ஐங்குறுநூறு 401-450

  
முல்லை     பேயனார்முல்லை     பேயனார்
  
# 41 செவிலி கூற்று பத்து# 41 செவிலி கூற்று பத்து
# 401# 401
மறி இடைப்படுத்த மான் பிணை போலகுட்டியினை நடுவில்போட்டுப் படுத்த ஆண்மானும், பெண்மானும் போல
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்தம் மகன் நடுவில் இருக்க, மிகவும்
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றிஇனிமையானது, உண்மையாகவே, அவர்கள் படுத்திருப்பது; இடைவெளியின்றி
நீல் நிற வியல்_அகம் கவைஇயநீல நிற வானம் சூழ்ந்த
ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தேஇந்த உலகத்திலும், மேலுகத்திலும் இத்தகைய காட்சியைப் பெறுதல் மிகவும் அரியது.
# 402# 402
புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கிபுதல்வனை அணைத்துக்கொண்டிருக்கும் தாயின் முதுகைத் தழுவிக்கொண்டு
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்ஆசையுள்ளவனாகப் படுத்திருந்த படுக்கைநிலை, பாணர்
நரம்பு உளர் முரற்கை போலயாழின் நரம்புகளை மீட்டும் இனிய இசையினைப் போல
இனிதால் அம்ம பண்பும்-மார் உடைத்தேஇனிமையானது, இதுதான் இல்லறத்தின் இயல்பும் ஆகும்.
  
# 403# 403
புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்தான் மணந்த காதலியின் மேல் மட்டுமல்லாது, தன்னுடைய புதல்வனிடத்தும்
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றேஅன்புகொண்ட உள்ளம், விரிந்து நிற்கிறது –
அகன் பெரும் சிறப்பின் தந்தை_பெயரன்மிகப் பெரிய சிறப்பினைக் கொண்ட தன் தந்தையின் பெயரைத் தாங்கியவன்
முறுவலின் இன் நகை பயிற்றிமுறுவலோடுங் கூடிய இனிய நகைப்பினை எழுப்பியவாறு
சிறு_தேர் உருட்டும் தளர் நடை கண்டேநடை வண்டியை உருட்டியபடியே வரும் தளர்ந்த நடையைக் கண்டு –
# 404# 404
வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்டஒளிபொருந்திய நெற்றியையுடைய தன் மனைவி மகனுக்கு முலைப்பால் ஊட்டிக்கொண்டிருக்கும்போது
தான் அவள் சிறுபுறம் கவையினன் நன்றும்தான் அவளின் முதுகினைத் தழுவுவான் – பெரிதும்
நறும் பூ தண் புறவு அணிந்தநறிய பூக்களை உடைய குளிர்ச்சியான முல்லைநிலப் பகுதிகளால் அழகுபெற்ற
குறும் பல் பொறைய நாடு கிழவோனேபலவான குறுமலைகளைக் கொண்ட நாட்டிற்கு உரிய தலைவன்.
  
# 405# 405
ஒண் சுடர் பாண்டில் செம் சுடர் போலஒளிவிடும் சுடரினைக் கொண்ட பாண்டில் விளக்கின் சிவந்த சுடரைப் போல
மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனை பெயல்வீட்டுக்கு விளக்காக இருக்கிறாள், மெய்யாகவே, பெரு மழையால்
பூ பல அணிந்த வைப்பின்பூக்கள் பலவற்றை அணிந்திருக்கும் ஊர்களால்
புறவு அணி நாடன் புதல்வன் தாயேமுல்லைநிலம் அழகுபெறும் நாட்டினனின் புதல்வனின் தாய் –
# 406# 406
மாதர் உண்கண் மகன் விளையாடபேரழகு பெற்ற மை தீட்டிய கண்களையுடைய மகன் விளையாடிக்கொண்டிருக்க,
காதலி தழீஇ இனிது இருந்தனனேதன் காதலியாகிய மனைவியைத் தழுவிக்கொண்டு இன்பமுடன் இருந்தான் –
தாது ஆர் பிரசம் ஊதும்பூந்தாதுக்களை ஆர உண்ணும் வண்டினங்கள் மொய்த்துக்கொண்டிருக்கும்
போது ஆர் புறவின் நாடு கிழவோனேமலர்கின்ற பருவத்துப் பூக்கள் நிறைந்த முல்லைக்காட்டினைக் கொண்ட நாட்டுக்கு உரியவன் –
  
# 407# 407
நயந்த காதலி தழீஇ பாணர்தான் விரும்பிய காதலியாகிய தன் மனைவியைத் தழுவிக்கொண்டு, பாணரின்
நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்துஇன்பந்தரும் இன்னிசைப்பண்ணால் இயற்றப்பட்ட பாடலின் சுவையை நன்குணர்ந்து
இன்புறு புணர்ச்சி நுகரும்இன்பந்தரும் காதற்சுகத்தை நுகருகின்றான் –
மென்_புல வைப்பின் நாடு கிழவோனேமென்மையாக ஆக்கப்பட்ட முல்லைநிலங்களைக் கொண்ட ஊர்களையுடைய நாட்டிற்கு உரியவன் –
# 408# 408
பாணர் முல்லை பாட சுடர் இழைபாணர்கள் முல்லைப் பண்ணை யாழில் வாசிக்க, ஒளிரும் அணிகலன்களைக் கொண்ட
வாள் நுதல் அரிவை முல்லை மலையஒளிபொருந்திய நெற்றியையுடைய மனைவி முல்லை மலரைச் சூடியிருக்க,
இனிது இருந்தனனே நெடுந்தகைஇனிமையாக இருந்தான் நெடுந்தகையாளன் –
துனி தீர் கொள்கை தன் புதல்வனொடு பொலிந்தேவெறுப்புணர்வு அற்ற பண்பினையுடைய தன் புதல்வனோடு பொலிவுபெற்று –
  
# 409# 409
புதல்வன் கவைஇயினன் தந்தை மென் மொழிபுதல்வனைச் சேர்ந்து தழுவினான் தந்தை; மென்மையான மொழியைக் கொண்ட
புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள்புதல்வனின் தாயோ அந்த இருவரையும் சேர்த்துத் தழுவிக்கொண்டாள்;
இனிது மன்ற அவர் கிடக்கைஇன்பமானது, மெய்யாகவே, அவர்கள் இருக்கும் இருப்பு,
நனி இரும் பரப்பின் இ உலகுடன் உறுமேமிகவும் பெரிய பரப்பினைக் கொண்ட இந்த உலகமே இக் காட்சிக்குப் பெறும்.
# 410# 410
மாலை முன்றில் குறும் கால் கட்டில்மாலைநேரத்தில், வீட்டு முற்றத்தில், குட்டையான கால்களையுடைய கட்டிலில்,
மனையோள் துணைவி ஆக புதல்வன்மனைவியானவள் பக்கத்தில் இருக்க, புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ் நகை இன்பமார்பினில் தவழும் மகிழ்ந்த சிரிப்பின் இன்பமான
பொழுதிற்கு ஒத்தன்று-மன்னேநேரத்திற்கு ஒப்பானது –
மென் பிணித்து அம்ம பாணனது யாழேமென்மையாக உள்ளத்தைப் பிணிக்கும் பாணனது யாழிசை –
  
# 42 கிழவன் பருவம் பாராட்டு பத்து# 42 கிழவன் பருவம் பாராட்டு பத்து
# 411# 411
ஆர் குரல் எழிலி அழி துளி சிதறிஆரவாரிக்கும் ஓசையுடன் மேகங்கள் மிகப்பெரும் மழையைப் பொழிய,
கார் தொடங்கின்றால் காமர் புறவேகார்காலம் தொடங்கிவிட்டது கண்ணைக்கவரும் முல்லைக் காடுகளில்,
வீழ்தரு புது புனல் ஆடுகம்பாய்ந்தோடி வரும் புதுவெள்ளத்தில் விளையாடலாம்,
தாழ் இரும் கூந்தல் வம்-மதி விரைந்தேநீண்டுதொங்கும் கரிய கூந்தலையுடையவளே! வா! விரைந்து!
# 412# 412
காயா கொன்றை நெய்தல் முல்லைகாயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போது அவிழ் தளவொடு பிடவு அலர்ந்து கவினிமொட்டுக்கள் மலரும் தளவம் ஆகியவற்றோடு, பிடவமும் மலர்ந்து அழகுபெற்று
பூ அணி கொண்டன்றால் புறவேபூக்களை அணிந்துகொண்டது போன்றிருக்கிறது முல்லைக்காடு,
பேர் அமர் கண்ணி ஆடுகம் விரைந்தேபெரிய செழுமையான கண்களையுடையவளே! பொழிலில் ஆடுவோம், வா, விரைவாக!
  
# 413# 413
நின் நுதல் நாறும் நறும் தண் புறவில்உன்னுடைய நெற்றியைப் போலவே மணங்கமழும் நறிய குளிர்ந்த முல்லைவெளியில்
நின்னே போல மஞ்ஞை ஆலஉன்னைப் போலவே மயில்கள் களித்தாட,
கார் தொடங்கின்றால் பொழுதேகார்காலம் தொடங்கிவிட்டது, குறித்த பொழுதில்,
பேர் இயல் அரிவை நாம் நய_தகவேபெரும் பண்புகளைக் கொண்ட அரிவையே! நாம் விரும்பத்தக்கவாறு –
# 414# 414
புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகளபறவைகளும் விலங்குகளும் ஒன்று சேர்ந்து இனிதாகக் குதித்து விளையாட,
கோட்டவும் கொடியவும் பூ பல பழுனிகொம்புகளிலும், கொடிகளிலும் பூக்கள் பல பூத்துக் குலுங்க,
மெல் இயல் அரிவை கண்டிகும்மென்மையான இயல்பினையுடைய அரிவையே, இதோ பார்!
மல்லல் ஆகிய மணம் கமழ் புறவேசெழிப்பே உருவாகி நிற்கும் சிறந்த மணங்கமழும் முல்லைநிலம் –
  
# 415# 415
இதுவே மடந்தை நாம் மேவிய பொழுதேஇதுதான், மடந்தையே! நாம் மிகவும் விரும்பிய பொழுது!
உதுவே மடந்தை நாம் உள்ளிய புறவேஇன்னும் சற்றுத் தள்ளியிருப்பது, மடந்தையே! நாம் நினைத்துக்கொண்டிருந்த முல்லைநிலம்!
இனிது உடன் கழிக்கின் இளமைஇன்பமாகச் சேர்ந்திருந்து கழித்தால், இளமை என்பது
இனிதால் அம்ம இனியவர் புணர்வேஇனிமையானதல்லவா! இனியவருடன் கூடிச் சேர்ந்திருப்பது!
# 416# 416
போது ஆர் நறும் துகள் கவினி புறவில்மலர்கின்ற பருவத்துப் பூக்களில் உள்ள நறிய பூந்துகள்களால் மேனி அழகுற்று, முல்லைக் காட்டினில்
தாது ஆர்ந்துதேனை மிகுதியும் உண்டு
களி சுரும்பு அரற்றும் காமர் புதலின்களிப்படைந்த சுரும்புகள் ஆரவாரிக்கும் அழகிய புதரோரத்தில்
மட பிடி தழீஇய மாவேஉன் இளைய பிடியைத் தழுவி இன்புற்ற களிறே!
சுடர் தொடி மடவரல் புணர்ந்தனம் யாமேஒளிவிடும் தோள்வளையைக் கொண்ட என் இளம் மனைவியைக் கூடிமகிழ்ந்தேன் நானும் –
  
# 417# 417
கார் கலந்தன்றால் புறவே பல உடன்கார் வந்து தழுவிக்கொண்டது முல்லைநிலத்தை; பலவாகச் சேர்ந்து
ஏர் பரந்தனவால் புனமே ஏர் கலந்துஏர்கள் பரந்து உழுகின்றன தினைப்புனங்களில்; அழகொழுக,
தாது ஆர் பிரசம் மொய்ப்பதேனுண்ணும் வண்டினம் மொய்க்க,
போது ஆர் கூந்தல் முயங்கினள் எம்மேமலர்கள் நிறைந்த கூந்தலினள் தழுவிக்கொண்டாள் என்னை.
# 418# 418
வானம்பாடி வறம் களைந்து ஆனாதுவானம்பாடியின் நாவறட்சியைக் களைந்து, ஓயாமல்
அழி துளி தலைஇய புறவின் காண்வரபெரும் மழை பெய்த முல்லைக்காட்டைப் போலக் கண்ணுக்கினியதாய்த் தோன்ற,
வான் அர_மகளோ நீயேவானுலக மங்கையோ நீ?
மாண் முலை அடைய முயங்கியோயேஉன் சிறந்த முலைகள் அழுந்துமாறு என்னைத் தழுவியவளே!
  
# 419# 419
உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மைஉயிரோடு உயிர் கலந்து ஒன்றிப்போன குற்றமற்ற அன்புறவால்
பிரிந்து உறல் அறியா விருந்து கவவிபிரிந்திருத்தலையே அறியாத புத்துணர்வுடன் தழுவிக்கொண்டு
நம் போல் நயவர புணர்ந்தனநம்மைப் போலவே ஆசையுடன் கூடிமகிழ்கின்றன –
கண்டிகும் மடவரல் புறவின் மாவேகாண்பாயாக, இளம்பெண்ணே! முல்லைக்காட்டு விலங்குகள்.
# 420# 420
பொன் என மலர்ந்த கொன்றை மணி எனபொன்னோ என்று கூறுமாறு மலர்ந்த கொன்றை, மணியோ என்னத்தக்கதாகத்
தேம் படு காயா மலர்ந்த தோன்றியொடுதேனைக் கொண்ட காயா, மலர்ந்து நிற்கும் தோன்றி ஆகியவற்றோடு
நன் நலம் எய்தினை புறவே நின்னைஅருமையான அழகைப் பெற்றிருக்கிறாய், முல்லைநிலமே! உன்னைக்
காணிய வருதும் யாமேகாண்பதற்கு வருகிறேன் நான் –
வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தேஒளிரும் நெற்றியையுடைய அரிவையோடு, அவளது அழகிய நலத்தை நுகர்வதை எண்ணி –
  
# 43 விரவு பத்து# 43 விரவு பத்து
# 421# 421
மாலை வெண் காழ் காவலர் வீசமாலை நேரத்தில் வெண்மையான வயிரம்பாய்ந்த குறுந்தடியைப் புனங்காவலர் ஓங்கி எறிய,
நறும் பூ புறவின் ஒடுங்கு முயல் இரியும்நறுமணமுள்ள பூக்களைக் கொண்ட முல்லைக்காட்டினில் பதுங்கியிருக்கும் முயல்கள் வெருண்டோடும்
புன்_புல நாடன் மட_மகள்புல்லிய நிலத்தையுடைய நாட்டினனின் இளைய மகளின்
நலம் கிளர் பணை தோள் விலங்கின செலவேஅழகு மிகுந்த பருத்த தோள்கள் தடுத்தன, வெளியூர்ப் பயணத்தை.
# 422# 422
கடும் பரி நெடும் தேர் கால் வல் புரவிவிரைந்த ஓட்டத்தையுடைய, நெடிய தேரில் பூட்டப்பட்ட, கால்கள் வலிதான குதிரையை,
நெடும் கொடி முல்லையொடு தளவ மலர் உதிரநீண்ட கொடியையுடைய முல்லையுடன் தளவ மலர்களும் உதிர்ந்து விழுமாறு
விரையுபு கடைஇ நாம் செல்லின்வேகமாகச் செலுத்தி நாம் சென்றால்,
நிரை வளை முன்கை வருந்தலோ இலளேவரிசையாக அடுக்கப்பட்ட வளையல்களையுடைய முன்னங்கையையுடையவள் வருத்தம் தீர்வாள்.
  
# 423# 423
மா மழை இடியூஉ தளி சொரிந்தன்றேகரிய மேகங்கள் இடிஇடித்து மழையைப் பொழிகின்றன,
வாள் நுதல் பசப்ப செலவு அயர்ந்தனையேஒளிவிடும் நெற்றி பசந்துபோகுமாறு பயணத்தை மேற்கொண்டாய்,
யாமே நின் துறந்து அமையலம்நானோ, உன்னைப் பிரிந்து இருக்கமாட்டேன்,
ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவேஅழகிய மலர்போன்ற மையுண்டகண்களும் கண்ணீரினால் நிறைந்தனவே!
# 424# 424
புறவு அணி நாடன் காதல் மட_மகள்முல்லைநிலம் அழகுடன் தோன்றும் நாட்டினனின் அன்புக்குரிய இளைய மகளின்
ஒண் நுதல் பசப்ப நீ செலின் தெண் நீர்ஒளிவிடும் நெற்றி பசந்துபோகும்படி, நீ வெளியூர் சென்றால், தெளிந்த நீரிலுள்ள
போது அவிழ் தாமரை அன்ன நின்மொட்டாய் இருந்து மலர்கின்ற தாமரையைப் போன்ற உன்
காதலன் புதல்வன் அழும் இனி முலைக்கேஅன்புக்குரியவனான புதல்வன் அழுவான் இனிமேல் – தாய்முலைப் பாலுக்கு.
  
# 425# 425
புன் புற பேடை சேவல் இன்புறபுன்மையான முதுகைக் கொண்ட பெட்டைக் கோழி, தன் சேவல் தன்னைக் கூடி இன்பம்கொள்ள,
மன்னர் இயவரின் இரங்கும் கானம்அரசர்களின் வாத்தியக்காரர்களைப் போல் களிப்புடன் ஒலியெழுப்பும் காட்டினூடே
வல்லை நெடும் தேர் கடவின்விரைவாக நெடிய தேரைச் செலுத்தினால்
அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதேதலைவியின் அல்லலுக்குக் காரணமான அரிய நோயைத் தீர்த்தல் எமக்கு எளிதானதே!
# 426# 426
வென் வேல் வேந்தன் அரும் தொழில் துறந்து இனி– வெற்றிதரும் வேலினையுடைய வேந்தன், தன் அரிய தொழிலைத் தவிர்ந்தான், இனி,
நன்_நுதல் யானே செலவு ஒழிந்தனனேநல்ல நெற்றியையுடையவளே! நானும் பயணத்தைக் கைவிட்டுவிட்டேன்;
முரசு பாடு அதிர ஏவிமுரசுகளின் பேரொலி அதிரும்படியாகப் படைகளைச் செலுத்தி
அரசு பட கடக்கும் அரும் சமத்தானேபகையரசர் மாண்டொழிய அவரை வெற்றிகொள்ளும் அரிய போர்க்களத்தின் –
  
# 427# 427
பேர் அமர் மலர் கண் மடந்தை நீயேபெரிதாக என்னுடன் மாறுபட்டு நிற்கும் மலர்போன்ற கண்களையுடைய மடந்தையே! நீயும்
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயேகார்ப்பருவம் வருகின்ற காலம் என்று என்னைப் போக விடுவதற்கு உடன்படமாட்டாய்!
போர் உடை வேந்தன் பாசறைபோரைத் தொடங்கிய வேந்தனும், போர்ப்பாசறைக்கு
வாரான் அவன் என செலவு அழுங்கினனேவரமாட்டான் அவன் என்று போர்ப்பயணத்தைக் கைவிட்டுவிட்டான்.
# 428# 428
தேர் செலவு அழுங்க திருவில் கோலிதேரில் செல்லுதல் தவிர்க்கப்படவேண்டிய அளவுக்கு வானவில் வளைவாகத் தோன்றி
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றேபெருத்த முழக்கத்துடன் மேகங்கள் மழையைச் சொரியத்தொடங்கிவிட்டன;
வேந்து விடு விழு தொழில் ஒழியவேந்தன் எனக்குப் பணித்த விழுமிய போர்த்தொழில் கைவிடப்பட,
யான் தொடங்கினனால் நின் புறந்தரவேநான் தொடங்கிவிட்டேன் உன்னைப் பேணிப்பதுகாப்பதை.
  
# 429# 429
பல் இரும் கூந்தல் பசப்பு நீ விடின்பலவான கரிய கூந்தலையுடையவளே! பிரிவால் பசந்துபோவதை நீ நிறுத்திக்கொண்டால் மட்டுமே
செல்வேம் தில்ல யாமே செற்றார்செல்கிறேன் நான்; பகைவரின்
வெல் கொடி அரணம் முருக்கியவெற்றிகுறித்து எழுப்பிய கொடிகளையுடைய கோட்டையை அழிக்கும்,
கல்லா யானை வேந்து பகை வெலற்கேபோரையன்றி வேறொன்றைக் கல்லாத யானைப்படையையுள்ள நம் வேந்தனின் பகைவரை வெல்வதற்கு –
# 430# 430
நெடும் பொறை மிசைய குறும் கால் கொன்றைநெடிய குன்றுகளின் மேலுள்ள குட்டையான அடிமரத்தையுடைய கொன்றையின்
அடர் பொன் என்ன சுடர் இதழ் பகரும்தட்டிய பொன் என்னுமாறு ஒளிரும் இதழ்கள் பிரகாசிக்கும்
கான் கெழு நாடன் மகளேகாட்டினைப் பொருந்திய நாட்டினனின் மகளே!
அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவேஅழுவதை நிறுத்திக்கொள், தவிர்த்துவிட்டேன் பயணத்தை.
  
# 44 புறவணி பத்து# 44 புறவணி பத்து
# 431# 431
நன்றே காதலர் சென்ற ஆறேநலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
அணி நிற இரும் பொறை மீமிசைஅழகிய நிறம்பெற்ற பெரிய மலை, தன்னுச்சியில்
மணி நிற உருவின தோகையும் உடைத்தேநீலமணி போன்ற தோற்றத்தையுடைய மயில்களையும் கொண்டுள்ளது.
# 432# 432
நன்றே காதலர் சென்ற ஆறேநலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
சுடு பொன் அன்ன கொன்றை சூடிநெருப்பில் சுட்ட பொன்னைப் போன்று ஒளிவிடும் கொன்றை மலர்களை அணிந்துகொண்டு
கடி புகுவனர் போல் மள்ளரும் உடைத்தேதிருமண வீட்டில் நுழைபவரைப் போன்ற மள்ளரையும் கொண்டுள்ளது.
  
# 433# 433
நன்றே காதலர் சென்ற ஆறேநலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
நீர் பட எழிலி வீசும்நீர்வளம் சிறக்க, மேகங்கள் வாரிவழங்கும்
கார் பெயற்கு எதிரிய கானமும் உடைத்தேகார்கால மழையை எதிர்கொள்ளும் கானத்தையும் கொண்டுள்ளது.
# 434# 434
நன்றே காதலர் சென்ற ஆறேநலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
மறி உடை மான் பிணை உகளகுட்டியையுடைய பெண்மான்கள் குதித்து விளையாட,
தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தேகுளிர்ச்சியான மழை பொழிந்த இன்பத்தையும் கொண்டுள்ளது.
  
# 435# 435
நன்றே காதலர் சென்ற ஆறேநலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
நிலன் அணி நெய்தல் மலரநிலத்தை அழகுசெய்யும் நெய்தல்பூக்கள் மலர,
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தேபொன்னைப்போல் அழகிய கொன்றையையும் பிடவத்தையும் கொண்டுள்ளது.
# 436# 436
நன்றே காதலர் சென்ற ஆறேநலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
நன் பொன் அன்ன சுடர் இணர்நல்ல பொன்னைப் போன்ற ஒளிவிடும் பூங்கொத்துகளையுடைய
கொன்றையொடு மலர்ந்த குருந்தும்-மார் உடைத்தேகொன்றையோடு மலர்ந்த குருந்த மரங்களையும் கொண்டுள்ளது.
  
# 437# 437
நன்றே காதலர் சென்ற ஆறேநலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
ஆலி தண் மழை தலைஇயஆலங்கட்டிகளோடும் கூடிய குளிர்ச்சியான மழை பெய்தலால்,
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தேவெண்மையாக மலர்ந்த முல்லையையும் கொண்டுள்ளது.
# 438# 438
நன்றே காதலர் சென்ற ஆறேநலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
பைம் புதல் பல் பூ மலரபச்சையான புதர்களில் பலவிதப் பூக்கள் மலர,
இன்புற தகுந பண்பும்-மார் உடைத்தேஇன்புறத் தகுந்த இயல்பினையும் கொண்டுள்ளது.
  
# 439# 439
நன்றே காதலர் சென்ற ஆறேநலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
குருந்த கண்ணி கோவலர்குருந்தம் பூக்களைத் தலைமாலையாகச் சூடிய கோவலர்களின்
பெரும் தண் நிலைய பாக்கமும் உடைத்தேமிக்க குளிர்ச்சி நிலைபெற்ற குடியிருப்புகளையும் கொண்டுள்ளது.
# 440# 440
நன்றே காதலர் சென்ற ஆறேநலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
தண் பெயல் அளித்த பொழுதின்குளிர்ந்த மழையை உலகுக்கு அருளிய கார்காலத்தின்
ஒண் சுடர் தோன்றியும் தளவமும் உடைத்தேஒளிரும் சுடர் போன்ற தோன்றிப்பூக்களையும், தளவ மலர்களையும் கொண்டுள்ளது.
  
# 45 பாசறை பத்து# 45 பாசறை பத்து
# 441# 441
ஐய ஆயின செய்யோள் கிளவிவியப்புடையவாயின, செம்மைப்பண்புடையோளின் தூதுமொழிகள்!
கார் நாள் உருமொடு கையற பிரிந்து எனஇந்தக் கார்காலத்து இடிமுழக்கத்தில், தன்னைச் செயலற்றுப்போக பிரிந்திருப்பதாகக் கூறியது
நோய் நன்கு செய்தன எமக்கேமிகுந்த துன்பத்தைச் செய்தன எனக்கு;
யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றேநான் படும் வேதனையை அவள் அறிந்தால் மிகவும் நல்லது.
# 442# 442
பெரும் சின வேந்தன் அரும் தொழில் தணியின்மிக்க சினத்தையுடைய வேந்தன் தன் அரிய போர்த்தொழிலினை முடித்துக்கொண்டால்
விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோமிகப்பெரிய விருந்தினைப் பெறுவதற்குரியவள் ஆவாள் –
இருண்டு தோன்று விசும்பின் உயர் நிலை உலகத்துகார்கால மேகங்களால் இருண்டு தோன்றும் வானத்திற்கும் உயரே உள்ள உலகத்து
அருந்ததி அனைய கற்பின்அருந்ததியைப் போன்ற கற்பினையுடைய,
குரும்பை மணி பூண் புதல்வன் தாயேகுரும்பை போன்ற மணிகளாலான பூணினை அணிந்திருக்கும் புதல்வனின் தாய்.
  
# 443# 443
நனி சேய்த்து என்னாது நல் தேர் ஏறி சென்றுமிகவும் தொலைவில் உள்ளது என்ற தயக்கம் இல்லாமல், நல்ல தேரில் ஏறிச் சென்று
இலங்கு நிலவின் இளம் பிறை போலஒளிவிடும் நிலவின் இளைய பிறையைப் போல –
காண்குவெம் தில்ல அவள் கவின் பெறு சுடர் நுதல்காண்பேனே, அவளின் அழகுபெற்ற ஒளிவிடும் நெற்றியை;
விண் உயர் அரண் பல வௌவியவானளாவிய அரண்கள் பலவற்றைக் கைப்பற்றிய,
மண்_உறு முரசின் வேந்து தொழில் விடினேகழுவிப்பூசிக்கப்பட்ட முரசையுடைய வேந்தன் தனது போரைக் கைவிட்டால்.
# 444# 444
பெரும் தோள் மடவரல் காண்குவெம் தில்லபெரிய தோள்களையுடைய பேதையான காதலியைக் காண்பேன் –
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்துநெடிய மதில்களையுடைய அரணைத் தாக்கியதால் கொம்பில் இறுக்கிய வளையம் பிளந்துபோக,
வை நுதி மழுகிய தடம் கோட்டு யானைகூர்மையான நுனியும் மழுங்கிவிட்ட பெரிய கொம்பினைக் கொண்ட யானைப்படையையுடைய
வென் வேல் வேந்தன் பகை தணிந்துவெற்றிதரும் வேலினையுடைய வேந்தன் தன் பகையுணர்வு தணிந்து
இன்னும் தன் நாட்டு முன்னுதல் பெறினேஇப்பொழுதேனும் தன் நாட்டுக்கு புறப்பட எண்ணுவதை நாம் பெற்றால் –
  
# 445# 445
புகழ் சால் சிறப்பின் காதலி புலம்பபுகழ் நிறைந்த சிறப்பினையுடைய மனைவி தனித்து வருந்த,
துறந்து வந்தனையே அரும் தொழில் கட்டூர்அவளை விட்டுவிட்டு வந்தாயே, இந்த அரிய போருக்கான பாசறைக்கு –
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலைநல்ல காளையைத் தழுவிக்கொண்டு இளம்பசுக்கள் வீடுதிரும்பும் நேரத்தில்,
உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சம்நினைக்குந்தோறும் கலங்குகின்ற நெஞ்சமே!
வல்லே எம்மையும் வர இழைத்தனையேவிரைந்து என்னையும் இங்கு வருமாறு செய்துவிட்டாயே!
# 446# 446
முல்லை நாறும் கூந்தல் கமழ் கொளமுல்லை மணக்கும் கூந்தல் மேலும் மணங்கமழ,
நல்ல காண்குவம் மாஅயோயேநல்ல இன்பங்களைக் காண்போம், மாநிறத்தவளே!
பாசறை அரும் தொழில் உதவி நம்பாசறையில் தங்கிச் செய்யும் அரிய போர்த்தொழிலில் மன்னனுக்கு உதவிவிட்டு, நம்
காதல் நன் நாட்டு போதரும் பொழுதேஅன்புக்குரிய நல்ல நாட்டுக்கு நான் திரும்பும் பொழுது.
  
# 447# 447
பிணி வீடு பெறுக மன்னவன் தொழிலேபிணிப்பிலிருந்து விடுதலை பெறுக, மன்னவனின் போர்த்தொழில்!
பனி வளர் தளவின் சிரல் வாய் செம் முகைபனியினால் வளரும் செம்முல்லையின் மீன்கொத்தியின் மூக்கு போன்ற சிவந்த அரும்புகளைச்
ஆடு சிறை வண்டு அவிழ்ப்பசிறகடிக்கும் வண்டுகள் மலரச்செய்ய
பாடு சான்ற காண்கம் வாள்_நுதலேமுன்னினும் அழகு பெற்றன; காண்பேன் ஒளிபெற்ற நெற்றியையுடையவளை.
# 448# 448
தழங்கு குரல் முரசம் காலை இயம்பமுழங்குகின்ற குரலில் முரசம் காலையில் ஒலிக்க,
கடும் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனேகடும் சினத்தையுடைய வேந்தன் போரை எதிர்கொண்டான்;
மெல் அவல் மருங்கின் முல்லை பூப்பஆழமற்ற பள்ளங்களின் பக்கத்தில் முல்லை பூத்திருக்க,
பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்றேபொங்கி எழுந்த மழையின் மிகுந்த துளிகளைக் கார்காலம் எதிர்கொண்டது;
அம்_சில்_ஓதியை உள்ளு-தொறும்அழகிய சிலவான கூந்தலையுடையவளை நினைக்கும்போதெல்லாம்
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமேதூங்காமல் வருந்துவதை நான் எதிர்கொள்கிறேன்.
  
# 449# 449
முரம்பு கண் உடைய திரியும் திகிரியொடுசரளைக் கற்கள் நிரம்பிய மேட்டுநிலம் பிளக்குமாறு இயங்கும் சக்கரங்களோடு,
பணை நிலை முணைஇய வய_மா புணர்ந்துகொட்டகையில் நிற்பதை வெறுத்த வலிய குதிரைகள் பூட்டப்பெற்று,
திண்ணிதின் மாண்டன்று தேரேதிண்மையாக ஆயத்தமாக்கப்பட்டுள்ளது தேர்;
ஒண்_நுதல் காண்குவம் வேந்து வினை முடினேஒளிவிடும் நெற்றியையுடையவளைக் காணலாம், வேந்தன் தன் போரை முடித்துக்கொண்டால்.
# 450# 450
முரசு மாறு இரட்டும் அரும் தொழில் பகை தணிந்துமுரசுகள் மாறி மாறி ஒலிக்கும் அரிய போர்த்தொழிலுக்கான பகைமை தணிந்து
நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன்நாட்டுக்குத் திரும்ப எண்ணிவிட்டான் பெருமை பொருந்திய வேந்தன்;
வெய்ய உயிர்க்கும் நோய் தணியவெப்பமாகப் பெருமூச்செறிக்கும் பிரிவுநோய் தணியும்படியாக
செய்யோள் இள முலை படீஇயர் என் கண்ணேசெவ்விய பண்புடையாளின் இளமையான முலைகளுக்கிடையே படுத்துத்தூங்கட்டும் என் கண்கள்.