ப – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பஃறி
பஃறுளி
பஃறேர்
பக்கு
பகடு
பகர்
பகர்நர்
பகர்பவர்
பகர்வர்
பகர்வு
பகல்
பகல்கெழுசெல்வன்
பகலோன்
பகழி
பகற்குறி
பகன்றை
பகார்
பகு
பகுத்தூண்
பகை
பங்கம்
பங்கு
பங்குனி
பச்சிலை
பச்சிறா
பச்சூன்
பச்சை
பச
பசப்பு
பசலை
பசிப்பிணிமருத்துவன்
பசு
பசும்
பசும்கண்கடவுள்
பசும்பாம்பு
பசும்பிடி
பசுமபொன்
பசுமஞ்சள்
பசை
பஞ்சவர்
பஞ்சவன்
பஞ்சாய்
பஞ்சி
பஞ்சுரம்
பட்டம்
பட்டி
பட்டினம்
படப்பு
படப்பை
படம்
படர்
படர்தரு(தல்)
படல்
படலம்
படலை
படாகை
படாம்
படாமை
படார்
படி
படிக்கால்
படிமகன்
படிமம்
படிமை
படியோர்
படிவம்
படிவு
படிறு
படின்
படீஇ
படீஇய
படீஇயர்
படு
படுகர்
படுநர்
படுமலை
படூஉம்
படை
படைஞர்
படைப்பு
பண்
பண்டம்
பண்டரங்கம்
பண்டாரம்
பண்டு
பண்டை
பண்ணன்
பண்ணியம்
பண்ணு
பண்ணுந
பண்ணை
பணவை
பணி
பணிபு
பணியம்
பணிலம்
பணீஇயர்
பணை
பணையம்
பத்தர்
பத்தல்
பதடி
பதணம்
பதப்பர்
பதம்
பதலை
பதவு
பதன்
பதாகை
பதி
பதிபழகு
பதிவதம்
பதிற்று
பதின்மர்
பதுக்கு
பதுக்கை
பதுமம்
பதை
பதைப்பு
பதைபதைப்பு
பந்தர்
பம்பு
பம்பை
பய
பயந்தோள்
பயப்பு
பயம்
பயம்பு
பயலை
பயறு
பயிர்
பயிர்ப்பு
பயில்
பயில்வுறு
பயிற்று
பயின்
பயினி
பர
பரங்குன்றம்
பரடு
பரணன்
பரத்தமை
பரத்தரு(தல்)
பரத்தன்
பரத்தை
பரத்தைமை
பரதர்
பரதவர்
பரப்பு
பரம்
பரல்
பரவல்
பரவு
பரவை
பராஅம்
பராஅய்
பராரை
பராவு
பரி
பரிமா
பரிகாரம்
பரிசம்
பரிசில்
பரிசிலர்
பரிசு
பரிதி
பரிப்பு
பரியரை
பரியல்
பரியூஉ
பரிவு
பரிவேட்பு
பரீஇ
பருதி
பருதிஅம்செல்வன்
பருந்து
பருமம்
பருவரல்
பருவரு(தல்)
பருவூர்
பரூஉ
பரேர்
பரைஇ
பல்
பல்கதிர்ச்செல்வன்
பல்கால்பறவை
பல்கு
பல்சாலைமுதுகுடுமி
பல்லவம்
பல்லவர்
பல்லான்குன்று
பல்லியம்
பலகை
பலம்
பலவு
பலாசம்
பலி
பவ்வம்
பவத்திரி
பவர்
பவழம்
பவளம்
பழங்கண்
பழம்
பழம்படு(தல்)
பழமொழி
பழன்
பழனம்
பழிச்சு
பழு
பழுது
பழுதுளி
பழுநு
பழுப்பு
பழுனு
பழூஉ
பழையர்
பழையன்
பழையன்மாறன்
பழையோள்
பள்ளி
பள்ளிகொள்(ளல்)
பள்ளிபுகு(தல்)
பளிங்கம்
பளிங்கு
பளிதம்
பறந்தலை
பறம்பு
பறழ்
பறி
பறிமுறை
பறை
பறையன்
பன்மை
பன்னல்
பன்னு
பனம்
பனி
பனிச்சை
பனிப்பு
பனிற்று
பனுவல்
பனைக்கொடியோன்
பனைமீன்
பனையம்

பஃறி

(பெ) படகு, boat

வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல் வாய் பஃறி
பணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும்
கழி சூழ் படப்பை – பட் 29-32

வெள்ளை(வெளேர் என்ற) உப்பின் விலையைச் சொல்லி(விற்று, அதற்கு மாற்றாக வாங்கிய)
நெல்லைக் கொண்டுவந்த, கெட்டியான விளிம்புகளையுடைய படகுகளை
கொட்டில் பந்தியில் நிறுத்தப்படும் குதிரைகளை(க் கட்டிவைப்பதை)ப் போன்று — கட்டுத்தறிகளில் கட்டிவைக்கும்
உப்பங்கழி சூழ்ந்த ஊர்ப்புறங்களையும்

மேல்


பஃறுளி

(பெ) குமரியாற்றின் தெற்கேயிருந்து கடலால் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒரு யாறு.
An ancient river south of the river Kumari, said to have been swallowed by sea;
இதனை, பல் + துளி எனப் பிரிப்பர்.

எம் கோ வாழிய குடுமி தம் கோ
செம் நீர் பசும்_பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன் நீர் பஃறுளி மணலினும் பலவே – புறம் 9/8-11

எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக, தம்முடைய கோவாகிய
சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னைக் குத்தர்க்கு வழங்கிய
முந்நீர்க் கடல்தெய்வத்திற்கு எடுத்த விழாவிஐயுடைய நெடியோனால் உளதாக்கப்பட்ட
நல்ல நீரையுடைய பஃறுளி என்னும் ஆற்றின் மணலினும் பலகாலம்.

மேல்


பஃறேர்

(பெ) பல் + தேர், பல தேர்கள், many chariots

உருள் நடை பஃறேர் ஒன்னார் கொன்ற தன்
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும் – புறம் 361/9,10

உருண்டுசெல்லும் தேர்கள் பலவற்றை, பகைவரைக் கொன்ற தன்
தாளாண்மையைப் பாராட்டிப் பாடும் புலவர்க்கு உவந்து அளித்தும்

மேல்


பக்கு

(பெ) பை, bag

அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் – ஐங் 271/1,2

அவரையை நிறையத் தின்ற குரங்கு, பொருள்களின் விலைகூறி விற்பவரின்
பையைப் போன்று தோன்றும்

மேல்


பகடு

(பெ) 1. காளை, எருது, bull, Ox
2. பெரியது, largeness, hugeness
3. ஆண் யானை, male elephant
4. வலிமை, strength, might

1

உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 125/7

உழுத வலிய காளை, பின் வைக்கோலைத் தின்னாற்போல

2

பகட்டு எருத்தின் பல சாலை – பட் 52

பெரிய எருதுகளுக்கான (அவற்றிற்கு வைக்கோல் இடும்)பல சாலைகளையும்,

3

உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு
ஒளி திகழ் ஓடை பொலிய – புறம் 161/17,18

உயர்ந்த கொம்பினை ஏந்திய மலையைப்போன்ற வலிய களிற்றை
ஒளி விளங்கும் நெற்றிப்பட்டம் பொலிய

4

ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன்
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் – புறம் 88/3,4

பாடம் செய்யும் விளங்கிய நெடிய வேலையுடைய இளையோர்க்குத் தலைவனாகிய
சுடர்விடுகின்ற நுண்ணிய தொழிலையுடைய பூண் அணிந்த அழகிய வலிய மார்பினையும்

மேல்


பகர்

(வி) 1. சொல், கூறு, அறிவி,
2. விற்பனை செய், sell, hawk
3. கொடு, give
4. உணர்த்து, சுட்டு, indicate
5. இடம்பெயர், shift, move

1

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து
தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து – கலி 1/1,2

ஆறு அங்கங்களையும் அறிந்த அந்தணர்களுக்கு அரிய வேதங்கள் பலவற்றையும் அறிவித்து,
தெளிந்த நீரைக்கொண்ட கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி,

2

பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன – மலை 413

(பண்டங்களை)விற்றுப் (பண்டமாற்றாகப்)பெற்ற கலப்பு நெல்லின் பலவாறான அரிசியைப் போல,

3

பரி உடை நன் மான் பொங்கு உளை அன்ன
அடைகரை வேழம் வெண் பூ பகரும்
தண் துறை ஊரன் பெண்டிர்
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே – ஐங் 13

விரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரையின் பொசுபொசுவென்ற தலையாட்டம் போன்ற
திண்ணிய கரையில் வளர்ந்திருக்கும் கொறுக்கச்சியின் வெண்மையான பூக்களைக் கொடுக்கும்
குளிர்ந்த துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் காதற்பெண்டிர்
ஊரே தூங்கும் நள்ளிரவிலும் தூக்கத்தை அறியாதிருப்பர்.

4

குருகு இலை உதிர குயில்_இனம் கூவ
பகர் குழல் பாண்டில் இயம்ப – பரி 15/41,42

குருக்கத்தி இலைகள் உதிரும்வண்ணம் குயில் கூட்டங்கள் கூவ,
சுருதியை உணர்த்துகின்ற குழலும் தாளமும் ஒலியெழுப்பும்போது

5

குறும் பல் கோதை கொன்றை மலர
நெடும் செம் புற்றம் ஈயல் பகர
மா பசி மறுப்ப கார் தொடங்கின்றே – ஐங் 497/1-3

குறிய பலவான மாலையாய்க் கொன்றை மலர்ந்திருக்க,
நெடிய செந்நிறப் புற்றுகளினின்றும் ஈசல்கள் வெளிப்பட,
விலங்கினங்கள் தம் பசியை மறக்க, கார்காலம் தொடங்கிவிட்டது

மேல்


பகர்நர்

(பெ) விற்பனை செய்பவர், seller

இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு
ஒலி ஓவா கலி – மது 117,118

பெரிய கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு,
முழங்குதல் ஓயாத முழக்கத்தோடே

மேல்


பகர்பவர்

(பெ) விற்பனைசெய்பவர், seller

வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் – கலி 66/1

பெருகுகின்ற நீரில் மலர்ந்த குவளை மலரை விற்பவர்,

மேல்


பகர்வர்

(பெ) விற்பனைசெய்பவர், seller

அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின் – ஐங் 271/1,2

அவரையை நிறையத் தின்ற குரங்கு, பொருள்களின் விலைகூறி விற்பவரின்
பையைப் போன்று தோன்றும்

மேல்


பகர்வு

(பெ) கொடுத்தல், giving

துணரியது கொளா ஆகி பழம் ஊழ்த்து
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ் – புறம் 381/8,9

குலைகுலையாகப் பூத்துளதாயினும் எவ்வுயிர்களாலும் கொள்ளப்படாவாய்ப் பழுத்துக் கனிந்து
பயன் கொடுத்தலை அறியாத முட்கள் கலந்த கொடிகள்பின்னிக்கிடக்கும் புதரிடையே நின்று வற்றும் முதிய
பாழிடத்தில்

மேல்


பகல்

(பெ) 1. காலைமுதல் மாலைவரையுள்ள காலம், day time
2. பகுத்தல், dividing, separating
3. நுகத்தாணி, Middle or main peg in a yoke
4. ஊழிக்காலம், the day of destruction of the universe;
5. இளவெயில், morning sunlight

1

மடவரல் மகளிரொடு பகல் விளையாடி – பெரும் 387

மடப்பம் தோற்றுதலையுடைய மகளிரோடு பகற்பொழுது விளையாடி;

2

கடவுள் வழங்கும் கையறு கங்குலும்
அச்சம் அறியாது ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகல் உற கழிப்பி – மது 651-653

தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும்,
அச்சத்தை அறியாமல் காவலையுடைய
முந்திய யாமத்தை (அடுத்துவந்த நடு யாமத்தினின்றும்)பகுத்தல் உண்டாகப் போக்கி,

3

கொடு மேழி நசை உழவர்
நெடு நுகத்து பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்நெடு நுகத்து பகல் போல – பட் 205-207

வளைந்த மேழி(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும்
நீண்ட நுகத்தடியில் (தைத்த) பகலாணி போல,
நடுவுநிலையென்னும் குணம் நிலைபெற்ற நல்ல நெஞ்சினையுடையோர்

4

துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை – பதி 72/8

எல்லா உயிர்களும் இறக்கின்ற ஊழிக்காலம் நுழைகின்ற போதில்

5

சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள்
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் – பரி 11/95,96

சாய்ந்து குழைந்த அசோகின் தளிரைத் தன் காதில் செருகியிருந்தவள், (அந்த அசோகந்தளிரின் செம்மையால்)
ஒளிபாயும் குழையையுடையவள் அணிந்திருந்த நீலமலர் இளவெயில் படர்ந்தது போன்று ஆகும்படி
சூடிக்கொண்டாள்,

மேல்


பகல்கெழுசெல்வன்

(பெ) சூரியன், sun

பகல்கெழுசெல்வன் குட மலை மறைய – நற் 215/2

பகல்பொழுதைச் செய்த ஞாயிறு மேற்குமலையில் மறைய,

மேல்


பகலோன்

(பெ) சூரியன், sun

பகலோன் மறைந்த அந்தி ஆரிடை – அகம் 201/8

ஞாயிறு மறைந்த அந்தியாகிய அரிய போழ்திலே

மேல்


பகழி

(பெ) அம்பு, arrow

கொடு வில் எயினர் பகழி மாய்க்கும் – குறு 12/3

வளைந்த வில்லையுடைய எயினர் தம் அம்புகளைத் தீட்டும்

மேல்


பகற்குறி

(பெ) களவொழுக்கத்தில் பகலில் தலைவனும் தலைவியும் சந்திக்கக் குறிப்பிட்ட இடம்.
Place assigned by lovers for clandestine meetings during day-time;

பல் பூ கானல் பகற்குறி வந்து நம்
மெய் கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும் – நற் 235/4,5

பலவான பூக்கள் உள்ள கடற்கரைச் சோலையே பகலில்சந்திக்கும் இடமாக வந்து, நமது
உடம்பின் அழகைச் சிதைத்துவிட்டுச் சென்றானாயினும்

மேல்


பகன்றை

(பெ) ஒரு கொடி வகை, அதன் மலர், indian jalap, Ipomaea turpethum

1. இது படரும் தன்மையது எனப்படுவதால், இது ஒரு கொடி வகை எனப் பெறப்படும்.

வறள் அடும்பின் இவர் பகன்றை – பொரு 195

நீரற்ற இடத்தில் எழுந்த அடும்பினையும், படர்கின்ற பகன்றையினையும்,

2.இது வயலில் காணப்படும் என்பதால் இது ஒரு நீர்த்தாவரமாகும்.

ஒலிந்த பகன்றை விளைந்த கழனி – மது 261

தழைத்த பகன்றையின் (நெல்)முற்றிய வயல்களில்

3.இதனை மகளிர் மாலையாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர்

பகன்றை கண்ணி பழையர் மகளிர் – மலை 459

பகன்றைப்பூ மாலை(சூடிய) கள்விற்கும் பழையர்வீட்டுப் பெண்கள்,

4.இது வட்டவடிவமாக இருக்கும்.

பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் – நற் 86/3

பாண்டில் போன்று வட்டமான, பகன்றை மலர்கின்ற

பகல் மதி உருவின் பகன்றை மா மலர் – ஐங் 456/2

பகலில் காணப்படும் மதியின் தோற்றத்தில் உள்ள பகன்றையின் பெரிய மலர்கள்

5.இது முன்பனிக்காலத்தில் மலரும்.

பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம் – நற் 86/3,4

பாண்டில் போன்று வெள்ளை வட்டமான, பகன்றை மலர்கின்ற
கடுமையான பனியையுடைய முன்பனிக்காலத்தில்

6. இதன் இலை பெரியது, இதன் மலர் பொதியை அவிழ்த்தது போன்று இருக்கும்.
மேலும் இதன் மலர் வெண்மையாக இருக்கும்.

பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ – குறு 330/4

பெரிய இலையைக் கொண்ட பகன்றையின் கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள்

7.இதன் பூ குறைந்த அளவு மணத்தைக் கொண்டு கள் போல் மணக்கும்.

பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ
இன் கடும் கள்ளின் மணம் இல கமழும் – குறு 330/4,5

பெரிய இலையைக் கொண்ட பகன்றையின் கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள்
இனிமையும், கடுப்பையும் உடைய கள்ளைப் போன்று மணமின்றிக் கமழும்

8.கோவலரும் இதனை மாலையாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர்.

பகன்றை கண்ணி பல் ஆன் கோவலர் – ஐங் 87/1

பகன்றைப்பூ மாலையைத் தலையில் சூடியவரும், பல பசுக்களை மேய்ப்பவருமான கோவலர்கள்

9.மலர்வதற்கு முன்னர், இது சுரித்த தன்மையுடன் மொட்டாக இருக்கும்.

தளை பிணி அவிழா சுரி முக பகன்றை – அகம் 24/3

கட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் போதுகள்

மேல்


பகார்

(பெ) பகர்வார், விற்பவர், seller

பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் – அகம் 181/22,23

விற்பாரது
நறுமணப் பண்டங்கள் நாறுகின்ற வண்டுகள் மொய்க்கும் ஐம்பகுதியாய கூந்தல்

பகர்வார் என்பது பகார் எனத் திரிந்து நின்றது.

மேல்


பகு

(வி) 1. பிளவுபடு, be split, divided
2. பகிர்ந்துகொடு, பங்கிடு, distribute
3. பிள, split into parts
4. பிரி, divide

1

பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி – பெரும் 112

பிளவுபட்ட வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து

2

கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள் அம் சிறுகுடி பகுக்கும் – நற் 85/8-10

வேட்டுவன் எய்த முள்ளம்பன்றியின் கொழுத்த தசையை,
தேன் மணக்கும் கூந்தலையுடைய கொடிச்சி தான் அகழ்ந்தெடுத்த கிழங்குடன்
காந்தள் மலர்ந்துகிடக்கும் அழகிய சிறுகுடியினருக்குப் பகிர்ந்துகொடுக்கும்

3

மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்-கொல்
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/53-55

தன்னை விரும்பாத கஞ்சன் முதலானோர் கட்டவிழ்த்துவிட்ட கழுத்து மயிரினைக் கொண்ட குதிரையை
அதன் வாயைப் பிளந்திட்டு அதனைக் கையால் அடித்த சமயத்தில் இப்படிப்பட்டவனாயிருந்தானோ அந்தக்
கண்ணன் என்று கூறும்படியாக நடுங்கியது என் நெஞ்சு”;

4

நினக்கு யான்
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின் – நற் 128/3,4

உனக்கு யான்
ஓருயிரை இரு உடம்புகளுக்குள் பிரித்து வைத்தாற் போன்ற சிறப்புற்றவளாதலினால்

மேல்


பகுத்தூண்

(பெ) பகிர்ந்து உண்ணும் உணவு, food shared with others

இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
தருக என விழையா தா இல் நெஞ்சத்து
பகுத்தூண் தொகுத்த ஆண்மை
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/13-16

உன்னிடமிருந்து இனியவற்றைப் பெறும்போது, ‘அவற்றைத் தனித்தனியே நுகருவோம்,
கொண்டுவாருங்கள்’ என்று பெறுவோர் விரும்பாமல், மாசற்ற மனத்தினராய்
பகிர்ந்து உண்ணுவதற்காக உணவைத் திரளாகத் தருகின்ற ஆண்மைச் சிறப்பொடு
பிறர்க்கென்று வாழ்பவனாக நீ இருப்பதால்

மேல்


பகை

(பெ) 1. விரோதம், பகையுணர்ச்சி, hostility, enmity
2. பகைவன், விரோதி, எதிராளி, foe, enemy, opponent
3. மாறுபாடு, contrast

1

வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக – ஐங் 6/2

வேந்தன் பகை தணிவானாக; அவன் வாழ்நாள் பல ஆண்டுகளுக்கு நீளுக

2

விரி கடல் வியன் தானையொடு
முருகு உறழ பகை தலைச்சென்று – மது 180,181

விரிந்து நிற்கும் கடல் போல் அகன்ற படையோடு
முருகனைப் போன்று பகைவரிடத்திற்குச் சென்று

3

நெய்தல் அம் பகை தழை பாவை புனையார் – ஐங் 187/3

நெய்தல் பூவினின்றும் மாறுபாடுடைய இந்தத் தழையுடையைத் தம் பாவைக்கும் அணியமாட்டார்

மேல்


பங்கம்

(பெ) துண்டம், piece

செம் குங்கும செழும் சேறு
பங்கம் செய் அகில் பல பளிதம்
மறுகுபட அறை புரை அறு குழவியின்
அவி அமர் அழல் என அரைக்குநர் – பரி 10/81-84

சிவந்த குங்குமத்தால் ஆகிய செழுமையான சேற்றையும்,
துண்டாக்கப்பட்ட அகிலையும், பலவகைப் பச்சைக்கற்பூரத்தையும்,
ஒன்றாகக் கலக்குமாறு குற்றமற்ற குழவிக்கல்லால்
அவியாக பலியுணவை இட்ட வேள்வித்தீயின் நிறத்தைப் போன்று அரைப்பார் சிலர்

மேல்


பங்கு

(பெ) சனி, the planet Saturn

அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின்
இல்ல துணைக்கு உப்பால் எய்த – பரி 11/7,8

கார்த்திகை உச்சமாக நிற்க, வியாழன் சனியின்
இரட்டை இல்லங்களாகிய மகரம், கும்பம் ஆகியவற்றுக்கு மேலேயுள்ள மீனராசியைச் சேர

மேல்


பங்குனி

(பெ) பன்னிரண்டாம் தமிழ் மாதம், the twelfth month of the Tamil year, March-April

பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள் – அகம் 137/9

பங்குனி விழா கழிந்த அடுத்தநாளில்

மேல்


பச்சிலை

(பெ) பச்சை + இலை, green leaf

புலரா பச்சிலை இடை இடுபு தொடுத்த
மலரா மாலை பந்து கண்டன்ன – புறம் 33/12,13

காய்ந்துபோகாத பசிய இலையை இடையிட்டுத் தொடுக்கப்பட்ட
மலராத முகையினையுடைய மாலையினது பந்தைக் கண்டாற்போன்று

மேல்


பச்சிறா

(பெ) பச்சை + இறா, fresh prawn

பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை – நற் 258/8

பசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை,

மேல்


பச்சூன்

(பெ) பச்சை + ஊன், raw meat

மறு இல் தூவி சிறு_கரும்_காக்கை
அன்பு உடை மரபின் நின் கிளையோடு ஆர
பச்சூன் பெய்த பைம் நிண வல்சி
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ – ஐங் 391/1-4

கறை படியாத இறகுகளையுடைய சிறிய கரிய காக்கையே!
ஒருவருக்கொருவர் அன்புகொள்ளும் மரபையுடைய உனது சுற்றத்தோடு வயிறார உண்ணும்படி
பச்சை ஊன் கலந்த புதிய கொழுப்புள்ள சோற்றினைப்
பொன்னால் செய்த கலத்தில் தருவேன், பார்!

மேல்


பச்சை

(பெ) 1. தோல், skin
2. தோலினால் ஆன போர்வை, covering or hide made of skin
3. பிரத்தியும்நன், Pradyumna. A vyūha manifestation of Viṣṇu.
4. பச்சை நிறம், green colour

1

புல புல்வாய் கலை பச்சை
சுவல் பூண் ஞான் மிசை பொலிய – புறம் 166/11,12

காட்டுநிலத்தில் வாழும் புல்வாய் என்னும் கலைமானின் தோல்
உனது தோளின்கண் இடப்பட்ட பூணு நூல் மீது சிறந்து விளங்க

2.1

விளக்கு அழல் உருவின் விசி_உறு பச்சை
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை – பொரு 5-8

விளக்குப் பிழம்பின் (நிறத்தை ஒத்த)நிறமுடையதும் விசித்துப் போர்க்கப்பட்டதும் ஆகிய தோல்,
(பிறரால் நன்கு)அறியப்படாத இளைய கருவினையுடைய சிவந்த நிறமுடையவளின் அழகிய வயிற்றின்மேல்
மென்மையாகிய மயிர் ஒழுங்குபடக் கிடந்த தோற்றத்தைப்போல,
இரண்டு தலைப்பையும் கூட்டித் தைத்த (மரத்தைத் தன் அகத்தே)பொதிதலுறும் போர்வையினையும்

2.2

கான குமிழின் கனி நிறம் கடுப்ப
புகழ் வினை பொலிந்த பச்சையொடு தேம் பெய்து
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் – சிறு 225-229

காட்டுக் குமிழின் பழத்தின் நிறத்தை ஒப்ப,
புகழப்படும் தொழில்வினை சிறந்து விளங்கும் போர்வையோடு; தேன் (போன்ற தன்மையைப்)பெய்துகொண்டு,
அமிழ்தத்தைப் பொதிந்து துளிக்கின்ற முறுக்கு அடங்கின நரம்பையும் உடைய
பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை

2.3

பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்று இடை வகுத்ததன்
உள்ளகம் புரையும் ஊட்டு_உறு பச்சை – பெரும் 4-6

பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய பாதிரியின்
வளமையான இதழையுடைய பெரிய பூவின் வயிற்றை நடுவே பிளந்ததனுடைய
உள்ளிடத்தைப் போன்ற நிறமூட்டப்பெற்ற தோலினையும்;

2.4

புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து
புதுவது போர்த்த பொன் போல் பச்சை – மலை 28,29

புதுமையான உருவாக்கமாக தந்தத்தை யாப்பாக(பத்தரின் மேல் குறுக்குக்கட்டையாக) அமைத்து,
புதியதாகப் போர்த்திய பொன்னின் நிறம் போன்ற (நிறமுடைய) தோல்போர்வையை உடையதாய்

யாழின் பத்தல் என்று சொல்லப்படும் குடத்தினைப் பதப்படுத்திய தோல்கொண்டு போர்வை போல் மூடுவர்.
இந்தத் தோல்போர்வையே பச்சை எனப்படும்.

3

பொன் கண் பச்சை பைம் கண் மாஅல் – பரி 3/82

பொன்னிறக் கண்ணையும் பச்சைமேனியும் உடைய பிரத்தியும்நனே! பசிய கண்ணையுடைய திருமாலே!

4

பவள வளை செறித்தாள் கண்டு அணிந்தாள் பச்சை
குவளை பசும் தண்டு கொண்டு – பரி 11/101,102

பவள வளையலைச் செறிய அணிந்திருந்தாள் ஒருத்தியைக் கண்டு, இன்னொருத்தி அணிந்தாள் பச்சையான
குவளையின் இளம் தண்டினைக் கையில் வளையல்போல்,

மேல்


பச

(வி) 1. பசலை நிறம்பெறு, காதல் நோயினால் நிறம் மாறு,
turn sallow or pale due to love-sickness
2. ஒளி மங்கு, lose lustre
3. பொன்னிறம் பெறு, become golden

1

கடுங்கண் யானை கானம் நீந்தி
இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி
பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நன் மா மேனி பசப்ப
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே – குறு 331/4–8

கடுமையான யானைகள் இருக்கும் பாலைநிலத்தைக் கடந்து
செல்வாரோ தோழி! வாழ்க! நறிய வடுவையும்
பசிய அடிமரத்தையும் உடைய மா மரத்தின் அழகிய தளிர் போன்ற
நல்ல மாமைநிறமுள்ள மேனியில் பசலை ஊர
நம்மைக்காட்டிலும் சிறந்த அரிய பொருளை ஈட்டுவதற்கு

2

அம்ம வாழி தோழி நம் ஊர்
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 35

தோழியே கேட்பாயாக! நம் ஊரின்
பொய்கையில் பூத்த ஆம்பல் மலரின் நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டின்
நிறத்தைக் காட்டிலும் ஒளியுடையதாக இருந்து,
இப்போது பசந்துபோயிற்று, என் மாநிற மேனியழகு.

3

அம்ம வாழி தோழி நம் ஊர்
பொய்கை பூத்த புழை கால் ஆம்பல்
தாது ஏர் வண்ணம் கொண்டன
ஏதிலாளற்கு பசந்த என் கண்ணே – ஐங் 34

தோழியே கேட்பாயாக! நம் ஊரின்
பொய்கையில் பூத்த உள்துளையுள்ள தண்டினையுடைய ஆம்பல் மலரின்
தாதுக்கள் போன்ற பொன் நிறத்தைக் கொண்டன,
நமக்கு அயலானாகிவிட்டவனுக்காகப் பசந்துபோன எனது கண்கள்.

மேல்


பசப்பு

(பெ) காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் நிறம் மாறுபடுதல்,
turning sallow or pale due to love-sickness

வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள்
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/16,17

மூங்கில் போன்ற அழகை இழந்த தோள்கள், தம் ஒளிவீசும் அணிகலன்களைத் தாங்கமாட்டாமல் தளர,
பளிச்சென்ற நெற்றியில் பசலை படர இவளை நீ துறந்து சென்றாய்?

பிரிவுத்துன்பத்தால் பெண்களுக்கு இவ்வாறு ஏற்படும் நிறமாற்றம் சிறிது சிறிதாக நடைபெறுவதைப்
பசப்பு ஊர்தல், பசப்பு இவர்தல் எனப் புலவர்கள் பாடியுள்ளனர்.

பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே – நற் 197/2
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர – நற் 358/2
நுதல் பசப்பு இவர்ந்து திதலை வாடி – குறு 185/1
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும் – குறு 371/1
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே – கலி 7/8
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த_கால் – கலி 15/17
நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என – கலி 16/21
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ – கலி 28/15
போர்ப்பது போலும் பசப்பு – கலி 33/15
பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை – கலி 99/10
பழி தபு வாள் முகம் பசப்பு ஊர காணும்_கால் – கலி 100/18

பொதுவாகப் பெண்களின் மேனியில் ஏற்படும் நிறமாற்றம், குறிப்பாக, அவர்களுடைய கண்களிலும்,
நெற்றியிலும் படரும் எனவும் புலவர்கள் பாடியுள்ளனர்.

மேல்


பசலை

(பெ) 1. இளமை, infancy
2. பொன்னிறம், golden colour
3. காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் ஏற்படும் நிறமாற்றம்
sallowness or paleness of complexion in lady’s body or body parts due to
love-sickness

1.1

சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின் – முல் 12

சிறிய கயிறினாலே கட்டப்பட்ட பச்சிளங்கன்றின்

1.2

பசலை நிலவின் பனி படு விடியல் – புறம் 392/3

இளம் நிலவு திகழும் பனி சொரியும் விடியற்காலத்தே

2

பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ – புறம் 155/4

பாழூரின்கண் நெருஞ்சியினது பொன்னிறத்தையுடைய வாலிய பூ

3

ஊர் உண் கேணி உண்துறை தொக்க
பாசி அற்றே பசலை காதலர்
தொடு_உழி தொடு_உழி நீங்கி
விடு_உழி விடு_உழி பரத்தலானே – குறு 399

ஊரினர் உண்ணும் சிறிய குளத்தில் உண்ணும் துறையில் கூடிய
பாசியைப் போன்றது பசலைநோய்; காதலர்
தொடும்பொழுதெல்லாம் நீங்கி,
அவர் விடும்பொழுதெல்லாம் மீண்டும் பரந்துவிடுகிறது

மேல்


பசிப்பிணிமருத்துவன்

(பெ) இரவலர் வறுமையைப் போக்கும் வள்ளல், philanthropist

பசிப்பிணிமருத்துவன் இல்லம் – புறம் 173/11

பசிநோய் தீர்க்கும் மருத்துவனான வள்ளலின் இல்லம்

மேல்


பசு

1. (பெ.அ) 1. இள மஞ்சள் நிறமான, pale yellow
2. புத்தம்புதிய, fresh
3. தூய்மைசெய்யப்படாத, unpure, crude
4. இளமையான, young
-2. (பெ) பால் தரும் பெண் மாடு, cow

1.1

செம் நீர் பசும்பொன் புனைந்த பாவை
செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்ன – மது 410,411

{சிவந்த தன்மையினையுடைய பசும்பொன்னால் செய்த பாவை
வீழ்கின்ற ஞாயிற்றின் இள மஞ்சள் நிறமான மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற

1.2

வால் அரிசி பலி சிதறி
பாகு உகுத்த பசு மெழுக்கின்
காழ் ஊன்றிய கவி கிடுகின்
மேல் ஊன்றிய துகில் கொடியும் – பட் 165-168

வெண்மையான அரிசியையும் பலியாகத் தூவி,
சந்தனக் குழம்பினைக் கொட்டி மெழுகிய புது மெழுக்கினையுடைய,
கால்கள் நட்டு (அதன் மேல்)வைத்த கவிந்த மேற்கூரையின்
மேலே நட்டுவைத்த (வீர வணக்க)துகில் கொடிகளும்,

1.3

கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ
மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர்
புன்னை அரும்பிய – நற் 94/4-6

கைத்தொழிலில் வல்ல கம்மியன் அழகுபெறக் கழுவாத
தூய்மைசெய்யாத சுத்தமற்ற முத்தைப் போல குவிந்த கொத்துக்களையுடைய
புன்னை மரம் அரும்புவிட்டிருக்கின்ற

1.4

மா கடல் நடுவண் எண் நாள் பக்கத்து
பசு வெண் திங்கள் தோன்றி ஆங்கு – குறு 129/3,4

கரிய கடலின் நடுவில் எட்டாம் நாளுக்குரிய
இளமையான வெள்ளிய திங்கள் தோன்றியதைப் போல்

2

பல் பசு பெண்டிரும் பெறுகுவன் – ஐங் 271/3

பல பசுக்களையும், பெண்டிரையும் பெறக்கூடிய தகுதியையுடையவன்

மேல்


பசும்

(பெ.அ) 1. பசிய, greenish
2. முற்றாத, not riped
3. புத்தம்புதிய, fresh
4. இளமையான, young, tender
5. உலர்ந்துபோகாத, not dried
6. பசும்பொன்னாலான, golden
7. சுடப்படாத, வேகவைக்காத, not burnt

1

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க
பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் – திரு 47-51

காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும்,
சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், கொடிய பார்வையினையும்,
பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு, கொடிய பாம்பும் தூங்கும் அளவிற்குப் பெரிதான
பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், சொரசொரப்பான பெரிய வயிற்றையும்,
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்

2

முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 23-26

பெரிய அடிப்பகுதியையுடைய பாக்கு மரத்தின் (நீல)மணியைப் போன்ற கழுத்தின்
கொழுத்த மடல்களில் (பாளை)விரிந்த திரட்சியைக் கொண்ட கொத்துக்களில்
நுண்ணிய நீர் திரளும்படியாக வீங்கிப் பக்கம் திரண்டு
தெளிந்த நீர் (கொண்ட)முற்றாத காய் இனிமை கொள்ளும்படி முற்ற;

3

பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும் – பட் 203

(பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும்

4

துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463

(வேகும்போது கொதிப்பதால்)குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான தெளிந்த
கள்ளை

5

கரும் கொடி மிளகின் காய் துணர் பசும் கறி – மலை 521

கரிய கொடிகளையுடைய மிளகின் காய்க்குலைகளின் (காய்ந்துபோகாத)பச்சை மிளகும்

6

கை புனை சிறு நெறி வாங்கி பையென
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று
பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி
செலவுடன் விடுகோ தோழி – நற் 222/3-6

கையால் செய்யப்பட்ட சிறிய வளைவைக் கொண்ட ஊஞ்சலை இழுத்து, மெதுவாக
விசும்பில் பறக்கும் அழகிய மயிலைப் போன்று, நான் இன்று
பசும்பொன்னால் ஆகிய மணிகள் பதித்த வடத்தையுடைய அல்குலைப் பற்றி, தள்ளிவிட்டு
உயரே செல்ல விடுக்கிறேன் தோழி!

7

ஈர் மண் செய்கை நீர் படு பசும் கலம்
பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு – நற் 308/8,9

ஈர மண்ணால் செய்யப்பட்டு நீர் நிறைந்திருக்கும் பச்சையான மண்குடம்
பெரிய மழை பெய்வதனில் நனைந்து கரைந்ததைப் போல,

மேல்


பசும்கண்கடவுள்

(பெ) சிவபெருமான், Lord Siva

படர் அணி அந்தி பசும்கண்கடவுள் – கலி 101/24

துன்பத்தை நுகர்கின்ற அந்திக்காலமாகிய ஊழிமுடிவில் ஒருபாதி உமையின் பச்சைநிறத்தைக் காட்டும்
இறைவன்

மேல்


பசும்பாம்பு

(பெ) பச்சைப்பாம்பு, a kind of snake green in colour

சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ – குறு 35/2,3

கருவுற்ற பச்சைப்பாம்பின் சூல் முதிர்ச்சி போன்ற
பருத்த கரும்பின் குவிந்த அரும்பு மலரும்படி

மேல்


பசும்பிடி

(பெ) ஒரு மரம், அதன் பூ, Mysore gamboge, Garcinia xanthochymus;

பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல் – பரி 19/75

பச்சிலையின் இளம் அரும்பும், மலர்ந்த வாயையுடைய ஆம்பலும்

மேல்


பசும்பொன்

(பெ) மாற்று உயர்ந்த பொன், fine gold

செம் நீர் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன் – புறம் 9/9,10

சிவந்த நீர்மையுள்ள போக்கற்ற பசிய பொன்னை கூத்தர்க்கு வழங்கிய
முந்நீர்க் கடல்தெய்வத்திற்கு எடுத்த விழாவினையுடைய நெடியோன்

மேல்


பசுமஞ்சள்

(பெ) பச்சையான மஞ்சள், fresh turmeric root

சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து – திரு 235

பச்சையாக, பசுமையாக பறித்தவுடன் காணப்படும் மஞ்சளே பசுமஞ்சள்.

மேல்


பசை

1. (வி) அன்புகொள், be kind, loving
– 2. (பெ) 1. துவைக்கும்போது துணிகளுக்குப் போடும் கஞ்சி, starch for the washed clothes
2. பிசின், glue

1

பசைஇ பசந்தன்று நுதலே – குறு 87/4

அவர்மீது அன்புகொண்டதால் வெளுத்துப்போயிற்று என் நெற்றி

2.1

நலத்தகை புலைத்தி பசை தோய்த்து எடுத்து
தலை புடை போக்கி தண் கயத்து இட்ட
நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும்
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ – குறு 330/1-4

பெண்மை நலமும் அழகும் வாய்ந்த சலவைப்பெண், கஞ்சியில் தோய்த்து எடுத்து
ஒருதரம் கல்லில் அடித்து முடித்து, குளிர்ந்த குளத்தில் இட்ட,
நீரில் அலசிவிடாத பருத்த ஆடையின் முறுக்கைப் போன்றிருக்கும்
பெரிய இலையைக் கொண்ட பகன்றையின் கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள்

2.2

பசை படு பச்சை நெய் தோய்த்து அன்ன
சேய் உயர் சினைய மா சிறை பறவை – அகம் 244/1,2

பசை பொருந்திய தோலை நெய்யில் தோய்த்தாற்போன்ற,
மிக்க உயரமான கிளைகளில் இருக்கும் கரிய சிறகினையுடைய வாவல்

மேல்


பஞ்சவர்

(பெ) பாண்டியர், Pandiya kings

செரு மாண் பஞ்சவர் ஏறே நீயே – புறம் 58/8

போரின்கண் மாட்சிமைப்பட்ட பாண்டவர் குடியுள் ஏறு போவான் நீ.

மேல்


பஞ்சவன்

(பெ) பாண்டியன், the Pandiya king

பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல் – பரி 24/46

பிறரைப் பணிதல் இல்லாத உயர்ந்த சிறப்பினையுடைய பாண்டியனின் மதுரை

மேல்


பஞ்சாய்

(பெ) ஒரு கோரை வகை, a grass, cyperus rotundus tuberosus;

முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி
கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 215-218

அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின்
வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அங்கு உண்டாகிய
பஞ்சாய்க் கோரையைப் பல்லால் சிதைத்து(க் கிழித்து)
முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை

மேல்


பஞ்சி

(பெ) 1. பஞ்சு, cotton
2. வெள்ளைத்துணி, white piece of cloth

1

பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே – நற் 324/9

பஞ்சு போன்ற மென்மையான அடிகளால் நடந்துவருகின்றாள்.

2

பஞ்சியும் களையா புண்ணர் – புறம் 353/15

வெள்ளைத்துணியும் நீக்கப்படாத புண்ணையுடையராய்

மேல்


பஞ்சுரம்

(பெ) குறிஞ்சி அல்லது பாலைப் பண் வகை,
A secondary melody-type of the kuRinjci or pAlai class

வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் – ஐங் 311/1

வேங்கை மரத்தில் பூப் பறிப்போர் பஞ்சுரப்பண் இசையில் ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வதைக்
கேட்டாலும்

மேல்


பட்டம்

(பெ) நீர்நிலை, ஓடை, tank, pond, stream

உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு – அகம் 107/13-15

இடிந்து விழும் மண்ணின் இடையூற்றினை அஞ்சுவதான ஒரே துறையினையுடைய ஓடையிலுள்ள
இன்னாததாகிய ஏற்றம் கொண்ட நெறியில் வழுக்கி விழுந்து மிக்க முடம்பட்டு
தன்னந்தனியே ஒழிந்து கிடக்கும் உடல்வலி வாய்ந்த தன்மையினையுடைய பொறுக்கும் பகட்டினை

மேல்


பட்டி

(பெ) ஊர்சுற்றித்திரிபவன், unbridled lawless person

சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட
மோதிரம் யாவோ யாம் காண்கு – கலி 84/20,21

விருப்பம்போல் திரிபவனே! அந்தப் பரத்தையரின் கையிலுள்ளதை, என்னை இகழும்படியாக நீ அணிந்திருக்கும்
மோதிரங்கள் எவை? நான் பார்க்கிறேன்!

மேல்


பட்டினம்

(பெ) 1. கடற்கரை நகரம். a city on the seashore
2. எயிற்பட்டினம், an ancient port city near Puduchery
3. புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினம், an ancient port city in the chOza country

1

தாம் வேண்டும் பட்டினம் எய்தி கரை சேரும்
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் – பரி 10/38,39

தாம் நினைக்கும் பட்டினத்தை நோக்கி வந்து கரை சேர்கின்ற
இன்பமான நாவாயின் வரவை எதிர்கொள்ளும் வணிகர் போல,

2

மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனி நீர் படுவின் பட்டினம் படரின் – சிறு 152,153

(நீல)மணி (போலும்)கழி (சூழ்ந்த)ஊர்களையுடையதும், மதிலின் பெயர்கொண்ட,
குளிர்ந்த நீர் மிக்க குளங்களையுடைத்தாகிய, (எயில்)பட்டினத்தே செல்வீராயின்

3

முட்டா சிறப்பின் பட்டினம் பெறினும்
வார் இரும் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே – பட் 218-220

குறைவுபடாத சிறப்புகள் கொண்ட – பட்டினம் (எனக்கு உரித்தாகப்)பெறுவதாயினும் –
நீண்ட கரிய கூந்தலையுடைய ஒளிரும் அணிகளையுடையாள் (இங்கு என்னைப்)பிரிந்திருப்ப,
(யான் நின்னோடு கூட)வாரேன்; (நீ)வாழ்க, நெஞ்சே

மேல்


படப்பு

(பெ) வைக்கோல்போர், hayrick

புன் தலை சிறார் மன்றத்து ஆர்ப்பின்
படப்பு ஒடுங்கும்மே – புறம் 334/3,4

புல்லிய தலையையுடைய சிறுவர்கள் மன்றத்தின்கண் விளையாடுவோர் செய்யும் ஆரவாரத்துக்கு அஞ்சி
வைக்கோல்போருக்குள் பதுங்கும்

மேல்


படப்பை

(பெ) 1. தோட்டம், கொல்லை, enclosed garden
2. வீட்டுக்குப் பின்புறம், புழைக்கடை, backyard of a house
3. அடுத்துள்ள இடம், அண்மைப் பகுதி, adjoining region or locality
4. புறநகர்ப்பகுதி, outskirts of a city

1

எம் படப்பை
கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில்
பகல் நீ வரினும் புணர்குவை – அகம் 18/13-16

எம் தோட்டத்தை அடுத்துள்ள
வளைந்த தேனிறால் கட்டப்பட்ட உச்சி உயர்ந்த நெடிய மலையில்
பழங்கள் தொங்குகின்ற செறிவான மரங்கள் உள்ள காந்தள் பூத்துள்ள சோலையில்
பகலில் நீ வந்தாலும் பொருந்தலாம்

2

இன்னள் ஆயினள் நன்_நுதல் என்று அவர்
துன்ன சென்று செப்புநர் பெறினே
நன்று-மன் வாழி தோழி நம் படப்பை
நீர் வார் பைம் புதல் கலித்த
மாரி பீரத்து அலர் சில கொண்டே – குறு 98

“இதுபோல் ஆகிவிட்டாள் நல்ல நெற்றியையுடையவள்” என்று அவர்
கிட்டச் சென்று கூறுவார் கிடைத்தால்,
நல்லது நிச்சயமாக, வாழ்க தோழி! நம் கொல்லைப்புறத்தில்
நீர் ஒழுகி வளர்ந்த புதரின்மேல் செழித்துப் படர்ந்த
கார்காலத்து பீர்க்கின் மலர்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு சென்று

3

மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை
தண்டலை உழவர் தனி மனை சேப்பின் – பெரும் 354,355

மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
தோப்புகளில் வாழும் உழவரின் தனித்தனியாக அமைந்த மனைகளில் தங்கினால்

4

கழி சூழ் படப்பை கலி யாணர்
பொழில் புறவின் பூ தண்டலை – பட் 32,33

உப்பங்கழி சூழ்ந்த ஊர்ப்புறங்களையும், மனமகிழ்ச்சி தரும் புதுவருவாயையுடைய
தோப்புக்களை அடுத்து இருக்கும் பூஞ்சோலைகளையும்,

மேல்


படம்

(பெ) 1. சட்டை, coat, jacket
2. புடவை, saree

1

அடி புதை அரணம் எய்தி படம் புக்கு – பெரும் 69

பாதங்களை மறைக்கின்ற செருப்பைக் கோத்து, சட்டை அணிந்து

உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக – முல் 65,66

உடம்பை ஆட்டிப் பேசும், (வாய்)பேசாத நாவினையுடைய (ஊமைகள்)
சட்டை போட்ட மிலேச்சர் அருகில் உள்ளோராக

பார்க்க : மிலேச்சர்

2

படம் செய் பந்தர் கல் மிசையதுவே – புறம் 260/28

புடவையால் செய்யப்பட்ட பந்தலின் கீழ் நட்ட கல்லின் மேலது.

மேல்


படர்

1. (வி) 1. (செடி, கொடி முதலியன) கிளைத்து வளர், spread or branch out as a creeper
2. அடை, சென்று சேர், reach, arrive at
3. செல், ஒழுகு, pass, proceed
4. எண்ணு, கருது, think of, consider
5. பரவு, spread, fan out
6. விரவிப்பரவு, மேவு, pervade, diffuse
7. விரி, அகலு, be wide
– 2. (பெ) 1. விரிதல், பரவுதல், spreading, expanding
2. வருத்தம், துன்பம், sorrow, distress

1.1

நெய்தல்
நீர் படர் தூம்பின் பூ கெழு துறைவன் – ஐங் 109/1,2

நெய்தலின்,
நீரில் படர்ந்த உள்துளையுள்ள தண்டுகளில் பூக்கள் பொருந்தியிருக்கும் துறையைச் சேர்ந்தவன்

1.2

பல நாள் நில்லாது நில நாடு படர்-மின் – மலை 192

(எனவே)பல நாட்கள் நிற்காமல், (=தாமதியாமல்)(மலையை விட்டிறங்கி)சமவெளிப்பகுதியைச் சென்றடைவீர்

1.3

சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை – புறம் 381/21

ஒரு வழியே சிறிது பெரிது நினைந்து ஒழுகுவாயாக என்று சொன்னான் எங்கள் தலைவன்.

1.4

அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்
பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின் – பெரும் 36,37

(நல்லது)அல்லாததை விலக்கிய அறத்தை விரும்பின செங்கோலையும்,
பல வேற்படையினையும் உடைய திரையனிடம் செல்ல எண்ணுவீராயின்

1.5

மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள்
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்
திருத்திக்கொண்ட அம்பினர் நோன் சிலை
எருத்தத்து இரீஇ இடம்-தொறும் படர்தலின் – அகம் 171/9-12

பெரிய மலையடிவாரத்திலுள்ள சிறிய ஊரில் மருண்ட மக்களாய பலர்
கொல்லுதல் வல்ல கரடி ஏற்றின் ஒலியினை உணர்வதற்காக
செப்பம் செய்துகொண்ட அம்பினராய், வலிய வில்லை
தோளில் கொண்டு இடமெல்லாம் பரவிவருதலினால்

1.6

சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக – அகம் 68/12,13

விளங்கும் ஒளியையுடைய வளை கழன்றிடும் நம்மிடத்து
மேவிய தமது உள்ளம் குற்றமற்றதாக

1.7

பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து – அகம் 297/8

பெயரும் புகழும் விரியத் தோன்றுமாறு பொறித்த எழுத்துக்களை

2.1

வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்று – மது 431

வெயிலையுடைய சுடர்கள் (வெப்பம்)குறைந்த, விரிந்து பரவுதல் மிக்க ஞாயிற்றையுடைய

2.2

உள் கரந்து உறையும் உய்யா அரும் படர் – குறி 11

(தன்)மனத்துள்ளே மறைந்து உறைந்து கிடக்கும் (ஆற்றுதற்கு)அரிய துன்பத்தை

மேல்


படர்தரு(தல்)

(வி) 1. பரவு, spread, fan out
2. வந்துசேர், reach
3. செல், leave, go
4. மறைந்து மறைந்து வா, move hidingly
5. குதித்துக்குதித்து நட, walk with jumps

1

பைம் குரல் ஏனல் படர்தரும் கிளி என – ஐங் 289/2

பசிய கதிர்களையுடைய தினைப்புனத்தில் வந்து படர்கின்றன கிளிகள் என்று

2

குறி இறை குரம்பை கொலை வெம் பரதவர்
எறி_உளி பொருத ஏமுறு பெரு மீன்
—————- —————————
நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன் – அகம் 210/1-6

குறிய இறப்பினையுடைய குடிசையில் வாழும் கொலைத் தொழிலையுடைய கொடிய பரதவரால்
எறியப்பட உளி தாக்கிய களிப்புப் பொருந்திய பெரிய மீன்
—————- —————————
வரிசையாக உள்ள படகின் பக்கலில் வந்துசேரும் துறையினையுடைய நம் தலைவன்

3

வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர்
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள்
இ சுரம் படர்தந்தோளே – அகம் 7/11-13

வலையைக் கண்ட பெண்மானைப் போலத் தப்பி ஓடி, இங்கு ஒரு,
தோல்வியையே அறியாத வெள்ளிய வேலை உடைய இளங்காளையொடு என் மகள்
இந்த வழியே சென்றுவிட்டாள்;

4

கள்ளர் படர்தந்தது போல தாம் எம்மை
எள்ளும்-மார் வந்தாரே ஈங்கு – கலி 81/23,24

கள்வர்கள் மறைந்து மறைந்து வருவதைப் போல், எம்மை
எள்ளி நகையாடற்பொருட்டே இவர் வந்திருக்கிறார் இங்கு

5

புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை
இருவி இருந்த குருவி வருந்து_உற
பந்து ஆடு மகளிரின் படர்தரும்
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே – ஐங் 295/3-6

தினைப்புனத்தார் கொளுத்திய நெருப்புக்கு அஞ்சிப் புகலிடம் தேடியோடும் மயில்,
கதிர் அறுத்த மொட்டைத் தாளின் மீது இருந்த குருவி வருந்தும்படியாக,
பந்தாடும் மகளிரைப் போன்று குதித்துக் குதித்துச் செல்லும்
குன்றுகளைச் சேர்ந்த நாட்டினனோடு சென்ற என் நெஞ்சம் –

மேல்


படல்

(பெ) 1. படுத்துத்தூங்குதல், lie down and sleep
2. பட்டுக்கொள்ளுதல், சிக்கிக்கொள்ளுதல், caught up, stuck
3. இறந்துபடுதல், dying
4. உடன்படுதல், consenting, agreeing
5. ஈடுபடுதல், indulging

1

வளை படு முத்தம் பரதவர் பகரும்
கடல் கெழு கொண்கன் காதல் மட_மகள்
கெடல் அரும் துயரம் நல்கி
படல் இன் பாயல் வௌவிளே – ஐங் 195/1-4

சங்கு ஈன்ற முத்துக்களைப் பரதவர் விலைக்கு விற்கும்
கடலைச் சேர்ந்த தலைவனின் அன்பிற்குரிய இளமையான மகள்
தீர்ப்பதற்கு முடியாத துயரத்தைக் கொடுத்து
படுத்துத்தூங்கும் இனிய உறக்கத்தைக் கவர்ந்துகொண்டாள்.

2

களைஞரும் இல்_வழி கால் ஆழ்ந்து தேரோடு
இள மணலுள் படல் ஓம்பு – கலி 98/36,37

காப்பாற்றுவாரும் இல்லாத இடத்தில் ஆழப்பதிந்து, தேருடன்
நீ குறுமணலில் அகப்பட்டுக்கொள்ளாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வாயாக!

3

வெம் திறல் கூற்றம் பெரும்பேதுறுப்ப
எந்தை ஆகுல அதன் படல் அறியேன் – புறம் 238/10,11

வெம்மையான ஆற்றலையுடைய கூற்றுவன் பெரிய இறந்துபாட்டை எய்துவிக்க
என் தலைவன் பேதுறவெய்தி அதனால் இறந்துபட்டதை அறியேனாய் வந்தேன்

4

ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின் தே மொழி
கயல் ஏர் உண்கண் குறு_மகட்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே – நற் 220/7-10

இந்த ஊரினர் என்று சொல்லிப் பெருமகிழ்ச்சி கொள்ளும் இச்சிறுவர்கள்
தாமே உலகநடப்பினைத் தெரிந்திருந்ததால், இனிக்கும் சொற்களையும்,
கயல் போன்ற அழகுடைய மையுண்ட கண்ணும் உடைய இளைய மகளாகிய தலைவிக்கு
(இத் தோழிகள்) அயலோராவர் என்ற எம் கருத்தோடு ஒத்துப்போவதால்

5

புரைய அல்ல என் மகட்கு என பரைஇ
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர் யாம் என் இதன் படலே – அகம் 95/13-15

பொருந்துவன அல்ல என் மகளுக்கு என்று தெய்வத்தைத் தொழுது
நமது களவொழுக்கத்தினைத் தெரிந்துவைத்து அமைதியுற்றிருக்கும் கொள்கையினையுடைய
நம் அன்னை முன் யாம் இக் களவொழுக்கத்தில் பட்டு ஒழுகல் எங்ஙனம் இயலும்?

மேல்


படலம்

(பெ) கூடு, உட்குழிவு, the hollow, as of a crown;

இலங்கு மணி மிடைந்த பசும்பொன் படலத்து
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க
சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச்சேரல் – பதி 39/14-17

மின்னுகின்ற மணிகள் இடையிடையே கலந்த பசும்பொன்னாலான உட்குழிவுள்ள கூட்டின் ஓரத்தை.
ஒளிருகின்ற இழைகளால் தைத்து, மின்னலைப் போல பளிச்சிட,
சிறப்பு மிகுந்த முத்துக்கள் தைக்கப்பெற்ற
நார்முடிச் சேரலே!

மேல்


படலை

(பெ) 1. மாலை, garland
2. இலை, தழை, foliage
3. இலை, தழைகளாலான படல், தட்டி
4. பல மலர்களாலான கதம்பம்
.

வண் சினை கோங்கின் தண் கமழ் படலை
இரும் சிறை வண்டின் பெரும் கிளை மொய்ப்ப – ஐங் 370/1,2

வளமுள்ள கிளைகளையுடைய கோங்க மரத்தின் மலரால் செய்த குளிர்ந்த மணங்கமழும் மாலையை,
கரிய சிறகினைக் கொண்ட வண்டின் பெருங்கூட்டம் மொய்க்க,

2

படலை பந்தர் புல் வேய் குரம்பை – அகம் 87/3

இலைதழைகளால் ஆகிய பந்தலையுடைய புல்லால் வேயப்பட்ட குடில்கள்

3

உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை
சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார் – புறம் 325/7,8

அறுத்தெடுத்த உடும்பின் தசையை, ஒடு மரத்தின் வலிய கால்களால் செய்யப்பட்டு
மேலே இலைதழைகளாலான படல் சார்த்தப்பட்ட
சிறிய மனையின் முற்றத்தில் கூறுபோடுமாறு

4

ஓங்கு மிசை
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல் பூ மிடைந்த படலை கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 172-175

உயர்கின்ற உச்சிகளிலுள்ள
கொம்புகளில் உள்ளனவும், கொடிகளில் உள்ளனவும் கலந்து, காட்டிடத்துள்ளவாகிய
பல்வேறு பூக்களையும் நெருங்கிச்சேர்த்த கலம்பகமாகிய மாலையினையும்,
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன்

பல பூக்கள் கலந்து தொடுக்கப்பட்ட படலை மாலையைக் கண்ணியாக இடையர்கள்/கோவலர்கள்
தங்கள் தலையிலும், நீத்தோருக்கும் சூடிக்கொள்ளும் செய்தியைப் பிறகுறிப்புகளாலும் அறிகிறோம்.

பல் ஆன் கோவலர் படலை கூட்டும் – ஐங் 476/3

ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து
பல் ஆன் கோவலர் படலை சூட்ட
கல் ஆயினையே கடு மான் தோன்றல் – புறம் 265/2-5

மேல்


படாகை

(பெ) பதாகை, கொடி, flag, banner

படாகை நின்றன்று – பரி 9/78

கொடி உயர்ந்து நின்றது;

மேல்




படாம் – (பெ) சீலை, போர்வை, cloth

படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ – புறம் 141/11

சீலையைப் போர்வையாக மயிலுக்குக் கொடுத்த எம் அரசன்

மேல்


படாமை

(பெ) உறங்காமை, sleeplessness

மடாஅ நறவு உண்டார் போல மருள
விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண்
படாஅமை செய்தான் தொடர்பு – கலி 147/54-56

பெரிய பானையளவு மது உண்டவர் போல, என்னை மயங்க
விடாமல் என் உயிரோடு கலந்துவிட்டது, என் மைதீட்டிய கண்களை
உறங்காமற் செய்தவனின் நட்பு;

மேல்


படார்

(பெ) சிறுதூறு, சற்று உயரமான குறும் புதர், Low bush, low thicket of creepers;

அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு – முல் 51,52

காட்டு மல்லிகை பூத்த அசைகின்ற கொடியினையுடைய புதர்கள்
துவலை தூறலுடன் மெல்ல வரும் காற்றிற்கு அசைந்தாற்போல,

மேல்


படி

1. (வி)

1. நிலைகொள், be ingrained
2. தங்கு, rest, as clouds upon a mountain
3. வந்து அமர், settle
4. மூழ்கு, be immersed in water
5. கவி, rest upon

2. (பெ)

1. பூமி, earth
2. முறை, வகை, manner, mode
3. கோயில் முதலியவற்றுக்கு அன்றாடம் வழங்கப்படும் உணவுப்படி, நித்தியக்கட்டளை,
Fixed daily allowance for food;
4. படிக்கட்டு, step

1.1

பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை
துறை படி அம்பி அகம்_அணை ஈனும் – ஐங் 168/1,2

பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
துறையில் நிலையாகக் கிடக்கும் தோணியின் உள்கட்டைக்குள் கூடுகட்டி முட்டையிடும்

1.2

நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே – பரி 15/7-10

எப்பொழுதும் தந்து நிலையாக அமைந்து விளங்கும் மலைகள் சிலவே!
அந்தச் சில மலைகளிலும் சிறந்து விளங்குவன தெய்வங்கள் விரும்பும்
மலர்களையுடைய அகன்ற பகுதிகளையுடைய மேகங்கள் தங்கும் உச்சிகளையுடைய
குலமலைகள் சிலவே!

1.3

படி கிளி பாயும் பசும் குரல் ஏனல்
கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் – கலி 50/9-11

கதிர்களின்மேல் வந்து படியும் கிளிகள் பரவலாய்த் திரியும் பசிய கதிர்களைக் கொண்ட தினைப்புனத்தில்,
அந்தக் கிளிகளை விரட்டுவதை மறக்கச்செய்ததனால், இனி நீ
இவளையே இடைவிடாமல் நினைத்துக்கொண்டிருப்பதைக் காத்துக்கொள்வதை இவள் விரும்புவாள்,

1.4

பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை – அகம் 44/17

யானைகளும் மூழ்கும் குளங்களையும், செறிந்த பசிய காவற்காடுகளையும் (உடைய)

1.5

உயர் சினை மருத துறை உற தாழ்ந்து
நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக
கரையவர் மருள திரை_அகம் பிதிர
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை – புறம் 243/6-10

உயர்ந்த கிளைகளையுடைய மருதமரத்தின் துறையிலே வந்து உறத் தாழ்ந்து
நீர்க்கு அண்மையாகப் படிந்த கொம்பிலே ஏறி அழகு மிக
கரையில் நிற்போர் மருள திரையிடத்துத் திவலை எழ
ஆழமான நீரையுடைய மடுவில் துடுமென்று குதித்து
மூழ்கி மணலை முகந்து கட்டிய கல்வியில்லாத இளமை

2.1

கள் உண்ணூஉ
பருகு படி மிடறு என்கோ பெரிய
திருமருத நீர் பூ துறை – பரி 11/28-30

கள்ளினை வாயில் கொண்டு
பருகும் நிலமகளின் கழுத்து என்று கூறவா? பெரிய
திருமருத நீர்ப்பெருந்துறையை;

2.2

இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உற கல் உரு
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும் – பரி 19/50-52

இந்திரன் இந்தப் பூனை, இவள் அகலிகை , இவன்
வெளியில் சென்ற கவுதமன், இவன் சினங்கொள்ள கல்லுருவம்
அடைந்த வகை இது என்று விளக்கிச் சொல்வோரும்,

2.3

மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ செல்வம்
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப – கலி 35/1,2

சோம்பல் இல்லாதவனின் செல்வத்தைப் போல் மரங்கள் தழைத்துச் சிறக்க, அந்தச் செல்வத்தை
அவனால் படியளக்கப்பட்டார் உண்பதுபோல், பலவான கிளைகளிலும் வண்டுகள் ஆரவாரிக்க,

2.4

வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய
பிடி படி முறுக்கிய பெரு மர பூசல் – அகம் 8/9-11

வாழைமரங்கள் ஓங்கிய தாழ்வான இடத்திலுள்ள வழுக்குநிலத்தில்
அகப்பட்டுக்கொண்ட கடுமையான களிற்றின் துன்பத்தினைப் போக்க
பெண்யானை, படிக்கட்டாக அமைக்க ஒடிக்கும் பெரிய மரத்தின் ஓசை

மேல்


படிக்கால்

(பெ) ஏணி, ஏணிச்சட்டங்கள், ladder, ladder bars

குறும் தொடை நெடும் படிக்கால் – பட் 142

(ஒன்றற்கொன்று)நெருக்கமாய் அமைந்த படிகளையுடைய நீண்ட ஏணிச்சட்டங்கள்

மேல்


படிமகன்

(பெ) பூமியின் மகன், செவ்வாய், the son of earth, Mars

வருடையை படிமகன் வாய்ப்ப – பரி 11/5

மேடராசியைச் செவ்வாய் சேர்ந்துநிற்க

மேல்


படிமதம்

(பெ) பகைவலி, valiant hatred

நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்
படிமதம் சாம்ப ஒதுங்கி – பரி 4/16-18

உன்னுடன் நன்றாக நட்புப்பாராட்டிய பிரகலாதனின் நல்ல மார்பினைத் தழுவி,
உன்னிடம் ஒன்றாத உறவுகொண்ட இரணியனுடைய பெரிய மலை போன்ற மார்பின்கண்
பகைவலி அழியும்படியாக அவன்மேல் பாய்ந்து

பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூணவை
கொடி மேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரி 4/47,48

பாம்பின் பகையின் செருக்கை அழித்தவனே! பொன் அணிகலன் அணிந்த உன்
கொடியில் இருக்கும் கருடன் தாக்குகின்ற இரையும் பாம்பே!

– படிமதம் – பகைவலி – படிபிரதி என்பதன் சிதைவு – பொ.வே.சோ.உரை விளக்கம்

மேல்


படிமம்

(பெ) பிரதிமம், விக்கிரகம், image, idol

அரும் சமம் கடந்து படிமம் வவ்விய
நெடு நல் யானை அடு போர் செழியன் – அகம் 149/12,13

அரிய போரை வென்று அங்குள்ள பொற்பாவையினைக் கவர்ந்துகொண்ட
நெடிய நல்ல யானைகளையும் வெல்லும் போரினையும் உடைய செழியனது

மேல்


படிமை

(பெ) தவம், penance

முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை
வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என
வேறு படு நனம் தலை பெயர
கூறினை பெரும நின் படிமையானே – பதி 74/24-28

உணரத் தக்கவற்றை முழுதும் உணர்ந்து, பிறரையும் நன்னெறியில் ஒழுகச்செய்யும் நரை கொண்ட
முதுமையான புரோகிதனை,
கொடையும், மாட்சிமையும், செல்வமும், மகப்பேறும்,
தெய்வ உணர்வும் ஆகிய யாவையும் தவப்பயன் பெறுவோர்க்கே என்று அறிவுறுத்தி
நாட்டிலிருந்து வேறுபட்ட அகன்ற இடமாகிய காட்டுக்குத் தவத்தினை மேற்கொண்டு செல்லும்படி
கூறி அனுப்பிவைத்தாய், பெருமானே! உன் தவ ஒழுக்கத்தால்.

மேல்


படியோர்

(பெ) படியாதவர், சொல்கேளாதவர், பகைவர்

படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை – மலை 423

தனக்குப் படியாதாரை அழித்த (யாருக்கும்)அடங்குதல் இல்லாத ஆளுமையுள்ளவனும்,

மேல்


படிவம்

(பெ) 1. தவம், நோன்பு, விரதம், penance, austerities
2. வழிபடு தெய்வம், tutelary deity

1

கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான் – முல் 37

(ஆடையைக்)காவிக்கல்லைத் தோய்த்து உடுத்திய, விரதங்களையுடைய அந்தணன்

2

பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர் – பெரும் 298

பசிய சாணக் கரைசலால் மெழுகிய வழிபடும் தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களையும்,

மேல்


படிவு

(பெ) நீராடுதல், bathing

ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என
பார்ப்பார் ஒழிந்தார் படிவு – பரி 24/58,59

ஈக்கள் மொய்க்கும் சமைக்கப்பட்ட கள்ளினைக் கொண்டது இந்த ஆறு என்று
பார்ப்பனர் தவிர்த்தார் நீராடுதலை;

மேல்


படிறு

(பெ) 1. வஞ்சனை, deceit, fraud
2. கொடுமை, wickedness
3. குறும்புச்செயல், prank, mischief

1

அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல்
முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப
எதிர் வளி நின்றாய் நீ செல் – கலி 81/29-32

நெஞ்சு நடுங்காத வஞ்சனையால் என்னை வருத்தி, என் மகன் மேல் விருப்பம் கொண்டு வந்து,
பூண்களையுடைய முதிர்ந்த முலைகளால் உன் மார்போடு பொருத பரத்தையின் கொண்டைமுடியிலிருந்து
உதிர்ந்த பூந்தாதுக்கள் சிந்திக்கிடக்கும் உன் ஆடை ஓசையெழுப்ப,
எதிர்காற்றில் வந்து நிற்பவனே! நீ போகலாம்!”

2

யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர்
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து – கலி 89/1,2

“யார் இவன், எம் கூந்தலைப் பற்றுபவன்? இதுவும் ஒரு
நாட்டாமை(அதிகாரமுள்ள துடுக்குத்தனம்) போன்ற கொடுமையைக் கொண்டது

3

கண்ட பொழுதே கடவரை போல நீ
பண்டம் வினாய படிற்றால் தொடீஇய நின்
கொண்டது எவன் எல்லா – கலி 108/22-24

கடன்வாங்கியவரைக் கண்டபொழுதே, கடன் கொடுத்தவர் போல நீ
தான் கொடுத்த பொருளைப் பற்றிக் கேட்கத்தொடங்கும் குறும்புச்செயலால், கேட்கும்படியாக உன்னிடம்
நான் வாங்கிய கடன்தான் என்ன, ஏடா!

மேல்


படின்

(வி.எ) 1. மறைந்துபோனால், if set (படு = மறை, set)
2. சாய்ந்தால், if fell down (படு = சாய் incline, lean over)
3. நுழைந்தால், if (you) enter (படு = நுழை, புகு, enter)

1

சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் – கலி 78/15

‘ஞாயிற்றைப் பார்த்து மலர்ந்து, அது மறைந்தபின் கூம்பிப்போகும் மலரைப் போல்

2

கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின்
வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்த – அகம் 29/2,3

(படுத்துக்)கிடந்து உயிர் வருந்தினாலும், (தான் தாக்கி) இடப்பக்கம் சாய்ந்தால்
விழுந்த களிறை உண்ணாத புலியைக் காட்டிலும் சிறந்த,

3

செழும் பல் யாணர் சிறுகுடி படினே
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் – மலை 156,157

வளப்பம் மிக்க பல்வித புதுவருவாயையுடைய சிறிய ஊரில் தங்கினால்,
(அலைச்சலால்)கறுத்துப்போன பெரிய சுற்றத்துடன் பக்குவமாக வேகவைத்த அவ்வுணவை நிறையப் பெறுவீர்

மேல்


படீஇ

(வி.எ) 1. படியச்செய்து, ஆக்கமாகச்செய்து, settling, resolving
2. படிவித்து, குளிப்பாட்டி, giving a bath

1

வினை நலம் படீஇ வருதும் அ வரை
தாங்கல் ஒல்லுமோ பூ குழையோய் – குறு 256/4,5

நாம் மேற்கொண்ட தொழிலின் பயனைப் படியச்செய்து வருவோம்; அந்நாள் வரை
பொறுத்திருக்க முடியுமா, பொலிவுள்ள குழையை அணிந்தவளே?

2

கடி துறை நீர் களிறு படீஇ – புறம் 16/6

காவற்பொய்கைகளின் நீரில் களிற்றைக் குளிப்பாட்டி

மேல்


படீஇய

(வி.எ) 1. படிந்து, கவிந்து, covering with
2. படிய, குளிக்க, to bath

1

ஞாயிறு காணாத மாண் நிழல் படீஇய
மலை முதல் சிறு நெறி மணல் மிக தாஅய்
தண் மழை தலைய ஆகுக நம் நீத்து
சுடர் வாய் நெடு வேல் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே – குறு 378

சூரியனையே காணாத மாண்புள்ள நிழல் படிந்து
மலையில் தொடங்கும் சிறிய வழியும், மணல் மிகப் பரவியதாய்
குளிர்ந்த மழை பெய்வதாகவும் ஆகுக; நம்மைப் பிரிந்து
ஒளிவிடும் இலையைக் கொண்ட நெடிய வேலையுடைய தலைவனோடு
மடப்பம் உள்ள மாமைநிறமுள்ள நம் பெண் போகின்ற பாலைநிலத்தில்

2

மடப்பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய – அகம் 43/4,5

இளைய பெண்யானை
தன் துதிக்கை மறையத்தக்க வெள்ளத்தில் தன் ஆண்யானையுடன் குளித்து விளையாட

மேல்


படீஇயர்

1. (வி.மு) 1. வருந்துவனவாக, let them suffer
2. தூங்கட்டும், let them sleep
3. சேர்ந்தவர்களாகட்டும், let them belong to
– 2. (வி.எ) 1. சிக்கிக்கொள்ள, having stuck
2. புகுவதற்கு, to enter
3. தூங்குவதற்கு, to sleep
4. படும்படி, விழும்படி, to fall on
5. பொருந்தி வருவதற்கு, to come closely

1.1

பெரு முது செல்வர் பொன் உடை புதல்வர்
சிறு தோள் கோத்த செ அரி_பறையின்
கண்_அகத்து எழுதிய குரீஇ போல
கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோ
——————————————– —
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே – நற் 58

நிறைந்த பழமையான செல்வத்தைப் பெற்றவரின் பொன்தாலி அணிந்த புதல்வர்
தமது சிறிய தோளில் சேர்த்துக்கட்டிய செவ்வையாக அரித்து ஒலிக்கும் பறையின்
முகப்பில் எழுதப்பட்ட குருவியைப் போல
சாட்டைக் குச்சியால் அடிக்கப்பட்டுத் துன்பப்படுவனவாக;
———————————- ————————
ஓடுகின்ற தேரின் நுண்ணிய நுகத்தில் பூட்டப்பட்ட குதிரைகள் –

1.2

புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனை
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே – குறு 243/4,5

பறவைகள் ஒலிக்கும் பெரிய கடலின் கரைக்குத் தலைவனை
இனி நினைக்கமாட்டேன் தோழி! படுத்துத் தூங்கட்டும் என் கண்கள்.

1.3

எவ்வி தொல் குடி படீஇயர் – புறம் 202/14

எவ்வியினுடைய பழைய குடியிலே படுவார்களாக

2.1

சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண
வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ
கோள் நாய் கொண்ட கொள்ளை
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே – நற் 82/7-11

சிறிய கண்களைக் கொண்ட பெரும் சினத்தைக் கொண்ட ஆண்பன்றி
சேற்றில் ஆடிய கருத்த முதுகில் புழுதியோடு அதன் நிறத்தைப் பெற்று,
வெறுமையான பிளவினில் மாட்டிக்கொள்ள, அதனைச் சூழ்ந்த வார்களை அழித்து,
வேட்டை நாய்கள் கொன்ற கொள்ளைப்பொருளை
கானவர் எடுத்துக்கொண்டு செல்லும் சிறுகுடியில்

2.2

எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ம்ம் மேவல் சிறு கண் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர் பக்கத்து பல்லி பட்டு என – நற் 98/1-5

முள்ளம்பன்றியின் முள்ளைப்போன்ற பருத்த மயிருள்ள பிடரியைக் கொண்ட,
வயலில் மேயும் விருப்பமுள்ள, சிறிய கண்கள் உள்ள, பன்றியானது,
உயர்ந்த மலையிலுள்ள அகன்ற கொல்லையில் புகுவதற்கு, விலங்குகளைப் பிடிக்கும் பெரிய பொறியின்
சிறிய வாசலில் நுழையும் பொழுதில், விரைவாக
அருகே பக்கத்திலிருக்கும் பல்லி ஒலியெழுப்பினதாக

2.3

மலர்ந்த பொய்கை பூ குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் – நற் 115/1-3

அகன்று விரிந்த பொய்கையின் பூக்களைப் பறித்துத் தளர்ந்ததால்
சோர்வடைந்த தோழியர் கூட்டம் இனிதாகக் கண்ணுறங்கவேண்டி
அன்னையும் சிறிது சினம் தணிந்து மெல்ல மூச்சுவிடுகிறாள்;

2.4

பயறு போல் இணர பைம் தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினை
காஞ்சி – குறு 10/2-4

பயற்றங்காய் போன்ற கொத்துக்களையுடைய இளம் பூந்தாதுகள் தங்கள் மேலே விழும்படி
உழவர்கள் வளைத்த கமழ்கின்ற பூக்களையுடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட
காஞ்சிமரத்தை

2.5

வேனில் பாதிரி கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம்
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் – அகம் 257/1-4

வேனிற்காலத்துப் பாதிரியின் வளைவையுடைய சிறந்த பூக்களின்
தேன் பொருந்திய வாடல் நாறுகின்ற பகற்பொழுதில் சுரத்தின் கண்ணே
பரற்கல் பொருந்திய சிலம்பினை அணிந்த நின் சிறிய அடிகள் சிவக்க
எம்முடன் ஒரு நெறியில் பொருந்திவரற்கு

மேல்


படு

1. (வி) 1. தொங்கு, hang
2. வீழ், மொய், swarm as bees
3. உண்டாகு, தோன்று, appear, come into existence
4. மிகு, be large
5. விசையுடன் தாக்கு, hit or strike with force
6. தொடு, விழு, ஒட்டிக்கொண்டிரு, touch, fall upon, cling to
7. ஒலி, sound
8. பாய், வழிந்தோடு, exude, as must from an elephant;
9. மேன்மையடை, சிறப்படை, be eminent, distinguidhed
10. அகப்படு, சிக்கு, get caught, entrapped
11. செய், நிகழ்த்து, உண்டாக்கு, ஏற்படுத்து, தா, provide, cause to exist, do, make, effect
12. விழு, fall down
13. பரவு, spread out
14. மறை, set disappear
15. அமைந்திரு, தகுதியாகு, be suitable
16. எழு, வெளித்தோன்று, rise, appear
17. வைத்திரு, possess
18. அனுபவி, experience, undergo
19. தங்கியிரு, settle at the bottom
20. பொருந்தியிரு, தன்னுள்கொண்டிரு, be constituted
21. அடை, எய்து, attain
22. உளதாகு, exist
23. நிகழ், happen
24. புகு, தலைப்படு, enter
25. இற, die
26. சேர், மாட்டு, fix
27. தூங்கச்செல், go to sleep
28. காணப்படு, cause to appear
29. ஆக்கு, cook
30. கடன்படு, become indebted
31. விரி, பரப்பு, spread out
32. அகப்படுத்து, சிக்கவை, entrap
33. உண்டாக்கு, cause to appear
34. வீழ்த்து, விழச்செய், fell, cast down
35. கீழே (உடலை) ஒரு பரப்பின் மீது கிடத்து, lie down
36. பூசு, smear
37. செல், go, be driven
38. இணங்கு, உடன்படு, agree, consent to
– 2. (பெ.அ) மிகுதியான, extreme, intense
– 3. (து.வி) 1. உள்ளாக்கு என்னும் பொருளில்வரும் வினையாக்கி,
verbaliser of certain nouns in the sense of experience
2. செயப்பாட்டுத்தன்மையை உணர்த்தும் துணைவினை, passivizer
– 4. (பெ) பள்ளம், மடு, deep pool

1.1

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 80-82

தாழ்கின்ற மணி மாறிமறி ஒலிக்கின்ற பக்கத்தினையும், கடிய நடையினையும்,
கூற்றுவனை ஒத்த பிறரால் தடுத்தற்கரிய வலிமையினையும் உடைய,
காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி –

1.2

குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி – திரு 199

ஆழ்ந்த சுனையில் பூத்த மலர்(புனையப்பட்ட) வண்டு வீழ்கின்ற மாலையினையும்,

1.3

இரு நில கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் – பெரும் 93,94

கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து,
மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர்

1.4

இடு முள் வேலி எரு படு வரைப்பின் – பெரும் 154

கட்டு முள் வேலியினையுடைய எருக்குவியல்கள் மிகுகின்ற ஊரில் –

1.5

தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை – பெரும் 201

வளைவாக, விதைத்தவாறே, உழுத, (பின்னர் வளர்ந்த களைகளைக்)களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை,

1.6

பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகல் செறுவில் – பெரும் 209,210

பசிய கோரையை (அடியில்)குத்தி எடுத்த மண் படிந்த கொம்பினையுடைய
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,

1.7

படு நீர் புணரியின் பரந்த பாடி – முல் 28

ஒலிக்கின்ற கடலலை போல் பரந்த பாசறையில் –

1.8

தேம் படு கவுள சிறு கண் யானை – முல் 31

மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை

1.9

வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் – மது 194

வழிமுறை வழிமுறையாகச் சிறக்க நின் வெற்றி ஓங்கும் அரசாட்சி –

1.10

வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய – அகம் 8/9,10

வாழைமரங்கள் ஓங்கிய தாழ்வான இடத்திலுள்ள வழுக்குநிலத்தில்
அகப்பட்டுக்கொண்ட கடுமையான களிற்றின் துன்பத்தினைப் போக்க

1.11.

கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல் – மலை 47

குளத்தில் மூழ்கியதைப் போன்ற பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலில்,

1.12

ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன் படு சுடர் ஒளி வெரூஉம் – குறு 357/6,7

தீக்கடைகோலில் எழுப்பிய தீயினால் இடம்பெயர்ந்த நெடிய நல்ல யானை
விண்மீன் விழுவதால் ஏற்படும் சுடர்விடும் ஒளியினைக் கண்டு அஞ்சும்

1.13

மை படு மா மலை பனுவலின் பொங்கி
கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி – மலை 361,362

கருமை பரந்த பெரிய மலையில், பஞ்சு போலப் பொங்கியெழுந்து,
கையால் எட்டித்தொடமுடியும் என்பதைப் போன்ற கார்காலத்து மேகக் கூட்டம்,

1.14

படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை – நற் 33/1

மறைகின்ற ஞாயிறு சேர்ந்த பிளந்த வாய்ப்பகுதியையுடைய நீண்ட மலைத்தொடரின்

1.15

நீ நல்கின்
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே – நற் 172/9,10

நீ இவளிடம் அன்புசெய்தால்
தங்குவதற்கு அமைந்த நிழல் வேறிடத்திலும் உண்டு.

1.16

பரந்து படு கூர் எரி கானம் நைப்ப – நற் 177/1

பரந்து எழுந்த பெரும் தீயானது காட்டினை அழிக்க,

1.17

குளிர் படு கையள் கொடிச்சி செல்க என – நற் 306/3

குளிர் என்னும் கிளிகடி கருவியை வைத்திருக்கும் கையையுடைய கொடிச்சியாகிய நீ மனைக்குச் செல்க என

1.18

கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போல – குறு 224/3-5

வருத்தத்தினும், மிகுந்த வருத்தமாகிறது; கிணற்றில் விழுந்த
கபிலைநிறப் பசு படுகின்ற துயரத்தை இரவில் கண்ட
ஊமை மகனைப் போல

1.19

பரல் அவல் படு நீர் மாந்தி – குறு 250/1

பருக்கைக் கற்களையுடைய பள்ளத்தில் தங்கியிருக்கும் நீரைக் குடித்து,

1.20

கைவல் சீறியாழ் பாண நுமரே
செய்த பருவம் வந்து நின்றதுவே
எம்மின் உணரார் ஆயினும் தம்_வயின்
பொய் படு கிளவி நாணலும்
எய்யார் ஆகுதல் நோகோ யானே – ஐங் 472

சீறியாழை இயக்குவதில் கைவன்மை பெற்ற பாணனே! உன் தலைவர்
தாமே சொல்லிச்சென்ற கார்ப்பருவம் வந்து நிலைபெற்றுவிட்டது;
என்னைப் பற்றி எண்ணிப்பார்க்கவில்லை என்றாலும், தம்மிடமுள்ள
பொய் பொருந்திய சொற்களுக்காக வெட்கப்படவும்
செய்யாமல் இருப்பதை எண்ணி வருந்துகிறேன் நான்.

1.21

இ ஊர் மன்றத்து மடல்_ஏறி
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே – கலி 58/22,23

இந்த ஊர் மன்றத்தில் மடலேறி
உன் மேல் நிலைநாட்டுவது போல் உள்ளேன் நான், நீ எய்தும் பழியை.

1.22

என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/6

என்போடுகூடிய ஊன் தடி உளதாகிய இடம் முழுதும் எங்களுக்கு அளிப்பான்

1.23

இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
படு வழி படுக இ புகழ் வெய்யோன் தலையே – புறம் 239/20,21

நீ வாளால் அறுத்துப்போட்டாலும் போடுக அல்லது சுட்டாலும் சுடுக
நிகழும் வழி நிகழட்டும் – இந்தப் புகழை விரும்புவோன் தலையை

1.24

கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசியராகி பிறர்
நாடு படு செலவினர் ஆயினர் இனியே – புறம் 240/12-14

ஆரவாரிக்கும் கிளையுடனே செயலற்று அறிவுடையோர்
தம் மெய் வாடிய பசியை உடையராய், பிறருடைய
நாட்டின்கண் தலைப்படும் போக்கையுடையராயினர் இப்பொழுது.

1.25

கொண்ட வாளொடு படு பிணம் பெயரா
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படு மகன் கிடக்கை காணூஉ – புறம் 278/6-8

வாளைக் கையில் ஏந்திப் போர்க்களம் சென்று, அங்கே இறந்துகிடக்கும் பிணங்களைப்
புரட்டிப்பார்த்துக்கொண்டே
சிவந்த போர்க்களத்தை முற்றும் சுற்றிவருவோள், விழுப்புண்பட்டுச் சிதைந்து வேறுவேறாகத் துணிபட்டு
இறந்து கிடக்கின்ற தன் மகனது கிடக்கையைக் கண்டு

1.26

பெரும் கை யானை கொடும் தொடி படுக்கும்
கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூட திண் இசை வெரீஇ மாடத்து
இறை உறை புறவின் செம் கால் சேவல்
இன் துயில் இரியும் – பெரும் 436-440

வலிய கையினையுடைய கொல்லன் சம்மட்டியை உரத்துக் கொட்டின
கூடத்து எழுந்த திண்ணிய ஓசையை அஞ்சி, மாடத்தின்
இறப்பில் உறையும் புறாவின் சிவந்த காலையுடைய சேவல்
இனிய துயில் (நீங்கி)விரைந்தோடும்

1.27

அடு புலி முன்பின் தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும்
அண்ணல் நெடு வரை – அகம் 75/6-8

கொல்லும் புலி போலும் வலியையும் கட்டப்பட்ட கழலையுமுடைய மறவர்கள்
பழையதாய் வருகிற இயல்பையுடைய தமது சீறூரிலுள்ள மன்றத்து நிழலில் கண்படுக்கும்

1.28

கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அ
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் – அகம் 343/7,8

கூரிய உளியால் இயற்றப்பெற்ற கோடுகள் மறைந்த எழுத்துக்கள், அந்த
வழியே செல்லும் புதியர்க்கு வேறு பொருளினவாகப் பிறழ்ந்து காணப்படும்

1.29

சோறு படுக்கும் தீயோடு
செஞ்ஞாயிற்று தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே – புறம் 20/7-9

சோற்றை ஆக்கும் நெருப்புடனே
செஞ்ஞாயிற்றினது வெம்மை அல்லது
வேறு வெம்மை அறியார், நின் குடை நிழற்கண் வாழ்வோர்

1.30

பெரும் பொன் படுகுவை பண்டு – கலி 64/7

பெரும் பொன் கொடுக்கும் கடன்பட்டாய், முன்னொரு காலத்தில்

1.31

வரி அதள் படுத்த சேக்கை – அகம் 58/4

புலியின் தோலினை விரித்துள்ள படுக்கையில்

1.32

மீன் கொள் பாண்மகள்
தான் புனல் அடைகரை படுத்த வராஅல் – அகம் 216/1,2

மீனைப் பிடிக்கும் பாணரது மகள்
தான் புனலை அடுத்த கரையில் அகப்படுத்திய வரால்மீனை

1.33

கடும்பகட்டு ஒருத்தல் நடுங்க குத்தி
போழ் புண் படுத்த பொரி அரை ஓமை – அகம் 397/10,11

கடிய பெருமையையுடைய ஆண்யானை மரமசையும்படி குத்தி
பிளத்தலால் புண் உண்டாக்கிய பொரிகள் பொருந்திய அடியினையுடைய ஓமை மரத்தின்

1.34

அம்பு சென்று இறுத்த அறும் புண் யானை
தூம்பு உடை தட கை வாயொடு துமிந்து
நாஞ்சில் ஒப்ப நிலம் மிசை புரள
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் – – புறம் 19/9-12

அம்பு சென்று தைத்த பொறுத்தற்கரிய புண்ணையுடைய யானையின்
துளையையுடைய பெருங்கையை வாயுடனே துணிந்து
கலப்பையை ஒப்ப நிலத்தின் மேலே புரள
வெட்டிப் போர்க்களத்தில் வீழ்த்திய ஏந்திய வாள் வெற்றியையுடையோராய்

1.35

படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின் – மலை 15

கீழே கிடத்தி வைத்ததைப்போன்ற ஒரு பாறையின் பக்கத்தில்

1.36

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/12,13

பற்பல வகைகளில் பயன்படும் நறிய சந்தனக் கட்டைகள் தன்னை அரைத்துப் பூசிக்கொள்பவர்க்கன்றி,
அவை மலையிலே பிறந்தாலும் மலைக்கு அவை தாம் என்ன செய்யும்?

1.37

கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவல் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/1-3

உருளையையும் பாரையும் கோத்து உலகின்கண்ணே செலுத்தும்
காப்புடைய சகடம்தான் அதனைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின்
ஊறுபாடு இல்லையாய் வழியே இனிதாகச் செல்லும்

1.38

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல்பால் ஒருவனும் அவன் கண் படுமே – புறம் 183/9,10

கீழ்க்குலத்துள் ஒருவன் கற்றால்
மேற்குலத்து ஒருவனும் அவனிடத்தே சென்று இணங்கிநடப்பான்

2

வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ – நற் 164/8

வெம்மையான பாலைவழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,

3.1

அரும் கடி படுக்குவள் அறன் இல் யாயே – அகம் 60/15

மிகவும் அரிய காவற்படுத்திவிடுவாள் அறம் கருதாத தாய்

3.2

அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய
பூ கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும் அவள் ஓப்பவும் படுமே – ஐங் 290

அறத்தைப் புரியும் செங்கோல் ஆட்சியையுடைய மன்னனைக் காட்டிலும், தாம் மிகவும்
சிறந்தன போலும் இந்தக் கிளிகள், சுடர்விடும்
பூக்கள் மணக்கும் கூந்தலையுடைய இந்தக் குறிஞ்சிப்பெண்ணால்
கனிவுடன் பார்க்கவும் படும், அவளால் கடிந்து ஓட்டவும் படுமே!

4

கல் உடை படுவில் கலுழி தந்து – நற் 33/4

பாறையை உடைத்த பள்ளத்தில் இருக்கும் கலங்கல் நீரைத் தந்து

மேல்


படுகர்

(பெ) ஏற்ற இறக்கங்கள் மிகுந்த பாதை, path with ups and downs

அலங்கு கழை நரலும் ஆரி படுகர்
சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி – மலை 161,162

(மேலும் கீழூம்)அசைகின்ற மூங்கில்கள் கிரீச்சிடும் கடினமான ஏற்ற இறக்கங்களான பாதைகளையுடைய
மலைச்சரிவை அடுத்திருந்த சிறிய ஊரை அடைந்து,

மேல்


படுநர்

(பெ) உழைப்பவர், labourers

அழிகளில் படுநர் களி அட வைகின் – புறம் 399/10

வைக்கோல்களில் உழைக்கும் களமர் தாம் உண்ட கள்ளால் பிறந்த மயக்கத்தால் மடிந்திருப்பார்களாயின்

மேல்


படுமலை

(பெ) ஒரு பாலைப்பண், A secondary melody-type of the pAlai class;

பெரும் கலி எழிலி
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
எழீஇ அன்ன உறையினை – நற் 139/3-5

பெரிய முழக்கத்தையுடைய மேகமே!
படுமலை என்னும் பாலைப்பண் அமைந்திருக்கும் நல்ல யாழின் வடித்தலைப் பொருந்திய நரம்பு
எழுப்பிய இசையினைப் போன்ற ஓசையையுடைய மழைத்துளிகளையுடையாய்!

மேல்


படூஉம்

(வி.மு/வி.எ) ’படும்’ என்பதன் நீட்டல்.
1. அகப்படும், மாட்டிக்கொள்ளும், be caught, entrapped
2. உடன்படும், agree to
3. தோன்றுகின்றன, appear
4. கிடக்கும், be lying
5. செல்லும், go, proceed
6. ஒலிக்கும், make a sound
7. உண்டாகின்ற, உருவாகின்ற, arising

1

தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர்
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன் – நற் 119/1-3

தினையை உண்ணும் காட்டுப்பன்றி வெருண்டு ஓட, தினைப்புனத்தான்
சிறிய பொறியைப் பொருத்தி வைத்த பெரிய கல்லிலான சாய்வுப்பலகையில்
ஒளிரும் நிறமுடைய வலிமையான புலி மாட்டிக்கொள்ளும் நாட்டைச் சேர்ந்தவன்

2

சுனை பூ குற்றும் தொடலை தைஇயும்
மலை செம்_காந்தள் கண்ணி தந்தும்
தன் வழி படூஉம் நம் நயந்து அருளி – நற் 173/1-3

சுனையிலுள்ள மலர்களைக் கொய்தும், அவற்றை மாலையாகத் தொடுத்தும்,
மலையிலுள்ள செங்காந்தள் பூவைத் தலைமாலையாகச் செய்துதந்தும்,
தன் கருத்துக்கு இணங்கிநடக்கும் நம்மை விரும்பி, நம்மேல் இரக்கங்கொண்டு

3

இடூஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடும் சுவர் பல்லியும் பாங்கில் தேற்றும் – நற் 246/1,2

இது நடைபெறும் என்று சொன்ன இடங்களில் நல்ல நிமித்தங்கள் தோன்றுகின்றன;
நெடிய சுவரில் உள்ள பல்லியும் பக்கத்தில் ஒலித்து அதனை உறுதிப்படுத்தும்;

4

பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன் – அகம் 5/9-11

பளிங்கைப் போன்று பல காய்களைக் காய்க்கும் நெல்லிமரங்கள்
முகடுகளில் இருக்கும் பாறையில், (சிறுவரின்)பல கோலிக்குண்டுகள் போன்று
உதிர்ந்து கிடக்கும் – ஞாயிற்றின் கதிர்கள் காயும் – உச்சிமலைச் சரிவுகளில்

5

நீங்கா வம்பலர் கணை இட தொலைந்தோர்
வசி படு புண்ணின் குருதி மாந்தி
ஒற்று செல் மாக்களின் ஒடுங்கிய குரல
இல் வழி படூஉம் காக்கை – அகம் 313/13-16

ஒழியாத புதியோராகிய, ஆறலைப்போர் அம்பினை எய்தலால் இறந்துபட்டோரின்
பிளந்த புண்ணிலிருந்து இழியும் குருதியைக் குடித்து
ஒற்றராகச் செல்லும் மக்களைப் போல உள்ளடங்கிய குரலினவாய்
தம்கூடுகளை நோக்கிச்செல்லும் காக்கை

6

உள்ளு-தொறு படூஉம் பல்லி – அகம் 351/16

நினைக்குந்தோற்ம் ஒலிக்கும் பல்லியானது

7

அளிய தாமே சிறு வெள் ஆம்பல்
இளையம் ஆக தழை ஆயினவே இனியே
பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லி படூஉம் புல் ஆயினவே – புறம் 248

இரங்கத்தக்கன சிறிய வெளிய ஆம்பல்
யாம் இளையவராயிருக்கும்போது எமக்குத் தழையுடை ஆயின. இப்பொழுது
பெரிய செல்வத்தையுடைய தலைவன் இறந்தானாக, உண்ணும் பொழுது மாறிப்போய்
இன்னாத விடியலில் உண்ணும்
தம் அல்லியிடத்து உண்டாகும் புல்லரிசியாய் உதவின.

மேல்


படை

1. (வி) 1. உண்டாக்கு, create, bring into existence
2. கொண்டிரு, பெற்றிரு, have, possess
3. ஈட்டு, சம்பாதி, earn, acquire
– 2. (பெ) 1. ஆயுதம், கருவி, arms, weapons
2. போர்வீரர்களின் தொகுதி, army of soldiers
3. குதிரைச் சேணம், saddle
4. வாள், sword
5. யானைகளின் முகபடாம், Ornamental cloth on the face of an elephant;
6. சமச்சீராகப் பரப்புதல், spreading evenly
7. செய்கருவி, instrument, tool
8. காமக்கணை, cupid’s arrow
9. காலாட்படை, land force in the army
10. அரண், கோட்டை, fortress
11. அடுக்கு மெத்தை, layers of cushion
12. வடம், ஆபரணம், chains of a necklace, ornaments
13. கலப்பை, ploughshare

1.1

பனி மிக
புல்லென் மாலை சிறு தீ ஞெலியும்
கல்லா இடையன் போல குறிப்பின்
இல்லது படைக்கவும் வல்லன் – புறம் 331/3-6

குளிர் மிகுதலால்
புல்லென்ற மாலைப்போதில் சிறிய தீக்கடைகோலைக் கடைந்து தீயை உண்டாக்கும்
கல்லாத இடையன் போல தேவையைக் குறிப்பாய் அறிந்து
இல்லாததை உண்டாக்கிக்கொள்ளும் வல்லமையுடையவன்

1.2

குவளை குழை காதின் கோல செவியின்
இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் – பரி 11/97,98

குவளை மலரை, குழையணிந்த காதான அழகிய செவியில்
இவள் செருகிக்கொண்டு நான்கு விழிகளை உடையவள் ஆயினாள்

1.3

படைப்பு பல படைத்து பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வராயினும் – புறம் 188/1,2

ஈட்டப்படும்செல்வம் பலவற்றையும் ஈட்டி, பலருடனே கூட உண்ணும்
உடைமை மிக்க செல்வத்தையுடையோராயினும்

2.1

ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 21,22

வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)ஆயுதங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை –

2.2

ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் – சிறு 211

(பகை)மறவரின் அணியில் (அச்சமின்றிப்)புகுதலையும், தோற்ற படையினரைப் பொறுத்தலையும்,

2.3

விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ – பெரும் 492

விண்(ணுக்குச்) செல்(வது போல் முன் கால்களைத் தூக்கும்)குதிரைகளுடன் பசிய சேணமும் தந்து,

2.4

பகைவர் சுட்டிய படை கொள் நோன் விரல் – முல் 77

பகைவரை நோக்கி வாளைப் பிடித்த வலியினையுடைய கையால்,

2.5

புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை – பரி 11/52

பறவை போல் விரையும் குதிரைகளையும், பொன்னாலான முகபடாம் அணிந்திருக்கும் யானைகளையும்

2.6

படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ
புடைபெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள் – கலி 10/10,11

சீராகப் பரப்பப்பெற்ற படுக்கையில் உறங்கும்போது உன்னை அறியாமல் நீ
சற்று விலகிப் படுத்தாலும் தனிமையுணர்வுகொண்டு தவித்துப்போகின்றவள்;

2.7

கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி
ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர்
வழூஉ சொல் கோவலர் தத்தம் இன நிரை
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் – கலி 106/1-5

பசுவின் தலையில் கட்டும் கழியும், சூட்டுக்கோலும் வைத்துக் கட்டிய தோல்பையையும்,
ஒன்றோடொன்று கயிற்றினால் கட்டப்பட்ட மண்கலங்களைக் கொண்ட உறியையும் தூக்கிக்கொண்டு
நீண்டிருக்கிற கொன்றைப் பழத்தில் செய்யப்பட்ட இனிய குழலை வாசித்துக்கொண்டவராய்,
கொச்சையான பேச்சுக்களைப் பேசும் கோவலர்கள் தத்தம் மாட்டுக்கூட்டங்களை,
நேரத்தில் வந்த கார் காலத்தில் தோன்றின மழையில் நனைந்த அகன்ற புல்வெளிக்குக் கொண்டுசென்றனர்;

2.8

அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்_கால்
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் – கலி 108/5-7

அகன்ற மன்றங்கள் உள்ள ஊர்களிலே மோரை விற்றுக் களைத்துப்போய் திரும்பும்போது,
எள்ளி நகைக்கத்தக்கவன் நான் என்று என் உயிர்போகும்படி காமக்கணைகளை வீசிச்செல்லும்
கொடுமையுடையவளே! உனக்கு என்ன பிழைசெய்தேன், பெண்ணே! நான்?”

2.9

நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக
கரை சேர் புள்_இனத்து அம் சிறை படை ஆக – கலி 149/1-2

வரிசையாக மிதக்கும் மீன்படகுகளே யானைகளாக, அலைகள் எழுப்பும் ஒலியே போர்ப்பறை ஒலி ஆக,
கரையிலிருக்கும் அழகிய சிறகுகளைக் கொண்ட பறவைக் கூட்டமே காலாட்படையாக,

2.10

நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் – அகம் 35/4

கூரிய முனை கொண்ட நீண்ட வேலை உடைய சிற்றரண் மழவர்கள்

2.11

பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை – அகம் 305/5

பல அடுக்கு மெத்தைகளால் உயர்ந்த வளம் மிக்க படுக்கை

2.12

பூம் பொறி பல் படை ஒலிப்ப பூட்டி – அகம் 400/11

அழகிய புள்ளிகளையுடைய பல வடங்கள் ஒலிக்கும்படி பூட்டி
அழகிய ஓவியம் பொறிக்கப் பெற்ற பல அணிகலன்களையும் ஆரவாரம் உண்டாகும்படி அவற்றின்
கழுத்திலே பூட்டி

2.13

பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே – புறம் 35/25,26

நின் போர்செய்யும் படை தரும் வெற்றியும், உழுகின்ற கலப்பை
நிலத்தின்கண்ணே ஊன்று சாலிடத்து விளைந்த நெல்லினது பயன்.

மேல்


படைஞர்

(பெ) படைவீரர்கள், soldiers

நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி – பதி 25/4

உன் படைவீரர்கள் கூடிய ஊர்ப்பொதுவிடங்களில் கழுதைகள் கூடிக்கிடக்கின்றன;

மேல்


படைப்பு

(பெ) செல்வம், wealth

வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பே – புறம் 22/30

வாழ்க பெருமானே உன் எல்லையில்லாத செல்வம்

மேல்


பண்

(பெ) 1. ஏழு சுரமும் உள்ள இசை, Primary melody-type
2. இசை, Melody-type
3. பண்ணுதல், இறுக்கமான கட்டு, tight fittings (of a cart)

1

மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
ஒள் நுதல் விறலியர் பாணி தூங்க – பொரு 109,110

மார்ச்சனை அமைந்த முழவினோடே பண் (நன்கு)அமைந்த சிறிய யாழையுடைய
ஒளிவிடும் நெற்றியையுடைய விறலியர் தாளத்திற்கேற்ப ஆட,

2

திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு – மலை 1-3

கருக்கொண்ட மேகங்கள் ஒன்றுகூடிய கருமை நிறங்கொண்ட பரந்த வானில்
விண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப் போன்று, தாளங்களைத் தட்டிப்பார்த்து,
உறுதியான வாரால் இறுகக் கட்டிய மத்தளத்துடன்

3

உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை
மலை உய்த்து பகரும் நிலையா வாழ்க்கை
கணம்_கொள் உமணர் உயங்கு_வயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண்_குருகு ஈனும் – நற் 138/1-4

உவர் நிலத்தில் விளையும் குன்றுகளைப் போன்ற உப்புக்குவியல்களை
மலைநாட்டில் சென்று விற்கும், ஓரிடத்தில் தங்காத நிலையற்ற வாழ்க்கை வாழும்
கூட்டமான உமணர்கள் தங்கள் வண்டிகள் முறிந்த இடத்தில் விட்டுச்சென்ற
தம் பண்ணுதல் அழிந்தனவாய் உள்ள பழைய பார் எனும் மரக்கட்டையில் வெண்குருகு முட்டையிடும்

மேல்


பண்டம்

(பெ) 1. பொருள், சரக்கு, substance, article, provision
2. நறுமணப்பொருள், fragrant substances

1

பொன் மலிந்த விழு பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயல் பெரு நாவாய் – மது 81-83

பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை
நாட்டிலுள்ளோர் நுகரும்படி நன்றாக இறக்குதலைச் செய்யும்
அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள்

2

பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் – அகம் 181/22,23

விற்பாரது
நறுமணப்பொருள்கள் மணக்கின்ற வண்டுகள் மொய்க்கும் ஐம்பகுதியாய கூந்தலினையும்

மேல்


பண்டரங்கம்

(பெ) ஒரு சிவ நடனம், a dance of Lord Siva.

மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ – கலி 1/8-10

மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து,
பாண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடும்போது, மூங்கில் போன்ற அழகும், அணை போன்ற மெல்லிய
தோள்களும்,
வண்டுகள் ஒலிக்கும் கூந்தலும் உடைய இறைவி, தாளத்தின் இடையில் அமையும் தூக்கினைத் தருவாளோ

மேல்


பண்டாரம்

(பெ) கருவூலம், treasury

பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் – பரி 11/123

காமதேவனின் கருவூலமும், படைக்கலங்களும் ஆகும் இவளின் கண்களைப் பாருங்கள்!

மேல்


பண்டு

(பெ) 1. முன்னம், முன்பு, முற்காலம், former time, previous time
2. பழங்காலம், ancient times

1

பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ – கலி 39/39

முன்னமே ஒருவரையொருவர் பார்த்தறியாதவர் போல் நடந்துகொள்வீர்களோ?

2

உண் கடன் வழிமொழிந்து இரக்கும்_கால் முகனும் தாம்
கொண்டது கொடுக்கும்_கால் முகனும் வேறு ஆகுதல்
பண்டும் இ உலகத்து இயற்கை – கலி 22/1-3

உண்பதற்குரிய பொருளைப் கடனாகப் பெறப் பணிந்து பேசி, இரந்து கேட்கும்போது இருக்கும் முகமும், தாம்
வாங்கிக் கொண்டதைத் திருப்பிக் கொடுக்கும்போது இருக்கும் முகமும் வேறுபடுதல்
பண்டைக் காலத்திலும் இந்த உலகத்துக்கு இயற்கை,

மேல்


பண்டை

(பெ) பார்க்க : பண்டு.
1. முன்னம், முன்பு

படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டு
குன்றம் நோக்கினென் தோழி
பண்டை அற்றோ கண்டிசின் நுதலே – குறு 249/3-5

ஒலிக்கின்ற மழை பொழிந்த மலைச்சரிவையுடைய அவரின் நாட்டுக்
குன்றத்தை நோக்கினேன், தோழி!
(பசப்பூர்ந்த என் நெற்றி) முன்பு இருந்ததைப் போல் ஆனதோ, உற்றுப்பார் என் நெற்றியை.

மேல்


பண்ணன்

(பெ) சங்க காலத்தில் புகழ்பெற்ற ஒருவன். a person of fame during sangam age.
சங்க இலக்கியத்தில் பண்ணன் என்று ஆறு குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பண்ணன் என்ற
மூன்று பேரைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.
1. பாண்டிய நாட்டைச் சேர்ந்த சிறுகுடிக் கிழான் பண்ணன்.
2. சோழநாட்டைச் சேர்ந்த சிறுகுடிக் கிழான் பண்ணன்.
3. சோழநாட்டைச் சேர்ந்த வல்லார் கிழான் பண்ணன்.

1.தனக்கென வாழா பிறர்க்குரியாளன்

பண்ணன் சிறுகுடி படப்பை நுண் – அகம் 54/14

தனக்கென்றேவாழாத பிறர்க்கெல்லாம் உரியவனாகிய
பண்ணன் என்பானது சிறுகுடியைச் சார்ந்த தோட்டத்திலுள்ள

மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் பாடியது.
இவர் நொச்சி நியமங்கிழார் மகனார் என்றும் குறிக்கப்பெறுகிறார்.
இவன் பாண்டியநாட்டுச் சிறுகுடி கிழான் பண்ணனாக இருத்தல்வேண்டும்.

2

வென்வேல்
இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர்
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த
கழல் கால் பண்ணன் காவிரி வட_வயின்
நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின்- அகம் 177/13-17

வெற்றியையுடைய வேலை
இலையின் முனை நிறம் மாறிச் செந்நிறமடையச் செலுத்தி, பகைவருடைய
மலை போன்ற யானைகளை மிக்க போரின்கண் அழித்த
வீரக்கழல் தரித்த காலினையுடைய பண்ணனது காவிரியின் வடக்கிலுள்ள
குளிர்ந்த குளத்தினை அடுத்துள்ள நெடிய அடிமரத்தினையுடைய மாமரத்தின்

செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் பாடியது.
இவர் செல்லூர் இளம்பொன் சாத்தன் கொற்றன் என்றும்
உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தன் கொற்றன் என்றும் குறிக்கப்பெறுகிறார்.
இவன் சோழநாட்டுச் சிறுகுடிக் கிழான் பண்ணன். கொடைச் சிறப்போடு வீரத்திலும் இவன்
சிறந்து விளங்கினான்.

3

கைவள் ஈகை பண்ணன் சிறுகுடி – புறம் 70/13

கையான் வள்ளிய கொடையையுடைய பண்ணனது சிறுகுடிக்கண்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.
இவன் சோழநாட்டுச் சிறுகுடிக் கிழான் பண்ணன்.

4

யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய – புறம் 173/1

யான் உயிர்வாழும் நாளையும் பெற்று பண்ணன் வாழ்வானாக.

சிறுகுடிக் கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது.
இவன் சோழநாட்டுச் சிறுகுடிக் கிழான் பண்ணன்.

5

வலாஅரோனே வாய் வாள் பண்ணன்
உண்ணா வறும் கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே செல்-மதி நீயே சென்று அவன்
பகை புலம் படரா அளவை நின்
பசி பகை பரிசில் காட்டினை கொளற்கே – புறம் 181/6-10

வல்லார் என்கிற ஊரிடத்தான், வாய்க்கும் வாளையுடைய பண்ணன்,
உண்ணாத வறிய சுற்றம் உண்டு பிழைத்தல் வேண்டுவையாயின்
இப்பொழுதே செல்வாயாக நீ, போய் அவன்
பகைவர் இடத்திற்குச் செல்லா அளவையில் நினது
பசிக்குப் பகையாகிய பரிசிலை நினது வறுமையாய்க் காட்டினையாய்க் கொள்ளுதற்கு

வல்லார் கிழான் பண்ணனைச் சோழநாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார் பாடியது.
இவர் பாடிய இன்னொரு புறப்பாடலில் (புறம் 265) கரந்தைப் போரில் மாய்ந்து நடுகல்லாய் நிற்கும்
ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.அவன் இந்தப் பண்ணனாக இருத்தல் வேண்டும் என்பது உரைவேந்தர்
ஔவை அவர்களின் கருத்து.

6

பெரும்பெயர்
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தி – புறம் 388/3,4

பெரிய புகழையுடைய சிறுகுடிக்கு உரியனாகிய பண்ணனைப் பொருந்தி

சிறுகுடி கிழார் பண்ணனை, மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார் பாடியது.
இவன் பாண்டியநாட்டுச் சிறுகுடிக் கிழான் பண்ணன்.

மேல்


பண்ணியம்

(பெ) 1. தின்பண்டம், eatables
2. வணிகப்பொருள்கள், merchandise

1.1

பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர்
மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர – மது 405,406

பல வேறுபட்ட தின்பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவரும்,
மலை போன்ற மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க –

1.2

காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ் நறும் பூவொடு மனை_மனை மறுக – மது 422,423

விருப்பம் மருவிய வடிவினையுடைய நுகர்வோர் விரும்பும் பண்ணியங்களை
கமழ்கின்ற நறிய பூவோடு மனைகள்தோறும் எடுத்துச்செல்ல

1.3

பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு_உறுப்ப – மது 661

பலவாய் வேறுபட்ட பண்டங்களையுடைய கடைகள் மெழுகுதல் செய்யப்பட,

1.4

பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும் – பட் 203

(பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும்

1.5

குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும் – பரி 19/38

குரங்குகளுக்கு உண்பதற்காகப் பலகாரங்கள் கொடுப்போரும்,

2.1

பெரும் கடல் நீந்திய மரம் வலி_உறுக்கும்
பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ – பதி 76/4,5

பெரிய கடலில் சென்றுவந்த மரக்கலத்தினைப் பழுதுநீக்கி மீண்டும் வலிமைப்படுத்தும்
பொருள்கள் விற்கும் கடல்வாணிகர் போலப் போரில் ஏற்பட்ட புண்களை ஆற்றி,

2.2

மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு
சிறந்த தேஎத்து பண்ணியம் பகர்நரும் – மது 504-506

மலையிடத்தனவும், நிலத்திடத்தனவும், நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய
பல் வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு 505
— சிறந்த (அயல்)நாட்டுப் பண்டங்களை விற்போரும்

2.3

வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல் – நற் 31/8,9

வேறு பல நாடுகளினின்றும் காற்றுத் தர வந்துசேர்ந்த
பல வகைப்பட்ட பண்டங்கள் வந்து இறங்கும் நிலாவையொத்த மணற்பரப்பிலுள்ள

2.4

பல் வேறு வகைய நனம் தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் – பதி 59/14,15

பல்வேறு வகைப்பட்ட அகன்ற நாடுகளிலிருந்து வந்து குவிந்த,
மலையில் கிடைப்பனவும், கடலில் கிடைப்பனவும் ஆகிய பொருள்களைப் பகிர்ந்தளிக்கும்

2.5

மண்ணுவ மணி பொன் மலைய கடல்
பண்ணியம் மாசு அறு பயம் தரு காருக
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார் – பரி 23/23-25

மஞ்சனமாடுதற்குரியவை, மணி, பொன், மலையில் கிடைப்பவை, கடலில்
கிடைக்கும் பொருள்கள், குற்றமற்ற வகையில் பயன்தரக்கூடிய நெசவுப்பொருள்கள் ஆகியவற்றை வணிகம்
செய்யும்
அறவுணர்வுடைய வணிகர்கள் முறையாக அமைந்த தெருக்கள்; ஒருபக்கம்

மேல்


பண்ணு

1. (வி) 1. இசை வாசி, sing in an instrument, as tune
2. ஆயத்தம்செய், make ready
3. அலங்கரி, adorn
4. சமை, cook
5. வெட்டு, cut
6. செய், do
– 2. (பெ) பண், இசை, melody-type

1.1

சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி
யாழோர் மருதம் பண்ண – மது 657,658

தாள அறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத் தெரித்து,
யாழோர் மருதப்பண்ணை இசைக்க

1.2

பூ நுதல் யானையோடு புனை தேர் பண்ணவும் – புறம் 12/2

பட்டம் பொலிந்த மத்தகத்தையுடைய யானையுடனே அலங்கரிக்கப்பட்ட தேரினை ஏறுதற்கேற்ப அமைக்கவும்,

1.3

வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18

குதிரைகளின் அலங்காரக் கலன்களை யானைகளுக்கு ஒப்பனையாக மாட்டவும்

1.4

புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும் – மது 533

புகழ்ந்து கூறுமாறு சமைத்த பெரிய இறைச்சிகள் கலந்த சோற்றையும்,

1.5

தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணிய
நன்னர் மெல் இணர் புன்னை போல – அகம் 145/12,13

பழைமை பொருந்திய பரிய அடியுடன் துணியும்படி வெட்டிய
நன்றாகிய மெல்லிய பூங்கொத்துக்களையுடைய புன்னை போல்

1.6

கண்ணியர் தாரர் கமழ் நறும் கோதையர்
பண்ணிய ஈகை பயன் கொள்வான் ஆடலால் – பரி 16/50,51

தலையில் கண்ணியையும், கழுத்தில் மாலையையும் சூடிய ஆடவரும், மணங்கமழும் மாலையணிந்த
மகளிரும்,
செய்த ஈகையின் பயனைப் பெறுவதற்காக, நீராடுதலால்

2

ஏழ் புணர் சிறப்பின் இன் தொடை சீறியாழ்
தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப பண்ணு பெயர்த்து – மது 559,560

(இசை)ஏழும் தன்னிடத்தே கூடின சிறப்பினையுடைய இனிய நரம்பினையுடைய சிறிய யாழை,
தாழ்ந்து (அதன்)அயலே (பாடும் தம்)மிடற்றுப் பாடல் ஒப்ப, பண்களை மாறிமாறி இசைத்து(சுருதி கூட்டி),

மேல்


பண்ணுந

(பெ) அலங்கார அணிகலன்கள், ornamentals

வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18

குதிரைகளின் அலங்காரக் கலன்களை யானைகளுக்கு ஒப்பனையாக மாட்டவும்

மேல்


பண்ணை

(பெ) 1. மகளிர் நீர்விளையாட்டு, girls’ water play
2. இசை, melody-type
3. ஒருவகைக் கீரை, a kind of greens

1

கரை சேர் மருதம் ஏறி
பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே – ஐங் 74/3,4

கரையைச் சேர்ந்த மருதமரத்தில் ஏறி,
நீருக்குள் பாய்பவளின் குளிர்ந்த நறிய கூந்தல்.

2

வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே – பரி 14/4

நிறம் மிக்க வண்டுகள் எழுப்பும் இசை, பண்களைப் போன்றிருந்தனவே!

3

பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப – அகம் 393/9

பண்ணைக்கீரையின் வெள்ளிய பழத்தின் விதையை ஒப்ப

மேல்


பணவை

(பெ) பரண், watch tower

கானவர்
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 225,226

காட்டில் வாழ்வோர்
வானத்தைத் தீண்டுகின்ற (தம்)பரணில் தீக்கொள்ளிகளை மூட்ட,

மேல்


பணி

1. (வி) 1. குனிந்து வணங்கு, make obeisance to
2. கீழ்ப்படி, அடங்கு, கட்டுப்படு, be submissive, compliant
3. ஆணையிடு, கட்டளையிடு, order, command
4. கீழ்ப்படியச்செய், அடக்கு, கட்டுப்படுத்து, make submissive, compliant
5. அழி, சிதை, trample on, stamp on
6. தாழ்த்து, lower
7. தாழ், be lowered
– 2. (பெ) 1. வினை, செயல், act, deed, work
2. பணிமொழி, கீழ்ப்படிதலுள்ள பேச்சு, submissive talk
3. ஏவல், கட்டளை, order, command
4. ஆபரணம், அணிகலன், ornament

1.1

சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
—————————————— ————-
மாயோன் ஒத்த இன் நிலைத்தே
சென்று தொழுகல்லீர் கண்டு பணி-மின்மே – பரி 1523-/34

சோலை என்ற சொல்லோடும் தொடர்மொழியாக வருகின்ற மாலிருங்குன்றம்
———————————————- ———-
திருமாலைப் போன்ற இனிய நிலையினைக் கொண்டிருக்கிறது;
அங்குச் சென்று தொழுதுகொள்ளுங்கள்! அதனைக் கண்டு பணிந்துகொள்ளுங்கள்!

1.2

ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன் கலம் – அகம் 127/6,7

பகைவர்
கட்டுப்பட்டு திறையாகத் தந்த பெருமைசான்ற நல்ல அணிகலன்கள்

1.3

நாடுகோள்
அள்ளனை பணித்த அதியன் பின்றை
வள் உயிர் மா கிணை கண் அவிந்தாங்கு – அகம் 325/7-9

நாட்டினைக்கொள்ளுமாறு
அள்ளன் என்பானைப் பணித்த அதியன் என்பான் துஞ்சிய பின்னர்
சிறந்த ஒலியினையுடைய பெரிய கிணையானது ஒலி அடங்கினாற்போல

1.4

பணியார் தேஎம் பணித்து திறை கொள்-மார் – மது 230

(தமக்குப்)பணியாதோர் நாடுகளைப் பணியச்செய்து (அவரின்)திறையைக் கொள்ள,

1.5

மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து – பதி 44/14,15

பகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி,
அவன் கூறிய வஞ்சினத்தைச் சிதைத்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை
அடியோடு வீழ்த்தி

1.6

செல்வ கடுங்கோ வாழியாதன்
என்னா தெவ்வர் உயர் குடை பணித்து – புறம் 387/30,31

செல்வக்கடுங்கோ வாழியாதன்
என்று தன் பெயர் கூறிய அளவில் பகைவர் தம்முடைய உயர்ந்த கொற்றக்குடையைத் தாழ்த்தி

1.7

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 146

மேகலையை அணிந்த தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ள அல்குலையும்,

2.1

பணி குறை வருத்தம் வீட – குறு 333/5

வினையின் குறையால் உண்டாகிய உனது துன்பம் கெடும்பொருட்டு

2.2

பணி ஒரீஇ நின் புகழ் ஏத்தி – பரி 17/50

மனிதரைப்பாடும் பணிமொழிகளை ஒழித்து, உன் புகழைப் போற்றி,

2.3

வேற்று அரசு பணி தொடங்கு நின்
ஆற்றலொடு புகழ் ஏத்தி – புறம் 17/31,32

பகைவேந்தர் ஏவல் செய்யத் தொடங்குவதற்குக் காரணமான நினது
வலியுடனே புகழை ஏத்தி

2.4

முன்புற்று அறியா முதல் புணர்ச்சி மொய் குழலை
இன்புற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும்
நாண் எனும் தொல்லை அணி என்ன நன்_நுதலை – பரி 28/1-3

முன்னர் நுகர்ந்து அறியாத முதல் உறவினைக் கொண்ட திரண்ட கூந்தலினையுடையவளை,
அந்த உறவினால் இன்புற்றதால் ஏற்பட்ட இயற்கை அழகும், செயற்கை அழகூட்டும் அணிகலன்களும்,
நாணம் என்னும் பழைய அணியும் கொண்ட நல்ல நெற்றியையுடையவளை ..

மேல்


பணிபு

1. (வி.எ) பணிந்து, தாழ்ந்து, obeying, being submissive
– 2. (பெ) 1. பணிதல், bowing, paying obeisance
2. பணிமொழி, கீழ்ப்படிதலுள்ள பேச்சு, submissive talk

1

பல் ஒளியர் பணிபு ஒடுங்க – பட் 274

பலராகிய ஒளிநாட்டார் தாழ்ந்து (தம்)வீரம் குறைய,

2.1

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே – பதி 63/1

பார்ப்பனரைத் தவிர பிறரைப் பணிதலை அறியாய்;

2.2

பணிபு ஒசி பண்ப பண்டு எல்லாம் நனி உருவத்து – பரி 6/63

“பணிமொழியொடு குறுகிநிற்கும் பண்பாளனே! முன்பு நீ கொண்டுவந்ததெல்லாம் சிறந்த உருவத்தைக்
கொண்டிருந்தது,

மேல்


பணியம்

(பெ) பண்ணியம், பலகாரம், eatables

கூழ் உடை கொழு மஞ்சிகை
தாழ் உடை தண் பணியத்து
வால் அரிசி பலி சிதறி – பட் 163-165

(தானிய மாவுக்)கூழையுடைய நிறைந்த பாத்திரத்தையும்,
வழிபாட்டுடன் (பரப்பிய)குளிர்ந்த பண்ணியங்களையும்(வைத்து)
வெண்மையான அரிசியையும் பலியாகத் தூவி,

மேல்


பணிலம்

(பெ) சங்கு, conch

பறை பட பணிலம் ஆர்ப்ப – குறு 15/1

முரசு முழங்க, சங்கு ஒலிக்க,

மேல்


பணீஇயர்

(வி.எ) பணியச்செய்வதற்காக, in order to humble

கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர்
வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்து அன்ன – நற் 10/6-8

வெற்றியையுடைய சோழர்கள் கொங்குநாட்டாரைப் பணியச் செய்வதற்காக
வெண்மையான கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட போர் என்ற ஊருக்குரியவனான
பழையன் என்பானை ஏவ, அவனது வேற்படை பொய்க்காமல் வெற்றிபெற்றதுபோல

மேல்


பணை

1. (வி) 1. குறிதப்பு, பிழைத்த, தவறு, miss, err, fail
2. பெருத்திரு, பருத்திரு, be thick, be large
– 2. (பெ) 1. பெரிய தன்மை, largeness, bigness
2. மூங்கில், bamboo
3. விளைநிலம், cultivated fields
4. பெருமை, greatness, excellence
5. முரசம், drum
6. குதிரை இலாயம், stable
7. பருமை, rotundness

1.1

அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன் – நற் 165/1-2

மருண்ட பார்வையையுடைய காட்டுப்பசுவின் அரிய மார்பினில் பாயாது
குறிதப்பிய அம்பின் போக்கை நினைத்துப்பார்த்த கானவன்,

1.2

நகுவர பணைத்த திரி மருப்பு எருமை – அகம் 206/3

விளங்குதலுறப் பெருத்த முறுக்குண்ட கொம்பினையுடைய எருமையின்

பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற – மது 601

பருத்து உயர்ந்த இளைய முலை பால் சுரக்க,

2.1

ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை – பொரு 32

அசைகின்ற மூங்கில் (போன்ற)பெருத்த தோளினையும், ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும்,

2.2

அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 149

அழகான மூங்கில் (போலத்)திரண்ட மெல்லிய தோளினையும், (மொட்டுப்போல்)குவிந்த முலை

2.3

தண் பணை தழீஇய தளரா இருக்கை – பொரு 169

குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய

2.4

பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர் – மது 234

பெருமைகொண்ட பெரிய வலிமையுள்ள, பல வேல்களைக் கொண்ட மன்னர்கள்,

2.5

முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல – மது 362

முழங்கும் ஓசையையுடைய நல்ல முரசத்தைச் சாற்றுபவர் செய்திகூற,

2.6

பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட – மது 660

கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மெல்ல,

2.7

மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் – நற் 392/3-5

வீட்டில் அழுது ஓய்ந்த புல்லிய தலையை உடைய சிறுவர்கள்
கூட்டாக முயன்று பெற்ற இனிய கண்ணையுடைய நுங்கைத்
தாயின் பருத்த கதகதப்பான கொங்கையை உண்ணுவதுபோலச் சுவைத்து உண்டு மகிழும்

மேல்


பணையம்

(பெ) பணயம், ஈடு, pledge

கரும் கோட்டு சீறியாழ் பணையம் – புறம் 316/7

கரிய கோட்டையுடைய சிறிய யாழைப் பணயமாக வைக்கின்றோம்.

மேல்


பத்தர்

(பெ) பார்க்க : பத்தல்
1. தொட்டி, பள்ளம்

பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர்
புன் தலை மட பிடி கன்றோடு ஆர – நற் 92/6,7

பயன்தரும் ஆநிரைகளுக்காக எடுத்து வைத்த தெளிந்த நீருள்ள தொட்டியில்
புல்லிய தலையையுடைய இளைய பெண்யானை தன் கன்றுடன் வேட்கைதீர
2. குடுவை, யாழின் குடம்

யாழ் பத்தர் புறம் கடுப்ப – புறம் 136/1

யாழின் குடத்தின் வெளிப் பக்கத்தைப் போல

மேல்


பத்தல்

(பெ) 1. தொட்டி, trough for watering animals, குழி, பள்ளம், ditch, depression
2. யாழின் குடம், a pot like structure in a yAzh
3. கொப்பரை, cauldron

1

கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வௌவும் – நற் 240/7-9

குந்தாலியால் குழிவு ஏற்படுத்திய கிணற்றை அடைந்து
பசுக்களை நடத்திச்செல்பவர்கள் தோண்டிய குழிவான பள்ளத்தின் நீரை
யானைகளின் கூட்டமான திரள் கவர்ந்துண்ணும்

நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய் பத்தல் வார்ந்து உகு சிறு குழி – அகம் 155/8-9

நீண்ட சீழ்க்கை ஒலியையுடைய கோவலர் தோண்டிய கிணற்றினின்றும் முகந்த
வளைந்த வாயினையுடைய பாத்திரத்திலிருந்து நீர் வடிந்து செல்லும் சிறிய குழி

2

குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்
விளக்கு அழல் உருவின் விசி_உறு பச்சை – பொரு 4,5

(மானின்)குளம்பு (பதிந்த)இடத்தைப் போன்று பகுக்கப்பட்ட (இரண்டு பக்கமும் தாழ்ந்து நடுவுயர்ந்த)குடத்தையும்;
விளக்குப் பிழம்பின் (நிறத்தை ஒத்த)நிறமுடையதும் விசித்துப் போர்க்கப்பட்டதும் ஆகிய தோல்,

3

அரிநர் கொய்வாள் மடங்க அறைநர்
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த – பதி 19/23

விளைந்த நெல்லை அறுப்போரின் அரிவாள் மழுங்கிப்போக, கரும்பு ஆட்டுவோரின்
சாறு பிழியும் எந்திரத்தின் கொப்பரை வருந்த,

மேல்


பதடி

(பெ) பயனின்மை, futility

எல்லாம் எவனோ பதடி ———
——————- —————- —————-
அரிவை தோள் அணை துஞ்சி
கழிந்த நாள் இவண் வாழும் நாளே – குறு 323

மற்ற எல்லா நாட்களும் என்ன பயனை உடையன? அவை வெற்று நாட்கள்; ————–
——————- —————- —————-
காதலியின் தோளே அணையாகக் கொண்டு உறங்கிக்
கழிந்த நாட்கள் மட்டுமே இங்கு வாழ்கின்ற நாட்கள்

மேல்


பதணம்

(பெ) கோட்டை மதிலுள் அமைந்த உயர்ந்த மேடை, raised terrace of a fort, rampart

நெடு மதில் நிரை பதணத்து
அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த – பதி 22/25,26

நெடிய மதிலில் வரிசையாய் அமைந்த உயர்ந்த மேடைகளையும் கொண்ட,
பெருமை மிக்க அழகிய பெரிய சிகரங்களைக் கொண்ட அகப்பா என்னும் கோட்டையை அழித்த

மேல்


பதப்பர்

(பெ) வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்கோட்டை, Heaped sand to prevent inroads of flood;

வெண் தலை செம் புனல் பரந்து வாய் மிகுக்கும்
பல சூழ் பதப்பர் பரிய வெள்ளத்து
சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம் – பதி 30/17-19

வெண்மையான நுரையை முகப்பினில் கொண்ட சிவந்த புதுவெள்ளம் பரந்து ஓரங்களை உடைத்துச் செல்லும்
இடங்களில்
பல வைக்கோல் புரிகள் சூழக் கட்டிய மணல் தடுப்புகளும் கரைந்துபோக, அந்த வெள்ளத்தை
அணையிட்டுத் தடுக்கும் ஆரவாரத்தோடு விரும்பிநிற்கும் மக்கள் கூட்டம்,

மேல்


பதம்

(பெ) 1. பக்குவம், பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மை,
required degree of hardness or softness, quality or fitness
2. வேகவைத்த உணவு, சோறு, cooked food, boiled rice
3. செவ்வி, தகுந்த தருணம், opportune moment
4. ஈரம், moisture, dampness
5. தரம், capacity

1

புலர் பதம் கொண்டன ஏனல் குரலே – நற் 259/10

காய்ந்து புலரும் பக்குவத்தை எய்தின தினையின் கதிர்கள்.

2

செழும் பல் யாணர் சிறு குடி படினே
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் – மலை 156,157

வளப்பம் மிக்க பல்வித புதுவருவாயையுடைய சிறிய ஊரில் தங்கினால்,
(அலைச்சலால்)கறுத்துப்போன பெரிய சுற்றத்துடன் பக்குவமாக வேகவைத்த அவ்வுணவை நிறையப் பெறுவீர்

அவிழ் பதம் கொள்க என்று இரப்ப – பொரு 112

‘நன்றாக வெந்த சோற்று உணவை(யும்) கொள்வாயாக’ என்று வேண்ட,

3

ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி – நற் 331/2

ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகளைச் செலுத்தும் உப்புவணிகர் வருகின்ற வேளையைப் பார்த்து

அரும் கடி காவலர் இகழ் பதம் நோக்கி – அகம் 162/7

அரிய காத்தல் தொழிலையுடைய காவலர் சோம்பியிருக்கும் தகுந்த நேரத்தைப் பார்த்து

4

மலை இடம்படுத்து கோட்டிய கொல்லை
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் – நற் 209/1,2

மலைப்பக்கத்தை விசாலமாக்கி உருவாக்கிய கொல்லையில்
மழையால் ஈரப்பதம் பெற்ற காட்டை உழும் குறவர்

5

இழை அணிந்து
புன் தலை மட பிடி பரிசிலாக
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் – புறம் 151/3-5

ஆபரணங்களை அணிந்து
புல்லிய தலையையுடைய மெல்லிய பிடியைப் பரிசிலாகக் கொண்டு
அவர் பெண்டிரும் தம் தரத்திலே பரிசில்கொடுக்கும்

மேல்


பதலை

(பெ) மத்தளம், a kind of drum

பதலை ஒரு கண் பையென இயக்கு-மின் – புறம் 152/17

பதலையின் ஒரு முகத்தை மெல்லெனக் கொட்டுமின்

மேல்


பதவு

(பெ) அறுகம்புல், bermuda grass

இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலை பதவின் செம் கோல் மென் குரல்
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி – அகம் 34/4-6

பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடைய பெருமை தங்கிய ஆண்மான்
செறிவாக அமைந்த இலைகளையுடைய அறுகம்புல்லின் சிவந்த தண்டினோடு மெல்லிய கொத்துக்களை
குட்டிகள் விளையாடும் பக்கத்தினையுடைய இளைய பெண்மானை தின்னச்செய்து

மேல்


பதவு

பதன் – (பெ) பார்க்க : பதம்

1. பக்குவம்

பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய
சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள் – குறு 261/1,2

பழைய மழை பொழிந்ததாக, சரியான பக்குவம் கெட்டு விழுந்த
உள்ளீடற்ற காயையுடைய எள் பயிருக்கான சிறிதளவு மழைபெய்யும் கார்காலத்து இறுதிநாட்களில்
2. சோறு

தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர் – அகம் 79/1

தோளிலே தொங்கவிடும் சோற்று முடியைக் கோத்த வலிய கையினையுடைய ஆடவர்கள்
3. செவ்வி, தக்க தருணம்

அரும் கடி காவலர் சோர் பதன் ஒற்றி – அகம் 2/14

கடும் காவலையுடைய காவலர்கள் சோர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு

மேல்


பதாகை

(பெ) பெருங்கொடி, large flag

பலர் புகு மனை பலி புதவின்
நறவு நொடை கொடியொடு
பிறபிறவும் நனி விரைஇ
பல் வேறு உருவின் பதாகை நீழல் – பட் 179-182

(கள்ளுண்போர்)பலரும் செல்லும் மனைகளில் (தெய்வத்திற்குக் கொடுக்கும்)பலிகளுக்கான வாசலில்
கள் விற்பனைக்காகக் கட்டிய கொடியுடன்,
ஏனையவற்றிற்குக் கட்டின கொடிகளும் மிகவும் கலந்துகிடப்பதால்,
பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய பெருங்கொடிகளின் நிழலில்

மேல்


பதி

1. (வி) 1. அழுந்தக் கிடத்து, insert, ingraft
2. ஆழ்த்து, sink
– 2. (பெ) 1. ஊர், village, town
2. இருப்பிடம், உறைவிடம், dwelling place

1.1

தொடலை வாளர் தொடுதோல் அடியர்
குறங்கு இடை பதித்த கூர் நுனை குறும்பிடி – மது 636,637

தொங்குதல் (உள்ள)வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்;
தொடையில் (தெரியாமற்கிடக்கும்படி)அழுத்தின கூரிய முனையையுடைய குறுகிய பிடியமைந்த
உடைவாளையும்,

1.2

அறு சுனை முற்றி
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு – கலி 12/3-5

நீர் வற்றிப்போன சுனையைச் சுற்றிநின்று,
ஒருசேர நீர்வேட்கை கொண்டதால், உடல் வருந்திய யானைகள்
விரைவாகத் தம் துதிக்கைகளை நீரில் ஆழ்த்த, அதனால் தம் கைகள் சுடப்பட்டு

2.1

பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பெரும் 65

பல எருதுகளையுடைய உப்புவாணிகர் ஊர்களுக்குச் செல்லுகின்ற நெடிய வழி

2.2

விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர – குறி 46

வானத்தில் அலையும் பறவைகள் தாம் விரும்பும் இருப்பிடங்களுக்குச் செல்லும்படியாக,

மேல்


பதிபழகு

(வி) ஓர் ஊரில் நெடுநாள் தங்கியிரு,
stay in a place for a long time, get acquainted with a place

பல் ஆயமொடு பதிபழகி
வேறு_வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல் – பட் 213,214

பல்வேறுபட்ட மக்கட்கூட்டத்தோடு பல நாடுகளிலும் சென்று பழகி
வெவ்வேறான உயர்ந்த அறிவுகள் நிரம்பப்பெற்ற சுற்றத்தினையுடையவராகிய சான்றோர்

பதி முதல் பழகா பழங்கண் வாழ்க்கை – புறம் 393/1

தொடக்க முதலே ஓரிடத்தில் தங்கி அதனைப் பழகியறியாத துன்ப வாழ்க்கையில்

போது அறியேன் பதி பழகவும் – புறம் 400/14

அவன் ஊர்க்கண்ணே இருந்தேனாகவும் கழிந்த நாட்களை அறியேனாயினன்

மேல்


பதிவதம்

(பெ) பதிவிரதம், கணவனுக்காக மனைவியர் மேற்கொள்ளும் நோன்பு,
ceremonial fasting by wives for the welfare of their husbands

பதிவத மாதர் பரத்தையர் பாங்கர் – பரி 10/23

பதிவிரதம் இருக்கும் கற்புடைய மகளிரும், பரத்தையரும், அவருக்குத் தோழியரும்,

மேல்


பதிற்று

(பெ) பத்து, ten

பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல் – பரி 3/40

பத்துக் கைகளைக் கொண்ட மிகுந்த வலிமை கொண்டவனே! நூறு கைகளைக் கொண்ட ஆற்றலாளனே!

மேல்


பதின்மர்

(பெ) பத்துப்பேர், ten persons

ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை
காமுற்று செல்வாய் ஓர் கண்_குத்தி_கள்வனை – கலி 108/48,49

பசுவை வெறுக்காத காளையைப் போல், நாள் ஒன்றுக்குப் பத்துப்பேரைக்
காமுற்று அவர் பின் செல்பவனான நீ, விழித்திருக்கும்போதே கண்ணைக் குத்தும் கள்வன்!

மேல்


பதுக்கு

(பெ) பதுக்கை, கற்குவியல், pile of stones

உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் – அகம் 289/2

உயர்ந்த கற்குவியல்களில் ஏறிப்படர்ந்த நெருங்கிய கொடியாகிய காட்டு மல்லிகை

மேல்


பதுக்கை

(பெ) 1. கற்குவியல், pile of stones
2. இலைக்குவியல், heap of leaves
3. திட்டு, மேடு, raised ground

1

இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை – அகம் 91/10

ஆண்மான்கள் தங்கும் பரலையுடைய உயர்ந்த கற்குவியலில்

2

வெம் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை – குறு 77/2,3

வெம்மையான நிலத்தில்
கொல்லப்பட்ட பயணியரின் தழையிட்டு மூடிய குவியல்

3

பரல் உடை மருங்கின் பதுக்கை சேர்த்தி – புறம் 264/1

பருக்கைக்கற்களையுடைய இடத்து மேட்டைச் சேர்த்தி

மேல்


பதுமம்

(பெ) தாமரை, lotus

பதுமத்து பாயல்
பெரும் பெயர் முருக – பரி 5/49,50

தாமரைப்பூவாகிய படுக்கையில்,
பெரிய புகழினை உடைய முருகனே!

மேல்


பதை

(வி) பதற்றப்படு, be flurried

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப ததைந்த நெய்தல் – ஐங் 155/1-3

வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக,
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
சிறகடித்து அங்குமிங்கும் பறந்துதிரிவதால் சிதைந்துபோன நெய்தல் மலர்

மேல்


பதைப்பு

(பெ) துடிதுடிப்பு, quivering with extreme pain

பாம்பு பதைப்பு அன்ன பரூஉ கை துமிய – முல் 70

மேல்


பதைபதைப்பு

(பெ) மோசமான ஒரு நிகழ்வால் ஒருவருக்கு ஏற்படும் பயமும் கலக்கமும் நடுக்கமும்
கூடிய உணர்வு, பதற்றம், throbing through pain, fear or grief, being in anguish

பரு கோட்டு யாழ் பக்கம் பாடலோடு ஆடல்
அருப்பம் அழிப்ப அழிந்த மன கோட்டையர்
ஒன்றோடு இரண்டா முன் தேறார் வென்றியின்
பல் சனம் நாணி பதைபதைப்பு – பரி 10/56-59

பெரிய தண்டினையுடைய யாழின் இசையும், பாடலுடன் ஆடலும்
ஊடியிருந்தவரின் மனவுறுதியை அழிக்க, இவ்வாறு மனம் என்னும் கோட்டை அழிந்துபோன மைந்தரும்,
மகளிரும்,
மனம் ஒன்றுபட்டு, முன்பு இரண்டாக விளங்கிய நிலைமை கெடத் துணியமாட்டார், ஊடலில்
வெல்லவேண்டும் என்ற எண்ணத்தில்,
அவர்கள் அங்குத் திரண்டிருந்த பலவகை மக்களால் வெட்கப்பட்டனர், மனம் பதைபதைத்தனர்,

மேல்


பந்தர்

(பெ) 1. பந்தல்,
shed with a flat roofcovered with plaited coconut leaves or other branches with leaves
2. முத்துக்களுக்கு பேர்போன ஒரு சங்ககால ஊர்,
a town in sangam period famous for its pearls.

1

செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர் – பெரும் 297

கொழுத்த கன்றைக் கட்டின சிறிய கால்களையுடைய பந்தல்

குரை இலை போகிய விரவு மணல் பந்தர் – நற் 40/2

ஒலிக்கும் தென்னங்கீற்று வேய்ந்து, பரப்பிய மணலைக் கொண்ட பந்தலில்,

2

பந்தர் பெயரிய பேர் இசை மூதூர் – பதி 67/2

பந்தல் என்ற பெயரைக் கொண்ட பெரிய புகழ்படைத்த முதிய ஊரைச் சேர்ந்த

பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம் – பதி 74/6

பந்தல் என்ற ஊர் தந்த பலரும் புகழும் முத்துக்களையும்,

மேல்


பம்பு

(வி) அடர்ந்திரு, செறிந்திரு, be close, dense, crowded

சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி – பட் 256

சிறிய பூக்களையுடைய நெருஞ்சியோடு அறுகம்புல் அடர்ந்து பரவப்பெற்று,

மேல்


பம்பை

(பெ) இரண்டு பக்கங்களைக்கொண்ட இரண்டு பறைகளின் இணைப்பு,
a pair of two headed drums joined together

கடும் குரல் பம்பை கத நாய் வடுகர் – நற் 212/5

கடும் ஒலியையுடைய பம்பை எனும் பறையையும் சினங்கொண்ட நாய்களையும் கொண்ட வடுகரின்

மேல்


பய

1. (வி) 1. பயன்கொடு, be beneficial
2. கொடு, give
3. பெற்றெடு, beget
4. இயற்று, உருவாக்கு, படை, produce, create, make
5. உண்டாக்கு, விளைவி, cause
6. பலனாக அமை, விளைவுறு, yield, result in
7. பசந்துபோ, காதல்நோயினால் நிறம் மங்கு, turn sallow through affliction;
– 2. (வி.அ) மெல்ல, பைய என்பதன் குறை, slowly

1.1

நன் மலை நாடன் பிரிதல்
என் பயக்கும்மோ நம் விட்டு துறந்தே – ஐங் 268/4,5

நல்ல மலைநாடன் பிரிந்து செல்வது
என்ன பயனைத் தருமோ? நம்மைத் தனியே விட்டுவிட்டுத் துறந்து –

1.2

நய_தகு மரபின் விய_தகு குமர
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்து தலை நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை
பயத்தலின் சிறக்க நாள்-தொறும் பொலிந்தே – பரி 9/82-85

விரும்பத்தகுந்த பண்பினையுடைய வியக்கத்தக்க குமரவேளே!
உன்னை வாழ்த்துகின்றோம்! புகழ்கின்றோம்! தலைகளைத் தாழ்த்தியவராய் உன்னை நாம்
விரும்புதலினால் சிறப்புற்று விழங்கும் எமது அடியுறை வாழ்வானது
நீ எமக்கு அருள்செய்வதனால் சிறந்து விளங்கட்டும் நாள்தோறும் மேலும் மேலும் அழகுபெற்று.

1.3

அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – திரு 255

அறுவராலே பெறப்பட்ட ஆறு வடிவு பொருந்தின செல்வனே

1.4

பூ விரி கச்சை புகழோன் தன்முன்
பனி_வரை மார்பன் பயந்த நுண் பொருள்
பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில் – சிறு 239-241

பூத்தொழில் பரந்த கச்சையினையுடைய புகழ்வாய்ந்தவன்(அருச்சுனன்) அண்ணனும்,
பனி மலை (இமயம்)(போன்ற)மார்பையுடையவனும் ஆகிய வீமசேனன் இயற்றிய நுணுகிய பொருளையுடைய,
சமையல்நூல் (நெறியில்)தப்பாத பலவிதமான அடிசிலை,

1.5

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன – பெரும் 83,84

நீண்ட தாளினையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்பு காய்த்த
பஞ்சினையுடைய அழகிய பசிய காயின் முதுகு விரிந்து தோன்றினதைப் போன்ற

1.6

விரவு பூ பலியொடு விரைஇ அன்னை
கடி உடை வியல் நகர் காவல் கண்ணி
முருகு என வேலன் தரூஉம்
பருவம் ஆக பயந்தன்றால் நமக்கே – அகம் 232/12-15

விரவிய பலவகைப் பூக்களாய பலியுடன் பொருந்து, தாயானவள்
காவல் பொருந்திய அகன்ற மலையின்கண் காத்தலைக் கருதி
வேறுபாடு முருகனால் உண்டாயதென்று வேலனை அழைக்கும்
காலமாக நமக்கு விளைந்தது.

1.7

பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணே – ஐங் 264/4

பசந்துபோயிருக்கின்றன நீ விரும்பியவளின் கண்கள்.

2

கை பய பெயர்த்து மை இழுது இழுகி – புறம் 281/3

கையை மெல்ல எடுத்து மையாகிய இழுதினை இட்டு

மேல்


பயந்தோள்

(பெ) ஈன்றவள், பெற்றெடுத்தவள், தாய், the woman who begot, mother

பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை – பரி 3/16

தன்னைப் பெற்ற தாயான விந்தையின் துன்பத்தைக் களைந்த கருடனை ஊர்தியாகக் கொண்டிருக்கிறாய்!

மேல்


பயப்பு

(பெ) பசப்பு, காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் ஏற்படும் நிறமாற்றம்,
Change of hue, as of the skin through love-sickness; turning sallow through affliction;

பயப்பு என் மேனியதுவே – குறு 219/1

பசலைநோய் என் மேனியில் இருக்கிறது; விருப்பமோ

மேல்


பயம்

(பெ) பயன், நன்மை, பலன், profit, gain, advantage

மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் – பெரும் 67,68

மலையில் உள்ளனவும், கடலில் உள்ளனவும்(ஆன) சிறந்த பயனைக் கொடுக்கும்
அரிய பொருளை (எல்லாரும்)நுகரச்செய்யும் திருத்தமான தம் வினையில் வலிய முயற்சியினையும்;

கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல் – மலை 47

குளத்தில் மூழ்கியதைப் போன்ற பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலில்,

மழையினும் பெரும் பயம் பொழிதி அதனால் – பதி 64/18

மழையைக் காட்டிலும் பெரிதான நன்மையினைப் பொழிகிறாய், அதனால்

மேல்


பயம்பு

(பெ) பள்ளம், குழி, depression, pit

மென் பூ வாகை புன் புற கவட்டு இலை
பழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகை – அகம் 136/10,11

மெல்லிய பூவையுடைய வாகையின் புல்லிய புறத்தினையுடைய கவர்த்த இலையை
முதிய கன்று கறித்த பள்ளத்தில் படர்ந்த அறுகினது

முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில்
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்பு-மார் உளவே – மலை 198,199

சரளைமேடுகளில் மேற்பரப்பு வெடித்து(உண்டான),கூழாங்கல்(நிறைந்த) ஆழமற்ற பள்ளங்கள்(உள்ள)பிளவுகளில்
மறைந்து பாம்புகள் சுருண்டுகிடக்கும் குழிகளும் உள்ளன;

மேல்


பயலை

(பெ) 1. பசலை, காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் ஏற்படும் நிறமாற்றம்,
Change of hue, as of the skin through love-sickness; turning sallow through affliction;
2. இளமை, youth

1

எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ
துவலை தண் துளி வீசி
பயலை செய்தன பனி படு துறையே – ஐங் 141

மணல் மேட்டினில் உள்ள ஞாழல் மரத்தின் பூ, செருந்திப்பூவுடன் கமழ்ந்திருக்க,
மழைத்தூவலாகக் குளிர்ந்த நீர்த்துளிகளை என் மேல் வீசி,
என்னைப் பசக்கும்படி செய்தன குளிர்ச்சியைத் தோற்றுவிக்கும் நீர்த்துறைகள்.

2

உயவல் ஊர்தி பயலை பார்ப்பான் – புறம் 305/2

வருத்தத்தால் ஊர்ந்து செல்வதுபோன்ற நடையினையும் இளமையினையும் உடைய பார்ப்பான்

மேல்


பயறு

(பெ) 1. பாசிப்பயறு, greengram

பயறு போல் இணர பைம் தாது படீஇயர் – குறு 10/2

பயற்றங்காய் போன்ற கொத்துக்களையுடைய இளம் பூந்தாதுகள் படியும்படி

மேல்


பயிர்

1. (வி) விலங்கு/பறவை இனங்கள் ஒன்றையொன்று ஒலிக்குறிப்பால் அழை,
call, as beasts or birds
– 2. (பெ) 1. நஞ்சை, புஞ்சை ஆகிய நிலங்களில் விளையும் தாவரம், crop
2. ஓசை, sound

1

மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர – குறி 217,218

மான் கூட்டம் மரத்தடிகளில் வந்து திரள, பசுக்களின் கூட்டம்
(தம்)கன்றுகளை அழைக்கும் குரலையுடையவாய் கொட்டில்கள் நிறையுமாறு நுழைய,

நாரை
ஐய சிறு கண் செம் கடை சிறு மீன்
மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை
தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் – நற் 91/4-7

நாரை
மெல்லிய சிறுகண்ணில் சிவந்த கடைக்கண்ணையுடைய சிறிய மீன்களைப் பிடித்து
மேலே ஓங்கி உயர்ந்த கிளையின் மீதிருக்கும் கூட்டிலிருந்து
தாயை அழைக்கும் குஞ்சுகளின் வாய்க்குள் கொடுக்கும்

செம் கால் பல்லி தன் துணை பயிரும்
அம் கால் கள்ளி அம் காடு இறந்தோரே – குறு 16/4,5

செம்மையான கால்களையுடைய பல்லி, தன்னுடைய துணையை அழைக்கும்
அழகிய அடியைக் கொண்ட கள்ளிகளை உடைய பாலைநிலத்தைக் கடந்து சென்றோர்.

2.1

தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிறல் தேரே – நற் 181/11,12

மாலை அணிந்த புரவி, பசுமையான பயிர்களை மிதித்து அழிக்க,
வந்தது தலைவனது தேர்,

2.2

கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 6,7

துளைகள் இடையிடையே விடப்பட்ட, யானையின் துதிக்கை போன்ற குழலமைப்புக்கொண்ட,
இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்,

மேல்

பயிர்ப்பு – (பெ) பிசின், resin

பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி – கலி 50/12

பல குலைகளையுடைய பலாவின் பிசினையுடைய இனிய பழம்

மேல்


பயில்

1. (வி) 1. அடர்ந்திரு, be thick, dense
2. பழகு, gain acquaintance
3. நடமாடு, move around, roam about
4. கல், கற்றறி, படி, learn by training and practice
– 2. (பெ.அ/வி.அ). பலகாலும், many a times

1.1

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து – திரு 42

மந்திகளும் ஏறிஅறியாத மரங்கள் செறிந்த பக்கமலையில்,

1.2

பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார்
செய்_பொருள் தரல் நசைஇ சென்றோர் – குறு 254/5,6

தாம் பழகிய மணமுள்ள கூந்தலில் படுத்திருந்ததையும் நினைத்துப்பார்க்காதவராய்,
ஈட்டுவதற்குரிய பொருளைக் கொண்டுவரும்படி விரும்பிச் சென்றோர்

1.3

மயில்_இனம் பயிலும் மரம் பயில் கானம் – அகம் 344/6

மயில்கள் உவகையுடன் உலாவும் மரங்கள் அடர்ந்த காட்டு நெறியில்

1.4

படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும் – பரி 16/12

ஓங்கியடிக்கும் கண்களைக் கொண்ட இசைக்கருவிகளின் ஒலியினையும், பாட்டினையும் கற்ற
கூத்துமகளிர் ஆடுகின்ற

2

ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
நீடு இன்று ஆக இழுக்குவர் – அகம் 18/11,12

இடையூறு இல்லாத வழிகளில்கூட, பலகாலும் போய்வருபவர்கள்
நீண்ட நாட்கள் அவ்வாறின்றித் தவறிவிடுவர்,

ஒருநாள் செல்லலம் இரு நாள் செல்லலம்
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ – புறம் 101/1-3

யாம் ஒருநாள் செல்லேம், இரண்டு நாள் செல்லேம்
பலநாளும் பலகாலும் பலரோடு கூடச்செல்லினும்
முதற்சென்ற நாள் போன்று விருப்பதை உடைய்

மேல்


பயில்வுறு

(வி) நன்கு துழாவப்படு, stirred well

அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று
இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர் – பெரும் 195,196

அவரை விதையின் (தோலுரித்த)வெண்மையான பருப்பை வேகவிட்டு, நன்கு கடையப்பட்டு
இனிய சுவையுள்ள பருப்புச்சோறைப் பெறுவீர்

மேல்


பயிற்று

(வி) 1. பலமுறை செய், do repeatedly
2. நெருங்கி அடை, கெழுமு, get close, approach
3. கற்பி, கற்றுக்கொடு, teach, instruct
4. பழக்கு, give practice
5. செய், do, perform
6. வாழச்செய், rehabilitate

1

ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 222

ஆம்பல் எனும் பண்ணினையுடைய இனிய குழலில் தெளிந்த இசையைப் பலகாலும் எழுப்ப

2

குருந்து அவிழ் குறும்_பொறை பயிற்ற
பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே – நற் 321/9,10

குருந்த மரங்கள் பூத்து நிற்கும் காட்டை நெருங்கிவர
பெருத்த ஆரவாரத்தையுடைய நமது பழமையான ஊரின் மரங்கள் தெரிகின்றன.

3

பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா
பெருந்தகாய் கூறு சில – கலி 81/12-15

பெரிய தெருவில் உன்னைச் சீராட்டி உன் செவிலித்தாய்மார் சொல்லிக்கொடுக்க,
திருத்தமாக நீ கற்ற சொற்களை நான் கேட்கும்படி,
மருந்தறியாமல் துயருற்ற என் நெஞ்சிற்கு அமிழ்தம் உண்டதைப் போல
பெருந்தகையே! சிலவற்றைக் கூறுவாயாக!

4

முற்றத்து
கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா
ஆல்_அமர்_செல்வன் அணி சால் பெரு விறல்
போல வரும் என் உயிர் – கலி 81/7-10

முற்றத்தில்
வலுவான சக்கரங்கள் கொண்ட உருட்டு வண்டியைக் கையினால் தள்ளிக்கொண்டு, நடை பழகுகின்ற
ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் இறைவனின் அழகு அமைந்த மகனான முருகனைப்
போல வருகின்ற என் உயிரே!

5

புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே
அகன் பெரும் சிறப்பின் தந்தை_பெயரன்
முறுவலின் இன் நகை பயிற்றி
சிறு_தேர் உருட்டும் தளர் நடை கண்டே – ஐங் 403

தான் மணந்த காதலியின் மேல் மட்டுமல்லாது, தன்னுடைய புதல்வனிடத்தும்
அன்புகொண்ட உள்ளம், விரிந்து நிற்கிறது –
மிகப் பெரிய சிறப்பினைக் கொண்ட தன் தந்தையின் பெயரைத் தாங்கியவன்
முறுவலோடுங் கூடிய இனிய நகைப்பினை எழுப்பியவாறு
நடை வண்டியை உருட்டியபடியே வரும் தளர்ந்த நடையைக் கண்டு

6

படு பிணம் பிறங்க நூறி பகைவர்
கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே – பதி 69/9,10

வெட்டுப்பட்டு விழுகின்ற பிணங்கள் குவிந்து உயரும்படி பகைவர்களைக் கொன்று, அவரின்
கெட்டுப்போன குடிமக்களை வாழச்செய்த வெற்றி வேந்தனே!

மேல்


பயின்

(பெ) பிசின், கோந்து, resin, glue

இதையும் கயிறும் பிணையும் இரிய
சிதையும் கலத்தை பயினான் திருத்தும்
திசை அறி நீகானும் போன்ம் – பரி 10/53-55

பாயும், கயிறும், மரங்களும் பிடுங்கிக்கொண்டு சிதறிப்போக,
சிதைந்துபோன பாய்மரக்கப்பலை பிசின்கொண்டு சேர்த்துக்கட்டி சீர்திருத்தும்
திசையறிந்து ஓட்டும் நீகானின் செயலைப் போலிருந்தது;

பயின் என்றால் அரக்கு, சாதிலிங்கம் (vermilion) என்றும் கூறுவர்.

மேல்


பயினி

(பெ) ஒரு குறிஞ்சி நில மரம்,பூ, Indian copal tree, Vateria indica

பயினி வானி பல் இணர் குரவம் – குறி 69

பயின் என்றால் அரக்கு, சாதிலிங்கம் (vermilion) என்றும் கூறுவர்.
இது விளையும் மரம் பயினி எனப்படும் என்பர்.

மேல்


பர

(வி) பரவு, spread

அத்த இருப்பை ஆர் கழல் புது பூ
துய்த்த வாய துகள் நிலம் பரக்க
கொன்றை அம் சினை குழல் பழம் கொழுதி
வன் கை எண்கின் வய நிரை பரக்கும் – அகம் 15/15-18

அரிய சுரத்தில் உள்ள இலுப்பை மரத்தின் ஆர்க்கு கழன்ற புதிய பூக்களைத்
தின்ற வாயையுடைய, தூசி நிலத்தின்மேல் பரவும்படியாகக்
கொன்றை மரத்தின் கிளைகளில் உள்ள குழல் போன்ற பழத்தைத் தடவிக்கொடுத்து-
வலிய கையை உடைய கரடியின் வலிமை உள்ள கூட்டம் பரவலாகச் செல்லும்-

மேல்


பரங்குன்றம்

(பெ) திருப்பரங்குன்றம், thirupparangkundram, a small city near Madurai

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை – அகம் 59/11,12

சினம் மிகு முருகனது குளிர்ந்த திருப்பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்தன மரங்கள் மிக்க உயர்ந்த மலை

மேல்


பரடு

(பெ) கணுக்கால், ankle

பெரும் தோள் தொய்யில் வரித்தும் சிறு பரட்டு
அம் செம் சீறடி பஞ்சி ஊட்டியும் – அகம் 389/6,7

பெரிய தோளில் தொய்யில் எழுதியும், சிறிய கணுக்காலையுடைய
அழகிய சிவந்த சிறிய அடியில் செம்பஞ்சிக்குழம்பினைத் தடவியும்

பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப – பதி 52/20

பல மணிகளைக் கொண்ட இரண்டு சதங்கைகளும் தன் சிறிய கணுக்காலை வருத்த,

மேல்


பரணன்

(பெ) பரணர், ஒரு சங்க காலப் பெரும்புலவர், a great poet of the sangam period

சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும்
பரணன் பாடினன்-மன்-கொல் – புறம் 99/10-12

மேற்சென்று போரின்கண் வென்று நின் வலியைத் தோற்றுவித்த
அற்றை நாளும் பாடுவர்க்குப் பாட அரியை, இன்றும்
பரணன் பாடினன்.

பரணர் பாடிய 85 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இவர் தாம் பாடிய அகப்பொருள் பாடல்களிலும் அவர் காலத்தனவும்,
அவரது காலத்துக்கு முன்னர் நிகழ்ந்து தாம் அறிந்தனவுமாகிய
பல வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவர் வரலாற்றுப் புலவர் எனப் போற்றப்படுகிறார்.

மேல்


பரத்தமை

(பெ) பரத்தையருடன் (வேசியருடன்) கூடும் ஒழுக்கம், Consorting with harlots;

தண் துறை ஊரன் தண்டா பரத்தமை
புலவாய் என்றி தோழி புலவேன் – நற் 280/4,5

குளிர்ந்த ஆற்றுத்துறைகளைக் கொண்ட ஊரினனுடைய நீங்காத பரத்தைமை பொருட்டு
அவன் மீது பிணக்குக்கொள்ளவேண்டாம் என்கிறாய் தோழி! அவன் மீது கோபங்கொள்ளேன்

மேல்


பரத்தரு(தல்)

(வி) பரவு(தல்), spread(ing)

பழன உழவர் பாய் புனல் பரத்தந்து – பரி 7/39

வயல்களின் உழவர்கள் பாய்கின்ற வெள்ளத்தில் பரவிச் சென்றனர்;

தம் புல ஏறு பரத்தர உய்த்த தம்
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர் தழூஉ – கலி 106/31-33

தம்முடைய மேய்ச்சல் புலத்தில் காளைகளை மேய்வதற்காக பரவவிட்ட தம்
அன்பான காதலர்களின் கைகளைக் கோத்துக்கொண்டு, இடையர் மகளிர்
மகிழ்ச்சியுடன் ஆடத்தொடங்கினர் தழுவிக்கொண்டு( ஆடும் குரவைக்கூத்து)

பால் என பரத்தரும் நிலவின் மாலை – அகம் 259/9

பால் எனப் பரவிய நிலாவினைக்கொண்ட மாலைப்பொழுது

புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை – கலி 130/7

புன்மையான இருள் பரவத்தொடங்கும் வருத்தம் கொள்வதற்குக் காரணமான மயக்கத்தைத் தரும்
மாலை வேளை;

மேல்


பரத்தன்

(பெ) வேசிகளிடம் செல்பவன், one who goes to prostitutes

பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான்
இகலி இருப்பேன் – கலி 75/22,23

பகற்பொழுதெல்லாம் அங்குத் தங்குகிறாய், பரத்தைமை உடையவனே! என்று நான்
அவனோடு சண்டைபோடுவேன்

மேல்


பரத்தை

(பெ) வேசி, பொதுமகள், Harlot, strumpet, prostitute, courtesan

வேண்டேம் பெரும நின் பரத்தை
ஆண்டு செய் குறியோடு ஈண்டு நீ வரலே – ஐங் 48/4,5

வேண்டவில்லை பெருமானே! உன்னுடைய பரத்தை
அங்கு உன் மேனியில் செய்த குறிகளுடன் இங்கு நீ வருவதை –

மேல்


பரத்தைமை

(பெ) பார்க்க : பரத்தமை

மாய மகிழ்நன் பரத்தைமை
நோவென் தோழி கடன் நமக்கு எனவே – கலி 75/32,33

மாயம் செய்வதில் வல்லவனான கணவனின் பரத்தைமையை எண்ணி
நொந்திருப்பேன் தோழி! அது நம் தலைவிதி என்று!

மேல்


பரதர்

(பெ) மீனவர், fishing tribes

துணை புணர் உவகையர் பரத மாக்கள் – அகம் 30/3

துணையுடன் கூடிய மகிழ்ச்சியுடையோரான மீனவ மக்கள்

மேல்


பரதவர்

(பெ) மீனவர், fishing tribes

உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் – நற் 63/1,2

வலிமை மிக்க கடலில் சென்று வருந்திய, பெரிய வலைகளைக் கொண்ட பரதவர்
மிகுதியாகப் பெற்ற மீன்களைக் காயவைத்த புதிய மணற்பரப்பாகிய அவ்விடத்தில்

மேல்


பரப்பு

1. (வி) 1. குவியலைப் பரவலாக ஆக்கு, பரப்பிவிடு, spread, lay out
2. பரவலாக எங்கும் செலுத்து, spread as water on a surface
3. பரவுமாறு செய், பலரும் அறியச்செய், publicize, spread widely
4. மணம், ஒளி போன்றவை எங்கும் நிறையுமாறுசெய், diffuse fragrance, light etc.,
5. (கை,கால்,சிறகு ஆகியவற்றை)விரி, expand, outstretch as hands, legs or wings
– 2. (பெ) 1. இடவிரிவு, expanse
2. கடலின் மேற்பாகம், the surface of sea
3. பரந்த நிலம், wide area of land
4. பரவியிருத்தல், ovrspreading

1.1

சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும்
துறை நணி இருந்த பாக்கமும் – நற் 101/2-5

சுற்றிலும் அமைந்த சொரசொரப்பையுடைய, சூழ்ந்துள்ள கழியில் உள்ள இறாமீனின்
கூட்டமான குவியல் வெயிலில் காயும் வகையை ஆராய்ந்து
புன்னைமரத்தின் அழகிய மிகுதியான நிழலுக்கு முன்பாகப் போட்டுப் பரப்பிவிட்டிருக்கும்
கடற்கரைத் துறைக்கு அண்மையில் இருந்த குடியிருப்பும்

1.2

பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி
செய்யில் பொலம் பரப்பும் செய்வினை ஓயற்க – பரி 10/127,128

தங்கத்தைச் சொரிகின்ற பாண்டிய மன்னனைப் போலவே, வையைஆறு நீரை நாடெங்கும் இறைத்துப் பரப்பி,
நாட்டின் வயல்களில் பொன்னைப் பரவலாக்கும் செயலாகிய தொழில் ஓய்ந்துபோகாமல் இருக்கக்கடவது!

1.3

நான்மறையோர் புகழ் பரப்பியும் – பட் 202

அந்தணர்க்குள்ள புகழைப் பரவுமாறு செய்தும்

1.4

விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் – நெடு 73

விரிந்த கிரணங்களை எங்கும் நிறைத்த அகன்ற இடத்தையுடைய ஞாயிறு

1.5

மணி_வயின் கலாபம் பரப்பி – சிறு 15

(நீல)மணி போன்ற கண்களையுடைய தோகைகளை விரித்து,

2.1

பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்க – அகம் 60/1

பெரிய கடல் பரப்பில் சிவந்த இறால் மீன் நடுங்க

2.2

மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்
நீல் நிற பரப்பில் தயங்கு திரை உதைப்ப – நற் 215/5,6

மீனின் கொழுப்பைச் சேர்த்து உருக்கிய ஊனாகிய நெய்யால் எரியும் ஒள்ளிய விளக்கொளியை
நீல நிறப் பரப்பில் அலையாடும் திரைகள் எற்றித்தள்ள,

2.3

அருவி பரப்பின் ஐவனம் வித்தி – குறு 100/1

அருவி விழும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து

2.4

கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா – பதி 25/2,3

மதம் சொரியும் தலையைக்கொண்ட கடுமையாய்ப் பார்க்கும் யானைகளின்
கூட்டம் பரந்து சென்ற நிலங்கள் இனி வளம் பரப்புதலை அறியமாட்டா;

மேல்


பரம்

(பெ) பாரம், heavyness, weight

இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 7

இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்,

மேல்


பரல்

(பெ) பருக்கைக்கல், கூழாங்கல், gravel stone, pebble

பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் – அகம் 5/15

பருக்கைக்கற்களைக் கொண்ட மேட்டுநிலமாகிய பயனற்ற காட்டுநிலத்துவழியில்

பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின் – நற் 333/3

கூழாங்கற்கள் உள்ள பள்ளத்தில் ஊறிய சிறிதளவு நீரின் பக்கத்தில்

மேல்


பரவல்

(பெ) புகழ்ந்துகூறல், வணங்கித்துதித்தல்

பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல் – பரி 10/116

பாடுவோரின் பாடலும், கடவுளைப் பரவுவோரின் துதியும், வையையைப் புகழ்வாரின் புகழ்ச்சியும்,

மேல்


பரவு

(வி) 1. புகழ்ந்துகூறு, praise
2. வணங்கு, துதி, worship, adore
3. சென்றுலாவு, move around

1

ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ
இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு என
அம்பு உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ – பதி 80/9-11

வணங்காத பகைவர் முன்னே அவருக்கு எதிரே நின்று, இரண்டு பக்கங்களிலும் உலாவி,
“செலுத்துவீராக திறையை, உமக்குப் பாதுகாப்பினை வழங்குவதற்காக வந்திருப்பவருக்கு” என்று
வலக்கையில் அம்பினை உடைய வீரர்கள் புகழ்ந்து கூற,

2

பழையர் மகளிர் பனி துறை பரவ
பகலோன் மறைந்த அந்தி ஆரிடை – அகம் 201/7,8

பழையரது பெண்டிர் குளிர்ந்த துறைக்கண் தெய்வத்தினை வணங்கிநிற்க
ஞாயிறு மறைந்த அந்தியாகிய அரிய போழ்திலே

3

தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா – பதி 26/1

செல்வர்களின் தேர்கள் சென்று சேறுபட்ட நிலங்களில் ஏர்கள் சென்றுலாவி உழுதலை வேண்டா

மேல்


பரவை

(பெ) நிலப்பரப்பு / நீர்ப்பரப்பு, expanse (land or sea)

பழம் பல் நெல்லின் பல் குடி பரவை – அகம் 44/16

பழமையான பலவான நெல்லையுடைய பல குடிப் பரப்பினை உடையதும்

தெண் கடல்
முழங்கு திரை முழவின் பாணியின் பைபய
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும் – நற் 378/2-4

தெளிந்த கடலில்
முழங்கும் அலைகளும் முழவு இசைப்பது போன்று மெல்ல மெல்லப்
நெடுங்காலம் புண் பட்டவர்களைப் போல நீர்ப்பரப்பில் அசைந்துகொண்டிருக்கும்;

மேல்


பராஅம்

(வி.எ) பராவும் என்பதன் நீட்டல் விகாரம், that which is worshiped

பராஅம்
அணங்கு உடை நகரின் மணந்த பூவின்
நன்றே கானம் நயம்வரும் அம்ம – அகம் 99/8-10

வணங்கத் தக்க
அணங்குத் தெய்வம் இருக்கும் கோவிலின்கண் கலந்துகிடக்கும் பூக்களைப்போல
இக் காடு பெரிதும் விரும்பத்தக்கதாகின்றது.

மேல்


பராஅய்

(வி.எ) பராவி, after worshiping

முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ – கலி 101/14

தெய்வங்களை அவற்றுக்குரிய முறையுடனே வணங்கி வாடிவாசலை நோக்கிப் பாய்ந்தனர்;

மேல்


பராரை

(பெ) பரு + அரை பராரை ஆனது, பருத்த அடிப்பகுதி, large trunk

பராரை பாதிரி குறு மயிர் மா மலர் – நற் 337/4

பருத்த அடிமரத்தைக் கொண்ட பாதிரியின் நுண்ணிய மயிர்களைக் கொண்ட சிறந்த மலரையும்,

துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 103,104

அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
பெரிய (மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் ‘உண்பாயாக’ என்று வற்புறுத்தி,

மேல்


பராவு

(வி) பார்க்க : பரவு

1. புகழ்ந்துகூறு

பெரும் களிற்று யானையொடு அரும் கலம் தராஅர்
மெய் பனி கூரா அணங்கு என பராவலின்
பலி கொண்டு பெயரும் பாசம் போல
திறை கொண்டு பெயர்தி – பதி 71/21-24

பெரிய ஆண்யானைகளோடு, அருமையான அணிகலன்களையும் திறையாகத் தந்து,
மேனி மிகவும் நடுக்கமுற்று, தெய்வமேயென்று உன்னைப் புகழ்ந்து நிற்க,
பலியுணவை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லும் பேய் போல,
பகைவரின் திறையைமட்டும் எடுத்துக்கொண்டு மீளுகின்றாய்

2. வணங்கு, துதி

பராவு அரு மரபின் கடவுள் காணின் – மலை 230

மிகவும் அரிதாகப் போற்றி வணங்கப்படும் வழக்கினையுடைய கடவுளைப் பார்த்தால்,

மேல்


பரி

1. (வி) 1. வருந்து, be troubled, distressed;
2. பரவு, spread over
3. சூழ், surround
4. ஓடு, run
5. செலுத்து, drive
6. பொறு, சும, bear, sustain
7. ஒடி,முறி, break off
8. அறு, snap, severe
9. பறி, tear off
– 2. (பெ.அ) பரிய, பருத்த, large, rotund
– 3. (பெ) 1. குதிரை, horse
2. ஓட்டம், குதிரைக்கதி, pace of a horse
3. நடை, செலவு, motion, gait
4. பருமை, largeness
– 4. (இ.சொ) மிகுதிப்பொருளை உணர்த்தும் ஓர் இடைச்சொல், Particle denoting intenseness;

1.1

ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி
இரை நசைஇ பரிக்கும் மலை முதல் சிறு நெறி – நற் 332/6,7

குட்டியீன்ற பெண்புலியை இருக்கவைத்த பெரிய, நிறத்தையுடைய வலிய புலி
இரையை விரும்பித்தேடி வருந்தியலையும் மலையடிவாரத்துச் சிறிய வழியில்

1.2

பெரும் கடல் பரதவர் கோள்_மீன் உணங்கலின்
இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு
நிலவு நிற வெண் மணல் புலவ பலவுடன்
எக்கர்-தொறும் பரிக்கும் – குறு 320/1-4

பெரிய கடலில் பரதவர் கொண்ட மீன்களின் உலர்ந்த வற்றல்,
இருண்ட கழியில் கொண்ட இறாவின் வற்றலோடு
நிலவொளி போன்ற வெள்ளை மணற்பரப்பு புலால்நாறும்படி பலவும் சேர்ந்து
மணல்மேடுகள்தோறும் பரவிக்கிடக்கும்

1.3

கூனல் எண்கின் குறு நடை தொழுதி
சிதலை செய்த செம் நிலை புற்றின்
மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி
இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல் – அகம் 112/1-4

கூனிய முதுகினையும் குறுகக்குறுக அடியிட்டு நடக்கும் நடையினையும் உடைய கரடிக்கூட்டம்
கறையான் எடுத்த சிவந்த நிலையினையுடைய புற்றினது
மண்ணால் புனைந்த நீண்ட உச்சி உடையுமாறு பெயர்த்து
புற்றாஞ்சோறான இரையினை விரும்பிச் சூழ்ந்துகொண்டிருக்கும் நடுநாள் இரவில்

1.4

ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் – குறு 401/3,4

விளையாட்டு மகளிரைக் கண்டு அஞ்சி, நீரமுள்ள நண்டு
கடலைநோக்கி ஓடும்

1.5

விலங்கு இரும் சிமைய குன்றத்து உம்பர்
வேறு பன் மொழிய தேஎம் முன்னி
வினை நசைஇ பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு – அகம் 215/1-3

குறுக்காகவுள்ள பெரிய உச்சியினையுடைய மலைக்கு அப்பாலுள்ள
வேறுபட்ட பல மொழிகள் வழங்கும் தேயத்தைக் கொள்ளக் கருதி
போர்த்தொழிலை விரும்பிச் செலுத்தும் துணிவுமிக்க உள்ளத்துடன்

1.6

மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் – புறம் 75/6

அடுத்துப் பொரும் போரைப் பொறுக்கும் மனவெழுச்சியையுடைத்தாகிய வலிய முயற்சியையுடைய

1.7

எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர்
சுடர் பூ கொன்றை ஊழ்_உறு விளை நெற்று – அகம் 115/8-11

எவ்வி என்பான் வீழ்ந்த போர்க்களத்தே, பாணர்கள்
கையால் தொழும் முறைமையோடு முன்பு, ஒடித்துப்போட்டுப் பராவிய
வளம் பொருந்திய ஒலியினையுடைய வளைந்த கோட்டினை ஒத்த ஒளி பொருந்திய கொத்துக்களையுடைய
சுடரும் பூக்களையுடைய கொன்றையினது முற்றி விளைந்த நெற்றுக்கள்

1.8

மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த
பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு – மது 680,681

மாட்சிமைப்பட்ட அணிகலன்களையுடைய மகளிர் (கணவரோடு)புலந்தனராய், அறுத்த
பரிய வடமாகிய ஆரம் சொரிந்த முத்தோடு,

1.9

ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும்
போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம்
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில்
தாது தேர் வண்டின் கிளை பட தைஇய
கோதை பரிபு ஆட காண்கும் – கலி 80/22-26

ஐயனே! என் காதில் உள்ள பொன்னாலான குழைகளைக் கழற்றிக்கொண்டு நீ ஓடும்போதெல்லாம்
மலர் சூட்டிக்கொள்ளாத என் வெறுங்கூந்தலின் மீது தூக்கிவைத்துக்கொள்வது, உன்னை நான்,
உன் தந்தை அந்தப் பரத்தையர் மீது வைத்த அன்பு குறையும்படியாக, அவர்கள் அவரின் அகன்ற மார்பில்
பூந்தாதுக்களைத் தேடியலையும் வண்டுகளின் கூட்டம் மொய்க்கும்படியாகக் கட்டின
மாலையை நீ பறித்து விளையாடும் காட்சியில் காண்பதற்காத்தான்.

2

பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ – பெரும் 7

பருத்த அடிமரத்தையுடைய கமுகின் பாளையாகிய அழகினையுடைய இளம் பூ

3.1

துனை பரி துரக்கும் செலவினர் – முல் 102

விரைந்து செல்லும் குதிரையைக் கடிதாகச் செலுத்தும் செலவினையுடையவரின்

3.2

தேஎம் தேறா கடும் பரி கடும்பொடு – மலை 364

திக்குத் தெரியாத மிக விரைவான ஓட்டத்தையுடைய சுற்றத்தோடே,

குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 387,388

நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு,
காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,

3.3

காலே பரி தப்பினவே – குறு 44/1

கால்களோ நடை இழந்தன

3.4

மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை – பரி 13/55

நின் திருமார்பும், பின்புறமும், நின் திருவுள்ளத்தோடு பருமையுடையனவாய்க் கொண்டிருக்கிறாய்

4

பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட – மலை 497

(சொந்த ஊரைவிட்டு வந்த)மிகுந்த ஏக்கத்தால் அலைக்கப்பட்ட உம் வருத்தம் குறைந்துபோக –

மேல்


பரிமா

(பெ) குதிரை, horse

பரிமா நிரையின் பரந்தன்று வையை – பரி 26/2

குதிரைகள் வரிசையாக பரந்து வருவதைப் போன்று பரவி வருகிறது வையை

மேல்


பரிகாரம்

(பெ) கூலம், பொருள், store, provisions

நட்டோர் உவப்ப நடை பரிகாரம்
முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை – சிறு 104,105

நட்புச் செய்தோர் மனமகிழும்படி, வாழ்க்கையை நடத்த வேண்டுவனவற்றைக்
குறையாமல் கொடுத்த, போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கை

மேல்


பரிசம்

(பெ) பணம், ஆபரணங்கள், money and jewels

கலம் தந்த பொன் பரிசம்
கழி தோணியான் கரை சேர்க்குந்து – புறம் 343/5,6

கலங்கள் கொணர்ந்த பொன்னாலான பணமும் ஆபரணமும்
கழிகளில் இயங்கும் தோணிகளால் கரை சேர்க்கப்படும்.

மேல்


பரிசில்

(பெ) கொடை, gift, donation, present

பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நன் மான் – நற் 185/3,4

பாணர்கள்
பரிசிலாகப் பெற்ற விரிந்த பிடரி மயிரையுடைய நல்ல குதிரைகள்

மேல்


பரிசிலர்

(பெ) பரிசில் வேண்டி இரப்போர், solicitors of gift

ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் – பதி 58/1

ஆடுவீர்களாக விறலியர்களே! பாடுவீர்களாக பரிசில் மாக்களே!

மேல்


பரிசு

(பெ) இயல்பு, nature

அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின்
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும்
செரு ஒழிந்தேன் சென்றீ இனி – கலி 91/13-15

செவ்வரி படர்ந்த செழுமையான மைதீட்டிய கண்ணையுடைய பரத்தையரின் ஆசை குறையாத தழுவலால்
உன் இயல்பான நிலை அழிந்துநிற்கும் உன் மேனியைக் கண்டு, நானும்
கோபம் தீர்ந்தேன்! செல்வாயாக அந்தப் பரத்தையரிடமே இப்போது”;

மேல்


பரிதி

(பெ) ஞாயிறு, sun

விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய – திரு 299,300

விண்ணைத் தொடுகின்ற நெடிய மலையிடத்தே ஞாயிற்றைப் போல் (தேனீக்கள்)செய்த
தண்ணியவாய் மணக்கின்ற விரிந்த தேன்கூடு கெட

மேல்


பரிப்பு

(பெ) இயக்கம், ஓட்டம், movement, motion

செம் ஞாயிற்று செலவும்
அ ஞாயிற்று பரிப்பும்
பரிப்பு சூழ்ந்த மண்டிலமும் – புறம் 30/1-3

செஞ்ஞாயிறு செல்கின்ற பாதையும்
அந்த ஞாயிற்றின் இயக்கமும்
அந்த இயக்கத்தால் சூழப்படும் பார் மண்டிலமும்

மேல்


பரியரை

(பெ) பருத்த அடிப்பகுதி, large trunk (of a tree)

பரியரை பெண்ணை அன்றில் குரலே – நற் 218/11

பருத்த அடியைக் கொண்ட பனைமரத்திலிருந்து கூவும் அன்றிலின் குரலை

மேல்


பரியல்

1. (வி.மு) வருந்தவேண்டாம், don’t get distressed
2. (பெ) விரைவான ஓட்டம்
3. (பெ) வருந்துதல், getting distressed

1

வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி
பரியல் வாழி தோழி – ஐங் 392/1-3

மூங்கிலின் வனப்பை இழந்த தோள்களையும், வெயில் பொசுக்கியதால்
அழகிய நலம் தொலைந்த நெற்றியையும் பார்த்து
வருந்தவேண்டாம், வாழ்க, தோழி!

2

பரியல் நாயொடு பன் மலை படரும்
வேட்டுவன் பெறலொடு அமைந்தனை – அகம் 28/7,8

விரைவான ஓட்டத்தையுடைய வேட்டை நாயுடன் பல மலைகளையும் கடந்து செல்லும்
வேட்டைக்காரனைப் பெறுவது ஒன்றே போதுமென்று இருக்கிறாய்

3

என்னதூஉம்
பரியல் வேண்டா – புறம் 172/4,5

சிறிதளவும்
இரங்குதல் வேண்டா.

மேல்


பரியூஉ

(வி.எ) பரிய, அறுத்தெறிய,

பகை தொடர்ந்து கோதை பரியூஉ நனி வெகுண்டு – பரி 7/72

பகைமை மிக்கு தன் மாலையினை அறுத்தெறிந்து மிகவும் சினந்து

மேல்


பரிவு

(பெ) 1. அனுதாபம், இரக்கம், sympathy, compassion
2. அன்பு, love, affection
3. அவா, ஆசை, desire

1

பரிவு தர தொட்ட பணிமொழி நம்பி
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே – நற் 378/10-12

நமக்கு அவன்மேல் அனுதாபம் உண்டாகும்படி அவன் சொன்ன பணிவான சொற்களை நம்பி,
ஒலி முழங்கும் குளிர்ந்த நீர்ப்பெருக்கையுடைய கடற்கரைத்தலைவனோடு
சிந்திக்காமல் உடன்பட்ட நட்பின் அளவு

2

வரிசை அறியா கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே – புறம் 184/8-11

தரம் அறியாத ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடு கூடி
அன்பு கெடக் கொள்ளும் பொருள் தொகுதியை விரும்பின்
யானை புகுந்த வயல் போலத்
தானும் உண்ணப்பெறான், உலகமும் கெடும்.

3

வதுவை நாள் அணி புதுவோர் புணரிய
பரிவொடு வரூஉம் பாணன் – அகம் 56/9,10

திருமணக் காலத்து ஒப்பனையையுடைய புதிய பரத்தையரைச் சேர்விக்க
அவாவுடன் வந்த பாணன்

மேல்


பரிவேட்பு

(பெ) பறவை வட்டமிடுகை, Circling, hovering, as of a bird;
பறவை இரையைப் பிடிக்க விரையும் கடுமை,
the intensity of the pounce of a bird on its prey

நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா – பதி 21/26,27

நீர் ஒழுகும் பக்கத்தில் செல்லாமல், நீண்ட தொலைவிலிருந்து
உன்னிப்பாகப் பார்க்கும் கொக்கின் விரைவான கொத்தலுக்கு அஞ்சாத,

மேல்


பரீஇ

1. (வி.எ) 1. அறுத்து, cutting off
2. அறுபட்டு, having cut off
– 2. (பெ) 1. பருவி, பருத்தி, cotton plant
2. பரி, கதி, குதிரை நடை, pace of a horse

1.1

கள்ளி
மீமிசை கலித்த வீ நறு முல்லை
———————— ——————————
வன் கை இடையன் எல்லி பரீஇ
வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை – நற் 169/4-8

கள்ளிச் செடியின்
உச்சியில் வெகுவாய்ப் பூத்திருக்கும் பூக்களைக் கொண்ட முல்லையின் கொடிகளை
————————————- ————————————–
வலிமையான கையையுடைய இடையன் மாலைவேளையில் அறுத்து,
வெண்மையான பனங்குருத்துடன் சேர்த்துத் தைத்த, மார்பில் அசைகின்ற அழகிய மாலை

1.2

செந்நாய் ஏற்றை கேழல் தாக்க
இரியல் பிணவல் தீண்டலின் பரீஇ
செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின் – அகம் 21/18-20

ஆண் செந்நாய் ஆண் காட்டுப்பன்றியைத் தாக்க,
பதறியோடும் பெண்பன்றி உராய்தலால் அறுபட்டு,
செங்காய்கள் உதிரும் பசுங்குலைகளைக் கொண்ட ஈந்தின்

2.1

பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள் பெரு மழை கண்ணே – குறு 72/4,5

பருத்தி விதைத்த தினைப்புனத்தில்
குருவிகளை ஓட்டுவாளின் பெரிய குளிர்ந்த கண்கள்

2.2

நீயே அலங்கு உளை பரீஇ இவுளி
பொலம் தேர் மீமிசை பொலிவு தோன்றி
மா கடல்நிவந்து எழுதரும்
செஞ்ஞாயிற்று கவினை மாதோ- புறம் 4/13-16

நீதான், அசைந்த தலையாட்டம் அணிந்த கதியையுடைய குதிரையால் பூட்டப்பட்ட
பொன் தேரின் மேலே பொலிவோடு தோன்றுதலால்
கரிய கடலின்கண்ணே ஓங்கி எழுகிற
சிவந்த ஞாயிற்றினது ஒளியையுடையை.

மேல்


பருதி

(பெ) 1. பரிதி, ஞாயிறு, sun
2. தேர்ச்சக்கரம், wheel of a chariot or car
3. திருமாலின் கையிலுள்ள சக்கராயுதம், the discus in Lord Vishnu’s hand
4. வட்டத்தின் சுற்றளவு, the circumference of a circle

1

பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி
காய் சினம் திருகிய கடும் திறல் வேனில் – பெரும் 2,3

பகற்பொழுதைத் தோற்றுவித்து, எழுதலைச்செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு
சுடுகின்ற தீ(யின் வெப்பம்) தீவிரமாகிய கடுமையான வீரியமுடைய (முது)வேனில் காலத்தில்,

2

சுரம் பல கடவும் கரை வாய் பருதி – பதி 46/8

பாலைவழிகள் பலவற்றைக் கடந்துசெலுத்தப்படும், தேய்ந்துபோன விளிம்புகளைக் கொண்ட தேர்ச்சக்கரங்கள்

3

பருதி வலவ பொரு திறல் மல்ல
திருவின் கணவ பெரு விறல் மள்ள – பரி 3/89,90

சக்கரத்தை வலக்கையில் ஏந்தியிருப்பவனே! மற்போரில் ஆற்றலுள்ள மல்லனே!
திருமகளின் கணவனே! பேராற்றல் கொண்ட மள்ளனே!

4

புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில்
பருதி போகிய புடை கிளை கட்டி – பதி 74/10-12

புள்ளி மானின் தோலை உரித்து, அதினின்றும் ஊனை நீக்கி,
தீய பாகங்களைக் களைந்துபோட்டு, எஞ்சிய வட்டமாக அறுத்த ஒளிவிடும் தோலின்
சுற்றளவாய் அமைந்த விளிம்பில் வகை வகையாகக் கட்டி,

மேல்


பருதிஅம்செல்வன்

(பெ) ஞாயிறு, sun

பருதிஅம்செல்வன் போல் நனை ஊழ்த்த செருந்தியும் – கலி 26/2

ஒளிவட்டமுள்ள செல்வனான ஞாயிற்றின் நிறம் போன்ற அரும்புகள் மலர்ந்த செருந்தியும்

மேல்


பருந்து

(பெ) 1. கழுகு வகை, common kite
2. குருகு, கைவளை, bracelet

1.1.

இது தெளிந்த குரலில் கத்தும். இதன் ஒலி சீழ்க்கை ஒலி (சீட்டியடிப்பது) போல் இருக்கும்.

இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3
நெடு விளி பருந்தின் வெறி எழுந்து ஆங்கு – அகம் 299/6
வீளை பருந்தின் கோள் வல் சேவல் – அகம் 33/5

1.2.

இதன் தலை உலர்ந்திருக்கும்.

உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை – ஐங் 321/1

1.3.

பெரிய சிறகுகளை உடையது.

நீர்ப்படு பருந்தின் இரும் சிறகு அன்ன – பதி 12/19

1.4.

மிக உயரத்தில் பறக்கும்

உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி – பதி 77/9

1.5.

விலங்குகளின் மாமிசத்தை உண்ணும்.

ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ – கலி 106/26,27

படு முடை பருந்து பார்த்து இருக்கும் – குறு 283/7

1.6.

இதன் அலகு(மூக்கு) வளைவாக இருக்கும். கால் நகங்கள் பெரிதாகவும் கூர்மையாகவும் இருக்கும்.

வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல் – அகம் 363/13
கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ – புறம் 43/5

1.7.

பெட்டைப் பருந்தின் கண்கள் வெண்மையாக இருக்கும்.

வளை வாய் பருந்தின் வான் கண் பேடை – அகம் 79/12

1.8.

உயரமான மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்.

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினை – நற் 3/1

இதன் ஒலியைக் கேட்க இங்கே சொடுக்கவும்.

2

பறாஅ பருந்தின் கண் பற்றி புணர்ந்தான் – கலி 147/37

பறக்காத பருந்தாகிய குருகு என்னும் கைவளை இருக்குமிடத்தைப் பிடித்து என்னோடு சேர்ந்திருந்தவன்

மேல்


பருமம்

(பெ) 1. மேகலை, அரைப்பட்டிகை,
Women’s waist-band consisting of 18 strings of beads and gems
2. குதிரைகளின் சேணம், saddle
3. யானைக்கான அலங்காரக் கழுத்து மெத்தை, ornamental cushion on elephant’s neck

1

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 146

மேகலையை அணிந்த தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ள அல்குலையும்

2

பருமம் களையா பாய் பரி கலி_மா – நெடு 179

சேணம் களையப்பெறாத பாயும் ஓட்டத்தையுடைய செருக்கின குதிரைகள்

3

பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு – நற் 89/8

மேல் அலங்காரம் கொண்ட யானை அயர்ந்து பெருமூச்சு விட்டதைப் போன்று

மேல்


பருவரல்

(பெ) துன்பம், suffering, affliction

பருவரல் எவ்வம் களை மாயோய் என – முல் 21

துன்பத்தைத் தரும் வருத்தத்தைக் களைவாய், மாமைநிறத்தவளே என்று

பருவரல் – எவ்வாற்றானும் பொறுக்கமுடியாத துன்பம்
எவ்வம் – எதனினும் தீராத வருத்தம்.

மேல்


பருவரு(தல்)

(வி) வருந்து, grieve, be distressed

வாரார்-கொல் என பருவரும்
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே – அகம் 150/13,14

நம் தலைவர் வாராரோ எனத் தலைவி வருந்துவள்
மாலை பொருந்திய மார்பனே, நீ பிரிந்திருக்கும்போது

மேல்


பருவூர்

(பெ) போர்க்களம் உள்ள ஓர் ஊர்,
a city in sangam period, where a vast area in it was used as a battlefield.

வெண்ணெல் வைப்பின் பருவூர் பறந்தலை – அகம் 96/14

வெண்ணெல் விளையும் இடங்களையுடைய பருவூர் என்னுமிடத்தில் உள்ள போர்க்களத்தில்

மேல்


பரூஉ

(பெ) பரு, பருமை, thickness, rotundity
பரூஉ என்பதனை மனக்காட்சியாய்க் காணப் பல்வேறு எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கை – பொரு 171

வெருட்டும் பறைகள் (போன்று)முழங்கும், பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும்,

எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார் – பெரும் 48

(இரண்டு)கணைய மரங்களையும் சேர்த்தாற் போன்ற பருத்த கைகளையுடைய, வலிய, கோக்கும் சட்டத்தையும்,

பாவை_விளக்கில் பரூஉ சுடர் அழல – முல் 85

பாவை (ஏந்திநின்ற)தகளியில் பரிய தீக்கொழுந்து நின்றெரிய,

பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி – நெடு 103

பருத்த திரிகளைக் கொளுத்தி, (செந்)நிறமான தழல் மேல்நோக்கி எரிகின்ற சுடரை,

பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு – மது 681

பரிய வடமாகிய ஆரம் சொரிந்த முத்தோடு,

பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு – மலை 168

பெரிய பெரிய தசைகள் மிகுதியாகப்போட்ட நெய்யின்கண் வெந்த பொரியலுடன்,

பரூஉ கொடி வலந்த மதலை பற்றி – மலை 216

பருத்த கொடிகள் பின்னியவற்றை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு,

பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி – மலை 516

பருமனான பளிங்குக்கல்லை (உடைத்து)உதிர்த்துவிட்டதைப்போன்ற பலவித அழகிய மணிகளும்,

எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின் – நற் 98/1

முள்ளம்பன்றியின் முள்ளைப்போன்ற பருத்த மயிருள்ள பிடரியைக் கொண்ட,

பரூஉ பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் – பதி 71/4

பெருத்த எருதுகள் போரடிக்குபோது மிதித்து உதிர்த்த மென்மையான செந்நெல்லின்

பதி எதிர் சென்று பரூஉ கரை நண்ணி – பரி 10/26

ஊரார் அனைவரும் ஆற்றுக்கு எதிரே சென்று, ஆற்றின் பெரிய கரைகளை அடைந்து,

பசு நனை நறு வீ பரூஉ பரல் உறைப்ப – அகம் 107/20

புதிய தேனையுடைய நறிய பூக்கள் பெரிய பாறைக்கற்களில் உதிர்ந்து கிடக்க

பரூஉ உறை பல் துளி சிதறி வான் நவின்று – அகம் 218/4

பரிய பலவாகிய மழைத்துளிகளைச் சிதறி

பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன – அகம் 224/6

பால் கடையும்போது எழும் வெண்ணெயின் பெரிய உருண்டையான மிதப்பினை ஒத்த

பள்ளி யானை பரூஉபுறம் தைவரும் – அகம் 302/3

துயில் கொள்ளும் யானையின் பரிய உடம்பினைத் தடவும்

இருள் திணிந்து அன்ன குரூஉ திரள் பரூஉ புகை – புறம் 228/2

இருள் ஓரிடத்தே செறிந்து நின்றாற் போன்ற நிறமுடைத்தாய் திரண்ட பருமைமிக்க புகை

தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி – புறம் 399/2

பூணிட்டு மாட்சியுறுவித்த பருத்த உலக்கையால் குற்றப்பட்ட அரிசி

மேல்


பரேர்

(பெ) பரு + ஏர், மிக்க அழகு, much beauty

படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – பெரும் 60, நெடு 31

தழை விரவின மாலையையும், மிக்க அழகினையும், வலிமையினையும் உடைய இறுகின தோளினையும்

மேல்


பரைஇ

(வி.எ) பரவி, புகழ்ந்து, துதித்து, praising, worshiping

உரு கெழு மரபின் அயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய – பதி 88/12,13

அச்சத்தை உண்டாக்கும் முறைமையினையுடைய அயிரை மலையிலுள்ள கொற்றவையைப் புகழ்ந்து
சோழ,பாண்டியரும், குறுநில மன்னரும் வணங்கி வழிபட்டு நிற்கவும்

மேல்


பல்

(பெ) 1. பல, many
2. எயிறு, tooth

1

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16

பல பொற்காசுகளை வரிசையாக அமைத்த சில வடங்களை அணிந்த அல்குலினையும்,

2

முகை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய் – அகம் 162/12,13

முல்லை அரும்பினை வரிசையாக நிறுத்தினாலொத்த வண்டுகள் விரும்பும் வெண்மையான பல்லினையும்
புன்னகையால் மாண்புற்று விளங்கும் நன்மை வாய்ந்த பவளம் போன்ற வாயினையும் உடையளாய்

மேல்


பல்கதிர்ச்செல்வன்

(பெ) ஞாயிறு, sun

படுபு அறியலனே பல்கதிர்ச்செல்வன் – புறம் 34/18

தோன்றுதலை அறியான் வாழ்நாட்கு அலகாகிய பல கதிரையுடைய செல்வனாகிய ஞாயிறு

மேல்


பல்கால்பறவை

(பெ) வண்டு, bee

வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி
பல்கால்பறவை கிளை செத்து ஓர்க்கும் – பெரும் 182,183

வில்யாழ் இசைக்கும் விரலாலே எறிந்து எழுப்பப்பட்ட குறிஞ்சிப்பண்ணை,
பல கால்களையுடைய வண்டுகள் தம் சுற்றத்தின் ஓசையாகக் கருதிக் கேட்கும்,

மேல்


பல்கு

(வி) 1. அதிகமாகு, பெருகு, increae, expand
2. பலவாகு, multiply

1

கை கவர் நரம்பின் பனுவல் பாணன்
செய்த அல்லல் பல்குவ – நற் 200/8,9

கையினால் தடவுதற்குரிய நரம்பினால் இசைக்கும் பாட்டுக்களைக் கொண்ட பாணன்
செய்த துன்பங்கள் நாளுக்குநாள் பெரிதாகின்றன

2

பசும் பிசிர் ஒள் அழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு – பதி 62/5,6

கைப்புலத்தைச் சுட்டெரித்த பசிய பிசிர்களுடன் ஒளிவிடும் நெருப்பானது
ஞாயிறு பலவாகியதைப் போன்ற மாயத்தோற்றத்துடன் சுடர்விட்டுத் திகழ,

மேல்


பல்சாலைமுதுகுடுமி

(பெ) ஒரு முற்காலப் பாண்டிய மன்னன், an ancient Pandiya king

பல்சாலைமுதுகுடுமியின்
நல் வேள்வி துறைபோகிய – மது 759,760

(பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று,
நல்ல வேள்வித்துறைளில் முற்றும் தேர்வாயாக,

மேல்


பல்லவம்

(பெ) இளந்தளிர், sprout, shoot

சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப – பரி 19/68

அந்தக் மரக் கொம்பினைப் பிளந்துகொண்டுவரும் இளந்தளிர்களை மரத்தின் மீதேறிய மங்கையர் பறித்து
நீரில் உதிர்த்துவிட

மேல்


பல்லவர்

(பெ) பலதரப்பட்டவர், different kinds of people

அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப – கலி 104/29

அவ்விடத்தில், பறை மிகுந்து ஒலிக்க, பலதரப்பட்டவரும் ஆரவாரிக்க,

மேல்


பல்லான்குன்று

(பெ) ஒரு மலையின் பெயர், the name of a hill

பல்லான்குன்றில் படு நிழல் சேர்ந்த
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் – அகம் 168/4,5

பல்லான்குன்று என்னும் மலையில் பொருந்தும் நிழலின்கண் சேர்ந்த
நல்ல ஆன் நிரையின் பரப்பினைக் கொண்ட குழுமூரிடத்தே

மேல்


பல்லியம்

(பெ) பல இன்னிசைக்கருவிகளின் தொகுதி, group of musical instruments, orchestra

1.

கழைக்கூத்தாடிகளின் ஆட்டத்தில், உயரத்தில் நீளவாக்கில் கட்டிய கயிற்றின்மேல் ஒருவர் நடக்கும்போது
கீழிருப்போர் பலவித இசைக்கருவிகளை முழக்குவர். அது பல்லியம் எனப்படும்.

கழை பாடு இரங்க பல்லியம் கறங்க
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/1,2

குழல்கள் பக்கத்தே இசைக்க, பலவகை இன்னிசைக் கருவிகள் முழங்க,
ஆட்டக்காரியான கழைக்கூத்தி நடந்த வளைந்த முறுக்கேறிய வலிய கயிற்றில்

2.

பருவப்பெண்கள் காதல்வயப்பட்டுச் சுணங்கியிருக்கும்போது, அவரின் தாயர், அவர்களைப்
பேய்பிடித்துவிட்டதாக எண்ணி, வேலனை அழைத்து வெறியாட்டு அயரச்செய்வர். அப்பொழுது
பலவித இசைக்கருவிகளை முழக்குவர். அது பல்லியம் எனப்படும்.

மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ
செல் ஆற்று கவலை பல்லியம் கறங்க
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி
பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல்
நோ_தக்கன்றே தோழி – குறு 263/1-6

ஆட்டின் கழுத்தை அறுத்தும், தினையின் பலியரிசியைப் படைத்தும்,
மக்கள் செல்லும் பாதையின் கவர்த்த வழிகளில் பல் வித இசைக்கருவிகள் முழங்க
தாம் வெளிப்படுதல் அன்றி நமது நோய்க்கு வேறு மருந்தாக ஆகாத
வேறான பெரிய தெய்வங்கள் பலவற்றைச் சேர வாழ்த்தி,
பேய் பிடித்துவிட்டது இவளுக்கு என்று ஊரார் சொல்லுவது
வருந்துவதற்கு உரியதாகும் தோழி!,

3.

போரில் காயம்பட்டு வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட மறவரைக் காத்தல்வேண்டி, இறைவனைத் தொழும்போது
பலவித இசைக்கருவிகளை முழக்குவர். அது பல்லியம் எனப்படும்.

தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க
கை பய பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசை மணி எறிந்து காஞ்சி பாடி
நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ
காக்கம் வம்மோ காதல் அம் தோழீ
வேந்து உறு விழுமம் தாங்கிய
பூம் பொறி கழல் கால் நெடுந்தகை புண்ணே – புறம் 281

இனிய கனிகளைத் தரும் இரவமரத்தின் தழையுடனே, வேப்பிலையும் சேர்த்து மனையின் கூரை இறைப்பில்
செருகி
வளைந்த கோட்டையுடைய யாழும் பலவாகிய வாச்சியங்களும் இயம்ப
கையை மெல்ல எடுத்து மையாகிய மெழுகினை இட்டு
வென்சிறுகடுகைத் தூவி, ஆம்பல்குழலை ஊதி
ஓசையைச் செய்யும் மணியை இயக்கி காஞ்சிப்பண்ணைப் பாடி
நெடிய மனையின்கண் நறுமணம் கமழும் அகில் முதலியவற்றைப் புகைத்து
காப்போமாக வருக! அன்புடைய தோழியே!
வேந்தனைக் குறித்து ச் செய்யப்பெற்ற இடுக்கனைத் தான் ஏற்றுக் காத்த
பூத்தொழில் பொறிக்கப்பட்ட கழலையணிந்த காலையுடைய நெடுந்தகையாகிய தலைவனுக்கு உண்டாகிய
புண்களை.

4.

மன்னர்களிடம் பரிசில்வேண்டிச் செல்லும் இரவலர்கள்,பாணர்கள்,கூத்தர்கள் ஆகியோர் மன்னனை
மகிழ்விக்கப் பலவித இசைக்கருவிகளை முழக்குவர்.

பல்லிய கோடியர் புரவலன் பேர் இசை
நல்லியக்கோடனை – சிறு 125,126

பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரின் புரவலனும் ஆகிய பெரிய புகழையுடைய
நல்லியக்கோடனை

5.

மழைக்காலத்தில் மழைபெய்து ஓய்ந்த பின்னர், நீர்நிலைகளிலுள்ள தவளைகள் எல்லாம் ஒன்றுசேரக் கத்தும்.
அவ்வொலி பல்லியம் முழங்கும் ஒலிபோல் இருப்பதாக அகநானூறு கூறுகிறது.

படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகு வாய் தேரை
சிறு பல்லியத்தின் நெடு நெறி கறங்க – அகம் 154/1-3

மிக்க மழை சொரிந்தமையால் பயன் மிக்க முல்லைநிலத்தே
ஆழமாகிய நிரினையுடைய பள்ளங்களிலுள்ள பிளந்த வாயினையுடைய தேரைகள்
சிறிய பலவாகிய வாச்சியங்களைப் போல நீண்ட வழியெல்லாம் ஒலிக்கவும்

6.

திருமுருகாற்றுப்படியில் முருகன் பல்லியத்தன் எனப்படுகிறான்.

குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன் – திரு 209

குழலை ஊதுபவன், கொம்பைக் குறிப்பவன், சிறிய இசைக்கருவிகளை இசைப்பவன்.

எனவே இந்தப் பல்லியத்தில் குழலும், கொம்புகளுமாகிய ஊதுகருவிகள் சேரா.
எனவே பல்லியத்தில் பெரும்பாலும் பெரிதும் சிறிதுமாகிய தோற்கருவிகளே வாச்சியங்களாக அமையும்
எனத் தெளியலாம்.

மேல்


பலகை

(பெ) கிடுகு, நீண்ட கேடயம், long shield, buckler

விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு
நிழல் படு நெடு வேல் ஏந்தி – புறம் 15/12,13

விளங்கிய இரும்பால் செய்யப்பட்ட ஆணியும் பட்டமும் அறைந்த அழகுமிக்க கேடகத்துடனே
ஒளி உண்டாகும் நெடிய வேலை எடுத்து

மேல்


பலம்

1. (பெ) 1. பயன், benefit, fruit
– 2. (வி.மு) பலர் இருக்கின்றோம், we are many

1

பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும்
புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் – மலை 411,412

பரிசிலாகிய பயனைப் பெறும் ஆசையோடு ஊரிலிருந்து வந்த உம்முடைய
வருத்தம் வெகுதூரம் போய்விட(முற்றிலும் நீங்க), புத்துணர்வுபெற்றவர் ஆவீர்;

2

பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் – புறம் 301/11

நாங்கள் பலர் இருக்கின்றோம் எனத் தருக்கி இகழ்வதை ஒழிவீராக.

மேல்


பலவு

(பெ) பலா, jack tree

கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி – குறு 90/4

ஆண்குரங்கு தொட்டவுடன் வீழ்ந்த பூ மணக்கும் பலாப்பழத்தை

மேல்


பலாசம்

(பெ) புரசமரம், பூ, Palas-tree, Butea frondosa;

பகன்றை பலாசம் பல் பூ பிண்டி – குறி 88

மேல்


பலி

(பெ) 1. கடவுள், முன்னோர் ஆகியோருக்குப் படைக்கப்படும் படையல்,
offering given to god, manes etc.,
2. காக்கைக்கு இடும் இரத்தம் கலந்த சோறு, food mixed with blood offered to crows
3. நெற்களத்தில் பிச்சைக்காரர்களுக்கு வழங்கும் பிச்சையாகிய நெல்
4. இறைப்படைப்பாகச் செய்யப்படும் விலங்குக்கொலை, அந்த விலங்கு,
sacrificial offering of an animal, the offered animal
5. போர்மேல் செல்லும் வேந்தர் முரசுக்குப் படைக்கும் படையல்

1

மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி
சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ – திரு 232-234

மிகுந்த வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுவிய கிடாயின்
உதிரத்தோடு பிசைந்த தூய வெள்ளரிசியை
சிறு பலியாக இட்டு, பல குறுணிப் படையல்களையும் வைத்து,

2

செம் சோற்ற பலி மாந்திய
கரும் காக்கை – பொரு 183,184

(உதிரத்தால்)சிவந்த சோற்றையுடைய படையலை விழுங்கின
கரிய காக்கை

3

பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின்
தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி
கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை – பெரும் 230-235

பசுமை அறும்படி முற்றின பெரிய செந்நெல்லின்
உள்துளை உடைய திரண்ட தாளை அறுத்த வினைஞர்,
பாம்பு கிடக்கின்ற மருதமரத்தின் உயர்ந்த கிளையால் உண்டாகிய நிழலில்(உள்ள)
பிச்சை பெறும் அகன்ற களங்களில் நிறைய ஏற்றி,
கூட்டம் கொண்ட (தம்)சுற்றத்தோடு கைகோர்த்து ஆடுகின்ற
துணங்கைக் கூத்தில்

4

தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும் – அகம் 35/9

நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறிக்குட்டியைப் பலி கொடுக்கும்

5

பலி பெறு முரசம் பாசறை சிலைப்ப – புறம் 362/3

பலி செலுத்தப்பட்ட முரசம் பாசறைக்கண் ஒலிக்க

இந்தப் பலியில் அரிசி, கள், குருதிதோய்ந்த சோறு, விலங்குகள்
முதலிய பலவகைப் பொருள்கள் படைக்கப்படுவதுண்டு

வால் அரிசி பலி சிதறி – பட் 165
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய – நற் 73/3
பலி கள் ஆர்கை பார் முது குயவன் – நற் 293/2
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி – பதி 30/37 (நெய்த்தோர் = இரத்தம்)
நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும் – அகம் 213/7 (நறவு = கள்)
போகு பலி வெண் சோறு போல – புறம் 331/12
பன் மலர் சிதறி பரவு_உறு பலிக்கே – நற் 322/12
குருதி பலிய முரசு முழக்கு ஆக – புறம் 369/5

மேல்

பவ்வம் – (பெ) கடல், sea, ocean

பவ்வ மீமிசை பகல் கதிர் பரப்பி – பொரு 135

கடல் மேற்பரப்பு முழுக்கப் பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி,

மேல்


பவத்திரி

(பெ) ஓர் ஊர், the name of a place

செல்லா நல் இசை பொலம் பூண் திரையன்
பல் பூ கானல் பவத்திரி அன இவள்
நல் எழில் இள நலம் தொலைய – அகம் 340/6-8

என்றும் கெடாத நல்ல கீர்த்தியினையும் பொற்பூணினையுமுடைய திரையன் என்பானது
பல பூக்களையுடைய சோலையினையுடைய பவத்திரி என்னும் ஊர் போன்ற இவள்
தனது நல்ல அழகு வாய்ந்த இலமைச் செவ்வி தொலையுமாறு.

சங்ககாலத்தில் தொண்டை நாட்டில் இருந்த ஊர் பவத்திரி.
அக்காலத்தில் அதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன் பொலம்பூண் திரையன்.
இந்த ஊர் ‘பல்பூங் கானல்’ எனச் சிறப்பிக்கப்படுவதால் கானல் இருக்கும் கடற்கரைப் பகுதியில் இருந்தது
என்பது தெளிவாகிறது. தலைவியின் அழகு இந்த ஊர்போல் பொலிவுடன் திகழ்ந்தது எனப் பாடல் கூறுவதால்
இந்த ஊரின் அழகை உணரமுடிகிறது

மேல்


பவர்

(பெ) 1. நெருக்கம், denseness, thickness
2. படர்ந்து பரவியிருத்தல், pervasiveness
3. அடர்ந்த கொடி, dense clustered creeper

1

அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய் – குறு 364/1

இறுகப் பின்னிய நெருக்கமான கொடிப்பிரம்பினைப் போல் வரிவரியான முதுகினைக் கொண்ட நீர்நாய்

2

தாளி தண் பவர் நாள் ஆ மேயும் – குறு 104/3

தாளிப் புல்லின் குளிர்ந்த படர்கொடியைக் காலையில் பசுக்கள் மேயும்

3

குறுவிழி கண்ண கூரல் அம் குறு முயல்
——————— ———————–
குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி – அகம் 284/2-4

குறிய விழி பொருந்திய கண்களையும் கூரிய மயிரினையுமுடைய குறிய முயல்கள்
—————— —————————-
வளைந்த அழகிய செவியினவாகிய காய்களைக் கொண்ட அடர்ந்த கொடிகளுட் புகுந்து கிடந்து உறங்கி

மேல்


பவழம்

(பெ) பவளம், red coral

பைம் நனை அவரை பவழம் கோப்பவும் – சிறு 164

பசிய அரும்புகளையுடைய அவரை பவழம்(போல் பூக்களை முறையே) தொடுக்கவும்,

மேல்


பவளம்

(பெ) நவமணிகளுள் ஒன்று, பவழம், red coral

தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினை
பவள செம் வாய் பைம் கிளி கவரும் – நற் 317/3,4

தோகை நுனி பிரிந்து வளைந்த நீண்ட கதிர்களையுடைய பசிய தினையைப்
பவளம் போன்ற சிவந்த வாயையுடைய பச்சைக் கிளிகள் கவர்ந்துண்ணும்

மேல்


பழங்கண்

(பெ) 1. துன்பம், distress, affliction
2. மெலிவு, loss of strength or power

1

களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும் – நற் 302/7-9

களிறு உதைத்து உழப்புவதால் கவிழ்க்கப்பட்ட மண்ணினால் எழுந்த நுண்ணிய மண்துகள்,
உட்புழல் இல்லாமல் நன்கு வயிரமேறிய வேலமரங்கள் உயர்ந்து வளர்ந்த
துன்பம் நிறைந்த பழைய பாதைகளை மறைக்கும்

2

மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள்
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல் – நற் 93/7-10

பக்கங்களை மறைத்த திருந்திய அணிகலன்களால் பெரிதாய்த் தோன்றும் தோள்களையும்,
மெலிந்துபோன இடையையும், மெல்லிய இயல்பினையும் கொண்ட இளமகளின்
பூண்கள் தாழ்ந்த மார்பு நாணம் துன்புறுத்துவதால் வருத்தமுற்ற
மெலிவடைந்து நிறமாற்றம் பெற்றன;

மேல்


பழம்

1. (பெ) காயின் முதிர்வு, கனி, fruit
– 2. (பெ.அ) பழமையான, கடந்தகால, ancient, old, olden

1

பழம் தேர் வாழ்க்கை பறவை போல – மது 576

பழத்தைத் தேடியலையும் வாழ்க்கையையுடைய பறவைகளைப் போல,

2

பழம் திமில் கொன்ற புது வலை பரதவர் – அகம் 10/10

பழைய கட்டுமரத்தை அழித்துவிட்டுப் புதிய வலையைக் கொண்ட பரதவர்

மேல்


பழம்படு(தல்)

(வி) பழையதாகிப்போ(தல்), grow old

பழம்படு தேறல் பரதவர் மடுப்ப – சிறு 159

பழையதாகிய (களிப்பு மிகுகின்ற)கள்ளின் தெளிவினைப் பரதவர் (கொணர்ந்து உம்மை)ஊட்ட,

மேல்


பழமொழி

(பெ) முதுசொல், proverb, maxim

தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் – அகம் 101/3

தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி இன்று பொய்யானதோ?

மேல்


பழன்

(பெ) பழம், fruit

பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று
பெறாது பெயரும் புள் இனம் போல – புறம் 209/9,10

பழமுடைய பெரிய மரம் பழுத்துத் தீர்ந்தது என வருந்தி
பழம் பெறாமல் மீளும் பறவைக்கூட்டத்தைப் போல

மேல்


பழனம்

(பெ) 1. வயல், paddy field
2. வயல்வெளி, agricultural land
3. பொய்கை, நீர்நிலை, tank

1

பழன மஞ்ஞை உகுத்த பீலி – புறம் 13/10

வயலிடத்து மயில் உதிர்த்த பீலி

2

கண்பு மலி பழனம் கமழ துழைஇ
வலையோர் தந்த இரும் சுவல் வாளை – மலை 454,455

சம்பங்கோரை நெருங்கிவளர்ந்த வயல்வெளிகள் (சேற்று)மணம்வீச (கைகளினால்)துழாவி,
வலைகொண்டு மீன்பிடிப்போர் கொண்டுவந்த பெரிய கழுத்தையுடைய வாளைமீன்

3

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன் – குறு 8/1,2

வயல்வெளியிலுள்ள மா மரத்தில் விளைந்து உதிர்ந்த இனிய பழத்தை
பொய்கையின் வாளைமீன் கவ்வும் ஊரையுடைய தலைவன்

மேல்


பழிச்சு

(வி) 1. வாழ்த்து, greet, bless
2. வணங்கு, worship
3. புகழ், praise

1

பூவும் புகையும் சாவகர் பழிச்ச – மது 476

பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப,

2

செறி தொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச – மலை 201

நெருக்கமாக வளையல் (அணிந்த) விறலியர் கைகூப்பி வணங்க

3

நாள்-தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சி
நாள் தர வந்த விழு கலம் அனைத்தும் – மது 694,695

நாள்தோறும் (தமக்குச் செல்வம்)மிகும்படியாகக் கையால் தொழுது புகழ்ந்து,
நாட்காலத்தே (திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும்,

மேல்


பழு

(பெ) பேய், devil

பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும் – குறி 259

பேயும், மலைப்பாம்பும், (இவற்றை)உள்ளிட்ட பிறவும்

மேல்


பழுது

(பெ) 1. குற்றம், குறை, fault, flaw
2. பயனின்மை, unprofitableness, uselessness
3. வறுமை, poverty
4. பொய், falsehood

1

பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே – குறு 366/7

குற்றமற்றது, இந்த ஆய்ந்த அணிகலன்களை அணிந்தவள் எடுத்த முடிவு

2

சுரந்த என் மென் முலை பால் பழுது ஆக நீ – கலி 84/4

சுரந்த என் மென்மையான முலையின் பால் பயனற்றுப் போகும்படி

3

கரிகால்வளவன்
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி
தொழுது முன் நிற்குவிர் ஆயின் பழுது இன்று
ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும்
கையது கேளா அளவை ஒய்யென
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னல் சிதாஅர் நீக்கி தூய
கொட்டை கரைய பட்டு உடை நல்கி
பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என
பூ கமழ் தேறல் வாக்குபு தரத்தர – பொரு 148-157

கரிகாற்சோழனின்,
திருவடி நிழலின் பக்கத்தை அணுகிக் கிட்டே நெருங்கி
வணங்கி (அவன்)முன்னே நிற்பீராயின், (உம்)வறுமை நீங்க
ஈன்ற பசு (அதன் கன்றை நோக்கும்)விருப்பம் போன்ற விருப்பத்தோடு உம்மை விரும்பிப் பார்த்து, உம்
கைத்திறனை(கலையை)(த் தான்) கேட்டு முடிவதற்கு முன்னரே, விரைந்து
பாசியின் வேர் போல் அழுக்குடன் சுருங்கிப்போன,
தையலையுடைய துணிகளை நீக்கி, தூய
(பட்டுக்)குஞ்சம் (உள்ள)கரையையுடைய பட்டு உடைகளைத் தந்து,
‘பெறுதற்கரிய (பொற்)கலத்தில் விரும்பியபடி உண்பாயாக’ என்று,
பூ மணக்கின்ற கள்தெளிவை (மேலும்மேலும்)வார்த்துத் தரத்தர,

4

அல்கலும்
அகலுள் ஆங்கண் அச்சற கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – அகம் 281/1-3

நாள்தோறும்
அகன்ற மனையினுள் இருந்து நமக்கு அச்சம் இன்றாகக் கூறிய
சொல் பொய்யாகப்போய்விடும் என்று அஞ்சாமல்

மேல்


பழுதுளி

(பெ) பழுது உள்ளவை, those which have flaw or defect

சிறு கண் பன்றி பழுதுளி போக்கி – மலை 153

சிறிய கண்ணையுடைய பன்றியின் (தசைகளில்)பழுதுள்ளவற்றை நீக்கி

மேல்


பழுநு

(வி) 1. நிறைவடை, be full or perfect
2. முதிர்வடை, mature
3. முற்றுப்பெறு, be fully grown or developed

1

வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி
கழை வளர் நவிரத்து மீமிசை – மலை 578,579

வளம் குன்றுதல் இல்லாது, வாய்த்த வளமும் செழித்துமிகுந்து(உள்ள),
மூங்கில் வளரும் நவிரமலையின் உச்சியில்

2

இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல்
நெடும் கண் ஆடு அமை பழுநி – அகம் 348/5,6

தேனுடன் கூட்டியாக்கியவண்டு மொய்க்கும் அரியலாகிய
அசையும் மூங்கிலின் நீண்ட கணுவிடையுள்ள குழாயில் நெடிது இருந்து முதிர்தலின்

3

நைவளம் பழுநிய நயம் தெரி பாலை – சிறு 36

நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை

மேல்


பழுப்பு

(பெ) மங்கலான மஞ்சள் நிறம், pale yellow colour of fruits

சிறு தலை துருவின் பழுப்பு உறு விளை தயிர் – அகம் 394/2

சிறிய தலையை உடைய செம்மறியாட்டின் பழுப்பு நிறம் வாய்ந்த முற்றிய தயிர்

மேல்


பழுனு

(வி) பார்க்க : பழுநு

1. நிறைவடை

பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி
நட்டனை-மன்னோ முன்னே இனியே – புறம் 113/3,4

விரும்பியபடியே தரும் மிக்க செல்வம் நிறைவுபெற்று
எம்மோடு நட்புச்செய்தாய் முன்பு, இப்பொழுது

2. முதிர்வடை

வாங்கு அமை பழுனிய நறவு உண்டு – நற் 276/9

வளைந்த மூங்கிலாலான குப்பிகளில் முதிர்ந்து விளைந்த கள்ளினை உண்டு

3. முற்றுப்பெறு

புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப – பதி 41/1,2

முறுக்கேற்றிய நரம்பினையுடைய, இனிய இசை முற்றுப்பெற்ற
வளைந்த அமைப்பினையுடைய நல்ல யாழினை ஏவல்இளையவர்கள் தாங்கிநிற்க,

மேல்


பழூஉ

(பெ) பழு, பேய், devil

பழூஉ பல் அன்ன பரு உகிர் பா அடி
இரும் களிற்று இன நிரை ஏந்தல் – குறு 180/1,2

பேயின் பல்லைப் போன்ற பருத்த நகங்களையும், பரந்த அடியினையும் கொண்ட
பெரிய களிற்றுயானைகளின் கூட்டத்துக்குத் தலைவனாகிய களிறு

மேல்


பழையர்

(பெ) கள்விற்போர், toddy-sellers
பழையர் என்போர் தமிழ்நாட்டுப் பழங்குடிமக்கள். தமிழ்நாட்டின் பலபகுதிகளிலும் அவர்கள்வாழ்ந்து வந்தனர்.
மலைபடுகடாம் வயல்வெளிகளில் வேலைபார்க்கும் பழையர் மகளிரைப் பற்றிக் கூறுகிறது.
அகம் – பாடல் 201-இல் இந்தப் பழையர் கொற்கைத்துறையில் வாழ்பவராகக் கட்டப்படுகின்றனர்.
அகம் -பாடல் 331 – இல் இவர்கள் தமிழ்நாட்டு எல்லையோரச் சிற்றூர்களில் வாழ்பவராகக் காட்டப்படுகின்ரார்.

1.

வயலில் நெல்லறுத்துக் கதிரடித்த பின்னர் மீந்துபோன வைக்கோலைக் களத்துமேட்டில் அடுக்கிவைக்கும்
வேலையைச் செய்பவராக மலைபடுகடாம் பழையர் மகளிரைப் பற்றிக் கூறுகிறது.. இந்த மகளிர்
பகன்றை மலரால் தொடுக்கப்பட்ட மாலையைத் தலையில் கண்ணியாகச் சூடிக்கொள்வர்.

பகன்றை கண்ணி பழையர் மகளிர்
ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ – மலை 459-461

பகன்றைப்பூ மாலை(சூடிய) கள்விற்கும் பழையர்வீட்டுப் பெண்கள்
நண்டுகள் ஓடித்திரியும் வயல்களின்(அருகே) களத்துமேட்டில் வைத்த,
மலை போன்ற (நெற்கதிர்)போர்களின் அடிப்பாகத்தை இழுத்து (அவற்றைச்)சரித்து,

2.

புகழ்பெற்ற கொற்கைத் துறையில் அந்தி வேளையில் முத்துக்களையும் சங்குகளையும் சொரிந்து, இந்தப்
பழையர் மகளிர் தெய்வத்தை வணங்கினர் என்று அகம் 201 கூறுகிறது.

புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து
தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனி துறை பரவ
பகலோன் மறைந்த அந்தி ஆரிடை – அகம் 201/4-8

புகழ்மிக்க சிறப்பினையுடைய கொற்கைப்பதியின் கடல் துறையிலே
விளங்கும் ஒளியினையுடைய முத்துக்களுடன் வலம்புரிச் சங்கினையும் சொரிந்து
தழையுடை அணிதலால் பொலிவுற்ற பக்கம் உயர்ந்த அல்குலினையுடைய
பழையரது மகளிர் குளிர்ந்த துறைக்கண் தெய்வத்தினைப் பராவி நிற்க
ஞாயிறு மறைந்த அந்தியாகிய அரியபோழ்திலே

3.

இருப்பை மரத்துப்பூக்களைச் சேகரித்து, மூங்கில் குழாய்களில் அடைத்துவைத்து சிற்றூர்களின் தெருக்களில்
இந்தப் பழையர் மகளிர் கூவி விற்பர் என்று அகம் 331 கூறுகிறது. இவர்கள் அவ்வேளையில் தங்கள்
இடுப்பு ஆடையின் மேல் தழையாடைகளையும் உடுத்தியிருந்ததாக அப்பாடல் குறிப்பிடுகிறது.

நீடு நிலை அரைய செம் குழை இருப்பை
கோடு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ
ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின்
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
பைம் குழை தழையர் பழையர் மகளிர்
கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து
குன்றக சிறுகுடி மறுகு-தொறும் மறுகும் – அகம் 331/1-7

நீண்ட நிலையாகிய அடிமரத்தினையுடைய சிவந்த தளிர்களையுடைய இருப்பை மரங்களின்
தந்தத்தினைக் கடைந்தாற்போன்ற மிகுதியான வெள்ளிய பூக்களில்
ஆடுகள் பரந்தால் ஒத்த ஈன்ற பெண்கரடிகளின்
கூட்டம், கிளைகளில் பரந்து சென்று உண்ட மிச்சிலாயவற்றை
பசிய தளிர்களாலாய தழையுடையராகிய எயினர் மகளிர்
கணுக்கள் திரண்டு நீண்ட மூங்கில் குழாயில் திரட்டி
குன்றின் கண்ணவாகிய சீறூரின் தெருக்கள்தோறும் சுழன்று விற்றுத்திரியும்

மேல்


பழையன்

(பெ) சங்க காலச் சிற்றரசன், a chieftain of sangam period

1.

பழையன் என்பவன் மோகூர் மன்னன். வேம்பு இவனது காவல்மரம். எனவே, இவன் பாண்டியர் குடிச்
சிற்றரசன் எனலாம். செங்குட்டுவன் இவனது காவல்மரத்தை வெட்டி இவனை ஒடுக்கினான் எனப்
பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து பதிகம் கூறுகிறது.

பழையன் மோகூர் அவை_அகம் விளங்க
நான் மொழி கோசர் தோன்றி அன்ன – மது 508,509

பழையன் (என்னும் மன்னனின்)மோகூரிடத்து அரசவை திகழுமாறு
நான்மொழிக்கோசர் வீற்றிருந்தாற் போன்று,

2.

பழையன் என்ற போரூர் மன்னன் ஒருவனும் இருந்தான். இவன் சோழநாட்டைச் சேர்ந்தவன்.
இவன் போர் கிழவோன் பழையன் எனப்பட்டான். இவன் சோழன் பெரும்பூண் சென்னியின்
படைத்தலைவன். இவன் சோழரை எதிர்த்த கொங்குநாட்டாரைப் பணியச்செய்தான்.

கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர்
வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்து அன்ன – நற் 10/6-8

வெற்றியையுடைய சோழர்கள் கொங்குநாட்டாரைப் பணியச் செய்வதற்காக
வெண்மையான கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட போர் என்ற ஊருக்குரியவனான
பழையன் என்பானை ஏவ, அவனது வேற்படை பொய்க்காமல் வெற்றிபெற்றதுபோல

இந்தப் பழையன் கட்டூர் என்ற இடத்தில் ஏழு பேரால் தாக்கிக் கொல்லப்பட்டான்.

நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என – அகம் 44/7-11

நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த கட்டூரில்,
பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,

வென்வேல்
மாரி அம்பின் மழை தோல் பழையன்
காவிரி வைப்பின் போஒர் அன்ன- அகம் 186/14-16

வெற்றி பொருந்திய வேலையும்,
மழைத்துளி போன்ற மிக்க அம்பினையும், மேகம் போலும் கரிய கேடகத்தினையும் உடைய பழையனின்
காவிரிநாட்டிலுள்ள போர் என்னும் ஊரினை ஒத்த

வென்வேல்
இழை அணி யானை சோழன் மறவன்
கழை அளந்து அறியா காவிரி படப்பை
புனல் மலி புதவின் போஒர் கிழவன்
பழையன் ஓக்கிய வேல் போல் – அகம் 326/9-12

இந்தப் பழையன் சோழன் மறவன் எனப்படுவதால் இவன் சோழனின் படைத்தளபதி என்பது பெறப்படும்.

மேல்


பழையன்மாறன்

(பெ) பாண்டிய மன்னன், a Pandiya king

நெடும் தேர்
இழை அணி யானை பழையன்மாறன்
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்
வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளிவளவன் நல் அமர் சாஅய் – அகம் 346/18-22

நீண்ட தேரினையும் இழையை அணிந்த யானையினையுமுடைய பழையன் மாறன் என்பானை
மாடங்கள் மிக்க தெருக்கலையுடைய கூடலாகிய ஆங்கே
மிக்க சேனையுடன் வேற்றுப்புலத்தே போர் செய வந்து தங்கியிருந்த
கிள்ளிவளவன் நல்ல போரின்கண் சாய்த்து

கூடல் என்பது மதுரைக்கு இன்னொரு பெயர். மாறன் என்பது பாண்டியர்களின் பெயர்.
கிள்ளிவளவன் பெரும் படையுடன் மதுரைக்குப் படையெடுத்து வந்து
மதுரைக்கு வெளியில் தங்கி, போரிட்டு, பழையன் மாறனை வென்றான். இதுகேட்டு அப்போதிருந்த
சேர மன்னன் கோதை மார்பன் மகிழ்ந்தான் என்று இதே பாடல் குறிப்பிடுகிறது.

மேல்


பழையோள்

(பெ) ஆதி இல்லாதவள், most ancient lady

இழை அணி சிறப்பின் பழையோள் குழவி – திரு 259

பூண் அணிந்த தலைமையினையுடைய காடுகிழாளின் மகனே,

முருகன் இவ்வாறு பழையோள் குழவி என்று வருணிக்கப்படுகிறான். ”காடுகிழாள் என்பது இக்காலத்துக்
காடுகாள் என மருவிற்று. அவளும் இறைவனுடைய சத்தியாதலின் அவளுடைய குழவி என்றார்” என்பார்
நச்சினார்க்கினியர்.

மேல்


பள்ளி

(பெ) 1. துயிலிடம், sleeping place, bed
2. துறவி மடம், hermitage
3. தூக்கம், sleep
4. சாலை, அடைப்பு, enclosure
5. பௌத்தர்களின் கோயில், temple of Bhuddhists
6. அந்தணர்கள் தொழும் இடம், worship place of Brahmins

1

கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
—————- ——————-
குளவி பள்ளி பாயல்கொள்ளும் – சிறு 42-46

செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
—————— ——————
காட்டு மல்லிகையாகிய படுக்கையில் துயில்கொள்ளும்

2

தவ பள்ளி தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகி – பட் 53-56

தவஞ்செய்யும் பள்ளிகள் இருக்கும் தாழ்வான மரங்கள் கொண்ட சோலைகளில்
மினுமினுக்கும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய)
(நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய
கரிய பெரிய பேடைகளுடன் விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி,

3

சிலம்பில் போகிய செம்முக வாழை
——————— ——————-
பள்ளி யானை பரூஉ புறம் தைவரும் – அகம் 302/3

மலையில் நீண்டு வளர்ந்த செவ்வாழை
——————— ——————-
துயில்கொள்ளும் யானையின் பரிய உடம்பினைத் தடவும்

4

ஒதுக்கு இன் திணி மணல் புது பூம் பள்ளி
வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப – புறம் 33/20,21

இயங்குதற்கு இனிய செறிந்த மனலையுடைய புதிய பூவையுடைய சாலையினது
வாயிலின்கண் மாடங்கள்தோறும் செம்மறிக்கிடாயைக் கொல்ல

5

காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் – மது 465-467

ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர்,
பூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி
சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும் –

6

குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் – மது 474

மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும்

மேல்


பள்ளிகொள்(ளல்)

(வி) துயில்கொள், sleep

நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன் – நெடு 186,187

நள்ளென்னும் ஓசையையுடைய நடுயாமத்திலும் துயிலாதவனாய்,
ஒருசில வீரரோடு திரிதலைச் செய்யும் அரசன்,

மேல்


பள்ளிபுகு(தல்)

(வி) தூங்கப்போ(தல்), go to sleep

வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி
பள்ளிபுக்கது போலும் பரப்பு நீர் தண் சேர்ப்ப – கலி 121/5,6

வளமையான இதழ்கள் குவிந்து நிற்கும் நீல மணியைப் போன்ற பெரிய கழி
தூங்கப் போனதைப் போன்ற கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நிலத் தலைவனே!

மேல்


பளிங்கம்

(பெ) பளிங்கு, சிறுவர் உருட்டி விளையாடும் பளிங்குக்குண்டு, marble

பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி – அகம் 5/9

பளிங்கைப் போன்று பல காய்களைக் காய்க்கும் நெல்லிமரங்கள்

மேல்


பளிங்கு

(பெ) 1. படிகம், மெருகூட்டப்பட்ட சலவைக்கல், crystal, marble
2. உருண்டையான பளபளப்பான கல், polished globular marble

1

களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் – நற் 292/5,6

களிறுகள் சண்டையிட்டுக்கொள்வதால் கரைந்துபோன, பெரிய பள்ளங்கள் உள்ள குழிவான கரையில்
ஒளிறுகின்ற வெள்ளைப் பளிங்குக்கற்களோடு, செம்பொன்னும் மின்னும்

பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு_உழி – குறி 57

பளிங்கை (க் கரைத்துக்)கொட்டியதைப் போன்ற பரந்த சுனையில் மூழ்கி விளையாடுகின்றபொழுது,

2

அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப – அகம் 315/12

நூல் அற்று உதிர்ந்த துளையினையுடைய பளிங்குக் காசுகளை ஒப்ப

மை இல் பளிங்கின் அன்ன தோற்ற
பல்கோள் நெல்லி பைங்காய் – அகம் 399/13,14

குற்றமற்ற பளிங்கினைப் போன்ற தோற்றத்தையுடைய
பலவாகக் காய்த்த நெல்லியின் பசிய காய்கள்

மேல்


பளிதம்

(பெ) கர்ப்பூரம், camphor

பங்கம் செய் அகில் பல பளிதம்
மறுகுபட அறை புரை அறு குழவியின்
அவி அமர் அழல் என அரைக்குநர் – பரி 10/82-84

நறுக்கப்பட்ட அகில் துண்டுகளையும், பலவகைப் பச்சைக்கர்ப்பூரத்தையும்,
ஒன்றாகக் கலக்குமாறு குற்றமற்ற குழவிக்கல்லால்
அவியாக பலியுணவை இட்ட வேள்வித்தீயின் நிறத்தைப் போன்று அரைப்பார் சிலர்;

மேல்


பறந்தலை

(பெ) 1. பாழிடம், waste land, desert
2. போர்க்களம், battelfield
3. பாசறை, war camp

1

சிறு மறி தழீஇய தெறி நடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண் பூ கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே – புறம் 23/19-22

சிறிய மறியை அணைத்துக்கொண்ட துள்ளிய நடையையுடைய மெல்லிய பெண்மான்
பூளை ஓங்கி வளர்ந்த அஞ்சத்தக்க பாழிடத்து
வேளையினது வெளிய பூவைத் தின்னும்
ஆளற்ற அருஞ்சுரமாகிய காட்டுவழியில்

2

கூகை கோழி வாகை பறந்தலை
பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை – குறு 393/3-5

கோட்டான்களாகிய கோழிகளையுடைய வாகை என்னும் போர்க்களத்தில்
பசும்பூண் பாண்டியனின் செயல்திறம் மிக்க அதிகன் என்பான்
தன் யானையோடு இறந்தபோது

3

களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை
விசும்பு ஆடு எருவை பசும் தடி தடுப்ப – புறம் 64/3,4

யானைக் கூட்டம் பொருத இடம் அகன்ற பாசறைக்கண்
ஆகாயத்தின்கண்ணே பறக்கும் பருந்தினைப் பசிய ஊன் தடி தடுப்ப

மேல்


பறம்பு

(பெ) 1. பாரியின் பறம்பு நாடு, மலை, the country/hill of chieftain Paari
2. நன்னனின் பறம்பு என்ற மலை/ஊர், a hill/city belonging to Nannan

1

முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன் நாடு – புறம் 110/3

முந்நூறு ஊர்களை உடையது குளிர்ந்த நல்ல பறம்பு நாடு

பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் – குறு 196/3

பாரியின் பறம்பு மலையில் குளிர்ந்த சுனையில் உள்ள தெளிந்த நீரை

2

நன்னன் பறம்பில் சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல்போல் – அகம் 356/8-10

நன்னனது பறம்பு மலையில்
சிறிய பனைசெய்வோன் அரக்கோடு சேர்த்து இயற்றிய
சாணைக்கல்லினைப் போலும்

அருவி ஆம்பல் கலித்த முன் துறை
நன்னன் ஆய் பறம்பு அன்ன
மின் ஈர் ஓதி – அகம் 356/18-20

அருவிநீர் பெருகுமிடத்து ஆம்பல் தழைத்துள்ள முன் துறையினையுடைய
நன்னந்து அழகிய பறம்பு என்னும் ஊரைப்போன்ற
மின்னுகின்ற குளிர்ந்த கூந்தலையுடையவளே!

(ஆய் பறம்பு என்பது சில பதிப்புகளில் ஆஅய் பிரம்பு எனக் காணப்படுகிறது)

மேல்


பறழ்

(பெ) சில விலங்குகளின் இளமைப் பெயர், the young ones of certain animals

1

பறழ் பன்றி பல் கோழி – பட் 75

குட்டிகளையுடைய பன்றிகளையும், பலவிதமான கோழிகளையும்,

2

துய் தலை மந்தி வன் பறழ் தூங்க – நற் 95/4

பஞ்சுத்தலையைக் கொண்ட குரங்கின் வலிய குட்டி தொங்க,

3

ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே – கலி 94/6

ஆந்தைக்குப் பிறந்த நாய்க்குட்டியே

4

முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் – அகம் 384/5

முயல்குட்டிகள் குதிக்கும் முல்லைய்யாய அழகிய காட்டில்

5

பாசி பரப்பில் பறழொடு வதிந்த
————————- ————————-
நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/2-4

பாசியினையுடைய நீர்ப்பரப்பில் குட்டியுடன் கூடியிருக்கும்
——————– —————————–
காலைப்பொழுதில் இரையினைக் கொணர்தற்கு எழுந்த நீர்நாய்

மேல்


பறி

1. (வி) 1. துண்டி, துண்டித்து நீக்கு, pluck (as flowers)
2. பிடுங்கு, pull out
3. கூசவை, be dazzled (as eyes bythe brilliance of light)
– 2. (பெ) 1. மீன் பிடிக்கும் கூடை, basket like contrivance for catching fish
2. தலையிலிருந்து முதுகுப்பக்கம் (மழைக்கு) மறைத்துக்கொள்ளும் பனையோலையால்
ஆன மறைப்பு
a covering made of palm leaf to cover head and the back during rain

1.1

கோவலர்
வீ ததை முல்லை பூ பறிக்குந்து – புறம் 339/2,3

கோவலர்கள்
பூக்கள் நெருங்கிய முல்லையினுடைய பூவைப் பறிப்பர்

1.2

ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த
பகழி அன்ன சே அரி மழை கண் – நற் 13/3,4

தினைப் புனக் காவலர் காட்டுப்பன்றியை வீழ்த்திவிட்டுப் பிடுங்கிய
அம்பினைப் போன்ற சிவந்த வரிகளையுடைய குளிர்ச்சியான கண்களையும்

1.3

வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை – அகம் 337/16

வெள்ளிய பரல்கற்கள் மின்னும் கண்களைக் கூசவைக்கும் கவர்த்த நெறியின்கண்

2.1

குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 265

குறுகிய இறப்பையுடைய குடிலின், (மீன்பிடிக்கும்)பறியினையுடைய முற்றத்தில்

2.2

வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள்
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் – நற் 142/1-4

வானமே இறங்கியதைப் போன்று பொழிந்த மின்னுகின்ற மழையின் கடைசி நாளில்
கையில் கொண்ட பல கால்களைக் கொண்ட மென்மையான உறியுடன்,
தீக்கடைகோல் வைக்கும் பையினைத் தோலுடன் சுருட்டி,
பனையோலைப் பாயை முதுகுப்பக்கம் போட்டிருக்கும் பால் விற்கும் இடையனை

மேல்


பறிமுறை

(பெ) பல் விழுந்து முளைத்தல், cutting of second teeth

செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின – குறு 337/3

செறிவாக அமைந்த வெள்ளைப் பற்களும் விழுந்தெழுந்து நிற்கின்றன;

மேல்


பறை

1. (வி) 1. சேதப்படு, தேய்வடை, பழுதாகு, be worn out, impaired, wasted away
2. அழிந்துபோ, காணாமற்போ, vanish, dippear
3. பற, fly
– 2. (பெ) 1. வட்டமான தோற்கருவி, முரசு,
drum, a round musical instrument made of animal skin
2. பறத்தல், flying
3. சிறகு, wings

1.1

குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் – பெரும் 188,189

குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டமையால்
நெடிய சுவரிடத்தே தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டிலினையும் உடைய

1.2

உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன்
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை – அகம் 67/3,4

மேகங்கள் துளிபெய்தலை நீத்து அகன்று போதலின், இலைகள் யாவும் கெட்டொழிதலின்
மரங்கள் பொலிவற்றிருக்கும் கற்குவியல்கள் உயர்ந்துள்ள அகன்ற இடம்

1.3

தண் தாது ஊதிய வண்டுஇனம் களி சிறந்து
பறைஇய தளரும் துறைவனை நீயே – அகம் 170/6,7

குளிர்ந்த தாதினை உண்ட வண்டின் கூட்டம் களிப்பு மிக்கு
பறத்தற்கு இயலாது சோரும் துறையையுடைய தலைவனுக்கு

2.1

பறை என்பது தோலினால் ஆன ஓர் இசைக்கருவி.
இன்று தோளில் இதனை மாட்டிக்கொண்டு இரண்டு நீண்ட குச்சிகளைக் கைக்கு ஒன்றாக வைத்து இதனை
அடித்து ஒலி எழுப்புவர்.

மலைவாழ் மக்கள் மான் தோலினால் ஆன ஒரு பறையை வைத்திருப்பர் என மலைபடுகடாம் கூறுகிறது.

நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை – மலை 320-322

மருதநில மக்கள் தோலைப் போர்வையாகப் போர்த்துள்ள ஒரு பறையை வைத்திருந்தனர் எனப்பதிற்றுப்பத்து
கூறுகிறது.

போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும் – பதி 22/28

தோல் போர்த்துள்ள பறையை முழக்கி வெள்ளம் வரும்போது கரையை அடைக்க அழைப்பவர் ஒலியும்,

வாரைக்கொண்டு இழுத்துக்கட்டப்பட்ட ஒரு பறையும் உண்டு என அகநானூறு கூறுகிறது.

வறும் சுனை முகந்த கோடை தெள்விளி
விசித்து வாங்கு பறையின் விடர்_அகத்து இயம்ப – அகம் 321/2,3

நீரற்ற சுனையுள் புகுந்துவரும் மேல்காற்றின் தெளிந்த ஒலி
தோலினை இழுத்துக்கட்டிய பறை ஒலி போல மலைப் பிளப்பில் ஒலிக்க

பறையைப் பற்றிக் கூறும் சங்க இலக்கியங்கள் மிகப்பெரும்பாலும் பொதுவாகப் பறை என்ற சொல்லையே
பயன்படுத்துகின்றன.
எனினும் தட்டைப்பறை என்ற ஒரு வகைப் பறையைப் பற்றிக் குறுந்தொகை கூறுகிறது.

இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை
தட்டைப்பறையின் கறங்கும் நாடன் – குறு 193/2,3

சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள்
தட்டைப் பறையைப் போல ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன்

பன்றிப்பறை என்ற ஒருவகைப் பறையைப் பற்றி மலைபடுகடாம் கூறுகிறது.

பன்றி_பறையும் குன்றக சிலம்பும் – மலை 344

பன்றிகள் (வராதிருக்கக் கொட்டும்) பறையொலியும்; (இவற்றின்)குன்றிடத்து எதிரொலியும்;

தொண்டகப்பறை என்று ஒருவகைப் பறைஇருந்ததாகவும் அறிகிறோம்.

தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து – அகம் 118/3,4

தொண்டகம் என்னும் பறையின் தாளத்திற்கு இசைய பெண்டிரோடு கலந்து
தெருக்களில் ஆடும் சிறுகுடிப்பாக்கத்தின்கண்ணே

தவளைகளைப் போல அரித்த ஓசையை எழுப்பும் பறை அரிப்பறை என்னப்பட்டது.

அரி பறையால் புள் ஓப்பி – புறம் 395/7

அரித்த ஓசையையுடைய கிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த
கதிர்களை உண்டற்கு வந்து படியும் புள்ளினங்களை ஓட்டி

சற்றுப்பெரிய பறை கிணை அல்லது தடாரி எனப்பட்டது.

இரும் பறை கிணைமகன் – புறம் 388/3

பெரிய பறையாகிய தடாரியை இசைக்கும் பொருநன்

இந்தப் பறை வட்டவடிவமானது என்றும் பல இலக்கியங்கள் கூறுகின்றன.
மயில் தோகையில் உள்ள வட்டமான கண்களைப் போன்றது பறை என அகம் கூறுகிறது.

பாகல் ஆர்கை பறை கண் பீலி
தோகை – அகம் 15/4,5

பாகல்பழங்களை விரும்பி உண்ணும், பறை போன்ற கண்ணையுடைய பீலிகளையுடைய
மயில்கள்

மலையில் இருக்கும் நிறைந்த சுனைகள் போன்று இந்தப் பறை இருப்பதாகவும் அகம் கூறுகிறது.

பறை கண் அன்ன நிறை சுனை பருகி – அகம் 178/3

பறையின் கண்ணினை ஒத்த நிறைந்த சுனையின் நீரைப் பருகி

யானையின் பாதங்களைப் போன்று வட்டமாக இந்தப் பறை இருப்பதாகவும் அகம் கூறுகிறது.

பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள்
திண்ணிலை பருப்பின் வய களிறு – அகம் 211/3,4

பறையினை ஒத்த வட்டமாகிய பரந்த அடியினையுடைய வலிய தாளினையும்
திண்ணிய நிலை வாய்ந்த கோட்டினையுமுடைய வலிய களிறு

இந்தப் பறைகள் நுனியில் வளைவாக இருப்பதாக மதுரைக்காஞ்சி கூறுகிறது.

கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் – மது 523

வளைந்த பறையினையுடைய கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும்,

இந்தப் பறைகள் எழுப்பும் ஒலி யானையின் பிளிறலைப் போல் இருப்பதாகப் பொருநராற்றுப்படை கூறுகிறது.

வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கை
வெருவரு செலவின் வெகுளி வேழம் – பொரு 171,172

வெருட்டும் பறைகள் (போன்று)முழங்கும், பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும்,
அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை

வாகை மரத்து நெற்றுகள் காற்றில் ஆடி சலசலக்கும் ஓசை பறையின் ஓசையைப் போல் இருப்பதாகக்
குறுந்தொகை கூறுகிறது.

ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறு 7/3-5

ஆரியக் கூத்தர்
கயிற்றில் ஆடும்போது ஒலிக்கும் பறையினைப்போல், காற்று மோதுவதால் கலங்கி
வாகைமரத்தின் வெண் நெற்று ஒலிக்கின்ற

உயரமான இடத்திலிருந்து ‘திடும்’ என விழும் அருவியின் ஓசை பரையின் ஓசையைப்போல் இருப்பதாகப்
பதிற்றுப்பத்து கூறுகிறது.

இழுமென இழிதரும் பறை குரல் அருவி – பதி 70/24

இழும் என்ற ஒலியுடன் விழுகின்ற பறை முழக்கத்தைக் கொண்ட அருவியோசை

மாசுணம் என்ற ஒரு விலங்கு யாழின் இசையைப் போன்ற இனிமையான இசையைக் கேட்டு மயங்கி நிற்குமாம்.
ஆனால் கேட்பதற்குக் கடுமையான ஓசையைக் கேட்டால் அது இறந்துவிடுமாம். அத்தகைய மாசுணம்
பறை ஒலியைக் கேட்டு இறந்துபடும் என்று தெரிவிக்கிறது கலித்தொகை தெரிவிக்கிறது.

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் – கலி 143/10-12

வஞ்சனையாக யாழ்வாசித்து, அந்த யாழிசையைக் கேட்டு மயங்கிநின்ற அசுணமாவை, இரக்கமில்லாமல்,
வஞ்சனையால் அதனைக் கொல்லும்படியாக, அதன் அருமையான உயிர் போகும்படி
பறையால் மிகுந்த ஒலியை எழுப்பியது போன்று, ஒருவன் என்னை வஞ்சித்து என்னைக் கைவிட்டான்,

கடலின் அலைகள் எழுப்பும் ஆரவார ஒலியைப் போன்றது பறை எழுப்பும் ஓசை என்கிறது கலித்தொகை..

நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக – கலி 149/1

வரிசையாக மிதக்கும் மீன்படகுகளே யானைகளாக, அலைகள் எழுப்பும் ஒலியே போர்ப்பறை ஒலி ஆக,

ஓங்கிப்பெய்த மழை அடங்கிப்போகும்போது மேகக்கூட்டங்கள் உறுமுகின்ற ஒலியை எழுப்புமே அவ்வாறானது
பறை ஓசை என்கிறது அகம்.

மண் கண் குளிர்ப்ப வீசி தண் பெயல்
பாடு உலந்தன்றே பறை குரல் எழிலி – அகம் 23/1,2

சில்லென்ற மழையினை – நிலத்து இடமெல்லாம் குளிரும்படி பெய்து,
முழக்கம் அடங்கிப்போயிற்றே முரசுக் குரல் மேகம்;

சிலவகைப் பறைகள் இனிய ஓசையையும் எழுப்புவன என்கிறது புறநானூறு.

இன் இசை பறையொடு வென்றி நுவல – புறம் 225/10

இனிய ஓசையையுடைய முரசுடனே வெற்றியைச் சொல்ல

மக்களின் வாழ்வில் இந்தப் பறைகள் பலவாறு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
நெல்லறுக்கும் நேரத்தில் அறுப்போரின் களைப்புத்தீர பறைகள் இசைக்கப்பட்டிருக்கின்றன.

வன் கை வினைஞர் அரி_பறை – மது 262

வலிய கைகளைக் கொண்ட நெல்லறுப்போரின் அரிபறை ஓசையும்

கோடியர் எனப்படும் கூத்தர் தங்களின் கழைக்கூத்தின்போது இந்தப் பறையை ஒலித்திருக்கின்றனர்.

கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 235,236

தீவிரமாய்ப் பறையடிக்கும் கழைக்கூத்தாடிகளின் பிள்ளைகளைப் போன்று,
நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும்,

ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறு 7/3-5

ஆரியக் கூத்தர்
கயிற்றில் ஆடும்போது ஒலிக்கும் பறையினைப்போல், காற்று மோதுவதால் கலங்கி
வாகைமரத்தின் வெண் நெற்று ஒலிக்கின்ற

அபாயகரமான சம்பவங்கள் நேரலாம் என்று கூறுவதற்காகத் தெருக்களில் இந்தப் பறையை ஒலித்துக்கொண்டு
செல்வர் என கலித்தொகை கூறுகிறது. தன் சுய நிலையிலில்லாத யானையைக் குளிப்பாட்டுவதற்கு ஆற்றுக்கு
ஓட்டிச் செல்லும்போது அதன் முன்னர் எச்சரிக்கையாகப் பறையை ஒலித்திருக்கின்றனர்.

நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு
பறை அறைந்து அல்லது செல்லற்க – கலி 56/32,33

தன் நிலையில் நிற்காத, கொல்லக்கூடிய யானையைக் குளிப்பாட்டச் செல்லும்போது செய்வதைப் போல்
பறை அறிவித்துச் செல்வது இல்லாமல் வெளியே செல்லவேண்டாம்

இறைவன் கொடுங்கொட்டி என்ற கூத்தினை ஆடும்போது பல பறைகள் முழங்கின என்கிறது கலித்தொகை.

படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடும்-கால் – கலி 1/5,6

ஒலிக்கின்ற பறைகள் பல முழங்க, பல்வேறு உருவங்களையும் உன்னுள்ளே அடக்கிக்கொண்டு நீ
கொடுங்கொட்டி என்னும் கூத்தினை ஆடும்போது,

ஏறுதழுவுதல் நிகழ்ச்சியின்போது இன்றும் பறைகள் இசைக்கப்படுவதைப் பார்க்கிறோம். அன்றும் அவ்வாறே
நடந்ததாகக் கலித்தொகை மூலம் அறிகிறோம்.

அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப
குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு – கலி 104/29-31

அவ்விடத்தில், பறை மிகுந்து ஒலிக்க, பலதரப்பட்டவரும் ஆரவாரிக்க,
வலிமையில் குறையாத இளைஞர்களின் ஏறுதழுவதலை எதிர்கொண்டு பாய்ந்தன,
நறும்புகை வலமாக எழ, விடுவதற்காக நிறுத்தப்பட்ட காளைகள்;

வரகங்கொல்லையில் களை எடுக்கும்போது, இந்தப் பறை இசைக்கப்பட்டிருக்கிறது.

கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி
களை கால் கழீஇய பெரும் புன வரகின் – அகம் 194/8,9

ஒலிக்கும் பறையின் ஒலியோடு பயிர்கள் வளையும்படி ஒதுக்கிக்
களையைப் பறித்துத் தூய்மை செய்த பெரிய கொல்லையில் விளைந்த வரகின்

விளைந்த பயிர்களின் மேல் வந்து படியும் பறவைகளை ஓட்ட பறையை ஒலித்திருக்கின்றனர்.

அரி பறையால் புள் ஓப்பி – புறம் 395/7

அரித்த ஓசையையுடைய கிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த
கதிர்களை உண்டற்கு வந்து படியும் புள்ளினங்களை ஓட்டி

ஊர்களில் அறிவிப்புச் செய்ய பறைகள் இசைக்கப்பட்டிருக்கின்றன.

அறை இறந்து அவரோ சென்றனர்
பறை அறைந்து அன்ன அலர் நமக்கு ஒழித்தே – அகம் 281/12,13

பாறைகளைக் கடந்து நம் தலைவர் போய்விட்டார்
பறை அறைந்தது போன்ற அலரினை நம்பால் விடுத்து

மலைவாழ் குறவர்கள் குரவைக்கூத்தின்போது பறைகள் இசைக்கப்பட்டிருக்கின்றன.

நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை – மலை 320-322

சிற்றூர்களில் விழாக்காலத்தில் பெண்டிரோடு ஆடவரும் சேர்ந்து தெருவில் ஆடும்போது பறை
இசைக்கப்பட்டிருக்கிறது.

தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து – அகம் 118/3,4

தொண்டகம் என்னும் பறையின் தாளத்திற்கு இசைய பெண்டிரோடு கலந்து
தெருக்களில் ஆடும் சிறுகுடிப்பாக்கத்தின்கண்ணே

போர்க்காலங்களில் போருக்கு ஆள் எடுக்கும் அறிவிப்பினைச் செய்ய ஊர்கள்தோறும் பறையறைந்து
செய்தி அறிவித்திருக்கின்றனர்.

இன்றும் செரு பறை கேட்டு விருப்பு_உற்று மயங்கி
வேல் கை கொடுத்து ———
—————————–
ஒரு மகன் அல்லது இல்லோள்
செரு முகம் நோக்கி செல்க என விடுமே – புறம் 279/7-11

இன்றும் போர்க்கு எழுமாறு வீரரை
அழைக்கும் பறையொலி கேட்டு மறப்புகழ்பால் விருப்புற்று அறிவு மயங்கி
வேலைக் கையிலே தந்து ————–
——————————
இந்த ஒரு மகனை அல்லது வேறு மகன் இல்லாதவளேயாயினும்
போர்க்களம் நோக்கிச் செல்வாயாக எனச் சொல்லித் தன் மகனை விடுக்கின்றாள்\

இந்தப் பறையை உரத்து இசைக்காமல், மந்தமான ஓசையில் அடித்தால் பேய்களும் நடனமாடும் எனப்
புறம் கூறுகிறது.

நிறம் கிளர் உருவின் பேஎய் பெண்டிர்
எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க – புறம் 62/4,5

நிறம் மிக்க வடிவினையுடையபேய் மகளிர்
மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான ஓசையையுடைய பறையினது தாளத்தே ஆட

இந்தப் பறையை நன்கு இசைக்கக்கூடியவர்கள் தாம் மனத்தில் நினைத்ததை அப்படியே ஒலித்துக்காட்டுவர்
என்கிறது கலித்தொகை..

ஓர்த்தது இசைக்கும் பறை போல் நின் நெஞ்சத்து
வேட்டதே கண்டாய் கனா – கலி 92/21,22

பறைகொட்டுபவன் தன் மனத்தில் நினைத்ததை அப்படியே ஒலித்துக்காட்டும் பறையைப் போல்
உன் நெஞ்சத்தில்
விரும்பினதையே கனாவாகக் கண்டாய்!”

செல்வர்களின் புதல்வர்கள் இந்தப் பறையைத் தம் தோளில் கோத்துக்கொண்டு, அதன் முகப்பைக்
கோலால் தட்டி ஒலியெழுப்பி மகிழ்வர் என்கிறது நற்றிணை. அவர்களின் அந்தப் பறையின் முகப்பில்
குருவிகள் போன்ற ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கும் என்றும் அறிகிறோம்.

பெரு முது செல்வர் பொன் உடை புதல்வர்
சிறு தோள் கோத்த செ அரி_பறையின்
கண்_அகத்து எழுதிய குரீஇ போல
கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோ – நற் 58/1-4

நிறைந்த பழமையான செல்வத்தைப் பெற்றவரின் பொன்தாலி அணிந்த புதல்வர்
தமது சிறிய தோளில் சேர்த்துக்கட்டிய செவ்வையாக அரித்து ஒலிக்கும் பறையின்
முகப்பில் எழுதப்பட்ட குருவி அடிக்கப்படுவதைப் போல
சாட்டைக் குச்சியால் அடிக்கப்படுவதாக –

பறை இசையைக் கேட்க இங்கே சொடுக்கவும்

2.2

பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 15

இளமையான காலையுடைய கொக்கின் (அங்குமிங்கும்)மெதுவாகப் பறந்துதிரியும் கூட்டம்

2.3

தண் கடல் படு திரை பெயர்த்தலின் வெண் பறை
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும் – குறு 166/1,2

குளிர்ந்த கடலில் உண்டான அலைகள் மோதித்தள்ளியதால், வெள்ளைச் சிறகுகளைக் கொண்ட
நாரைக்கூட்டம் இடம்பெயர்ந்து வேறிடத்தில் அயிரை மீனை நிறைய உண்ணும்

மேல்


பறையன்

(பெ) தமிழரின் தொல்குடியினருள் ஒருவன், one of four ancient tribes in tamilnadu

துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை – புறம் 335/7,8

துடியன் குடி, பாணன் குடி, பறையன் குடி, கடம்பன்குடி என்று சொல்லப்பட்ட
இந்நால்வகைக் குடிகளன்றி வேறு குடிகள் இல்லை.

மேல்


பன்மை

(பெ) பலவாக/பலராக இருக்கும் நிலை, plurality

நம்
பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே – நற் 170/8,9

நாம்
பலராயிருந்தும் என்ன பயன், இவள் ஒருத்தியின் வலிமை வெளிப்பட்டால்?

மேல்


பன்னல்

(பெ) பருத்தி, cotton

பன்னல் வேலி இ பணை நல் ஊரே – புறம் 345/20

பருத்தி வேலி சூழ்ந்த இந்த வள வயல் சூழ்ந்த நல்ல ஊர்.

மேல்

பன்னு – (வி) புகழ்ந்துகூறு, praise, extol

பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல – நற் 136/4-6

யாவரும் புகழ்கின்ற
மலையைப் பொருந்திய நாட்டவனுக்கும் நமக்கும் இடையே சிறிதளவு
பிரிவு உள்ளதை அறிந்திருப்பவர் போல,

மேல்


பனம்

(பெ.அ) பனைமரத்துடன் தொடர்புகொண்ட, adjectival form of palmyra tree
பனங்கிழங்கு, பனம்பழம், பனங்கள், பனங்கற்கண்டு ஆகிய சொற்களில் வரும் பனம் என்ற சொல்
பனைமரத்தைக் குறித்து நிற்கிறது.

1

இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும் – நற் 38/3

கரிய பனையின் இனிய கள்ளினை உண்போர் மகிழும்

2

இரும் பனம் போந்தை தோடும் – பொரு 143

கரிய பனைமரத்துப் போந்தையின் மாலையினையும்

3

பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் – நற் 90/6

பெரிய கயிறாகத் தொங்கும் கனத்த பனைநாரால் பின்னிப்பிணைக்கப்பட்ட ஊஞ்சலில்

4

இரும் பனம் பசும் குடை பலவுடன் பொதிந்து – குறு 168/2

கரிய பனையின் ஓலையாற்செய்த பசிய குடைக்குள் பலவாக வைத்து மூடி,

5

இரும் பனம் புடையல் – பதி 42/1

கரிய பனந்தோட்டால் ஆன மாலையையும்

6

இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர் – அகம் 277/7

கரிய பனையின் சிறாம்பினைப் போன்ற தடித்த மயிரினையும்

மேல்


பனி

1. (வி) 1. குளிர், become cool
2. நடுங்கு, tremble
3. குளிரால் நடுங்கு, shiver
4. நடுங்கச்செய், நடுக்கு, cause to tremble
– 2. (பெ) 1. குளிர்ச்சி, coolness
2. உறைந்த நீர், snow, ice
3. மஞ்சு, mist, fog
4. கண்ணீர், tears
5. குளிர், chill, cold
6. பனிக்காலத்துக்குளிர்ச்சி, coldness is winter / dewy season
7. குளிர்ந்த நீர்த்துளி, dew

1.1

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புது பெயல் பொழிந்தென – நெடு 1,2

உலகம்(எல்லாம்) குளிரும்படியாக, வலப்புறமாக வளைந்து (எழுந்திருந்து),
(பருவம்)பொய்யாத மேகம் (கார்காலத்து முதல்)மழையைப் பெய்ததாக,

1.2

அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை – முல் 79

பகையரசு இருந்து நடுங்கும் முரசு முழங்கும் பாசறையில்

1.3

மட_தகை மா மயில் பனிக்கும் என்று அருளி – புறம் 145/1

மெல்லிய தகைமையுடைய கரிய மயில் குளிரால் நடுங்குமென்றுஅருள்செய்து

1.4

அஞ்சுவர பனிக்கும் வெம் சுரம் இறந்தோர் – நற் 99/3

அச்சம் தரும்படி நடுக்குகின்ற கொடுமையான பாலைநிலக்காட்டில் சென்றோர்

2.1

பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு – திரு 45

பாறைநிலம் முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் நிலைகுலைய உள்ளே சென்று
2.

2

பனி_வரை மார்பன் பயந்த நுண் பொருள் – சிறு 240

பனி படர்ந்த மலை (இமயம்)(போன்ற)மார்பையுடையவனும் ஆகிய வீமசேனனின் நுணுகிய பொருளையுடைய,

2.3

கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல்
பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க – பெரும் 328,329

கொன்றையின் அரும்புகளையுடைய மெல்லிய கொம்புகளில் பனிப்படலம் தவழ்பவை போல
பசிய மணிகளைக் கோத்த வடங்களையுடைய அல்குலில் கிடக்கின்ற மெல்லிய துகில் அசைய

2.4

ஆகத்து அரி பனி உறைப்ப – குறி 249

மார்பினில் (கண்களிலிருந்து)அரித்துவிழும் நீர் சொட்ட

2.5

நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி – மலை 446,447

(உடைப்பதற்கு எளிதான)சுள்ளிக் குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி,
குளிர் முற்றிலும் விட்டுப்போக இனிதே சேர்ந்து தூங்கி,

2.6

கடும் பனி அற்சிரம் நடுங்க – நற் 86/4

கடுமையான பனியையுடைய முன்பனிக்காலத்தில் நம்மைப் பிரிந்து நாம் நடுங்கிநிற்க,

2.7

தகை மலர் பழனத்த புள் ஒற்ற ஒசிந்து ஒல்கி
மிக நனி சேர்ந்த அ முகை மிசை அ மலர்
அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள் – கலி 77/5-7

அழகுள்ள மலர்களையுடைய நீர்நிலையிலுள்ள பறவை வந்து தாக்க, மிகவும் சாய்ந்து வளைந்து,
மிக மிக அருகிலிருக்கும் அந்த மொட்டுக்களின் மேல் அந்தத் தாமரை மலரின்
உள்ளிதழ்களிலிருந்து குளிர்ந்த நீர்த்துளிகளைச் சொட்டும் ஊரினைச் சேர்ந்தவனே கேட்பாயாக!

மேல்


பனிச்சை

(பெ) பெண்கள் முடியலங்கார வகை, a mode of dressing the hair of women

வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவத்து
ஒளி இழை ஒதுங்கிய ஒள் நுதலோரும் – பரி 23/36,37

இருள் வாய்ந்த கூந்தலினையும், வரிந்த வில்லினைப் போன்ற புருவங்களையும்
ஒளியையுடைய தலை அணிகலன்கள் ஒதுங்கிக்கிடக்கும் ஒள்ளிய நெற்றியையுடையவரும்,

மேல்


பனிப்பு

(பெ) நடுக்கம், trembling

சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉ பெயல் அழித்துளி தலைஇ – அகம் 304/3,4

தெய்வம் நடுக்கம் செய்தல் போன்ற குளிர்ச்சி பொருந்திய பனிக்கட்டியோடு
பருத்த பெயலாய மிக்க துளிகளைப் பொருந்தி

மேல்


பனிற்று

(வி) தூவு, சிந்து, spill, shed

குருதி பனிற்றும் புலவு களத்தோனே – பதி 57/3

இரத்தம் சிதறித்தெளிக்கும் புலால் நாறும் போர்க்களத்தில் இருக்கிறான்,

மேல்


பனுவல்

(பெ) 1. கொட்டையும் கோதும்நீக்கி நூற்பதற்கு ஏற்பத் தூய்மை செய்யப்பட்ட பஞ்சு,
toused cotton, cotton that has been pulled and cleaned
2. சொல், word, speech
3. பாட்டு, musical composition, song
4. நூல், treatise
5. கேள்வி, learning through oral instruction

1

பருத்தி_பெண்டின் பனுவல் அன்ன
நெர்ப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை – புறம் 125/1,2

பருத்தி நூற்கும் பெண்டினது சுத்தம் செய்யப்பட்ட பஞ்சுபோன்ற
நெருப்பு தன் வெம்மை ஆறுதற்கேதுவாகிய நிணம் அசைந்த கொழுவிய ஊந்தடிகளை

2

தண்ணம் துறைவன் தூதொடும் வந்த
பயன் தெரி பனுவல் பை தீர் பாண – நற் 167/5,6

குளிர்ச்சியாயுள்ள அழகிய துறையைச் சேர்ந்தவனின் தூதோடும் வந்த
நீ பெறும் பயனுக்குத் தக்கவாறு கூறும் சொற்களையுடைய வருத்தம் தீர்ந்த பாணனே!

3

கை கவர் நரம்பின் பனுவல் பாணன் – நற் 200/8

கையினால் தடவுதற்குரிய நரம்பினால் இசைக்கும் பாட்டுக்களைக் கொண்ட பாணன்

4

மாசு இல் பனுவல் புலவர் புகழ் புல
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை – பரி 6/7,8

குற்றமில்லாத நூல்களைக் கற்ற புலவர்கள், புகழுடைய அறிவினைக் கொண்ட
தம் நாவால் பாடிய வையை ஆற்றைப் பற்றிய நல்ல கவிதைகள் பொய்படாமல் நிலைநிற்கச் செய்ய,

5

பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என – புறம் 237/4,5

பொய் கூறுதலை அறியாத அறிவுடையோனது செவியிடத்து
நல்லோர் விதைத்த கேள்வியாகிய பயிர் நன்றாக விளைந்தது என நினைத்து

மேல்


பனைக்கொடியோன்

(பெ) பலராமன், Balaraman

புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும் – பரி 2/22,23

எதனையும் மறைக்கும் இருள் நிற ஆடையை உடைய, பொன்னாலான பனைக்கொடியானாகிய பலதேவனுக்கு
முற்பட்டவன் ஆவாய் என்போர்க்கு முதியவனாக இருப்பதுவும்,

கடல் வளர் புரி வளைபுரையும் மேனி
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும் – புறம் 56/3,4

கடற்கண்ணே வளரும் புரிந்த சங்கைஒத்த திரு நிறத்தையுடைய
கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக்கொடியை உடையோனும்

பால் நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல் நிற உருவின் நேமியோனும் என்று – புறம் 58/14,15

பால்போலும் நிறத்தையுடைய பனைக்கொடியை உடையோனும்
நீல நிறம் போலும் திருமேனியைக் கொண்ட ஆழியை உடையோனும் என்று

மேல்


பனைமீன்

(பெ) சுமார் 8 அங்குல நீளமுள்ள கருப்பு மீன்,
Climbing-fish, rifle green, attaining 8 1/2 in. in length, Anabas scandens;

பனை_மீன் வழங்கும் வளை மேய் பரப்பின் – மது 375

பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில்,

மேல்


பனையம்

(பெ) பனை, palmyrah, 17-ஆவது நட்சத்திரம், அனுஷம், the 17th star anusham

முட பனையத்து வேர் முதலா – புறம் 229/3

முடப்பனை போலும் வடிவையுடைய அனுஷ நாளில் அடியின் வெள்ளி முதலாக

மேல்