குறுந்தொகை 301-350

  
# குன்றியன்# குன்றியன்
# 301 குறிஞ்சி# 301 குறிஞ்சி
முழவு முதல் அரைய தடவு நிலை பெண்ணைமுழவைப் போல அடிமரத்தையுடைய வளைந்து நிற்கும் பனையின்
கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பைகொழித்த மடல்களில் செய்த சிறிய குச்சிகளையுடைய கூட்டில்
கரும் கால் அன்றில் காமர் கடும் சூல்கரிய கால்களைக் கொண்ட ஆண் அன்றிலை, அது விரும்பும் முதிய சூல்கொண்ட
வயவு பெடை அகவும் பானாள் கங்குல்மசக்கைநோயால் வாடும் பெண் அன்றில் அழைக்கும் நடுராத்திரியாகிய இரவில்
மன்றம் போழும் இன் மணி நெடும் தேர்மன்றத்தைப் பிளந்துகொண்டு வரும் இனிய மணியோசை கொண்ட நெடும்தேர்
வாராது ஆயினும் வருவது போலவரவில்லையென்றாலும், வருவது போல
செவி முதல் இசைக்கும் அரவமொடுசெவியில் ஒலிக்கும் சத்தத்தினால்
துயில் துறந்தனவால் தோழி என் கண்ணேதூக்கத்தை விடுத்தன தோழி! என் கண்கள்.
  
# மாங்குடி கிழார்# மாங்குடி கிழார்
# 302 குறிஞ்சி# 302 குறிஞ்சி
உரைத்திசின் தோழி அது புரைத்தோ அன்றேஉரைப்பாய் தோழி! அது உயர்வுடையதோ? இல்லையே!
அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்_தலைபொறுத்தற்கரிய பிரிவுத்துயரால் வருந்துவதற்கு ஆற்றலற்றுப்போனேன்; அதற்குமேலும்
பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும்இறந்துபோவதை அதைக் காட்டிலும் அஞ்சுகிறேன்;
அன்னோ இன்னும் நன் மலை நாடன்அந்தோ! நான் இந்த நிலை அடைந்த பின்னும், நல்ல மலையைச் சேர்ந்தவன்
பிரியா நண்பினர் இருவரும் என்னும்பிரியா நட்புடையவர்கள் இருவரும் என்னும்
அலர் அதற்கு அஞ்சினன்-கொல்லோ பலர் உடன்பழிச்சொல்லிற்கு அஞ்சினானோ? பலரும் ஒருங்கே
துஞ்சு ஊர் யாமத்தானும் என்துயிலுகின்ற ஊரின் நள்ளிரவிலும் என்
நெஞ்சத்து அல்லது வரவு அறியானேநெஞ்சில் வருவதை அன்றி நேரில் வருவதை அறியான்.
  
# அம்மூவன்# அம்மூவன்
# 303 நெய்தல்# 303 நெய்தல்
கழி தேர்ந்து அசைஇய கரும் கால் வெண்_குருகுகழியில் இரை தெரிந்து உண்டு இளைப்பாறிய கரிய காலையுடைய வெள்ளைக் கொக்கு
அடைகரை தாழை குழீஇ பெரும் கடல்அடைத்தகரையில் உள்ள தாழையில் குழுமி, பெரிய கடலின்
உடை திரை ஒலியின் துஞ்சும் துறைவஉடைகின்ற அலையின் ஆரவாரத்தில் உறங்கும் துறையைச் சேர்ந்தவனே!
தொல் நிலை நெகிழ்ந்த வளையன் ஈங்குதம் பழைய நிலையினின்றும் நெகிழ்ந்த வளையல்களையுடையவளாய், இங்கு
பசந்தனள்-மன் என் தோழி என்னொடும்பசலைநோய்வாய்ப்பட்டாள் என் தோழி, என்னோடு
இன் இணர் புன்னை அம் புகர் நிழல்இனிய கொத்துக்களையுடைய புன்னையின் அழகிய புள்ளிகளையுடைய நிழலில்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றேபொன்னிறமான வரிகளையுடைய நண்டுகளை அலைத்து விளையாடியபொழுதே –
  
# கணக்காயன் தத்தன்# கணக்காயன் தத்தன்
# 304 நெய்தல்# 304 நெய்தல்
கொல் வினை பொலிந்த கூர் வாய் எறி_உளிகொல்லன் தொழிலால் பொலிவுபெற்ற கூரிய வாயையுடைய எறியுளி
முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ்முகத்தில் படும்படி கட்டப்பட்ட உலர்ந்த மூங்கிலின் வலிமையுள்ள கழியை,
தாங்கு அரு நீர் சுரத்து எறிந்து வாங்கு விசைதாங்குதற்கரிய நீர்வழியில் வீசிஎறிந்து, விசைத்து இழுக்கின்ற
கொடும் திமில் பரதவர் கோட்டு_மீன் எறியவளைந்த திமிலையுடைய பரதவர் கொம்புடைய சுறாமீனைப் பிடிக்க,
நெடும் கரை இருந்த குறும் கால் அன்னத்துநீண்ட கடற்கரையில் இருந்த குறிய கால்களையுடைய அன்னத்தின்
வெண் தோடு இரியும் வீ ததை கானல்வெளுத்த தொகுதி அஞ்சிப்பறக்கின்ற பூக்கள் செறிந்த கடற்கரைச்சோலையினையும்
கைதை அம் தண் புனல் சேர்ப்பனொடுதாழைகளையும் அழகிய குளிர்ந்த நீர்நிலைகளையுமுடைய தலைவனோடு
செய்தனெம் மன்ற ஓர் பகை தரு நட்பேசெய்துகொண்டோம் நிச்சயமாக, ஒரு பகையைத் தருகின்ற நட்பை-
  
# குப்பை கோழியார்# குப்பை கோழியார்
# 305 மருதம்# 305 மருதம்
கண் தர வந்த காம ஒள் எரிகண்கள் தந்ததனால் உண்டான இந்தக் காதலாகிய எரியும் நெருப்பு
என்பு உற நலியினும் அவரொடு பேணிஎன் எலும்பையும் பொருந்திச் சுட்டு வருத்துகின்ற போதும், அவரை விரும்பிச்
சென்று நாம் முயங்கற்கு அரும் காட்சியமேசென்று நாம் தழுவிக்கொள்ள முடியாமற்போனவளானேன்;
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரேஇங்கு வந்து என் துன்பத்தைத் தீர்த்தற்கு அவராலும் இயலவில்லை!
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்ஏவிவிடுவாரும் இல்லாமல், பிரித்துவிடுவாரும் இல்லாமல்,
குப்பை கோழி தனி போர் போலகுப்பைக்கோழிகள் தாமாகச் சண்டைபோட்டுக்கொள்வது போல
விளிவு ஆங்கு விளியின் அல்லது(தாமாகத்)தணியும்போது தணிவதல்லாமல்
களைவோர் இலை யான் உற்ற நோயேநான் படும் துன்பத்தைத் தீர்ப்பார் யாரும் இல்லையே!# குப்பை கோழியார்
  
# அம்மூவன்# அம்மூவன்
# 306 நெய்தல்# 306 நெய்தல்
மெல்லிய இனிய மேவரு தகுநமென்மையுடைய, இனிய, விரும்பத்தக்க
இவை மொழியாம் என சொல்லினும் அவை நீசொற்களைச் சொல்லமாட்டோம் என்று சொன்னாலும், அவற்றை நீ
மறத்தியோ வாழி என் நெஞ்சே பல உடன்மற்ந்துவிட்டாயோ வாழ்க! நெஞ்சமே! பலவும் ஒன்றுசேர்ந்து
காமர் மாஅத்து தாது அமர் பூவின்அழகிய மாமரத்தின் தாதுக்கள் நிறைந்த பூவின்மீது
வண்டு வீழ்பு அயரும் கானல்வண்டுகள் விழுந்து பொய்க்கும் கடற்கரைச் சோலைக்கும்,
தெண் கடல் சேர்ப்பனை கண்ட பின்னேதெள்ளிய கடல்நீருக்கும் உரிய தலைவனைக் கண்ட பின்னர்
  
# கடம்பனூர் சாண்டிலியன்# கடம்பனூர் சாண்டிலியன்
# 307 பாலை# 307 பாலை
வளை உடைத்து அனையது ஆகி பலர் தொழவளையலை உடைத்தது போல ஆகி, பலரும் தொழ
செம் வாய் வானத்து ஐயென தோன்றிசிவந்த இடத்தையுடைய வானத்தில் விரைவாகத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோஇப்போது பிறந்தது பிறை! அந்தோ!
மறந்தனர்-கொல்லோ தாமே களிறு தன்மறந்துவிட்டார் போலும் தாம்! ஆண்யானை தன்
உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாதுவருந்திய நடையையுடைய இளம் பெண்யானையின் வருத்தத்தைப் பொறுக்கமாட்டாமல்
நிலை உயர் யாஅம் தொலைய குத்திநிற்பதில் உயர்ந்த யா மரம் அழியும்படி குத்தி
வெண் நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்துவெண்மையான பட்டையை உரித்து, தன் துதிக்கையைச் சுவைத்துக்கொண்டு மேல்நோக்கி
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்வருந்திய நெஞ்சத்தோடு முழங்கும்
அத்த நீள் இடை அழ பிரிந்தோரேபாலைவழியின் நீண்ட இடையில் எம்மை அழவிட்டுப் பிரிந்துசென்றோர் –
  
# பெருந்தோள் குறுஞ்சாத்தன்# பெருந்தோள் குறுஞ்சாத்தன்
# 308 குறிஞ்சி# 308 குறிஞ்சி
சோலை வாழை சுரி நுகும்பு இனையசோலை வாழையின் சுருண்ட குருத்து தான் வருந்துமாறு
அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்துதெய்வமேறிய தன் பெரிய மத்தகத்தைத் தடவியதால், வலிமைகெட்டு
மயங்கு துயர்_உற்ற மையல் வேழம்கலங்கிய துயரத்தை அடைந்த மயக்கத்தையுடைய ஆண்யானை
உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவரவருந்தியபடி உயிர்க்கும் இளைய பெண்யானை தனது வருந்திய முதுகினைத் தடவிக்கொடுக்க,
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்நீர் விழும் மலைச்சரிவில் அரிதில் துயிலும்
மா மலை நாடன் கேண்மைபெரிய மலையைச் சேர்ந்தவனின் நட்பு
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றேநாம் விரும்பியவற்றை நமக்குத் தரும் ஒரு நற்செயலில் வந்து நிற்கிறது.
  
# உறையூர் சல்லியன் குமாரன்# உறையூர் சல்லியன் குமாரன்
# 309 மருதம்# 309 மருதம்
கைவினை மாக்கள் தம் செய்வினை முடி-மார்களையெடுக்கும் மாந்தர் தாம் செய்யும் தொழிலை முடிப்பதற்காக
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்படவண்டுகள் மொய்ப்பதினால் மலர்ந்த மலரின் மணம் நிலத்தில் படும்படி
நீடிய வரம்பின் வாடிய விடினும்நீண்ட வரப்பில் வாடும்படி போட்டுவைத்தாலும்
கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாதுகொடியவரின் நிலத்தைவிட்டு வேறு நிலத்துக்குப்போய் வாழ்வோம் என்னாமல்
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்எடுத்துப்போட்டும் தம்மைக் களைந்த கழனியில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம் பெருமஉனது ஊரின் நெய்தலைப் போன்றவள் நான், தலைவனே!
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்நீ எனக்கு இன்னாதன பல செய்தாலும்
நின் இன்று அமைதல் வல்லாம் மாறேஉன்னை அன்றி இருக்கும் வல்லமை எமக்கு இல்லை.
  
# பெருங்கண்ணன்# பெருங்கண்ணன்
# 310 நெய்தல்# 310 நெய்தல்
புள்ளும் புலம்பின பூவும் கூம்பினபறவைகள் தத்தம் கூட்டுக்குள் சேர்ந்தன; பூக்கள் இதழ் குவிந்தன;
கானலும் புலம்பு நனி உடைத்தே வானமும்கடற்கரைச் சோலையும் தனிமையில் கிடக்கிறது; வானமும்
நம்மே போலும் மம்மர்த்து ஆகிநம்மைப்போன்று மயக்கமுடையதாகி,
எல்லை கழிய புல்லென்றன்றேபகற்பொழுது கழிய பொலிவிழந்து கிடக்கிறது;
இன்னும் உளெனே தோழி இ நிலைஇன்னும் உயிர்வாழ்வேன், தோழி! இந்த நிலையை,
தண்ணிய கமழும் ஞாழல்குளிர்ந்தனவாய் மணங்கமழும் ஞாழல்களையுடைய
தண்ணம் துறைவற்கு உரைக்குநர் பெறினேகுளிர்ந்த அழகிய கடல்துறையை உடையவர்க்கு எடுத்துக் கூறுவாரைப் பெற்றால்-
  
# சேந்தன்கீரன்# சேந்தன்கீரன்
# 311 நெய்தல்# 311 நெய்தல்
அலர் யாங்கு ஒழிவ தோழி பெரும் கடல்பழிச்சொற்கள் எவ்வாறு ஒழியும்? பெரிய கடலின்
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும்புலால்நாற்றத்தையுடைய அகன்ற துறையில் பாகன் தடுக்கவும்
நில்லாது கழிந்த கல்லென் கடும் தேர்நிற்காமல் கடந்துசென்ற கல்லென்னும் ஒலியைக் கிளப்பிக்கொண்டு விரைந்த தேரை
யான் கண்டன்றோ இலனே பானாள்நான் பார்க்கவே இல்லை; நண்பகலில்
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைஉயர்ந்து நிற்கும் வெள்ளை மணலில் தாழ்ந்த புன்னைமரத்தின்
தாது சேர் நிகர் மலர் கொய்யும்பூந்தாதுக்கள் சேர்ந்த ஒளிபொருந்திய மலர்களைக் கொய்துகொண்டிருந்த
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றேதோழிகள் எல்லாரும் சேர்ந்து பார்த்தார்களே!
  
# கபிலர்# கபிலர்
# 312 குறிஞ்சி# 312 குறிஞ்சி
இரண்டு அறி கள்வி நம் காதலோளேஇரண்டுவிதமாக நடந்துகொள்ளும் கள்ளத்தன்மையுடையவள் நம் காதலி!
முரண் கொள் துப்பின் செ வேல் மலையன்மாறுபாடு கொண்ட வலிமையினையும், செம்மையான வேலினையும் உடைய மலையமானின்
முள்ளூர் கானம் நாற வந்துமுள்ளூர் மலைக்காட்டின் மணத்தைப்போல் மணங்கமழ வந்து
நள்ளென் கங்குல் நம் ஓர் அன்னள்நள்ளென்ற இரவில் நம்மோடு ஒத்துப்போகிறாள்;
கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்துகூந்தலில் நாம் சூட்டிய பலவாய்க் கலந்த மலர்களை உதிர்த்துவிட்டு
சாந்து உளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவிமயிர்ச்சந்தனம் இட்டுக்  கோதிவிட்ட நறிய கூந்தலில் எண்ணெய் தடவி
அமரா முகத்தள் ஆகிநம்மைத் தெரியாததுபோன்ற முகத்தவள் ஆகி
தமர் ஓர் அன்னள் வைகறையானேதன் வீட்டாரைப் போல் ஆகிவிடுகிறாள் விடிந்துவிட்டதும்.
  
# 313 நெய்தல்# 313 நெய்தல்
பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கைபெரிய கடற்கரையில் இருக்கும் சிறிய வெள்ளைக் கடற்காக்கை
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டுநீந்தக் கூடிய நீரையுடைய பெரிய கழியில் இரையைத் தேடி உண்டு
பூ கமழ் பொதும்பர் சேக்கும் துறைவனோடுபூ மணக்கும் சோலையில் தங்கும் துறையைச் சேர்ந்த தலைவனோடு
யாத்தேம் யாத்தன்று நட்பேஎம்மைச் இணைத்துக்கொண்டோம், இணைந்த நட்பினை
அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்றேஅவிழ்த்துவிட முடியாது; அது முடிச்சிடப்பட்டு நன்றாக அமைந்துள்ளது.
  
# பேரிசாத்தன்# பேரிசாத்தன்
# 314 முல்லை# 314 முல்லை
சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல்நெடுந்தொலைவு உயர்ந்த வானத்தில் நீர் மிக்க நிறைந்த சூலினையும்
தண் குரல் எழிலி ஒண் சுடர் இமைப்பகுளிர்ச்சியையும் முழக்கத்தையும் கொண்ட மேகம் ஒளிரும் மின்னல்களை இமைக்க
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்மழை இறங்கி இருண்ட தனிமைகொண்ட மாலைப் பொழுதிலும்
வாரார் வாழி தோழி வரூஉம்வரவில்லை, வாழ்க, தோழியே! முளைத்தெழும்
இன் உறல் இள முலை ஞெமுங்கஇனிமை பொருந்திய இளம் முலைகள் அழுந்தத் தழுவிக்கொள்ள –
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரேஇன்னல் மிக்க இடங்களையுடைய பாலைநிலத்தைக் கடந்துசென்றோர்
  
# மதுரை வேளாதத்தன்# மதுரை வேளாதத்தன்
# 315 குறிஞ்சி# 315 குறிஞ்சி
எழுதரு மதியம் கடல் கண்டு ஆங்குஎழுகின்ற திங்களைக் கடலில் கண்டாற்போன்று
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன்வீழ்கின்ற வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த மலை நாட்டினன்
ஞாயிறு அனையன் தோழிஞாயிற்றைப் போன்றவன் தோழி!
நெருஞ்சி அனைய என் பெரும் பணை தோளேநெருஞ்சி மலர்களை ஒப்பன என் பெரிய மூங்கில் போன்ற தோள்கள்.
  
# தும்பிசேர் கீரன்# தும்பிசேர் கீரன்
# 316 நெய்தல்# 316 நெய்தல்
ஆய் வளை ஞெகிழவும் அயர்வு மெய் நிறுப்பவும்அழகிய வளையல்கள் நெகிழ்ந்துபோகவும், தளர்ச்சி மேனியில் நிலைக்கவும்
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்நோயால் மிக்க வருத்தத்தை அன்னை அறிந்தால்
உளெனோ வாழி தோழி விளியாதுநான் இருக்கமாட்டேன், வாழ்க, தோழியே! இடைவிடாமல்
உரவு கடல் பொருத விரவு மணல் அடைகரைவலிய கடல் மோதுகின்ற மணல் விரவிக்கிடக்கும் அடைத்தகரையில்
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்டவிளையாடும் மகளிர் ஒன்றுசேர்ந்து அலைக்கழிக்க
ஆய்ந்த அலவன் துன்புறு துனை பரிஅதனால் மெலிந்த நண்டு துன்புற்று விரைகின்ற ஓட்டத்தை
ஓங்கு வரல் விரி திரை களையும்உயர்ந்து வரும் விரிந்த கடலலை போக்கும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவேகடல்துறையைச் சேர்ந்த தலைவனின் சொல்லோ வேறுபட்டுப்போயின.
  
# மதுரை கண்டரதத்தன்# மதுரை கண்டரதத்தன்
# 317 குறிஞ்சி# 317 குறிஞ்சி
புரி மட மரையான் கரு நரை நல் ஏறுவிரும்புதற்குரிய இளைய மரையானின் கரிய பெரிய நல்ல ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி அயலதுஇனிய புளிச்சுவையையுடைய நெல்லிக்காயைத் தின்று, அயலேயுள்ள
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து_உயிர்த்துதேனொழுகும் பெரிய மலர்கள் நடுங்கும்படி பெருமூச்செறிந்து
ஓங்கு மலை பைம் சுனை பருகும் நாடன்உயர்ந்த மலையிலுள்ள பசிய சுனைநீரைப் பருகும் நாட்டையுடைய தலைவன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே கைம்மிகநம்மை விட்டுப் பிரிந்திருப்பாரோ, மிகுதியாக
வட புல வாடைக்கு அழி மழைவடதிசையிலிருந்து வரும் வாடைக்காற்றுக்கு அழிந்த மேகங்கள்
தென் புலம் படரும் தண் பனி நாளேதெற்குத்திசை நோக்கிச் செல்லுகின்ற குளிர்ந்த பனியையுடைய பருவத்தில் –
  
# அம்மூவன்# அம்மூவன்
# 318 நெய்தல்# 318 நெய்தல்
எறி சுறா கலித்த இலங்கு நீர் பரப்பின்எதிர்த்துத் தாக்கும் சுறாமீன்கள் நிறைந்த ஒளிரும் நீர்ப் பரப்பில்
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்மணமுள்ள பூக்களைக் கொண்ட ஞாழலொடு, புன்னையின் மலர்கள் பரந்து
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன்வேலன் வெறியாடும் களத்தைப் போல் தோன்றும் நாட்டினன் 
குறியான் ஆயினும் குறிப்பினும் பிறிது ஒன்று(மணம் முடிக்க)நினையானாயினும், நினைப்பினும், வேறெதனையும்
அறியாற்கு உரைப்பலோ யானே எய்த்த இஅறியாதவனுக்கு உணர்த்துவேனோ நான்? மெலிந்துபோன இந்த
பணை எழில் மென் தோள் அணைஇய அ நாள்மூங்கில் போன்ற அழகுடைய மென்மையான தோள்களை அணைத்த அந்த நாளில்
பிழையா வஞ்சினம் செய்ததவறாத வஞ்சினம் கூறிய
கள்வனும் கடவனும் புணைவனும் தானேவஞ்சகனும், அதை வாய்க்கச் செய்பவனும், நமக்குப் புகலிடமானவனும் அவன்தானே!
  
# தாயம் கண்ணன்# தாயம் கண்ணன்
# 319 முல்லை# 319 முல்லை
மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்துஆண்மான்கள் தம் மடப்பம் பொருந்திய பெண்மான்களைத் தழுவி, மயக்கம் மிக்கு
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்காட்டில் சேர்ந்த புதர்களில் மறைந்து ஒதுங்கவும்,
கை உடை நன் மா பிடியொடு பொருந்திதுதிக்கையையுடைய நல்ல களிறுகள் தன் பெண்யானைகளோடு பொருந்தி
மை அணி மருங்கின் மலை_அகம் சேரவும்முகில்களை அணிந்த பக்கத்தையுடைய மலையில் சேரவும்,
மாலை வந்தன்று மாரி மா மழைமாலையில் வந்தது, கார்காலத்துப் பெரிய மழை,
பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர்பொன்போன்ற அழகிய மேனியின் நல்ல நலத்தைச் சிதைத்தோராகிய தலைவர்
இன்னும் வாரார் ஆயின்இன்னும் வரவில்லையென்றால்
என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையேஎன்ன ஆகும் தோழி! நம் இனிய உயிரின் நிலை?
  
# தும்பிசேர் கீரன்# தும்பிசேர் கீரன்
# 320 நெய்தல்# 320 நெய்தல்
பெரும் கடல் பரதவர் கோள்_மீன் உணங்கலின்பெரிய கடலில் பரதவர் கொண்ட மீன்களின் உலர்ந்த வற்றல்,
இரும் கழி கொண்ட இறவின் வாடலொடுஇருண்ட கழியில் கொண்ட இறாவின் வற்றலோடு
நிலவு நிற வெண் மணல் புலவ பலவுடன்நிலவொளி போன்ற வெள்ளை மணற்பரப்பு புலால்நாறும்படி பலவும் சேர்ந்து
எக்கர்-தொறும் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள்மணல்மேடுகள்தோறும் பரவிக்கிடக்கும் கடல்துறையைச் சேர்ந்த நம் தலைவனோடு ஒரு நாள்
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ்சிரித்து விளையாடிய பழியும் நமக்கில்லை; மொட்டுகள் விரிந்த
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்பொன்னிற பூங்கொத்துகளைச் சேர்ந்த பறவைகள் ஒலிக்கும் கிளைகளுள்ள
புன்னை அம் சேரி இ ஊர்புன்னை மரங்கள் சூழ்ந்த அழகிய சேரிகளையுடைய இந்த ஊரில் உள்ளோர்
கொன் அலர் தூற்றும் தன் கொடுமையானேவீணே பழி தூற்றுவர், தம் கொடுமையான தன்மையினால்.
  
# 321 குறிஞ்சி# 321 குறிஞ்சி
மலை செம் சாந்தின் ஆர மார்பினன்மலையில் உண்டாகிய சிவப்புச் சந்தனத்தையும் முத்துமாலையையும் உடைய மார்பினன்;
சுனை பூ குவளை சுரும்பு ஆர் கண்ணியன்சுனையில் பூத்த குவளையில் வண்டுகள் மொய்க்கும் தலைமாலையையுடையவன்;
நடுநாள் வந்து நம் மனை பெயரும்நள்ளிரவில் வந்து நம் வீட்டுப்பக்கம் செல்வான் –
மடவரல் அரிவை நின் மார்பு அமர் இன் துணைமடப்பம் உடைய பெண்ணே! உன் நெஞ்சு விரும்பும் இனிய துணைவன்;
மன்ற மரையா இரிய ஏறு அட்டுமன்றத்திலுள்ள மரையாக்கள் அஞ்சியோட அவற்றின் ஏற்றினைக் கொன்று
செம் கண் இரும் புலி குழுமும் அதனால்சிவந்த கண்ணையுடைய பெரிய புலி முழங்கும்; அதனால்
மறைத்தல் காலையோ அன்றேநம் காதலை மறைக்கும் காலம் இதுவல்ல;
திறப்பல் வாழி வேண்டு அன்னை நம் கதவேதிறந்துவிடுவேன், வாழ்க! விரும்பிக்கேள் தலைவியே! நம் மனத்திலுள்ள இரகசியத்தை –
  
# ஐயூர் முடவன்# ஐயூர் முடவன்
# 322 குறிஞ்சி# 322 குறிஞ்சி
அமர் கண் ஆமான் அம் செவி குழவிஅமர்த்த கண்களையுடைய ஆமானின் அழகிய செவிகளையுடைய குட்டி
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்துகுறவர்கள் விரட்டியதால் வெருண்டு, தன் கூட்டத்தைவிட்டு ஓடி
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு எனகாட்டின்கண் சேர்ந்துள்ள சிறுகுடியில் அகப்பட்டுக்கொள்ள,
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்துஇளம்பெண்கள் அதனைப் பேண, அவருடன் கலந்து, அவ்விடத்தை விரும்பி
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்குவீட்டில் வாழும் வாழ்க்கையைப் பற்றிக்கொண்டதைப்போல்
மருவின் இனியவும் உளவோபழக்கப்பட்டுப்போனால் வேறு இனிமையுடையன உண்டோ?
செல்வாம் தோழி ஒல்வாங்கு நடந்தே(தலைவன் இருக்குமிடத்துக்குச்)செல்வோம் தோழி! இயன்ற அளவுக்கு நடந்து-
  
# பதடி வைகலார்# பதடி வைகலார்
# 323 முல்லை# 323 முல்லை
எல்லாம் எவனோ பதடி வைகல்மற்ற எல்லா நாட்களும் என்ன பயனை உடையன? அவை வெற்று நாட்கள்;
பாணர் படுமலை பண்ணிய எழாலின்பாணர்கள் படுமலை என்ற பாலைப்பண்ணை வாசித்த யாழிசையைப் போன்று
வானத்து அஞ்சுவர நல் இசை வீழவானத்தில் அச்சம் வரும்படியான நல்ல இசை முழங்க,
பெய்த புலத்து பூத்த முல்லைமழை பெய்த புலத்தில் பூத்த முல்லையின்
பசு முகை தாது நாறும் நறு நுதல்பசிய மொட்டின் பூந்தாது மணக்கும் நறிய நெற்றியையுடைய
அரிவை தோள் அணை துஞ்சிகாதலியின் தோளே அணையாகக் கொண்டு உறங்கிக்
கழிந்த நாள் இவண் வாழும் நாளேகழிந்த நாட்கள் மட்டுமே இங்கு வாழ்கின்ற நாட்கள் –
                       
# கவைமகன்# கவைமகன்
# 324 நெய்தல்# 324 நெய்தல்
கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றைவளைந்த கால்களையுடைய முதலையின் கொல்லுதலில் வல்ல ஆணானது
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறைவழியில் பிறர் செல்வதை இல்லாமற்செய்யும் கடற்கரைச் சோலையுள்ள அழகிய பெரிய துறையில்
இன மீன் இரும் கழி நீந்தி நீ நின்திரளான மீன்களுள்ள கரிய கழியை நீந்திக் கடந்து, நீ உனது
நயன் உடைமையின் வருதி இவள் தன்அன்புடைமையால் வருகிறாய்; இவள் தனது
மடன் உடைமையின் உவக்கும் யான் அதுஅறியாமை உடைமையால் மகிழ்கிறாள்; நானோ, அதற்கு,
கவை_மக நஞ்சு உண்டு ஆங்குஇரட்டைப் பிள்ளைகள் நஞ்சு உண்டதைப் போல்
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானேஅஞ்சுகிறேன், பெருமானே! என் நெஞ்சத்தில்-
  
# நன்னாகையார்# நன்னாகையார்
# 325 நெய்தல்# 325 நெய்தல்
சேறும் சேறும் என்றலின் பண்டை தம்செல்வோம், செல்வோம் என்று கூறியபோதெல்லாம், முன்பு அவரின்
மாய செலவா செத்து மருங்கு அற்றுபொய்யாகக் கூறிய பயணம் என்று நினைத்து, என்னைவிட்டு
மன்னி கழிக என்றேனே அன்னோஒரேயடியாகப் போய்விடுங்கள் என்று கூறினேனே! அந்தோ!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோநமக்குப் பிடிப்பாகிய நம் தலைவர் எங்கு இருக்கிறாரோ?
கரும் கால் வெண்_குருகு மேயும்கரிய காலைக் கொண்ட வெள்ளைக்கொக்கு மேயும்
பெரும் குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்தேபெரிய குளம் ஆயிற்று என் முலைகளின் இடைப்பகுதி.
  
# 326 நெய்தல்# 326 நெய்தல்
துணைத்த கோதை பணை பெரும் தோளினர்சேர்த்துக்கட்டப்பட்ட மாலையை அணிந்த, மூங்கிலைப் போன்ற பெரிய தோளையுடைய
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்தகடலில் விளையாடும் மகளிர் கடற்கரைச் சோலையில் அமைத்த
சிறு_மனை புணர்ந்த நட்பே தோழிமணல்வீட்டில் சேர்ந்திருந்த நட்பு, தோழியே!
ஒரு நாள் துறைவன் துறப்பின்ஒருநாள் தலைவன் நம்மைப் பிரிந்திருந்தாலும்
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தேபலநாட்களில் வரும் துன்பத்தை உடையது.
  
# அம்மூவனார்# அம்மூவனார்
# 327 குறிஞ்சி# 327 குறிஞ்சி
நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்_வயின்தாம் அருள்கூர்ந்தால் வாழ்கின்ற வறியோரிடம்
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்தஅன்பு இல்லாதவராதல் நல்லதென்று உணர்ந்த
குன்ற நாடன் தன்னினும் நன்றும்மலைநாட்டினனைக் காட்டிலும், மிகவும்
நின் நிலை கொடிதால் தீம் கலுழ் உந்திஉனது செயல் கொடியதாகும்; இனிதான கலங்கியநீரைக் கொணரும் ஆறே!
நம் மனை மட_மகள் இன்ன மென்மைநம் மனையிலுள்ள இளையமகள் இன்னவாறான மெல்லிய
சாயலள் அளியள் என்னாய்சாயலுடையவள், இரங்கத்தக்கவள் என்று பாராமல்
வாழை தந்தனையால் சிலம்பு புல்லெனவேவாழைமரங்களைப் பெயர்த்துக் கொணர்கிறாய், மலைச்சரிவுகள் பொலிவற்றுப்போக –
  
# பரணர்# பரணர்
# 328 நெய்தல்# 328 நெய்தல்
சிறு வீ ஞாழல் வேர் அளை பள்ளிசிறிய மலரையுடைய ஞாழல்மரத்தின் வேரில் அமைக்கப்பட்ட வளையில் படுத்திருக்கும்
அலவன் சிறு_மனை சிதைய புணரிநண்டினுடைய சிறிய வீடு சிதையுமாறு, அலைகள்
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்குறுந்தடியால் அடிக்கப்பெறும் முரசைப்போல முழங்கும் துறையைச் சேர்ந்த தலைவன்
நல்கிய நாள் தவ சிலவே அலரேஅருள்புரிந்த நாட்கள் மிகச் சிலவே!, இதனால் எழுந்த பழிச்சொல்லோ,
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்விற்படையைக் கொண்ட சேனைகளையுடைய விச்சியரின் தலைவன்
வேந்தரொடு பொருத ஞான்றை பாணர்அரசர்களோடு போரிட்டபோது, பாணர்களின்
புலி நோக்கு உறழ் நிலை கண்டபுலிப்பார்வை போன்ற நிலையினைக் கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதேஆரவாரமிக்க குறும்பூர்க்காரர்கள் எழுப்பிய முழக்கத்தைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறது.
  
# ஓதலாந்தையார்# ஓதலாந்தையார்
# 329 பாலை# 329 பாலை
கான இருப்பை வேனில் வெண் பூகாட்டிலுள்ள இலுப்பை மரத்தின் வேனிற்காலத்து வெள்ளிய பூக்கள்
வளி பொரு நெடும் சினை உகுத்தலின் ஆர் கழல்புகாற்று மோதிய நீண்ட கிளைகள் ஆடிஉதிர்த்ததனால் காம்புகள் கழலப்பெற்று
களிறு வழங்கு சிறு நெறி புதைய தாஅம்களிறுகள் திரியும் சிறிய வழிகள் புதைந்துபோகுமாறு பரவிக்கிடக்கும்
பிறங்கு மலை அரும் சுரம் இறந்தவர் படர்ந்துஒளிர்கின்ற மலைகளையுடைய அரிய வழியைக் கடந்துசென்ற நம் தலைவரை நினைந்து
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகிமிக்க இருளையுடைய நள்ளிரவில் தூக்கம் இல்லையாகி
தெண் நீர் நிகர் மலர் புரையும்தெளிந்த நீரிலுள்ள ஒளிவிடும் மலரைப் போன்ற
நன் மலர் மழை கணிற்கு எளியவால் பனியேநல்ல மலராகிய குளிர்ந்த கண்ணுக்கு எளிதாய்ப் பெருகுகின்றன நீர்த்துளிகள்.
  
# கழார் கீரன் எயிற்றியன்# கழார் கீரன் எயிற்றியன்
# 330 மருதம்# 330 மருதம்
நல_தகை புலைத்தி பசை தோய்த்து எடுத்துபெண்மை நலமும் அழகும் வாய்ந்த சலவைப்பெண், கஞ்சியில் தோய்த்து எடுத்து
தலை புடை போக்கி தண் கயத்து இட்டஒருதரம் கல்லில் அடித்து முடித்து, குளிர்ந்த குளத்தில் இட்ட,
நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும்நீரில் அலசிவிடாத பருத்த ஆடையின் முறுக்கைப் போன்றிருக்கும்
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூபெரிய இலையைக் கொண்ட பகன்றையின் கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள்
இன் கடும் கள்ளின் மணம் இல கமழும்இனிமையும், கடுப்பையும் உடைய கள்ளைப் போன்று மணமின்றிக் கமழும்
புன்கண் மாலையும் புலம்பும்துன்பத்தையுடைய மாலைப் பொழுதும், அதன் தனிமைத் துயரும்
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டேஇல்லையோ தோழி! அவர் சென்ற நாட்டில்.
  
# வாடா பிரமந்தன்# வாடா பிரமந்தன்
# 331 பாலை# 331 பாலை
நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடைநெடிய மூங்கில் வாடி உலர்ந்துபோன நீரற்ற அரிய பாலைவெளியில்
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்றுவழிச்செல்லும் பயணிகள் அழியுமாறு அவரை எதிர்த்து நின்று
கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்வளைந்த வில்லையுடைய மறவர்கள் காட்டில் கொள்ளைப்பொருளைப் பகிர்ந்துகொள்ளும்
கடுங்கண் யானை கானம் நீந்திகடுமையான யானைகள் இருக்கும் பாலைநிலத்தைக் கடந்து
இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடிசெல்வாரோ தோழி! வாழ்க! நறிய வடுவையும்
பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்னபசிய அடிமரத்தையும் உடைய மா மரத்தின் அழகிய தளிர் போன்ற
நன் மா மேனி பசப்பநல்ல மாமைநிறமுள்ள மேனியில் பசலை ஊர
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கேநம்மைக்காட்டிலும் சிறந்த அரிய பொருளை ஈட்டுவதற்கு –
  
# மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன்# மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன்
# 332 குறிஞ்சி# 332 குறிஞ்சி
வந்த வாடை சில் பெயல் கடை நாள்வாடை வந்த சிறுமழை பெய்யும் கடைசி யாமத்தில்
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்துவருத்தத்தில் உழல்கின்ற பொறுத்தற்கரிய துன்பம் நீங்கும்பொருட்டு, நீ விரும்பிக்
கூறின் எவனோ தோழி நாறு உயிர்கூறினால் என்ன தோழி! மணக்கும்படி மூச்சுவிடுகின்ற
மட பிடி தழீஇ தட கை யானைஇளைய பெண்யானையைத் தழுவிக்கொண்டு, பெரிய கைகளையுடைய யானை
குன்றக சிறுகுடி இழிதரும்குன்றின் அடிவாரத்தில் இருக்கும் சிறுகுடிக்கு இறங்கிவரும்
மன்றம் நண்ணிய மலை கிழவோற்கேமன்றங்கள் பொருந்திய மலைநாட்டினனிடம் –
  
# உழுந்தினைம் புலவன்# உழுந்தினைம் புலவன்
# 333 குறிஞ்சி# 333 குறிஞ்சி
குறும் படை பகழி கொடு வில் கானவன்குறிய ஆயுதமான அம்பையும், வளைந்த வில்லையும் உடைய குறவனின்
புனம் உண்டு கடிந்த பைம் கண் யானைதினைப்புனத்தை உண்டு விரட்டப்பட்ட பசிய கண்ணையுடைய யானை
நறும் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடுநறிய தழையணிந்த மகளிர் ஓட்டும் கிளிகளோடு
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன்குறிய பாறைகளாலான மலையின் உச்சியை நோக்கிப்பார்க்கும் குன்ற நாட்டினன்
பணி குறை வருத்தம் வீடமணம் புரியும் பணி குறைப்பட்டதனால் ஏற்பட்ட வருத்தம் நீங்க,
துணியின் எவனோ தோழி நம் மறையேதுணிந்துவிட்டால் என்ன தோழி! நம் இரகசியத்தை வெளிப்படுத்த –
  
# இளம் பூதனார்# இளம் பூதனார்
# 334 நெய்தல்# 334 நெய்தல்
சிறு_வெண்_காக்கை செ வாய் பெரும் தோடுசிறிய வெள்ளையான கடற்காக்கையின் சிவந்த வாயையுடைய பெரிய கூட்டம்
எறி திரை திவலை ஈர்ம் புறம் நனைப்பவீசுகின்ற அலைகளின் துளிகள் தம்முடைய ஈரமான முதுகை நனைப்பதால்
பனி புலந்து உறையும் பல் பூ கானல்குளிர்ந்து வருந்தித் தங்கியிருக்கும் பல பூக்களையுடைய கடற்கரைச் சோலையையுடைய
இரு நீர் சேர்ப்பன் நீப்பின் ஒரு நம்பெரிய நீர்ப்பரப்பின் தலைவன் பிரிந்து சென்றால், ஒன்றாகிய நமது
இன் உயிர் அல்லது பிறிது ஒன்றுஇனிய உயிரை அல்லது வேறு ஒன்று
எவனோ தோழி நாம் இழப்பதுவேஎதுவோ தோழி? நாம் இழப்பதுவே –
  
# இருந்தையூர் கொற்றன் புலவன்# இருந்தையூர் கொற்றன் புலவன்
# 335 குறிஞ்சி# 335 குறிஞ்சி
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்வரிசையான வளையல்களை அணிந்த நேர்த்தியான அணிகலன்கள் அணிந்த மகளிர்
இரும் கல் வியல் அறை செந்தினை பரப்பிகரிய மலையில் உள்ள அகன்ற பாறையில் செந்தினையைப் பரப்பி
சுனை பாய் சோர்வு இடை நோக்கி சினை இழிந்துசுனையில் பாய்ந்து ஆடிய சோர்வுள்ள பொழுதை நோக்கி, கிளையிலிருந்து இறங்கி
பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும்பசிய கண்ணையுடைய மந்தி, தன் குட்டியோடு கவர்ந்து உண்ணும்
வெற்பு அயல் நண்ணியதுவே வார் கோல்மலைக்குச் சற்று அப்பால் இருக்கிறது, நீண்ட அம்பினையும்,
வல் வில் கானவர் தங்கைவலிய வில்லினையும் உடைய வேட்டுவரின் தங்கையாகிய
பெரும் தோள் கொடிச்சி இருந்த ஊரேபெரிய தோளினைக்கொண்ட நம் தலைவி இருந்த ஊர் –
  
# குன்றியன்# குன்றியன்
# 336 குறிஞ்சி# 336 குறிஞ்சி
செறுவர்க்கு உவகை ஆக தெறுவரவேண்டாதவருக்கு மகிழ்ச்சி உண்டாக, நமக்குத் துன்பம் வர
ஈங்ஙனம் வருபவோ தேம் பாய் துறைவஇவ்வாறு (இரவில்) வருவாரும் உளரோ? தேன் பரவும் துறையையுடையவனே!
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பசிறிய நாவினையுடைய ஒளிரும் மணிகள் விளரிப்பண்ணை இசைப்ப
கடு மா நெடும் தேர் நேமி போகியவிரையும் குதிரைகள் பூட்டிய நெடிய தேரின் சக்கரம் அழுத்திய
இரும் கழி நெய்தல் போலபெரிய கழியின் நெய்தல்மலர் போல
வருந்தினள் அளியள் நீ பிரிந்திசினோளேவருந்தினாள், இரங்கத்தக்கவள், நீ பிரிந்துசென்றவள்.
  
# பொது கயத்து கீரந்தையார்# பொது கயத்து கீரந்தையார்
# 337 குறிஞ்சி# 337 குறிஞ்சி
முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையேமுலைகள் முகிழாய் முகிழ்த்தன; தலையின்
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவேகிளைத்த கூந்தல்கொத்துக்கள் கீழே விழுந்து தொங்குகின்றன;
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பினசெறிவாக அமைந்த வெள்ளைப் பற்களும் விழுந்தெழுந்து நிற்கின்றன;
சுணங்கும் சில தோன்றினவே அணங்கு எனதேமலும் சில தோன்றின; வருத்தும் தெய்வம் என
யான் தன் அறிவல் தான் அறியலளேநான் அவளை அறிவேன், அதனை அவள் அறியாள்;
யாங்கு ஆகுவள்-கொல் தானேஎப்படி ஆவாளோ அவள்?
பெரு முது செல்வர் ஒரு மட_மகளேபெரிய பழைய செல்வரின் ஒப்பற்ற மடப்பத்தையுடைய மகள்.
                        
# பெருங்குன்றூர் கிழார்# பெருங்குன்றூர் கிழார்
# 338 குறிஞ்சி# 338 குறிஞ்சி
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறுமுறுக்கேறிய கொம்புகளையுடைய இரலையாகிய தலைமைப்பண்புள்ள நல்ல ஆண்மான்
அரி மட பிணையோடு அல்கு நிழல் அசைஇமென்மையையும் மடப்பத்தையும் கொண்ட பெண்மானோடு தங்குதற்குரிய நிழலில் ஓய்வெடுத்து
வீ ததை வியல் அரில் துஞ்சி பொழுது செலபூக்கள் நெருங்கிய அகன்ற பின்னிவளர்ந்த சிறுதூறில் துயின்று, ஞாயிறு மறைய
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலைசெழுமையான பயற்றுப் பயிரைக் கறித்துத்தின்னும் துன்பமுடைய மாலைப்பொழுதினையும்
பின்பனி கடை நாள் தண் பனி அற்சிரம்பின்பனியுள்ள கடைசி யாமத்தையும், குளிர்ந்த பனியையும் கொண்ட அற்சிரக்காலத்தில்
வந்தன்று பெரு விறல் தேரே பணை தோள்வந்தது பெரிய வெற்றியையுடைய தேர்! மூங்கிலைப் போன்ற தோள்களையும்
விளங்கு நகர் அடங்கிய கற்பின்பொலிவுற்ற இல்லத்தில் அடக்கமான கற்பினையும் உடைய
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவேபெண்மை நலம் பொருந்திய தலைவியின் தனிமைத்துயர் நீங்கும்படி –
  
# பேயார்# பேயார்
# 339 குறிஞ்சி# 339 குறிஞ்சி
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகைவாசனையையுடைய அகிலின் வளமையாகச் செறிந்த தினைப்புனத்தில் எழுந்த நறிய புகை
உறை அறு மையின் போகி சாரல்துளிகள் அற்ற மேகத்தைப் போலச் சென்று, மலைச்சாரலிலுள்ள
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்குறவர் குடியிருப்பில் இறங்கும் நாட்டினனாகிய தலைவன்
மயங்கு மலர் கோதை நன் மார்பு முயங்கல்பலவகை மலர்கள் கலந்த மாலையை அணிந்த நல்ல மார்பைத் தழுவுதல்
இனிது-மன் வாழி தோழி மா இதழ்இனியதாயிற்று வாழ்க தோழி! பெரிய இதழ்களைக் கொண்ட
குவளை உண்கண் கலுழகுவளை மலரைப் போன்ற மையுண்ட கண்கள் கண்ணீர்விட
பசலை ஆகா ஊங்கலங்கடையேபசலை உண்டாவதற்கு முன்பு
  
# அம்மூவன்# அம்மூவன்
# 340 நெய்தல்# 340 நெய்தல்
காமம் கடையின் காதலர் படர்ந்துகாதல் மிகும்போது காதலரை நினைத்துச் சென்று,
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகிநாம் அவரிடத்தே வருந்தும்போது நம்மோடு ஆகி,
ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடைஒரு பக்கமாகச் சேர்தல் இல்லாது, இரண்டு பக்கமுமாக,
அழுவம் நின்ற அலர் வேய் கண்டல்கடற்கரைப் பரப்பில் நின்ற மலர்கள் நிறைந்த தாழை
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம்கழிநீர் ஓடிய பக்கத்தே வளைந்து, பொங்கும் கடல்நீர்
பெயர்தர பெயர்தந்து ஆங்குமீண்டுவரும்போது தானும் மீண்டுநின்றாற்போல
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சேவருந்தும் தோழி! தலைவர் இருந்த என் நெஞ்சம்.
  
# மிளைகிழான் நல் வேட்டன்# மிளைகிழான் நல் வேட்டன்
# 341 நெய்தல்# 341 நெய்தல்
பல் வீ படரிய பசு நனை குரவம்பல பூக்கள் தோன்றிய பசிய அரும்புகளையுடைய குராமரம்
பொரி பூ புன்கொடு பொழில் அணி கொளாஅநெற்பொரி போன்ற பூக்களையுடைய புங்கைமரத்தோடு சோலையிடத்தில் அழகைக் கொண்டு
சினை இனிது ஆகிய_காலையும் காதலர்கிளைகள் காண்பதற்கு இனிதாக இருக்கின்ற இப் பருவத்திலும், காதலர்
பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்துதம் சொல்லைக் காவாராயினும், பெரியோர்களின் நெஞ்சத்தில்
கண்ணிய ஆண்மை கடவது அன்று எனகருதிய ஆண்மைச் செயல்கள் நிறைவேற்றப்படுவது இல்லை என்று
வலியா நெஞ்சம் வலிப்பமுன்னர்த் தெளிவாகாத என் நெஞ்சம் இப்போது தெளிவடைய,
வாழ்வேன் தோழி என் வன்கணானேவாழ்கின்றேன் தோழி என் மனவுரத்தாலே.
  
# காவிரிப்பூம் பட்டினத்து கந்தரத்தனார்# காவிரிப்பூம் பட்டினத்து கந்தரத்தனார்
# 342 குறிஞ்சி# 342 குறிஞ்சி
கலை கை தொட்ட கமழ் சுளை பெரும் பழம்ஆண்குரங்கு கையால் தோண்டிய கமழ்கின்ற சுளையைக் கொண்ட பெரிய பலாப்பழத்தைக்
காவல் மறந்த கானவன் ஞாங்கர்காக்க மறந்த குறவன், அதன் பின்னர்
கடி உடை மரம்-தொறும் படு வலை மாட்டும்மணமுள்ள மரங்கள்தோறும் குரங்குகள் மாட்டிக்கொள்ள வலையை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைம் சுனைகுன்றைச் சேர்ந்த தலைவனே! உனக்குத் தகுமோ? பசிய சுனையில் தோன்றிய
குவளை தண் தழை இவள் ஈண்டு வருந்தகுவளைப்பூக்களையும் குளிர்ந்த தழைகளையும் கட்டிய இவள் இங்கு வருந்த
நயந்தோர் புன்கண் தீர்க்கும்உன்னை விரும்பியவர்களின் துன்பத்தைத் தீர்க்கும்
பயம் தலைப்படா பண்பினை எனினேபயனேதுமற்ற பண்புடையவனாக இருந்தால் –
  
# ஈழத்து பூதன் தேவன்# ஈழத்து பூதன் தேவன்
# 343 பாலை# 343 பாலை
நினையாய் வாழி தோழி நனை கவுள்நினைத்துப்பார் வாழ்க தோழி! மதத்தால் நனைந்த கன்னத்தையுடைய
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து எனதலைமைப் பண்புள்ள யானையின் அழகிய முகத்தில் பாய்ந்ததாக,
மிகு வலி இரும் புலி பகு வாய் ஏற்றைமிகுந்த வலிமைகொண்ட பெரிய புலியின் பிளந்த வாயையுடைய ஆண்
வெண் கோடு செம் மறு கொளீஇய விடர் முகையானையின் வெள்ளையான கொம்புகள் சிவந்த கறை கொள்ள, பிளவுபட்ட குகையிலுள்ள
கோடை ஒற்றிய கரும் கால் வேங்கைமேல்காற்றால் வீழ்த்தப்பட்ட கரிய அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின்
வாடு பூ சினையின் கிடக்கும்வாடிய பூக்களைக் கொண்ட கிளையைப் போல் இறந்து கிடக்கும்
உயர் வரை நாடனொடு பெயரும் ஆறேஉயர்ந்த மலைகளையுடைய நாட்டினனோடு செல்லும் வழியை – 
  
# குறுங்குடி மருதன்# குறுங்குடி மருதன்
# 344 முல்லை# 344 முல்லை
நோற்றோர் மன்ற தோழி தண்ணெனதவம் செய்தவர் ஆவர், நிச்சயமாக, தோழி! குளிரும்படி
தூற்றும் துவலை பனி கடும் திங்கள்தூற்றும் துளிகளாகிய பனியையுடைய கடுமையான திங்கள்களில்
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடுமேய்புலங்களில் பயிரை மேய்வதற்கு, தலைமைப் பண்புள்ள காளைகளுடன்
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்நிலத்தில் தோயும்படி தாழ்ந்த கழுத்துத்தசைகளையும், வீங்கிய மடிகளையும் கொண்ட பசுக்கள்
பால் வார்பு குழவி உள்ளி நிரை இறந்துபாலை ஒழுகவிட்டு, தம் கன்றுகளை நினைத்து, தம் கூட்டத்தைவிட்டு விலகி
ஊர் வயின் பெயரும் புன்கண் மாலைஊரை நோக்கிச் செல்லும் துன்பந்தரும் மாலைப்பொழுதில்
அரும் பெறல் பொருள்_பிணி போகிஅரிதில் பெறக்கூடிய பொருளீட்டத்துக்காகச் சென்று
பிரிந்து உறை காதலர் வர காண்போரேபிரிந்து வாழும் காதலர் திரும்பிவரக் காண்போர் –
  
# அண்டர் மகன் குறுவழுதி# அண்டர் மகன் குறுவழுதி
# 345 நெய்தல்# 345 நெய்தல்
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடும் தேர்அணிகலன்கள் அணிந்து இயங்கிவரும் கொடுஞ்சியையுடைய நெடிய தேரை
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇமலையைப் போன்ற நெடிய மணற்குவியலில் நிறுத்திவைத்து, இளைப்பாறித்
தங்கினிர் ஆயின் தவறோ தகையதங்கியிருந்தால் அது தவறோ? தகைமையுடையவரே!
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகலதழையுடை தாழ்ந்திருக்கும் அல்குலையுடைய இவளின் தனிமைத்துயரம் நீங்கும்படி
தாழை தைஇய தயங்கு திரை கொடும் கழிதாழை உடுத்திய அசைவாடும் அலைகளைக் கொண்ட வளைந்த கழி
இழுமென ஒலிக்கும் ஆங்கண்இழும்-என ஒலிக்கும் அவ்விடத்தில்
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரேகடலை வேலியாக உள்ள எமது சிறைய நல்ல ஊரில்
  
# வாயில் இளங்கண்ணன்# வாயில் இளங்கண்ணன்
# 346 குறிஞ்சி# 346 குறிஞ்சி
நாகு பிடி நயந்த முளை கோட்டு இளம் களிறுஇளமையான பெண்யானையை விரும்பிய முளைத்தெழும் கொம்புகளையுடைய இளம் ஆண்யானை
குன்றம் நண்ணி குறவர் ஆர்ப்பகுன்றத்தைச் சேர்ந்து, அங்குள்ள குறவர்கள் ஆரவாரிக்க
மன்றம் போழும் நாடன் தோழிஊரிலுள்ள பொதுமன்றத்தை ஊடுறுவிப்போகும் நாட்டினன், தோழி!
சுனை பூ குவளை தொடலை தந்தும்சுனையில் மலர்ந்த குவளைமலர் மாலையைத் தொடுத்துத்தந்தும்,
தினை புன மருங்கில் படு கிளி ஓப்பியும்தினைப்புனத்தின் பக்கத்தில் விழுகின்ற கிளிகளை ஓட்டியும்,
காலை வந்து மாலை பொழுதில்காலையில் வந்து, மாலைப் பொழுதில்
நல் அகம் நயந்து தான் உயங்கிநமது நல்ல மார்பினை விரும்பி, தான் வருந்தி
சொல்லவும் ஆகாது அஃகியோனேஅதனை நமக்குச் சொல்லவும் இயலாமல் மனம்குன்றினான்.
  
# காவிரி பூம் பட்டினத்து சேந்தன் கண்ணன்# காவிரி பூம் பட்டினத்து சேந்தன் கண்ணன்
# 347 பாலை# 347 பாலை
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல்நீர் பெருகும் சுனைகள் வற்றிப்போன வறண்ட பாலைநிலத்தின் தொடக்கத்தில்
குமரி வாகை கோல் உடை நறு வீஇளம் வாகைமரத்தின் காம்புடைய நறிய பூக்கள்
மட மா தோகை குடுமியின் தோன்றும்மடப்பத்தையுடைய பெரிய ஆண்மயிலின் உச்சிக்குடுமியைப் போல் தோன்றும்
கான நீள் இடை தானும் நம்மொடுகாடாகிய நீண்ட வெளியில் தானும் நம்மோடு
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்சேரும் முயங்குவதாகிய மணத்தைச் செய்வாள் இவள் எனின்
நன்றே நெஞ்சம் நயந்த நின் துணிவேநல்லது நெஞ்சமே! விரும்பிய உன் முடிவு.
  
# மாவளத்தன்# மாவளத்தன்
# 348 பாலை# 348 பாலை
தாமே செல்ப ஆயின் கானத்துதாம் மட்டுமே செல்வாராயின், காட்டினில்
புலம் தேர் யானை கோட்டு இடை ஒழிந்தமேய்புலத்தைத் தேடித்திரியும் யானையின் கொம்புகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட
சிறு வீ முல்லை கொம்பின் தாஅய்சிறிய பூக்களைக் கொண்ட முல்லைக் கிளையைப் போல் பரவி
இதழ் அழிந்து ஊறும் கண்பனி மதர் எழில்இமையின் விளிம்பைக் கடந்து ஊறுகின்ற கண்ணீர்த்துளி, மதர்த்த அழகினையுடைய
பூண் அக வன் முலை நனைத்தலும்பூண்களின் அகத்தே இருக்கும் அழகிய முலையை நனைக்கின்றதனையும்
காணார்-கொல்லோ மாண்_இழை நமரேபார்க்கமாட்டாரோ? சிறந்த அணிகலன்களை அணிந்தவளே! நம் தலைவர் –
  
# சாத்தன்# சாத்தன்
# 349 நெய்தல்# 349 நெய்தல்
அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்திஅடப்பங்கொடியின் அவிழ்ந்த அழகிய மலர் சிதையும்படி, மீனைத் தின்று
தடம் தாள் நாரை இருக்கும் எக்கர்வளைந்த காலையுடைய நாரைகள் இருக்கும் மணல்மேட்டையுடைய
தண்ணம் துறைவன் தொடுத்து நம் நலம்கடல்துறையையுடைய தலைவனைத் தொடர்ந்துசென்று நாம் இழந்த நமது பெண்மை நலத்தைப்
கொள்வாம் என்றி தோழி கொள்வாம்பெற்றுக்கொள்வோம் என்று கூறுகிறாய், தோழியே! அப்படியே கொள்வோம்,
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டியதமக்கு இன்னல் வருமே என்று அஞ்சி, கேட்பவர் வேண்டியவற்றைக்
கொடுத்து அவை தா என கூறலின்கொடுத்துவிட்டு, பின்னர் அவற்றைத் தா என்று கூறுவதனிலும்
இன்னாதோ நம் இன் உயிர் இழப்பேஇன்னாததோ நம் இனிய உயிரை இழத்தல்?
  
# ஆலந்தூர் கிழார்# ஆலந்தூர் கிழார்
# 350 பாலை# 350 பாலை
அம்ம வாழி தோழி முன் நின்றுவாழ்க! தோழியே! தலைவரின் முன்னே நின்று
பனி கடும்-குரையம் செல்லாதீம் எனகுளிரின் கடுமையினால் பாதிக்கப்பட்டோம், செல்லாதீர் என்று
சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோசொல்லியிருந்தால் சென்றிருப்பாரோ?
ஆற்று அயல் இருந்த இரும் கோட்டு அம் சிறைவழிக்குச் சற்று அப்பால் இருந்த பெரிய மரக்கிளைகளில் இருக்கும் அழகிய சிறகுகளையும்
நெடும் கால் கணந்துள் ஆள் அறிவுறீஇநெடிய கால்களையும் கொண்ட கணந்துள் பறவை, ஆறலைக்கள்வரின் இருப்பை அறிவித்து
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்வழிச்செல்லும் புதிய பயணிகள் கூட்டத்தை இடம் மாறச் செய்யும்
மலை உடை கானம் நீந்திமலைகளையுடைய பாலைநிலத்தைக் கடந்து
நிலையா பொருள்_பிணி பிரிந்திசினோரேநிலையாத பொருளை ஈட்டுவதற்காகப் பிரிந்துசென்றோர் –