சிறுபாணாற்றுப்படை

சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரை
மணி மலை பணை தோள் மா நில மடந்தைமணிகளையுடைய மலையே மூங்கில்(போன்ற) தோள்களாகவுள்ள பெரிய நிலமகளின்
அணி முலை துயல்வரூஉம் ஆரம் போலஅழகிய முலையின்கண் கிடந்து அசைந்துநிற்கும் முத்துமாலை போல,
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்றுஓடுகின்ற நீரால் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின்
கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்தஇடிந்த கரையில் உள்ள மணமிக்க பொழிலிடத்தே குயில்கள் (அலகால்)குடைந்து உதிர்த்த
புது பூ செம்மல் சூடி புடை நெறித்து              5புதிய பூக்களாகிய வாடலைச் சூடி, (தம்)இடமெல்லாம் அறல்பட்டு,                                       5
கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல்மயிர் விரித்ததை ஒத்த கருநிறத்தைக் கொண்ட நுண்ணிய கருமணல்,
அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்துஇரும்பின் வெப்பம் போன்ற தன்மைத்தாகி, மெல்ல நடந்து சென்று,
வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்பவெயிலின் வெப்பம் ஏறிய வெவ்விய பரல்கள் கால்களைக் கிழிப்ப,
வேனில் நின்ற வெம் பத வழி நாள்இளவேனிற்பருவம் நிலைபெற்ற வெம்மையான நிலைக்கு அடுத்த(முதுவேனிற்)காலத்தில்
காலை ஞாயிற்று கதிர் கடாவுறுப்ப          10காலை ஞாயிற்றின் கதிர் வெம்மையைச் செலுத்துதலால்,                                         10
பாலை நின்ற பாலை நெடு வழிபாலைத் தன்மை நிலைபெற்றமையால் தோன்றிய பாலையாகிய, நீண்ட வழியையுடைய,
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇகாட்டு நிலத்தின் தொடக்கத்திலுள்ள (கடப்ப)மரத்தின் கோடுகோடான நிழலில் தங்கி –
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளிமெல்லிதாய் வீழ்ந்து தாழ்கின்ற மழையின் எழிலினைக்கொண்டு, மருட்சியடைந்து,
நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு எனஎண்ணெயினால் குழைந்து இருண்ட கூந்தலினையும்; கூந்தலைப் போன்று,
மணி வயின் கலாபம் பரப்பி பல உடன்         15(நீல)மணி போன்ற கண்களையுடைய தோகைகளை விரித்து, பலவும் ஒருசேர்ந்த          15
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய்மயில்கள் – அம்மயில்கள் (நாணி)மறைந்துகொள்ளும் மென்மையினையும்; ஓடியிளைத்து
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇவருந்துகின்ற நாயின் நாக்கினுடைய நல்ல அழகினை(த் தனதாக) வருத்தி,
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்துஒளிரும் அணிகலன்கள் (இல்லாது)பொலிவழிந்த அடியினையும்; அடியினோடே தொடர்புடைத்தாய்,
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தட கையின்இழுக்கப்பட்டு நிலத்தில் படியும் கரிய பெண்யானையின் பெரிய கையைப் போல
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என      20திரண்டு, ஒருங்கே நெருங்கி இணைந்த தொடைகளையும்; தொடை போன்று                       20
மால் வரை ஒழுகிய வாழை வாழைபெருமையையுடைய மலையில் வளரும் வாழை – அவ்வாழையின்
பூ என பொலிந்த ஓதி ஓதிபூவைப்போல் பொலிவு பெற்ற மயிர்முடிப்பினையும்; அம் மயிரினில்(சூடுகின்ற) 
நளி சினை வேங்கை நாள் மலர் நச்சிசெறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்றைய மலர் (என நினைத்து)விரும்பி,
களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்துகிளர்ச்சியுற்ற வண்டுகள் ஒலிக்கும் பூந்தாது போன்ற தேமல்களையும்; அப் பூந்தாதுகள் சிதறிக்கிடக்கும்
யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி         25புதிதாய்ப் பூத்தலையுடைய கோங்கின் ஒளிரும் மொட்டுக்களை இகழ்ந்து,                  25
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை முலை எனஅணிகளுக்குள் ஒடுங்கிக்கிடக்கும் வெம்மையான முலைகளையும்; (அம்)முலைகளைப் போன்ற
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கில் உள்ள
இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு எனஇனிய சுவைநீர் (தன் சுவையால்)தாழ்ந்துபோகும் (ஊறலையுடைய)பற்களையும்; அப்பற்களைப் போல
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த(கஞ்சங்)குல்லையாகிய அழகிய முல்லை நிலத்தில் குவிந்த அரும்புகள் மலர்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல் இயல்          30முல்லை சூடுதற்கமைந்த கற்புடைமையும்; மெல்லிய இயல்பினையும்;                               30
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியரின்
நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடிநடையால் இளைத்து ஓய்ந்த நல்ல மெல்லிய சிறிய அடியினை
கல்லா இளையர் மெல்ல தைவரகல்வி நிரம்பாத இளைஞர் மெத்தென்று வருடிநிற்க,
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்பொன்னை வார்த்த (கம்பியினை)ஒத்த முறுக்கு அடங்கின நரம்பின்
இன் குரல் சீறியாழ் இட வயின் தழீஇ                35இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,                                  35
நைவளம் பழுநிய நயம் தெரி பாலைநட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை
கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்கஇயக்குதல் வல்ல பாணனாகிய மகன் முறைமையை அறிந்து இயக்க,
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ(புரவலர் இல்லாததால் பரிசிலர்)இயங்காத உலகத்தில் புரவலரை விரும்பி,
துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப(தன்னை)வெறுத்தல் மிக்க வருத்தத்தோடு கூடின வறுமை உன்னைக் கொண்டு போகையால்,
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல               40(வழி)வருத்தம் தீர்ந்திருந்த பேரறிவு வாய்க்கப்பெற்ற இரவலனே,                                      40
கொழு மீன் குறைய ஒதுங்கி வள் இதழ்கொழுத்த மீன் வெட்டுப்படும்படி நடந்து, வளவிய இதழையுடைய
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமைசெங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
பைம் கறி நிவந்த பலவின் நீழல்பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்,
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவரமஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவிநிற்ப,
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா              45முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்றவாறு நடந்து,                                        45
குளவி பள்ளி பாயல் கொள்ளும்காட்டு மல்லிகையாகிய பள்ளியில் துயில்கொள்ளும்
குட புலம் காவலர் மருமான் ஒன்னார்மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன் – பகைவருடைய
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்தவட நாட்டு இமயமலையின் மேல் வளைந்த வில்(சின்னத்தைப்) பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன்கணையத்திற்கு மாற்றான திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவனுடைய
வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று       50(பெருகி)வரும் நீரும் (கோபுர)வாயிலும் உடைய வஞ்சியை(யே) தரும் பரிசிலும் சிறிதாயிருக்கும்; அதுவன்றியும் 50
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்துதேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்
அறை வாய் குறும் துணி அயில் உளி பொருதவெட்டுண்ட வாயையுடைய குறிய மரக்கட்டையை கூர்மையான உளிகள் (உள்ளேசென்று)குடைந்த
கை புனை செப்பம் கடைந்த மார்பின்கைத்தொழில் திறத்தால் செம்மைசெய்து கடைந்த (மாலையணிந்த)மார்பினையுடையதும்,
செய் பூ கண்ணி செவி முதல் திருத்தி(நெட்டி என்ற தாவரத்தின் தண்டால்)செய்த பூவின் மாலையை செவியடியில் (நெற்றிமாலையாகச்) சூட்டப்பட்டதும்,
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த                55வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்ததும்,              55
மகாஅர் அன்ன மந்தி மடவோர்(அவர்களின்)பிள்ளைகளைப் போன்றதும் ஆன மந்தி, மடப்பத்தையுடைய மகளிர்
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம்சிரிப்பு(ப் பல்) போன்ற செறிந்த நீர்மையுடைய முத்தினை,
வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கிவாளின் வாய் போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றுக்குள் இட்டுப்பொதிந்து,
தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின்தளர்ந்த இடையினையுடைய, தோளையும் முதுகையும் மறைக்கின்ற
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற                60அசைகின்ற இயல்புடைய ஐந்து பகுதியாகிய கூந்தலினையுடைய உப்பு வாணிகத்தியர் பெற்ற,    60
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்விளங்குகின்ற அணிகலன்களையுடைய, பிள்ளைகளுடன் கிலுகிலுப்பையாக்கி விளையாடும்
தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான்தத்திவரும் நீரை(த் தனக்கு) எல்லையாகவுடைய கொற்கை அரசனும்;
தென் புல காவலர் மருமான் ஒன்னார்தென்னாட்டின் காவலருடைய குடியிலுள்ளானும்; பகைவருடைய
மண் மாறு கொண்ட மாலை வெண்குடைநிலத்தை மாறுபாட்டால் கைக்கொண்ட, (முத்து)மாலை அணிந்த வெண்கொற்றக்குடையினையும்,
கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன்                65கண்ணுக்கு அழகான கண்ணியினையும் உடையானும் ஆகிய கடிய தேரினையுடைய பாண்டியனின்,      65
தமிழ் நிலைபெற்ற தாங்க அரு மரபின்தமிழ் வீற்றிருந்த, (தானே)தாங்க முடியாத பாரம்பரியத்தையுடைய,
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்றுமகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரை(யைத் தரும் கொடை)யும் சிறிதே; அதுவன்றியும்,
நறு நீர் பொய்கை அடைகரை நிவந்தநறிய பொய்கையின் (இட்டு)அடைத்த கரையில் நின்று வளர்ந்த
துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதைசெறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை,
ஓவத்து அன்ன உண்துறை மருங்கில்           70ஓவியம் போன்ற (அழகுடைய)(நீர்)உண்ணும் துறையின் பக்கத்தே                                   70
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்(சிவப்புச் சாயமாகப் பயன்படுத்தும்)தம்பலப்பூச்சியை ஒத்த தாதுக்கள் சேர்ந்து உதிர்தலால்,
வரு முலை அன்ன வண் முகை உடைந்துஎழுகின்ற (பெரிய)முலையை ஒத்த வளவிய முகை நெகிழ்ந்து,
திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரைஅழகிய முகம் (போல)மலர்ந்த தெய்வத் (தன்மையுடைய)தாமரையிடத்து,
ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்னஅழுக்கில்லாத உள்ளங்கையில் சாதிலிங்கம் தோய்ந்ததைப் போன்ற
சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை         75சிவந்த இதழ் சூழ்ந்த செம்பொன்(னால் செய்ததைப்போன்ற) பொகுட்டின்மிசை,                       75
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து(தன் உயிர்க்குக்)காவலாகிய இனிய பெடையைத் தழுவி, சிறகுகளை அசைத்துக்கொண்டு,
காமரு தும்பி காமரம் செப்பும்விருப்பம் மருவின தும்பி சீகாமரம் (என்னும் பண்ணை)இசைக்கும்
தண் பணை தழீஇய தளரா இருக்கைகுளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய
குண புலம் காவலர் மருமான் ஒன்னார்கிழக்கு நாடுகளின் காவலருடைய குடியிலுள்ளான் – பகைவரின்
ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும்  80உயர்ந்த மதிலின் கதவில் உருமேறு (தன்)கழுத்தைத் (திணவால்)தேய்க்கும்                       80
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை(வானத்தே)தொங்கும் கோட்டையை அழித்த, தொடி விளங்கும் பெருமையையுடைய கையினையும்,
நாடா நல் இசை நல் தேர் செம்பியன்(தான்)விரும்பித் தேடாத நல்ல புகழினையும், நல்ல தேரினையும் உடைய சோழன் – அவனது
ஓடா பூட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று(தன் குடிகள் தன்னைவிட்டு)அகலோம் என மேற்கொண்ட உறுதியையும் உடைய உறந்தையும் சிறிதே; அதுவன்றியும்,
வானம் வாய்த்த வளம் மலை கவாஅன்மழை பொய்க்காத செல்வத்தையுடைய மலைப்பக்கத்துக்
கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய           85காட்டு மயிலுக்குத் தன் போர்வையைத் தந்த                                                  85
அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்அரிய வலிமையுடைய வடிவமுள்ள ஆவியர் குடியிற் பிறந்த பெருமகன்,
பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உணபெரிய மலை நாட்டையுடைய பேகனும்; வண்டுகள் உண்ணும்படி
நறு வீ உறைக்கும் நாக நெடு வழிநறிய பூக்கள் (தேனைத்)துளிக்கும் சுரபுன்னை(யை உடைத்தாகிய) நெடிய வழியிலிருந்த
சிறு வீ முல்லைக்கு பெரும் தேர் நல்கியசிறிய பூக்களையுடைய முல்லைக் கொடிக்குத் தனது பெரிய தேரினைக் கொடுத்த,
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்         90மிகுகின்ற வெள்ளிய அருவி குதிக்கும் மலைச்சரிவுகளையுடைய                                   90
பறம்பின் கோமான் பாரியும் கறங்கு மணிபறம்பின் அரசன் பாரியும்; ஒலிக்கும் மணியினையும்,
வால் உளை புரவியொடு வையகம் மருளவெள்ளிய தலைச்சிறகுகளையும் உடைய குதிரையோடு, (தன்)நாட்டையும், (ஏனையோர்)வியக்கும்படி
ஈர நன் மொழி இரவலர்க்கு ஈந்தஅருளினையுடைய நன்றாகிய மொழியினால் இரவலர்க்குக் கொடுத்தருளியவனும் 
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல்கொற்றவை வீற்றிருக்கும் அச்சந்தோன்றும் நெடிய வேலினையும்
கழல் தொடி தட கை காரியும் நிழல் திகழ்            95இறுக்குகின்ற தொடி(யினை அணிந்த), பெருமை மிக்க கையினையும் உடைய காரியும்; ஒளி விளங்கும்    95
நீல நாகம் நல்கிய கலிங்கம்நீலமணியினையும், தனக்கு நாகம் கொடுத்த ஆடையினையும்,
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்தஆலின் கீழ் இருந்த இறைவனுக்கு விரும்பியவனாய் கொடுத்தவனும்,
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்வில்லை எடுத்த சந்தனம் பூசிப் புலரும் திண்ணிய தோளினையும்,
ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரைஈடுபாடுள்ள நல்ல சொல்(லினையும் உடைய) ஆய் என்னும் வள்ளலும்; பெருமையுடைய மலையில்
கமழ் பூ சாரல் கவினிய நெல்லி                     100கமழும் பூக்களையுடைய பக்க மலையில் (நின்று)அழகுபெற்ற நெல்லியின்                   100
அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்தஅமிழ்தின் தன்மைகொண்ட இனிய பழத்தை ஔவைக்குக் கொடுத்தவனும், 
உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல்எப்பொழுதும் மாறாத சினம் நின்றெரியும், ஒளியால் விளங்கும் நெடிய வேலினையும்,
அரவ கடல் தானை அதிகனும் கரவாதுஆரவாரமுள்ள கடல்(போலும்) படையினையும் உடையவனும் ஆகிய அதிகமானும்; மறையாமல்,
நட்டோர் உவப்ப நடை பரிகாரம்நட்புச் செய்தோர் மனமகிழும்படி, வாழ்க்கையை நடத்த வேண்டுவனவற்றைக்
முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை     105குறையாமல் கொடுத்தவனும், போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கையினையும்,          105
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டுசொட்டும் மழை (எப்போதும்)பெய்யும் (உயர்ச்சியால்)காற்றுத் தங்கும் நெடிய சிகரங்களையுடைய
நளி மலை நாடன் நள்ளியும் நளி சினைசெறிந்த மலைநாட்டையும் உடைய நள்ளியும்; செறிந்த கொம்புகளிடத்தே
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துநறிய பூக்கள் நெருக்கமாக அமைந்த இளமை முதிர்ந்த சுரபுன்னையையும்,
குறும் பொறை நல் நாடு கோடியர்க்கு ஈந்தசிறிய குன்றுகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்குக் கொடுத்தவனும்,
காரி குதிரை காரியொடு மலைந்த                     110காரியென்னும் குதிரையையுடைய காரியோடு போர்செய்தவனும் ,                            110
ஓரி குதிரை ஓரியும் என ஆங்குஓரியென்னும் குதிரையையுடைய ஓரியும்; என்று கூறப்பட்ட அக்காலத்தே,
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்(தம்)மேலே வருகின்ற போர்களைக் கடந்த கணையத்துக்கு மாற்றான திணிந்த தோளினையுடைய
எழுவர் பூண்ட ஈகை செம் நுகம்எழுவரும், மேற்கொண்ட கொடையாகிய செவ்விய பாரத்தை,
விரி கடல் வேலி வியலகம் விளங்கபரந்த கடலாகிய வேலியை உடைய உலகம் (எல்லாம்)விளங்கும்படி
ஒருதான் தாங்கிய உரன் உடை நோன் தாள்              115ஒருவனாகத் தானே(தனியொருவனாகப்) பொறுத்த வலிமையையுடைய முயற்சியினையுடையவனும்,       115
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும்நறிய பூக்களையுடைய சுரபுன்னையையும், அகிலையும் சந்தனத்தையும்
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய(நீராடும்)துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி
பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின்(கரையை)மோதுகின்ற நீர் கொணர்ந்து தருகின்ற அழித்தற்கு அரிய முறைமையினையுடைய,
தொல் மா இலங்கை கருவொடு பெயரியபழைய, பெருமை மிக்க இலங்கையின் பெயரை (தான்)தோன்றிய காலத்திலேயே (தனக்குப்)பெயராகவுடைய
நன் மா இலங்கை மன்னருள்ளும்                      120நல்ல பெருமையையுடைய இலங்கை(யை ஆண்ட) அரசர் பலருள்ளும்,                            120
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள்குற்றமின்றி விளங்கிய, பழி இல்லாத, (தன் தொழில் நன்கு)வாய்க்கும் வாளினையுடைய
உறு புலி துப்பின் ஓவியர் பெருமகன்மிக்க புலி(போன்ற) வலிமையினையும் உடைய ஓவியர் குடியில் தோன்றியவனும்,
களிற்று தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடியானை(யைச் செலுத்துதலால் உண்டான) தழும்பு கிடந்த, வீரக்கழல் அலையாடும், திருத்தமான அடியினையும்,
பிடி கணம் சிதறும் பெயல் மழை தட கைபிடியானைத் திரளை(ப் பலர்க்கும்)வழங்கும் (ஓயாது)பெய்தலையுடைய மழை (போன்ற)பெரிய கையினையும் உடையவனும்,
பல் இய கோடியர் புரவலன் பேர் இசை         125பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரின் புரவலனும் ஆகிய பெரிய புகழையுடைய    125
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடுநல்லியக்கோட(ன் என்னும் மன்ன)னைக் காண்பதற்கு விரும்பிய கொள்கையுடன்
தாங்க அரு மரபின் தன்னும் தந்தை(பிறரால்)பொறுத்தற்கரிய (குடிப்பிறந்தோர்க்குரிய)முறைமையினையுடைய தன்னையும், (அவன்)தந்தையுடைய
வான் பொரு நெடு வரை வளனும் பாடிவானத்தைத் தொடும் நெடிய மலையின்கண் உள்ள செல்வத்தையும் பாடி,
முன் நாள் சென்றனம் ஆக இ நாள்சில நாட்களுக்கு முன்னே யாம் சென்றேமாக – இன்று,
திறவா கண்ண சாய் செவி குருளை             130திறக்காத கண்ணையுடைய சாய்ந்த செவியினையுடைய குட்டி,                                       130
கறவா பால் முலை கவர்தல் நோனாதுகறக்கப்படாத பாலினையுடைய முலையை உண்ணுதலை(த் தன் பசி மிகுதலால்) பொறுத்தலாற்றாது,
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்ஈன்றணிமையையுடைய நாய் ஒலியெழுப்பும் புன்மையுடைய அடுக்களையில்,
காழ் சோர் முது சுவர் கணம் சிதல் அரித்த(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கரையான் அரித்துக் குவித்த
பூழி பூத்த புழல் காளாம்பிமண்துகள்களில் பூத்தன – உட்துளை(கொண்ட) காளான்:
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்          135மெலிவடையச்செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி ஒட்டிப்போன, வயிற்றினையும்,         135
வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்தவளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின
குப்பை வேளை உப்பு இலி வெந்ததைகுப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை,
மடவோர் காட்சி நாணி கடை அடைத்துபுறங்கூறுவோர் காணுதற்கு நாணி, தலை வாயிலை அடைத்து,
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும்,
அழி பசி வருத்தம் வீட பொழி கவுள்         140அழிக்கின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு; (மதம்)வீழ்கின்ற கதுப்பினையும்,                 140
தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின்கடுகக் கொல்லுதலை மேற்கோளாகக் கொண்டதும், அலையாடும் மணியை உடைய பக்கத்தினையும்
சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்திசிறிய கண்ணையும் உடைய யானையுடன் பெரிய தேரையும் பெற்று
யாம் அவணின்றும் வருதும் நீயிரும்யாம் அவ்விடத்தினின்றும் வருகின்றோம், நீங்களும்
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல்இவ்விடத்தே உம்மை விரும்பி இருக்கின்ற கரிய பெரிய சுற்றத்தோடேயும்,
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின்               145பெருமை(கொண்ட) நெஞ்சோடேயும் (அவ் வள்ளல்பால்)செல்வீராயின்,                                145
அலை நீர் தாழை அன்னம் பூப்பவும்அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும்,
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்(இளவேனிற்காலத்தின்)முதல் நாளில் செருந்தி (பூத்து)பொன்னோ என்று மருளப் பண்ணவும்,
கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்,
நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும்நெடிய தாளையுடைய புன்னை நித்திலம் (போல அரும்புகள்) வைக்கவும்,
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர             150கரையிடத்துள்ள வெண்மையான மணற்பரப்பில் கடல் பரந்து ஏற,                                    150
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்,
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய(நீல)மணி (போலும்)கழி (சூழ்ந்த)ஊர்களையுடையதும், மதிலின் பெயர்கொண்ட,
பனி நீர் படுவின் பட்டினம் படரின்குளிர்ந்த நீர் மிக்க குளங்களையுடைத்தாகிய, (எயில்)பட்டினத்தே செல்வீராயின் –
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்னஉயர்ந்து நிற்றலையுடைய ஒட்டகம் (படுத்து)உறங்கிக் கிடந்ததைப் போல,
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்            155மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்                          155
கரும் புகை செம் தீ மாட்டி பெரும் தோள்கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை மூட்டி, பெரிய தோளினையும்,
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்துதிங்கள் ஏக்கமுறுகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும்,
நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த(கூர்)முனையுள்ள வேல்(போன்ற) பார்வையினையும் உடைய நுளைமகளால் அரிக்கப்பட்ட, 
பழம்படு தேறல் பரதவர் மடுப்பபழையதாகிய (களிப்பு மிகுகின்ற)கள்ளின் தெளிவினைப் பரதவர் (கொணர்ந்து உம்மை)ஊட்ட,
கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான்               160கிளைகளில் பூக்களையுடைய தோட்டங்களையுடைய கிடங்கில் (என்னும் ஊர்க்கு)அரசனாகிய      160
தளை அவிழ் தெரியல் தகையோர் பாடிஅரும்பு அவிழ்ந்த மாலையையுடைய அழகுடையோனைப் பாடி,
அறல் குழல் பாணி தூங்கியவரொடுதாள அறுதியை உடைய குழலோசையின் தாளத்திற்கேட்ப ஆடின மகளிரோடே,
வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர்உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்:
பைம் நனை அவரை பவழம் கோப்பவும்பசிய அரும்புகளையுடைய அவரை பவழம்(போல் பூக்களை முறையே) தொடுக்கவும்,
கரு நனை காயா கண மயில் அவிழவும்          165கரிய அரும்புகளையுடைய (காயாக்கள்)கூட்டமான மயில்களின் (கழுத்துகளைப் போலப்)பூப்பவும்,              165
கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்கொழுவிய கொடியினையுடைய முசுட்டை கொட்டம்(போலும் பூவைத் தன்னிடத்தே) கொள்ளவும்,
செழும் குலை காந்தள் கை விரல் பூப்பவும்செழுமையான குலையினையுடைய காந்தள் கைவிரல் (போலப்)பூக்கவும்,
கொல்லை நெடு வழி கோபம் ஊரவும்கொல்லையிலுள்ள நெடிய வழியில் (இந்திர)கோபம்(என்னும் தாம்பலப்பூச்சி) ஊர்ந்து செல்லவும்,
முல்லை சான்ற முல்லை அம் புறவின்முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லை(க்கொடி படர்ந்த)அழகிய காட்டில்,
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி               170முழைஞ்சுகளில் குதிக்கும் அருவியினையுடைய பெரிய மலையில் மறைந்து,                  170
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கிஞாயிற்றின் (ஒளிச்)சுடர்கள் மாறிப்போன அந்திக்காலத்தைப் பார்த்து,
திறல் வேல் நுதியின் பூத்த கேணிவெற்றி (தரும்)வேலின் நுனி போலப் பூத்த கேணியையுடைய
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின்வலிமை மிக்க வேலால் வெற்றி (பொருந்திய)வேலூரைச் சேரின் –
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பைமிகுகின்ற வெயிலுக்கு (உள் உறைவோர்)வருந்திய வெப்பம் விளங்குகின்ற குடி(யில் இருக்கின்ற)
எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு              175எயிற்றியர் ஆக்கிய இனிய புளிங்கறியிட்ட வெண்மையான சோற்றை,                         175
தேமா மேனி சில் வளை ஆயமொடுதேமாவின் தளிர்(போலும்) மேனி(யையும்), சிலவாகிய வளை(யினையும் உடைய நும்)மகளிரின் திரளோடு
ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர்ஆமானின் சூட்டிறைச்சியோடு (நும் பசி தீர)மனநிறைவடையப் பெறுகுவீர்,
நறும் பூ கோதை தொடுத்த நாள் சினைநறிய பூக்கள் மாலை தொடுத்த(தைப் போன்று மலர்ந்துள்ள) பருவம் வாய்த்த கொம்புகளையும்,
குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறிகுறிய தாளினையும் உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து                180(தான்)நிலையாக இருத்தல் அரிதாகிய குளத்தை(க் கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து       180
புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல்புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடைபெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பசிய இலையினுடைய
முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போதுமுள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
கொங்கு கவர் நீல செம் கண் சேவல்தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணையும் உடைய வண்டொழுங்கு
மதி சேர் அரவின் மான தோன்றும்            185திங்களைச் சேர்கின்ற (கரும்)பாம்பை ஒப்பத் தோன்றும்,                                              185
மருதம் சான்ற மருத தண் பணைமருத ஒழுக்கம் நிலைபெறுவதற்கமைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயலினையுடையதும்,
அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர்சான்றோர்(எண்ணிக்கை) குறைவுபடாததும், அரிய காவலினையுடையதும், அகன்ற மனையை உடையதும்
அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின்அழகிய குளிர்ந்த அகழியை உடையதும் ஆகிய, அவ்வள்ளலின் ஆமூரைச் சேர்திராயின் –
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின்வெற்றியுண்டாக நடக்கும், (இழுத்தற்குரிய)வலி பொருந்திய கழுத்தினால்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை               190மனஉறுதி கொண்ட வலிமையான எருத்தினையுடைய உழவரின் தங்கையாகிய,                       190
பிடி கை அன்ன பின்னு வீழ் சிறு புறத்துபிடியின் கையை ஒத்த பின்னல் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகினையும்
தொடி கை மகடூஉ மகமுறை தடுப்பதொடி(அணிந்த) கையினையும் உடைய பெண், தாய் பிள்ளை உறவு (கொண்டு)தடுக்க,
இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்தகரிய வயிரத்தையுடைய உலக்கையின் பூணினையுடைய முகத்தைத் தேயப்பண்ணின
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறுகுற்றுதல் நன்கமைந்த அரிசி(யாலாக்கின) உருண்டையாக்கிய வெண்மையான சோற்றை
கவை தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்      195கவைத்த காலினையுடைய நண்டின் கலவையோடு பெறுவீர்,                                   195
எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்றுதீச்சுவாலை தலைகீழானது போன்ற நாவினையும், ஒளிரும் பற்களையும்,
கருமறி காதின் கவை அடி பேய்மகள்வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போலநிணத்தை தின்று சிரிக்கின்ற தோற்றத்தைப் போன்று,
பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள்பிணங்களை(க் காலால்) இடறிச் சிவந்த பெரிய நகங்களையும், பெருமையுடைய கால்களையும் உடைய
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப          200தலைமைச் சிறப்புடைய யானைகளின் (மத)அருவி (எழுந்த)தூசியை அணைத்துவிடுவதால்                  200
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர்புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும்,
சேய்த்தும் அன்று சிறிது நணியதுவேதூரமானதும் அன்று, சிறிது அருகிலுள்ளதே,
பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்கிணைப்பொருநர்களுக்கோ, புலமையோர்க்கோ,
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்அரிய மறை (கற்றுணர்ந்த)நாவினையுடைய அறிவுடையோர்க்கோ,
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன                205கடவுள் – பெருமையுடைய (மேரு)மலை வாழும் – (இமைக்காமல்)கண் விழித்திருப்பதைப் போன்ற         205
அடையா வாயில் அவன் அரும் கடை குறுகிமூடப்படாத வாயிலையுடைய அவனுடைய (ஏனையோர் புகுதற்கு)அரிய தலைவாயிலை அணுகி –
செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்(அவ்வள்ளலின்)செய்ந்நன்றி அறிதலையும், சிற்றினம் சேராமையும்,
இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும்இன்முகம் உடைமையையும், இனியன் ஆதலையும்,
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்தசெறிந்து விளங்குகின்ற சிறப்பினையுடைய (பல கலைகளையும்) அறிந்தோர் புகழ,
அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும்    210(தனக்கு)அஞ்சியவர்க்கு அருள்செய்தலையும், கொடிய வெகுளி இல்லாமையையும்,             210
ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும்(பகை)மறவரின் அணியில் (அச்சமின்றிப்)புகுதலையும், தோற்ற படையினரைப் பொறுத்தலையும்,
வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்தவாள் வலியால் மேலாகிய சொல்லையுடைய மறவர் புகழ,
கருதியது முடித்தலும் காமுறப்படுதலும்(தான்)எண்ணியதை முடிக்கவல்ல தன்மையையும், பிறரால் விரும்பப்படுதலையும்,
ஒரு வழி படாமையும் ஓடியது உணர்தலும்ஒரே ஒரு வழியில்(மட்டும்)செல்லாமையையும், (பிறர் மனங்களின்)ஓட்டத்தைப் புரிந்துகொள்ளுதலையும்,
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த            215செவ்வரி பொருந்தின அழகிய மையுண்ட கண்ணினையுடைய மகளிர் புகழ,                       215
அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும்அறிவு குறைந்தோர் முன்னே அறிவு குறைவுபடுதலையும், (அறிஞர் மாட்டு)அறிவு நன்குடைமையும்,
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்(புலவரின்)சிறப்பை அறிதலையும், குறையாமல் கொடுத்தலையும்(உள்ள அவனை)
பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்தபரிசில் (பெற்று வாழும்)வாழ்க்கையையுடைய பரிசிலர் புகழ்ந்துசொல்ல,
பல் மீன் நடுவண் பால் மதி போலபல விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால்(போலும் ஒளியை உடைய) திங்கள் போன்று,
இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி         220இனிய மகிழ்ச்சியைச் செய்யும் குழாமில் இருந்தவனை அணுகி –                                  220
பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்னபசிய கண்களையுடைய கரிய குரங்கு பாம்பு(த் தலையைப்) பிடித்தாற் போன்று,
அம் கோட்டு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்அழகிய தண்டினிடத்தே செறியச் சுற்றின நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும்;
மணி நிரைத்து அன்ன வனப்பின் வாய் அமைத்துமணியை நிரைத்து வைத்ததைப் போன்ற அழகினையும்; பொருந்தச் செய்து,
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்துவயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட (தொழில்)வகை அமைந்த குடத்தின் மேல் உள்ள,
கான குமிழின் கனி நிறம் கடுப்ப                   225காட்டுக் குமிழின் பழத்தின் நிறத்தை ஒப்ப,                                                                225
புகழ் வினை பொலிந்த பச்சையொடு தேம் பெய்துபுகழப்படும் தொழில்வினை சிறந்து விளங்கும் போர்வையோடு; தேன் (போன்ற தன்மையைப்)பெய்துகொண்டு,
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்அமிழ்தத்தைப் பொதிந்து துளிக்கின்ற முறுக்கு அடங்கின நரம்பையும் உடைய
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விபாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆகசுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை, (பாலை யாழின்)குரலையே(செம்பாலையை) குரலாகக் கொண்டு
நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது            230இசைநூல் கூறுகின்ற முறையால் இயக்கி, ‘பலகாலும்                                            230
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்முதியோர்க்குக் குவித்த கைகளையுடையோய்’ என்றும்,
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்‘வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்’ எனவும்,
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்‘உழவர்க்கு நிழல்செய்த செங்கோலையுடையோய்’ எனவும்,
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்’ எனவும்,
நீ சில மொழியா அளவை மாசு இல்             235நீ சில (புகழினைக்)கூறி முடிக்காத அளவில் – மாசில்லாததும்,                                        235
காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇமூங்கில் ஆடையை உரித்தாற் போன்றதும் ஆகிய உடையினை உடுக்கச்செய்து,
பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கிபாம்பு சீறியெழுவதைப் போல் (உண்டவரைத் துள்ளி எழச்செய்யும்)கள்ளின் தெளிவைக் கொடுத்து,
கா எரியூட்டிய கவர் கணை தூணி(காண்ட)வனத்தை நெருப்புண்ணச்செய்த கவர்த்த கணையைக் கொண்ட அம்பறாத்தூணியையுடைய,
பூ விரி கச்சை புகழோன் தன்முன்பூத்தொழில் பரந்த கச்சையினையுடைய புகழ்வாய்ந்தவன்(அருச்சுனன்) அண்ணனும்,
பனிவரை மார்பன் பயந்த நுண் பொருள்                240பனி மலை (இமயம்)(போன்ற)மார்பையுடையவனும் ஆகிய வீமசேனனின் நுணுகிய பொருளையுடைய,     240
பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில்மடைநூல் (நெறியில்)தப்பாத பலவிதமான அடிசிலை,
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்தஒளியையுடைய (நீல நிற)வானத்தின்கண் கோளாகிய மீன்கள் சூழ்ந்த
இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்துஇள வெயில் (தரும்)ஞாயிற்றை எள்ளி நகையாடும் தோற்றமுடைய,
விளங்கு பொன் கலத்தில் விரும்புவன பேணிவிளங்குகின்ற பொன்(னாற்செய்த) (உண்)கலத்தில் (நீ)விரும்புவனவற்றை அன்புடன் கொடுத்து,
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி                245குறைவுபடாத விருப்பத்தால் தானே நின்று உண்ணச்செய்து,                                      245
திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றிவலிமை பொருந்திய வெற்றியோடே பகைவரின் நிலத்தைக் காலிசெய்து,
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கிவெற்றி (தரும்)வேலினையுடைய வேந்தரின் உயர்ந்த அரண்களை அழித்து,
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின்விரும்பிவந்தவர், பாணர் முதலியோரின் வறுமையையும் போக்கி, (அதன்)பின்னர்,
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு(தன்)படைத்தலைவர் கொண்டுவந்த நல்ல நிறத்தினையுடைய பொருள் குவியலோடு,
பருவ வானத்து பால் கதிர் பரப்பி                  250கூதிர்க் காலத்து வானில் பால் (போலும்)ஒளியைப் பரப்பி,                                            250
உருவ வான் மதி ஊர்கொண்டு ஆங்கு(முழு)உருவ அழகுத் திங்கள் ஒளிவட்டம் கொண்டாற் போல,
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டுகூரிய சிற்றுளிகள் சென்று செத்திய உருவங்கள் அழுந்தின, வலிமையான, அச்சுக்குடத்தில்
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு(பொருத்திய)ஆரக்கால்களைச் சூழ்ந்த இரும்புப்பட்டையை மேற்புறம் கொண்ட சக்கரத்துடன்,
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினைமழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில்
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல          255பூங்கொத்து முறுக்கு நெகிழ்ந்த காட்சியைப் போல,                                                   255
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வைஉள்ளே சாதிலிங்கம் வழித்த உருக்கமைந்த (மேற்)பலகையினையும்,
கரும் தொழில் வினைஞர் கைவினை முற்றிவன் தொழில் செய்யும் தச்சரின் செயல்திறம் நிறைந்து,
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடுஏறிப் பார்த்து (நல்லதெனக்கண்ட)பெயர்பெற்ற, அழகிய நடையை உடைய தேரோடு,
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள்குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலிமையுள்ள கால்களையும்,
வாண் முக பாண்டில் வலவனொடு தரீஇ          260ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து,        260
அன்றே விடுக்கும் அவன் பரிசில் மென் தோள்அன்றே விடுப்பான் அவனுடைய பரிசில் – மெல்லிய தோளினையும்,
துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர்துகில் சூழ்ந்த அல்குலினையும், அசைந்த சாயலினையும் உடைய மகளிர்
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்அகிற்புகையை ஊட்டுதற்கு விரித்த, அழகும் மென்மையும் உடைய, கூந்தலைப் போல்
மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி(நீல)மணி (நிறமுடைய)மயிலின் தோகையை வெண்மஞ்சின் இடையே (அணையாக)விரித்து,
துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு 265தெளிந்த முகில் தவழும் அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையின் சிகரத்தில்,          265
எறிந்து உரும் இறந்த ஏற்று அரும் சென்னிஉரும் (தான் சேறற்கு)இடித்துச் சென்ற (பிறர்)ஏறுதற்கு அரிதாகிய உச்சியை உடைய,
குறிஞ்சி கோமான் கொய் தளிர் கண்ணிமலைகள் மிக்க நிலத்திற்குத் தலைவனாகியவனான – கொய்யப்பட்ட தளிர் விரவின மாலையினையும்,
செல் இசை நிலைஇய பண்பின்(பிறர்பால் நில்லாதே)போகின்ற புகழ் (தன்னிடத்தே)நிலைபெறக் காரணமான குணத்தையும் உடைய –
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினேநல்லியக்கோடனை நீயிர் விரும்பியவராய்ச் செல்வீராயின்.