை அழிந்துபோன மைந்தரும், மகளிரும்,
ஒன்றோடு இரண்டா முன் தேறார் வென்றியின்மனம் ஒன்றுபட்டு, முன்பு இரண்டாக விளங்கிய நிலைமை கெடத் துணியமாட்டார், ஊடலில் வெல்லவேண்டும் என்ற எண்ணத்தில்,
பல் சனம் நாணி பதைபதைப்பு மன்னவர்அவர்கள் அங்குத் திரண்டிருந்த பலவகை மக்களால் வெட்கப்பட்டனர், மனம் பதைபதைத்தனர், இந்த நிலை, பகைமன்னர் இருவரின்
தண்டம் இரண்டும் தலைஇ தாக்கி நின்றவைபடைகள் இரண்டும் ஒருவரையொருவர் தாக்கி நின்றவை
ஒன்றியும் உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சிமனம் ஒன்றுபட்டும், அவர்கள் உடம்பட்டதற்கு அச்சமே காரணம் என்ற பேச்சு எழுமே என்று அஞ்சி
நின்ற நிகழ்ச்சியும் போன்ம்நின்ற நிகழ்ச்சியைப் போலிருந்தது;
காமம் கனைந்து எழ கண்ணின் களி எழகாம உணர்வு மிகுந்து எழ, அதனால் கண்ணில் வெறி தோன்ற,
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பார் அவர் நிலைஊருக்காக மிகவும் அஞ்சி, தம் உணர்வுகளை ஒளிப்பார் சிலர், அவரின் நிலை
கள்ளின் களி எழ காத்த ஆங்கு அலர் அஞ்சிகள்ளுண்டதால் களிப்பு மிகுந்து எழ, அதைக் கட்டுப்படுத்துவது போன்றிருந்தது; ஆனால் ஊராரின் பேச்சுக்கு அஞ்சி,
உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள்உள்ளத்தில் துன்பம் உண்டாக, கள்வெறியை மறைக்க முயலும் முயற்சியால் அதை மேலும் மேலும்
பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்றபரப்பி, தம் செருக்குக்காக நடுங்கி, உலகம் பலவாறாய்த் தூற்ற,
கரப்பார் களி மதரும் போன்ம்தம்முள் மறைக்கும் கள்வெறியைப் போன்றது, முன்னவர் கொண்ட காமவெறி.
கள்ளொடு காமம் கலந்து கரை வாங்கும்இவ்வாறாகக் கள்வெறியுடன் காமவெறியையும் கலந்து கரைகளை உடைத்துச் செல்லும்
வெள்ளம் தரும் இ புனல்வெள்ளத்தைத் தருகின்றது வையையின் புதுப்புனல்;
புனல் பொருது மெலிந்தார் திமில் விடவெள்ளத்தில் விளையாடிக் களைத்துப்போன மகளிர் தம் தெப்பங்களை விட்டுக் கரையேற,
கனல் பொருத அகிலின் ஆவி கா எழஅவர்கள் மூட்டிய தீயில் வெந்த அகிலின் புகை அந்தச் சோலைமுழுக்கப் பரவ,
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்துஅவர்கள் தம் முலைமுகட்டில் பூசிய சந்தனத்தின் மணம், மடைதிறந்த வெள்ளம்போல்
திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின்திசைகள் முழுதும் கமழ, முகிலின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளிவரும் திங்களைப் போல்
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர்கரிய உறைக்குள் போட்டுவைத்திருந்த வெள்ளி வட்டிலை வெளியில் எடுத்து, சூட்டை உண்டாக்கும் கள்ளை வார்த்து,
அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கிபாம்பு பற்றிய முழுநிலவைப் போலத் தம் உள்ளங்கையில் தாங்கி,
ஏறி மகர வலயம் அணி திகழ் நுதலியர்தாக்கிக் கொல்லும் சுறாமீன் வடிவத்தில் அமைந்த மகரவலயம் என்னும் அணி விளங்கும் நெற்றியையுடைய மகளிர்,
மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்பநிலவின் ஒளியைப் பருகும் தேவமகளிரைப் போன்று அக் கிண்ணத்தைத் தம் செவ்வாம்பல் போன்ற வாயில் வைத்துக் குடித்தனர்;
மீ பால் வெண் துகில் போர்க்குநர் பூ பால்உடலின் மேல் வெண்துகிலைப் போர்த்திருந்தனர் சிலர்; பூவேலை செய்யப்பெற்ற
வெண் துகில் சூழ்ப்ப குழல் முறுக்குநர்வெண்துகிலைத் தம் கூந்தலைச் சுற்றி முறுக்கிப்பிழிந்தனர் சிலர்;
செம் குங்கும செழும் சேறுசிவந்த குங்குமத்தால் ஆகிய செழுமையான சேற்றையும்,
பங்கம் செய் அகில் பல பளிதம்நறுக்கப்பட்ட அகில் துண்டுகளையும், பலவகைப் பச்சைக்கற்பூரத்தையும்,
மறுகுபட அறை புரை அறு குழவியின்ஒன்றாகக் கலக்குமாறு குற்றமற்ற குழவிக்கல்லால்
அவி அமர் அழல் என அரைக்குநர்அவியாக பலியுணவை இட்ட வேள்வித்தீயின் நிறத்தைப் போன்று அரைப்பார் சிலர்;
நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளைசங்கு, நண்டு, நடக்கின்ற இறால், வலிய வாளைமீன் ஆகியவற்றின் பொன்னாற்செய்த உருவங்களை
வித்தி அலையில் விளைக பொலிக என்பார்அலைகளோடு வரும் நீரிலிட்டு, ‘கழனிகள் விளைக, வளம் சிறக்க’ என்பார் சிலர்;
இல்லது நோக்கி இளிவரவு கூறா முன்இரப்போரின் இல்லாமையைக் கண்டு, அவர் தம் இழிந்த நிலையைக் கூறுவதற்கு முன்னரே,
நல்லது வெஃகி வினை செய்வார்அவர்க்கு நன்மை செய்தலை விரும்பி அவர் துயர் தீர்ப்பார் சிலர்;
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்பநன்கு கழுவப்பட்ட நீல மணியைப் போல, வளைந்த தம் மயிர்க்கற்றையில், வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்க,
தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார்குளிர்ச்சியான அழகிய பத்துவகைத் துவர்களையும் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகுவோர் சிலர்;
எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்தலையில் தேய்த்திருக்கும் எண்ணேய் நீங்குமாறு நுண்ணிய அரைப்புப்பொடியால் கசக்குவார் சிலர்;
மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்மாலை, சந்தனம், கத்தூரி, அணிகலன்கள் ஆகியவற்றை
கோலம் கொள நீர்க்கு கூட்டுவார் அ புனல்வையையின் நீர் அழகுபெறும்பொருட்டு, ஆற்றுநீரில் விடுவார் சிலர்; அந்த நீர்
உண்ணா நறவினை ஊட்டுவார் ஒண்_தொடியார்உண்ணாத கள்ளினை அதற்கு ஊட்டுவார் சிலர்; ஒளிரும் வளையலையுடைய அம் மகளிர்,
வண்ணம் தெளிர முகமும் வளர் முலைநீர்விளையாட்டினால் தம் நிறம் மேலும் ஒளிபெற்று விளங்க, அவரின் முகமும், முலைகளின்
கண்ணும் கழிய சிவந்தன அன்ன வகைகண்களும் மிகவும் சிவந்தன; அத்தன்மையுடைய
ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழிநீர்விளையாட்டை ஆடிக் களித்து, வண்டுகள் மொய்க்கின்ற, மணத்தினால் மாட்சிமையுடைய ஐந்து மன்மத அம்புகளின்
அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம்அரத்தினால் கூர்மை செய்யப்பட்ட வாயினைப் பெரிதும் ஒத்தனவாக இருந்தன,
பின்னும் மலர் கண் புனல்மேலும் மேலும் நீராடும் அந்த மகளிரின் மலர் போன்ற கண்கள்;
தண்டி தண்டின் தாய் செல்வாரும்விருப்பத்துடன் வாழைத்தண்டுகளைத் தழுவிக்கொண்டு தாவித்தாவிச் செல்வார் சிலர்;
கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும்தாழைமலரின் குளிர்ந்த பூந்தாதுக்களை, அலைகளின் மேலுள்ள நுரைகளில் தூவுவார் சிலர்;
வெய்ய திமிலின் விரை புனலோடு ஓய்வாரும்விரும்பத்தக்க படகுகளில் விரைகின்ற ஆற்றுநீரில் ஓய்ந்திருப்போர் சிலர்;
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடிதமது மெய்யின் முயற்சியால் எதிர்த்துவரும் நீரை மாறிமாறிக் கைகளைப் போட்டு நீந்திக்
பைய விளையாடுவாரும் மென் பாவையர்களைத்துப்போய் மெல்ல விளையாடுவார் சிலர்; மென்மை வாய்ந்த மகளிர்
செய்த பூ சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார்தாம் செய்த அழகிய சிறுசோற்றைக் கைகளில் இடுவதுபோன்று வைக்க அதனை உண்பது போன்று ஏற்பாருக்கு
இடுவார் மறுப்பார் சிறுகு இடையார்இடுவார் சிலர்; இட மறுப்பார் சிலர்; மறுக்கும் அந்தச் சிற்றிடையார்களின்
பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடிபந்துகள், கழங்குகள் ஆகிய பலவற்றைக் களவாடிக்கொண்டு ஓடி
அம் தண் கரை நின்று பாய்வாராய் மைந்தர்அழகிய குளிர்ந்த கரையினில் நின்று நீருக்குள் பாய்வார் சிலர்; இதனால், வீரர்கள்
ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கிசுடர்விட்டுப் பிரகாசிக்கும் வேலுடன், வாள்களையும் பகைமையினால் மோதிக்கொள்ள
களிறு போர் உற்ற களம் போல நாளும்களிறுகள் போரிடும் போர்க்களத்தைப் போல, நாள்முழுக்க
தெளிவு இன்று தீம் நீர் புனல்கலங்கிப்போய்த் தெளிவில்லாமல் இருந்தது இனிமையான இயல்பினையுடைய வையை ஆற்று நீர்
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல்திங்களானது, மாலைக்காலத்து மயக்கந்தரும் இருளைக் கூட்டித்தள்ள, மதுரை நகருக்குள்
வதி மாலை மாறும் தொழிலான் புது மாலைதங்கும் இயல்பினை நினைத்து, அவ்விடத்தைவிட்டு நீங்கிப்போகும் செயலால், புதிய இயல்பினையுடைய
நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்துநீராட்ட நாளுக்கான அணிகலன்களை நீக்கி, சிரிக்கும் இயல்பினையுடைய மலர்ந்த பூக்களைச் சூடிக்கொண்டு,
தோள் அணி தோடு சுடர் இழை நித்திலம்தோள்வளை, தோடு, ஒளிவிடும் இழைகள், முத்துமாலை ஆகியவற்றை அணிந்துகொண்டனர்;
பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல்பாடுவோரின் பாடலும், கடவுளைப் பரவுவோரின் துதியும், வையையைப் புகழ்வாரின் புகழ்ச்சியும்,
ஆடுவார் ஆடல் அமர்ந்த சீர் பாணிஆடுவோரின் ஆடலும், அந்த ஆடலுக்குப் பொருத்தமான சீருடன் கூடிய தாளமும் எழுந்தன;
நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும்நறுமணம் கமழும் தேனை உண்ணப் புறப்பட்டன வண்டினம் எல்லாம்;
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊதபண் பாடுவாரைத் தொடர்ந்து வந்த வண்டுகள் அவர் வருந்துமாறு அவருக்கு எதிராக வந்து ஒலியெழுப்ப,
கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊதகூந்தலிலுள்ள மலர்களின் தேனைக் கொள்ளையாய் உண்ட வண்டுகள் இனிய குரலில் பாட,
தென் திசை நோக்கி திரிதர்_வாய் மண்டு கால் சார்வாஎல்லாரும் தெற்குப்பக்கம் இருக்கும் நகருக்குச் செல்லத் திரும்புகின்ற பொழுது, விரைந்து இயங்கும் காற்றினைச் சார்ந்து,
நளிர் மலை பூ கொடி தங்குபு உகக்கும்செறிந்த மலையிடத்துப் பூங்கொடிகளிடத்தில் தங்குவதற்காக மேலேறிச் செல்லும்,
பனி வளர் ஆவியும் போன்ம் மணிமாடத்துகுளிர்ச்சி மிகுந்த நீராவியான மேகத்தைப் போன்றிருந்தது, மதுரை நகரின் மணிமாடங்களின்
உள் நின்று தூய பனி நீருடன் கலந்துஉள்ளேயிருந்து தூவிய பனிநீர் மணத்துடன் கலந்து,
கால் திரிய ஆர்க்கும் புகைதென்றல் காற்று மணமுடையதாக மாறும்படியாக எழுப்பும் நறுமணப்புகை;
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரஇல்லாத புலவர்கள் ஏந்திநின்ற கைகள் நிரம்பும்படி
பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பிதங்கத்தைச் சொரிகின்ற பாண்டிய மன்னனைப் போலவே, வையைஆறு நீரை நாடெங்கும் இறைத்துப் பரப்பி,
செய்யில் பொலம் பரப்பும் செய்வினை ஓயற்கநாட்டின் வயல்களில் பொன்னை நிறைக்கும் செயலாகிய தொழில் ஓய்ந்துபோகாமல் இருக்கக்கடவது!
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்உயிர்கள் வருந்தாமல் இருக்கும்பொருட்டு வருகின்ற வையையின் புதுநீரைக் கொண்டாடி மகிழும் மதுரை நகரில்
அரும் கறை அறை இசை வயிரியர் உரிமைகறைகள் அற்ற ஒலிக்கும் இசையை இசைக்கின்ற கூத்தர்கள், உரிமையுடன்
ஒருங்கு அமர் ஆயமொடு ஏத்தினர் தொழவேதம்முடன் சேர்ந்து இருக்கும் கூட்டத்தோடு ஏத்தி வணங்கும்படி.